Showing posts with label News clippings. Show all posts
Showing posts with label News clippings. Show all posts

Wednesday, December 9, 2020

Sharing of newspaper PDFs illegal, say experts

Sharing of newspaper PDFs illegal, say experts

TIMES NEWS NETWORK

09.12.2020

Early on in the lockdown, many who missed their morning newspaper or had safety concerns took to reading PDFs of The Times of India ePaper shared on social media groups. But even after studies have shown that newspapers are safe and do not spread the coronavirus, many are still continuing with these illegal downloads despite warnings from experts that this could invite legal action against admins of such WhatsApp groups and members.

Senior Supreme Court lawyer Pavan Duggal points out that circulation of paid content without permission violates the law.

‘Circulation of digital edition sans owner’s nod a violation’

Duggal added, “If a digital edition is being circulated without the permission of the owner, it is a violation of the Copyright Act as well as the Information Technology Act Section 43 which clearly says that if any attempt is made to destroy, delete or alter any information residing in a computer resource, or diminish its value or utility, it is illegal. This person will be liable to pay damages by way of compensation to the person so affected.”

This way of reading newspapers is also risky because it opens up the possibility of someone tampering with the content in the newspaper. A third party circulating the paper without permission may even manipulate and alter the content. This can lead to a whole host of legal and credibility issues, and could make one more susceptible to reading the very fake news that newspapers diligently work to avoid. This practice not only impacts the readers by opening them up to inaccurate or tampered information, it also negatively impacts newspapers and the state of journalism as well.

Newspapers are in the business of audience aggregation through newspaper content. But if this content is available outside newspapers, it can hurt the business of journalism and the jobs of many hard-working reporters, editors, photographers, designers and countless others who work to produce the newspaper.

So if you don’t want to devalue the hard work that goes into creating this credible and diverse content or invite civil and criminal charges, make sure you don’t click on that PDF.

If a digital edition is being circulated without owner’s permission, it’s a violation of Copyright Act as well as IT Act Sec 43, which says if any attempt is made to destroy, delete or alter any information residing in a computer resource, or diminish its value or utility, it is illegal

— Pavan Duggal | Senior SC lawyer

Wednesday, December 7, 2016

பல்துறை வித்தகர் 'சோ'- நாடகம் முதல் அரசியல் அரங்கு வரை


சோ ராமசாமி | கோப்புப் படங்கள்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான 'சோ' ராமசாமி புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 82.

பல்துறை வித்தகரான சோ கடந்து வந்த பாதை

* சென்னை மயிலாப்பூரில் 1934-ம் ஆண்டு பிறந்த ராமசாமி பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார்.

* இளம் வயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆட்ட நுணுக்கங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். பத்திரிகைகளில் விளையாட்டு விமர்சனங்களும் எழுதியுள்ளார்.

வழக்கறிஞராக சோ

* சோ ராமசாமியின் தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ரூபூதம் உள்ளிட்டோர் வழக்கறிஞர்கள். எனவே இயற்கையாகவே சோ அதில் ஈர்க்கப்பட்டு சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பல நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்

நாடக உலகில்...

* 20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. முதன்முதலாக 'கல்யாணி' என்ற நாடகத்தில் நடித்தார்.

* 'தேன்மொழியாள்' என்ற நாடகத்தில் 'சோ' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது. அதன்பிறகு முழு நேர நாடகக் கலைஞராக பாதை மாற்றிக் கொண்டார்.

* சோவின் நாடகங்களில் அரசியல் நையாண்டியும், சமூக விமர்சனமும் கலந்திருக்கும். 1960-களில் அவரது சம்பவாமி யுகே யுகே என்கிற நாடகத்தை தணிக்கை செய்ய தமிழகத்தின் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் முதல்வரான பக்தவத்சலம் முயற்சி செய்தார். அது பலரது கவனத்தை ஈர்த்தது.

* சோவின் 'ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு', 'முகமது பின் துக்ளக்', 'சரஸ்வதி சபதம்' உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. 'விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்' என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார்.

* 20-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள் எழுதியுள்ளார். இவரது 'இந்து மகா சமுத்திரம்' நூல் 6 தொகுதிகளாக வெளிவந்தது.

திரைப்பட உலகில்...

* திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்தார். நாகேஷ், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார் ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

* பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். 'யாருக் கும் வெட்கமில்லை', 'உண்மையே உன் விலை என்ன' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

* சோ எழுதிய பல நாடகங்கள், மேடையைத் தாண்டி திரைப்படங்களாகவும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள் உள்ளிட்டவை குறித்தும், கலாச்சாரம், மதம் குறித்தும் நன்கு கற்றவர். அவை குறித்து விரிவாக எழுதியும் உள்ளார்.

* சோவின் முகமது பின் துக்ளக் நாடகம், திரைப்படமாக உருவாவதைத் தடுக்க அப்போதைய திமுக அரசாங்கம் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போனது.

* 'நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது' என்று பெருமையுடன் கூறுவார்.

பத்திரிகை உலகில்...

* தனது சொந்த உழைப்பில் 'துக்ளக்' என்ற வார இதழை 1970-ம் ஆண்டும், 'பிக்விக்' என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் ஆரம்பித்து பத்திரிகையாளராகவும் முத்திரை பதித்தார்.

* அவரது நையாண்டியும், துணிச்சலும் அவரது கட்டுரைகளிலும், கேலிச்சித்திரங்களிலும் பிரதிபலித்தது.

அரசியல் அரங்கில்...

* அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.

* பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர் சோ. தனது துக்ளக் ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் போது முதன் முதலில் மோடியை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து ஒருவகையில் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியதே சோ எனக் கூறலாம்.

* வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது மாநிலங்களவை உறுப்பினராக 1999-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* கோயங்கா விருது, நச்சிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர்

* தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார்.

* சோ தான் பணியாற்றிய துறைகளில் பெற்ற வெற்றிகள் குறித்து பெரிதாக நினைத்துக் கொண்டதில்லை. நான் அதிர்ஷ்டம் செய்தவன் என்றே கூறுவார். அதனால் தான் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியபோது அதற்கு 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' எனப் பெயர் வைத்தார்.

Wednesday, August 31, 2016

TNPSC GROUP IV

டிஎன்பிஎஸ்சி | குரூப்- IV | மாதிரி வினா- விடை 1: 10 லட்சம் பேர் போட்டிபோடும் தேர்வில் வெல்ல வேண்டுமா?


அரசுப் பணியில் சேர வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் கனவு. சமூக அந்தஸ்து, பணி பாதுகாப்பு, நல்ல சம்பளம் போன்ற காரணங்கள் இளைஞர்களை அரசு வேலை நோக்கி ஈர்க்கின்றன. தமிழக அரசுப் பணிக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தற்போது காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் வரித்தண்டலர் ஆகிய பல்வேறு விதமான பதவிகளில் 5,451 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் வரும் நவம்பர் 6-ல் நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளி யிட்டுள்ளது.

குரூப்-4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து தட் டச்சர் பணிகளுக்கு மட்டும் கூடுதலாக தொழில்நுட்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். அதிகபட்சமாக பொதுப் பிரிவினருக்கு 30, பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்-2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்றாலும் கூட பெரும்பாலும் பிளஸ்-2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித் தகுதி உடையவர்களும் குரூப்-4 தேர் வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

இவ்வாண்டு 12 லட்சம் பேர்

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற் பட்டோர் விண்ணப்பித்தனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு ஏறத்தாழ 12 லட்சம் பேர் விண்ணப் பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. காரணம், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்பேரில் சம்பளம் உயர்த் தப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் திருத்தியமைக்கப்பட இருக்கிறது. குரூப்-4 தேர்வுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே அரசு வேலை உறுதி. எனவேதான், குரூப்-4 தேர்வுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் முட்டி மோதுகிறார்கள்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஏராளமான மையங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கு செப்டம்பர் 8-ம் தேதிக்குள் டிஎன் பிஎஸ்சி இணையதளத்தின் (www.tnpsc.gov.in) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண். அப்ஜெக்டிவ் (கொள்குறி வகை) முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இருக்கும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்.

பொது அறிவு பகுதியானது அனை வருக்கும் பொதுவானது. பொது தமிழ், பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்து கொள்ளலாம். பெரும்பாலான விண்ணப்ப தாரர்கள் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பொது தமிழ் பாடத்தைத்தான் விருப்பமாக தேர்வுசெய்கிறார்கள்.

போட்டித் தேர்வின் உத்திகள்

12 லட்சம் பேர் விண்ணப்பிப்பதால் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், இதில் 12 லட்சம் பேருமே உண்மையான போட்டியாளர்களாக இருக்க முடியாது. அரசு வேலை என்ற ஆசையில் நாமும் எழுதிப் பார்ப்போமே என விண்ணப்பிப்ப வர்களும், தேர்வுக்கான தயாரிப்பே இல்லாமல் எழுதுபவர்களும் இதில் பெரும்பான்மையினராக இருப்பர்.

டிஎன்பிஎஸ்சி நடத்தி வரும் போட்டித் தேர்வுகளுக்காக முழுமை யான தயாரிப்பில் உள்ளவர்கள் மத்தியில் தான் உண்மையான போட்டி இருக்கும். எனவே, எண்ணிக்கையை கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இன்று முதல், இருக்கும் காலத்தை துல்லியமாக திட்டமிட்டு பயன் படுத்தி தயாரிப்பில் ஈடுபட்டாலே வெற்றி வசப்படும். முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான தமிழ் அல்லது ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை முழுமையாக படிக்க வேண்டும். 10-ம் வகுப்பு தரத்தில்தான் தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், வெற்றிக்கான மதிப்பெண்ணை தரும் கேள்விகள் சில நேரங்களில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களில் இருந்தும் கேட்கப்படலாம் என்பதால் அடுத்த கட்டமாக மேல்நிலைப் பள்ளி பாடங்களை படிப்பது கூடுதல் சிறப்பு.

நாட்டு நடப்புகள், கணிதம், திறனறிவு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை இனிவரும் காலங்களில் துறைசார் வல்லுநர்கள் விளக்குவார்கள். அவர் களின் வழிகாட்டுதலின்படி தயாரிப்பில் ஈடுபட்டாலே போதும். எனினும், தயாரிப் பின் தொடக்கம் என்பது மாநில கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களை படிப் பதில் இருந்து தொடங்குவதே நலம்.

மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் தலங்கள், முக்கிய இடங்கள் என தமிழ்நாட்டை மையமாக வைத்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்ப தால் தமிழகம் குறித்த பொது அறிவு புத்தகத்தை வாங்கி படிப்பது அவசியம். கணிதம் மற்றும் திறனறிவு பகுதியில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் வெளியாகும் கணித மாதிரி வினா - விடைகளை தொடர்ச்சியாக முயன்று பார்ப்பது நேர மேலாண்மைக்கு உதவும்.

வெற்றிக் கொடி கட்டலாம்

‘வெற்றிக்கொடி’ பகுதி மூலம் உயர் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக எண்ணற்ற தகவல்களை மாணவ சமுதாயத்துக்கு வாரி வழங்கிக் கொண் டிருக்கும் ‘தி இந்து’ நாளிதழ், குரூப்-4 தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவ - மாணவிகளுக்கு உதவும் வகையில் கடந்த ஆண்டு மாதிரி வினா - விடைகளை வெளியிட்டது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மாதிரி வினா - விடைகளுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். இதற்கு இளைஞர்களிடம் இருந்து ஏகோபித்த ஆதரவும் கிடைத்தது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் குரூப்-4 தேர்வுக்கு தயாராகும் இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி வினா-விடைகளையும், அரிய ஆலோ சனைகளையும் வழங்க இருக்கிறோம்.

வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்கள் இப்பகுதி வெளியாகும். அனுபவம் பெற்ற நிபுணர் கள், துறை வல்லுநர்கள் வினா-விடை களை தொகுத்து வழங்க உள்ளனர். வெறும் வினா - விடைகள் மட்டுமல்லாமல் தேர்வுக்கு தயாரா வோருக்குப் பெரிதும் பயன்தரக் கூடிய தயாரிப்பு உத்திகளும், விளக் கங்களும் வழங்கப்பட உள்ளன.

Thursday, August 4, 2016

திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் துபாயில் தரையிறங்கிய போது விபத்து: 300 பேர் உயிர் பிழைத்த அதிசயம்

Return to frontpage

கேரளாவில் இருந்து நேற்று காலை புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் (இகே521), துபாயில் தரையிறங்கும் போது தீப்பிடித்தது. இந்த விபத்தில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தில்லை. எனினும், விமானம் ஓடுதளத்தில் மோதியதால் ஏற்பட்ட அதிர்வு மற்றும் புகை காரணமாக சிலருக்கு காயமும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டதாக தெரிகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத் தில் இருந்து நேற்று புதன்கிழமை பகல் 10.19 மணிக்கு, போயிங் 777 விமானம் (இகே521) துபாய் நோக்கி புறப்பட்டது. இதில் 282 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்த னர். இவர்களில் 226 பேர் இந்தியர்கள்.

பகல் 12.45 மணிக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி, ஓடுதளத்தை மோதியபடி, நின்றது. முன்னதாக, விமானத்தின் இன்ஜின் பகுதியில் இருந்து பாகம் ஒன்று உடைந்து விழுந்ததாகவும், வெடிச் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, விமானத் தின் ஒரு பகுதியில் தீப்பிடித்து, அதில் இருந்து கரும்புகை வெளி யானபடி இருந்தது. உடனடியாக விமானத்தில் இருந்து அவசரகால வழியின் மூலம் பயணிகள் வேக மாக வெளியேறினர். அனைத்து பயணிகளும், பணியாளர்களும் விமானத்தில் இருந்து வெளி யேற்றப்பட்டு, அங்கிருந்து பேருந்து மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணத்தை எமிரேட்ஸ் நிறுவனம் உனடியாக அறிவிக்கவில்லை. முதலில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு பின்னர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என, எமிரேட்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து பயணி ஒருவர் குறிப்பிடும்போது, ‘விமானம் வழக்கம் போல தரையிறங்காமல், திடீரென கீழ்நோக்கி இறங்கியது. பின்னர், தரையை வேகமாக மோதியது. திடீர் திடீரென மேல் நோக்கி குலுங்கியது. அதற்குள் கேபினுக்குள் புகை சூழந்துவிட்டது. எந்த முன்னறிவிப்பும் தரப்படவில்லை. அவசரகால கதவை உடைத்து வெளியேறினோம்’ என்றார்.

விமானத்தில் இருந்து அனைவரும் தப்பிவிட்டோம். எனினும், சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். அதோடு, தரையிறங்கும் சமயத்தில் ஓடுதளத்தில் விமானம் மோதியதால் ஏற்பட்ட அதிர்வுகளால் சிலருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை என, எமிரேட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்விபத்து காரணமாக, துபாய் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நிலைமை சீரடைந்த பின் விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

விபத்துக்குள்ளான போயிங் 777 விமானம், 2003 மார்ச் மாதம் வாங்கப்பட்டது.

உதவி எண்கள்

எமிரேட்ஸ் அறிவித்த அவசர உதவி எண்கள்:

திருவனந்தபுரம் : 04713377337

ஐக்கிய அரபு அமீரகம் : 8002111

அமெரிக்கா : 0018113502081

Monday, August 1, 2016

அதிமுகவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா நீக்கம்


அதிமுகவில் இருந்து மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்'' என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

2014-ல் எம்.பி. ஆன சசிகலா புஷ்பாவுக்கு 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பதவிக்காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவையில் கண்ணீர் மல்க பேச்சு:

இதனிடையே, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அரசு தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மாநிலங்களவை இன்று கூடியதும், அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, "நான் தமிழ்நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாத அளவுக்கு எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. என் பதவியை ராஜினாமா செய்யுமாறு நான் நிர்பந்திக்கப்பட்டேன். ஆனால், எனது பதவியை நான் ராஜினாமா செய்யப்போவதில்லை" என்றார்.

ஆனால், தொடர்ந்து அவர் பேச முடியாத அளவுக்கு அவையில் அமளி நீடித்ததால், அவரால் மேலும் பேச முடியாமல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.

சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் பேசிக் கொண்டிருந்த வேளையிலேயே அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பின்னணி:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்போது திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் வார விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு, மீண்டும் டெல்லி செல்வது வழக்கம். அதன்படி கடந்த சனிக்கிழமை என்பதால் திமுக எம்பி திருச்சி சிவாவும், அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவும் சொந்த ஊர் திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாய்தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆவேசமடைந்த சசிகால புஷ்பா, திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்ததாகவும் சொல்லப்பட்டது.

இது தொடர்பாக திருச்சி சிவா, விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஊடகங்களில் எல்லாம் எனக்கும் அவருக்கும் கைகலப்பு என்று செய்தி வருகின்றன. இருவரும் தாக்கிக் கொண்டால்தான் கைகலப்பு. நான் சசிகலா புஷ்பாவை அடிக்கவே இல்லை. அவர் மட்டும்தான் என்னை அடித்தார். அவர் பெண் என்பதால் நான் எதுவும் செய்யவில்லை.

‘நானும் எம்.பி., திருச்சி சிவாவும் எம்.பி., அப்படி இருக்கும்போது அவருக்கு மட்டும் ஏன் கூடுதல் மரியாதை கொடுக்கிறீர்கள்’ என்று அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் சசிகலா புஷ்பா வாக்குவாதம் செய்தார். அவரது செயல் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசையும், முதல்வரையும் நான் விமர்சித்ததாக சசிகலா புஷ்பா கூறியுள்ளார். பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு பற்றி குறை கூற வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

அப்படியே விமர்சனம் செய்திருந்தாலும், பொது இடத்தில் அடிப்பதுதான் மரபா? அரசியல் ரீதியாக விமர்சனங்களை செய்தால் பொது இடத்தில் அடிப்பது என்ற புதிய மரபை அவர் தொடங்கி வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடருவதா அல்லது வேறு நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன் என்றார்.

ஜெயலலிதாவிடம் சசிகலா புஷ்பா விளக்கம்

இது தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சசிகலா புஷ்பா நேற்று அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, நேற்று பிற்பகல் போயஸ் தோட்டத்துக்கு சென்ற சசிகலா புஷ்பா, நடந்த சம்பவம் தொடர்பாக கட்சித் தலைமையிடம் விளக்கக் கடிதம் அளித்துவிட்டு சென்றார்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்பு அதிமுக மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார். அதன்பிறகு திருச்சி சிவா எம்.பி.யுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. அது மார்பிங் செய்யப்பட்ட படம் என கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆண் நண்பருடன் சசிகலா புஷ்பா பேசுவது போன்ற ஆடியோ வெளியானது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால் சசிகலா புஷ்பா மீது கட்சித் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Wednesday, July 6, 2016

மத்திய அமைச்சர்கள் இலாகா மாற்றம்: ஸ்மிருதி இரானிக்கு புதிய துறை



மத்திய அமைச்சரவையில் நேற்று 19 புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடி, அமைச் சரவையில் முக்கிய மாற்றங் களையும் செய்துள்ளார்.

இதன்படி மனிதவள மேம்பாட் டுத் துறையில் இருந்து ஸ்மிருதி இரானி, ஜவுளித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று காலை கேபினட் அமைச்சராக பதவி உயர்த்தப்பட்ட பிரகாஷ் ஜவடேகர் மனித வள மேம்பாட்டுத் துறையின் புதிய அமைச்சராகிறார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இத்துறையை இதுவரை நிதிய மைச்சர் அருண் ஜேட்லி கூடுத லாக கவனித்து வந்தார். வெங்கய்ய நாயுடு தற்போது தகவல் ஒலி பரப்புத் துறையுடன் ஏற்கெனவே கவனித்து வந்த நகர்ப்புற வளர்ச்சித் துறையையும் கவனிப்பார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் புதிய அமைச்சராக அனந்தகுமார் நியமிக்கப்பட் டுள்ளார். சட்ட அமைச்சராக இருந்த சதானந்த கவுடா, புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். தொலைத்தொடர்பு துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் வசம் கூடுதல் பொறுப்பாக சட்டத் துறை அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை பதவியேற்ற 19 புதிய அமைச்சர்களில் ஒருவ ரான விஜய் கோயல் வசம் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை (தனிப் பொறுப்பு) அளிக்கப்பட்டுள்ளது. இத்துறையை இதற்கு முன்பு சர்வானந்த சோனோவால் கவ னித்து வந்தார். அவர் அசாம் முதல்வராக பதவியேற்பதற்காக தனது அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்தார். இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா நிதித் துறையில் இருந்து விமானப் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த அமைச்சரவை மாற் றத்தில் ஸ்மிருதி இரானி, முக்கியத்துவம் குறைந்த பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Friday, April 22, 2016

அரசு மருத்துவமனைகளை காட்டிலும் 50% குறைந்த கட்டணத்தில் ஸ்கேன்: மதுரை தனியார் மருத்துவரின் மருத்துவ சேவை


தனியார் மருத்துவமனை மருத்து வர்கள் என்றாலே லாபநோக்கில் செயல்படுகிறவர்கள் என்ற தவறான அடையாளத்தை உடைத்துள்ளார் மதுரை அரசரடியை சேர்ந்த தேவகி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை மருத்துவர் டாக்டர் நாகேந் திரன். மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனைக்கு அருகில் செயல்படும் இவரது சேவா ஸ்கேன் சென்டரில், அரசு மருத்துவமனைகளை காட்டி லும் குறைந்த கட்டணத்தில் ஏழை நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுத்து கொடுக்கப்படுகிறது.

அருகில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க நோயாளிகளிடம் ரூ.750, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.2,500 முதல் ரூ.3,500 கட்டணம் பெறப் படுகிறது. ஆனால், இவரது ஸ்கேன் சென்டரில் சிடி ஸ்கேன் எடுக்க ரூ.550, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.1,500 மட்டுமே பெறுகிறார். அரசு மருத்துவமனை யில் ஸ்கேன் எடுக்க வரிசை அடிப் படையில் நோயாளிகள் காத்தி ருக்க வேண்டும். அதனால், ஸ்கேன் எடுக்க, ரிப்போர்ட் வர குறைந்த பட்சம் 5 முதல் 10 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். அதனால், ஏழை நோயாளிகள் தனியார் மருத் துவமனையில் ஸ்கேன் எடுக்க பணமில்லாமலும், அரசு மருத்துவ மனையில் உடனுக்குடன் ஸ்கேன் எடுக்க முடியாமலும் தனக்கு என்ன நோய் என்றே தெரியாமலேயே தொடர்ந்து தற்காலிக சிகிச்சை பெறும் அவலம் ஏற்படுகிறது. ஆனால், டாக்டர் நாகேந்திரனின் சேவா ஸ்கேன் சென்டரில் உடனுக் குடன் ஸ்கேன் எடுத்து அதற் கான ரிப்போர்ட்டும் வழங்கப்படு கிறது. இந்த குறைந்த கட்டணத் தில் எந்த இடத்திலும் ஸ்கேன் எடுக்கப்படுவதில்லை என்பதால், இவரது சேவையைப் பாராட்டி மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

இதுகுறித்து மருத்துவர் நாகேந் திரன் கூறியதாவது: எம்பிபிஎஸ் முடித்ததும், கை நிறைய சம்பா திக்க வேண்டும் என்ற எண்ணத்தில், லண்டன் சென்று படித்து அங்கு 4 ஆண்டுகள் பணிபுரிந்தேன். என் னுடைய தந்தை ஆசிரியர் என்ப தால், அவருக்கு நான் வெளிநாட்டில் தங்கி பணிபுரிவது பிடிக்கவில்லை. அவர் என்னை அழைத்து நமது ஊரிலேயே வந்து மருத்துவர் தொழில் பாருப்பா என்றார்.

அவரது விருப்பப்படி மதுரை அரசரடியில் சிறிய அளவில் மருத் துவமனையைத் தொடங்கினேன். நோயாளிகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்தேன். இதனால் என்னிடம் ஏழை நோயாளி கள்தான் அதிகளவில் சிகிச்சைக்கு வந்தனர். ஸ்கேன் எடுக்க எழுதிக் கொடுத்தால் அவர்களில் பலர் ஸ்கேன் எடுக்க பணமில்லாமல் என்ன நோய் என்றே தெரியாமல் இறந்ததை பார்த்து மிகவும் வருந் தினேன்.

அதனால், 1998-ம் ஆண்டு பிளாக் அன்ட் ஒயிட் ஸ்கேன் மையம் தொடங் கினேன். ஏழை நோயாளிகளுக்கு சலுகை விலையில் ஸ்கேன் எடுத் துக் கொடுத்தேன். கடந்த 2005-ம் ஆண்டு ஏழை நோயாளிகள் சலுகை விலையில் அல்ட்ரா, சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காகவே அரசு மருத்துவமனை அருகே தனி யாக சேவா ஸ்கேன் மையத்தை சேவை அடிப்படையில் தொடங்கி னேன். தற்போது இங்கே வந்தால் எந்த நோயையும் கண்டறியக்கூடிய வசதிகள் உள்ளன.

எனது மருத்துவமனை வரு வாயில் வரும் ரூ. 10 லட்சத்தை, இந்த சேவா ஸ்கேன் சேவைக்கு பயன்படுத்துகிறேன். இந்த ஸ்கேன் மையத்தில் 4 மருத் துவர்கள், மருத்துவப் பணியாளர் கள் உள்பட தினமும் 24 மணி நேரமும் இந்த சேவா ஸ்கேன் சென்டர் செயல்படுகிறது என்றார்.

அப்துல் கலாமின் விருப்பம் நிறைவேற்றம்

மருத்துவர் நாகேந்திரன் மேலும் கூறியதாவது: புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியபோது, குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை வைத்து திறக்க திட்டமிட்டோம். ஆனால், அவரை அணுகியபோது தனியார் மருத்துவமனை என்பதால் எங்களை பார்க்கவே மறுத்துவிட்டார். எனது சேவையை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றேன். அதன்பிறகு அவர் ஒரு குழுவை அனுப்பி மதுரையில் விசாரித்துள்ளார். உண்மைதான் என்பது தெரிந்தபிறகு அப்துல் கலாம் எங்களது புற்றுநோய் மருத்துவமனையைத் திறக்க வந்தார். அப்போது, இது மட்டும் நீங்கள் செய்தால் போதாது என்றவரிடம், இரு கிராமங்களை தத்தெடுக்கிறோம் என்றோம். கலாம் விரும்பியபடி, மதுரை அருகே அச்சம்பத்து, பண்ணைக்குடி கிராமங்களை தத்தெடுத்து இலவச மருத்துவ சிகிச்சை, கழிப்பறை கட்ட, சுகாதார வசதிகளை ஏற்படுத்த உதவிகளை செய்கிறோம். தற்போது அந்த கிராமங்கள் சுகாதாரத்தில் இந்தியாவுக்கே முன் உதாரணமான கிராமங்களாக இருக்கின்றன என்றார்.

Friday, March 18, 2016

காமராஜர் படிக்காதவரா?

சிந்தனைக் களம் » இப்படிக்கு இவர்கள்

Return to frontpage
1937-ல் வெளிவந்த ஆல்டஸ் ஹக்ஸ்லியின் புகழ்பெற்ற புத்தகம் ‘எண்ட்ஸ் அண்டு மீன்ஸ்’ (Ends and means). இன்றைய நிலைக்கும் பொருத்தமான பல கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இது. பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில், அவர் விரும்பிப் படித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. பத்திரிகையாளர் சாவி டெல்லியில் காமராஜரைச் சந்திக்கும்போது, அவர் தன் படுக்கையின் அருகே இந்தப் புத்தகத்தை வைத்திருந்தார் என்றும் “அரசியல் தலைவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்” என்று சொன்னார் என்றும் சாவி ஒருமுறை கூறினார்.

இதே கருத்தை காமராஜரின் சகாவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்த ரா.கிருஷ்ணசாமி நாயுடுவும் கூறக் கேட்டிருக்கிறேன். நேருவுக்கும் பிடித்தமான புத்தகம் அது. அந்த நூலை வாங்க டெல்லியில் பல புத்தகக் கடைகளில் காமராஜர் ஏறி இறங்கினார் என்றும் சொன்னார். சுவாரஸ்யமான இன்னொரு விஷயம், இந்தப் புத்தகம் நேருவுக்கும் அண்ணாவுக்கும்கூடப் பிடித்தமானது என்பது. எதற்கும் ஒரு முடிவு உண்டு. அந்த இறுதி நேர்மையாக இருக்க வேண்டும். அதுவே இயற்கையின் நீதி. அந்த வகையில், இந்தப் புத்தகத்தில் ஹக்ஸ்லி வைக்கின்ற வாதங்கள் அனைத்தும் தீர்வுகளோடு முடிவுகளையும் சொல்பவை.

எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், அவ்வளவு எளிமையான நடையைக் கொண்ட நூல் அல்ல இது. மேலோட்டமான ஆங்கில ஞானத்துடன் இதைப் படித்துவிட முடியாது. நம்மில் பலரும் காமராஜரைப் படிக்காதவர் என்றுதான் இன்றைக்கும் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அப்படி இல்லை. மிகத் தீவிரமான வாசகர் அவர். பள்ளிக்கூடங்களுக்கு வெளியே தன்னை வளர்த்துக்கொண்ட மேதை.

- கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சென்னை, ஃபேஸ்புக் மூலமாக.

Tuesday, March 15, 2016

இந்தியாவின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவரான லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி எழுதிய நூலிலிருந்து…


இந்தியாவின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவரான லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி எழுதிய நூலிலிருந்து…


இந்தியாவின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவரான லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி எழுதிய நூலிலிருந்து…

லால் பகதூர் சாஸ்திரி நாட்டின் தலைமை அமைச்சராகப் (பிரதமராக) பொறுப்பேற்ற வரை அவரிடம் சொந்தமாக மகிழ்வுந்து இருந்ததில்லை. குழந்தைகளாகிய எனக்கும் எனது தம்பி தங்கைகளுக்கும் குடும்பத்திற்கென்று சொந்தமாக மகிழ்வுந்து ஒன்று வேண்டுமென்கிற ஆவல் எப்பொழுதும் இருந்துவந்தது. ஆனால், சாஸ்திரி அதற்கு ஏற்பளிக்கவில்லை. ஆகவே, அவர் தலைமை அமைச்சர் பொறுப் பேற்ற பின்னர் மகிழ்வுந்து சொந்தமாக வாங்கும் வேண்டுகோளை அவரிடம் முன்வைத்தேன்.

ஒரு நாள் மாலையில் அவர் என்னை அழைத்து மகிழ்வுந்து வாங்குவதென்று தீர்மானித்துவிட்டதாகத் தெரிவித்தார். நாங்கள் மெய்சிலிர்த்துப்போனோம். தனது பணியாளர் ஒருவரை அழைத்து தனது வங்கிக் கணக்கின் இருப்புத் தொகை குறித்தும் மகிழ்வுந்து ஒன்றின் விலை குறித்தும் அறிந்துவரச் சொன்னார். அவருடைய வங்கிக் கணக்கில் ரூ. 7000 இருந்தது. ஃபியட் நிறுவன வண்டி ஒன்றின் விலை ரூ. 12000.

இந்தியத் தலைமை அமைச்சருடைய வங்கி இருப்பு ரூ. 7000 மட்டுமே என்பதை அறிந்து திகைத்துப் போனோம். இருப்பினும் அவர் எங்களை ஏமாற்றவில்லை. இந்தியத் தலைமை அமைச்சரான அவர் பஞ்சாப் தேசிய வங்கியில் கடனுதவி பெறுவதற்கு மனுச்செய்தார். எங்களுக்காக ஒரு மகிழ்வுந்து வாங்கினார். ஓராண்டிற்குப் பின்னர் அவர் மரணமடைந்தார். வங்கிக் கடன் திரும்பச் செலுத்தப்படாமல் இருந்தது.

அரசு கடனைத் தள்ளுபடி செய்ய முன்வந்தபோதிலும் எனது தாயார் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். மாதந்தோறும் பெற்ற ஓய்வூதியத் தொகையிலிருந்து கடனை சாஸ்திரிஜி இறந்து மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டார். அந்த மகிழ்வுந்து வெறுமனே பயணிக்கும் வண்டி என்பதற்கும் மேலாக எனக்குப் பொருள் பொதிந்த ஒன்றாகத் தோன்றியதால் அதனைப் பயன்படுத்தியதில் பெருமை கொள்கிறேன். நான் என்றென்றைக்கும் எண்ணித் திளைக்கக் கூடிய மதிப்பீடுகளும் நினைவுகளும் அந்த வண்டியில் பொதிந்துள்ளன.

Sunday, December 27, 2015

ஆதார் எண் அட்டைஅவகாசம் நீட்டிப்பு

சென்னை :மழை பாதிப்பு காரணமாக, 'ஆதார்' எண் பணிக்கான அவகாசம், 2016 மார்ச் வரை நீட்டிக்கப்படும் என தெரிகிறது.இதுகுறித்து, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், ஆதார் எண் உருவாக்க, 31ம் தேதி இறுதி நாள். மொத்தம், 6.23 கோடி பேரில், 5.63 கோடி பேருக்கு, விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது.டிசம்பர் வரை, 86.42 சதவீதம் ரேகைகள் சேகரிக்கப்பட்டு, 78.13 சதவீதம் பேருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கன மழையால், தொடர்ந்து ஆதார் மையங்கள் செயல்பட முடியவில்லை. போதிய கணக்கெடுப்பு ஆட்களும் இல்லை. இதனால், மத்திய அரசு நிர்ணயித்த, டிச., 31க்குள், ஆதார் எண் உருவாக்கும் பணியை, முடிக்க முடியவில்லை. கணக்கெடுப்பு பணியில் உள்ள, 'பெல்' நிறுவனம், போதிய பணியாளர்களை வழங்கி உள்ளது. எனவே, ஆதார் பணி தீவிரம் பெற்றுள்ளது. இந்நிலையில், இறுதி தேதி, 2016 மார்ச் வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tuesday, May 19, 2015

கைவிலங்கிடப்பட்ட கைதியுடன் ஹாயாக சினிமா பார்த்த இன்ஸ்பெக்டர்!

விழுப்புரம்: கைதியுடன் இணைந்து சினிமா பார்த்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட மூன்று பேரை விழுப்புரம் எஸ்.பி. சஸ்பெண்ட் செய்துள்ளார்.

விழுப்புரம் நகரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளிவந்த 36 வயதினிலே படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை, இந்த திரைப்படத்தின் இரவு காட்சிக்கு, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், 3 போலீசார் கைதி ஒருவரை கைவிலங்கிட்டு சினிமா தியேட்டருக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அந்த கைதியை போலீஸ் ஜீப்பிலேயே போலீசார் தியேட்டருக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

ஆனால், படம் தொடங்கி அரைமணி நேரத்துக்கு மேலாகி இருந்தது. அப்படியும் 4 போலீசாரும், கைவிலங்கிடப்பட்ட கைதியுடன் அமர்ந்து சினிமா பார்க்க தொடங்கினார்கள். போலீசாரில் இன்ஸ்பெக்டர் மட்டும் சீருடையில் இருந்தார். மற்றவர்கள் சாதாரண உடையில் இருந்தனர். கைவிலங்கிட்ட கைதியை பார்த்ததும் சினிமா பார்க்க வந்தவர்களின் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது. இதனால், சிறிது நேரம் தியேட்டரில் சலசலப்பு நிலவியது.

முழுப் படத்தையும் கைதியுடன் அமர்ந்து பார்த்துவிட்டு சென்ற போலீசார் அனைவரும் விழுப்புரம் டவுன் போலீஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இரவு ரோந்து பணிக்கு சென்ற அவர்கள், அந்த பணியை செய்யாமல் கைதியுடன் தியேட்டருக்கு வந்து சினிமா பார்த்து உள்ளனர்.

இது குறித்து சில தியேட்டர் ஊழியர்கள் கூறும்போது, ''இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார், இதுபோல் தியேட்டருக்கு வந்து சினிமா பார்த்து செல்வது வழக்கம்தான். அவர்கள் டிக்கெட் வாங்கமாட்டார்கள். மேலும், திரைப்படத்தின் இடைவெளியின்போது நொறுக்கு தீனி, காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை அவர்களுக்கு நாங்களே எடுத்து சென்று ஓசியில் வழங்குவோம்" என்றனர்.

அந்த காவல் நிலைய காவலர் ஒருவர் இதுகுறித்து கூறும்போது, ''அந்த கைதி யார் என்பது பற்றி கூற முடியாது. ஆனால், கைதியை தியேட்டருக்கு அவர்கள் அழைத்து செல்வதற்கு எந்த முன்அனுமதியும்  பெறவில்லை. இதேபோல், போலீஸ் வாகனத்தை எடுத்து செல்வதற்கும் அவர்கள் அனுமதி பெறவில்லை. போலீசார் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்நிலையில், கைதியை கைவிலங்குடன் தியேட்டருக்கு அழைத்து சென்று சினிமா பார்த்த சம்பவம் தொடர்பாக, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்பட மூன்று பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

Monday, May 18, 2015

Tirumangalam flyover to be ready in 2 months

CHENNAI: The Tirumangalam flyover project, after being more than four years in the making, is finally expected to be completed within the next two months.

Officials from the highways department, which is executing the 60 crore project, said the flyover being built on Inner Ring Road will soar over the junction of Anna Nagar 2nd Avenue and Mogappair Road. Once opened, it is expected to ease the commuting woes of for residents in the western parts of the city like Koyambedu, Ambattur, Red Hills and Avadi. About 19 crore has gone towards land acquisition.

Almost 85% of the work is over. "All the piling work has been completed. Ramp work (the starting and ending sections of the flyover) is in progress," said an official from the metro wing of the state highways department. "We will complete it by end of July," he added.

While the process of floating tenders began in 2010, construction began in 2011. The initial deadline was March 2013 but the project faced several hurdles, including problems related to land acquisition and shifting of underground utilities. "At least now, the roads have been set right. Hope the authorities finish the project before the monsoon sets in," said K Santhosh of Anna Nagar.

The other big work in the area — the three flyover project in Anna Nagar — is expected to take another year to finish. "Pace of work has increased and will be completed by next June," said an engineer. The project on Poonamallee High Road involves three flyovers going past two high-density junctions and is aimed at reducing congestion at the junction with Nelson Manickam Road and at Anna Arch on the arterial stretch.

The delay in land acquisition for the two projects — as well as two other flyovers — was one of the reasons why the highways department decided to start construction only after the issue of acquiring land was resolved. Flyovers in Porur and Moolakadi have also been delayed due to delay in construction. "Contractors began complaining that the delay was increasing the cost of the project due the increase in price of material like steel and cement," said an engineer.

New road comes as a boon to Old Pallavaram residents

CHENNAI: Residents of Old Pallavaram will now have easy access to Pallavaram and other parts of the city with the construction of a 1km-long T-shaped road nearing completion. Those living at Krishnanagar, Jayalakshmi Nagar, Subramani Nagar and Anbu Nagar have welcomed the move for which they have waited for years.

Old Pallavaram municipality councillor M Chandrakesavan said those residing in these areas had to take circuitous routes to reach the city. The absence of a direct road also meant the burial ground was 2km away. That distance will also come down considerably, Chandrakesavan said. A new bus terminus is also being planned, the councillor said.

Residents said the new road, to be completed within a week, will give water tankers easy access to the areas. Compactor trucks too can enter Old Pallavaram regularly and clean garbage bins, they said.

"The areas were neglected for decades. But this new road will make it easier for residents to travel. This should have been done decades ago," said M Praveen Kumar of Jayalakshmi Nagar.

M Ramkumar of old Pallavaram said, "Earlier garbage trucks had to take a 10-kilometre detour to enter Jayalakshmi Nagar. But now there will be faster movement of vehicles."

The cost of the road will be known once the Pallavaram municipality officials carry out a final measurement.

இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை மாணவர்களே பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 மாணவர்கள் திங்கள்கிழமை (மே18) முதல் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடித்த மாணவர்களுக்கு மே 14-ஆம் தேதி முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களால் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு, தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.
இது தவிர தனித் தேர்வர்களும் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், தேவைப்படும்போது மாணவர்களே தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்களும் வரும் மே 18-ஆம் தேதி முதல் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.

Sunday, May 17, 2015

இட்லிக் கடை அல்ல தொழிற்சாலை


இட்லிக் கடைகளைப் பார்த்திருப்பீர்கள். சென்னை மறை மலை நகரில் தீபக்ராஜும் அவருடைய சகோதரர்களும் இட்லித் தொழிற்சாலையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இங்குத் தினமும் 15,000 இட்லிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

சென்னையைச் சேர்ந்த பாஸ்கர், அவருடைய தம்பிகள் ரமேஷ், தீபக்ராஜ் மூவரும் ஆறு வருடங்களுக்கு முன்பு கரூரில் ஜவுளி ஏற்றுமதித் தொழில் செய்துகொண்டி ருந்தார்கள். ஓரளவுக்கு வருமானம் இருந்தாலும் திருப்தி இல்லாமல் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தனர்.

அப்போது கேட்டரிங் சர்வீஸில் ஈடுபட்டிருந்த இவர்களுடைய சித்தி சித்ரா சென்னையில் ரசாயனம் கலந்த இட்லிதான் கிடைக்கிறது. வீட்டுப் பக்குவத்துடன் இட்லி வார்த்துக் கொடுத்தால் வாங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

குடும்ப இட்லி

“சித்தி இப்படிச் சொன்னதுமே நானும் பாஸ்கர் அண்ணனும் மறைமலை நகரில் சின்னதா ஒரு இட்லி ஸ்டாலை ஆரம்பித்தோம். மல்லிகை பூவா இட்லி வார்ப்பதில் அம்மா சகுந்தலா திறமைசாலி. அவர் கைப்பக்குவத்தில் தயாரான இட்லிகளைத் மக்கள் விரும்பி வாங்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 200 இட்லிகளைத் தயாரித்தோம். இன்னொரு அண்ணன் ரமேஷும் எங்களோடு சேர்ந்துகொண்டார்.

அப்பா நாராயணசாமிக்கு ஆடிட்டிங் அனுபவம் இருந்ததால் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டார். கூடுதல் உதவிக்கு எங்களோடு என் மனைவியும் அண்ணிமார்களும் கைகோத்தார்கள்.” என்கிறார் தீபக்ராஜ். இப்படித்தான் தினமும் 15 ஆயிரம் இட்லிகளைத் தயாரிக்கும் 'Barade Fluffies' என்ற இட்லித் தொழிற் சாலை உருவாகியது. இப்போது இவர்களது இட்லித் தொழிற்சாலையில் 12 பெண்கள் உள்பட மொத்தம் 15 பணியாளர்கள் வேலைச் செய்கிறார்கள்.

ஸ்டார் ஓட்டல் முதல் தள்ளு வண்டி வரை

40 கிராம் எடை அளவுள்ள ஒரு இட்லியை ரூ.3.50-க்கு இவர்கள் தருகிறார்கள். ஆயிரம் இட்லிகளுக்கு மேல் ஆர்டர் என்றால் மூன்று ரூபாய்க்கே தருகிறார்கள். சென்னைக்குள் ஸ்டார் ஓட்டல்கள் முதல் தள்ளுவண்டி வரைக்கும் இவர்களது இட்லி சப்ளை ஆகிறது. இவர்களது இட்லியை அவரவர் தகுதிக்கேற்ப கூடுதல் விலை வைத்து விற்றுக் காசாக்குகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது கேண்டீனுக்கு இந்தத் தொழிற் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கில் இட்லிகளைக் கொள்முதல் செய்கின்றன. இட்லிக்குத் தேவையான சட்னி, சாம்பார் வகைகளை மட்டும் அவரவர்கள் தயாரித்துக் கொள்கிறார்கள்.

“குஷ்பு இட்லி என்ற பெயரில் இட்லி உப்பலாக வர வேண்டும் என்பதற்காக மாவில் சோடா மற்றும் ஆமணக்கு விதைகளைப் போடுகிறார்கள். ஆனால், நாங்கள் எந்த கெமிக்கலும் பயன்படுத்து வதில்லை என்பதால் எங்களது இட்லியைக் கைக் குழந்தைக்குக்கூட அச்சமில்லாமல் கொடுக்கலாம். கைபடாமல் இருந்தால் மூன்று நாட்கள் வரை எங்கள் இட்லிகெடாது. குழந்தைகளுக்காக இட்லி வாங்க வருபவர் களுக்கு எங்கள் தொழிற்சாலையில் இட்லி இலவசம். தள்ளுவண்டியில் டிபன் விற்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இட்லி சப்ளை செய்கிறோம்.

காலை, மாலை, நடுநிசி ஆகிய மூன்று வேளைகளில் எங்கள் தொழிற்சாலையிலிருந்து இட்லி சப்ளை செய்கிறோம். இதற்காகத் தினமும் 12 மணி நேரம் உழைக்கிறோம். எங்களால் ஒரு மணி நேரத்தில் 2,500 இட்லி தயாரிக்க முடியும். இப்போது தினமும் 200 கிலோ அளவுக்குத் தோசைமாவும் சப்ளை பண்ண ஆரம்பித்திருக்கிறோம்.

தினமும் ஒரு லட்சம் இட்லிகளைத் தயாரிக்க வேண்டும். எங்களது இட்லிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்த இரண்டு இலக்குகளையும் எண்ணத்தில் கொண்டு வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் தீபக் ராஜின் அண்ணன் பாஸ்கர்.

குட்டி நாய் கடித்தாலும் அலட்சியம் வேண்டாம்: சேலத்தில் பெண் பலி: டாக்டர்கள் எச்சரிக்கை

மூன்று மாத நாய் குட்டி தானே கடித்தது என, அலட்சியமாக இருந்த சேலம் பெண் ஒருவர், 'ரேபிஸ்' நோய் பாதிப்பால் இறந்தார். 'குட்டி நாய் கடித்தாலும், அலட்சியம் வேண்டாம்; உடனடி சிகிச்சை பெறுங்கள்; நாய் எச்சில் உடலில் படுவதும் ஆபத்து' என, டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.

சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர், பழனியம்மாள், 45. இவரை, ஒரு வாரத்திற்கு முன், வீட்டின் அருகே சுற்றித்திரிந்த, மூன்று மாதமே ஆன, நாய் குட்டி கடித்தது; பெரிதாக காயம் இல்லை. 'குட்டிநாய் தானே; என்ன ஆகப்போகிறது' என, அவர், அலட்சியமாக இருந்தார். மூன்றாம் நாளில், நாய் கடித்த இடத்தில், திடீரென அரிப்பு ஏற்பட்டு, புண் ஆனது. பயந்து போய், குன்னூரில் உள்ள, அரசு நாய்க்கடி சிறப்பு மருத்துவமனைக்குச் சென்றார். டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலை யில், அரிப்பு நின்று விட்டது; மூன்று நாட்களில் வீடு திரும்பினார். அடுத்த நாளே, எதிர்பாராதவிதமாக இறந்துள்ளார். இது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதார துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ கூறியதாவது: சேலம் அம்மாபேட்டையில், மூன்று மாத குட்டி நாய் கடித்து, ஒரு வாரத்தில், பழனியம்மாள் என்ற பெண் இறந்துள்ளது உண்மை தான். ஏதோ ஒரு வகையில், குட்டி நாய்க்கு, 'ரேபிஸ்' தொற்று இருந்துள்ளது. குட்டி நாய் கடித்த அன்றே, சிகிச்சை பெற்றிருந்தால், உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது. விதவிதமான நாய்களை, வீடுகளில் செல்ல பிராணி யாக வளர்ப்பது, நகர்ப்புறங்களிலும் அதிகரித்து விட்டது. அவற்றுக்கு, முறையான தடுப்பூசி போட்டு பராமரிப்பது அவசியம்; இல்லாவிட்டால் சிக்கல் தான். நாய்கள் செல்லமாக, மனிதர்களை கொஞ்சும்போது, எச்சில், மனிதர்களின் உடலில் படுகிறது; இதை தவிர்க்க வேண்டும். எச்சில் படும் இடங்களில் நமக்கு புண் இருந்தாலோ, கீறல் பட்டிருந்தாலோ அதன் மூலம் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள், முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்; குட்டி நாய் கடித்தாலும், உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Saturday, May 16, 2015

Officers warned for receiving Modi in shades, casuals

The Raman Singh government has hauled up two IAS officers for not wearing formal dress while receiving Prime Minister Narendra Modi during his one-day visit to Chhattisgarh on May 9.

Bastar district magistrate Amit Kataria sported Ray-Ban sunglasses and wore two different shirts (bright blue and white and blue pin-stripes) at the time of receiving and seeing off Modi while Dantewada DM K C Devsenapati wore a white shirt. Special secretary, general administration, DD Singh issued a stern warning in separate letters to both on Wednesday .

Retired senior bureaucrats told TOI that there was no specific dress code in the service rules for officers but wearing formals was a convention. They added that it would be impractical to restrain an officer from wearing shades while attending an event in mid-day sun.

The warning sent to the Bastar DM said: “It came to the notice of the government that you did not wear a formal dress and wore sunglasses while receiving the Prime Minister.“

The Chhattisgarh special secretary said the conduct of the two DMs violated the All India Services (Conduct) Rules, 1968 which stipulates: “Every member of the service shall at all times maintain absolute integrity and devotion to duty and shall do nothing which is unbecoming of a member of the Service.“

Raman Singh said no further action was necessary as the officers had been warned. While ambiguous on dress code, the All India Services (Conduct) Rules require a civil servant to show “courtesy and consideration“ to an MPMLA and “rise from their seats while receiving them in their office“.

“However, as per convention, any officer receiving the Prime Minister, President or Vice-President, at his place of posting or a pub ic function, should be dressed in a formal attire which may be a bandhgala or a western suit worn with a tie,“ said N Gopalaswam who has served as CEC and Union home secretary.

He added that forma dress is also the convention when a bureaucrat calls on his concerned minister for the first time after joining a new posting.

“Wearing formals while receiving dignitaries is also part of our induction train ing, as the trainee officers are required to dress up in bandhgalas or formal suits when the President visits the Academy,“ said a former secretary with the department of personnel.

As for sunglasses, a former bureaucrat said: “Usually, when a DM makes a field visit to a place where labour ers are toiling in the sun without any eye protection, the officer may avoid wearing sunglasses out of concern.“

Mahamaham works may gain pace

With the verdict in the Jayalalithaa’s appeal against conviction in the disproportionate assets case behind, the stage is set for fast-tracking the infrastructure development and renovation works related to the conduct of the Mahamaham festival in February next.

Works estimated to cost Rs. 350 crore are to be undertaken in the run up to the grand event that falls once in 12 years. So far, several works costing Rs.180 crore are under various stages of completion to cater to the demands of the estimated 75 lakh pilgrims expected to converge this time in Kumbakonam.

A perceptible sluggishness crept in after the unseating of Ms. Jayalalithaa as Chief Minister about seven months ago. Though senior State officials did come on inspection tours to Kumbakonam to monitor the progress of works, the pep was palpably missing.

All that has now changed with the Thanjavur district administration shifting gears to complete all infrastructure and development works, renovation of important shrines and related administrative toning up well ahead of the Mahamaham festival.

Among the important works to be carried out by the Hindu Religious and Charitable Endowments Department in Kumbakonam and its neighbourhood are renovation of 12 Saiva shrines connected to the main Teerthavari ritual at the Mahamaham tank at a cost of Rs. 4.31 crore, renovation of five major Vainava shrines at a cost of Rs. 2.65 crore, renovation of 52 temples around Kumbakonam at a cost of Rs. 3.76 crore, renovation of Mahamaham tank at Rs. 75 lakh, Potramarai tank at Rs. 21.30 lakh, Varaha Perumal tank at Rs. 60 lakh, repairing of Adhi Kumbeswarar temple chariots at Rs. 60 lakh, and Sarangapani temple car at a cost of Rs. 20 lakh.

The Municipal Administration and Water Supply Department through the Kumbakonam Municipality has drawn up plans to undertake Rs.45.63-crore worth works, including construction of a new bridge across the River Cauvery at Melacauvery costing Rs. 8 crore, while the Tangedco has submitted plans for Rs. 78.76 crore worth works and the Highways Department has worked out proposals for Rs. 51.35-crore worth works.






Friday, May 15, 2015

பிளஸ் 2 சான்றிதழ் பிழை திருத்த தலைமை ஆசிரியருக்கு அதிகாரம்

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் வழங்கும் போது, அதில் எழுத்துப் பிழை இருந்தால், தலைமையாசிரியரே திருத்தம்
செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம், 'மதிப்பெண் சான்றில், மதிப்பெண் விவரத்தில், 'கை' வைக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயர், பள்ளி, முகவரி, மதிப்பெண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றில், எழுத்துப்பிழை, அச்சுப்பிழை வருவதால், இந்த ஆண்டு கல்வித் துறை மாற்றுத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.பள்ளிகளில் தலைமையாசிரியர், மாணவரின் தற்காலிக மதிப்பெண் பட்டியலை, ஆன் - லைனில், 'பிரின்ட் அவுட்' எடுத்து, சான்றொப்பம் இட்டு, தற்காலிகமாக நேற்று முதல் வழங்கி வருகின்றனர்.தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், எழுத்துப்பிழை, அச்சுப் பிழை இருந்தால், அந்தந்த தலைமையாசிரியரே, திருத்தம் செய்து கொள்ளலாம் என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், மார்க் விவரங்களில் திருத்தம் செய்ய, தலைமை ஆசிரியருக்கு அதிகாரமில்லை.
இதனால், அசல் மதிப்பெண் சான்று வரும் வரை, மாணவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. தற்காலிக சான்றிதழை வைத்தே, உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம். திருத்தம் செய்யப்பட்ட விவரத்தை, தேர்வுத் துறைக்கு அனுப்பி, அங்கிருந்து திருத்திய மதிப்பெண் பட்டியல் வந்தபின், அசல் மதிப்பெண் சான்று வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால் அதுவே இறுதியானது

'பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், இயற்பியலில் கடந்த ஆண்டை விட, 95 சதவீதம் குறைவானோர், 'சென்டம்' எடுத்தனர். வேதியியல், விலங்கியல், உயிரியல், கணினி அறிவியல், வணிகவியல், கணித பதிவியல் பாடங்களிலும், 'சென்டம்' எடுத்தோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.இந்நிலையில், ஏராளமான மாணவர்கள் மறு கூட்டல், விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்துள்ளனர். 

தேர்வுத் துறை வெளியிட்டுள்ள நிபந்தனைகள்:


*மறு கூட்டல் செய்யக்கோரும் தேர்வரின் விடைத்தாளில், பக்க வாரியாகவும், வினா வாரியாகவும் வழங்கப்பட்ட மதிப்பெண் மறுகூட்டல் செய்யப்படும்.*மதிப்பீடு செய்யாமல் விடுபட்ட விடைகள் மற்றும் முழு மதிப்பீடு செய்யாத விடைகளை பரிசீலித்து மதிப்பெண் வழங்கப்படும்.*டைக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பெண்ணை விட கூடுதலாக வழங்க முடியாது.*மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில் மாற்றம் இருந்தால், புதிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.*மறு கூட்டலுக்கு மட்டும் விண்ணப்பிப்பவருக்கு நகல் வழங்கப்படாது.*விடைத்தாள் நகல் பெற்றவர்களுக்கு மட்டுமே மறு மதிப்பீடு செய்யப்படும்

.*தேர்வர்களின் விடைத்தாள்களில், சம்பந்தப்பட்ட பாடத்திற்கான பாட வல்லுனர் மூவர் குழு மூலம் மறு மதிப்பீடு செய்யப்படும்.
*மறு மதிப்பீட்டில் மதிப்பெண் உயர்வோ, குறைவோ ஏற்படலாம். குறைந்தால், முந்தைய அதிக மதிப்பெண் கிடைக்காது; மறு மதிப்பீடு மதிப்பெண்ணே இறுதியானது. எனவே, பாட வல்லுனர்களிடம் நன்றாக ஆய்வு செய்து, மதிப்பெண் உயரும் என்று தெளிவாகத் தெரிந்து, மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். - நமது நிருபர் -

NEWS TODAY 27.03.2024