Friday, March 27, 2015

இந்தியா தோல்வி : உயிரை மாய்த்துக் கொண்ட அரசு ஊழியர்!

லகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தையடுத்து லக்னோவில் அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
உலகக் கேப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்பது கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவாக இருந்தது. ஆனால் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து போட்டியை விட்டு வெளியேறியது.
இதனால் ஏராளமான ரசிகர்கள் மனமுடைந்து போனார்கள். இந் நிலையில் உத்தரபிரேதேச மாநிலம் லக்னோவில் 50 வயது அரசு ஊழியர் ஒருவர் கிரிக்கெட் தோல்வி காரணமாக கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உமேஷ் என்ற அந்த 50 வயது அரசு ஊழியர் நேற்று தனது சக ஊழியர்களுடன் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்திய அணி தோல்வியை நோக்கி செல்லத் தொடங்கியதும் மிகுந்த ஆதங்கத்துடன் இருந்துள்ளார். அவருக்கு சக ஊழியர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.
ஆனால் அறையை விட்டு வெளியே சென்ற அவர் கட்டடத்தில் மீது இருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உமேஷ் உயிரிழந்தார். கிரிக்கெட் தோல்விக்காக உமேஷ் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று லக்னோ போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...