Wednesday, February 28, 2018

Medical education panel submits report on incentive marks in Tamil Nadu
By Express News Service | Published: 28th February 2018 03:39 AM |

CHENNAI: The medical education committee, headed by P Umanath, Managing Director, Tamil Nadu Medical Services Corporation, submitted its report to the government recently.
The committee was constituted by the government to redefine or identify Primary Health Centres, hospitals located in remote and difficult areas for rewarding incentive marks to the service candidates for the admission to post-graduate degree courses for the academic year 2018-2019.

The committee observed that 100 per cent maximum permissible incentive marks are eligible for posts in government health institutions located in hilly areas. The incentive marks are eligible for all posts in government institutions in backward districts with difficult areas.

The report also said posts in all government institutions except institutions mentioned above are permissible for 40 per cent of incentive marks.

Posts not eligible for any incentive marks are all medical college hospitals, government health institutions located within municipal and corporation limits, except the above mentioned areas. Posts in Ariyalur, Cuddalore, Dharmapuri, Dindigul, Nagapattinam, Nilgiris, Perambalur, Pudukottai, Ramanathapuram, Sivagangai, Theni, Thiruvannamalai, Thiruvarur, Vellore, Villupuram and Virudhunagar districts are defined as difficult areas which are eligible for 100 per cent incentive marks..

As per MCI regulations, weightage in the marks may be given at the rate of 10 to 30 per cent of the marks obtained each for year of service in remote and difficult areas of the marks obtained in NEET-PG.
The report was uploaded on website by the Tamil Nadu Health and Family Welfare Department on Monday.
 vikatan.com

`துபாய் அரசு கற்றுக்கொடுத்த பாடம் இது!' - ஸ்ரீதேவி மரணமும் ஜெயலலிதா எம்பாமிங்கும்

பிரதீப்.த.ரே

Chennai:

நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம், திரையுலகத்தினரை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய மறைவு திரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேசமயம், அவருடைய மரணத்தில் எழும் சர்ச்சைகள் விவாதப் பொருளாகியிருக்கின்றன.

துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த 25-ம் தேதி அதிகாலை மாரடைப்பில் இறந்ததாகத் தகவல் வெளியானது. நடிகை ஸ்ரீதேவியின் பிரேதப் பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை நேற்று வெளியானது. அதில், ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும் அவரது மரணத்தில் குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் இல்லை' எனவும் தகவல்கள் வெளியாகின. இன்று, அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு, மும்பைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தின் புகழேந்தி, " ஸ்ரீதேவியின் மரணத்துக்கும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கும் பிறகு எழுந்த மர்மங்களிலும் கேள்விகளிலும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால், இந்த இரு மரணங்களும் அரசு என்னும் அமைப்பால் எப்படிக் கையாளப்பட்டன என்பதில் பெரிய வேற்றுமைகள் இருக்கின்றன. ஸ்ரீதேவி இறந்தபின்னர் அந்த இறப்பை துபாய் அரசு எப்படிக் கையாண்டது?; விசாரணை நடைமுறைகள் எவ்வளவு கடுமையாக இருந்தன என்பதில் தமிழக ஆட்சியாளர்களுக்கான செய்தி ஒன்றும் இருக்கிறது. ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர் நன்றாக இருப்பதாகச் சொன்ன நேரம் திடீரென மாரடைப்பு வந்ததாகச் சொல்லப்பட்டது. அதன்பிறகு அவருடைய உடல் எம்பாமிங் செய்யப்பட்டது. அதற்கு முன்னரே ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வெளியே சந்தேகங்கள் நிலவி வந்தன. பொதுவாக, மற்ற நாடுகளில் மரணத்தில் சின்ன சந்தேகம் இருந்தால்கூட உடலை எம்பாமிங் செய்வதில்லை. ஏனென்றால், எம்பாமிங் மூலம் உடலில் செலுத்தப்படும் ரசாயன திரவம் இறப்புக்கான காரணம் குறித்து தெரியாமல் செய்துவிடும். ஸ்ரீதேவி விஷயத்தில் எம்பாமிங் நடவடிக்கைகள் தாமதமானதற்கும் இதுதான் காரணம்.



அடுத்ததாக, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் உள்பட அனைவரிடமும் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அறையிலிருந்த சி.சி.டி.வி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஜெயலலிதா விஷயத்தில் சி.சி.டி.வி காட்சிகள் மாயமாகி விட்டன. ஜெயலலிதாவுக்கு வீனஸ் ப்ளட் சாம்பிள் என்னும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. அப்போது அவருடைய ரத்தத்தில் 6.2 என்ற அளவுக்கு பொட்டாசியம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக ஒருவரின் ரத்தத்தில் 6 என்ற அளவில் பொட்டாசியம் கலந்திருந்தாலே ஆபத்துதான். ஜெயலலிதாவுக்கு இது முன்னரே இருந்ததா? அப்படியிருந்தது எனில், அதை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், ஜெயலலிதாவுக்கு எதற்கு எம்பாமிங் செய்தார்கள் என்றே தெரியவில்லை.

ஏனெனில், அவருடைய உடல் 19 மணிநேரம்தான் வெளியே இருந்தது. அதற்கு எம்பாமிங் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இறப்புக்குப்பின் அவருக்கு ரத்த மாதிரியும் எடுக்கப்படவில்லை. சில விஷயங்களை மூடி மறைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால்தான் மரணம் நிகழ்ந்து ஓராண்டு ஆகியும் மர்மங்கள் தொடர்கின்றன. ஒரு மாநில முதல்வரின் உண்மையான உடல்நிலை குறித்து அம்மாநில மக்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு ஆளும் அரசுக்கு உள்ளது. ஆனால், அது ஜெயலலிதா விஷயத்தில் பின்பற்றப்படவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஸ்ரீதேவி மரணத்தில் துபாய் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் நமக்கெல்லாம் பாடங்கள். எதிர்காலத்தில் இங்கும் இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்” என்கிறார் புகழேந்தி.
 vikatan.com

தன் முதல் அரசியல் மேடையில் எம்.ஜி.ஆர் சிலை திறக்கும் ரஜினி..! 

BALAKRISHNAN R



கடந்த 23 வருடங்களாக, தமிழக அரசியலுக்கு ரஜினி வர வேண்டும் என்று தூண்டில் போட்டுக்கொண்டிருப்பவர் ஏ.சி சண்முகம். எம்.ஜி.ஆரின் பக்தரான இவர், எம்.பி, எம்.எல்.ஏ - ஆக இருந்தவர். தற்போது, டாக்டர். எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கட்சியில் ஏற்பட்ட பிரச்னைகளின் போது, ஆர்.எம். வீரப்பன் அணியில் இருந்தவர் ஏ.சி.எஸ். தமிழக அரசியலில் ரஜினிக்குத் திருப்புமுனையாக அமைந்த பாட்ஷா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.ம்.வீ. அந்த வகையில், ஆர்.எம்.வீ. அணியில் இருந்த ஏ.சி சண்முகத்துடன் ரஜினி நெருக்கம் அதிகமானது. 1991-96 காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக டெல்லியில் பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். அதே காலகட்டத்தில், தமிழகத்தில் முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. ஆட்சி அலங்கோலங்களுக்கு எதிராகக் குரல்கொடுத்த ரஜினி டெல்லிக்குப்போய் பிரதமர் நரசிம்மராவை இரண்டு முறை சந்தித்தார். அப்போது அவருடன் இருந்தவர்களில் முக்கியமானவர் ஏ.சி.சண்முகம். கடவுள் வழி சொல்லட்டும் என்று சாக்குப்போக்கு சொல்லி வந்த ரஜினி, முழுமையாக அரசியலில் குதித்துவிட்டார். சந்தோஷமான ஏ.சி சண்முகம், உடனே போய் ரஜினியைச் சந்தித்து வாழ்த்து சொன்னார். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வளாகத்தில் மார்ச் 5-ம் தேதியன்று நூற்றாண்டு விழா மற்றும் எம்.ஜி.ஆர். வெங்கலச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அரசியல் ரீதியாக நீங்கள் காலடி எடுத்து வைக்கும் முதல் அரசியல் மேடை என்னுடைய விழாவாக இருக்க வேண்டும் என்று ஏ.சி.சண்முகம் வேண்டுகோள் வைக்க.. ஓ.கே. நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டார்.

இதுபற்றி ஏ.சி. சண்முகத்திடம் பேசியபோது, " சென்னை அடுத்த வேலப்பன் சாவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. விழாவில் மொரீஷியஸ் நாட்டு குடியரசு துணைத் தலைவர் பரமசிவம்பிள்ளை வையாபுரி கலந்துகொண்டு நூற்றாண்டு விழா கட்டடத்தை திறந்துவைக்கப்போகிறார். இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ். ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியைத் திறந்துவைக்கப்போகிறார். ரஜினி, எம்.ஜி.ஆரின் வெங்கலச் சிலையைத் திறந்துவைக்கப் போகிறார். அவரின் கையில், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள்...அப்போது பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எம்.ஜி.ஆருடன் நடத்த நடிகர், நடிகைகள், எம்.ஜி.ஆரின் உறவினர்கள்...என்று முக்கியமானவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருதுகளை வழங்கப்போகிறார். அரசியல் வானில் ஜொலிக்கப்போகும் ரஜினிக்கு இந்த விழா ஒரு மகுடமாக இருக்கப்போகிறது " என்றார்.




இதே நேரத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் வட மாவட்ட நிர்வாகிகளை ராகவேந்திரா மண்டபத்துக்கு வரச் சொல்லி, ஆலோசனை கூட்டம் நடந்தது. ரஜினிக்குச் சிறப்பான வரவேற்பு தருவது குறித்து அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

விழாவில், எம்.ஜி.ஆர். பற்றிய தனது பசுமையான நினைவுகளை மனம்திறந்து பேசவிருக்கிறார் ரஜினி. அதேநேரம், தற்போதைய அ.தி.மு.க ஆட்சியாளர்களுக்கு எதிராகக் குரல்கொடுக்கப்போகிறார் என்றும் மன்ற நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள். " தற்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க-வின் ஊழல்கள் பற்றியெல்லாம் எங்களிடம் நிறைய கேட்டு தெரிந்துகொண்டார். மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை நிறைவேற்றாமல், விளம்பரத்தை மையமாக வைத்து விழாக்களை நடத்தும் எடப்பாடி ஆட்சியை கொஞ்ச காலமாக எங்கள் தலைவர் கவனித்து வருகிறார். நடக்கிற ஊழல் கூத்துகளைக் கேட்டு, டென்ஷன் ஆகிவிட்டார். கடுங்கோபத்தில் இருக்கும் எங்கள் தலைவர், எடப்பாடி அரசை கடுமையாக விமர்சனம் செய்யப்போகும் மேடையாக எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா அமையப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள் " என்கிறார்கள்.

மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம் மின்னல்வேகத்தில் நடந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில், ரஜினி மேடை ஏறப்போகும் முதல் களம் என்பதால், தமிழகம் முழுவதுமிருந்து அவரது மன்ற நிர்வாகிகள் சென்னைக்குப் படையெடுக்கப்போகிறார்கள்.

ரஜினி என்ன பேசுவாரோ? என்கிற பீதியில் எடப்பாடி அரசு இருக்கிறது.
No separate pass criteria for Class X CBSE students

TIMES NEWS NETWORK


New Delhi: The Class X CBSE board exam candidates will be exempted from the mandatory separate pass criteria in the subjects having component of 20 marks internal assessment and board examination of 80 marks. The Central Board of Secondary Education on Tuesday notified this onetime measure for the present batch of Class X as they are coming from a different assessment background.

The present batch of Class X students will sit for the exam on March 5, which will be the first mandatory public exam after eight years. The CBSE introduced the Comprehensive and Continuous Evaluation (CCE) scheme and along with that introduced the optional board exam. Students who continued with CBSE at senior secondary level and in the same school were made to take the school-based exam instead of the boards. The CCE system was revoked in 2017 by the board and Class X board was mandatory.

According to the notification issued by Anita Karwal, chairperson, CBSE, the examination committee in its meeting recently decided to extend the one-time exemption to Class X students as they will be the first batch after the board exam made a comeback.

As per the “passing criteria” for the Class X students of the 2017-18 batch, “they need to secure overall 33% (both the internal assessment and that board exam marks taken together) in the subject to be able to pass the subject.”

The same passing criteria will also apply in the additional subjects, provided the additional subjects comprises of internal assessment of 20 marks and board examination of 80 marks.

Moreover, this rule about passing in the subjects will also apply for students with subjects under the National Skills Qualifications Framework scheme for the five major subjects (two languages, science, mathematics and social science. The provision of replacement of subjects extended to the NSQF students “for the failed subjects (out of the three subjects – science, mathematics and social science) by the vocational subject passed by the candidate under NSQF) would continue to apply.”
Ooty residents still gush over the thrilling climax scene in Sridevi’s ‘Moondram Pirai’

Shantha.Thiagarajan@timesgroup.com

Udhagamandalam: The Nilgiris, particularly Ooty, has been the locale for many of late star Sridevi’s films. Many scenes in Tamil films featuring the then ‘queen of southern movies’ along with Kamal Haasan and Rajnikanth such as ‘Vazhve Mayam’, ‘Moondram Pirai’, ‘Thanikattu Raja’ and ‘Naan Adimai Illai’ were shot in and around Ooty. However, one particular shot in the hills that deeply moved film buffs is from the critically acclaimed ‘Moondram Pirai’, written and directed by Balu Mahendra, who was also thecinematographer for the film.

The film featured Kamal Haasan and Sridevi in lead roles with Silk Smitha, Poornam Vishwanathan and Y G Mahendra playing supporting roles. Most of the scenes were shot near Ooty. The shooting of the intense climax of the film at the Ketti railway station is an unforgettable experience for the locals who watched it.

Kakkamallan, a gardener in the Ooty railway station and resident of Ullathi village near Ketti, recalled, “I was among the people who witnessed that poignant scene. The scene always remains in my heart. Sridevi, who had no dialogue in that particular scene, really proved her histrionic skills.”

It took nearly three days for Balu Mahendra to shoot that particular scene. “After the movie was released in 1982, for several years the Ketti station was known as ‘Moondram Pirai station’ among tourists. Even today, many tourists connect this station with the movie,” said Kakkamallan.

Mathan, a resident of Ketti village who also witnessed the shooting, said Indian cinema lost a wonderful actor with the death of Sridevi. “The railway station scene tells the whole story of the movie. I still remember how Sridevi carried herself so well during the shoot. Millions of her fans still gush about her role in Moondram Pirai.”

The lilting lullaby ‘Kanne Kalaimane’ in the romantic drama was the last song penned by Kannadasan. Composed by Ilaiyaraaja, the evergreen melody was recorded before the lyricist’s death in 1981.

Though Balu Mahendra shot many of his movies in Ooty and surrounding areas, this movie apparently was very close to his heart. In an interview, he had said it was based on his brief relationship with actress Shoba.

The movie fetched Kamal a National Film Award for best actor and Balu Mahendra the award for best cinematography. It bagged five state film awards, including one for Sridevi for best actress.

Silk Smitha, Poornam Viswanathan and Balu Mahendra are no more today. 



UNFORGETTABLE: This scene from the climax of ‘Moondram Pirai’ was shot at the Ketti railway station, which for several years was known as the ‘Moondram Pirai station’
Now, receive scan reports by email from 3 TN hosps
Project To Be Expanded To Other Dists Soon: Official

Pushpa.Narayan@timesgroup.com

Chennai: Patients visiting at least three government hospitals in the state, including the Institute of Child Health (ICH) in Egmore, will now receive an alert on their phones when scan reports are ready along with a copy of the report sent to their email accounts.

In an attempt to reduce waiting time for patients, referrals to bigger hospitals and fatalities, the state health department has rolled out teleradiology services on a pilot basis from the tertiary care hospital along with two district hospitals headquartered at Pollachi and Kallakuruchi. “The aim is to help doctors give reports as early as possible. We will soon be expanding the project to other districts,” said Tamil Nadu Medical Services Corporation managing director P Umanath.

Radiologists will be given laptops with an integrated SIM and 4G data. Duty doctors or technicians will flag emergencies and radiologists from across the state will be able to access the scans on the cloud for interpretation. If doctors attached to scan centres are not available, doctors from other centres interpreting reports will be paid a consultation fee either through the insurance or from the state’s kitty. Once all urgent scan reports are cleared, elective scans will be cleared by doctors within 24 hours.

An analysis by the health department showed the problem wasn’t a shortage of radiologists, but poor distribution. With more than 50 scan centres, the state on an average does more than 2,500 scans a day. However, the number of scans done post 3pm, when duty hours for government doctors end, falls between 0% and 30%. For instance, the performance in Pollachi district hospital had a large scope for improvement, the health department felt. “We are planning to add more machines and upgrade MRIs, CTs and other high-end scans this year but we won’t be employing more radiologists,” said Umanath.

Certain parts of the state, especially cities like Chennai and Coimbatore, have lots of doctors but many rural areas experience a shortage, particularly of specialists. Officials say that it may not be easy for them to alter this distribution due to various factors including the comforts of living in cities. The government also retains specialists in cities, where there are medical college hospitals, so they can get permission from the Medical Council of India for PG seats.

Currently, in many hospitals including ICH, doctors see images of urgent scans on their phones when duty doctors alert them. “But these lines are not secure and images aren’t always clear. On many occasions, we may want duty doctors to see some things and tell us,” said ICH chief radiologist Dr Natarajan. The hospital has five radiologists working from 8am to 1.30pm. The radiologists, on an average, see up to 40 CT scans and 15 MRIs.

The corporation, which is in charge of purchase and maintenance of medical equipment for state hospitals, has given the tender for setting up teleradiology services in all government hospitals to Bengaluru-based Mediff. The corporation is hoping that its low-cost diagnostic services will also benefit patients at private hospitals. The government charges ₹500 for an MRI and ₹3,000 for a CT scan.

AN END TO LONG QUEUES: Radiologists at three government hospitals, including the Institute of Child Health, will be given laptops with an integrated SIM and 4G data
High court adjourns BU VC’s bail plea

TIMES NEWS NETWORK

Chennai: The Madras high court has adjourned the hearing of a bail application moved by Bharathiyar University vice-chancellor A Ganapathy, who was recently arrested by the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) for accepting a bribe of Rs 30 lakh from an assistant professor for regularising his post.

According to the petitioner, he was appointed to the post due to his “spotless and meritorious” service record.

However, now at the behest of certain disgruntled elements, a false case had been foisted against him, he said.

Further, pointing out that the complainant was appointed as a probationer only during his tenure as vice-chancellor, the petitioner said that there was no allegation against him of having demanded any money for the appointment.

When such was the case, the alleged demand for regularisation in service was baseless, Ganapathy added.

Ganapathy’s previous two attempts to get a bail from the Coimbatore district court were turned down, prompting him to approach the Madras high court.

Trauma ward docs get bonus marks as those in hilly PHCs

TIMES NEWS NETWORK

Chennai: A duty doctor working in the accident or emergency ward of the Rajiv Gandhi Government General Hospital in Chennai will enjoy the same benefits as a doctor posted at the primary health centre in remote Javadhu Hills during postgraduate admission, as per the proposed recommendations of the six-member committee formed by the state government to classify difficult and rural areas of the state-run hospitals and clinic.

Breaking away from the convention, the committee has recommended names of some departments even in city-based medical college hospitals and urban district hospitals, but has pushed for removal of some primary health centres in backward and rural districts. “The division this time is not about urban or remote, it’s about areas that are difficult or remote,” said Tamil Nadu Medical Services Corporation chairman P Umanath, who chaired the committee.

The committee has submitted a 15-page report to refine or identify PHCs and hospitals located in remote and difficult areas for awarding incentive marks to service candidates for admission to postgraduate degree or diploma courses for medical counselling, scheduled to begin in May.

It has prescribed two groups that will receive benefits. The category A will receive 100% of the maximum permissible incentive marks – 10% of marks over and above their NEET score for every year, not exceeding 30%. The second group, category B, will receive 40% of the maximum permissible incentive marks – 4% of marks over and above their NEET score for every year, not exceeding 30%.

The committee members said they had held elaborate discussions on the issue for two months before drawing up the guidelines using “hybrid” methods.

For instance, institutions in all hilly areas but not all institutions in the 16 backward districts will get the benefit. “But not all institutions in this district list will get the benefit. These institutions should be in difficult areas, having low density of doctors, high vacancies and poor health indicators, but not in municipal or corporation limits,” said director of medical education Dr Edwin Joe.

However, high pressure work units like CEmONC centres, trauma or accident or emergency care, or neonatal units, irrespective will be offered maximum incentive.

The committee has also recommended that the government should fight to retain 50% in-service quota for its doctors. “Unless it is retained, a large number of government doctors’ benefits will be poor,” said Doctors for Social Equality general secretary Dr G R Ravindranath. Tamil Nadu Government Doctors’ Association has urged the government to add 20 more institutions into the “difficult” areas list. “We are drawing up lists of some remote PHCs and hospitals where doctor have to walk several kilometres, or vacancies are high,” said Tamil Nadu Government Doctors’ Association president Dr K Senthil.

This year, the state will add 101 postgraduate medical seats across 14 government medical colleges, taking the total PG seats to 1,585. It will give 50% of the seats to all India quota. In 2017, the postgraduate admission process was entangled in a legal battle at the Madras high court. Admissions had to be cancelled and the process was stalled twice. The state government had given 50% of the seats to the all-India quota and reserved half of the remaining seats to doctors working with the government.

The committee report should be notified by the government before it can be adopted as rule for the upcoming counselling.
KNOCKING AT THE DOOR

Old practice, new method is the mantra this exam season

TN Students To Appear For Three Consecutive Boards; ‘Full Syllabus’ For CBSE Kids 

THE TIMES OF INDIA

Vinayashree.J@timesgroup.com

Board exams are known to evoke a sense of fear among students. Hitherto evaluated by their teachers, students are for the first time being assessed by people they do not know. And while the red nib of the unknown evaluator may worry students as the day of results approaches, new changes in the examination pattern across different boards from this year have added to those worries.

With the exam season starting this week, counsellors said it was important for children to accept the changes and deal with them in a healthy manner.

After the Continuous and Comprehensive Evaluation (CCE) system was scrapped last year, CBSE students from Class VI to Class X will for the first time in eight years write annual exams covering lessons taught throughout the year. Earlier, students would prepare for frequent tests and two main exams split with 50% of the syllabi. The new system has done away with the option of school-based exams for Class X students who now will have to prepare for the compulsory board exam.

“We have a lot more to read than our seniors. Exam preparation now involves large portions that we were not used to earlier. We have been used to CCE all these years, but now it is a sudden change,” said a Class X student of Bala Vidya Mandir School in Adyar.

Uniformity in examination and assessment patterns from Class VI had triggered mixed reactions. “Following objections to CBSE applying the same rules from Class VI to VIII, the board had withdrawn the earlier circular issued in April and given the freedom to schools to follow the annual exam pattern or frame their own pattern. However, most schools in Tamil Nadu are following the annual exam routine,” said Ajeeth Prasath Jain, advisor to Chennai Sahodaya School Complex.

State board students too are not a relaxed lot as they prepare for three consecutive years of board exams at Classes X, XI and XII. The government introduced board exams for Class XI for the first time, it will start from March 7.

Dealing with such changes might not be easy, but it is essential that students learn to adapt, said counsellors.

“How we adapt is important because it shows our capability to graduate to the next level. Change is very important for transformation so learn to perceive it in the positive way,” said a counsellor from 104 health helpline.

The counsellor said children must remember that they were not alone in facing these changes. “But if the student is extremely stressed, teachers and parents must make the child feel comfortable,” the counsellor said. 


Nurse arrested for posing as doc in hospital

TIMES NEWS NETWORK

Chennai : Patients at Chengalpet Government Hospital caught a lucky break on Tuesday — the city police arresting a 40-year-old woman for posing as a doctor before her quackery resulted in any serious harm.

Shakila Bobby, an MSc in nursing from west Cheyyur in Kancheepuram, who police said dreamed of being a physician, ended up at Institute of Mental Health Hospital, Kilpauk instead, after psychiatrists confirmed that she was delusional.

“Shakila, who worked as a nurse in a private hospital in the city, recently purchased a doctor’s apron and a stethoscope,” a police officer said. “She arrived at the government hospital on Tuesday, walked through corridors and visited various wards like a doctor on her rounds.”

An office assistant stopped her when she tried to step into the dean’s office. “The assistant had not seen Shakila before,” the officer said. “When she contradicted herself, he knew something was amiss and contacted the police.”

During questioning, Shakila confessed to the police that she was not a doctor. Her uncle said she had been treated for mental health issues. As instructed by a magistrate, the police had experts test Shakila before admiting her to the Kilpauk hospital .
Dubai police close case, Sridevi’s body arrives in Mumbai

Sushil Rao & Bella Jaisinghani TNN

More than two and a half days after superstar Sridevi was found dead in a bathtub in her hotel room in Dubai, the UAE authorities closed the case and released her body to be taken to India. The body, which was then embalmed, took off in a private plane belonging to ADAG from Dubai airport at 7pm (IST) and landed in Mumbai at 9.30pm. A posse of policemen escorted the ambulance carrying Sridevi’s mortal remains to the Kapoors’ Lokhandwala residence. Police had to resort to a lathicharge to control the 2,000-odd-strong crowd gathered there.

The actor’s body will be kept at Celebration Club in Andheri from 9.30am to 12.30pm on Wednesday so that fans and celebrities can pay respects, said a statement issued by the Kapoor family. From Celebration Club, a funeral procession will leave for the Vile Parle Seva Samaj crematorium at 2pm and the last rites are expected to be performed around 3.30pm.

On Monday, after the postmortem revealed “accidental drowning” as the cause of death and the case was transferred to the Dubai public prosecution, there was speculation that authorities may not release the body on Tuesday either. However, ruling out any foul play and the need for re-investigation, authorities speeded up the process and closed the case by afternoon.


LAST JOURNEY: The embalmed body of the actor was flown in by a jet to Mumbai at 9.30pm| P18

Boney was questioned before case was closed

As part of their investigation, Dubai police questionedBoney again before closing the case. A team also visitedJumeirah EmiratesTowers, the hotel where Sridevi was found dead on Saturday. According to a source, theteam alsocollected CCTV footage from the hotel and scanned it to check how many times and when Sridevi went in and out. The hotel staff toowas questioned.

Consul general of India in Dubai, Navdeep Singh Suri, announced in the afternoon that Dubai policehad handedover to the consulate and Sridevi’s family members letters for the release of the mortal remains of “the Indian cinema icon Sridevi Boney Kapoor” so that they could proceed with the embalming.

The embalming certificate of Sridevi’s body given to the family also mentioned that the death was due to “accidental drowning”. It mentioned that there was “no infection disease”, a requirement for the body tobeshippedor sent by air. While the death certificate issuedby theforensicdepartment mentioned Sridevi’s age as 53 years, theembalming certificate mentionedit as 52. A sourcesaid that an ambulance had been kept ready at the mortuary even before the letters for repatriation of the body were received. The 13-seat Embraer chartered aircraft was kept ready in the cargo area of Dubai airport for thelasttwo days.
 தி இந்து
 
நலம் தரும் நான்கெழுத்து 23: பெருந்துயில் தரும் பேராபத்து!

Published : 24 Feb 2018 11:11 IST

டாக்டர் ஜி. ராமானுஜம் 

 

காலையிலேயே ஒரு மணி நேரத்தைத் தவறவிட்டால், நாள் முழுதும் அதைத் தேடிக்கொண்டே இருப்பீர்கள்.

– ரிச்சர்ட் வார்ட்லி

மனித உடலுக்குத் தூக்கம் மிக முக்கியம்தான். ஆனால், அதே அளவு முக்கியம் எழுந்துகொள்வதும். சென்ற வாரக் கட்டுரையில் பார்த்ததுபோல் சூரியன் மறைந்த பின்பு எவ்வளவு சீக்கிரம் தூங்கச் செல்வது நல்லதோ, அவ்வளவு நல்லது சூரியன் உதித்தவுடன் விழிப்பது.

வின்ஸ்டன் சர்ச்சில், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் தொடங்கி பராக் ஒபாமாவரை, வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள் பலரிடம் இருக்கும் குணங்களை ஆராய்ந்ததில் முக்கியமான ஒரு விஷயத்தைப் பல ஆய்வுகளும் வெளிப்படுத்தின. காலையிலேயே எழுந்துகொள்வதுதான் அது. தினமும் ஒரு மணிநேரம் முன்னதாகவே எழுந்தால், ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ஒரு முழுநாள் நமக்குக் கிடைக்கிறது.

உடற்பயிற்சி செய்வதற்கு, வாசிக்காமல் விட்டவற்றை வாசிப்பதற்கு, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு, பல நாட்களாகச் செய்யாமல் தள்ளிப் போட்ட செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு எனத் தினமும் காலைப் பொழுதைக் கையகப்படுத்தினால் நமக்கு நிச்சய வெற்றி கிடைக்கும். பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவைப் பற்றிப் பல விஷயங்கள் அறிந்த நம்மில் எத்தனை பேருக்குப் பல ஆண்டுகளாக அதிகாலை நான்கு மணிக்கு எழுபவர் அவர் என்ற தகவல் தெரியும்?

பெரும் பசி… பெருந்துயில்…

அளவுக்கு அதிகமாகத் தூங்குவது சில நேரம் நோய்களின் பாதிப்பால்கூட நிகழலாம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆங்கிலத்தில் ‘ஹைப்பர் சாம்னியா’ என்றழைக்கப்படுகிறது இப்பெருந்துயில். ‘சோம்னஸ்’ என்பது ரோமானியர்களின் தூக்கத்துக்கான கடவுள். ‘ஹிப்னோஸ்’ கிரேக்க தூக்கக் கடவுள்.

அதிகாலையிலேயே எழுந்திருப்பது நம் சமூகத்தில் தொன்றுதொட்டு மதிப்புக்குரிய பழக்கமாகக் கருதப்படுகிறது. பாவை நோன்பிருக்கும் பூவையரை எழுப்பும் ஆண்டாளும், அவர்களைக் கிண்டல் செய்ய ‘உனக்குக் கும்பகர்ணன் பெருந்துயில்தான் தந்தானோ?’ எனக் கேட்கிறாள்.

கும்பர்கணன்போல சிலருக்கு அதீதப் பசியும் பெருந்துயிலும் மூளையில் ஏற்படும் சில பாதிப்புகளால் வரக்கூடும். குறிப்பாக, மூளையிலே ஹைப்போதலாமஸ் என்னும் பகுதி பசி, தூக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இந்தப் பகுதி பாதிக்கப்பட்டால் அதீதத் தூக்கமும் அதிபயங்கரப் பசியும் ஏற்படும். ‘கிளைன் லெவின் சின்ட்ரோம்’ என அழைக்கப்படுகிறது, இந்த வகைப் பாதிப்பு.

‘அமுக்கும்’ தூக்கம்

பல அபூர்வமான நோய்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. அப்படித் தமிழ் கூறும் நல்லுலகம் தெரிந்துகொண்ட நோய்களில் ஒன்று ‘நார்கோலெப்ஸி’. இது விஷால் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படம் மூலம் பிரபலமானது. அதாவது அதீதத் தூக்கம். பேசிக்கொண்டே இருக்கும்போது, படித்துக்கொண்டிருக்கும்போது ஏன் சில நேரம் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போதுகூடத் தூங்கி விழுந்துவிடுவார்கள். இப்பெருந்தூக்கம் மட்டுமன்றி உணர்ச்சி வசப்படும்போது அப்படியே நெடுஞ்சாண்கிடையாக தொபுக்கடீர் எனக் கீழே விழுவதும் இந்த நோயில் அடங்கும்.

‘அமுக்குவான்’ என பாட்டிகள் சொல்வார்கள். அதாவது தூக்கத்தில் இருக்கும்போது நமக்கு விழிப்பு ஏற்படும். ஆனால், நமது கை கால்களை அசைக்க முடியாது. யாரோ அமுக்குவதுபோல் தோன்றும். மூளையில் விழிப்புணர்வுக்கு உரிய இடங்கள் செயல்படத் தொடங்கி, ஆனால் கை கால் அசைவுகளுக்குரிய இடங்கள் செயல்பட ஆரம்பிக்காமல் போன சில நொடித் தாமதமே இந்த அமுக்குவானுக்குக் காரணம்.

ஆனால், பல வருடங்களுக்கு முன்பு பாயசம் சாப்பிட முடியாமல் அற்ப ஆசையுடன் மடிந்த பாட்டியின் ஆவிதான் இதற்குக் காரணம் எனக் கூறிப் பரிகாரம் சொல்பவர்களும் உண்டு. எப்போதாவது இதுபோல் அமுக்குவான் ஏற்படுவது இயல்பானதே. ஆனால், மேற்படி நார்கோலெப்ஸி நோயில் அடிக்கடி இதுபோன்ற அமுக்குவான் தாக்குதல் ஏற்படும்.

விழிப்புக்கு அலாரம் வேண்டாம்

‘குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்’ என பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியதுபோல் அதீத உடல்பருமன், தொண்டை, மூச்சுக் குழாயில் ஏற்படும் பாதிப்புகளாலும் மூச்சுத்திணறலும் குறட்டையும் ஏற்பட்டு இரவில் தூங்க முடியாமல் பகலெல்லாம் தூக்கக் கலக்கத்தில் கழிக்கும் நோய்க்கு ‘ஸ்லீப் ஏப்னியா’ என்ற பெயருண்டு.

அதிகாலையில் விழிக்க வேண்டும் என்பதற்காக அலாரம் வைத்து எழுவதும் நல்ல பழக்கம் அன்று. நம் உடலின் தேவைக்கான தூக்கத்தைப் பெறாமல் இடையிலேயே அலாரம் வைத்துத் தொந்தரவுசெய்வது காலப் போக்கில் உடலுக்கு ஊறுவிளைவிக்கவே செய்யும். சீக்கிரம் எழுவதற்கான ஒரே ஆரோக்கியமான வழி சீக்கிரம் தூங்கச் செல்வதே. இந்தச் சமநிலையே நலம் தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
பதற்றம் களைந்து, தேர்வு ‘சுவை’பட...

Published : 24 Feb 2018 11:15 IST

டாக்டர் திவ்யா புருஷோத்தமன்




மார்ச் மாதம் வந்தாலே பள்ளி மாணவர்களுக்கு தேர்வை நினைத்து பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்வது அறிவிக்கப்படாத நோயாகி வருகிறது. தேர்வுக் காலத்தில் இரவு முழுவதும் கண் விழித்துப் படிக்க நேரிடும். உணவையும் சரிவர எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அல்லது தவறான உணவுப் பழக்கத்தால் பசியின்மையுடன் இருப்பார்கள். தேர்வுக் காலத்தில் குறிப்பிட்ட சில உணவு வகைகளை உட்கொண்டால், பதற்றமின்றி இருக்கலாம். ஞாபகச் சக்தியுடனும் திகழலாம். அதற்கு உதவும் முக்கிய உணவு வகைகள்:

ஆப்பிள்

தினமும் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. பதற்றத்தைக் குறைக்க ஆப்பிள் உதவும். இதில் மிகுதியாக உள்ள அசிடைல்கோலின் (acetylcholine), அறிவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது.
பருப்புகள்

வேர்க்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை உணவு வகைகளில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதை சீராகச் சாப்பிட்டால் அறிவாற்றல் செயல்பாடு மேம்படும். பதற்றத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக அக்ரூட் பருப்புகள் எனப்படும் வால்நட்டில் ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்புச் சத்து நிறைவாக உள்ளது. இதற்கு அழற்சியை எதிர்க்கும் தன்மை இருக்கிறது. பதற்றத்திலிருந்து விடுபடவும் இது உதவுகிறது.

தயிர்

தேர்வுக் காலத்தில் தயிர் சாப்பிடுவதை நிறுத்திவிடாதீர்கள். இதில் கால்சியம் சத்தும் நல்ல பாக்டீரியாவும் அதிகம் உண்டு. தேர்வு நேரத்தில் செரிமானப் பிரச்சினைகள் வராமலும் வாயுத் தொந்தரவு இல்லாமலும் இது தடுக்கும். தயிரில் லேக்டோபாசிலஸ் மிகுதியாக இருப்பதால், உடலை கட்டுக்கோப்போடு வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

முட்டை

தேர்வு நேரத்தில் தினமும் முட்டையை அவித்துச் சாப்பிடுங்கள். முட்டையில் வைட்டமின் - பி12 நிறைந்திருக்கிறது. இது உடனடி சக்தி கிடைக்க உதவுகிறது. அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. இதில் புரதச் சத்தும் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு ஆற்றலை சீராக வைக்க உதவுகிறது.

கீரை வகைகள்

கீரைகளில் வைட்டமின் கே, பி6, பி12 நிறைந்துள்ளன. உடலுக்கு உடனடி சக்தி தரும் தன்மை கீரைகளுக்கு உண்டு. கீரை சாப்பிட்டால் ஞாபகச் சக்தியும் அதிகரிக்கும். எனவே தேர்வு நேரத்தில் கீரை சாப்பிட வாய்ப்புக் கிடைத்தால் தவறவிடாதீர்கள்.

எலும்பு சூப்

என்னதான் தேர்வாக இருந்தாலும், சீரான தூக்கமும் அவசியம். தேர்வு நேரத்தில் எலும்பு சூப்பைக் குடித்தால், பதற்றத்தைத் தவிர்த்து சீரான தூக்கத்தைத் தரும். எனவே, எலும்பு சூப்பை மறந்துவிடாதீர்கள்.


பரங்கிக்காய் விதை

பரங்கி விதை ‘பேக்’ செய்யப்பட்டு கிடைக்கிறது. நல்லக் கொழுப்புச் சத்து அதிகம் நிறைந்துள்ள காய்கறி விதைகளில் பரங்கி விதையும் ஒன்று. இது மூளை நலனைப் பாதுகாக்க உதவுகிறது.

அடர் சாக்லெட்டுகள்

தேர்வு நேரத்தில் அடர் நிறங்களில் கிடைக்கும் சர்க்கரை குறைவான சாக்லெட்டுகளை சாப்பிடலாம். ஏனென்றால், இந்த சாக்லெட்டுகள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. ரத்த ஓட்டம் சீராக இருந்தால், இதயத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். மூளையின் செயல்பாடும் ஞாபகச் சக்தியும் மேம்படும். அடர் சாக்லெட்டுகளில் எண்டார்பின், டிரிப்டோபான் நிறைந்திருப்பதால் உடலை புத்துணர்ச்சியாக உணர வைத்து, எதிர்மறையான எண்ணங்களைக் குறைக்கும்.

பிரகோலி

இந்தக் காயை அதிகம் சாப்பிடலாம். நரம்பு செல்களைப் பாதுக்காக்கும் வல்லமை பிரகோலிக்கு உண்டு. மூளைக் காயங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபட இது உதவுகிறது. நரம்பு செல்களை மேம்படுத்தி, அவற்றை நரம்பு மண்டலத்தோடு இணைப்பதிலும் இதன் ஆற்றல் அபரிமிதமானது. மூளைத் திறனைச் சிறப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும்.

சால்மன் (Salmon-காலா) மீன்

இந்த மீனில் ஒமேகா 3 சத்து நிறைந்திருக்கிறது. இது ஞாபகச் சக்தியை மேம்படுத்த உதவுவதோடு பதற்றத்தையும் தணிக்க உதவுகிறது. வாரம் 2 முறை இந்த மீனை உட்கொண்டால், இயற்கையாகவே ஒமேகா 3 சக்தி
 நமக்குக் கிடைத்துவிடும். கட்டுரையாளர், ஊட்டச்சத்து நிபுணர் தொகுப்பு: மிது கார்த்தி

ஐ.ஏ.எஸ். என்பது பட்டமல்ல!

Published : 21 Apr 2014 09:14 IST

தி இந்து


வெ. இறையன்பு





ஐ.ஏ.எஸ். என்பது பட்டமும் அல்ல; படிப்பும் அல்ல, அது பணி. பணிபுரியும் போது மட்டுமே அது பொருந்தும். சில மாநிலங்களில் ஐ.ஏ.எஸ். என்பதைப் பெயருக்குப் பின்னால் அறவே போடுவது கிடையாது. சிலரோ அது அலங்காரமல்ல என்றே கருதுகிறார்கள்.

பணிபுரிவது என்றால் யோக்யதை யுடனும், தன்முனைப் பற்றும், நேர்மை யுடனும், வாய்மையுடனும் தன்னலங் கருதாமல் செயலாற்றுவது மட்டுமே. சுபாஷ் சந்திர போஸ் சிவில் சர்வீஸ் தேர்வில் தேறியபோது, 'அந்தப் பணி வேண்டாம்' என மறுத்தவர். அன்று வெள்ளையர்களின் கைக்கூலிகளாக மட்டுமே குடிமைப் பணிபுரிபவர்கள் இருந்ததால், அப்படிப்பட்ட முடிவை அவர் எடுக்க வேண்டியிருந்தது.

என்னுடைய குடிமைப் பணி முடிவுகள் வந்தபோது, நான் ஐ.ஏ.எஸ். என்பது தேர்வில் வெற்றி பெறுவது அல்ல என்பதை முழுமையாக உணர முடிந்தது. அப்பணிக்கு சிறிதும் தகுதியற் றவன் என்று என்னை யாரும் கருதி, அதனால் என்னால் அப்பணிக்கான மதிப்பு நீர்த்துப் போகக்கூடாது என்பதே எனக்கு மிகப் பெரிய அச்சமாக இருந்தது.

இன்றும் என்றும் இரண்டுவிதமான மதிப்பீடுகள் இருக்கின்றன. துறையில் இருப்பவர்களும் தொடர்புடையவர் களும் வைத்திருக்கும் மதிப்பீடு. அது வெளியே இருப்பவர்களுக் குப் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அழுத்தமான ஆழமான பங்களிப்புகளை அவற்றின் வீரியத்தையும் விளைவையும் அறிந்தவர்கள் மட்டுமே எடைபோட முடியும்.

இன்றும் குடிமைப் பணிகள் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். மேலோட்டமாக அரசளவில் சில அறிவிப்புகள் எல்லாக் காலகட்டங் களிலும் வெளியானாலும் அவற்றை கொள்கைகளாக அறிவிப்பதற்கும் அறிவிக்கப்பட்டவற்றை நடைமுறை யாக்கிக் காட்டு வதற்கும் பல கூர்மை யான அரசு அதிகாரிகள் பின்னணியில் தீவிரமாகச் செயல்படுவதைப் பார்க்க லாம். நல்ல குடிமை அதிகாரி அரசின் சார்பாகவே இயங்கி பகிரங்கப்படுத்திக் கொள்ளாமல் ஊக்கியைப் போல் இருக்கிறார். அது ஒருவிதமான அடிப் படைக் கோட்பாடும் கூட. அவர் திட்டங் களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் போது அவர் மீது விழும் வெளிச்சத்தை மட்டுமே அனுமதிக்கிறார். நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்துவது மேலோட்ட அதிர்வுகளைவிடக் கடினமானது. கலைப்படம் எடுப்பது சண்டைப் படத்தை விட நுட்பமாக இருப்பதைப் போல.

நேர்மை என்பது அடிப்படையான கட்டுமானம். ஆனால் அது ஒன்று மட்டுமே முக்கியத் தகுதியாகாது. ஆனால் மற்ற எல்லா திறமைகள் இருந் தாலும் நேர்மையில்லாவிட்டால் அவற் றின் ஆற்றல் பயனற்றுப் போய் விடும்.

எனக்குத் தெரிந்து `கோப்புகள் என் மேசைக்கு வரட்டும்' என காத்திருப் பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். கோப்புகளைத் துரத்திப் பிடித்து மக்களுக்கு நல்லது பயக்கும் பணிகளில் விரை வாக ஆணை பிறப்பிக்கின்ற ஆற்றல் மிகுந்தவர்களையும் சந்தித்திருக் கிறேன். துறைத் தலைவருக்குப் பதிலாக முன்மொழிவுகளைத் தாங்களே தயாரித்து அவர்களிடம் கையொப்பம் வாங்கி கோப்பு களைத் துரித மாக ஓடவிடுபவர்களையும் பார்த்து வியந்திருக்கிறேன். எந்த முடிவையும் எடுத்து விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஏதேனும் ஒரு கொக்கி போடுபவர் களையும் கண்டிருக்கிறேன் எல்லா சந்தேகங்களையும் ஒரேமுறை எழுப்பாமல், ஒவ்வொருமுறை ஒவ்வொன்றை எழுப்புபவர்களையும், கோப்பில் முதல் பக்கம் முதல் இறுதிப் பக்கம் வரை ஒரு வரி விடாமல் படித்து முடித்தபின்பு அப்படியே கட்டி வைத்திருப்பவர் களையும் அறிவேன். அறை முழுவதும் கோப்புகளாகப் பரப்பிவைத்து அதிகப் பணி இருப்பதுபோல காட்டிக் கொள் பவர்களையும் சந்தித்துள்ளேன்.

நாம் ஒவ்வொரு நொடியும் ஊதியம் பெறுகிறோம். மாதச் சம்பளம் பெற வில்லை. நாம் தூங்குகிற நேரத்துக்கும் அரசு நமக்கு ஊதியமளிப்பது, விழித் திருக்கும்போது தூங்கக் கூடாது என்பதற் காகவே. பொதுப்பணத்தின் ஒவ்வொரு காசுக்கும் கணக்கு சொல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்த நொடியை மக்களுக்காக எவ்வளவு பயனுள்ள வகையில் நாம் செல வழிக்கிறோம் என்பதே நம் ஊதியத்தை நியாயப்படுத்தவல்லது.

அரசு இன்று கை நிறைய சம் பளம் அளிக்கிறது. குடிமைப் பணி அலுவலர்கள் அதிக அளவில் திறமை யுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதன் பொருட்டு தனியாருக்கு இணை யான சில வசதிகளும் தரப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்த ஒரு கட்டத் தில், ஊதியத்தை உயர்த்திக் கொடுத் தது அரசு மட்டுமே. எனவே அரசு அலுவலர்களின் பொறுப்பு ணர்வு கூடிக்கொண்டே போக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

முக்கோணத்தின் கூம்புப் பகுதியை நெருங்கும்போது, முக்கியத்துவம் மட்டுமல்ல; நேரமும் முக்கியம். குடிமைப் பணி அலுவலர் 10 நிமிடம் தாமதமாகச் செல்லும்போதோ, செயல்படும்போதோ அது கீழே உள்ளவர்களின் ஒட்டுமொத்த நேரமாக பத்தாயிரம் மணி நேரத் தாமதத்தை ஏற்படுத்திவிடலாம்.

இந்தியக் குடிமைப் பணி அலுவலர்கள் வெறும் ஊதியத்துக்காக மட்டும் இப்பணியில் சேருவதில்லை. அவற்றின் மூலம் மிகப் பெரிய மறுமலர்ச்சியை அவர்களுக்கான எல்லையில் செம்மையாகச் செய்யமுடியும் என்கிற நம்பிக்கையில் அவர்கள் மிகக் கடினமான தேர்வை எதிர்கொள்ள உந்துசக்தியாக இருக்கிறது. இப்போது இத்தேர்வில் நீதிநெறி, நேர்மை போன்றவற்றில் ஒரு தாள் பொது அறிவுப் பகுதியில் 250 மதிப்பெண்களுக்குச் சேர்க்கப் பட்டிருக்கிறது. தேர்வில் வெற்றி பெறு பவர்களுடைய மனநிலை களத்திலும் கட்டாயம் இருக்கும் என்பதற்கு எந்த எழுதப் படாத விதியும் இல்லை என்றாலும் இது வரவேற்கத்தக்க நிகழ்வு என்பதில் ஐயமில்லை.

சவால்களை சந்திக்கும் மனப்பான் மையும் மக்களுடன் மக்களாக இணைந்து பணியாற்றும் ஆர்வமும் உள்ளவர் கள் இப்பணிகளில் அமைதி யாக அவர்களுடைய பணிகளைச் செய்து வருகிறார்கள்.

`மக்களிடம் செல்
அவர்களைச் சந்தி
அவர்களோடு வாழ்
அவர்களை நேசி
அவர்களிடமிருந்து கற்றுக்கொள்
அவர்களுக்குத் தெரிந்ததில் இருந்து தொடங்கு
அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டுமானம் செய்
இறுதியில் அவர்களே அப்பணியைச் செய்த திருப்தியை அளித்துவிட்டுத் திரும்பிவா'

- என லாவோட்ஸு சொன்னது இன்றும் குடிமைப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.

ஏனென்றால் ஐ.ஏ.எஸ். என்பது படிப்பல்ல; பதவியுமல்ல; அது ஒரு சேவை மட்டுமே!
காற்றில் கரையாத நினைவுகள்: பண்பாட்டின் கடைசிக் காட்சிகள்!

Published : 27 Feb 2018 07:50 IST

வெ.இறையன்பு



 

நாம் வசிக்கும் உலகம் விடிந்துவிட்டதை என் அறையின் சாளரம் வழியே விரல்களை நீட்டிக்கொண்டு வந்த வெளிச்சக் கதிர்கள் உணர்த்தின. வெளியே எட்டிப் பார்த்தபோது எப்போதும் கேட் கும் பறவைகளின் இசை காணாமல் போயிருந்தது. அவற்றைத் தாங்கி நிற்கும் மழைமரம் வீழ்த்தப்பட்டிருந்தது. வாழ்விடம் பறிக்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவை காலி செய்திருந்தன.

வெற்றிடங்கள் எல்லாம் கட்டிடங்களாக உருவாகிக் கொண்டிருக்கும் மூச்சுத் திணறும் சூழலில், எனக்குள் அதிகரித்துக்கொண்டிருக்கும் வெறுமை உறுத்திக் கொண்டே இருக்கிறது.

நினைவு தெரிந்த நாளில் இருந்து அரை நூற்றாண்டு கால இடைவெளி யில் பார்க்கும் திசையெங்கும் நிகழ்ந்து இருக்கும் மாற்றங்கள் இந்த பூமியை அந்நியக் கிரகமாக ஆக்கியிருக்கின்றன.

மாணவர்கள் புன்னகையுடன் புத்தக மூட்டையைத் தூக்கிக்கொண்டு நாம் சென்ற புகழ்பெற்ற பள்ளிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சீண்டுவார் இல்லாமல் நோஞ்சானாக மாற, புஷ்டியு டன் புதிய பள்ளிகள் ஊரெங்கும். விளையாடுவதும், படிப்பதும் செயல்பாடாக ஆகிவிட்ட செயற்கைச் சூழ லில் கல்வி. பாரம்பரியப் பள்ளிகள் களையிழந்து எந்த நொடியிலும் அணைந்துவிடும் விளக்காக நீடிக்கும் நிலை.

ஒரு மணி நேரம் முன்பே சென்று ‘நல்வரவு’ என்று போடுவதில் தொடங்கி ‘வணக்கம்’ போடும் வரை ஆர்வத் தோடு தவமிருந்த திரையரங்குகள் பல்லடுக்கு அங்காடிகளாக மாறிப்போய்விட்டன.

அந்தத் திரைகளில் தெரிந்த அவதா ரப் புருஷர்களும், சரித்திர நாயகர் களும், அங்கே காற்று மண்டலத்தை இனிய இசையால் நிரப்பிய பாடல்களும் நமக்கு மட்டுமே தெரியும் மாயச்சூழல். அவற்றின் மறைவோடு நமக்குள்ளும் ஒரு பகுதி மரித்துப்போன வருத்தம்.

கரைந்துபோகும் சாம்பிராணிப் புகை

சின்ன வயதில் நீள, அகலங்களை அளந்து பருவத்துக்கு ஏற்ற விளையாட்டை விளையாடிய மைதானங்கள் வீடுகளாக எழும்பிவிட்டன. அங்கே பந்தோடும், பம்பரத்தோடும், கில்லி தாண்டலோடும், நுங்கு வண்டியோடும், எதுவும் இல்லாதபோது ஓடிப் பிடித்தும் விளையாடி மகிழ்ந்த நினைவுகள் சாம்பிராணிப் புகையாகக் கரைந்து போகின்றன. கைகளைக் கொண்டு வாசனையைப் பிடிக்க முயல்வதைப் போல வீண் பிரயத்தனங்களுடன் பழமையில் நீந்த நினைக்கும் முயற்சிகள்.

மழை என்றால் நனைவதில் மகிழ்ந்து, உடையை ஈரமாக்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி யும் எந்த நோயும் அப்போது தாக்கவில்லை. தேங்கிய தண்ணீரிலெல்லாம் காகித ஓடங்கள் விட்டு மழையை வரவேற்ற அந்த நாளையும், மழை அறிவிப்பு வந்தால் இலவச இணைப்பாக வரும் விடுமுறை அறிவிப் பையும் எதிர்பார்த்து பிள்ளைகள் தொலைக்காட்சி முன் தவமிருக்கும் இந்த நாளையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. அன்று சன்ன மழைக்கே கிணற்றில் நீர் சல சலக்க ஆரம்பித்துவிடும். சின்ன மழை பெய் தால் நிரம்பிவிடும் ஏரிகள் இப்போது ஆக்கிரமிப்புகளால் எந்த மழைக்கும் நிரம்பாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

எந்த நீச்சல்குளத்துக்கும் சென்று நீந்தப் பழகவில்லை. நீந்தக் கற்றுக்கொடுக்கும் ஆசானாக சுரைக் குடுக்கை முதுகில் ஏறியது. அதற்காகவே தோண்டப்பட்டதுபோல் அகல மாக வாய் விரித்து குளமாகக் காட்சியளிக்கும் வேளாண் கிணறுகள். யார் அதிக உயரத்தில் இருந்து குதிப் பது என்று போட்டிகள். மிதிவண்டிப் பழக்கமும் அவ்வாறே நண்பர்கள் விரல்பிடித்து கற்றுத் தர பாடமானது. பள்ளிப் பருவத்தில் நீச்சல் பழகிய பெரிய கிணறுகள் தூர்ந்து போய் கட்டிடங்களாகிவிட்டன. அங்கே நீர்ப் பாய்ச்ச நிலமும் இல்லை, ஏர் உழுவதற்கு ஆளும் இல்லை. நகரத்தின் பேராசைக் கரங்கள் அருகில் இருக்கும் கிராமங்களின் குரல்வளையையும் நெரிக்கத் தவறவில்லை.

கதவு தட்டாமல் வரலாம்

தூரத்துச் சொந்தமோ, சொந்தத்தின் சொந்தமோ, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பின்றி வீட்டுக்கு வரலாம். இருப்பதை அவர்களுக்குப் பரிமாற, குறை சொல்லாமல் சாப்பிடும் பண்பு இருந்தது. எப்போது வேண்டுமானாலும் வருகிற உறவினர் இரவில் படுப்பதற்காக ஒதுக் கிய கயிற்றுக் கட்டில் இப்போது தொய்ந்துபோய் தொல்பொருளாய் இருக்கிறது.

எப்படியெல்லாம் நம் உலகம் மாறிப்போய்விட்டது!

கற்பனைக்கும் எட்டாத இம்மாற்றங்களில் கரைசேர முடியாமல் தரைதட்டி நிற்கும் நினைவுகள் மனமெங்கும்.

நாகரிக வளர்ச்சியின் இடுக்குகள் வழியாக நழுவும் பண்பாட்டின் கடை சிக் காட்சிகள் புகையும் ஊதுவத்தியின் இறுதித் துண்டாய் ஞாபகங்களைக் கிளறிவிடுகின்றன. கனவாக இருந்த அனைத்தும் இன்று ஏன் நிறைவேறின என்கிற சலிப்புடன் வாழ்க்கையைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கி றோம்.

வாடகை வீட்டில் குடியிருந்தவர்களுடைய ஒரே கனவாக இருந்து, உண்பதிலும் உடுப்பதிலும் மிச்சம் பிடித்துக் கட்டிய பெரிய வீடு, வெளிநாட்டில் பிள்ளைகள் வாழ முதியோர் இல்லமாய் பயமுறுத்துகிறது.

இரவு நேரங்களில் ஒரே பேச்சுத் துணையாய் சத்தமாக ஒலிக்கும் தொலைக்காட்சித் தொடர்கள். நெருக் கிப் படுத்துக்கொண்டபோது வந்த ஆழ்ந்த தூக்கம் புரள வசதி வந்த பிறகு வாய்க்காமல் போனது. ஒரே ஒரு கடிகாரம் இருந்தபோது எல்லாம் குறித்த நேரத்தில் நடந்தன. அறைக்கொரு கடிகாரமும், ஆளுக்கொரு அலாரமும் இருக்கும்போதுதான் எல்லாம் தாமதமாகிறது.

பழமையை நோக்கிய பயணம்

வீட்டில் சாப்பிடும்போது அம்மாவிடம் அதிக எண்ணெய் ஊற்றி ஓட்டல் தோசைபோல வேண்டும் என்று அடம்பிடித்த நாம், இன்று உணவகங்களில் வீட்டுத் தோசையைப் போல வேண்டுமெனச் சொல்லி காத்திருக்கிறோம். கருப்பட்டிக் காப்பியை சல்லிசாக நினைத்த நாம், இப்போது அதிக விலை கொடுத்து கலப்படக் கருப்பட்டி யை வாங்கி வருகிறோம்.

சன்ன அரிசிக்காக நெல்லை மெருகேற்றியவர்கள் இன்று கொட்டை அரிசியே உடலுக்கு நல்லது என்று அதைத் தேடி அலைகிறோம். போந்தாக் கோழி முட்டை சுவையாக இருக்கும் என்று சொன்னவர்கள் நாட்டுக் கோழி முட்டைக்காக இரண்டு மடங்கு விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். வெகுதூரம் வந்துவிட்ட பிறகு, மீண் டும் கரிம விவசாயம், இயற்கை எரு, நாட்டுப் பசு, செக்கில் ஆட்டிய எண்ணெய், பாரம்பரிய உணவு வகைகள், மண்பாண்ட சமையல், வெல்லப் பலகாரம், சிறுதானியம், பருத்தி உடை என்று பழமையை நோக்கி நொண்டியடிக்கும் முயற்சிகளால் நம்பிக்கைத் துளிர்கள்.

ஒரு காலத்தில் மார்கழி மாதக் கோலங்களால் நிறைந்திருந்த தெருக் கள் வீடுகளின் பெருக்கத்தால் மூச்சுத் திணறி வாகனங்களை வழியெங்கும் பிதுக்கிக்கொண்டு நிற்கின்றன. நேரத் தைத் துரத்தும் நெருக்கடியில் மாதங்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமே அறிவிக்கின்றன. மாலைவேளைகளில் வீட்டுக்கு வெளியே நின்று அனைத்தையும் அலசும் பெண்களின் கூட்டம் முகநூலிலும், அலைபேசி குறுஞ் செய்திகளிலும் காணா மல் போய்விட்டது.

தீவுகளான மனிதர்கள்

அன்று அடுத்த வீடு காலி யாக இருந்தால் யார் புதிதாகக் குடிவரப் போகிறார்கள் என்று காட்டிய அக்கறை இன்று அறவே இல்லை. யார் வந்தாலும் அவர்களோடு எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்பதால் அண்டை வீடு அந்நியமானது.

உலகம் மட்டுமா மாறிப் போயிருக்கிறது? நாம் ஒவ்வொருவருமே மாறிப்போய்விட்டோம். நம் புன்னகையில் சிநேகம் இருப்பதைவிட பதற்றம் அதி கம் இருக்கிறது. வசதிகளின் நடுவே மகிழ்ச்சியைத் தொலைத்த வருத்தம்... 50 ஆண்டுகளாக நம்மைச் சுற்றி நிக ழும் மாற்றங்களைக் கவனித்த தலைமுறைக்கு அவசியம் இருக்கும். பெற்றவற்றைவிட இழந்தவை அதிகம் என்றும், முளைத்தவற்றைவிட தொலைத்தவை நிறைய என்றும் எண்ணும் இடைப்பட்ட தலைமுறை இது. திரும்பிப்போக முடியாத பாதிக் கிணற்றுப் பயணம்.

சொந்த ஊரில் அந்நியராக, பிழைக் கும் ஊரில் அகதியாகத் தொடரும் வாழ்வில் பழைய மகரந்த நொடிகளில் சற்று மனம் லயிப்பதற்கே இந்த ’காற்றில் கரையாத நினைவுகள்’.

- நினைவுகள் பரவும்...
இதை எல்லாம் சாப்பிட்டுவிட்டு ஃப்ளைட்டில் ஏறாதீர்கள்!

By சினேகா | Published on : 26th January 2018 01:11 PM |

பயணம் என்றாலே நம்மில் பலர் குஷியாகிவிடுவோம். பேக்கிங் முதற்கொண்டு ஒவ்வொரு விஷயமாக பார்த்து பார்த்து தயார் செய்வோம். பஸ், ரயில் பயணங்களை விட விமானப் பயணம் நம்முடைய மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.



ஒவ்வொரு பயணத்துக்கு முன்பும் என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும், எதையெல்லாம் சாப்பிட கொண்டு போகலாம் என்பதையெல்லாம் சரியாக திட்டமிடுவோம்.



ஆனால் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி சுத்தமாக நினைக்க மாட்டோம். ஆம். விமானப் பயணத்துக்கு முன்னால் எந்தெந்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்பதை நம்மில் பலர் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. ஃப்ளைட்டில் பறக்கும் போது, உங்கள் வயிற்றில் இருக்கக் கூடாத உணவுகள் சிலவற்றைப் பார்க்கலாம்.



1. பொறிக்கப்பட்ட / வறுக்கப்பட்ட உணவு வகைகள்

வீட்டிலிருந்து கிளம்பும் அவசரத்தில் எதுவும் சாப்பிடாமல் ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளும். அப்போதைய அவசரப் பசிக்கு சாப்பிடக் கிடைக்கும் உடனடி உணவான பர்கர் அல்லது ஃபிங்கர் சிப்ஸை வாங்கி சாப்பிடாதீர்கள்.



வறுக்கப்பட்ட உணவுகளில் சோடியம் உள்ளது. மேலும் அதிலுள்ள எண்ணெய் மற்றும் கொழுப்புச் சத்து உங்களுக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடலாம். எனவே ஃப்ளைட் ஏறுவதற்கு முன் எண்ணெயில் வறுக்கப்பட்ட அல்லது பொறிக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்த்துவிடுங்கள்.

2. ப்ரொகோலி

முட்டை கோஸ், ப்ரொகோலி போன்ற பச்சைக் காய்கறிகளை விமானப் பயணத்தில் தவிர்த்துவிடுங்கள்.



காரணம் இவை வாயு பிரச்னையை விளைவித்து விடலாம். வேர்க்கடலை சாப்பிடுவதையும் தவிர்த்துவிடுங்கள்.



3. செயற்கை குளிர்பானம்

பயணம் செய்யும் போது பலருக்கு செயற்கை குளிர்பானம் குடிக்கும் பழக்கம் உள்ளது.



அது விமானப் பயணத்துக்கு முன் தவிர்ப்பது நலம். காரணம் அது ஏப்பத்தை ஏற்படுத்தி வாயுத் தொல்லைக்கும் வழி வகுக்கும்.



4. ஆப்பிள்
ஆப்பிள் உடல் நலத்துக்கு நல்லதுதான். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளது என்பதும் உண்மைதான்.
ஆனால் அது ஜீரணமாக நேரமாகும் ஆதலால் விமானம் ஏறும் முன் ஆப்பிளை சாப்பிட வேண்டாம்.
5. மது
விமானப் பயணத்துக்கு முன் ஒருபோதும் மது அருந்துவது கூடாது. ஏற்கனவே உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது மது அருந்துவதால் வேறு லெவலுக்கு உங்கள் தலை சுழலத் தொடங்கிவிடலாம்.
சிலருக்கு கடுமையான தலைசுற்றல் ஏற்படும். விமானத்திலிருந்து தரை இறங்கினாலும் மது அருந்தியிருந்தால் நீங்கள் தரை இறங்கியிருக்கமாட்டீர்கள். காரணம் ஹாங் ஓவர் பிரச்னை.  

6. பீன்ஸ்
பீன்ஸில் புரதச் சத்து அதிகமுள்ளது. இது வாயுத் தொல்லையை ஏற்படுத்தலாம்.

வாயு வெளியான வானிலுள்ள விமானத்தினுள் நீங்கள் வேறு வாயுவை வெளியேற்றினால் மற்ற பயணிகளுக்கு அது அசெளகரியம் ஏற்படலாம் அல்லவா?

7. இறைச்சி
பொதுவாக அசைவ உணவுகளை விமானப் பயணத்துக்கு முன்னால் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இறைச்சி.





அது ஜீரணமாவது கடினம் என்பதால் உங்களுக்கு அசெளகரியமாக இருக்கும்.  
8. மசாலா உணவுகள்
கார சாரமாக மசாலா உணவுகளையும் விமானப் பயணத்துக்கு முன்னால் சாப்பிடக் கூடாது. காரணம் அத்தகைய உணவுகள் நிச்சயம் அதன் வேலையை உடம்பில் காட்டும்.
பிறகு ப்ளைட்டில் நீங்கள் இருக்கையில் இருப்பதை விட டாய்லெட்டில் இருக்கும் நேரம் தான் அதிகமாக இருக்கும்படியாகிவிடும். எனவே அத்தகைய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 
9. காபி
காபி பிரியர்களுக்கு ஒரு கப் காபி குடிக்காமல் எதுவும் ஓடாது. கையில் ஒரு புத்தகத்துடன் காபி குடித்தபடியே விமானத்தில் பயணம் செய்வதை நினைக்கையில் நன்றாகத் தான் இருக்கும்.
ஆனால் காபியை குடித்துவிட்டு விமானத்தில் ஏறினால் சிலருக்கு தலைச் சுற்றல் வாந்தி வரலாம். கஃபைன் சில சமயம் எதிர்பாராத விதமாக ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.


ஹஜ் பயணத்துக்கான விமானக் கட்டணங்கள் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

By DIN | Published on : 27th February 2018 06:09 PM

புதுதில்லி: இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பயணத்துக்கான விமானக் கட்டணங்கள் 35% வரை குறைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் மெக்காவுக்கு செல்வது என்பது இஸ்லாமியர்களின் ஐந்து புனித கடமைகளில் ஒன்றாகும். இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 25 ஆக உயர்ந்தது.

முன்னதாக ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ஒரு நபருக்கு சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்வரை மானியமாக அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி இந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள நிலையில் இதற்காக சுமார் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

ஆனால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா நாட்டுக்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் மானியத் தொகை இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக கடந்த 16-1-2018 அன்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் ஹஜ் பயணத்துக்கான விமானக் கட்டணங்கள் 35% வரை குறைக்கப்பட்டிருப்பதாக புதுதில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
மாநகர பேருந்துகளில் நடத்துநர் அமர்ந்து பயண சீட்டு வழங்கக்கூடாது: போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

By DIN | Published on : 27th February 2018 09:24 PM



சென்னை மாநகர பேருந்துகளில் இனி நடத்துநர் சீட்டில் அமர்ந்து கொண்டு பயண சீட்டு வழங்கக்கூடாது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் பல வழித் தடங்களில் 3200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை பயன்படுத்தியும், இலவச பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது வருகிறது. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் நஷ்டம் அதிகரித்து வருகிறது.

மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாநகர பேருந்துகளில் மட்டும்தான் நடத்துநர் இருக்கையில் அமர்ந்து கொண்டே பயண சீட்டு வழங்கும் நிலை உள்ளது. இதனால் இலவச பயணம் அதிகரித்து, போக்குவரத்து கழகத்திற்கு மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையை மாற்றி, போக்குவரத்து கழகத்தின் வருவாயை பெருக்க தற்போது சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நடத்துநர் இருக்கையை விட்டு எழுந்து சென்று பயணிகளுக்கு பயண சீட்டு வழங்க வேண்டும், இலவச பாஸ், மாதாந்திர பாஸ் போன்றவற்றில் பயணம் செய்யும் பயணிகளிடம் அவர்களின் பயண அட்டையை சோதிக்க வேண்டும். அவை போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்டதா அல்லது போலியாக தயாரிக்கப்பட்டதா என்பதை நடத்துநர் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து புகார் குறித்து பயணிகள் 9445030516 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் புகார் தெரிவிக்கையில் பேருந்து வழித்தடம் எண் பக்கவாட்டில் உள்ள சீட் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் கூற வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளனர்.
பிஎஃப் கணக்கை ஆதாருடன் இணைக்கும் வசதி அறிமுகம்

By DIN | Published on : 28th February 2018 01:17 AM

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்குகளை உமங் என்ற செயலி மூலம் ஆதார் எண்ணுடன் இணைக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இபிஎஃப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. அந்த அமைப்பின் இணையதளத்தில் பிஎஃப் கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் வசதி ஏற்கெனவே இருக்கிறது. அதனுடன் உமங் செயலி மூலம் ஆதாரை இணைக்கும் புதிய வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளவும், பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளவும் ஏற்கெனவே வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் கையொப்பம் அளிக்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி அவர்கள் இந்த வசதிகளைப் பெறலாம்.
உமங் என்ற செயலியானது செல்லிடப்பேசி மூலம் மத்திய அரசின் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்காக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வுக்கான தகுதியை முடிவு செய்வதில் எங்களுக்குத் தொடர்பில்லை: சிபிஎஸ்இ

By DIN | Published on : 28th February 2018 12:52 AM |



நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான தகுதியை முடிவு செய்வதில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு எழுதுவதற்கு தேசிய திறந்த நிலைப் பள்ளி மற்றும் மாநில திறந்த நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும், 12-ஆம் வகுப்பில் உயிரியல்அல்லது உயிரி தொழில்நுட்பத்தை கூடுதல் பாடமாகப் படித்த மாணவர்களுக்கும் தகுதி இல்லை என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையை சிபிஎஸ்இ அமைப்புதான் வகுத்துள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக அந்த அமைப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் 'நீட் தேர்வை நடத்துவது மட்டுமே எங்கள் பொறுப்பாகும். இந்திய மருத்துவ கவுன்சில் (ஐஎம்சி) வகுத்துள்ள தகுதி தொடர்பான நடைமுறைகளின்படி இத்தேர்வை நாங்கள் நடத்துகிறோம். இத்தேர்வு தொடர்பாக ஏதாவது குறை இருந்தால் இந்திய மருத்துவ கவுன்சிலை அணுக வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நீட் தேர்வானது வரும் மே 6-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்காக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இத்தேர்வுக்கு பதிவு செய்து கொள்வதற்கான கடைசித் தேதி மார்ச் 9 ஆகும். தேர்வுக் கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் 10 நள்ளிரவு 11.50 மணி.இதனிடையே மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு நீட் தேர்வு 150 இடங்களில் நடத்தப்படும். கடந்த ஆண்டு இத்தேர்வு 107 இடங்களில் நடத்தப்பட்டது. இம்முறை கூடுதலாக 43 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 4,000 அல்லது அதற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ள நகரங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, புதிய மையங்கள் ஆந்திரப் பிரதேசம் (5), அஸ்ஸாம் (2), குஜராத் (3), மகாராஷ்டிரம் (6), ஒடிஸா (4), தமிழ்நாடு (2), கேரளம் (5), தெலங்கானா (2), மேற்கு வங்கம் (3), உத்தரப் பிரதேசம் (3) ஆகிய மாநிலங்களில் அமைக்கப்படுகின்றன.

சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், ஹிமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடகம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட உள்ள தலா ஒரு மையமும் புதிய மையங்களில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓலா, உபருக்கு மாற்றாக உருவெடுக்கும் புதிய சக்தி: இத இதத்தான் எதிர்பார்த்தோம்

By DIN | Published on : 27th February 2018 03:36 PM |

செல்போன் ஆப்கள் மூலமாக கார்களை முன்பதிவு செய்துகொள்ளும் வசதியின் மூலம் மக்கள் பயனடைந்தார்களோ இல்லையோ ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் லாபம் அடைந்தன.

பல நேரங்களில் ஓட்டுநர்களின் நிலைதான் பரிதாபமாகிப் போனது. அதற்காக சுமார் 3 ஆயிரம் கார் ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து எடுத்திருக்கும் முடிவு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது சென்னையில் கார் ஓட்டும் சுமார் 3 ஆயிரம் கார் ஓட்டுநர்கள் இணைந்து சொந்தமாக ஒரு செல்போன் செயலியை உருவாக்க உள்ளனர். அதற்கு ஓட்டுநர் தோழர்கள் சங்கம் என்று பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த செயலி மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கமிஷனாக அதிகத் தொகையை ஓட்டுநர்களிடம் இருந்தும், பயணத்தை ரத்து செய்யும் போது அபராதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு தொகையையும் வசூலிப்பதாக உபர் மற்றும் ஓலா நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

புதிய செல்போன் செயலியை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சம்பத் என்பவர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், பயணிகளுக்கு சிறந்த சேவையும், அதன் மூலம் ஓட்டுநர்களுக்கு லாபமும் கிடைக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்படுகிறது. தற்போது ஓட்டுநர்களின் மொத்த வருவாயில் 20 முதல் 21 சதவீதத்தை கமிஷனாக செயலி நிறுவனங்களே பிடுங்கிக் கொள்கின்றன. ஜிஎஸ்டி 5 சதவீதமே இருக்கும் நிலையில், ஓட்டுநர்களிடம் இருந்து 7%ம் பிடிக்கப்படுகிறது.

தற்போது புதிய செயலி உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம், ஒரு பயணி தான் பயணித்த மொத்த தூரத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். மறைமுகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. அதே சமயம், பயணத்தை மாற்றும் போது அதற்காக எந்த கட்டணமும் தனியாக வசூலிக்கப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 3 ஆயிரம் ஓட்டுநர்கள் இடம்பெற்றிருப்பார்கள். புறநகர்ப் பகுதிகளில் 1,200 பேர் பணியாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக புகார் அளித்து கடந்த ஜனவரி மாதம் கார் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.
மருத்துவ மாணவர் சாவில் நீதி விசாரணை : உறவினர்கள் கோரிக்கை

Added : பிப் 28, 2018 00:55

ராமேஸ்வரம்: சண்டிகரில் மருத்துவ மாணவர் மரணம் தொடர்பாக , நீதி விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும், என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத்,24, சண்டிகரில் உள்ள பி.ஜி.ஐ. எம்.இ.ஆர்., மருத்துவ கல்லுாரியில் பட்ட மேற்படிப்பு படிக்க கடந்த டிச.,16ல் சேர்ந்தார்.விடுதியில் தங்கிய 73 நாட்களில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்ததாக கல்லுாரி தெரிவித்தது. அவரது உறவினர்கள் மற்றும் தமிழக அதிகாரிகள் கல்லுாரிக்கு சென்று மாணவர் தங்கியிருந்த அறை 205ஐ பார்த்தனர். அதில் கதவு, தாழ்ப்பாள் உடைக்காமல் இருந்தது. அவற்ைற உடைக்காமல் எப்படி உடலை மீட்டனர். கதவை பூட்டாமல் தற்கொலை செய்தாரா' என்ற கேள்விக்கு பதிலில்லை. எனவே மாணவர் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும். மாணவர் உடல் சண்டிகரில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து காரில் மாலை 4:00 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
நாகூரில் சந்தனக்கூடு ஊர்வலம்

Added : பிப் 28, 2018 00:40



நாகப்பட்டினம்: நாகூர் தர்கா, கந்துாரி விழாவை முன்னிட்டு நடந்த, சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர். நாகை அடுத்த, நாகூரில் உள்ள, ஷாஹுஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்காவில், 461வது ஆண்டு கந்துாரி விழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, சந்தனக்கூடு ஊர்வலம், நாகை அபிராமி அம்மன் திருவாசலில், நேற்று முன்தினம் இரவு துவங்கியது. சாம்பிராணி சட்டி, நகரா மேடை உட்பட, 25க்கும் மேற்பட்ட மின் அலங்கார ரதங்கள், சந்தனக்கூட்டின் முன்னும் பின்னுமாக சென்றன. மங்கள வாத்தியங்கள் முழங்க, நேற்று அதிகாலை, நாகூரை வந்தடைந்த சந்தனக்கூடு ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, அதிகாலை, 4:30 மணியளவில், தர்கா அலங்கார வாசலை அடைந்தது. பின், சந்தனக்கூடு ரதத்தில் இருந்து, சந்தனம் நிரப்பப்பட்ட குடங்கள், தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டன. தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் துவா ஓதிய பின், சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான யாத்ரீகர்கள் பங்கேற்றனர்.
அண்ணா பல்கலை துணைவேந்தர் தேடல் குழு கூட்டம் முடிந்தது

Added : பிப் 28, 2018 02:52

அண்ணா பல்கலை துணை வேந்தருக்கான தேடல் குழு கூட்டம் முடிந்தது.அண்ணா பல்கலை துணை வேந்தர் பதவி, 2016 மே மாதம் காலியானது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, இரண்டு தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. முதல் குழு சமர்ப்பித்த தேர்வு பட்டியலை, முன்னாள் கவர்னர், வித்யாசாகர் ராவ் நிராகரித்து, தேடல் குழுவையும் கலைத்து விட்டார். இரண்டாவது தேடல் குழு, அரசு வழங்கிய, நான்கு மாத அவகாசத்திற்குள் பணிகளை முடிக்கவில்லை. அதனால், அந்தக் குழுவும் காலாவதியானது.தொடர்ந்து, மூன்றாவது தேடல் குழு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழு, பிப்., 2 வரை, 80க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்றது.இதையடுத்து, தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான, தேடல் குழு கூட்டம், நேற்று முன்தினம் துவங்கியது; நேற்று முடிந்தது. இதில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, வி.எஸ்.சிர்புர்கர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சுந்தரதேவன், ஐ.ஐ.டி., பேராசிரியர், ஞானமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், பல்கலை மானிய குழு ஒழுங்குமுறைகள் மற்றும் தமிழக அரசின் விதிகளின் படி, தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல், விரைவில், கவர்னரிடம் தாக்கல் செய்யப்படும் என, தெரிகிறது. பட்டியலில் உள்ள ஒருவரை, கவர்னர் தேர்வு செய்து, அரசுக்கு அனுப்புவார்.

- நமது நிருபர் -

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ஐந்து தேரோட்டம்

Added : பிப் 28, 2018 02:40




தஞ்சாவூர்: மாசிமக திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நேற்று, ஐந்து தேரோட்டம் நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மகாமகப் பெருவிழா நடைபெறுவதால், பாஸ்கர ஷேத்திரம் எனவும் போற்றப்படுகிறது. இங்கு, மகாமகம் தொடர்புடையதாக, 12 சிவன் கோவில்களும், ஐந்து வைணவ தலங்களும் உள்ளன.மங்களாம்பிகை உடனாய ஆதி கும்பேஸ்வர சுவாமி கோவிலை முதன்மையாக கொண்டே, ஆண்டுதோறும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தன்று, மாசி மகப் பெருவிழா நடக்கிறது.மாசி மகப்பெருவிழா, 20ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் திருநாளான நேற்று காலை, தேரோட்டம் நடந்தது.

அதிகாலை, 5:30 மணிக்கு விநாயகர் தேரோட்டமும், காலை, 7:30 மணிக்கு சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து சுவாமிகளின் தேரோட்டமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்தனர்.
94 தபால் அலுவலகங்களில் 'பாஸ்போர்ட்' சேவை மையம்

Added : பிப் 28, 2018 02:10

சென்னை: தமிழகத்தில், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் வசிப்போர், 'பாஸ்போர்ட் ' சேவையை பெறுவதில் சிரமம் இருந்தது. இதை, பாஸ்போர்ட் துறை அதிகாரிகள், மத்திய அரசுக்கு தெரிவித்ததால், மாவட்ட தலைமை தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதன்படி, வேலுார் மற்றும் காரைக்காலில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று, கடலுார், விருதுநகர்; நாளை, திருவண்ணாமலை, விழுப்புரம் தலைமை தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட உள்ளன.இவற்றில், வழக்கமான விண்ணப்பங்களும், புதுப்பிக்க கோரும் விண்ணப்பங்களும் மட்டும் ஏற்கப்படும். தத்கல் விண்ணப்பம், தடையின்மை சான்று ஆகிய வற்றுக்கு, பாஸ் போர்ட் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். தொடர்ந்து, தமிழகத்தில், 94 தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கும் வகையில், தபால் துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த சேவை மையங்களின் சேவையை பெற, www.passportindia.gov.in என்ற இணையதளத்தில், பயணியர் கணக்கு துவக்க வேண்டும். பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஆன்லைனில் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு, அசல் சான்றுகளுடன் நேரில் சென்று, கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுதமி புகார்: கமல் பதிலடி!

Added : பிப் 28, 2018 00:59




சென்னை: கமல் பட நிறுவனம், தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக கூறிய, நடிகை கவுதமிக்கு, 'அந்த விவகாரத்தை பட நிறுவனம் பார்த்துக் கொள்ளும்' என, நடிகர் கமல் பதில் அளித்துள்ளார்.

கமலை பிரிந்து வாழும் நடிகை கவுதமி, புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், கமல் நடித்த, 'தசாவதாரம், விஸ்வரூபம்' படங்களில், ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய வகையில், தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக, கவுதமி புகார் தெரிவித்திருந்தார். மேலும், கமலுடன் தற்போது, தனிப்பட்ட முறையிலோ, தொழில் ரீதியாகவோ, எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் கூறியிருந்தார். அரசியலில், கமலுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் நோக்கில், கவுதமி செயல்படுவதாக, கமல் தரப்பில் விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து, கவுதமி, மீண்டும், 'டுவிட்டர்' பக்கத்தில், நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: எனக்கும், கமலுக்கும், எந்த தொடர்பும் இல்லை. யாரிடமும், நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம், நான் உழைத்த படங்களுக்கு, உரிய சம்பளத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை. இது தெரியாமல், என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர்.இது, எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நான், தற்போது என் சொந்த முயற்சியில், எனக்காகவும், என் மகளுக்காகவும் உழைக்கிறேன். காரணம் இல்லாமல், நான் எதுவும் பேசமாட்டேன். தகுந்த ஆதாரத்தோடு தான், பேசுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, செய்தியாளர்கள், கமலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''கவுதமி புகார் விவகாரத்தை, சம்பந்தப்பட்ட பட நிறுவனம் பார்த்துக் கொள்ளும்; அதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள், அந்த நிறுவனத்தில் உள்ளனர்,'' என்றார்.

உயர்மட்டக் குழு : நடிகர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் நீதி மையம் கட்சியின் நடவடிக்கைகளை உறுதி செய்யவும், செய்ய வைக்கவும் உருவாக்கப்பட்டுள்ள, உயர் நிலைக் குழு உறுப்பினர்களின், ஒரு பகுதியினரின் பட்டியலை வெளியிட்டுள்ளோம். அதில், வழக்கறிஞர்கள் அருணாசலம், ராஜசேகரன், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஆர்.ரங்கராஜன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி, ஏ.ஜி.மவுரியா, எழுத்தாளர்கள், ப.ராஜநாராயணன், பாரதி கிருஷ்ணகுமார். தொழிலதிபர்கள், சி.கே. குமரவேல், சிவராம், சவுரிராஜன், திரைப்பட தயாரிப்பாளர், கமீலா நாசர், பேராசிரியர், கு.ஞானசம்பந்தன், ராஜ்கமல் தயாரிப்பு நிர்வாகி, மூர்த்தி. நடிகை ஸ்ரீபிரியா, நற்பணி இயக்க அகில இந்திய பொறுப்பாளர், ஆர்.தங்கவேலு மற்றும் திரைப்பட இயக்குனர், சுகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு பாதிப்பு : சென்னை விமான நிலையத்தில், கமல் கூறியதாவது:சென்னை, ஐ.ஐ.டி., நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது கண்டனத்திற்கு உரியது. ஆந்திராவில், தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு, விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில், 14 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்முறை, அவரது தம்பி கொலை சம்பவத்தை பார்க்கும் போது, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளதையே காட்டுகிறது. மொழி பிரச்னை காரணமாக, தமிழக மாணவர்கள், வெளி மாநிலங்களில் தற்கொலை செய்யக் கூடாது. வெளிமாநில மாணவர்கள், தமிழகத்தில் சவுகரியமாக படிப்பதை போல், தமிழக மாணவர்கள், இந்தியாவில் எந்த மூலையில் படித்தாலும், பாதுகாப்பு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மார்ச் 25ல் டில்லியில் டாக்டர்கள் மாநாடு : இந்திய மருத்துவ சங்கம் முடிவு

Added : பிப் 28, 2018 00:44


திண்டுக்கல் : தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் மார்ச் 25ல் டாக்டர்கள் மாநாடு நடக்கிறது, என இந்திய மருத்துவ கழக தேசிய முன்னாள் தலைவர் வினய் அகர்வால் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: இந்திய மருத்துவ கழகத்தில் டாக்டர்கள் மட்டும் தான் உள்ளனர். இதை அழித்துவிட்டு, 5 டாக்டர்கள், மீதியுள்ளோர் டாக்டர் அல்லாதோரை இணைத்து தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஆணையம் ஓமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதம் படித்தவர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்காமல் மருத்துவம் பார்க்கலாம் என்ற முறையைவலியுறுத்துகிறது. இதனால் போலி டாக்டர்கள் உருவாவர். எம்.பி.பி.எஸ்.படித்த வர்கள் பயிற்று மருத்துவருக்கு மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றால்தான் தேசிய கமிஷனில் பதிவு செய்ய முடியும் என்பது தேவையற்றது. இதனால் தனியார் கல்லுாரிகள், தாங்களாகவே எம்.பி.பி.எஸ்., பி.ஜி., படிப்பை அதிகரித்து கொள்வர்.இதை எதிர்த்து டில்லியில் மார்ச் 25ல் டாக்டர்கள் மாநாடு நடக்கிறது, என்றார்.
 நாளை!   பிளஸ் 2வுக்கு பொதுத்தேர்வு துவக்கம்

தமிழகம் மற்றும், புதுச்சேரியில், பிளஸ் 2 பொது தேர்வுகள், நாளை துவங்குகின்றன. 2,794 மையங்களில், 8.67 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்கின்றனர். முறைகேடுகளை தடுக்க, காப்பி அடித்தால், ஐந்து ஆண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பிளஸ் 2 பொது தேர்வு, தமிழகம் மற்றும், புதுச்சேரியில், நாளை துவங்குகிறது; ஏப்., 6ல், முடிகிறது. தேர்வின் முடிவுகள், மே, 16ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2,756; புதுச்சேரியில், 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 278 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில், 6,754 மற்றும் புதுச்சேரியில், 147 என, மொத்தம், 6,901 பள்ளிகளை சேர்ந்த, 4.63 லட்சம் மாணவியர் உட்பட, 8.67 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரியில் மட்டும், 8,215 மாணவியர் உட்பட, 15 ஆயிரத்து, 140 பேர் தேர்வு எழுதுகின்றனர். கணிதம், இயற்பியல், வேதியியல் அடங்கிய பாட பிரிவில், 4.28 லட்சம்; உயிரியல் பிரிவில், 2.97 லட்சம்; வணிகவியலில், 2.42 லட்சம்; தொழிற்கல்வியில், 62 ஆயிரம்; வரலாறு பிரிவில், 14 ஆயிரம் பேர், தேர்வில் பங்கேற்கின்றனர்.

சிறப்பு கண்காணிப்பு

தேர்வை முறைகேடு இன்றி, அமைதியாக நடத்தி முடிக்க, 30 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், அந்தந்த மாவட்டங்களில், மேற்பார்வை பணிகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர். தேர்வை சுமூகமாக நடத்த, 6,402 முதன்மை கண்காணிப்பாளர்களும், 937 கூடுதல் கண்காணிப்பாளர்களும், 94 ஆயிரத்து, 880 ஆசிரியர்களும், தேர்வு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் முறைகேடுகளை கண்டுபிடிக்க, 1,700 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன; இவற்றில் இடம் பெற்றுள்ள, 8,500 ஆசிரியர்கள், தேர்வு அறைகளில் திடீர் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
தேர்வில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆள் மாறாட்டம் செய்வது, காப்பி அடிப்பது, வினாத்தாளை, 'லீக்' செய்வது போன்றமுறைகேடுகளில் ஈடுபட்டால், அந்த மாணவருக்கு, 5 ஆண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, கடுமையாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

3 மணி நேரம் தேர்வு

பிளஸ் 2 தேர்வு, காலை, 10:00 மணிக்கு துவங்க உள்ளது. முதல், 10 நிமிடங்கள், வினாத்தாளை வாசித்து பார்க்கலாம். அடுத்த, ஐந்து நிமிடங்கள், மாணவர்களின், சுயவிபரங்கள் மற்றும் ஹால் டிக்கெட் விபரங்கள் சரிபார்க்கப்படும். ஹால் டிக்கெட்டில், புகைப்படம் மாறியிருந்தால், அவர்கள், தங்களுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை எடுத்து செல்வது நல்லது.

இதுகுறித்து, தலைமை ஆசிரியரிடம், முன்கூட்டியே ஆலோசனை பெற வேண்டும். காலை, 10:15 முதல், மதியம், 1:15 மணி வரை, மூன்று மணி நேரம், தேர்வு எழுதலாம். அதன்பின், விடைத்தாள்கள் பெறப்பட்டு, மாணவர்கள் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்படுவர்.

'காப்பி' , பிட் வேண்டாம்

'பொது தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால், அதிக பட்சம், ஐந்தாண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும்' என, அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.* தேர்வறையில், 'பிட்' வைத்திருந்து, அதை பயன்படுத்தாமல், கண்காணிப்பாளர் சோதனை செய்யும் முன்பே கொடுத்து விட்டால், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஆனால், அதே தவறை மீண்டும் செய்தால், தேர்வறையிலிருந்து வெளியேற்றப்படுவர்; அந்த மாணவர், இரண்டு தேர்வுகளை எழுத தடை விதிக்கப்படும்* மற்ற மாணவரை பார்த்து எழுதியது
கண்டுபிடிக்கப்பட்டால், ஒரு ஆண்டு தேர்வு எழுத முடியாது. 'காப்பி' அடிக்க, கண்காணிப்பாளரிடம் பேரம் பேசினால், அந்த மாணவர், இந்த பொது தேர்வு முழுவதும் எழுத முடியாது

* ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த மாணவர் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். அதிக மதிப்பெண் தரும்படி, விடைத்தாளில் எழுதுவது, வேண்டுகோள் விடுப்பது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், விடைத்தாள்கள் ரத்து செய்யப்படும்

* கண்காணிப்பாளரை மிரட்டுவது, தாக்குவது, கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால், நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். விடைத்தாள்களை திருப்பி தராமல் எடுத்து செல்வது, கிழித்து சேதப்படுத்துவது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால், அந்த மாணவரின் தேர்வு, ரத்து செய்யப்படும்

* வினாத்தாளை, 'லீக்' செய்தால், மூன்று ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும். முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர், விளக்கம் எழுதி தர மறுத்தால், அந்த தேர்வு மட்டுமின்றி, எதிர்காலத்தில் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும்

* விடைத்தாள்களை மற்ற மாணவர்களிடம் மாற்றி, எழுதி வாங்கினால், ஐந்து ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. விடைத்தாள்களில் பெயர், 'இனிஷியல்' அல்லது சிறப்பு குறியீடுகள் கண்டறியப்பட்டால், அந்த விடைத்தாள்களின் மதிப்பீடு நிறுத்தப்படும்.

கட்டுப்பாட்டு அறை அமைப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்கும் நிலையில், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இது, சென்னையில், தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் செயல்படும் என, இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்து உள்ளார்.

காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, கட்டுப்பாட்டு அறையை, தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள், பெற்றோர், தங்கள் சந்தேகம் மற்றும் குறைகளை, கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம். அதற்காக, 80125 94105, 80125 94115, 80125 94120 மற்றும் 80125 94125 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

NEWS TODAY 22.04.2024