Wednesday, February 28, 2018

நாகூரில் சந்தனக்கூடு ஊர்வலம்

Added : பிப் 28, 2018 00:40



நாகப்பட்டினம்: நாகூர் தர்கா, கந்துாரி விழாவை முன்னிட்டு நடந்த, சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர். நாகை அடுத்த, நாகூரில் உள்ள, ஷாஹுஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்காவில், 461வது ஆண்டு கந்துாரி விழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, சந்தனக்கூடு ஊர்வலம், நாகை அபிராமி அம்மன் திருவாசலில், நேற்று முன்தினம் இரவு துவங்கியது. சாம்பிராணி சட்டி, நகரா மேடை உட்பட, 25க்கும் மேற்பட்ட மின் அலங்கார ரதங்கள், சந்தனக்கூட்டின் முன்னும் பின்னுமாக சென்றன. மங்கள வாத்தியங்கள் முழங்க, நேற்று அதிகாலை, நாகூரை வந்தடைந்த சந்தனக்கூடு ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, அதிகாலை, 4:30 மணியளவில், தர்கா அலங்கார வாசலை அடைந்தது. பின், சந்தனக்கூடு ரதத்தில் இருந்து, சந்தனம் நிரப்பப்பட்ட குடங்கள், தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டன. தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் துவா ஓதிய பின், சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான யாத்ரீகர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 06.12.2025