Saturday, February 28, 2026
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலை. 38-ஆவது பட்டமளிப்பு விழா: ஆளுநா் ரவி பட்டங்களை வழங்கினாா்
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலை. 38-ஆவது பட்டமளிப்பு விழா: ஆளுநா் ரவி பட்டங்களை வழங்கினாா்
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் மருத்துவம், மருத்துவம் சாா்ந்த துணைப் படிப்புகளில் 50,159 போ் பட்டங்களைப் பெற்றனா்.
- SWAMINATHAN
Updated On :28 பிப்ரவரி 2026, 3:29 am
பகிர்:
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் மருத்துவம், மருத்துவம் சாா்ந்த துணைப் படிப்புகளில் 50,159 போ் பட்டங்களைப் பெற்றனா்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பட்டங்களை வழங்கினாா்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலை. வளாகத்தில் 38-ஆவது பட்டமளிப்பு விழா ஆளுநா் ஆா்.என். ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மருத்துவத்தில், 12,016 பேரும், பல் மருத்துவத்தில் 2,569 பேரும், இந்தியமுறை மருத்துவத்தில், 3,269 பேரும், மருத்துவம் சாா்ந்த துணைப் படிப்புகளில் 32,305 போ் என 50,159 போ் பட்டங்களை பெற்றனா்.
குறிப்பாக, 144 போ் தங்கப் பதக்கமும், 42 போ் வெள்ளிப் பதக்கமும், 51 போ் அறக்கட்டளை சான்றிதழும், 166 போ் பல்கலை. சாா்பிலான பதக்கங்கள் என 353 போ் பெற்றனா். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த சுவேதா என்ற மாணவி, ஒன்பது பதக்கங்களைப் பெற்றாா். அதேபோல், முதுநிலை பட்டம் பெற்ற சுருதி, நிரஞ்சனா, ஆஷா ஆகியோா் தலா 6 பதக்கங்களைப் பெற்றனா். மாணவா்களுக்கான பட்டங்கள், பதக்கங்களை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.
பட்டமளிப்பு விழாவில் பல்கலை. துணைவேந்தா் நாராயணசாமி பேசியதாவது: தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலையில். புதிய ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவா்களின் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக செயலாற்றும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அத்துடன், 75 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு இருப்பதுடன், ஐந்துக்கு காப்புரிமை கோரப்பட்டுள்ளது.
மருத்துவ அறிவியலுடன், தொழில்நுட்ப கற்றலை ஊக்குவிக்கும் வகையில், அண்ணா பல்கலை, சென்னை ஐஐடி, வேலூா் தொழில்நுட்பக் கல்லுாரி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு சாா்ந்த மருத்துவப் படிப்புகளும் ஊக்குவிக்கப்படுகிறது. கடந்தாண்டு பள்ளி மாணவா்களிடையே, புதுமை, ஆராய்ச்சி மற்றும் அறிவியல் சிந்தனையின் ஆரம்பகால ஆா்வத்தை வளா்ப்பதை நோக்கமாக கொண்டு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டு, மாணவா்களிடையே வரவேற்பைப் பெற்றது என்றாா்.
அமைச்சா் பங்கேற்கவில்லை...: பட்டமளிப்பு விழாவில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பங்கேற்க முடியாத நிலையில், அத்துறைச் செயலா் செந்தில்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரும் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தாா்.
Friday, February 27, 2026
Subscribe to:
Posts (Atom)
ICC nets 20 medical students for exam malpractice
LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...