Showing posts with label neet 2019. Show all posts
Showing posts with label neet 2019. Show all posts

Saturday, November 27, 2021

'நீட்' கலந்தாய்வு தாமதத்துக்கு கண்டனம் டாக்டர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்


'நீட்' கலந்தாய்வு தாமதத்துக்கு கண்டனம் டாக்டர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

Added : நவ 26, 2021 22:17

புதுடில்லி:முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு பெறுவதற்கான வரு வாய் உச்ச வரம்பு, ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'எந்த அடிப்படையில் இந்த உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த், விக்ரம் நாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:வருவாய் உச்ச வரம்பு நிர்ணயம் தொடர்பாக மறு ஆய்வு செய்ய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பதிலளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதுவரை முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரிக்கு ஒத்தி வைத்தனர்.

இது டாக்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு மற்றும் சேர்க்கை நடைமுறைகளை விரைவாக நடத்தி முடிக்கும்படி மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்திடம், இந்திய டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.

இது குறித்து இந்திய டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா தொற்று பரவல் துவங்கியதில் இருந்து டாக்டர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகி உள்ளனர். இது அவர்களை உடல் மற்றும் மன அளவில் ஏற்கனவே சோர்வுஅடைய செய்து உள்ளது.முதுநிலை மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற எம்.பி.பி.எஸ்., டாக்டர்கள், உயர் படிப்பில் சேர காத்திருக்கின்றனர்.

உச்ச நீதிமன்ற விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும்.இதற்கு தீர்வு கிடைக்கும் வரை நாடு முழுதும் உள்ள புற நோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள், இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, October 3, 2019

நீட் தேர்வு முறைகேட்டில் சிக்கிய மாணவர் இர்பானின் தந்தை போலி மருத்துவர்: சிபிசிஐடி விசாரணையில் தகவல்; மேலும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்குகிறார்கள்

தேனி/தருமபுரி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி போலி மருத் துவர் என தெரியவந்துள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண் டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த சிபிசிஐடி விசாரணையில் உதித் சூர்யாவுடன், பிரவீன், ராகுல் ஆகியோரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் கள் அனைவரும் அவர்களது தந்தையருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, தமிழகம் முழுக்க உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டில் பயிலும் மாணவர் களின் சான்றிதழ் உள்ளிட்ட ஆவ ணங்களை சரிபார்க்கும் பணி நடந்தது. இதில், தருமபுரி மருத்து வக் கல்லூரி முதலாமாண்டு மாண வர் முகமது இர்பான் மீது சிபிசிஐடி போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட் டது. அவரது தந்தையான வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது ஷபியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், இர்பான் கடந்த 1-ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரண டைந்தார்.

முகமது ஷபியிடம் தேனி சிபிசிஐடி போலீஸார் 3 நாட்களாக விசாரணை நடத்தினர். இதில் முக மது ஷபி கர்நாடகாவில் உள்ள விஜய்புரி என்ற ஊரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சில ஆண்டுகள் மட்டுமே படித்துள் ளார். படிப்பைப் பாதியிலே நிறுத்தி விட்டு ஊர் திரும்பிய இவர், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் பிற டாக்டர்களை வைத்து கிளினிக் நடத்தி வந்துள்ளார். பின்னர் இவரே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளார்.

முதற்கட்ட விசாரணை முடி வடைந்த நிலையில் நேற்று தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முகமது ஷபி ஆஜர்படுத்தப்பட் டார். நீதிபதி பன்னீர்செல்வம் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், முகமது ஷபி வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் வேலூர் மாவட் டம் திருப்பத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் அழைத்து வந்து விசாரித்தனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுந ராக பணிபுரியும் அவர், "நீட் தேர்வு ஆள்மாறாட்டத்துக்கு உதவிய தர கர்கள் ரஷீத், வேதாசலத்தை நான் யாருக்கும் அறிமுகப்படுத்த வில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூரில் உள்ள ஜெயராமன் என்பவரிடம் தரகர் குறித்த தகவல்களைத் தெரிவித் தேன்" என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் கோவிந்தராஜ் நேற்று விடுவிக்கப்பட்டார். விசாரணையில் ஜெயராமன் ஓய்வு பெற்ற மருத் துவ அலுவலர் என்பது தெரியவந்து உள்ளது. அவரை பிடிப்பதற்கான முயற்சியில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

2 விதங்களில் நடந்த தவறு

இதுகுறித்து சிபிசிஐடி போலீ ஸார் கூறியதாவது: கர்நாடகாவைச் சேர்ந்த தரகர் ரஷீத் என்பவர்தான் இதில் முக்கிய குற்றவாளி. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் 2 விதங்களில் நடந்துள்ளது. ஒருவருக்குப் பதி லாக இன்னொருவர் நீட் தேர்வை எழுதுவது அல்லது உண்மையான மாணவரும், போலியான நபரும் ஒரே பெயரில் எழுதி அதில் அதிக மதிப்பெண் அடிப்படையில் கல் லூரியில் சேர்வது என்று இந்தத் தவறுகள் நடந்துள்ளன.

மாணவர்களை நேரில் வர வழைத்து அவர்கள் முன்னிலையில் கல்வி, நீட் தேர்வு சான்றிதழ்களை மீண்டும் சரிபார்க்க மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். இதனால், 20-க் கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்க லாம். இவ்வாறு சிபிசிஐடி போலீஸார் கூறினர்.

இதற்கிடையே மாணவர் இர்பான் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

NEWS TODAY 22.04.2024