Wednesday, February 28, 2018

அண்ணா பல்கலை துணைவேந்தர் தேடல் குழு கூட்டம் முடிந்தது

Added : பிப் 28, 2018 02:52

அண்ணா பல்கலை துணை வேந்தருக்கான தேடல் குழு கூட்டம் முடிந்தது.அண்ணா பல்கலை துணை வேந்தர் பதவி, 2016 மே மாதம் காலியானது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, இரண்டு தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. முதல் குழு சமர்ப்பித்த தேர்வு பட்டியலை, முன்னாள் கவர்னர், வித்யாசாகர் ராவ் நிராகரித்து, தேடல் குழுவையும் கலைத்து விட்டார். இரண்டாவது தேடல் குழு, அரசு வழங்கிய, நான்கு மாத அவகாசத்திற்குள் பணிகளை முடிக்கவில்லை. அதனால், அந்தக் குழுவும் காலாவதியானது.தொடர்ந்து, மூன்றாவது தேடல் குழு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழு, பிப்., 2 வரை, 80க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்றது.இதையடுத்து, தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான, தேடல் குழு கூட்டம், நேற்று முன்தினம் துவங்கியது; நேற்று முடிந்தது. இதில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, வி.எஸ்.சிர்புர்கர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சுந்தரதேவன், ஐ.ஐ.டி., பேராசிரியர், ஞானமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், பல்கலை மானிய குழு ஒழுங்குமுறைகள் மற்றும் தமிழக அரசின் விதிகளின் படி, தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல், விரைவில், கவர்னரிடம் தாக்கல் செய்யப்படும் என, தெரிகிறது. பட்டியலில் உள்ள ஒருவரை, கவர்னர் தேர்வு செய்து, அரசுக்கு அனுப்புவார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...