Thursday, June 29, 2017

உலகை மிரள வைக்கும் அந்த நாட்டுக்கு மோடி சுற்றுப்பயணம்!
vikatan

எம்.குமரேசன்

மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு நேற்று பிரதமர் மோடி டெல்லி திரும்பியுள்ள நிலையில், இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜூலை 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை இஸ்ரேல் நாட்டில் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நாதன்யாகு, அதிபர் ருவ்யன் ரெவ்லின் ஆகியோருடன் ராணுவ ஒத்துழைப்பு, பொருளாதார மேம்பாடு, இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.



இஸ்ரேல் நாட்டுடன் 1992-ம் ஆண்டு முதல் இந்தியா தூதரக உறவு வைத்திருக்கிறது. ஆனால், 25 ஆண்டுகளில் எந்த இந்திய பிரதமரும் இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதில்லை. மோடிதான் அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதல் இந்திய பிரதமர். இஸ்ரேல் சுற்றுப்பயணத்தின்போது, முதல் உலகப் போரில் பலியான இந்திய வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஹாஃபியா நகர கல்லறைத் தோட்டத்துக்கு சென்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். தலைநகர் டெல்அவிவில் வசிக்கும் இந்திய மக்களிடையேவும் உரையாற்றுகிறார்.

இஸ்ரேல், இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. இந்தியாவுக்கு ஆயுதங்கள், தொழில்நுட்பங்களை வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது. அதனால், வளைகுடா நாடுகள் மோடியின் இஸ்ரேல் சுற்றுப்பயணத்தை உண்ணிப்பாகக் கவனிக்கக்கூடும்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...