Wednesday, August 31, 2016

சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி அறிமுகம்

Return to frontpage

நிறுவனம் டிரைவர் இல்லாத காரை சோதனை ரீதியில் அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் இன்னமும் அமெரிக்காவில் இது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. உலகிலேயே டிரைவர் இல்லாத இத்தகைய சேவை முதன் முதலில் அறிமுகமாவது சிங்கப்பூரில்தான்.

கூகுள் நு டோனோமி (Nu Tonomy) என்ற பெயரிலான ஸ்டார்ட் அப் நிறுவனம் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் இந்நிறு வன செயலியை (App) பயன்படுத்தி இந்த டாக்சி சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு குறிப் பிட்ட வழித்தடத்தில் இந்தக் கார் சேவையை இயக்குகிறது.

தொடக்கத்தில் இந்த கார் பயணம் முற்றிலும் இலவசமாகும். முதலில் 6 கார்களை இதுபோல் டிரைவர் இன்றி இயக்கும் இந்நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 12 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. 2018-ம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் முழுவதும் டிரைவர் இல்லாத டாக்சி சேவையை வழங்குவதே இந்நிறுவனத்தின் இலக்காகும். தொடக்கத்தில் இந்த வாடகைக் கார்கள் 6.5 சதுர கி.மீ. தூர அளவிற்குள் இயக்கப்படும். இப்பகுதி ஒன் நார்த் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள வாடிக்கையாளர்கள் நு டோனோமி செயலியைப் பயன்படுத்தினால் அவர்கள் இருப்பிடத் துக்கு கார் வந்து அவர்களை அழைத்துச் செல்லும். தொடக்க நாளன்றே 12 பேர் இந்நிறுவன செயலியைப் பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர்.

ரெனால்ட் ஜே, மிட்சுபிஷி ஐ-எம் உள்ளிட்ட கார்கள் மாற்றம் செய்யப்பட்டு இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கார்களில் 6 செட் லிடார் எனப்படும் உணர் கருவி பொறுத்தப்பட்டிருக்கும். இது ரேடார் போன்று செயல்படும். இதுதவிர காரின் மேல் பகுதியில் ஒன்று சுழன்று கொண்டிருக்கும். முன்புறத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன. இது டிராபிக் சிக்னல் விளக்கின் நிற மாற்றங்களை உணர்ந்து காரை இயக்கும்.

கார் எங்கிருந்து தேவை, எதுவரை பயணம் செய்யப் போகிறோம் போன்ற விவரங்களை பதிவு செய்து விட்டால் போதுமானது. இதுபோன்ற டிரைவர் தேவைப்படாத கார்கள் புழக்கத்துக்கு வரும்போது சிங்கப்பூரில் கார்களின் எண்ணிக்கை 9 லட்சத்திலிருந்து 3 லட்சமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டங்கள் முடிந்துவிட்டன. இனி குறிப்பிட்ட வழித்தடங்களில் இதைச் செயல்படுத்த வேண்டியதுதான் என்று நு டோனோமி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கார்ல் இயாக்னெமா தெரிவித்துள்ளார்.

டிரைவர் தேவைப்படாத டாக்சியை அறிமுகப்படுத்தியுள்ள நு டோனோமி நிறுவனத்தில் சிங்கப்பூர் மற்றும் மாச சூசெட்ஸ் அலுவலகங்களில் மொத்தமே 50 பணியாளர்கள்தான் உள்ளனர். 2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்நிறு வனம் தொடக்கத்தில் அமெரிக்க ராணு வத்துக்கு ரோபோட்டிக் வாகனங் களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. கடந்த ஓராண் டாகத்தான் டிரைவர் இல்லாத வாகன செயல்பாட்டில் கவனம் செலுத்தியது.

கடந்த ஆண்டு சிங்கப்பூர் அரசாங்கம் ஒன் நார்த் எனும் பகுதியில் டிரைவர் இல்லாத வாகனத்தை சோதனை ரீதியில் செயல்படுத்திப் பார்க்க இந்நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது. இதைச் செயல்படுத்த சிங் கப்பூர் தரைவழிப் போக்குவரத்து ஆணையத்துடன் இந்நிறுவனம் ஒப்பந் தம் செய்து அதை நிறைவேற்றியுள்ளது.

சிங்கப்பூரில் தட்ப வெப்ப நிலை மிகவும் சரியான அளவில் உள் ளது. இங்குள்ள வாகன ஓட்டிகள் சட்ட விதிகளை முறைப்படி பின்பற்றுகின் றனர். இதனால் இங்கு டிரைவர் இல்லா வாகனத்தை செயல்படுத்திப் பார்ப்பதில் எவ்வித சிரமமும் ஏற்படவில்லை என்கிறார் கார்ல்.

ஆட்டோமொபைல் உதிரிபாகங் களை சப்ளை செய்யும் டெல்பி நிறுவன மும் டிரைவர் தேவைப்படாத கார் களை இயக்கிப் பார்க்க சிங்கப்பூர் அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. இந் நிறுவன கார்கள் அடுத்த ஆண்டு சிங்கப் பூர் சாலைகளில் வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இடப் பற்றாக்குறையும், மனித வள பற்றாக்குறையும் நிலவுகிறது. இவ்விரு பிரச்சினைக்கு டிரைவர் தேவைப்படாத கார்கள் சிறந்த தீர்வாக அமையும் என்று கருதுவதாக சிங்கப்பூர் போக்குவரத்துத் துறையின் நிரந்தர செயலர் பாங் கின் கியோங் தெரிவித்துள்ளார்.

டிரைவர் தேவைப்படாத கார்கள்தான் எதிர்கால சாலையை ஆக்கிரமிக்கப் போகின்றன என்பதற்கு இது ஒரு முன்னோட்டம் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...