Tuesday, March 24, 2015

ரயில்வே இ-டிக்கெட் முன்பதிவில் புதிய கட்டுப்பாடு!

புதுடெல்லி: இந்திய ரயில்வேத்துறை, ஏஜெண்டுகளின் முறைகேடுகளை தடுக்க இ-டிக்கெட் முன்பதிவில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.

இ-டிக்கெட் முன்பதிவில் ஏஜெண்டுகள் செய்யும் முறைகேடுகளை தடுப்பதற்காக, புதிய கட்டுப்பாடுகளை ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தி உள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை, ஒரு யூசர் லாக்-இன் ஐ பயன்படுத்தி, ஒரு தடவை மட்டுமே இ-டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அடுத்த இ-டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றால், தானாகவே லாக்-அவுட் ஆகிவிடும்.

இது, ஐ.ஆர்.சி.டி.சி. ஏஜெண்டுகள் உள்பட அனைவருக்கும் பொருந்தும். ஆனாலும், ஒரே நேரத்தில் புறப்பாடுக்கும், திரும்பி வருவதற்கும் முன்பதிவு செய்வதற்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது. பாதுகாப்பு துறையினரின் முன்பதிவுக்கும் இது பொருந்தாது.

கூட்ட நெரிசல் நேரத்தில், ஏஜெண்டுகள் ஒரே லாக்-இன் ஐ பயன்படுத்தி, இ-டிக்கெட்டுகளை மொத்தமாக முடக்கி விடுகிறார்கள். அதை தடுப்பதற்காக, புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...