Saturday, January 31, 2015

அஞ்சலி - வி.எஸ்.ராகவன்: கட்டுக்கோப்பை விட்டுக்கொடுக்காத வித்தகர்!

‘பொம்மை’ படத்தில் நாயகனாக

சமீபத்தில் மறைந்த நாடக ஆசான் வி.எஸ்.ராகவனைப் பற்றி நினைக்கும்போது ஒரு ரங்கோலி கோலமாய் நினைவுகள் பளீரிடுகின்றன.

நாடகத்தின் மேல் அபிமானமும் தீராத நேசமும் கொண்ட உண்மைக் கலைஞன் திரு.வி.எஸ்.ஆர். அவர் எந்தப் பாத்திரத்திற்கும் தன் மொழியை மாற்றிக் கொண்டதில்லை. அதனாலேயே அந்த தழுதழுப்பான குரலும் அந்த அழுத்தமான வடமொழி சொற்கள் கலந்த வசனங்களும் அவரது டிரேட் மார்க் ஆனது. அதனால் அவர் பேசும் வசனங்கள், சாகா வரம் பெற்றன!

மிமிக்ரி கலைஞர்கள் உண்மையாகவே ரசித்து லயித்து வி.எஸ்.ஆரின் குரலைப் பிரதிபலிப்பார்கள். எப்படி வாரியாருக்கு “ மகனேய்ய்ய்.. ‘ என்கிற கீச்சுக்குரல் இழுப்பு, முத்திரை ஆனதோ அதேபோல் வி.எஸ். ஆருக்கு “ ஷொல்லுங்க” அவருக்குச் ‘சா’வே வராது! ஷா தான் என்று நினைத்திருந்தோம். காலன் கணக்கு வேறு மாதிரியாக இருந்துவிட்டது. இறுதியில் அவருக்கு ‘சா’ வந்துவிட்டது!

எண்ணற்ற பாத்திரங்களில் அவரைப் பார்த்த தலைமுறை எங்களுடையது. ஜாம்பவான்களாக இருந்த சிவாஜி, எம்.ஜி. ஆர்., ஜெமினி போன்றோரின் படங்களில் அவர் ஒரு இன்றியமையாத இணைப்பு. லேசான தலையாட்டலுடன் அவர் சொன்ன “பிள்ளைவாள் ” இன்னமும் சிதம்பரனாரை நம் கண் முன் நிறுத்துகிறது.

அவர் குணச்சித்திர வேடங்களை ஏற்ற கறுப்பு வெள்ளை திரைப்படக் காலங்களில், சரியான போட்டி இருந்தது. ஒரு பக்கம் எஸ்.வி. ரங்கா ராவ். இன்னொரு பக்கம் எஸ்.வி. சுப்பையா. அவர்களையும் சமாளித்து, தனக்கென ரசிகன் கவனத்தைத் திருப்பிய நடிகர்தான் எஸ்.வி.யைத் திருப்பிப் போட்ட வி.எஸ்.ராகவன்.

மத்தியதரக் குடும்பக் கதைகளை கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்குப் பிறகுத் திறம்பட சொல்லிய இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் நடிகர் பட்டியலில் எப்போதும் வி.எஸ். ஆருக்கு ஒரு இடம் சாஸ்வதம்.

நாடகம் தந்த நல்முத்து

சதுரங்கம் என்கிற நாடகம் வி.எஸ். ஆரின் கலை வாழ்வில் முக்கியமானது. மேடை நாடகத்தில் முதன் முறையாகத் தமிழில் ஒரு செட் நாடகம் போட்டவர் அவர்தான். ஆனாலும் கதைப் பின்னலும் பாத்திரங்களின் குணாதிசயமும் ரசிகனைக் கட்டிப் போட்ட காலம் அது. ஒரே அறையின் பின்புலத்தில் ரசிகனை இருக்கையில் இருத்தி வைக்கும் தன்னம்பிக்கை அவரிடம் இருந்தது. அதில் தைரியம் வந்துதான் பாலசந்தர் ‘எதிர்நீச்சலையே’ மேற்கொண்டார்.

தமிழில் அக்‌ஷர சுத்தமாகப் பேசும் வி.எஸ். ஆர். ஆங்கிலத்தில் அபாரப் புலமை பெற்றவர். கேம்பிரிட்ஜா/ ஆக்ஸ்போர்டா? என்பார்கள் அந்தக் காலத்தில் கிண்டலாக. அந்த மாதிரி ஒரு ஆங்கிலேயே உச்சரிப்புடன் அக்மார்க் சுத்தத்துடன் அவரது ஆங்கிலம் வெளிப்படும். வார்த்தைகளுக்குக் கொடுக்கும் அழுத்தமே அதன் உட்பொருளை விளக்கிவிடும்.

வி.எஸ். ஆர் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள வெண்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து முடித்த பின்பு புரசைவாக்கத்தில் இருந்த அவரது சகோதரியின் வீட்டில் வசித்தபடி அவர் வேலை தேட ஆரம்பித்தபோது அவருக்கு 17 வயது.

பலருக்கும் தெரியாத தகவல் ஒரு பத்திரிகையாளராகத்தான் அவர் வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது. எழுத்தாளர் துமிலன்( ந. ராமசாமி) நடத்தி வந்த ’ மாலதி’ என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தவர். அந்தப் பத்திரிகை மூடப்பட்டபிறகு அவரது எழுத்தாற்றல் அவரை நாடகத்துறைக்கு இழுத்துச் சென்றது.

1954-ல் ’ இண்டியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்’ என்ற நாடகக் குழுவை மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். அதில் ஒருவர்தான் கே. பாலசந்தர். அவரது தொடக்க கால நாடங்களில் பெரும்புகழ் பெற்றது ’ வைரமாலை’. அதன் வெற்றியால் பின்னர் அது திரைப்படமானபோது நாடகத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தில் வி. எஸ். ராகவன் நடித்தார். அதுவே அவரது முதல் படம். அதன்பிறகு அவர் இல்லாத படமே இல்லை என்ற நிலை உருவானது.

நாகேஷின் நண்பர்

நாகேஷின் நெருக்கமான நண்பர் வி.எஸ்.ஆர். பொது இடங்களில், சுப நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாகவே அமர்ந்திருப்பார்கள். ஒரு கொடியில் இரு மலர்கள். நாகேஷ் சட்டென்று எல்லோரையும் சிநேகிப்பார். வி.எஸ்.ஆர். அப்படியல்ல. ஒரு நோட்டம் விடுவார். மெல்ல ஆளை பார்வையாலேயே எடை போடுவார். பிடித்திருந்தால் மட்டுமே கை நீட்டுவார். இதை நான் சிவாஜியிடமும் பார்த்திருக்கிறேன். இருவரையும் ஸ்பரிசித்த பெருமை என் கரங்களுக்கு உண்டு!

நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் நண்பன் எஸ்.வி.சேகரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் நாகேஷையும் வி.எஸ்.ஆரையும் சந்தித்தேன். அவர் பக்கத்தில் என்னை அமர வைத்தனர். தன் பெரிய கண்களை அகல விழித்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ சார் என் பேர் சிறகு இரவிச்சந்திரன்.. ஒரு இலக்கிய சிற்றிதழ் நடத்திக்கிட்டிருக்கேன்.” என்றேன். கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். “ எங்கே இருக்கேள்? நான் இங்கதான் பக்கத்துல இருக்கேன். எனக்கு உங்க பத்திரிகையோட ஒரு பிரதி அனுப்புங்கோ! நான் இப்போ வீட்ல சும்மாத்தான் இருக்கேன்.. படிச்சுட்டு ஷொல்றேன்” என்றார்.மற்றொரு திருமண வைபவத்தில் சந்தித்தபோது மறக்காமல் என்னை ஞாபகம் வைத்துக்கொண்டார்.

“ சிறகு வந்தது.. படிச்சேன். நன்னாருக்கு.. தொடர்ந்து பண்ணுங்கோ “

ஒரு சிற்றிதழ் ஆசிரியனுக்கு உற்சாக டானிக் பாராட்டுதானே!

கட்டுக்கோப்பை விரும்பிய கலைஞன்

அடிப்படையில் நானும் ஒரு மேடை நாடக நடிகன் / எழுத்தாளன் என்பதால் வி.எஸ். ஆர். குழுவின் கட்டுக்கோப்பைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவரது நாடகக் குழுவில் மாற்று நடிகர்கள் என்ற ஏற்பாடே கிடையாது.

சாக்கு போக்கு சால்ஜாப்பு எல்லாம் வி.எஸ்.ஆரிடம் செல்லாது. அதேபோல் நடிகர்களுக்குத் தோதாகத் தேதிகளை மாற்றும் வேலையும் அவரிடம் பலிக்காது. அந்த நாடகம் பல காட்சிகள் போடப்பட்டு இனிமேல் காட்சிகள் இல்லை என்கிற நிலையில்தான், அவரது குழு கலைஞர்கள் வேறு நிகழ்வுகளுக்குச் செல்ல முடியும்.

ஒரு முறை அவரது நாடகத்தில் நடித்த ஒரு இளம் நடிகை, இனிமேல் அவர் நடித்துக் கொண்டிருந்த வி.எஸ்.ஆரின் நாடகம் போடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் புதிய நாடகக் குழுவுக்குத் தன் தேதிகளைக் கொடுத்து விட்டார். புதிய நாடகம் மியூசிக் அகாடமியில்.. மாலை ஆறு மணிக்கு வி.எஸ்.ஆர். அந்த புதிய குழுவின் ஒப்பனை அறைக்கு வெளியே நின்றுகொண்டு அதன் தயாரிப்பாளரை வெளியே வரச் சொல்கிறார்.

“ என் ட்ரூப் ஒரு குடும்பம் மாதிரி… நீ ஆசை காட்டி என் பெண்ணை இழுத்துக் கொண்டு வந்து விட்டாய் “ என்கிற ரீதியில் சரமாரியாக ஆங்கிலத்தில் சதிராடுகிறார். கடைசியில் ஒரு தகப்பனின் சோகத்தோடு அவர் அகன்ற காட்சி இன்னும் என் கண் முன் நிற்கிறது. “ இனிமே நான் நாடகம் போட மாட்டேன்! அந்தப் பாவம் உன்னைத்தான் சேரும்” சாபத்தோடு முடிகிறது சர்ச்சை! இவ்வளவு ரகளைக்கும் காரணமான அந்த நடிகை உள்ளேயிருந்து வெளியே வரவே இல்லை.

வார்த்தையை ஒரு ஒப்பந்த சாசனமாகவே எண்ணி வாழ்ந்தவர் வி.எஸ்.ஆர். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு ஈடு கொடுத்து நடித்திருப்பவர் அவர். காலை படப்பிடிப்புக்கு வந்து விட்டால் எந்த வித சோர்வும் வெறுப்பும் இன்றித் தன் வேடம் வரும் காட்சிக்காகக் காத்திருப்பதில் அவருக்கு அலுப்பே இருந்ததில்லை. அதற்குக் காரணம் நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பு!

படங்கள் உதவி: ஞானம்

தொடர்புக்கு: tamizhsiragu@gmail.com

வினியோகத் துறையில் எனக்கு வெற்றி தேடித்தந்த படம் சிவாஜி: அபிராமி ராமநாதன் தகவல்


வினியோகம் செய்த சில படங்கள் தோல்வி அடைந்ததால், 10 ஆண்டுகள் அத்துறையை விட்டு ஒதுங்கியிருந்தேன். மீண்டும் எனக்கு வெற்றி தேடித்தந்த படம், ரஜினி நடித்த "சிவாஜி'' என்று அபிராமி ராமநாதன் கூறினார்.

திரைப்படத்துறை அனுபவங்கள் குறித்து அவர் தொடர்ந்து கூறியதாவது:-

"தியேட்டர் நிர்வாகம்தான் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பை நிலைப்படுத்தியது.

அப்போது மவுண்ட் ரோட்டில் இருந்த "சாந்தி'', "தேவி'', "சபையர்'', "ஆனந்த்'' தியேட்டர்களில் மட்டுமே ஏர்கண்டிஷன் வசதி இருந்தது. புரசைவாக்கத்தில் நாங்கள் கட்டிய அபிராமியும், பாலஅபிராமியும் ஏர்கண்டிஷன் தியேட்டர்கள். இதன் காரணமாக, தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

அபிராமி தியேட்டரைச் சுற்றி நிறைய இடம் இருந்தது. அங்கு அன்னை அபிராமி, சக்தி அபிராமி என்று 2 தியேட்டர்கள் உருவாக்கப்பட்டன.

"டிவி''யில் சினிமா படங்கள் ஒளிபரப்பத் தொடங்கிய காலகட்டத்தில் குடும்பத்துடன் படம் பார்க்க வருவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதனால், தியேட்டருக்கு ரசிகர்களை வரச்செய்ய ஒரு புது உத்தியைக் கையாண்டேன். "போன் செய்தால் போதும். டிக்கெட் உங்கள் வீடு தேடிவரும்'' என்று ஒரு திட்டம் தொடங்கினோம். அது பெரிய வெற்றி. புதிய படங்களை பார்க்க விரும்புகிறவர்கள், டிக்கெட் வீடு தேடி வந்ததால், தியேட்டர்களுக்கு குடும்பம் குடும்பமாக வரத்தொடங்கினார்கள்.

எனக்கு, புதிய தொழில் நுட்பம் மீது எப்போதுமே ஆர்வம் அதிகம். வெளிநாடுகளில் "டி.டி.எஸ்'' என்னும் சிறப்பு ஒலி, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தருவதாக அறிந்தேன். உடனே நானும் எங்கள் தியேட்டர்களுக்கு "டி.டி.எஸ்'' ஒலியைக் கொண்டு வந்தேன். இந்த வகையில் இந்தியாவில் முதல் "டி.டி.எஸ்'' தியேட்டர் எங்களுடையதுதான்.

டி.டி.எஸ். சிறப்பு ஒலியுடன் கூடிய படம் வந்தால்தானே இந்த புதிய அனுபவத்தை ரசிகர்கள் உணர முடியும்? அதுமாதிரியான படங்கள் அதிகம் வரவில்லை. இதுபற்றி ஒரு முறை கமலஹாசனிடம் என் மனக்குறையை வெளியிட்டேன். "தெரியாத்தனமாக 3 1/2 லட்சம் செலவில் டி.டி.எஸ். ஒலி வசதி பண்ணிவிட்டேன். ஆனால் படம்தான் கிடைக்கவில்லை'' என்றேன்.

கமல் அப்போது "குருதிப்புனல்'' படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். கமலுக்கும் எப்போதுமே புதிய தொழில் நுட்பத்தில் ஆர்வம் உண்டு. உடனே `குருதிப்புனல்' படத்தில் "டி.டி.எஸ்'' சிறப்பு ஒலி சேர்க்க முடிவு செய்தார். அதற்காக, படத்தை ரிலீஸ் செய்வதை 3 மாதம் தள்ளி வைத்தார். இப்படி எங்கள் தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் "டி.டி.எஸ்'' படம் `குருதிப்புனல்.'

இதுமாதிரி டிஜிட்டல் முறையில் படம் திரையிடும் வசதி வந்தபோது, ஏவி.எம். சரவணன் அப்போது அவர் தயாரித்த "பேரழகன்'' படத்தை எங்களுக்கு டிஜிட்டல் முறையில் தந்தார். அதுபோல டால்பி சவுண்ட் சிஸ்டத்தை திரையரங்கில் முதலில் புகுத்தியதும் நாங்கள்தான்.

1984-ல் மலேசியா போயிருந்தபோது அங்கிருந்த 4 தியேட்டர்களில் "ஷாப்பிங் மால்'' கொண்டு வந்திருந்ததை பார்த்தேன். படம் பார்க்க வருகிறவர்கள் பலவித பொழுது போக்குகளில் ஈடுபடவும், பலவித ரெஸ்டாரெண்டுகளில் உணவு அருந்தவும், விரும்பிய பொருட்களை வாங்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதனால் தியேட்டருக்கு வருகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அறிந்தேன்.

இதனால் "அபிராமி'' தியேட்டர்கள், அபிராமி மால் என்ற பெயருடன் 2003-ம் ஆண்டு நவீன வடிவமைப்புடன் மாற்றி அமைத்தேன். தென்னிந்தியாவில் அமைக்கப்பட்ட தியேட்டர்களுடன் கூடிய முதலாவது ஷாப்பிங் மால் அபிராமிதான்.

எங்கள் மாலில் உள்ள "சொர்ண சக்தி அபிராமி'' (பழைய சக்தி அபிராமி) இப்போது ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, படுத்துக்கொண்டே சினிமா பார்க்கலாம்! பாத்ரூம் கூட, ஏர்கண்டிஷன் செய்யப்பட்டுள்ளது.

புதிய படங்களை எங்கள் தியேட்டர்களில் திரையிடும் நோக்கில் அதை பார்ப்பதுண்டு. அப்படிப் பார்க்கும்போது அது சரியாக ஓடுமா என்பது தெரிந்து விடும். இப்படி படங்களை பார்த்துப் பார்த்து, `நாமும் ஒரு படத்தை தயாரிக்கலாமே' என்ற எண்ணம் ஏற்பட்டது. 1994-ல் இப்படி நான் தயாரித்த படம்தான் `அடிமைச்சங்கிலி.' அர்ஜ×ன், ரம்பா, ரோஜா நடித்த இந்தப் படத்தை டைரக்டர் ஆர்.கே.செல்வமணி இயக்கினார்.

அந்தக் காலக்கட்டத்திலேயே 3 1/2 கோடி ரூபாய் செலவாயிற்று. படத்தயாரிப்பு 10 மாதம் வரை நீடித்தது. படம் ரிலீசான போது நஷ்டம் ஏற்பட்டது. என்றாலும் என் படத்தை நம்பி வாங்கி நஷ்டப்பட்ட வினியோகஸ்தர்களின் நஷ்டத்தை நானே ஏற்றுக்கொண்டேன். இந்த வகையில் தியேட்டர் அதிபரான என் முதல் சினிமா தயாரிப்பு அனுபவம் "இக்கரைக்கு அக்கரைப் பச்சை'' கதைதான்.

ரஜினி நடித்த ஒரு ஆலிவுட் படம் "பிளட் ஸ்டோன்.'' மெட்ரோ பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த இந்த படத்துக்கு நான்தான் "பைனான்ஸ்'' பண்ணினேன்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் 25 நாள் நடந்தது. ரஜினியுடன் நானும் இருந்தேன்.

ரஜினி "சூப்பர் ஸ்டார்'' ஆக உயர்ந்ததற்கு காரணம், அவரது `நடிப்பு பாதி; குணம் பாதி' என்றுதான் சொல்ல வேண்டும். காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு சரியாக 8-40 மணிக்கு ரஜினியிடம் இருந்து போன் வரும். "நான் ரெடி. கார் ரெடியா?'' என்று கேட்பார். தொழில் மீது அதிக பக்தி.

சினிமாத்துறையோடு சம்பந்தப்பட்டிருந்ததால், நடிகர் திலகம் சிவாஜியின் அன்புக்கும் உரியவராக இருந்தேன். என் மகள் திருமணத்தின்போது முழு நாளும் கூடவே இருந்து எங்கள் குடும்பத்தை சந்தோஷப்படுத்தினார். அவரை பார்க்க வருவது தள்ளிப்போனால், உரிமையுடன் கோபித்துக் கொண்டு, "ஏண்டா! ஏதாவது விஷயம் இருந்தால்தான் வருவியா?'' என்று கேட்பார்.

பட உலகில் என்னை வியக்க வைத்த இன்னொருவர் சின்னப்ப தேவர். ஒரு சினிமா எப்படி இருந்தால் வெற்றி பெறும் என்ற `லாஜிக்' தெரிந்தவர். அவர் தயாரித்த "ஆட்டுக்கார அலமேலு'' படம், எங்கள் தியேட்டரில் ஓடியபோது படம் பார்க்க வந்திருக்கிறார். பால்கனியில் அவருடன் நானும் படம் பார்த்தேன்.

அப்போது அவரிடம் "படத்துக்கு கேமரா ஆங்கிள் இன்னும் கொஞ்சம் கவனமாக வைத்திருக்கலாம்'' என்றேன். அவரோ, "இந்தப் படத்தோட கதாநாயகன் ஆடுதான். ஆடு ஒழுங்காக நடிக்குதா என்று பாருங்க'' என்று சொல்லிவிட்டார்.

"படம் பார்க்கிறவர்களை ஒரு கதைக்குள் முழுமையாகக் கொண்டு வந்திட்டால், படம் நிச்சயமாக ஜெயிக்கும். சின்னச்சின்ன குறைகள் இருந்தால்கூட, ரசிகர்கள் அதை பெரிசா எடுத்துக்கொள்ளமாட்டார்கள்'' என்று அவர் சொன்னபோது, சினிமா பற்றிய அவரது ஞானம் வெளிப்படையாகத் தெரிந்தது.

படத்தின் தயாரிப்பாளர் என்ற நிலைக்கு வந்தபிறகு எனக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த கவுரவம் மறக்க முடியாதது. போலீஸ் கமிஷனராக இருந்த லத்திகா சரண் என்னிடம், "காவல்துறை பொதுமக்களின் நண்பன்'' என்கிற மாதிரியான கதைப் பின்னணியில் ஒரு குறும்படம் எடுத்துத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உடனே ஐந்தாறு குட்டிக் கதைகளுடன் அரை மணி நேரப்படமாக எடுத்துக் கொடுத்தேன். ஐந்து லட்சம் செலவாயிற்று. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நிஜ போலீஸ் அதிகாரிகளே நடித்தார்கள்.

சினிமாவில் அப்பா வினியோகத் துறையில் இருந்ததால், அப்பா வழியில் நாமும் முயன்று பார்க்கலாமே என்று தோன்றியது. அதற்காக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்வது, லாபம் வந்தால் வினியோகத்தைத் தொடர்வது, நஷ்டம் வந்தால் அத்தோடு நிறுத்திக்கொள்வது என்று முடிவு செய்தேன்.

மொத்தம் 45 படங்கள் வரை வினியோகம் செய்தேன். அதில் 22 படங்கள் 100 நாள் ஓடின. 6 படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. என்றாலும் பின்னால் வினியோகம் செய்த படங்களில், போட்ட பணம் திரும்ப வராததால் முதல் குறையத் தொடங்கியது. அத்தோடு நிறுத்திக்கொண்டேன்.

பத்து வருடம் கழித்து, ரஜினி நடித்த "சிவாஜி'' படத்துக்கு சென்னை நகர வினியோக உரிமை பெற்றேன். அதில் நான் எதிர்பார்த்த லாபம் கிடைத்தது.

எதிர்பார்ப்புக்குரிய புதிய படங்கள் ரிலீசாகும்போது திருட்டு விசிடி எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள்தான் அதிக லாபம் பார்க்கும் நிலை சமீப காலங்களில் இருந்து வந்தது. மும்பையில் ஒரு இந்திப் படம் ரிலீசானால் உடனடி கலெக்ஷன் பார்ப்பதற்காக அதிக தியேட்டர்களில் திரையிடுவார்கள். பக்கத்து பக்கத்து தியேட்டர்களில் கூட திரையிடுவார்கள். இதனால் புதிய படம் பார்க்கும் ஆவல் கொண்ட ரசிகர்கள் இம்முறையில் தாமதமின்றி படம் பார்த்து விட முடிகிறது. இதனால் `திருட்டு விசிடி' பார்ப்பதற்கான வாய்ப்பு தவிர்க்கப்பட்டு விடுகிறது.

`சிவாஜி' படத்தின் சென்னை வினியோக உரிமையை ஏவி.எம்.சரவணனிடம் நான் கேட்டபோது, மும்பை நிலவரத்தை சொல்லி அதுபோல் சென்னையிலும் பல தியேட்டர்களில் திரையிட்டால் சரியாக இருக்கும் என்று கூறினேன். என் கருத்தை அவரும் ஏற்றுக்கொண்டார்.

சென்னையில் ஒரே நேரத்தில் 18 தியேட்டர்களில் `சிவாஜி' ரிலீசாகி வினியோகஸ்தர்களுக்கு முதலீடு செய்த தொகையையும் தாண்டி வசூலித்துக் கொடுத்தது.

சினிமாவில் முதல் பட தயாரிப்பு அனுபவம் அத்தனை திருப்திகரமாக இல்லை என்பதால், முதல் தயாரிப்பில் ஏற்பட்ட மைனஸ் பாயிண்டுகளை பிளஸ் ஆக்கி மறுபடியும் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறேன். நிச்சயமாக, வெற்றிகரமான தயாரிப்பாளர் என்ற நிலையை எட்டுவேன்.''

இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.

அபிராமி ராமநாதன் சின்னத்திரையிலும் தொடர்கள் தயாரித்தவர். "மாயாவி மாரீசன்'', "தெய்வ தரிசனம்'', "நம்ம ஊரு'' போன்றவை இவரது படைப்புகள்.

அபிராமி ராமநாதனின் மனைவி நல்லம்மை "எம்.பி.ஏ'' முடித்தவர். அபிராமி தியேட்டரின் `மால்' இவரது கற்பனையில் உதித்ததுதான்.

பிள்ளைகள் ஒரு மகனும், மகளும். மகன் சிவலிங்கம் "பி.பி.ஏ'' முடித்தவர். இவர் மனைவி ஜமுனா. ராமநாதனின் மகள் பெயர் மீனாட்சி. இவர் கணவர் பெரியகருப்பன்.

தனது சொந்த ஊரை தத்து எடுத்துள்ள அபிராமி ராமநாதன், அந்த ஊரை கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் முன்னேறச் செய்து கிராம மக்களின் நலனுக்கு உழைக்கிறார்

ஜனவரி.31 - நாகேஷ் நினைவு தினம் - 25 நினைவுகள்..



நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!...

* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!



* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!

* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!

* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!

* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!

* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!

* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது!

- மானா பாஸ்கரன்

(ஆனந்த விகடன் 07-07-2010)

குடித்து ரோட்டில் கிடந்த மாணவனுக்கு உடனடி தேவை என்ன?


ரூர் பேருந்து நிலையம் அருகே மது குடித்து விட்டு ரோட்டில் கிடந்த மாணவனை பள்ளியை விட்டே நீக்கி விட்டார்களாம். இது அந்த மாணவனை இன்னும் சீழ்படுத்தும் வேலைதான்.
திக்கெங்கும் மதுக்கடைகள், திரைப்படம் உள்ளிட்ட பலவற்றிலும் குடி ஒரு கொண்டாட்ட விஷயமாக காட்டப்பட்டு வரும் சூழலே இருக்கிறது. இதில் அந்த மாணவனை மட்டும் குற்றவாளியாக்கி, தண்டனை கொடுப்பதால் எதுவும் சரியாகி விடாது. மது ஒழிப்பு, திரைப்பட சீர்த்திருத்தம் எனப் பேசி உடனடி தீர்வு ஏதுமில்லை.

 இப்போதைக்கு அந்த மாணவனுக்கு தேவைப்படுவது மது குறித்த அன்பான கவுன்சிலிங். மதுவை விட்டு அவனாக விலகும் விதத்திலான நடவடிக்கைகளே. எது ஒன்றை காரணப்படுத்தியும் ஒருவருக்கு கல்வி மறுக்கப்படுவதை ஏற்கவே முடியாது. கல்வி மறுக்கப்பட்டு அவர் சிறு தொழில்களில் குற்றவுணர்ச்சியோடு ஈடுபடும்போது வருங்காலத்தில் குணப்படுத்த முடியாத குடி நோயாளியாவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பாலியல் கல்வி கேட்பதை விட, மது குறித்த பாடங்களை வையுங்கள் என்கிற யோசனை முளைக்கத் தொடங்கிவிடும். பாடங்களாக ஒரு மாணவருக்கு உள்ளே நுழைவதை விடவும் கலையாக உள்ளிறங்குவதில்தான் அவர் தன்னுடைய விருப்பங்களை மாற்றியமைத்து கொள்ள முடிவெடுக்கிறார்.

குடிப்பது ஒழுக்கம் சார்ந்த விஷயமா, பழக்கம் சார்ந்த விஷயமா... மது தேவை, தேவை இல்லை என்று அணி பிரித்து விவாதம் பண்ணுவதைக் காட்டிலும் முக்கியமான ஒன்று உள்ளது. தமிழகம் முழுவதும் மாணவர்கள் குடிக்கு அடிமையாகியிருப்பதை பல்வேறு செய்திகள் உணர்த்துகின்றன. இது முளை விடும்போதே சரியான தீர்வை எடுக்க வேண்டியது அரசும் சமுக அக்கறையுடையவர்களின் செய்ய வேண்டியதாகும்.

-வி.எஸ்.சரவணன்

OVERSEAS CITIZEN OF INDIA CARD IS NOT CITIZENSHIP

It is a lifelong visa granting certain privileges in India for people of Indian origin.
KUALA LUMPUR: The issuing of the Overseas Citizen of India (OCI) card by the Indian government to all people of Indian origin residing outside India does not tantamount to the granting of citizenship, the Indian High Commission in Malaysia said today.
It said that securing Indian citizenship was entirely a different procedure and not related to the OCI card.
“The OCI card is not an Indian passport, but is a lifelong visa granting certain privileges in India for the people of Indian origin with respect to social, economic and educational purposes,” it said in a statement.
The High Commission said it had also clarified the matter to a Malaysian delegation during the Foreign Office Consultations in India on January 20.
The OCI card was issued in accordance with the commitment made by Indian Prime Minister Narendra Modi last year to issue OCI cards to all people of Indian origin residing outside India.
The Indian High Commission also said that in order to streamline this process, it had discontinued issuing the Person of Indian Origin (PIO) cards, and all people of Indian origin residing in foreign countries will now only be issued OCI cards.
Those who want to apply for an OCI card can do so via online at http://passport.gov.in or visit the Indian High Commission website.

source document   https://my.newshub.org/overseas-citizen-india-card-not-citizenship-10634116.html

Friday, January 30, 2015

மனித உரிமை ஆணையத்தை அதிர வைத்த குழந்தைகள் சித்ரவதை!


திருவண்ணாமலை: வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் குழந்தைகள் சித்ரவதைக்கு உள்ளானது குறித்து அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த விமல்ராஜ் (28) என்பவரின் மனைவி லோகேஸ்வரி (26). இவர்கள் இருவரும் சென்னையில் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கரை வயதில் அஸ்வினி என்ற மகளும், மூன்றரை வயதில் அஸ்வின் என்ற மகனும் உள்ளனர். இந்த குழந்தைகளை, சென்னையில் வைத்து பராமரிக்க முடியாது என்பதால், லோகேஸ்வரி தன் தங்கை முத்துலட்சுமியிடம் ஒப்படைத்து இருந்தார்.

முத்துலட்சுமி, குடியாத்தம் அடுத்துள்ள கொத்தமாரிகுப்பம் கிராமத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், குழந்தைகளை முத்துலட்சுமி கொடுமை செய்வதாகவும், குழந்தைகள் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கிராமத்தில் வசிப்பவர்கள், விமல்ராஜூக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, விமல்ராஜ் தன் மனைவி லோகேஸ்வரியுடன், கடந்த 27ஆம் தேதி குடியாத்தம் வந்தார். அங்கு, தன் குழந்தைகள் அடையாளம் தெரியாதபடி, உடல் முழுவதும் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து முத்துலட்சுமியிடம் விசாரித்தபோது, அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை.

பின்னர், குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை தூக்கிச்சென்றார். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், குழந்தைகள் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படியும் பரிந்துரை செய்துள்ளனர். இதனடிப்படையில், குழந்தைகள் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், ‘சிறுமி அஸ்வினிக்கு தலையில் பலத்த காயம் உள்ளதால், 2 கண்களும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தையின் உடலில் பல இடங்களில் சிறு சிறு காயங்களும் உள்ளன. சிறுவன் அஸ்வின் முகத்தில் பலத்த காயமும், காலில் வெந்நீர் ஊற்றியதால் ஏற்பட்ட காயங்களும், உடல் முழுவதும் சிறுகாயங்களும் உள்ளன. இந்த குழந்தைகளை கட்டை அல்லது குச்சியால் தாக்கி இருக்கவேண்டும்’ என்று கூறினர்.

பத்திரிகையில் வந்த இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர், நீதிபதி டி.மீனாகுமாரி, பத்திரிகையில் வந்த செய்தியையே வழக்கு மனுவாக கருதி, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி மீனாகுமாரி, நடந்துள்ள இந்த சம்பவம் மனித உரிமை மீறல் செயலாகும். எனவே, இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். அதேபோல, குழந்தைகள் உடல்நலம் குறித்து வேலூர் அரசு மருத்துவமனை தலைவர் (டீன்) விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான பழங்கள்!







சர்க்கரை நோய் வந்தாலே ஸ்வீட்ஸ், பழங்கள் போன்றவை சாப்பிடக்கூடாது எனப் பலரும் பயமுறுத்துவார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளைதான் சாப்பிடக்கூடாதே தவிர, சில பழங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம்.

ஒருவர் சாப்பிடும் உணவுப்பொருளில் உள்ள சர்க்கரை, எவ்வளவு நேரத்துக்குள், எந்த அளவுக்கு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசமிக் குறியீட்டு எண். இந்தக் கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாகக் கொண்ட பொருள்களைச் சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.

சர்க்கரை நோய் நிபுணர்கள் பரிந்துரைக்கும், கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாகக் கொண்ட சத்தான எட்டு பழங்களும், அதன் பலன்களும் இங்கே...

ஆப்பிள்

நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ஒருவர் தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அவருக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 35 சதவிகிதம் குறைகிறது என்கின்றன ஆய்வுகள்.

ஆரஞ்சு

ஆரஞ்சில் வைட்டமின்-சி, நார்ச்சத்து, தையமின் மற்றும் பல்வேறு அத்யாவசிய ஊட்டச்சத்து நிறைந்துள்ள பழம். தாராளமாக எடுத்துக் கொள்லலாம்.


செர்ரி

பீட்டா கரோட்டின், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்த பழம் செர்ரி. தினமும் செர்ரி பழம் ஒரு கப் சாப்பிடலாம்.

பேரிக்காய்

வைட்டமின் ஏ, பி 1 ,பி 2, சி, ஈ மற்றும் மாவுச்சத்து நிறைந்த பழம். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். ப்ரீ டயாபட்டீஸ் நிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சீராகச் சுரக்கும்

கருப்பு ப்ளம்ஸ்

ஆன்தோ சைனின் நிறைந்தது. கார்போஹைட்ரேட், சீராகச் செரிப்பதற்கும், சிறுநீரகப் பிரச்னை வராமல் தடுப்பதற்கும் உதவுகிறது. தினமும் ஒரு கப் கருப்பு ப்ளம்ஸ் சாப்பிடலாம். கருப்பு ப்ளம்ஸ் விதைகளை அரைத்து பொடியாக்கி பாலில் போட்டுக் குடிக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி

ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இன்சுலின் சிறப்பாகச் செயல்பட உதவும். கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

கிவி

வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்தது. ப்ளேவனாய்டு எனப்படும் பாலிபீனால் இதில் உள்ளது. அதிக நார்ச்சத்து கொண்டது. சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒரு பழம் சாப்பிடலாம்.

கொய்யாப்பழம்

நார்ச்சத்து, வைட்டமின்-சி, பொட்டாசியம் நிறைந்தது. தினம் ஒன்று சாப்பிடலாம். மருத்துவக் குணம் கொண்ட, கொய்யாப்பழ இலைகளைச் சுத்தம் செய்து பொடியாக்கி கிரீன் டீ போல அருந்தலாம்.

- பு.விவேக் ஆனந்த்

Dutch retiree jailed a day and fined for punching Tigerair cabin crew member -



SINGAPORE - A retiree who punched a cabin crew member in the shoulder while in transit at Changi Airport was jailed for a day on Friday.

Dutch national Gerrit Eveleens, 66, was also fined $3,000 after he admitting punching Mr Tan Leek Hwee, 46, on his shoulder after boarding the Tigerair at Terminal 2 at about 4pm on Jan 22.

The court heard that Eveleens had flown from Jakarta to Singapore and had got on his onward flight to Bangkok when he took an empty seat on row 13 instead of the one he had been allocated.

On seeing this, Mr Tan explained to him that it was an emergency seat which had more legroom and that he had to pay more to upgrade.

When he was given a seat upgrade card to fill up, Eveleens threw it and told the victim: "Shut up, I don't speak English."

Mr Tan sought the help of the captain who managed to convince Eveleens to return to his original seat.

While walking along the aisle towards the seat, he suddenly punched Mr Tan on his right shoulder. The captain stepped in and told him to leave but he refused.

The captain signalled to the ground staff to call the police. Eveleens, who was given another chance to leave, finally did so, shouting disparaging remarks about the airline on his way out.

Deputy Public Prosecutor Muhammad Faizal Nooraznan sought a short custodial sentence for Eveleens, saying he was the sole aggressor and had attacked the crew member without any provocation.

"The incident happened just before take-off and caused inconvenience to the passengers boarding the plane," he said.

Eveleens said through a Dutch interpreter that he was very sorry and wanted to go back home as soon as possible.

He could have been jailed for up to two years and/or fined up to $5,000.

elena@sph.com.sg

Thaipusam Festival procession to begin on Feb 3 midnight -



SINGAPORE - The annual Thaipusam Festival procession will begin at 12.05am on Feb 3 this year, the Hindu Endowments Board announced on Wednesday.

At the start time, devotees carrying milk pots can begin their walk of faith from Sri Srinivasa Perumal Temple at Serangoon Road to the Sri Thendayuthapani Temple at Tank Road, which will start receiving milk offerings from 12.30am on the same day.

Thaipusam is a Hindu festival which honours the victory of deity Lord Murugan over demon hordes. Devotees seek blessings and fulfil their vows by carrying kavadis - intricate structures of steel and wood - and milk pots as offerings.

Those wishing to put on spike kavadis can register for the free spike piercing service at the Sri Srinivasa Perumal Temple. Spike and chariot kavadis can make their walk between 4am and 2pm on Thaipusam day. All kavadis will be required to enter the Sri Srinivasa Perumal Temple via the Race Course Road entrance.

அமெரிக்காவில் 95 அரங்குகளில் 'என்னை அறிந்தால்'

அமெரிக்காவில் 95 அரங்குகளில் 'என்னை அறிந்தால்'

வாஷிங்டன் (யு.எஸ்): அஜீத்தின் என்னை அறிந்தால் படம் அமெரிக்காவில் 95 அரங்குகளில் வெளியாகிறது. அரங்குகள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கணிசமான ரசிகர்களைப் பெற்றிருப்பவர் அஜீத். எந்த பின்புலமும் இல்லாமல் திரையுலகில் முன்னேறி வந்ததும், ரசிகர் மன்றங்களை கலைத்து உட்பட அவருடைய வெளிப்படையான அணுகுமுறையுமே அவருக்கு அங்கே உள்ள ஆதரவுக்கு முக்கிய காரணமாகும். இந் நிலையில் அஜீத்தின் என்னை அறிந்தால் திரைப்படம் 95 தியேட்டர்களில் அமெரிக்காவில் வெளியாகிறது.

முன்னதாக 'ஆரம்பம்' 78 தியேட்டர்களில் வெளியாகி இருந்தது. வீரம் படம் 80 அரங்குகளில் வெளியானது. இப்போது 95 அரங்குகளில் என்னை அறிந்தால் வெளியாகிறது. கலிஃபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக 9 தியேட்டர்களிலும், இலனாய்-ல் 8, டெக்சாஸில் 5, நியூ ஜெர்சியில் 5, ஒஹயோவில் 5, ஃப்ளோரிடாவில் 4, பிலடெல்பியாவில் 4 , மிசிகன் 4 உட்பட 36 மாகாணங்களில் என்னை அறிந்தால் படத்தை. அட்மஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

Read more at: http://tamil.filmibeat.com/news/yennai-arinthaal-release-95-screens-usa-032984.html

வட போச்சே!! – நங்கநல்லூரில் கவரிங் செயினை அறுத்துச் சென்ற அறிவாளித் திருடர்கள்

வட போச்சே!! – நங்கநல்லூரில் கவரிங் செயினை அறுத்துச் சென்ற அறிவாளித் திருடர்கள்

சென்னை நங்கநல்லூரில் தங்க செயின் என்று நினைத்து கவரிங் செயினை திருடர்கள் பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் கலகலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகலா. இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ஸ்ரீகலாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து சென்றனர். இதை கண்டதும் அப்பகுதியினர் சத்தம் போட்டனர். 

ஆனால் ஸ்ரீகலா பதறவே இல்லை. பின்னர் அவரே, "அது தங்கச்சங்கிலி இல்லை. கவரிங் நகை தான்" என்று விளக்கியபோதுதான் அப்பகுதியினர் நிம்மதியடைந்தனர். இருந்தாலும் அந்தத் திருடர்களைப் பிடிக்க ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிருக்கு போராடிய டிரைவர்... எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!



பெரம்பலூர்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய எண்ணெய் லாரி டிரைவர், கிளீனரை காப்பாற்றாமல், லாரியில் இருந்து கொட்டிய எண்ணெய்யை பொதுமக்கள் பிடித்து சென்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று இரவு சென்னையிலிருந்து தனியார் டேங்கர் லாரி ஒன்று பாமாயில் எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து. நெடுஞ்சாலைத்துறை டிவைடரில் ஏறி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில், டிரைவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கைகளிலும் காயம் ஏற்பட்டது. அதேபோல், கிளீனருக்கும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

அதேநேரத்தில், விபத்தில் சிக்கிய லாரியின் டேங்கரில் இருந்து பாமாயில் எண்ணெய் ரோட்டில் கொட்டியது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், உயிருக்கு போராடிய டிரைவர் மற்றும் கிளீனரைப் பற்றி கவலைப்படாமல், தங்கள் வீடுகளில் இருந்து குடம் மற்றும் கேன்களை கொண்டு வந்து, பாமாயிலை பிடித்துச் சென்றனர். இதனால், இன்னும் மூன்று, நான்கு மாதங்களுக்கு அவர்கள் சமையல் எண்ணெய் வாங்க தேவையில்லை என்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.


இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவர் மற்றும் கிளீனரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடியவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், தங்களுக்கு தேவையான எண்ணெய்யை மட்டும் பொதுமக்கள் பிடித்துச் சென்ற சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை காப்பாற்றவேண்டும் என்ற ஈவு, இரக்கம் கொஞ்சம் கூடஇல்லாமல், நம் மக்களின் மனம் இப்படி கல்நெஞ்சாக மாறிவிட்டதே என ஆதங்கப்படுகின்றனர் அவர்கள்.

-எம்.திலீபன்

நாயின் காலை துண்டாக்கிய கறிக்கடைக்காரர்!



சென்னை: நாயின் காலை துண்டாக்கிய கறிக்கடைக்கார் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


கடந்த 26ஆம் தேதி மாலை கூடுவாஞ்சேரி பிள்ளையார்கோயில் தெருவில் ஒரு நாய், பின்பக்க வலது கால் துண்டாகி, ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்களில் சிலர் பரிதாபத்துடனும், வேறு சிலர் எதையும் கண்டுக்கொள்ளாமலும் கடந்து சென்றனர்.

அப்போது அதேப் பகுதியை சேர்ந்த விஜய், இந்த காட்சியைப் பார்த்து நாய்க்கு உதவினார். அந்த நாயை அங்கிருந்து மீட்டு ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் கால்நடை கிளினிக்குக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் சுஜாதா, நாய்க்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்தார். இருப்பினும் துண்டான காலை ஓட்டமுடியவில்லை. இப்போது அங்கேயே அட்மிட் செய்யப்பட்டுள்ள அந்த நாய்க்கு தினமும் காலை, மாலை டிரிப்ஸ் ஏற்றப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு நன்றாக இருக்கும் நாய், 10 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு அழைத்து செல்லப்படவுள்ளது.

நாய் குறித்து விசாரித்த போது அதை வளர்த்தவர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த கார்த்திக் என்றும், அந்த நாயின் பெயர் நிக்சன் என்றும் தெரியவந்தது. நிக்சனை குட்டியிலிருந்து செல்லமாக கார்த்திக் வளர்த்து வந்துள்ளார். இப்போது கிளினிக்கில் உள்ள நிக்சனை நன்றாக அவர் கவனித்து வருகிறார்.

நிக்சனை காப்பாற்றிய விஜய், 'பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அந்த அமைப்பின் நிறுவனர் அருண்பிரசன்னா, கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டில்லி பாபு, வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் நாயின் காலை துண்டாக்கியது அந்தப்பகுதியில் கறிக்கடை நடத்தி வரும் ரியாஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரியாஸ் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரியாஸை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து அருண் பிரசன்னா கூறுகையில், "சம்பவத்தன்று நிக்சன் என்ற நாயை விரட்ட கத்தியை தூக்கி வீசியுள்ளார் கறிக்கடைக்காரர் ரியாஸ். இதில் நாயின் முன்பக்க வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அவர், கத்தியை தூக்கி வீசியதில் பின்பக்க இடது கால் தூண்டாகி உள்ளது. அதற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி இருக்கிறோம். நாயின் காலை துண்டாக்கிய ரியாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததால் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை அவர் மிரட்டினார். அதையும் காவல்துறையில் புகாராக கொடுத்து இருக்கிறோம்.

சென்னையில் ஆங்காங்கே கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதால் ஏற்படும் சுகாதாரசீர்கேட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதோடு நாய், மாடுகள் போன்ற கால்நடைகளை துன்புறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்" என்றார்.

சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு கூறுகையில், "புகாரின் பேரில் ரியாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகிறோம்" என்றார்.

சம்பவத்தை நேரில் பார்த்த இன்ஜினியர் ராஜ்கணேஷ் கூறுகையில், "சிக்னலுக்காக பைக்கில் அந்தப்பகுதியில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது கறிக்கடை முன்பு ஒரு நாய் எதையோ தின்று கொண்டு இருந்தது. இதைப்பார்த்த கறிக்கடைக்காரர் ஆத்திரத்தில் கறி வெட்டும் அரிவாளை நாயின் மீது தூக்கி வீசினார். இதில் நாயின் பின்பக்க கால் துண்டாது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த நாய் ரோட்டில் கத்திக் கொண்டே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடியது. இதைப்பார்த்த நான், பைக்கை அந்த இடத்தில் விட்டு விட்டு நாயை துரத்தினேன். இதற்குள் நாய் ஒரு வீட்டுக்குள் புகுந்து கொண்டது. ரோடு முழுவதும் சிதறிக் கிடந்த ரத்தத்தை வைத்து நாயை கண்டுப்பிடித்து 'பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா' அமைப்பினரின் உதவியோடு நாயை கிளினிக்குக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தோம்.

நாயை காப்பாற்ற முயன்ற எங்களுடன் அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் தகராறு செய்தது வேதனையாக இருக்கிறது. இருப்பினும் நாயின் உயிரை காப்பாற்றியது எங்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

மனிதனுக்கே உதவாத இந்தக்காலத்தில் நாய்க்கு உதவிய மனிதநேயம் பாராட்டத்தக்கது!

-எஸ்.மகேஷ்

பிஎஸ்என்எல் சிம் ஆக்டிவேசன்: காவல்துறைக்கே இந்த கதின்னா..?!






15 ஆண்டுகளுக்கு முன்பு சிம்கார்டு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. அதுவும் அப்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க்தான் களத்தில் இருந்தது. போட்டி யாரும் கிடையாது என்பதால், அவ்வளவு எளிதில் சிம் வாங்கி விட முடியாது.

அப்படியும் அப்போது செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒரு ஊரில் விரல் விட்டு எண்ணி விடலாம் செல்லுலார் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை. ஆனால், இன்றைக்கு அப்படியல்ல. எல்லோருடைய கையிலும் ஆறாம் விரலாகிப் போனது செல்போன். இதற்கு
காரணம் தொழில் புரட்சி என்று சொல்லலாம், தொழில் நுட்ப வளர்ச்சியென்றும் சொல்லலாம். இத்துறையில் ஏராளமான கம்பெனிகள் வந்து விட்டதால், போட்டோவும், ஐடி புரூப்பும் கொடுத்தால், சிம் ப்ரீ வித் ....... ரூபா டாக்டைம்னு கூவிக்கூவி விற்கிறான். சிம் வாங்கினா அரை மணி நேரத்தில் ஆக்டிவேசன் ஆகுது.

ஆனால், பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கிட்டு ஆக்டிவேசன் ஆக நான் பட்டபாடு எனக்குமட்டும்தான் தெரியும். சியூஜி பிளான் என்பதால் ஆபிஸில் கொடுக்கப்பட்டது அந்த சிம் கார்டு. அடுத்த நாள் ஆக்டிவேசன் ஆகும் என்று சொல்லி(?) கொடுக்கப்பட்டது. நாட்கள் நகர்ந்ததே தவிர ஆக்டிவேசன் ஆகவே இல்லை. பிஎஸ்என்எல்லின் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டால், "1507-என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என பதில் கூவுகிறது. இல்லேம்மா எனக்கு சிக்னலே கிடைக்க மாட்டேங்குது என்றால், நீங்க பக்கத்தில் உள்ள பிஎஸ்என்எல் ஆபிஸ்ல போய் கேளுங்க" என்றார் அந்த பெண்மணி.

சரி தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் ஹெட் ஆபீஸ் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் இருக்கு
என இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு போய் கேட்டேன். "சாரி சார்.. நீங்க சிம் வாங்கினது ஆர்.ஏ.புரம் ஆபீஸ்ல.. சோ அங்க போய் கேளுங்க!" என்றார். அங்கிருந்த ஆபீஸர். இருப்பினும் இணைய தளத்தில் புகார் பதிவு செய்லாம்னு அங்கேயும் பதிவு செய்தேன்.

கிணற்றில போட்ட கல்லாட்டம் ரிப்ளே எதுவும் வரவில்லை. இணையத்திலேயே தேடி நோடல் ஆபிஸர் ஒருத்தர் நம்பரை தேடி கண்டுபிடித்து போன் பண்ணி விளக்கம் கேட்டேன். "என் நம்பர் எப்படி கிடைத்தது?" என எதிர்கேள்வி கேட்ட அவருக்கு விளக்கம் சொன்னேன். "ஓ... இன்னும் என் நம்பர் அதுல இருக்கா, நான் அந்த செக்சனில் இருந்து வெளியே வந்து 6 மாசம் ஆச்சு!" ன்னார்.

அவரே, ஒரு லேண்ட் லைன் நம்பரை கொடுத்து பேசச் சொன்னார். அந்த நம்பரில் தொடர்பு கொண்டு கேட்டப்ப, இன்னும் 24 மணிநேரத்தில் பிரச்சனை சால்வ் ஆகிடும் என்றார் அதில் பேசியவர். ஆனால், ஆகவில்லை. மறுநாள் ஆர்.ஏ.புரம் பிஎஸ்என்எல் ஆபிஸூக்கு போய் கேட்டேன். நாளைக்குள் ஆகிடும் என்ற அதே பழைய புராணம்தான். 2 நாள் கழித்து போய் நின்றேன்.

அந்த செக்சன் பார்க்கிற மிஸ்டர் பிரதாப், 3 நாள் லீவ், அதனால நீங்க வெள்ளிக்கிழமை வந்து பாருங்க.சரிங்க, அந்த பிரதாப் நம்பர் கொடுங்க, அவர்கிட்ட பேசிட்டே நான் வருகிறேன் என்றேன். "இல்லங்க நம்பர் எல்லாம் கொடுக்க மாட்டோம்!" என்றார் அந்த பெண்மணி. "நீங்க வேலை பார்க்கிறது தகவல் தொழில் நுட்ப துறையின் கீழ் உள்ள ஒரு நிறுவனம், அப்படி இருக்கையிலே, லேண்ட் லைனுக்கு கூப்பிட்டா யாரும் எடுக்கிறது கிடையாது, சம்பந்தப்பட்ட நபர் லீவ்ல இருக்கார். அடுத்து ஒவ்வொரு நாளும் நான் வந்து அலையுறதுக்கு, நீங்க நம்பர் கொடுக்கலாமே?" என்றேன்.

"நீங்க எது பேசுறதா இருந்தாலும் மேலே 6-வது மாடியில் எஸ்டிஇ இருக்காங்க, அவங்ககிட்ட போய் சொல்லுங்க!" என்றார் அந்த பெண்மணி. மேலே சென்று எஸ்டிஇயையும் பார்த்தேன். அவரும் மாலைக்குள் சரியாகி விடும் என்றார் ஆகவே இல்லை. மறுநாள் 10 மணிக்கு போய் நின்றேன் அந்த அலுவலகத்தில், நான் போட்ட சத்தத்தில் அந்த அலுவலகத்தின் தலைமை நிர்வாகியான மேலாளர் வந்தார். அவர் என்னிடம் கேட்டார்.

என்ன பிரச்சனை என்று. விபரத்தை சொன்னேன். அவர் கேட்டார் எந்த நம்பர் ஆக்டிவேசன் ஆகவில்லை என்று. அவரிடம் நான் சொன்னேன். இதுவரை நான் இந்த அலுவலகத்திற்கு 5-6 முறை வந்துவிட்டேன். ஒருத்தர் கூட கேட்கவில்லை ஆக்டிவேசன் ஆக வேண்டிய நம்பர் எதுவென்று. நீங்கள்தான் முதல் முறையாக கேட்டிருக்கிறீர்கள் என்று? அவரிடம் நம்பர் சொன்னேன்.

பதிலுக்கு அவரது நம்பரை கொடுத்தார். மாலையே ஆக்டிவேசன் ஆனது. சரியாக சிம் வாங்கி 29 நாட்கள் கழித்து.!

பின்குறிப்பு: அந்த சிம் தமிழ்நாடு காவல் துறையினர் உபயோகப்படுத்தும் சியூஜி சிம்.!

-எம்.செந்தமிழ் செல்வி
தேனாம்பேட்டை

பிரசவத்துக்கு போராடிய பசு... உதவிய என்ஜினீயரின் மனித நேயம்!

சென்னை: சென்னை நங்கநல்லூரில் நடுரோட்டில் மாட்டுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதில் உயிருக்குப் போராடிய மாட்டுக்கு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மாட்டையும், கன்றுக் குட்டியையும் டாக்டர்கள் காப்பாற்றினர்.

 நங்கநல்லூரில்  கடந்த 29ஆம் தேதி இரவு 9 மணி... போக்குவரத்து நெரிசல் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.  ம்மா.... யம்மா... .. என்றொரு அபயகுரல் மட்டும் நான்காவது மெயின் தெருவிலிருந்து வந்த வண்ணம் இருந்தது. இதை யாரும் கண்டுகொள்ளாமல் மக்கள் தங்களது வீடுகளுக்கு அவசரமாக சென்று கொண்டு இருந்தனர். நடுரோட்டில் மாடு ஒன்று, கன்றுவை ஈன்றெடுக்க முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது. அந்த மாட்டின் அபயக்குரல்தான் அது. மனிதருக்கே உதவி செய்ய முன்வராதவர்கள் எப்படி இந்த மாட்டுக்கு உதவப் போகிறார்கள்? 

ஒருக்கட்டத்தில் அந்த மாடு, பெண் கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஆனால், நிலைமை பரிதாபம். கன்றுக்குட்டியுடன் தாய் மாட்டின் கர்ப்பபை, குடல் என உடலில் சில பாகங்கள் வெளியில் சரிந்திருந்தது. இதனால் தாய் மாடு உயிருக்குப் போராடியது. இதை அவ்வழியாக சென்ற ஐ.டி.துறையில் பணியாற்றும் செல்வம் என்ற இன்ஜினியர் பார்க்கிறார். படபடத்துப் போன அவர், முதலில் மாட்டை யாரோ வாகனத்தில் சென்றவர்கள் மோதி விட்டு சென்று விட்டார்கள் என்றே நினைத்துள்ளார்.

 பிறகு மாட்டின் அருகே சென்ற பிறகே அவருக்கு அங்குள்ள விபரீதம் தெரியவந்துள்ளது. உடனடியாக அவர், 'பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்புக்கு தகவல் கொடுக்க..... அதன் பொது மேலாளர் தினேஷ் சம்பவ இடத்தில் ஆஜராகினார். கால்நடை மருத்துவர் திரு மற்றும் இன்னொரு மருத்துவர் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். முதலில் மாட்டின் வயிற்றுக்குள் இருந்து வெளியேறிய பாகங்களை சுத்தப்படுத்தினர். பிறகு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அந்தந்த இடத்தில் பொருத்தினார்கள். இதற்கு மூன்று மணி நேரமானது. இதன்பிறகு மாட்டையும், கன்றுக்குட்டியையும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து தினேஷ் கூறுகையில், "இதுவரை இப்படியொரு சம்பவத்தை என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்ததில்லை. மருத்துவருக்கு உதவியாளராக இருந்து அனைத்தையும் செய்தேன். அந்த தாய் மாடு பிரசவிக்கும் போது அதனுடைய கர்ப்பபை மற்றும் உடலில் உள்ள சில பாகங்கள் வெளியே வந்துவிட்டன. அவற்றை அந்த இடத்திலேயே உப்புத் தண்ணீரால் சுத்தம் செய்து அதே இடத்தில் அறுவை சிகிச்சை மூலம் வைக்கப்பட்டது. இந்த மாடு அரசின் இலவச மாடாகும்.
அந்த மாட்டின் உரிமையாளர் ஏழை விவசாயி கோவிந்தராஜன். அவரும் இந்த மாட்டை கவனிக்காமல் சாலையில் திரியும்படி விட்டுள்ளார். அந்த மாட்டின் பெயர் பொம்மி. இப்போது அந்த மாடு பெண் கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. மாட்டையும், கன்றுக்குட்டியையும் உரிய நேரத்தில் காப்பாற்ற உதவிய இன்ஜினியர் செல்வத்தின் பெயரையே அந்த கன்றுக்குட்டிக்கு சூட்டியுள்ளோம். இப்போது தாயும், கன்றுக்குட்டியும் நன்றாக இருக்கின்றன"என்றார்.

மனிதானாக இருந்தாலும்.. கால்நடைகளாக இருந்தாலும் அது உயிர் என்று ஒவ்வொருவரும் கருத வேண்டும்!

-எஸ்.மகேஷ்

PIO Card Officially Withdrawn

PIO Card Officially Withdrawn

The Embassy of India in Washington, DC, said that that according to Gazette Notification No.26011/01/2014IC.I dated 09.01.2015, all PIO (People of Indian Origin) cards issued till 09.01.2015 are deemed to be OCI card. PIO Card scheme has been withdrawn vide Gazette Notification No.25024/9/2014F.I dated 09.01.2015.

“All PIO applications, pending with the Mission for processing, are being returned to the applicants with a request to apply for OCI card on the same fee prescribed for the PIO card. Henceforth, applicants may apply for OCI card ONLY, as PIO card scheme is no longer in existence,” the Embassy said.

In case the PIO card holder has new passport then he/she can travel to India on their new passport with the valid PIO card and old passport mentioned on the PIO card.

Consular applicants (including OCI/PIO applicants) may visit the Consular and OCI/PIO Wings in the Embassy at 2536 Massachusetts Ave NW Washington DC 20008 from 11.00 am to 12:30 pm on all working days or send an email at consular@indiagov.org (for visa, passport, renunciation of Indian citizenship and miscellaneous services) and ocipio@indiagov.org (for OCI/PIO matters) for redressal of their grievances including those from the service provider.


source document:http://www.indianewengland.com/

ஷீரடி, மந்த்ராலயத்துக்கு சிறப்பு ஆன்மிகச் சுற்றுலா ரயில்



ஷீரடி, மந்த்ராலயம், பண்டேரிபுரம் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களுக்கு செல்லும் சிறப்புச் சுற்றுலா ரயில் பிப்ரவரி 5-ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. கூடுதல் பொது மேலாளர் எல்.ரவிக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது:

2014- 2015-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் பல்வேறு சிறப்புச் சுற்றுலா, ஆன்மிக யாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி அனைத்து மதத்தினருக்கு ஏற்ப ஆன்மிக யாத்திரை ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தச் சிறப்பு யாத்திரை ரயில்களிலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த ரயில்களில் 7 படுக்கை வசதி பெட்டியும், இரண்டு ஏ.சி. 3-ஆம் வகுப்பு பெட்டியும், ஒரு ஏ.சி. 2-ஆம் வகுப்பு பெட்டியும், ஒரு சமையல் அறை பெட்டியும், இரண்டு பவர் கார் என, மொத்தம் 13 பெட்டிகள் இருக்கும்.

ஏ.சி. பெட்டிகளில் 190 பயணிகளும், படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 510 பயணிகளும், மொத்தம் 700 பயணிகள் சிறப்பு யாத்திரை ரயிலில் செல்லலாம். யாத்திரை முழுவதும் தென்னிந்திய சைவ உணவு தயாரித்து வழங்க தனியே சமையல் அறை பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டிக்கும் சுற்றுலா மேலாளர்கள், பாதுகாவலர்கள் தனித்தனியே நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், யாத்திரையில் செல்லும் இடம் பற்றிய விவரங்கள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பயணிகளுக்குத் தெரிவிக்க பொது ஒலிப்பெருக்கி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் விதிகளுக்குள்பட்டு எல்.டி.சி. வசதி பெறலாம்.

ஷீரடி, மந்த்ராலயம், பண்டேரிபுரம் செல்லும் குரு கிருப யாத்திரை ரயில் பிப்ரவரி 5- ஆம் தேதி புறப்படுகிறது. மஹாகாலேஸ்வர், ஓம்காரேஸ்வர், சோம்நாத், பீம்சங்கர், திரயம்பகேஸ்வர், கருநேஸ்வர், அவுண்ட்நாக்நாத், பார்லிவைத்யநாத், ஸ்ரீசைலம் செல்லும் நவ ஜோதிர்லிங்க யாத்திரை ரயில் பிப்ரவரி 14-ஆம் தேதியும் புறப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஜ்ஜ்ஜ்.ண்ழ்ஸ்ரீற்ஸ்ரீற்ர்ன்ழ்ண்ள்ம்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தில் மேற்கொள்ளளாம் என்றார்.


தாய்லாந்து விமானச் சுற்றுப் பயணம்

தாய்லாந்து நாட்டுக்கு 5 நாள் சுற்றுப் பயணத் திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விமானச் சுற்றுப் பயணம் பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்குகிறது. நபர் ஒன்றுக்கு ரூ.33,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றுலாவில் விமானப் பயணச் சீட்டு, மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, ஏ.சி. வாகனம், உணவு, சுற்றிப் பார்க்கக்கூடிய அழகான இடங்களான பட்டாயா, பாங்காக். பயணக் காப்பீடு, சுற்றுலா தகவலர் ஆகியவை அடங்கும்.


யாத்திரை விவரங்கள்

குரு கிருப யாத்திரை: 7 நாள்கள் பிப்ரவரி 5-ஆம் தேதி மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூரில் இருந்து புறப்பாடு.


ஸ்டேண்டர்டு பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.6,370. இதில் 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி. தங்கும் விடுதி, தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. இல்லாத வாகன வசதிகள் அடங்கும்.


கம்பர்ட் பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.13,790. இதில் ஏ.சி. 3-ஆம் வகுப்பு பெட்டி. ஏ.சி. இல்லாத ஹோட்டல் அறைகள். தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. வாகன வசதிகள் அடங்கும்.


டீலக்ஸ் பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.18,550. இதில் ஏ.சி. 2-ஆம் வகுப்பு பெட்டி, ஏ.சி. ஹோட்டல் அறைகள். தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. வாகன வசதிகள் அடங்கும்.


நவ ஜோதிர்லிங்க யாத்திரை: 14 நாள்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி மதுரை, ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பாடு.



ஸ்டேண்டர்டு பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.12,470. இதில் 2-ஆம் வகுப்பு படுக்கை வசதிக்கொண்ட பெட்டி. தங்கும் விடுதி, தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. இல்லாத வான வசதிகள் அடங்கும்.


கம்பர்ட் பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.27,580. இதில் ஏ.சி. 3-ஆம் வகுப்பு பெட்டி. ஏ.சி. இல்லாத ஹோட்டல் அறைகள். தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. வாகன வசதிகள் அடங்கும்.


டீலக்ஸ் பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.37,100. இதில் ஏ.சி. 2-ஆம் வகுப்பு பெட்டி, ஏ.சி. ஹோட்டல் அறைகள். தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. வாகன வசதிகள் அடங்கும்.


......... தொடர்புக்கு .........


சென்னை, புதுச்சேரி: 044-64594959, 9840902916, 9003140681


காட்பாடி: 9840948484, மதுரை: 9003140714, 9840902915


கோவை: 9003140680

Thursday, January 29, 2015

Pharm.D students told to air grievances to Pharmacy Council

Return to frontpage

The Pharmacy Council of India Registrar and Secretary Archana Mudgal has urged Pharm.D students to approach the Council without inhibitions if they have complaints about the way their college is imparting the programme.

Though the colleges are inspected every year – since launch of the six-year pharmacy doctoral programme in 2008 – it would be of help if students share their experience. “We will look into the issue…,” she said, adding the student may prefer not to mention his/her name in the complaint.

Dr. Mudgal was replying to a query pertaining to quality of education in the institutions, after her speech on ‘Pharm.D education in India – inception and the need’ at a plenary session of the 66{+t}{+h}Indian Pharmaceutical Congress here on Saturday that scores of students attended.

After the session, many of the students went up to her and complained about the way the course is imparted and the approach of doctors towards them. The students, when asked, however, did not disclose the name of their institution.

Earlier, in her presentation Dr. Mudgal said there is “a market for all Pharm.D graduates” particularly in the backdrop of a shift from communicable to lifestyle diseases in the country and with the ageing population set to increase.

The UGC had included Pharm.D as post-graduate course in the schedule of degrees, she said. The Pharmacy Council has also written to the Central and State governments asking them to amend recruitment rules to recognise the course for the post of pharmacists. It also wanted Pharm.D students to be considered for fellowship, something on which she said a positive response could be expected in two months.

Doctors will gradually “accept us”, she said, pointing out that the situation will change if the students offer support instead of making the doctors feel that they are taking their space. The students, Dr. Mudgal underscored, need to develop soft skills to interact with patients.

Insurance companies are pushing hospitals to appoint pharmacists and also recruiting them for their requirements. To underscore the role of pharmacists, she referred to a WHO report of 2011 that said doctors in developing countries spend less than 60 seconds in prescribing medicines and briefing regimen to patients. The top three contributors to errors are surgery (wrong site/wrong patient accounting for 20 per cent; medication error (16 per cent) and medical error (nearly 15 per cent).

Pharm.D, according to the Council, can be pursued after 10+2 (science academic stream) or after D.Pharm course and comprises five years academic study and one year internship or residency. In the Pharm.D (Post Baccalaureate) course, B.Pharm graduates are admitted as lateral entry candidate to the fourth year of the programme.












“There is ‘a market for all Pharm.D graduates’, particularly in the backdrop of a shift from communicable to lifestyle diseases in the country”

Cost of RTI application doubles

Return to frontpage




Applicants forced to buy Rs. 20 postal orders as there is no stock of Rs. 10 denomination in the city

The cost of seeking information under the Right To Information (RTI) Act, 2005 has doubled during the past few weeks. This is due to the simple reason that there is no stock of the postal order with a face value of Rs. 10 in the city from where a large number of citizens and activists seek information from various government departments.

An application under the RTI Act necessitates a fee of Rs. 10, usually made through a postal order, which is available in post offices. However, officials at General Post Office (GPO), Bengaluru say they do not have stock of postal orders of face value of Rs. 10. Activists are being directed to buy a Rs. 20 postal order.

RTI activist B.M. Shivakumar said that the problem began about three months ago. “I have been using Rs. 20 postal orders for the past two months. An additional expenditure of Rs. 10 is not the issue. Why should we pay more when the RTI Act stipulates only Rs. 10?”

Another RTI activist Ganesh B. Koundinya, said that the whole point of the RTI Act was to bring in accountability, but the postal department is playing truant.

“In most post offices, we are directed to buy a postal order of higher denomination without a satisfactory explanation,” he said.

Chief Post Master, Bengaluru GPO, A.K. Hanjura told The Hindu that they have run out of Rs. 10 postal orders. “Postal orders can be printed only by India Security Press, Nashik. The Karnataka circle has placed an indent with the press. We are expecting fresh stock by February-end,” he said.

Former VCs Accused of Wasting UGC fund

The New Indian Express

CHENNAI: UGC vice chairman H Devaraj has accused three former vice chancellors of the University of Madras of merely sitting on UGC grants by parking the funds in banks.

Speaking at a conference organised in the university on Wednesday, Devaraj, a former faculty member, praised the incumbent VC, R Thandavan, for taking steps to appoint faculty for the Centre for Research in Nanosciences and Nanotechnology. Further, he said the vice chancellor had managed to appoint ten faculties so far.

Acknowledging that it was with “great difficulty” that he hired the faculty, Thandavan said,“In my period, I have appointed over 100 faculty members to all departments. It wouldn’t have been possible without help from the syndicate and the vice chairman. I still have one more year left and will appoint more faculty starting with the Departments of Mathematics and Bio-Physics. I have the full support of the Syndicate in this.”

Earlier, Devaraj accused State universities of lacking focus and cited it as the reason for the declining status of University with Potential for Excellence (UPE). “Only UNOM and Madurai Kamaraj University made an excellent presentation and had a clear vision with respect to their focus. Anna University and Bharathidasan University failed here,” he said.

“UGC is willing to give a lot of money. As a result, most universities are now equipped with sufficient infrastructure. Unfortunately, the infrastructure provided has not helped produce good human resources,” he said alluding to the decreasing quality in research.

“Making use of adoptive techniques, embracing crowd sourcing and aiming for academic osmosis ought to be the parameters of research,” he added.

The UGC has invited applicant universities to make a case for themselves in New Delhi on March 5. “UGC is providing Rs 75 crore. When you get that sort of money, expect it to come with a few riders,” he added.

Introduction of AADHAR enabled bio-metric attendance system

Introduction of AADHAR enabled bio-metric attendance system

G.I., Dep. of Per. & Trg., O.M.F.No.11013/9/2014-Estt.A-III, dated 28.1.2015

Sub: Introduction of AADHAR enabled bio-metric attendance system.

The undersigned is directed to refer to Secretary, DEITY’s DO letter no. SSD/DeitY/BAS/2014-74 dated 23.12.2014 (copy enclosed), observing that in many offices there is a large difference between the number of registered employees and the number of employees marking their attendance in the Biometric attendance system (BAS). The Secretaries of all Ministries / Departments have been requested to issue directions to all employees to mark their attendance in BAS Portal on regular basis.

 2. As per the Guidelines issued vide O.M. No.11013/9/2014-Estt.A-III dated 21.11.2014, it has been decided to use an AADHAR Enabled Bio-metric Attendance System (AEBAS) in all offices of the Central Government, including attached / sub ordinate offices, in India. All employees are, therefore, required to register themselves in the system and mark their attendance. Instructions already exist for dealing with cases of late attendance/ unauthorized absence, which may be followed.

 3. It is requested that necessary directions may be issued to all employees to mark their attendance in BAS portal on regular basis.

Travel by Premium Trains on LTC- Clarification orders issued by DoPT on 27.1.2015

Travel by Premium Trains on LTC- Clarification orders issued by DoPT on 27.1.2015

"travel by Premium Trains is not permissible on LTC. Hence, the fare charged by the Indian Railways for the journey(s) performed by Premium trains shall not be reimbursable for the purpose of LTC."

G.I., Dep.of Per. & Trg., O.M. No.31011/2/2015-Estt.(A-IV), dated 27.1.2015

Subject: Travel by Premium Trains on LTC- Clarification reg.

The undersigned is directed to say that several references are received by this Department from various Ministry / Departments seeking clarification regarding admissibility of travel by Premium Trains run by Indian Railways while availing of LTC.

2. The matter has been examined in consultation with Department of Expenditure, Ministry of Finance and it has been decided that travel by Premium Trains is not permissible on LTC. Hence, the fare charged by the Indian Railways for the journey(s) performed by Premium trains shall not be reimbursable for the purpose of LTC. Cases where LTC travel in such Premium Trains has already been undertaken by the Central Government Employees, the train fare may be reimbursed restricting it to the admissible normal fare for the entitled class of train travel or the actual fare paid, whichever is less.

Wednesday, January 28, 2015

படிக்கட்டாகும் இளைய தலைமுறை


க.சே. ரமணி பிரபா தேவி

ஆதரவற்றோர்களுக்கு உதவும் மனப்பான்மை நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால் அதற்கான நேரமும், சூழ்நிலையும் நமக்கு கிடைத்திருக்காது. எங்கே சென்று உதவுவது, யாருக்குச் செய்வது, நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்று பல விஷயங்களை யோசிப்போம்.

கடைசியாக சிக்னல்களிலும் தெரு ஓரங்களிலும் தட்டை நீட்டுபவர்களுக்கு ஒரு ரூபாயைப் போட்டுவிட்டு நம் கடமை முடிந்து விட்டதாக ஆத்ம திருப்தி அடைந்து விடுவோம். பணத்தால் வெல்ல முடியாத அன்பை, நாம் அனைவரும் இணைந்து மனதால் வெல்வோம் என்னும் குறிக்கோளோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது இளைஞர் சேவை அமைப்பான ‘படிக்கட்டுகள்’.

இணைந்த இளம் கைகள்

மதுரை சுற்றுவட்டாரத்தில் 2012-ல் கல்லூரிப் படிப்பை முடித்த சில இளைஞர்களும், படித்து கொண்டிருந் தவர்களும் ஒருங்கிணைந்து தோற்று வித்ததே ‘படிக்கட்டுகள்’ அமைப்பு. 25 பேர் மட்டுமே சேர்ந்து உருவாக்கிய இந்த அமைப்பில் இப்போது மதுரை, சென்னை, கோவை, ராஜபாளையம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 150 பெண்கள் உள்ளிட்ட 350 உறுப்பினர்கள் உள்ளனர்.

பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் என ஒட்டு மொத்தமாய் வேகம் கலந்த இளமைப் பட்டாளம்தான் இந்தப் படிக்கட்டுகளின் செங்கற்கள்! விருப்பப்படும் எவரும், படிக்கட்டுகளைப் பலப்படுத்தலாம்!

செயல் திட்டம்

முதியோர் இல்லங்களில், மனநலக் காப்பகங்களில், சாலையோரங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவியைப் பணமாகவோ பொருளாகவோ அளிப்பது இவர்கள் வழக்கம். ஏழைக் குழந்தை களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கு கிறார்கள், வசதி இல்லாத குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவைக்கிறார்கள். கிராமப்புற, நகர்ப்புற அரசு மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள், ஆலோசனைகள், கலந்தாய்வுக் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துகிறார்கள்.

ரத்ததானம் வழங்குவது, ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவது போன்ற சேவைகளில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படை விஷயங்களைக் கற்பித்தல், நடனப் பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள், பார்வையற்றோருக்குத் தேர்வு எழுத உதவது எனப் பொருளாதாரம் சாரா சேவைகளும் இவர்கள் பணியில் இடம் பெறுகின்றன.

உதவிய ஃபேஸ்புக்

சென்னை புழலில் உள்ள வள்ளலார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் கஷ்டப்பட்டவர்களுக்கு போர்வெல் அமைக்க ரூ.50 ஆயிரம் தேவைப்பட்டிருக்கிறது.

https://www.facebook.com/Padikkattugal என்னும் முகநூல் பக்கத்தில் படிக்கட்டுகளின் சேவையையும் குழந்தைகளின் தேவையையும் பதிவிட, ஒரே வாரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது. அதை வைத்து, போர்வெல் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். படிக்கட்டுகளின் padikkattugal.orgவலைத்தளம் இவர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.

மாதச் சம்பளம் பெறுகிற 300 உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஊதியத்திலிருந்து மாதம் ஐந்நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை படிக்கட்டுக்குத் தந்துவிடுகிறார்கள். அதைக் கொண்டு மாதம் ஓர் ஆதரவற்றோர் இல்லத்துக்கும் முதியோர் இல்லத்துக்கும் தேவையானதைச் செய்து கொடுக்கிறார்கள்.

எதிர்காலப் பாதை

தங்களைப் போன்ற கல்லூரி மாணவர் களைப் பெரிய அணியாகத் திரட்டி ஒன்றிணைந்து ஆதரவற்றோருக்குச் சேவை செய்யும் ஒரே குறிக்கோளுடன் இருக்கிறார்கள் படிக்கட்டுகளின் அத்தனை உறுப்பினர்களும்.

ஏழைக் குழந்தைகளுக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும் உதவ ஆயிரமாயிரம் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களுடன் உட்கார்ந்து நேரம் செலவிட, குழந்தைகளுக்குப் பாடம் போதிக்க, பொது அறிவு சொல்லித்தர, அவர்களின் தனித்திறனை வளர்க்க யாரும் முன்வருவதில்லை!

இது போன்ற துடிப்பான, சேவையில் ஆர்வமுள்ள இளைஞர் சமுதாயத்துடன் கைகோத்துப் பயணித்தாலே ஆதரவற்றோர்க்கான பாதைப் பூக்கள் அழகாய் மலரும்.

45 ஆண்டுகளாகச் செயல்படும் ‘பேனா ஆஸ்பத்திரி’ திண்டுக்கல்லில் 3 தலைமுறையாக நடத்தும் குடும்பத்தினர்

பேனா ஆஸ்பத்திரி நடத்தி வரும் முகம்மது கமருதீன்.

கடந்த 45 ஆண்டுகளாக அதாவது, 3 தலைமுறைகளாக இந்தக் கடை ஒரு குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மனதில் தோன்றும் சிந்தனைகளைப் பதிவு செய்ய பயன்படும் அடிப்படை சாதனம் பேனா. ஒவ் வொரு பேனா சிந்தும் ஒவ்வொரு சொட்டு மையும், உலகின் தலை யெழுத்தையே மாற்றக் கூடியது.

செல்போன், மெயில், பேஸ்புக், வாட்ஸ் ஆப் வருகையால் கடிதப் போக்குவரத்து குறைந்ததாலும், பெரும்பாலான பணிகள் கணினி மயமாக்கப்பட்டுவிட்டதாலும் பேனா வின் பயன்பாடு மிகவும் சுருங்கி விட்டது. கையெழுத்திடவும், குறிப்பு கள் எடுப்பதற்கும் மட்டுமே தற்போது பேனா பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஜெல், பால்பாயிண்ட் பேனாக்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பால் ‘நிப்’ பேனாக்களின் பயன்பாடு சுருங்கிவிட்டது.

’பேனா ஆஸ்பத்திரி’

இந்தச் சூழலில், திண்டுக்கல்லில் கடந்த 45 ஆண்டுகளாக பேனா பழுது நீக்கும் கடையை நடத்தி வருகின்றனர் ஒரு குடும்பத்தினர். பேனா ஆஸ்பத்திரி என்ற பெயரில், மாநகராட்சி அலுவலகம் அருகே அந்தக் கடை செயல்பட்டு வருகிறது. முகம்மது கமருதீன்(57) குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக இந்தக் கடையை நடத்தி வருகின்றனர்.

பழுதடைந்த பேனாவை கொடுத் தால் நொடிப்பொழுதில் பழுது நீக்கி கொடுக்கிறார் முகம்மது கமருதீன். பேனா விற்பனை மற்றும் பேனா பழுது நீக்குதல் ஆகியவற்றை முழுநேரத் தொழிலாக நடத்திவரும் இவர், கடையில் நிப் பேனா மட்டுமன்றி பால்பாயிண்ட், ஜெல் பேனா என்று பேனாக்களை மட்டும் விற்பனைக்கு வைத்துள்ளார்.

இவரது கடையில், 10 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலான நிப் மை பேனா, 5 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலான பால்பாயிண்ட், ஜெல் பேனாக்கள் விதவிதமாக விற்பனைக்கு உள்ளன.

இதுகுறித்து முகம்மது கமருதீனி டம் கேட்டபோது அவர் கூறியதாவது:

எனது தந்தை ஷேக் மைதின், இதே கடைவீதியில் பிளாட்பாரத்தில் 1965-ம் ஆண்டு இந்தக் கடையைத் தொடங்கினார். தொடர்ந்து, எனது வாரிசுகளும் இந்தக் கடையை நடத்தத் தொடங்கிவிட்டனர். எனது தந்தை செய்த இந்தத் தொழிலை கைவிட மனமின்றி தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதிக லாபம் இல்லாவிட்டாலும், தொழிலில் திருப்தி உள்ளது. நிப் பேனா பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு இலவசமாக மை வழங்கி வருகிறேன்.

பேனாக்களில் நிப் பேனாக் கள்தான் ஹீரோ. நிப் பேனாக்களை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும். நிப் பழுதாகும்போது மாற்றி விட்டால் மீண்டும் பயன்படுத்தலாம். நிப் பேனாவை பயன்படுத்தும்போது கையெழுத்து மாறாது. அழகாகவும் இருக்கும். பால்பாயிண்ட், ஜெல் பேனாக்களில் கையெழுத்து அவ்வாறு இருக்காது என்றார்.

நுகர்வுக் கலாச்சாரத்துக்கு மாறும் இந்தியா

முகம்மது கமருதீன் மேலும் கூறும் போது, ‘முன்பெல்லாம் நிப் பேனாக் களை தலைமுறை, தலைமுறையாக பாதுகாத்து பெருமைப்பட்டுக் கொள்வர். இன்று, பால்பாயிண்ட் பேனாக்களை மை தீர்ந்தவுடன் தூக்கி எறிந்துவிடுவதால், பேனாக்களின் மதிப்பு குறைந்துவிட்டது.

உலக அளவில் இந்தியாவில் பேனாக்களின் பயன்பாடு அதிகள வில் உள்ளது. ஆனால், அவற்றை நாம் வெளிநாடுகளில் இருந்துதான் அதிகளவு இறக்குமதி செய்கிறோம். இந்தியா உற்பத்தி கலாச்சாரத்தில் இருந்து நுகர்வுக் கலாச்சாரத்துக்கு மாறி வருவதற்கு, பேனா உற்பத்தியும் ஒரு எடுத்துக்காட்டு’ என்றார்.

நயன்தாரா மது வாங்கும் காட்சி: 'நானும் ரவுடிதான்' படத்துக்கு சிக்கல்

Return to frontpage

நயன்தாரா | கோப்புப் படம்: பிவி சிவகுமார்

நடிகை நயன்தாரா மதுபானக் கடையில் மது வாங்கும் காட்சி இடம்பெற்றுள்ள 'நானும் ரவுடிதான்' படத்துக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் தயாராகி வரும் படம் 'நானும் ரவுடிதான்'. தனுஷ் தயாரித்து வரும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்தது.

நயன்தாரா பீர் வாங்குவது போல வரும் காட்சி 'நானும் ரவுடி தான்' படத்துக்கு படமாக்கி இருக்கிறார்கள். படப்பிடிப்பில் இருந்தவர்கள் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த வீடியோ காட்சி குறித்து இந்து மக்கள் கட்சி செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. பள்ளி கல்லூரி மாணவ–மாணவிகள் மதுவின் தீமைகளை விளக்கி பேரணிகளை நடத்துகிறார்கள்.

இந்த நிலையில், நயன்தாரா மதுக்கடைக்கு போய் பீர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மதுவுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல் அமைந்து உள்ளது.

பெண்களை மது குடிக்க தூண்டுவது போன்றும் இக்காட்சி இருக்கிறது. தமிழகத்தில் மது குடித்து செத்துப் போன ஆண்களால் 20 லட்சம் பெண்கள் விதவையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தற்போது பெண்களும் மது குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கணவன், மனைவி மற்றும் குடும்ப உறவுகள் சிரழிகின்றன.

எனவே, பெண்களை குடிக்கத் தூண்டுவது போல் உள்ள நயன்தாரா பீர் வாங்கும் காட்சியை படத்தில் வைக்கக் கூடாது. அக்காட்சியை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் நயன்தாராவையும் அக்காட்சி இடம் பெறும் படத்தையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

குறள் இனிது - மாமனோ மச்சானோ...

Return to frontpage


அவர் என்ன பெரிய இவரோ? எனக்குள்ள அனுபவம் அவரது வயதைவிட அதிகம்!’ என்று பேசுபவர்களையும், ‘அட விடுப்பா, அந்த அதிகாரி எனது மாமா தான், அவர் தகுதி எனக்குத் தெரியாதா? நான் பார்த்துக் கொள்கின்றேன்’ என்று சொல்பவர்களையும் சந்தித்திருப்பீர்கள்.

பொதுவாக 45, 50 வயதுக்காரர்களுக்கு, 30, 35 வயதுடையவர்களைத் தங்களது மேலதிகாரியாக ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கின்றது! ‘அரசர் நம்மைவிட இளையவர் என்றோ, அரசர் நமது உறவினர் தானே என்றோ எண்ணி அமைச்சர் அரசருக்குரிய மதிப்பைக் கொடுக்கத் தவறக்கூடாது’ என்று சொல்லும் குறள் நமக்கும் நல்வழிகாட்டும்!

சற்றே எண்ணிப் பார்ப்போம். உயர் பதவிக்குத் தகுதி என்ன? வெறும் வயது அல்லவே? வயது தரும் அனுபவமும், அதனால் வரும் திறனும் முதிர்ச்சியும் தானே. ஒரே அலுவலகத்தில் சில வருடங்கள் ஒன்றாகவே வேலை பார்க்கும் இருவர் ஒரே மாதிரியாகவா வேலை நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கின்றனர்? நீங்களே சிலரைப் பார்த்து, இவருக்கு இந்த இளவயதிலேயே இவ்வளவு திட்டமிடும் திறன், அளப்பரிய ஆற்றல், முடிவெடுக்கும் முனைப்பு, கண்காணிக்கும் கண்டிப்பு எப்படி வந்தது என்று வியந்தது உண்டா இல்லையா?

சிறப்பாகப் பணியாற்றும் கெட்டிக்காரத்தனம் சிலருக்கு பிறவியிலேயே அமைந்து விடுகின்றது. வேறு சிலருக்கு உயர் கல்வியினாலோ, நல்ல பயிற்சியினாலோ, வளர்ப்பு சூழ்நிலையினாலோ கிடைத்து விடுகின்றது. இன்றைய உலகில் சிறுவயதிலேயே பெரும் சாதனை படைத்தவர் பலர். உலகின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளின் சராசரி வயதே 45 தானாம்! ராஜா ராணி திரைப்பட இயக்குநர் அட்லிக்கு வயது 27. ‘கொலைவெறி’ பாட்டுக்கு இசையமைத்த அனிருத்துக்கு 21. நோபல் பரிசு பெற்ற மலாலாவிற்கோ 17 வயதுதான்!

அடுத்த பிரச்சினை ஒருவரின் உறவினர் அவருக்கு மேலதிகரியாக அமைந்துவிட்டால் வருவது. மனம் அவரை மாமனாக மச்சானாக உறவு குறித்துப் பார்க்குமே தவிர அதிகாரியாகப் பார்க்காது. அவர் இடும் கட்டளைகளை ஏற்க மறுக்கும். தற்காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் தொடங்கப்பெற்று, அக்குடும்பத்து உறவினர்களாலேயேநிர்வகிக்கப்படும் நிறுவனங்களும் உள்ளன. அப்பா நிறுவனத்தின் தலைவர்; மகன் செயல் இயக்குநர்; சித்தப்பா மாமா பிள்ளைகள் துறை பொறுப்பாளர்கள். அங்கு விற்பனையை அதிகரிக்கக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது உறவுகளை மறந்து பதவிகளின் தன்மையறிந்து நடந்து கொள்ள வேண்டுமில்லையா? தனிச் சலுகைகளை எதிர்பார்க்கலாமா? உறவு முறை எல்லாம் அலுவலகத்திற்கு வெளியே தானே? ஒருவர் பதவியில் அமர்ந்தபின், அவர் எப்படி அதை அடைந்தார் என்று முணுமுணுப்பதால் என்ன பயன்? பதவி பதவி தான்; அதிகாரம் அதிகாரம் தான். அங்கலாய்க்காமல், சங்கடப்படாமல் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டுவிட்டால், தினம் தினம் பிரச்சினை இருக்காது! பணியில் உற்சாகம் பிறக்கும்; உத்வேகம் கூடும்; மகிழ்ச்சியும் பெருகும்!!

நல்ல தமிழ்க் குறள் இதோ

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியொடு ஒழுகப் படும்

இனி “குவிக்”கா ஏழுமலையானை தரிசிக்கலாம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Oneindia Tamil

இனி “குவிக்”கா ஏழுமலையானை தரிசிக்கலாம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் ஏழுமலையானை சுமார் 2 மணி நேரத்துக்குள் 20 ஆயிரம் பக்தர்கள் எளிதாக தரிசிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
ரூபாய் 300 விரைவு தரிசனம் இணையதள முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்த உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாசராஜு, "திருமலையில் ரதசப்தமி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 92 ஆயிரம் பக்தர்கள் அன்றைய தினம் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மேலும், திருமலையில் நடைபெற்ற 7 வாகன சேவைகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இலவசமாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
கடந்த சில நாள்களாக ரூபாய் 300 விரைவு தரிசன பக்தர்களுக்காக இணையதளத்தில் அளிக்கப்பட்டு வந்த 18 ஆயிரம் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்படுகிறது. இணையதள வசதியை தற்போது அனைவரும் பயன்படுத்திக் கொள்வதால் கூடுதலாக 2 ஆயிரம் டிக்கெட்டுகளை அளிக்க உள்ளனர். இதன் மூலம், 20 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை சுமார் 2 மணி நேரத்துக்குள் எளிதாக தரிசிக்க முடியும்" என்றார்.

சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: அலைமோதிய பக்தர்கள் கூட்டம் l

சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சிங்கப்பூரில் உள்ள செண்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூரின் கிழக்கு கடற்கரை பகுதியான கடோங்கில் பிரசித்தி பெற்ற செண்பக விநாயகர் கோவில் உள்ளது. 

செண்பக மரத்தடியில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையை வைத்து இந்த கோவில் கட்டப்பட்டதால் செண்பக விநாயகர் கோவில் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த கோவிலில் ரூ.27 கோடி செலவு செய்து திருப்பணிகள் செய்யப்பட்டது. திருப்பணிகளை தமிழகத்தைச் சேர்ந்த பழனி கிருஷ்ணமூரத்தி தலைமையிலான குழு செய்தது. திருப்பணிகள் சோழர்கால கட்டிடக்கலை பாணியில் செய்யப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. 

கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன், அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

கூகுளுக்கு நேரம் சரியில்லை... வருகிறது புது சர்ச் என்ஜின்!

Oneindia Tamil

கூகுளுக்குப் போட்டியாக புதிய சர்ச் என்ஜின் ஒன்று வந்துள்ளது. இந்த புதிய சர்ச் என்ஜினை பின்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். தற்போது உள்ள அனைத்து சர்ச் என்ஜின்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் இந்த புதிய சர்ச் என்ஜின் அமைந்துள்ளது என்பதால் கூகுளுக்கு இது கடும் போட்டியாக அமையும் என்கிறார்கள்.

தற்போது உள்ள சர்ச் என்ஜின்களை விட இது துல்லியமாக ரிசல்ட்டுகளைக் கொடுக்கிறதாம். ஹெல்சிங்கி தகவல் தொழில்நுட்ப கழகம் இந்த சர்ச் என்ஜினை உருவாக்கியுள்ளது. இதன் பெயர் SciNet என்பதாகும். இந்த சைநெட் தற்போதுள்ள சர்ச் என்ஜின்களைப் போல இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. நாம் தேடும் விவரம் தொடர்பான கீவேர்டுகளையும் இதுவே எடுத்துக் கொடுக்கிறது என்பது இதன் விசேஷமாகும்.

 எனவே தாங்கள் தேடும் விவரத்தை மிகப் பொருத்தமாக, சரியான முறையில், விதம் விதமான முறையில் தேடித் தேர்ந்தெடுக்க பயன்பாட்டாளருக்கு இது உதவி செய்கிறது. எப்படித் தேடுவது என்று தெரியாமலேயே தேடுவோருக்கும் கூட, இதைத்தானே தம்பி தேடுகிறாய் என்று எடுத்துக் கொடுப்பதால் இது மேலும் துல்லியமாகவும் இருக்கிறது. சிலருக்கு எந்த வார்த்தையைப் போட்டுத் தேடுவது என்று சரியாக தெரியாது. அந்த வார்த்தையை சரியாக போடத் தெரியாது.

அப்படிப்பட்டவர்களுக்கு இதுவே தேடவும் உதவுகிறது என்பது மிக முக்கியமானது. இதுகுறித்து இந்தத் திட்ட ஒருங்கிணைப்பாளர் துக்கா ருவோட்சோலோ கூறுகையில், இந்தப் பிரச்சினையெல்லாம் இப்போது கிடையாது. அனைத்துக்கும் சரியான தீர்வாக இது அமைந்துள்ளது. தாங்கள் தேடும் தகவல்களை துல்லியமான முறையில் தேடுவோர் இனி பெற முடியும் என்றார்.
இப்பச் சொல்லுங்கு, கூகுளுக்கு நேரம் சரியில்லைதானே!.. இருந்தாலும் கூகுள் ரொம்பப் பெருந்தன்மையான சர்ச் என்ஜின்தான்.. இந்த Scinet சர்ச் என்ஜின் குறித்த தகவல்களை கூகுளில் தேடினால் உடனே வந்து கொட்டி விட்டது!

DUBAI AIRPORT WORLD"S BUSIEST

'லிங்கா' இழப்பீடு: ரஜினி பிறப்பித்த வாய்மொழி உத்தரவு

Return to frontpage

நடிகர் ரஜினிகாந்த் | கோப்புப் படம்

'லிங்கா' படத்தால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இழப்பீடு எவ்வளவு என்பதை தயாரிப்பாளர் இன்று முடிவு செய்கிறார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தப் படத்தை வெளியிட்டதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் சிலர் குற்றம்சாட்டினர்.

தங்கள் இழப்பை ஈடுகட்ட, தயாரிப்பாளர் பணத்தை திரும்பத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதற்கு செவிசாய்க்காததால் நஷ்ட ஈடு வழங்கக்கோரியும் ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் தலையிட்டு தங்களுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

இது தொடர்பாக, திருப்பூர் சுப்பிரமணியத்தை அழைத்த ரஜினிகாந்த், “விநியோகஸ்தர்களுக்கு ‘லிங்கா’ படத்தால் நஷ்டம் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் என்னால் யாரும் நஷ்டமடைய வேண்டாம். தயாரிப்பாளரிடம் இதுபற்றி பேசிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

ரஜினியின் வேண்டுகோளை அடுத்து திருப்பூர் சுப்பிரமணியத்தை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷை சந்தித்தார். “பணத்தை திருப்பிக் கொடுப்பதில் எனக்கு பிரச்சினையில்லை. ஆனால் ‘லிங்கா’வின் வசூல் என்ன?, அப்படத்தால் எவ்வளவு நஷ்டம் என்ற முழுவிவரம் எனக்கு வேண்டும்” என்று கேட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து திருப்பூர் சுப்பிரமணியம் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் போன் செய்து எவ்வளவு கொடுத்து வாங்கினீர்கள், எவ்வளவு வசூல், எவ்வளவு நஷ்டம் என்ற விவரத்தை தயாரிப்பாளர் அலுவலகத்தில் கொடுக்குமாறு கூறினார்.

தற்போது விநியோகஸ்தர்கள் கொடுத்த வசூல் கணக்குகள் அனைத்தையுமே சரிபார்த்து தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டார் திருப்பூர் சுப்பிரமணியம். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து யாருக்கு எவ்வளவு நஷ்ட ஈடு என்பதை இன்று முடிவு செய்கிறார்கள்.

நடைபெற்று வரும் விஷயங்கள் குறித்து திருப்பூர் சுப்பிரமணியத்தை அழைத்த ரஜினி, "யாருடைய மனமும் வருத்தப்படாதபடி கொடுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் பணம் கொடுத்தவுடன், பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Tuesday, January 27, 2015

கோயில் உச்சியில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!



நம் இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டத்துடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் தேசப்பற்றினை பல்வேறு வகையில் செலுத்தி நாட்டின் விழுமியங்களை காத்துகொண்டிருக்கிறான்.

குடியரசு தின விழாவின் முக்கிய நிகழ்வாக இந்த வருடம் ஒபாமா அமெரிக்க அதிபர் இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தின் மிகப்பெரிய கோபுரங்களுள் ஒன்றாகவும் மிகவும் புராதன கோவிலாகவும் விளங்கும் மனுநீதி சோழன் ஆண்ட திருவாரூர் தியாகராஜ சுவாமி பெரிய கோவிலில் காலை 6 மணி அளவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

ஒவ்வொரு கோவிலும் நம் சுதந்திர குடியரசு தின நாட்களில் தேசியக் கொடி ஏற்றப்படவேண்டும் என சட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நிர்வாகம், கோவில் தன்மை போன்ற பல காரணங்களால் இவை நிறைவேற்றப்படுவதில்லை.

திருவாரூர் கோவிலில் வருடா வருடம் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுவருவது மக்களிடையே அதிகம் பேசப்படும் சிறப்புக்குரியது.


இன்று காலை தேசிய கொடியை ஏற்றிய கோவில் ஊழியர் சுனிந்தர் அவர்களிடம் கெட்கும் பொது “ கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நான் இந்த பணியை செய்து வருகிறேன். தனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்தார்”. நாட்டு எல்லையில் நின்று தேசத்தை பாதுகாக்கும் வீரர்களின் தேசபக்தி நம் எல்லோர் மனதிலும் விதைபட்டால் மகிழ்வே. எல்லார்க்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

தமிழ்பரதன்
மாணவ பத்திரிக்கையாளர்

Next-generation 5G mobile developments being shaped in Singapore -





SINGAPORE - Next-generation mobile services that enable, say, real-time mobilisation of autonomous excavators for rescue of nuclear explosion victims could be five years away from reality, with Singapore being a key part of their development.

Such next-generation 5G services are said to be more than 10 times faster than 4G ones, which currently deliver speeds of up to 300Mbps in Singapore.

More importantly, 5G communications happen in real-time due to advances in data compression and antenna technologies, thus enabling mission-critical applications like rescue works.

While trials in Singapore are expected to take place only in 2020 when 5G handsets are available, Singtel is already shaping 5G technical standards, together with 23 other global telcos.

For the first time on Tuesday, the who's who in the global telco scene - including South Korea's SK Telecom, Japan's NTT Docomo and Europe's Vodafone - and equipment makers like Ericsson and Nokia, gathered in Singapore to define these technical standards.

The three-day meeting at Fairmont Singapore, hosted by Singtel, aims to finalise a white paper detailing the many possible uses, and standardise airwaves and speed requirements.

Standardisation ensures that 5G users from one part of the world can roam in another part of the world like they currently do with their 3G handsets.

The white paper will be presented at the Mobile World Congress in Barcelona in March.

Mr Tay Soo Meng, Singtel group chief technology officer, said that these developments are timely for supporting Singapore's drive to become a smart nation, where sensors and surveillance cameras monitor everything from public safety to air quality.

"This is because 5G has amazing high speeds and almost near-zero latency," he added.

itham@sph.com.sg

-

Tigerair makes $2.2m profit in Q3 last year, reversing loss in previous same quarter


SINGAPORE - Tigerair made a $2.2 million profit in the three months to the end of December, reversing a $118.5 million loss during the same quarter the year before that.

Total revenue improved by 5.9 per cent to $182.3 million while spending fell by 1.5 per cent to $178.2 million, the budget carrier said on Monday.

The turnaround was on the back of more passengers carried and higher yields.

The improved numbers reflect the success of the group's initiatives to focus on its Singapore operations in its execution of turnaround plan, the airline said.

NEWS TODAY 22.04.2024