Friday, June 30, 2017

'முதுமையில் தனிமை' ஓர் ஆய்வு: வயதானவர்களுக்காக எந்த நாடும் இல்லை - இரண்டில் ஒருவர் தனிமையில்!

பிடிஐ


100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் ஒவ்வொரு விநாடியும் மூத்த குடிமக்கள் தனிமையில் வாடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டாவது மூத்த குடிமகனுக்கும் தனிமையிலிருந்து தப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ''மாறும் தேவைகள் மற்றும் இந்தியாவில் முதியோர் உரிமைகள்'' என்ற புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியா முழுவதும் 15 ஆயிரம் மூத்த குடிமக்களிடம் அகர்வால் ஃபவுண்டேஷன் ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 47.49 சதவீதம் மூத்த குடிமக்கள் தனிமையில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நகரத்தில் அதிகம்

நகர்ப்புறத்தில் இந்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இங்குதான் 5000த்திற்கு 3,205 மூத்த குடிமக்கள் தனிமைத் துயரில் வாடுகிறார்கள்.
நகர்ப்புறப் பகுதிகளில் 64.1 சதவீதம் மூத்த குடிமக்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் கிராமப் புறங்களில் 39.19 சதவீதம் (10 ஆயிரத்திற்கு 3919 கிராமப் பகுதியச் சார்ந்த மூத்த குடிமக்கள்) தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என ஆய்வு தெரிவிக்கிறது.

தனிமைக்குக் காரணம் யார்?

ஆனால் வயதான காலத்தில் இத்தகைய தனிமையின் கொடுமையை அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளிய காரணங்கள் என்ன? என்ற கோணத்திலும் ஆய்வு சென்றது.
இந்த கணக்கெடுப்பின்படி பதிலளித்தவர்களில் பெரும்பாலானவர்கள், தனிமையிலோ அல்லது துணையுடனோ வாழ்ந்து வருபவர்கள். மற்றவர்களுக்காக இப்படி இருப்பவர்கள்.
குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்கள் 27.3 சதவீதம். ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் 19.06 சதவீதம். தனிமையை எதிர்கொள்ளவேண்டியநிலை மற்றும் சமூக நல்லுறவுக்கும், பரிவர்த்தனைக்கும் வாய்ப்பின்றி இருப்பவர்கள் 12 சதவீத மூத்தக்குடிமக்கள்.
36.78 சதவீதம் மூத்தக்குடிமக்கள் தனித்து வாழவோ அல்லது மனைவியுடன் தனிமையில் வாழும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவதாகவோ தெரிவித்துள்ளார்கள்.

மனநல ஆலோசனைகள்

இந்தியாவில் ஒவ்வொரு ஐந்தாவது முதியவருக்கும் சில வகை மனநல ஆலோசனைகள் எவ்வாறு தேவைப்படுமென ஆய்வு தெரிவிக்கிறது.
ஆய்வின்போது பதிலளித்த 15,000 மூத்தக் குடிமக்கள் மொத்தத்திலும் 2,955 பேர் தங்கள் உறவினர்களிடமிருந்தோ அல்லது நண்பர்களிடமிருந்தோ ஆலோசனையை நாடியுள்ளனர். ஆனால் அதன்பிறகு மேலும் உளவியல் சிக்கல்களுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இத்தகைய பாதிப்புள்ளானவர்களில், நகர்ப்புற முதியவர்கள் (63.86 சதவீதம்) கிராமப்புறப் பகுதிகளைவிட (36.14 சதவீதம்) மனோதத்துவ ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுபவர்களாக உள்ளனர்.

இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 300 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் மூத்தக் குடிமக்களின் அவலநிலையை புள்ளிவிவரங்களோடு அறியமுடிந்தது.

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?


சமீபத்தில் நண்பர் ஒருவர் புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். மறுநாள் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் செல்வதற்குள் குறைந்தது பத்து பேருக்காவது அவர் நின்று விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. பகலிலும் முகப்பு விளக்கு எரிந்தபடியே இருந்ததுதான் பிரச்சினை.

இதனால் மிகவும் சலிப்படைந்த அவர் மறுநாள் காலை முதல் வேலையாக வாகனத்தை வாங்கிய விற்பனையகத்துக்குச் சென்று விசாரித்த போதுதான், புதிதாக வரும் இருசக்கர வாகனங்கள் அனைத்திலும் இத்தகைய தொழில்நுட்பம் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவு அவருக்கு புரிந்தது.பகலில் விளக்கு எரிவதால் பேட்டரியின் ஆயூள் காலம் குறையாது, எரிபொருளும் வீணாகாது என விற்பனையகத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தயாரான அனைத்து இருசக்கர வாகனங்களிலும் இம்முறை கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. ஏஹெச்ஓ (All time Headlight On / Automatic Headlight On) எனப்படும் தானியங்கி முகப்பு விளக்கு ஒளிரும் நுட்பம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் முகப்பு விளக்கு ஒளி உமிழும். இதை அணைக்க வாகன ஓட்டி நினைத்தாலும் முடியாது. இரவு நேரங்களில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ மட்டும்தான் முடியும். அதற்கான ஸ்விட்ச் மட்டுமே இருக்கும்.
சாலை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த குழ அளித்த பரிந்துரையின்படிதான் இந்த தொழில்நுட்பத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 2003-ம் ஆண்டிலிருந்தே இது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு நிகழ்வது இரு சக்கர வாகனங்களால்தான். 2014-ம் ஆண்டில் மட்டும் 32,524 பேர் உயிரிழந்துள்ளனர். 1.27 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் முகப்பு விளக்கு ஒளிர்வதால் சாலை விபத்துகள் குறையும் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் ஏஹெச்ஓ தொழில்நுட்பம் பின்பற்றப்படுவதாக வாகன தயாரிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இனிமேல் இரு சக்கர வாகனங்களில் பகலில் விளக்கு எரிந்தால் கைகளால் சமிக்ஞை செய்து அவருக்கு உதவுவதாக நினைத்து செயல்பட வேண்டாம். விபத்தை தவிர்க்கவே விளக்கு எரிகிறது என்பது உணர்ந்து கொள்வதோடு இது கட்டாயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி கடந்த ரசனை: மழையே தீயைக் கொண்டு வந்தால்...

எஸ். எஸ். வாசன்
அமர்பிரேம்

திரைப்படங்களில் அன்பு, காதல் போன்ற உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் உயர்குடி மக்களாகவோ அல்லது உயர்ந்த பண்புகளை உடைய ஏழைகளாகவோ மட்டும் இருப்பார்கள். பொதுவான இந்தத் திரை மரபை உடைத்துக்கொண்டு முரடன், அடிமட்ட அசடு, விலைமாதர் போன்றவர்களின் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் தூய்மையான அன்பு, காதல் ஆகிய உணர்வுகளை யதார்த்த நடைமுறைகளின் வரம்புகளை மையமாக கொண்ட கதையம்சத்துடன் படமாக எடுப்பது கத்தி மேல் நடக்கும் உத்திக்கு ஒப்பானது. இந்தச் சவாலான முயற்சியின் முழு வெற்றியாக விளங்குகிறது ‘அமர்பிரேம்’(அமரத்துவக் காதல்) என்ற இந்திப் படம்.
அன்பு மறுக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கும் அருகில் இருந்த விலைமாதுவுக்கும் இடையில் அரும்பிய தாய்-மகன் உறவை ‘ஹிங்க் கச்சோரி’ என்ற பெயரில் வங்காளச் சிறுகதை எழுத்தாளர் விபூதி பூஷண் எழுதினார். அந்தக் கதை அம்மொழியில் ‘நிஷி பத்மா’ (இரவுப் பூக்கள்) என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இந்தியாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான உத்தம் குமார், வங்காள நடிகை சபீதா சட்டர்ஜி நடித்த இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியவர் அரவிந்த முகர்ஜி என்பவர். இந்திப் படத்தின் திரைக்கதையை இவரே எழுதிய போதும் சில மாற்றங்களுடன் அதை இயக்கியவர் சக்தி சாமந்தா. ரமேஷ் பந்த் என்பவர் வசனம் எழுதினார். இப்படத்துக்கு இசை அமைத்த ஆர்.டி. பர்மன் இவரின் மெட்டுக்களுக்கு கருத்தாழம் மிகுந்த பாடல்களை இயற்றிய ஆனந்த பக்ஷி எனப் பலரும் ஒன்றிணைந்து படத்தை வெற்றிப் படமாக்கினார்கள்.

எல்லாவற்றையும்விட கதாபாத்திரமாக தோன்றுவதுடன் நில்லாமல் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்த ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூர் ஆகியோரின் மிகை இல்லாத, அளவான கச்சிதமான உடல் மொழி, வசன உச்சரிப்பு ஆகிய நடிகர்களின் வெளிப்பாட்டுத் திறமைகள் இந்தியாவின் ஒப்பற்ற ஒரு திரைப்படமாக இதை ஆக்கின.

‘மேற்கத்திய இசையின் அடிப்படையில் மட்டுமே திரைப்பாடல்களுக்கு இசை அமைக்க இவருக்குத் தெரியும்’ என்ற கருத்து நிலவிய சூழலில் இப்படத்தின் மூன்று சிறந்த பாடல்களை பைரவி, தோடி, கலாவதி ஆகிய மூன்று முக்கிய இந்துஸ்தானி ராகங்களில் மெட்டமைத்து ஆர்.டி.பர்மன் தனது பாரம்பரிய இசை ஞானத்தை நிரூபித்தார்.

குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சிறப்புடைய ‘அமர் பிரேம்’ படத்தின் மூன்று பாடல்களில் ‘சிங்காரி கோயி பட்கே தோ சாவன் உஸ்ஸே புஜாயே’ என்று தொடங்கும் பாடல், விரக்தி, சோகம், ஆற்றாமை, கோபம் ஆகிய பல உணர்வுகளை எளிய வரிகளில் ஒருசேர வெளிப்படுத்தும் பைரவி ராகத்தில் அமைந்த இனிய பாடல்.

பொருள்:
திடுமென எழும் தீப்பொறியை
சடுதியில் வரும் மழை அணைத்துவிடும்
மழையே தீயை கொண்டுவந்தால்
அதை யார் அணைக்க முடியும் - யாரால் இயலும்
இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளை
வசந்த காலம் மீண்டும் புதுப்பிக்கும்
வசந்த காலத்திலேயே உதிர்ந்து நிற்கும் தோட்டத்தை
எவரால் மலரச்செய்ய முடியும்
என்னிடம் கேட்காதே எப்படி என் கனவு இல்லம் இடிந்து போயிற்று என்பதைப் பற்றி
அதில் உலகத்தின் பங்கு எதுவும் இல்லை
அந்தக் கதை என் சொந்தக் கதை
(உள்ளத்தில்) எதிரி கோடாரியைப் பாய்ச்சினால்
மனம் ஆறுதல் பெற நண்பர்கள் உடன் இருப்பர்
நெருங்கிய நண்பர்களே உள்ளத்தைக் காயப்படுத்தினால்
எவர் என்ன செய்ய முடியும்.
என்ன ஆகிறது என எனக்குத் தெரியவில்லை
என்ன செய்கிறேன் என்பதும் அறியேன்
சூறாவளியை எதிர்கொள்ள எந்தச் சக்தியாலும்
இயலாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்
இயற்கையின் குற்றம் அல்ல அது
(எனில்) வேறு எதோ சக்தியுடைய குற்றம்
கடலில் செல்லும் படகு தடுமாறினால்
படகோட்டி (எப்படியாவது) கரை சேர்த்திடுவான்
படகோட்டியே படகை கவிழ்த்துவிட்டால் - அதில்
பயணம் செய்பவரை எவர் காப்பாற்றுவார்
ஓ.. யார் காப்பாற்றுவார்.

ஹூக்ளி நதிக்கரை போன்ற ஸ்டுடியோ செட்டில் படமாக்கப்பட்ட இப்பாடலை இயக்குநர் சாமந்தா கல்கத்தாவின் ஹூக்ளி நதி மீது உள்ள ஹவுரா பாலத்தில்தான் படமாக்க விரும்பினார். ஆனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த எங்களால் முடியாது எனக் காவல் துறையினர் தடுத்துவிட்டனர்.
திருப்பதி மலைப்பாதை வழியாக ஏழுமலையானை தரிசிக்க 2400 படி ஏறி வந்த காளை

2017-06-30@ 02:54:19

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காளை ஒன்று மலைப்பாதை வழியாக 2400 படிக்கட்டுகள் ஏறி வந்த சம்பவம் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி வாரிமெட்டு மலைப்பாதை வழியாக திடீரென ஒரு காளை மாடு பக்தர்களுடன் படிக்கட்டுகளில் ஏறி வந்து கொண்டிருந்தது. தங்களுடன் மாடு வருவதை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆனால், அந்த காளை யாரையும் கவனிக்காமல் ேவக வேகமாக 2400 படிக்கட்டுகளை ஏறி திருமலை வந்தடைந்தது. அப்போது, ஏழுமலையானை தரிசனம் செய்ய இந்த காளை வந்ததாக கருதி பக்தர்கள் அதனை தொட்டு வணங்கினர். மேலும், சிலர் அதற்கு குங்குமம் வைத்து வழிபட்டனர்.

இந்நிலையில் பக்தர்கள் கூட்டத்துடன் வந்த காளையை பாதுகாவலர்கள் பார்த்து, கோசாலை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் அந்த காளை மாட்டை திருமலையில் உள்ள கோசாலைக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூஜை செய்து அங்கு அடைத்து வைத்தனர்.

'வீட்டுக்குப் போனா சோத்துல கைவைக்க முடியாது!" - துப்புரவுப் பெண்களின் வாழ்க்கை #LifeOfScavengers

எம்.புண்ணியமூர்த்தி


மல்லிகா, லெட்சுமி இருவரின் வாழ்க்கையும் குப்பைகளுக்கு இடையே நகர்கிறது. அகற்ற அகற்ற சேர்ந்துகொண்டே இருக்கும் குப்பைகள். கோயம்புத்தூர் கலெக்டர் ஆபீஸ் வலதுபுறச் சாலையின் தூய்மைக்கு மல்லிகாவும், இடதுபுறச் சாலையின் தூய்மைக்கு லெட்சுமியும் பொறுப்பு. ஆம்... இருவரும் துப்புரவுப் பணியாளர்கள்.



'குப்பை அள்ளுறவன் கூட' என்று உரையாடல்களில் பலரும் இந்த விளிம்புநிலை மக்களைக் குறிப்பிட்டுப் பேசுவதுண்டு. ஆனால், அவர்களின் வாழ்க்கைச் சூழலைப் பற்றி யாரும் சிந்தித்திருக்கமாட்டார்கள். குப்பைத்தொட்டிகளைக் கடக்கும்போது 'ச்சீ... என்னா நாத்தம்' என்று மூக்கைப் பொத்திக்கொண்டு போகவும், துப்புரவுப் பணியாளர்களை ஏளனமாகக் கடந்துபோகவும்தான் நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில் அவர்களின் வேலை பற்றி அறிய நேர்ந்திருந்தால், எந்தக் குப்பையையும் எறியும் முன், அதை அப்புறப்படுத்தப்போகும் ஒரு ஜோடிக் கைகளைப் பற்றி மனம் ஒருமுறை சிந்தித்து, குப்பைகளை முறையாகத் தொட்டிகளில் சேர்ப்பிக்கும் பழக்கம் நம்மைப் பற்றிக்கொள்ளலாம். அப்படி ஒரு முயற்சியாக, மல்லிகா, லெட்சுமியிடம் பேசுவோம்.

அதிகாலை 6 மணி. மல்லிகாவையும், லெட்சுமியையும் கலெக்டர் ஆபிஸ் சாலையில் சந்தித்தோம். துடைப்பத்தால் குப்பைகளை வேகவேகமாக இழுத்துக்கொண்டிருந்தார்கள். சரக் சரெக் எனச் சத்தம் எழுப்பிய துடைப்பம், புழுதியைக் கிளறிவிட்டபடி இருந்தது.

“நல்லா வெச்சாங்க கண்ணு எனக்கு மல்லிகான்னு பேரு. பேரு மட்டும்தான் மணக்குது'' என்று அதிரும் சிரிப்போடு ஆரம்பிக்கிறார் மல்லிகா. “எங்கப்பாவும் அம்மாவும் கார்ப்பரேஷன்ல குப்பை கூட்டிக்கிட்டு இருந்தாங்க. பொறந்ததுல இருந்தே நாத்தத்தோட புழங்குனதால, கல்யாணத்துக்கு அப்புறமாச்சும் இதுல இருந்து வெலகி வாழலாம்னு நெனச்சேன். ஆனா அதுக்கும் வாய்க்கல. எனக்குப் பார்த்த மாப்பிள்ளை நாகராஜும் கார்ப்பரேஷன்ல குப்பைதான் கூட்டிக்கிட்டு இருந்தாரு. சரி அதுதான் வாழ்க்கையினு வாக்கப்பட்டேன். ஆனா கல்யாணம் ஆன கொஞ்சநாள்லயே, 'குடும்பச் சூழ்நிலை சரியில்ல, நீயும் வேலைக்கு வா’ன்னு என் புருஷன் கூப்பிட்டாரு.

'பப்ளிக்குல எல்லார் முன்னாடியும் எப்படிங்க குப்பை கூட்டுறது...'னு ஆரம்பத்துல நான் கூச்சப்பட்டேன். 'நானும் துணைக்கு வர்றேன்'னு சொல்லி கொஞ்ச காலம் அவரும் என்கூட வந்து, என்னைக் குப்பைக் கூட்டுறதுக்குப் பழக்கினாரு. ஆனாலும் எங்க சொந்தக்காரங்க யாராச்சும் வந்தா ஒளிஞ்சிக்குவேன். நரகலை எல்லாம் அப்புறப்படுத்தவேண்டி வரும்போது வீட்டுல போய் சோத்துல கைவைக்க முடியாது. அப்போதான் எங்கம்மாவும், அப்பாவும், என் புருஷனும் படுற கஷ்டம் புரிஞ்சு கலங்கிட்டேன். அவங்க அதெல்லாம் பண்ணினது எனக்காகத்தானேனு நெனச்சப்போ, அப்போ ஏன் அதை நாமளும் செய்யக்கூடாதுனு மனசு பக்குவப்பட்டுச்சு.

அடுத்து வந்த நாள்கள்ல எல்லாம் குனிஞ்ச தலை நிமிராம கூட்ட ஆரம்பிச்சேன். வர்றவங்க போறவங்க எல்லாரும் என்னையே கேவலமா பார்க்குறமாதிரி நெனச்சுட்டு இருந்த எனக்கு நாளாக நாளாகத்தான் புரிஞ்சது, யாரும் நம்மளை மனுஷனாவெல்லாம் மதிக்கிறதில்ல, நம்மளைக் கண்டுக்கிறதுக்கெல்லாம் அவுங்களுக்கு நேரம்மில்லைன்னு. அவமானத்தைவிட அது பெரிய வலியா இருந்துச்சு. காலப்போக்குல வெட்கம், கூச்சம் எல்லாமே அத்துப்போச்சி'' என்றார் விரக்தியுடன்.



லெட்சுமி பேசும்போது, “என் கணவர் இறந்து ஆறு வருஷம் ஆகுது. அதுக்கு முந்தி நான் இந்த வேலை பார்த்ததே இல்லை. குடும்பத்தைக் காப்பாத்துறதுக்காக திடீர்னு ரோட்டுக்கு வரவெச்சிடுச்சு விதி. புதுசா படும்போதுதான் அது கஷ்டம். பழகிட்டா அது வாழ்க்கை. ஆனா, டிப் டாப்பா டிரெஸு பண்ணிக்கிட்டு சென்டெல்லாம் அடிச்சிக்கிட்டு மணக்க மணக்கப் போற பொண்ணுங்களைப் பார்க்கும்போது, மனசுல எங்கேயோ ஒரு மூலையில ஏக்கமா இருக்கும். எங்களுக்கு இல்லைன்னாலும் எங்க பிள்ளைகளுக்காவது இந்த நாத்த வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைச்சு, அவங்க இப்படி ஜம்முனு உடுத்திட்டுப் போற வேலைக்குப் போகணும்னு வேண்டிக்குவோம்.

சிலர் எங்களை ரொம்ப கீழ்த்தரமா நடத்தும்போது, அவங்க பொறந்த மாதிரி நாங்களும் ஒருத்தி வயித்துல இருந்துதானே பொறந்து வந்திருக்கோம், நாங்களும் மனுஷங்கதானேனு ஆதங்கமா இருக்கும். ஆனா எங்ககிட்ட நடந்துக்குற முறையில முன்னவிட இப்போ சனங்களோட மனசு முன்னேறிட்டே வருது. இனியும் மாறினா நல்லாயிருக்கும்'' என்கிறார் காலத்தின் மீது நம்பிக்கை வைத்து.

இருவரும் மீண்டும் கூட்ட ஆரம்பிக்க, 'சரக் சரக்' சத்தம் புழுதி கிளப்புகிறது.
பெருங்களத்தூரில் ரயில்வே சுரங்க நடை பாதைப்பணி ஆய்வு

By DIN | Published on : 30th June 2017 04:54 AM

பெருங்களத்தூரில் ரூ 3.6 கோடியில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்கநடை பாதைப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த ஸ்ரீ 'பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன்.

 தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்க நடை பாதைப்பணிகளை ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை பேரூராட்சிகளையும், ஜிஎஸ்டி சாலையையும் இணைக்கும் ரயில்வே மேம்பாலப்பணி நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜிஎஸ்டி சாலையில் அமைக்க இருக்கும் மேம்பாலப்பணிகளை விரைவில் தொடங்க உள்ளது. ரயில்வே துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து மேற்கொள்ளும் பெருங்களத்தூர் மேம்பாலப்பணி விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பீர்க்கன்கரணை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ரயில்வே கேட் மேம்பாலப்பணிக்காக மூடப்பட்டுவிட்டதால் பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி நிகழும் ரயில் விபத்து காரணமாக பலர் உயிரிழக்க நேரிடுகிறது. ஆகவே பொதுமக்கள் எளிதில் ரயில்வே நடைமேடைக்குச் செல்லவும், ரயில் தண்டவாளத்தைக் கடந்து ஜிஎஸ்டி சாலைக்குச் செல்லவும் சுரங்க நடை பாதை அமைக்க வேண்டும் என்று பீர்க்கன்கரணை பேரூராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்களின் கோரிக்கை ரயில்வே நிர்வாகம் ஏற்று ரூ3.6 கோடி செலவில் சுரங்கநடை பாதை அமைக்க முன் வந்துள்ளது. சுமார் 100 அடி நீளம்,10 அடி உயரம்,18 அடி அகல சுரங்க நடைபாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சுரங்க நடைபாதை பணிகள் குறித்து ரயில்வே கோட்டப் பொறியாளர் எஸ்.சீனிவாசன் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரனிடம் விவரித்தார்.

ரயில் மேம்பாலப்பணி, நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் பணிகளை விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும்என்று பீர்க்கன்கரணை பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஸ்ரீ பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரனிடம் அளித்தனர்.
ஜூலை 1 முதல் சினிமா டிக்கெட் விலை எவ்வளவு?

By எழில் | Published on : 29th June 2017 03:17 PM

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சுருக்கமே ஜிஎஸ்டி. இதுவரை நடைமுறையில் உள்ள மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் உள்ளூர் வரிகள் ஆகிய பல்வேறு வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிப்பதற்காக, சரக்கு-சேவை வரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா டிக்கெட் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்த வரி விதிப்புக்குத் திரைத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 16-வது கூட்டம் தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், இன்சுலின் மருந்து, நூறு ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட் உள்ளிட்ட 66 பொருள்களுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கமல் உள்ளிட்ட திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று ரூ.100 மற்றும் அதற்கு குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்குக் கூடுதலான சினிமா டிக்கெட்டுக்கான வரி 28 சதவீதமாகத் தொடரும்.

இந்நிலையில் ஜிஎஸ்டியால் ஜூலை 1 முதல் தமிழகத் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயரவுள்ளது. டிக்கெட் விலை + 28% ஜிஎஸ்டி. அதாவது இனி ரூ. 120 டிக்கெட் ரூ. 153.60 ஆக விற்கப்படும். திரையரங்குகள் இந்தக் கட்டணத்தை ரூ. 150 என்றும்கூட மாற்றிக்கொள்ளலாம்.

டிக்கெட் கட்டண உயர்வு குறித்த முடிவு சென்னையில் நடைபெற்ற திரையரங்கு உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ரூ. 100-க்குக் குறைவாக உள்ள டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி 18% என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் ரூ.120 டிக்கெட்டுகள் தற்போது ரூ.100 ஆகக் குறைக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பதிலாக, ரூ. 120 டிக்கெட்டுகள் இனி ரூ. 153.60-க்கு விற்கப்பட்டால் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை மிகவும் குறையும் என்றும் அஞ்சப்படுகிறது. சில திரையங்குகளில் ரூ. 100-க்கும் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. அவை இனி ரூ. 120-க்கு விற்கப்படும்.

மேலும் தற்போது திரையரங்குகள் 30% நகராட்சி வரி செலுத்திவருகிறது. அவை ரத்தானால் மட்டுமே இந்த விலைக்கு டிக்கெட்டுகள் விற்கமுடியும் என்று திரையரங்கு அதிபர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் நகராட்சி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல தமிழகத்திலும் ரத்து செய்யப்படவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

UGC

உப்பு... இறைவனை உணர்த்தும் ஓர் அடையாளம் - எப்படி? 

மு.ஹரி காமராஜ்

உப்பு உணவில் மட்டுமல்ல, நமது ஆன்மிக வாழ்விலும் முக்கியமானது. விதையும் இல்லாமல் மண்ணுமில்லாமல் கடலில் தோன்றும் இந்த 'அதிசய விளைச்சலை' வியக்காத ஞானியரே இல்லை. நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு ஜீவாத்மாவைப் போன்றது. கடலே பரமாத்மா. 'சமுத்திரமணி', 'நீர்ப்படிகம்', 'கடல் தங்கம்', 'பூமிகற்பம்', 'சமுத்திர ஸ்வர்ணம்', 'வருண புஷ்பம்’, 'சமுத்திரக்கனி', 'ஜலமாணிக்கம்' என்றெல்லாம் உப்பு போற்றப்படுகிறது.



சைவ சமயத்தில், 'ஸ்பரிச தீட்சை' என்று ஒன்று நடைபெறும். அதாவது குருவானவர், சிஷ்யரின் தலையைத் தொட்டு மந்திர முறைகளைச் சொல்லிக் கொடுப்பார். அப்போது குரு, சிஷ்யர் ஆகிய இருவரின் உப்புத்தன்மை விகிதமும் சரியான அளவில் ஒன்றாகி வரும்போது அந்த சிஷ்யர் மிகச்சிறந்த மாணவராக விளங்குவார் என்பது ஐதீகம்.

உடலில் சேரும் உப்பே நமது அனைத்து குணநலன்களையும் தீர்மானிக்கிறது என்பது சீனர்களின் நம்பிக்கை. கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கை.

உப்பு, கடவுளை உணர்த்தும் ஓர் அடையாளம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. சங்கும் முத்தும் பிறப்பது உப்பால்தான். கடவுளர்க்கே அதிகம் படைக்கப்படுவதும் அதனால்தான்.

கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமியின் அம்சமாக 'உப்பு' சொல்லப்படுவதால்தான், `உப்பைச் சிந்தக் கூடாது’ என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்தனர். `உப்பைக் காலில் மிதிக்கக் கூடாது’ என்றும் சொல்வார்கள்.



வீட்டில், 'திருஷ்டி', 'துர்சக்திகள் தொல்லை' ஏதாவது இருந்தால், உப்பு நீரைப் பாத்திரத்தில் இட்டு, வீட்டின் மையத்தில் இருக்குமாறு வைத்து மூன்று நாள்கள் கழிந்த பிறகு கால்படாத இடத்திலோ நீர் நிலைகளிலோ ஊற்றிவிடுவது தமிழர்களின் நெடுநாளைய வழக்கம்.

இன்றும் திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நாம் காணக்கூடிய நடைமுறையே. உப்பு துர்சக்திகளை, கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல்கொண்டது.

`உப்பைக் கடனாகக் கொடுக்கக் கூடாது’ என்பது இன்றும் உள்ள வழக்கம். உப்பைக் கொடுத்தால், அந்த இடத்திலிருந்து மகாலட்சுமி நீங்கிவிடுவாள் என்பது ஐதீகம். உப்பை விற்கக் கூடாது என்று முன்னர் வழக்கத்தில் இருந்ததும் இதனால்தான்.

உப்பை மண்பானை அல்லது பீங்கான் ஜாடியில் போட்டு வைப்பதே நல்லது. அப்படித்தான் வைத்தும் இருந்தோம். மண்பானைக்கு 'ஸ்வர்ண பாத்திரம்' என்றே ஒரு பொருள் உண்டு. அதனாலேயே ஸ்வர்ணத்தின் அதிபதியான மகாலட்சுமி மண் பானையில் உப்பு வடிவில் இருக்கிறாள் என்றும் சொல்வார்கள்.



பிறந்த குழந்தைக்குச் சர்க்கரை, உப்புத் தண்ணீர் ஊற்றுவது தொடங்கி, இறந்த உடலைப் பக்குவப்படுத்துவது வரை மனித வாழ்வில் உப்பு பெரும்பங்கு எடுத்துக்கொள்கிறது. எதிரிகளை அடங்கிப்போகச் செய்ய, உப்பால் கணபதி செய்து வழிபடுவது ஒரு வழக்கமாக உள்ளது. பித்ருக்களின் வழிபாட்டின்போது உப்பில்லாமல் அவர்களுக்கு உணவு படைப்பது வழக்கம்.

காரணம், உப்பில்லாத உணவை வெறுத்து அவர்கள் பூமியை விட்டுவிட்டு மேலே சென்றுவிடுவார்கள் என்பது நம்பிக்கை. முக்கியமாக, அமாவாசையன்று கடற்கரையில் நீராடி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதுவும் உப்புக்காற்றுபட்டு அது நமது உடல் மற்றும் மனநிலையை மேம்படுத்தவே என்றும் கூறப்படுகிறது.

உப்பைத் தலையில் வைத்து ஆசீர்வதித்து, மந்திரங்கள் சொன்னால் நோய்கள் விலகும் என்பது சாக்த வழிபாட்டில் வழக்கமாக உள்ளது. உப்பையும் மிளகையும் கோயிலின் பலிபீடத்தில் போட்டு வழிபடுவதை நாம் பல கோயில்களில் பார்த்திருப்போம். முக்கியமாக, அம்மன் கோயில்களில் இது சகஜம். உப்பையும் மிளகையும் பலிபீடத்தில் போட்டு வழிபட்டால் எதிரிகள் ஒழிந்துவிடுவார்கள் என்பதும் சில பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்துவருகிறது.

உப்பும் மிளகையும் கொட் டி வழிபடுவதை மரு, வீக்கம் போன்றவை நீங்க கொட்டுவதாகவும் சிலர் சொல்வார்கள். ஆனால், உண்மையில் நம்மை எதிர்நோக்கி வரும் துன்பங்கள் யாவும் உப்பைப்போல கரைந்துவிட வேண்டும் என்பதற்கே கொட்டப்படுகிறது.

விடியல் நேரத்தில் இரு கைகளிலும் உப்பை வைத்துக்கொண்டு 'ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' என்ற ஆதி சங்கரரின் சௌபாக்ய மந்திரத்தை 16 முறை உச்சரித்து, அந்த உப்பைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்படியே 48 நாள்கள் கழித்து, மொத்த உப்பையும் நீர்நிலைகளில் போட்டுவிட வேண்டும் என்று சமயப் பெரியோர்களால் சொல்லப்படுவது உண்டு.

வடமொழியில் உப்பை `லவணம்’ என்பார்கள். இந்த லவணத்தைக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனைகள், வடமாநிலங்களில் அநேகம் உண்டு. லட்சுமியின் அருள்வேண்டி பலவிதங்களில் லவண பூஜைகள் அதிகாலைகளில் நடைபெற்று வருகின்றன.

`ஓம் க்ருணி சூர்ய ஆதித்யோம்: மம சௌக்யம் தேகிமே ஸதா' என்று வேண்டியபடி உப்பை வைத்து சூரியனை வணங்கும் பழக்கம் இன்றும் உள்ளது.

உப்பு, நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்திகொண்டது. கையில் உப்பை வைத்துக்கொண்டிருக்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். கிராமங்களில் 'உப்பு மந்திரம்' என்று வேடிக்கையாக ஒன்றைச் சொல்வதுண்டு.

உப்பைக் கையில் வைத்துக்கொண்டு நாம் யாரைப் பார்க்க நினைக்கிறோமோ, அவர்களை எண்ணி தியானித்து வீசி வேண்டினால், அவர்கள் வேண்டுதல் தொடங்கிய 7 நாள்களுக்குள் அவர்கள் உங்களைக் காண வந்துவிடுவார்கள் என்று நம்பிக்கை.

 இதைத்தான் டெலிபதி, ஈ.எஸ்.பி பவர் என்றெல்லாம் சொல்கிறோம். ஆக, உப்பு என்பது மருத்துவம், ஆன்மிகம், நம்பிக்கை என்று எல்லா விஷயங்களிலும் நம் வாழ்க்கையில் கலந்து, ஒன்றோடு ஒன்றாகவே இருந்துவருகிறது. இனி, `உப்புக்குப் பெறாத விஷயம்’ என்று எதையுமே சொல்லாதீர்கள். ஏனென்றால், கடல் பரமாத்மா, உப்பு ஜீவாத்மா.
பெரிய நிறுவனங்களை கதிகலங்க வைக்கும் ‘கோல்டன் ஐ’!
June 29, 2017

பெரிய நிறுவனங்களை கதிகலங்க வைக்கும் ‘கோல்டன் ஐ’!

ஆயிரக்கணக்கான கணினிகள் தினந்தோறும் ரேன்சம்வேர் வைரஸால் தாக்கப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் ஒரு பிரபல மருத்துவமனை ரேன்சம்வேர் தாக்குதலால் மூடப்பட்டது நினைவிருக்கும். இப்போது நிலைமையை மேலும் மோசமாக்க வந்துள்ளது ரேன்சம்வேர் 2.0!

பெட்யா ரேன்சம்வேரின் புதிய திரிபு தான் “கோல்டன் ஐ”. கடந்த செவ்வாய் அன்று உக்ரைனில் உள்ள கீவ் என்ற நகரில் இந்த சைபர் அட்டாக் தொடங்கியது. அங்கிருந்து உக்ரைனில் உள்ள மின்சார வாரியம், விமான நிலையம், அரசு அலுவலகங்கள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை இந்த புதிய ‘கோல்டன் ஐ’. கெர்னோபில் நகரில் அமைந்துள்ள அணு ஆராய்ச்சி நிலையத்தையும் தாக்கியதால் அணு கதிர் வெளியீட்டை கூட ஊழியர்களே கண்கானிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அன்றிலிருந்து இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தத்து.

ரஷ்யாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ்னெஃப்ட் இந்த சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. துறைமுகத்தில் ‘மேயர்ஸ்க்’ என்ற பெயரை கடக்காமல் வந்திருக்க மாட்டோம். உலகிலேயே மிகப்பெரிய ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனமான டென்மார்க்கை சேர்ந்த இந்த மேயர்ஸ்க், ரேன்சம்வேர் தாக்குதலை தடுக்க தங்களது கணினி நெட்வொர்க் அனைத்தையும் சில நாட்களுக்கு மூட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 2 லட்சம் கணினிகள் இந்த புதிய கோல்டன் ஐ ரேன்சம்வேரால் தாக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இது அடுத்த சில நாட்களில் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தையும் நிகழ்த்த இந்த ‘கோல்டன் ஐ’ வெறும் 44 நாட்களே எடுத்துக்கொண்டது.

ஏற்கனவே இதன் மூலம் பல கோடி பணம் பார்த்துவிட்ட வானாக்ரை, வரும் தினங்களில் மேலும் பல நாடுகளை தாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கான தீர்வை காணும் வரை இந்த ரேன்சம்வேரின் ஆட்டம் ஓயாது.
ஒரு கிலோ தக்காளி தற்போது 60 ரூபாய்
June 29, 2017

ஒரு கிலோ தக்காளி தற்போது 60 ரூபாய்


தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 40 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி தற்போது 60 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், ஒடசல்பட்டி கூட்ரோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி மண்டிகள் இயங்கிவருகின்றன. இந்த மண்டிகளில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனையாகிவந்தது.

இதனிடையே, தக்காளி வரத்து பெருமளவு குறைந்ததால் தற்போது ஒரு கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகிவருகிறது. வரும் காலங்களில் தக்காளி விலை மேலும் பலமடங்கு உயரக்கூடும் என தக்காளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7வது ஊதியக்குழு அறிக்கையை சமர்பிக்க கால அவகாசம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு!!!

இமெயில் உள்ளிட்ட பல கோப்புகளை வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பும் வசதி !!

இன்றைய காலத்தில் வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட்ஃபோன்களையோ அல்லது நபர்களையோ காண்பது அரிது. உலகளவில் தற்போது புதிய டிரெண்டாக உருவெடுக்கும் வாட்ஸ்அப் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை தருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப்பில் உள்ள எமோஜி, பயனாளர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது.

இதன்  காரணமாக பயனாளர்களை மேலும் கவர வாட்ஸ்அப் பல்வேறு எமோஜிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இவை முதற்கட்டமாக பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இமெயில் உள்ளிட்ட பல கோப்புகளை வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பும் வசதியையும் இதனுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.

வாட்ஸ்அப்-இல் எந்த மாதிரியான எமோஜி வேண்டுமோ அதனை டைப் செய்தால் அந்த எமோஜி தோன்றும். அதாவது, ஃபோன் என்ற எமோஜி வேண்டுமேனில், ஃபோன் (Phone) என்று டைப் செய்தால் நமக்கு போன் வகைகள் தோன்றும், அதில் நமக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வசதி பீட்டா (beta) 2.17.238 வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அனைத்து வெர்ஷன்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

முன்னதாக, வாட்ஸ்அப்-இல் எம்.பி.3, ஏபிகே உள்ளிட்ட அனைத்து விதமான ஃபைல்களையும் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Confusion galore at medical college

Parents of MBBS aspirants arguing with the K.A.P. Viswanatham Medical College officials in Tiruchi on Thursday.Photo: A.MuralitharanA_MURALITHARAN  

Many came for the third consecutive day to get their forms

Confusion reigned on the third day of issue of application forms for MBBS and BDS courses at K.A.P. Viswanatham Medical College, where people had gathered in large numbers.

Many had come for the third consecutive day to get their application forms. The candidates, who were issued tokens on the first day, had also come to the college to get their forms
.
However, several of them got agitated when the officials told them that they had received just 250 forms. Anxious parents entered into heated arguments with the officials and some even literally gheraoed the officials.

“I have come for the third consecutive day to get the form. But, I have not succeeded yet. Forms are issued only to influential persons. It is not the right way to treat medical aspirants,” said S. Revathy of Karur.

R. Rajendran of Manapparai said that he did not know the reason behind “restricting” the sale of application forms. Poor planning has only led to people waiting for hours together to get the forms.
Since a large number of people rushed to the podium of an auditorium, where the forms were being issued, Vice Principal Arshiya had to rush to the venue to pacify the agitated crowd.
She then informed them that they could download applications online.

Court orders Rs. 1.78 cr. to accident victims

A Special District Court for MCOP cases here on Thursday ordered the Tamil Nadu State Transport Corporation (TNSTC), Salem Region, to pay a compensation of Rs. 1.78 crore to 62 persons, including the families of 30 deceased, in connection with an accident involving a TNSTC bus and a lorry near Sankagiri way back in 2001.

According to the prosecution, the bus carrying 70 passengers collided with the lorry on April 4, 2001. Thirty passengers were charred to death, while 35 others suffered injuries.

P. Balasubramaniam, Special District Judge directed the TNSTC to pay the compensation to 32 injured and the families of the 30 deceased.

The petitions of three persons were dismissed as they did not pursue the case.
The Judge directed the TNSTC to pay the compensation with seven per cent interest from the date of filing of the case till the amount was paid.

The compensation awarded for each family/person ranged from Rs. 7,000 to Rs. 16.17 lakh.
The maximum compensation of Rs. 16.17 lakh was awarded to the family of Govindan, a school headmaster of Uthayampalayam village.

Confusion prevails over medical application forms distribution

Confusion prevailed at the Government Mohan Kumaramangalam Medical College when many candidates could not get the medical college application forms on Thursday.

The aspiring candidate and their parents from Salem and the neighbouring districts of Namakkal, Krishnagiri, Villupuram have been thronging the medical college ever since the work of distribution of application forms commenced on Tuesday. Due to shortage of the application forms, many of them could not get the same.

A large number of candidates waited at the medical college for collecting the forms on Thursday too. However, only 300 candidates managed to get the forms.
Following this, the candidates who could not get the application forms sat in front of the room where the forms were being distributed.

They demanded the college authorities to streamline the distribution forms to all.
On receiving information, police rushed to the spot and pacified them. The college authorities, too, assured to distribute adequate forms by providing tokens from Friday. They also assured proper training to the candidates for filling the forms online.

Many out-station parents complained that they have been visiting the college for the past three days and were not able to get the same.

Power shutdown tomorrow

There will be power shutdown in the following areas between 9 a.m. and 2 p.m. on Saturday as the TANGEDCO plans to undertake maintenance work at its Tirumangalam and Chekkanoorani substations:

Tirumangalam, Ulagani, Sithalai, Sathangudi, Pudupatti, Alampatti, Achampatti, Sivarakottai, Melakottai and Mykudi.

Chekkanoorani, K. Puliyankulam, Panniyan, Kinnimangalam, Mavilipatti, Moonandipatti, A. Kokkulam, Karumathur, Kannanur, Sakkilipatti, Kovilankulam, Poochampatti, Jothimanickam, Vadapalanji, Thenpalanji and Palkalai Nagar, according to a press release issued here on Thursday.

G.O. on medical seats between two streams of students challenged

HC Registry initially returned the petition without numbering it

A writ petition has been filed in the Madras High Court Bench here challenging the validity of a Government Order issued on June 22 allotting 85% of MBBS/BDS seats in the State to students who had studied in Tamil Nadu State Board and only 15% of the seats to those who had studied in Central Board of Secondary Education (CBSE) stream.

The petition filed by K. Sibi, a Madurai-based student who had scored 473 out of 500 marks in his Class XII examinations under CBSE syllabus and 476 (96.67%) out of 500 marks in the National Eligibility-cum-Entrance Test (NEET) conducted this year, has been listed before Justice K. Kalyanasundaram on Friday for deciding its maintainability.

Filing an affidavit on behalf of the student, his lawyer father K.K. Kannan, who had decided to argue the case as a party-in-person, claimed that it was unfair on the part of the State Government to have issued such a G.O. at the last moment after finding that the students from the State had not performed well in the NEET 2017.


Getting it listed

Though the High Court Registry initially returned the writ petition without numbering it on the ground that all cases related to NEET should be filed only before the Supreme Court, the lawyer managed to get it listed for deciding its maintainability after taking the issue to the notice of Mr. Justice Kalyanasundaram on Thursday.

Inquiry instituted against former VC of Bharathiar University

R. Sujatha

  Several assistant professors appointed in violation of norms

The Directorate of Vigilance and Anti-Corruption has instituted an inquiry into allegations against two former officials of Bharathiar University.

The University’s former Vice-Chancellor C. Swaminathan and former Registrar P. Thirumavalavan had allegedly appointed several assistant professors in various departments in violation of norms and did not follow the 200-point roster system.

The allegations pertain to the appointment of 24 assistant professors during the XI plan period.
The University had been sanctioned Rs. 2 crore toward staff salary during the XI plan period of 2007-08 to 2012-2013. During his tenure as the VC, Mr. Swaminathan had appointed 24 assistant professors for 35 vacancies in the university.

The appointments were temporary and effective till the plan period ending March 31, 2013.
Since the roster system was not followed, the University’s SC/ST Teachers and Staff Welfare Association petitioned the court, which granted an interim stay.

But Mr. Swaminathan’s successor, James Pitchai, regularised the appointments, leading to the current action.

According to the minutes of the Syndicate meeting held on April 13, 2015, the explanation was that the University Grants Commission which granted Rs. 2 crore had sought to know if the services of the appointees had been regularised. The Syndicate decided to set up a sub-committee to identify SC/ST and MBC backlog vacancies for faculty positions and advertise accordingly.

Even as the process was on a letter was received from the Deputy Secretary of Higher Education department “to take necessary action regarding to regularise the post of UGC XI Plan assistant professors” and the registrar was requested to send a report to the Government.
According to sources in the University, its Senate, which will be meeting on Friday, is expected to debate the issue.

Meanwhile, it is also learnt that the Higher Education department has separately initiated a departmental inquiry against Mr. Swaminathan for irregularities committed in Periyar University, where he was VC until June 15.

IndiGo offers to buy AI overseas operations

  Seeks to acquire Air India Express

IndiGo, India’s biggest low cost airline, evinced interest in buying a strategic stake in Air India on Thursday, a day after the Union government cleared the decks for strategic disinvestment in the national carrier.

In a letter written on Wednesday to Civil Aviation Minister Ashok Gajapathi Raju, IndiGo president and whole-time director Aditya Ghosh expressed interest in buying Air India’s international operations and its international low-cost airline Air India Express as a priority.

“As the Indian government embarks on the journey of privatising Air India and given IndiGo’s track record of having created a consistently profitable airline with a strong balance sheet, kindly treat this letter as our expression of interest in acquiring the international airline operations of Air India and (its low cost international airline) Air India Express,” Mr. Ghosh said in his letter.
No other private airline “is better placed” to lead Air India, Mr. Ghosh said.
Teacher arrested for showing students porn
Coimbatore:
TIMES NEWS NETWORK 
 


Parents Stage Protest, Beat Him Up 
 
A schoolteacher was arrested on Thursday for sexually harassing girl students at Kurumbapalayam village near Avinashi in Tirupur. The man had allegedly shown them porn videos on his mobile phone.
 
J Krishnamoorthy, 42, a native of Kattapettu near Kotagiri in Nilgiris district, had been working as a teacher at the Panchayat Union middle school for the last nine months.
The teacher allegedly targeted an eight-year-old girl studying in Class III, and is said to have often harassed the other girls, too.

Some of the girls had narrated the incident to their parents, but they did not take up the issue with the concerned authorities.

The victim told her mother on Wednesday evening and the parents of the girl and villagers of A Kurumbapalayam had gone to the school on Thursday and staged a protest at the school. They also beat up the teacher and informed the police.

Inspector E Nirmala and team from the all woman police station arrested him. A team of police and childline staff, meanwhile, conducted inquiry with a few girl students.

“The girls told us that the teacher often followed them when they had gone to the restroom and showed porn videos to the students using his mobile phones. We seized the mobile phone from the teacher,“ said inspector Nirmala.

Police registered a case under sections of the Protection of Children from Sexual Offences (POCSO) Act based on a complaint registered by the mother of the victim, and arrested him on Thursday afternoon.

He was produced before a judicial magistrate in Avinashi and later he was remanded to judicial custody.Further investigation is on.
After CBI, CVC to probe PG med admission case
Puducherry: 
 


After CBI launched a probe into reported corruption in the postgraduate medical admission in private medical colleges and institutions affiliated by deemed universities in Puducherry , the Central vigilance commission (CVC) will inquire into the administrative negligence of the senior officials that led to this fiasco.
 
Welcoming the CBI and CVC action on repeated complaints of corruption, lt governor Kiran Bedi said this situation is the result of acts of omission and commission of senior officials posted in various linked departments or supervisory or coordinating positions. “All officers are in position of responsibility to uphold the law and serve the people while following the law in letter and spirit. Breakdowns and violations happen only when the officials in position of responsibility decide to concede out of fear of annoying senior officials or for favour of any kind,“ Bedi said.Stating that lower officials have been left to fend for themselves Bedi urged the public officials `to perform their duty as per the law and in the interest of the people .' Bedi expressed optimism that the latest developments will serve good for the future of Puducherry . “Public activism and panchayat elections too must happen. This will keep into focus the way the UT is administered and hopefully keep it under close watch of all agencies concerned including the media,“ she said.
VARSITY BACKING - Tainted prof retires today with benefits
Chennai:


A professor at Manonmaniam Sundaranar University (MSU) in Tirunelveli, booked more than a month ago in a corruption case by the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC), will retire from her job on Friday.
 
Which raises the question: How did the professor, P K Kalyani, smoothly sail through the graft charges and subsequent controversy to the apparent tranquility of superannuation?
An internal enquiry conducted by the university ab solved the former head of the English department of any wrongdoing, saying she would not face any action on the charge of denying admission to certain students.

But MSU vice-chancellor Professor K Baskar, while de fending the professor, said her retirement would not impede the DVAC investigation.

“No wrongdoer can escape,“ he said.

DVAC officers had on May 22 filed an FIR against professors Kalyani and S Prabahar, who is now MSU controller of examinations (CoE), stating that they had refused to admit eligible candidates to MA and M Phil courses in English between 2011 and 2015.

The FIR stated that the professors, in denying admission to eligible candidates, had acted in defiance of Tamil Nadu government orders pertaining to community-based reservation.

After TOI reported the details of the case, the university constituted a committee to look into the charges. It submitted that the professors had followed all rules laid down by the university statute. All 26 departments in the university, including the English department, followed the same rules while conducting admissions, VC Baskar had said. Baskar's argument was that MSU, as an autonomous body, did not have to follow government norms.

“There is no need to suspend [Kalyani and Prabahar] as the government order is applicable only to government colleges and not universities that are autonomous bodies,“ he said. The committee that probed the charges will submit its findings at an MSU syndicate meeting on July 6.
`Reconnection mela' to woo back lost BSNL customers
Chennai:
TNN


 
BSNL has launched a reconnection mela for postpaid numbers that were disconnected due to non-payment of dues. After the customers agreed to pay the bills, they were given their old numbers back. The scheme was launched in Chennai on Wednesday in the presence of Chennai Telephones CGM S M Kalavathi.
 
Earlier, the telecom major had launched a similar scheme for landline consumers and nearly 60,000 customers reconnected after payment of dues and received their old numbers.
The mela will be on the same lines as that of landline and broadband, with easy instalments for clearing the outstanding dues and getting back the same number, if available for allotment, a statement by BSNL said.

“BSNL CGM thanked the customers for their come back.All customers who want to avail reconnection of their disconnected mobile postpaid numbers can now approach BSNL customer care centres,“ the statement said.


 
"மாண்புமிகுவை இழக்கிறார் விஜயபாஸ்கர்? - சுகாதாரத்தை கூடுதலாக சுமக்கப் போகும் எடப்பாடி" 




விஜயபாஸ்கரிடம் இருக்கும் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை பறிப்பதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் கனஜோராகத் தொடங்கிவிட்டன.

தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்குப் பிறகு செல்வாக்குமிக்க அமைச்சராகத் திகழ்ந்து வருபவர் விஜயபாஸ்கர். புதுக்கோட்டையில் ஜாதி பெயரைச் சொல்லி சொந்தக் கட்சியினரே இவருக்கு எதிராக குழி பறித்த போதும் அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி சக்சஸ்புல் பொலிட்டீஷியானாக அடையாளப்படுத்தப்பட்டவர்.

சீனியர்கள் பல இருக்க மருத்துவம் பார்ப்பதில் கைராசிக்காரரான விஜயபாஸ்கரிடம் சுகாதாரத்துறை இலாக்காவை ஒப்படைத்தார் ஜெயலலிதா. அன்றில் இருந்தே மாண்புமிகுக்கள் வட்டாரத்தில் இவருக்கான செல்வாக்கான அதிகரிக்கத் தொடங்கியது.

மருத்துவ மாணவர்களின் போராட்டம் தொடங்கி, நீட் தேர்வு வரை தன் துறை சார்ந்த பல பிரச்சனைகளையும் ஜஸ்ட் லைக் தட்டாக எதிர்கொண்ட விஜயபாஸ்கரை, ஆர்.கே.நகர் தேர்தல் பண விநியோக விவகாரம் பெரிதாக அசைத்து பார்க்கவில்லை. அரசியலின் நீள அகலத்தை அளந்து பார்த்த மார்க்கண்டேயனாக வலம் வந்த விஜயபாஸ்கரை குட்கா ஊழல் குழியில் தள்ளியுள்ளது.

குட்டு வைத்த குட்கா ஊழல்

தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்ட குட்கா பொருட்களை தடையின்றி விற்பனை செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோருக்கு மாதம் தோறும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருமான வரித்துறையினர் கடந்த ஜூலையில் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இருப்பினும் இவ்விவகாரம் அப்போது வெளியாகவில்லை. இதற்கிடையே சில ஆங்கில நாளிதழ்கள் நேற்று முன்தினம் இது செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து #CashForCancer என்ற தலைப்புடன் களமிறங்கிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அத்தனை ஆதாரங்களையும் அடுக்கி தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளித்ததுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண விநியோக பிரச்சனையையே அனாயசமாக எதிர்கொண்ட விஜயபாஸ்கருக்கு குட்கா விவகாரம் எல்லாம் ஒரு பொருட்டா? என்று யாரும் கூற முடியாதபடி அவருக்கு எதிரான பிடி டெல்லியில் இருந்து இறுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் சாட்டை எடுத்த ஸ்டாலின்

குதிரை பேரத்தை அடுத்து, குட்கா ஊழல் விவகாரம் தமிழக சட்டசபையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரை பணி நீக்கம் செய்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி பேரவையில் இருந்து இன்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். குட்கா ஊழல் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், அவையை நடத்த முடிய முடியாமல் சபாநாயகர் தனபால் திணறத் தொடங்கியுள்ளார்.

டெல்லியில் இருந்து வந்த எச்சரிக்கை?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக பண விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில் காட்டப்பட்ட அணுகுமுறையை குட்கா ஊழலிலும் எதிர்பார்க்க வேண்டாம் என்று டெல்லியில் இருந்து காட்டமான எச்சரிக்கை கோட்டைக்கு வந்ததாகக் கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.

பிரச்சனை பெரிதாவதற்குள் நடவடிக்கை எடுத்து மக்களிடம் நன்மதிப்பை பெற முயற்சியுங்கள் என்று அழுத்தம் திருத்தமாக பதில் கிடைத்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்தால் குற்றத்தை ஒப்புக் கொண்டது போல ஆகிவிடுமே என்று பதில் கூற மறுமுனையில் பேசுவதற்கு ஆளில்லையாம்..

டெல்லியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரை கட்டம் கட்டுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையில் முதல் அமைச்சர் எடப்பாடி இன்று காலையில் இருந்து தொடங்கியுள்ளார்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 340 உதவி மருத்துவர்கள் மற்றும் 165 சிறப்பு உதவி மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. தமிழ்நாடு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பணி நியமன ஆணை வழங்குவதாக இருந்தது.

விஜயபாஸ்கர் ஆப்சென்ட்

குட்கா விவகாரம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு விழாவில் விஜயபாஸ்கர் கலந்து கொள்கிறார் என்றதும், கூட்ட அரங்கில் செய்தியாளர்கள் குழுமியிருந்தனர். ஆனால் விஜயபாஸ்கர் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணி ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்க விஜயபாஸ்கர் விரும்பினாலும், நீங்க இப்போ கலந்து கொள்வது அவ்வளவு நல்லா இருக்காது என்று மூத்த அமைச்சர்கள் வழியாக சேதி சொல்லப்பட அமைதியாகவிட்டாராம்.

எடப்பாடிக்கு கூடுதல் பொறுப்பு

டெல்லியில் இருந்து ஒருபக்கம் எச்சரிக்கை வந்தாலும், அதிமுக மாண்புமிகுக்களில் பலர் விஜயபாஸ்கருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சிக்கும் ஆட்சிக்கும் இனியும் கெட்ட பெயர் ஏற்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒருவரால் இத்தனை பிரச்சனைகள் என்றால் அவரை நீக்கிவிடுங்களே என்று அட்வைஸ் வர, அத்தனையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த எடப்பாடி, விஜயபாஸ்கரிடம் இருக்கும் சுகாதாரத்தை பறிக்க முடிவு செய்துள்ளாராம்.ஜூலை முதல் வாரத்திற்குள் அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் நீக்கப்பட்டு, அந்த இலாகவை எடப்பாடி கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்றும் தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளன.
Dailyhunt
குடும்பத் தலைவி என்பவள் வெறும் மனைவி, தாய் மட்டுமல்ல: நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு 



சென்னை: ஒரு குடும்பத் தலைவி என்பவள் வெறும் மனைவி, தாய் மட்டுமல்ல.. அவள்தான் அந்த குடும்பத்தின் நிதியமைச்சர், கணக்காளர் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.

2 குழந்தைகளுக்குத் தாயாகவும் குடும்பத் தலைவியாகவும் இருந்த மாலதி, கடந்த 2009ம் மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்தில், அந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதை எதிர்த்து புதுச்சேரி மின்சார வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தனது தீர்ப்பை அளித்தது.

மாலதியின் மரணத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கோரிய அவரது கணவரின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மேலும், இந்த தீர்ப்புக்கான தனது விளக்கத்தையும் அளித்தது. அதில், உலக அளவில், குடும்பத் தலைவி என்பவளது சம்பளமற்ற வேலை எப்போதுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இது இன்னும் விவாதத்துக்குரியதாகவே உள்ளது.

இந்தியாவில் குடும்பத் தலைவி என்பவர் வெறும் மனைவி மற்றும் தாய் என்பதோடு நின்றுவிடவில்லை. அதற்கும் மேல் எத்தனையோ பணிகள் உள்ளன.

மாலதி ஒரு மனைவியாக இருந்துள்ளார்.

அன்பு தாயாகவும் இருந்துள்ளார். அதற்கும் மேல், அந்த குடும்பத்தின் நிதியமைச்சரும் அவர்தான். அவள் சமையல் வேலையையும் கவனித்திருப்பார். கணக்காளராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

குடும்ப நிர்வாகம், வருவாய் மற்றும் செலவினத்தை கவனிப்பது, கணவருடன் இணைந்து குடும்பத்தை நிர்வகிப்பது என்ற பணிகளையும் அவர் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில், ஒரு கணவர் தனது வாழ்க்கைத் துணையை இழந்துள்ளார். இரண்டு குழந்தைகள் தன் தாயை இழந்து, அவளிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பையும் இழந்துள்ளது.

மாலதியின் மரணத்தால், அந்த கணவருக்குக் கிடைக்க வேண்டிய கவனிப்பு பறிபோனது. அவரது வாழ்க்கை கேள்விக்குறியானது.

இவற்றையும் ஒரு மனிதனின் மரணத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளது.

அதோடு, மாலதியின் மரணத்துக்கு மின்சார வாரியம் பொறுப்பல்ல என்று கூறியிருந்த வாதத்தை முற்றிலும் நிராகரித்துள்ள நீதிமன்றம், மின்சார கோளாறுகளுக்கு எந்த வகையிலும் தனிமனிதர்கள் பொறுப்பேற்க முடியாது. மின்சார பகிர்மான கேபிளில் வந்த அதிகப்படியான மின்சாரத்தை கவனிக்காமல் விட்டது மின்சார வாரியத்தின் பொறுப்பற்ற தன்மைதான் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

2009ம் ஆண்டு மாலதி மின்சாரம் தாக்கி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, ரூ.5 லட்சம் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் அவரது கணவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அவருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், மாலதி வெறும் குடும்பத் தலைவியாகவே இருந்துள்ளார். இதனால் அவருக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று கூறி புதுச்சேரி மின்சார வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நேற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த தீர்ப்பினை பதிவு செய்துள்ளது.

இந்த தீர்ப்பு, நடந்து கொண்டிருக்கும் பல வழக்குகளுக்கும், எதிர்காலத்தில் தொடரப்படும் வழக்குகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.

Dailyhunt
அடேங்கப்பா! ஊருக்குப் போகும் பிளானை மாற்றுவதால் மட்டும் ரூ.1400 கோடி வருமானம் ஈட்டும் ரயில்வே 




இந்தூர்: ரயிலில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளை, பயணிகள் ரத்து செய்வதன் மூலம் மட்டுமே ரூ.1400 கோடியை வருவாயாக ஈட்டி வருகிறது ரயில்வே துறை.

கடந்த ஆண்டை விட, ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் 2016-17ம் ஆண்டில் ரயில்வே நிர்வாகம் ரூ.1400 கோடியை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25.29 சதவீதம் அதிகம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய ரயில்வே தகவல் அமைப்பு இந்த பதிலை அளித்துள்ளது.

மேலும் அந்த பதிலில், 2015-16ம் ஆண்டில், ரயில் டிக்கெட் ரத்து செய்யப்படுவதால் கிடைக்கும் வருவாய் ரூ.1123 கோடி அளவுக்கு இருந்த வந்த நிலையில், 2016-17ம் ஆண்டில் 1400 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

இதன் மூலம் ரயில்களை இயக்குவதால் மட்டும் அல்ல, ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாலும் மிகப்பெரிய தொகையை ரயில்வே வருவாயாக ஈட்டுவது தெரிய வந்துள்ளது.

மேலும், 2016-17ம் ஆண்டில் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகள் மூலம் ரூ.17.87 கோடியை வருவாயாக ஈட்டுகிறது.

ரயில்வே நிர்வாகம், ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணத்தை கடந்த ஆண்டு அதிகரித்தது. இதன் மூலம், ஏற்கனவே இருந்த தொகை இரண்டு மடங்காக அதிகரித்தது. இது மிகப்பெரிய முறைகேடு. உடனடியாக ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணங்களை ரயில்வே துறை குறைக்க வேண்டும், இதுவரை பிடித்தம் செய்த கட்டணங்களையும் வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர் கௌட் கூறியுள்ளார்.

Dailyhunt
ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டினால்... எச்சரிக்கும் ராமதாஸ் 

சகாயராஜ் மு



தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டுக் கூரை வரை அனைத்து நிலைகளிலும் ஊழல்செய்து, லட்சக்கணக்கான கோடிகளைக் குவித்தார் என்பதைத்தான் ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து கற்க முடியும் என்று கூறியுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதலமைச்சராக பதவி வகித்து மறைந்த ஜெயலலிதாவுக்கு, சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஒருவருக்கு நினைவு மண்டபம் அமைத்து, தியாகியாக்கும் செயல் கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா மறைந்த சில நாள்களில் சட்டப்பேரவையில் நடந்த விவாதத்துக்குப் பதிலளித்த அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கு அருகில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். எனினும், அந்த நேரத்தில் ஜெயலலிதா எந்த வழக்கிலும் தண்டிக்கப்பட்டிருக்கவில்லை என்பதால், அப்போது எதிர்ப்பு எழவில்லை. அதன்பின்னர் வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு சிறைத் தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. இந்த ஊழலில், ஜெயலலிதாவுக்கு உள்ள பங்குகுறித்து விரிவாக விளக்கியிருந்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பளிக்கப்படும்போது, ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால், அவருக்கு தண்டனை வழங்கவில்லை. எனினும், அவர் குற்றவாளிதான். ஊழலின் அடையாளமாகத் திகழும் ஜெயலலிதாவுக்கு மக்களின் வரிப்பணத்தில் நினைவு மண்டபம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்கப்படும்போது, ஜெயலலிதா இறந்துவிட்டதால்தான் அவரை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அறிவிக்கவில்லை. இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறைதான். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், அவரும் இந்த வழக்கில் குற்றவாளி என்று அறிவித்து ரூ.100 கோடி அபராதம் செலுத்த உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கும். ஜெயலலிதாவும் முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, 4 ஆண்டு சிறை தண்டனையை னுபவித்துக்கொண்டிருந்திருப்பார். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதாவின் ஊழல்கள் பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் கடுமையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். ‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும், ஒரே முகவரியில் வசித்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் வேறு தொடர்புகள் இல்லை என்று கூறமுடியாது. இன்னும் கேட்டால், ஊழல்செய்து தாம் குவித்த சொத்துக்களைப் பகிர்ந்தளித்துப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவர்களை ஜெயலலிதா தமது போயஸ் தோட்டத்தில் தங்க வைத்திருந்தார்’’ என்று நீதிபதி சந்திரகோஷ் கூறியிருக்கிறார். ஊழல்கள்மூலம் சொத்துக்குவித்த வழக்கில், சசிகலா மற்றும் அவரது உறவினர்களைவிட ஜெயலலிதாதான் முதன்மைக் குற்றவாளி என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் எதுவும் இருக்க முடியாது.



இதற்கெல்லாம் மேலாக, நினைவு மண்டபம் எனப்படுவது பொதுவாழ்வில் ஒழுக்க சீலர்களாகவும், தியாகத் திருவிளக்காகவும் விளங்கியவர்களைப் போற்றுவதற்காக அமைக்கப்படுவது. சிறந்த தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவிடங்களை அடுத்தடுத்த தலைமுறையினர் பார்க்கும்போது, அந்தத் தலைவர்களைப் போல நாமும் வாழ்ந்து, நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்பதற்காகத்தான் நினைவிடங்கள் அமைக்கப்படுகின்றன. ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் பட்சத்தில், அவரது வாழ்க்கையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறையினர் கற்றுக்கொள்ள என்ன இருக்கும். தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டுக் கூரை வரை அனைத்து நிலைகளிலும் ஊழல்செய்து, லட்சக்கணக்கான கோடிகளைக் குவித்தார் என்பதைத்தான் ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து கற்க முடியும். வருங்காலத் தலைமுறையினருக்கு அந்தப் பாவம் தேவையில்லை.

அதுமட்டுமின்றி, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த மற்றொரு நீதிபதி அமிதவா ராய், ‘‘உயிர்க்கொல்லி தீமையான ஊழலின் பிடியிலிருந்து குடிமக்கள் சமுதாயத்தை மீட்க வேண்டும். நமது முன்னோர் மற்றும் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாக சீலர்களால் கனவு காணப்பட்ட நிலையான, நியாயமான, உன்னதமான சமூக அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால், இப்புனிதப் பணியில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார். சாதாரண குடிமகனுக்கான இந்த அழைப்பு, தமிழக அரசுக்கும் பொருந்தும். எனவே, வருங்காலத் தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குவதைத் தவிர்ப்பதற்காக, ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என எச்சரிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
சென்னை நடைமேடையில் வாழும் மக்களின் ஒரு நாள் இரவு #VikatanPhotoStory

சொ.பாலசுப்ரமணியன்




தறிகெட்டு அலையும் கார்கள் நடைமேடையில் ஏறும் நிகழ்வுகள், குழந்தை கடத்தல் சம்பவங்கள், அவசரத்திற்கு கழிவறையைக் கூட பயன்படுத்த முடியாத நிலை என இந்த மக்களின் ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத துயரங்கள் நிறைந்தவை. புயல், மழை வெள்ளம் என அனைத்திலும் இவர்களின் ஒரே துணை இந்த நடைமேடைதான். சென்னையின் நடைமேடைகளில் வாழும் இந்த மக்களைச் சந்தித்து வருவோமா!?



வால்டாக்ஸ் சாலையோர நடைமேடையில் டி.வி ஓடிக்கொண்டிருக்க, உறங்குபவர்கள் போக மீதமுள்ளவர்கள் படம் பார்க்கிறார்கள்.



பகலில் பரபரப்பாக இருக்கும் என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆட்டோக்களை ஓரம் கட்டிவிட்டு களைப்புடன் தூங்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்



என்.எஸ்.சி. போஸ் சாலையை ஒட்டிய நடைமேடையில் கூட்டமாக ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார்கள்



ராத்திரி பன்னிரண்டு மணிக்குமேலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அப்படி என்ன விளையாடுறாங்கன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்தோடு டூவீலரை ஓரம் கட்டிட்டு பக்கத்தில் போய்ப் பார்த்தோம். வட்டமாக உட்கார்ந்திருந்திருந்தவர்கள் எங்களைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் விளையாடுவதை நிறுத்திவிட்டு “என்ன தம்பிங்களா என்ன வேணும்?'' என்று அதில் ஒருத்தர் அதட்டலாகக் கேட்க, “இந்தா... இன்னாத்துக்குய்யா அந்தப் புள்ளைகளை வெரட்டுற. கம்முன்னு இந்தாண்ட வந்து குந்து” என்று ஒரு பாட்டி குரல் கொடுத்ததும் அவர் அமைதியானார்.



இந்தக் குழந்தைகளுக்குச் சாலையோர நடைமேடைகள்தான் வீடு. மொட்டைமாடியில் நிலா காட்டி சோறு ஊட்டுவதைப் பார்த்திருப்போம். இவர்களின் அம்மாக்கள் சாலையில் விரையும் வாகனங்களைக் காட்டித்தான் சோறு ஊட்டுகிறார்கள். வாகனங்களின் இரைச்சலால் நள்ளிரவிலும் தூங்காமல் விழித்திருக்கும் குழைந்தைகளுக்கு, வேடிக்கை காட்டி தூங்க வைக்க முயல்கிறார்.





தூங்கிக் கொண்டிருக்கும் நேரங்களில் நிறைய குழந்தை கடத்தல்களும் நடந்திருக்கின்றன என்பதால், குழந்தைகளைக் கையில் பிடித்துக்கொண்டு விடிய விடிய விழித்துக் கிடக்கும் அம்மா.

''ராத்திரியில நாங்க தூங்காம இப்புடி பொழுத கழிக்குறதே ஒரு சில ஆம்பளைங்களுக்குப் பயந்துதான். திடீர்னு வண்டியை நிறுத்திட்டு வந்து மேல கை வைப்பானுங்க. சந்துக்கு வர்றியான்னு கூப்பிடுவாங்க. பொம்பளப்புள்ளக தூங்கும்போது வேடிக்கைப் பார்ப்பாங்க. ஆம்பளைங்க தூங்கும்போது பொம்பளைங்க நாங்க ஒண்ணா முழிச்சிருப்போம். நாங்க தூங்கும்போது ஆம்பளைங்க முழிச்சிருப்பாங்க. சில சமயம் பச்சைப் புள்ளைங்களைத் தூக்கிட்டுப் போயிடுவாங்க.

அரசாங்கத்துக்கிட்ட எத்தனையோ மனு கொடுத்தும் யாரும் கண்டுக்கலை'' - இது நாகம்மா என்பவரின் வேதனைக் குரல்.



சாலையின் நடுவிலுள்ள தடுப்புச் சுவர்களில் காயவைக்கப்பட்ட துணிகள்



அனிதா என்பவரிடம் பேசினோம். ''எங்களாண்ட ரேஷன் கார்டு, ஆதார், ஓட்டு ஐ.டி எல்லாமே இருக்குதுய்யா. 'எங்களுக்கு ஏன் வீடு தர மாட்டேங்கறீங்க?'னு அதிகாரிங்ககிட்ட கேட்டா, 'அதெல்லாம் உங்க தாத்தா பாட்டி காலத்துலயே கொடுத்தாச்சு'னு சொல்லி அனுப்பிடுறாங்க. இங்க முதல்வர்கள்கூட திடீர் திடீர்னு மாறிடறதை டி.வியில் பாக்குறோம். ஆனா, நாங்கதான் காலங்காலமா மாறாமல் பிளாட்பாரத்துலயே சுருங்கிக் கெடக்குறோம். எத்தனையோ பத்திரிகைகாரங்க வந்து போட்டோ புடிச்சுட்டுப் போனாங்க. எம்.எல்.ஏவும் வந்துட்டுப் போனாரு. தூங்கும்போதும் இந்த பிளாட்பாரம்தான்; முழிக்கும்போதும் இந்த பிளாட்பாரம்தான்.

சூரியன் எங்களுக்கு மட்டும் புதுசாவா விடியப்போவுது'' என்று துயரத்திலும் புன்னகைக்கிறார். விடிவதற்கு இன்னும் கொஞ்ச நேரமே இருக்க, கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினோம்!
'பாரசிட்டமால் மருந்துக்கே இந்த கதியா?' - ஓர் எளிய மருத்துவரின் 'ஜி.எஸ்.டி' வேதனை

ஆ.விஜயானந்த்




' ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை' என்ற முழக்கத்தோடு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது. 'சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளுக்கெல்லாம் 12 சதவீத வரியைப் போட்டுள்ளனர். ஆனால், பணக்காரர்கள் பயன்படுத்தும் உலர் பழங்களுக்கு 2 சதவீதம் அளவுக்கு வரியைக் குறைத்துள்ளனர். ஜி.எஸ்.டிக்காக மருந்துக் கடைகள் எங்களை நெருக்குகின்றன' என்கிறார் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இதே தினத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவதால், மருத்துவர்களும் மருந்துக் கடை உரிமையாளர்களும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதிலும், அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி என அனைத்து மருந்துகளுக்கும் 12 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையில் வரி போடப்பட இருப்பது, கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. " பதிவு பெற்ற மருத்துவராக இருப்பதால், எனக்கு சலுகை விலையில் மருந்துகள் கிடைக்கும். சாதாரண காய்ச்சலுக்குப் போடப்படும் பாரசிட்டமால் மருந்து, ஆயிரம் மாத்திரைகளை 220 ரூபாய்க்கு வாங்குவேன். இதற்காக 5 சதவீத வரியைக் கட்டி வந்தேன். இப்போது இதே பாரசிட்டமால் மருந்துக்கு நான் 12 சதவீத வரியை செலுத்த வேண்டியிருக்கிறது. பொதுமக்கள் எப்போதும் பயன்படுத்தும் பாரசிட்டமால் மாத்திரைக்கே, இவர்கள் கூடுதல் வரியைப் போட்டுள்ளனர். சாதாரண சத்து ஊசிக்கும் 12 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையில் வரியைப் போட்டுள்ளனர். இந்தியாவில் 70 முதல் 80 சதவீத மக்கள், தங்கள் சொந்தப் பணத்தில் இருந்துதான் மருந்துகளை வாங்குகின்றனர் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இவர்களை ஒட்டுமொத்தமாக வதைக்கிறது ஜி.எஸ்.டி வரி" எனக் கொந்தளிப்போடு பேசத் தொடங்கினார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மருத்துவர் புகழேந்தி.



தொடர்ந்து நம்மிடம் பேசினார். " ஜி.எஸ்.டி வரியின் மூலம் இன்சுலின் மருந்துக்கு மட்டும் வரியைக் குறைத்திருக்கிறார்கள். மீதமுள்ள 99 சதவீத மருந்துகளுக்கு 7 சதவீதம் கூடுதலாக வரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவசர காலங்களில் போட்டுக் கொள்ளும் குளுக்கோஸுக்கு வரி விதிப்பது எந்த வகையிலும் சரியல்ல. என்னிடம் வரும் நோயாளிகளுக்கு, சலுகை விலையில் கிடைக்கும் மருந்துகளை மிகக் குறைந்த விலைக்குத் தருகிறேன். இப்போது அவர்களிடம் கூடுதலாக வசூலிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்" என்றவர்,

" சென்னையில் நான்கு இடங்களில் மொத்தமாக மருந்துகளை வாங்குகிறேன். கடந்த சில நாட்களாக, 'மொத்தமாக மருந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்' என மருந்து கொள்முதல் கடைகளில் இருந்து நெருக்குகிறார்கள். ' ஜி.எஸ்.டி வர இருப்பதால், எங்களுக்கு நிறைய இழப்புகள் ஏற்பட இருக்கிறது. இந்த இழப்புகளுக்கு மருந்து நிறுவனங்கள் பொறுப்பேற்க முன்வரவில்லை. எனவே, 30 ஆம் தேதிக்குள் மருந்துகளை வாங்கிக் கொள்ளுங்கள். அதன்பிறகு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும்' என்கிறார்கள். அதற்காக, பல மாதங்களுக்குத் தேவையான மருந்துகளை ஒரே நேரத்தில் எப்படி வாங்கிக் கொள்ள முடியும்? அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது? ஒரு மாதத்துக்குத் தேவையான மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதன்பிறகு, இந்த வரியைக் குறைத்துவிடுவார்களா? அமெரிக்காவில் பிரதமர் மோடி பேசும்போது, 'ஜி.எஸ்.டியால் எங்கள் நாட்டின் வளர்ச்சி உயரும்' என்கிறார். அடித்தட்டு மக்களை வதைத்துவிட்டு, என்ன மாதிரியான வளர்ச்சியை இவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
 
மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்க்க பணமில்லாதவர்கள், மருந்துக் கடைகளில் கேட்டு வாங்கிச் சாப்பிடும் நிலையும் இருக்கிறது. இந்த வரியால், அவர்கள் கூடுதல் தொகைகளைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்சுலினோடு சேர்த்து ஓரிரு மருந்துகளைத் தவிர, மற்ற அனைத்துக்கும் 12 முதல் 28 சதவீதம் வரையில் வரி போடப்பட உள்ளது. மருந்து விலைகளும் தாறுமாறாக உயரப் போகிறது. இதுதான் ஜி.எஸ்.டியால் உருவாகக் கூடிய மாற்றமா? இந்த அரசு மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கவில்லை. 'விலைவாசியில் பெரிய மாற்றம் வராது' என மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார். ஆனால், சாதாரண மக்கள் பயன்படுத்தும் மருந்துகளுக்கு இவ்வளவு வரியை விதிப்பது எந்த வகையில் நியாயமானது? தங்களின் கொள்கை சார்ந்த முடிவுகளைத்தான் ஜி.எஸ்.டி வழியாக பிரதமர் அமல்படுத்துகிறாரோ என்ற சந்தேகமும் எங்களுக்கு உண்டு" என்றார் ஆதங்கத்தோடு.

NEWS TODAY 22.04.2024