Wednesday, January 18, 2017

ஜல்லிக்கட்டு விவகாரம்...!! கடந்து வந்த பாதை... - ஒர் அலசல்

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டை 2014ம் ஆண்டில் நீதிமன்றம் தடை செய்தது. இந்த முறை தமிழர்களும் எப்படியாவது நமது பாரம்பரிய விளையாட்டை நடத்தியே தீர வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், நீதிமன்ற ஆணைக்கு எதிராகவும் பல கட்ட போராட்டங்களை உலகம் முழுவதும் போராட்டம் நடத்தியும் இன்று வரை தீர்வு கிடைக்காமால் உள்ளது.

இந்த வருடமாவது பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கிடைக்குமா? என நீதிமன்ற உத்தரவுக்கு காத்து இருந்த போது 3வது முறையாக நீதிமன்றம் தடை செய்தது.

ஜல்லிக்கட்டு தடை எப்படி வந்தது

ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடை செய்வதற்கு விலங்குகள் நல ஆர்வலர் மற்றும் மத்திய அமைச்சர் விலங்குகளிடம் பெரிதும் அன்பு பாராட்டுபவருமான மேனகாகாந்தி முதலில் ஜல்லிக்கட்டு எதிராக குரல் கொடுத்தார்.

2008 ம் ஆண்டு விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றார். தமிழர்கள் வாங்கிய அடிகள்
முதல் அடி விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மேல் மறுமுறையீடு செய்து ஒரு சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் போட்டி நடத்த அனுமதி பெற்றது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் 2009' சட்டத்தை இயற்றியது. இச்சட்டம் ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளை நீதிமன்றம் அட்டவணைப்படுத்தியது.
இரண்டாவது அடி 2010 நவம்பர் 27ல் நீதிபதி ஆர். ரவீந்திரன், ஏ. கே. பட்நாயக் அடங்கிய அமர்வு ஒரு நெறிமுறைகளை கூறியது அதன்படி, ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டத்தில் அந்த மாவட்ட ஆட்சியர், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் விலங்குகள் அனைத்தும் விலங்குகள் நலவாரியத்தில் பதிவு செய்வதையும், போட்டியை விலங்குகள் நலவாரிய பிரதிநிதி ஒருவர் கண்காணிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். போட்டிக்கு ஒரு மாதம் முன்பு அனுதி பெறவேண்டும்.

காளைகளும் மாடுபிடி வீரர்களும் முறையாக பதிவு செய்தல், காளைகளின் பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவுதல், சேறு சகதிபூசி வெறியூட்டுதல் கூடாது. ஒரு காளையை ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மேல் அடக்கக்கூடாது. காளையை வாலைப்பிடித்து திருகுவதோ வேறுவிதமான கருவிகளைக் கொண்டு துன்புறுத்துவதோ கூடாது. காளைகள் ஓடவும் வீரர்கள் அடக்கவும் களத்தில் போதிய இடவசதி இருக்கவேண்டும் என நெறிமுறையுடன் அறிவுறுத்தப்பட்டது.

மூன்றாம் அடி நீதிமன்ற நெருக்கடி போதாதென்று மத்திய அரசின் அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரிடமிருந்து புதிய இடையூறு வந்தது. சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற விலங்குகளை கூண்டிலடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக்கூடாதென்பது சட்டம். இதில் ஒரு திருத்தம் செய்து காளைகளையும் அந்தப் பட்டியலில் சேர்த்தார் முன்னாள் மத்தியஅமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
நான்காம் அடி சில நிபந்தனைகள் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என நீதிமன்றம் கூறியது அதன்படி சிறிய ஜல்லிக்கட்டுக்கு 2 லட்ச ரூபாயும், பெரிய ஜல்லிக்கட்டுகளுக்கு 5 லட்ச ரூபாயும் முன்வைப்புத்தொகை, முறையான அனுமதி ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் போட்டியில் காயமடைபவர்கள், பலியாகிறவர்களின் மருத்துவச் செலவுக்காகவும் இரண்டு லட்ச ரூபாய் வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என கூறியது.போட்டி நடத்த முடியமால் தங்கள் செயலில் பின் வாங்கியது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை இந்த சட்டத்திருத்தம் மேலும் சோர்வடைய வைத்தது.
ஜந்தாம்அடி ஒரு வழியாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012, 2013ம் ஆண்டில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்தது. கடந்த 2013ம் ஆண்டு விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களான டாக்டர் மணிலால் வால்யதே, அபிஷேக் ராஜே இருவரும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளைப் பார்த்து உச்சநீதிமன்றத்தில் மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.

இந்த அறிக்கைகள் காளையடக்கும் போட்டிகளின்போது காளைகளை வாடிவாசலிலிருந்து தள்ளிவிடுதல், கட்டாயப்படுத்தி மதுபானத்தை வாயில் ஊற்றுதல், அடித்தல் போன்ற துன்புறுத்துதல். தப்பியோட முயன்ற காளையொன்றின் கால் முறிந்ததையும், மிரண்டோடிய காளையொன்று பேருந்தில் மோதி இறந்தததையும் அந்த அறிக்கையில் பதிவுசெய்தனர்.விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களின் பிரதிநிதி ஒருவர் அவசியம் ஜல்லிக்கட்டில் பார்வையாளராக இடம்பெறவேண்டு மென்ற நெறிமுறையை அவர்கள் சரிவரப் பயன்படுத்திக்கொண்டனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தமிழக அரசு, விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதாகவும், போட்டிகளை மேலும் முறைப்படுத்தலாம்,முழுமையாக தடைவிதிக்கக்கூடாதென வாதிட்டது
ஆனால் விலங்குகள் நல வாரியம் "போட்டிகளில் மாடுகள் வதைக்கப்படுகின்றன தேவையின்றி துன்றுத்தப்படுகின்றன. மிருகவதை தடைச் சட்டத்தின்படி ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் நடத்துவது குற்றம்" என வாதங்களை முன்வைத்தது.

விலங்குகள் நல ஆர்வலர்களோ, கடந்த 20 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டியில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 200க்கும் மேல், காயமடைந்தவர்கள் ஆயிரக்கணக்கில் வருவர். காளைகளின் காயமும் மரணமும் பெரும்பாலும் கணக்கிலேயே வருவதில்லை. மனிதர்களுக்கும், காளைகளுக்கும் ஒருசேர தீங்கு விளைவிக்கும் இப்போட்டியை பாரம்பரியத்தின் பேரால் தொடரத்தான் வேண்டுமா என கேள்விகளை எழுப்பினர்.

6 வது அடி இன்றைக்கு இனப்பெருக்கத்துக்குக் கூட காளைகளின் நேரடி தயவு தேவையில்லை. காளைகளிடமிருந்து விந்து சேகரிக்கப்பட்டு உறைநிலையில் ஊசி மருந்தாக்கப்பட்டு விற்பனையாகும் நிலையில் ஜல்லிக்கட்டு தொடருமா என்ற அச்சத்தில் பலர் தாங்கள் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை பராமரிக்க முடியமால் விற்கத் தொடங்கி இறுதியில் அடிமாடுகளைப் போன்று இறைச்சிக்காக விற்பனைக்கு போக ஆரம்பித்தன.

இறுதி அடி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் மனுத்தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கில் வரும் தீர்ப்பைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என மத்திய அரசு கூறியது. ஜல்லிக்கட்டு வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றத்திடம் வழக்கறிஞர்கள் கோரிக்கையை முன் வைத்தனர். ஆனால் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் இடைக்கால தீர்ப்பு எதுவும் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து ஆகையால் தமிழகத்தில் உச்சநீதிமன்றம் தடை மீறி நடத்த முடியாது என்பதால் இளைஞர் நேரடியாக தற்போது போராட்டத்தில் குதித்துள்ளார்.இந்தி எதிர்ப்பு மாநாடு போல் கட்சி, இனம், ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்திற்கு சினிமா, கிரிக்கெட், இதர துறை பிரபலங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
Dailyhunt

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...