Friday, October 31, 2014

"கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார்''



"கோவைத் தம்பி தயாரித்த பயணங்கள் முடிவதில்லை" படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் எழுந்து சென்றதால், கோவைத்தம்பி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

"பயணங்கள் முடிவதில்லை'' கோவைத்தம்பியின் முதல் படம். தன்னுடைய "தலைச்சன்'' குழந்தையை, தன் தலைவர் எம்.ஜி.ஆர். பார்த்து வாழ்த்துக் கூறவேண்டும் என்று விரும்பினார்.

எம்.ஜி.ஆரை சந்தித்தார். "அண்ணே! ஒரு சினிமாப் படம் தயாரித்திருக்கிறேன். "பயணங்கள் முடிவதில்லை'' என்பது படத்தின் பெயர். தாங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

"குடும்பத்தோடு வரலாமா?'' என்று சிரித்துக்கொண்டே எம்.ஜி.ஆர். கேட்டார்.

கோவைத்தம்பி அசந்துவிட்டார். "என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? இது எனக்கு எவ்வளவு பெருமை! எல்லோரும் வாருங்கள்!'' என்றார்.

1982 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் அரங்கண்ணலுக்கு சொந்தமான ஆண்டாள் பிரிவிï தியேட்டரில், எம்.ஜி.ஆருக்காக "பயணங்கள் முடிவதில்லை'' படம் திரையிடப்பட்டது. மனைவி ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.

படம் ஓடத்தொடங்கியது. படத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர். என்ன சொல்வாரோ என்று கோவைத் தம்பியின் மனம் `திக் திக்' என்று அடித்துக்கொண்டது.

`கிளைமாக்ஸ்' வந்தபோது, அரங்கத்தில் பூரண அமைதி நிலவியது. ஆனால், லேசாக விம்மல் ஒலியும் கேட்டது. அது ஜானகி அம்மாளிடம் இருந்து வந்த விம்மல் ஒலிதான்.

இதன்பின் என்ன நடந்தது என்பதை கோவைத்தம்பி கூறுகிறார்:

"படம் முடிந்து, தியேட்டரில் லைட் போடப்பட்டது. தலைவர் எம்.ஜி.ஆர். உடனடியாக எழவில்லை. சிறிது நேரம் மவுனமாக அமர்ந்திருந்தார்.

பின்னர் எழுந்தார். தன்னைப் பார்த்து கும்பிட்டவர்களுக்கெல்லாம், அமைதியாக பதில் வணக்கம் செலுத்தினார். மவுனமாக காரில் வந்து ஏறினார். கார் புறப்பட்டது.

எல்லோரையும் பார்த்து கும்பிட்டவர், என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே திகைத்துப்போய் நின்றேன்.

அருகில் நின்ற சில அமைச்சர்கள், "நாங்கள் அப்போதே சொன்னோமே, கேட்டாயா? தலைவரைக் கூப்பிடாதே, இந்தப்படம் எல்லாம் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னோமே கேட்டாயா!'' என்று என்னிடம் கூறினார்கள்.

சற்று தூரம் சென்ற தலைவரின் கார் நìன்றது. செக்ïரிட்டி மட்டும் இறங்கி எங்களை நோக்கி ஓடிவந்தார். "கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார்'' என்று அமைச்சர்களைப் பார்த்து சொன்னார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்துடன் ஓடினேன். எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கும்பிட்டேன்.

"இந்தப் படத்தின் மூலம், இன்னும் ஒரு வாரத்தில் புகழின் உச்சிக்கு சென்று விடுவாய். அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது. வரப்போகிற புகழைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வை. வெற்றியும், புகழும் நிரந்தரமல்ல. அதை, உன் விவேகத்தால் தக்க வைத்துக் கொள்'' என்று கூறினார்.

என் கண் கலங்கி விட்டது. எம்.ஜி.ஆரின் கார் புறப்பட்டு, பார்வையில் இருந்து மறையும் வரை, அதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

தலைவர் கூறிய வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டேன். கலைத்துறையில் என் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்தேன்.

என் இரண்டாவது படத்தை, மணிவண்ணன் டைரக்ஷனில் தயாரித்தேன். "இளமைக் காலங்கள்'' என்பது, படத்தின் பெயர். மோகனும், சசிகலாவும் நடித்தார்கள்.

18-8-1983-ல் படம் வெளிவந்தது. இந்தப் படமும் வெற்றிப்படம்தான். 200 நாட்கள் ஓடியது.

இரண்டாவது படமும் வெற்றிப்படமாக அமைந்ததால், கலைத்துறையில் எனது ஈடுபாடு அதிகமாகியது. அடுத்த படத்தைத் தயாரிக்கத் தொடங்கினேன்.

முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' டைரக்ட் செய்து பெரும் வெற்றியடைய வைத்த டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ஷனில் சிவகுமார் - அம்பிகா ஆகியோரை வைத்து "நான் பாடும் பாடல்'' என்ற படத்தைத் தயாரித்தேன். இந்தப்படம் வேகமாக வளர்ந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் என்ற ஊரில் எடுத்தோம். இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளை சுந்தர்ராஜன் வைத்திருந்ததால் எதை தேர்வு செய்வது என்பதில் எனக்கு மிகவும் குழப்பம் ஏற்பட்டது.

எந்த "கிளைமாக்சை'' வைத்துக் கொள்வது என்று நானும் சுந்தர்ராஜனும் கடும் விவாதம் நடத்திக் கொண்டிருந்தோம். கதாநாயகி அம்பிகா இறப்பது போல அமைந்தது ஒரு கிளைமாக்ஸ். சிவகுமார் தொட்டு பொட்டு வைத்த நெற்றியை அம்பிகாவே நெருப்புக்கட்டையை எடுத்து சூடு வைத்துக் கொள்வது போல மற்றொரு கிளைமாக்ஸ்.

இரண்டு கிளைமாக்ஸ்களில் எதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற பயம் எங்களுக்குள் ஏற்பட்டுவிட்டதால், ரீ ரிக்கார்டிங் செய்யும்போது இசையமைப்பாளர் இளையராஜா முடிவிற்கே விட்டு விடுவோம் என்று இருவரும் தீர்மானித்தோம்.

அப்படி இளையராஜா தேர்ந்தெடுத்த கிளைமாக்ஸ்தான் `நான் பாடும் பாடல்' கிளைமாக்ஸ். சிவகுமார் பொட்டு வைத்த நெற்றியை அம்பிகா - தானே சுட்டுக்கொள்வது போன்ற இந்த கிளைமாக்ஸ் காட்சியால் படம் சக்கை போடு போட்டு பிரமாண்ட வெற்றி பெற்றது. படம்

தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றிகரமாக ஓடியதால் திரையுலகிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி, மதர்லேண்ட் பிக்சர்ஸ் பெயர் மிகவும் பிரபலமடைந்தது.

இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.''

சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு


சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா'' பாடலும் தருவார். மாயாபஜார் படத்துக்கு "கல்யாண சமையல் சாதம்'' பாடலும் தருவார்.

காதலை நெஞ்சில் பதிக்கும் "மணாளனே மங்கையின் பாக்கியம்'' படப்பாடலான "அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா''வும் தருவார்.

நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் "மலைக்கள்ளன்'' படப்பாடலான "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' பாடலும் தருவார்.

புரியாத மொழியில் `ஜிகினா' வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் "ஜாலியோ ஜிம்கானா'' பாடலை எழுதியதும் இவரே.

கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த "புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே'' பாடலை போடுவார்கள். "பானை பிடித்தவள் பாக்கியசாலி'' படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்.

இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.

1939-ல் வெளிவந்த "மாரியம்மன்'' படத்தில் இவர் எழுதிய பாடல்தான் சினிமா உலகுக்கு இவரை கவிஞராக அறிமுகம் செய்தது. தொடர்ந்து 250 படங்களுக்கு மேல் எழுதியவர். எழுதிய பாடல்கள் இரண்டாயிரத்துக்கும் மேல்.

தஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி சொந்த ஊர். அங்குள்ள சென்ஸ் பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர், தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்து "புலவர்'' பட்டம் பெற்றார். அதோடு ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.

பள்ளி ஆசிரியராக இருந்தவர், சினிமாவுக்கு பாட்டெழுத வந்தது எப்படி?

கவிஞரின் மகன் ரவீந்திரன் இதற்கு பதில் சொல்கிறார்:-

அப்பாவுக்கு அப்போதே பாட்டெழுதும் ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது தஞ்சை சரஸ்வதி மகாலில் அடிக்கடி புலவர்கள் கூடி பாடல்கள் பற்றி விவாதிப்பது வழக்கம். இதில் ராஜாவின் அரண்மனைப் புலவர்களாக இருந்தவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சபையில் நடந்த பாட்டுப்போட்டியில் அரண்மனைப் புலவர்களும் ஆச்சரியப்படும் விதத்தில் அப்பா முதல் பரிசான தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.

அப்பா காங்கிரசில் இருந்தார். கட்சியில் ரொம்பவும் ஈடுபாடு. சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்சியின் கட்டளையை ஏற்று போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

சுதந்திரம் கிடைத்த பிறகு "சுதந்திர போராட்ட தியாகி'' என்ற வகையில் கிடைத்த பட்டயம், பதக்கம் இரண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஆசிரியப் பணியை தொடரும்போதே நாடகத் துறையிலும் நாட்டம் ஏற்பட, ஒரு நாடகக்குழு அவரை தன் சபாவில் வாத்தியாராக ஏற்றுக்கொண்டது. நாடக கதை - வசன - பாடலாசிரியருக்கு `வாத்தியார்' என்ற பெயர் நிலைத்து விடும். இந்த வகையில் நாடகத் துறையிலும் `வாத்தியார்' ஆனார். மச்சரேகை, பகடை, பவளக்கொடி, விதியின் வெற்றி, அல்லி அர்ஜ×னா, வள்ளி திருமணம் போன்ற நாடகங்களையும் நடத்தி வந்தார்.

ஊர் ஊராக நாடகம் போட்டு வந்த அப்பாவை ராமசாமி பாவலர் என்பவர் சேலத்தில் நாடகம் போட அழைத்து வந்தார். அதே ஊரில் அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி'', ''ஓர் இரவு'' போன்ற நாடகங்களை கே.ஆர்.ராமசாமி நடத்தி வந்தார். இரண்டு குழு நாடகங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது.

அப்பாவின் வசனமும் பாடல்களும் நாடக மேடையில் பிரபலம் என்பதால், அவரது புகழ் சினிமாத்துறையிலும் பரவ ஆரம்பித்தது.

இதனால் அப்பாவுக்கு சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது. இவரை சிறந்த கவிஞராக கண்டுகொண்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அப்போது தயாரித்து வந்த "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி'' படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தது. அப்பா அந்தப் படத்துக்காக "வெச்சேன்னா வெச்சதுதான்'' என்று ஒரு பாடலை எழுதிக்கொடுக்க, அது அவர்களுக்கு பிடித்துப்போனது.

அப்பாவை நாடகம் மூலமாக ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கம், அப்பாவை மாடர்ன் தியேட்டர்சில் கவிஞராக பார்த்தபோது வியந்திருக்கிறார். அப்பாவின் கதை-வசனம் இயக்கத்தில் "மச்சரேகை'' நாடகம் 200 தடவை மேடையேறியிருப்பதை தெரிந்து கொண்ட டி.ஆர்.மகாலிங்கம் அதை தனது கம்பெனிக்காக படமாக்கித்தர முடியுமா? என்று கேட்க, அப்பாவும் சந்தோஷமாய் சம்மதித்திருக்கிறார்.

இந்த வகையில் சினிமாவுக்காக அப்பா சென்னை வர காரணமாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம்தான். அப்பாவின் பாட்டெழுதும் திறமையை முதலில் கண்டு கொண்டது நாகிரெட்டியாரின் விஜயா - வாகினி நிறுவனமே. 1951 முதல் 1960 வரை அந்த நிறுவனம் தயாரித்த "பாதாள பைரவி'', "மிஸ்ஸியம்மா'', "மாயாபஜார்'' போன்ற பல படங்களுக்கு வசனம், பாடல்கள் அப்பாதான். விஜயா - வாகினியின் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியிலும் நிலைத்தார்.

அன்று இசையுலகில் கொடிகட்டிப் பறந்த இசை மேதைகள் சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வரராவ், ஆதிநாராயணராவ் ஆகியோரின் இசை அமைப்பில் அப்பா பாடல்கள் எழுதினார்.

ஒரு சமயம் டைரக்டர் ஸ்ரீதர் "அமரதீபம்'' படத்துக்கு பாட்டெழுதி வாங்க அப்பாவிடம் வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் அப்பா, "நம்பினா நம்புங்க! நம்பாகாட்டி போங்க'' என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், "வாத்தியாரய்யா! இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே'' என்று கலக்கமாய் கூறியவர், "வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க'' என்று கேட்டிருக்கிறார்.

அப்பாவும் உடனே தமாஷாக, "ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா'' என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.

"இதுக்கு என்ன அர்த்தம்?'' என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, "கதைப்படி இது குறவன் - குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்'' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு அப்பாவுக்கு "டப்பாங்குத்து பாடலாசிரியர்'' என்ற பெயரும் வந்து சேர்ந்தது. ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.

கலைஞர் மு.கருணாநிதி அப்போது தங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த "குறவஞ்சி'' படத்துக்கு பாடல்கள் எழுத அப்பாவை அழைத்தார். அப்பா அப்போது மதுவுக்கு பழக்கப்பட்டுப் போயிருந்த நேரம். அதனால் அதை பாட்டிலேயே வரிகளாக்கி "எந்நாளும் `தண்ணி'யிலேயேதான் எங்க பொழப்பு இருக்குது ரா... ரா.... ரா...'' என்று எழுதினார்.

சினிமாவில் `கேட்டது கிடைக்கும்' என்பது அப்பாவிடம்தான். இயக்குனர்கள் எந்த மாதிரி விரும்புகிறார்களோ, அந்த மாதிரி பாடல்களை கொடுப்பார். ஒருமுறை லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது "தங்கரத்தினம்'' படத்துக்கு ஒரு பாட்டு கேட்டார். பல்லவியில் "உதயசூரியன்'' என்ற வரி வரும்படி கேட்டுக் கொண்டார். அப்பாவும் "எதையும் தாங்கும் மனசு, என்னை ஏமாத்தப் பாக்குது வயசு, என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு'' என்று எழுதிக் கொடுத்தார்.

அப்பா பிசியான கவிஞராக இருந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசனும் பாட்டெழுத வந்து விட்டார். அவர் அப்போது "மாலையிட்ட மங்கை'' என்ற படத்தையும் தயாரித்தார். அந்தப் படத்திற்கு பாட்டு எழுத அப்பாவை கேட்டார். ஆனால் அப்பா இருந்த `பிஸி'யில் அவரால் பாட்டெழுதி கொடுக்க முடியாமல் போயிற்று. இதில் கண்ணதாசனுக்கு அப்பா மீது வருத்தம்.

அந்தக் காலத்தில் `கதை, வசனம், பாடல்கள் ஒருவரே' என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் அப்பாதான். அதோடு நாடக உலகின் தந்தை என கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகளை தமிழ் மண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் `பபூன்' வேடமிட்ட சங்கரய்யரை கடைசி வரை ஆதரித்தார்.

பின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ் சுவாமிகளின் `ஏகலைவன்' என்றும் அழைத்துக் கொண்டார்''

இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.

காலமே என்னைக் காப்பாற்று

காலமே என்னைக் காப்பாற்று

அதிகாலைக்கனவு கலைக்கும்
அலாரத்திடமிருந்தும் -

நித்தம் நித்தம்
ரத்தத்தில் அச்சேறிவரும்
பத்திரிகைச் செய்திகளின் பயங்கரத்திலிருந்தும் -

தென்னைமரத்தில்
அணில்வேடிக்கைபார்க்கும்
குழந்தை நிமிஷத்தில்
அலறும் தொலைபேசியின் அபாயத்திலிருந்தும் -

ஒளிமயமான கற்பனை உதிக்கும் வேளை
தலைமறைவாகித் தொலைக்கும் பேனாவிலிருந்தும் -

விஞ்ஞானிபோல் புத்திசெதுக்கி
முனிவன்போல் புலனடக்கித்
தும்பிபிடிக்குமொரு பொற்பொழுதில்
தொழிலைக் கெடுக்கும் தும்மலிலிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *
ஒரே ஒரு புத்தகம்படித்த
'அறிவாளி'யிடமிருந்தும் -

சிநேகிக்கும் பெரியவர்களின்
சிகரெட் புகையிலிருந்தும் -

எல்லாரும் கதறியழ
எனக்குமட்டும் கண்ணீர்வராத
இழவு வீட்டிலிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *

பயணியர்விடுதிக்
கொசுவிடமிருந்தும் -

முத்திரைவிழாத அஞ்சல்தலைகளை
உற்றுக்கிழித்துப் பயன்படுத்தும்
உலோபியிடமிருந்தும் -

கை கழுவ அமர்ந்த
சாப்பாட்டு மேஜையில்
கைகுலுங்க வரும்
கைகளிலிருந்தும்...


நோயுற்ற காலை
தனிமையிலிருந்தும்-

நோய்கள் வந்தபின்
மருந்திடமிருந்தும் -

மருந்து தீர்ந்தபின்
நோயிடமிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *

எனதுபக்கம் நியாயமிருந்தும்
சாட்சிகள் இல்லாச் சந்தர்ப்பத்திலிருந்தும் -

வருமானம் எல்லாம் தீரும் வயதில்
வரிபாக்கி கேட்கும் ஆணையிலிருந்தும் -

என்னைப் பகையாய் எண்ணும் வாசலில்
பரிந்துரைகோரும் பாவத்திலிருந்தும் -

இல்லையென்றொருவன்
தவிக்கும்பொழுதில்
இல்லையென்று நான்
தவிர்ப்பதிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *
சக ரயில் பயணியின்
அரட்டையிலிருந்தும்
அரட்டை முடிந்ததும்
குறட்டையிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *
தீதும் நன்றும் பிறர்தர வாரா
என்பது எனக்கு ஏற்புடைத்தென்பதால்

என்னிடமிருந்தே
என்னிடமிருந்தே

காலமே
என்னைக்
காப்பாற்று

  • கவிஞர் : வைரமுத்து

பெங்களூர்: பெங்களூர் நகரின் பெயர் நாளை முதல் பெங்களூரு என்று அதிகாரப்பூர்வமாக மற்றப்பட்டு அமலுக்கு வருகிறது.

பெங்களூர்: பெங்களூர் நகரின் பெயர் நாளை முதல் பெங்களூரு என்று அதிகாரப்பூர்வமாக மற்றப்பட்டு அமலுக்கு வருகிறது. அதேபோல மைசூர் என்ற பெயரும் மைசூரு என்று மாற்றப்படுகிறது. இவை மட்டுமல்ல கர்நாடகத்தின் 12 முக்கிய நகரங்களின் பெயர்களும் பழைய கன்னட பெயர்களுக்கே நாளை முதல் மாற்றம் பெறுகின்றன.

இதற்கான ஒப்புதலை மத்திய உள்துறை அமைச்சகம் முறைப்படி கொடுத்து விட்டது. கடந்த 9 ஆண்டுகளாக இந்த பெயர் மாற்றம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் நாளை ராஜ்யோத்சவா தினம் கொண்டாடப்படுகிறது. அதாவது கர்நாடக மாநிலத்தின் பிறப்பு தினமாகும் இது. நாளை 68வது ராஜ்யோத்சவா ஆகும். இதையடுத்து நாளை முதலே இந்த பெயர் மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

 இதுகுறித்து பழம்பெரும் கன்னட நடிகரான கிரிஷ் கர்னாட் கூறுகையில், இது உண்மையில் பெயர் மாற்றம் அல்ல. ஸ்பெல்லிங் மாற்றம்தான். நாங்கள் எப்போதுமே பெங்களூரு என்றுதான் அனைத்து மொழிகளிலும் சொல்லி வருகிறோம். உள்ளூர் மக்களும் கூட பெங்களூரு என்றுதான் பேசி வருகிறார்கள். மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாறியதை இதனுடன் ஒப்பிட முடியாது. அது முற்றிலும் பெயர் மாற்றமாகும். ஆனால் பெங்களூரு என்பது வெறும் ஸ்பெல்லிங் மாற்றம் மட்டுமே என்றார் அவர். ஆனால் இந்த ஸ்பெல்லிங் மாற்றத்திற்கு சற்று அதிருப்தியும் இருக்கத்தான் செய்கிறது. ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கூறுகையில், பெங்களூரு என்பதிலிருந்து பெங்களூர் என்று மாறி பல காலமாகி விட்டது. ஐடி துறையில் நாங்கள் இன்னும் சற்று மாறி, 'Bangalored' என்றும் அழைக்கிறோம். பெங்களூர் என்ற பெயரில் எந்த அடிப்படைத் தவறும் இருப்பது போலத் தெரியவில்லை. அப்படி இருக்கையில் அதையே பின்பற்றுவதிலும் தவறில்லை. உலகம் முழுவதும் பெங்களூர் என்றுதான் பிரபலம். எனவே அதை மறுபடியும் பெங்களூரு என்று மாற்றுவது சரியானதாக தெரியவில்லை. இப்போது இதனால் நேரம், பணம், முயற்சி எல்லாமே விரயமாகும். குழப்பமே மிஞ்சும் என்றார் அவர். பெங்களூர், மைசூர் தவிர நாளை முதல் மாற்றம் பெறும் பிற நகரங்கள் விவரம்.

 பெல்காம் -பெலகாவி, மங்களூர்- மங்களூரு, குல்பர்கா- கலபுராகி, ஹூப்ளி- ஹுப்பள்ளி, ஷிமோகா - சிவமோகா, சிக்மகளூர் - சிக்கமங்களூரு, பெல்லாரி - பல்லாரி, பீஜப்பூர்- விஜபுரா அல்லது விஜயபுரா, ஹோஸ்பேட் - ஹொசப்பேட்டை, தும்கூர்- தும்மகூரு. ரைட்டு.. நாளை முதல் மாத்தி பேசலாம், எழுதலாம்!

ஒரு முதல்வரின் மனைவி பணியில் இருக்கும் சிறப்பு வேறு எவருக்கும் கிடைக்காத ஒன்று



மகாராஷ்டிரா முதல்வராக இன்று பதவியேற்கும் பாஜவின் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா, தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். ஒரு முதல்வரின் மனைவி பணியில் இருக்கும் சிறப்பு வேறு எவருக்கும் கிடைக்காத ஒன்று. நாக்பூரில் உள்ள அந்த தனியார் வங்கியின் கிளையில் இணை துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார் அம்ருதா. பட்னாவிஸ் முதல்வராகப் பொறுப்பேற்பதால், தலைநகர் மும்பைக்கு இடமாற்றம் கோரியுள்ளார். நாக்பூரைச் சேர்ந்த டாக்டர் தம்பதியின் மகளான அம்ருதாவுக்கும், பட்னாவிசுக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திவிஜா என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளார். நாக்பூரில் உள்ள பள்ளியில் கே.ஜி. படித்து வருகிறார். திருமணத்தின்போதும் வங்கியில் பணிபுரிந்த அம்ருதா, அதைத் தொடர்கிறார். தனது கணவர் முதல்வராகப் பொறுப்பேற்பதால், பணியில் இருந்து விலகப் போவதில்லை என்று கூறியுள்ள அவர், மும்பைக்கு இடம் மாறுதல் கோரியுள்ளார். இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவுக்காக விடுமுறையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அம்ருதா கூறியதாவது: பட்னாவிஸ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தோம்.

பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அவர் முதல்வராகப் பொறுப்பேற்பதால் மும்பைக்கு செல்ல வேண்டும். எனது வேலையை விட்டுவிடும் எண்ணம் எதுவுமில்லை. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். குழந்தை தற்போது படித்து வருவதால், மும்பைக்கு இடம்பெயர்வது குறித்து கணவருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றார். இதனிடையில் பேத்தி திவிஜாவுக்காக மும்பைக்கு செல்லவிருப்பதாக பட்னாவிசின் தாயார் சரிதா கூறியுள்ளார். திவிஜாவுக்கு எப்போதும் வீட்டில் யாராவது இருக்க வேண்டும். மும்பையில் முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா, மிகவும் பெரிய இடம். அதனால் திவிஜா தனிமையை உணரக் கூடாது என்பதால் நானும் மும்பை செல்ல உள்ளேன் என்றார் சரிதா.

சுவையான மின்னஞ்சல்களைத் தனியாகத் தொகுத்தளிக்கும் வழியில் ஒரு இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.



உலகில் மின்னஞ்சல்கள் வந்த பின்பு தகவல் தொடர்பு எளிமையாகிவிட்டது. அதன் பயன்பாடுகளும் அதிகமாகிவிட்டன. உலகம் முழுவதும் இந்த மின்னஞ்சல்கள் வழியாகப் பல்வேறு பரிமாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த மின்னஞ்சல் பரிமாற்றங்களில் ஆங்கில மொழியிலான சுவையான மின்னஞ்சல்களைத் தனியாகத் தொகுத்தளிக்கும் வழியில் ஒரு இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த இணையதளத்தில் வேடிக்கையான மின்னஞ்சல்கள் (Funny Emails), படத்திலான மின்னஞ்சல்கள் (Picture Emails), குறுங்கதை மின்னஞ்சல்கள் (Short Story Emails), கல்விசார் மின்னஞ்சல்கள் (Educational Emails), சுவையான உண்மைகள் (Interesting Facts), நட்புக்கான மின்னஞ்சல்கள் (Friendship Emails), அலுவலக மற்றும் பணிகளுக்கான மின்னஞ்சல்கள் (Office & Work Emails) எனும் முதன்மைத் தலைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இத்தலைப்புகளில் தலைப்புடன் தொடர்புடைய மின்னஞ்சல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

இவை தவிர, மின்னஞ்சல் வகைகள் (Email Categories) எனும் தலைப்பில் பல்வேறு தலைப்புகளின் கீழ் மின்னஞ்சல்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தலைப்புகளில் ஒவ்வொரு வகையின் கீழும் எத்தனை மின்னஞ்சல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை அடைப்புக் குறிக்குள் இட்டுள்ளனர்.

இவற்றின் வழியாக நாம் விரும்பும் தலைப்பினுள் சென்று அங்குள்ள மின்னஞ்சல்களைப் படித்து மகிழலாம். அதை நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ அனுப்பலாம். இதுபோல் இத்தளத்தில் நாமும் மின்னஞ்சல்களை சமர்ப்பிப்பதற்கும் வசதி உள்ளது.

மின்னஞ்சல்களில் புதிய செய்திகளை அறியவும், சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும் இந்த இணையதளத்தினைப் பயன்படுத்த http://www.interestingemails.com/எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.

கத்தி' படத்தில் வரும் செல்போன் நம்பரால் ரசிகர்களின் போன் அழைப்புகளின் தொல்லை தாங்காமல், "அது நான் இல்லே" என கதறிக்கொண்டிருக்கிறார்.


கத்தி' படத்தில் வரும் செல்போன் நம்பரால் ரசிகர்களின் போன் அழைப்புகளின் தொல்லை தாங்காமல், "அது நான் இல்லே" என கதறிக்கொண்டிருக்கிறார்.

தீபாவளி ரிலீஸாக வெளியான நடிகர் விஜய் நடித்த, ‘கத்தி‘ படம் தமிழகம் முழுவதும் ஏராளமான திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில், கதாநாயகி சமந்தா தனது காதலன் விஜய்யிடம் தன்னை அழைப்பதற்காக ஒரு செல்போன் எண்ணை கொடுப்பார். நாயகன் விஜய், இந்த எண்ணை பலமுறை சொல்லிக்கொண்டே, அந்த எண்ணில் அழைக்கும் போது, சென்னை மாநகராட்சி ஊழியர் எடுத்து, இது மாநகராட்சிக்கான எண் எனவும், தாங்கள் நாய் பிடிக்கும் பிரிவு எனவும் கூறுவதாக படத்தில் வேடிக்கையான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

கத்தி திரைப்படத்தில் விஜய் பலமுறை திரும்ப திரும்பக் கூறிய அந்த செல்போன் எண்தான் தற்போது கன்னியாகுமரி மாவட்டம், அருமனை என்ற இடத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்ற ஆசிரியரை கதற வைத்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் படத்தில் விஜய் கூறும் அந்த எண், அந்த ஆசிரியருடையது.

தீபாவளிக்கு படம் வெளியான தினத்திலிருந்தே ஜெகதீஷுக்கு ஏகப்பட்ட போன் அழைப்புகள். "தலைவா படம் சூப்பர்; சமந்தாவிடம் பேச முடியுமா?; அடுத்த படம் எப்போ?.; அந்த காட்சி அப்படி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்; காதல் காட்சியில் நடிக்கும்போது எப்படி இருந்தது?...என்ற ரீதியில் ஒருதரப்பு ரசிகர்கள் கேட்டால், மறுபக்கம் படத்தை திட்டியும், விமர்சித்தும் பேசிக்கொண்டே போகிறார்கள் ரசிகர்கள்.

ரசிகர்கள்தான் இப்படி போன் செய்கிறார்கள் என்றால் மாணவிகள், இளம்பெண்களும் ஒருபக்கம் விஜயிடம் பேசுவதாக நினைத்துக்கொண்டு, " நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. உங்க படம்னா எனக்கு உயிர்..." என்றெல்லாம் பேச, கிர்ரடித்துப் போயுள்ளார் ஆசிரியர் ஜெகதீஷ். போதாதற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என வெளிநாடுகளிலிருந்தும் ஏகப்பட்ட அழைப்புகள் வருகிறதாம்.

போனை எடுத்து ஹலோ சொல்லி, "நான் விஜய் இல்லை!" எனக் கூறுவதற்கு முன்னதாகவே, எதிர்முனையில் இருப்பது விஜய்தான் என நினைத்துக்கொண்டு ரசிகர்கள் பேசிக்கொண்டே போக, செய்வதறியாமல் திகைத்துபோயுள்ளார் ஜெகதீஷ்.

தீபாவளி விடுமுறை முடிந்தும், போன் தொல்லை அதிகமாகவே, போனை தான் வேலை பார்க்கும் பள்ளிக்கு கொண்டு செல்லாமல், வீட்டிலேயே வைத்துவிட்டு செல்கிறார் ஜெகதீஷ். இதனால் அவரை ஆத்திர அவசரத்திற்கு அழைக்க முடியாமல் திண்டாடிப்போகின்றனர் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.

வீட்டிற்கு வந்து பார்த்தாலோ தினமும் 400 முதல் 500 வரை மிஸ்டு கால்களாக இருப்பதாக புலம்புகின்றார் ஜெகதீஷ். இதனால் போன் நம்பரையே மாற்றிவிடலாமா? என்ற அளவுக்கு சிந்திக்க தொடங்கிவிட்டார் ஜெகதீஷ்.

வேறு சிலரோ இந்த எண் இயக்குனர் முருகதாஸுடையது என்று நினைத்துக்கொண்டும் பேசுகிறார்களாம். அதுமாதிரி ஒரு பெண் தென்னாப்பிரிக்காவிலிருந்து" உங்களை போனில் அழைத்தேன். ஆனால் நீங்கள் எடுக்கவில்லை. உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும்" என எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளாராம்.

இந்நிலையில் தனது சொந்த உபயோகத்திற்கான போன் நம்பர் கத்தி படத்தில் எப்படி இடம்பெற்றது? எனத் தெரியாமல் குழம்பும் ஆசிரியர் ஜெகதீஷ், இது தொடர்பாக 'கத்தி' படத்தின் இயக்குனர் முருகதாஸை இது சம்பந்தமாக சந்திக்கப்போவதாக கூறியுள்ளார்.

முருகதாஸ் என்ன விளக்கம் சொல்லப்போகிறாரோ?

Thursday, October 30, 2014

7 வயது சிறுமியின் வாயில் முளைத்த 202 பற்கள் அகற்றம்

டெல்லி: மனிதர்களுக்கு சாதாரணமாக 32 பற்கள்தான் இருக்கும். ஒன்றிரண்டு பற்கள் கூடுதலாக இருந்தாலே சமாளிப்பது கடினம். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், 7 வயது சிறுமியின் வாயிலிருந்து சிறிதும் பெரிதுமாக முளைத்திருந்த 202 பற்களை அகற்றியுள்ளனர்.

குர்கானில் ஹோட்டல் நடத்தி வருபவரின் 7 வயது மகள் ஈறுகளில் வீக்கம், வாய் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் பல் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் வாயில் வழக்கத்திற்கு மாறாக சிறிதும் பெரிதுமாக 202 பற்கள் வளர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பற்களை மிகவும் கவனமாக அகற்றினர்.

சிறுமியின் வாயில் வளர்ந்திருந்த பற்களை அகற்ற பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட எலும்பு முறிக்கும் கருவியை பயன்படுத்தினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவர் அஜோய், ‘பொதுவாக இத்தகைய பற்களின் வளர்ச்சியை காண முடியும். ஆனால், 7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது' என்றார். இந்த அறுவை சிகிச்சை சுலபமானது என்றாலும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை இருந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு சிகிச்சை நடைப்பெற்றதாக தெரிவித்தார் மருத்துவர். சிறுமியின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதால், இது தான் அவளுக்கு கிடைத்த சிறந்த பிறந்த நாள் பரிசு என சிறுமியின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை மேற்கொண்ட சிறுமிக்கு தற்போது திரவ உணவு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில் அவளால் முன்பு போல உணவு சாப்பிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மும்பை மருத்துவமனைக்கு இதே பாதிப்புடன் வந்த 17 வயது வாலிபரின் வாயிலிருந்து 232 பற்களை அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்க்து.

15 பயணிகளை சென்னையில் தவிக்கவிட்டு பெங்களூர் பறந்த ஏர் இந்தியா விமானம்! பயணிகள் குமுறல்


15 பயணிகளை சென்னையில் தவிக்கவிட்டு பெங்களூர் பறந்த ஏர் இந்தியா விமானம்! பயணிகள் குமுறல்

சென்னை: ஐந்து நிமிடம் தாமதமாக விமான முனையத்திற்கு சென்றதால் 15 பயணிகளை விமானத்திற்குள் ஏற அனுமதிக்காமல், கெடுபிடி செய்த ஏர் இந்தியா விமான அதிகாரிகளால் சென்னை-பெங்களூர் பயணிகள் கடும் அவதிப்பட்ட சம்பவம் இன்று நடந்துள்ளது.

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் டெலிவரி மேனேஜராக பணியாற்றும், மதன் ராமகிருஷ்ணனுக்கும், டிசைன் இன்ஜினியராக வேலை பார்க்கும் லாரல் மார்ஷலுக்கும் இன்றைய தினத்தையும், ஏர் இந்தியாவையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவசரமாக பெங்களூர் வர இருந்தவர்களை ஆற அமர ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்து 'புண்ணியம் கட்டிக்கொண்ட' ஏர் இந்தியாவை ஈசியாக மறக்க முடியுமா என்ன? மதன்ராமகிருஷ்ணன், லாரல் மார்ஷல் மட்டுமல்ல, அவர்கள் உட்பட 15 பேருக்கு இன்று ஏர் இந்தியா தனது சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை 6 மணிக்கு கிளம்பும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பதற்காக, ஏர்போர்ட் வந்தார் மதன் ராமகிருஷ்ணன். பெங்களூருக்கு வழக்கமாக உள்நாட்டு முனையத்தில் இருந்துதான் ஏர் இந்தியா விமானங்கள் கிளம்பும் என்பதால் அந்த முனையத்துக்கே சென்றுள்ளார்.

ஆனால், திடீரென அங்கிருந்த அதிகாரிகள், பெங்களூர் விமானம், சர்வதேச முனையத்தில் இருந்து கிளம்புவதாக அறிவித்து குண்டை போட்டுள்ளனர். சரி நடந்து செல்லும் தூரம்தானே என்று நினைத்து சர்வதேச முனையத்துக்கு ஓட்டமும் நடையுமாக சென்றுள்ளார் மதன் ராமகிருஷ்ணன். அவருடன் லாரல் மார்ஷல் உட்பட மொத்தம் 15 பேர் இப்படியாக திடீர் அலைக்கழிப்புக்கு உள்ளாகி வேறு முனையத்திற்கு ஓடியுள்ளனர். ஆனால் அங்குதான் பெரும் அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது. கேட்டை இழுத்து மூடிய அதிகாரிகள், நேரமாகிவிட்டது, இனிமேல், விமானத்தில் உங்களை ஏற்ற மாட்டோம் என்று கறாராக உத்தரவு போட்டுள்ளனர். இது என்னய்யா கொடுமை.. ஏதோ ஒருவர் என்றாலும் பரவாயில்லை, மொத்தமாக 15 பேர் தாமதமாக வந்துள்ளோம் என்றால், அதன் பின்னால் ஒரு காரணம் இல்லாமலா இருக்கும் என்று பயணிகள் கேட்ட நியாயமான கேள்வி அதிகாரிகள் காதுகளில் ஏறவில்லை.

இத்தனைக்கும், அரை மணிநேரம் தாமதமாக அவர்கள் வரவில்லை. ஐந்து நிமிட தாமதமாகவே வந்துள்ளனர். அதுவும் ஏர் இந்தியா செய்த முனைய குழப்பத்தால். சிறு பிள்ளைகளுக்கு சொல்வதைப்போல அனைத்து பயணிகளும் இதை எடுத்துச் சொல்லியும், மூடிய கேட் மூடப்பட்டதுதான் என்று கட்-அண்ட் ரைட்டாக கூறியுள்ளனர் அதிகாரிகள். தேவைப்பட்டால் சிசிடிவி கேமராக்களை வேண்டுமானாலும் செக் செய்து பாருங்கள், நாங்கள் 45 நிமிடங்களுக்கு முன்பே ஏர்போர்ட்டிற்குள் வந்துவிட்டோம். முனைய குழப்பத்தால் தாமதமாகிவிட்டது என்றும் பயணிகள் கெஞ்சியுள்ளனர். பயணிகளே இல்லாவிட்டாலும் எங்கள் பிளைன் பறக்கும் என்று கூறி, கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக பயணிகளிடம் நடந்துகொண்டனராம் ஏர் இந்தியா அதிகாரிகள். இவர்கள் வேலைக்கு உதவமாட்டார்கள் என்று, ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி விமானத்தில் ஏற்ற உதவுமாறு கேட்டுள்ளனர் பயணிகள். ஆனால் காவல்துறையினரோ, எங்களால் விமான இயக்க விவகாரத்தில் தலையிட முடியாது என்று தங்கள் இயலாமையை தெரிவித்துவிட்டனராம். மேலும், "இது முதல்முறை கிடையாது. இதுபோல பலமுறை நடந்துள்ளது. பயணிகள் எங்களிடம் ஓடி வருவார்கள். ஆனால் போலீசாரால் இந்த விவகாரங்களில் தலையிட முடியாது" என்றும் ஏர்போர்ட் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பயணிகளிடம் நிலைமையை எடுத்துக்கூறியுள்ளார்.

 ஆத்திரமடைந்த பயணிகள், கோபத்தில் சாபமிட்டபடியே, வாடகை கார்களிலும், ரயில்களிலும் பெங்களூரை நோக்கி புறப்பட்டனர். சிலர் வேறு விமானத்தில் கிளம்பியுள்ளனர். இதில் மற்றொரு வேதனை என்னவென்றால், எந்த ஒரு பயணிக்கும் விமான கட்டணத்தை திருப்பி தரமுடியாது என்று கூறிவிட்டதாம் ஏர் இந்தியா. ரயிலில் பெங்களூர் நோக்கி பயணித்தபடியே, மதன் ராமகிருஷ்ணன், லாரல் மார்ஷல் ஆகியோர் 'ஒன்இந்தியாவை' தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் மனக்குமுறலை தெரிவித்தனர். இனியாவது திருந்துமா ஏர் இந்தியா?

வாட்ஸ் அப்: புரட்சி...போராட்டம்!


கடந்த சில வாரங்களாக, வாட்ஸ் அப்பில் காட்டுத் தீயாக பரவும் வேண்டுகோள், 'அக்டோபர் 31ஆம் தேதி யாரும் மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த வேண்டாம். அன்றைய தினம் இண்டர்நெட் இணைப்பை துண்டித்து, நமது எதிர்ப்பை மொபைல் போன் சர்வீஸ் அளிக்கும் நிறுவனங்களுக்குத் தெரிவிப்போம். இனி, திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டணத்தை உயர்த்தும் முன்பு யோசிப்பார்கள்!' என்கிறது அந்த வேண்டுகோள்.

இன்றைக்கு மொபைல் போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருள் போல ஆகிவிட்டது. மேலும், மொபைல் போனில் இண்டர்நெட் பார்க்கும் வசதி வந்தவுடன், அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிகையும் ஸ்மார்ட் போன் விற்பனையும் எகிற ஆரம்பித்திருப்பது நாம் அறிந்ததே.

வாட்ஸ் அப்பில் பகிரப்படும் அந்தச் செய்தியில், மொபைல் இண்டர்நெட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு என்ன என்றால், 'ஆரம்பத்தில் 1ஜிபி பயன்படுத்த 68 ரூபாய் கட்டணம். 30 நாட்கள் வரை இந்த சேவையைப் பெறலாம். இப்போது அதே 1ஜிபி பயன்படுத்த 198 ரூபாய் கட்டணம். அதுவும் 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டதா' என்பதுதான் அதில் கேட்கப்படும் கேள்வி.

மொபைல் போன் மூலம் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் பார்ப்பதற்கு அடிமையாகி விட்டோம். இவற்றைப் பார்க்காமல் வாடிக்கையாளர்களால் சும்மா இருக்க முடியாது என நினைத்துதான் செல்போன் நிறுவனங்கள் இப்படி கட்டணத்தை கண்டபடி உயர்த்துகின்றன. அக்டோபர் 31ஆம் தேதி அன்று, இந்தியா முழுவதும் இந்த சேவையைப் பயன்படுத்தாமல், நாம் யார் என்பதைக் காண்பிப்போம் என சவால் விடுகிறது அந்த வேண்டுகோள்.

நாளை அக்டோபர் 31. வாட்ஸ் அப் போராட்டத்தின் பலமும், பலனும் நாளைக்கே தெரியும்!

விளம்பரங்கள் இல்லாத வீடியோ சேவை துவக்குகிறது யூ டியூப்


உலகின் நம்பர் ஒன் வீடியோ இணையதளம் யூ டியூப் என்பது அனைவரும் அறிந்ததே. எப்படி இணையதள தேடல்களுக்கு கூகுள் இணையதளத்தை நாடுகிறார்களோ அதேபோல் வீடியோக்களை பார்க்க யூ டியூப் தான் சரியான இணையதளம் என்கிறார்கள் இணையதளவாசிகள். இதில் வீடியோக்களை பார்ப்பவர்கள் கூறும் ஒரே குறை வீடியோ ஆரம்பிப்பதற்கு முன் அனுமதிக்கப்படும் விளம்பரங்கள் தான்.

இதனை சமாளிக்க யூ டியூப் விளம்பரம் இல்லாத வீடியோ சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதனை பிரீமியம் சேவையாக கட்டணத்தில் வழங்கவும் யூ டியூப் திட்டமிட்டுள்ளது. இதனால் ரசிகர்களை அதிக அளவில் திருப்தி படுத்த முடியும் என்று யூ டியூப் நிர்வாகம் கூறியுள்ளது.

கூகுளின் இணைப்பு சேவையாக உள்ள யூ டியூப் தற்போது உள்ள வாடிக்கையாளர்களை தாண்டி மாதத்திற்கு ஒரு பில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற அளவை எட்ட இதனை செய்ய போவதாக யூ டியூப் தெரிவித்துள்ளது. இந்த சேவை குறைந்த கட்டனத்தில் ஆரம்பிக்க போவதாக கூறியுள்ளது யூ-டியூப். இனி வீடியோக்கள் ஆரம்பிக்கும் போது விளம்பரங்கள் வராது என்றாலும் இதற்கு போய் பணம் கட்டுவதா என்கின்றனர் இணையதளவாசிகள் சிலர்.
 

RTI QUERY...REPLIED BY THE MEDICAL COUNCIL OF INDIA



Wednesday, October 29, 2014

RTI..REPLY FROM ALL INDIA COUNCIL OF TECHNICAL EDUCATION


MOHFW..RTI...Persons possessing minimum qualification of MBBS degree can practice modern medicine of alllopathic medicine


MCI ..Guidelines to State Medical Councils on award of credit hours for attending Conference/ CME Programme/ Workshop


OFFICE MEMORANDUM ..UPLOADING OF RTI REPLIES ON THE RESPECTIVE WEBSITES OF MINISTRY/DEPARTMENT


திருக்குறள் முனுசாமி அவர்களின் உரையிலிருந்து


CLINICAL TRAINING TO PRIVATE PARA MEDICAL INSTITUTIONS..TIE UP WITH GOVERNMENT HOSPITALS..EXTEND THE TIME LIMIT FOR ANOTHER 5 YEARS..TN GOVT. ORDER



வாலி 10



எழுத்துகளை என்றென்றும் இளமை மாறாமல் வைத்திருந்த ‘வாலிபக் கவிஞர்’ வாலியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

• பிறந்தது ஸ்ரீரங்கம். இயற்பெயர் டி.எஸ்.ரெங்கராஜன். சிறு வயதிலேயே நாடகம் எழுதுவார். ‘நேதாஜி’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். அப்போதே இவரது நாடகங்கள் திருச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகின.

• சிறந்த ஓவியர். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓர் ஆண்டு படித்தார். ஓவியர் மாலி போல ஆகவேண்டும் என்பது ஆசை. ரெங்கராஜன், ‘வாலி’யான ரகசியம் இதுதான்.

• சினிமாவுக்கு அழைத்துவந்தவர் டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்குமே வாலியைப் பிடிக்கும். எம்.ஜி.ஆர். இவரை ‘ஆண்டவனே’ என்பார். சிவாஜிக்கோ இவர் ‘வாத்தியார்’. வாலி வீட்டு தோசை - மிளகாய்ப் பொடிக்கு தமிழ்த் திரையுலகில் ரசிகர் பட்டாளமே இருந்தது.

• விருப்ப விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். ஒரு வீரரின் பலம், பலவீனம் பற்றி விரிவாக, நுணுக்கமாக அலசுவார்.

• காதல், காமம், தாய்மை, தாலாட்டு, பக்தி, சோகம், குத்துப்பாட்டு என வாலியின் வரிகள் பயணிக்காத உணர்வுகளே இல்லை. சூழலைச் சொல்லி முடிப்பதற்குள் பல்லவி முடித்து சரணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர். தொடங்கி தனுஷ் வரைக்கும் பாடல் எழுதிய நான்கு தலைமுறை பாடலாசிரியர்.

• வாலியின் தத்துவப் பாடல்களில் கண்ணதாசன் சாயல் இருக்கும். அதுகுறித்து கேட்டால், ‘தங்கத்துடன்தானே ஒப்பிடுகிறார்கள்.. தகரத்துடன் இல்லையே’ என்பார் பெருமையாக.

• தமிழக அரசின் சிறந்த திரைப்படப் பாடலாசிரியர் விருதை 5 முறை பெற்றவர். பத்ம, பாரதி விருது, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர்.

• கோபம் அதிகம். ‘பாரதவிலாஸ்’ படத்தில் ‘இந்திய நாடு என் வீடு’ பாடல் எழுதினார். அந்தப் பாடலுக்கு தேசிய விருது கொடுக்க வாலியிடம் அதிகாரிகள் பயோடேட்டா கேட்டார்கள். ‘‘பாட்டுக்கு தகுதி இருந்தா யாரு.. என்னன்னு விசாரிக்காம தரணும். என்கிட்டயே நான் யார்னு கேட்டு தர்றதா இருந்தா, விருதே வேண்டாம்’’ என்றார் சூடாக!

• 15 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்கள், 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். ‘வடைமாலை’ என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கினார். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை புதுக்கவிதை வடிவில் படைத்தார். சில படங்களிலும் நடித்துள்ளார்.

• பொய் பிடிக்காது. தமிழ்த் திரையுலகில் சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தியவர், கடந்த ஆண்டு காலமானார்.

கவிஞர் : வைரமுத்து அந்தந்த வயதுகளில்....

Image result for vairamuthu images

அந்தந்த வயதுகளில்.

இருபதுகளில்...

எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு...
ஜன்னல்களை திறந்து வை...
படி.. எதையும் படி...
வாத்சாயனம் கூடக் காமம் அல்ல - கல்வி தான் படி...
உன் சட்டைப் பொத்தான் கடிகாரம் 
காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம் 
விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்...
சப்தங்கள் படி
சூழ்ச்சிகள் அறி
பூமியில் நின்று வானத்தைப் பார்... 
வானத்தில் நின்று பூமியைப் பார்...
உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி
காதலை சுகி காதலில் அழு...
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

முப்பதுகளில்....

சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு...
உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்
உட்கார முடியாத ஒருவன் 
உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்... கைப்பற்று...
ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே...
எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி...
வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு...
கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு...
நிலைகொள்.

நாற்பதுகளில்...

இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்
செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி
எதிரிகளை ஒழி..
ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு
பொருள் சேர்
இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு
பகல் தூக்கம் போடு
கவனம்... இன்னொருக் காதல் வரும்.. 
புன்னகை வரைப் போ... புடவை தொடாதே...
இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு...
இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு...

ஐம்பதுகளில்...

வாழ்க்கை - வழுக்கை இரண்டையும் ரசி
கொழுப்பை குறை... முட்டையின் வெண்கரு 
காய்கறி கீரைகொள்
கணக்குப்பார்
நீ மனிதனா என்று வாழ்கையைக் கேள்..

அறுபதுகளில்....

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது... 
இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்...
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு...
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு... இப்போதாவது உண்மை எழுது...

எழுபதுகளில்...

இந்தியாவில் இது உபரி...
சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ
ஜன கண மன..!!!

  • கவிஞர் : வைரமுத்து

இரங்கல் கவிதை!

இரங்கல் கவிதை!

கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !

நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !

சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !

உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !

திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !

படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !

கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !

அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !

பதினெட்டுச்
சித்தர்களுக்கும்
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !

கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும்
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !

இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..

எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.

அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

(கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை)

  • கவிஞர் : கவிஞர் வாலி

Govt nominee out, MKC Nair health varsity vice-chancellor



THIRUVANANTHAPURAM: Governor P Sathasivam has appointed Dr M K C Nair as the new vice-chancellor of Kerala University of Health Sciences by rejecting the government nominee, Dr P C Kesavankutty Nair.

The government had submitted a four-member list to the governor and recommended the name of Kesavankutty Nair, who had served as acting president of Medical Council of India in 2009, for the post.

The other nominees were Dr Rani Nair, wife of Dr Kesavankutty Nair and MCI member; Dr D Dalus, head of general medicine department at the Thiruvananthapuram medical college hospital; and Dr M K C Nair, director, child development centre, SAT Hospital in Thiruvananthapuram.

However, the list ran into a controversy with the governor receiving allegations against three nominees. Following this, he summoned health secretary K Ellangovan and the final decision was kept pending.

Dr Kesavankutty Nair and Dr Rani Nair were alleged to have close links with former MCI president Dr Ketan Desai, who is facing a probe on various corruption charges. Similarly, students of Thiruvananthapuram medical college had levelled allegations against Dr Dalus.

Dr M K C Nair, a paediatrician of repute, will be the second vice-chancellor of the university and he will succeed Dr K Mohandas.

Tuesday, October 28, 2014

Black Money Case: Name All Foreign Bank Account Holders Tomorrow, Says Supreme Court

The Supreme Court, which is monitoring the attempts to recover untaxed or black money stashed abroad, has ordered the government to share by tomorrow the names of all Indians with foreign bank accounts.

"Why are you providing a protective umbrella to foreign bank account holders?" asked the judges. "We can't leave the issue of bringing back black money to government. It will never happen during our time," they added, stating that they will rely more now on a special committee of retired judges and regulators appointed by the Supreme Court to map the recovery of black money.

Both the previous government headed by Dr Manmohan Singh and the new government have argued in court that tax treaties with other countries prohibit the disclosure of names till charges are framed.

Finance Minister Arun Jaitley said the government will respect the court order and it will be upto the judges to determine whether to publicly disclose the list that will be furnished tomorrow. "There are 600 odd names in the list - we will give the list in a sealed cover and I'm sure the court will take appropriate steps to maintain their confidentiality," said Attorney General Mukul Rohatgi.

Yesterday, the government named eight people in the top court who are being prosecuted for allegedly hiding undeclared cash in Swiss and other banks. Critics have accused the government of using tax treaties as a cop-out to shield rich and powerful citizens.

The government today said once it has completed investigations against Indians who hold bank accounts in countries like Germany and Switzerland, it will provide all information to the Supreme Court. "You do not do anything. Just pass on the information of account holders to us and we will pass orders for a further probe," said the frustrated court.

The Supreme Court has been monitoring the investigations into black money since 2009, based on a petition filed by noted lawyer Ram Jethmalani.

கேட்ஜெட் ரிவியூ: லெனோவாவின் ராக்ஸ்டார் 319


கடந்த வாரம் லெனோவா தன்னுடைய புதிய ஸ்மார்ட் ஃபோனான ராக்ஸ்டார் 319-ஐ அறிமுகப்படுத்தியது.இந்த ஸ்மார்ட் போனில் டிஜிட்டல் Dolby வசதி நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் தெளிய துல்லியமான இசையை கேட்க முடியும்.இதில் நிறுவப்பட்டுள்ள Guevara என்னும் அப்ளிகேஷன் மூலம் 10 மில்லியன் பாடல்களை கேட்க முடியும்.
 
இதன் தொடுதிரை 4 அங்குல அகலத்தில் WVGA  டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசரில் இயங்குகிறது. இது  கூகுள் ஆண்ட்ராய்ட் 4.4
கிட்கேடின் இயங்குதளத்தில் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த ஆட்டோ ஃபோகஸ் கொண்ட 5 மெகாபிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறம் உள்ளது. முன்புறமாக,
2 மெகாபிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. 3ஜி வசதியை கொண்டுள்ளது. 1500mAh பேட்டரி திறனுடையது. லெனோவாவின் Doit ,SHAREit, SYNCit மற்றும் SecureIT பயன்பாடுகளை கொண்டுள்ளது.
 
512 எம்.பி ரேம் மெமரியும், 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரியும் கொண்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்டின் மூலம் 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் ஃபோனின் தடிமன் 10.2 மிமீ மற்றும் எடை 130 கிராம்.
 
3.5 மி.மீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. இதர ஃபோன்களில் உள்ளது போலவே வை பை, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். பிளாக், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் வெளி வருகிறது. இசை பிரியர்களுக்கு ஏற்ற புதிய மாடல் லெனோவாவின் ராக்ஸ்டார் 319 என்று கூறப்படுகிறது.
 
ஆனால் இணையதள ரசிகர்கள் இந்த போனை விலைகுறைந்த போன் தான் என்றாலும், இதன் சிறப்பம்சங்கள் சாதாரண ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளையே கொண்டுள்லது. புதுமைகள் அவ்வளவாக இல்லை என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள். ஆனால் லெனோவா கணினி மற்றும் செல்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனம் என்பதால் தரத்தில் நம்பிக்கை வைத்து வாங்கலாம். மற்ற சீன, கொரிய போன்களை போன்றது அல்ல என்கின்றனர் சிலர்.
 
இப்படி பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களை ஒரு சேர பெற்றுள்ள இந்த ஸ்ம்,ஆர்ட்போனின் விலை 6499 ரூபாயாக விற்பனைக்கு வருகிறது.

-கோ.க.தினேஷ்(மாணவ பத்திரிக்கையாளர்)

பிளஸ்2 பயிலாமல் பட்டயப் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க உத்தரவு

நீங்கள் 'வொர்க்கஹாலிக்' நபரா?



யாராவது ஒரு நபர் அதிகமாக ஷாப்பிங் செய்தால் அவரை ''ஷாப்போஹாலிக்'' என்கின்றனர். அதேபோல்தான் அதிக நேரம் பணிபுரிபவரை ''வொர்க்கஹாலிக்'' என்று கூறுகின்றனர். இவர்கள் யார்? எப்படி பட்டவர்கள்? இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? இவர்களை எப்படி அடையாளம் காணுவது என்று பார்ப்போம்.
 
யார் 'வொர்க்கஹாலிக்' ?
 
அதிக நேரம் பணிபுரிபவர் என்ற அடிப்படையில் இவர்களை கருதும் போது தன் வேலையை முடிக்க இயலாமல் அதிக நேரம் வேலைபார்ப்பவர்களை வொர்க்கஹாலிக் என்று கூற முடியாது. வேலை முடிந்த பிறகும் அதிக நேரம் வேறு வேலைகளையோ அல்லது மற்றவர் வேலைகளையோ தானாக முன்வந்து வாங்கி செய்பவர்கள் தான் வொர்க்கஹாலிக் மனிதர்கள்.
 
இவர்கள் எப்படி பட்டவர்கள்?
 
1.காலையில் முதல் ஆளாக வேலைக்கு வந்துவிட்டு கடைசி ஆளாக வேலையை விட்டு செல்லும் பழக்கம்கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த நேரத்திலும் அலுவலகத்தில் இவர்களை பார்க்க முடியும். 
 
2. இவர்களுக்கு வேலை இல்லாத நாட்களில் மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். என்ன வேலை செய்யலாம் என்று யோசித்து கொண்டே இருப்பார்கள்.
 
3. இவர்களுக்கு வார விடுமுறை அல்லது மற்ற விடுமுறை தினங்கள் என்பது பெயருக்கு தான். எங்கு இருந்தாலும் அவர்களது வேலை நிர்வாகத்தில் பிரதிபலிக்கும் வேலைகளில் ஈடுபட்டு கொண்டு தான் இருப்பார்கள்
 
4.இவர்களை குறுகிய இலக்குகளை அடைய செய்து திருப்தி படுத்த முடியாது. எப்போதும் இலக்குகளை மட்டுமே யோசிப்பார்கள். 
5.இவர்களின் வேலைக்கான முன்னுரிமைகளில் பர்சனல் வேலைகள் இடம் பிடிக்காது.
 
6. நிர்வாகத்தில் பாஸ் சொல்லும் எந்த வேலைக்கும் இவர்களிடம் இருந்து முடியாது என்ற பதில் வராது. 
 
7.உடல்நலக்குறைவாக இருந்தாலும் வேலைக்கு வருவதில் இருந்து தவறமாட்டார்கள். இவர்களது பொழுதுபொக்குகள் கூட வேலை சார்ந்ததாகவே இருக்கும். 
 
8.இவர்களிடமிருந்து வாங்க கூடிய வேலைகள் என்பது சராசரி விகிதத்தை விட அதிகமாக இருக்கும்.
 
9.குறுகிய காலத்தில் முடிக்கப்பட வேண்டிய வேலைகள் இவர்கள் பெயரில் இடம்பெறுவது வழக்கமான விஷயமாக இருக்கும்.
 
10.இவர்கள் எளிமையாக பழக கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் உங்களிடமிருந்து ஏதாவது ஒரு விஷயத்தை கற்று கொள்ளும் நபராக இருப்பது தான் அந்த தன்மைக்கு காரணம்.
 
ஏன் இப்படி செய்கிறார்கள்? 
 
இவர்கள் பார்க்கும் வேலையை இவர்கள் வேலையாக பார்க்காததே முதல் காரணம்.இவர்களை பொறுத்த வரையில் வேலை என்பது இவர்களுக்கு விரும்பி செய்யும் பழக்கவழக்கமாக இருப்பது தான் காரணம். பிடித்த துறையில் வேலை கிடைத்திருப்பவர்கள் மட்டுமே வொர்க்கஹாலிக்காக இருக்க முடியும்.அப்படி வேலை கிடைத்தால் வொர்க்கஹாலிக் நபர்களின் வேலை சராசரியை காட்டிலும் அதிகமாக இருக்கும்.
 
இது சரியா?
 
சில சமயங்களில் ஒரு மனிதனின் சுய முன்னேற்றத்திற்கு வொர்க்கஹாலிக் தேவையான விஷயமாக இருக்கிறது. ஒருவர் தன் தகுதிகளை வளர்த்து கொள்ளவும், போட்டி உலகில் தன்னை போட்டிகளில் இருந்து விலக்கி தனி இடத்தை அமைத்து கொள்ளவும் உதவும் விதமாக இருக்கும். அதேசமயம் இது அதிகமாகும் போது குடும்ப சூழலில் சிக்கல் வர வாய்ப்புள்ளது. திருமணமாகாத இளைஞர்கள் வொர்க்கஹாலிக் பழக்கத்தை மேற்கொண்டால் அவர்களது அனாவசிய நேரங்களை வீணடிக்காமல் இருக்க பயன்படும் கருவியாக இது இருக்கும். அதேசமயம் குடும்ப சூழலில் இருப்பவர்கள் இதனை ஓரளவுக்கு பேலன்ஸ்டாக கவனித்து வந்தால் நல்லது.
 
அது சரி இதனை படித்த பின்பு உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர் இது போன்றோ இருந்தால் நிச்சயம் அந்த நபர் வொர்க்கஹாலிக் நபர் என்பதை உறுதி செய்யுங்கள். 
 
ச.ஸ்ரீராம்

NEWS TODAY 17 AND 18.04.2024