Sunday, January 15, 2017

கல்லூரியிலேயே எல்.எல்.ஆர்., மாணவர்களுக்கு அசத்தல் திட்டம்

மும்பை, ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்கள் படிக்கும் கல்லுாரிகளிலேயே, எல்.எல்.ஆர்., எனப்படும், பயிற்சி ஓட்டுனர் உரிமம் வழங்க, மஹாராஷ்டிரா மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தை சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, அவர்கள் படிக்கும் கல்லுாரிகளிலேயே, எல்.எல்.ஆர்., வழங்க மாநில போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், அதிகளவில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் ஓட்டுனர் உரிமத்துக்காக விண்ணப்பிக்கின்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அதிகரிப்பதை தடுக்கவும், மாணவர்களின் நேரம் வீணாவதை தடுக்கவும், அவர்கள் படிக்கும் கல்லுாரிகளிலேயே, எல்.எல்.ஆர்., வழங்க முடிவு செய்யப்பட்டது.
கல்லுாரிகளில் உள்ள கம்ப்யூட்டர்களில், போக்குவரத்து துறையின் மென்பொருளை நிறுவி, அதன் மூலம், பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.
மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்லுாரி வழங்கிய அடையாள அட்டையை பயன்படுத்தி, இந்த உரிமத்துக்கு விண்ணப்பிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், மாணவ, மாணவியர், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஏற்பாட்டை, அனைத்து கல்லுாரி மாணவ, மாணவியரும், கல்லுாரி முதல்வர்களும் வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...