Showing posts with label world cup. Show all posts
Showing posts with label world cup. Show all posts

Sunday, October 31, 2021

WC fever: Big screens set up for India-NZ match today

WC fever: Big screens set up for India-NZ match today

TIMES NEWS NETWORK

Bhopal:31.10.2021

The do-or-die match of the World Cup between India and New Zealand on Sunday evening will be screened on big screens at various places in Bhopal. A special selfie point with cricket accessories has been developed by MPT at the Drive-in-Cinema of a hotel.

Several hotels and other places have made arrangements for the live telecast. Manager of Drive-in-Cinema, Vipin Katare said that last week’s match between India-Pakistan was well received by the people. “Since then, cricket lovers have been inquiring about booking the match tomorrow. As such, we have decided to screen the match from 7pm,” said Katare.

To add to the excitement, drums and music will be played on every fours and sixes hit during the match, he said. “You will also be able to order your favourite food which will be served in their car,” said Katare.

Friday, February 22, 2019

Kapil’s Devils demand more than ₹15 lakh for movie on ’83 WC win

K.ShriniwasRao@timesgroup.com

Mumbai:22.02.2019

The legendary Kapil’s Devils – members of the1983 World Cup winning team – who have a movie coming up on their historic achievement, are “unhappy” about the remuneration they will be drawing for sharing their ‘story of a lifetime’.

TOI has learnt that a majority of the former team members met in Mumbai on Thursday to share their concerns over the fact that the makers of the biopic are paying them a “paltry” ₹15 lakh each for their participation.

These former cricketers, sources say, had signed contracts to share their story on the World Cup win 36 years ago, a win that changed the face of Indian cricket forever. At ₹15 lakh per player, a total of 10 team members will collectively draw Rs 1.5 crore.

“That’s a pittance. A cricketer making his IPL debut takes twice of that or more. You’re talking about players who won the biggest trophy ever for Indian cricket. It is 1983 that changed everything for India,” say sources. It is further learnt that Kapil Dev, the captain of the 1983 team, has a separate contract with the filmmakers while another legend from that side, Sunil Gavaskar, is the only team member to have not signed the contract.

“Yes, we (rest of the team members) have been offered that amount (₹15 lac) and there’s no profit sharing either. We have decided to take this matter up with them (the filmmakers),” two members of the1983 squad said.

Under Kapil, Gavaskar, Mohinder Amarnath, Krishnamachari Srikkanth, Balwinder Sandhu, Syed Kirmani, Sunil Valson, Madan Lal, Sandeep Patil, Roger Binny, Kirti Azad, Yashpal Sharma and Ravi Shastri were part of the team that won the tournament.

Those speaking on behalf of these team members say 1983 win is their biggest achievement. “It is not fair if they are being made to undersell this legendary achievement. Biopics on sports legends overseas are not treated like this,” say sources. All other team members are learnt to have signed the contract.


GAME CHANGERS: Kapil Dev poses with the 1983 World Cup along with Mohinder Amarnath

It is further learnt that Kapil Dev has a separate contract with the filmmakers while another legend from that side, Sunil Gavaskar, is the only team member to have not signed the contract

Sunday, March 29, 2015

வலியது வெல்லும்

ஆறு வாரங்களுக்கு மேல் நடைபெற்றுவந்த பரபரப்பான நாடகம் தற்போது முடியும் கட்டத்தை நெருங்கியிருக்கிறது. நாடக முடிவுக்குச் சற்று முன்னதாகவே களப்பலியாகியிருக்கிறது இந்திய அணி! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணிக்கு அடுத்ததாக இந்தியாவும் பலரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி யிருக்கிறது.

தொடர் தோல்விகளுக்குப் பிறகு, உலகக் கோப்பையில் நுழைந்த இந்திய அணிகுறித்து இந்திய ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு பெரிதாக இருக்கவில்லை. ஆனால், இந்திய அணியின் நம்ப முடியாத எழுச்சியைக் கண்டு ரசிகர்கள் பெருமளவில் ஊக்கம் பெற்றிருந் தார்கள். எனினும், ஆரம்பகட்ட எதிர்பார்ப்பு போலவே இந்த உலகக் கோப்பை துயர நாடகமாகவே ஆகிவிட்டது இந்திய அணிக்கு.

கிரிக்கெட் ஆடும் நாடுகளின் மாபெரும் திருவிழாவில் வழக்கம் போலவே பல வெற்றிக் கதைகளும் கண்ணீர்க் கதைகளும் அரங்கேறின. சாதனைகள் நொறுக்கப்பட்டன. பழைய புகழ்கள் சிதறடிக்கப் பட்டன. புதிய நாயகர்கள் தலையெடுத்தார்கள். ஆட்டத்தின் விதிகள் மாறினாலும் சில விஷயங்கள் மாறுவதே இல்லை. ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் அத்தகையது.

என்ன செய்யப்போகிறார்களோ என்னும் பதைபதைப்பை ஏற்படுத்தி விட்டு, பிறகு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த இந்திய அணி நம்பிக்கை என்பது ஒரு நீர்க்குமிழியைப் போன்றது என்பதை நிரூபித் திருக்கிறது. தொடர்ந்து ஏழு ஆட்டங்களில் வெல்லும், ஏழு முறை எதிரணியை முற்றிலுமாக ஆட்டமிழக்கவைக்கும் என்று யாரும் எதிர் பார்க்காத அணி இதையெல்லாம் செய்து உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்த இந்திய ரசிகர்களைத் தன் சொதப்பல் ஆட்டத்தால் ஏமாற்றி யதார்த்தத்தையும் புரியவைத்தது. நாடகத்தின் உச்சக் காட்சியை உணர்ச்சியே இல்லாமல் பார்க்கும் நிலைக்கு இந்தியர்களைத் தள்ளிவிட்டார்கள் தோனி அணியினர்.

ஆஸ்திரேலியா மிகவும் தன்னம்பிக்கையுடனும் கவனத்துடனும் சிறிதும் பதற்றம் அற்ற மனநிலையுடனும் ஆடி வென்றது. அந்த அணிக்கு ஒரு திட்டம் இருந்தது. அதைச் சரியாக அது அமல்படுத்தவும் செய்தது. யதார்த்தமான மதிப்பீட்டில் ஆஸ்திரேலியாவைவிடவும் திறமை குறைந்த இந்திய அணி, தன் திறமைகளையெல்லாம் திரட்டித் தன்னம்பிக்கையுடன் போராடினால்தான் போட்டி என்ற ஒன்றே சாத்தியமாகும் என்ற நிலையில், இந்திய அணி பதற்றத்தையே வெளிப்படுத்தியது. தோல்வி என்பது சகஜம் என்பதுபோலவே ஆடியது.

யதார்த்தமான மதிப்பீடுகள் இன்றி உணர்ச்சி அடிப்படையிலான எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள்; ஆத்திரமடைந்தார்கள். ஆடுகளத்தின் மையத்தைத் தேசபக்தியின் உருவகமாகக் காணும் உணர்ச்சி மிகுந்த அவர்களது ஆத்திரத்துக்குத் தொலைக்காட்சித் திரைகளும் அனுஷ்கா ஷர்மா போன்ற அப்பாவிகளும் இலக்கானார்கள். கிரிக்கெட்டின் கள நிலவரத்தைப் புரிந்துகொள்ளாதவரையில் பொருத்தமற்ற இத்தகைய உணர்ச்சி வெளிப்பாடுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

ஆறு வாரங்களுக்கு முன்பு இருந்த நிலையில், இந்தியா இந்த அளவுக்கு ஆடியதே பெரிய விஷயம் என்னும் உண்மையைப் புரிந்து கொண்டு, இதைக் கடந்து செல்லும் பக்குவம் இந்திய ரசிகர்களுக்கு எப்போது வருமென்று தெரியவில்லை. மேலும், உணர்ச்சிகளை மீறி அறிவுபூர்வமாக கிரிக்கெட்டைப் பார்ப்பவர்கள் திறமை மிக்க அணிகள் வெல்வதையே வரவேற்பார்கள். ஆகவே, இந்தியத் தோல்வியின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் அதே நேரத்தில் ஆஸ்திரேலிய வெற்றியை வரவேற்பதுதான் கண்ணியமான விளையாட்டுக்குப் பெருமை சேர்க்கும்!

Friday, March 27, 2015

"சப்"புன்னு அறையலாம் போல இருக்கு இவங்க பேசறதைப் பார்த்தா..

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோல்வியைத் தழுவினாலும் தழுவினார்கள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் அவர்களைப் போட்டு கிழியோ கிழியென்று கிழித்து, அடித்து, துவைத்து தொங்க விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

இதில் அதிகமாக அடிபடுவது அனுஷ்கா சர்மாதான். வேண்டாத மருமகள் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற கதைதான் அனுஷ்காவுக்கு. அனுஷ்காவுக்கு கொடுமைக்கார மாமியார்களாக மாறிப் போயுள்ளனர் ஒட்டுமொத்த ரசிகர்களும். அவரையும், கோஹ்லியையும் சேர்த்து படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நடுவில் இதுதான் சாக்கென்று பிரபலங்களின் பேட்டிகள் வேறு கிரிக்கெட் வீரர்கள் பற்றியும், உலகக் கோப்பை தோல்வியினைப் பற்றியும். ஆனால், உண்மையில் நாமெல்லாம் தெளிவாகத்தான் இருக்கின்றோமா?

முன்பெல்லாம் சமூக வலைதளங்களின் தாக்கங்கள் அவ்வளவாக இல்லை. நம்மிடையேவும் ஒரு ஆரோக்கியமான மனப்பான்மை இருந்து வந்தது. கோபம் அல்லது மகிழ்ச்சி என்ற அளவோடு போய் விடும். ஆனால் இன்று அப்படி இல்லை. விதம் விதமாக கொண்டாடுகிறார்கள்.. விதம் விதமாக திட்டுகிறார்கள். இன்றைய நிலையில், அந்தரங்கம் என்ற ஒன்றே யாருக்கும் இல்லாத அளவுக்கு, ஒரு சமூக வலைதளங்கள் பிடித்தாட்டுகின்ற உலகில் நாம் வாழ்ந்து வருகின்றோம். யார் முந்திக்கொண்டு மற்றவர்களை கலாய்க்கின்றோம், கிண்டல் அடித்து ஸ்டேட்டஸ் போடுகின்றோம் என்ற மனநிலையில் உறுதியாக இருக்கின்ற நாம் அப்படி கலாய்க்கப்படுபவர்களுக்கும் ஒரு மனம் உண்டு என்பதனை மறந்தே போகின்றோம்.

வெற்றியையும், தோல்வியையும் சமமாக எடுத்துக் கொள்கின்ற ஒரு எளிதான மனப்பான்மையினை தொலைத்து வெகுநாட்கள் ஆகின்றது நாம். இத்தனை நாட்களும் மற்ற போட்டிகளில் எல்லாம், மற்ற கிரிக்கெட் அணிகளை இந்திய அணி தோற்கடித்த போது மாற்றி, மாற்றி அவர்களை கேலிக் கூத்தாக்கிய நாம், இன்று நம்முடைய அணி போராடித் தோற்ற போதிலும் ஏதோ நாமே களத்தில் இறங்கி நெற்றி வேர்வை நிலத்தில் பட பேட்டிங்கும், பவுலிங்கும் செய்தது போல் அவர்களை காய்ச்சி எடுக்கின்றோம். இதில், பாவம் மேட்ச்சினை பார்க்கப்போன அந்தப் பெண் அனுஷ்கா சர்மாவையும் சேர்த்து அசிங்கப் படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்... ஏதேனும் ஒரு வேலையில் நீங்கள் முழுமனதாக ஈடுபட்டாலும் சரி,


ஏனோதானோவென்று செய்தாலும் சரி அதில் தோல்வியைத் தழுவ நேர்ந்தால் உங்களுடைய மனதின் ரணம் எவ்வளவு ஆழமாக இருக்கும் என்பதினை. அவர்கள் பலகோடி சம்பளம் வாங்குகின்றார்கள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அதனையும் தாண்டி கிரிக்கெட் களத்தில் இறங்கி, தூக்கத்தினையும் தொலைத்துவிட்டு அந்த இரவில் நம்முடைய கனவான உலகக் கோப்பைக்காக போராடிய சராசரி மனிதர்கள்தான் அவர்களும். உங்களுடைய வெற்றியைக் காண உங்கள் மனம் நேசிக்கும் காதலனோ, காதலியோ பக்கத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பதைப் போலத்தான் அனுஷ்கா சர்மா ஆஸ்திரேலியா சென்றதும்.


காலையில் ஒரு ஒருமணி நேரத்திற்கு வாக்கிங் போகவே 10 தடவை அலாரத்தினை அணைப்போம் நாம். ஆனால், கிட்டதட்ட 40, 50 நாட்களுக்கு மேலாக ஓயாத உடற்பயிற்சியும், பயிற்சியும், புது இடத்தின் உணவும், அலைச்சலும், குறிக்கோளுக்காக மனதினை மெருகேற்றி, மெருகேற்றி ஏற்பட்ட மன உளைச்சலுமே அவர்களுடைய தோல்விக்கு காரணம் என்பதனை நாம் ஒத்துக் கொள்ள மறுக்கின்றோம். ஏனெனில், நம்மால் வெற்றியினை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். அந்த வெற்றியைப் பெற்றுத்தந்தால் மட்டுமே அவர்கள் நம்மவர்கள். இல்லையெனில், அவர்கள் நம்முடைய எதிரிகள். சக மனிதரை மதிக்காமல், அவர்களுக்கு இந்த சமயத்தில் மன ஆறுதல் அளிக்காமல் கேவலமான கமெண்ட்டுகளையும், ஏதோ வானத்திலிருந்தே குதித்து வந்தவர்கள் போல், தோல்வியைக் கண்டே அறியாதவர்கள் போல் சமூக வலைதளங்களில் அவர்களை நாம் கேலிக் கூத்தாக்குவதும் நம்முடைய மனதின் அடி ஆழத்தில் உறைந்து போயிருக்கும் அழுக்கின் மறுப்பக்கத்தினைத்தான் உலகிற்கு எடுத்துரைக்கின்றது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!

இந்தியா தோல்வி : உயிரை மாய்த்துக் கொண்ட அரசு ஊழியர்!

லகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தையடுத்து லக்னோவில் அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
உலகக் கேப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்பது கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவாக இருந்தது. ஆனால் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து போட்டியை விட்டு வெளியேறியது.
இதனால் ஏராளமான ரசிகர்கள் மனமுடைந்து போனார்கள். இந் நிலையில் உத்தரபிரேதேச மாநிலம் லக்னோவில் 50 வயது அரசு ஊழியர் ஒருவர் கிரிக்கெட் தோல்வி காரணமாக கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உமேஷ் என்ற அந்த 50 வயது அரசு ஊழியர் நேற்று தனது சக ஊழியர்களுடன் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்திய அணி தோல்வியை நோக்கி செல்லத் தொடங்கியதும் மிகுந்த ஆதங்கத்துடன் இருந்துள்ளார். அவருக்கு சக ஊழியர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.
ஆனால் அறையை விட்டு வெளியே சென்ற அவர் கட்டடத்தில் மீது இருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உமேஷ் உயிரிழந்தார். கிரிக்கெட் தோல்விக்காக உமேஷ் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று லக்னோ போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை தோல்விக்கு தோனி ஏன் காரணமாகிறார்... அலசுகிறது இந்த கட்டுரை

விளையாட்டின் இறுதியில் ஒருவர்தான் வெற்றிபெறமுடியும். பேட்டிங் பௌலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா வெற்றிபெற்றிருக்கிறது’’ என்று அரை இறுதி தோல்விக்குப் பிறகு சொல்லியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி. ‘‘மூணு மாதம் ஆஸ்திரேலியாவில் விளையாடி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாத அணியை உலகக்கோப்பையில் அரை இறுதிவரை அழைத்துவந்திருக்கிறார் தோனி. உலகக்கோப்பை போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிறந்த தனது குழந்தையைக் கூட பார்க்கப்போகாமல், நாடுதான் முக்கியம் என்று சொன்னவர் தோனி’’ என்று ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்-களில் தோனிக்கு ஆதரவாக மெசேஜ்கள் பரவுகின்றன.
இந்த உலகக்கோப்பையின் அரை இறுதிவரை இந்தியாவை அழைத்துவந்த பெருமை முழுக்க முழுக்க தோனிக்குத்தான் சேரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம் கடந்த நான்கு வருடங்களாக ஒரு ஒழுங்கற்ற, நிலையில்லாத, சரியான பௌலர்கள் இல்லாத மோசமான அணியை வழிநடத்தி வந்ததன் பரிசுதான் சிட்னி படுதோல்வி என்பது தோனிக்குத் தெரியும். இப்போதையே இந்திய அணியில் இருக்கும் எந்த வீரருக்குமே நிலையான ஆட்டம் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் போனதுதான் சோகம்.

தோனியின் ரோல் என்ன?

சச்சின், ஷேவாக், கம்பீர், யுவராஜ், ஜாகீர் கான் என அணியின் சீனியர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ந்தவுடன் அவர்களுக்கு மாற்றாக திறமையான வீரர்களை இந்திய அணிக்குள் அழைத்துவர வேண்டிய கடமை தேர்வாளர்களுக்கு உள்ளது. அதே கடமையும், பொறுப்பும் அணியை வழிநடத்திச் செல்லும் பங்கு கேப்டனுக்கும் உண்டு. ரஞ்சி கோப்பை மட்டும் அல்ல உள்ளூர் திறமைகளை சரியாகக் கண்டெடுத்து இந்திய அணிக்குள் அவர்களை கொண்டுவர இப்போது ஐபிஎல் போட்டிகளும் இருக்கிறது. சிறப்பாக விளையாடும் வீரர்களை ‘இவர் எனக்கு வேண்டும்’ என்று கேட்டுப்பெறும் உரிமை கேப்டனுக்கு உண்டு. சௌரவ் கங்குலிதான் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான் உள்ளிட்ட இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவந்து அவர்களை ஊக்கப்படுத்தி தொடர்ந்து சிறப்பாக விளையாட வழிகாட்டியவர்.

கேப்டன் தோனி ரெய்னா, தவான், ரோஹித், ரஹானே உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்புகளை அள்ளி வழங்கினார். இவர்கள் திறமையான வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இவர்களிடம் ஒரு ஒழுங்கு இல்லை. இவர்கள் அனைவருமே வெளிநாட்டு மைதானங்களில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை ஆடியவர்கள். உலகக்கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளிலுமே படுதோல்வி அடைந்தது இந்திய அணி. ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டிகளில் ஒன்றில்கூட இந்த அணியால் வெற்றிபெறமுடியவில்லை. அந்த மோசமான தோல்வியை சந்தித்த அதே அணியை வைத்துக்கொண்டுதான் 2015 உலகக்கோப்பைக்குத் தயாரானார் தோனி. தொடர்ந்து சொதப்பிய வீரர்களில் ஒருவரைக்கூட மாற்ற தோனி ஏன் மெனக்கெடவே இல்லை?

‘ஹார்சஸ் ஃபார் கோர்சஸ்’ தியரியை பின்பற்றுகிறேன்’’ என்பார் தோனி. ‘‘போட்டி நடைபெறும் நாள் அன்று பிட்ச்சின் தன்மை, தட்டவெப்ப சூழல் இவற்றைப் பொருத்துதான் அணியைத் தேர்ந்தெடுக்க முடியும். எல்லோரும் எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்கிற பாலிசியைப் பின்பற்ற மாட்டேன்’ என்று முன்பு சொல்லிய தோனி ஒரு ஒழுங்கே இல்லாத வீரர்களை வைத்து சமாளித்துவிடலாம் என்று எப்படி முடிவெடுத்தார்?
முதல் போட்டியான பாகிஸ்தானுடனான ஆட்டம்தான் இந்தியா தொடர்ந்து ஏழு வெற்றிகளைப் பெற தைரியமும், உற்சாகமும் கொடுத்தது. அந்தப் போட்டியில் கோஹ்லியின் இரண்டு ஈஸியான கேட்சுகளைத் தவறவிட்டனர் பாகிஸ்தான் வீரர்கள். கோஹ்லியின் அந்தக் கேட்சைப் பிடித்திருந்தால் அப்போதே முடிவுகள் மாறியிருக்கும். இந்த உலகக்கோப்பையில் கோஹ்லி, தவான், ரெய்னா, தோனி, ரோஹித் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியில் சிறப்பாக ஆடினார்களேத் தவிர இவர்கள் யாரும் ஒரே அணியாக ஒரு போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை.
 
'பின்ச் ஹிட்டர்'சேவாக்குக்கு மாற்று ஆட்டக்காரர் கண்டுபிடிக்கப்படவில்லை

ஹை ஸ்கோரிங் போட்டிகளில் வெல்ல வேண்டும் என்றால் தனது விக்கெட்டைப் பற்றி கவலைப்படாமல் ஆட்டம் துவங்கியவுடனே அடித்து ஆடி எதிர் அணியின் பந்துவீச்சாளர்களை நிலைகுலையவைக்கும் பின்ச் ஹிட்டர்கள் வேண்டும். வீரேந்திர ஷேவாக் இந்த வேலையைத்தான் செய்தார். தனது விக்கெட்டைப் பற்றி கவலைப்படாமல் பவுண்டரி, சிக்ஸர்களால் எதிர் அணி பௌலர்களை வெளுத்துவாங்குவார். பௌலருக்கு எந்த லைனில் பந்துவீச வேண்டும் என்பதே மறந்துபோகும். பிரண்டன் மெக்கல்லம், ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற வீரர்கள் இப்போது இதைத்தான் செய்கிறார்கள். ஷேவாக் ஃபார்மில் இல்லை அவரைக் கழற்றிவிடவேண்டும் என்று சரியான முடிவை எடுத்த தோனியும், இந்திய அணி தேர்வாளர்களும் அவருக்கான மாற்று வீரரை ஏன் இறுதிவரை அடையாளம் காணவே இல்லை?

‘‘மிகவும் திறமையான வீரர்’’ என்று சொல்லியே ரோஹித் ஷர்மா இந்தியா ஆடும் எல்லாப் போட்டிகளிலும் இடம்பிடித்துவருகிறார். இரண்டு இரட்டை சதங்கள் அடித்த இந்த உலக சாதனை நாயகன் உலகக்கோப்பையின் 8 போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி 330 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் வங்காளதேசத்துக்கு எதிரானப் போட்டியில் அடித்த 137 ரன்களைக் கழித்துவிட்டால் மற்ற ஏழு போட்டிகளில் அவர் அடித்தது மொத்தமே 190 ரன்கள்தான்.


அனுஷ்கா ஷர்மாவுடன் காதல்... பத்திரிகையாளருடன் மோதல்!

தொடர்ந்து சதம் அடிக்கிறோம், நாம்தான் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் என்கிற ஓவர் கான்ஃபிடன்ஸ் கோஹ்லிக்கு இப்போது சரியான பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கும் என நம்பலாம். இந்தியாவில், இந்தியப் பத்திரிகையில் வெளியான அனுஷ்கா ஷர்மா பற்றிய ஒரு துணுக்கு செய்திக்கு ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டை கவர் செய்யவந்த நிருபர் மீது பாயவைத்தது அந்த ஓவர் கான்ஃபிடன்ஸ்தான். அனுஷ்கா ஷர்மா- விராட் கோஹ்லி காதல் அவர்களின் தனிப்பட்ட விவகாரம்தான். 2011 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். 2015 உலகக்கோப்பையில் சச்சினாக இருந்து இந்திய பேட்டிங் டிபார்ட்மென்ட்டுக்கு தோள் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு விராட் கோஹ்லிக்கு இருந்தது. ஆனால் அவரோ அனுஷ்கா ஷர்மாவுடன் காதல், பத்திரிகையாளுடன் மோதல் எனப் பாதை விலகியது தன்னை பெரிதும் நம்பிய இந்திய அணி நிர்வாகத்துக்கும்,  ரசிகர்களுக்கும் அவர் செய்த துரோகம்.

கோடிகளைக் கொட்டும் பிஸ்னஸ்!


இந்தியாவைப் பொருத்தவரை கிரிக்கெட் ஒரு வியாபாரம். 1996 உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்குப் பிறகுதான் கிரிக்கெட் இந்தியாவில் மிகப்பெரிய வியாபாரமாக உருவெடுத்தது. இரண்டு மேட்சில் விளையாடியவர்களுக்கு கோடிக்கணக்கில் ஸ்பான்சர்ஷிப், விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம், ஸ்டார் அந்தஸ்த்து என புகழ் ஏணியில் ஏற ஆரம்பித்தனர் கிரிக்கெட் வீரர்கள். 20/20 யுகம் ஆரம்பித்தபிறகு இந்திய கிரிக்கெட் வாரியமும், கிரிகெட் வீரர்களும் பணம் சம்பாதிப்பதில் உச்சத்தைத் தொட்டுவிட்டார்கள். இன்று உலகிலேயே பணக்கார கிரிக்கெட் போர்டு இந்திய கிரிக்கெட் போர்டுதான். ஆனால் கையில் கோடி கோடியாய் பணம் வைத்திருக்கும் ஒரு அமைப்பால் தன் அணிக்கு திறமையான இளம் வீரர்களை கண்டெடுக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு.
அணிக்குள் திறமையான வீரர்களைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த வேண்டிய அமைப்பும் அதன் நிர்வாகிகளும், உச்சநீமன்றத்தில் எப்படி வாதிட்டு தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுவதில் பிஸியாக இருக்கும்போது பாவம் ரசிகர்கள் நாம் என்ன செய்ய முடியும். 

இங்கிலாந்தில் 2019 உலகக்கோப்பை!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் இருக்கும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு பிட்ச் கூட இந்தியாவில் கிடையாது. நம்மூர் மைதானங்களில் 140கிமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசவும் முடியாது. அப்படியே பந்து வீசனாலும் இங்கே பந்து பவுன்ஸ் எல்லாம் ஆகாது. 2019 உலகக்கோப்பை, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்தில்தான் நடைபெற இருக்கிறது. இங்கு வெற்றிபெற வேண்டும் என்றால் திறமையான பௌலர்களும், தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களும் வேண்டும். அதற்கு ஏற்றவாறு அணியைத் தயார் செய்தால்தான் இந்தியாவால் 2019 உலகக்கோப்பையை வெல்ல முடியும். இல்லை என்றால் 1983 உலகக்கோப்பை வெற்றிக்குப்பின் மீண்டும் உலகக்கோப்பையை வெல்ல 28 ஆண்டுகள் ஆனதுபோல், நாம் அடுத்த உலகக்கோப்பையை வெல்ல இன்னும் 24 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!
- சார்லஸ்

Sorrowful fans watch Team India exit

PUNE: After high expectations, came the great disappointment. Traffic on the usually busy city roads, which was thin since morning, remained so even after it became clear that India had surrendered the cup. Traffic on social networking sites, however, picked up as fans trolled the cricketers.

Many supporters took the humour route on Twitter to vent their frustration. The #WontGiveItBack made way for 'Maybe now #we_will_give_it_back'.

Inside college cafeterias, the volume of televisions telecasting the India-Australia match was turned up all the way, but on Thursday, cheers that usually drown out commentary were few and far between.

Halfway through the Indian innings, the crowd had started thinning out and when the last partnership anchored by Mahendra Singh Dhoni ended with his run-out, Aishwarya Ingle and her friends decided to leave as well.

"There really is no point in watching this match anymore. We have exams coming up, but we had all come down to watch it together. It has been a disappointment," she said as she walked away, leaving only a handful of spectators behind.

"It is not a good feeling. We should have fought for the win. We had hoped for a close game for the semi-final, but this was most disappointing," said Amit Jambhekar, an IT professional who had called all his friends over to his place so that they could cheer India on.

Disappointed cricket fans, many of whom had made arrangements hoping to watch Team India in the finals, had to change plans for Sunday.

"We had booked a table at a sports lounge for the final match. Some of our friends were coming from Mumbai to watch the match, but now we have cancelled those plans," said Rishabh Mehta, a college student. He still commended India's performance in the tournament so far.

Manoj Singh, a businessman, had arranged for a party at his house on Sunday so that everyone could watch the match. "The party is still on, just that we won't be watching India play. We would have enjoyed more if India were playing, but nevertheless they played well," he said.

Others still plan to watch the final match, many of them rooting for New Zealand to lift the trophy. "It won't be the final we had hoped for, but New Zealand have made it to a World Cup final for the very first time. I'm backing them for the match on Sunday," said Abbas entrepreneur Patwa.

Some optimists looked further into the future, taking solace in the unbeaten track record of the Indian team until their semi-final encounter.

"After watching all the matches and the brave show put up by our team in the semi-final, I strongly feel that our chance of winning the next World Cup is very high. My expectation is definitely high. I am not disappointed, but have become more optimistic for the Indian team now," said Shailesh Sant, a software professional, who got together with teammates of a cricket club that they play for.

Thursday, March 26, 2015

இதுதான் கடைசி உலகக்கோப்பை போட்டியா? - தோனி பதில்




சிட்னி: எனக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. அந்தப் போட்டித் தொடர் முடிந்த பிறகு  2019 உலகக்கோப்பை போட்டி குறித்து யோசிக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

உல கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியாவும்-ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் இந்தியா தோல்வி அடைந்தது.

இதன் பிறகு இந்திய அணியின் கேப்டன் தோனி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆஸ்திரேலியா 350 ரன்கள் வரை எடுக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால், நாங்கள் அதை கட்டுப்படுத்தினோம். 300 ரன்களுக்கும் மேலான இலக்கை துரத்துவது என்பது கடினமானதுதான்.

உலகக் கோப்பையில் எங்கள் அணியின் ஆட்டம் திருப்தி அளிக்கக் கூடியதாக இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கும்போது, இந்த அணியின் மீது பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

ரஹானே இந்தத் தொடரில் முன்னேற்றம் அடைந்த ஒரு வீரர் என்று நிச்சயம் கூற வேண்டும். டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என்று அவர் நல்ல மேம்பாடு அடைந்துள்ளார்.

ரசிகர்களுக்கு நான் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இந்தியாவிலிருந்தும், ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலிருந்தும் போட்டிகளுக்கு நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளனர். எங்களுடன் பயணித்த ரசிகர்களுக்கு நன்றி. ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்” என்றார். 

‘இதுதான் உங்களது கடைசி உலகக்கோப்பையா?’ என்று கேட்டதற்கு, ''எனக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. நல்ல உடல்தகுதியுடன் இருப்பதோடு, நன்றாக விளையாடியும் வருகிறேன்.

அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. அந்தப் போட்டித் தொடர் முடிந்த பிறகு  2019 உலகக்கோப்பை போட்டி குறித்து யோசிக்கலாம். இப்போதைக்கு எதுவும் கூற முடியாது'' என்றார்.

அடக்கொடுமையே...இந்தியா வெற்றி பெற நாக்கை அறுத்துக்கொண்ட வாலிபர்!





வேலூர்: இன்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என வேண்டி வாலிபர் ஒருவர் நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொண்ட நிலையில், ஆட்டத்தின் போக்கு தொடக்கத்திலேயே இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பை மங்கச் செய்தது.

இந்நிலையில் வாணியம்பாடியை சேர்ந்த தீவிர கிரிக்கெட் ரசிகரான சுதாகர் என்ற வாலிபர், இந்தியா வெற்றி பெற வேண்டும் என வேண்டி, போட்டி தொடங்குவதற்கு முன்பே, கோவிலுக்கு சென்று தனது நாக்கை அறுத்துக்கொண்டார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருப்பினும் சுதாகரால் இனிமேல் பேச முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பேச முடியாத நிலையில் இருக்கும் சுதாகருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவருடைய தம்பி ராஜீவ்காந்தி நம்மிடம் கூறுகையில், " அண்ணனுக்கு கல்யாணம் ஆகி இப்பதான் ஒன்றரை வயசுல ஒரு குழந்தை இருக்கு. அவரு பெருசா ஒண்ணும் படிக்கலை 5வது வரைக்கும்தான் படிச்சிருக்காரு. ஆனா கிரிக்கெட்டுனா ரொம்ப உசுரு. இன்னைக்கு காலைல ஊர்ல இருக்குற வேடியப்பன் கோயிலுக்கு கற்பூரம் ஏத்திட்டு சாமி கும்பிட்டு வர போய்ட்டிருந்தார்.

அங்க போனவரு சாமிக்கு கற்பூரம் ஏத்திட்டு கத்தியால நாக்கை அறுத்து சாமிக்கு வேண்டுதல் செஞ்சி இருக்காரு.வலி தாங்க முடியாம ஒரு வீட்டுக்கு போன் பண்ணி பேச பாத்திருக்கார். அவரால பேச முடியல. உடனே பக்கத்துல இருந்த ஒரு பெண்மணிகிட்ட போனை குடுத்து சைகையால சொல்லி பேசச் சொல்லி இருக்கார். தகவல் தெரிஞ்சு ஓடி வந்து பார்த்தப்ப நாக்கு தனியே கோயில்ல கிடந்துச்சு. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம்.

இனிமே ஜென்மத்துக்கும் பேச்சு வர வாய்ப்பு இல்லைனு சொல்லி வாயில தையல் போட்டிருக்காங்க.ஏன் இப்படி பண்ணேனு கேட்டேன். பேச முடியாம கிரிக்கெட் பௌலிங் போடுவது போலவும், பேட்டிங் செய்வது போலவும் சைகை காட்டி சாமி கும்பிட்டு காட்டுனார். இந்தியா ஜெயிக்கணும்னு இப்படி பண்ணுனியான்னு கேட்டேன். ஆமான்னு தலையை ஆட்டி அழுதார்.

இந்த அளவுக்கு கிரிக்கெட் ரசிகரா இருப்பாருன்னு நினைக்கல’’’ என்றார் பதட்டத்துடன்.

நாக்கை அறுத்துக் கொண்ட இந்த சுதாகருக்கு, இன்று இந்தியா தோற்றது தெரியாதாம். நம்மிடமும் சைகை காட்டிக் கொண்டிந்தார்.அவரிடம் உண்மையை சொல்லாமல் கிளம்பிவிட்டோம்.

எப்படியெல்லாம் பண்றாங்கப்பா!

-சு. ராஜா (மாணவப் பத்திரிகையாளர்)

படம்: ச.வெங்கடேசன்

Wednesday, March 25, 2015

World Cup fever: Planning to fall ill tomorrow?


So, what will be your excuse for bunking work on Thursday, when India takes on Australia in the semifinal? As many as 34% of 6,000 officegoers surveyed nationwide said they would call in sick, while 2% plan to go to the extent of saying their houses have been burgled.
While most of India's matches in the Cricket World Cup have been during weekends, the India-Australia semifinal, billed as the "final before the final", is on Thursday, leaving countless fans anxious about how and where to watch it.

Perhaps anticipating a low turn-out at office, Nayantara Pani, business head of Bangalore-based PlayRight, said, "I've given leave to my staff. We're into sport communications and are sports enthusiasts. If there's a super important meeting, it'll be only after 4.30 pm."

An excited Pallavi Singh, 38, of Citibank, Gurgaon, said, "We've declared Thursday a no-meeting day to support our nation. Venue not fixed but (we'll be) with peers at hub or big screen at work. Bleed Blue! The game is on!"

Though almost 60% of respondents virtuously said they would report for work, may offices to are getting into the festive spirit. A Coca Cola spokesperson said, "Match days are usually relaxed in our office. We haven't granted leave to employees, but they're free to gather in the cafeteria or in their bosses' cabins to watch the match."

On the other hand, Shalini Pillai, head of people, performance and culture, KPMG in India, said its employees have been granted leave on Thursday. "It's time to celebrate India reaching the semi-final in the all important clash with Australia. KPMG supports Team India and wishes them all the best for this momentous match."

In Ludhiana, fans are prepping for a grand celebration with many residents having booked tractors to take their celebrations to the streets. On match day, many restaurants are offering heavy discounts and giving away freebies for each boundary hit or century scored.

Kochi teen Mark Anthony, whose 12th grade state board exams are going on, said, "My mom doesn't let me watch TV but my tuition teacher Varghese never misses an India match. And that gives me and friends some hope of catching a few overs with him."

In Chennai, Vasanth Raj, an auto consultant, said that he would go to work only after the game is over. "It's an important game for us and there's no way I am going to office. I've asked for half-a-day leave."

In Kolkata, MNC professionals, professors, cricket fans are planning to either reschedule their work or skip office altogether. Gourisankar Sa, a Bose Institute professor, said, "For me on Thursday, the World Cup match will top the priority. I have one class which I'll wrap up quickly and follow the match on internet in the laboratory. Somdutta Basu, an MNC employee, said, "Initially I had thought of taking leave, but then I decided to bunk work till the match is over citing official meetings etc."

ESPNcricinfo, which interviewed 6,000 respondents, said, "Cricket fans will not let work get in the way of them enjoying the much-awaited World Cup tournament. Sixty two per cent said they will miss work at some point. When it comes to what excuses they would use to skip work, the time-tested method of calling in sick appeals more to the younger fans; 75% fans over 30 are open to skipping work to watch a match."

(Inputs from Chennai, Delhi-NCR, Mumbai, Bangalore, Kochi, Kolkata, Chandigarh)

Tuesday, March 24, 2015

உலகக் கோப்பை 2-வது அரையிறுதியைக் காண சிட்னிக்கு படையெடுக்கும் இந்திய ரசிகர்கள்: மிரட்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கு தங்கள் நாட்டுக்கு ரசிகர்களே அதிகம் வருவார்கள். அவர்களுடைய ஆதரவோடு சிறப்பாக விளையாட முடியும் என ஆஸ்திரேலிய வீரர்கள் நம்பியிருந்தனர். ஆனால் 42 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட சிட்னி மைதானத்தில் 70 சதவீத டிக்கெட்டுகளை இந்திய ரசிகர்கள் வாங்கியிருப்பது ஆஸ்திரேலிய வீரர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுவது போன்றதொரு சூழலுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆகியோர் டுவிட்டர் மூலம் தங்களுக்கு ஆதரவு தருமாறு தங்கள் நாட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், “வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள 2-வது அரையிறுதி போட்டியைக் காண ஆஸ்திரேலிய ரசிகர்கள் அனைவரும் மஞ்சள் வர்ணம் பூசிக்கொண்டு வாருங்கள். உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பார்மி ஆர்மி என்ற பெயரில் கிரிக்கெட் ரசிகர்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து அணி, வெளிநாடுகளில் சென்று விளையாடும்போது அந்த போட்டிகளுக்கு பார்மி ஆர்மி சார்பில் ரசிகர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

அதேபோன்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அமைப்பை ஸ்வாமி ஆர்மி என்ற பெயரில் நடத்தி வரும் கார்த்திக் அய்யாலசோமய்யாஜுலா என்பவர் இந்தியா-ஆஸி. இடையிலான 2-வது அரையிறுதி குறித்து பேசும் போது, “ரசிகர்கள் விஷயத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு கடினமான தருணம் இது. போட்டியின்போது இந்திய ரசிகர்கள் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக காதை கிழிக்கும் வகையில் குரல் எழுப்புவார்கள். அது ஆஸ்திரேலிய அணியினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அப்போது ஏதோ வெளிநாட்டில் விளையாடுவது போன்ற உணர்வு ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஏற்படும்.

இந்திய ரசிகர்கள் தாரை தப்பட்டையுடன் மைதானத்தை வலம் வருவதோடு, பாட்டுப் பாடியும், நடனம் ஆடியும் அசத்தப் போகிறார்கள். இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்கும் போதும், இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்கும்போதும் பாடல்களை பாடி கொண்டாடவுள்ளனர்.

கிளார்க்கும், வார்னரும் தங்களுக்கு ஆதரவு தருமாறு தங்கள் நாட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இதிலிருந்தே இந்திய ரசிகர்கள் குறித்து அவர்கள் எவ்வளவு கவலையடைந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். சிட்னி மைதானத்தில் இந்திய ரசிகர்களே அதிகமிருப்பார்கள் என்பதை கிளார்க், வார்னர் ஆகியோரின் டுவிட்டர் கருத்துகள் சொல்லிவிட்டன. வரும் வியாழக்கிழமை மைதானத்துக்கு வரும் ஆஸ்திரேலிய ரசிகர்கள், தெற்காசியாவில் கிரிக்கெட்டுக்கு என்ன அர்த்தம் என்பதை புரிந்து கொள்வார்கள். அரையிறுதியில் இந்திய அணிக்கு கிடைக்கப் போகிற ஆதரவை இதற்கு முன் ஆஸ்திரேலியர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்” என்றார்.

கார்த்திக், மெல்போர்னில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Wednesday, March 18, 2015

வெற்றியிலும் சில பாடங்கள்

வெற்றியைவிடவும் தோல்வியைச் சிறந்த ஆசான் என்பார்கள். காரணம், வெற்றி தரும் பரவசம் குறைகள் தெரியாத அளவுக்குக் கண்ணை மறைத்துவிடும். தோல்வி நமது குறைகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துக் காட்டிவிடும்.

வெற்றி மீது வெற்றி பெறும் நேரத்திலும் கவனமாகச் சுயபரிசோதனை செய்துகொண்டு குறைகளைக் கண்டறிவது மேலும் வெற்றிகளைக் குவிக்க உதவும். தவிர, வெற்றி என்பது மட்டும் சிறப்புக்கான சான்றிதழாகிவிடாது என்பதால் இந்த வெற்றியை விமர்சனபூர்வமாக அணுக வேண்டியுள்ளது.

பெரும் பதற்றத்துடன் தொடங்கிய இந்தியாவின் உலகக் கோப்பைப் பயணம் தொடர் வெற்றிகளால் இன்று தெம்புடன் இருக்கிறது. இதுவரை எந்த உலகக் கோப்பையிலும் முதல் சுற்றில் இந்தியா இவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆடுகளங்களில் மூவர்ணக் கொடிகள் உற்சாகமாகப் பறக்கின்றன.

இந்திய ரசிகர்களின் முகங்களில் உற்சாகம் தாண்டவ மாடுகிறது. கோப்பை கைக்கு வந்துவிடும் என்னும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. கால் இறுதியில் ஆடவிருப்பது வங்கதேசம் என்பதால் அரை இறுதியில் யாருடன் மோதல் என்பது பற்றிய யூகங்கள் வலம் வருகின்றன.

வங்கதேச அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. 2007-ல் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறக் காரணமான அணி அது. என்றாலும் கடந்த 6 போட்டிகளில் இந்தியா ஆடிய விதத்தைப் பார்க்கும்போது அது அரை இறுதிக்குச் செல்வதில் பெரிய பிரச்சினை எதுவும் இருக்காது என்றே தோன்றுகிறது.

தொடர்ச்சியாக ஏழாவது வெற்றியை இந்தியா பெற்றுவிடும் என நம்பலாம் என்றாலும் அடுத்த போட்டியில் வெல்வதும் அதில் வென்றால் அதற்கடுத்த போட்டியில் வெல்வதும் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. தொடர் வெற்றிகளில் தெரிந்த சில பலவீனங்களைப் பார்க்கையில் இதிலுள்ள சவால் புரிந்துவிடும்.

வலுவான பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளுடனான போட்டிகளில் இந்தியா கவனமாகவும் தீவிரமாகவும் போராடி வென்றது. வலுக் குறைந்த ஐக்கிய அரபு அமீரக அணியுடனான போட்டியை எளிதாக வென்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணியை 183 ரன்னுக்குள் சுருட்டியபோதும் அந்தப் போட்டியில் வெற்றி எளிதாக வந்துவிடவில்லை. அதே போலத்தான் ஜிம்பாப்வே அணியுட னான போட்டியும். அயர்லாந்து அணி நன்கு போராடினாலும் பெரிய சவாலாக விளங்கவில்லை.

தொடக்க ஜோடி

கண்ணைக் கூசவைக்கும் வெற்றியின் வெளிச்சத்தை ஊடுருவிப் பார்த்தால் இந்தியாவின் பலவீனங்கள் அம்பலமாகின்றன. குறிப்பாகத் தொடக்க ஜோடியின் ஆட்டம். ஷிகர் தவனும் ரோஹித் ஷர்மாவும் இணைந்து ஒரே ஒரு முறைதான் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்த ஜோடி 174 ரன்களை எடுத்தது. அதை விட்டுவிட்டால் ஐந்து ஆட்டங்களில் இவர்கள் இணைந்து எடுத்த மொத்த ரன்கள் 104.

தவன் இரண்டு சதங்களை அடித்துவிட்டார். பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு எதிராகச் சிறப்பாக ஆடினார். இவர் ஆட்டத்தைப் பாராட்டும் அதே நேரத்தில் தவறவிடப்பட்ட கேட்சுகளின் வடிவில் அதிருஷ்டமும் இவருக்குக் கைகொடுத்தது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

ரோஹித் ஷர்மாவைப் பொறுத்தவரை அதிருஷ்டமும் கைகொடுக்கவில்லை. ஆறு போட்டிகளில் இவர் அடித்த ரன்கள் 15, 0, 57*, 7, 64, 16. வலுவான மூன்று அணிகளுக்கு எதிராக இவர் அடித்த ரன்கள் 15, 0, 7. இரண்டு அரை சதங்களும் ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து அணிகளுக்கு எதிரானவை. அசாத்தியமான திறமை உள்ளவர் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஷர்மா அதை நிரூபிக்க அதிக வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார்.

இந்த அளவுக்கு இன்னொருவருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. கால் இறுதியில் சற்றே வலுக் குறைந்த அணிக்கு எதிராக இவர் நன்கு ஆடிச் சுதாரித்துக் கொள்ள வேண்டும் என்பதோடு கால், அரை இறுதி ஆட்டங்களில் வலுவான பங்களிப்பைச் செலுத்த வேண்டும். அதுதான் அவரது திறமைக்கும் அவருக்கு அளிக்கப்படும் வாய்ப்புக்கும் நியாயம் செய்வதாக அமையும்.

விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி ஆகியோர் ஒவ்வொரு சமயத்தில் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்குப் பங்களித்து வருகிறார்கள். வலுவான தொடக்கம் அமையும்போது இவர் களுடைய பங்களிப்பு இன்னமும் அதிகரிக்கும் என்று நம்பலாம்.

ஜடேஜாவின் ஆட்டம்

கவலைக்குரிய ஆட்டம் என்றால் அது ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம்தான். திறமையுள்ள மூத்த ஆட்டக்கரர்களையும் இளம் ஆட்டக்காரர்களையும் தவிர்த்து விட்டு இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பந்து வீச்சில் ஓரளவு நன்றாகவே செயல் பட்டுவருகிறார். களத்தடுப்பிலும் செயல்படுகிறார். ஆனால் மட்டை வீச்சு படு மோசமாக உள்ளது. மூன்று போட்டிகளில் இவருக்கு ஆட வாய்ப்புக் கிடைத்தது.

அதில் இவர் எடுத்த ரன்கள்: 7, 2, 13. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா தடுமாறிக்கொண்டிருந்தபோது இவர் களமிறங்கினார். 183 என்னும் இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த இந்தியா, 107-க்கு 5 விக்கெட்கள் என்று சிக்கலில் இருந்தது. தோனியுடன் சேர்ந்து நிதானமாக இவர் ஆடியிருந்தால் அணி எளிதாக வெற்றிபெற்றிருக்கும். ஆனால் மிகவும் பொறுப்பற்ற ஒரு ஷாட்டால் இவர் ஆட்டமிழந்தார்.

ஜிம்பாப்வேக்கு எதிராகவும் இந்தியாவின் முன்வரிசை மட்டையாளர்கள் தடுமாறினார்கள். ரெய்னா, தோனியின் ஆட்டமும் விடப்பட்ட கேட்சுகளும் சேர்ந்து இந்தியாவைக் காப்பாற்றின. இரண்டு கேட்சுகள் கொடுத்தாலும் அற்புதமான ஷாட்களை அடித்த ரெய்னாவிடம் தோனி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்.

அது என்ன என்று ஆட்டம் முடிந்த பிரகு அவரிடம் கேட்கப்பட்டது. “நமக்குப் பிறகு மட்டையாளர் யாருமில்லை என்று ரெய்னாவுக்கு நினைவுபடுத்தி, அவரது வேகத்தைக் குறைத்துக்கொள்ளச் சொன்னேன்” என்றார் தோனி. ஜடேஜாவைப் பற்றிய கூற்றாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம் என்பது அணிக்கும் ஜடேஜாவுக்கும் நல்ல அறிகுறி அல்ல.

செய்யப்படாத பரிசோதனைகள்

பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தும் விதம், களத் தடுப்பு வியூகம் என தோனியின் தலைமை சிறப்பாகவே உள்ளது. நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் ஆபத்பாந்தவன் வேலையை அவர் மட்டை சரியாகவே செய்கிறது. ஆனால் புதிய பரிசோதனைகளைச் செய்துபார்க்க அவர் தயங்குகிறார். அமீரகம், அயர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் சில பரிசோதனைகளைச் செய்திருக்கலாம்.

வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ஜடேஜாவைச் சற்று முன்னதாக இறக்கிவிட்டிருக்கலாம். குறிப்பாக அமீரக அணிக்கெதிரான போட்டியில் இப்படிச் செய்திருக்கலாம். அதுபோலவே அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற போட்டிகளில் அக்‌ஷர் படேலைக் களமிறக்கியிருக்கலாம். இதுபோன்ற பரிசோதனைகள் பின்னாளில் கடுமையான போட்டிகளின்போது பயன்படும்.

தொடக்க ஜோடியின் ஆட்டம், கேட்சுகள் விடப்படும் அவலம், ஜடேஜாவின் ஆட்டத் திறன், புதிய திறமைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் வாய்ப்பைத் தவற விட்டது என இந்தியாவின் குறை களைப் பட்டியலிடலாம்.

சிறப்பான பந்து வீச்சு, பந்து வீச்சாளர்கள் எகிறு பந்துகளைப் பயன்படுத்தும் விதத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற் றம், ஒருவர் சறுக்கினாலும் இன்னொருவர் தவறாமல் கைகொடுக்கும் மட்டை வலு, மட்டையாளர்கள் எகிறு பந்துகளை ஆடும் விதத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் (பெர்த் நீங்கலாக), ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழல், தோனியின் அலட்டிக்கொள்ளாத அணுகுமுறை ஆகியவை இதுவரை இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்து பல்வேறு சாதனைகளும் புரியவைத்திருக்கின்றன. இன்னும் மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து வெல்ல இந்தத் திறமைகள் கை கொடுக்குமா? புதிய வல்லமைகள் கூடுமா?

கோப்பையை வெல்லக்கூடிய அணி என்னும் நம்பிக்கையை இந்த அணி ஏற்படுத்தியுள்ளது. குறைகள் திருத்திக்கொள்ளப்பட்டு, மேலும் சுதாரிப்புடன் ஆடினால் உலகை வெல்லலாம். நீண்ட நெடிய பயணத்தின் முடிவில் வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பலாம்.

கைக்குச் சிக்காத பந்து

இந்திய அணியின் முக்கியமான பிரச்சினை களத்தடுப்பு. குறிப்பாக, கேட்ச் பிடிக்கும் திறமை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு கேட்சுகள் விடப்பட்டிருக்காவிட்டால் அந்த அணியால் 183 ரன்களை தொட்டிருக்கவே முடியாது.

பெர்த் ஆடுகளத்தை அழகாகப் பயன்படுத்திக்கொண்ட இந்தியப் பந்து வீச்சாளர்கள் களத் தடுப்பாளர்கள் கைவிட்ட சோகம் அது. முன்னணி மட்டையாளர்களை அதற்கு முன்பே ஆட்டமிழந்துவிட்டதால் அதன் பாதிப்பு பெரிதாக இல்லை. முன்னணி மட்டையாளர் யாரேனும் ஒருவர் இருந்திருந்தால்கூட இந்தியாவின் நிலை சிக்கலாகியிருந்திருக்கும்.

இன்றைய அணியில் அனைவருமே நன்றாகக் களத் தடுப்பு செய்வதால் யாரை எங்கே நிறுத்துவது என்று மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தோனி இந்தத் தொடரின்போது ஒரு முறை கூறினார். கேட்சுகளைக் கோட்டைவிட்ட ஆட்டக்காரர்கள் இந்தக் கூற்றைக் கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்கள்.

Monday, March 16, 2015

உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் இன்றுடன் நிறைவடைந்தது.

உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் இன்றுடன் நிறைவடைந்தது. வரும் 18ம் தேதி முதல் காலிறுதி போட்டிகள் துவங்க உள்ளன. இதில் வரும் 18ம் தேதி இலங்கை அணி தென்னாப்பிரிக்க அணியுடன் மோதுகிறது. 19ம் தேதி இந்திய அணியுடன் வங்காளதேசமும், 20ம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணியும், 21ம் தேதி நியூசிலாந்து அணியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகிறது.

Tuesday, March 10, 2015

அப்துல் கலாமையும் அசத்திய இந்திய வெற்றி



உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய அணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவ்வளவாக விளையாட்டு பக்கம் திரும்பி பார்க்காதவர். குடியரசுத் தலைவராக இருந்த போது அவ்வப்போது விளையாட்டு வீரர்களை ஏதாவது விருது நிகழ்ச்சியில் சந்தித்து பேசுவதோடு சரி. விளையாட்டை விட்டு ஒதுங்கியிருக்கும் அவரையும் இந்த உலகக் கோப்பையில் தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணி அசைத்து பார்த்து விட்டது.

இந்திய அணி தொடர்ச்சியாக உலகக் கோப்பை போட்டியில் 5 வெற்றிகளை பெற்றதையடுத்து, அப்துல் கலாம் இந்திய அணி வீரர்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில், ''வெல்டன் இந்தியா.. இதுவரை நீங்கள் பெற்ற வெற்றிக்கு முழு மதிப்பெண் ''எனக் கூறியுள்ளார்.

இதேபோல் பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "உங்களின் அனைத்து செயல்திறனும் சூப்பர். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். உங்களுடையே உத்வேகம் தொடரட்டும்" என்று கூறியுள்ளார்.

உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக வெற்றி



உலகக் கோப்பை போட்டியில் தொடர்ந்து 5 அணிகளை ஆல்அவுட் ஆக்கி இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் ஹாமில்டன் நகரில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட் செய்தது. அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் போர்ட்ஃபீல்ட் 67 ரன்களும் ஸடிர்லிங் 47 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர்.

அடுத்து வந்த எட்ஜாய்ஸ் 2 ரன்களிலும் வெளியேறினாலும், ஓ பிரையன் அபாரமாக விளையாடி 75 ரன்களை எடுத்தார். மறுமுனையில் பல்பிரின் 24 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 49 ஓவர்களில் அயர்லாந்து அணி 259 ரன்களை எடுத்து ஆல்அவுட் ஆனது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக எதிர் அணியை ஆல்அவுட் ஆக்கி புதிய சாதனையை படைத்தது- இதற்கு முன் வேறு இதற்கு முன் எந்த அணியும் செய்திராத உலக சாதனை இது. முதலில் பாகிஸ்தான் அணியை 224 ரன்களில் இந்திய அணி முடித்தது.

அடுத்த ஆட்டததில் தென்ஆப்ரிக்க அணி 177 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் யு.ஏ.இ அணி 102 ரன்களில் வீழ்ந்தது. அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அந்த வகையில் இந்தியாவை எதிர்த்து 250 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியுள்ளது அயர்லாந்து அணி. உண்மையை சொல்லப்போனால் பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பலவீனம் என்றார்கள். இப்போது பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது.

Wednesday, February 25, 2015

கபில் முதல் கிறிஸ்கெயில் வரை...!

கிரிக்கெட் விநாயகர் கோவிலில் குவியும் கிரிக்கெட் ரசிகர்கள்...!




கிரிக்கெட் விநாயகர் அருளால்தான் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்ரிக்க அணியை அபாரமாக வீழ்த்தியதாம். இதுதான்... சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களின் இப்போதைய 'ஹாட் டாபிக்'.

அது என்ன கிரிக்கெட் விநாயகர்...? இந்து கடவுள்களிலேயே விநாயகரைதான் இஷ்டப்படி பெயர் வைத்து அழைக்க முடியும். சந்துக்கு சந்து இருக்கும் விநாயகர்களை அந்த அந்த பகுதி பெயருடன் கலந்த அடைமொழியுடன் அழைக்கப்படுவார்.

கடந்த 2001ம் ஆண்டு, அண்ணாநகர் பாளையத்தம்மன் கோவிலில் விநாயகர் சிலை ஒன்று பிரதிருஷ்டை செய்யப்பட இருந்த நிலையில், அன்றைய தினம் இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. விநாயக பக்தரான கே.ஆர். ராமகிருஷ்ணன் என்ற அந்த கிரிக்கெட் ரசிகர், இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விட்டால், 'கிரிக்கெட் விநாயகர்' என்றே பெயர் வைத்து விடுவதாக வேண்டியுள்ளார்.

அந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற, உருவானார் 'கிரிக்கெட் விநாயகர்'. கிரிக்கெட் விளையாடுவது போன்றே விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருப்பதுதான் இந்த விநாயகரின் ஸ்பெஷல். இங்குள்ள குட்டி குட்டி விநாயகர்கள் பந்து வீசுவது போன்றும் பேட் பிடிப்பது போலவும் பீல்டிங் செய்வது போலவும் உருவாக்கப்பட்டு பிரதிருஷ்டை செய்யப்பட்டுள்ளன.

தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிநடந்து வருவதால் கிரிக்கெட் விநாயகருக்கு மவுசு அதிகரித்துள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகளின் போது, இந்திய அணியின் வெற்றிக்காக சிறப்பு பூஜைகள் சிறப்பாகவே நடைபெற்று வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணி மோதிய ஆட்டத்தின் போது, ஏராளமான ரசிகர்கள் கிரிக்கெட் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனால்தான் இந்திய அணி பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது என்பது அண்ணாநகர் பகுதி கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை.

அதுபோல் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தின் போதும் ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதன் காரணமாகத்தான் உலகக் கோப்பையில் முதல் முறையாக தென்ஆப்ரிக்க அணியை, இந்திய அணி அதிரடியாக வீழ்த்தியதாக கிரிக்கெட் விநாயகரின் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரிக்கெட் விநாயகரின் புகழ் பரவ, பரவ சுற்று வட்டார கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது கிரிக்கெட் மேட்ச் இருந்தால் கிரிக்கெட் விநாயகரிடம் வந்து ஆஜராகி வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்துவிட்டுதான் போட்டிக்கே செல்கின்றனர்.

ஒரு வேளை, இந்தியா உலகக் கோப்பையை வென்று விட்டால் என்ன நடக்குமோ? தெரியவில்லை.



Friday, February 20, 2015

உலகக்கோப்பை: வில்லனை வீழ்த்தினால் இந்திய வெற்றி நிச்சயம்...!



இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுமே...உலகக் கோப்பைத் தொடரில் நமது அணி மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் வரும் 22ஆம் தேதி இந்தியா - தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள மோதலும் பலத்த எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

உலகக் கோப்பையை பொறுத்த வரை, தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வியைதான் சந்தித்துள்ளது. இதனால் இந்த போட்டியில் தென்ஆப்ரிக்க அணியை இந்திய அணி எப்படியாவது வீழ்த்த வேண்டுமென்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் இந்த போட்டியை பொறுத்த வரை இந்தியாவின் வெற்றிக்கு உலை வைப்பராக இருப்பவர் ஹாசீம் ஆம்லாதான் என்பது கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பு. அதற்கேற்றார் போல்தான் இந்திய அணிக்கு எதிராக அவரது பேட்டிங் ரிக்கார்டும் உள்ளது. இந்திய அணிக்கு எதிரான 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆம்லா, இரண்டு சதமும் 5 அரைசமும் அடித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான அவரது சராசரி ரன் விகிதம் 57.45 ஆகும். எனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆம்லாவின் விக்கெட்டை மிக விரைவில் வீழ்த்துவதில்தான் இந்திய அணியின் வெற்றி அடங்கியுள்ளது.

உலக பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ஆம்லா உள்ளிட்ட 10 வீரர்கள், நடப்பு ஐ.பி.எல். சீசனுக்கான ஏலத்தில் பங்கு பெற்றனர். மற்ற அனைவரும் ஏலம் எடுக்கப்பட இவர் ஒருவர்தான் இன்னும் ஏலம் எடுக்கப்படாமல் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெக்கல்லம் ருத்திரதாண்டவம்: 12 ஓவரில் நியூசிலாந்து வெற்றி!



வில்லிங்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை துரத்தியடித்த நியூசிலாந்து அணி, 12.2 ஓவர்களில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

வில்லிங்டனில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, என்னமோ இமாலய இலக்கை நிர்ணயிக்கிற மாதிரி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்கள் இயான் பெல் 20 ரன்களிலும், மொயின் அலி 8 ரன்களிலும் சவுத்தி பந்தில் போல்டானார்கள்.

கேப்டன் மோர்கன் 41 பந்துகளில் 17 ரன்களை எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களில் ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இறுதியில் 33 ஓவர்களில் சுருண்ட இங்கிலாந்து 123 ரன்களை மட்டுமே இலக்காக வைத்தது.

சவுத்தி 9 ஓவர்களில் 33 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது உலகக் கோப்பையில் மூன்றாவது சிறந்த பந்து வீச்சாகும். இதற்கு முன், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மெக்ராத் 15 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மற்றொரு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பிட்செல் 20 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மெக்கல்லமும், குப்திலும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடினர். அதிலும் மெக்கல்லமின் அதிரடியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கதி கலங்கிதான் போனார்கள். 18 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் மெக்கல்லம் 50 ரன்களை கடந்தார். இதற்கு முன் கனடா அணிக்கு எதிராக 20 பந்துகளில் இதே மெக்கலம்தான் அரை சதமடித்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை அவரே இன்று தகர்த்தார். தொடர்ந்து சரவெடி ஆட்டம் ஆடிய மெக்கல்லம் 25 பந்துகளில் 77 ரன்களை அடித்து வெளியேறினார்.

பின்னர் குப்திலும் 22 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, வில்லியம்சனும் ராஸ் டெய்லரும் வெற்றிக்கு தேவையான 124 ரன்களை 12.2 ஓவர்களிலேயே அடித்து முடித்தனர். இதற்கு முன் கடந்த 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென்ஆப்ரிக்க அணி வங்கதேச அணி எடுத்திருந்த 109 ரன்களை 12 ஒவர்களில் எட்டியதுதான் உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை நியூசிலாந்து முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து அணி 2 பந்துகள் அதிகமாக எடுத்துக் கொண்டதால் அந்த சாதனையை நியூசிலாந்து கோட்டை விட்டது.

இத்துடன் நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளை ஈட்டியுள்ளது. ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து முதல் அணியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

மூன்றே மூன்று சிங்கிள்ஸ்... மற்றதெல்லாம் சிக்சும் பவுண்டரியும்தான்!



உலகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில், இங்கிலாந்தை மண்டியிட வைத்த நியூசிலாந்து கேப்டன் பிரான்டன் மெக்கல்லம் அடித்த 77 ரன்களில் மூன்றே மூன்றுதான் சிங்கிள்ஸ். மற்றதெல்லாம் சிக்சும் பவுண்டரியுமாக வந்த ரன்களே.

நியூசிலாந்து அணிக்கு, இங்கிலாந்து அணி 123 ரன்களை வெற்றி இலக்காக வைத்தபோது அந்த அணி எளிதாக எட்டி விடும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் இந்த 123 ரன்களை, தனது சாதனையை தகர்க்க மெக்கல்லம் பயன்படுத்திக் கொள்வார் என்பதுதான் இங்கிலாந்து வீரர்கள் எதிர்பாராததது.

தொடக்க வீரராக களமிறங்கிய மெக்கல்லம் சந்தித்தது 25 பந்துகளைதான்.. அதில் 6 பந்துகளை அவர் அடிக்கவில்லை அல்லது ரன் எடுக்கவில்லை. 3 பந்துகளில் சிங்கிள்ஸ் ஓடியுள்ளார். மீதமிருந்த 17 பந்துகளில் 8 பவுண்டரிகளும் 7 சிக்சர்களையும் விளாசித் தள்ளினார். 18 பந்துகளில் அரை சதமடித்தது உலகக் கோப்பையில் சாதனை படைத்த அவர், 16 பந்துகளில் எட்டியிருந்தால் தென்ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்சின் ஒரு நாள் போட்டியில் மிக விரைவாக அடிக்கப்பட்ட அரை சத சாதனையையும் முறியடித்திருப்பார்.

இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் கனடா அணிக்கு எதிராக 20 பந்துகளில் மெக்கல்லம் அரை சதமடித்திருந்தார். தற்போது அந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஃபின்னின் ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் உள்பட 29 ரன்கள் அடித்தது ரசிகர்களுக்கு கடும் உற்சாகத்தை தந்தது. இத்துடன் 21 பந்துகளுக்குள் மெக்கல்லம் 5 முறை அரை சதத்தை கடந்துள்ளார். இந்த வரிசையில் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி 9 முறை 21 பந்துகளுக்குள் அரை சதம் அடித்துள்ளார்.

NEWS TODAY 22.04.2024