Friday, March 31, 2017

Deadline over, yet ‘exchanging hope’ far from dead for Chennai residents

By Express News Service  |   Published: 31st March 2017 02:58 AM  |  

People including NRIs show demonetised currency notes outside RBI office in the city on Thursday | martin louis
CHENNAI: The grace period for exchanging demonetised currencies  ended on December 31, 2016 but most of the Chennaites are unaware of it and are still hoping that the Central Bank would exchange the old Rs 500 and Rs 1,000 notes for new notes.

A serpentine crowd was found waiting before the RBI office, most of them not aware that they are not eligible to exchange the old currency notes.

Reserve Bank of India spokesperson said that the notification had clearly mentioned that the grace period of March 31 is only for people who were abroad during the period of November 9 – December 30, 2016. It is not for those who were in India as the deadline expired on December 31, 2016.

Vimala, a housewife from Velachery, is hoping against the odds that she will be able to exchange Rs 26,000 worth old currencies in the denomination of Rs 500 and Rs 1,000. She has been visiting the gates of the bank since January in the hope to exchange the currencies. However, most of the times she is shooed away by the security.

“They are saying it is only for NRIs. We are poor people. They should also give us more grace time. A tea seller near the bank says that the bank would exchange my notes by March 31,” she says.
The RBI in a notification has stated that with effect from January 2, 2017, people who were abroad during the period of November 9, 2016 to December 30, 2016 can avail this facility up to March 31, 2017 and the non-resident Indian (NRI) citizens who were abroad during that period can avail this facility up to June 30, 2017. 

While there is no monetary limit for exchange for the eligible resident Indians, the limit for NRIs will be as per the relevant Foreign Exchange Management Act Regulations.

VELLORE BANK CASHIER ARRESTED


NEET 2017


INCOME TAX


இனி இ-சேவை மையங்களில் தான் குடும்ப அட்டை திருத்தப் பணிகள்

By DIN  |   Published on : 31st March 2017 01:37 AM  |   

ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை இ-சேவை மையங்களில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வடிவிலான குடும்ப அட்டைகள் சனிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் வழங்கப்பட உள்ளன. குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறுவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு, வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் குடிமைப் பொருள் வட்டாட்சியர் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகளை மேற்கொள்வதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும்.

புதிய விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் சமர்ப்பித்து இணையதளம் மூலமாக இப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கெனவே சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய்த் துறையின் சான்றிதழ்கள் பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பம் அளிப்பதைப் போல, குடும்ப அட்டை தொடர் சேவைகளும் இ.சேவை மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான தனி மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறையினர் கூறியது:
குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளம் மூலமாக பெறும் வசதி ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே இந்த சேவையைப் பெற முடியும். இதேபோல, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகள் அனைத்தும் இ-சேவை மையங்கள் மூலமாகவே மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அரசு கேபிள் தொலைக்காட்சி இ-சேவை மையம் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், புதுவாழ்வுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் இ.சேவை மையங்களில் இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

விண்ணப்பங்களில் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அல்லது குடிமைப்பொருள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு இணைய வழியில் அனுப்பி வைக்கப்படும். ஆவணங்களின் அடிப்படையில் இணைய வழியிலேயே வழங்கல் துறையினர் ஒப்புதல் வழங்குவர். விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது தொடர்பான தகவல் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு, குடும்ப உறுப்பினர் சேர்க்கப்பட்ட, நீக்கப்பட்ட அல்லது திருத்தஹம் செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட் கார்டை சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்தில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.

ஸ்மார்ட் கார்டு விநியோகம்: செல்லிடப்பேசிக்கு தகவல் வரும்
ஸ்மார்ட் கார்டு விநியோகம் தொடர்பாக குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:

குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் சனிக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளன. அதுகுறித்த விவரம் குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். குறுஞ்செய்தியில் உள்ள கடவுச் சொல், பழைய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, குறுஞ்செய்தி பெறப்பட்ட செல்லிடப்பேசி ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்குச் சென்று ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

இதுவரை செல்லிடப்பேசி எண் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக தங்களது நியாய விலைக் கடையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட் கார்டு குறித்து குறுஞ்செய்தி வராதவர்கள் அச்சம் அடையத் தேவையில்லை. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றார்.

முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவுக்கு மீண்டும் பதவி

By DIN  |   Published on : 31st March 2017 05:23 AM  

ramamohan_rao
முன்னாள் தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறையின் இயக்குநராக வியாழக்கிழமை (மார்ச் 30) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடும் சோதனைகளுக்குப் பிறகு... ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் பி.ராம மோகன ராவ். அவருடைய அலுவலகத்திலும் (தலைமைச் செயலகம்), வீட்டிலும் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.30 லட்சத்துக்கு புதிய நோட்டுகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

 தலைமைச் செயலர் பதவியிலிருந்த பி.ராம மோகன ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தற்போது மூன்று மாதங்களுக்குப் பிறகு பி.ராம மோகன ராவுக்கு கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் தமிழக அரசு மீண்டும் பணி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுவரை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலர்-இயக்குநராக இருந்த கே.ராஜாராமன், நில நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலர்-ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Audit report slams Madras varsity
Blames it for financial crisis

If the University of Madras is facing a financial crisis, then it has only itself to blame.

The annual audit report for the year 2015-16 has raised as many as 200 objections, apart from 43 pertaining to the Institute of Distance Education. After some of them were converted into observations and notes, the number of objections was brought down to 142.

Interestingly, this year, the audit was done over a period of four days. An official said, “It is usually a half-day event. But this time, it took four days to complete the process.”

The audit report has made a scathing comment that the university has “not maintained financial discipline in its financial activities.” It has pointed out that the university incurred a huge loss of revenue by bank interest as it had transferred funds received as grants for various Plan accounts to the Non-Plan account.

The University has transferred Rs. 74.28 crore from various account heads such as non-Plan, Pension, IDE and Capital account to meet its day-to-day expenses. It has been able to re-transfer only Rs. 17.15 crore till the closure of the audit.

Had the funds been maintained in the Plan account, it would have fetched the university an interest of Rs. 3.28 crore, audit has pointed out.

The university received Rs. 70 crore of Rs. 100 crore grant from the MHRD for setting up a national centre for nanoscience and nano technology. The institution has paid Rs. 9 crore to a building contractor apart from the sanctioned grant, compounding financial loss.

The university had renovated its old guest house and built a new one on the Marina campus, but a delay in completion of the project resulted in a cost escalation of 265%, resulting in a loss of Rs. 1.57 crore. The Centre for Research on Dravidian Movement has remained un-utilised for 10 years, costing the university a loss of Rs. 3.96 crore.

There are several instances where the university has been transferring funds allocated for various projects and re-transferred the borrowed funds alone without taking into account the interest lost to the Plan account. This has resulted in a loss of over Rs. 1.25 crore as interest.

To this, the university has replied that the internal transfers could not be reversed as the State government had not sanctioned the ‘additionality grants’ for the years 2013-14 and 2014-15.
நீட்' தேர்வு எழுதுபவரா நீங்கள்? : 'தினமலர்' வழங்கும் மாதிரி வினா- - விடை 

'நீட்' - 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட்' என்பது, 2013ல் மத்திய அரசு அறிமுகம் செய்த, மருத்துவப் படிப்புக்கான, தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு.

முக்கியத்துவம் : நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, 'நீட் யு.ஜி.,' - 2017 நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ., இந்த தேர்வை நடத்துகிறது. தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், இடம் ஒதுக்கப்படுகிறது. மாநிலங்களில் இருந்து, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

வயது, கல்வி தகுதி : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், 17 முதல், 25 வயதிற்குள் இருத்தல் வேண்டும். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை முதன்மையாக கொண்டு, குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்களுடன், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான வேறு கல்வி தகுதி வேண்டும். மேலும், பிளஸ் 2 ஆங்கில பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள், 40 சதவீத மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள், 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதும்.

தேர்வு முறை : நடப்பு, 2017ம் ஆண்டுக்கான நீட் தேர்வு, மே, 7ல் நாடு முழுவதும், ஒரே கட்டமாக நடக்கிறது. அடிப்படை அறிவியல் அறிவை பரிசோதிக்கும் வகையிலான, 180 கேள்விகள் இடம்பெறும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து, தலா, 45 கேள்விகள் என மொத்தம், 180 கேள்விகள் இடம் பெறும். காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். ஒவ்வொரு கேள்விக்கும், நான்கு மதிப்பெண்கள் என, மொத்தம், 720 மதிப்பெண். தவறான ஒவ்வொரு விடைக்கும், தலா, ஒரு மதிப்பெண் வீதம் பிடித்தம் செய்யப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வு ஹிந்தி, ஆங்கிலம், அசாமி, தமிழ், வங்காளம், குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, ஒடிசா, கன்னடம் உட்பட, 10 மொழிகளில் நடக்கிறது. இந்த தேர்வுக்கான கேள்விகள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பின் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., - என்.சி.ஆர்.டி., - சி.ஓ.பி.எஸ்.இ., தரத்திலான பாடத் திட்டங்களில் இருந்து கேட்கப்படும். தேர்வுக்கு கூடுதல் பயிற்சி பெறுவது, வாய்ப்புகளை பிரகாசமாக்கும்.

சேர்க்கை விபரம் : தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவக் கல்லுாரியை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும். அதாவது, 'ரேங்க்' பட்டியலில், மாணவர்களின் முன்னிலையை பொறுத்தே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

தேர்வு மையங்கள் : நடப்பு, 2017ம் ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு, நாடு முழுவதும், 11 லட்சத்து, 35 ஆயிரத்து, 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது, 2016 உடன் ஒப்பிடும் போது, 41.2 சதவீதம் அதிகம். இந்தியா முழுவதும், 103 நகரங்களில் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, நாமக்கல், வேலுார் ஆகிய, எட்டு இடங்களில் தேர்வு நடக்கிறது. 'ஏப்., 15ல் ஹால் டிக்கெட் வெளியிடப்படும்; தேர்வு முடிவு ஜூன் 8ல் அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த முழுமையான விபரங்களை தெரிந்து கொள்வதற்கு http://cbseneet.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மாணவர்கள் பயன்பெறும் வகையில், நீட் தேர்வுக்கு ஆலோசனை நிகழ்ச்சிகளை, 'தினமலர்' நாளிதழ் ஏற்கனவே நடத்தியது. நாளை முதல் மாதிரி வினா- விடை வெளியிடுகிறது.
 ரூ.300 கோடி ஊழல் : தொழில் அதிபர் சிக்கினார்

 கொச்சி: குவைத் மருத்துவமனைகளில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 300 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தவரை கேரள போலீசார் கைது செய்தனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் நெருங்கிய நண்பரும், அவரது ஊரான புதுப்பள்ளியை சேர்ந்தவருமான, உதுப் எம்.வர்கீஸ், கொச்சியில் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தரும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இந்த நிறுவனம் மூலம், குவைத்தில் உள்ள மருத்துவமனைகளில் நர்ஸ் பணியில் சேர்த்துவிடுவதாகக் கூறி, ஒவ்வொருவரிடமும், பல லட்சம் ரூபாய் வீதம், 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளார். பணம் கொடுத்தவர்களில் சிலர் குவைத் சென்றபோது, நர்ஸ் வேலைக்கு பதில், வேறு வேலையில் நியமிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர்.பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றிய உதுப் மீது, பாதிக்கப்பட்டவர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. கடந்த ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டியின் நண்பரான உதுப்பை போலீசார் கைது செய்யவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின், உதுப்பை சரணடையும்படி, ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, வெளிநாட்டில் இருந்து, விமானத்தில், நெடும்பாசேரி விமான நிலையத்துக்கு, நேற்று அவர் வந்தார். அவரை அடையாளம் கண்ட, போலீசார், உடனடியாக கைது
செய்தனர்.
 பெருந்துறை மருத்துவ கல்லூரி அரசு ஏற்று நடத்த வலியுறுத்தல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்படும் மருத்துவக் கல்லுாரியை, அரசு ஏற்று நடத்துவதற்கான கருத்துருவுக்கு, போக்குவரத்து கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், பெருந்துறையில் மருத்துவக் கல்லுாரி நடத்தப்படுகிறது.

இக்கல்லுாரிக்கு, போக்குவரத்துக் கழகம் மூலமே நிதி ஒதுக்கப்படுகிறது.போக்குவரத்துக் கழகம் நிதி நெருக்கடியில் தவிப்பதால், நிறுவனத்தை திறம்பட நடத்துவது, அடிப் படை வசதிகள், மேம்பாட்டு பணிகள், விரிவாக்கம், மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அதற்கான வசதிகளை உருவாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. கல்லுாரி துவங்கியபோது, 60 மாணவ, மாணவியர் படிக்க அனுமதி வழங்கப்பட்டது. மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை, 60ல் இருந்து, 100 ஆக உயர்த்த வேண்டும் என்றும், முதுகலைக் கல்வி கொண்டு வரவேண்டும் எனவும் கோரப்பட்டது. ஆனால், கல்லுாரி துவங்கி, 24 ஆண்டுகள் ஆகியும் இதுவரை, 100 ஆக மாணவர் சேர்க்கை உயரவில்லை;

முதுகலை படிப்பும் துவங்கவில்லை.இக்கல்லுாரியில், போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, 30லிருந்து, 35 சதவீதம் வரை இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. கட்டணமும், அரசு மருத்துவக் கல்லுாரியை விட, சற்று கூடுதலாகவே வசூலிக்கப்படுகிறது. மற்ற மாணவர்களுக்கு, தனியார் கல்லுாரிகளில் வசூலிப்பது போலவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், 'கல்லுாரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என, பெருந்துறை மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் சார்பில், கலெக்டர் மூலம், அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறு கையில், ''கல்லுாரி முதல்வரின் அறிக்கைப்படி, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. கல்லுாரியை அரசே ஏற்று நடத்தலாம் என, போக்குவரத்துக் கழக நிர்வாகமும் ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த முடிவை அரசு அறிவிக்கும்,'' என்றார்.
 பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கியில் திரண்ட மக்கள்

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு இன்றுடன் முடிவதால், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியை, நேற்று ஏராளமானோர் முற்றுகையிட்டனர்.

மத்திய அரசு, 2016 நவ., 8 நள்ளிரவில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்தது. பொதுமக்கள், டிச., 31 வரை, வங்கிகளிலும், மார்ச் 31 வரை, ரிசர்வ் வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது. பொதுமக்களிடம் உள்ள, பழைய ரூபாய் நோட்
டுகளை, வங்கிக் கணக்கில், 'டிபாசிட்' செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், டிச., 31க்குப் பின், வங்கிகளில் கெடு முடிந்ததால், பழைய நோட்டுகளை மாற்ற, மக்கள்ரிசர்வ் வங்கிக்கு சென்றனர். 'டிச., 31 வரை, வெளிநாடு சென்றிருந்தோர் மட்டுமே, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றலாம்' என, விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும், மக்கள் தொடர்ந்து, ரிசர்வ் வங்கிக்கு சென்று திரும்பினர்.

இதற்கிடையில், வெளிநாடு சென்று திரும்பியோர், விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளிடம், தங்களிடம் உள்ள தொகைக்கு உரிய அத்தாட்சியை பெற்று வந்தால் மட்டுமே, பழைய நோட்டுகள் மாற்றப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்தது. 'விமான நிலையத்தில் அது பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லை' என, பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், வெளிநாடு சென்று திரும்பியோர், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு, இன்றுடன் முடிகிறது. அதனால், சில நாட்களாக, சென்னை ரிசர்வ் வங்கிக் கிளையில், மிக அதிக அளவில் மக்கள் குவிந்து வருகின்றனர். நேற்றும், ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும், மக்கள் அதிக அளவில் வந்திருந்தனர். வெளிநாட்டில் இருந்து திரும்பியதற்கான, உரிய ஆவணம் வைத்திருந்தோர் மட்டும் வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள், பழைய ரூபாய் நோட்டுகள், நாளை முதல் செல்லா காசாகிவிடும் என்பதால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

- நமது நிருபர் -
ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், அவரது சொத்துக்கள் மூலமாக அபராதத்தை வசூலிக்க கோரியும் கர்நாடக அரசு சார்பில் கடந்த 21–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
புதுடெல்லி,

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.


இதை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து, 4 பேரையும் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக அப்பீல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் மீதான அப்பீல் வழக்கு அற்றுப்போகிறது (இல்லாமல் போகிறது) என கூறி, மற்ற 3 பேருக்கும் தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்தனர். இதையடுத்து 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், அவரது சொத்துக்கள் மூலமாக அபராதத்தை வசூலிக்க கோரியும் கர்நாடக அரசு சார்பில் கடந்த 21–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வருகிற 5–ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக விவசாயிகளுக்கும் உதவ வேண்டும்
மீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில், உத்தரபிரதேசத்தில் எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற தணியாத வேட்கையில், பா.ஜ.க. பல வாக்குறுதிகளை அளித்தது. அதிலொன்று, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடனை ரத்து செய்வோம்’ என்ற வாக்குறுதியாகும். மக்கள் இமாலய வெற்றியை பா.ஜ.க.வுக்கு அளித்தனர். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், உத்தரபிரதேச அரசு விவசாய கடன்களை ரத்துசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

 இதிலென்ன ஆச்சரியம் என்றால், இந்த கடன்சுமையை மத்திய அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என்று மத்திய விவசாய மந்திரி ராதாமோகன் சிங் பாராளுமன்றத்திலேயே உடனடியாக அறிவித்து விட்டதுதான். உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் விவசாய கடன்களை ரத்து செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரவில்லை. வாழ்வா, சாவா என்றநிலையில், கடன்சுமையில் தத்தளிக்கும் தமிழக விவசாயிகளும் அதைத்தான் கேட்கிறார்கள்.

டெல்லியில் கடந்த 17 நாட்களாக விவசாய சங்கத்தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் 84 விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். ‘‘விவசாயிகள் பெற்ற பயிர்கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்யவேண்டும். தமிழகத்துக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் கர்நாடகா, கேரளா மாநிலங்கள் அணைகட்டி கொண்டிருப்பதை தடுக்கவேண்டும்.

 நடுவர்மன்ற தீர்ப்புப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி பங்கீட்டு ஒழுங்காற்று குழுவையும் உடனடியாக அமைக்கவேண்டும். தமிழகத்துக்கும், மற்ற மாநிலங்களுக்கும் இடையிலான நதிநீர் பிரச்சினைகளை விரைந்து தீர்க்கவேண்டும். நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றிட வேண்டும். விவசாய விளைபொருட்களுக்குரிய விலை கிடைத்திடவேண்டும். வறட்சி நிவாரண நிதியாக தமிழக அரசு கோரும் ரூ.40 ஆயிரம் கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும்’’ என்பது உள்பட பலகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது பிரதமர் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றவகையில் கழுத்தில் மண்டை ஓடுகளை தொங்கவிட்டும், அரை நிர்வாண கோலத்திலும், கையில் திருவோடுகளை ஏந்திக்கொண்டும், மொட்டைஅடித்தும், ஒரு விவசாயியை சடலமாக கிடத்தியும், பிரதமர் மோடியின் உருவத்தை அணிந்தும், எலி, பாம்புக்கறியை வாயில் வைத்தும், தியானம் செய்தும் பல்வேறுவிதமான போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் அவர்களை சந்தித்தனர். ஜனாதிபதியிடம் அழைத்துக்கொண்டு போனார்கள். மத்திய மந்திரிகளிடமும் அழைத்துச்சென்று கோரிக்கை விடுக்க வைத்தனர். ஆனால், பலன் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை. வடகிழக்குப்பருவமழையும், தென்மேற்கு பருவமழையும் பொய்த்துப்போன நிலையில், கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் தமிழ்நாடு வாடிக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடே வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயத்துக்கு மட்டுமல்லாமல், குடிநீருக்கே தமிழகம் முழுவதும் விவசாயிகள் உள்பட அனைத்து மக்களும் மிகமிக கடுமையாக தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், மத்திய அரசாங்கம் இன்னமும் உதவிக்கரம் நீட்டவில்லை. ஏற்கனவே தமிழக அரசு வறட்சிக்காக மட்டும் ரூ.39 ஆயிரத்து 565 கோடி வேண்டும் என்று கேட்டநிலையில், வார்தா புயல் நிவாரணத்துக்கும், வறட்சி நிவாரணத்துக்கும் சேர்த்து மத்திய அரசாங்கம் வெறும் ரூ.2,096 கோடியே 86 லட்சம் மட்டும் கொடுத்திருப்பது, வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல் இருக்கிறது.

 டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள், தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறார்கள் என்பதை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, உத்தரபிரதேசத்தின்மீது கொண்டுள்ள கரிசனத்தைபோல், தமிழகத்தின் மீதும் இரக்கம்காட்டி உதவி செய்யுங்கள் என்பதுதான் தமிழக விவசாயிகளின் கோரிக்கை. எல்லா மாநிலங்களும் மத்திய அரசாங்கம் என்ற தாயின் குழந்தைகள் என்றவகையில் பாரபட்சம் காட்டுவதை விட்டுவிட்டு, மிகவும் நலிந்து போயிருக்கும் தமிழ்நாடு என்ற குழந்தைமீது அதிக கவனம் செலுத்தவேண்டியதுதான் மத்திய அரசாங்கம் எனும் தாயின் கடமையாகும்.

Thursday, March 30, 2017

அட! தமிழ்நாடு, கேரளாவுக்குத் தலைமைச் செயலர்கள் ஆன தமிழ்ச் சகோதரிகள்!

By DIN | Published on : 30th March 2017 02:17 PM |




சென்னை: பொதுவாகவே தலைமைச் செயலர்களின் நியமனங்கள் முக்கியத்துவம் பெறும். அதுபற்றிய செய்திகள் முக்கியச் செய்திகளில் இடம்பெறுவது புதிதல்ல.

ஆனால், கேரள அமைச்சரவை நேற்று நளினி நெட்டோவை, மாநில தலைமைச் செயலர் பதவிக்கு நியமித்து வெளியிட்ட செய்தி, மற்றொரு வகையிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

அதாவது, கேரள மாநில தலைமைச் செயலர் எஸ்.எம். விஜய் ஆனந்தின் பதவிக் காலம் மார்ச் 31ம் தேதியோடு நிறைவு பெறுவதால், புதிய தலைமைச் செயலராக நளினி நெட்டோ நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது உள்துறை கூடுதல் செயலராக இருக்கும் நளினி நெட்டோ, ஏப்ரல் 1ம் தேதி தலைமைச் செயலராக பதவி ஏற்கிறார். இவர் வரும் ஆகஸ்ட் மாதத்தோடு பணி நிறைவு பெறுகிறார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நளினி நெட்டோவின் மாமாவின் மகள்தான் தமிழகத்தின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன். இவர் கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதன்மைச் செயலராக பதவியேற்றுக் கொண்டார்.

மற்றொரு விஷயம் என்னவென்றால், நளினி நெட்டோ, வைத்தியநாதன், விஜய் ஆனந்த் ஆகியோர் 1981ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள்.


ரிசர்வ் வங்கியின் 18வது ஆளுநராக இருந்த எஸ். வெங்கிடராமனின் மகள்தான் கிரிஜா வைத்தியநாதன். நாகர்கோயிலைச் சேர்ந்த வெங்கிடராமனின் சகோதரியின் மகள் தான் கேரள தலைமைச் செயலராகவிருக்கும் நளினி நெட்டோ.

தமிழகத்தின் தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ்வின் பணி நீக்கத்தை அடுத்து, தமிழகத்தின் தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதனை டிசம்பர் 22ம் தேதி தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி நளினி நெட்டோ தலைமைச் செயலர் பதவியை ஏற்றால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அதுவும் சகோதரிகள் தமிழகம்,கேரள மாநிலங்களின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரி ஸ்டிரைக்.. காய்கறி விலை உயரும் அபாயம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது. 
 
சென்னை: டீசல் மீதான வாட் வரி, இன்சூரன்ஸ் கட்டணம் ஆகியவற்றை கண்டித்து இன்று முதல் 5 மாநிலங்களைச் சேர்ந்த 25 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

 இதனால் காய்கறி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் கட்டணம், டீசல் மீதான வாட் வரி, 15 ஆண்டுகள் பழைமையான வாகனங்கள் பயன்படுத்த மத்திய அரசின் தடை உத்தரவு ஆகிய விவகாரங்களை கண்டித்து மார்ச் 30ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று தென்மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்தது. lorry owners today go on strike VIDEO : Lorry அதன்படி லாரி ஸ்டிரைக் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 50 லட்சம் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. இந்நிலையில் நேற்று, டெல்லியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோபால்நாயுடு, தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அப்போது, லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து நிறைவேற்றுவதாக, அமைச்சர் உறுதி அளித்தார். மாநிலத்தில் தீர்க்கவேண்டிய பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் தமிழக அரசு நேற்று இரவு வரை பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் திட்டமிட்டபடி இன்று ஸ்டிரைக் நடக்கிறது. தமிழகத்தில் சரக்கு லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு மணல் லாரி உரிமையாளர்கள், காஸ் டாங்கர் லாரி உரிமையாளர்கள், சரக்கு புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் மட்டும் 12 லட்சம் லாரிகள் ஓடாது என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் தெரிவித்துள்ளது. இதனால் லாரிகளில் சரக்கு ஏற்றுவதற்காக செய்யப்படும் புக்கிங் திங்கட்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தினால் ரூ.5000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடையும் அபாய நிலை உள்ளது. இதனால் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/lorry-owners-today-go-on-strike-278298.html
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும் 

(குறள்: 639) 
 
பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. பெரிய வங்கி ஒன்றில் கடன் கேட்டிருந்தார் ஒரு தொழிலதிபர். தொகை அதிகம் என்பதால் கோட்ட மேலாளர் ஒப்புதல் அளிக்க வேண்டும்! அவரோ இராணுவத்தில் குறுகிய காலம் பணியாற்றி விட்டு வங்கியில் சேர்ந்து உயர் பதவிக்கு வந்தவர்! இருப்பினும் வர்த்தக வளர்ச்சியில் அதீத ஆர்வம் கொண்டவர்.
ஆனால் பாவம், கடன் கொடுப்பதில் அனுபவம் குறைவு. அச்சம் வேறு. அதனால் தனது அலுவலகத்தில் கடன் பிரிவின் தலைமை அதிகாரியையே நம்பி இருந்தார். அதிகாரி பெயர் குமார் என்று நீங்களே சொல்லி விட்டீர்களே! குமாருக்கு கத்தி போல புத்தி. கடனில் புலி. ஆனால் தனக்குப் பின் பணியில் சேர்ந்தவர் கோட்ட மேலாளராக இருப்பதில் பொறாமை; முன்னேற விடக் கூடாதென்கிற கெட்ட எண்ணம்! அப்பாவியான கோட்ட மேலாளருக்கோ இது புரியவில்லை! 

கோட்ட மேலாளரைச் சந்திப்பதற்கு தொழிலதிபர் நேரம் கேட்ட பொழுது அவர், ‘குமாரை முதலில் பாருங்கள்' எனச் சொல்லி விட்டார். அங்கு சென்ற கிளை மேலாளரும் தொழிலதிபரும் காத்திருந்தனர், காத்திருந்தனர், ஒரு மணி நேரம் காத்தே கிடந்தனர்! பின்னர் உள்ளே கூப்பிட்ட குமார் ஒரு கையில் தேநீர் கோப்பையும் மறு கையில் நாளிதழுமாக இருந்தார்! தொழிலதிபர் இருமினார், செருமினார். ‘ம்..சொல்லுங்க' என்ற குமார், கிளை மேலாளர் கடன் பற்றிச் சொல்லத் தொடங்கியவுடன் அவரை இடை மறித்தார்!
`இங்கே கொடுத்த கடனே வசூலாகவில்லை. நான் சொன்னாலும் கோட்ட மேலாளர் செய்ய மாட்டார். 6 மாதம் கழித்துப் பார்க்கலாம்’ என்று கோட்ட மேலாளரைக் குறை சொல்லி அவர்களை அனுப்பி விட்டார்! அவர்களோ விடாமல் கோட்ட மேலாளரைச் சந்தித்தனர். அவர் மரியாதை காட்டினாரே தவிர, ‘கடன் என்றால் குமார் சொல்லியதற்கு மேல் ஒன்றுமில்லை' என்று சொல்லி விட்டார். இந்த மாதிரி சம்பவங்களால் வாடிக்கையாளர்கள் நொந்து போனார்கள். வங்கியை விட்டும் போனார்கள்! கோட்ட மேலாளரின் பெயர் கெட்டது. மற்ற வங்கிகள் இந்த வங்கியின் வாடிக்கையாளர்களை குறி வைக்க ஆரம்பித்து விட்டன! 

அண்ணே, உதவிக்கு ஆள் தேவைதான். ஆனால் அவர் விசுவாசத்துடன் இருக்க வேண்டும் இல்லையா? ஒப்பந்தப் புள்ளிக்கு என்ன தொகைக்கு விண்ணப்பித்துள்ளோம் என்பதைப் போட்டியாளருக்கு ரகசியமாகச் சொல்பவர் போன்றோரை அருகில் வைத்துக் கொண்டால் என்ன ஆகும்? ஒரே ஆள் எல்லா வேலைகளையும் பார்க்க முடியாது என்பதற்காகவும், சில துறைகளில் நிபுணத்துவம் வேண்டும் என்பதற்காகவும் தானேங்க உதவியாட்கள்? 

அதாவது செய்வதைச் சிறப்பாகவும் நாணயமாகவும் செய்யக் கூடியவர்கள்! இக்குணங்கள் இல்லாதவரை அருகில் வைத்துக் கொண்டால் வேறு வினையே வேண்டாமே! தீய எண்ணமுடையவன் பக்கத்தில் இருப்பது எழுபது கோடி பகைவர்கள் இருப்பதினும் கொடுமையைத் தரும் என்கிறது குறள்! 

- somaiah.veerappan@gmail.com

என்ன செய்யப் போகிறோம்?

By ஆசிரியர்  |   Published on : 29th March 2017 01:41 AM 

தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த 15 நாட்களாக நடைபெற்றுவரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் குறித்து தேசிய ஊடகங்கள் தற்போதுதான் விழித்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வரிசைகட்டித் தங்களது ஆதரவைத் தெரிவிக்க ஜந்தர் மந்தர் நோக்கி விரைகிறார்கள்.

த.மா.கா. தரப்பில் ஜி.கே. வாசன் குடியரசுத் தலைவரிடமும், தி.மு.க. தரப்பில் திருச்சி சிவா, நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடமும், ஆளும் அ.தி.மு.க. தரப்பில் தம்பிதுரை நரேந்திர மோடியிடமும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்த அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று முறையிட்டிருக்கிறார்கள். இதனால் பிரச்னை தீர்ந்துவிடப் போவதில்லை என்பது அவர்களுக்கும் தெரியும், விவசாயிகளுக்கும் தெரியும், தில்லியில் உள்ள தலைவர்களுக்கும் தெரியும்.

கடந்த ஆண்டு வடமேற்குப் பருவமழை பொய்த்துவிட்டது. அதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் வறட்சியை எதிர்நோக்கியது. ஏனைய மாநிலங்களில் ஓரளவுக்காவது நதிநீர் கிடைக்கிறது. தமிழகத்தின் நிலைமை அதைவிட மோசம். காவிரியிலும் போதிய அளவு நீர் கிடைக்கவில்லை, தென்மேற்குப் பருவ மழையும் பொய்த்துவிட்டது. அதனால் கடந்த 100 ஆண்டுகளில் காணாத வறட்சியைத் தமிழகம் எதிர்கொள்கிறது. இப்படியொரு நிலைமையைத் தமிழகம் சந்திக்க இருக்கிறது என்பதைக் கடந்த 5.1.17-இல் 'வேளாண் இடர்ப்பாடு!' என்கிற தலையங்கத்தில் விரிவாகவே குறிப்பிட்டிருந்தோம்.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீ. மழை கிடைக்கப் பெறுவது வழக்கம். கடந்த ஆண்டு வெறும் 169.3 மி.மீ. மழை மட்டுமே கிடைக்கப் பெற்றது. அதனால் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் 60%-க்கும் குறைவாகவே மழைநீர் பெற்றிருக்கின்றன. 1876-க்குப் பிறகு இந்த அளவுக்குக் குறைவாக வடகிழக்குப் பருவமழை இருந்தது இப்போதுதான்.

பருவமழைதான் பொய்த்துவிட்டது. காவிரி நீராவது கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கடந்த ஜூன் - டிசம்பர் காலகட்டத்தில் தமிழகத்திற்கு நியாயமாக 179 டி.எம்.சி. காவிரி நீர் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கர்நாடகம் நமக்குத் தந்திருக்கும் மொத்த நீரே வெறும் 66.60 டி.எம்.சி. மட்டுமே. தங்களுக்கே தண்ணீர் இல்லாதபோது எப்படித் தருவது என்று கை விரித்துவிட்டது கர்நாடகம்.
காவிரி டெல்டா பகுதி வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஏறத்தாழ 50 லட்சம் ஏக்கரிலான பயிர்கள் கருகி, சாகுபடி செய்த 30 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி இயற்கை பொய்க்கும் என்பதை உணர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா, குறுவை சாகுபடிக்காக 54 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடித் திட்டத்தையும், சம்பா சாகுபடிக்காக 64 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிலான சம்பா சாகுபடித் திட்டத்தையும் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள 12.86 லட்சம் ஏக்கர் நிலத்தில், 11.01 லட்சம் ஏக்கர் நிலத்திலுள்ள பயிர் காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க, தமிழக அரசு ரூ.2,247 கோடி ஒதுக்கி இருக்கிறது. இதன்மூலம் பயிர் வாரியாக விவசாயிகளுக்கு ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக வறட்சி நிலைமை குறித்து ஆய்வு செய்ய, கடந்த ஜனவரி மாதம் மத்தியக் குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்தது. தமிழகம் 99% வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக இங்கிருந்து செல்லும்போது அந்தக் குழு தெரிவிக்கவும் செய்தது. ஆனால் தில்லி சென்று இந்தக் குழுவினர் செய்த பரிந்துரைப்படி, தமிழகத்திற்கு ரூ.2,090 கோடி மட்டும்தான் வறட்சி நிவாரணமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறைத்து மத்திய அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை வெறும் ரூ.1,748 கோடி மட்டுமே.
நிவாரணம், இழப்பீடு, காப்பீடு, கடன் தள்ளுபடி இவையெல்லாம் விவசாயிகளின் துயர் துடைக்கும் முயற்சிகள். விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதால் மட்டுமே நிலைமையை எதிர்கொண்டதாகி விடாது. விவசாயம் பொய்க்கும்போது, விவசாயத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களின் நிலை என்ன என்பதையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். சங்கம் வைத்து விவசாயிகள் அவர்
களது பிரச்னைகளை முன்வைப்பது போல, விவசாயத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்கள் தங்கள் நிலைமையை எடுத்துரைக்க வழியில்லை. விவசாயிகள் தற்கொலை என்று தெரிவிக்கப்படுவதில் பெரும்பாலானவை விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைதான் என்பதை நாம் உணர்வதில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுப்பது, விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வது, தமிழக நதிகளை இணைப்பது, வறுமை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிப்பது, தேசிய, தென்னக நதிகளை இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விவசாயிகள் சங்கத்தினர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் தலைநகர் தில்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது, தமிழகத்தின் பிரச்னையை ஓரளவுக்கு தேசிய அளவில் வலியுறுத்த வழிகோலியிருக்கிறது. இதனாலேயே, மிகப்பெரிய அளவில் மத்திய அரசு உதவி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.

தமிழகம், இருக்கும் நீரை எப்படி சாமர்த்தியமாக பயன்படுத்த முடியும் என்பதையும், நிலத்தடி நீரைப் பாதுகாப்பது, கடல்நீர் சுத்திகரிப்புக்கு முயற்சிப்பது போன்றவற்றையும் மையப்படுத்தி வருங்காலத் திட்டங்களை வகுப்பதுதான் தொலைநோக்குப் பார்வையாக இருக்க முடியும்.

ஜனநாயகத்துக்குச் செருப்படி!

By ஆசிரியர்  |   Published on : 30th March 2017 01:37 AM

புணேயிலிருந்து தில்லிக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வருகிறார் சிவசேனை கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான ரவீந்திர கெய்க்வாட். அது முதல் வகுப்பு என்பது இல்லாத விமானம். மக்களவை உறுப்பினரான நான் முதல் வகுப்பில்தான் பயணம் செய்வேன் என்று அடம் பிடிக்கிறார் ரவீந்திர கெய்க்வாட்.

விமானப் பணிப்பெண்ணும், அறுபது வயது ஒப்பந்த ஊழியர் ஆர். சுகுமாரும், அந்த விமானத்தில் தனியாக முதல் வகுப்பு வசதி இல்லாததால், நாடாளுமன்ற உறுப்பினரான அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக விளக்குகிறார்கள். அவர்களது விளக்கத்தைக் கேட்கத் தயாராக இல்லாத கெய்க்வாட், சட்டென்று தனது செருப்பை எடுத்து ஆத்திரத்தில் ஒப்பந்த ஊழியர் சுகுமாரை அடிக்கிறார். தான் 25 முறை அடித்ததாகத் தொலைக்காட்சி சேனல்களுக்குப் பெருமையுடன் பேட்டி அளிக்கிறார்.

ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது இந்த நிகழ்வு. ஏர் இந்தியா விமானம் ரவீந்திர கெய்க்வாட்டைத் தங்களது விமானத்தில் பயணிப்பதற்குத் தடை விதித்தது. ஏர் இந்தியாவைத் தொடர்ந்து, ஏனைய விமான நிறுவனங்களும் முறைகேடாக நடந்து கொண்ட ரவீந்திர கெய்க்வாட் விமானங்களில் பயணிப்பதற்குத் தடை விதித்தன. சம்பந்தப்பட்டவர் முக்கியமான அரசியல் பிரமுகர், அதுமட்டுமல்லாமல் மக்களவை உறுப்பினரும்கூட என்று தெரிந்தும் துணிந்து நடவடிக்கை எடுக்க முற்பட்ட விமான நிறுவனங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்திய நாடாளுமன்றமே கொதித்தெழுந்தது, அது ரவீந்திர கெய்க்வாட்டைத் தண்டிப்பதற்கல்ல, விமான நிறுவனங்களைக் கண்டிப்பதற்கு.
'எல்லா விமான நிறுவனங்களும் ரவீந்திர கெய்க்வாட் பயணிப்பதற்குத் தடை விதித்திருக்கின்றன. ஆனால் விமானத்தில் பயணிப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களான எங்களது அடிப்படை உரிமை' என்று முழங்கினார் சிவசேனை கட்சியின் இன்னொரு மக்களவை உறுப்பினரான அர்விந்த் சாவந்த். நாடாளுமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸைச் சேர்ந்த விவேக் தாங்கா ஒருவர்தான் தனது சுட்டுரையில், 'எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் கெய்க்வாட்டின் செயல்பாட்டை நியாயப்படுத்த முற்படுகிறார்கள். இது வருத்தமளிக்கிறது. மக்களிடையே நம்மைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தைத்தான் இது ஏற்படுத்தும்' என்று துணிந்து பதிவு செய்திருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தரப்படும் சலுகைகள் ஏராளம் ஏராளம். ஆண்டொன்றுக்கு 34 தடவை தனது மனைவியுடன் விமானத்தில் பயணிக்கலாம். உறுப்பினரின் மனைவியோ கணவரோ எட்டு முறை தனியாகப் பயணிக்கலாம். நாடாளுமன்றம் செயல்படும்போது எத்தனை தடவை வேண்டுமானாலும் விமானத்தில் முதல் வகுப்பில் பயணிக்கலாம். அவர்கள் விமான நிலையத்துக்கு வந்தால் அவர்களுக்கு உதவி செய்ய விமான நிலைய அதிகாரி ஒருவர் விமானத்தில் ஏறும்வரை உடன்வந்து உதவுவார். இவையெல்லாம் உரிமைகள் அல்ல, சலுகைகள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் சேவைக்காக வழங்கப்படும் சலுகைகள். அதையே தங்களது உரிமையாகக் கருதும்போதுதான் ஆணவம் தலைக்கேறி, ஊழியர்களை கைநீட்டி அடிக்கும் அளவுக்கு அது அத்துமீறுகிறது.

தவறு செய்யும் உறுப்பினர்களை நாடாளுமன்றம் ஆரம்பத்திலிருந்தே கண்டிக்கவும் தண்டிக்கவும் முற்படாததால்தான், ரவீந்திர கெய்க்வாட்டின் செயல்பாட்டையும் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியாயப்படுத்த முற்பட்டிருக்கிறார்கள். 1951-இல் உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அதை யாரும் பொருட்படுத்தவே இல்லை. அதில் காணப்பட்ட சலுகைகளையும், உரிமைகளையும் பயன்படுத்தும் அளவுக்கு, அதில் கூறப்பட்ட நடத்தை விதிமுறைகளை யாரும் பின்பற்றவில்லை. 1993-இல் சிவராஜ் பாட்டீல் மக்களவைத் தலைவராக இருக்கும்போது 'ஒழுக்கக் குழு' ஒன்றை ஏற்படுத்த முற்பட்டார். அதுவும் எடுபடவில்லை.
1992-இல் தில்லி - கொல்கத்தா ராஜதானி விரைவு ரயிலில் பிகாரில் ஏறிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் முன்பதிவு செய்து பயணித்துக் கொண்டிருந்த இந்திய அரசுப் பணி அதிகாரிகளைப் படுத்தியபாடு ஊடகங்களில் வெளியாகி பரபரப்பானது. முறைகேடாக நடந்த அந்த உறுப்பினர்களை நாடாளுமன்றம் கண்டிக்கவும் இல்லை, தண்டிக்கவும் இல்லை.

இதுபோல நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாதாக்கள் போலவும், ரெளடிகள் போலவும் நடந்துகொள்வது, புதிதல்ல. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப் பொதுஜனத்திற்குத் துணிவு கிடையாது. அவையின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறையுடன் நாடாளுமன்ற, சட்டப்பேரவையாவது தவறு செய்யும் உறுப்பினர்களை எச்சரிக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை என்பதால்தான், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன.

சுதந்திர இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தாங்கள் மக்கள் தொண்டர்கள் என்பதை மறந்து செயல்படுகிறார்கள் என்பதை உணர்ந்திருந்தவர் மகாத்மா காந்தி. 'அதிகாரம் என்பது எவருடைய அறிவையும் மங்கச் செய்யும். அதிகார ஆட்சிக்கு வருவது பெரும் புகழைக் கொடுக்கலாம் அல்லது சர்வ நாசத்தையும் விளைவிக்கலாம். மக்களுக்குத் தொண்டு புரிவதன் மூலம் கிடைக்கும் விசேஷ உரிமைகள்தான் எந்தக் காலத்திலும் அழியாமல் இருக்கும். வெறும் அதிகாரச் சின்னங்களாக உள்ள உரிமைகள் அனைத்தும் அழிந்து போகும்' என்று 80 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் காந்தியடிகள் இதை உணர்ந்துதான் கூறியிருக்கிறார்.
மகாத்மா காந்தியையே மறந்துவிட்டவர்கள். அவர் சொன்னது எங்கே இவர்களுக்கு நினைவிருக்கப் போகிறது.

30 th March 2017


மதுபானத்தை விட உயிர் முக்கியமானது டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

By DIN  |   Published on : 30th March 2017 05:06 AM
SUPREME-COURT
'மதுபானத்தை விட உயிர் முக்கியமானது' என்று டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் சுற்று வட்டாரத்துக்கு குறையாமல் மதுபானக் கடைகள் தள்ளியிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பை செயல்படுத்த மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள், மது விற்பனையாளர்கள் உள்ளிட்ட 66 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 'தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரம் என்பதை 100 மீட்டர் ஆகக் குறைப்பதற்குப் பரிசீலனை செய்ய வேண்டும். மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் இந்த உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நவம்பர் 28-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதபதிகள் டி.ஓய். சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி முன் வைத்த வாதம்: தேசிய நெடுஞ்சாலை என்பது முக்கிய நகரங்களை இணைக்கிறது.

மாநில நெடுஞ்சாலை மாவட்ட தலைநகரங்களையும், சிறிய நகரங்களையும் இணைக்கிறது. மதுபான உரிமம் தொடர்பாக மாநிலங்களில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் சுற்று வட்டாரத்தை கடந்து மதுபானக் கடைகள் இருக்க வேண்டும் என்ற உத்தரவை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற முடியுமா எனத் தெரியவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடைகளை அகற்ற வேண்டுமானால், தமிழகத்தில் 5,672 மதுபானக் கடைகளில் 3,321 கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். இதனால், வருவாய் இழப்பு ஏற்படும்' என்றார்.
இதையடுத்து, வெவ்வேறு மாநில அரசுகள் உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் கே.கே. வேணுகோபால், அபிஷேக் மனு சிங்வி, கோபால் சுப்பிரமணியம், ராஜீவ் ராமசந்திரன் உள்ளிட்டோர் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர்.

அவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'மதுபான விற்பனையை விட மனித உயிர் முக்கியமானது. குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவர் மது போதையால் உயிரிழக்க நேரிட்டால், ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும்.

தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு எங்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை. அதே சமயம், மாநிலங்கள் தரப்பில் முன்வைத்த வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. அவற்றைப் பரசீலிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து வியாழக்கிழமை (மார்ச் 30) பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்கிறோம்' என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கின் குறைந்தபட்ச இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு !!

 - தமிழக அரசு தகவல்.

பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய்
(கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. 
இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:-

மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது.

 எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம்.

குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

 இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும்.

பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
 கொள்கையை மாற்றுமா வாட்ஸ் ஆப்

சமீபத்தில், பிரிட்டனின் லண்டன் நகரில், காலித் மசூத் என்ற, 50 வயது பிரிட்டிஷ்காரர் நடத்திய தாக்குதலில், நான்கு பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணையில், தாக்குதலை நடத்துவதற்கு முன், 'வாட்ஸ் ஆப்' சமூகதளம் மூலம், காலித் மசூத் சிலருக்கு செய்தி அனுப்பியது தெரியவந்துள்ளது. இது, அனைத்து மக்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், வாட்ஸ் ஆப் சேவை கிடைப்பது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

வாட்ஸ் ஆப் என்பது, மிகவும் பாதுகாப்பாக, ஒருவருக்கு, மற்றொருவர் செய்தி அனுப்பும் முறை. இந்த சமூகதளத்தை பயன்படுத்தி அனுப்பப்படும் செய்தியை, மற்றவர் யாரும் பார்க்க முடியாது; விசாரணை அமைப்புகள் உட்பட, அந்த அளவுக்கு ரகசியம் காக்கும், 'என்கிரிப்ட்' எனப்படும் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சம் உள்ளது. இது நல்ல வசதி என்றாலும், மிக பெரிய பிரச்னையாகவும் உள்ளது. குறிப்பாக, பிரிட்டன் போலீஸ் இதை வெளிப்படுத்திய பின், உலகெங்கும் உள்ள, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு அமைப்புகள் இடையே, இது மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த பிரச்னை குறித்து, வாட்ஸ் ஆப் சமூகதளத்தின் உரிமையாளர்களான, 'பேஸ்புக்' சிந்திக்க வேண்டும். தங்களுக்கு வரும் செய்தியை, வேறு யாரும் பார்க்க முடியாது என்பது, பயனாளிகளுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். பொது மக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வரை, உண்மையான நபர்களால் பயன்படுத்தப்படும் வரை, இந்த வசதி பிரச்னை இல்லை.ஆனால், இந்த வசதி, பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமையும்போது தான், சிக்கலே ஏற்படுகிறது.

இது போன்ற வசதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்போது, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அமைப்புகள், மவுனமாக வாய் மூடி இருக்க முடியாது. பாதுகாப்பான, இது போன்ற செய்திகளை, தேவைப்படும் போது, போலீஸ் போன்ற அமைப்புகள் பார்ப்பதற்கும், அதை கொண்டு விசாரிக்கவும் எப்படி உதவ வேண்டும் என்பதை, பேஸ்புக் நிறுவனம் யோசிக்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. பயனாளிகளின் சுதந்திரம் பாதிக்காத வகையில், அவர்களது ரகசியங்கள் வெளிப்படாத வகையில், இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நம் நாட்டில், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு சர்ச்சையுடன் இந்த சம்பவத்தையும் ஒப்பிடலாம். சில ஆண்டுகளுக்கு முன், பிளாக்பெர்ரி மொபைலில் வரும் செய்திகளை பார்ப்பதற்கு, இந்திய அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முதலில் மிகவும் பிடிவாதமாக இருந்த, பிளாக்பெர்ரி நிறுவனம், பின், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

அமெரிக்காவில், ஆப்பிள் நிறுவனத்துக்கும், அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ.,க்கும் இடையே மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ஒரு தம்பதியின், ஆப்பிள் போனில் உள்ள தகவல்களை தெரிவிக்கும்படி, கோர்ட்டுக்கு போனது, எப்.பி.ஐ.அரசுக்கு உதவும்படி கோர்ட்டும் உத்தரவிட்டது. ஆனால், மொபைல் போனில் உள்ள, 'பாஸ்வேர்ட்' எனப்படும், ரகசிய குறியீட்டை கண்டுபிடிக்கும் வசதி இல்லை என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது. தொடர்ந்து பல்வேறு பயங்கரவாத பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதால், இவை, நம்முடைய நாட்டுக்கும் பொருந்தும். பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளை அவர்கள் ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.இது போன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையிலும், தீர்வு காணும் வகையிலும், பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் என, எதிர்பார்க்கிறேன்.

ஆர்.கே.ராகவன், சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர்
 'ஆன்லைன்' ஆர்.டி.ஐ., தபால் துறைக்கு விருது

ஆன்லைன்' மூலம், ஆர்.டி.ஐ., மனுக்களை பெற்று, பதிலளிக்கும் அரசு துறைகளில், 2015 - 16ம் ஆண்டின் சிறந்த பங்களிப்புக்கான விருது, தபால் துறைக்கு கிடைத்துள்ளது.

 தகவல் உரிமை சட்ட அடிப்படையில், தகவல் கோரும் மனுக்களை, 'ஆன்லைன்' முறையில் பெற்று, 'ஆன்லைன்' முறையில் பதில் அளிக்கும் பணியை, மத்திய அரசின் பல்வேறு துறைகள் செய்து வருகின்றன.இதில், 2015 - 16ம் ஆண்டில், 'ஆன்லைன்' முறையை விரிவுபடுத்தியதுடன், சிறப்பாக பங்காற்றிய தற்கான விருது, தபால் துறைக்கு கிடைத்துஉள்ளது. மத்திய வெளியுறவு துறை, அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி துறைக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. மனுக்களுக்கு பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவை அடிப்படையாக வைத்தும், சிறப்பாகச் செயல்பட்ட துறைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

 மத்திய அமைச்சரவை செயலகம், சராசரியாக, 10 நாட்களிலும்; பணியாளர் தேர்வாணையம், சராசரியாக, 11.5 நாட்களிலும்; பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, சராசரியாக, 11 நாட்களிலும், தகவல் கோரும் மனுக்களுக்கு பதிலளிப்பதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
- நமது நிருபர் -
 முத்திரையிட்ட ரூபாய் நோட்டு: ஊழியர் தவிப்பு

 

சென்னை: அரசு போக்குவரத்து கழக முத்திரை வைக்கப்பட்ட, புதிய, 2,000 ரூபாய் நோட்டை மாற்ற முடியாமல், ஊழியர் திண்டாடிய சம்பவம் நடந்துள்ளது. 'ரூபாய் நோட்டுகளில், எதையும் எழுதக்கூடாது' என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியதை பற்றி கவலைப்படாமல், நோட்டின் எண்ணிக்கை; பெயர்களை எழுதுவது தொடர்ந்தது.

 புதிய, 2,000 - 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, 'ரூபாய் நோட்டில் எழுதினால், அவை செல்லாத நோட்டாக கருதப்படும்' என, எச்சரித்தது. இந்நிலையில், திண்டிவனத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்து ஊழியர் ஒருவருக்கு கிடைத்த, 2,000 ரூபாய் நோட்டில், 'தமிழக அரசு போக்குவரத்து கழகம், திண்டிவனம்' என்ற, ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதை, மாற்ற பல வங்கிகளில் அலைந்தும், மாற்ற முடியாமல் திண்டாடி வருகிறார்.

இது குறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாது என, ரிசர்வ் வங்கி அறிவிப்பால், நாங்கள் அதுபோன்ற நோட்டுகளை வாங்குவதில்லை. பொதுமக்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டும்' என்றார்.
 பாடம் கற்றுத்தருகிறது ஒரு பள்ளிவாசல்!

கோவை : இஸ்லாமியர்கள், 'ஒழு' செய்வதற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, பூமிக்குள் செலுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.தொழுகை செய்வதற்கு முன்பாக, கை, கால் மற்றும் முகம் ஆகியவற்றை சுத்தமாகக் கழுவுவது (ஒழு), இஸ்லாமியர்கள் கடை பிடிக்கும் முக்கிய மரபாகவுள்ளது. ஒவ்வொரு பள்ளி வாசலிலும், தொழுகைக்காக ஒழு செய்ய மட்டும், தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கோவையில், 100க்கும் அதிகமான பள்ளி வாசல்கள் உள்ளன; இவற்றில், ஒரு நாளைக்கு, 10 லட்சம் லிட்டர் தண்ணீர், 'ஒழு' செய்வதற்காக செலவிடப்பட்டு, சாக்கடையில் கலப்பதாக தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.தற்போதுள்ள கடுமையான வறட்சியால், நகரிலுள்ள சில பள்ளிவாசல்களில் ஒழு செய்யவும் தண்ணீர் இல்லாமல், விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 இதனால், பள்ளி நிர்வாகத்தினரும், பொது மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையைத் தவிர்ப்பதற்காக, கரும்புக்கடை சல்மத் நகரிலுள்ள மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளி வாசலில், தண்ணீர் சேகரிப்புக்கான முன் மாதிரி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, இந்த பள்ளி வாசலில், ஒழு செய்யும் தண்ணீரை பூமிக்குள் சுத்திகரித்து அனுப்புவதற்குதேவையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 5 அடி விட்டம், 12 அடி ஆழத்தில் இரண்டு பெரிய குழிகள் தோண்டப்பட்டு, அதில் தண்ணீரை சுத்திகரிப்பதற்கான கூழாங்கற்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் நிரப்பப்பட்டுள்ளன. இதனால், தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் நிலத்துக்குள் அனுப்பப்படுகிறது.இதன் காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. அடுத்த கட்டமாக, கரும்புக்கடை மஸ்ஜிதுல் ஹூதா, ஒப்பணக்கார வீதி அத்தர் ஜமாஅத் பள்ளி வாசல், ஆர்.எஸ்.புரம் குர்ரதுல் அயன் ஆகிய பள்ளிவாசல்களில், இதே போன்ற தண்ணீர் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்க முயற்சி நடப்பதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம் கூறுகையில், ''கோவையில், பள்ளி வாசல்களில் ஒழு செய்ய பயன்படுத்தும் தண்ணீரை, சுத்திகரிப்பு செய்து, பூமிக்குள் செலுத்துவதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. ''எனவே, மற்ற பள்ளி வாசல்களுக்கு முன் மாதிரியாக, இந்த கட்டமைப்பு, எங்களது பள்ளி வாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறைவனின் அருட்கொடையான தண்ணீரை, சாக்கடையில் கலந்து விரயமாக்காமல், அதை சுத்திகரிப்பு செய்து, மறு பயன்பாட்டுக்குக் கொண்டு வர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மற்ற பள்ளி வாசல்களிலும் தொடரும்,'' என்றார்.
மாதச் சம்பளம் பெறும் தனி நபர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்யவேண்டும் என்று வருமான வரி இலாகா வற்புறுத்தி வருகிறது. 
 
புதுடெல்லி,
மாதச் சம்பளம் பெறும் தனி நபர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்யவேண்டும் என்று வருமான வரி இலாகா வற்புறுத்தி வருகிறது. இந்த நிலையில் 2017–18–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது தொடர்பான படிவம் எளிமை படுத்தப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி வருமான வரி இலாகா அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
மாதச் சம்பளம் மற்றும் வட்டி வருவாய் ஈட்டும் தனி நபர்கள் எளிய முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் விதமாக 2017–18 மதிப்பீட்டு ஆண்டுக்கான விண்ணப்ப படிவத்தில் பல்வேறு பத்திகள் குறைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் வருமான வரி கழிவுகள் பற்றிய சில பத்திகளும் அடங்கும். (வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான ஐ.டி.ஆர்–1/சகாஜ் படிவத்தில் மொத்தம் 18 பத்திகள் உள்ளன)

இதனால் இந்த படிவங்களை நிரப்புவது எளிதாக இருக்கும். புதிய படிவம் வருகிற 1–ந்தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதையடுத்து, ஏப்ரல் மாதமே வருமான வரி கணக்கை மதிப்பிட்டு தாக்கல் செய்யலாம். கடைசி நாள் ஜூலை 31–ந்தேதி ஆகும். இணையதளம் வழியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வருகிற 1–ந்தேதியே தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

உலக இட்லி தினத்தை முன்னிட்டு 2,500 ரக இட்லி கண்காட்சி

உலக இட்லி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ் மையம் இணைந்து 2,500 ரக இட்லி கண்காட்சியை சென்னை பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடத்தினர். 
 உலக இட்லி தினத்தை முன்னிட்டு 2,500 ரக இட்லி கண்காட்சி
சென்னை,

கண்காட்சியில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, மனோரமா, அன்னை தெரசா, அப்துல்கலாம், சார்லி சாப்ளின், அம்பேத்கர், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோரின் உருவத்திலான இட்லிகளும், அதுமட்டுமல்லாமல் மல்லிப்பூ, இளநீர், பாதாம், பிசா, புதினா, ராகி, பீட்ரூட், சாக்லேட் என மொத்தம் 2,500 இட்லி ரகங்கள் இதில் இடம்பெற்று இருந்தன. மேலும், நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை எடுத்துக்கூறும் விதமாக வாக்குப்பதிவு எந்திரம் போன்ற இட்லியையும் உருவாக்கி இருந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மு.இனியவன் நிருபர்களிடம் கூறும்போது, ‘உலக இட்லி தினத்தை முன்னிட்டு உன்னத உணவான இட்லியை பல்வேறு சுவை மற்றும் வடிவங்களில் செய்துகொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் செய்து வருகிறோம். இந்த நிகழ்ச்சி தொடர்பாக 2 மாதம் முன்பு திட்டமிட்டு 2 நாட்களில் 22 பேர் உழைப்புடன் இதை செய்தோம்’ என்றார்.
தலையங்கம்

நன்னெறி பாடமாக திருக்குறள்


இப்போதெல்லாம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பள்ளிக்கூட மாணவர்கள் பற்றி வரும் செய்திகளெல்லாம் பெரும் வேதனையளிக்கிறது.

மார்ச் 30, 02:00 AM

இப்போதெல்லாம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பள்ளிக்கூட மாணவர்கள் பற்றி வரும் செய்திகளெல்லாம் பெரும் வேதனையளிக்கிறது. பேனா எடுக்கவேண்டிய வயதில், கத்தியை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடங்களிலேயே பல கத்திக்குத்து சம்பவங்கள் நடக்கின்றன. பல பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்டுள்ள துயரமான நிகழ்வுகள் நடக்கின்றன. படிக்கும் வயதிலேயே பல மாணவிகள் பாலியல் உணர்ச்சிகளுக்கு ஆட்படுவதும், காதல் என்ற வலையில் விழுந்து ஓடிப்போவதும், படிக்கும் காலத்திலேயே கர்ப்பம் அடைவதுமான பல வருத்தத்துக்குரிய செய்திகள் வருகின்றன. இதுமட்டுமல்லாமல், நற்குணங்கள் மலரவேண்டிய இந்த ‘டீன்ஏஜ் பருவம்’ என்று கூறப்படும் பதின் பருவத்தில் துர்க்குணங்கள் என்ற முட்புதர்கள் வளர்ந்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையை குத்தி குதறிவிடுகின்றன. மேலும், வாழ்க்கையில் ஒரு சிறிய சறுக்கல்களைக்கூட, ஒரு சிறிய தோல்வியைக்கூட சந்திப்பதற்கு துணிவில்லாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன.

இதற்கெல்லாம் காரணம், அந்தக்காலத்தில் பள்ளிக்கூடங்களில் நீதிபோதனை பாடங்கள் இருந்தன. இப்போது பள்ளிக்கூடங்களில் நீதிபோதனை இல்லை. பாடம், பாடம், படிப்பு, படிப்பு என்று வேறு எதற்கும் இடம்கொடுக்காமல், பள்ளிக்கூடநேரங்களில் படிப்பு ஒன்றுதான் முக்கியம் என்றவகையில் கல்வி கற்பிக்கப்படுகின்றன. இந்தநிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையில் எஸ்.ராஜரத்தினம் என்பவர் திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்புவரை பாடத்திட்டத்தில் கொண்டுவரவேண்டும் என்று வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், கல்வியின் முதன்மை குறிக்கோளே நன்னெறி கருத்துகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் சமூகம் என்பதால், திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்த்திட தமிழக அரசுக்கு ஆணையிட்டார். ‘மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் பின்பற்றிட திருக்குறளில் எல்லா நீதிபோதனைகளும் உள்ளன’ என்று நீதிபதி வலியுறுத்தினார். ஒழுக்கமுள்ள, நேர்மையுள்ள, அறிவாற்றல் உள்ள எதிர்காலத்தை ஒளிர வைக்கும் மாணவர் சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்றவகையில் நீதிபதி ஆர்.மகாதேவனின் இந்த தீர்ப்பை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது மிகவும் வரவேற்புக்குரியதாகும்.

உலக இலக்கியச்செழுமைக்கு தமிழ்மொழியில் மிகச்சிறந்த கொடையாக கருதப்படுவதும், நன்னெறி கருத்துகளுடன் வாழ்வியல் நெறிகளை இணைத்து செதுக்கப்பட்ட அறிவுக்கருவூலம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்களையும் வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் என்றவகையில், 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்புவரை வரும் கல்வியாண்டில் பயிற்றுவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு அதிகாரத்தில் 10 குறட்பாக்கள் இருக்கின்றன. ஆக, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் 150 குறட்பாக்களை கற்றுக்கொள்வார்கள். 12–ம் வகுப்பு படித்து முடிக்கும்போது 1,050 குறட்பாக்களை அறிந்து, புரிந்து, தெரிந்து மாணவ சமுதாயம் வெளியே வரும். இதுமட்டுமல்லாமல், திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் நன்னெறி கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள், இசைப்பாடல்கள், சித்திரக் கதைகள், அசைவூட்டப்பட்ட படங்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களை சென்றடையும் விதமான இணையவழி என திருக்குறளை அவ்வப்போது நவீனமுறையில் உருவாக்கி உடனுக்குடன் பதிப்பித்து வெளியிட மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருக்குறள் எந்த மதத்துக்கும், எந்த இனத்துக்கும் மட்டும் சொந்தமில்லை, எல்லோருக்குமான பொதுமறை என்றவகையில் சிந்தைக்கு இனிய, செவிக்கு இனிய திருக்குறளை கற்றுக்கொடுக்கும் பணிக்கு முன்னுரிமை கொடுத்து, இதிலுள்ள அறவழிகளை மாணவர்களின் உள்ளத்தில் பதியவைத்து, அதன்படி நடக்கவைக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்குத்தான் இருக்கிறது.
































































தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான ரே‌ஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் போலி அட்டைகளும் இடம்பெற்றுள்ளன. 
 


சென்னை,

எலெக்ட்ரானிக் பதிவுகளின் அடிப்படையில் ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டைகளை வழங்கினால் போலி அட்டைகள் தானாக ஒழிந்துவிடும் என்று கணக்கிட்டு, ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன் பின்னர் ரே‌ஷன் அட்டைகளை ஆதார் தகவலுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரே‌ஷன் அட்டைகளுக்கான ஆதார் பதிவு தகவல்களும் பெறப்பட்டுவிட்டன.

99 சதவீதம் பதிவு தமிழகம் முழுவதும் இதுவரை 99 சதவீத ஆதார் தகவல்கள் பெறப்பட்டு ரே‌ஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுவிட்டன. ஒரு சதவீதம் மட்டுமே அதாவது தமிழகமெங்கும் சுமார் 2 லட்சம் பேர் மட்டுமே ஆதார் தகவல்களை இணைக்கவில்லை.

குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் ஆதார் எண்கள் மற்றும் செல்போன் எண் போன்ற தகவல்கள், அந்தந்த ரே‌ஷன் கடைகளில் கடந்த 6 மாதங்களாக இணைக்கப்பட்டு வந்தன. ரே‌ஷன் அட்டைதாரரின் புகைப்படங்களை ஸ்மார்ட் அட்டையுடன் இணைக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதில் சற்று காலதாமதம் ஆகிவிட்டது.
இந்த நிலையில், ஏப்ரல் 1–ந் தேதியன்று ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டைகள் வழங்கும் பணியை தமிழக அரசு தொடங்குகிறது. திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் காலை 11 மணிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அட்டை எப்படி இருக்கும்? பச்சை வண்ணத்தில் உள்ள அந்த அட்டை ஏ.டி.எம். அட்டைபோல் காணப்படும். முதல் பக்கத்தில் தமிழக அரசின் முத்திரை, அட்டை வழங்கும் துறையின் பெயர் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
மேலும் குடும்பத் தலைவரின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, முகவரி, அட்டைக்கான எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும். அட்டையின் பின்பகுதியில், அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார் எண், ‘கியூ ஆர் கோர்டு’ ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

அச்சுப் பணி தொடர்கிறது இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
ரே‌ஷன் பொருட்களைப் பெறுவதில் ஒருவர் கூட விடுபட்டுவிடக்கூடாது என்ற முனைப்பில் அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டைகளை தொடர்ந்து அச்சிட்டு வருகிறோம்.

எஸ்.எம்.எஸ். வரும் அச்சிட அச்சிட அவற்றை தொடர்ந்து வழங்குவோம். வாடிக்கையாளர் ஒருவரின் ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டை அச்சிடப்பட்டு, அது அவரது ரே‌ஷன் கடைக்கு வந்துவிட்டால், அதுபற்றிய தகவலும், அதை அவர் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற தகவலும், ரே‌ஷன் அட்டையுடன் ஏற்கனவே பதிவு செய்திருந்த செல்போனுக்கு தமிழ் மொழியில் எஸ்.எம்.எஸ். ஆக வரும்.

இந்த எஸ்.எம்.எஸ். வந்த பிறகு ரே‌ஷன் கடைக்குச்சென்று புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம். எனவே, யாரும் முன்கூட்டியே ரே‌ஷன் கடைகளுக்குச் சென்று அவசரப்படத் தேவையில்லை.

சரிபாருங்கள் ஒவ்வொருவரும் தங்கள் செல்போன் எண் அந்தந்த ரே‌ஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்வது மிகமிக அவசியம். செல்போன் நம்பரை நீங்கள் கொடுத்தும் அது பதிவு செய்யப்படவில்லை என்றால், ஸ்மார்ட் அட்டை வாங்குவதில் சுணக்கம் ஏற்படும்.
ஆனாலும் செல்போன் நம்பரை பதிவு செய்ய வேறு வழிகள் உள்ளன. 1967 அல்லது 18004255901 என்ற இலவச நம்பர்களை தொடர்பு கொண்டு அந்த சேவையைப் பெறலாம். இ–சேவை மையங்களிலும் இதற்கான உதவியை நாடலாம்.

செல்போன் நம்பரை பதிவு செய்தபிறகு வாங்கிய பொருட்கள் தொடர்பாக இதுவரை எஸ்.எம்.எஸ். எதுவும் அந்த நம்பருக்கு வரவில்லை என்றால், அந்த நம்பர் பதிவாகவில்லை என்று அர்த்தம். எனவே இதை உடனே சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

சென்னையில் இல்லை முதல் அட்டையை இலவசமாக வழங்குகிறோம். பின்னர் அந்த அட்டையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென்றாலும், இணையதளம் வழியாக சுயமாக செய்துகொள்ளலாம். இ–சேவை மையம் மூலமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆனால் தகவல்களை மாற்றிய பிறகு புதிய ஸ்மார்ட் அட்டையை அச்சிட்டு வழங்குவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்படும். சென்னையில் தற்போது தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலாகி இருப்பதால், தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை ஸ்மார்ட் அட்டைகள் வழங்க இயலாது.

தொலைந்துவிட்டால்... ரே‌ஷன் அட்டையுடன் ஆதார் நம்பரை இதுவரை இணைக்காமல் இருப்பவர்கள் சற்று துரிதமாக செயல்படவேண்டும். ஜூன் மாதத்துக்குள் ஆதார் எண்கள் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்மார்ட் அட்டையை யாரும் தொலைத்துவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். அட்டை எண், ஆதார் எண், ரே‌ஷன் அட்டையில் பதிவு செய்த செல்போன் எண் ஆகியவற்றை வைத்து புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம். ரே‌ஷன் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்தாகிவிடும் என்ற பயமும் இனி அவசியம் இல்லை. ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டையை ரத்து செய்ய முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, March 29, 2017

 Sub-registrar arrested in fake documents case

 He aided a man to appropriate property

The . Tirupattur police on Tuesday arrested a sub-registrar in a 2015 fake documents case.
According to Tirupattur Town police, Pachaiammal, a resident of Krishnagiri Main Road, Tirupattur, approached the Madras High Court, after her son, Murali, appropriated his ailing father’s property through fake documents.

His father Rajikannu was comatose, when Murali transferred two saw mills worth Rs. 10 crore to himself by affixing his father’s thumb impression on the documents.
He took the help of Karunakaran, then sub-registrar of Tirupattur, and three others, for this purpose, police said.

Went on medical leave
Following a court directive, police arrested Murali and two others.
The sub-registrar, who was transferred to Kallakurichi, eluded the police net by going on medical leave. He was nabbed him on Tuesday.
 Cases filed against MCI notifications withdrawn

The Madras High Court Bench here on Tuesday permitted the chairman of an educational trust to withdraw two writ petitions filed by it challenging the notifications issued by Medical Council of India (MCI) on March 10 for conducting a common State-wide counselling on the basis of merit list of National Eligibility-cum-Entrance Test (NEET) for “all admissions” to undergraduate as well as postgraduate medical courses in “all medical educational institutions.”

Justice V. Parthiban granted the permission with liberty to the chairman of Padanilam Welfare Trust based in Kanniyakumari district, to move the Supreme Court.

Earlier, it was brought to the notice of the judge that the apex court was already seized of a similar case filed by Christian Medical College Ludhiana Society which had highlighted lack of clarity over the right of minority educational institutions to admit students after the introduction of National Eligibility-cum-Entrance Test (NEET).

Doctors from Tamil Nadu felicitated for distinguished service in specialised fields

Three doctors from the State have been awarded the prestigious Dr. B.C. Roy National Award and two others, the Hari Om Ashram Alembic Research Award.

At a ceremony at Rashtrapati Bhavan on Tuesday, President Pranab Mukherjee distributed the awards, given in various categories and for various years, to the doctors.

Vice-Chancellor of The Tamil Nadu Dr. MGR Medical Univeristy S. Geethalakshmi was given the award in recognition of her outstanding services in the field of socio-medical relief for 2016.
C. Palanivelu, chairman of Coimbatore-based GEM Hospital received the award in the eminent medical person category for 2015. This is the second time Dr. Palanivelu has got the award — he got it the first time in 2006 in the speciality development category.

Anand K. Khakhar, programme director, Centre for Liver Diseases and Transplantation at Apollo Hospitals, Chennai received the award for the recognition of best talents in encouraging the development of specialities in different branches in medicine category, also for 2015.
S. Rajasekaran, chairman, department of orthopaedics, Ganga Hospital, Coimbatore was given the Hari Om Ashram Alembic Research Award for 2008, and P. Sundaresan, senior scientist and head of the Genetics department at the Aravind Medical Research Foundation, Madurai, received the same award for 2010.

Dr. B.C. Roy Award is given in each of the following categories: Statesmanship of the Highest Order in India, Medical man-cum-Statesman, Eminent Medical Person, Eminent person in Philosophy, Eminent person in Science and Eminent person in Arts.

No bribes needed here, says this clerk

Panchayat employee in Kerala wears his campaign on his sleeve

 


A smiling panchayat clerk who welcomes visitors and even wants their rating at the end of a visit to the local body would seem cinematic, but not in Kerala’s largest grama panchayat in Malappuram district.

Abdul Saleem Palliyalthody is the face visitors look for at the Angadipuram panchayat office when they go for service. At 42, he has been employed at the local body for three years now.
Mr. Saleem makes no secret of his public service enthusiasm. On his table is a prominent notice that declares his opposition to bribery.

The notice in Malayalam reads: “The government pays me Rs. 811 a day (Rs. 24,340 a month) to serve you. If you are not happy with my service, please tell me about it.” He has updated his pay whenever it changed since he put up the notice in 2014.

The ‘anti-corruption’ notice went viral when a curious visitor posted it on social media recently.
“Service is the essence of any government job. People coming to us for different things should not return empty-handed. They should return satisfied,” says Mr. Saleem, whose panchayat has a staff strength of 17.

No one entering the office can miss the central figure. He offers to help even if it is not part of his job, which involves issue of various certificates and documents on buildings. “His approach makes people aware of their rights,” says his superintendent, I.P. Peethambaran.

Polio does not deter

Mr. Saleem says panchayat secretary, K. Sidheek, who is himself a State best secretary awardee for 2011-12, let him be outspoken. Mr. Sidheek says his junior colleague has had a positive impact on the entire staff.

Motivating effect
Panchayat president O. Kesavan welcomes the ‘motivating’ effect. Unlike other local body staff, Mr. Saleem is from the same village and worked elsewhere, including in West Asia, before returning to home base.

He does not let his 40% polio disability affect field visits done on his scooter. The Vigilance Department had recently said local bodies and revenue offices were among the most corrupt government offices.

Nurse in eye of storm as patient dies in Salem GMKMCH

By M Sabari  |  Express News Service  |   Published: 29th March 2017 03:04 AM  |  
Last Updated: 29th March 2017 03:04 AM  |   A+A-   |  
SALEM: A video of a nurse, purportedly downplaying the death of a patient under her watch, went viral on social media, sending top officials at the Government Mohan Kumaramangalam Medical College Hospital (GMKMCH) in Salem into an overdrive to contain the damage, here on Tuesday.
Soon after outrage started pouring in, GMKMCH dean Kanagaraj ordered a probe to find out if the death was due to the nurse’s negligence.
According to sources, Chandran (38), a painter from Shevapet in Salem, was referred to the GMKMCH from the government Hosur hospital on Saturday after he sustained grievous injuries in a fall off a building on Friday.
Chandran was admitted to the trauma ward at GMKMCH in the early hours of Saturday.  However, he was shifted to the septic ward on Sunday as there was no friend or relative attending on him. Later in the day, Chandran’s relative called on him at the hospital, only to find him lying dead on his bed. 
When they alerted the duty nurse, she came to the ward and did not touch the body to ascertain if Chandran had passed away. A few relatives recorded the exchange of words on their mobile phones and circulated it on social media like Whatsapp and Facebook.
In the video, relatives of Chandran ask the nurse to check whether the patient was dead. The nurse comes near Chandran and does not touch him. When relatives question her, she retorts she has to take care of eight wards and might not have checked on Chandran. 
Meanwhile, GMKMCH doctors defended the nurse, blaming the deceased’s relatives for not accompanying him. “During nights, nurses monitor all the patients.
If there is someone with a patient, they can alert them in case of emergency,” they said. Speaking to Express, Dean Kanagaraj said preliminary inquiries revealed that the nurse was in charge of two wards, not eight as claimed in video.

Rare tumour removed from woman’s food pipe by RGGGH doctors

By Express News Service  |   Published: 29th March 2017 03:57 AM  |  

Dr K Narayanasamy, dean (in-charge), RGGGH inspecting Saraswathy, along with Dr MK Rajasekar, director, ENT and Dr Elango, resident medical officer | Express
CHENNAI: When Saraswathy (59) told her family and neighbours that she felt that something was popping out of her mouth whenever she coughed, every one thought she was hallucinating.
Only later when she was taken to the Rajiv Gandhi Government General Hospital it was found she was suffering from a peculiar tumour in her food pipe and it was the tumour that was emerging out of her mouth.

“One day when I was alone at home, I coughed and it came out from mouth. That was the first experience. I was scared, screamed and started sweating. When I told my family, none believed me” Sarawathi said at a press meet organised by the hospital doctors. The doctors said  only two such cases of tumour were reported globally.

“When I told others, they all said its just my tongue and I am hallucinating. But the experience kept haunting me. Then, I took the help of my little grand daughter, to take a picture, when it protrudes next time. It worked, she was there with me when I had such an experience again, and she clicked it on mobile phone. Then, she shared it on Whatsapp to others. They believed me after seeing the photo,” Saraswathy, a home maker and a resident of Vadapalani, said.

She had been suffering the tumour for nearly last four years. While it protruded out only when she coughed, it  merged with the food pipe during other times.

Private hospitals Sarawathy approached initially could not diagnose the tumour. As the pain in the throat became very unbearable, she finally landed at the RGGGH after referrals from other government hospitals. “We too did not believe what she said. But, when testing with an endoscopic device, she coughed and the tumour popped out. We were shocked on seeing it because none of us had come across anything like this before,” said M K Rajasekar, Director, ENT department, RGGGH.

The tumour was nearly 15 cm in length and was almost like another tongue. The doctors said two such cases that were reported earlier were  in Andhra Pradesh (4 cm) and Spain (5 cm).

“Removing the tumour was a little challenge. We used a harmonic scalpel to ensure there was no blood loss,” said Rajasekar says recalling the surgery that was conducted on March 9. Saraswathy was discharged on Tuesday.

PG ADMISSION NOTIFICATION 2017-18 NEW INDIAN EXPRESS

Nurse in eye of storm as patient dies in Salem GMKMCH

By M Sabari  |  Express News Service  |   Published: 29th March 2017 03:04 AM  |  

SALEM: A video of a nurse, purportedly downplaying the death of a patient under her watch, went viral on social media, sending top officials at the Government Mohan Kumaramangalam Medical College Hospital (GMKMCH) in Salem into an overdrive to contain the damage, here on Tuesday.

Soon after outrage started pouring in, GMKMCH dean Kanagaraj ordered a probe to find out if the death was due to the nurse’s negligence.

According to sources, Chandran (38), a painter from Shevapet in Salem, was referred to the GMKMCH from the government Hosur hospital on Saturday after he sustained grievous injuries in a fall off a building on Friday.

Chandran was admitted to the trauma ward at GMKMCH in the early hours of Saturday.  However, he was shifted to the septic ward on Sunday as there was no friend or relative attending on him. Later in the day, Chandran’s relative called on him at the hospital, only to find him lying dead on his bed. 

When they alerted the duty nurse, she came to the ward and did not touch the body to ascertain if Chandran had passed away. A few relatives recorded the exchange of words on their mobile phones and circulated it on social media like Whatsapp and Facebook.
In the video, relatives of Chandran ask the nurse to check whether the patient was dead. The nurse comes near Chandran and does not touch him. When relatives question her, she retorts she has to take care of eight wards and might not have checked on Chandran. 
Meanwhile, GMKMCH doctors defended the nurse, blaming the deceased’s relatives for not accompanying him. “During nights, nurses monitor all the patients.

If there is someone with a patient, they can alert them in case of emergency,” they said. Speaking to Express, Dean Kanagaraj said preliminary inquiries revealed that the nurse was in charge of two wards, not eight as claimed in video.

Three forge certificates to secure teacher posts in Tamil Nadu government schools

By B Anbuselvan  |  Express News Service  |   Published: 29th March 2017 03:10 AM  |  

TIRUVANNAMALAI: Fooling the entire government machinery for nearly three years, two women and a man served as school teachers after forging certificates in three different schools of the district.  
The trio, who went absconding since Monday, have been booked by police on several charges.  

They have been identified as C Muthulakshmi, assistant graduate teacher for Tamil at Government High school at Aaavaniyapuram near Vandavasi, C Punithavathi, a graduate teacher for history at Government High school  Vadamampakkam, and S Vijayakumar, a graduate teacher for English at Government High School in Melmattai near Vinnamangalam.
Copy of the fake appointment letter produced
by Maheswari and her brother | Express

About a month ago, Tiruvannamalai chief education officer V Jayakumar received a complaint against Muthulakshmi alleging she was not a government servant. She had taken up the position in June 2014 by producing a transfer order from Mambakkam Government School near Arcot.

Acting on the complaint, Jayakumar asked all school headmasters in the district to send the details of teachers  appointed in their schools in the last ten years along with the copy of appointment letters.

The education officials verified the details and it was found that Muthu-lakshmi did not work at Government School in Mambakkam and the transfer order submitted by her was a forged document. The inquiry also led to Punithavathi and Vijayakumar, who also forged their appointment letters.


The trio had been receiving their salaries from the government for the past three years. Following investigations, Jayakumar lodged a complaint to Superintendent of Police R Ponni against the 'three teachers'.
Jayakumar told Express that a departmental inquiry had  been ordered as to how the trio remained in service for nearly three years.

"We have also initiated procedures to terminate three of them from service," he added.
A senior police officer said, the trio has been booked under IPC 465 (forgery), 468 (purpose of cheating) and 471 (fraudulently creating documents).
Mar 29 2017 : The Times of India (Chennai)


Doc in dock for fake paper 5 yrs after man's death

Chennai: 






A government doctor who issued a false medical certificate to a man five years after his death is facing disciplinary action, including suspension of medical licence, after a Motor Accident Claims Tribunal found him guilty. Ariyalur chief judicial magistrate A S Ravi has directed the Tamil Nadu State Medical Council to initiate departmental action against Dr B Anand, a civil assistant surgeon of Vedaranyam Government Hospital, and submit the result of the proceedings to the court.
  The magistrate attached copies of the orders he had passed on March 13 along with a copy of the `medical certificate' and the deposition of the doctor during cross-examination.
Council president Dr K Senthil said the issue would taken up on Thursday . On February 16, 2016, Dr B Anand issued a certificate saying Ramachandran, an agricultural worker who met with an accident on April 11, 2010, had suffered hip fracture with severe loss of blood.

He also said the accident caused his death because injuries to the abdomen aggravated the wound caused by a previous surgery .
During cross-examination, he told the court he did not treat Ramachandran but issued the certificate after checking him. He worked in Perambalur hospital in 2010 and was moved to Vedaranyam in 2013. During another cross-examination, he said he wrote the certificate based on Ramachandran's medical reports. But Ramachandran had died on February 9, 2011.

Ramachandran and his family were travelling in a van when it met with an accident on Chennai-Kumbakonam Main Road in April 2010. Ramachandran moved a tribunal, seeking `4 lakh saying the driver's negligent driving caused the accident in which he broke the right thigh and injured the left foot and neck.

During the pendency of the application, Ramachandran died and his family enhanced compensation claim to `7.5 lakh. The New India Assurance Co. Ltd, a respondent, said Ramachandran suffered simple injuries that did not cause his death.
Holding there was nothing to disprove negligent driving, the court wondered how the doctor could have seen Ramachandran on February 16, 2016, when he died on February 9, 2011.


Pointing out that Ramachandran did not state anything about hip injury in FIR, and that doctors who treated him too were silent about it, the court concluded his evidence was false. Dismissing Ramachandran's petition, the magistrate flayed Dr Anand for issuing a false certificate and giving false evidence.

Govt sends VC nominee list, guv says no SC direction to appoint state’s candidates

Govt sends VC nominee list, guv says no SC direction to appoint state’s candidates Apr 18, 2024, 03.52 AM IST Kolkata: It might have been a ...