Friday, June 30, 2017

திருப்பதி மலைப்பாதை வழியாக ஏழுமலையானை தரிசிக்க 2400 படி ஏறி வந்த காளை

2017-06-30@ 02:54:19

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காளை ஒன்று மலைப்பாதை வழியாக 2400 படிக்கட்டுகள் ஏறி வந்த சம்பவம் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி வாரிமெட்டு மலைப்பாதை வழியாக திடீரென ஒரு காளை மாடு பக்தர்களுடன் படிக்கட்டுகளில் ஏறி வந்து கொண்டிருந்தது. தங்களுடன் மாடு வருவதை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆனால், அந்த காளை யாரையும் கவனிக்காமல் ேவக வேகமாக 2400 படிக்கட்டுகளை ஏறி திருமலை வந்தடைந்தது. அப்போது, ஏழுமலையானை தரிசனம் செய்ய இந்த காளை வந்ததாக கருதி பக்தர்கள் அதனை தொட்டு வணங்கினர். மேலும், சிலர் அதற்கு குங்குமம் வைத்து வழிபட்டனர்.

இந்நிலையில் பக்தர்கள் கூட்டத்துடன் வந்த காளையை பாதுகாவலர்கள் பார்த்து, கோசாலை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் அந்த காளை மாட்டை திருமலையில் உள்ள கோசாலைக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூஜை செய்து அங்கு அடைத்து வைத்தனர்.

No comments:

Post a Comment

Can't have different DA hikes for staff and pensioners: Supreme Court

Can't have different DA hikes for staff and pensioners: Supreme Court  The Supreme Court has ruled that differential dearness benefit in...