Wednesday, January 18, 2017

நாளை டெல்லியில் அவசர கூட்டம் தொடர் போராட்டம் - எதிரொலி

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.அலங்காநல்லூரில் 3வது நாளாகவும், சென்னை மெரீனா, நெல்லை,விழுப்புரம், மதுரை, திருச்சி, சேலம், கோவையில் 2வது நாளாகவும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியும், பீட்டாவுக்கு தடையும் கொண்டு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாகவும், அதுவரை, தங்களின் போராட்டம் தொடரும் எனவும் தமிழ முதல்வர் பன்னீர் செல்வம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினர்.இது தொடர்பாக முதல்வர் பன்னீர் செல்வம் தமிழக இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கிறேன் ஆகையால் மாணவர்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக போலீசார் முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதால் போராட்டத்தை கைவிட போலீசார் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என மாணவர்கள் உறுதியாக கூறிவிட்டனர். நாளை டெல்லியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தலைமையில் அவசர கூட்டம் நடக்க உள்ளது. மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் அந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

Dailyhunt

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...