Saturday, February 27, 2016

நிதி ஆலோசனை : திடீர் வேலை இழப்பைச் சமாளிப்பது எப்படி?

logo

இன்றைக்கு வேலைவாய்ப்புகள் எப்படி அதிகமோ அப்படி, திடீரென்று வேலை இழக்கும் அபாயமும் அதிகம். அதுபோன்ற ஒரு சூழலில், பொருளாதார ரீதியாக தடுமாறாமல் இருப்பது எப்படி? இதோ சில ஆலோசனைகள்...

* எப்போதும் சொல்லப்படும் விஷயம்தான் என்றாலும், சேமிப்பே நமக்கு ஆபத்து நேரத்தில் கைகொடுக்கும். எனவே அதற்கு முக்கியத்துவம் அளித்து, வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சேமிப்பைத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் நீண்ட காலத்தில் சேமிப்பு அதிகம் இருக்கும்.

* மாதச் சம்பளத்தைப் போல 3 முதல் 5 மடங்கு தொகையை எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. உதாரணத்துக்கு, மாதச் சம்பளம் ரூ. 30 ஆயிரம் எனில், ரூ. 90 ஆயிரம் முதல், ரூ. 1.50 லட்சம் வரை வைத்திருப்பது அவசியம். இந்த அளவு தொகையை சேமிப்பாக வைத்தபிறகே, பிற தேவைகளுக்காக பணத்தைச் சேமிக்க வேண்டும். அவசரத் தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் இந்தப் பணத்தில் 50 சதவீதத்தை தனியாக ஒரு வங்கி சேமிப்புக் கணக்கிலும், 50 சதவீதத் தொகையை ‘லிக்விட் மியூச்சுவல் பண்ட்’ திட்டங்களிலும் வைத்திருப்பது நல்லது.

* மாதமாதம்தான் சம்பளம் வருகிறதே என்று எண்ணாமல், சில முதலீடுகள் மூலம் வருமானம் கிடைக்கக்கூடிய வழிகளை மேற்கொள்வது நல்லது. பலர், தங்கத்தை சிறந்த முதலீடாகக் கருதுகிறார்கள். தங்கத்தின் விலை முன்புபோல் அதிக லாபம் தருவதாக தற்போது இல்லை. தவிர, தங்க நகையை விற்கும்போதும் சேதாரம் என்கிற வகையில் கணிசமான தொகையை இழக்க வேண்டியிருக்கும். ஆகையால், முதலீட்டின் மூலமாக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதைப் பார்த்து முதலீடு செய்வது நல்லது.

* முதலீடு நல்ல விஷயம் என்றாலும், கடன் வாங்கி எந்த முதலீட்டையும் மேற்கொள்ளக் கூடாது. சிலர், தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் கூறினார்கள் என்று பெர்சனல் லோன் பெற்று, நிலம் வாங்குவார்கள். இது முற்றிலும் தவறு. காரணம், வாங்கிய கடனுக்கான வட்டியைவிட, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்கக்கூடும். கையில் பணம் இருந்தால் மட்டும் முதலீடு செய்வது நல்லது.

* பள்ளி கல்விக் கட்டணம், காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றை ஆண்டின் ஆரம்பத்தில் மொத்தமாகச் செலுத்திவிடலாம். இப்படிச் செலுத்தும்போது தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்குத் தேவைப்படும் தொகைக்கு தனியாக வங்கியில் ஆர்டி கணக்கு ஆரம்பித்து, அதன்மூலம் சேமிக்கலாம். அப்போதுதான் வேலை இழப்பின் போதும் இதுபோன்ற முக்கியமான விஷயங்களுக்கு பணமின்றி தவிக்க வேண்டியிராது.

* குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக ஏற்படும் மருத்துவச் செலவுகளில் இருந்து தப்பிக்க முடியும். ஏனெனில், வேலை இல்லாத நேரத்தில் மருத்துவச் செலவு ஏற்பட்டால் திகைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

* சம்பளத் தொகை முழுவதுக்கும் செலவுகளைத் திட்டமிடாமல், 60 சதவீதத்துக்குள் செலவுகளை வைத்துக்கொள்வது நல்லது. மீதமுள்ள தொகையை முதலீடு செய்யலாம். தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும்.

* இன்றைய சூழலில் கடன்களைத் தவிர்ப்பது கடினம் என்றாலும், கூடுமானவரை கடன் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் வீட்டுக் கடன் போன்ற சொத்துச் சேர்க்கும் கடன்களை வாங்குவதில் தவறில்லை. இதற்கு வட்டியும் குறைவு. எளிதாக கடன் கிடைக்கிறதே என்று வாங்கிவிட்டால், பிற்பாடு வேலை இழந்து நிற்கும்போது அசலையும் வட்டியையும் தவறாமல் செலுத்துவது தலைவலியாக இருக்கும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக, எதற்காக நமக்கு வேலை போனது என்று அலசி ஆராய்ந்து அந்நிலை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலை இழந்த காலத்தில் கூடுதல் தகுதியை வளர்த்துக்கொள்வது, மேலும் உயர்ந்த வேலைக்குச் செல்ல உதவும்.

இருக்கிறது ... ஆனால் எதிர்பார்த்த அளவில் இல்லை

logo

ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தனது 2–வது ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். இவர், ஒரு சராசரி அரசியல்வாதி அல்ல, கணக்காயர். எனவே, எதையுமே நன்றாக ஆராய்ந்து, வரவு–செலவு, லாப– நஷ்டம், நன்மை–தீமைகளையெல்லாம் பார்த்துத்தான், எந்த முடிவையும் எடுப்பார். சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு சுற்றுப் பயணம் வந்த அவர், பொதுவாக தமிழக மக்களின் மனங்களில் உள்ள ஒரு எண்ணத்தை பிரதிபலிக்கும் கருத்தை சொன்னார். ரெயில்வே திட்டங்களை பொறுத்த மட்டில், கடந்த பல ஆண்டுகளாகவே, தமிழ்நாடு அதற் குரிய பங்கை பெறவில்லை, இதையெல்லாம் சரிசெய்ய மத்திய அரசாங்கம் உறுதிபூண்டு இருக்கிறது என்று நெற்றியடியாக கூறினார்.

‘ரெயில்வே மந்திரியே இப்படி கூறிவிட்டார். அப்படி யானால், நிச்சயமாக இந்த ரெயில்வே பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் வரும்’ என்று ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்பார்த்திருந்தது. இதுமட்டுமல்லாமல், முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 11–ந் தேதி பிரதமர் நரேந்திரமோடிக்கே, ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாடு 2023 கண்ணோட்டம் அறிக்கையில், முக்கியமான 10 ரெயில்வே திட்டங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அந்த திட்டங்களை நிறைவேற்றவேண்டும். மேலும், மாநில அரசு பங்களிக்க தயாராக உள்ள சென்னை–தூத்துக்குடி சரக்கு ரெயில் வழிப்பாதை, சென்னை–மதுரை–கன்னியாகுமரி அதிவேக பயண ரெயில் இணைப்பு, மதுரை–கோயம்புத்தூர் அதிவேக பயண ரெயில் இணைப்பு நிறைவேற்றுவதற்கு தனியாக அமைப்பு அமைக்கவேண்டும் என்பது உள்பட கடந்த பல பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்டு, தொடங்கப் படாமல் இருக்கும் பல திட்டங்களை குறிப்பிட்டு, இதை யெல்லாம் நிறைவேற்ற பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

எல்லோருமே ரெயில்வே பட்ஜெட்டில் இவையெல்லாம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர் பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவில் பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. ஆனாலும், வரவேற்கத்தக்க அளவில் சில பொது அறிவிப்புகளும், தமிழ்நாட்டுக்கான அறிவிப்பு களும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, பயணிகள் ரெயில் கட்டண வருவாயும், சரக்கு ரெயில் கட்டண வருவாயும் குறைந்துள்ள நிலையில், அதை சரிக்கட்டுவதற்கு பயணிகள் டிக்கெட் கட்டண உயர்வோ, சரக்கு ரெயில் கட்டண உயர்வோ அறிவிக்காமல், கட்டண உயர்வு இல்லாத மற்ற இனங்களில் வருவாயைப் பெருக்க அவர் தீட்டியுள்ள திட்டங்கள் மிகவும் வரவேற்புக்குரியவை ஆகும்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், சென்னை அருகே நாட்டிலேயே முதல்முறையாக, ரெயில்வே மோட்டார் வாகன சரக்கு முனையம் அமைக்கும் அறிவிப்பு வெளியிடப் பட்டிருப்பது, நிச்சயமாக பாராட்டுக்குரியது. பொதுத்துறை, தனியார்துறை பங்களிப்புடன் டெல்லியையும், சென்னை யையும் இணைக்கும் வகையில், சரக்கு ரெயில் வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை சென்னையோடு நிறுத்திவிடாமல், தூத்துக்குடி வரை நீடிக்கவேண்டும். காரக்பூர்–விஜயவாடா சரக்கு ரெயில் வழித்தடத்தையும் தூத்துக்குடி வரை இணைத்தால், நிச்சயமாக நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். மாநில அரசின் துணையோடு சென்னை புறநகர் ரெயில் நிலையங்கள் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். மற்றபடி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல திட்டங் களுக்கு அதிக அளவில் இல்லாவிட்டாலும், ஓரளவு நிதி ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழக திட்டங் களுக்காக 2,064 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ‘வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பதுபோல, தர்மபுரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அடிக்கடி ரெயில்வே மந்திரியை சந்தித்ததன் விளைவாக, மொரப்பூர்–தர்மபுரி புதிய ரெயில் பாதை திட்டத்திற்கு 134 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல, எந்த இடத்துக்கு என்று குறிப்பிடாமல் பொதுவாக பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இனி தமிழக எம்.பி.க்களும், தெற்கு ரெயில்வே நிர்வாகமும் இந்த பொது அறிவிப்புகளின் பலனை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவதற்கும், நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கப்படுவதற்கும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதற்கும் வாதாடி, போராடி, வற்புறுத்தி பெறவேண்டும்.

பதின் பருவம் புதிர் பருவமா? - விளிம்புக்குத் தள்ளும் ஒரு வழிப் பாதை?

Return to frontpage

டாக்டர் ஆர்.காட்சன்


டாஸ்மாக்கும், ‘குவார்ட்டர் சாங்’ எனப் போதையில் பாடும் சோகப் பாடலும் இல்லாத தமிழ்ப் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ‘எல்லாப் பிரச்சினைகளுக்கும், மதுதான் தீர்வு’ என்பதுபோல் நகைச்சுவை நடிகர்கள் மதுவுக்கு ‘பிராண்ட் அம்பாசடர்’ ஆக மாறி நடித்துக் கொண்டிருக்கும் வேதனையும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆபத்தான ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சாதாரணமாகக் காண்பிப்பதன் மூலம், அது தவறு இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம். இதைக் கூர் உணர்ச்சியைக் குறைத்தல் அல்லது Desensitization என்று சொல்வார்கள். சினிமாக்களில் காண்பிக்கப்படுவதெல்லாம் நடிப்புதான் என்பதையும், அதில் காண்பிக்கப்படும் எல்லாமே நிஜ வாழ்க்கைக்கு பொருந்திவராது என்பதையும் வளர்இளம் பருவத்தினருக்குப் புரியவைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

வீழ்ச்சி போக்கு

சமீபகாலமாக இளைஞர்கள் குடிக்க ஆரம்பிக்கும் சராசரி வயது குறைந்துகொண்டே வருவதற்குச் சினிமாவும் ஒரு முக்கியக் காரணம். இந்தப் போக்கு இளைஞர்களை மட்டும் பாதிப்பதில்லை. ஒட்டுமொத்த சமூகத்தையும் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் ஆபத்தான விஷயம். புகைப்பழக்கம், மதுப்பழக்கத்தில் ஆரம்பித்துக் கஞ்சா, ஹெராயின் உட்படப் பல வகை போதைப் பழக்கங்களை வளர்இளம் பருவத்தினரிடையே பார்க்க முடிகிறது.

பொதுவாகப் போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல் என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்தால் மட்டும் உருவாவதில்லை. குடும்பச் சூழல், சமுதாயம், கல்வி, பொருளாதார நிலை, தனிப்பட்ட குணநலன், மரபணு மாற்றம் போன்றவை சேர்ந்த கலவைதான், போதைப் பழக்கத்துக்கு ஒருவர் அடிமையாகும் தன்மையைத் தீர்மானிக்கின்றன.

குடும்பச் சூழல்

ஒரு குழந்தை வளரும்போது, நல்ல குடும்பச் சூழல்தான் ஆரோக்கியமான மனநல வளர்ச்சிக்கு அடித்தளம். வளர்இளம் பருவத்தில்தான் ஒருவருடைய குணநலன் முதிர்ச்சி அடைய ஆரம்பித்து வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். ஆராய்ச்சி முடிவுகளின்படி சிறுவயதில் பெற்றோரில் ஒருவரை இழப்பது, குடும்ப வன்முறைகளைக் கண்கூடாகப் பார்ப்பது, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை, அதிகப்படியான குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவை இளம் வயதில் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவதற்குச் சாதகமான குடும்பச் சூழல் என நிருபிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் பங்கு

தீவிரமான போதை அடிமைத்தனத்துக்கு உட்படும் நபர்களில் 80% பேரின் தந்தை, அதேபோன்ற போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வளரும் குழந்தைகளுக்கு முதல் மாதிரிப் பெற்றோர்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்பா தினமும் போதையில் வருவதையே பார்த்து வளரும் சிறுவனுக்கு, தானும் குடித்தால் தவறில்லை என்ற எண்ணம் வருவது இயற்கைதானே.

ஒரு விலங்கைக்கூடத் திரும்பத் திரும்ப அடித்தால், ஒன்று வாலை சுருட்டிக்கொண்டு ஓடிவிடும் அல்லது எதிர்க்கத் தொடங்கும். மனிதனின் கற்றுக்கொள்ளுதலும் அப்படித்தான். பெற்றோரின் போதைப்பழக்கச் சூழலில் வளரும் வளர்இளம் பருவத்தினர், ஒன்று தாங்களும் போதைப்பழக்கத்துக்கு உள்ளாவார்கள் அல்லது அவர்களுடைய எதிர்ப்பு குணரீதியான, ஆக்ரோஷமான நடவடிக்கை மாற்றங்களாக, படிப்பில் பின்தங்குதல் போன்றவையாக வெளிப்படும்.

பரம்பரை வியாதியா?

‘ஆள் பாக்கிறதுக்கு மட்டுமல்ல, குணமும் அப்பாவை மாதிரியே அச்சுஅசலாக இருக்கிறது’ என்று குழந்தைகளைக் கொஞ்சுவதுண்டு. இது உருவ ஒற்றுமைக்கு மட்டுமல்ல, போதைப் பழக்கத்துக்கும் பொருந்தும். மரபணுக்கள் மூலமாகவும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் தன்மை பெற்றோரிடமிருந்து வாரிசுகளுக்குச் செல்வதால், சிலருக்கு இது பரம்பரை நோயாகவே மாறிவிடுகிறது. வளர்இளம் பருவத்திலேயே போதைப் பழக்கத்தை ஆரம்பிக்கும் நபர்கள், பெரும்பாலும் இந்த மரபணு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் குளோனிங்கர் என்ற மனநல மருத்துவர் நிருபித்திருக்கிறார்.

‘அப்படியானால் அப்பா குடிகாரராக இருந்தால் மகன் குடிப்பழக்கத்துக்கு ஆளாவதைத் தடுக்க முடியாதா?’ என்ற கேள்வி நமக்குத் தோன்றும். இங்குதான் வளரும் சூழ்நிலை முக்கியத்துவம் பெறுகிறது. மரபணுக்கள் 60% வரை இதைத் தீர்மானித்தாலும் ஆதரவான குடும்ப, சமுதாயச் சூழல், கல்வி, பொருளாதார முன்னேற்றம் இருக்கும் பட்சத்தில், இதைத் தடுக்கமுடியும்.

நட்பு வட்டம்

பெரும்பாலான வளர்இளம் பருவத்தினருக்குப் போதைப்பழக்க அறிமுகம் நண்பர்கள் மூலம்தான் கிடைக்கிறது. அவர்களின் உற்சாகத் தூண்டுதல், போதைப் பொருட்களைப் பற்றிய தவறான வழிகாட்டுதல் போன்றவையும், ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டாட ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம், நாளடைவில் எல்லாச் சூழ்நிலைகளிலும் தொடரும் அளவுக்குக் கொண்டுபோய் விட்டுவிடும்.

பின்பு குடிப்பதற் கென்றே அவர்களாகவே சூழ்நிலைகளை ஏற்படுத்தி, அதைக் குடிப்பதற்கான சாக்குபோக்காக மாற்றிக்கொள்ளும் மனநிலை ஏற்படும். மனதுக்கு உற்சாகம் இல்லாத நேரம் மற்றும் தோல்விகளால் துவண்டு கிடக்கும் நேரத்தில் ‘சரக்கு அடிச்சா உன் கவலையெல்லாம் பறந்து போய்விடும்’ என்று நண்பர்கள் தூண்டுவது பலருக்குப் போதைப்பழக்கத்தின் முதல்படியாக அமைந்துவிடும்.

எனவே, இதுபோன்ற ஆபத்தான உபதேசங்களிடம் வளர்இளம் பருவத்தினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பெற்றோர்களும் இவர்களுடைய தனிமை, தோல்வி, விரக்தியான நேரத்தில் ஆதரவாக இருந்தால் இதுபோன்ற ஆபத்தான உபதேசங்களுக்கு இளம்பருவத்தினர் செவிசாய்ப்பதைத் தடுக்க முடியும்.

(அடுத்த வாரம்: தனிமையும் மனநோயும்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

எம்ஜிஆர் 100 | 10 - எம்ஜிஆரும் இந்திரா காந்தியும்

Return to frontpage

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R. சென்ற ரயில் வழி நெடுக மக்களின் உற்சாகமான வரவேற்பு காரணமாக, 10 மணி நேரம் தாமதமாக மதுரை சென்றது என்றால் இப்போது நம்ப முடிகிறதா? ஆனால், 43 ஆண்டுகளுக்கு முன் உண்மையில் அப்படிப்பட்ட அதிசயம் நடந்தது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1973-ம் ஆண்டில் அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார்.

அதற்காக, சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்கு கிளம்பினார். இரவு நேரம் என்றாலும் வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர். திருச்சியில் இருந்து ஆங்காங்கே மக்கள் வெள்ளம் ரயிலை வழியில் நிறுத்தியது. எம்.ஜி.ஆரும் தான் இருந்த ரயில் பெட்டியின் கதவைத் திறந்து மக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர். மக்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்று இன்ஜின் டிரைவரும் ரயிலை மெதுவாக இயக்க ஆரம்பித்தார். ரயில் மரவட்டையாக ஊர்ந்து சென்றது.

துரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். ரயில் ஊர்ந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது என்பதால் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார். கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார்.

கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடக்கும்போது, விஷயம் அறிந்து ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட் டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே எம்.ஜி.ஆர். இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர். ‘‘கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காக காத்திருக்கின்ற னர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவது தான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர்.

நிலைமையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ரயிலிலேயே பயணத்தை தொடர முடிவு செய் தார். ஆனாலும், அதிமுக கட்சியின் முக்கியஸ்தர் களை இந்திரா காந்தியிடம் அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன் னார். வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது.

எம்.ஜி.ஆருக்கு நேரு குடும்பத்தின் மீதும் இந்திரா காந்தியின் மீதும் மிகுந்த அபிமானம் உண்டு. இந்திராவும் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு அளித்து வந்தார். 1977- ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக - இந்திரா காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டது. மதுரையில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் எம்.ஜி.ஆரும். இந்திரா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர்.

அரசியல் காற்று அவ்வப்போது திசை மாறுவதால் எதிரணியில் இருக்க வேண்டி இருந்தாலும் இருவரும் பரஸ்பரம் கொண்ட அன்பும் மரியாதையும் என்றும் மாறியது இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். சென்னை தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டபோது, அவரை பார்ப் பதற்காகவே டெல்லியில் இருந்து பிரதமர் இந்திரா காந்தி பறந்து வந்தார். அவர் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசு சார்பில் எல்லா உதவிகளையும் செய்தார்.

எம்.ஜி.ஆருக்கும் இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. எம்.ஜி.ஆர் பிறந்த அதே 1917-ம் ஆண்டில்தான் இந்திரா காந்தியும் பிறந்தார். பிறப்பு முதல் கடைசி வரை எம்.ஜி.ஆருக்கும் 7-ம் எண்ணுக்கும் தொடர்பு உண்டு. அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் ஆண்டுகள், தேதிகள் மற்றும் அவற்றின் கூட்டுத் தொகைக்கும் 7-க்கும் தொடர்பு இருக்கும்.

எம்.ஜி.ஆர் பிறந்த தேதி 17, பிறந்த ஆண்டு 1917, முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆன ஆண்டு 1967, அப்போது அவர் சார்ந்திருந்த திமுக ஆட்சியைப் பிடித்த ஆண்டு 1967, அவர் அதிமுகவை தொடங்கிய தேதி 17, எம்.ஜி.ஆர். முதல்முறையாக முதல்வரானது 1977, அவர் பயன்படுத்திய அம்பாசிடர் கார் எண் 4777, இதன் கூட்டுத் தொகை 7. எம்.ஜி.ஆர். மறைந்தது 24-12-1987, இதன் கூட்டுத் தொகையும் 7-தான்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆரை சந்திப்பதற்காக வந்ததுதான் இந்திரா காந்தி கடைசியாக தமிழகம் வந்தது. அடுத்த சில நாட்களில் அவர் கொல்லப்பட்ட துயரம் நடந்தது. அதேபோல, எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி, பிரதமர் ராஜிவ் தலைமையில் சென்னையில் நடந்த நேரு சிலை திறப்பு விழா.

சென்னை மருத்துவமனையில் எம்.ஜி.ஆரை சந்தித்து நலம் விசாரித்த இந்திரா காந்தி அவரிடம் கூறினார்... ‘‘நீங்கள் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்தவர். இந்த சோதனையில் இருந்தும் மீண்டு வருவீர்கள்’’ என்றார். அவர் சொன்னது பலித்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக முதல்வராக சென்ற எம்.ஜி.ஆர்., உடல் நலம் தேறி அங்கிருந்தபடியே, தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகவே வந்தது வரலாறு.




1967-ம் ஆண்டு முதல் 5 முறை சட்டப் பேரவைத் தேர்தல்களில் எம்.எல்.ஏ-வாக தொடர்ந்து எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். 1977-முதல் நடந்த தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று 3 முறை ஆட்சியைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக முதல்முறை பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டபோதும், உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்றதால் 1984-ல் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டபோதும் பிரசாரத்துக்கு செல்லவில்லை. இரண்டு தேர்தல்களில் படுத்துக்கொண்டே ஜெயித்தார் எம்.ஜி.ஆர்.




- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

Friday, February 26, 2016

Confusion reigns over 'approved' courses


Pune: The recently released handbook of the All India Council of Technical Education (AICTE) for the academic year 2016-17 is expected to create some problems regarding the nomenclature of 'approved courses'.
While the University Grants Commission's July 2014 guidelines had created a number of issues lot of problems with educational institutions, colleges since they had to cancel various courses as per guidelines, AICTE's handbook will create fresh again is going to create problems as it mentions courses that were cancelled by UGC have been mentioned in the AICTE handbook.

In July 2014, after finding discrepancies in various heads under which colleges and universities were offering courses, UGC had tried to normalise the courses by issuing a gazette for specification of degrees. Universities and other institutes were asked to adhere to the nomenclature specified by the UGC gazette strictly from this academic year onwards. This had caused a several lot of problems with management courses as many colleges were running courses that had beenwhich were derecognized by the UGC.

W N Gade, vice chancellor of Savitribai Phule Pune University, said, "This is a serious matter and if it is not resolved immediately, it will create problems for the colleges as well as students taking admission to these courses. Many a times, both the Union government agencies work independently without consulting each other and this leads to both of them taking a contradictory stand and going to court against each other."

Pointing towards out to the problems faced by management colleges last year when several courses were derecognized by UGC, Gade said, "The university gets caught between AICTE and UGC. We are a traditional university and we have to follow UGC guidelines. However, for technical courses, we require have to get AICTE approval. Now, if a college starts a course recognized by AICTE but not by UGC, it will not get recognition by National Assessment and Accreditation Council (NAAC). Now NAAC accreditation , which is compulsory. Moreover, since students will already be admitted to the course, they will have to move court which will again lead to a huge controversy. In the meantime, it is the university and the students will suffer the most. Hence there is a need for coordination between central agencies deciding fate of students across the country."

A B Dadas, director of Neville Wadia Institute of Management Studies and Research added, "This is exactly the kind of confusion the top bodies create due to which institutes and students suffer. For inclusion of a course in the UGC gazette, the university has to send a proposal. In our case, the Pune varsity sent proposals for approval after the gazette was published due to which many students pursuing management courses were left in the lurch after their course had been deemed illegal by UGC." Dadas added that cases related to these issues are going before both There are cases going on in both the Bombay high court and the Supreme Court over the same problem. "Not just us, institutions across the country are facing this problem because both top bodies refusing to work together," he stated.

No Takers for AICTE Institutes


By Babu K Peter

Published: 21st Feb 2016 10:18:41 AM

http://www.newindianexpress.com/thesundaystandard/No-Takers-for-AICTE-Institutes/2016/02/21/article3288143.ece

KOCHI:If you thought it was only engineering seats that are waiting to be filled, you are mistaken. As many as 18,68,345 seats from a slew of courses ranging from MBA to hotel management and catering have been finding no takers for the last three to four years in the colleges affiliated to the All India Council for Technical Education (AICTE), across the country.

The situation is acute in southern states with Tamil Nadu, one of the leading education destinations, leading the list with 2,79,827 vacant seats, followed by Andhra Pradesh with 1,83,911 and Karnataka and Kerala with 85,323 and 40,938 seats respectively.

Courses facing the crisis include pharmaceutical sciences, hotel management, engineering and technology, MCA, management, applied arts and crafts and architecture and planning. “Supply disproportionate to demand is the basic reason for seats remaining vacant in colleges,” said K Sasikumar, president of the Kerala Self Financing Engineering College Managements Association (KSFECMA).

As per the data available on the AICTE website, there are 10,329 affiliated institutions across the country. These institutions together have intake capacity of 39,56,234 but the total enrollment in 2015-16 academic year is 20,97,889.

Tamil Nadu has 1,347 colleges with an intake of 5,88,955. But enrolment in 2015-16 is 3,09,128 showing a huge difference of 2,79, 827. Kerala has 365 colleges and total intake capacity of 1,11,623 but enrolment in 2015-16 stood at 70,685.

Enhancement of number of seats during the last 10 years was not need-based. With reference to MBA, the number of IIM, which was four earlier, now stands at 12. In addition to the numerous private self-financing colleges, many universities also launched AICTE-approved courses.

As the number of seats increased, admission became just seat-filling exercises with an eye on profit and compromising the attitude and quality of the students. “This, coupled with low quality teachers of second line private colleges, made the situation worse and students who pass out started facing difficulties in finding a job,” said K A Zakariya, director of Deen Dayal Upadhyay Kaushal Kendra (DDUKK) under the Cochin University of Science and Technology (CUSAT).

New health varsity VC takes charge

Nashik: Dr Deelip Govindrao Mhaisekar, the new vice-chancellor of the Maharashtra University of Health Sciences (MUHS), has stressed the need for interdisciplinary research in the field of medicine and the importance of doctor-patient communication.

Mhaisekar took charge as the vice-chancellor (VC) on Thursday. Speaking to newspersons on Friday, he talked about his vision for the medical students, the university and the patients. He was accompanied by MUHS registrar Dr Kashinath Garkal, controller of examination Dr Kalidas Chavan and public relations officer Dr Swapnil Torne.

Mhaisekar said the merits different streams of medicinal sciences varied from one another. Hence, research in various streams was important, which could be taken up soon for the benefit of patients.

He said there was a huge dearth of seats for post-graduation courses, as compared to degree courses in all the "pathies" of medicine. "A large number of doctors have taken degrees in different pathies. However, it is not possible to give admission to all of them for post-graduation courses. In this backdrop, efforts will be taken up to start fellowship programmes to enhance the skills of degree doctors, which is also aimed at providing quality services to patients," Mhaisekar said.

Meanwhile, the issue of attacks on doctors in various parts of the state and the country by the relatives of patients also came up during the media briefing. The new VC said communication skills of doctors would go a long way in preventing such incidents. "We are planning to start communication skill lessons for the post-graduate students of medicine," he said.

Mhaisekar said they would be studying the conditions of the University Grants Commission to provide sufficient scope of research to medical students. He that there were quite a few problems of employees pending at the government level and sincere efforts will be taken to solve them in the near future.

எது பெண்ணுரிமை?


By சந்திர பிரவீண்குமார்

First Published : 25 February 2016 04:27 AM IST

dinamani

அழகான இயற்கை வளங்கள் சூழ்ந்த பனிமலைகள் நிறைந்த ஒரு பகுதியில், திரைப்படத்தின் காதல் பாடல் ஒன்றின் படப்பிடிப்பிற்காக நாயகனும், நாயகியும் ஆடிப் பாடுகிறார்கள். நாயகனின் உடலில் குளிருக்கு ஏற்ற ஆடைகளும் காலணிகளும் முழுமையாக மூடியிருக்கின்றன.
ஆனால், நாயகியோ அரைகுறை ஆடையுடன் ஆடிப் பாடுகிறார். அநேகமாக, இன்று வெளிவரும் படங்களில் இத்தகைய காட்சிகள் இடம்பெற்றுக் கொண்டே வருகின்றன.
பெண்கள் வளர்ச்சி அடைந்து விட்டதாகக் கூறப்படும் நிகழ்காலத்திலும் பெண்களுக்கு ஏற்படும் இழிவுகள் குறைந்து விடவில்லை. மாறாக, நவீன காலம் என்ற பெயரால் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
பெண்களை போகப் பொருள்களாக மட்டும் சித்திரித்த காலம் போய், அவர்களை நேரடியாகவே மட்டம் தட்டும் திரைப்படப் பாடல்களும் வசனங்களும் உலா வருகின்றன. வளர்ச்சி அடையும் பெண்களை அவதூறாகப் பேசும் சக ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
சில நேரங்களில் சக பெண் ஊழியர்களும் அவதூறு பரப்பும் கொடுமை. பாலியல் வக்கிரங்கள் தொடர்கின்றன. நாட்டில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு கழிப்பறை வசதிகள் கூட முறையாக இல்லை. பெண்களுக்கு மரியாதை தரும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், வரதட்சணையால் பெண்கள் பாதிக்கப்படும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
மது என்ற அரக்கன், பல பெண்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்திருக்கிறது. இப்படி, பாலின சமத்துவத்தை அனைத்து வழிகளிலும் நிலைநாட்ட வேண்டிய தேவை இன்று அதிகமாகவே உள்ளது. ஆனால், முக்கிய விவகாரங்களில் மயிலிறகு போல் மென்மையாக வருடி விட்டு, மத நம்பிக்கைகளில் பெண்ணிய அமைப்புகள் தலையிடுவது எந்த விதத்தில் நியாயம்?
அண்மையில், கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி ஒருவர் உத்தரவிட்டபோது, சில அமைப்புகள் பெண்ணுரிமை பேசி, அந்த உத்தரவுக்குத் தடை கோரின. அதேபோல், சபரிமலை உள்ளிட்ட கோயில்களில் பெண்கள் நுழைவதற்கு ஆதரவாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
திரைப்பட சுவரொட்டிகளை பள்ளிக்கூட வளாகச் சுவரில் ஒட்டக்கூடாது என்று அனைத்துக் கட்சியினரும் போராடியிருக்கிறார்கள். காரணம், அந்தச் சுவரொட்டிகளில் காணப்படும் அரைகுறை ஆடை காட்சிகள் மாணவர்களின் கவனத்தைச் சிதறடிக்கக் கூடாது என்பதற்காகதான்.
ஆனால், அத்தகைய அரைகுறை ஆடைகளை, பாரம்பரியத்தைக் காக்க வேண்டிய கோயில்களில் அணிய அனுமதிப்பது என்பது ஏற்புடையதாக இல்லை.
ஆண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும்போது, பெண்களுக்கு எதிரான உத்தரவு என்ற வாதத்தில் வலு இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆடைக் கட்டுப்பாடு பெண்களின் பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கிறது என்பதை இந்த இயக்கங்கள் எப்போது உணரப் போகிறார்கள்?
குறிப்பிட்ட வயதுக்கு மேல், ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களானாலும் சரி, அவர்களது பாலினத்தைச் சேர்ந்த பெரியவர்களிடம் பழக விடுவது மரபு. அதன் காரணம், எதிர் பாலினத்தவருடன் பழகக் கூடாது என்பதல்ல.
ஒரே பாலினத்தினருடன் பழகுகையில், எப்படி உடை உடுத்துவது, எப்படி பேசுவது, பழகுவது போன்ற விஷயங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதனால், நாட்டின் பண்பாடு காப்பாற்றப்படுவதோடு, பாலியல் கொடுமைகளையும் தவிர்க்க முடிகிறது.
வழிபாட்டு நம்பிக்கை கொண்ட பெண்களின் நடவடிக்கைகள் காரணமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய ஆன்மிகம் தழைத்து வருவது கண்கூடு. இல்லத்தில் இருக்கும் ஆண்கள் மறந்துவிட்டாலும், நம்பிக்கைகளையும் சடங்குகளையும் நினைவூட்டுவது நமது நாட்டில் வாழும் பெண்களின் குணம். மறந்துபோன பல சடங்குகள் இன்றும் உயிர்ப்புடன் இருப்பது அவர்களால்தான்.
ஆலயம் தொழுவதை அன்றாடக் கடமையாகக் கருதும் அந்தப் பெண்களைக் கொச்சைப்படுத்துவது நியாயமா? சபரிமலை உள்ளிட்ட கோயில்களில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சில அமைப்புகள் போராடுகின்றன. காலத்துக்கேற்றவாறு பழக்க வழக்கங்களை மாற்றுவது இயல்பானதுதான்.
ஆனால், அத்தகைய நடவடிக்கைகளை ஆன்மிகப் பெரியவர்களும், இறை நம்பிக்கை கொண்ட பெண் அமைப்புகளும்தான் மேற்கொள்ள வேண்டும். மாறாக, இறைமறுப்பு கொள்கை கொண்ட அமைப்புகள் தீர்மானிப்பது வீண் சர்ச்சைகளுக்கே வழிவகுக்கும்.
நாட்டின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளை பெண்ணிய அமைப்புகள் உதாசீனப்படுத்துவதற்கு ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும்.
பெண்களைத் தெய்வமாக மதிக்க வேண்டும் என்பது இந்தியப் பண்பாடு. அதன் குறியீடாகவே கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றுக்கும் பெண் அடையாளங்கள் தரப்பட்டுள்ளன. அந்தக் கடவுள்களில் ஒருவரான சரஸ்வதியை எம்.எஃப்.ஹுசைன் என்ற ஓவியர் நிர்வாணமாக வரைந்தார். அதை எதிர்த்து, பெண்ணுரிமை இயக்கங்கள் பொங்கியெழவில்லை. சில மத அமைப்புகளைத் தவிர, யாரும் கேள்வி கேட்கவில்லை.
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் கண்டிக்கத்தக்கது என்பதும், அதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் துறவியான பிரக்யா சிங் தாக்குர், காவல்துறை தன்னை நிர்வாணப்படுத்தி விசாரித்ததாக நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.
அந்த மனித உரிமை மீறலைக் கண்டித்து பெண்ணியம் பேசும் எந்த அமைப்பும் வாய் திறக்கக் கூட இல்லை. பாதிக்கப்பட்டவர் ஹிந்து மதப் பெண் துறவி என்பதால் மெளனமே பதில். அண்மையில், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், பெண்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் இடம்பெற்றதைக் கண்டித்து, மாணவர் அமைப்புகளைத் தவிர யாரும் போராட முன்வரவில்லை.
பெண் சின்னங்களாக மதிக்கப்படுகின்ற திரௌபதி, பார்வதி, ஆண்டாள் ஆகியோரை கேவலப்படுத்தி, புத்தகங்கள் எழுதப்பட்டபோது, கண்டனம் கூட கிடையாது. இப்படி ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும்.
நவீன காலத்தில் பெண்களின் வளர்ச்சி அதிகரித்து வரும் இந்த நேரத்தில், பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுப்பதோடு, பெண் உருவம் தாங்கிய சின்னங்களையும், குறியீடுகளையும் பாதுகாக்க வேண்டியதும் அவசியம். அது மதம், இனம், மொழி என எந்தப் பிரிவில் அடங்கியிருந்தாலும் பெண்கள் போற்றப்பட வேண்டும் என்பதுதான் நியாயமான பெண்ணுரிமையாக இருக்க முடியும்.

சுட்டெரிக்குது சூரியன் வெப்பம் அதிகரிப்பு

கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, தமிழகத்தின் பல மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்துஉள்ளது. இதனால், வரும், மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில், ௨௦௧௫ பிப்ரவரியில் அதிகளவாக, 94.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது; நடப்பு ஆண்டில் அதிகபட்சமாக நேற்று, 95 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது. 

மதுரையில், கடந்த ஆண்டை ோலவே, நடப்பு பிப்ரவரியில் அதிகபட்சமாக, 98.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. சேலத்தில், 2010க்கு பின், இந்த மாதம் அதிகபட்சமாக, 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. வேலுாரில், இம்மாதம் அதிகபட்சமாக, 98.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 

இது குறித்து, சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குனர் ஒய்.ஏ.இ.ராஜ் கூறியதாவது:ஆண்டுதோறும், டிச., 23க்கு பின், பகல் பொழுது அதிகரிக்க துவங்கும். இதனால், குளிர் படிப்படியாக குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். 

இக்காலகட்டத்தில், ஈரப்பதத்துடன் கூடிய கடல் காற்று, கிழக்கு நோக்கி வீசும். இந்த காற்று, கடலோர மாவட்டங்களில் மட்டுமே வெப்பத்தை குறைக்க உதவும்.கோவை, மதுரை, வேலுார், சேலம் போன்ற மாவட்டங்களில், காற்று வீசுவது மிக குறைவாக இருக்கும். எனவே, இப்பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -

2 டாக்டர்கள் 'சஸ்பெண்ட்'மருத்துவ கவுன்சில் அதிரடி

சென்னை: விதிமுறைகளை மீறி செயல்பட்ட, இரண்டு டாக்டர்களை, 'சஸ்பெண்ட்' செய்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்தவர் டாக்டர் ராமச்சந்திரன். இவர், மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர், 'ஸ்கேன்' செய்து, கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என, தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, கலெக்டர், சுகாதாரத்துறை இணை இயக்குனர் விசாரித்ததில், ராமச்சந்திரன் விதிமீறி செயல்பட்டதை உறுதி செய்தனர். கலெக்டர் பரிந்துரையை அடுத்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், டாக்டர் ராமச்சந்திரனை, ஐந்து ஆண்டுகள், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளது.

ஓராண்டு தடைசென்னை, தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், 2014ல், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த, அமுதா என்ற பெண்ணுக்கு, உடல் எடையைக் குறைக்க, டாக்டர் மாறன் என்பவர் மூலம், அடுத்தடுத்து, இரண்டு அறுவைச் சிகிச்சைகள் நடந்தன.
வீடு திரும்பிய அவர், 10 மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்து இறந்தார். கணவர் கவுரிசங்கர் போலீசிலும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிலும் புகார் செய்தார். 

விசாரணையில், தவறாக சிகிச்சை அளித்தது தெரிய வந்ததால், சிகிச்சை அளித்த டாக்டர் மாறனை, ஓராண்டுக்கு, 'சஸ்பெண்ட்' செய்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது

HC issues notice to chancellor for extending acting VC's term

Indore: Hearing a petition, challenging extension given to acting vice-chancellor of Devi Ahilya Vishwa Vidyalaya (DAVV), Prof Ashutosh Mishra, by the chancellor of state universities, the Indore bench of Madhya Pradesh high court on Tuesday issued notices to the respondents.

The court has issued notices to chancellor Ram Naresh Yadav, acting vice-chancellor Prof. Mishra and others to submit reply within a week. Soon after the chancellor extended tenure of Prof Mishra following expiry of his term as acting VC, former RGPV executive council member Ajay Chordia had moved a petition before Indore bench of high court against the extension granted to him.

Chordia had moved a writ petition in court to quash extension order of Prof Mishra. "After the expiry of acting vice-chancellor's six-month tenure, the chancellor cannot appoint the vice-chancellor again. It is against provisions of Madhya Pradesh Vishwavidyalaya Adhiniyam 1973," said counsel of the petitioner, Manohar Dalal. He further stated that as chancellor has failed to appoint permanent vice- chancellor at DAVV, there is no option but to clamp section 52. "We have cited cases in which section 52 was clamped in universities of state. Under section 52 of the Act, the state government can remove the acting vice-chancellor, dissolve executive council of DAVV and appoint a VC of its choice."

Mishra was given the charge of DAVV as the acting vice-chancellor on August 17 last year after Prof DP Singh resigned as the VC to take up a new responsibility at NACC. As per Madhya Pradesh Vishwavidyalaya Adhiniyam 1973, in the event of the occurrence of any vacancy at the VC office, a person nominated by the chancellor as acting vice-chancellor should not hold the office for a period of more than six months. But, as the Act is silent on extension of tenure of acting VC after a period of six months, the chancellor had given extension to Prof Mishra.

Under Madhya Pradesh Vishwavidyalaya Adhiniyam 1973, a three-member VC search panel comprising representatives of university executive council, UGC chairman and the chancellor was constituted on December 4, 2015 and it was given six-week time for recommending at least three candidates for VC post. But, the panel was quashed by the high court following a petition, alleging that election process adopted by the executive council of DAVV to nominate retired judge Gulab Sharma as its representative in the search panel was flawed.

ஸ்மிருதியின் ஆவேச பேச்சு' டுவிட்டரில்' மோடி பாராட்டு



எதிர்க்கட்சிகளுக்கு சவால் விட்டு ஆவேசமாக பேசிய, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை பாராட்டி, சமூக வலைதளமான டுவிட்டரில், பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்து உள்ளார்.





டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் கைது மற்றும் ஐதராபாத் தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரம் குறித்து, லோக்சபாவில் நேற்று முன்தினம் விவாதம் நடந்தது.

அப்போது பேசிய,அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'மாணவர்களை வைத்து, காங்., உள்ளிட்ட கட்சிகள், அரசியல் செய்கின்றன. கல்வி, காவிமயமாவதை நிரூபித்தால், பதவி விலகத் தயார்' என, ஆவேசமாக பேசினார்.

அடுக்காடுக்கான ஆதாரங்களையும், ஆவணங் களையும் எடுத்துக் காட்டி அவர் பேசியது, எதிர்க்கட்சியினருக்குகலக்கத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில், ஸ்மிருதியின் பேச்சுக்கு, பா.ஜ.,வினர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியும், ஸ்மிருதியின் பேச்சை பாராட்டி, 'டுவிட்'

செய்துள்ளார். ஸ்மிருதி இரானியின் பேச்சு அடங்கிய வீடியோ தொகுப்பை, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர்,
'சத்யமேவ ஜெயதே. இதை, நாட்டு மக்கள் முழுமையாக கேட்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு... 15 நிமிடம் தாமதமானால் தேர்வு எழுத முடியாது

DINAMALAR


பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. இதற்கான விதிமுறைகளை, சுற்றறிக்கையாக ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் குறித்த நேரத்திற்கு தேர்வு அறைக்கு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.காலணிக்கு தடை*பிளஸ் 2 தேர்வு அறைக்குள், மாணவர்கள் தங்கள் உடைமை களை கொண்டு செல்லக் கூடாது; தேர்வு அறை முன்பும் வைத்திருக்க கூடாது. தேர்வு மைய வளாகத்தில் ஒதுக்கப்பட்ட அறைகளில் உடைமைகளை வைக்கலாம்
* தேர்வு அறைக்கு அலைபேசி மற்றும் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வரக் கூடாது*பிட் அடித்தல், காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்
*தேர்வு அறைக்குள் காலணிகள் அணிந்து வரக்கூடாது. காலணிகளை வெளியே கழற்றி வைத்த பிறகே, தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்*தேர்வு அறைக்கு, 15 நிமிடம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடையாது. இவ்வாறு தேர்வுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

பிசியோதெரபிஸ்ட் பணிக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்க மனு செய்தவர்களுக்கு ஐகோர்ட் கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது

மதுரை: இன்று நடைபெறும் பிசியோதெரபிஸ்ட் பணிக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்க மனு செய்தவர்களுக்கு ஐகோர்ட் கிளை அனுமதி அளித்து  உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் கூரைக்குண்டுவைச் சேர்ந்த விஜயலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: டாக்டர் எம்ஜிஆர்  மருத்துவப் பல்கலைக் கழகத்தின்கீழ் பிசியோதெரபி பாடத்தில் பட்டம் பெற்றுள்ளேன். 2009ல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், கிண்டி இயக்குநர்  அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளேன். பல்நோக்கு மறுவாழ்வு உதவித் திட்டத்தின்கீழ் காலியாகவுள்ள பிசியோதெரபிஸ்ட் பணிக்கு  தகுதியுடையவர்களை பரிந்துரைக்குமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரிடம், மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையர் கேட்டுள்ளார். 

அதன்படி பிசியோதெரபி பிரிவில் டிப்ளமோ படிப்பை குறைந்தபட்ச தகுதியாகக் கொண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், டிப்ளமோ  படிப்பைவிட கூடுதல் தகுதியான பட்டம் பெற்றுள்ள நிலையில் அந்த பணிக்காக என்ைன பரிந்துரைக்கவில்லை. இதற்கிடையே பிப். 26ல் (இன்று)  இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. விரைவில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் நடைபெற உள்ள நிலையில், அரசியல்  காரணங்களுக்காக நேர்முகத் தேர்வை துரிதகதியில் நடத்துகின்றனர். எனவே, நேர்முகத்தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடக் கூடாது. நேர்முகத் தேர்வில் என்னைப் பங்கேற்க அனுமதித்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல் மல்லாங்கிணறு  வெற்றியன், விருதுநகர் கணேஷ்பாண்டியன் ஆகியோரும் மனு செய்திருந்தனர்.  மனுவை விசாரித்த நீதிபதி டி.புஷ்பா சத்யநாராயணா, இன்று நடக்கும்  நேர்முகத் தேர்வில் பங்கேற்க மனுதாரர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

After 15 years in final year, Bihar MBBS student threatens suicide


Patna: A Dalit student of a medical college in Bihar faces legal trouble after he threatened to end his life if he is not declared to have passed his MBBS final year exam.
The student, Kapil Dev Chaudhary, has reason to vent his frustration. After all, he has spent 21 years in pursuit of that elusive medical degree that would allow him to practise as qualified doctor.

"Sir, now I am 52, now pass me. I want to become a doctor. Otherwise I will commit suicide," Choudhary wrote in one of his messages texted to BK Sigh, who heads the department of medicine at the Darbhanga Medical College.
In another message, Choudhary wrote, "Goodmorning Sir... I have seen you for 21 years. No meeting now. Now you will meet my body."

The college authorities were not amused. Sensing trouble after Rohith Vemula case in Hyderabad University, principal RK Sinha approached police and registered a complaint against Choudhary for sending a series of threatening SMSes.
When confronted by police, Choudhary did a complete u-turn and said he would not commit suicide. But he also made it clear he "would never sit in the final year MBBS examination" if he failed to clear it this year.

Choudhary admitted that between January 31 to February 15 he sent a series of SMSes to Singh as he was frustrated at not cracking the final MBBS examination the past 15 years.
Sinha said Choudhary was insistent that after all these years the college should simply declare him to have passed the final exam or he would commit suicide.
According to police, Choudhary was admitted to the under-graduate medical course of the college in 1995. He managed to gradually pass all parts of the MBBS course but at the end of two decades has failed to clear the final year examination.

IANS

http://zeenews.india.com/news/bihar/after-15-years-in-final-year-bihar-mbbs-student-threatens-suicide_1859310.html

Thursday, February 25, 2016

Stop institute from giving away fake MBBS degrees: CIC


New Delhi, Feb 24 (PTI) Expressing concern over quacks using fake MBBS degrees from an illegal institute, Central Information Commision has asked Union Ministry of Health and Family Welfare to take immediate action through MCI to stop the practice as it poses serious public threat.

During a hearing, Medical Council of India officials produced certain documents before Information Commissioner Yashovardhan Azad showing an institute by the name of Indian Board of Alternative Medicine, which has no official or legal sanctity and yet has been giving fake degrees for practice.

"...the matter which is truly alarming is the revelation by the Respondent (MCI) about the existence of the Institute by the name of Indian Board of Alternative Medicine with no official/legal sanctity and doctors are using such degree as 'MBBS (IAM)' for practice," Azad said.

The Commissioner said it was a matter of grave concern since public health is at high risk owing to these practitioners who have no proper knowledge or training to render medical assistance.

"In view of the seriousness of the issue, the Commission is of the considered opinion that a copy of this order may be sent to the Secretary, Ministry of Health and Family Welfare to take immediate action through the MCI to curb this practice which is posing a threat to public health," he said.

எம்ஜிஆர் 100 | 7 - இந்தி எதிர்ப்பு போராட்டமும் விமர்சனமும்

Return to frontpage

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்



M.G.R. சிறை சென்றிருக்கிறார் என்பது பலர் அறிந்திராத செய்தி. இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்தபோது அதில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளவில்லை என்று அவரைப் பற்றி விமர்சனங்கள் எழுந்தது உண்டு. அந்த சமயத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்புக்காக கோவா சென்றிருந்தார், அண்ணா மற்றும் திமுகவின் சம்மதத்தோடுதான்.

இந்தி மொழி திணிப்புக்கு எதிராக நீண்ட போராட்டத்தைத் தொடங்கி நடத்துவதற்கான ஆயத்தங்களில் 1960-ம் ஆண்டு முதலே திமுக ஈடுபட்டது. திமுக பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் இந்தி எதிர்ப்பு அறப்போராட்டக் குழு அமைக்கப்பட்டது. 1960 ஜூலை 15-ல் அறப்போராட்டக் குழு கூட்டம் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் போராட்டங்களில் கலந்து கொள்வதில் இருந்து மாணவர்கள், நடிகர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

‘படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. திமுகவினர் மீது வழக்குகள் போடப் பட்டால் அவர்களுக்கு உதவ வழக்கறிஞர் கள் தேவை. உயிர் காக்க வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு உண்டு. போராட்டத்தில் ஈடுபட்டு நம்முடைய கலைஞர்கள் சிறை செல்ல நேர்ந்தால் அதன் பிறகு 15 ஆண்டுகளுக்கு கலைத்துறை நம் கையை விட்டுப் போய்விடும். எனவேதான் இவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. கலைஞர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதில் எம்.ஜி.ஆருக்கு கூட என் மீது கோபம்’ என்று சென்னை கோடம்பாக்கத்தில் 1960 ஜூலை 31-ம் தேதி நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணா விளக்கம் அளித்தார்.

கலைஞர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொள்ளவில்லை. போராட்டம் தீவிர மாக இருந்ததால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியும், விழா கொண்டாடப்படவில்லை. நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக விழா கொண்டாடப்படவில்லை என்று நாளிதழில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

என்றாலும், இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். சிறை சென்றிருக்கிறார். இதுபற்றி எம்.ஜி.ஆர். வெளியில் அதிகம் சொல்லிக் கொண்டதில்லை. 1958-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி அப்போது பிரதமராக இருந்த நேரு சென்னை வந்தபோது அவருக்கு திமுக சார்பில் கருப்புக் கொடி காட்ட தீர்மானிக்கப் பட்டது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடிகர்களுக்கு உடைகள் தைப்பதற்காக இருந்த தையல் மெஷின்கள் மூலம் இரவு பகலாக கருப்பு கொடி தயாரிக்கும் பணி நடந்தது. போராட்டத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது படலம் தொடங்கியது.

அப்போது, நள்ளிரவில் எம்.ஜி.ஆர். கைது செய்யப்பட்டார். மேலும், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, நடிகமணி டி.வி.நாராயணசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், வளையா பதி முத்துக்கிருஷ்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். முதலில் எம்.ஜி.ஆரை சைதாப்பேட்டை காவல் நிலையம் கொண்டு சென்று காலையில் சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். எம்.ஜி.ஆர். 4 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேரு சென்னை வந்து சென்ற பின் எம்.ஜி.ஆர். விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்தபோது சிறைச்சாலை விதிகளை எம்.ஜி.ஆர். முழுமையாக கடை பிடித்தார். சிறையில் சிவப்பு அரிசிச் சோறுதான். மற்றவர்கள் சாப்பிட முடியாமல் சங்கடப் படுகையில் எம்.ஜி.ஆர். எந்த சலனமும் இன்றி சாப்பிட்டார். இரவில் சிறை அறைக்குள் அடைத்து விட்டு காலையில்தான் திறந்துவிடுவார்கள். தாகம் தீர்த்துக்கொள்ள மண் பானையில் தண்ணீர். அருகே தகர டப்பா. அதில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்க வேண்டும். அறையின் மூலையில் இரண்டு சட்டிகள். அதுதான் கழிப்பிட வசதி.

அப்போதே எம்.ஜி.ஆர். திரையுலகின் உச்ச நட்சத்திரம். வாய்ப்புகளும் வசதிகளும் வந்துவிட் டன. என்றாலும் சிறையில் இந்த அசவுகரியங்களை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவில்லை. இதை எல்லாம் முகமலர்ச்சியுடன் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவருக்கு பஞ்சணையும் ஒன்றுதான், கட்டாந்தரையும் ஒன்றுதான்.

சிறைக்கு உள்ளேயும் எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை வெளிப்பட்டது. எம்.ஜி.ஆர். சிறையில் இருக்கிறார் என்றதும் சட்டத்துக்கு உட்பட்டு அவருக்காக பழங்கள், உணவுப் பொருட்களை வெளியில் இருந்து கட்சியினரும், ரசிகர்களும், பொதுமக்களும் அனுப்பி வைத்தனர். அவற்றை சிறைக் கைதிகளுக்கு பகிர்ந்து அளித்துவிட்டு எல்லோருக்கும் கிடைத்ததை உறுதி செய்த பிறகே எம்.ஜி.ஆர் சாப்பிடுவார்.

கைதானவர்களில் பலரை சாதாரணமான ‘சி’ வகுப்பில் அடைத்தனர். எம்.ஜி.ஆருக்கு மட்டும் ‘பி’ வகுப்பு அளிக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், எல்லோருக்கும் ஒரே வகுப்பு கிடைத்தால்தான் தானும் ‘பி’ வகுப்பில் இருக்க முடியும் என்று எம்.ஜி.ஆர். போர்க்கொடி தூக்கினார். அதன் பிறகே, அவருடன் கைதான பலர் ‘பி’ பிரிவுக்கு அனுப்பப்பட்டனர்.

சிறைவாசம் அனுபவித்தவர் மட்டுமல்ல; சிறையிலும் தன்னைச் சேர்ந்தவர்களுக்காக உரிமைக் குரல் எழுப்பியவர் எம்.ஜி.ஆர்.




திரையுலகில் வி.சாந்தாராமை தனது ஆசான்களுள் ஒருவராக எம்.ஜி.ஆர் கருதினார். இந்தியில் ‘தோ ஆங்க்கே பாரா(ஹ்) ஹாத்’ என்ற பெயரில் வி. சாந்தாராம் தயாரித்து இயக்கிய படம்தான் தமிழில் உதயம் புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப் படமான ‘பல்லாண்டு வாழ்க’ ஆனது.

சந்தர்ப்பவசத்தால் குற்றம் செய்துவிட்டு தண்டனை அடைந்த கைதிகளும் மனிதர்கள்தான் என்பதை விளக்கும் வகையில், கொடும் குற்றங்கள் செய்த கைதிகள் 6 பேரை மனம் திருந்தியவர்களாக மாற்றும் ‘ஜெயிலர் ராஜன்’ பாத்திரத்தில் அப்படத்தில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார்.

எம்ஜிஆர் 100 | 8 - எம்.ஜி.ஆரின் பொதுவுடமை

Return to frontpage


தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R. பொது உடமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். திராவிட இயக்கங்களும் பொதுவுடமை கொள்கையை ஏற்றுக் கொண்டவைதான். எம்.ஜி.ஆர். தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருந்த பெரியாரும், அறிஞர் அண்ணாவும் ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமூகம் அமைவதற்குத்தான் போராடினர்.

தனது படங்களில் பொதுவுடமைக் கொள்கைகள் தொடர்பான கருத்துகளையும் பாடல்களையும் எம்.ஜி.ஆர். இடம் பெறச்செய்வார். ஆரம்ப காலங்களில் எம்.ஜி.ஆரின் பொதுவுடமைக் கொள்கைகளுக்கு ஏற்ற பாடல்களுக்கு வரிவடிவம் தந்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பாட்டுக் கோட்டையாக விளங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையான ‘ஜனசக்தி’ யில் அவர் எழுதிய பாடலான ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி..’ பாடலை தனது ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திக் கொண்டார். அந்தப் பாடல் வரிகளில் திரைக்கு ஏற்றவாறு பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 19 ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கப் போவதை தீர்க்க தரிசனத்துடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது போல அமைந்துவிட்ட அந்த வரிகள்தான்... ‘நானே போடப் போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்... நாடு நலம் பெறும் திட்டம்...’

அதற்கேற்ப, நாடு நலம் பெறும் திட்டங்களை இயற்றக் கூடிய இடத்தில், 1977-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதல்வராக ஆகிவிட்டார். எதேச்சையாக இருந்தாலும் அதை முதலில் சொன்ன பெருமை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு உண்டு.

எம்ஜிஆருக்கு உள்ள வசீகர சக்தி எல்லோரும் அறிந்ததுதான். அதற்கான பல நிகழ்ச்சிகளில் உதாரணத்துக்கு ஒன்று.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பால தண்டாயுதம். திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தவர். குறிப்பாக, அப்போது திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மிகக் கடுமையாக தாக்கி பேசியவர். பாலதண்டாயுதம் என்றில்லை; திமுகவில் இருந்து பின்னர் காங்கிரஸில் இணைந்த கவியரசு கண்ண தாசன் உட்பட பலரும் குறிவைத்து எம்ஜிஆரை கடுமையாக விமர்சனம் செய்தே பேசுவார்கள்.

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அவர்களைப் பொறுத்தவரை சரிதான். ‘அறிஞர் அண்ணாவால் முகத்தை காட்டினாலே 30 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும் என்று பாராட்டப்பட்ட எம்ஜிஆர்தான் திமுகவின் வாக்குகளை ஈர்க்கும் சக்தியாக விளங்குகிறார். எனவே, எம்ஜிஆரை தாக்கி அவரை விமர்சனம் செய்வதன் மூலம் திமுகவை பலவீனப்படுத்தி விடலாம்’ என்பது அவர்கள் கணக்கு. அப்படித்தான் பால தண்டாயுதமும் எம்ஜிஆரை விமர்சித்து வந்தார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவ ரான ஜீவா அவர்களின் மீது பேரன்பு கொண்டவர் பாலதண்டாயுதம். ஜீவாவின் மரணத்துக்குப் பின் அவருக்கு சிலை எழுப்ப பாலதண்டாயுதம் முடிவு செய்தார். நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாகத் திகழ்ந்த, எல்லா தரப்பினரின் மதிப்பையும் பெற்றிருந்த ஜீவாவின் சிலையை நிறுவுவதற்காக கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள், பிரமுகர்களிடம் நிதி திரட்டினார் பாலதண்டாயுதம். ஓரளவு நிதி சேர்ந்திருந்தது.

‘எம்.ஜி.ஆரிடமும் நிதி கேட்கலாமா?’ என்று பாலதண்டாயுதத்துக்கு ஒரு யோசனை. ஆனால், எம்.ஜி.ஆரைப் பற்றிய தனது கடுமையான விமர் சனங்கள் அவரது மனதில் நிழலாடி தயக்கத்தை ஏற்படுத்தின. இருந்தாலும் எம்.ஜி.ஆரை சந்தித்து ஜீவாவின் சிலைக்கு நிதி கேட்பது என்று முடிவு செய்து அவரை சந்தித்தார். ‘தனக்கு வரவேற்பு எப்படி இருக்குமோ’ என்று தயங்கிபடி சென்ற பாலதண்டாயுதத்தை அகமும் முகமும் மலர மகிழ்ச்சியுடன் வரவேற்றார் எம்.ஜி.ஆர்.

வந்த விவரம் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு மேலும் மகிழ்ச்சி. மனபூர்வமாக நன்கொடை வழங்கு கிறேன் என்றார். பாலதண்டாயுதத்துக்கும் மகிழ்ச்சி ஒருபுறம். அதோடு, தான் பல சந்தர்ப் பங்களில் தாக்கி பேசியும் அதுபற்றிய விவரமே தெரியாதவர் போல தன்னுடன் எம்.ஜி.ஆர். இன்முகத்துடன் பழகியதால் வியப்பு மறுபுறம்.

‘‘சிலை வைக்க உங்கள் கணக்குப்படி எவ்வளவு செலவாகிறது?’’ எம்.ஜி.ஆர். கேட்டார்.

குறிப்பிட்ட தொகையை சொல்கிறார் பால தண்டாயுதம்.

‘‘அந்த தொகைதான் என் நன்கொடை’’ - இது எம்.ஜி.ஆர்.

பாலதண்டாயுதத்துக்கு இன்ப அதிர்ச்சி. பின்னர், அவரிடம் ‘‘நான் கம்யூனிச கொள்கையில் ஈடுபாடு கொண்டவன். என் படங்களில் பாடல்கள், வசனங்கள் மூலம் கம்யூனிச கொள்கைகளையும் சொல்லி வருகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பொதுவுடமை கொள்கை உடன் பாடே. சிறந்த பேச்சாளரான நீங்கள் உங்கள் பேச்சால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்கள் ஆற்றலை என்னை தாக்கு வதில் வீணடிக்கிறீர்களே? பொதுவுடமை கொள் கையை பரப்புவதில் நீங்கள் மேலும் சிறப்பாக தொண்டாற்ற வாழ்த்துகள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

அவரது உயர்ந்த குணத்தையும் பண்பையும் அறிந்து நெகிழ்ந்த பாலதண்டாயுதம், அன்று முதல் எம்.ஜி.ஆரை தாக்குவதை நிறுத்தியதோடு மட்டுமல்ல; அவரது குணநலன்களை நண்பர் களிடம் புகழ்ந்தார்.

அதோடு மட்டுமல்ல; திமுகவில் இருந்து நீக்கப்பட்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய பின் கம்யூனிஸ்ட்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். ‘‘ஊழலை எதிர்க்கிறார்; லஞ்சத்தை எதிர்க்கிறார் என்பதற்காக எம்.ஜி.ஆர். மீது ஒரு துரும்பு பட்டாலும், ஒரு கீறல் பட்டாலும் தமிழ்நாட்டில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எச்சரிக்கையாக பிரகடனப்படுத்துகிறேன்’’ என்று சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் பாலதண்டாயுதம் பேசும் அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது அவர் அன்பு கொண்டார்.

மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் வசீகரத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.




அதிமுக தொடங்கிய 7 மாதங்களிலேயே திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் 1973 மே 20-ம் தேதி நடந்தது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தன. அதிமுக வேட்பாளரான மாயத் தேவர் 2 லட்சத்து 60 ஆயிரத்து 930 ஓட்டுக்கள் பெற்று பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேல் பெற்று வெற்றி பெற்றார். ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் திமுக 3-வது இடத்தையும் பெற்றன. இந்திரா காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. இந்த பிரம்மாண்டமான வெற்றி அகில இந்தியாவையும் எம்.ஜி.ஆரை திரும்பிப் பார்க்க வைத்தது!

Tuesday, February 23, 2016

எம்ஜிஆர் 100 | 6....தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

Return to frontpage

M.G.R. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டுப் பற்றிலும் தேச பக்தியிலும் தேசியவாதிகள் யாருக்கும் சளைத்தவர் இல்லை. ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். 1946-ல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜர் ஆனபோது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்தான். பின்னர், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
காமராஜரை ஆரம்பத்தில் தலைவராக ஏற்றுக் கொண்டதால்தான் 1965-ம் ஆண்டு ஜூலையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று பேசினார். இது அப்போது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. என்றாலும், அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் தெளிவாகப் புரிந்தது.
1954 -ம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி சென்னை மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின், முதல்வராக காமராஜர் பதவியேற்றார். அப்போது அவர் சட்டப் பேரவை உறுப்பினராக இல்லை. குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ‘குணாளா, குலக்கொழுந்தே..’ என்று போற்றி காமராஜருக்கு ஆதரவு அளித்த அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் புரியாதா என்ன?
‘இந்தி சீனி பாய் - பாய்’ என்று உறவு கொண்டாடிய சீனா 1962-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திடீரென இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. நண்பரைப் போல நடித்து நயவஞ்சமாக தாக்குதலில் ஈடுபட்ட சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது. ஆசிய ஜோதி பண்டித நேரு அறைகூவல் விடுத்தார்.
‘‘ராணுவத்துக்கு உதவுவதற்காக பொது மக்கள் தாரளமாக யுத்த நிதி வழங்க வேண்டும்’’ என்று வானொலி மூலம் நாட்டு மக்களை பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார். அவரது உரையைக் கேட்டவுடன் 75 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்குவதாக அறிவித்த முதல் நடிகர் மட்டுமல்ல; நாட்டிலேயே முதல் குடிமகன் எம்.ஜி.ஆர்.தான். அது மட்டுமல்ல; அனைத்து இந்தியாவிலும் அவ்வளவு பெரிய தொகையை எந்த தனிநபரும் கொடுக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் 75,000 ரூபாய் இன்று பல கோடிகளுக்கு சமம்!
அறிவித்ததோடு நிற்காமல் உடனடியாக அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கொடுப்பதற்காக காமராஜர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். காமராஜர் வீட்டில் இல்லை. ரயில் மூலம் வெளியூர் பயணம் செல்வதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையம் சென்றுவிட்டது தெரியவந்தது. காமராஜர் திரும்பி வரட்டும், கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர். காத்திருக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையம் விரைந்து காமராஜர் பயணம் செய்த பெட்டிக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.
ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு. திடீரென அங்கு எம்.ஜி.ஆரைக் கண்டதும் காமராஜருக்கே வியப்பு. நேருவின் உரையை வானொலியில் கேட்டதாகவும் யுத்த நிதிக்கு ரூ.75,000 நன்கொடை அளிக்க இருப்பதை தெரிவித்து, முதல் தவணையாக ரூ.25,000க்கான காசோலையை காமராஜரிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். ‘ரொம்ப சந்தோஷம்’ என்று மகிழ்ச்சி தெரிவித்த காமராஜர் இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளிவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர். நிதி அளித்த விஷயம் மக்களுக்குத் தெரிய வந்தால், மக்கள் மேலும் ஆர்வமுடன் நிதி அளிக்க முன்வருவார்கள் என்பது காமராஜரின் எண்ணம்.
வெளியூர் பயணம் முடிந்து சென்னை திரும்பிய காமராஜர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர். யுத்த நிதி வழங்கியது பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். நிதி வழங்கியிருக்கிறாரா?’ என்று கேட்டதும் வந்ததே கோபம் காமராஜருக்கு.
‘‘சும்மா இருங்கிறேன். நீ எவ்வளவு கொடுத்தே? எப்ப கொடுத்தே? கொடுப்பியோ, மாட்டியோ? கொடுக்கிறவங்களையும் சும்மா ஏன் கிண்டல் செய்யணும்? நேரு ரேடியோவிலே பேசப் போறாரு. காமராஜரு ரெயில்லே போவாரு. முதல்லே கொடுக்கணும்னு பிளான் போட்டாரா? எப்படி முடியும்கிறேன்? ரயில்வே ஸ்டேஷன்லே எம்.ஜி.ஆர். கொடுத்த செக்கை வாங்கி யதும் நானே பிரமிச்சு போயிட்டேன். உடனே பேப்பருக்கும் செய்தி கொடுக்கச் சொன்னேன்’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார் உண்மையான நாட்டுப் பற்றைப் போற்றும் பெருந்தலைவர் காமராஜர்.
இதனிடையே, தான் யுத்த நிதி அளிக்கும் செய்தியை பிரதமர் நேருவுக்கும் கடிதம் மூலம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். யுத்த வேளையில், நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நேரு நினைத்திருந்தால் தனது உதவி யாளரையோ, பிரதமர் அலுவலக ஊழியர் களையோ எம்.ஜி.ஆருக்கு பதில் கடிதம் எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால், யுத்த நிதிக்கு பெரும் தொகையை அள்ளி வழங்கிய நாட்டின் முதல் குடிமகன் எம்.ஜி.ஆருக்கு நேருவே கடிதம் எழுதினார். ‘‘ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தாராளமாக நிதி வழங்கியமைக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆருக்கு பிரதமர் நேரு எழுதிய கடிதம்
எம்.ஜி.ஆரின் நாட்டுப் பற்றையும் நேரு பாராட்டிய பெருந்தன்மையான அவரது மனதையும் பறைசாற்றும் வகையில், சென்னை யில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சாட்சியாக உள்ளது நேருஜியின் அந்தக் கடிதம்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தேசத் தலைவர்கள், நாட்டுக்கு உழைத்தவர்கள், தியாகிகள் பெயர்களை மாவட்டங்களுக்கு சூட்டினார். 1984-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று அவர் பிறந்த விருது நகரை தலைமையிடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.
தொடரும்..
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

All-India medical entrance dress code violates religious freedom: Petition in HC

All-India medical entrance dress code violates religious freedom: Petition in HC

TIMES OF INDIA

HI: The dress code stipulated for All-India medical entrance that asks women candidates to wear half-sleeve dress violates the constitutional right to practise one's religion, a 20-year-old Muslim woman has alleged at the Kerala High Court.
A petition filed to the high court by Amna Bint Basheer of Pavaratti in Thrissur said the dress code mentioned in the information bulletin given to candidates who have applied for the All India Pre-Medical Entrance Test (AIPMT) 2016 infringes on her religious beliefs and practices. This year's AIPMT is scheduled for May 1 stat present.
In the bulletin, it is stated that women candidates should wear light clothes with half sleeves. She is a practising Muslim woman and wearing a half-sleeve dress as mentioned in the bulletin will be against Quranic instructions. As per Quran, she is required to cover all her body except face when she is appearing in public or is with non-relatives, the petition filed through advocate Shameem Ahamed said.
The dress code specified for AIPMT has no nexus with the objectives sought to be achieved and it is unconstitutional as it violates the fundamental right of the petitioner to practise her religion as per Article 25 (1) of the Constitution. The only exception is the authorization for the State to make law for regulating or restricting any economic, financial, political, or other secular activity which may be associated with religious practice, the petition stated.
The condition imposed on the petitioner and other similarly-placed candidates is a clear infringement of their fundamental right and is against the Supreme Court's 1986 decision in Bijoe Emmanuel vs State of Kerala case, it is alleged.
Further, the petitioner points out that a similar challenge was raised by candidates who appeared for last year's AIPMT and the high court had issued orders in their favour. Even after the high court issued orders, authorities prevented Muslim and Christian candidates from appearing for the examination citing dress code, the petitioner contends citing media reports. In such circumstances, the petitioner is constrained to approach the high court, the petition said.

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து சென்ற விமானத்தில், பயணியொருவர் மது கேட்டு கலாட்டா செய்ததுடன் சிறுநீர் கழித்துள்ளதை அடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் 500 பவுண்டுகள் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

WEBDUNIA

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து சென்ற விமானத்தில், பயணியொருவர் மது கேட்டு கலாட்டா செய்ததுடன் சிறுநீர் கழித்துள்ளதை அடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் 500 பவுண்டுகள் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

 
கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஜினு ஆப்ரஹாம் [39] தனது 10 வயது மகனுடன் ’ஏர் இந்தியா போயிங் 787’ ரக விமானத்தில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்தின் பிர்மிங்காம் பகுதிக்கு பயணம் செய்துள்ளார். அப்போது அவர்
 
அப்போது அவர், விமானத்தில் அதிக அளவு மது கேட்டுப்பெற்று அருந்தியதாக கூறப்படுகிறது. போதை அதிகமானதும் விமான ஊழியர்களை அழைத்து தமக்கு மீண்டும் மது வேண்டும் எனக் கேட்டு நச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
அதற்கு விமான ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததோடு, அவரை எச்சரித்துள்ளனர். விமானம் தரையிறங்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பு, அவர் விமாத்தின் மையப்பகுதிக்கு வந்து நின்றுகொண்டு தனது கால்சட்டை கழற்றி அங்கேயே சிறுநீர் கழித்துள்ளார்.
 
இச்சம்பவத்தினால் சக பயணிகள் அனைவரும் முகம் சுழித்துள்ளனர், தொடர்ந்து விமான ஊழியர்கள் வலுக்கட்டாயமாக அவரை இருக்கையில் வைத்து பிணைத்துக் கட்டியுள்ளனர். பர்மிங்காம் விமான நிலையம் சேர்ந்ததும் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
 
அவரின் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, பர்மிங்காம் குற்றவியல் நீதிமன்றம் 500 பவுண்டுகள் விமான நிறுவனத்திற்கு இழப்பீடாகவும், கூடுதல் கட்டணமாக 30 பவுண்டுகளும், செல்வீன தொகையாக 185 பவுண்டுகளும் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
 
இவரது மருந்து மாத்திரைகளை இந்தியாவில் உள்ள விமான நிலையத்தில் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மனைவியின் உடல்நலம் குறித்து கவலையினால், ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவ்வாறு நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

குடிநீர் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் ஏ.சி. அறையில் ஓய்வெடுத்துக் கொண்டு கோர்ட்டு உத்தரவை எதிர்பார்ப்பதா? டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

குடிநீர் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் ஏ.சி. அறையில் ஓய்வெடுத்துக் கொண்டு கோர்ட்டு உத்தரவை எதிர்பார்ப்பதா? டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

DAILY THANTHI

புதுடெல்லி,
டெல்லிக்கு குடிநீர் தடைபட்ட பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். ஏ.சி. அறையில் ஓய்வெடுத்துக் கொண்டு, கோர்ட்டு உத்தரவை எதிர்பார்க்கிறீர்கள் என்று டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
குடிநீர் நிறுத்தம்
அரியானா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர், இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லிக்கு தண்ணீர் வினியோகமாகும் முனாக் கால்வாயை முற்றுகையிட்டு டெல்லிக்கு தண்ணீர் விடுவதை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து டெல்லியில் கடுமையான முறையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டது. பல பகுதிகளில் தண்ணீர் வராமல் மக்கள் மிகவும் அவதியுற்றனர்.
இதையடுத்து டெல்லி மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘ஜாட் இனத்தவரின் போராட்டத்தினால் டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய ராணுவத்தை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மந்திரி ஆஜர்
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
டெல்லி மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான், தனது வாதத்தில், ‘அரியானாவில் நடைபெறும் போராட்டத்தினால் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. கடுமையான தண்ணீர் பஞ்சம் டெல்லியை பாதிக்கும் ஆபத்து உள்ளது. சம்பந்தப்பட்ட மந்திரி கபில் மிஸ்ரா இந்த கோர்ட்டில் ஆஜராகி இருக்கிறார்’ என்று கூறினார்.
ஏ.சி. அறை
இதையடுத்து தலைமை நீதிபதி மிகுந்த கோபத்துடன், ‘இதுபோன்ற மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட மந்திரி கோர்ட்டு அறையில் அமர்ந்து இருக்கிறார். அரியானா சென்று அந்த மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதை விட விஷயத்தை கோர்ட்டுக்கு எடுத்துக் கொண்டு வருவது சுலபமாக இருக்கும் என்று கருதுகிறீர்களா? ஏ.சி. அறையில் ஓய்வெடுத்துக் கொண்டு கோர்ட்டு உத்தரவை எதிர்பார்க்கிறீர்கள். எல்லாவற்றையும் தட்டில் வைத்து தரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்.
இது டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களுக்கு இடையிலான நிர்வாக பிரச்சினையாகும். அங்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தி டெல்லிக்கு தண்ணீர் கொண்டு வரும் வழியை பாருங்கள். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறினார்.
நோட்டீசு
இதையடுத்து இந்த மனுவை தயவு செய்து தள்ளுபடி செய்ய வேண்டாம் என்றும், நிலைமையை உத்தேசித்து மறுபரிசீலனை செய்யுமாறும் ராஜீவ் தவான் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு நீதிபதிகள், டெல்லிக்கு குடிநீர் வினியோகத்தை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அரியானா மாநில அரசை கேட்டுக்கொண்டனர்.
அரியானா மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இன்றே குடிநீர் வினியோகத்தை தொடங்க முயன்று வருகிறோம்’ என்றார்.
இதையடுத்து அரியானா அரசு இந்த விவகாரம் குறித்து இரு நாட்களில் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச அரசுக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்

தேவை புரிதல் மனப்பான்மை

தேவை புரிதல் மனப்பான்மை

By  ச. கந்தசாமி
First Published : 23 February 2016 01:09 AM IST
DINAMANI


பதினெட்டு வயதுக்குள்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்குச் சட்டம் தடை விதிக்கிறது. தடை மீறிச் சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுவார்களானால் அவ்வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். வாகன உரிமையாளர்களுக்கு அபராதம், தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்'. இவ்வாறு, சமுதாய நன்மைக்காக இங்கு இல்லாத சட்டங்கள் இல்லை.
 ஆனால், காவல் துறையினரின் மெத்தனம், கடமைப் புறக்கணிப்பு, கையூட்டு இவைகளால் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய மக்கள் அற்பமாகவும், சட்டத்தை மீறுவது தவறில்லையெனவும் நினைக்கிறார்கள். "மீறுதல் இயல்பே' எனவும் நினைத்து வாழப் பழகிவிட்டார்கள்.
 "குடும்ப கெளரவம், சமூகத்தில் மதிப்பு, பொதுமக்களிடம் அந்தஸ்து, தலைமை ஸ்தானம்' என்ற போலிப் பெருமைகளைத் தக்க வைப்பதற்காகச் சில அவசியமில்லாத பழக்க வழக்கங்கள், அநாவசியத் தேவைகள், மிதமிஞ்சிய ஆசைகளுக்கும் பலர் ஆட்பட்டு விடுகிறார்கள். 
 வீட்டிலுள்ள அத்தனை பேர்களுக்கும் தனிதனியாக உடைகள், செருப்புகள் (காலணிகள்) இருப்பது போலத் தனித்தனி வாகனங்கள், தனித்தனி கைபேசிகள், குடைகள், வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்திருப்பதைப் பெருமையாகக் கருதும் குடும்பங்களும் உண்டு. இவ்வாறு வாழ்வது "கெளரவத்தின் அம்சம்' எனவும் பெருமைபட நினைக்கிறார்கள்.
 "பணத்தை எதில் முதலீடு செய்யலாம், எதற்குச் செலவழிக்கலாம்? என்ன பொருள்கள் வாங்கலாம்?' என்ற தெளிவேதும் இல்லாமல், கண்ட கண்ட பொருள்களையெல்லாம் வீட்டில் வாங்கிக் குவிக்கும் பலர் கடை கடைகளாக அலைந்து திரிவர். 
 சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவது கண்டு பூரித்துப் போகும் பெற்றோர்களும் பலர் இருக்கிறார்கள். "வாழ்க்கை, அமைதி, உண்மையான மகிழ்ச்சி, அவசியத் தேவைகள் எவை?' என்பதைப் புரிதலின்றி வாழும் மக்கள் நிறைந்த சமூகத்தில் சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு என்பதெல்லாம் விலக்கி வைக்கப்படுகின்றன.
 பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துவர, பள்ளி முடிந்து வீடுகளில் கொண்டு சேர்க்க அனைத்துத் தனியார் பள்ளிகளும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்பாட்டுக்கு வைத்துள்ளன. தனியாகக் கட்டணங்களையும் வசூல் செய்கின்றன. 
 அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் கட்டணப் பேருந்து வசதிகளை மாநில அரசே கிராமப்புறக் குழந்தைகளின் முக்கியத்துவம் கருதி ஏற்பாடு செய்துள்ளது. 
 அரசுப் பேருந்து வசதிகள் இல்லாத குக்கிராமங்களே இல்லையெனும் அளவுக்கு அரசு போக்குவரத்து வசதிகளைப் பெருக்கியுள்ளது. இலவசச் சைக்கிள்களும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
 இத்தனை வாய்ப்பு வசதிகளுக்குப் பிறகும் பதினெட்டு வயது நிரம்பாத பள்ளி மாணவர்கள் இரண்டு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவது அவசியமில்லாதது; தவறு. 
 இவ்வாறு வரும் மாணவர்களை அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனுமதிப்பது பள்ளிகளின் நிர்வாகத் தவறு; தலைமையாசிரியர், கல்வித் துறையின் உதாசீனப் போக்கு. பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கண்டிப்பையும் உறுதியையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
 மக்களின் நுகர்வு கலாசாரத்துக்கும் பேராசைகளுக்கும் வலை விரிக்கும் நோக்கில் வாகன உற்பத்தியை எல்லையின்றித் தயார் செய்யும் தொழில் நிறுவனங்களை அரசே கட்டுப்படுத்த வேண்டும். ஆசையைத் திருப்தி செய்யப் பொருள் உற்பத்தி என்றிராமல், தேவையை நிறைவு செய்யும் அளவுக்கே பொருள் உற்பத்தி என்பது அமைய வேண்டும். 
 உற்பத்தியைப் பெருக்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை வெளிநாடுகளின் ஏற்றுமதிக்குப் பயன்படுத்தட்டுமே. இதனால் அன்னியச் செலாவணி கிடைக்குமே. இது நாட்டின் பொருளாதார வளத்துக்கு நல்லது தானே! 
 சட்டத்தையும் ஒழுங்கையும் மீறும் காவல் துறையினர், தனி மனிதர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். கடுமையின்மை, விதிதளர்வு, பாரபட்சம் என்பதையெல்லாம் ஓரங்கட்டி கண்டிப்பைக் காட்டிடும் அரசு நிர்வாகம் நம்மிடம் தேவை.
 "உயர் மதிப்பெண்கள், உயர் பதவிகள், அதிகப்படியான ஊதியம், சொகுசு வாழ்க்கை, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு இவை கிட்டுவதற்கான கற்பித்தல் மட்டுமே கல்விக் கூடங்களின் பணியன்று.
 உடல் ஆரோக்கியம், சமூகத்தோடு இசைவு, பணியில் பொறுப்புணர்வு, கடமையில் ஈடுபாடு, சட்டத்தையும் விதிகளையும் மதித்து நடத்தல், தேசத் தொண்டை விழையும் தியாக உணர்வு, பிறர்க்கு உதவும் மனோபாவம், பெரியோரை மதித்தல், தாய், தந்தையரையும் ஆசிரியர்களையும் போற்றி வணங்கி பண்புடன் நடத்தல், சக மாணவ, மாணவிகளை மதித்தல், கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு தகுந்த உதவியை அவர்களுக்கு அளித்தல், பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதெனும் எண்ணம், இவை தேவை, இவை தேவையற்றவை என உணர்ந்து விலக்கும் புரிதல் மனப்பான்மை'- இவையே பள்ளிகளில் கற்பித்தலில் முக்கியத்துவம் பெற வேண்டும்.
 எந்திரங்கள் போலும் சுயநல வாழ்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது கல்வியின் நோக்கமன்று.

பணி ஓய்வுக்குப் பிறகு?

THE HINDU TAMIL

பணி ஓய்வுக்குப் பிறகு?

தற்போது 30 வயதுக்குள் இருக்கும் நபர்களிடம் சென்று ஓய்வுகாலத்துக்கு முதலீடு செய்துவிட்டீர்களா என்று கேட்டால், அதற்கு இப்போது என்ன அவசரம் என்று பதில் கேள்வி கேட்பார்கள். ஆனால் இப்போது சேமிக்க முடியாவிட்டால் எப்போதும் சேமிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.
இப்போது ஏன்?
ஓய்வு காலத்துக்கு இப்போதே திட்டமிட வேண்டியது அவசியம். இதற்கு பல காரணங்கள். முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப முறை இருந்தது. அதனால் குடும்பத்துக்கு வருமானம் ஈட்டுபவர்கள் சிலர் இருந்தனர். ஆனால் இப்போது தனிக்குடும்ப சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில், ஓய்வு காலத்துக்கு பிறகு வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் குறைவு. பணிபுரியும் அனைவருக்கும் ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பதால் இப்போது சேமிக்கும் தொகைதான் வருங்காலத்தில் பயன்படும்.
வாழ்க்கை முறை
பொதுவாக இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பணி ஓய்வுக்கு பிறகு 20 ஆண்டுகள் வாழ்வது என்பது இப்போது சாதாரணமாகி விட்டது. அதனால் 60 வயதுக்கு பிறகு நமக்கு என்ன செலவு இருக்கப்போகிறது என்று யோசிப்பதை விட்டுவிடுங்கள். அதுபோல இப்போது ஒரு மாதத்துக்கு ஆகும் செலவு தொகை அப்போது பல மடங்கு அதிகரிக்கும். இந்த பணவீக்கத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. வாடகை வீட்டில் இருந்தால் இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு வாடகை எந்த அளவுக்கு உயரும், விலைவாசி எவ்வளவு உயரும் என்பதை முன்கூட்டியே திட்டமிடவேண்டும். இத்தனை சவால்களை சந்திக்க வேண்டும் என்றால் ஓய்வுக்காலத்துக்கு இப்போதே முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
எதில், ஏன்?
ஓய்வு காலத்துக்கு பல வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஆயூள் காப்பீடு, புதிய பென்ஷன் திட்டம், பிபிஎப் உள்ளிட்ட பல வகையான முதலீட்டு திட்டங்கள் இதுவரை இருந்தன. இப்போது மியூச்சுவல் பண்ட்களிலும் இதுபோன்ற திட்டங்கள் வர ஆரம்பித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக பிராங்க்ளின் இந்தியா மற்றும் யூடிஐ மியூச்சுவல் பண்ட்களில் இந்த வகையிலான பண்ட்கள் இருந்தாலும், கடந்த ஆண்டில் ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனமும் இதுபோன்ற ஓய்வு கால பண்டை அறிமுகப்படுத்தியது. கடந்த வாரத்தில் ஹெச்டிஎப்சி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் ஓய்வு கால பண்டுக்கான என்.எப்.ஓ (புதிய பண்ட் வெளியீடு) முடிந்துள்ளது. மேலும், எஸ்பிஐ, ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ, கனரா ராபிகோ, ஐடிபிஐ, டிஎஸ்பி பிளாக்ராக், பிர்லா சன்லைப் மற்றும் எல்ஐசி நொமுரா ஆகிய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இதுபோல ஓய்வு கால பண்ட் வெளியிட செபியிடம் அனுமதி கோரியிருக்கின்றன. பட்ஜெட்டுக்கு பிறகு இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
சலுகைகள் என்ன?
வரிவிலக்கு மியூச்சுவல் பண்ட் திட்டமான இஎல்எஸ்எஸ் திட்டங்களுக்கு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. இந்த இஎல்எஸ்எஸ் வகை பண்ட்களில் செய்யப்படும் முதலீட்டை மூன்று வருடத்துக்கு வெளியே எடுக்க முடியாது. அதுபோல ஓய்வு கால மியூச்சுவல் பண்ட்களில் செய்யப்படும் முதலீட்டை ஐந்து வருடங்களுக்கு எடுக்க முடியாது. ஐந்து வருடம் முடிந்தாலும், 60 வயதுக்கு முன்பாக முதலீட்டை எடுக்க முடியாது. அப்படி எடுக்க வேண்டிய தேவை இருந்தால் வெளியேறும் கட்டணமாக ஒரு சதவீதம் செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த பண்டில் மூன்று வகையான வாய்ப்புகள் உள்ளன. முழுவதும் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள். 60-80 சதவீதம் வரை பங்குச்சந்தை முதலீடு செய்வது, 5-30 சதவீதம் வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என மூன்று வகையான வாய்ப்புகள் உள்ளன. முதலீட்டாளர்கள் தங்களது ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப இந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
வயது குறைவாக இருப்பவர்கள் முழுவதும் ரிஸ்க் உள்ள பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களிலும், நடுத்தர வயதில் இருப்பவர்கள் பங்குச்சந்தை சார்ந்த பேலன்ஸ்டு பண்டையும், 50 வயதுக்கு மேல் இருப்பவர்கள் கடன் சந்தை சார்ந்த பேலன்ஸ்ட் பண்டையும் தேர்வு செய்யலாம்.
என்பிஎஸ்
என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் அதிகபட்சம் 50 சதவீதம் வரை மட்டுமே பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். ஆனால் மியூச்சுவல் பண்ட்களில் 100 சதவீதம் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. தவிர என்பிஎஸ் அல்லது இன்ஷூரன்ஸில் உள்ள பென்ஷன் திட்டங்களில் முதலீடு செய்த மொத்த தொகையையும் எடுக்க முடியாது. குறிப்பிட்ட தொகையை ஆனுட்டி திட்டங்களில் முதலீடு செய்தே மாதந்தோறும் தொகையை வாங்க முடியும். ஆனால் இங்கு எஸ்டிபி முறையில் ஒவ்வொரு மாதமும் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். மொத்தமாக வேண்டும் என்றால் எடுத்துக்கொள்ள முடியும்.
முதலீடு செய்யலாமா?
புதிதாக வந்திருக்கும் ஓய்வு கால மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யலாமா என்று நிதி ஆலோசகர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் கேட்டோம். பொதுவாக புதிய பண்ட் வெளியீடுகளை நான் பரிந்துரை செய்வதில்லை. ஒரு பண்டின் செயல்பாடு, பண்ட் நிர்வாகி, மியூச்சுவல் பண்ட் நிறுவனம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிறகே பரிந்துரை செய்வேன்.
ஆனால் பெரும்பாலான முதலீடுகள் இலக்கில்லாமல் செய்யப்படுபவையாக இருக்கின்றன. பலர் முதலீட்டை பாதியில் எடுக்கிறார்கள். சிலர் அவசியமாகவும், சிலர் அநாவசியமாகவும் முதலீட்டை பாதியில் திரும்ப பெருகின்றனர். ஓய்வு சமயத்தில் பார்க்கும் போது அவர்களிடம் போதுமான நிதி இருப்பதில்லை.
இது போன்ற சமயங்களில்தான் இலக்குகளுடன் கூடிய முதலீடுகள் அவசியமாகின்றன. ஒரு இலக்குடன் முதலீடு செய்யும் போது அந்த தொகையை வெளியே எடுக்க முடியாது. எடுக்கும் பட்சத்தில் ஒரு சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பதனால் முதலீட்டை திரும்ப பெறாமல் தொடரவே வாய்ப்புகள் அதிகம். இந்த கட்டுப்பாடு அவசியம் என்றே தோன்றுகிறது.
சாதாரண ஈக்விட்டி பண்ட்கள் அல்லது சந்தையில் சிறப்பாக செயல்படும் இஎல்எஸ்எஸ் பண்ட்களின் வருமானத்துடன் ஒப்பிடும் போது இதுபோன்ற புதிய ஓய்வுகால பண்ட்களின் வருமானம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது. ஆனால் நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் போது கணிசமான வருமானம் கிடைக்கலாம். ஓய்வு பெற்ற கவலை வேண்டுமானாலும் பட முடியுமே தவிர, திட்டமிட முடியாது. திட்டமிடலை இப்போது தொடங்க வேண்டும் என்றார்.
உங்கள் திட்டத்தை எப்போது தொடங்கபோகிறீர்கள்?

NEWS TODAY 22.04.2024