Friday, June 30, 2017

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க ஜூலை 1 தான் கடைசித் தேதியா..? 

ராகினி ஆத்ம வெண்டி மு.

பான் எண்ணை ஜூலை 1-ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், மக்களுள் பலர் ஜூலை 1-ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாதா என்ற குழப்பமான மனநிலையிலேயே தவித்து வருகின்றனர்.



அடிப்படைச் சேவைகள் பெற ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரி தாக்கல்செய்வதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் நடைமுறையை முன்மொழிந்துள்ளது மத்திய அரசு. வரும் ஜூலை 1-ம் தேதி முதல், மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பதற்காக, புதிய இணையதள வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வருமானவரித்துறை. அதன்படி, இனி இணையதளத்தின் மூலமே எளிமையான முறையில் ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம். https://incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில், ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணைக் கொடுத்து. பின் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களில் பலர் இதுவரை ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காமலே உள்ளனர். இன்னும் பலர் இன்னும் ஒரு நாள் தான் அவகாசம் உள்ளதெனப் பதிவு செய்ய மொத்தமாகக் குவிய வருமான வரித்துறையின் இணையதளம் தற்போது முடங்கியுள்ளது. ஜூலை 1-ம் தேதிக்குப் பின்னர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாதது ஆகிவிடும் என மக்களுள் ஒரு கருத்து தற்போது நிலவி வருகிறது.

 மத்திய அரசின் உத்தரவின்படி ஜூலை 1-ம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது அவசியமாகிறது. ஆனால், இணைக்க முடியாவிட்டால் பான் கார்டு செல்லாதது ஆகிவிடும் என்ற நிலை கிடையவே கிடையாது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பின்னதொரு தேதி அறிவிக்கப்பட்டு அதன் பின்னரே பான் கார்டு செல்லாது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். வருமான வரி அரசாணை விதி 139AA-ன் அடிப்படையில் இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...