Tuesday, March 28, 2017

விவசாயிகளைக் காப்போம்!

By எஸ். கோபாலகிருஷ்ணன்  |   Published on : 28th March 2017 01:30 AM  |     |  

gobalakrishnan
நூறு ஆண்டுகளாக இல்லாத பெரும் மழை மற்றும் வெள்ளத்தின் பாதிப்பை கடந்த ஆண்டில் எதிர்கொண்ட தமிழகம், இந்த ஆண்டு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. அதன் விளைவாக பல்லாயிரக் கணக்கான ஏக்கரில் பயிர்கள் கருகியுள்ளன.
விவசாயம் பொய்த்துப்போன கவலையில் விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். தமிழகத்தில் வறட்சி நிலைமையை மத்திய வேளாண் துறைச் செயலர் தலைமையிலான குழு நேரில் ஆய்வு செய்துள்ளது.
இதற்கிடையே, விவசாயிகள் தற்கொலையைத் தடுப்பது, தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை விரைந்து அளிப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு உடனடித் தேவையாக இருப்பவை இரண்டு. ஒன்று, பாசனத்துக்கு தேவைப்படும் நீர் ஆதாரத்தை அடைந்தே தீர வேண்டும். இரண்டாவதாக, கடன் சுமை தாங்காமல் விழி பிதுங்கிக் கொண்டு உள்ள நிலையில், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், பழைய கடனை அடைப்பதற்கு கூடுதல் கால அவகாசமும், புதிய பயிர் கடனை விரைந்து வழங்குவதும் அவசியம்.
தமிழக விவசாயிகளின் உயிர் நாடிப் பிரச்னையான காவிரி நீர் பங்கீட்டில் கர்நாடகம் காட்டும் அலட்சியப் போக்கும், அக்கறையின்மையும் கவலையளிப்பதாக உள்ளது.

மத்திய அரசு, காவிரி நீர் மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம் என்கிற எந்த ஒரு அமைப்பின் உத்தரவுக்கும் செவி சாய்க்காத ஒரு மாநிலத்திடமிருந்து தமிழக விவசாயிகளுக்கு உரிய நீரை பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

பயிர் கடன் பிரச்னை அப்படி இல்லை. மத்திய, மாநில அரசுகள், ரிசர்வ் வங்கி, நபார்டு, வணிக வங்கிகள் ஆகியவை இணைந்து இந்த பயிர் கடன் பிரச்னையை சுலபமாகத் தீர்த்து வைக்க முடியும்.

விவசாயக் கடன் விஷயத்தை முழுக்க, முழுக்க ஒரு பொருளாதாரப் பிரச்னையாக பார்க்க வேண்டுமே தவிர, அரசியல் அல்லது தேர்தல் சார்புடைய விஷயமாக அல்ல. கடந்த காலங்களில் எப்போதெல்லாம் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோ அப்போதெல்லாம், அது ஆளும் கட்சியின் தேர்தல் உத்தியாகத்தான் பார்க்கப்பட்டது.

2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடியும் சரி, அண்மையில் நடைபெற்ற உத்தரப் பிரதேச தேர்தலில் பா.ஜ.க. அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடியும் சரி, தேர்தல் உத்தியாகவே வர்ணிக்கப்படுகிறது.
இதற்கு வலு சேர்க்கும் வகையில் 2013-ஆம் ஆண்டு சி.ஏ.ஜி. (Comptroller and Auditor General)  அறிக்கையில் 80,229 விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில், 100-க்கு 9 பேர் போலி நபர்கள் என்றும், அவர்கள் அத்தகைய சலுகைகள் பெறுவதற்கு உகந்தவர்கள் அல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தவறான நபர்களுக்கு சலுகைகள் போய் சேருவது தடுக்கப்பட வேண்டியதுதான். அதற்காக, சரியான நபர்களுக்கு உதவக்கூடிய திட்டத்தை தடுக்கவும் கூடாது.

இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் 2014-ஆம் ஆண்டு அறிக்கையில் தனது கருத்தை முன் வைத்துள்ளார். கடன் தள்ளுபடி ஆரோக்கியமான நடவடிக்கை அல்ல. புதிய கடன் வழங்குவதற்கான தொகை இதனால் சுருங்கி விடுகிறது. தகுதி வாய்ந்த நபர்களுக்கு கடன் கொடுக்க முடியாமல் போய் விடுகிறது என்பதே ரகுராம் ராஜனின் கருத்தாக இருந்தது.
பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மேலும் ஒரு படி மேலே போய் 'கடன் தள்ளுபடியால் பயன் அடைந்தவர்கள் அத்துடன் நிற்காமல், எதிர்காலத்திலும் கடன் தள்ளுபடிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.
இந்த கருத்துகள் மேலோட்டமாகப் பார்க்கையில் நியாயம் என்றுதான் தோன்றக் கூடும். ஆனால், நாட்டில் நிலவும் நிதர்சனமான நிலைமை - அதீதமான வறட்சி, பொதுவான பொருளாதார தேக்க நிலை, விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உட்பட்டிருப்பது, விவசாயிகளின் தற்கொலை ஆகிய அசாதாரணமான சூழ்நிலையில், அசாதாரணமான நிவாரணம் தேவை என்பது தெளிவு.

எனவே கடன் சுமையால் தவிக்கும் ஏழை, எளிய விவசாயிகளுக்கு வங்கிகள் - குறிப்பாக பொதுத் துறை வங்கிகள் - சரியான நேரத்தில், சரியான அளவு புதிய பயிர்க் கடன் கொடுப்பதும், பழைய கடனை அடைப்பதற்கு கூடுதல் கால அவகாசம் கொடுப்பதும் மிகவும் அவசியம்.

அதேபோல், மத்திய - மாநில அரசுகள், தேர்தல் அறிவிப்பு வரும்வரை காத்திராமல், நிலைமையை உரிய முறையில் ஆய்வு செய்து, தகுதியான நபர்களுக்கு, அவசியத்துக்கு ஏற்ப (Case to case basis)   பயிர் கடனை பகுதியாகவோ, முழுமையாகவோ தள்ளுபடி செய்திட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக எல்லா விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்வது தவறு. வசதி படைத்தவர்களுக்கும், தகுதியில்லாதவர்களுக்கும் கடன் தள்ளுபடி செய்வது முறையல்ல.
இவ்விதமாக, தனித்தனியாக ஆய்வு செய்து முடிவெடுப்பது எளிதல்ல என்பது உண்மை. அதற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டி இருக்கும். அதேநேரம், இதனால் ஏற்படக்கூடிய நிதிசுமை, தவறான நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்வதால் நேரும் இழப்போடு ஒப்பிட்டால், அது மிகவும் குறைவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத ஸ்டேட் வங்கி தற்போது அறிவித்துள்ள திட்டம் கவனிக்கத்தக்கது. ரூ.25 லட்சம் வரையிலான டிராக்டர்கள் மற்றும் விவசாய தளவாடங்கள், கருவிகள் வாங்குவதற்காக வழங்கப்பட்ட கடன் தொகை வாராக் கடனாக மாறியிருந்தால், அந்த கடன்களை சலுகை அடிப்படையில் ஒரே தவணையில் திரும்பச் செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் முன் வருவார்களேயானால், அவர்களது கடன் மற்றும் வட்டித் தொகையில் 40 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்பதே பாரத ஸ்டேட் வங்கியின் திட்டமாகும்.

இதில் ரூ.6,000 கோடி அளவுக்கு வாராக் கடன் தொகை (Doubtful and Loss Cases)  அடங்கியுள்ளது. இதை சலுகை அடிப்படையில் ஒரே தவணையில் திரும்பச் செலுத்தும் (One Time Settlement) திட்டம் என்கிறார்கள்.
இது புதுமையான திட்டம் அல்ல. பாரத ஸ்டேட் வங்கியும் பிற வங்கிகளும் சில நேரங்களில் ஒரே தவணையில் சலுகையுடன் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.

எனினும் எப்போதோ ஒரு முறை செய்யாமல், இந்த நடைமுறையை அவ்வப்போது செய்தால் நல்லது. இதன்மூலம் பல நன்மைகள் ஏற்படும். ஒன்று, முழு தள்ளுபடியில் உள்ள குறைபாடுகள் களையப்படும். இரண்டாவதாக, வங்கிகளின் வாராக் கடன் சுமை பெருமளவு குறையும். மூன்றாவதாக, கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயம் கிடைக்கும். ஆக, இதன் மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் பலன் கிடைக்கிறது. இதனால் அரசியல் கண்ணோட்டமும் அகற்றப்படுகிறது.
பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் ஏப்ரல் 2016 முதல் டிசம்பர் 2016 வரையிலான காலகட்டத்தில் ஒரு லட்சம் கோடி அதிகரித்துள்ளது. 2015-2016 நிதி ஆண்டில் ரூ.5,02,068 கோடியாக இருந்த வாராக் கடன் டிசம்பர் 2016-இல் ரூ.6,06,911 கோடியாக உயர்ந்துள்ளது. இது மாநிலங்கள் அவையில் துணை நிதி அமைச்சர் சந்தோஷ் கங்குவார் தெரிவித்துள்ள தகவல்.
மின்சாரம், சாலைகள், அடிப்படைக் கட்டமைப்பு, ஜவுளி, உருக்கு ஆகிய துறைகளைச் சார்ந்த நிறுவனங்களின் கடன்கள்தான், வாராக் கடன்களில் முன்னிலை வகிக்கின்றன. இவற்றோடு ஒப்பிடுகையில் விவசாயக் கடன்களில் வாராக் கடன் சதவீதம் மிகவும் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

விவசாயக் கடன்களைப் பொருத்தவரை கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் போவதற்கு பருவ மழை பொய்த்தல், நீர் பற்றாக்குறை, வறட்சி சில நேரங்களில் பெரு வெள்ளம் ஆகிய இயற்கை சார்ந்த காரணங்கள்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில், கடனைத் திரும்பச் செலுத்தாத விவசாயிகள் மீது வங்கிகள் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோ, அவர்களை மனஉளைச்சலுக்கு உட்படுத்துவதோ முறை ஆகாது.

மாறாக, அடுத்த பாசனத்துக்குத் தேவையான பயிர் கடனை சரியான நேரத்தில், சரியான அளவில் தர வேண்டும். பழைய பாக்கியை வசூலிப்பதற்கு தற்போது உள்ள கால அவகாசத்தைவிட அதிகமான கால அவகாசம் தருவதும் உதவிகரமாக இருக்கும்.

அசாதாரணமான சூழல் நிலவும் பட்சத்தில், பயிர் கடனில் ஒரு பகுதியையோ, அல்லது முழுமையான கடன் தொகையையோ, முறையாக கணக்குகளைத் தனித்தனியாக பரீசிலித்த பிறகு, தள்ளுபடி செய்வதற்கு மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

3 comments:

  1. வணக்கம்,
    என் பெயர் மரியன் சேவிக்,
     இங்கே ஒரு கடனைத் தேடிக்கொண்டவர்களுக்கு இந்த நடுத்தரத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன்.
     நான் சுமார் 300 மில்லியன் ரூபா கடனை கடனாக பெற்றுக்கொண்டேன். கடனைப் பெறாமல் 20 மில்லியன் ரூபாய் இழந்தது.
    நான் இரண்டு வெவ்வேறு பெண்கள் இரண்டு முறை திருப்பி
    ஐக்கிய நாடுகள், இன்னும் என் கடன் பெறவில்லை, நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன், என் வணிக செயல்முறை அழிக்கப்பட்டது.
    ஜனவரி 2017 ஜனவரியில், கடவுளுக்கு மகிமை உண்டாகட்டும், ஒரு கடன் வாங்குபவர், திருமதி இவானா லுக்காவுக்கு என்னை அறிமுகப்படுத்திய ஒரு நண்பரை நான் சந்தித்தேன், அவள் கடன் நிறுவனத்தில் கடன் வாங்க எனக்கு உதவியது. எனது அடையாள அட்டையின் நகல் மற்றும் எனது கணக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டபின் எனது கடனை ஏற்றுக் கொண்டேன், அது நம்பமுடியாததாக இருந்தது, மற்றவர்களுடைய அதே பணத்தை நான் எடுத்துக் கொண்டேன் என்று நினைத்தேன், நான் மீண்டும் அவற்றைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்குள் கடன், "ஆம்" என் வங்கியில் இருந்து ஒரு விழிப்புணர்வு என் கணக்கில் ஒரு வைப்பு இருந்தது என்று நான் எடுத்துக் கொண்டேன்.
     .
     பல கடத்தல்காரர்கள் அங்கு இருப்பதாக ஆலோசனை செய்ய இந்த வாய்ப்பை நான் பயன்படுத்த விரும்புகிறேன், எனவே நீங்கள் ஒரு கடனைத் தேவைப்பட்டால், கடனாக கடன் வாங்க விரும்பினால், திருமதி இவானா லுக்கா மூலம் பதிவு செய்யலாம் மற்றும் நீங்கள் மின்னஞ்சல் மூலம் அவளை தொடர்பு கொள்ளலாம்: (ivanaluka04@gmail.com ). என் மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம்: (mariansavic271@gmail.com)
    உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால். அதன்
     உண்மையான, நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் விண்ணப்ப செயல்முறைகளையும் பின்பற்றவும்.
    தாய் ஒரு தகுதியுடைய கடன், நான் தேவைப்பட்டபோது எனக்கு உதவினார், அதனால்தான் நான் அவளது நல்ல செயல்களைப் பற்றி சாட்சி கூறுகிறேன்
    நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம், நான் ராபர்ட் பெர்னாண்டஸ், பணம் தனியார் கடன், நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? உங்களுக்கு நிதி ஆதாயம் தேவை? நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த உலகளவில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. கடனைத் தேவைப்படும் அனைவருக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச கடன்களை நான் கடனளிப்பேன், மேலும் 2% வீதத்தில் கடனை திரும்ப செலுத்த முடியும். வங்கிக் காசோலை அல்லது வங்கிக் காசோலை வழியாக கடனளிக்கிறேன். நிறைய கடிதங்கள் தேவையில்லை. நீங்கள் எங்கள் புகழை ஒரு கடன் பெற வேண்டும் என்றால்.

    மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்: robertm.fernandzloancompany@gmail.com

    நன்றி

    ராபர்ட் பெர்னாண்ட்ஸ் கடன்கள்

    திரு. ராபர்ட் பெர்னாண்டஸ்

    ReplyDelete
  3. Moje ime je Slađa Nedeljković i ja sam iz Srbije. Ovdje u Srbiji imam veliku farmu peradi. Prije pandemije covid-19, moja je peradarska farma bila sasvim u redu, a ja sam zarađivao i mogao platiti osoblje na vrijeme.
    Kad je počela pandemija, moja se farma još uvijek trudila, ali je došla do faze da se sve promijenilo za mene, moju obitelj i moju peradarsku farmu.
    došlo je do toga da teško plaćam svoje osoblje i to je zaista bila zabrinjavajuća situacija.
    Tako sam počeo tražiti dodatna sredstva za vođenje svoje peradarske farme. Prvo sam otišao u svoju banku tražiti kredit, rečeno mi je da moram predočiti dobro dokumentirano osiguranje, a kamata je bila tako visoka.
    Postao sam toliko zbunjen, a zatim sam obavijestio svog prijatelja, gospodina Matića koji je vlasnik peradarske farme, o mojoj situaciji. Gospodin Matić mi je rekao da su, kad su njegovi roditelji htjeli posuditi kredit, kontaktirali kreditnu tvrtku pod imenom GARANTY TRUST LOND, a njegovi su roditelji podatke o tvrtki dobili od nekoga tko je posudio od tvrtke gospođe Milke Dukić (milkadukic1@gmail.com). Objasnio je kako je s njegovim kreditom sve dobro prošlo.
    pa sam zatražio podatke o tvrtki, a evo i podataka o tvrtki koje sam posudio

    Tvrtka: GARANTY TRUST KREDIT
    kontakt adresa tvrtke: anamichaelguarantytrustloans@gmail.com
    mobilni telefon: +1(470)481-0039

    Kontaktirao sam tvrtku i primio sam obrazac zajma tvrtke koji sam ispunio za zahtjev za kredit i na moje najveće iznenađenje, odobren je kredit od 45.000 eura za koji sam se prijavio i zajam sam primio na svoj račun. Iskreno, nikad neću zaboraviti od čega je JAMSTVENI ZAJM ZAJM spasio moju peradarsku farmu i to je razlog zašto sam odvojio vrijeme da podijelim svoje iskustvo jer ne znam kome je također potreban kredit za jedno ili drugo.
    neka Bog uvijek blagoslovi mog prijatelja gospodina Matića i društvo.
    možete me kontaktirati za više informacija putem: sladjanedeljkovic24@gmail.com.

    ReplyDelete

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...