Friday, August 19, 2016

சவுதியில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

BBC TAMIL  -THE HINDU

சவுதியில் பணியாற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறினால் அபராதம் கட்ட நேரிடும் அல்லது நாடு கடத்தப்படலாம்.

வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளர்கள், சவுதி அரேபியாவில், எந்த எந்த நிறுவனத்தின் மூலம் பணிக்குச் சேருகிறார்களோ (கஃபீல்) அந்த நிறுவனத்திலிருந்து விதிமுறைகளுக்கு எதிராக வெளியேறினால், இனிமேல் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அல்லது நாடு கடத்தப்படவும், நாட்டுக்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடையையும் சந்திக்க நேரிடும்.

ஓடிப்போகும் வெளிநாட்டுப் பணியாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டாம் என சவுதி பிரஜைகளை, பாஸ்போர்ட் முகமை அறிவுறுத்தியுள்ளது.

அதை அவர்கள் கடைபிடிக்காவிட்டால், அவர்களும் அபராதம் கட்டவும், சிறை தண்டனையை அனுபவிக்கவும் நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஸ்பான்ஸர்ஷிப் எனப்படும் முகமை அடிப்படையில் பணிக்கு அமர்த்தும் முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், அது ஒருவித அடிமைத்தனம் என்றும் மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...