Tuesday, January 31, 2017

காமராஜர் பல்கலை நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அபாயம் : துணை வேந்தர், பதிவாளர், தேர்வு அதிகாரி இல்லை

மதுரை காமராஜர் பல்கலையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியின் பதவிக்காலம் முடியும் நிலையில், பல்கலையின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மதுரை காமராஜர் பல்கலையில், 2015 ஏப்., முதல், துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. அதில், யாரை நியமிப்பது என்பதில், பெரும் சிக்கல் ஏற்பட்டது. தேடல் குழுவில் உறுப்பினராக இடம்பெற்ற, பேராசிரியர் ராமசாமி தரப்பில், குறிப்பிட்ட சில நபர்களை, துணை வேந்தர் பதவியில் நியமிக்க வேண்டும் என, நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.அதனால், தேடல் குழுவில் முரண்பாடுகள் ஏற்பட்டு, பேராசிரியர் ராமசாமி, உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 

இதையடுத்து, புதிய உறுப்பினர் கொண்ட கமிட்டி அமைத்து, துணை வேந்தர் தேர்வு பணி மீண்டும் தீவிரமாகியுள்ளது. இந்த முறை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படி மட்டுமே, தகுதியான, திறமையான கல்வியாளரை தேர்வு செய்ய, பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பல்கலை நிர்வாகத்தை நடத்தும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி விஜயனின் பதவிக் காலம், பிப்., 8ல் முடிகிறது. அதனால், புதிய அதிகாரியை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான விஜயன், பதிவாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். அவரது நிர்வாகத்தில், அடுக்கடுக்கான முறைகேடு புகார்கள் எழுந்து வருகின்றன. எனவே, அடுத்து வரும் அதிகாரியாவது, நேர்மையானவராக இருக்க வேண்டும் என, பேராசிரியர்கள் தரப்பில், கவர்னருக்கும், உயர்கல்வித் துறைக்கும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, நேர்மையான பேராசிரியரை, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பொறுப்புக்கு தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம், உயர்கல்வி செயலர் கார்த்திக் மற்றும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

 ஒரு வாரத்திற்குள் புதிய அதிகாரியை நியமிக்காவிட்டால், துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி என, மூன்று பதவிகளும் காலியாகி, பல்கலையின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அதுபோன்ற சூழல் ஏற்பட்டால், பல்கலையின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருக்கும் உயர்கல்வி துறை செயலரே, நேரடியாக காமராஜர் பல்கலை சென்று, நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய நிலை ஏற்படும் என, பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
சென்னை பல்கலையில் நிதி முறைகேடு : கவர்னரிடம் பேராசிரியர்கள் புகார்

சென்னை பல்கலையில், பதிவாளர் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், பல்கலையில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக, கவர்னருக்கு பேராசிரியர்கள் புகார் அனுப்பி உள்ளனர்.சென்னை பல்கலையில், துணைவேந்தர் பதவி காலியாகி, ஓராண்டு முடிந்து விட்டது; புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. உயர்கல்வி செயலர் கார்த்திக் தலைமையிலான கமிட்டி, பல்கலை நிர்வாகத்தை கவனித்து வருகிறது. பதிவாளர் டேவிட் ஜவஹர் மூலம், நிர்வாக பணிகள் நடந்து வருகின்றன. 

பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருமகனின் பதவிக்காலம், சில தினங்களுக்கு முன் முடிந்த நிலையில், பதிவாளரின் பதவி காலமும், ஒரு மாதத்தில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், பல்கலையின் நிதி பயன்பாட்டில், பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக, கவர்னரின் செயலருக்கு பேராசிரியர்கள் புகார் அனுப்பியுள்ளனர். 

சென்னை பல்கலை பேராசிரியர் பேரவை பொதுச்செயலர், எஸ்.எஸ்.சுந்தரம் அனுப்பியுள்ள புகார் மனு விபரம்: சென்னை பல்கலையில் கட்டட பணிக்காக, பி.எஸ்.கே., இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்துக்கு, விதிகளை மீறி, ஐந்து கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கு துணைவேந்தர் இல்லாத நிலையில், பெரும் நிதியை வழங்க வேண்டும் என்றால், அதற்கு, மூன்று விதமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். சிண்டிகேட் தேர்வு செய்த, ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில், முதலில் அனுமதி பெற வேண்டும். பின், அதை கட்டட கமிட்டி ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்; சிண்டிகேட் கூட்டத்தில், இறுதி ஒப்புதல் பெற வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாமல், வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அவசரமாக, ஐந்து கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

 இந்த நிதியானது, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., வழங்கியது. சென்னை பல்கலையின், நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக மட்டுமே, யு.ஜி.சி., நிதியை பயன்படுத்த வேண்டும். பல்கலையின் நிர்வாக அதிகாரிகள், விதிகளை மீறி கட்டடம் கட்ட நிதியை தவறாக பயன்படுத்தி உள்ளனர். இதுகுறித்து, 2016 மார்ச்சில் நடந்த, செனட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, முறைகேடுகள் குறித்து, பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கமிட்டி மூலம் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையும், பல்கலை நிர்வாகம் செய்யவில்லை. நிதி பரிமாற்றத்திற்கு அனுமதி அளித்த பதிவாளரின் பதவிக்காலம், ஒரு மாதத்தில் முடியும் நிலையில், இந்த பிரச்னை குறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில்

கூறியுள்ளார்.
- நமது நிருபர் -
முதியோரை பேணுவது இந்திய பண்பாடு'

புதுடில்லி: டில்லியில், 74 வயது மூதாட்டியை துன்புறுத்திய மகனும், மருமகளும், மூதாட்டியின் வீட்டிலிருந்து வெளியேறும்படி, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் வசித்து வரும், கணவரை இழந்த, 74 வயது மூதாட்டி சாந்தி தேவி, மகனும், மருமகளும் தன்னை துன்புறுத்துவதாக, மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, காமினி லா, பிறப்பித்த உத்தரவு: வாழ்க்கை என்பது ஏணி அல்ல; முழுதாய் சுற்றி வரும் சக்கரம். பெற்றோரின் முதுமைக் காலத்தில், அவர்களை பார்த்துக் கொள்ளாவிட்டால், நம் முதுமைக் காலத்தில், நம் குழந்தைகள் நம்மை கவனிக்க மாட்டார்கள் என்பதை மறந்து விடுகிறோம். முதியவர்களை, அவர்களுக்கு உதவி தேவைப்படும் சமயத்தில், பொருளாதார ரீதியில் கைவிடப்படுவதை, நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளாது. பெற்றோரை மதிப்பது, முதியோரை பேணுவது, வளமையான இந்திய கலாசாரம், பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பண்பு. சாந்தி தேவிக்கு சொந்தமான வீட்டில் இருந்து மகனும், மருமகளும் வெளியேற வேண்டும். 2015 அக்டோபர் முதல், அவர்கள் வெளியேறும் வரை, மாதம், 5,000 வீதம், இழப்பீடாக தரப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

31.01.2009: தமிழின் தன்னிகரற்ற நகைச்சுவை நடிகர் நாகேஷ் காலமான தினம் இன்று!

By DIN  |   Published on : 31st January 2017 12:00 AM  
nagesh

நாகேஷ் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரவார். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.
நாகேஷ் செப்டம்பர் 27, 1933 அன்று தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். இவரது இயற்பெயர் நாகேஸ்வரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்
தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தான் அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின. நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் எழுத்தராகப் பணிபுரிந்தார்
1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.
கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்
திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
தமிழர்களின் வாழ்வில் மறக்கவியலா நடிகராகத் திகழ்ந்த நாகேஷ் 31.01.2009 அன்று சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். 

ஸ்கூல் அட்மிஷனுக்கு இனி கியூவில் நிற்கத் தேவையில்லை, ஆன்லைனில் அட்மிஷன் வாங்கலாம்!

By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 31st January 2017 01:24 PM  |
parent_q_for_school_admis
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதலே பள்ளி வளாகங்களில் புது அட்மிஷன்களுக்காக பெற்றோர் கூட்டம் களைகட்டும். இந்தமுறை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி வளாகத்தில் அதிசயத் தக்க வகையில் அப்படியான களேபரக் கூட்ட நெரிசல்களைக் காண முடியவில்லை. என்னவென்று விசாரித்ததில் இந்த ஆண்டிலிருந்து அவர்களது பள்ளியின் சில கிளைகளில் ஆன்லைன் அட்மிஷன் முறையை அறிமுகம் செய்திருக்கிறார்களாம். டி.ஏ.வி உள்ளிட்ட பிரபல தனியார் பள்ளிகளுக்கு ஆன்லைன் அட்மிஷன் முறைகளை மேற்கொள்வதற்கான மென்பொருள் தொழில்நுட்பங்களை நிர்வகிக்கிறது ஸ்கூல் ஸ்கீஸ் எனும் நிறுவனம். இதன் அமைப்பாளர் ஜெகதீஷ் தேவராஜன். 
கோல சரஸ்வதி பள்ளி, டி.ஏ.வி, ஸ்பார்ட்டன் உள்ளிட்ட பள்ளிகளில் இந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் முதல் இந்த ஆன்லைன் அட்மிஷன் முறை செயல்படுத்தப் படவிருப்பதாகவும், மேலும் பல பள்ளிகள் இந்த திட்டத்தில் இணைய ஆர்வமாக விசாரித்து வருவதாகவும், கூடிய விரைவில் சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் படலாம், இதனால் பெற்றோர்களின் அட்மிஷன் அலுப்பு தீர்ந்து அவர்களுக்கு பள்ளி துவக்க நாட்களுக்கான டென்சன் குறையும் என தேவராஜன் தெரிவித்தார். மேலும் இந்த ஆன்லைன் அட்மிஷன் முறையில் அப்ளிகேஷன் ஃபார்ம்களை நிரப்புவதில் பெற்றோர்களுக்கு சந்தேகங்கள் வரின், உதவும் பொருட்டு சாட் அவுட்புட் விண்டோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பெற்றோர் எளிதாக தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு ஃபார்ம்களை நிரப்பு பதிவு செய்யலாம்.
கரண்ட் பில், மளிகை பில், கிரெடிட் கார்டு பில் முதற்கொண்டு அனைத்தையுமே ஆன்லைனில் உட்கார்ந்த இடத்திலிருந்தே கட்டிமுடிக்கும் வசதியுள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில் பள்ளிகளுக்கான அட்மிஷன்களும் ஆன்லைனில் முடித்துக் கொள்ளலாம் என்பது பெற்றோரைப் பொருத்தவரை மிகப் பெரிய ஆசுவாசம் தரும் மாற்றமே! அடுத்த ஆண்டு துவக்கத்துக்குள் சென்னை பள்ளிகள் அனைத்திலுமே இந்த முறை செயல்பாட்டுக்கு வந்து விடலாம்.

கைதான மாணவர்கள் 36 பேர் விடுவிப்பு; போலீஸ் மீது கடும் நடவடிக்கை: முதல்வரின் அதிரடி அறிவிப்பு

By DIN  |   Published on : 31st January 2017 11:27 AM  |   
cm_speech

சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 36 மாணவர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் பன்னீர்செல்வம், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 36 மாணவர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். போலீஸ் தடியடி, வன்முறை தொடர்பாக ஆணையம் விசாரணை நடத்தும். காவல்துறையினரின் அத்துமீறல் இருந்ததா என்பது குறித்தும் ஆணையம் விசாரணை நடத்தும். 3 மாதத்துக்குள் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்படும்.
வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  
மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு நடுக்குப்பத்தில் தாற்காலிக மீன் சந்தை அமைக்கப்படும். நடுக்குப்பம், அயோத்திகுப்பம், மாட்டான்குப்பம் மீனவர்களுக்கு உரிய மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும். நடுக்குப்பம், மாட்டான் குப்பம் மீனவர்களுக்கு ஆய்வுக்குப் பின், உரிய நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

இன்போசிஸ் அலுவலகத்தில் பெண் ஊழியர் படுகொலை: கொலையாளியைக் காட்டிக் கொடுத்த தடயம்

By DIN  |   Published on : 30th January 2017 12:31 PM  |   
murdered

புணே: புணேவின் ஹிஞ்ஜேவாடி ஐடி பூங்காவில்  உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் ஊழியர் ஞாயிற்றுக்கிழமை மாலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த மென்பொறியாளர் கே. ரஸிலா ராஜூ ஞாயிற்றுக்கிழமை தனது  வேலைகளை செய்ய அலுவலகம் வந்துள்ளார்.
இந்த நிலையில், தான் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலகத்துக்குள்ளேயே கம்ப்யூட்டர் ஒயரால் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து காவல்துறை துணை ஆணையர் வைஷாலி ஜாதவ் கூறுகையில், பெங்களூர் அலுவலகத்தில் உள்ள இரண்டு ஊழியர்களுடன் ஆன்லைனில் தொடர்பு கொண்டபடியே, ரஸிலா புணே அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்துள்ளார்.
மதியம் 2 மணியளவில் அலுவலகத்துக்கு வந்த ரஸிலாவின் பணி நேரம் இரவு 11 மணி வரையாகும். இதற்கிடைய,  மாலை 5 மணிக்குப் பிறகு அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், இன்போசிஸ் திட்ட மேலாளர், இரவு 8 மணியளவில் அலுவலக பாதுகாவலரை தொடர்பு கொண்டு, அலுவலகத்துக்குள் சென்று ரஸிலாவை பார்க்கச் சொல்லியிருக்கிறார்.
அவர் உள்ளே சென்று பார்த்த போது, ரஸிலா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ரஸிலா 5 மணியளவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது.
அப்போது அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் பபென் செயில்சியா (26) மற்றொரு பாதுகாவலர் பணிக்கு வந்ததும், மாலை 6.30 மணியளவில் பணி முடிந்து, வழக்கம் போல அலுவலகத்தில் இருந்து கிளம்பியுள்ளார். பபென் செயில்சியா அசாமைச் சேர்ந்தவர்.
அவர் நேராக தனது இருப்பிடத்துக்குச் சென்று தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு மும்பைக்கு கிளம்பியுள்ளார்.
ரஸிலா கொலை செய்யப்பட்டது இரவு 8 மணியளவில்தான் தெரிய வந்தது. அதன்பிறகு காவல்துறையினர் விசாரணை நடத்தி, அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அலுவலகத்துக்குள் பபென் நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவரது இருப்பிடத்துக்குச் சென்றனர்.
ஆனால் அதற்குள் பபென் புணேவை விட்டு தப்பிவிட்டார். உடனடியாக காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு, அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை தொடர்ந்து சென்று இன்று அதிகாலை 3 மணயளவில் கைது செய்தனர். பபெனிடம் விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும்.
இதற்கிடையே, உயிரிழந்த ரஸிலாவுடன் தங்கியிருந்த தோழிகள் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காட்டினர். மேலம், கொலை செய்யப்பட்ட ரஸிலா அனைவரிடமும் மிகவும் தோழமையுடன் பேசுவார் என்றும் தோழிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் இன்போசிஸ் ஊழியர்கள் பலரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பிட்ட சிலரால் மட்டுமே அலுவலகத்துக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் இப்படி ஒரு கொலை நடந்திருப்பது அனைவரையும் பாதிக்கச் செய்துள்ளது.

ராஜதந்திரத்தின் வெற்றி!

By ஆசிரியர்  |   Published on : 28th January 2017 01:40 AM  | 
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யன் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதன் பின்னணியில், நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய ராஜதந்திரம் அடங்கி இருக்கிறது. மோடி அரசு ஆட்சிக்கு வந்ததுமுதலே இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமான நெருக்கம் அதிகரித்திருக்கிறது. அந்த நெருக்கத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது அபுதாபி இளவரசர் நமது 68-ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்றது.
1991 வரை இந்தியா மேற்கத்திய நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தது. அதை மாற்றி, இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் கிழக்கு நோக்கிய கவனத்தில் முனைப்புக் காட்ட முற்பட்டது நரசிம்ம ராவ் அரசுதான். அதேபோல இப்போது நரேந்திர மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையில் மேற்கு நோக்கிய கவனம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேலைநாடுகள் மட்டுமல்லாமல், மேற்கு ஆசியாவில் கூடுதல் கவனம் செலுத்தும் முனைப்பு காணப்படுகிறது. இந்தியாவைப் போலவே மேற்கு ஆசிய நாடுகளும், அங்கே ஏற்பட்டிருக்கும் நிலையற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுத் தங்கள் கவனத்தை இந்தியா பக்கம் திருப்ப முற்பட்டிருப்பது நமக்கு சாதகமாகியிருக்கிறது.
இந்திரா காந்திக்குப் பிறகு, ஏறத்தாழ 34 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் அரபு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றது 2015-இல்தான். பிரதமர் நரேந்திர மோடியின் அரபு நாடுகள் விஜயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய - இஸ்ரேல் உறவின் நெருக்கம் மிகவும் அதிகரித்திருந்தும்கூட, அரபு நாடுகளுடனான நமது நெருக்கத்தை அது பாதிக்கவில்லை. அதற்கு சில காரணங்கள் இல்லாமல் இல்லை.
மேற்கு ஆசியாவில் காணப்படும் ஷியா முஸ்லிம்களின் எழுச்சியும், ஈரானும் அமெரிக்காவும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நெருக்கமும் பல அரேபிய சன்னி முஸ்லிம் நாடுகளை, குறிப்பாக, சவூதி அரேபியாவையும் ஐக்கிய அரபு அமீரகத்தையும் கவலைப்பட வைத்திருக்கிறது. நீண்டகாலமாக, இந்த இரண்டு நாடுகளும் பாகிஸ்தானுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பவை. அப்படி இருந்தும்கூட, யேமனில் ஷியாக்களின் எழுச்சியை அடக்க ராணுவ உதவி கோரப்பட்டபோது, பாகிஸ்தான் மறுத்தது உறவில் விரிசலை ஏற்படுத்தியது. அபுதாபி அரச குடும்பம் இந்தியாவுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ள அது காரணமாக அமைந்தது.
அதேபோல, தீவிரவாதத்திற்கும், சமூகவிரோத சக்திகளுக்கும் அடைக்கலம் தரப்படும் இடம் என்கிற கண்ணோட்டத்தை மாற்றி, ஐக்கிய அரபு அமீரகத்தை சிங்கப்பூர், ஹாங்காங் போல, ஒரு பொருளாதார மையமாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறது அபுதாபி அரச குடும்பம். குறிப்பாக, துபை வர்த்தக, சுற்றுலா நகரமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.
இந்தியாவுடனான நெருக்கம், பாகிஸ்தானுடனான நெருக்கத்தைவிட சிறந்த பொருளாதார உறவுக்குப் பயன்படும் என்று அமீரகம் கருதுவதற்குக் காரணம் உண்டு. இந்தியக் கோடீஸ்வரர்கள் பலருடைய பணம் துபையில்தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானிய கருப்புப் பணத்தைவிட துபையில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் தொழில்துறையினரின் கருப்புப் பணம்தான் அதிகம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதாரத் தடைகளால் முடக்கப்பட்டுக் கிடந்த ஈரான் இப்போது அணுஆயுத பலத்துடனும், அமெரிக்க நட்புறவுடனும் பலம் பெற்றிருப்பது மேற்காசிய நாடு
களுக்கு இடையேயான அதிகார சமன்பாட்டை மாற்றியிருக்கிறது. அமீரகம், சவூதி அரேபியா, குவைத் ஆகிய சன்னி முஸ்லிம் நாடுகளால் ஈரான் போன்ற ஷியா முஸ்லிம் நாடு வலிமை பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் சன்னி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்தியாவுடனான நட்புறவு, தங்களுக்கு அதிக வலிமையைத் தரக்கூடும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு காலத்தில் பாகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமான நட்புறவு பாராட்டி வந்த நாடு அமீரகமாகத்தான் இருந்தது. இஸ்லாமாபாத் அரசியல்வாதிகளின் கருப்புப் பணம் மொத்தமுமே அங்கேதான் முதலீடு செய்யப்பட்டிருந்தது. மும்பை தாக்குதலின் பின்னணியில் உள்ள தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருந்த நாடும் அமீரகம்தான். அப்படிப்பட்ட ஐக்கிய அரபு அமீரகம் இப்போது இந்தியாவுடன் நெருக்கமாகி இருக்கிறது என்றால், அது நிச்சயமாக மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி என்றுதான் கருத வேண்டும்.
ஏறத்தாழ 26 லட்சம் இந்தியர்கள் அமீரகத்தில் வாழ்கிறார்கள். அதாவது, மொத்த மக்கள்தொகையில் 30%. இந்தியாவுக்கு அதிகமாக கச்சா எண்ணெய் வழங்கும் நான்கு நாடுகளில் அமீரகமும் ஒன்று. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ஏறத்தாழ 65,000 கோடி டாலர் (சுமார் ரூ.44 லட்சம் கோடி). 2012 நிலவரப்படி, மேற்கு ஆசியாவிலிருந்து மட்டும், அங்கே வேலை செய்யும் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிய பணம் 31,000 கோடி டாலர் (சுமார் ரூ.21 லட்சம் கோடி). அதில் அமீரகத்தின் பங்கு 15,700 கோடி டாலர் (சுமார் ரூ.10 லட்சம் கோடி).
ஐக்கிய அரபு அமீரகத்துடனான நட்புறவால், இந்தியாவுக்கு முதலீடுகள் வந்து குவியுமானால் அதைவிடப் பெரிய நன்மை வேறு எதுவும் இருக்க முடியாது. இரண்டு தரப்புக்குமே நன்மை பயக்கும் இந்த நட்புறவை அபுதாபி இளவரசரின் விஜயம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இரு தரப்புக்குமே இது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி!

விபரீத விளையாட்டு

By எஸ். கிருஷ்ணசாமி  |   Published on : 31st January 2017 01:54 AM 
மின்னணுயுகம் நம்மை அண்டத்துவங்கி வெறும் இருபது ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் அது நம்மை ஆளத்துவங்கிவிடும் என்றோ, மனித இனம் அதற்கு அடிமையாகிவிடும் என்றோ யாரும் கற்பனைகூட செய்திருக்க முடியாது என்பதுதான் உண்மை.
செல்லிடப்பேசி இல்லாத காதுகள் இல்லை, கைகளும் இல்லை, இணையம் மனித இனத்தின் புதிய இதயம் என்றெல்லாம் ஆகிப்போனது.
எந்த நவீனக் கண்டுபிடிப்பும், கருவியும், சாதனமும் நாம் இடும் கட்டளைக்குப் பணிந்து நடக்குமெனில் பாதகமேதுமில்லை.
எடுத்துக்காட்டாக போக்குவரத்திற்குப் பயன்படும் வாகனங்களை எடுத்துக் கொண்டோமெனில் அவை நம் இலகுவான பயணத்திற்கு மிகவும் உதவுகின்றன. தூரங்களை எளிதில், விரைவில் கடக்க உதவுகின்றன.
விபத்துகள் ஏற்படுவது உண்மை எனினும் அவற்றிற்கான காரணம் அவ்வாகனங்கள் அல்ல. பெரும்பாலும் அவற்றை இயக்கும் மனிதர்கள்தான் என்பது எல்லாருக்கும் தெரியும்.
இன்று நகரங்கள், கிராமங்கள் என வித்தியாசமின்றி அனைத்து பகுதிகளிலும் நீக்கமற நிறைந்துவிட்ட செல்லிடப்பேசிகள், தகவல்தொடர்பு சாதனம் என்பதைத்தாண்டி மிகப்பலவாறான பணிகளைச் செய்யும் ஒரு அற்புத கருவியாக மாறிவிட்டது. மகிழ்ச்சியே!
பேசுவது, பிறரைத் தொடர்பு கொள்வது, நிழற்படங்கள் எடுப்பது, ஒலி - ஒளிப் பதிவுகளை மேற்கொள்வது... ஏன், ஒரு கணினி செய்யும் அத்துணை பணிகளையும் கையடக்கத்தில் செய்வது என்பதில் நமக்கு ஓர் ஆட்சேபணையும் இல்லை.
ஆனால், இந்தக் கணினிகள் மேசையை விட்டு இறங்கி மடிக்கு வந்தன, பொறுத்திருந்தோம். இன்று மடியை விட்டு நமது சட்டைப் பைக்குள் என்றாகி விட்டது. எல்லோரும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால், வீட்டில் இருப்பவர்களுடனோ அல்லது அண்டை வீட்டுக்காரர்களுடனோ அல்லது சக பயணிகளுடனோ என்றால் கிடையாது. எங்கோ இருப்பவருடன் இடைவிடாத பேச்சு - மூச்சு விடாமல் பேச்சு.
பேருந்து ஓட்டுநர்களால் பேருந்தை இயக்க முடியாத அளவுக்குக் கூச்சல், பணியிடங்களில் பணி செய்யாமல் விடாத தொலை பேசித்தொல்லை என இருந்த செல்லிடப்பேசிகள் இன்று ஒரு விளையாட்டுச் சாதனமாக உருவெடுத்து, வயது வரம்பின்றி அனைவரும் தங்களது செல்லிடப்பேசிகளின் தொடுதிரையைத் தொட்ட வண்ணம் உள்ளனர்.
ஆம் செல்லிடப்பேசி, விளையாட்டு என்ற திரையில் இளைஞர்களை, மாணவர்களை மயக்கி மண்டியிடச்செய்து மழுங்கடித்து வருகிறது.
இந்த விளையாட்டுகள் போதாது என சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அறிமுகமாகியுள்ளது "போகிமான் கோ' எனப்படும் செல்லிடப்பேசியில் மூலம் விபரீத விளையாட்டு.
நியாண்டிக் நிறுவனத்தாரின் போகிமான் வரிசை விளையாட்டுகள் ஏற்கெனவே குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. இந்த விளையாட்டுகளை ஆட ஆரம்பித்துவிடின் அவற்றிலிருந்து வெளிவருவது மிகவும் கடினம்.
இப்பொழுது இதே நிறுவனம், போகிமான் கோ என்ற புதிய விளையாட்டை வெறும் ஐந்து நாடுகளில் இந்த மாதம்தான் அறிமுகம் செய்தது.
கடந்த ஆண்டு நிலவரப்படி ஐரோப்பாவில் உள்ள இருபத்து ஆறு நாடுகளிலும் அதிகாரப்பூர்வமாக இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உலக நாடுகள் அனைத்திலும் இந்த விளையாட்டு இணையம் மூலமாகக் கிடைக்கும்.
இந்தப் புதிய விளையாட்டு செல்லிடப்பேசிகளின் தொடு திரைகளோடு நிற்பதில்லை. விளையாடுபவர் அவருக்குப் பிடித்த அவதார்போகிமானை உருவாக்கிக்கொள்ள இயலும். உண்மையான கட்டடங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், ஏன் தடை செய்யப்பட்ட இடங்கள் என எங்காவது "போகிமான் கோ' தோன்றும்.
அந்த இடத்திற்கு பயணித்து போகிமான் கோவைப் பிடிப்பதே இந்த விளையாட்டின் புதுமை. இதற்கு இணையத்தொடர்புடன் கூடிய ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகள் அவசியம்.
அறிமுகப்படுத்தப்பட்ட மாதத்திலேயே விபத்துகளை வரவழைத்துவிட்ட போகிமான் கோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனினும் "யூ ட்யூப்' வழியாக பதிவிறக்கம் செய்து பல்லாயிரக்கணக்கானோர் விளையாட ஆரம்பித்து விட்டனர்.
சாலைகளில் வரக்கூடிய வாகனங்கள் இவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆபத்துகளை உணராமல் கைகளில் செல்லிடப்பேசிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பொது இடங்களில் குழும ஆரம்பித்து விட்டனர்.
மக்களை பைத்தியமாக்கும், அடிமை யாக்கும் இந்த விளையாட்டை தடுக்க - மட்டுப்படுத்த அரசு, கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், மருத்துவர்கள், மின்னணுப் பொறியாளர்கள் என அனைவரையும் ஆலோசித்து நடவடிக்கை எடுத்தால் நல்லது.

நீட் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப்படிப்பு: சட்டப்பேரவையில் இன்று சட்டமுன்முடிவு

By DIN  |   Published on : 31st January 2017 10:04 AM  
tngov
சென்னை: தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) இல்லாத மருத்துவப் படிப்புகளுக்கு வழிவகை செய்யும் சட்டமுன்முடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை தொடர்பாக "நீட்' தேசிய தகுதித் தேர்வை எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர கண்டிப்பாக "நீட்' தேர்வை எழுத வேண்டும்.
இந்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு நீட் (NEET) நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்முடிவை தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறது.
கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு துணைசெய்யும் வகையில் பழைய முறையையே பின்பற்றி மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  இந்த சட்ட முன்முடிவை தாக்கல் செய்கிறார். பின்னர், இந்த சட்ட முன்முடிவை அரசு தாக்கல் செய்வதற்கான காரணம் விளக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இது பற்றிய விவாதமும் நடைபெறும் என்று கருதப்படுகிறது.
தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (என்இஇடி) முறையில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமிழக உறுப்பினர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
புதுவை மாணவர்கள், தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு கல்வி வாரியப் பாடப் பிரிவுகளைப் படிப்பதால் "நீட்' தகுதித் தேர்வால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால்தான்,  "நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளித்து முதல்வர் வி.நாராயணசாமி தீர்மானம் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RGUHS students, faculty move HC against shift to Ramanagaram

Bengaluru, Jan 31, 2017, DHNS
 
The High Court of Karnataka has ordered that emergent notices be issued to the state government, the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) and the Public Works Department on a petition against the gazette notification to shift the varsity’s campus from Bengaluru to Ramanagaram.
The petition, filed by students and faculty at the RGUHS, argues that the government “erred” in its decision to relocate the university without assessing the difficulties that the employees, faculty and students would face. Not only that, the government “disregarded” the fact that the university utilises its own funds to provide the best infrastructure for students and employees, and that the government has not funded any of the activities of the university.

The university will function out of the deputy commissioner’s office in Ramanagaram till it gets a permanent campus.

The petitioners said it would be a burden on the university if it has to spend on the infrastructure in a temporary building and then spend on a permanent campus on the assumption that the acquired land would be free from litigation.

The petitioners told the court they are concerned about the difficulties that would arise from the relocation of the university’s campus, and sought stay on the notification.

MBBS students to protest against NEXT exam tomorrow

Bengaluru, Jan 31, 2017, DHNS
According to the proposal, students are mandated to clear NEXT to obtain licence to practice. File photo
MBBS students from across the state will protest on Wednesday opposing to the proposed National Exit Test (NEXT). The students will be joined by the Indian Medical Association (IMA). NEXT is part of the proposal mooted by the Union Health Ministry as part of the amendments to be introduced in the Indian Medical Council (Amendment) Act. According to the proposal, students are mandated to clear NEXT to obtain licence to practice.

Students believe that taking an entrance exam in addition to their MBBS exams would be taxing. Dr Manoop Kumaraswamy, member, Young Doctors’ Association, IMA, said, “What is the necessity for an exam when we are already preparing for NEET PG? Students will have to clear yet another exam. Instead, the government can just refine the existing system. Besides, we are told that even Ayush doctors clearing this exam will be granted permission to prescribe allopathy medicines after a bridge course.”

Dr Rajashekara Bellary, president, IMA Karnataka, said, “Those who have cleared MBBS are expected to take the exam. What is the use of having studied the course for five-and-a-half years then? It is an unnecessary burden on students. Students will also lose faith in the system of study then.”

In a memorandum, the students have said, “The examinations are conducted by universities which are recognised by the University Grants Commission and MBBS examination is therefore rightfully a qualifying examination for the degree of Modern Medicine. Therefore, introducing NEXT as a qualifying examination is unnecessary and makes the university examination redundant.”

They also say that converting a competitive examination into both a qualifying examination and competitive examination for post graduation is not in the students’ interest as the structure and objective of a qualifying examination for admission to post graduation is different from a qualifying examination that is meant for assessing the minimum qualification required to receive the degree.
ரூ.10 நாணயம் படுத்தும் பாடு: கலெக்டரிடம் வாலிபர் புகார்
சேலம்,:வங்கியில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக கூறி, கடைக்காரர் ஒருவர், அவற்றை மாலையாக அணிந்து வந்து, சேலம் கலெக்டரிடம் புகார் அளித்தார்.

சில நாட்களாக, 10 ரூபாய் நாணயங்களை, வியாபாரிகள் முதல் வங்கிகள் வரை, வாங்க மறுப்பதால், மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது.சேலத்தைச் சேர்ந்த சேகர், 32, என்பவர், 10 ரூபாய் நாணயங்களை, பிளாஸ்டிக் பைகளில் மாலை போல் தயாரித்து, உடல் முழுவதும் அணிந்தபடி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.சேகர் கூறியதாவது:
கறிக்கடை வைத்துள்ளேன். வியாபாரம் மூலம், 2,000 ரூபாய் வரை, 10 ரூபாய் நாணயங்கள் சேர்ந்தன. அவற்றை, வணிக நிறுவனங்களோ, தனி நபர்களோ வாங்க மறுத்தனர்.
மல்லுார் கனரா வங்கியில், என் வங்கி கணக்கில் டிபாசிட் செய்ய சென்றேன். ஆனால், வங்கியில் வாங்க மறுத்தனர். இது தொடர்பாக, கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் சம்பத் கூறுகையில், ''ரிசர்வ் வங்கி அறிவுரைப்படி, 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டு
உள்ளது. அவற்றை, வங்கி மற்றும் நிறுவனங்கள் வாங்க மறுக்கக்கூடாது என்பதும், அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.எச்சரிக்கைசேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பாண்டியன் கூறியதாவது:வங்கிகள், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்ததால், வேறு வழியின்றி, நாங்களும் வாங்கவில்லை. தற்போது, அந்த நாணயங்களை, பெற்று கொள்வதாக, வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே, அரசு பஸ்களில், இனி, 10 ரூபாய் நாணயங்கள் ஏற்று கொள்ளப்படும். பயண சீட்டுக்கான முழு தொகையை கூட, 10 ரூபாய் நாணயங்களாக, பயணிகள் வழங்கலாம்.இது தொடர்பாக, 32 கிளை மேலாளர்களுக்கும் தெரியப்படுத்தி, அறிவிப்பு பலகை மூலம், 8,000 கண்டக்டர்களுக்கு தகவல் கொடுக்க,
உத்தரவிடப்பட்டுள்ளது.அதையும் மீறி, 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால், புகார் செய்யலாம். கண்டக்டர்கள் மீது, கடும் நடவடிக்கை பாயும்.
இவ்வாறு அவர் கூறினார்
வெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா?

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்களுக்கு, அரசு கல்லுாரிகளில் தனி இட ஒதுக்கீடு கிடையாது,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் தெரிவித்து உள்ளார்.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், கடந்த ஆண்டு மட்டும், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல், அனைத்து மாநில மாணவர்களும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்க முடியுமா என்பது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் கூறியதாவது: வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், இந்தியாவில் நடக்கும், 'நீட்' தேர்வில் பங்கேற்கலாம். அவர்களுக்கு, வெளிநாடுகளில் தேர்வு மையங்கள் கிடையாது. அதில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றால், மத்திய அரசின் ஒதுக்கீட்டிலோ, தமிழக ஒதுக்கீட்டிலோ இடங்கள் கிடையாது. ஆனால், அவர்களால், தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெற முடியும். அதற்கு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Monday, January 30, 2017

பாதுகாப்பில்லா பெட்டகம்

By வாதூலன்  |   Published on : 28th January 2017 01:38 AM  | 
இரண்டு வாரம் முன்பு, சில ஏடுகளிலும் ஊடகங்களிலும் வெளியான செய்தி பலரையும் பதற்றப்பட வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

சென்னையில் வங்கிக் கிளையொன்றில், பாதுகாப்புப் பெட்டகங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதுதான் அந்தச் செய்தி.
இதுபோன்ற கொள்ளை சம்பவம் இதுவரை அறிந்தே இராத ஒன்று. எனவேதான், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த வங்கிக் கிளை, "அவசர விடுமுறை'யை அறிவித்து, வாடிக்கையாளர்களை அருகிலிருக்கும் வேறு கிளைகளை அணுகுமாறு கோரிக்கை விட்டிருக்கிறது.
"பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம், சேதம் எவ்வளவு என்பதை ஆராய்ந்து வருகிறோம்' என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வங்கியின் அறிக்கை மழுப்பலாகத் தெரிந்தாலும், நடைமுறை அதுதான்.

வங்கியில் பாதுகாப்பு பெட்டக சேவை என்பது, மிகத் தனியான வகை. இதில், வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்கும் இடையே உள்ள உறவு, பிற கணக்குகளில் இருப்பது போலல்ல, கிட்டத்தட்ட இது வீட்டு உரிமையாளர்களுக்கும் வீட்டில் குடியிருப்போருக்கும் நிலவும் உறவு போன்றதுதான்.

ஒரு வீட்டை ஒருவருக்கு வாடகைக்குக் கொடுப்பது போல, வங்கி மேலாளர் பெட்டகத்தை ஒரு வாடிக்கையாளருக்கு வாடகைக்குக் கொடுக்கிறார். இல்லத்துக்கு முன்பணம் கொடுப்பது போல, பெட்டகத்துக்கும் நாலு மாச அட்வான்ஸ் தர வேண்டும் (வேறு வகையான டெபாஸிட்டுகள் நிறைய இருந்தால்கூட இதற்கான முன்பணம் அவசியமென்று வங்கி வற்புறுத்துகிறது).

அவ்வப்போது, வீட்டு வாடகை உயர்த்தப்படுவதுபோல வாடகை பெட்டக அளவுக்குத் தக்கபடி வாடகைத் தொகை மாறுபடும், வீட்டு உடமையாளருக்கு, வீட்டுக்குள் வைத்திருக்கும் பொருள்கள் என்னென்ன என்பதை தெரிவிக்க வேண்டியது எப்படி அவசியமில்லையோ, அதேபோல, பெட்டகத்தில் உள்ள பொருள்களின் விவரத்தை வாடிக்கையாளர் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

பெட்டகத்தில் இன்னின்ன பொருள் களைத்தான் வைக்க வேண்டும் என்கிற வரையறை எதுவும் கிடையாது. நகை, பாத்திரங்கள், உயில், வீட்டுப் பத்திரங்கள் என்று எதை வேண்டுமானாலும் வைக்கலாம் (சேதம் விளைவிக்கக் கூடிய சாமான்கள் இருக்கக் கூடாதென்று ஒப்பந்த படிவத்திலேயே ஒரு ஷரத்து உண்டு).

பெட்டகத்தைத் திறப்பதற்கு, வாடிக்கையாளருடன் வங்கி அதிகாரியும் உடன் செல்வார். அதிகாரியிடம் இருக்கும் Master Key யும், வாடிக்கையாளரின் சாவியும் இணைந்து செயல்பட்டால்தான், லாக்கரைத் திறக்க இயலும்.
பின்னர், நிதானமாக வாடிக்கையாளர் தேவையானவற்றை எடுத்தோ, வேறு பொருள்களை வைத்தோ, பூட்டிக் கொள்ளலாம். அப்போது அதிகாரி யாரும் அருகிலிருக்க மாட்டார். இதுதான் நடைமுறை.

பெட்டகத்தை உடைத்துத் திறக்க மிக அரிதான தருணங்களில் வங்கிக்கு உரிமை உண்டு. ஒரு குறிப்பிட்ட காலம் கடந்தும் கட்டணம் செலுத்தாமலிருந்தால் -- கடிதம், பதிவுத் தபால் எல்லாம் போட்டும் பதில் இல்லாமலிருந்தால் -- வங்கி அதிகாரி ஒரு சாட்சி முன், அதை திறந்து பார்ப்பார் (நூற்றுக்கு 99 சதவிகிதம் அதில் ஏதும் இருக்காது, பெட்டக வாடிக்கையாளர் எங்காவது வெளிநாட்டிலிருந்து, மறந்தும் போயிருப்பார்!).
வேறொரு சூழலிலும் பெட்டகத்தை உடைக்கலாம். புலனாய்வுத் துறையிலிருந்தோ, வருமான வரி அலுவலகத்திலிருந்தோ நோட்டீஸ் வந்தால், அவர்கள் முன்னிலையிலேயே உடைப்பார்கள்.
1976-ஆம் ஆண்டு அவசர நிலையின்போது, வருமான வரி அதிகாரிகள் ஒரு சிறிய பெட்டகத்தை உடைத்து, அதிலுள்ள கட்டு கட்டான நோட்டுகளை அரசு கணக்கில் வரவு வைத்தார்.

இன்னொன்றையும், இங்கு அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். பெட்டகத்திலுள்ள பொருள்களின் மீது வங்கிகளுக்கு உரிமை கிடையாது; அதாவது வாராக் கடன் உள்ள வாடிக்கையாளர் பெட்டகத்தில் நகையோ வேறு வீட்டு பத்திரமோ வைத்திருந்தால், அதை கடனுக்குச் சரி செய்யக் கூடாது.
பொதுவாக, வங்கிகளில் இரும்பறையில் (Double Lock) உள்ள தொகை; அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகள் இவற்றுக்குக் காப்பீடு உண்டு. குத்து மதிப்பாகச் சில கோடிகளுக்குக் காப்பீடு எடுத்திருப்பார்கள்.
இதுதவிர, வங்கியிலிருந்து வேறு இடத்துக்குக் கொண்டு செல்லும் பணத்துக்கும் (Cash in trsnsit) காப்பீடு உண்டு. ஆனால், பெட்டகத்துள் இருக்கிற பொருள்களுக்கு காப்பீடு கிடையாது.

ஏனெனில் என்னென்ன வைக்கப்பட்டிருக்கின்றன, மதிப்பு எவ்வளவு என்பது வாடிக்கையாளருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஆயிற்றே?
கூட்டுறவு வங்கியில் சில மாத முன் நிகழ்ந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். வாடிக்கையாளர் ஒருவர் தன் பெட்டகத்திலுள்ள ஆவணங்களைக் கறையான் அரித்து விட்டதாக வழக்கு கொடுத்து, வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இதில் வங்கி செய்த தவறு, ஏற்கெனவே அவர் புகார் தந்தும் கண்டு கொள்ளவில்லை. நட்ட ஈடாக வங்கி ஒன்றரை லட்ச ரூபாய் வழங்குமாறு நீதியரசர் தீர்ப்பு அளித்திருக்கிறார்.

அண்மையில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் ஒருவர் அல்ல; பல வாடிக்கையாளர்கள். வங்கியில்
காவலாள் இல்லையா? எச்சரிக்கை மணி வைக்கப்படவில்லையா? இருந்தும் அது செயல்படவில்லையா? வங்கியின் பாதுகாப்பு அம்சத்தில் ஏதாவது பெரியதவறு இருந்ததா?

பொதுவாக, வீட்டில் திருட்டுப் பயம் உண்டென்ற அச்ச உணர்வில்தான், வங்கியில் பெட்டகத்தை மக்கள் நாடுகிறார்கள், பாதுகாப்பு பெட்டகத்துக்கே பாதுகாப்பு இல்லையானால்? வங்கி நிர்வாகம் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயம் இது

Wednesday, January 25, 2017

ஜல்லிக்கட்டு: தமிழக அரசின் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு; உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் மனு கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மனு தாக்கல் செய்தன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் கடந்த திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு மிருக வதை தடுப்புச் சட்டத்தில் கொண்டுவந்த திருத்தத்தை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தன.

தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, திங்கள் கிழமையன்று விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. விலங்குகள் நல வாரியம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஆனந்த் குரோவர் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து..

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை), ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைகள் வாபஸ் பெறப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

மத்திய அரசு அறிவிக்கையின் விவரம்:

மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் காளையை சேர்த்து கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நிரந்தர தடை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேவியட் மனுக்கள்:

இதற்கிடையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக யாரேனும் வழக்கு தொடர்ந்தால் தமிழக அரசைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு மட்டுமல்லாது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பில் 70 கேவியட் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்தை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

NEET attempts capped at 3; age at 25 for unreserved

Times of India

MUMBAI: Medical aspirants across India can now only take three shots at the National Eligibility cum Entrance Test(NEET), a cap introduced to discourage the thousands who keep trying their luck at the examination. Also, candidates must fulfil a new age criterion if they wish to sit for the medical and dental exam.

The decision was taken at a University Grants Commission (UGC) meeting on Tuesday in Delhi. The minimum age to appear for NEET is 17 years. The maximum age for open category students is 25 years, and 30 years for the reserved category. To date, there has never been a maximum age defined to take NEET, nor has there been a limit on the number of attempts. "This is a good decision," said Dr Pravin Shingare, director at the Maharashtra directorate of medical education and research (DMER).

"There are some students who keep taking the test, and when they don't make the cut, join a BSc college and keep taking the medical entrance test," he added. In fact, the rule would also bar the faculty of coaching classes who keep on attempting the test to understand its altering pattern. The NEET information brochures contain this information and will be distributed soon. "We often find that coaching classes field candidates and sometimes that leads to fraud and cheating," said an expert. This cap on age and attempts will force candidates to focus on the field where their capability and passion lie, said medical college principals.

Two years ago, it may be recalled, the All India Pre Medical Test had to be conducted again as it was revealed that 90 answers had been transmitted to the candidates during the examination, for a fee of Rs 15 to 20 lakh. The AIPMT-2015 scandal had at least 45 beneficiaries who were supplied with special vests fitted with SIM cards and a bluetooth device, among other equipment, to facilitate the transmission of answers.

While all-India data is unavailable, in Maharashtra, the number of older candidates competing with 17-year-old aspirants has been rising with each passing year. About 12,000 repeat aspirants took the CET in 2007, while in 2008, the number grew to 13,568. According to data collected from the DMER, the oldest candidate was 38 years old and at least another 100 aspirants were in their early 30s.

முக்கிய பிரச்சினைகளை மறக்கடித்த ஜல்லிக்கட்டு போராட்டம்: அடுத்து என்ன செய்யப்போகிறது இளைஞர் பட்டாளம்?

ஜல்லிக்கட்டுக்காக ஒரு வாரமாக மாணவர்களும் இளைஞர்களும் நடத்தி வந்த தன்னெழுச்சிப் போராட்டம், தமிழக அரங்கில் தகித்துக் கொண்டிருந்த பல முக்கியப் பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளி மழுங்கடித்துவிட்டது.

எந்தவிதமான சுயபலனும் எதிர்பாராமல் மாணவர்களும் இளைஞர்களும் கைகோர்த்து நடத்திய மெரினா அறவழிப் புரட்சி, வெற்றி அடைந்திருக் கிறது. அகிம்சையை மிஞ்சிய ஆயுதம் எதுவும் இல்லை என்பதை இந்தப் போராட்டத் தின் மூலம் மீண்டும் ஒருமுறை உலகுக்கே எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள் நம் இளைஞர்கள்.
இது ஒருபுறமிருக்க, ஜல்லிக் கட்டுக்காக நடந்த போராட்டங் களால் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருந்த வேறு பல முக்கியப் பிரச்சினைகள் பின் னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதை யும் உணர முடிகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், ‘‘டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற் கொலை செய்துகொண்டும் அதிர்ச்சியிலும் உயிரிழந்துள்ள னர். இதற்கு தமிழக அரசு என்ன பரிகாரம் தேடப் போகிறது? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம், அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக கிளம்பிய அதிருப்தி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் அரசியல் பிர வேசம் என தமிழக அரசியல் களம் பரபரப்பான நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கியது. ஆனால், ஜல்லிக் கட்டு போராட்டத்தின் தாக்க மானது மற்ற விஷயங்கள் அனைத்தையும் தமிழக மக் களிடம் இருந்து அந்நியப்படுத்தி விட்டது’’ என்றனர்.

ஒதுங்கிக் கொண்ட முகங்கள்

மெரினா கூடிய இளைஞர் கள், முதல்வர் பன்னீர்செல்வம் தங்களிடம் வந்து பேசவேண்டும் என்றனர். ஆனால், முதல்வரோ ஆளும் கட்சியினரோ மெரினா பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அதே நேரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவான பிரபல முகங்கள் சிலர், ‘கட்டுக்கோப்பான இந்த அறவழி போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே நாம் திரும்பிப் பார்க்க வைத் திருக்கிறோம். என்ன ஆனாலும் சரி, நாம் கேட்டது கிடைக்கும் வரை போராட்டத்தை விடக் கூடாது’ என போராட்டக் களத்து இளைஞர்களை உசுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது விவசாயிகள் மரணம் உள்ளிட்ட மற்ற பிரச்சினைகளை மறக்கடிப்பதற்காக இந்தப் போராட்டங்கள் வளர்க்கப்பட்ட தோ என்ற ஐயப்பாடு எழுகிறது. தேவையானபோது போராட்டத்தை வளரவிட்டு, தேவையில்லை என்றதும் போராட்டத்தை கலைக்கக் கிளம்பி விட்டனர். குடிசைக்கும் வாகனங்களுக்கும் தீ வைக் கத் துணிந்தவர்கள், போராட் டக்காரர்கள் மீது ‘சமூக விரோதிகள்’ முத்திரை குத்தி இருக்கிறார்கள். அவர்களு டைய நோக்கம் ஜல்லிக் கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதல்ல.

இனி எந்தப் பிரச்சினைக் காகவும் இளைஞர் படை இப்படி தன்னெழுச்சி யாக திரண்டுவிடக் கூடாது என்ற அதிகார வர்க்கத்தின் தொலைநோக்குத் திட்ட மும் இதற்குள்ளே ஒளிந்திருக் கிறது.
ஆளும் கட்சியை பொறுத்த வரை, மாணவர்கள் போராட்டத் தைக் காட்டி ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசை மடக்கியது, போராட்டத்தை வளர விட்டதன் மூலம் மற்ற பிரச்சினைகளை மறக்க வைத் தது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக் கிறது.
மெரினா களத்தில் ஜல்லிக் கட்டு மட்டுமல்லாது, விவசாயி கள் பிரச்சினை, நதீநீர் பங்கீட்டு விவகாரம், மீனவர் பிரச்சினை, இயற்கை விவசாயம் இத் தனையும் பற்றி ஆழ்ந்து பேசிய இளைஞர் பட்டாளம் அதையெல்லாம் சாதிக்க அடுத்து என்ன செய்யப் போகிறது என எதிர்பார்த்து காத்திருக்கிறது தமிழகம்.

வாழ்க்கைக்கு அடையாளம் கொடுத்த ஆசிரியரை மறக்காத மாணவர்கள்: ஓய்வுபெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாராட்டு விழா

எஸ்.கோபாலகிருஷ்ணன்
விழாவில் பாராட்டு பெற்ற 20 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோ.பாஸ்கரன். உடன், ஓய்வுபெற்ற 18 ஆசிரியர்கள்.

பெற்றோரையும், உறவினர்களையும் தாண்டி மாணவர்களுக்கான சமூக உறவை ஏற்படுத்தித் தரும் உன்னத இடம் பள்ளிக்கூடம். இங்கிருந்துதான் சமூகத்தின் பல் வேறு அம்சங்கள் குறித்து படிக்க வும், படித்தவற்றைக் கொண்டு பக்குவமடையவும், கற்ற கல்வி யால் வாழ்க்கையை நன்கு அமைத் துக்கொள்ளவும் கற்றுக்கொள்கி றார்கள்.

மாணவப் பருவத்தில் பள்ளிக் கூடம் கசந்தாலும், படித்து நல்ல நிலைக்குச் செல்ல அச்சாணியாக இருந்தது பள்ளிக்கூடமும் அங்கு கல்வி போதித்த ஆசிரியர்களும் தான் என்பதை உணர்ந்து, அவர் களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், அவர்களது அர்ப்பணிப்பை அங்கீ கரிக்க வேண்டும் என்று சமூகத் தில் நல்ல நிலைக்கு வந்த ஒவ் வொரு பழைய மாணவரின் மனசாட்சியிலும் அசரீரியாக ஒலித்துக்கொண்டிருக்கும்.

அந்த அசரீரியை உண்மையாக் கிய நிகழ்வாக இருந்தது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத் துள்ள ஆலங்கோட்டை திருவள்ளு வர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி 20 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற தலைமையாசிரி யருக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பாராட்டு விழா.

ஆசிரியர்- மாணவர் உறவைப் பறைசாற்றும் இந்த நெகிழ்ச்சியான விழாவின் நாயகர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோ.பாஸ்கரன். மன்னார்குடியை அடுத்துள்ள ஆலங்கோட்டையில் உள்ள திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1964-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டுவரை ஆசிரி யராகவும், தலைமை ஆசிரியராக வும் பணியாற்றியவர்.

இவரிடம் படித்த மாணவர்கள் பல்வேறு அரசுத் துறைகளி லும், வெளிநாடுகளிலும் பணியாற்று கின்றனர். கண்டிப்பு, நேர்மை, அரவணைப்பு ஆகிய மூன்றையும் தனது கொள்கையாகப் பாவித்து பணியாற்றிய பாஸ்கரன், அப்பள்ளி உயர்நிலை, மேல்நிலை என தரம் உயரக் காரணமானவர்களில் முக்கியப் பங்காற்றியவர்.

ஒவ்வொரு மாணவரைப் பற்றி யும் அவர்களின் குடும்பப் பின்ன ணியுடன் தெரிந்து வைத்திருப்பார் இவர். கல்வி, விளையாட்டில் நகர்ப்புறப் பள்ளிகளுக்கு இணை யாக இந்தப் பள்ளியை மேம்படுத்தி யவர். பள்ளியின் அருகிலேயே வசிக்கும் கோ.பாஸ்கரன், தலைமை ஆசிரியராகப் பணியாற்றியபோது வீட்டிலிருந்து கிளம்பிவிட்டார் என்ற தகவல் தெரிந்தால்போதும், பட்டாம்பூச்சிகளாகப் பள்ளி வளாகத்தில் அங்குமிங்கும் சுற்றித் திரியும் மாணவ, மாணவிகள், அடுத்த நிமிடம் அமைதியாகச் சென்று வகுப்பறையில் ஆஜராகி விடுவார்கள்.
மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் பெற்றோருக்கும் தக்க வழிகாட்டல்களைத் தந்து ஆசிரியராக மட்டுமல்லாமல், ஊரில் அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் கோ.பாஸ்கரன் என்று அவரது பெருமைகளைப் பட்டியலிடுகின்றனர், இவரிடம் படித்த பழைய மாணவர்கள்.
இவரிடம் படித்து ஆசிரியரான பலர் தற்போது தலைமை ஆசிரி யர்களாகப் பணியாற்றுகின்றனர். பாராட்டு விழாவில் கலந்துகொண்ட இந்த தலைமை ஆசிரியர்கள், நிகழ்ச்சியில் பேசும்போது, “பாஸ் கரன் சார், தலைமை ஆசிரியர் களுக்கெல்லாம் தலைமை ஆசிரி யர்” என்று பாராட்டியது பொருத்த மாக இருந்தது.
கோ.பாஸ்கரன்

இதுகுறித்து, பாராட்டு விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒரு வரும் மெக்கானிக்கல் இன்ஜினீய ரிங் முடித்து, சிங்கப்பூரில் பணி யாற்றிவிட்டு தற்போது விவசாயம் செய்துவரும் பாலமுருகன் கூறும் போது, “கடந்த 1997-ம் ஆண்டு பணி ஓய்வுபெற்றபோது, நாங்கள் பாராட்டு விழா நடத்துகிறோம் என்று கேட்டபோது, வேண்டாம் என்று மறுத்துவிட்டார். தொடர்ந்து, இவர் மறுத்து வந்த நிலையில் பள்ளியில் பணி ஓய்வுபெறும் மற்ற ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடத்த இயலாமல் போய்விட்டது.

இந்தநிலையில், அவரிடம் படித்து நல்ல நிலையில் உள்ள பலரும் ஒன்றுசேர்ந்து சென்று, பாஸ்கரன் சாரைச் சந்தித்து அனுமதி கேட்டோம். எங்களின் விருப்பத்தையும், அதன் தீவிரத்தை யும் உணர்ந்து ஒப்புக்கொண்ட அவர், விழாவில் தனக்கு ஒரு சால்வை மட்டும் போட்டால் போதும், பரிசுப்பொருட்கள் எதுவும் தரக்கூடாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.
இருப்பினும், அவரிடம் படித்த பழைய மாணவர்கள் நிதியை வாரி வழங்கினர். அந்த நிதியை பாஸ்கரன் சாரின் பெயரால் அறக்கட்டளை தொடங்கி, இப் பள்ளியில் படிக்கும் மாணவர் களைக் கல்வியில் மேம்படுத்த, பரிசுகளை வழங்கி ஊக்கப் படுத்தலாம் என திட்டமிட்டுள்ளோம். எங்கள் தலைமை ஆசிரியரைப் பாராட்டியதுடன், 1997-ம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வுபெற்ற இப்பள்ளி ஆசிரியர்கள் 18 பேரையும் பாராட்டியுள்ள மன நிறைவு இந்த விழாவால் ஏற்பட்டுள்ளது” என்றார்.
மாணவர்களின் நலனுக்காகப் பாடுபட்ட தலைமை ஆசிரியருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திர ளாகக் கலந்துகொண்டு, அவரைப் பாராட்டினர்

காவல் துறை நம் நண்பன்தானே?

வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட ‘ஜல்லிக்கட்டுப் போராட்டம்’ ரத்தக் கறையோடு முடிந்திருக்கிறது. தொடக்கம் முதல் அறவழியில் சென்ற போராட்டம் இது. லட்சக்கணக்கானோர் தன்னெழுச்சியாகத் திரண்டதன் விளைவாக தமிழக அரசு இது எந்த விதத்திலும் வன்முறையை நோக்கி நகர்ந்துவிடக் கூடாது என்று காவல் துறையை முழுமையாகக் கட்டுப்படுத்தியது. விளைவாக, அமைதி வழியில் போராடிய இளைஞர்களிடம் இதுவரை காணாத அளவுக்கு அசாதாரண ஒத்துழைப்பைத் தமிழகக் காவல் துறையினர் வழங்கினர்.

போராட்டத்தில் ஈடுபடுவோர் எல்லாம் அரசுக்கும் காவல் துறைக்கும் எதிரிகள் அல்ல; உண்மையில் அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்; ஜனநாயகத்துக்கு வலு சேர்ப்பவர்கள் என்பதைத் தமிழகக் காவல் துறை அருகிலிருந்து உணர இது ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றும்கூடச் சொல்லலாம். போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, தன்னாலான உச்சபட்ச முயற்சியாக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றியது தமிழக அரசு.

போராட்டத்தை அத்துடன் முடித்திருந்தால் ஒரு நல்ல நிறைவை அது தந்திருக்கும். பெரும்பாலானோர் அந்த முடிவையே தேர்ந்தெடுத்தனர் என்றும்கூடச் சொல்லலாம். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர். ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் கூடிய சென்னை மெரினா கடற்கரையில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளான திங்கள்கிழமை பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர். எனினும் சில ஆயிரம் இளைஞர்கள் மிச்சம் இருந்தனர். அவசரச் சட்டம் நிரந்தரத் தீர்வல்ல எனும் கருத்து அவர்களிடம் இருந்தது.
இதனிடையே மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு போராட்டத்தை வேறு திசை நோக்கித் திருப்பும் சமூக விரோத சக்திகள் சிலவும் அவர்கள் மத்தியில் ஊடுருவியிருந்தன. குடியரசு தினம் நெருங்கி வரும் சூழலில், போராட்டத்தை விரைவில் முடிக்கும் அவசரத்தில் இருந்த அரசு, இந்தச் சட்டம் தொடர்பில் விளக்கம் தர அரசு வெவ்வேறு ஆட்கள் மூலம் முயன்றாலும், நேரடியாக ஆட்சியாளர்கள் தரப்பில் யாரும் சென்று பேச முற்படவில்லை. இது அரசு செய்த பெரும் பிழையானது.

மெரினா கடற்கரையில் மிச்சமிருந்த மாணவர்களை வெளியேற்றும் நிர்ப்பந்தத்தில் இருந்த காவல் துறையினர் தன் முகத்தை மாற்றத் தொடங்கினர். இதனிடையே சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் தடைகளை உண்டாக்கி போக்குவரத்தை முடக்கினர் சிலர். நிச்சயமாக அவர்கள் அதுவரை போராட்டத்திலிருந்த மாணவர்கள் அல்லர். அவர்கள் வீதியில் இறங்க, இதற்காகவே காத்திருந்ததுபோல கடும் தாக்குதலில் இறங்கினர் காவல் துறையினர். விளைவாகப் பெரும் கலவரம் வெடித்தது.

108 அரசு பஸ்கள் கல்வீச்சுக்கு உள்ளாகின. காவல் துறை, தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 61 வாகனங்கள் எரிக்கப்பட்டன. கூடவே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் வாகனங்களும் படகுகளும் கடைகளும் வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகின. இதன் தொடர்வினையாக மாணவர்கள் மீதும் காவல் துறை தாக்குதலை நடத்தியது.

இந்தப் போராட்டம் நெடுகிலும் காவல் துறை மிகுந்த நெருக்கடிகளையும் பணிச்சுமையையும் எதிர்கொண்டது வெளிப்படை. சொல்லப்போனால், அரசுத் தரப்பு தோற்ற இடங்களில் காவல் துறை நிறுத்தப்பட்டிருந்தது. கறைகள் ஏதுமின்றி காவல் துறை முழுவதுமாக மாணவர்களை வெளியேற்றியிருந்தால், அது வரலாற்றில் பேசப்படும் காரியமாக இருந்திருக்கும். காவல் துறை அந்த வாய்ப்பைத் தவறவிட்டது. பிரச்சினை அது மட்டும் அல்ல. கலவரங்களில் பல இடங்களில் காவல் துறையினரே கலவரக்காரர்களாக உருமாறியதை சமூக வலைதளங்களில் வெளிவரும் படங்களும் காணொலிகளும் அம்பலப்படுத் துகின்றன. பொதுமக்களின் உடைமைகளுக்குக் காவல் துறையினர் தீ வைக்கும் காட்சிகள், வாகனங்களை நொறுக்கும் காட்சிகள், வீடு புகுந்து பெண்களைத் தாக்கும் காட்சிகள் அதிரவைக்கின்றன. மிக மிக அபாயகரமான போக்கு இது.

காவல் துறையினர் மீதான புகார்களின் தொடர்ச்சியாக “இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும்” என்று சொல்லியிருக்கிறார் சென்னைப் பெருநகரக் காவல் ஆணையர் ஜார்ஜ். இவை வெறும் சம்பிரதாய வார்த்தைகளாகக் கூடாது. தீவிரமான விசாரணை வேண்டும். கலவரத்தில் இறங்கிய காவலர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கூடவே மாணவர்களின் லட்சியப் போராட்டத்தின் ஊடாக நுழைந்து, தத்தமது சித்தாந்தங்கள், தனிப்பட்ட வேட்கைகளுக்கு மாணவர்களைப் பகடைக்காய்களாக்கி, வன்முறையை நோக்கி உள்ளும் புறமுமாக அவர்களைத் தள்ளியவர்கள் ஒவ்வொருவரையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக நகரை வன்முறையை நோக்கித் தள்ளியவர்கள் யார் என்பதும் அதில் கலவரத்தில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு என்ன பங்கியிருந்தது என்பதும் தெரிய வேண்டும். ‘காவல் துறை உங்கள் நண்பன்’ எனும் வாக்கியம் சாதாரண தருணங்களில் அல்ல, இக்கட்டான தருணங்களில் காவல் துறையினர் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டே அளவிடப்படும் என்பதைக் காவல் துறையினர் உணர வேண்டும்!

IRCTC to launch first pilgrim train for North East region Read more at: http://www.moneycontrol.com/news/wire-news/irctc-to-launch-first-pilgrim-train-for-ne_8280501.html?utm_source=ref_article

IRCTC to launch first pilgrim train for North East region Originating from Guwahati, the train will be launched on February 17 and cover pilgrimage sites in West Bengal and Odisha.

 These sites include Gangasagar, Sri Swamy Narayan Temple, Kalighat and Birla Temple in West Bengal as well as Sri Jagannath Temple, Konark Temple and Lingaraj Temple in Odisha. | 1 Comments IRCTC will launch its first pilgrim train for the north east region next month which will take passengers to destinations like Jagannath and Konark temples.

 This will be a six nights and seven days package for a total amount of Rs 6,161. Originating from Guwahati, the train will be launched on February 17 and cover pilgrimage sites in West Bengal and Odisha. These sites include Gangasagar, Sri Swamy Narayan Temple, Kalighat and Birla Temple in West Bengal as well as Sri Jagannath Temple, Konark Temple and Lingaraj Temple in Odisha. The package includes travel in sleeper class, all meals in the tour, non-ac tourist buses for local sightseeing, accommodation in dormitories/dharamshalas among others. 

"Buoyed by the central government's support, the inaugural run of the tourist train will set pace to the promotion of north eastern region which is rich in cultural heritage and biodiversity," an official press statement said. The ministry said this was in line with the "PM's focus on removing NE isolation through pro-active Act East Policy". 

This package is part of IRCTC's pilgrim tourist scheme which connects various pilgrim destinations as part of its different packages. Tourists who intend to avail the services may book the tickets online from www.irctctourism.com or through registered e-ticket agents or from any office of IRCTC.

Read more at: http://www.moneycontrol.com/news/wire-news/irctc-to-launch-first-pilgrim-train-for-ne_8280501.html?utm_source=ref_article

Delay in info no ground for late plea, rules HC

Saurabh Malik
Tribune News Service
Chandigarh, January 14

Delay in gathering information under the Right to Information Act is no ground for late filing of plea, the Punjab and Haryana High Court has asserted.
In a significant judgment, the High Court has made it clear that the clock does not stop while a person is gathering information under the RTI Act.
Filing the petition after the specified time limit on the pretext of searching information under the Act can prove fatal to the case.
The ruling by Justice Rajiv Narain Raina came on a petition filed by Sapna Kakkar against Haryana and another respondent.
Claiming the post of dental surgeon Class II in the state Health Department, the petitioner had questioned the OMR sheet, question paper and answer keys in the written examination.
The Bench was told that the advertisement was issued on November 25, 2013, and the screening test was held on July 6, 2014.
The petitioner appeared in the examination and pursued her remedies under the Right to Information Act, 2005, for supply of documents to help her to file a writ petition.
Taking up the matter, Justice Raina asserted that the request to the Haryana State Information Commission was made under Act for the first time on July 7, 2014.
It was now two and a half years since the request was made. It was undisputed that the recruitment process had come to an end and appointment offered to selected candidates.
“Searching for material under the Right to Information Act does not stop the running of limitation delay and laches. If the petitioner was depending on information to file the petition questioning the questions without the answer keys in hand, she still could have approached this court.
“She could have pressed for directions to the respondents to achieve what she was unable to achieve under the Act since this court exercises jurisdiction of issuing writs of certiorari and can always order the state or commission to supply information, documents and material to the petitioner.
“Not having done that, this petition suffers from delay and laches. Laches is negligence in pursuing remedy for relief from where real relief can come. The remedy provided under the Right to Information Act is not a relief-based remedy.
“The purpose is only to compel the department to supply information without making any comment. I will, therefore, not interfere in this matter at this belated stage in direct recruitment and will dismiss the petition,” the court observed.

NEWS TODAY 22.04.2024