Friday, January 30, 2015

பிஎஸ்என்எல் சிம் ஆக்டிவேசன்: காவல்துறைக்கே இந்த கதின்னா..?!






15 ஆண்டுகளுக்கு முன்பு சிம்கார்டு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. அதுவும் அப்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க்தான் களத்தில் இருந்தது. போட்டி யாரும் கிடையாது என்பதால், அவ்வளவு எளிதில் சிம் வாங்கி விட முடியாது.

அப்படியும் அப்போது செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒரு ஊரில் விரல் விட்டு எண்ணி விடலாம் செல்லுலார் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை. ஆனால், இன்றைக்கு அப்படியல்ல. எல்லோருடைய கையிலும் ஆறாம் விரலாகிப் போனது செல்போன். இதற்கு
காரணம் தொழில் புரட்சி என்று சொல்லலாம், தொழில் நுட்ப வளர்ச்சியென்றும் சொல்லலாம். இத்துறையில் ஏராளமான கம்பெனிகள் வந்து விட்டதால், போட்டோவும், ஐடி புரூப்பும் கொடுத்தால், சிம் ப்ரீ வித் ....... ரூபா டாக்டைம்னு கூவிக்கூவி விற்கிறான். சிம் வாங்கினா அரை மணி நேரத்தில் ஆக்டிவேசன் ஆகுது.

ஆனால், பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கிட்டு ஆக்டிவேசன் ஆக நான் பட்டபாடு எனக்குமட்டும்தான் தெரியும். சியூஜி பிளான் என்பதால் ஆபிஸில் கொடுக்கப்பட்டது அந்த சிம் கார்டு. அடுத்த நாள் ஆக்டிவேசன் ஆகும் என்று சொல்லி(?) கொடுக்கப்பட்டது. நாட்கள் நகர்ந்ததே தவிர ஆக்டிவேசன் ஆகவே இல்லை. பிஎஸ்என்எல்லின் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டால், "1507-என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என பதில் கூவுகிறது. இல்லேம்மா எனக்கு சிக்னலே கிடைக்க மாட்டேங்குது என்றால், நீங்க பக்கத்தில் உள்ள பிஎஸ்என்எல் ஆபிஸ்ல போய் கேளுங்க" என்றார் அந்த பெண்மணி.

சரி தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் ஹெட் ஆபீஸ் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் இருக்கு
என இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு போய் கேட்டேன். "சாரி சார்.. நீங்க சிம் வாங்கினது ஆர்.ஏ.புரம் ஆபீஸ்ல.. சோ அங்க போய் கேளுங்க!" என்றார். அங்கிருந்த ஆபீஸர். இருப்பினும் இணைய தளத்தில் புகார் பதிவு செய்லாம்னு அங்கேயும் பதிவு செய்தேன்.

கிணற்றில போட்ட கல்லாட்டம் ரிப்ளே எதுவும் வரவில்லை. இணையத்திலேயே தேடி நோடல் ஆபிஸர் ஒருத்தர் நம்பரை தேடி கண்டுபிடித்து போன் பண்ணி விளக்கம் கேட்டேன். "என் நம்பர் எப்படி கிடைத்தது?" என எதிர்கேள்வி கேட்ட அவருக்கு விளக்கம் சொன்னேன். "ஓ... இன்னும் என் நம்பர் அதுல இருக்கா, நான் அந்த செக்சனில் இருந்து வெளியே வந்து 6 மாசம் ஆச்சு!" ன்னார்.

அவரே, ஒரு லேண்ட் லைன் நம்பரை கொடுத்து பேசச் சொன்னார். அந்த நம்பரில் தொடர்பு கொண்டு கேட்டப்ப, இன்னும் 24 மணிநேரத்தில் பிரச்சனை சால்வ் ஆகிடும் என்றார் அதில் பேசியவர். ஆனால், ஆகவில்லை. மறுநாள் ஆர்.ஏ.புரம் பிஎஸ்என்எல் ஆபிஸூக்கு போய் கேட்டேன். நாளைக்குள் ஆகிடும் என்ற அதே பழைய புராணம்தான். 2 நாள் கழித்து போய் நின்றேன்.

அந்த செக்சன் பார்க்கிற மிஸ்டர் பிரதாப், 3 நாள் லீவ், அதனால நீங்க வெள்ளிக்கிழமை வந்து பாருங்க.சரிங்க, அந்த பிரதாப் நம்பர் கொடுங்க, அவர்கிட்ட பேசிட்டே நான் வருகிறேன் என்றேன். "இல்லங்க நம்பர் எல்லாம் கொடுக்க மாட்டோம்!" என்றார் அந்த பெண்மணி. "நீங்க வேலை பார்க்கிறது தகவல் தொழில் நுட்ப துறையின் கீழ் உள்ள ஒரு நிறுவனம், அப்படி இருக்கையிலே, லேண்ட் லைனுக்கு கூப்பிட்டா யாரும் எடுக்கிறது கிடையாது, சம்பந்தப்பட்ட நபர் லீவ்ல இருக்கார். அடுத்து ஒவ்வொரு நாளும் நான் வந்து அலையுறதுக்கு, நீங்க நம்பர் கொடுக்கலாமே?" என்றேன்.

"நீங்க எது பேசுறதா இருந்தாலும் மேலே 6-வது மாடியில் எஸ்டிஇ இருக்காங்க, அவங்ககிட்ட போய் சொல்லுங்க!" என்றார் அந்த பெண்மணி. மேலே சென்று எஸ்டிஇயையும் பார்த்தேன். அவரும் மாலைக்குள் சரியாகி விடும் என்றார் ஆகவே இல்லை. மறுநாள் 10 மணிக்கு போய் நின்றேன் அந்த அலுவலகத்தில், நான் போட்ட சத்தத்தில் அந்த அலுவலகத்தின் தலைமை நிர்வாகியான மேலாளர் வந்தார். அவர் என்னிடம் கேட்டார்.

என்ன பிரச்சனை என்று. விபரத்தை சொன்னேன். அவர் கேட்டார் எந்த நம்பர் ஆக்டிவேசன் ஆகவில்லை என்று. அவரிடம் நான் சொன்னேன். இதுவரை நான் இந்த அலுவலகத்திற்கு 5-6 முறை வந்துவிட்டேன். ஒருத்தர் கூட கேட்கவில்லை ஆக்டிவேசன் ஆக வேண்டிய நம்பர் எதுவென்று. நீங்கள்தான் முதல் முறையாக கேட்டிருக்கிறீர்கள் என்று? அவரிடம் நம்பர் சொன்னேன்.

பதிலுக்கு அவரது நம்பரை கொடுத்தார். மாலையே ஆக்டிவேசன் ஆனது. சரியாக சிம் வாங்கி 29 நாட்கள் கழித்து.!

பின்குறிப்பு: அந்த சிம் தமிழ்நாடு காவல் துறையினர் உபயோகப்படுத்தும் சியூஜி சிம்.!

-எம்.செந்தமிழ் செல்வி
தேனாம்பேட்டை

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...