Saturday, January 14, 2017

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில்: இன்று இயக்கப்படுகிறது

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையிலான முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று இயக்கப்படுகிறது. மேலும், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றுமொரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில்
ரயில் எண் 06092: ஜனவரி 14 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில் நாகர்கோயில் டவுன், திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், செங்கநூர், திருவலா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நிற்கும்.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி முன்பதிவில்லா சிறப்பு ரயில்
ரயில் எண் 06091: ஜனவரி 15 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாசலம், அரியலூர், திருச்சி, திண்டுகல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
Dailyhunt

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...