Sunday, November 30, 2014

அடை மழையே! அடை மழையே! உன் மடையை உடனே அடை மழையே!

மாண்புமிகு மழையே

மாண்புமிகு மழையே! உனக்கொரு 
மடல்! நீ 
எவ்வளவு பெய்தாலும் 
ஏற்க வல்லது 
கடல்கொண்ட 
குடல்; 
ஏற்க 
ஏலாதது 
குடல் கொண்ட 
உடல்! 

நீ பெய்யலாம் 
நூறு அங்குலம்; அன்னணம் 
பெய்தால் என்னணம் 
பிழைக்கும் எங்குலம்? 

அடை மழையே! 
அடை மழையே! உன் 
மடையை உடனே 
அடை மழையே! 

கொடுப்பதும் மழை; 
கெடுப்பதும் மழை; 
இது 
இரண்டாயிரம் ஆண்டுகள் முன் 
தாடி வைத்த தமிழ் 
பாடி வைத்த தமிழ்! 

அளவோடு பெய்தால் 
உன்பேர் மழை; 
அளவின்றிப் பெய்தால் 
உன்பேர் பிழை! 

தாகம் _ 
தணிய.... 
உன்னைக் குடித்தோம் என்றா 
எங்கள் 
உயிரை நீ குடிக்கிறாய்? 
மழைக்கே தாகமா? _ எமனுக்கு 
மற்றொரு பெயர் மேகமா? 

சவத்தைக் குளிப்பாட்டினால் அது 
சடங்கு; நீ 
குளிப்பாட்டியதால் நிரம்புகிறதே சவக் 
கிடங்கு! 
நீரின்றி 
நிற்காது உலகு; எங்கும் 
நீராகவே இருந்தாலும் 
நிற்காது உலகு! 

பூகம்பம்; 
புகைவண்டி; 
புயல் வெள்ளம்; 

என 
ஏனிப்படி... 

குஜராத்தைக் 
குறி வைத்து 
இடையறாது தாக்குகிறது 
இயற்கை? உன்னொத்த 
இயற்கையைத் தண்டிக்காது 
இருப்பதேன் இறைக்கை? 

விண்ணிலிருந்து
வருவது தண்ணீர்; 
கண்ணிலிருந்து 
வருவது கண்ணீர்; 
எனினும் 
எஞ்ஞான்றும்
தண்ணீரைப் பொறுத்தே 
கண்ணீர்! 

தெய்வம் 
தொழாது 
கொழுநன் 
தொழுவாளைப் போலே... 
மழையே! 
மாந்தர் 
பெய் எனும்போது 
பெய்; உனது 
பெயரை என்றும் 
பெயராமல் வை! 

ஊக்குவிக்க ஆளிருந்தால்

ஊக்குவிக்க ஆளிருந்தால்


ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!

கவிஞர் : கவிஞர் வாலி

  • கவிஞர் : கவிஞர் வாலி


என் அம்மாவிற்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து

எத்தனை சொந்தம் என் வாழ்வில் 
வந்தாலும் அம்மா 
உன் ஒற்றை பார்வையின் பந்தம் 
எதுவும் தந்ததில்லை 

உன் கண்ணீரை எல்லாம் சிரிப்பில் 
மறைத்தாய் அம்மா 
இத்தனைநாளும் அது எனக்கு 
விளங்கியதில்லை 


நான் வளரும் ஒவ்வொரு நொடியும் 
உனக்கு பாரம் தான் 
தெரிந்தும் சுமக்கிறாய் 
பத்து மாதம் வரை அல்ல 
உன் ஆயுள் காலம் வரை 


உன் காலம் நரைக்கும் நேரத்தில்
என் நேரம் உனக்காய் 
இருக்க போவதில்லை 
தெரிந்தும் 
காக்கிறாய் உன் 
இமைக்குள் வைத்து என்னை 
கடமைக்காக அல்ல 
கடனுக்காக அல்ல 
கடவுளாக 

உன் வாழ்வின் ஒரு பாதி 
உன் பெற்றோருக்காய் 
மறு பாதி உன் பிள்ளைகளுக்காய் 
மனதார பகிர்ந்தளித்து விட்டாய் 
என்றாவது உனக்காய் வாழும் 
உத்தேசம் உண்டா 

உன் அன்னைக்கு என்ன கைமாறு 
செய்தாலும் உன்னை எனக்கு 
தந்ததிற்கு ஈடாய் 
ஒன்றும் செய்ய இல்லாமல் 
முடமாய் நிற்கிறேன் 


ஏழு ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை 

இனி ஒரு ஜென்மம் 
இருந்து உயிரினமாய் பிறந்தால் 
உன்னை எந்தன் மகளாக்கும் பாக்கியம் 
மட்டும் போதும் 

ஒரே ஒரு வேண்டுகோள் உன்னிடம் 
இன்று மட்டுமாவது 
உனக்காய் வாழ முயற்சி செய் 


என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பொங்கலுக்குள் பொங்கும் கத்திப்பாரா


பொங்கலுக்குள் பொங்கும்
கத்திப்பாரா
பேருந்து நிலையம்

பொதுவாக ஒரு பகுதியில் பஸ்க்காக மக்கள் கூட்டம் அலைமோதும் ஆனா அங்கே இருக்காது பேருந்து நிழற்குடை, ஆனால் ஆளே இல்லாத இடங்களில் நிழற்குடை அமைச்சிருப்பாங்க. இது தான் சென்னை மாநகராட்சியோட சிறந்த பணி. அதே போல் தான் இந்த கிண்டி கத்திப்பாரா பேருந்து நிறுத்தம். இது பரங்கிமலை கண்டோன்மென்ட் கீழ் உள்ளது.

இதன் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகரப்பேருந்துகளும், 1,100க்கும் மேற்பட்ட வெளியூர் பேருந்துகளும் சென்று வருகின்றது. தினமும் இந்த பேருந்து நிறுத்தத்தை ஏராளமான பயணிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பதுதான் மக்களின் கவலையாக இருந்தது. தற்போது பல்வெறு கோரிக்கைகளுக்கு பிறகு இங்கு ரூ 1.25கோடி செலவில் ஏசியுடன் கூடிய நவீன பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டுது. இந்த நிழற்குடை ஜனவரியில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்;
“நம்ம ஊர்ல ஏ.சி. பேருந்து நிழற்குடை வருவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. நீண்டகோரிக்கைக்கு பிறகு டெல்லி, பாம்பே போன்ற ஊர்களில் இருக்கமாறி வரப்போகுது. கால்கடுக்க நின்னு பஸ் ஏற வேண்டாம். பெண்கள், முதியவர்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். ஆனாலும் இந்த பேருந்து நிறுத்தத்தை முறையாக பராமரிக்க வேண்டும். எப்ப திறப்பாங்கன்னு ஆவலாக இருக்கு“என்றனர்.
அதிகாரி ஒருவர் கூறுகையில்�;
என்னென்ன வசதிகள் இருக்கு!
?
360 சதுர அடி பரப்பில் 3 ஏசி காத்திருப்பு அறைகள்.
?
ஓரு அறையில் 32 இருக்கைகள், 42 பேர் நிற்கும் வசதி.
?
குளிர்ந்த குடிநீர், டி.வி, மியூசிக், ஆடியோ மியூசிக்
?
ஆண், பெண் தனிக்கழிப்பறை.
?
காத்திருப்பு அறையின் வெளியே ஏ.டி.எம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
கத்திப்பாரா பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்கும் பணி விறு, விறுப்பாக நடக்கிறது. ரூ.1.25 கோடி செலவில் கழிப்பறை வசதியுடன் 3 ஏசி காத்திருப்பு அறைகள் கட்டப்படுகிறது. பரங்கிமலை, கண்டோன்மென்ட்டின் முறையான அனுமதி பெற்று தனியார் நிறுவனம் கட்டிடங்களை கட்டுகின்றனர்.
இதற்கு முன் தனியார் வங்கி உதவியுடன் கும்பகோணத்தில் 10க்கும் மேற்பட்ட ஏ.சி பேருந்து நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக கிண்டி, கத்திப்பாரா தான். ஜனவரியில் பேருந்து நிறுத்தம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

வெளிநாட்டு ஊழியருக்கு வசதியான தங்குமிடம்


சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் எப்போதுமே அணுக்க தொடர்பு உண்டு. சிங்கப்பூர் 1965ல் சுதந்திரம் அடைந்ததும் குடி நுழைவுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. பிறகு தொழில்துறையில் நாடு வளர்ந்தபோது, ஊழியர்கள் அதிகம் தேவைப்பட்டதால் வெளிநாட்டினருக்குச் சிங்கப்பூர் கதவுகளை அகலத் திறந்துவிட்டது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களைப் பொறுத்த வரை வெளிநாட்டு ஊழியர்கள், வெளிநாட்டு வல்லுநர் கள் என்று இரண்டு வகை உண்டு. பாதி தேர்ச்சி பெற்ற, அறவே தேர்ச்சி இல்லாத வெளிநாட்டு ஊழியர் கள் ஒரு வகை. தயாரிப்புத் துறை, கட்டுமானம், சேவைத் துறை போன்றவற்றில் இவர்கள் பணியாற்று கிறார்கள்.

இந்தியா, சீனா, பங்ளாதேஷ், பாகிஸ்தான், மியன்மார், இலங்கை, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இவர்கள் வருகிறார்கள். வெளிநாட்டு வல்லுநர் கள் என்பவர்கள் மெத்த படித்தவர்கள். திறமைசாலிகள், நிபுணத்துவர்கள். இவர்கள் சிங்கப்பூர் பொருளியலில் உயர்மட்ட பணிகளில் பணியாற்றுகிறார்கள்.

இந்த ஆண்டு ஜூன் நிலவரப்படி சிங்கப்பூரில் மொத்த வெளிநாட்டு ஊழியர்கள் 1,336,700 பேர். இவர் களில் ‘எம்ப்ளாய்மெண்ட் பாஸ்’ வைத்திருப்போர் 176,600. ‘எஸ் -பாஸ்’இல் வேலை பார்ப்போர் 164,700 பேர். ‘ஒர்க் பர்-மிட்’ ஊழியர்கள் மொத்தம் 980,800 பேர். இல்லப் பணிப் பெண்கள் 218,300. ‘ஒர்க் பர்மிட்’ அனுமதியுடன் கட்டுமானத்துறையில் 321,200 பேர் வேலை பார்க்கிறார்கள். இதர ‘ஒர்க் பாஸ்’ அனுமதி பெற்றவர்கள் 14,700.

உலகின் பல நாடுகளில் வெளிநாட்டு ஊழியர்களுக் குக் கிடைக்கும் வசதிகளை, ஊதியத்தை, இதர சலுகை களைப் பார்க்கையில் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரு வோர் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள் என்பது தான் உண்மை. ஆனாலும் இங்கும் வெளிநாட்டு ஊழி யர்கள், குறிப்பாக கட்டுமான, கப்பல்துறை ஊழியர்கள் தங்குமிடம் தொடர்பான புகார்கள் எழுந்ததுண்டு.

இத்தகைய ஊழியர்களை ஏமாற்றும் சில முதலாளி களும் தங்கள் உரிமைகளைப் புரிந்துகொள்ளாமல் இத் தகைய வெளிநாட்டு ஊழியர்கள் இருட்டிலேயே இருந்து வருவதும் இதற்கான காரணங்களாகத் தெரியவந்து உள்ளன. ஏமாற்று முதலாளிகளைத் தண்டித்து அவர்களைத் தவிர்ப்பது, ஊழியர்களுக்கு முறையான தங்கு மிட, பொழுதுபோக்கு வசதிகள் கிடைப்பது ஆகிய அவசியத்தை உணர்ந்து அரசாங்கம் இப்போது முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது.

INDIA ANNOUNCES E VISAS FOR 43 COUNTRIES- BUT UK NOT INCLUDED

India launched electronic visa (e-visa) facility for tourists from 43 countries on Thursday to boost tourism sector and offer hassle-free travel to foreign visitors.
In a move which will give a major boost to the tourism sector, the Government on Thursday launched the much-awaited electronic visa facility for visitors from 43 countries including US, Germany and Israel. "We want to promote tourism in the country in a big way. The contribution of tourism in the GDP is approximately 7 per cent and we want to double it up," Home Minister Rajnath Singh said after launching the e-visa facility.

 Now, a visitor from these countries will just have to apply for an e-visa on the designated website and pay the fee online to get an electronic travel authorisation (ETA) within 72 hours. Russia, Ukraine, Brazil, UAE, Jordan, Kenya, Fiji, Finland, Australia, South Korea, Singapore, Mauritius, Mexico, Norway, Oman and Philippines are among the countries which have got the e-visa facility in the first phase. 

"Currently we have included 43 countries in the first phase. Barring those who are 'high-risk' countries, we will extend this facility to almost every country in the world phase-wise," Singh said. E-visa will be valid for 30 days and a tourist can avail the facility twice a year. He said earlier the visa-on-arrival facility was available for a few countries. "But this manual system was causing delay so now we have introduced the IT-based system for faster result," he said. Congratulating all those involved in the launching of e-visa system, Tourism Minister Mahesh Sharma said, "This is a historic day for tourism sector. The facility has opened the country to a vast world." Raising the issue of safety of tourists, Sharma asked the Home Minister to provide fool-proof security to them. In response to the Tourism Minister's concern, Singh assured safety and security for all tourists particularly foreigners who come to India. "We are formulating a legal framework for this. We will ensure safety and security for all tourists," he said 

With the launch, the e-visa facility has become operational at nine international airports - Delhi, Mumbai, Chennai, Kolkata, Hyderabad, Bengaluru, Kochi, Thiruvananthapuram and Goa. Tourism Secretary Lalit Panwar described the launching of e-visa as "red letter day" in tourism history. It is going to change the tourism scenario soon," he said. Highlighting the importance of the scheme, Indian Association of Tour Operators President Subhas Goyal said, "We have been demanding this facility for long. The launching of e-visa system for so many countries would boost the industry and we hope foreign tourist arrivals will reach seven million mark this year." 

The visa would allow travel to India for a short stay of 30 days. The countries that can avail of the TVOA facility are Australia, Brazil, Cambodia, Cook Islands, Djibouti, Federated States of Micronesia, Fiji, Finland, Germany, Indonesia, Israel, Japan, Jordan, Kenya, Kingdom of Tongo, Laos, Luxembourg, Mauritius, Mexico, Myanmar, New Zealand, Niue, Norway, Oman, Palestine, Papua & New Guinea, Philippines, Republic of Kiribati, Republic of Korea (i.e. South Korea), Republic of Marshall Islands, Republic of Nauru, Republic of Palau, Russia, Samoa, Singapore, Solomon Islands, Thailand, Tuvalu, UAE, Ukraine, USA, Vietnam and Vanuatu.


வித்தியாசப்படுத்தினால் வெற்றி


சீனர்கள் பெரும்பாலும் அசப்பில் ஒருவர் போலவே அனைவரும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சீனர்கள் யாரையாவது தேடிக் கண்டு பிடிக்க நேர்ந்தால் தொலைந்தோம். தேடித் தேடி நமக்கும் மூக்கு சின்னதாகிவிடும்.

சீனர்களை விடுங்கள். திருப்பதியில் மொட்டையடித்த பக்தகோடிகள் அனைவரும் ஒன்று போல் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். அங்கு மொட்டையடித்த குறிப்பிட்ட நபரைத் தேட நேர்ந்தால் தேடித் தேடி நாமும் மொட்டையாக வேண்டியதுதான்.

இதே கதைதான் மார்க்கெட்டில், மார்க்கெட்டிங்கில், மார்க்கெட்டர்களிடம். விற்கும் பிராண்டை வித்தியாசப்படுத்தாமல் பலர் விற்கிறார்கள். இதனால் பிராண்டுகள் கூட்டத்தோடு கூட்டமாக திருப்பதி மொட்டையடித்த க்ரூப் போல் தெரிகிறது. வித்தியாசப்படுத்தாமல் விற்றால் வாடிக்கையாளருக்கு பிராண்ட் எப்படி தனியாய், தனித்துவமாய் தெரியும்? எல்லா பிராண்டுகளும் சீனர்கள் முகம் போல்தான் இருக்கும். விற்க முடியாமல் விக்க வேண்டியதுதான். திருப்பதி போகாமலேயே மொட்டை தான்!

வித்தியாசமில்லையெனில் தோல்வி நிச்சயம்

வித்தியாசப்படுத்தி விற்காத எந்த பிராண்டும் விற்காது என்கிறார்கள் ‘ஜாக் ட்ரவுட்’ மற்றும் ‘ஸ்டீவ் ரிவ்கின்’. பல காலமாக மார்க்கெட்டர்களிடம் வித்தியாசப்படுத்தி விற்பதன் அவசியத்தை சொல்லி வந்தார் ட்ரவுட். யாரும் கேட்பதாய் இல்லை. பார்த்தார் மனிதர். `வித்தியாசப்படுத்து அல்லது செத்து ஒழி’ (Differentiate or die) என்று தன் புத்தகத்திற்கு தலைப்பாகவே வைத்துவிட்டார். இதைவிட செருப்பால் அடித்தது போல் ஒரு தகவலை யாரும் சொல்லமுடியாது. இருந்தும் எத்தனை பேருக்கு உறைக்கிறது? எத்தனை பேருக்கு பிசனஸ் சூட்சமம் புரிகிறது?

பிசினஸ் செய்வோம், விற்கும் பொருளுக்கு ஒரு பெயர் வைப்போம், நன்றாய் உழைப்போம், விளம்பரம் செய்வோம், கோடிக்கணக்கில் சம்பாதிப்போம், குடும்பத்தோடு செட்டில் ஆவோம். இதுவே பிசினஸ் செய்யும் முறை என்று பலர் நினைக்கிறார்கள்.

எத்தனை உழைத்தாலும், வித்தியாசப்படுத்தாமல் விற்றால் எந்த பொருளும் பிராண்ட் என்னும் அந்தஸ்தைப் பெறாது. பிறகு எங்கிருந்து விற்பது, சம்பாதிப்பது, செட்டில் ஆவது? அதன் பின் எத்தனை உழைத்தாலும் சல்லிக் காசுக்கு பிரயோஜனமில்லை.

பெயர்கள் பல,பொருள் ஒன்று

‘சிப்பி’, ‘உதயா’, ‘கோல்டன் ஃப்ளேம்’, ‘லவ்லி’, ‘டியர்’. இவை வத்திப்பெட்டி பிராண்ட்ஸ். இதில் ஒன்றையாவது கடையில் பெயர் சொல்லி கேட்டு வாங்கியதுண்டா? இவை வத்திப்பெட்டி பிராண்டுகள் என்று நான் சொல்லித்தான் உங்களுக்கே தெரிந்திருக்கும். எங்கிருந்து கேட்டு வாங்குவீர்கள்?

கடைக்கு சென்று ’வத்திப்பெட்டி கொடுப்பா’ என்று பொதுவாய் கேட்டு பார்க்காமலே வாங்குகிறோம். அதனாலேயே வத்திப்பெட்டி விற்ப வர்கள் கடைக்காரர் தயவில் தான் தொழில் செய்ய முடிகிறது. கடைக்காரர் சொல் கேட்டு ஆடும் நிலை தான் இந்த பிராண்டுகளுக்கு. பின் எதை வைத்து இதை பிராண்டுகள் என்று அழைப்பது? வித்தியாசப்படுத்தாமல் விற்பதால் விளையும் விபரீதம் இது.

ஆனால் ‘ஹோம் லைட்ஸ்’ வத்திப்பெட்டியை கேட்டு வாங்குகிறோம். ஏன்? படா சைஸாய் பற்ற வைக்க ஏதுவாக இருப்பதால். பெரிய குச்சிகளாய் விளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற சௌகரியமாக இருப்பதால். அட்டையில் ரேடியம் ஒட்டப்பட்டு இரவிலும் பளிச்சென்று தெரிவதால். மற்ற வத்திப்பெட்டிகள் ஒரு ரூபாய்க்கு சல்லிசாய் கிடைக்க அதை விட்டு ‘ஹோம் லைட்ஸ்’ கொடுப்பா என்று அதிக விலை கொடுத்து கேட்டு வாங்குகிறோம். வித்தியாசப்படுத்தியதால் விளைந்த வெற்றி இது.

இதே போல் பல டீவி சேனல்கள் இருந்தாலும் சில சேனல்களை மட்டும் தேடிப் பார்க்கிறோம். சீரியல்கள் என்றால் ‘சன்’. போட்டி நிகழ்ச்சிகள் என்றால் ‘விஜய்’. காமெடி என்றால் ‘சிரிப்பொலி’. நியூஸ் என்றால் ‘புதிய தலைமுறை’. இந்த சேனல்கள் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதால் இவைகளைத் தேடி பார்க்கிறோம்.

ஜவுளிக் கடைகளில் வித்தியாசமில்லை

‘போத்தீஸ்’, ‘கல்யாண் சில்க்ஸ்’, ‘ஸ்ரீகிருஷ்ணா’ இதோடு உங்கள் ஊரிலுள்ள பெரிய ஜவுளிக் கடைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த கடைகளுக்குள் என்ன வித்தியாசம்? ஒவ்வொரு கடையும் தங்களை எப்படி வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது? ஒரு கடை மற்றதை விட எப்படி மாறுபடுகிறது?

ஒரு வித்தியாசமும் கிடையாது. இந்த பிராண்டுகள் தங்களை வித்தியா சப்படுத்திக் காட்டவே இல்லை. யோசித்துப் பாருங்கள். ‘போத்தீஸ்’ என்றால் என்ன தோன்றுகிறது? ‘கல்யாண் சில்க்ஸ்’ என்றால்? தனியாய், தனித்துவமாய் இன்ன பிராண்டுகளுக்கு இன்ன வித்தியாசமான அம்சம் என்று ஏதாவது தோன்றுகிறதா? இல்லையே. இருந்தும் எப்படி இந்த பிராண்டுகள் சக்கை போடு போடுகின்றன? எவ்வாறு மார்க்கெட்டில் கொடி கட்டிப் பறக்கின்றன?

ஜவுளிக் கடை வரிசையில் ஒரு கடையும் வித்தியாசப்படுத்திக் காட்டாததால் எல்லா கடைகளும் ஒன்றுதான் என்றாகிவிட்டது வாடிக்கை யாளர்களுக்கு. அதனால் எந்த கடை அதிகமாக விளம்பரக் கூப்பாடு போடுகிறதோ அந்த கடைக்கு கூட்டம் கூடுகிறது. இதனாலேயே பெரிய ஜவுளிக் கடைகள் புலி வாலைப் பிடித்த கதையாக விளம்பரத்திற்கு கோடி கோடியாக செலவழிக்க வேண்டிய தலையெழுத்து. தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டாததால் விளைந்த வினை இது.

நகைக் கடைகளிலும் இதே நிலை

இதே கதைதான் நகைக் கடைகளிலும். ‘ஜாய்’, ‘ஜோஸ்’, ‘பீமா’, ‘மலபார்’ என்று ஏகத்துக்கும் பிராண்டுகள் இருந்தாலும் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டத் தவறிவிட்டன. பத்தோடு பதினொன்று அத்தோடு நான் ஒன்று என்று இவை சொல்லாமல் சொல்வதால் எக்கச் சக்கமாக செலவழித்தால்தான் வாடிக்கையாளரை கடைக்குள் இழுக்க முடியும் என்கிற நிலை இந்த பிராண்டுகளுக்கு.

இந்த பிராண்டுகள் எல்லாம் பரவாயில்லை. பணம் இருக்கிறது. செலவழித்து கொட்ட முடிகிறது. சின்ன வியாபாரி என்ன செய்வார்? சின்ன பிசினஸ் என்ன செய்யும்? வெற்றி பெற என்ன செய்யவேண்டும்?

விமோசனம் நிச்சயம்

சிம்பிள். பிராண்டை வித்தி யாசப்படுத்திக் காட்டினால் போதும். எந்தப் பொருளையும் வித்தியா சப்படுத்த முடியும். வித்தியாசப்படுத்த வேண்டும். வித்தியாசப்படுத்தினால் தான் விமோசனம்.

சாதாரண டூத் பிரஷ். ஒரு நீண்ட பிளாஸ்டிக் குச்சி. அதன் முனையில் பற்களை வெள்ளையடிக்க கொஞ்சம் பிரிசில்ஸ். இதில் என்ன வித்தியாசப் படுத்திக் காட்டுவது என்று எல்லா பிராண்டுகளும் அசால்ட்டாக நினைத் திருந்தன. அதோடு பலருக்கு எத்தனை நாளுக்கொரு தரம் பிரஷ் மாற்றவேண்டும் என்பதே தெரியாது. எத்தனை நாளாக ஒரே ப்ரஷ் உபயோகித்து வருகிறோம் என்பதும் தெரியாது. அதனாலேயே பலர் ஆயுஷ் ஹோமம் ஆனது முதல் அறுபதாம் கல்யாணம் நடக்கும் வரை ஒரே பிரஷ்ஷை உபயோகிக்கிறார்கள்!

வந்தது ‘ஓரல் பி’. எப்பொழுது பிரஷ்ஷை மாற்றவேண்டும் என்பது ஈசியாக தெரிய பிரிசில்ஸ்களின் மத்தியில் நீல கலர் சாயம் அடித்து, பல் தேய்க்க தேய்க்க அதுவும் தேய்ந்து வருவது போல் செய்து, சாயம் பாதியாகும் போது பிரஷ்ஷை மாற்றும் நேரம் என்று அறிவித்து அதற்கு ‘இண்டிகேட்டர்’ என்று பெயர் சூட்டி விளம்பரப்படுத்தியது.

இப்படி ஒரு சௌகரியம் இருக்கிறதோ என்று பலரும் ஒரல் பீ பக்கம் ஒதுங்க அதன் விற்பனை ஓஹோ என்று ஓங்கியது. வித்தியாசப் படுத்தி காட்டாத மற்ற பிரஷ்களின் விற்பனை ஈயென இளிக்கத் துவங்கியது!

பிராண்டை எப்படி வித்தியாசப்படுத்துவது? எப்படி வித்தியாசப்படுத்தக் கூடாது? யார் வித்தியாசப்படுத்த வேண்டும்? வித்தியாசப் படுத்த என்னென்ன தேவை? இவைகளை விளக்க இங்கு இடமில்லை. விட்ட இடத்தி லிருந்து விடைகளை அடுத்த வாரம் தொடர் வோம்.

இல்லையே, நீர் இப்படி தொடரும் போட்டு இதுவரை எழுதியதில்லையே என்று தானே கேட்கிறீர்கள்? கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் காட்டலாமே என்று தான்!

satheeshkrishnamurthy@gmail.com

DOCTORS GET LAKHS TO POSE AS FACULTY AT MCI CHECKS

Nov 30 2014 : The Times of India (Chennai)

Docs get lakhs to pose as faculty at MCI checks
rema nagarajan

They Help Colleges Fix Inspection

A senior doctor can reportedly earn as much as Rs 5-6 lakh within a couple of days just for showing up for a medical college inspection, and posing as a faculty member.

Inspections by teams from the Medical Council of India (MCI) for increasing the number of seats in a medical college, renewing its recognition or establishing a new one have been the subject of several court cases and CBI investigations for more than a decade. Yet, nothing seems to have changed. A senior doctor narrated to TOI how he was recently approached by a private medical college in Uttar Pradesh and offered several lakhs to be on its faculty list during an inspection.

A look at the CBI chargesheets and investigation into various cases from 2001 onwards shows that everything from leaking information about the so-called surprise MCI inspection to the concerned college, fixing inspections by selecting inspectors who will write the final report to buying faculty, residents and patients to fulfill the criteria for getting recognition have been resorted to. Things appear to have changed little today . According to Dr Mukul Kapoor, director of anaesthesia in Saket City Hospital, he was offered `5 lakh just to be present for the two days of the MCI inspection.“Within a few days, a senior person from the college called me, upping the offer to `6 lakh. I am an MCI-recognized PG teacher working in a non-teaching hospital, and so I get regular telephonic offers to come as ghost faculty (professor) for two days of the MCI inspection. I have kept away from the temptation,“ said Dr Kapoor. Just last month, Dr Ka poor received a mail from a so-called medical executive search firm regarding “urgent requirement of doctors for MCI inspection in Ghaziabad“.

They were looking for senior residents and assistant professors in anaesthesia at the rate of ` 15,000 per day for senior residents and ` 20,000 per day for assistant professors, specifically for two days. “Obviously, the medical college knew in advance about the so-called `surprise inspection' and was getting ready to place bogus faculty through these consultants.So they have been tipped off from within the MCI system. The fraud positioning of faculty and personnel has become such an open corruption that they are not even scared of sending such emails,“ said Dr Kapoor, who immediately forwarded the email to the health minister and his PA before the inspection date.He got no response from the ministry.

For full report log on to http:www.timesofindia.com

Soon, ATM-Style Machines to Help Citizens Log Police Complaints

There is good news for those who dread registering a complaint at a police station. The government may soon launch a hi-tech project that will minimise policemen's interference and make the police accountable for not taking note of complaints from citizens.

Prime Minister Narendra Modi will be briefed about this on Sunday in Guwahati before he addresses the senior police and intelligence officials of the country.

The solution which will be presented to PM Modi is much like an ATM machine, which will be installed at public sector banks, and allow a citizen to log a complaint. The complaint will be sent straight to relevant police station, thereby taking away the discretion of the police station of whether or not to take cognizance of a complaint.

And that's not all. A citizen can also write his/her complaint on a piece of paper and deposit that in the machine, which will also work as a telephone and a computer. The machine, called ICLICK, will log all such inputs and generate a number and receipt immediately for the complainant.

This step is being seen as means to empower weaker sections of society, who often bear the brunt of police negligence and callousness. "The receipt generated and log serves two purposes - it works as a daily diary entry whereas the logs would be available to senior officers who then use it to check with the concerned station," a senior officer associated with the project told NDTV.

A project was launched in Odisha in January this year on pilot basis, and the machine is running successfully in Bhubaneshwar. But the scope of complaints is limited to just cases of harassment of women.

Intelligence Bureau Director Asif Ibrahim now wants this concept to be extended to all crimes and spread across the country. "It is actually a simple idea, these machines can be kept alongside ATM machines - which are present in remotest places of the country," Mr Ibrahim said.

Sources have told NDTV that considerable time was spent on Saturday discussing this at the DGP Conference in Guwahati, which was presided over by Home Minister Rajnath Singh. "In principle, all Director General of States Police have accepted the idea," the officer said. The concept will now be placed before the Prime Minister on Sunday.

Although all state police chiefs have accepted the idea, there are still few hurdles to cross before the system becomes a reality. Chief Ministers and Home Departments of every state will have to accept this proposal as well. Also, funds - for buying and maintaining these machines - will have to be arranged. As of now the Intelligence Bureau has proposed that these machines can be housed in the ATMs of Public Sector Banks which have the largest network of ATMs across the country including rural areas.

VISAS TO BOOST MEDICAL TOURISM

FLIGHT CAPTAIN SAVES 153 LIVES

B.L.D.E. UNIVERSITY ADMISSION NOTICE M.D. AND M.S. 2014-15


Saturday, November 29, 2014

விசு..ஏன் டி.எம்.எஸ்ஸை போட்டு இப்படி சித்ரவதை பண்றே?நல்லாதானே பாடறார்"



ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த "சிரித்து வாழ வேண்டும்" படத்திற்காக
"மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன்,டி.எம்.சௌந்தர்ராஜனை வைத்து ஒரு பாடல்
பதிவு செய்து கொண்டிருந்தார்.அந்த ட்யூனை எவ்வளவோ முறை சொல்லிக் கொடுத்தும்
டி.எம்.எஸ்ஸால் எம்.எஸ்.வி. நினைக்கும் அளவுக்கு சரியாக பாட முடியவில்லை.

எவ்வளவோ பொறுமையுடன் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தார் "மெல்லிசை
மன்னர்".ஆனாலும் திருப்தி பெறாத நிலையே நீடித்தது.இறுதியில் டி.எம்.எஸ்.
"விஸ்வநாதா,இனி கோயில்ல போய் சுண்டலுக்கு பாடினாலும் பாடுவேனே ஒழிய உன் இசையில்
பாடமாட்டேன்" என்று கூறி வேகமாக
சென்றுவிட்டார்.

எம்.ஜி.ஆர் கூட ,"விசு..ஏன் டி.எம்.எஸ்ஸை போட்டு இப்படி சித்ரவதை
பண்றே?நல்லாதானே பாடறார்" என்றார்.இருந்தாலும் எம்.எஸ்.வியோ விடாமல்,"இல்லண்ணே
இன்னும் நான் நினைப்பது மாதிரிஅவர் இன்னும் பாடலை"
என்றார்.சுற்றியிருந்தவர்கள்"அவர்தான் கோவிச்சுகிட்டு போயிட்டாரே..எப்படி
கூட்டிட்டு வருவீங்க" என்றார்கள்."எப்படி கூட்டிட்டு வர்றேன்னு பாருங்க" என்று
சொல்லிச் சென்ற எம்.எஸ்.வி.நேராக டி.எம்.எஸ் வீட்டுக்குச் சென்று சாஷ்டாங்கமாக
அவர் காலில் விழுந்து,"உங்களைத் தவிர
இந்தப் பாடலை வேறு யாருமே அவ்வளவு சிறப்பாகப் பாடமுடியாது..அதனால் தயவு செய்து
வந்து பாடுங்கள்"
பின் என்ன?!யாராவது அன்புக்கு அடி பணியாமல் போவார்களா?!

டி.எம்.எஸ்ஸீம் வந்து எம்.எஸ்.வி. நினைத்தபடி பாடிக்கொடுத்தார்.அந்தக்
காலத்தில் மனித அகங்காரத்தை விட கலைக்குத்தான் முக்கியத்துவம் வழங்கப்பட்டது
என்பது இந்த ஒரு செயல் மூலமாகவே நாம் அறிகிறோம்.

பாடல்: ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான்...மேரா நாம் அப்துல் ரகுமான்...


http://music.cooltoad.com/music/song.php?id=257582



--

கோகுல்குமரன்

நகைச்சுவையாலே நம் மனதில் தெம்பும் நம்பிக்கைச் சிந்தனையையும் விதைத்த கலைவாணரின் பிறந்த நாள் இன்று..!


Photo: கலைவாணர் பிறந்த நாள் !

நகைச்சுவையாலே நம் மனதில் தெம்பும் நம்பிக்கைச் சிந்தனையையும் விதைத்த கலைவாணரின் பிறந்த நாள் இன்று..!

என்.எஸ்.கிருஷ்ணன் ! பாகம் - 2
(ஆனந்த விகடன்)

என்.எஸ்.கே – மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!

'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!

உடுமலை நாராயணகவியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். உடுமலைக்கவியை கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.

1957 –ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். "இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்" என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!

'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள். லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். "உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!" – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!

சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே- பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், "எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!" என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!

"என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்! "’ என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!

"எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!" என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!

ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, "இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்" என்றார்!

தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். "அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்" என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்ல, "அவன் என்னை ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே" என்றாராம்!

கலைவாணர், காந்தி பக்தர் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.

சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. "நாடகம், சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!" என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே. "பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!" என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!

சேலம் அருகே தாராமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!

கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின. "மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே! " என்றாராம்!


கலைவாணர் பிறந்த நாள் !

நகைச்சுவையாலே நம் மனதில் தெம்பும் நம்பிக்கைச் சிந்தனையையும் விதைத்த கலைவாணரின் பிறந்த நாள் இன்று..!

என்.எஸ்.கிருஷ்ணன் ! பாகம் - 2
(ஆனந்த விகடன்)

என்.எஸ்.கே – மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!

'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!

உடுமலை நாராயணகவியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். உடுமலைக்கவியை கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.

1957 –ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். "இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்" என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!

'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள். லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். "உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!" – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!

சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே- பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், "எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!" என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!

"என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்! "’ என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!

"எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!" என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!

ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, "இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்" என்றார்!

தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். "அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்" என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்ல, "அவன் என்னை ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே" என்றாராம்!

கலைவாணர், காந்தி பக்தர் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.

சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. "நாடகம், சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!" என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே. "பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!" என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!

சேலம் அருகே தாராமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!

கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின. "மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே! " என்றாராம்!

Age before duty: Babus to retire at 58 instead of 60

The Financial Express

Age before duty: Babus to retire at 58 instead of 60

In a move that would help curb the relentless increase in the Centre’s non-Plan spending and ease the way for infusion of more young blood and professionalism into the country’s largely moribund bureaucracy, the Narendra Modi government is planning to reduce the retirement age of central government employees from the present 60 to 58.
The move that comes at a time when the Seventh Pay Commission is mulling another sharp boost to the pay structure of the Centre’s 5-million-strong workforce is also aimed at creating the requisite space for lateral entry of technically qualified professionals into the government, official sources told FE.
The retirement age was last revised in 1998, when the then NDA government led by Atal Bihari Vajpayee raised it from 58 to 60 years. The last UPA government had reportedly considered enhancing the retirement age further to 62 just before the general elections, but dropped the move.
The superannuation age was increased from 55 to 58 way back in 1962.
The total wage and salaries bill of the central government, excluding PSUs but including the railways, rose sharply between 2008 and 2010 due to the revised pay scales (along with payment of arrears) implemented as per the Sixth Pay Commission’s proposals.
The wage bill rose from Rs 1.09 lakh crore in 2007-08 to Rs 1.4 lakh crore in 2008-09, and further to Rs 1.7 lakh crore in 2009-10, before the growth moderated to Rs 1.84 lakh crore in 2010-11. The government spent Rs 2.54 lakh crore in wages and salaries in 2013-14. The railways (with 1.4 million employees), defence (civil), home affairs, India Post and revenue account for more than 80% of the total spending of the Centre on pays and allowances.
Thanks to successive pay commissions, the salaries and other emoluments of government employees have, on average, more than doubled in every decade since independence even though lack of sufficient performance incentives is still considered to be a drawback.
A merger of 50% of the dearness allowance with the basic salary, likely to be part of the Seventh Pay Commission’s award, which is to implemented from 2016, is expected to hike the Centre’s wage bill by a third and strain its fiscal situation. In February this year, the government hiked DA to 100%, from 90%, benefiting both its employees and 3 million pensioners.
The Centre’s expenditure on pension stood at Rs 74,076 crore in 2013-14 and the estimate for the current fiscal is Rs 81,983 crore. However, growth in the outgo on pension is expected to moderate due to the National Pension System based on the concept of defined contribution, launched in January 2004. The NPS has been accepted by large sections of central government employees and most state governments have shifted their employees to the new system.
According to Madan Sabnavis, chief economist at CARE Ratings, reducing the retirement age will give the government an opportunity to outsource more jobs, including by bringing in people as temporary consultants, who will then have to be paid only a fixed salary but not pension or provident fund. Their salary component will then show up as administrative costs, rather than as wage bill.
The finance ministry is weighing the pros and cons of the proposal to cut the retirement age. The move, sources said, is also in line with the BJP’s manifesto, which had promised to rationalise and converge ministries, departments and other arms of the government, open up government to draw expertise from industry, academia and society and tap the services of the youth in particular to contribute to governance.

IMPLEMENTATION OF NURSING EDUCATIONAL STANDARDS..RESOLUTIONS 29.10.2014






















NO EBOLA CERTIFICATE MUST TO ENTER INDIA FROM AFFECTED COUNTRIES

The government has asked those travelling to India from Ebola-affected countries to carry a certificate stating that there is no evidence of the deadly virus in their body fluids, after a person cured of the disease was found to be carrying the virus in his semen.

In case people having been discharged after being treated for Ebola do not have the certificate from the Health Ministry of the country concerned, they have been advised not to travel to India for a period of 90 days from their discharge, Health Minister J P Nadda told Lok Sabha today.

The Ministry of External Affairs has issued the advisory to the Indian embassies in Abidjan (Ivory Coast), Dakar
(Senegal), Abuja (Nigeria), Accra (Ghana) and Niamey (Niger) on November 21 after a person returning from Liberia was quarantined at the Delhi airport.

The man had contracted Ebola there and was cured of it, the ministry had then said, but his semen reported positive
for the disease. Health Ministry officials had said body fluids at times carry virus post-treatment.

“All passengers travelling from Ebola-affected countries or who have undergone treatment for Ebola have to produce a certificate from the Ministry of Health of the country that there is no evidence of virus in his/her body fluids,” Nadda said, quoting the advisory.

“Passengers who do not posses the certificate are advised not to travel to India for a period of 90 days from the day
he/she is discharged from the treatment facility,” the minister said.

போர்க்களமாகும் பொங்கல்! ஆர்.சி. ஜெயந்தன்

ரசிகர்களே கற்பனை செய்து பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சியாக இனிக்கப் போகிறது 2015-ன் பொங்கல். பொங்கல் மற்றும் சங்கராந்தி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு மூன்று மாஸ் நடிகர்களின் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் களத்தில் ஒரே நேரத்தில் மோதவிருக்கின்றன. இதனால் தமிழக பாக்ஸ் ஆபீஸின் நிலவரம் இப்போதே கலவரமாகிக் கிடக்கிறது. காரணம் தமிழகத்தில் மொத்தம் 963 திரையரங்குகளும் அவற்றில் 1110 திரைகளும் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஷங்கர் – விக்ரம் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ ஐ’, கௌதம் மேனன் – அஜித் கூட்டணியில் உருவாகிவரும் ‘ என்னை அறிந்தால்’, சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் உருவாகிவரும் ‘ ஆம்பளை’ ஆகிய மூன்று படங்களும் எவ்வளவு திரைகளைக் கைப்பற்றும்? எல்லாப் படங்களும் எதிர்பார்த்த வசூலை எட்ட முடியுமா? ரசிகர்களின் பாக்கெட் தாங்குமா என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் கேட்டோம். ‘கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத் திரையரங்குகளும், ரசிகர்களும் எதிர்கொள்ளாத ‘கோல்டன் மொமெண்ட்’ என்றே 2015 பொங்கல் வெளியீட்டைச் சொல்லிவிடலாம்” என்கிறார் ஸ்ரீதர்.

காரணம் “பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே மூன்று தினங்கள் வரிசையாக விடுமுறைகள் விடப்படுகின்றன. ரசிகர்கள் மேலும் இரண்டு தினங்கள் கூடுதலாக விடுமுறை எடுத்துக்கொண்டு ஐந்து நாட்களும் பொங்கலைக் கொண்டாடித் தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. அவர்களைப் பொறுத்தவரை அடுத்தடுத்த தினங்களில் பார்ப்பதற்குப் புதிய புதிய படங்கள் இருக்க வேண்டும். அதுவே அவர்கள் மனதுக்குப் பிடித்த இயக்குநர்கள் மற்றும் மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்றால் எத்தனை கொண்டாடுவார்கள் என்பதை ஒரு தியேட்டர் அதிபராக அறிவேன்” என்கிறார் ஸ்ரீதர். மேலும் விக்ரம் படத்துக்கு 400, அஜித் படத்துக்கு 400, விஷால் படத்துக்கு 310 என்று திரைகளைப் பிரித்துக் கொடுப்பதில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது. இதனால் படங்களின் வசூலும் பாதிக்காது” என்கிறார்.

ரசிகர்களின் பாக்கெட்

இது சாத்தியம்தானா? “கடந்த பத்தாண்டுகளாகவே கிராமப் புறங்களில் உள்ள திரையரங்குகளில் கூட மாஸ் ஹீரோ படங்கள் ஒரே நாளில் வெளியாகி வருகின்றன. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தவே செய்கிறது. படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிடப் பெரும்பான்மையான உயர்தரத் திரையரங்குகளில் பிளாட்டாக உயர்த்தப்படும் நுழைவுக் கட்டணம் ரசிகர்களின் பாக்கெட்டைப் பதம் பார்க்கவே செய்யும்.

என்றாலும் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவை குறித்த கவலை எதுவுமற்று ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள். காரணம் முதல் இரண்டு வாரத்துக்குத் திரையரங்குகள் நோக்கிப் படையெடுப்பவர்களில் பாக்கெட் மணியைக் கொண்டு படம் பார்க்க வரும் 15 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளம் ரசிகர்களே அதிகம். மூன்றாவது வாரத்திலிருந்தே ஃபேமிலி ஆடியன்ஸை ஓரளவு எதிர்பார்க்க முடியும்” என்கிறார் வலைப்பதிவரும் இயக்குநருமான கேபிள் சங்கர்.

கூட்டணி பலம்

அப்படியானால் பொங்கலைப் போர்க்களமாக்கப் புறப்பட்டிருக்கும் இந்த மூன்று படங்களில் கடைசி நேரத்தில் ஏதாவது ஒன்று பின்வாங்குமா என்றால், அதற்கு வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலை தான் தற்போது நிலவி வருகிறது. பொங்கலுக்கு வெளியாகும் மூன்று படங்களில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஜனவரி 8-ம் தேதியே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ‘கிங் ஆஃ ஓபனிங்’ என்று புகழப்பட்டும் அஜித், பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னதாகவே 800 திரையரங்குகளில் வெளியாகி ஓபனிங் வசூலை அள்ளிவிட்டு, பொங்கலுக்கு 400 திரைகளாகக் குறைத்துவிடுவது என்ற திட்டத்தில் களமிறங்க இருக்கிறார்களாம். இதனால் கௌதம் மேனனுடன் முதல் முறையாகக் கூட்டணி என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘என்னை அறிந்தால்’ வசூலில் பின்தங்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

எதிர்பார்ப்பில் முதலிடத்தில் இருக்கும் ‘ஐ’ படத்தை ஹாலிவுட் படங்களுக்கு இணையான படமாக்கல், கிராபிக்ஸ் தரம், ஒப்பனை, விக்ரமின் நடிப்பு, ஷங்கர் பிராண்ட் பொழுதுபோக்கு ஆகியவை படத்தைத் தீபாவளிக்கே எதிர்பார்க்க வைத்தன. ஆனால் படத்திற்கு வியாபாரத் தரப்பிலும், பின்னணி இசை சேர்ப்பு, கிராஃபிக்ஸ், விக்ரம் பேச வேண்டிய மூன்று விதமான குரல் பாணிகள் ஆகியவை காரணமாக நீண்டுகொண்டே சென்ற படத்தின் பணிகளும் படத்தைப் பொங்கலுக்குத் தள்ளிச் செல்ல வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டதாகச் சொல்கி றார்கள். என்னதான் இழுவையான வெளியீடு என்றாலும் ‘ஐ’ படத்துக்கான எதிர்பார்ப்பு தமிழகத்தைத் தாண்டி கேரளா, ஆந்திரா மற்றும் இந்திப்பட ஃபாக்ஸ் ஆபீஸ், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் என எல்லா இடங்களிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மூன்றாவதாகச் சுந்தர்.சி – விஷால் கூட்டணியின் பலமும் கம்பீரமாகவே இருக்கிறது. விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களால் கொண்டாடப்படும் இயக்குநராக இருக்கும் சுந்தர்.சி, அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் விதமாக ‘அரண்மனை’ படத்தை இயக்கியிருந்தார். வசூல் சாதனை படைத்த இந்தப் படத்தில் கதையும் காட்சியமைப்புகளுமே ரசிகர்களை தியேட்டருக்குக் கூட்டம் கூட்டமாக இழுத்தது.

அதேபோல விஷால் நடிப்பில் வெளியான கடைசி மூன்று படங்கள் தொடர்வெற்றியைச் சந்தித்திருக்கின்றன. மேலும் ஏ.வி.எம். நிறுவனத்தைப் போல ரிலீஸ் தேதியை முன்னதாக அறிவித்து, சொன்ன தேதியில் படங்களை ரிலீஸ் செய்து வருகிறார் விஷால். இதனால் சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் உருவாகிவரும் ‘ஆம்பளை’ படம் ஆரம்பிக்கும்போதே பொங்கல் வெளியீடு என்று அறிவித்துப் படத்தை முடிக்கும் கட்டத்தில் இருப்பதால், “ஆம்பளை பொங்கல் போட்டியிலிருந்து வெளியேறும் என்ற பேச்சுக்கு இடமில்லை” என்று நம்மிடம் தெரிவித்தார் விஷால்.

ஒட்டுமொத்தமாகப் பொங்கல் தினத்தில் ஆரம்பித்து அடுத்துவரும் மூன்று நாட்களிலும் ரசிகர்கள் பொங்கல் சினிமா பார்த்துச் செலவழிக்க இருக்கும் தொகை ஒட்டு மொத்தமாக ரூ.120 கோடி என்று உத்தேசமாகக் கணக்கிட்டுச் சொல் கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் புலிகள்.

Friday, November 28, 2014

குழந்தைகளுக்கான இணையதள பக்கங்கள்!



இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளும் கைகோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஃபேஸ்புக், பொழுதுபோக்குப் பக்கங்கள் என அவர்களின் கவனம் சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் மடை திருப்ப, குழந்தைகளுக்கான பிரத்யேக வலைதளங்கள் பல செயல்பட்டு வருகின்றன. உங்கள் வீட்டு குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள் இங்கே..

Kids Health

மருத்துவச் செய்திகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பக்கம் இது. ‘ஆஸ்துமா என்றால் என்ன?’, ‘நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?’, ‘வைரஸ் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?’ என, இப்படி மருத்துவம் சம்பந்தமான குழந்தைகளின் அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இங்கே விடை கிடைக்கும்.

மேலும், வீடியோ மூலமாகவும் தகவல்களை தெளிவுற தெரிந்துகொள்ளலாம். இதன் வலைதள முகவரி: http://kidshealth.org/kid/ .National Geographic Kids

National Geographic Kids

அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society, குழந்தைகளுக்காக நடத்தும் வலைதளம் இது. இதில் தாவரங்கள், உயிரினங்கள் பற்றிய செய்திகளை குழந்தைகள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.


வாண்டுகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான இந்த தளத்தின் புகைப்படங்களும், வீடியோக்களின் இதன் பெரிய பிளஸ். வலைதள முகவரி: http://kids.nationalgeographic.com/kids/.

Kidsmart

இது லண்டனிலிருந்து குழந்தைகளுக்காகச் செயல்படும் இணையதளம். இணையம் தொடர்பான பல்வேறு விஷயங்களை சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறது இந்த இணையதளம்.


சாட்டிங், சமூக வலைதள பக்கங்கள், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாகத் தெரிந்துகொள்ளலாம். வலைதள முகவரி: http://www.kidsmart .org.uk/.

உங்கள் செல்லங்களின் இணையப் பொழுதுகள் இனி பயனுள்ளதாகக் கழியட்டும்!

- சா.வடிவரசு

என்ன இருந்த போதும் இன்று ஹியூஸ் இல்லை.


விளையாட்டு வினையாகிவிடும் என்பது பழமொழியாகத்தான் இருந்தது கடந்த 25ஆம் தேதிக்கு முன்னால் வரை...

அந்த நாளில் ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரின் கிரிக்கெட் மைதானத்தில், 22 வயது இளம் வீரர் சீன் அபோட் தனது எல்லையிலிருந்து பந்தை எடுத்துக் கொண்டு ஓடத்தொடங்கும் போது கூட `இந்த பந்து சிக்சர் பறந்து விடுமோ` என்ற சந்தேகம் அவருக்கு இருந்திருக்கும்.

பந்து கையை விட்டு நழுவியதும் தரையில் பட்டு ஆளுயரம் எழுந்து பந்தை எதிர் கொண்ட பேட்ஸ்மேன் பிலிப் ஹியூஸை நோக்கி செல்ல, கண் இமைக்கும் நேரத்தில் பந்து தலையில் தாக்கியதில் தரையில் மயங்கி விழுதார் பிபிப் ஹியூஸ்.

அந்த நிமிடம் முதல் ஒவ்வொரு நிமிடமும் கிரிக்கெட் உலகைத் தாண்டி அனைவரிடமும் பதட்டமும் பரபரப்பானதாகவும் மாறிப்போனது. தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தபோதும், தனது குடும்பத்தாரையும் ரசிகர்களையும் தவிக்க விட்டு. கோமா நிலையிலேயே மரணத்தைத் தழுவி உள்ளார் ஹியூஸ்.

பிலிப் ஹியூஸ் ஒரு நம்பிக்கையான கிரிக்கெட் வீரர். 1988 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் பிறந்தவர். சிறுவயதில் ரக்பி வீரராக கலக்கிய பிலிப், கிரிக்கெட் ஆர்வம் அதிகரித்ததால் கிரிக்கெட் வீராரகவும் தன்னை வளர்த்து கொண்டார் தனது 17ஆவது வயதில் சிட்னி கிரேட் கிரிக்கெட்டில் 141 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்தார். அப்போதுதான் ஆஸ்திரேலிய நாட்டின் தேர்வுக்குழுவினர் பார்வையும் பிலிப் மீது பட்டது.

உள்ளூர் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து வந்த ஹியூஸ் க்கு காத்திருந்தது 2009ஆம் ஆண்டு. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் போட்டியில் நான்காவது பந்திலேயே ஸ்டெயின் பந்து வீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த இன்னிங்க்ஸில் 75 ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபித்தாலும்,

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹியூஸின் ஆட்டம் வெளிப்பட தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த இவர், இரண்டாவது இன்னிங்ஸில் 160 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலிய அணி 175 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வழிவகுத்தார். ஆனால் ஆஷஸ் தொடரில் இடம் பெறுவார் என்ற போது இவருக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை சந்திப்பதில் சிரமம் உள்ளது என அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின் 2011ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது சைமன் கேட்டிச் காயத்தால் வெளியேற மீண்டும் ஹியூஸிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சரியாக ஆடாததால் அணியில் இடம் பறிபோனது. பின்னர் 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் இரண்டு சதமடித்து ஹியூஸ் தனது தேர்வை நியாயப்படுத்தினார்.

இடையே மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அணியில் நான்கு வெளிநா ட்டு வீரர்கள்தான் இடம் பெற முடியும் என்பதால் பிலிப் ஹியூஸ் ஆடும் அணியில் இடம் பெறவில்லை.

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடிய ஹியூஸ் 6 ரன்கள் குவித்தார். அந்த போட்டியில் சீன் அபோட்டும் இவரோடு ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அதில் ஹியூஸுக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதற்கு முன் தனது திறமையை நிரூபிக்க தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காகக் களமிறங்கினார். அப்போதுதான் இந்த மறக்கவியலாத சோக விபத்து நடந்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் வீரர் சீன் அபோட் வீசிய பந்து தலையை பதம் பார்த்தது. மயங்கி விழுந்த ஹியூஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நவம்பர் 27ஆம் தேதி இறந்தார். இவரின் இழப்பு கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக மாறியது. இவருக்கு பந்து வீசிய சீன் அபோட் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் , முன்னாள்,இன்னாள் வீரர்களும் வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஹியூஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உள்ளனர்.

இவர் பயன்படுத்திய ஹெல்மெட் சரியான பாதுகாப்பு வசதியுடன் இல்லை என்று கடுமையாக விவாதிக்கப் படுகிறது. ஹியூஸ் பழைய ஹெல்மெட் அணிந்திருந்தார் என்று ஹெல்மெட் கம்பெனி ஒரு வித்தியாச விளக்கம் கூறுகிறது. என்ன இருந்த போதும் இன்று ஹியூஸ் இல்லை.

கிரிக்கெட்டில் வேகப்பந்து வீசசாளரது மிகப்பெரிய ஆயுதம் பவுன்சர். அப்படி ஒரு பவுன்சர் பந்து தான் ஹியூஸை தாக்கியது. இந்த மரணத்தால் இனி எந்த வேகப்பந்து வீச்சாளரும் பவுன்சர் வீச பயப்படுவார். எந்த பேட்ஸ்மேனும் இனி ஹெல்மெட் அணியும் போது கண்டிப்பாக ஹியூஸை நினைப்பார். கிரிக்கெட் ஆட போகிறேன் என்று தெருவில் ஒரு சிறுவன் கிளம்பினாலும், அவனது பெற்றோர் ஹியூஸை நினைவுப்படுத்துவார்கள்.

ஹியூஸ் எனும் வீரன் மறைந்தாலும் அவன் இனி வருங்கால கிரிக்கெட்டைப் பாதுகாக்கும் பணியைச் சிறப்பாக செய்துவிட்டுச் சென்றுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் ஹியூஸின் மறைவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகவே பதிவாகும்.

- ச.ஸ்ரீராம்

CHANGING THE NAME OF US CURRENCY TO RUPEE CHANGING THE NAME OF INDIAN CURRENCY TO DOLLAR"

If you take a look on the journey of Rupee against Dollar since 1947, its not possible to match 1 INR = 1 USD in next decade.

The Indian currency has witnessed a slippery journey since Independence. Many geopolitical and economic developments have affected its movement in the last 66 years.

When India got freedom on August 15, 1947, the value of the rupee was on a par with the American dollar. There were no foreign borrowings on India's balance sheet.

To finance welfare and development activities, especially with the introduction of the Five-Year Plan in 1951, the government started external borrowings. This required the devaluation of the rupee.

After independence, India had chosen to adopt a fixed rate currency regime. The rupee was pegged at 4.79 against a dollar between 1948 and 1966.

Two consecutive wars, one with China in 1962 and another one with Pakistan in 1965; resulted in a huge deficit on India's budget, forcing the government to devalue the currency to 7.57 against the dollar.

The rupee's link with the British currency was broken in 1971 and it was linked directly to the US dollar.

In 1975, value of the Indian rupee was pegged at 8.39 against a dollar.

In 1985, it was further devalued to 12 against a dollar.

In 1991, India faced a serious balance of payment crisis and was forced to sharply devalue its currency. The country was in the grip of high inflation, low growth and the foreign reserves were not even worth to meet three weeks of imports. Under these situations, the currency was devalued to 17.90 against a dollar.

1993 was very important. This year currency was let free to flow with the market sentiments. The exchange rate was freed to be determined by the market, with provisions of intervention by the central bank under the situation of extreme volatility. This year, the currency was devalued to 31.37 against a dollar. The rupee traded in the range of 40-50 between 2000 and 2010.

It was mostly at around 45 against a dollar. It touched a high of 39 in 2007.

The Indian currency has gradually depreciated since the global 2008 economic crisis.

Dental Council proposes bridge course in MBBS for dentists

File:Dental Council of India logo.png
The Dental Council of India is proposing a three-year bridge course in MBBS for BDS graduates in a bid to enable them to provide both medical and oral health care in rural areas.

Talking to reporters here on Friday, Dental Council of India (DCI) President Dibyendu Mazumdar said there was a shortage of medical professionals in rural areas. A good number of BDS graduates come out every year. These graduates had already been trained in many aspects of treatment during their five-year course. With a further three-year MBBS course these graduates can meet the requirement of medical professionals in rural areas, he said.

At the inaugural ceremony of Karnataka State Dental Conference on Friday, DCI Vice President Y. Bharath Shetty said the Council was considering use of the massive resource of health professionals for rural health care. "The Medical Council of India might have opposition (for the bridge course) as we will be entering in their domain," he said. The curriculum will be framed and passed in the general body of the DCI before submitting it to the Government, he added.

Dr. Mazumdar said the DCI has proposed changes in the curriculum for the BDS and MDS courses that were awaiting approval of the Government. The new BDS course with nine subjects would cover aspects namely basic and advance life support mechanisms. In the third year of the new BDS course, subjects related to forensic medicine will be studied. The DCI was proposing to increase the number of professors and staff.

Dr. Mazumdar said the DCI has made rural service compulsory for the BDS graduates. Of the one year internship period, the BDS graduates have to work for three months in a rural area. The DCI was closely monitoring it and action was proposed against colleges that are not making arrangements for rural service.

The conference was organised by the Indian Dental Association’s Dakshina Kannada Branch. The organisers felicitated A.M.C. Saldanha, an old dentist practicing in Mangaluru.

தொடரும் மது, புகை, ஈவ்டீஸிங் தொந்தரவுகள்: கேள்விக்குறியாகும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு - உதவிக்கு வராத ‘ஹெல்ப்’லைன், போலீஸார்



மிகவும் பாதுகாப்பானது என்று மக்கள் நம்பி பயணம் செய்யும் ரயில்களில் போதை ஆசாமிகளின் தொந்தரவு இருப்பதாக பல பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். அவர்களைப் பற்றி டிடிஆர், ஹெல்ப்லைன், போலீஸ் என யாரை தொடர்பு கொண்டு கூறினாலும் தீர்வு கிடைப்பதில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களின் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாரும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இங்கும் அங்கும் சுற்றுவதைப் பார்க்கலாம். ரயில்களிலும் காக்கிச் சட்டையினர் ரோந்து வருவார்கள். அனைத்து ரயில்களிலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த அளவுக்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் இருக்கிறதா? ரயில் பயணம் அனைத்துப் பயணிகளுக்கும் முழு பாதுகாப்பானதாக இருக்கிறதா? ‘இல்லை’ என்கிறது சமீபத்திய உதாரணங்கள்.

போதை ஆசாமிகள்

கடந்த 19-ம் தேதி. கன்னியா குமரி எக்ஸ்பிரஸின் ஏ1 ஏ.சி. பெட்டியில் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்குப் புறப்படுகின்றனர் ஒரு பெண் மருத்துவரும், அவரது தாயும். பக்கத்து கேபினில் ஒரு பெண், அவரது மகள். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை சகிதமாக அந்த கேபினில் ஏறுகின்றனர் 6 ஆண்கள். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர்களது மதுக் கச்சேரி தொடங்குகிறது. பயந்துபோன பெண் தன் மகளை அழைத்துக்கொண்டு மருத்துவரின் கேபினில் தஞ்சமடைகிறார். ‘நாங்கள் அரக்கர்களா? கடித்து தின்றுவிடுவோமா’ என்று திட்டு கிறது மதுக் கூட்டம். அடைக்கலம் கொடுத்த மருத்துவருக்கும் திட்டு விழுகிறது.

ஒதுங்கிய டிடிஆர், போலீஸார்

அவர்களது நாற்றத்தையும் நாராச வார்த்தைகளையும் எத்தனை நேரம் பொறுப்பது? டிடிஆரிடம் முறையிட, ‘‘அது என் வேலை இல்லை’’ என்று கூறி ஒதுங்கிக்கொண்டார். பின்னர் ரயில்வே ஹெல்ப் லைனுக்கு (9962500500) தெரிவித்தார். விழுப்புரத்தில் ஏறிய போலீஸார், அந்த நபர்கள் இருந்த கேபினை எட்டிப் பார்த்தனர். ‘‘எழுதிக் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்’’ என்று கூறிவிட்டு இறங்கிப் போய்விட்டனர். புகாரை எழுதி தயாராக வைத்துக் கொண்ட மருத்துவர், விருத்தா சலம் சந்திப்பு வந்ததும் போலீஸாரிடம் கொடுத்தார். அதன் பிறகும், நடவடிக்கை இல்லை. ‘‘எங்கே வேணாலும் கம்ப்ளைன்ட் பண்ணுங்க. ஒண்ணும் செய்ய முடியாது’’ என்று எக்கா ளமாக சிரித்துவிட்டு நெல்லையில் இறங்கியது போதை இறங்கிய ‘ஒய்ட் அன் ஒய்ட்’ கும்பல். ‘‘போட்டோ எடுத்து வைத்திருக் கிறேன். ரயில்வே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்க இருக்கிறேன்’’ என்றார் அந்த பெண் மருத்துவர்.

புகார் கொடுத்ததன் விளைவு

இன்னொரு சமீபத்திய உதாரணம். சென்னை - மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கைக்குழந்தை யுடன் ஒரு இளம் தம்பதி. விழுப் புரம் கடந்து சென்றபோது, போதை யில் இருந்த 3 ஆண்கள், அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்திருக்கின்றனர். தட்டிக் கேட்ட கணவனுக்கு சரமாரி அடி. ஹெல்ப்லைனில் தொடர்பு கொண்டும் ஒரு போலீஸ்கூட வரவில்லை. மீண்டும் அவர்கள் புகார் கொடுத்தனர். கும்பகோணம் சந்திப்பு வந்ததும், போலீஸார் அங்கு வந்தனர். ‘‘நீங்கள்தானே புகார் கொடுத்தது. காவல் நிலையத் துக்கு வந்து கைப்பட புகார் எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்’’ என்று கூறி, வலுக்கட்டாயமாக இறங்கவைத்துள்ளனர். புகார் கடிதம் எழுதி வாங்கிக்கொண்ட பிறகே அனுப்பினர். அதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிட்டதால், அந்த தம்பதி பேருந்தில் ஏறிச் சென்றனர்.

ரயிலுக்குள்ளேயே ஒதுக்குப் புறமாக சென்று மது அருந்துவது, எதற்கும் யோசிக் காமல் பயணிகளின் நடுவிலேயே உட்கார்ந்து மது அருந்துவது, புகை பிடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது என பல சம்பவங் கள் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடக்கின் றன. சிக்குபவன் அப்பிராணி என்றால், போலீஸார் மிரட்டுவதும் ரெண்டு தட்டு தட்டுவதும் வழக்கம். கூட்டமாக இருந்தாலோ, கறைவேட்டியினர் என்றாலோ போலீஸார் கண்டுகொள்வதில்லை என்கின்றனர் பயணிகள்.

ரயில்வே போலீஸ் டிஎஸ்பி பொன்ராம் கூறும்போது, ‘‘எல்லா எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஒரு போலீஸ்காரர் கட்டாயம் இருப்பார். பிரச்சினைகள் குறித்து அவரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் போதும். மேற்கொண்டு விவரம் தேவைப் பட்டால் போலீஸார் தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்வார்கள்’’ என்றார்.

புகார்கள் வந்தும் வழக்கு இல்லை

சட்ட விதிமுறைகள், பயணி களுக்கு சாதகமாகத்தான் இருக் கின்றன. அவற்றை செயல்படுத்து வதில்தான் குறைபாடு இருப்பதாகக் கருதுகின்றனர் பயணிகள். ஜிஆர்பி - 9962500500, ஆர்பிஎப் - 9003161710, இலவச ஹெல்ப்லைன் - 1322 ஆகிய எண் களில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம். எஸ்எம்எஸ் மூலம் 7708061804 என்ற எண்ணிலும் புகார் கொடுக்கலாம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் கொடுத்தால், எந்த நடவடிக் கையும் எடுக்கப்படுவதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட பயணி கள். கடந்த 3 மாதங்களில் மேற்கண்ட எண்களுக்கு 300-க்கு மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. ஆனால், ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை.

சூட்கேஸில் முடங்கிய பட்ஜெட்?

பயணிகளின் பாதுகாப்புக்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக் கப்பட்டது. ரயில்களில் பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை, பெண்களின் பாதுகாப்புக்காக ரயில் களில் ஆர்பிஎப் பெண் படையினர் எண்ணிக்கை அதிகரிப்பு, மகளிர் பெட்டிகள் அதிகரிப்பு, பயணி களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத் துவம். இதெல்லாமும் பட்ஜெட் அம்சங்கள்தான். இத்தனை நல்ல அம்சங்களும் ரயில்வே மந்திரியின் பட்ஜெட் சூட்கேஸுக்குள் மட்டும் தான் இருக்குமா? அன்றாட செயல் பாட்டுக்கு வருவது எப்போது? என்ற சாமானியப் பயணியின் கூக்குரலும் நியாயமாகத்தான் தெரிகிறது.

போதையில் 6 பேர் நடந்து கொண்ட விதம் பற்றி ரயில்வே போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘‘அரசியல்வாதிகள் என்பதற்காக பொது இடத்தில் தவறு செய்வதை பொறுத்துக்கொள்ள வேண்டிய தில்லை. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்’’ என்றார்.

நடமாடும் காவல் நிலையம் வருமா?

நெல்லை, அனந்தபுரி, திருவனந் தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடமாடும் போலீஸ் நிலையம் உள்ளது. இதில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் இருப்பார்கள். ரயில்களில் நடக்கும் குற்றங்கள் தொடர்பாக இவர்களிடம் புகார் கொடுத்தால் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக ரசீதும் கொடுக்கப்படும். பயணிகள்- குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில் களிலும் நடமாடும் காவல் நிலையம் அமைத்தால் மது ஆசாமிகள், புகை ஆசாமிகள், ஈவ்டீஸர்களிடம் இருந்து பெண் பயணிகள் தப்பிப்பார்கள். கவனிக்குமா ரயில்வே?

கிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்



வேகமான பவுன்சரால் தான் ஒரு பேட்ஸ்மேன் தாக்கப்படுவார் என்று கிடையாது. ஆஃப் ஸ்பின் பந்தால் தாக்கப்பட்டு இறந்தவர் உண்டு. ஸ்டம்பின் பைல்ஸ் பட்டு கண் பறிபோனவர் உண்டு. ஹுயூஸ் மரணச் செய்தி கேட்டு டெல்லி விக்கெட் கீப்பர் புனீத் பிஸ்ட் சொல்வது முக்கியமானது. வீசப்படுகிற பந்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருந்தால் எந்த ஹெல்மெட்டாலும் உங்களை காப்பாற்றமுடியாது.

பெர்ட் ஓல்ட்ஃபீல்ட்

1932-33 டெஸ்ட் தொடரின்போது இங்கிலாந்து பவுலர் ஹரோல்ட் லார்வுட் வீசிய பந்தினால், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெர்ட் ஓல்ட்ஃபீல்ட்டின் மண்டை ஓடு உடைந்தது.

நரி கான்ட்ராக்டர்

1962-ல் பார்படாஸூக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் பவுலர் சார்லி கிரிஃப்பித் பந்துவீச்சில் இந்திய அணி கேப்டன் நரி கான்ட்ராக்டரின் தலையில் அடிபட்டது. மூக்கு, காதுகளில் ரத்தம் வழிந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கான்ட்ராக்டருக்கு ஆறு நாட்கள் நினைவு திரும்பவில்லை. ரத்தம் செலுத்தப்பட்டு உயிர் பிழைத்தார். பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட் பக்கமே வரவில்லை. கடைசியாக, ஒரேயொரு டெஸ்ட் ஆட நினைத்தார் கான்ட்ராக்டர். ஆனால் அதற்கு அவர் மனைவி அனுமதிக்கவில்லை.

இவென் சாட்ஃபீல்ட்

1975-ல் இங்கிலாந்து பவுலர் பீட்டர் லீவர் வீசிய பந்தினால் ஹெல்மெட் போடாமல் ஆடிய நியூஸிலாந்து வீரரான சாட்ஃபீல்ட்டின் தலையில் பலமான அடிபட, நாக்கு தொண்டைக்குள் சிக்கியதில், உடனே மயக்கமானார். இங்கிலாந்தின் பிசியோதெரப்பிஸ்ட் பெர்னார்ட் தாமஸ் தக்க நேரத்தில் முதலுதவி அளித்து சாட்ஃபீல்டின் உயிரைக் காப்பாறினார். சம்பவம் நடந்தபோது சாட்ஃபீல்டைக் கொன்றுவிட்டதாக தவறாக எண்ணி, லீவர் மைதானத்திலேயே அழுதார்.

ராமன் லம்பா

1998-ல் முன்னாள் இந்திய வீரரான ராமன் லம்பா, டாக்காவில் நடந்த கிளப் ஆட்டத்தின்போது ஷார்ட் லெக்கில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். குறிப்பிட்ட ஓவரில் மூன்று பந்துகளே மீதமுள்ளதால் ஹெல்மெட் தேவையில்லை என முடிவெடுத்தார் லம்பா. அந்த சமயம் பார்த்து பேட்ஸ்மேன் வேகமாக லம்பாவின் பக்கம் அடிக்க, பந்து அவர் முன்தலையைத் தாக்கிவிட்டு கீப்பர் பக்கம் சென்று கேட்ச் ஆனது. விக்கெட்டை கொண்டாட எல்லோரும் ஓடிவந்தபோது கீழே விழுந்து கிடந்தார் லம்பா. பிறகு எழுந்து, தடுமாறியபடி பெவிலியனுக்குத் திரும்பினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நினைவிழந்தார். சிலநாள்கள் கழித்து இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 38.

அப்துல் அசீஸ்

1959-ல் பாகிஸ்தான் உள்ளூர் போட்டியில் கராச்சி அணிக்காக ஆடிய அப்துல் அசீஸின் நெஞ்சில் ஆஃப் ஸ்பின்னரின் பந்து பதம் பார்க்க, உடனே கீழே தடுமாறி மயங்கி விழுந்தவருக்குப் பிறகு நினைவு வரவேயில்லை. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது இறந்தார். அப்போது அவருக்கு வயது 17.

மார்க் பவுச்சர்

தென் ஆப்பிரிக்காவின் புகழ் பெற்ற விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சருக்கு நடந்தது விநோதம். ஸ்டெம்பிலுள்ள பெயில்ஸால் இடது கண்ணை இழந்தவர். 2012ல் பயிற்சி ஆட்டம் ஒன்றில், இம்ரான் தாஹீர் வீசிய சுழற்பந்து ஸ்டெம்பை பதம் பார்த்தது. அப்போது ஸ்டெம்பின் மீது இருந்த பைல்ஸ், கீப்பிங் செய்துகொண்டிருந்த பவுச்சரின் இடது கண்ணைத் தாக்கியது. கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கண் மோசமாக பாதிக்கப்பட்டதால், 998 சர்வதேச டிஸ்மிஸல்களோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் பவுச்சர்.

NEWS TODAY 22.04.2024