Friday, January 20, 2017

#Jallikattu- அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

தமிழக அரசு கொண்டு வர உள்ள அவசர சட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசர சட்ட வரைவு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் தயாரித்திருந்தது. இதையடுத்து இந்த சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அவசர சட்டத்துக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு, இந்த சட்ட வரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இந்த சட்ட வரைவை அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து இன்று இரவுக்குள்ளே குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

Dailyhunt

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...