Tuesday, March 31, 2015

உள்ளம் உருகுதய்யா!

ந்தக் கடவுளின் நினைவு நம் மனதில் எழும் மாத்திரத்தில், கூடவே அந்த அழகு முருகனைப் போற்றும் தமிழ்ப்பாடல்களும், அவற்றை உள்ளம் உருகிப் பாடிய டி.எம்.சௌந்தர்ராஜன் பற்றிய நினைவும் நம் மனதில் எழுவது நிச்சயம்! குறிப்பாக, 'உள்ளம் உருகுதய்யா...’ பாடலைக் கேட்டு உருகாத தமிழ் உள்ளங்களே இல்லை எனலாம். ஆனால், அந்தப் பாடல் உருவானதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருப்பது பலருக்கும் தெரியாது. 
ஒவ்வொரு கிருத்திகைக்கும் டி.எம்.எஸ்., பழநிக்குச் சென்று முருகனை வழிபடுவது வழக்கம். எப்போதும் ஒரே ஹோட்டலில்தான் தங்குவார். அப்படி அவர் அங்கே தங்கிய ஒரு நாளில், அங்கு பணிபுரியும் ஒரு பையன் அவனுக்குத் தெரிந்த ராகத்தில், 'உள்ளம் உருகுதடா’ என்று ஒரு பாடலை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்ததைக் கேட்டு, அந்தப் பாடலின் சொல்லிலும் பொருளிலும் மனம் லயித்துப்போனார். இத்தனைக்கும் அந்தச் சிறுவன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பையனிடம் அந்தப் பாடல் குறித்து விசாரித்தார். அதை யார் எழுதியது, எப்படி அது தனக்குத் தெரிய வந்தது என்கிற விவரமெல்லாம் அந்தச் சிறுவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏனோ தனக்கு அந்தப் பாடல் ரொம்பப் பிடித்துவிட்டதால், மனதில் பதிந்துவிட்டதாகச் சொன்னான். அவனிடம் அந்தப் பாடல் முழுவதையும் வரிக்கு வரி சொல்லச் சொல்லி, எழுதி வாங்கிக்கொண்டார் டி.எம்.எஸ். பின்னர் சென்னைக்கு வந்ததும், அந்தப் பாடலில் 'அடா’ என்று வருகிற இடத்தையெல்லாம் 'ஐயா’ என மாற்றி, இசை அமைத்துப் பாடி வெளியிட, லட்சக்கணக்கான தமிழர்களின் மனங்களில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது 'உள்ளம் உருகுதய்யா...’ என்கிற அந்தப் பாடல். இந்த விவரத்தைதான் டி.எம்.எஸ். தாம் கச்சேரி செய்கிற இடங்களில் எல்லாம் கூறிவந்தார்.
பாடல் பிரபலமாகி, பலப்பல வருஷங்கள் கடந்த நிலையில், 'இமயத்துடன்...’ என்னும் தலைப்பில் டி.எம்.எஸ். பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு முதல்நாள் பூஜை போடுவதற்காக சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றிருந்தார்கள் டி.எம்.எஸ்ஸும் இயக்குநர் விஜய்ராஜும். பூஜை முடிந்ததும், அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் அவர்களை துர்கை சந்நிதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு கல்வெட்டில் 'உள்ளம் உருகுதடா...’ என்கிற அந்தப் பாடல் செதுக்கப்பட்டு, அதன் அடியில் 'ஆண்டவன்பிச்சை’ என அதை எழுதியவர் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைக் கண்டு, வியப்பும் திகைப்புமாய் அந்த 'ஆண்டவன் பிச்சை’ யார் என்ற தேடலில் இறங்கியபோது, அவர்களுக்குச் சில தகவல்கள் கிடைத்தன.
குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வயது முதிர்ந்த நிலையில் அநாதரவாகத் திரிந்து கொண்டிருந்த மரகதம் என்கிற பெண்மணி, ஒருமுறை காஞ்சி மடத்துக்குச் சென்றிருந்தார். அங்கே இருந்த சிலர் அவரைப் பிச்சைக்காரி என எண்ணி கேலி செய்து துரத்த, அதைக் கவனித்துவிட்ட மஹா பெரியவா, அவரை அழைத்து ஆறுதல் சொல்லி, 'வருத்தப்படாதே! நீ ஆண்டவன்பிச்சை’ என்று அனுக்கிரஹம் செய்த துடன், பிரசாதமும் கொடுத்து அனுப்பினார். இறைவனின் அனுக்கிரஹத்தைப் பூரணமாகப் பெற்ற ஆண்டவன்பிச்சை, பின்பு அதே பெயரில் கோயில் கோயிலாகச் சென்று, பல தெய்விகப் பாடல்களைப் பாடினார். அப்படி அவர் இந்தக் காளிகாம்பாள் கோயிலில் பாடியதுதான், 'உள்ளம் உருகுதடா’ என்ற பாடல். அந்தப் பெண்மணி தன்னைப் பற்றி எழுதியிருந்த 'உள்ளம் உருகுதடா’ என்ற பாடல், தன்னையே நாளும் பொழுதும் வழிபடும் டி.எம்.எஸ். அவர்களின் தெய்விகக் குரலில் உலகமெல்லாம் பரவவேண்டும் எனத் திருவுள்ளம் கொண்ட அந்தப் பழநியாண்டவன்தான், இஸ்லாமியச் சிறுவன் மூலமாக இப்படி ஓர் அருளாடலை நிகழ்த்தினான்போலும்!
டி.எம்.எஸ். அவர்களின் 93வது பிறந்த நாள் (மார்ச் 24) நினைவாக இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டவர் இயக்குநர் விஜய்ராஜ்.

அறுந்த ரீலு: 'ரயிலை நிறுத்திய விஜயகாந்த்'

விஜயகாந்த்

இந்தியா முழுவதும் கார்கில் நிதி திரட்டப்பட்ட காலகட்டம் அது. மதுரையில் கலை நிகழ்ச்சி நடத்தி, தமிழ் திரையுலகினரும் நிதி திரட்டி அனுப்ப முடிவு செய்தனர். அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் விஜயகாந்த்.

அப்போது நடந்த சம்பவம் ஒன்றை, நம்மிடம் சம்பந்தப்பட்டவர் நினைவுகூர்ந்தார்.

மதுரையில் கலை நிகழ்ச்சி நடைபெற்ற நாளில் நடிகர், நடிகைகள் சென்னை திரும்புவதற்கு, இரவு 8:01-க்கு கிளம்பும் ரயிலில் இரண்டு பெட்டிகள் கடைசியாக இணைக்கப்பட்டது. ஆனால், கலை நிகழ்ச்சி முடிய தாமதமாகி விட்டது. முன்பே தீர்மானித்து அனைவரையும் தங்கியிருக்கும் அறையில் இருந்து துணிகளை பேக் செய்துகொண்டு வந்துவிடுங்கள் என்று அறிவுறுதப்பட்டது. அதன்படியே அனைவருமே கலை நிகழ்ச்சி முடிவுற்றவுடன், ரயிலுக்கு கிளம்ப ஆயுத்தமாகி வந்தனர்.

கலைநிகழ்ச்சி முடிய தாமதமாகி, ரயில் நிலையத்துக்கு வந்தார்கள். நடிகர், நடிகைகளுக்காக ரயில் காத்திருந்தது. அனைவரும் அவசர அவசரமாக ரயிலில் ஏறினார். புறப்பட்டது ரயில்.

மதுரையைத் தாண்டி சோழவந்தான் அருகே ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது விஜயகாந்த்தை சந்தித்து "நாங்கள் யாருமே சாப்பிடவில்லை கேப்டன்..!" என்றார்கள் சக கலைஞர்களின் பிரதிநிதிகள் சிலர்.

அதைக் கேட்ட விஜயகாந்த்துக்கு அதிர்ச்சி. அப்போது சட்டென ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். சாலை ஓரம் வரிசையாக ரோட்டோர சாப்பாடுக் கடைகள் இருந்ததைக் கண்டார்.

சற்றும் தாமதிக்காமல், தனது தலைக்கு மேல் இருந்த செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினாராம் விஜயகாந்த். அவருடன் இருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி. உடனடியாக வேஷ்டியை தூக்கிக் கட்டிக் கொண்டு, சாப்பாடு கடை நோக்கி ஒட ஆரம்பித்தார் விஜயகாந்த். உடன் இருந்தவர்கள் அவர் பின்னால் ஓடினார்கள்.

"கடையில் இருக்கும் அத்தனையும் கட்டுங்கள். நான் எதுவும் எடுத்து வரவில்லை. ஆகையால் பாத்திரத்துடன் கொடுங்கள். அதற்கும் சேர்த்து பணம் கொடுத்துவிடுகிறேன்" என்று கடைக்காரிடம் விஜயகாந்த் தெரிவித்தாராம்.

"விஜயகாந்த் வந்தார். கடையை கொள்ளையடித்து போய்விட்டார் என்று யாரும் சொல்லிவிட கூடாது" என்று கூறியபடி தன் பையில் இருந்த பணம், உடனிருந்தவர்கள் கையில் இருந்த பணம் என அனைத்தையும் வாங்கி கடைக்காரிடம் கொடுத்துவிட்டு சாப்பாடு, பரோட்டாக்கள், குழம்புகளுடனான பாத்திரங்களைச் சுமந்துகொண்டு விஜயகாந்த் தலைமையிலான கலைஞர்கள் சிலர் ரயிலுக்குத் திரும்பினர்.

பின்னர் ரயில் கிளம்பியது. சக கலைஞர்கள் அனைவரும் பசியாற சாப்பிட்டனர், விஜயகாந்தின் துணிகர செயலை நெகிழ்ச்சியுடன் சிலாகித்தபடி!

அதேவேளையில், கார்கில் நிதி திரட்டுவதற்காக பயணம் மேற்கொண்டதைக் கருத்தில்கொண்டு, இந்தச் செயலுக்கு நல்லெண்ணத்துடன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம் ரயில்வே நிர்வாகம்.

‘UGC to stress accountability and excellence for institutions’

Accountability and excellence would be the main focus of the University Grants Commission (UGC) in the next 15 years to ensure that colleges improved quality of education, said UGC Vice-Chairman H. Devaraj at the 57th College Day celebrations of Thiagarajar College of Engineering on Monday.

“The UGC wants to monitor its funds and ensure that people heading the education system across the country become more accountable and improve the overall quality of learning provided by developing their own branding committees. We need responsible and accountable teachers and most importantly, Vice-Chancellors who are visionary leaders,” he said.

Mr. Devaraj congratulated the management, faculty and students of the college and urged them to delve deep into their quest for excellence and said that good teachers would provide the foundation for that.

Medals and certificates were given to the best outgoing students from the college. B. Anantha Narayanan and R.A. Shanmathi were awarded the best outgoing student excellence awards for male and female students respectively.

Awards were also distributed to the department-wise achievers and NCC cadets, NSS volunteers and achievers in sports.

Speaking at the event, college chairman and correspondent Karumuttu T. Kannan asked the students to be engaged in a process of constant learning even after completing their education. “Graduating from college should not be seen as an end to education and it is important to keep oneself updated. Be a crusader and achiever in whatever small or large role you play in an organisation in the future,” he said.

A website to guide medical graduates on the A-Z of surgery

Here’s a tool for students hoping to master the nuances of surgery —www.learningsurgery.com.

An initiative of SRM Institutes for Medical Science, Vadapalani, the site, will contain vital information for those who want to become surgeons, and also provide a peer-learning platform for surgeons.

“People who have completed their MBBS course often find it difficult to decide on their postgraduate courses. We will explain who should take surgery up and who it is not suited for,” Patta Radhakrishna, joint director, Institute of Gastroenterology, SIMS, and the founder of the website, told the press here recently.

The SIMS Institute of Gastroenterology, Hepatobiliary and Transplant (SIGHT) would also be inaugurated.

A year ago, Dr. Radhakrishna started the Facebook page ‘Learning general surgery,’ which now has nearly 11,000 ‘likes’.

“We decided to switch over to a website to allow more flexibility,” he said, adding that the site would feature live webcasts of surgeries, as well as a mentorship in the surgery programme.

Transplantation programme

SIMS plans to begin their transplantation programme once SIGHT is launched. “Currently, we have a waitlist of 24 patients for kidney, four for liver and two for pancreas transplantations,” Rajasekhar Perumalla, head of transplant surgery, SIMS, said.

The site will contain vital information for those who want to pursue the discipline

எப்போது உணரப் போகிறோம்?

கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் நடைபெற்ற நேரம். சென்ற முறை உலக சாம்பியனாக இருந்த இந்திய அணி, அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது.

ஆஸ்திரேலியாவை வெற்றி கொள்வது கடினம்தான் என்று தெரிந்தாலும், எப்படியாவது வெற்றி கிடைத்துவிடும் என்ற நப்பாசை, நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களை பிரார்த்தனை செய்ய வைத்தது.

அலுவலகங்களுக்கு ஏதேனும் காரணத்துடன் விடுப்பு சொல்லிவிட்டு, கிரிக்கெட் போட்டிக்குச் செல்ல ரசிகர்கள் ஆயத்தமானார்கள். விடுப்பு தராத அலுவலகங்களில்

தொலைக்காட்சியில் போட்டியை ரசிக்க அனுமதி பெறப்பட்டது.

தேர்வு அறைகளில் இருந்த மாணவர்களுக்குக் கூட, கிரிக்கெட் ஜுரமே அதிகமாக இருந்தது. வீடுகளிலும், கடைகளிலும் இருந்த தொலைக்காட்சி பெட்டிகள் முன் மனிதர்கள் தவமிருந்தார்கள். எங்கும் கிரிக்கெட் பற்றியே பேச்சு.

போட்டி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா மின்னல் வேகத்தில் மட்டையைச் சுழற்றுகிறது. ரன்கள் குவிகின்றன. மக்கள் சலிப்படைகிறார்கள். இந்திய அணி பந்து வீச்சாளர்களைத் திட்டித் தீர்க்கிறார்கள்.

அடுத்து இந்திய அணி மட்டையைச் சுழற்றத் தொடங்கியதும் ரசிகர்களின் நம்பிக்கை பொய்க்கிறது. அணி வீரர்களை வசைபாடுகிறார்கள். இறுதியில் ஆஸ்திரேலியா வெற்றியடைகிறது.

ரசிகர்களின் ஆத்திரம் தொடர்ந்தது. ஆத்திரத்தைத் தீர்க்கும் வடிகால்களாக இருக்கவே இருக்கிறது முகநூல். கோபங்களும், வருத்தங்களும், ஆறுதல்களுமாக தகவல்கள் பறிமாறப்பட்டன.

விராட் கோலி மீதான கோபத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர் ஒரே ரன்னில் வெளியேறியவுடன், நேரில் போட்டியை ரசிக்க வந்த அவருடைய தோழியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா மீது கோபம் பாய்கிறது. அவரைக் குறித்து ஏராளமான வசைகள்.

முகநூலிலும், சுட்டுரையிலும் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ரசிகர்களின் கோபம், தரம் தாழ்ந்து போனதன் உதாரணம் அது.

அணித் தலைவர் தோனி கண்ணீர் விடும் புகைப்படத்தை முகநூலில் பதிக்காத கிரிக்கெட் ரசிகர்களே இல்லை எனலாம். வேறு சிலரோ, கிரிக்கெட்டில் தோற்பதற்கு எவ்வளவு பணம் கைமாறியது என்று விவாதத்தில் ஈடுபட்டார்கள்.

இப்படி, கிரிக்கெட் மீது இருக்கும் மோகம் மற்ற விளையாட்டு பக்கம் திரும்புவதில்லை என்பதுதான் வருத்தமான உண்மை.

கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட விடாமல் படித்துவிடும் நாம், மற்ற விளையாட்டுகளில் சாதனை புரிபவர்களைக் கூட கவனிப்பதில்லை.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஆனால், இந்திய ஹாக்கி அணி என்று ஒன்று இருப்பதே பலருக்குத் தெரியாது.

கிரிக்கெட்டை விட உலகின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் விளையாட்டு கால்பந்து.

கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கும் அளவுக்கு இந்தியாவில் கால்பந்து ரசிகர்கள் இல்லை. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில், இதுவரை இந்திய அணி இடம்பெறவே இல்லை.

டென்னிஸ் விளையாட்டின் லியாண்டர் பயஸையும், மகேஷ் பூபதியையும் செய்தித்தாள்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. மற்ற நாடுகளில் பெரிய அளவில் போற்றப்படும் டென்னிஸ் கூட, இங்கே கேட்பாரற்றே இருக்கிறது.

சதுரங்க விளையாட்டின் விஸ்வநாத ஆனந்தையும் நாம் கொண்டாடிவிடவில்லை. உலக அரங்கில் முதன்மை இடம் பெற்றும் அவர் பெரிய அளவில் அறியப்படவில்லை.

கிரிக்கெட்டில் தோற்ற தினத்தில் மற்றொரு செய்தியும் சமூகவலைதளங்களில் உலா வந்தது. அதை கிரிக்கெட் கவலையில் நிச்சயம் மறந்திருப்போம்.

கபடியில் உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய கபடி அணியினரை வரவேற்று மகிழ ஒருவரும் இல்லை என்பதுதான் அது.

இப்படி ஏராளமான விளையாட்டு வீரர்களை நாம் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்காக, தொலைக்காட்சிப் பெட்டிகளையும் திருப்புவதில்லை. குற்றாலீஸ்வரன்களுக்கும், விஸ்வநாத ஆனந்துக்கும் சமூக வலைதளங்களில் கூட ஆதரவளிக்க முன்வருவதில்லை.

கிரிக்கெட் விளையாட்டில் வெற்றிபெற்றால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துவிடும் என்று சமூக வலைதளங்களில் கற்பனை கோட்டை கட்டுகிறோம்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் அமைப்பான ராயல் சொசைட்டியின் தலைவராக நம்மூர் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாட மறந்துவிட்டோம்.

உலகில் உயர்ந்து நின்றும் உள்ளூரில் அங்கீகாரம் கிடைக்காத நம்மவர்களின் ஏக்கத்தை எப்போது உணரப் போகிறோம்?

கிரிக்கெட்டைக் கொண்டாடுங்கள். ஆனால், மற்ற விளையாட்டு வீரர்களையும் கவனியுங்கள். உலக அரங்கில் நமக்கு பெருமை தேடி தந்தவர்களை ஒரு நொடியாவது போற்றுவோம்.

ஏராளமான விளையாட்டுகள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றன. அவற்றையும், வளரும் பருவத்தினருக்குக் கற்றுத் தருவோம்.

வரும் கோடை காலத்தை, அனைத்து விளையாட்டுகளையும் ஆராதிக்கும் திருவிழாக்களாக மாற்றுவோம்.

"பாருங்கள் வளர்ந்த நாடுகளை' என்று மற்ற விஷயங்களுக்கு கைகாட்டும் நாம், அந்த நாடுகள் அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் தருவதைப் புரிந்து கொள்வோம்.

அனைத்து விளையாட்டு வீரர்களையும் பாரபட்சமின்றி ஊக்குவிப்பது, அரசின் கடமை மட்டுமல்ல. நமது பொறுப்பும் கூட. இதைப் புரிந்து கொண்டால் மட்டுமே உலக அரங்கில் நமது விளையாட்டுத் துறையின் பெருமை உயரும்.

தேர்வு முறைகளில் பெரிய மாற்றம் தேவை

தமிழ்நாட்டில் உள்ள தேர்வு முறைகளில் பெரிய மாற்றம் தேவை என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. பிளஸ்–2 தேர்வில் தமிழ்நாட்டில் விஞ்ஞான ரீதியாக நடந்த ஒரு பெரிய முறைகேடு மிகுந்த கவலையை அளிப்பதாக உள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு இன்று முடிகிறது. கடந்த 18–ந்தேதி கணிதத்தேர்வு நடந்தது. கணிதத்தில் 200–க்கு 200 வாங்கினால்தான், என்ஜினீயரிங் கல்லூரிகளில் ‘பிரி சீட்’ நிச்சயம் என்ற உணர்வில், இந்த தேர்வுக்கு தனி முக்கியத்துவம் உண்டு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 323 மாணவர்கள் தேர்வு எழுதினர். அங்கு தேர்வு தொடங்குவதற்கு முன்பு, அந்த வகுப்பறையில் கண்காணிப்பாளராக பணியில் இருந்த ஒரு ஆசிரியர், கணித வினாத்தாளை அப்படியே தனது செல்போனில் படம்பிடித்து, அதை ‘வாட்ஸ் அப்’ மூலம் தன்னுடைய நண்பர்களான வெளியே உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு அனுப்ப, அவர்கள் அந்த வினாக்களுக்குரிய விடைகளை தங்கள் வாட்ஸ் அப் மூலம் தேர்வு அறைக்குள் இருக்கும் ஆசிரியர்களுக்கு அனுப்பி, அந்த செல்போன் தகவல்கள் மாணவர்களுக்கும் பரிமாறப்பட்டதாக புகார் எழுந்ததன் அடிப்படையில், இப்போது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், பல இடங்களில் தேர்வு மையங்களில் மாணவர்களை காப்பி அடிக்க அனுமதி அளிக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. கிருஷ்ணகிரியில் ஒரு ஆசிரியை வினாத்தாளை ஜெராக்ஸ் எடுத்து, அதில் விடைகளை ‘டிக்’ செய்து மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறார். இவ்வளவு பெரிய முறைகேடுகள் நடந்தது நன்றாக படிக்கும் மற்ற மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கை அற்ற நிலையை இப்போது ஏற்படுத்திவிட்டது. நாம் கஷ்டப்பட்டு படித்து தேர்வை எழுதும்போது, படிக்காத மாணவர்களும் இப்படி முறைகேடுகளால் நமக்கு இணையாக மார்க் எடுக்கிறார்களே என்ற சலிப்பு வந்துவிடும். இந்த சம்பவங்கள் ஒரு சந்தேகப்பார்வையை நமது தேர்வுத்துறை மீது ஏற்படுத்திவிட்டது. தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது செல்போன்களுக்கு தடை உள்பட வினாத்தாள்கள் வெளியே செல்லாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்று தீவிரமாக ஆராய்ந்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், வினாத்தாள்களிலேயே பல தவறுகள் இருப்பதும் வெளியே வந்துவிட்டது. வினாத்தாள்களில் உள்ள தவறுகளை தேர்வு எழுதிவிட்டு வெளியேவரும் மாணவர்களே வெளியே சொல்லி குறைப்பட்டுக்கொள்ளும்போது, வினாத்தாள் தயாரிப்பு, அதை சரிபார்ப்பு ஆகிய நேரங்களில் ஏன் கற்றறிந்த ஆசிரியர்களுக்கும், கல்வித்துறைக்கும் தெரியாமல் போய்விட்டது.

மாணவர்களின் அறிவாற்றலை சோதிப்பதற்குத்தான் தேர்வு, வினாத்தாள்கள் என்றால், அதிலேயே தவறு என்றால் எங்கு செல்வது என்பதுதான் இப்போது சமுதாயத்தில் உள்ள பெரிய கேள்வி. பொதுவாக நமது கல்வி முறையிலேயே பெரிய மாற்றம் தேவை. வினாத்தாள் லீக் ஆகிறது, வாட்ஸ் அப்பில் வெளியே தகவல்கள் அனுப்பப்படுகிறது என்பது போன்ற குறைபாடுகளைத்தவிர, விடைத்தாள்கள் மதிப்பீடு, மார்க் பட்டியலில் கூட்டலில் தவறு என்று தொடர்ந்து தவறுகள் நடக்கிறது. அதனால்தான் பொதுவாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன், மறுமதிப்பீடு, மறுகூட்டல் போன்றவற்றுக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இதுபோன்ற குறைபாடுகள் எதுவுமே பள்ளிக்கூட, பல்கலைக்கழக தேர்வுகளில் இல்லாத ஒரு நிலையை உருவாக்க, கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், தேர்வு முறைகளிலேயே நம்பிக்கை இல்லாத நிலை உருவாகிவிடும்.

Monday, March 30, 2015

தொலைதூர அரசு பஸ்களில் ஏப்ரல் 1 முதல் ‘வை-ஃபை’

தனியார் பஸ்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் வரும் 1-ம் தேதி முதல் தொலை தூரம் செல்லும் அரசு பஸ்களில் கம்பியில்லா இணையதள (வை-ஃபை) வசதி வழங்கப்படும் என்று ஆந்திர அரசு தெரிவித் துள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில அரசு பஸ் ஊழியர் சங்க தலைவர் ஸ்ரீஹரி நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தனியார் பஸ்களின் போட்டியை சமாளிக்க ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு செல்லும் அரசு சொகுசு பஸ்களில் வை-ஃபை வசதி வழங்கப்படும்.

இந்த வசதியை பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து இந்த வசதி தேவைப் படும் பயணிகளிடம் கூடுதலாக மணிக்கு ரூ.10 வசூலிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக விசாகப்பட்டினம், குண்டூர், திருப்பதி ஆகிய நகரங் களில் இருந்து புறப்படும் அனைத்து அரசு சொகுசு பஸ்களிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.

மேலும் இந்த வசதி உள்ள பஸ்களில் ஒரு கணினியும் இருக்கும். இதில் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் 500 சி.டி.கள் இருக்கும். இதில் பயணிகள் தங்களுக்கு விருப்பமான படத்தைக் காணலாம்.

பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள்? by திண்ணை வாத்தியார்

Return to frontpage


சிந்தனைக் களம் » வலைஞர் பக்கம்


கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முன்னிட்டுப் பலவித சோதனைகளைக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலரும் விதவிதமான பலபரீட்சைகளைப் பிரயோகித்து வருகிறார்கள். எல்லாம் சரி. யாருக்காக? எதற்காக? என்பதுதான் முக்கிய விஷயம்.

கற்றல் திறன் குறைவான மாணவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி, அவ்வப்போது அவர்களின் பெற்றோரிடம் மாணவரின் பயிற்சியைக் குறித்து விவாதிக்கவேண்டும். அதிகாலையில் வாசிக்க, மாணவன் அல்லது மாணவியை எழுப்ப வைக்கவேண்டும். இரவு 9 மணிக்குத் தொலைபேசியில் அழைத்து, மாணவர் கற்கிறாரா என்பதை உறுதிபடுத்தவேண்டும். தலைமையாசிரியிடம் ஒவ்வொரு வாரமும் எந்தெந்த மாணவருக்கு, எத்தனை முறை, எந்தெந்த நேரத்தில் தொலைபேசியில் உரையாடப்பட்டது என்கிற விவரத்தை ஆசிரியர்கள் கையால் எழுதி அளிக்கவேண்டும். இதுதவிர. ஆசிரியர்கள் கூட்டாகவோ, தனியாகவோ ஒரு மாணவ, மாணவியரின் வீட்டிற்குச் சென்று அவ்வப்போது பார்க்கவேண்டும். அதாவது உங்களின் முழுசிந்தனையும் மாணவரை நோக்கி இரவு பகல் அமையவேண்டும் என்பதே கல்வித்துறையின் விருப்பம்.

என்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?

சமீபத்தில் ஒரு விழிமாற்றுத்திறனாளி ஆசிரியர் தன் ஊரிலிருந்து தனியாகக் காலை 5 மணிக்குப் பேருந்து பிடித்து, தான் பணிபுரியும் பள்ளிக்குக் காலை 6 மணிக்கு வந்து வகுப்பு எடுக்கிறார். உண்மையில் அவர் வந்து சேரும்வரை அவருக்கு எதுவும் துர்சம்பவம் நடக்கவில்லை என்பது ஓர் ஆறுதல். பிறகு அவர், மாலை வகுப்பு முடிந்தபின் சமுதாயக்கூடத்தில் இரவு 9 மணி வரை எடுத்துவிட்டு வீடு திரும்புகிறார். அவருக்குச் சர்க்கரை நோய். ஏதாவது அவருக்கு விபரீதம் ஏற்பட்டால் அதற்கு அவர்தான் பொறுப்பு. வீடு திரும்பும் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு விபரீதம் ஏற்பட்டால் அவர்தான் பொறுப்பு.

மற்றொரு ஆசிரியர் குழு மாணவர்களின் இல்லம் நோக்கிச் செல்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களை அந்த ஊரில் வைத்துத் தனிப்பயற்சி தருகிறது. அதாவது மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். நீங்கள் இல்லம் நோக்கிச் சென்று கற்பிக்கவேண்டும். ஏன் வருவதில்லை? என்று கேட்கக்கூடாது. அதற்காகத் தான் இல்லம் நோக்கிப் பள்ளி என்ற திட்டம். இது ஒரு புதிய உத்தி. இந்த உத்தியைப் பயன்படுத்தி மாணவர்களைத் தேடித் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவேண்டும்.

இன்னொரு ஆசிரியர், இரவு 7 மணி முதல் 11 மணி வரை வகுப்பு எடுத்துவிட்டு, மாணவர்களுடன் அங்கேயே தூங்கிப் பின் அதிகாலை 4 மணிக்கு எழுந்து வகுப்பைத் தொடங்கி காலை 7 மணி வரை எடுத்துவிட்டு வீடு திரும்பி, ஓய்வு எடுத்துவிட்டுக் காலை 9 மணிக்குப் பள்ளி திரும்புகிறார். மாணவர்களும் அவ்வண்ணமே. இதற்கிடையில் மாணவருக்குத் தேவையான உணவை ஆசிரியர்தான் தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்தாகவேண்டும்.

ஒரு பெண் ஆசிரியர் மாணவர்களைத் தம் இல்லத்துக்கு அழைத்துச் சென்று உணவு அளித்துக் கற்பிக்கிறார். சனி, ஞாயிறுகளில் தன் வீட்டில் உணவளித்துப் பயிற்சி அளிக்கிறார்.

இன்னொரு ஆசிரியை தன்னுடைய பணிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, தன் குடும்பத்தை மறந்துவிட்டு, ஞாயிறு முழுவதும் மாணவர்களுக்குக் கற்பிக்கவருகிறார். அவருடைய குடும்பத்தைப் பற்றிய முழுசிந்தனையையும் அவர் ஒதுக்கிவிட்டுக் கற்பிக்கிறார். இரவு வீடு திரும்பியபின், அவருக்குத் தொலைபேசி ஒன்று வருகிறது. மது அருந்திய ஒருவர், அவரிடம் தவறாகப் பேசும் நிகழ்வு ஏற்படுகிறது. அதாவது மாணவரின் தந்தை. மறுநாள் காலை அவர் மன்னிப்பு கோருகிறார். இதையும் அந்த ஆசிரியை சகித்துக்கொள்ளவேண்டும். ஒரு ஆசிரியையின் தொலைபேசி எண் ஏன் பொதுமக்களுக்குரியதாக வேண்டும்?

ஒரு ஆசிரியர் தன் மோட்டார் சைக்கிளில் ஒவ்வொரு ஊராகச் சென்று, அரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது போல, மாணவர்களைச் சேர்த்துவந்து, கட்டாயமாக உட்காரவைத்துத் தேர்ச்சிக்காகக் கற்பிக்கிறார். மீண்டும் அவர் அந்த மாணவர்களை ஊரில் விட்டுவிட்டு தன் வீடு திரும்ப இரவு 10 ஆகிவிடுகிறது. வரும் வழியில் மாணவர்களுக்கு ஏற்படும் அசாம்பாவிதத்திற்கு அவரே பொறுப்பு. அவருக்கு ஏற்படும் அசம்பாவிதத்திற்கு யாரும் காரணம் ஆகமுடியாது. காரணமும் கோரமுடியாது.

காலை 6-9 வரை சிறப்பு வகுப்பு, பின் 9.00 - 4.30 வரை வழக்கமான வகுப்பு, பிறகு 4.30 - 5.30 வரை சிறப்பு வகுப்பு, பின்பு 6-9 வரை இரவு வகுப்பு, காலை 4-6 வரை சிறப்பு வகுப்பு, சனி, ஞாயிறு முழுவதும் சிறப்பு வகுப்பு என மாறி மாறி சிறப்பு வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் மாணவன் மூச்சுவிடவும், ஆசிரியர் ஓய்வு எடுக்கவும் நேரம்தான் இல்லை. இத்தனை சிறப்பு வகுப்புகள் எதற்காக?

ஏன் இந்த ஓட்டம்..?

ஒரு கற்பவரின் தேர்ச்சி ஒரு பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துகிறது. ஒரு பள்ளியின் உயர்ச்சி, மாவட்டத்தின் உயர்ச்சி அதாவது மாநில அளவில் அதன் தரம் உயர்கிறது. ஒரு வேளை கற்பவர் தோல்வி அடைந்தால் ஒரு பள்ளி, மாவட்டத்தின் தரம் வீழ்கிறது. எனவே ஒரு பள்ளி உயரவேண்டும், ஒரு மாவட்டம் மாநில அளவில் தரம் உயரவேண்டும் என்று ஒட்டம்தான் இதற்குக் காரணம். இந்த ஓட்டம் கடந்த 6 ஆண்டுகளாக நிகழ்கிறது. மாணவர், ஆசிரியர், பள்ளி, மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் என்ன? என்று கேள்வி எழுதாதபோது, ஏன் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஏன் இந்த ஓட்டம் நிகழவில்லை? என்பதுதான் கேள்வி.

இந்த சிறப்பு வகுப்புகள் எத்தனை மாதங்கள் நடக்கின்றன என்ற கேள்வி எழுந்தால், தேர்வுக்கு இரண்டு மாதம் முன்புதான் என்பது பதில். உடனடி உணவு என்பதுபோல் உடனடி பயிற்சி. இந்த உடன் அடி பயிற்சியில் மாணவர்களைத் தேரவைக்கவேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களைத் தன்பிள்ளைபோல், மாணவர்களின் வறுமைக் குடும்பத்தைத் தன் குடும்பம்போல் பாவித்து. சகிப்புத்தன்மையுடன், எவ்வளவு அவமானம் ஏற்பட்டாலும் பொறுமையுடனும், ரோஷத்தையும் கவுரவத்தையும் விட்டுவிட்டு, இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தவேண்டும். இது எல்லாம் எதற்காக?

ஒரு மாணவர் தேர்ச்சி அடைய போதுமான மதிப்பெண் 35-க்காக. அதாவது ஒவ்வொரு பாடத்திலும் 1 மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே அந்த மாணவர் தேர்ச்சி அடைந்துவிடுவார். பள்ளி நாட்கள் மொத்தம் 205. இந்த நாட்களில் ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் மட்டுமே படிக்க ஒரிரு வாரம்போதும். ஆனால் என்ன நடக்கிறது? ஆசிரியர் கற்று தரும் பாடங்களைத் தினமும் நேரம் ஒதுக்கி வாசிக்காமல், சமூகச் சீர்க்கேட்டிற்கும் விளையாட்டுக்கும் பொழுதுபோக்குக்கும் நேரத்தை வீணடித்த மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் அயராது பாடுபடவேண்டும். கோடிக்கணக்காகப் பள்ளிக்குச் செலவழிக்கும் அரசை எந்த விதத்திலும் குறை சொல்ல இயலாது. அது பள்ளியையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நன்றாகத்தான் வைத்துள்ளது. ஆனால், ஓர் அரசுப் பள்ளியில் கால் சதவீத மாணவர்களின் பொறுப்பின்மையால் அரசும் ஆசிரியர்களும் படாதபாடுபடுகிறார்கள். மாணவர்களுக்கு அளிக்கப்படும் அத்தனை சலுகைகளும் உதவிகளும் கேலிக்குரியதாகின்றன.

பெற்றோரின் பொறுப்புதான் என்ன?

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?

அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்? சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள். சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?

* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

சொல்லத் தோணுது 27: பலி கேட்கும் பயணங்கள்....by தங்கர் பச்சான்

Return to frontpage

பலருக்கும் பயண அனுபவம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பயணம் செய்ய முற்படும் போதெல்லாம் மரணபயமும் வந்து தொற்றிக் கொள்கின்றன. வீட்டை விட்டுப் புறப்படும் போது கடவுளை வேண்டிக் கொள்வதைத் தவிர வேறெந்த வழியும் தெரிவதில்லை. தொடர்வண்டி, வானூர்தி விபத்துகள் எப்பொழுதோ ஒன்று ஏற்படுவதைப் போல அல்ல சாலைவழிப் பயணங்கள். விபத்து செய்திகள் இல்லாத நாட்களே இல்லை எனலாம்.

வெறும் செய்தியாகவே அதனை ஊடகங்களில் பார்ப்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும், அந்த விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைப் பற்றி சிந்திக்க நேரமோ தேவையோ இருப்பதில்லை. வெறும் புள்ளி விபரங்களுக்குள் அவர்களின் வாழ்வு முடிந்து விடுகிறது.

ஒரு சாலை விபத்து ஏற்படும் போது எதனால் அது நிகழ்ந்தது என்பதற்கான காரணங்கள் ஆராயும் முன்னரே அரசாங்கம் உதவித் தொகையை மட்டும் அறிவித்துவிட்டு தனது கடமையை முடித்துக் கொள்கிறது.

விபத்து என நடந்தால் வாகனம் ஓட்டிவந்தமுறை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எல்லா விபத்துகளும் வெறும் வாகன ஓட்டிகளால் மட்டுமே நிகழ்வதில்லை. சாலையின் ஒழுங்கு, வாகனத்தின் இயங்குநிலை, வாகன ஓட்டியின் உடல்நிலை என அனைத்துமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

சாலையின் ஒழுங்கு மற்றும் சீர்கேட்டினால் ஏற்படுகின்ற விபத்துக்கள் பற்றி இதுவரை ஆராயப்பட்டதாகவோ, அவ்வாறு ஆராயப்பட்டாலும் அதனை உருவாக்கியவர் மீதும் மேற்கொண்டு பராமரித்த ஒப்பந்ததாரர் மீதும் அதற்குக் காரணமாக பின்புலத்தில் இயங்கும் அதிகாரிகள் மற்றும், அரசாங்கத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

ஒரு சாலை என்பது உருவாக்கப்படும் போதும், பின் அது பராமரிக்கப்படும்பொது மேற்கொள்ள வேண்டிய நிபந்தனைகள் இங்கு கடைபிடிக்கப்படுகின்றதா? பொறுப்பிலுள்ளவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, தங்களுக்கு சேரவேண்டியதைக் கொடுத்தால் போதும் எவருக்கும் அந்தப் பணியைக் கொடுத்துவிடலாம் என்னும் நிலையில் தான் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒழுங்கான, நேர்மையான முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் ஒரே ஒரு சாலையாவது நம் நாட்டில் தேறுமா?

இவைகளெல்லாம் முறையாக மேற்கொள்ளப்பட்டன என கையெழுத்திடும் அமைச்சர்களும் அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளும், சாலை உருவாக்கிய ஒப்பந்ததாரரும் நீதிமன்றத்தால் என்றைக்காவது ஒருநாள் தண்டிக்கப்படும் பொழுதுதான் இவைகள் தொடர்பான குற்றங்கள் குறையும். அதுவரை முடித்து வைக்கப்படும் கணக்காகவே அனைத்து விபத்துக்களின் காரணங்களும் காணாமல் போகும். மனிதக் கொலை வழக்குகளுக்கு நீதிமன்றங்களில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் விபத்துத் தொடர்பான வழக்களுக்கு தரப்படுவதில்லை.

அதேபோன்று விபத்துக்குக் காரணமாகும் வாகனங்கள் பெரும்பாலும் அதன் தன்மையை இழந்து போன சாலைகளில் இயக்கத் தகுதியற்ற மிகப்பழைய வாகனங்களாகவும், பராமரிப்பு அற்றவைகளாகவும் இருப்பது இன்னொரு முதன்மையானக் காரணம். போக்குவரத்து அதிகாரியிடமிருந்து உரிமம் பெறுவதிலிருந்து நேர்மையான முறைகளைப் பின்பற்றப்படுவதில்லை. அதன் தரக்கட்டுப்பாட்டையும், தகுதி கட்டுப்பாட்டையும் நேர்மையாகவும், கண்டிப்புடனும் செயல்படுத்தினாலே முக்கால்வாசி விபத்துக்கள் தவிர்க்கப்படும். அந்தப் பதவியைப் பெறுவதற்காகவும், பணி இடமாற்றத்திற்காகவும் அந்த அதிகாரிகள் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து தங்களின் நேர்மையை இழக்க வேண்டியிருக்கிறது. விபத்துக் காரணங்களை உண்மையுடன் ஆராய்ந்தால் எத்தனை அதிகாரிகள் தப்புவார்கள் என்பது தெரியவரும். அவைகளெல்லாம் இனி எக்காலத்துக்கும் நடக்கப் போவதில்லை.

குடிப்பழக்கம் பெறுகிவிட்ட கடந்த ஆண்டுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டேப் போகிறது. நெடுஞ்சாலை மற்றும் உள்ளூர் சாலைகளின் ஓரமாக மதுக்கடைகள் இயங்கக்கூடாது என வழக்குப் போட்டுப் பார்த்தார்கள். நீதிமன்றமும் கட்டளைப் பிறப்பித்தது. நீதிமன்றத்தின் ஆணைகள் எத்தனையோ கண்டுகொள்ளப்படாமல் மீறப்பட்டு கொண்டிருப்பதுபோல் மதுக்கடைகளும் நெடுஞ்சாலைகளிலிருந்து அகற்றப்படவில்லை. சில இடங்களில் வெறும் வாசல்படிகளை மட்டும் வேறுப்பக்கம் மாற்றி வைத்துக் கொண்டார்கள்.

எல்லா விபத்துக்களும் குடிமக்களின் தலையிலேயே அவர்களின் குடும்பத்திலேயே ‘பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்பதுபோல விழுந்து கொண்டிருக்கின்றன. மக்களால் முடிந்ததெல்லாம் எலுமிச்சம்பழத்தை சக்கரத்தில் ஏற்றிவிட்டு சாலையோக் கடவுரை வேண்டுவது மட்டும்தான்.

தங்களின் வாகனத்தை வேறொரு வாகனம் கடப்பதை எவருமே விரும்புவதில்லை. என்னையா மீறினாய்? என்னுடைய வாகனத்தின் மதிப்பு என்ன? சுண்டைக்காய், நீ முந்துகிறாயா என வேகக்கட்டுப்பாட்டை பொருட்படுத்தாமலேயே ஒருவரையொருவர் முந்திக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் தொகை அதிகரித்ததால் வாகனங்கள் அதிகரித்திருக்கிறது. அதனால் விபத்துக்களும் அதிகமாகும்தானே எனச் சொல்லலாம். விலை மதிப்பற்றவை உயிர்கள் மட்டுமே. இவை அயல்நாடுகளில் மட்டுமே பின்பற்றப்படுகின்றன. சாலை விபத்து ஒன்று நிகழும்போது அங்கு மேற்கொள்ள வேண்டிய உடனடியான நடவடிக்கைகள் உடனுக்குடனாக செயல்படுத்தப்படுகின்றன. அதேபோல் இங்கு இதனை சரி செய்யக்கூடியவர்கள் உயர்நிலையிலுள்ள அதிகாரிகளும், ஆட்சியாளர்களும்தான்.அவர்கள் ஒருபோதும் இதில் அக்கரை செலுத்துவதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களிடம் ஹெலிகாப்டர் இருக்கிறது, சிவப்பு விளக்கு பொருத்திய மக்களை விரட்டியடிக்கும் வாகனங்கள் இருக்கின்றன. இங்கு பயந்து பயந்து பயணம் செய்பவர்களெல்லாம் இவர்களை பதவியில் அமர்த்தும் மக்கள்தான்.

சாலை விபத்துக்கள் குறித்த செய்திகளை கண்ணுறும் போதெல்லாம் அதனால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள்தான் என் கண் முன் வந்து நிற்பார்கள். தந்தையை இழந்து வாழ்க்கைத் தவறவிட்டப் பிள்ளைகள், கணவனை இழந்து, மனைவியை இழந்து குழந்தைகளுடன் போராடும் குடும்பத்தலைவனும் தலைவியும், உடன்பிறந்தவர்களை இழந்து வாடும் அண்ணன், தம்பி, தங்கை, அக்காக்கள், திருமணத்துக்கு நாள் குறித்துவிட்ட மணமக்கள், மணம் முடிந்து கற்பனைகளுடன் வாழ்வைத் துவக்கவிருந்த இளம் கணவன், மனைவி, வாழ்க்கை என்னவென்றே வாழ்ந்துப் பார்க்காத பள்ளிச் செல்லும் இளம் பிஞ்சுகள் என எத்தனையோ உறவுகள் பாதிப்பையும், இழப்பையும் அடைந்து கொண்டிருக்கிறார்கள் . காரணமானவர்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள்? பலிகள் கேட்கும் கடவுளுக்கு பலி கொடுக்கவும் யாகங்கள், பூசை செய்யவும் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், பலிகள் கேட்கும் பயணங்களுக்கு தங்களுக்கு தொடர்பே இல்லாத தங்களின் உயிரைத் தர வேண்டியிருக்கிறதே எனும் கேள்விக்கு பதிலை சிந்திக்க நமக்குத் தெரியவில்லை.

அந்த சாலைப்போட்ட நாளிலிருந்து அந்த குறிப்பிட்ட பாலத்தில் இதுவரை நடந்த விபத்துக்களைக் கணக்கெடுத்தால் நூறுக்கு மேலே கூடப் போகலாம். எத்தனை உயிர்கள் இழப்பு, எவ்வளவோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றன.

கும்பகோணம்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் நெய்வேலி வளைவிலிருந்து வடலூருக்கு செல்லும் வழியில் ஒரு ஓடையின் குறுக்கே எந்தக் காலத்திலோ அமைத்த அந்த ஒரே ஒரு வாகனம் மட்டும் செல்லும் ஒருவழிப் பாலம் பலி வாங்கிய உயிர்கள் கணக்கற்றவைகள்.இந்த வழியாக எத்தனை முறைகள் எத்தனை அமைச்சர்கள், முதலமைச்சர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள் கடந்து போயிருப்பார்கள்?

தீர்வுதான் இல்லை.இதுதான் நம்நாடு!

- சொல்லத் தோணுது…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

ரூ.5-க்கு பயணச் சீட்டு எடுத்துவிட்டு 10 ரூபாய் பிளாட்பார டிக்கெட் எடுக்காமல் சமாளிக்கலாமா? - ‘திட்டத்துடன்’ வரும் பயணிகளுக்கு அபராதம் நிச்சயம்



ரயில்வே பிளாட்பார டிக்கெட் கட்டண உயர்வு வரும் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. ரூ.5-க்கான பயண டிக்கெட்டை எடுத்துவிட்டு சம்பந்தமில்லாத பிளாட்பாரத்தில் நடமாடுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. அதே நேரம், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் பாசஞ்சர் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய்தான். அது மட்டுமின்றி, பிளாட்பார டிக்கெட் எடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும். ஆனால், பாசஞ்சர் ரயில் டிக்கெட் அந்த நாள் முழுக்க செல்லுபடியாகும். புறநகர் ரயில் டிக்கெட்கூட 1 மணி நேரம் வரை செல்லுபடியாகும். எனவே, 5 ரூபாய்க்கான பயணச் சீட்டை எடுத்து வைத்துக்கொண்டு, பிளாட்பார டிக்கெட் எடுக்காமல் சமாளித்துவிடலாம் என்ற மனநிலையில் சில பயணிகள் உள்ளனர்.

இதற்கு வாய்ப்பு இல்லை. ரயில்வே நிலையங்களில் கண் காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்கின்றனர் ரயில்வே உயர திகாரிகள். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு தினமும் 7 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். பயணிகள், அவர்களை வழி யனுப்ப வருபவர்களைவிட மற்றவர்களின் கூட்டம் அதிகம் உள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் ரகசிய ஆய்வு நடத்தியது. சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு துணையாக தங்கியிருப்பவர்கள் பலர் தினமும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வந்து காலைக்கடன் முடித்து, குளித்துவிட்டுப் போகின்றனர். கட்டிட வேலைக்கு செல்பவர்கள் பலர், ரயில் நிலையத்திலேயே படுத்து தூங்கி, காலையில் எழுந்து குளித்துவிட்டுச் செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து சொந்த வேலைக்காக வருபவர்கள் பலரும் ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைகின்றனர்.

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால், பல பகுதிகளில் பொது கழிப்பிடங்கள் பயன்பாட்டில் இல்லை.

இவர்கள் நடமாட்டத்தைக் குறைக்கவே பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. பிளாட்பார டிக்கெட் இல்லாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் முறை ஏப்.1 முதல் தீவிரமாக அமல்படுத்தப்படும்.

பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அந்த ரயில்கள் வரும் இடத்துக்கு மட்டும் செல்லவேண்டும். புற நகர் ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அந்த பகுதிக்கு மட்டும் போய் வர வேண்டும். பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் ரூ.10-க் கான பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டும். ரூ.5 கட்டணம் கொண்ட பயணச் சீட்டை எடுத்துவிட்டு சம்பந்தமில்லாத பிளாட்பாரத்தில் நடமாடுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VALLIAMMAI COLLEGE WINS "A" GRADE FROM NAAC

CHETTINAD ADMISSION NOTIFICATION 2015-15


மருத்துவச் சேவையில் குறைபாடா?

ஒரு மனிதன் வாழ்நாளில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வது தனது உடல் நலத்தைப் பேணுவதில்தான். இதற்காக நடைப் பயிற்சி, யோகா, தியானம் போன்ற பயிற்சிகளையும் மேற்கொள்கிறான்.

காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற சிறிய அளவிலான நோய்களைத் தவிர, பிறவற்றை அறியாத நிலையில் மக்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்தனர். மேலும், அவற்றைக் குணப்படுத்துவதற்கு அவர்கள் அலோபதி மருத்துவரை நாடிச் செல்லவில்லை. மூலிகைகளை மருந்தாகப் பயன்படுத்தி குணம் அடைந்தனர்.

ஆனால், இன்றைய நிலை? தலைவலி என்று மருத்துவமனைக்குச் சென்றால், பல்வேறு பரிசோதனைகளைச் செய்து, பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாக வசூலித்துவிட்டு, "உங்களுக்கு மூளையில் கட்டி உள்ளது. இதை உடனடியாக அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து' என மருத்துவர் நமக்கு பீதியை ஏற்படுத்துகிறார்.

வசதி படைத்தவர்களால் சில லட்சங்களைச் செலவிட முடியும். ஆனால், ஏழைகளுக்கு இது சாத்தியமா? மேலும், மூளையில் கட்டி ஏழை, பணக்காரன் என்று பார்த்து வருவது இல்லை.

ஏழைகளுக்கு ஆபத்பாந்தவனாக விளங்குபவை அரசு மருத்துவமனைகள். அங்குதான் உயர் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகையான சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

மத்திய, மாநில அரசுகள் ஒவ்வோர் ஆண்டும் தங்கள் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கென சில ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்குகின்றன.

தமிழக அரசு 2015-16-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சுகாதாரத் துறைக்கென ரூ.8,245 கோடி ஒதுக்கப்பட்டது. இது மொத்த நிதி ஒதுக்கீட்டில் 4.52 சதவீதமாகும்.

2010-11-ஆம் நிதியாண்டில் இத் துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதி ரூ.4,395.31 கோடி. அதாவது, ஆண்டுக்கு ஆண்டு இத் துறைக்கென ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகரித்து வருகிறது.

இதுதவிர, தேசிய சுகாதார இயக்கம், உலக வங்கி இவற்றின் உதவியுடன் பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதற்கென கணிசமான நிதி ஒதுக்கப்படுகிறது.

மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு மக்களிடையே தற்போது அதிகரித்துள்ளது. மக்களின் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில், புதிய மருத்துவமனைகளையும், புதிய மருத்துவக் கல்லூரிகளையும் துவக்குவதிலும் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.735.42 கோடியும், உபகரணங்கள் வாங்க ரூ.360.51 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் "எய்ம்ஸ்' மருத்துவமனையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.

கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பெரு நகரங்களில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் வரை பல்வேறு நிலைகளில் மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு வசதிகள் செய்யப்பட்டிருந்தும், முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

ஒரு கர்ப்பிணிப் பெண் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றால், அங்கு அவரது பிரசவத்துக்கு உரிய வசதிகள் இல்லை என்று அருகில் உள்ள வட்ட அளவிலான மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். இடைப்பட்ட நேரத்தில் அந்தக் கர்ப்பிணி படும் துயரம் சொல்லி மாளாது. இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும்?

பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளி உயிரிழந்த உதாரணங்கள் ஏராளம். இதனால், மருத்துவமனைகளைச் சேதப்படுத்துவதும், மருத்துவமனை ஊழியர்களைத் தாக்குவதும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றன.

இறக்குமதி செய்யப்படும் பல்வேறு நவீன இயந்திரங்களை இயக்குவதற்கு போதிய தொழில்நுட்பப் பணியாளர்கள் இல்லாததால், அவை பல மருத்துவமனைகளில் காட்சிப் பொருளாக உள்ளன. இதில் வீணாவது மக்களின் பணம் என்பது ஏன் நிர்வாகத்துக்குத் தெரிவதில்லை?

மேலும், அரசு மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நோய்க்கு சிகிச்சைக்கு வரும் நோயாளி, அங்குள்ள சிறப்பு மருத்துவர் நடத்தும் தனியார் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படுகிறார்.

அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை என்று கூறினாலும், ஒவ்வொரு சோதனைக்கும் சில நூறு ரூபாய் நோட்டுகளை நீட்டாவிட்டால், எதுவும் நடக்காது.

அண்மையில் தென் மாவட்டம் ஒன்றின் தலைநகரில் உள்ள தலைமை மருத்துவமனையில் நிகழ்ந்த காட்சி நமது வேதனையை அதிகரிக்கிறது. இரண்டு வயதுக் குழந்தைக்கு காய்ச்சல். நேரம் இரவு 10 மணி. அரசு மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கிச் செல்கிறார் தந்தை. பணி நேரத்தில் மருத்துவர் அங்கு இல்லை. இரண்டு செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

காத்திருங்கள், மருத்துவர் வருவார் என ஒருவர் கூறுகிறார். குழந்தையுடன் அரை மணி நேரம் காத்திருக்கிறார் அந்தத் தந்தை. அருகிலிருந்த ஓர் அறையில் இருந்து தூங்கி எழுந்த நிலையில், அரைத் தூக்கத்துடன் வெளியே வருகிறார் மருத்துவர். குழந்தையுடன் மருத்துவர் முன் அமர்கிறார் தந்தை.

குழந்தைக்கு என்ன பிரச்னை என்று தந்தையிடம் கேட்ட அந்த மருத்துவர், குழந்தையைப் பரிசோதிக்காமல் மருந்து, மாத்திரைகளை மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு, மீண்டும் தமது தூக்கத்தைத் தொடர அறையை நோக்கிச் செல்கிறார்.

அரசுப் பணத்தில் படித்து, அரசுப் பணியைப் பெற்று, கைநிறைய ஊதியம் பெற்றுக் கொண்டு இப்படி விரும்பத்தகாத வகையில் நடந்துகொள்வது எந்த வகையில் நியாயம்?

இதற்காக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைவரும் முறையாக பணிபுரியவில்லை என்று கூறவில்லை. சிலர் செய்யும் தவறுகள், ஒட்டுமொத்த மருத்துவர் இனத்தையும் பழிக்கு ஆளாக்குகிறது என்பது கசப்பான உண்மை.

வேண்டாமே மானியம்!

சமையல் எரிவாயு உருளை பெறுகின்ற வசதி படைத்த நுகர்வோர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று தாங்களாகவே அறிவிக்க முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுதில்லியில் மார்ச் 27-ஆம் தேதி நடைபெற்ற எரிசக்தி சங்கம் நிகழ்வில் பேசியபோது இதனைக் குறிப்பிட்ட பிரதமர், இதுவரை 2.80 லட்சம் நுகர்வோர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று விட்டுக்கொடுத்திருப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி சேமிப்பு கிடைக்கும். இதனை ஏழை, எளியோர் நலனுக்காகப் பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வசதி படைத்தோருக்கு சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்படுவது குறித்து அரசு யோசித்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியபோது பெரும் எதிர்ப்பு எழுந்தது. அதன்பிறகு, அது குறித்து அமைச்சர் பேசவில்லை. இருப்பினும், வசதி படைத்தவர்கள் தாமாகவே முன்வந்து மானியம் தேவையில்லை என்று அறிவிக்கலாம் என்று கூறிய ஜேட்லி, மானியம் இல்லா எரிவாயு உருளையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, சில பா.ஜ.க. அமைச்சர்களும் தங்கள் சுட்டுரையில், தாங்களும் மானியம் பெறாத எரிவாயு நுகர்வோராக மாறிவிட்டதாக அறிவித்தனர்.

தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று விரும்பும் நுகர்வோர் இதற்கான படிவத்தை எரிவாயு உருளை முகவரிடம் கொடுக்கலாம் அல்லது இதற்கான இணையதளத்தில் தாங்களே பதிவு செய்யலாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டன. இப்போது பிரதமர் அறிவிப்பின்படி நாட்டில் மொத்தம் 2.80 லட்சம் பேர் இவ்வாறாக மானியம் பெறா எரிவாயு நுகர்வோராக மாறியிருக்கின்றனர்.

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் ஒரு நாளைக்கு 30 லட்சம் எரிவாயு உருளைகள் (அதாவது ஆண்டுக்கு 90 கோடி உருளைகள்) விநியோகம் செய்யப்படுகின்றன. 15 கோடிப் பேர் வீட்டுச் சமையல் எரிவாயு உருளைக்கான இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள். இவர்களில், அதிகபட்சமாக 5 கோடிப் பேர் மானியம் பெறா நுகர்வோராக மாறும் அளவுக்கு வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். இருப்பினும், வெறும் 2.8 லட்சம் நுகர்வோர் மட்டுமே இவ்வாறு மானியம் பெறா நுகர்வோராக மாறியுள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

இதுதொடர்பான நீடித்த பிரசாரம்தான் இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும். குறைந்தபட்சம் சொந்த வீடு, சொந்த அடுக்ககத்தில் வசிக்கும் ஒரு நுகர்வோர் இந்த எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுப்பதால் அவருக்கு பெரும் இழப்பு ஏதுமில்லை. ஒரு கார் வைத்திருக்கும் வசதி படைத்தவர் தன்னைத் தானே மானியம் பெறா எரிவாயு நுகர்வோராக மாற்றிக் கொள்வதால் அவருக்கு நட்டமில்லை. நான் எரிவாயு மானியம் பெறா நுகர்வோர் என்று சொல்லிக் கொள்வது பெருமை என்கிற மனமாற்றத்தை ஏற்படுத்தத் தொடர்ச்சியான பிரசாரம் தேவை. எந்தவிதப் பலவந்தமான திணிப்பும் இல்லாமல் அவரவர்களே தங்களது வசதியை நிர்ணயித்துக் கொள்ளட்டும்.

பெட்ரோலியப் பொருள்களுக்காக மட்டும் ரூ.46,458 கோடி மானியம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை வேறு பயன்பாட்டுக்கு திருப்பும் வகையில் மானியத்தை விட்டுக் கொடுத்து, அரசுக்குத் தோள் கொடுக்க வேண்டும். இவ்வாறு அரசின் மானியம் வேண்டாம் என்று சொன்ன நபர்களுக்கு வேறு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்பது ஒன்று விட்டு ஒன்று பற்றியதாக முடியும். வசதி படைத்தோர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மானியத்தை துறந்துவிடுவதுதான் சரி.

மத்திய அரசின் திட்டத்தில் மட்டுமல்ல, மாநில அரசின் திட்டங்களிலும்கூடப் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து, தங்களால் இயன்ற இனங்களில் மானியத்தைத் தவிர்க்க முன்வர வேண்டும். இதன்மூலம், அரசின் நிதிச் சுமையைக் குறைப்பதுடன், முறைகேடுகளுக்கு மறைமுகமாக துணை போகாதவராக அந்த நுகர்வோர் மாறலாம்.

பொது விநியோக மையத்தில் 20 கிலோ விலையில்லா அரிசி எனக்கு வேண்டாம் என்று பொதுமக்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தால், தமிழ்நாட்டில் ஏழைகள் மட்டுமே 20 கிலோ விலையில்லா அரிசியைப் பெற்று பயன்பெறுவர். இதனால் வாங்கப்படாமல், அனைத்து குடும்ப அட்டைகளிலும் அரிசி வாங்கியதாகப் பதியப்பட்டு, அந்த அரிசி மெருகூட்டப்பட்டு, மீண்டும் சந்தைக்கு நம்மிடமே கிலோ ரூ.45-க்கு வரும் அவலநிலை ஏற்படாது.

இதே நிலைப்பாட்டை மக்கள் தாங்களாகவே முன்வந்து, விலையில்லாப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை எனக்குத் தேவையில்லை என்று எழுத்துமூலமாகப் பதிவு செய்வார்கள் என்றால், இவற்றைப் பெறுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இந்த விலையில்லாப் பொருள்களை கள்ளச்சந்தையில் தள்ளிவிடும் வழக்கமும் இருக்காது.

இதற்கான வழிமுறையை எண்ணெய் நிறுவனங்களைப் போல தமிழக அரசும் உருவாக்க வேண்டும்.

ஒரு கோயில் வாசலில் யாரோ ஒருவர் வழங்கும் அன்னதானத்தை வாங்க கெüரவம் பார்க்கிற மனித மனம், அரசு வழங்கும் விலையில்லாப் பொருள்கள், மானியப் பொருள்களை மட்டும் வேண்டாம் என்று சொல்லத் தயங்குகிறது. காரணம், இது நமது அரசு, நமக்கு கொடுக்கும் பொருள் என்ற உரிமைக்குரல் ஒவ்வொருவருக்குள்ளும் ஒலிக்கிறது. நமக்கு வசதி இருப்பதால் நாம் அதை வேண்டாம் என்று சொல்வதன் மூலம் அரசின் நிதிச் சுமை குறையும், முறைகேடு குறையும் என்பதைப் புரிந்து கொண்டால், தயக்கம் இருக்காது.

Sunday, March 29, 2015

REMARKS BY PRIME MINISTER TO THE MEDIA AT SINGAPORE

Friends, I am visiting Singapore at a sad moment. 

The passing away of H.E. Mr. Lee Kuan Yew marks the end of an era.

He was among the tallest leaders of our times.

Singapore's transformation in one generation is a tribute to his leadership.

In the 50th anniversary year of Singapore's independence, I am sure that he left satisfied with Singapore's achievements and confident about its future.

He inspired not just Southeast Asia, but all of Asia, to believe in its own destiny.

He was a global thinker, who saw things ahead of others. He was an advocate of economic progress, but also made tireless efforts to advance peace and stability in our region.

In India, we deeply valued his friendship and his support for India's economic progress and global role.

He believed in India's potential more than many of us did.

India's economy is growing rapidly.

India's relations with Singapore is one of our strongest relationships in the world.

India's integration with Southeast Asia and beyond is growing. Singapore is a key pillar of India's Act East Policy.

So, his vision is coming true. The seeds he sowed are bearing fruits today.

Personally, he was a source of inspiration for me. His achievements and thoughts give me confidence in the possibility of India's own transformation.

The people of India share this nation's grief over the loss of its founding father and leader.

We are observing a day of public mourning in India today in honour of the departed leader and the deep bonds of friendship that we share with Singapore.

I bring here today the condolences and prayers of the people of India.

5 Dead, Several Injured as A Portion of an Under Construction Building Collapses in Tamil Nadu

NDTV

TIRUVARUR, TAMIL NADU: At least Five persons were killed and 16 injured when a portion of an under construction guest house of the Central University collapsed in Tiruvarur district, Tamil Nadu, early today morning.

Superintendent of Police Jayachandran said, "the portico portion of the under construction structure crashed. We are investigating." The toll could increase as several of the injured were in a serious condition, the police said.

The injured, who are mostly migrant labourers, have been rushed to Thanjavur government hospital.

Police and fire service personnel were searching whether more persons were trapped in the debris. A team of doctors had been rushed to the spot to give treatment and first aid, police said.

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை... இஎம்ஐ செலுத்துபவர்கள் தவிப்பு!

சென்னை/மும்பை: வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால் கடன் தவணையை செலுத்துபவர்கள் தவிப்பில் உள்ளனர். ம்ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதிகளில் ஆண்டு கணக்கு முடிப்புக்காக வங்கிகள் செயல்படாது.

ஏப்ரல் 2ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினமும் வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்து ஏப்ரல் 3ஆம் தேதி புனித வெள்ளியன்று வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்து வரும் சனிக்கிழமை அரைநாள் மட்டுமே வங்கிகள் செயல்படும். அடுத்து ஞாயிறு விடுமுறையாகும்.

இதனால் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படும் என தெரிகிறது. வங்கிகளில் வீட்டுக்கடன் மற்றும் பெர்சனல் லோன் வாங்கியவர்கள், அந்த கடனை திருப்பி செலுத்தும் தவணை தேதிகளாக பெரும்பாலான வங்கிகளில் 1, 4, 7 ஆகிய தேதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு மாதத்தின் கடைசி நாளில் சம்பளம் வங்கிகளில் செலுத்தப்படுகிறது. தனியார் நிறுவனங்களிலும் 1 முதல் 5 வரை அந்தந்த நிறுவனங்களுக்கு தகுந்தவாறு ஊதியம் கிரெடிட் செய்யப்படுகிறது.  பெரும்பாலோனார் இந்த சம்பளத்தை கொண்டே தங்களது கடன் தவணைக்கான பணத்தை இஎம்ஐ எடுக்கப்படும் வங்கி கணக்கில் செலுத்துகின்றனர் அல்லது சம்பளம் கிரெடிட் ஆகும் வங்கி கணக்கில் இஎம்ஐ தொகை எடுக்கப்படுகிறது. இந்நிலையில்  தொடர் விடுமுறை காரணமாக சம்பளம் வழக்கமான தேதியில் கிடைப்பது தாமதம் ஆகும் என்பதால், உரிய தேதியில், குறிப்பாக 4 ஆம் தேதி இஎம்ஐ உள்ளவர்கள் தவிக்கின்றனர். ஏனெனில் அன்றைய தினம் வங்கி செயல்படும் ( சனிக்கிழமை) என்பதால் இஎம்ஐ வந்துவிடும்.  இதனால் வங்கிகளின் தொடர் விடுமுறை குறித்த தகவலை முன்கூட்டியே அறிந்திராதவர்கள் கடைசி நேரத்தில் கையை பிசைந்துகொண்டிருக்கின்றனர்.  

மேலும், தொடர்விடுமுறை காரணமாக ஏடிஎம்-கள் செயல்படாத நிலை ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிகளை சந்திக்க நேரிடும். அவசரத்துக்கு பணம் தேவை உள்ளவர்கள் முன்னதாகவே ஏடிஎம் சென்று தேவையான பணத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

இதற்கு மாற்று ஏற்பாடு செய்யுமாறு ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசை தொழில் கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது. தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாவார்கள் என்றும் அது சுட்டிக் காட்டியுள்ளது.

இத்தகைய தொடர் விடுமுறை பங்குச் சந்தையில் பண பரிவர்த்தனையை பாதிக்கும் என்றும், ஏற்றுமதி, இறக்குமதி, சம்பள பட்டுவாடா உள்ளிட்டவை பாதிப்புக்குள்ளாகும் என்றும் அசோசேம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி தலையிட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளதாக அசோசேம் கூறியுள்ளது.

வங்கிகளில் பெரும்பாலானவை பொதுத்துறை வங்கிகள் என்பதால் இதில் நிதித்துறை தலையிட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு தீர்வு காணலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இதற்குத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று அசோசேம் செயலர் டி.எஸ்.ரவாத் வலியுறுத்தியுள்ளார்.
 
பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்

இதனிடையே வரும் திங்கட்கிழமை முதல் 6 நாட்கள் வங்கிகள் செயல்படுவது குறித்து வெளியான தகவல்களுக்கு நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 30ம் தேதி திங்கட்கிழமையும், 31ம் தேதி செவ்வாய்க்கிழமையும் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
ஏப்ரல் 1ஆம் தேதி ஆண்டு கணக்கு முடிவு, 2 மற்றும் 3ம் தேதி மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய நாட்களில் வங்கிகள் செயல்படாது என்றும், 4ம் தேதி சனிக்கிழமை வங்கிகளில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சனிக்கிழமை அரசு கருவூலத்துக்கு விடுமுறை என்ற நிலையில், அரசு ஊழியர் ஊதியம் 6ஆம் தேதிக்கு தள்ளிப் போக நேர்ந்தால், அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது என்றும் பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உயருகிறது செல்போன் கட்டணம்: நிமிடத்துக்கு 10 பைசா வரை அதிகரிக்கும்!

புதுடெல்லி: செல்போன் அழைப்புக் கட்டணம் நிமிடத்திற்கு 10 பைசா வரை உயர வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தொலை தொடர்புத்துறைக்கான அலைக்கற்றை ஏலம் அண்மையில் விடப்பட்டது. இந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1.09 கோடி லட்சம் வருவாய்க் கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் உரிமம் ஏலம் இதுவரை இந்த அளவுக்கு நடந்தது இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே இந்த ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது.இதனால் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 68 சதவீத பிரிமியத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் தனியார் நிறுவனங்களால் எடுக்கப்பட்டுள்ளது.

19 நாட்களாக 115 சுற்றுக்களில் நடந்த இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனல், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடோ போன், டாடா டெலிசர்வீஸ், யுனினார், ஐடியா செல்லுலார், ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த நிறுவனங்களிடையே நிலவிய போட்டியால் அவற்றின் ஒட்டு மொத்த கடன் இரண்டரை லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் 2ஜி, 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த நிறுவனங்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் பணத்தைக் கட்டும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 28 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாகச் செலுத்த வேண்டியுள்ளது.

அடுத்தக்கட்டமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். எனவே கடன் சுமையைக் குறைக்க செல்போன் அழைப்புக்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையில் தனியார் நிறுவனங்கள் உள்ளன.

செல்போனில் பேசுபவர்களிடம் நிமிடத்துக்கு 5 பைசா முதல் 10 பைசா வரை கூடுதலாக வசூலித்ததால் தான் ஏலம் எடுத்த தொகையை சமாளித்து லாபம் பெற முடியும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே செல்போன் கட்டணங்கள் ஓரளவு உயரும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே செல்போன் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தக்கூடாது என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். செல்போன் கட்டணத்தை நிமிடத்துக்கு 1.3 பைசாவுக்கும் கூடதலாக உயர்த்தக்கூடாது என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ என்ற புதிய நிறுவனம் வாடிக்கையாளர்களை இழுக்க புதிய சலுகை அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிகிறது. அதைப் பொருத்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வை நிர்ணயிக்கும் என்று தெரிகிறது.

மிகுந்த வரவேற்பை பெற்று வரும் அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டம்: தமிழகத்தில் 2.50 லட்சம் கணக்குகள் தொடக்கம்

 பெண் குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை புதுச்சேரி தலைமை தபால் அலுவலகத்தில் சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் தொடங்கி வைக்கிறார்

இந்திய அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செல்வ மகள் சேமிப்பு கணக்குத் திட்டம் (சுகன்யா சம்ருத்தி யோஜனா) மக்களின் பெரும் வரவேற்பை பெற்று மிகக் குறுகிய காலத்திலேயே தமிழகத்தில் ஏறத்தாழ 2.50 லட்சம் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன.

பெண் குழந்தைகளின் எண் ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் மத்திய அரசு இந்திய அஞ்சல் துறை சார்பில் சுகன்யா சம்ருத்தி யோஜனா என்ற சேமிப்புத் திட் டம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய அஞ்சல் துறையின் 4 மண்டலங்களிலும் பிப்ரவரி மாதத்தில் இந்த திட் டம் தொடங்கப்பட்டது. இதில் நேற்று (மார்ச் 25) வரை ஏறத் தாழ 2.50 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் சிறப்பு அம்சம்

அனைத்து அஞ்சல் கிளை அலு வலகங்களிலும் இந்த கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்க பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், அடையாளச் சான்று ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

10 வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ இந்த கணக்கை தொடங்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும்.

கணக்கு தொடங்கியதிலிருந்து 14 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். 21-வது ஆண்டில் கணக்கு முதிர்வடை யும். அப்போது கணக்கில் சேர்ந் துள்ள பணத்தை அந்த பெண் குழந்தையே எடுத்துக் கொள்ள லாம். கணக்கு வைத்துள்ள பெண் ணுக்கு 18 வயது நிரம்பினால், அவரது கல்வி மற்றும் திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற் றுக்கொள்ளும் வாய்ப்புள்ளது.

முதலில் ரூ.1,000 செலுத்தி கணக்கு தொடங்க வேண்டும். தொடர்ந்து ரூ.100 மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். இந்த திட்டம் குறித்து திருச்சி மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜெ.டி.வெங்கடேஸ்வரலு கூறியதாவது:

இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக நிகழ் நிதியாண்டில் 9.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தற்போதுள்ள சிறுசேமிப்புத் திட்டங்களிலேயே அதிக வட்டி வழங்கப்படும் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம்.

தற்போது இந்த திட்டத்தின்கீழ் கணக்கு தொடங்குவதற்கு முக்கிய அஞ்சல் அலுவலகங்களில் தனி கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

மூன்றரை மடங்கு முதிர்வுத்தொகை

உதாரணமாக, மாதந்தோறும் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 செலுத்தினால் 14 ஆண்டுகள் நிறைவில் நாம் செலுத்திய ரூ.1.68 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.3.30 லட்சமாக இருக்கும். இந்த கணக்கு 21-வது ஆண்டில் நிறைவடையும்போது முதிர்வுத் தொகையாக ரூ.6.07 லட்சம் பெறலாம். இது உத்தேசமான கணக்கு தான். வட்டி விகிதம், செலுத்தும் தொகை அதிகமாகும்போது முதிர்வுத் தொகையும் அதிகரிக்கும்.

வலியது வெல்லும்

ஆறு வாரங்களுக்கு மேல் நடைபெற்றுவந்த பரபரப்பான நாடகம் தற்போது முடியும் கட்டத்தை நெருங்கியிருக்கிறது. நாடக முடிவுக்குச் சற்று முன்னதாகவே களப்பலியாகியிருக்கிறது இந்திய அணி! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணிக்கு அடுத்ததாக இந்தியாவும் பலரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி யிருக்கிறது.

தொடர் தோல்விகளுக்குப் பிறகு, உலகக் கோப்பையில் நுழைந்த இந்திய அணிகுறித்து இந்திய ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு பெரிதாக இருக்கவில்லை. ஆனால், இந்திய அணியின் நம்ப முடியாத எழுச்சியைக் கண்டு ரசிகர்கள் பெருமளவில் ஊக்கம் பெற்றிருந் தார்கள். எனினும், ஆரம்பகட்ட எதிர்பார்ப்பு போலவே இந்த உலகக் கோப்பை துயர நாடகமாகவே ஆகிவிட்டது இந்திய அணிக்கு.

கிரிக்கெட் ஆடும் நாடுகளின் மாபெரும் திருவிழாவில் வழக்கம் போலவே பல வெற்றிக் கதைகளும் கண்ணீர்க் கதைகளும் அரங்கேறின. சாதனைகள் நொறுக்கப்பட்டன. பழைய புகழ்கள் சிதறடிக்கப் பட்டன. புதிய நாயகர்கள் தலையெடுத்தார்கள். ஆட்டத்தின் விதிகள் மாறினாலும் சில விஷயங்கள் மாறுவதே இல்லை. ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் அத்தகையது.

என்ன செய்யப்போகிறார்களோ என்னும் பதைபதைப்பை ஏற்படுத்தி விட்டு, பிறகு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த இந்திய அணி நம்பிக்கை என்பது ஒரு நீர்க்குமிழியைப் போன்றது என்பதை நிரூபித் திருக்கிறது. தொடர்ந்து ஏழு ஆட்டங்களில் வெல்லும், ஏழு முறை எதிரணியை முற்றிலுமாக ஆட்டமிழக்கவைக்கும் என்று யாரும் எதிர் பார்க்காத அணி இதையெல்லாம் செய்து உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்த இந்திய ரசிகர்களைத் தன் சொதப்பல் ஆட்டத்தால் ஏமாற்றி யதார்த்தத்தையும் புரியவைத்தது. நாடகத்தின் உச்சக் காட்சியை உணர்ச்சியே இல்லாமல் பார்க்கும் நிலைக்கு இந்தியர்களைத் தள்ளிவிட்டார்கள் தோனி அணியினர்.

ஆஸ்திரேலியா மிகவும் தன்னம்பிக்கையுடனும் கவனத்துடனும் சிறிதும் பதற்றம் அற்ற மனநிலையுடனும் ஆடி வென்றது. அந்த அணிக்கு ஒரு திட்டம் இருந்தது. அதைச் சரியாக அது அமல்படுத்தவும் செய்தது. யதார்த்தமான மதிப்பீட்டில் ஆஸ்திரேலியாவைவிடவும் திறமை குறைந்த இந்திய அணி, தன் திறமைகளையெல்லாம் திரட்டித் தன்னம்பிக்கையுடன் போராடினால்தான் போட்டி என்ற ஒன்றே சாத்தியமாகும் என்ற நிலையில், இந்திய அணி பதற்றத்தையே வெளிப்படுத்தியது. தோல்வி என்பது சகஜம் என்பதுபோலவே ஆடியது.

யதார்த்தமான மதிப்பீடுகள் இன்றி உணர்ச்சி அடிப்படையிலான எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள்; ஆத்திரமடைந்தார்கள். ஆடுகளத்தின் மையத்தைத் தேசபக்தியின் உருவகமாகக் காணும் உணர்ச்சி மிகுந்த அவர்களது ஆத்திரத்துக்குத் தொலைக்காட்சித் திரைகளும் அனுஷ்கா ஷர்மா போன்ற அப்பாவிகளும் இலக்கானார்கள். கிரிக்கெட்டின் கள நிலவரத்தைப் புரிந்துகொள்ளாதவரையில் பொருத்தமற்ற இத்தகைய உணர்ச்சி வெளிப்பாடுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

ஆறு வாரங்களுக்கு முன்பு இருந்த நிலையில், இந்தியா இந்த அளவுக்கு ஆடியதே பெரிய விஷயம் என்னும் உண்மையைப் புரிந்து கொண்டு, இதைக் கடந்து செல்லும் பக்குவம் இந்திய ரசிகர்களுக்கு எப்போது வருமென்று தெரியவில்லை. மேலும், உணர்ச்சிகளை மீறி அறிவுபூர்வமாக கிரிக்கெட்டைப் பார்ப்பவர்கள் திறமை மிக்க அணிகள் வெல்வதையே வரவேற்பார்கள். ஆகவே, இந்தியத் தோல்வியின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் அதே நேரத்தில் ஆஸ்திரேலிய வெற்றியை வரவேற்பதுதான் கண்ணியமான விளையாட்டுக்குப் பெருமை சேர்க்கும்!

TANCET 2015

D.Y.PATIL UNIVERSITY ADMISSION NOTIFICATION 2015-16

BHARATH UNIVERSITY ADMISSION NOTIFICATION 2015-16

TNEB staff make customers pay for digital meters given free of cost

CHENNAI: City residents are being fleeced by employees of Tamil Nadu Electricity Board (TNEB) in the name of replacing old meters with digital ones. Residents in many areas are told to pay 175 to 250 as fees to replace old meters. Many, who do not know that the meters are to nstalled by TNEB free of cost, end up paying whatever the staff demand.

Tangedco, a subsidiary of TNEB, is currently replacing conventional meters with digital meters as part of the central government-sponsored Restructured Accelerated Power Development and Reforms Programme (R-APDRP), being implemented in 110 towns and cities, including Chennai, Coimbatore, Madurai and Trichy.

TNEB staff, who carry out the work, say only a part of the money is taken by them. The balance is given to officials, said a resident.

On Thursday, a team of Tangedco employees led by a man named Gopal visited a few apartment complexes in Mandaveli and told residents to cough up 175 per household to replace meters. "Gopal, who came with three others, told us to keep meter cards and 175 per card ready tomorrow. They said 8 meters would be replaced," said S Chari, a resident of Mandaveli.

TNEB officials feigned ignorance about the fleecing and said the board had given enough publicity that the replacement would be done free of cost. "If still people pay money, they are to be blamed," said a senior official.

"On a few previous occasions, we received complaints about our employees fleecing residents. But when our officials visited houses for an inquiry, many residents refused to cooperate," said the official.

Digital meters record consumption of power by even small gadgets. Conventional meters, on the other hand, have rotational discs, and record only when consumption is reasonably high. On account of registering accurate readings, the board hopes that digital meters will increase its revenue by about 20%.

TNEB has ordered 45 lakh digital meters from seven companies and till now has received 20 lakh meters.

SRI RAMACHANDRA UNIVERSITY ADMISSION NOTIFICATION 2015-16

Saturday, March 28, 2015

A Bank Run by Beggars, for Beggars in Bihar Town

GAYA: A group of beggars in this Bihar town has opened their own bank, which they run and manage to provide financial security in times of crisis.

Dozens of beggars, who have been depending for their survival on alms from hundreds of Hindu devotees at the gate of 'Maa Manglagauri Mandir' (temple) in Gaya town for years, have started the bank.

The beggars call it Mangala Bank.

"It is true that we have established a bank for ourselves," said Raj Kumar Manjhi, one of the 40 beggars who are members of this unique "bank".

"Bank's manager, treasurer and secretary along with one agent and other member, who are running and managing it, are all beggars," Manjhi told IANS in Gaya, about 100 km from here. Manjhi, incidentally, is the manager of the bank.

Manjhi, who is literate enough to manage the accounts and other works of the bank, said: "Each of us (beggars) deposits Rs.20 every Tuesday in the bank that comes to Rs.800 weekly deposit."

Malti Devi, who is secretary of the bank that was established six months ago, said: "It began last year with a big hope and to fulfill aspirations of beggars. We are still not treated well in the society because we are poorest of the poor."

Malti now reaches out to more and more beggars by opening their account.

"Most of the beggars who are members of the 'bank' have neither BPL (Below Poverty Line) card nor Aadhaar card," she said.

Manjhi's wife Nagina Devi is treasurer of the bank. She said: "My duty is to manage the deposit money."

Bank's agent Vanarik Paswan said his job is to collect money from each member weekly for deposit.

Manjhi said their bank helped him when he faced an emergency.

"Early this month, my daughter and sister sustained burn injuries while cooking. The bank has provided me a loan of Rs.8,000 for their medical treatment. It is an example of how the bank can help a beggar like me without any paper work or guarantor as practiced in nationalised and private banks," he said.

Manjhi would not have to pay interest on his loan for a month.

"The bank has made it mandatory to pay interest on a loan at the rate of 2 to 5 percent from next month to put pressure to pay back loan amount," Malti said.

Beggars like Nathun Budha, Basant Manjhi, Rita Masomat, Dhaula Devi said that they were happy that at least now they have their own bank.

"We saved some money at least now and deposit in the bank," said Basant.

Rita said they have been depositing money in the bank to meet her future needs.

Nathun added that what was unique about their bank is the fact that it is owned and managed by beggars who decide on the rules and regulations themselves.

The beggars were encouraged to start their own bank by officials of State Society for Ultra Poor and Social Welfare last year.

பிரபலமடையாத செல்போன் டிக்கெட் முன்பதிவு வசதி: விழிப்புணர்வு ஏற்படுத்தாததே காரணம் என பயணிகள் குற்றச்சாட்டு

செல்போன் மூலம் சென்னை புறநகர் ரயில்களின் டிக்கெட்டைப் பெறும் வசதி, பயணிகளிடம் பெரிய அளவில் சென்று சேராமல் உள்ளது. இத்திட்டம் பற்றி போதுமான விளம்பரம் செய்யப்படா ததே இதற்கு காரணம் என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் நெரிசலைத் தவிர்க்கும் வகையில் செல்போன் மூலம் புறநகர் மின்ரயில் டிக்கெட் முன்பதிவு (எம்-டிக்கெட்டிங்) செய்யும் வசதி கடந்த ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

செல் போன்களைப் பயன்படுத்துபவர் கள் ‘பிளேஸ்டோரில்‘ ‘யூடிஎஸ்’ (UTS on mobile) என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதனுள்ளே சென்று, செல்போன் எண் மூலம் இவ்வசதிக்காக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு (ஏடிஎம் கார்டு) இருந்தால் அதன் மூலம் செல்போன் ‘ரீசார்ஜ்’ (குறைந்தபட்சம் ரூ.50) செய்வது போல் தேவைப்படும்போது அதற் கான இருப்புத்தொகையின் மதிப்பை கூட்டிக்கொள்ளலாம்.

‘யூடிஎஸ்’ செயலி மூலம் செல்போனில் டிக்கெட் முன்பதிவு செய்ததும், உங்களது போனுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பாஸ்வேர்டு (ஒன்டைம் பாஸ்வேர்டு) அனுப்பப்படும். ரயில் நிலையத்துக் குச் சென்றதும், அங்குள்ள ‘ஏடிவிஎம்’ இயந்திரத்தில் ‘மொபைல் டிக்கெட்டிங்’ என்னும் மெனுவில் ‘ஒன்டைம் பாஸ் வேர்டை’ குறியீடு செய்ததும், டிக்கெட்டின் ‘பிரின்ட்அவுட்’ வந்து விடும்.

தானியங்கி இயந்திரம் பழுதாகியிருந்தாலோ, அல்லது டிக் கெட்டைப் பெறத் தெரியவில்லை என்றாலோ, அருகில் உள்ள டிக் கெட் கவுன்ட்டரில் ‘ஒன்டைம் பாஸ் வேர்டை’ தெரிவித்தால் அவர்கள் டிக்கெட் தந்துவிடுவார்கள்.

சென்னையில் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த இரண்டரை மாதங்களில் 700-க்கும் குறைவானவர்களே இதைப் பயன்படுத்தியுள்ளனர். இப்படியொரு வசதி இருப்பதைப் பற்றி பயணிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப் படுகிறது.

மேலும், ‘ஏவிடிஎம்’ வசதி, அரக்கோணம் மார்க்கத்தில் அம்பத் தூர், பெரம்பூர் ரயில் நிலையங் களிலும், கும்மிடிப்பூண்டி மார்க்கத் தில் திருவொற்றியூர் ரயில் நிலையத்திலும் மட்டுமே உள்ளன. அதனால் இவ்வசதியைப் பற்றி அறிந்திருந்தாலும் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள் ளது. அதேநேரத்தில், கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் 14 ரயில் நிலையங்களில் ‘ஏவிடிஎம்’ வசதி உள்ளது. அதனால் அந்த மார்க்கத்தில் சிலருக்கு இதைப் பற்றி நன்கு தெரிந்துள்ளது.

விழிப்புணர்வு இல்லை

இது குறித்து ஆர்.யோகானந்த் என்ற ரயில் பயணி கூறும்போது, “இப்படியொரு திட்டம் இருப்பது பெரும்பாலானோருக்குத் தெரிய வில்லை. மேலும் செல்போனில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும், ரயில் நிலையத்துக்குப் போய் ‘ஏடிவிஎம்’ இயந்திரத்தில் டிக்கெட் எடுக்கவேண்டும். அதற்குப் பதிலாக, ஒரேயடியாக வரிசை யில் நின்றே டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்படுகிறது” என்றார்.

குரோம்பேட்டை ரயில் பயணி கள் சங்கத்தின் தலைவர் வி.சந்தா னம் கூறும்போது, “ரயில்வே ஊழியர்களுக்குக்கூட இவ்வசதி பற்றி தெரியவில்லை. எனவே இதுபற்றி, ரயில்வே துறை, பொதுமக்களின் மனதில் பதியும் வகையில் விளம்பரங்களை வெளியிடவேண்டும். எஸ்.எம்.எஸ். மூலம் டிக்கெட் பதிவு செய்யவும் ஏற்பாடுசெய்யவேண்டும்” என்றார்.

பெருங்களத்தூரை சேர்ந்த பிரசன்னா என்ற அரசு ஊழியர் கூறும்போது, “அனைவரும் பயன் படுத்தும் வகையில் இதனை எளிமைப்படுத்த வேண்டும். ‘ஏடிவிஎம்’ இயந்திரங்களை எல்லா நிலையங்களிலும் நிறுவவேண்டும்” என்றார்.

எஸ்.எம்.எஸ். மூலம் டிக்கெட்

இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தெற்கு ரயில்வே உயரதி காரிகள் கூறும்போது, “சென்னை யில் அதிக எண்ணிக்கையிலான ரயில் நிலையங்களில் ஏடிவிஎம் இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதுதவிர, எஸ்.எம்.எஸ் மூலம் டிக்கெட்டை வழங்கும் திட்டத்தையும் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம்” என்றனர்.

100 crores savings...dinamalar 28.3.2015

பாரத ரத்னாவுக்கு பெருமை

நாட்டில் பல விருதுகள் வழங்கப்படுகின்றன. சில விருதுகளால் அதை பெறுபவர்கள் பெருமையடைவார்கள். சில விருதுகள் அதைப்பெறுபவர்களுக்கு பெருமை அளிப்பதோடு, தகுதியான ஒருவருக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்று அதை வழங்கியவர்களுக்கும் பாராட்டும், புகழும் போய் சேரும். அந்தவகையில், முன்னாள் பிரதமரான 90 வயது அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அளிக்கப்பட்ட ‘பாரத ரத்னா’ விருதால், அந்த விருதுக்கே ஒரு உயரிய கவுரவம் கிடைத்துள்ளது. அரசியலில் இவர்போலத்தான் இருக்கவேண்டும் என எடுத்துக்காட்டாக வாழ்பவர் வாஜ்பாய். அதனால்தான் அவருக்கு இந்த உயரிய விருது அறிவிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் வரவேற்றன. பொதுவாக அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுபவர் வாஜ்பாய். பா.ஜ.க.வுக்கு நேர் எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கே, வாஜ்பாயை அரசியலில் பீஷ்ம பிதாமகன் என்று பாராட்டினார். பா.ஜ.க.வை கடுமையாக எதிர்த்த காலத்தில்கூட தி.மு.க. தலைவர் கருணாநிதி, வாஜ்பாயை ஒரு தவறான கட்சியில் இருக்கும் நல்ல மனிதர் என்று பாராட்டினார்.

10 முறை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்து இருக்கிறார். முதல் இருமுறைகளில் காலங்கள் குறைவாக இருந்தாலும், 3 முறை தொடர்ந்து பிரதமராய் இருந்தார். பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை, கார்கில் போர் வெற்றி, தொழில் வளர்ச்சிக்கு தனியாரையும் ஊக்குவிக்க எடுத்த நடவடிக்கைகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நாற்கர சாலை, கல்வி வளர்ச்சிக்கான சர்வ சிக்ஷா அபியான் என்று அவரது சாதனையை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளையும் இணைக்கவேண்டும் என்பதில் ஆசையோடு இருந்தார். அரசியல் நாகரீகத்தின் எடுத்துக்காட்டாக விளங்கிய வாஜ்பாய், தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மீதும் அதிக அன்பு கொண்டவர். அவர் பிரதமராக இருந்தபோது, டெல்லியில் சென்னையில் இருந்து சென்ற ‘தினத்தந்தி’யின் தலைமை நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் தமிழ்நாட்டின் வளமான கலாசார பாரம்பரியம், பெருமைமிகு சரித்திரத்தின்மீது நான் எப்போதும் பாசம் கொண்டவன். எனக்கு தமிழ்மொழி தெரியாவிட்டாலும், தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் கவிதைகள் மீதும் மிகுந்த மதிப்பு உண்டு. திருவள்ளுவர், தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர், இந்திய எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் நட்சத்திர கூட்டங்களில் ஒளிமிகுந்த நட்சத்திரங்களாக உள்ளனர். தமிழ்நாட்டைப்பற்றி நான் எப்போது நினைத்தாலும், எனது நண்பரான திராவிட அரசியல் இயக்க ஜாம்பவான் மறைந்த அண்ணா பற்றி நினைப்பேன். டெல்லி மேல்சபையில் ஒன்றாக இருந்தோம். தமிழக மக்களுக்காக அவர் உணர்வுபூர்வமான வீரராக திகழ்ந்தார். ஆனால், அவர் சிறந்த தேசியவாதியாகவும் விளங்கினார். தமிழ்நாட்டை எப்போதும் விரும்புகிறேன். தமிழக சினிமாவிலும், அரசியலிலும் மிகப்பெரிய தலைவராக பிரகாசித்த மறைந்த எம்.ஜி.ஆர் மீதும் எனக்கு மரியாதை உண்டு என உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்க பேசினார்.

2004–ம் ஆண்டு மே மாதம் 1–ந்தேதி அவர் ‘தினத்தந்தி’க்கு அளித்த பேட்டியில், தமிழகத்தின் மீது அவருக்கு இருந்த பாசம் பளிச்சிட்டது. முதுமையில் இருக்கும் அவருடைய வீட்டுக்கே சென்று நேற்று மாலை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ‘பாரத ரத்னா’ விருதை வழங்கியதற்காக ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக, அவர் நேசித்த தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் அரசியலில் அவருடைய வழியில் அனைவரும் பயணம் செய்தால் நட்பு அரசியல் மிளிரும், பகைமை உணர்ச்சி, பழிவாங்கும் உணர்ச்சிக்கு இடம் இருக்காது.

Friday, March 27, 2015

"சப்"புன்னு அறையலாம் போல இருக்கு இவங்க பேசறதைப் பார்த்தா..

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோல்வியைத் தழுவினாலும் தழுவினார்கள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் அவர்களைப் போட்டு கிழியோ கிழியென்று கிழித்து, அடித்து, துவைத்து தொங்க விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

இதில் அதிகமாக அடிபடுவது அனுஷ்கா சர்மாதான். வேண்டாத மருமகள் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற கதைதான் அனுஷ்காவுக்கு. அனுஷ்காவுக்கு கொடுமைக்கார மாமியார்களாக மாறிப் போயுள்ளனர் ஒட்டுமொத்த ரசிகர்களும். அவரையும், கோஹ்லியையும் சேர்த்து படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நடுவில் இதுதான் சாக்கென்று பிரபலங்களின் பேட்டிகள் வேறு கிரிக்கெட் வீரர்கள் பற்றியும், உலகக் கோப்பை தோல்வியினைப் பற்றியும். ஆனால், உண்மையில் நாமெல்லாம் தெளிவாகத்தான் இருக்கின்றோமா?

முன்பெல்லாம் சமூக வலைதளங்களின் தாக்கங்கள் அவ்வளவாக இல்லை. நம்மிடையேவும் ஒரு ஆரோக்கியமான மனப்பான்மை இருந்து வந்தது. கோபம் அல்லது மகிழ்ச்சி என்ற அளவோடு போய் விடும். ஆனால் இன்று அப்படி இல்லை. விதம் விதமாக கொண்டாடுகிறார்கள்.. விதம் விதமாக திட்டுகிறார்கள். இன்றைய நிலையில், அந்தரங்கம் என்ற ஒன்றே யாருக்கும் இல்லாத அளவுக்கு, ஒரு சமூக வலைதளங்கள் பிடித்தாட்டுகின்ற உலகில் நாம் வாழ்ந்து வருகின்றோம். யார் முந்திக்கொண்டு மற்றவர்களை கலாய்க்கின்றோம், கிண்டல் அடித்து ஸ்டேட்டஸ் போடுகின்றோம் என்ற மனநிலையில் உறுதியாக இருக்கின்ற நாம் அப்படி கலாய்க்கப்படுபவர்களுக்கும் ஒரு மனம் உண்டு என்பதனை மறந்தே போகின்றோம்.

வெற்றியையும், தோல்வியையும் சமமாக எடுத்துக் கொள்கின்ற ஒரு எளிதான மனப்பான்மையினை தொலைத்து வெகுநாட்கள் ஆகின்றது நாம். இத்தனை நாட்களும் மற்ற போட்டிகளில் எல்லாம், மற்ற கிரிக்கெட் அணிகளை இந்திய அணி தோற்கடித்த போது மாற்றி, மாற்றி அவர்களை கேலிக் கூத்தாக்கிய நாம், இன்று நம்முடைய அணி போராடித் தோற்ற போதிலும் ஏதோ நாமே களத்தில் இறங்கி நெற்றி வேர்வை நிலத்தில் பட பேட்டிங்கும், பவுலிங்கும் செய்தது போல் அவர்களை காய்ச்சி எடுக்கின்றோம். இதில், பாவம் மேட்ச்சினை பார்க்கப்போன அந்தப் பெண் அனுஷ்கா சர்மாவையும் சேர்த்து அசிங்கப் படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்... ஏதேனும் ஒரு வேலையில் நீங்கள் முழுமனதாக ஈடுபட்டாலும் சரி,


ஏனோதானோவென்று செய்தாலும் சரி அதில் தோல்வியைத் தழுவ நேர்ந்தால் உங்களுடைய மனதின் ரணம் எவ்வளவு ஆழமாக இருக்கும் என்பதினை. அவர்கள் பலகோடி சம்பளம் வாங்குகின்றார்கள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அதனையும் தாண்டி கிரிக்கெட் களத்தில் இறங்கி, தூக்கத்தினையும் தொலைத்துவிட்டு அந்த இரவில் நம்முடைய கனவான உலகக் கோப்பைக்காக போராடிய சராசரி மனிதர்கள்தான் அவர்களும். உங்களுடைய வெற்றியைக் காண உங்கள் மனம் நேசிக்கும் காதலனோ, காதலியோ பக்கத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பதைப் போலத்தான் அனுஷ்கா சர்மா ஆஸ்திரேலியா சென்றதும்.


காலையில் ஒரு ஒருமணி நேரத்திற்கு வாக்கிங் போகவே 10 தடவை அலாரத்தினை அணைப்போம் நாம். ஆனால், கிட்டதட்ட 40, 50 நாட்களுக்கு மேலாக ஓயாத உடற்பயிற்சியும், பயிற்சியும், புது இடத்தின் உணவும், அலைச்சலும், குறிக்கோளுக்காக மனதினை மெருகேற்றி, மெருகேற்றி ஏற்பட்ட மன உளைச்சலுமே அவர்களுடைய தோல்விக்கு காரணம் என்பதனை நாம் ஒத்துக் கொள்ள மறுக்கின்றோம். ஏனெனில், நம்மால் வெற்றியினை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். அந்த வெற்றியைப் பெற்றுத்தந்தால் மட்டுமே அவர்கள் நம்மவர்கள். இல்லையெனில், அவர்கள் நம்முடைய எதிரிகள். சக மனிதரை மதிக்காமல், அவர்களுக்கு இந்த சமயத்தில் மன ஆறுதல் அளிக்காமல் கேவலமான கமெண்ட்டுகளையும், ஏதோ வானத்திலிருந்தே குதித்து வந்தவர்கள் போல், தோல்வியைக் கண்டே அறியாதவர்கள் போல் சமூக வலைதளங்களில் அவர்களை நாம் கேலிக் கூத்தாக்குவதும் நம்முடைய மனதின் அடி ஆழத்தில் உறைந்து போயிருக்கும் அழுக்கின் மறுப்பக்கத்தினைத்தான் உலகிற்கு எடுத்துரைக்கின்றது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!

உங்கள் அபிமான பொன்னியின் செல்வனை இனி கம்ப்யூட்டர் திரையில் காணலாம்!

சென்னை: சோழ சாம்ராஜ்யம் குறித்த வரலாற்று புதினமாக, 1950களில் வெளியானது 'பொன்னியின் செல்வன்' நாவல். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த புத்தகம், தமிழகத்தின் அனைத்து புத்தக கண்காட்சிகளிலும் அதிகப்படியாக விற்பனையாகும் வரலாற்று நாவலாக சாதனை படைத்து வருகிறது. வீரம், காதல், நகைச்சுவை, அன்பு, அறிவு, அரசியல், திடுக்கிடும் திருப்பங்கள் என வாசகர்களை கட்டிப்போடும் அத்தனை அம்சங்களும், உண்மையான வரலாற்று செய்திகளுடன், இணைந்துள்ளதால், புத்தகத்தின் மீதான ஈர்ப்பு தமிழ் வாசகர்களுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நாவலின் சுவாரசியத்தால் ஈர்க்கப்பட்ட கமலஹாசன் இதை திரைப்படமாக எடுக்க முயன்றதாகவும், ஆனால், பொருட்செலவு கருதி அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி எம்.ஜி.ஆர், இயக்குநர் மணிரத்னம் என பலர் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்க முயற்சித்துள்ளனர். ஆனால் யாருடைய முயற்சியும் முழுமையடையவில்லை. தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குநராக பணியாற்றும் ஈராஸ் நிறுவனம், பொன்னியின் செல்வனை கையிலெடுத்துள்ளது. ஆனால் திரைப்படமாக அல்லாமல் பகுதிகளாகப் பிரித்து இணயத்தில் பதிவேற்றப்படுகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமலோ, விசிடிக்களாகவோ இல்லாமல் ஒவ்வொரு பகுதியும் இணையத்தில் பதிவேற்றப்படும். பார்க்க விரும்புபவர்கள் ஒவ்வொரு பாகத்திற்கும் பணம் செலுத்தி கம்ப்யூட்டர் திரையில் பார்த்துக் கொள்ளலாம் என தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது. அதிகபட்சம் 5 பகுதிகளாக பதிவேற்றம் செய்யப்படலாம் என்று ஈராஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. முன்பு ஒருமுறை, மணிரத்னம், பொன்னியின் செல்வனுக்கு திரை வடிவம் தர முயற்சித்தபோது எழுத்தாளர் ஜெயமோகனை திரைக்கதை எழுதினார். அந்த கதையில் நடிக்க விஜய் ஆசைப்பட்டார். தற்போது ஈராஸ் நிறுவனமும் ஜெயமோகனையே அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஈராஸ் கூறியுள்ளது.

இந்தியா தோல்வி : உயிரை மாய்த்துக் கொண்ட அரசு ஊழியர்!

லகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தையடுத்து லக்னோவில் அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
உலகக் கேப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்பது கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவாக இருந்தது. ஆனால் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து போட்டியை விட்டு வெளியேறியது.
இதனால் ஏராளமான ரசிகர்கள் மனமுடைந்து போனார்கள். இந் நிலையில் உத்தரபிரேதேச மாநிலம் லக்னோவில் 50 வயது அரசு ஊழியர் ஒருவர் கிரிக்கெட் தோல்வி காரணமாக கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உமேஷ் என்ற அந்த 50 வயது அரசு ஊழியர் நேற்று தனது சக ஊழியர்களுடன் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்திய அணி தோல்வியை நோக்கி செல்லத் தொடங்கியதும் மிகுந்த ஆதங்கத்துடன் இருந்துள்ளார். அவருக்கு சக ஊழியர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.
ஆனால் அறையை விட்டு வெளியே சென்ற அவர் கட்டடத்தில் மீது இருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உமேஷ் உயிரிழந்தார். கிரிக்கெட் தோல்விக்காக உமேஷ் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று லக்னோ போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை தோல்விக்கு தோனி ஏன் காரணமாகிறார்... அலசுகிறது இந்த கட்டுரை

விளையாட்டின் இறுதியில் ஒருவர்தான் வெற்றிபெறமுடியும். பேட்டிங் பௌலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா வெற்றிபெற்றிருக்கிறது’’ என்று அரை இறுதி தோல்விக்குப் பிறகு சொல்லியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி. ‘‘மூணு மாதம் ஆஸ்திரேலியாவில் விளையாடி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாத அணியை உலகக்கோப்பையில் அரை இறுதிவரை அழைத்துவந்திருக்கிறார் தோனி. உலகக்கோப்பை போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிறந்த தனது குழந்தையைக் கூட பார்க்கப்போகாமல், நாடுதான் முக்கியம் என்று சொன்னவர் தோனி’’ என்று ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்-களில் தோனிக்கு ஆதரவாக மெசேஜ்கள் பரவுகின்றன.
இந்த உலகக்கோப்பையின் அரை இறுதிவரை இந்தியாவை அழைத்துவந்த பெருமை முழுக்க முழுக்க தோனிக்குத்தான் சேரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம் கடந்த நான்கு வருடங்களாக ஒரு ஒழுங்கற்ற, நிலையில்லாத, சரியான பௌலர்கள் இல்லாத மோசமான அணியை வழிநடத்தி வந்ததன் பரிசுதான் சிட்னி படுதோல்வி என்பது தோனிக்குத் தெரியும். இப்போதையே இந்திய அணியில் இருக்கும் எந்த வீரருக்குமே நிலையான ஆட்டம் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் போனதுதான் சோகம்.

தோனியின் ரோல் என்ன?

சச்சின், ஷேவாக், கம்பீர், யுவராஜ், ஜாகீர் கான் என அணியின் சீனியர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ந்தவுடன் அவர்களுக்கு மாற்றாக திறமையான வீரர்களை இந்திய அணிக்குள் அழைத்துவர வேண்டிய கடமை தேர்வாளர்களுக்கு உள்ளது. அதே கடமையும், பொறுப்பும் அணியை வழிநடத்திச் செல்லும் பங்கு கேப்டனுக்கும் உண்டு. ரஞ்சி கோப்பை மட்டும் அல்ல உள்ளூர் திறமைகளை சரியாகக் கண்டெடுத்து இந்திய அணிக்குள் அவர்களை கொண்டுவர இப்போது ஐபிஎல் போட்டிகளும் இருக்கிறது. சிறப்பாக விளையாடும் வீரர்களை ‘இவர் எனக்கு வேண்டும்’ என்று கேட்டுப்பெறும் உரிமை கேப்டனுக்கு உண்டு. சௌரவ் கங்குலிதான் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான் உள்ளிட்ட இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவந்து அவர்களை ஊக்கப்படுத்தி தொடர்ந்து சிறப்பாக விளையாட வழிகாட்டியவர்.

கேப்டன் தோனி ரெய்னா, தவான், ரோஹித், ரஹானே உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்புகளை அள்ளி வழங்கினார். இவர்கள் திறமையான வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இவர்களிடம் ஒரு ஒழுங்கு இல்லை. இவர்கள் அனைவருமே வெளிநாட்டு மைதானங்களில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை ஆடியவர்கள். உலகக்கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளிலுமே படுதோல்வி அடைந்தது இந்திய அணி. ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டிகளில் ஒன்றில்கூட இந்த அணியால் வெற்றிபெறமுடியவில்லை. அந்த மோசமான தோல்வியை சந்தித்த அதே அணியை வைத்துக்கொண்டுதான் 2015 உலகக்கோப்பைக்குத் தயாரானார் தோனி. தொடர்ந்து சொதப்பிய வீரர்களில் ஒருவரைக்கூட மாற்ற தோனி ஏன் மெனக்கெடவே இல்லை?

‘ஹார்சஸ் ஃபார் கோர்சஸ்’ தியரியை பின்பற்றுகிறேன்’’ என்பார் தோனி. ‘‘போட்டி நடைபெறும் நாள் அன்று பிட்ச்சின் தன்மை, தட்டவெப்ப சூழல் இவற்றைப் பொருத்துதான் அணியைத் தேர்ந்தெடுக்க முடியும். எல்லோரும் எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்கிற பாலிசியைப் பின்பற்ற மாட்டேன்’ என்று முன்பு சொல்லிய தோனி ஒரு ஒழுங்கே இல்லாத வீரர்களை வைத்து சமாளித்துவிடலாம் என்று எப்படி முடிவெடுத்தார்?
முதல் போட்டியான பாகிஸ்தானுடனான ஆட்டம்தான் இந்தியா தொடர்ந்து ஏழு வெற்றிகளைப் பெற தைரியமும், உற்சாகமும் கொடுத்தது. அந்தப் போட்டியில் கோஹ்லியின் இரண்டு ஈஸியான கேட்சுகளைத் தவறவிட்டனர் பாகிஸ்தான் வீரர்கள். கோஹ்லியின் அந்தக் கேட்சைப் பிடித்திருந்தால் அப்போதே முடிவுகள் மாறியிருக்கும். இந்த உலகக்கோப்பையில் கோஹ்லி, தவான், ரெய்னா, தோனி, ரோஹித் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியில் சிறப்பாக ஆடினார்களேத் தவிர இவர்கள் யாரும் ஒரே அணியாக ஒரு போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை.
 
'பின்ச் ஹிட்டர்'சேவாக்குக்கு மாற்று ஆட்டக்காரர் கண்டுபிடிக்கப்படவில்லை

ஹை ஸ்கோரிங் போட்டிகளில் வெல்ல வேண்டும் என்றால் தனது விக்கெட்டைப் பற்றி கவலைப்படாமல் ஆட்டம் துவங்கியவுடனே அடித்து ஆடி எதிர் அணியின் பந்துவீச்சாளர்களை நிலைகுலையவைக்கும் பின்ச் ஹிட்டர்கள் வேண்டும். வீரேந்திர ஷேவாக் இந்த வேலையைத்தான் செய்தார். தனது விக்கெட்டைப் பற்றி கவலைப்படாமல் பவுண்டரி, சிக்ஸர்களால் எதிர் அணி பௌலர்களை வெளுத்துவாங்குவார். பௌலருக்கு எந்த லைனில் பந்துவீச வேண்டும் என்பதே மறந்துபோகும். பிரண்டன் மெக்கல்லம், ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற வீரர்கள் இப்போது இதைத்தான் செய்கிறார்கள். ஷேவாக் ஃபார்மில் இல்லை அவரைக் கழற்றிவிடவேண்டும் என்று சரியான முடிவை எடுத்த தோனியும், இந்திய அணி தேர்வாளர்களும் அவருக்கான மாற்று வீரரை ஏன் இறுதிவரை அடையாளம் காணவே இல்லை?

‘‘மிகவும் திறமையான வீரர்’’ என்று சொல்லியே ரோஹித் ஷர்மா இந்தியா ஆடும் எல்லாப் போட்டிகளிலும் இடம்பிடித்துவருகிறார். இரண்டு இரட்டை சதங்கள் அடித்த இந்த உலக சாதனை நாயகன் உலகக்கோப்பையின் 8 போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி 330 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் வங்காளதேசத்துக்கு எதிரானப் போட்டியில் அடித்த 137 ரன்களைக் கழித்துவிட்டால் மற்ற ஏழு போட்டிகளில் அவர் அடித்தது மொத்தமே 190 ரன்கள்தான்.


அனுஷ்கா ஷர்மாவுடன் காதல்... பத்திரிகையாளருடன் மோதல்!

தொடர்ந்து சதம் அடிக்கிறோம், நாம்தான் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் என்கிற ஓவர் கான்ஃபிடன்ஸ் கோஹ்லிக்கு இப்போது சரியான பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கும் என நம்பலாம். இந்தியாவில், இந்தியப் பத்திரிகையில் வெளியான அனுஷ்கா ஷர்மா பற்றிய ஒரு துணுக்கு செய்திக்கு ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டை கவர் செய்யவந்த நிருபர் மீது பாயவைத்தது அந்த ஓவர் கான்ஃபிடன்ஸ்தான். அனுஷ்கா ஷர்மா- விராட் கோஹ்லி காதல் அவர்களின் தனிப்பட்ட விவகாரம்தான். 2011 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். 2015 உலகக்கோப்பையில் சச்சினாக இருந்து இந்திய பேட்டிங் டிபார்ட்மென்ட்டுக்கு தோள் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு விராட் கோஹ்லிக்கு இருந்தது. ஆனால் அவரோ அனுஷ்கா ஷர்மாவுடன் காதல், பத்திரிகையாளுடன் மோதல் எனப் பாதை விலகியது தன்னை பெரிதும் நம்பிய இந்திய அணி நிர்வாகத்துக்கும்,  ரசிகர்களுக்கும் அவர் செய்த துரோகம்.

கோடிகளைக் கொட்டும் பிஸ்னஸ்!


இந்தியாவைப் பொருத்தவரை கிரிக்கெட் ஒரு வியாபாரம். 1996 உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்குப் பிறகுதான் கிரிக்கெட் இந்தியாவில் மிகப்பெரிய வியாபாரமாக உருவெடுத்தது. இரண்டு மேட்சில் விளையாடியவர்களுக்கு கோடிக்கணக்கில் ஸ்பான்சர்ஷிப், விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம், ஸ்டார் அந்தஸ்த்து என புகழ் ஏணியில் ஏற ஆரம்பித்தனர் கிரிக்கெட் வீரர்கள். 20/20 யுகம் ஆரம்பித்தபிறகு இந்திய கிரிக்கெட் வாரியமும், கிரிகெட் வீரர்களும் பணம் சம்பாதிப்பதில் உச்சத்தைத் தொட்டுவிட்டார்கள். இன்று உலகிலேயே பணக்கார கிரிக்கெட் போர்டு இந்திய கிரிக்கெட் போர்டுதான். ஆனால் கையில் கோடி கோடியாய் பணம் வைத்திருக்கும் ஒரு அமைப்பால் தன் அணிக்கு திறமையான இளம் வீரர்களை கண்டெடுக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு.
அணிக்குள் திறமையான வீரர்களைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த வேண்டிய அமைப்பும் அதன் நிர்வாகிகளும், உச்சநீமன்றத்தில் எப்படி வாதிட்டு தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுவதில் பிஸியாக இருக்கும்போது பாவம் ரசிகர்கள் நாம் என்ன செய்ய முடியும். 

இங்கிலாந்தில் 2019 உலகக்கோப்பை!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் இருக்கும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு பிட்ச் கூட இந்தியாவில் கிடையாது. நம்மூர் மைதானங்களில் 140கிமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசவும் முடியாது. அப்படியே பந்து வீசனாலும் இங்கே பந்து பவுன்ஸ் எல்லாம் ஆகாது. 2019 உலகக்கோப்பை, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்தில்தான் நடைபெற இருக்கிறது. இங்கு வெற்றிபெற வேண்டும் என்றால் திறமையான பௌலர்களும், தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களும் வேண்டும். அதற்கு ஏற்றவாறு அணியைத் தயார் செய்தால்தான் இந்தியாவால் 2019 உலகக்கோப்பையை வெல்ல முடியும். இல்லை என்றால் 1983 உலகக்கோப்பை வெற்றிக்குப்பின் மீண்டும் உலகக்கோப்பையை வெல்ல 28 ஆண்டுகள் ஆனதுபோல், நாம் அடுத்த உலகக்கோப்பையை வெல்ல இன்னும் 24 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!
- சார்லஸ்

NEWS TODAY 22.04.2024