Friday, June 30, 2017

505 டாக்டர்களுக்கு நியமன ஆணை

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
00:24

சென்னை: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., தேர்வு செய்த, 505 டாக்டர்களில், 24 பேருக்கு முதல்வர் பழனிசாமி பணி ஆணை வழங்கினார். தமிழகத்தில், 340 உதவி டாக்டர்கள், 165 சிறப்பு உதவி டாக்டர்கள் என, மொத்தம், 505 டாக்டர்களை, எம்.ஆர்.பி., தேர்வு செய்தது. அவர்களுக்கு, சுகாதாரத்துறையில் பணி நியமன ஆணை வழங்கும் விழா, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று நடந்தது. முதல்வர் பழனிசாமி, 24 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.மற்ற டாக்டர்களுக்கு, துறையின் உயரதிகாரிகள் வழங்கினர்.

சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''எம்.ஆர்.பி., 2012ல் துவங்கப்பட்டது. இதுவரை, 8,692 டாக்டர்கள், 9,190 நர்ஸ்கள் உட்பட, 20 ஆயிரத்து, 862 பேரை தேர்வு செய்துள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...