Wednesday, December 31, 2014

வரும் ஆண்டு சிங்கப்பூரில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசு

பொன்விழாவையொட்டி வரும் ஆண்டில் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்க அந்நாட்டின் அரசாங்கம் முடிவு

2015ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது பொன்விழாவை கொண்டாடுவதை குறிக்கும் வகையில் அடுத்த ஆண்டில் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்க அந்நாட்டின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அடுத்து ஆண்டு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களின் நாளாந்தத் தேவைக்குப் பயன்படும் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுப்பெட்டி வழங்கப்படும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நான் ஒரு பொன்விழாக் குழந்தை" என்று குறிப்பிடும் குழந்தையின் ஆடைகள் உள்ளிட்ட பரிசுகளும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மறக்கமுடியாத தருணங்களை பதிவு செய்ய ஒரு நோட்டுப் புத்தகமும், நினைவு பதக்கமும் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் சார்பில் அளிக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் இந்தப் பரிசுத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சிங்கப்பூரில் வாழும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும், வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த பரிசுப்பெட்டி வழங்கப்படும்.

2015 ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு பம்பர் பரிசு ஆண்டாக இருக்கும். அரசாங்கத்தை தவிர ஒரு முக்கிய வங்கியும் அந்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கவுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வங்கியின் பரிசுப்பெட்டியில் கையுறைகள், செல்பீ ஸ்டிக் மற்றும் ஒரு பணப்பெட்டியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இந்த பரிசுகள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அளிக்கப்பட்டாலும், பல நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கம் பரிசுகள் அளிப்பது என்பது வழக்கமான ஒன்றாகும். ஃபின்லாந்தில் கடந்த 1930ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டில் கர்ப்பிணித் தாய்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.

Why SE Asia is air disaster-prone

Dec 31 2014 : The Times of India (Chennai)
Why SE Asia is air disaster-prone


In the past year, Malaysia’s aviation industry has suffered a number of tragedies. Although the odds of any person boarding a flight dying in a plane crash are about one in 11 million, three Malaysiabased aircraft have apparently gone down, with no survivors.

To some extent, the three Malaysian air disasters are just brutal bad luck. Still, they point to several disturbing trends that raise the question of whether flying in peninsular Southeast Asia is complete ly safe. The air market in the region has embraced low-cost carriers, leading to a proliferation of flights throughout Southeast Asia, stretching air traffic controllers, and possibly allowing airlines to expand too rapidly . Indonesian carriers, air traffic controllers, and Indonesian airspace have be come notorious for weak safety regulations.

But while air traffic has grown in the region, and while AirAsia had a mostly solid safety record, the increase in low-cost flights may have resulted in planes being operated by men and women with less experience. The pilot on the AirAsia flight had about 6,000 hours of flight experience on the Airbus plane he was flying, but it is unclear whether he had experience flying at 34,000 feet or higher, where he was trying to take the plane to avoid bad weather. BLOOMBERG

In Philippines, plane overshoots runway

An AirAsia Zest plane carrying 159 people overshot the runway and got stuck in a muddy field on Tuesday at an international airport in central Philippines after landing from Manila. No injuries were reported. AP

Flight forced to turn back in Bangkok

An AirAsia Flight FD3254 bound for northeast Thailand was forced to turn back to the capital Bangkok soon after take off on Tuesday after pilots detected an “irregularity“ in the luggage compartment. PTI

விடைகொடு 2014-ம் ஆண்டே!

Return to frontpage

இதோ 2014-ம் ஆண்டின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம். நம்மை விட்டுப் பிரியவிருக்கும் இந்த ஆண்டை எப்படி வழியனுப்புவது என்ற குழப்பம் எல்லோருக்கும் இருக்கும். மகிழ்ச்சியான ஆண்டு என்று கருதி துயரத்துடன் விடைகொடுப்பதா, அல்லது துயரமான ஆண்டு என்று கருதி பாராமுகத்துடன் விடைகொடுப்பதா? இந்தக் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதில் பதில் சொல்ல முடியாதுதான்.

ஏகாதிபத்தியமும் அதன் துணைவிளைவாகப் பயங்கரவாதமும் இந்த ஆண்டின் முகத்தைக் கோரமாகக் கிழித்துவிட்டிருக்கின்றன. ‘பாலஸ்தீன மக்களுக்குத் தோள்கொடுக்கும் ஆண்டு’ என்று ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டில்தான், காஸாவில் பேரவலங்கள் நிகழ்த்தப்பட்டன. சிரியாவில் லட்சக் கணக்கான மக்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் அகதிகளாகியிருக்கிறார்கள். சிரியா, இராக் என்று ஐ.எஸ். அமைப்பின் விஷ வேர்கள் இன்னும் ஆழமாகவும் பரவலாகவும் ஊடுருவிக்கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளின் ஏகாதிபத்தியத் துக்கு எதிரான போர்களை, மேலை நாடுகளின் துணையால் உருவான அடிப்படைவாத அமைப்புகள் மேலை நாடுகளால் கொடுக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டே நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.

அது மட்டுமா? கடவுள் துகளையே கண்டறிந்துவிட்டதாக நாம் பெரு மிதப்பட்டுக்கொண்டிருந்த வேளையில்தான், மார்ச் 8-ம் தேதியன்று மலேசிய விமானம் 239 பேருடன் மாயமானது. 26 நாடுகள் சேர்ந்து, 20 லட்சம் சதுர கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தேடியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜூலை மாதம் மற்றுமொரு துயரம்: மலேசிய விமானமொன்று உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இவையெல்லாம் போதாதென்று கடந்த 28-ம் தேதி இன்னொரு விமானம் மாயமாகியிருக்கிறது.

இதற்கிடையில், பாகிஸ்தானின் மலாலாவுக்கும் இந்தியாவின் சத்யார்த்திக்கும் கிடைத்த நோபல் அமைதி விருது சற்றே ஆசுவாசம் தரும் பூச்செண்டு. அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் துளிர்ப்பதாக நம்பப்படும் நட்பும் சற்று நம்பிக்கையைத் தருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இது மாற்றத்தின் ஆண்டு. காங்கிரஸுக்கு வரலாறு காணாத தோல்வியையும், பாஜகவுக்குப் பெருவெற்றியையும் இந்த ஆண்டு வழங்கியிருக்கிறது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்த ஒருவர், முதன்முறையாக இந்தியாவின் பிரதமராக ஆகியிருக்கிறார்.

நைஜீரியாவில் போகோ ஹராம் 250-க்கும் மேற்பட்ட இளம் பெண்களைக் கடத்திவைத்திருப்பது, ரஷ்ய-உக்ரைன் பிரச்சினை என்று உலக அளவிலும், காஷ்மீர் வெள்ளம், மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல், போடோ பயங்கரவாதிகளின் தாக்குதல், தலையெடுக்கும் மதவாதப் போக்கு என்று இந்திய அளவிலும், மவுலிவாக்கம் கட்டட விபத்து என்று தமிழக அளவிலும் இந்த ஆண்டுக்கு எதிர்மறையாக இன்னும் எவ்வளவோ முகங்கள் உண்டு.

ஆண்டு நிறைவை எட்டிக்கொண்டிருக்கும்போது, பாகிஸ்தானின் பெஷாவர் பள்ளியின் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டனர். சென்னை பள்ளி ஒன்றில் அந்தச் சிறுவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டபோது, கண்களில் நீர்த் துளிர்க்க, கைகளில் மெழுகுவத்தியுடன் நின்றிருந்த ஒரு சிறுமியின் புகைப்படம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. தேசம், மதம், மொழி கடந்த அந்தக் கண்ணீர்த்துளி, நம்முள் புதைந்து கொண்டிருக்கும் மனிதத்துக்கு எப்படியும் உயிர்கொடுக்கக் கூடியது. அந்த நம்பிக்கையுடன் இந்த ஆண்டுக்கு விடைகொடுத்து, வரும் ஆண்டை வரவேற்போம்.

Tuesday, December 30, 2014

Modi government to merge PIO and OCI cards; Home ministry may amend Indian Citizenship Act

The Economic Times

NEW DELHI: The government has quietly readied yet another ordinance — this one to merge the PIO and OCI cards — to make good a promise made by Prime Minister Narendra Modi during his visits to the US and Australia when he vowed to make it easier for the Indian diaspora to connect with their homeland.


The home ministry will soon bring an ordinance to amend the Indian Citizenship Act of 1955 and a senior official said this was likely to be done before January 7 inauguration of the Pravasi Bharatiya Divas in Gandhinagar. This will mark a fresh test to accepted political conventions for passing legislations using the ordinance route and could expose the government to criticism that it was disregarding Parliament.

The upcoming ordinance is expected to specify a date by which existing PIO (Persons of Indian Origin) cardholders will be deemed as having the rights and privileges enjoyed by Overseas Citizens of India (OCI).

Modi had promised, most recently in his 
Sydney speech to the Indian diaspora on November 17, that the PIO and OCI cards would be merged within two months. The home ministry had introduced the Citizenship (Amendment) Bill, 2014 in the Lok Sabhaearlier this month but it could not be taken up due to frequent disruptions.

The thinking in the government, officials said, was that if it decided to wait until the next session in February, the promise would not be met. "It will be an embarrassment if the PIO-OCI cards are not merged by then. Hence, the home ministry has prepared an ordinance as a gift to NRIs," a home ministry official told ET, adding that the upcoming Pravasi Bharatiya Divas gave the government the perfect setting to make good the PM's promise.

The home ministry official said the ordinance would be presented to the union cabinet for clearance very soon, preferably as early as in its next meeting. Modi has for long aggressively courted the Indian diaspora, many of whom are financially well off in their ed nations, to invest in India. His public meetings during his visits abroad as PM have been well attended and his election campaign too also saw the involvement of large numbers of Indian expatriates.

The PIO and OCI cards are expected to be merged into a new scheme that will be called Indian Overseas Cardholder and will retain many of the features of the OCI, which is more popular among Indian expatriates because it allows them to have a lifelong Indian visa and financial privileges applicable to nonresident Indians. A PIO card-adoptholder by comparison could only stay in Indian for six months at a time. The government has issued nearly 53,000 PIO cards so far, while around 10 lakh people have been granted OCI status.

The planned ordinance will also involve amendments to allow foreigners breaks for a period not exceeding 30 days during the prescribed one-year stay in the country before they can apply for Indian citizenship. At present, foreign nationals marrying Indians cannot leave the country even for a single day during the one-year period before applying for citizenship.

Monday, December 29, 2014

திரை விமர்சனம்: மீகாமன்....சினிமா » இந்து டாக்கீஸ்

Return to frontpage





மீகாமன் என்றால் மாலுமி என்று பொருள். இங்கே போதைக் கும்பலை வேரறுக்கும் நடவடிக்கையை முன்னின்று நடத்தும் ஒருவன் அதை எப்படிச் செய்கிறான் என்பதுதான் கதை.

கடற்கரையில் கிடக்கும் பிணங்கள், போதை மருந்துக் கும்பலிடமிருந்தே திருடப்படும் சரக்கு மூட்டைகள், உள்ளே கருங்காலி இருப்பதை அறிந்து அவனுக்கு வலை வீசும் மனித வேட்டை, யாருமே பார்த்திராத நிழல் உலகத் தலைவன், கும்பலைப் பிடிக்கக் காவல் துறையின் ரகசிய வலை வீச்சு, அந்தத் துறைக்குள்ளேயே அதற்கு எதிரான சதி என்று த்ரில்லர் களத்தில் நின்று விளையாடுகிறது மகிழ்திருமேனியின் ‘மீகாமன்’.

கோவாவில் இருக்கும் போதை மருந்துக் கும்பல் நெட்வொர்க்கில் நான்கு வருடங்களாக வேலை செய்கிறார் சிவா என்கிற அருண் (ஆர்யா). அவ்வளவு நாட்கள் வேலை செய்திருந் தாலும் அந்த நெட்வொர்க் தலைவனைப் பார்க்க முடியாத அளவுக்குக் கெடுபிடிகளும், இறுக்கமான செயல்முறைகளும் கொண்ட நெட்வொர்க் அது. இதேபோல அவரது சகா ரமணாவும் குஜராத்தில் இன்னொரு கும்பலிடம் நெருங்குகிறார்.

மும்பையிலிருந்து 1000 கிலோ கொகைனை கோவாவில் இருக்கும் ஜோதியின் அமைப் பிடம் விற்க ஏற்பாடு நடக்கிறது. இந்தப் பரிவர்த்தனையில் குறுக்குச் சால் ஓட்டி மடக்குவது காவல் துறையின் திட்டம். துறைக்குள்ளேயே சிலர் இந்தத் திட்டத்துக்கு கட்டைபோட, திட்டம் தாறுமாறாகிவிடுகிறது. ஆர்யாவும் அவர் சகாவும் சிக்கிக்கொள்ள, பிரச்சினை தீவிரமடைகிறது.

ஆர்யா எப்படித் தப்பித்தார்? காவல் துறையின் துணை கொண்ட இந்தக் கும்பல்களின் கதி என்ன ஆயிற்று?

வழக்கம்போல நிழல் உலக நெட்வொர்க்கை அழிக்கும் போலீஸ் கதைதான். ஆனாலும், நெருக்கமான, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை யின் மூலம் புத்தம் புதிதாய் உணரச் செய் கிறார் மகிழ். அடுத்து என்ன என்பதைப் பதைபதைப் பூட்டும் வகையிலும் சில சமயம் ரத்தமும் சதையுமாகவும் காண்பித்திருக்கிறார்கள்.

கும்பலின் தலைவன் யார் என்று நான்கைந்து பேருக்கு மட்டுமே தெரியும். பொது இடங்களில் சாதாரணமாகப் பயணிப்பான். அவனிடம் பேசினாலும் கண்டுபிடிக்க முடியாது. மது, மாது போன்ற எந்தச் சபலமும் இல்லாத அக்மார்க் வில்லனைத் தீர்த்துக்கட்டும் கதையைக் கையில் எடுத்திருக்கிறார் மகிழ்திருமேனி.

பல பாத்திரங்களையும் கதையின் பின்புலத் தையும் அறிமுகப்படுத்துவதற்கான தொடக்கக் காட்சிகள் சற்றே மெதுவாக நகர்கின்றன. கதா நாயகி அறிமுகமும் இந்தச் சமயத்தில் நடந்து நம்மைச் சோதிக்கிறது. அந்த நேரத்தில் காவல் துறை விரிக்கும் ரகசிய வலையைக் காட்டிப் பரபரப்பைக் கிளப்பிவிடுகிறார் இயக்குநர். அடுத்தடுத்த காட்சிகளை யும் திருப்பங்களையும் வேகமாகவும் பெருமளவு நம்பகத்தன்மையுடனும் அமைத்து ரசிகர்களைக் கட்டிப் போடுகிறார்.

கதைக்குத் தேவையாக இருந்தா லும் ஆளை அறுக்க வரும் ரம்பத்தின் சத்தத்தைக் கேட்க முடியவில்லை. இடைவேளை சண்டைக் காட்சியை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம், இரண்டாம் பாதியில் ஹீரோயிஸம் தூக்கலாக இருப்பதையும் ஏற்க முடியவில்லை.

இதுபோன்ற வேடங்களுக்கென்றே பிறந்ததுபோன்ற பார்வையுடன் வரும் ஆர்யா கச்சிதம். குறிப் பாக ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்து கிறார். ஹன்சிகாவுக்கு நடனம் சொல்லித்தரும்போது தன் நெருக்கடியை மீறி மெலிதாகச் சிரிக்கும் இடத்தில் அவர் நடிப்பு நன்றாக உள்ளது.

ஹன்சிகா உற்சாகமும் அழகும் ததும்ப வளையவருகிறார். அவருக் குக் கதையில் பெரிய வேலை இல்லை. புதிதாக ஒரு இளைஞ னைப் பார்க்கும்போது அவர் பதற்ற மடைவதும் தன் தோழியுடன் அவனைப் பற்றிப் பேசுவதும் ரசிக்கும்படி இருக்கின்றன.

வில்லன் ஆசுதோஷ் ராணா உடல் மொழியாலும் பார்வையாலும் பார்வையாளருக் குப் பயத்தைக் கடத்துகிறார். ‘உலகத்துல சாவை விட மோசமானது நிறைய இருக்கு’ என்பதுபோன்ற வசனங்கள் பளிச்.

எஸ். தமனின் பின்னணி இசை பயத்தையும் திரில்லையும் சேர்த்துக் கொடுக்கிறது.

இவ்வளவு இரத்தமும் சதையும் தேவையா என்று கேட்கலாம். இரண்டாம் பாதியில் ஹீரோயிஸம் தூக்கலாக இருப்பதைக் கண்டு சலிப்பு ஏற்படலாம். தேவைக்கு மேல் சற்றே நீள்வதை நினைத்து ஆதங்கம் எழலாம். என்றாலும் எடுத்துக்கொண்ட கதைக்களத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

சொல்லத் தோணுது 15 - படிக்க... கிழிக்க...

Return to frontpage

மாற்றங்களை எளிதில் ஏற்றுக் கொள்ளாத மனங்கள் எல் லாம் எல்லாவற்றையும் ஏற் றுக் கொள்ளத் தயாராகிவிட்டன. மாற்றங்கள்தான் வாழ்க்கை என ஒரு வரியில் சொல்லிவிடலாம். எதில்தான் மாற்றம் இல்லை? உண்ணும் உணவில், உடுத்தும் உடைகளில், அன்றாடப் பழக்க வழக்கங்களில், பேசும் பேச்சுக்களில், நினைக்கும் நினைப்புகளில், சிந்திக்கும் சிந்தனைகளில், வசிக்கும் வீடுகளில், போக்குவரத்து ஊர்திகளில், ஊடகங்களில், சுற்றுப்புறச் சூழ்நிலை களில்… என எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.

மாற்றங்களை நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்… அது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

இது இப்படித்தான் இருக்க வேண் டும் என இனி எதைப் பற்றியும் சொல்வதற்கு இல்லை. அரசியல் என்பது தொண்டாக இருந்தது மாறிப் போய்… பிழைப்பாகவும், பணம் சேர்க்கும் தொழிலாகவும் மாறிப் போன மாதிரிதான்!

காந்தியையும், காமராஜரையும், கக்கனையும் இன்னும் எவ்வளவு நாட் களுக்குத்தான் சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறோம்?

நகரங்களில் நாள்தோறும் புதிதாக வந்து குடியேறுபவர்கள் மீண்டும் கிராமங்களுக்குத் குடியேறுவதில்லை. பண்டிகை விடுமுறைகளுக்கோ, நெருங்கிய உறவினர் காரியங்களுக்கோ எப்போதாவது சென்று வருகிற மாதிரி மட்டும் அவரவர்கள் பிறந்து வளர்ந்த கிராமங்கள் தொலைவில் போய்க் கொண்டிருக்கின்றன.

நகரம்தான் தனக்கு சோறு போடும் என ஒவ்வொருவரும் எண்ணத் தொடங்கிவிட்டனர். இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் நகரங்கள் மட்டுமே இருக்கும்.

கிராமங்கள் தேய்ந்து நகரங்களாக மாறிக் கொண்டிருப்பது நல்லதுதானா? நல்லது என்றால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுவிடலாம். நல்லதில்லை என்றால்… என்ன செய்யலாம்? யார் செய்வது? ஆட்சியாளர்கள்தான் செய்ய வேண்டும்!

‘ஒரு நாட்டுக்கு கிராமங்கள்தான் முதுகெலும்பு’ என காந்தி சொன்னார். ஆனால், கிராமங்களை அழிக்கிற வேலை மட்டும்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மேல் இந்தப் பலூனை ஊத முடியாது. ஊதினால் வெடிக்கும் எனத் தெரிந்தும் ஊதிக் கொண்டேயிருக்கிறோம்.

நகரத்துக்கு வந்து குவிபவர்களைக் கட்டுப்படுத்தாமல், அவர்களுக்கான நலத் திட்டங்களையும், நகர வளர்ச்சியையுமே செய்து கொண்டிருக் கிறோம் என்று சொல்லிக்கொண்டு… ஆள்பவர்கள் பெருமை அடைவது எந்த வகையில் சரியானது? மக்கள் எதற்காக நகரங்களை நாட வேண்டும்? அந்த மக்களின் தேவைதான் என்ன? என்பது பற்றி அவர்கள் சிந்திக்கிறார்களா?

இந்தியாவில் குடியரசுத் தலைவரோ, தலைமை அமைச்சரோ, மற்றைய அமைச்சர்களோ, முதலமைச்சர்களோ, அதிகாரிகளோ... கிராமங்களில் என்ன தான் நடக்கிறது என அங்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார்களா? கிரா மத்து மக்களின் வாக்குகள் வேண்டும் என்பதற்காக தேர்தல் வந்தால் மட்டும் அங்குச் சென்று 20 நாட்கள் ஓயாமல் உழைக்கிறார்கள். ஹெலிகாப்டரில் இருந்து கிராமங்களைப் பார்த்தால் என்ன தெரியும்? சாலை வழியாக வந்தால் நெடுஞ்சாலைகளில் நட்டு வைக்கப்பட்டுள்ள அவர்களின் விளம்பரப் பதாகைகளே மக்களை மறைத்துவிடும் என்பதால்தான் ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கிறார்களோ எனத் தோன்றும்.

இவர்களெல்லாம் வாரத்துக்கு இரண்டு நாள்… என கிராமங்களில் தங்கி மக்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடியாதா? தங்களின் தலைவர் களுக்குப் ஏதாவது பிரச்சினை என்றால் மண்சோறு தின்பவர்கள், தரையில் விழுந்து புரள்பவர்கள் கிராமத்து வீட்டில் தங்கி அந்த மக்கள் தருகின்ற உணவை உண்டு, அலுவல்களைக் கவனிக்க முடியாதா?

குடியரசுத் தலைவர் அந்த மாளி கையை விட்டு வெளியே வருவதே அரிதாக நிகழ்கிறது. தலைமை அமைச் சரோ… நாடு நாடாக பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். சத்தியமாக முதல் அமைச்சர்கள் எந்தக் காலத்துக்கும் கீழிறங்கி வந்து, கிராமங்களில் தங்கி வேலைகளைக் கவனிக்க முன்வர மாட்டார்கள். தலைநகரத்தில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்களுக்காக, அத்தனை அமைச்சர்களும் ஒரே இடத்தில் தலை

நகரத்தில் இருந்தபடிதான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்படுகிற இவர்களே இப்படி என்றால்… கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்கிற அதிகாரிகளைப் பற்றி நாம் கேட்க முடியுமா?

உலகத்துக்கே சட்டாம்பிள்ளையாக இருக்கிற அமெரிக்காவின் தலைவர் ஒபாமாவே தனக்கும், தன் குடும்பத்துக்கும் தேவையான பொருட்களை கடைகளுக்குச் சென்று அவரேதான் வாங்குகிறார். உணவகத்துக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு, தன்னுடைய கடன் அட்டை செயல்படாமல் போனதால் மனைவியின் அட்டையில் இருந்து பணத்தைச் செலுத்திவிட்டுச் செல் கிறார்..

ஒபாமாவும் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டவர்தான். பாதுகாவல் என்கிற பெயரில்… நம் நாட்டுத் தலைவர்கள் போல் ஒரு பெருங்கூட்டத்தையும், அணிவகுத்து மிரட்டிச் செல்லும் கார்களையும், கூட்டத்தையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. தலைவன் எவ்வழி செல்வானோ… அவ்வழிதானே தொண்டனும் செல்வான்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை உணராதவர்கள், அவர்களுடன் பழகி பணியினை செய்யத் தெரியா தவர்கள், அவர்களின் வாக்கு களுக்காக மட்டுமே திட்டங்கள் தீட்டுபவர்கள் எவ்வாறு அவர்களை வழி நடத்துவார்கள்?

நம் ஆட்சியாளர்கள் மனமிருந்தால் ஒரு முறை தனியாளாக மாறு வேடத் திலாவது ஒவ்வொரு கிராமங் களுக்கும் சென்று பாருங்கள். வேளாண் தொழி லுக்கு ஆட்கள் இல்லை. நீர் கொடுத்த குளம், குட்டைகள், ஓடைகள், ஏரிகள் என எதுவும் இல்லை. ஒருவேளை இருந்தால் அங்கே நீர்ப்பிடிப்பு இல்லை.

பள்ளிகளில் மாணவர்கள் இல்லை. ஆரம்ப சுகாதார மருத்து வமனை, நூலகங்கள், கால்நடை மருத்துவமனைகள் என எல்லாமுமே பெயர்ப் பலகைத் தாங்கிக் கொண்டுப் பெயரளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆடு, மாடுகள் எங்கேயாவது ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டால்… நீங்கள் கொடுத்து வைத்தவர்தான். எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் 24 மணி நேரமும் சிரிப்பு மூட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்படியே கொஞ்சம் தெருக்களை இணைக்கிற சாலைக்கு வாருங்கள். கட்டாயம் தேநீர்க் கடைகள் இருக்கும். வெட்டிப்பேச்சு பேசியபடி வேலை செய்ய விரும்பாத படித்த இளைஞர்கள், வேலை செய்ய முடியாத மது போதையில் இருக்கிற, இன்றையோ, நாளையோ சாகப் போகிறவர்களைப் பார்க்கலாம். அநேகமாக எல்லா வீடுகளிலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் படங்களைப் போட்டு, திரைப்படக் கதாநாயகர்களுடனோ, அரசியல்வாதிகளுடனோ காட்சியளிக் கும் பதாகைகளை வாசலிலோ, வீட்டுக் கூரையிலோ, வைக்கோல போரிலோ காண்பீர்கள் என்பதைக் குறிப்பிட மறந்துவிட்டேன்.

அந்த இளைஞர்களெல்லாம் வேறு யாருமில்லை. தொழிற்கல்லூரிகளில் படிப்பதற்காக, குடும்பத்துக்கு சோறு போட்ட கொஞ்ச நிலத்தையும் விற்றுக் கொடுத்துவிட்டு, தொழில் இல்லாமல் வீட்டிலேயே முடங்கப் பிடிக்காமல் தேநீர்க் கடையிலும், பேருந்து நிலையத்திலும் போவோர் வருவோர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிற இளைஞர்கள்தான் அவர்கள். எல்லாவற்றுக்கும் புள்ளி விவரங்களைத் தரத் தயாராக இருப் பவர்கள், 50 வயதுக்கு மேல் உயிர் வாழ்கிற ஆண்களின் பட்டியலைத் தாருங்கள். முடிந்தால் தெருவுக்கு எத்தனை இளம் விதவைகள் இருக் கிறார்கள் என்கிற கணக்கினையும் மறைக்காமல் தாருங்கள்.

கிராமத்தில் தன்னுடன் இருந்த யார், யாரெல்லாம் பணக்காரர்களாகி விட்டார்கள் என்பதை மக்கள் பார்த்து விட்டார்கள். மற்றெல்லாரையும்விட அரசியல் கட்சியில் சேர்ந்தால் மட்டுமே கார், பங்களா, அடியாட்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு, ஊடகங்களில் இடம் கிடைக்கும் என நினைத்த இளைஞர்கள் தொழிலுக்குப் புறப்பட்டுவிட்டதையும் அங்கே தவறாமல் அறியலாம்.

- இன்னும் சொல்லத் தோணுது…
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com

தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் வேலை இல்லையா?

Return to frontpage


மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம். தமிழகத்தில் 95 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான ரயில்வே துறை, பி.எச்.இ.எல். (பெல்), ராணுவத் தொழிற்சாலைகள், வருமான வரி உற்பத்தி அலுவலகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பெட்ரோலியத் தொழிலகங்கள் போன்ற வற்றில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் பணியமர்த்தப்படுகிறார்கள்.

இந்தியாவிலேயே சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். ரயில்வே துறையில் 2012-2013-ல் 82% வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் 18% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 2013-2014-ல் 83% வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் 17% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தமிழக வருமானவரித் துறையில் 2012-ல் சேர்க்கப் பட்ட 384 பேரில் 28 பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 356 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 2014-ல் சேர்க்கப்பட்ட 78 பேரில், 75 பேர் வெளிமாநிலத்தவர். 3 பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டிலுள்ள உற்பத்தி வரி அலுவலகங்களில், 2012-ல் சேர்க்கப்பட்ட 224 பேரில் 221 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதே போல்தான் ஆவடி, திருச்சி, அரவங்காடு போன்ற இடங்களில் உள்ள பாதுகாப்புத் தொழிற்சாலைகளில் 50% மேல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப் பட்டுள்ளார்கள். திருச்சி, ராணிப்பேட்டை, திருமயம் ஆகிய இடங்களில் உள்ள பி.எச்.இ.எல். தொழிற்சாலைகளில் வெளிமாநிலத்தவரையே அதிகமாகச் சேர்க்கிறார்கள்.

சரோஜினி மஹிஷி ஆணையம்

கர்நாடகத்தில் வெளிமாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வேலை பெறுவதைத் தடுப்பதற்கு சரோஜினி மஹிஷி தலைமையில் ஆணையம் அமைத்து, அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்துகிறார்கள். கடந்த 1996-ல் ஒன்றிய அரசு ஊழியர் தேர்வாணையத் தேர்வில் (யூ.பி.எஸ்.சி.) தேறி, வேலை ஆணையுடன் பெங்களூர் தலைமைக் கணக்காயர் அலுவலகத்துக்கு வேலையில் சேரச் சென்ற 19 தமிழ் இளைஞர்களை வேலையில் சேர விடாமல், அதே நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கன்னட ஊழியர்கள் தடுத்துத் திருப்பி அனுப்பினார்கள். சரோஜினி மஹிஷி பரிந்துரையைக் காரணம் காட்டித்தான் அவர்கள் திருப்பி அனுப்பினார்கள்.

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகியவற்றில், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து செல்வோர் அம்மாநில அரசிடம் உள் அனுமதி பெற்றுத்தான் உள்ளே நுழைய முடியும். அடுத்து, அம்மாநிலங்களில் பிற மாநிலத்தவர்கள் வேலை பார்க்க முடியாது. இது போன்ற உள் அனுமதி வழங்கும் அதிகாரம் கேட்டு மணிப்பூர் சட்டமன்றம் தீர்மானம் போட்டிருக்கிறது. அசாம் மாணவர்கள், ‘வெளியாட்களை வெளியேற்றும் போராட்டம்’ நடத்தியபோது, அவர்களுடன் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி போட்ட ஒப்பந்தத்தின்படி 1971 வரை அசாம் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே உள்ளூர் மக்கள் என்று அங்கீகரிக்கப்பட்டார்கள். ஹரியாணாவில் ஹரியாணாவாசிகளுக்குத் தனியார் துறை, அரசுத் துறை ஆகியவற்றில் அதிக இடஒதுக்கீடு கொடுக்க காங்கிரஸ் கட்சி உட்படப் பல கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

ரயில்வே துறை மற்றும் பிற இந்திய அரசுத் துறை வேலைகளுக்கான தேர்வெழுத பிற மாநிலங்களுக்குப் போன தமிழ் இளைஞர்களை, அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடித்து விரட்டிய நிகழ்வுகளும் நடந்துள்ளன.

குறுக்கு வழியில்…

‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்றும் ‘தனி நாடு வேண்டும்’ என்றும் திமுக 1950-களில் முழக்கம் எழுப்பி, அது மக்களின் பேராதரவைப் பெற்றுவந்த நிலையில், தமிழ் மக்களின் வேலைவாய்ப்பைப் பெருக்கும் நோக்குடன் காமராஜர் ஆட்சியில், புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடங்கப் பட்டன. அப்போது அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைக்குத் தொழி லாளர்களையும் ஊழியர்களையும் சேர்க்கும் வகையில் நடுவண் அரசு ஆணைகள் பிறப்பித்திருந்தன. ஆனால், அந்த முறை பின்னர் கைவிடப்பட்டது. இந்தியாவில் 9 தேர்வெழுதும் மண்டலங்கள் மூலம், வேலைக்குச் சேர்க்கும் முறை வந்தது. பின்னர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி, இந்தியா முழுவதையும் ஒரே மண்டலமாக்கி, ஒவ்வொரு தொழிலுக்கும் தேர்வு நடத்தும் முறை 2006-க்குப் பிறகு வந்தது. இந்த முறை வந்த பிறகு, வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வேலை பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. பல்வேறு குறுக்கு வழிகளில் வேலை வழங்கும் நடைமுறைகள் உருவாயின.

ரயில்வே துறையைத் தவிர, மற்ற துறைகளில் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தேர்வெழுத முடியும் என்ற நிலை இருப்பதால், வட மாநிலங்களைச் சேர்ந்த வர்களுக்கு இந்தியில் எழுத வாய்ப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏதாவதொரு அயல் மொழியில் எழுதுவதால் மதிபெண் குறைவாகப் பெறு கிறார்கள். தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வடமாநிலங்களில் மோசடியாக வெளியிடுவது உள்ளிட்ட ஊழல்கள் நடைபெறுகின்றன. இந்த ஊழலால் 2013-ல் நடந்த சி.ஜி.எல்.ஈ. தேர்வு முடிவுகள் வெளியிடப் படுவதை நீதிமன்றம் தடை செய்தது.

கையெழுத்து இல்லை…

வேலைவாய்ப்புக்கான தேர்வு விளம்பரங்களை வடமாநிலங்களில் பல்வேறு இந்தி ஏடுகளில் வெளியிடு கிறார்கள். தமிழ்நாட்டில் உரியவாறு தமிழ் ஏடுகளில் தமிழில் வெளியிடுவதில்லை. அண்மையில், ரயில்வே துறை பணித் தேர்வுக்கு, தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்த 2 லட்சத்து 13 ஆயிரம் விண்ணப்பங் களை ஒப்புகைக் கையொப்பம் இல்லை என்ற மிகச் சாதாரணமான காரணத்தைக் காட்டித் தள்ளுபடி செய் தார்கள். எனவே, தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களின் வேலைவாய்ப்புக்கு அனைத்திந்திய அளவில் தேர்வு நடத்தும்போது, இதுபோன்ற மாநிலப் பாகுபாடுகளும் ஊழல்களும் நடைபெறுவதால், தமிழகத்தைச் சேர்ந்த மக்களுக்கு உரியவாறு வேலைகள் கிடைப்பதில்லை. இந்நிலை நீடித்தால், இன முரண்களாக மாறிப் பல சிக்கல்கள் உருவாக வழி ஏற்படும்.

நடுவண் அரசு தமிழக அளவில் தேர்வு நடத்தி 90% வேலைகளைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும். இந்திய அளவில் நடைபெறும் தேர்வு மூலம் 10 சதவீதத் தினரைத் தமிழகத்துக்குப் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழக அரசு, மண்ணின் மைந்தர்களுக்கு 90% வேலை கிடைப்பதை உறுதி செய்திட சரோஜினி மஹிஷி ஆணையம்போல தமிழகத்துக்கு ஓர் ஆணையத்தை அமைத்துப் பரிந்துரை பெற வேண்டும்.

- பெ. மணியரசன்,

High Court rejects petition on allopathic practice



The Bombay high court has rejected a petition that was filed seeking an interim stay on the Maharashtra government’s decision to introduce a one-year course on modern pharmacology for homeopathic and ayurvedic doctors. The course will allow these doctors to practice allopathic medicine.

The Maharashtra University of Health Sciences (MUHS) will now frame a one-year course for homeopathic doctors, after which they can prescribe allopathic medicines.

Supporting the state government’s decision, Advocate General (AG) Sunil Manohar informed the court that in Maharashtra there should be a ratio of one doctor for every 400 citizens. However, in reality there is one doctor for 1,700 people and the situation is really bad in rural areas. He further said that homeopathic and ayurvedic doctors are allowed to practise allopathy only till the extent of the training they have received. The idea to allow them allopathic practice is to bring the ratio of doctors and citizens to a proper level because mostly homeopathic, and to an extent ayurvedic, doctors cover rural areas.

Homeopathic doctors are allowed to perform primary surgeries, primary health care and emergency care. They cannot practise super specialty treatments like cardiothoracic surgeries, cancer surgeries and cancer medicines, among others.

The court was informed that ayurvedic doctors are provided training in handling allopathic medicines at post-graduation and internship levels and homeopaths have to complete one or two years’ course to practise allopathy to a limited extent.

The Indian Medical Association (IMA), Maharashtra branch, with support from the Maharashtra Medical Council and the Indian Medical Council, challenged a 1992 state government resolution (GR) — which allowed homeopathic and ayurvedic doctors to practise allopathy as per their “training in the particular field” — and the recent decision of introducing short-term pharmcology courses, on the grounds that this practice would be misused by many doctors.

The AG, however, submitted before the division bench of Justice A.S. Oka and Justice A.S. Gadkari that the reason behind this decision is to provide basic medical facilities to people, especially in rural areas, and it will be too early to say that the scheme would be misused. He added that if the state government notices any misuse it will curb it or if required, will take back the GR.

Police denies information under RTI to PM's wife


Information sought by Jashodaben, wife of prime minister Narendra Modi, on the security cover given to her through an RTI has been denied by the Mehsana police on the ground that her queries were related to local intelligence bureau (LIB) which is exempted under RTI Act.

"The information sought by her (Jashodaben) was related to the local intelligence bureau (LIB), therefore it could not have been given to her and we have sent a written communication about this development to her," Superintendent of Police J R Mothaliya of Mehsana district said.

The reply given in writing to her also says the same thing.
"The information sought by you (Jashodaben Modi) was related with the LIB and as per the Gujarat Home Department's resolution number SB.1/1020018203/GOI/62 dated November 25, LIB has been exempted from RTI Act and therefore the asked information cannot be given to you," said the letter written by the public information officer and Mehsana Deputy Superintendent of Police Bhakti Thakar to her.

In her RTI application filed before Mehsana Police on November 24, she had sought several documents related to the security cover given to her as per the protocol, including the certified copy of actual order passed by government about providing security.

She also wanted to know the laws and related provisions in Indian Constitution about security cover given to a PM's wife.

62-year-old Jashodaben had asked the government to explain the definition of protocol and sought details about what is included under it and what other benefits she is entitled for as per that protocol.

She also expressed unhappiness about the current security set-up, where her guards travel in government vehicles like car, while she, despite being a PM's wife, has to travel in public transport.

She also said that as former Prime Minister Indira Gandhi was killed by her own security guards, she feel scared of her guards. She asked the government to make it compulsory for each guard to produce the copy of deployment order.

Jashodaben, a retired school teacher, lives with her brother Ashok Modi at Unjha town of Mehsana district. After Narendra Modi was sworn-in as Prime Minister on May 26, she has been given security by Mehsana police.

Mehsana police has deployed ten policemen, including armed guards, who work in two shifts.

நோக்கம் பழுது!


Dinamani
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதால், பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சொல்லிமாளாது. அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினர், சில பேருந்துகளை இயக்க முற்பட்டாலும், அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் நிறுத்தப்பட்டன. தமிழகத்தின் மற்ற நகரங்களில் தனியார் நகரப் பேருந்துகள் இயங்கின. தனியார் வெளியூர் பேருந்துகளும் இயங்கின.
"அரசியல் காரணங்களால் இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கம் செயல்படாத நிலை வந்தபோது மட்டும் மக்கள் பாதிக்கப்படவில்லையா?' என்று தொழிற்சங்கத்தினர் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது. அரசியல் காரணங்களுக்காக நடக்கும் போராட்டமும், தொழிலாளர் வேலைநிறுத்தமும் ஒன்றாகிவிடாது.
இவர்களது கோரிக்கைகளில் மிக முதன்மையானது 30.8.2013-இல் முடிவடைந்த 11-வது ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, 12-வது ஊதிய ஒப்பந்தம், 1.9.2013 முதல் அமலாகியிருக்க வேண்டும் என்பதுதான். கடந்த ஓராண்டாக அரசு இதைச் செய்யவில்லை என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டு.
போக்குவரத்துத் துறை மட்டுமல்ல, அரசு சார்ந்த எந்தத் துறை என்றாலும் ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்த அடுத்த நாளே புதிய ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வருவதில்லை. முந்தைய ஊதிய ஒப்பந்தம் முடிந்த பிறகுதான் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. புதிய ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எந்தத் தேதியில் பழைய ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததோ அதே தேதியில் இருந்து சம்பளம் கணக்கிட்டு நிலுவைத் தொகையாக (அரியர்ஸ்) வழங்குகிறார்கள். இதுதான் நடைமுறை.
பேச்சுவார்த்தை நடக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? அதிக உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்சங்கத்திடம் மட்டும் அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் போதும் என்று 2010-இல் உயர்
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையில் (தொ.மு.ச.) 73,000 உறுப்பினர்கள் இருந்தனர். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இப்போது அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் 91,440 உறுப்
பினர்களும், தொ.மு.ச.வில் 18,000 உறுப்பினர்களும்தான் இருக்கின்றனர் எனும்போது, அதிகாரபூர்வத் தொழிற்சங்கம் என்பதால் தொ.மு.ச.வை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது எப்படி சரி?
அரசியல் சாராத தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர் சம்மேளனம், அனைத்துத் தொழிற்சங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. பேச்சுவார்த்தைக்குத் தங்களை மட்டுமே அழைத்து, தாங்கள் சொல்வதை ஏற்றாக வேண்டும் என்று அரசை நிர்பந்தம் செய்வதற்காக தொ.மு.ச.வால் இப்படியொரு வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வெறும் போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னை மட்டுமல்ல. இது அரசுக்கு தரப்படும் அழுத்தம்; ஓர் அரசியல் நெருக்கடி.
அரசுப் போக்குவரத்துக் கழகம் மிகப்பெரும் நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நட்டத்தை மக்கள் வரிப் பணத்தால் அரசு ஈடு செய்து, சம்பளம், சலுகைகள், 20% போனஸ் அனைத்தையும் வழங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
கடந்த 2011-இல் பேருந்துக் கட்டணத்தை (சாதா பேருந்துகளுக்கு) 28 காசுகளிலிருந்து 42 காசுகளாக உயர்த்தியபோது, அரசுக்கு கிடைத்த வருவாய் ஆண்டுக்கு ரூ.2,100 கோடி. அது, 2011-ஆம் ஆண்டின் நட்டமான ரூ.2,200 கோடியை (ஏற்கெனவே தொடரும் நட்டம் சுமார் 6,000 கோடி தனி) ஈடு செய்தது.
இப்போது, தொழிற்சங்கங்கள் கேட்கும் 25% சம்பள உயர்வை ஏற்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டு நிர்பந்திப்பதன் மூலம், அரசு வேறுவழியே இல்லாமல் கட்டாயமாக செய்யக்கூடியது பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது மட்டுமே. இதன்மூலம் அரசுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும் என்பதுதான் நோக்கம். இது 11 தொழிற்சங்கங்களின் கூட்டு முடிவு என்று அறிவிக்கப்பட்டாலும், பேருந்துக் கட்டண உயர்வின் பயனை அறுவடை செய்யும் கட்சி தி.மு.க. மட்டுமாகத்தான் இருக்கும்.
"அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் சார்ந்த கட்சிகள் அறிக்கை விட வேண்டும். எல்லா சங்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க தி.மு.க.வின் தொ.மு.ச. சம்மதிக்க வேண்டும். ஆனால், செய்ய மாட்டார்கள். அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதும், பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதும்தான் இந்த வேலைநிறுத்தத்தின் நோக்கமே தவிர, போக்குவரத்துத் தொழிலாளர்களின் நலனைப் பேணுவது அல்ல!

Sunday, December 28, 2014

AIR ASIA FLIGHT QZ8501



source: NST online

AirAsia flight QZ8501: A dismal year for Malaysia's aviation -

4.42PM: The Jakarta Post has quoted an official from Indonesia's National Search and Rescue Agency as saying that flight QZ8501 is believed to have crashed at the location 03.22.46 South and 108.50.07 East, in waters around 80 to 100 nautical miles from Belitung.
According to Indonesia's Metro TV, the search will focus on the waters around South Borneo.
KUALA LUMPUR - The disappearance of AirAsia Indonesia's QZ8501 in the final days of 2014 caps a horrific year for Malaysian aviation, coming after the earlier loss of two Malaysia Airlines (MAS) Boeing jumbo jets.

On Sunday, the nation, still reeling from the trauma of losing the two Boeing 777 planes and the 537 souls onboard, was hit by news that an Airbus belonging to the joint-venture airline - 49 per cent owned by Malaysia-based low-cost giant AirAsia - blipped off Jakarta's air traffic radar at 7.24 am (Singapore time). The plane was midway through its flight to Singapore from Surabaya.

Although Indonesia Airasia is a separate entity from the corporate group that runs Asia's largest budget carrier, the brand is synonymous with Malaysia, whose people are unused to major air tragedies. But 2014 was like no year before.

On March 8, Malaysia Airlines Flight 370, flying from Kuala Lumpur to Beijing, had vanished without a trace. It was carrying 239 - mostly Chinese nationals. Nearly 10 months on, investigators have yet to make meaningful progress towards locating it.

The Boeing 777 is believed to have gone down in the southern Indian Ocean off Australia's west coast. However, despite numerous sweeps of the location, no debris has been found, leaving grieving next-of-kin without closure.

The disappearance of MH370 shocked many and left nerves raw over accusations, especially from China, that Malaysia was hiding information and had mishandled the crisis.

AirAsia was forced to apologise at the time following public uproar over an article in its in-flight magazine- appearing less than a month after MH370 vanished - that cheekily said "Rest assured that your captain is well prepared to ensure your plane will never get lost. Have a safe flight."

While the MH370 search continued to frustrate, MAS was hit by news on July 17 that another of its Boeing 777s was shot down over Ukrainian airspace, killing all 298 on board, including 43 Malaysians.

Russia, and Ukraine - which is struggling to contain pro-Moscow separatists operating in the crash area - accuse each other of shooting down the plane, which was flying home from Amsterdam.

The twin incidents broke the back of the ailing flag carrier.

State sovereign wealth fund Khazanah decided to take the carrier private following losses of more than RM5 billion (S$1.89 billion) over the past three years.

Shareholders agreed in early November to Khazanah's turnaround plan for MAS, which would see 30 per cent of staff losing their jobs.

Prior to the twin losses, Malaysian aviation had a good safety record. The last serious accident took place in September 1995 when the pilot of a rural service MAS flight misjudged a landing at Tawau Airport, Sabah, killing 34 of the 49 on board the Fokker airplane.

shannont@sph.com.sg

- See more at: http://www.straitstimes.com/news/asia/south-east-asia/story/dismal-year-aviation-20141228#sthash.gtDKcrmm.dpuf

கலைமகளிடம் கணித ஞானத்தை பெற்ற ராமானுஜன்



ஸ்ரீனிவாச ஐயங்கார் ராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.

கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. தெய்வீக அருள் பெற்ற ஞானச் சிறுவன் என்று பெயர் பெற்றவர். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள்.

அவரது ஏழு வயதில் கல்வி உதவித்தொகை பெற்று, கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். சக மாணவர்களிடத்தில் கணித இணைப்பாடு பலவற்றை மனப்பாடம் செய்து ஒப்பிவித்து வியக்க வைத்தாராம்! பை (PI) குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட்டார். அந்த கணிதக் குறிப்பிற்கு, புதிய முறையில் பல வழிகளைக் கண்டறிந்தவர்.

அது என்ன 'பை'....?

ஒரு வட்டத்திற்கு ஒரு சுற்றளவு இருக்கிறது. அந்தச் சுற்றளவை அந்த வட்டத்தின் நடுவே போகும் குறுக்களவு எனும் Diameter ஆல் வகுத்தால் ஒரு விடை கிடைக்கும். அதுதான் இந்தப் பை.

எந்த வட்டத்திலும் பை என்பது ஒரு நிலை இலக்கம். 1987ஆம் ஆண்டில் பை-இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிட்டார்கள் கணித மேதைகள்.

ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை எல்லாமே ராமானுஜன் 1915ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டு விட்டது. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள் தான், இப்போதைக்கு மின்கணினிப் பிணைப்பாடு (Computer Algorithms) கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.

தன்னுடைய பன்னிரண்டாம் வயதில், 'லோனியின் மட்டத் திரிகோணவியல்' கணித நூலில் (Loney's Plane Trigonometry) கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் (Sum & Products of Infinite Sequences) பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று, உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம்.

பதினைந்தாம் வயதில், கேட்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணித வல்லுநர், ஜி.எஸ் கார் தொகுத்த தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம் (Synopsis of Elementary Results in Pure Mathematics) என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை (Theorems) ஆழ்ந்து கற்றார். இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் அவர் முழுமையாகக் கற்றுக் கொண்டார். அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் திகழ்ந்ததன.

1903ஆம் ஆண்டில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு ஆர்வமும் கணிதத்தில் ஒன்றியதால் மற்ற பாடங்களில் கவனம் செலுத்தாமல் தேர்வில் தோல்வியடைந்து கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

1909இல் திருமணம் செய்து கொண்ட இவர், தனது கணிதப் பித்தை சற்றே ஒதுக்கி விட்டு, சென்னையில் வேலையைத் தேடினார். சென்னையில் கணிதத்தை ஆதரிக்கும் கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், கணிதத் துறையில் பணிக்குச் சேர்ந்தார். 1911இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் (Journal of the Indian Mathematical Society) வெளி வந்தன.

1913இல், சென்னை பல்கலைக்கழகம் ராமானுஜனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான உதவித்தொகை வழங்கியது. 1914இல், ராமானுஜத்தின் அசாதாரண ஒத்துழைப்பை இணைந்து தொடங்குவதற்காக கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரிக்கு அவரை வரவழைத்தார். ஹார்டி மற்றும் ராமானுஜன் அவர்களின் கூட்டணி முயற்சியால் பல முக்கியமான ஆய்வுகளுக்கு வழிவகுத்தது. ஹார்டி அவர்களுடனான கூட்டு அறிக்கையில் ராமானுஜன் அவர்கள் (Asymptotic Formula for p(n)) கொடுத்தார். இந்த p(n) சரியான மதிப்பைக் கொடுக்கும் தன்மையைக் கொண்டது என்று ரேட்மேக்கர் என்பவர் இதனை நிரூபித்தார்.

1916ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சிக்கான இளங்கலை பட்டத்தைக் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக பெற்றார். 1914இல் ஏழு ஆவணங்களைக் கொண்ட உணர் கலப்பு எண்களின் (Highly Composite Numbers) விளக்கவுரை இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.

அவரது 30ம் வயதில் இங்கிலாந்தின் FRS (Fellow of Royal Society) விருது அளிக்கப்பட்டது. அதே காலக்கட்டத்தில் இங்கிலாந்தின் டிரினிடி கல்லூரி (Fellow of Trinity College)என்னும் கொளரவத்தையும் பெற்றார்.

ராமானுஜன் ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் ஆரம்பத்திலிருந்து அருவருக்கு உணவு பிரச்னைகளும் இருந்தது. நீண்ட காலமாகவே உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டார். 1917ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். ஆகவே அவர் பெரும்பாலான நேரத்தைப் பல்வேறு மருத்துவமனைகளிலேயே செலவிட்டார். 1918ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் ராமானுஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டார். அதன்பின் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்தார். அவரது உடல்நலம் பெரிதும் குன்றியதால் 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 6இல் உயிர் நீத்தார்.

முதல் வரியில் சினிமா...: இயக்குநர் ரா.பார்த்திபன்



சினிமா எங்கிருந்து தோன்றியதோ? யார் தோற்றியதோ? அது கி.பி………… ………..ல் தோன்றியிருக்கலாம். என் சினிமா கே.பி-யில் இருந்துதான் தோன்றியது.

‘அ.ஒ.தொ’ படத்தைப் பத்து முறையும் அதன் போஸ்டரை ஆயிரம் முறையும் ரசித்தவன் நான். இன்னும் என் பட போஸ்டர்களில் உங்கள் சாயல் இருக்கும். கொஞ்சம் பின்நோக்கிக் கழுவிப் பார்த்தால் அதன் சாயம் வெளுக்கும்.

என் மூலம் சினிமாவில் எது நடந்திருந்தாலும் அதன் ‘மூலம்’ கே.பி அவர்களே!

உங்கள் ரசிகர்களில் ஒருவனாகத் தொடங்கி… உங்களைக் காதலித்தவர்களில் ஒருவனாக சுருங்கி… பின் நீங்கள் நேசித்தவர்களில் ஒருவனாக இருப்பதென் பாக்கியம்!

சார்… உங்கள் மகனை இழந்து நீங்கள் மயானமாய் அந்தப் பால்கனியில் அமர்ந்திருந்த வேளையில்… நான் உங்கள் காலருகில் அமர்ந்தேன். நீங்கள் என் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘‘உன் படம் (கதை, திரைக்கதை, வசனம்) நல்லாருக்குன்னு கேள்விப்பட்டேன். இதோ… இவன் இப்படிப் போயிட்டானய்யா…’’ என்று, இரண்டாவது வரியில்தான் மரணம் சொன்னீர்கள். முதல் உரிமையைச் சினிமாவுக்கே தந்தீர்கள்.

உங்கள் உடலில் இருந்து உயிரைப் பிரிக்கலாம். ஆனால், உங்கள் உயிரில் இருந்து சினிமாவைப் பிரிக்கவே முடியாது. அஃதே என் உயிரில் இருந்தும் உங்கள் சினிமாவைப் பிரிக்க முடியாது!

இதோ… இப்படி எழுதுவதுகூட உங்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் இருந்து… கே.பி. சாரைப் பற்றி சில வரிகள் சொல்லுங்கள் என்றதும், வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொட்டாமல்… ‘கொஞ்சம் டயம் கொடுங்க. நானே எழுதிட்டு உங்களைக் கூப்பிடுகிறேன்’ என்று, என் இழப்பில் ஒரு சதவீதத்தை எழுத்தில் கொண்டுவர முயற்சிக்கிறேன்.

நேற்று இரவு ஆஸ்பத்திரியில் எப்போதும் காட்சி தரும் வொயிட் அண்ட் வொயிட்டில் நீங்கள்.

நெற்றி மேட்டில் அந்த வெள்ளை வெளீர் திருநீறு இல்லாமல் உங்களைப் பார்த்ததில்லை நான்.

ஆனால், மூக்கு துவாரங்களில் வெள்ளையாய் பஞ்சடைத்துக் கிடந்தீர்களே. நெஞ்சடைத்துப் போனேன் நான். கண்களால் பாதம் தொட்டேன்.

ஆம்புலன்ஸில் உங்களைக் கிடத்தும்போது…

அதில் என் கைகளும் இருந்ததே…

அது போதும் எனக்கு!

Saturday, December 27, 2014

Here's what you need to know about eIPO for online RTI applications


In a welcome move to enhance transparency, Devendra Fadnavis, Chief Minister of Maharashtra, has announced that citizens would be able to file their Right To Information (RTI) applications online from January 2015 onwards. For filing RTI applications at the click of the mouse, it is important to know how to pay the Rs10 RTI fees online, which will also now become easy.

Thanks to the single-handed and untiring efforts of Delhi based RTI activist Commodore Lokesh Batra (retd.), the Department of Personnel and Training (DoPT) has directed all Chief Secretaries of states to consider using eIPO facilities for the payment of RTI fees.

While it is imperative that the Chief Secretary of Maharashtra would have to implement the eIPO facility along with the facility to file an RTI online, it is important for RTI users to understand the mechanism of online payment. Presently, around 2,500 central public authorities and 176 missions abroad have applied this facility for citizens.

The DoPT letter dated 12th August, 2014 to all the state chief secretaries states that, ``A service called eIPO (Electronic Indian Postal Order), was launched on 22 March 2013 for purchasing Indian Postal Order online through the e-post office portal for paying RTI fee to access information under RTI Act from central public authorities. The facility which was started initially for Indian citizens abroad was extended to Indian citizens residing in India from 13 February 2014. DOP (Department of Posts) has now proposed that the feasibility of extending this facility to the state governments also, where IPO is one of the modes of payment for RTI applications may be explored. I therefore request you to explore the feasibility of introduction of eIPO facility for state public authorities to make the RTI regime more citizen friendly.’’

Lokesh Batra, who has filed 101 RTI applications online and paid through the eIPO route urges every RTI applicant to use this facility if available, because he says ``if we do not use it, it does not remain viable for the Department of Posts (DOP) to maintain this facility.” The other fact being that the physical form of IPO costs Rs36.40 for the tax payer, says Batra, and much public expenditure could be avoided with the eIPO, the cost of which is negligible.

In order to purchase an eIPO, you need to register with the post office portal at https://www.epostoffice.gov.in. Select the Ministry and Department from the displayed list, then select the payment mode and Bank name. Click on Payment button to book the eIPO. It will lead to the bank's payment gateway, where users can make the payment online.

Let's hope the Maharashtra government, which has been quite sloppy in many areas of RTI governance, picks up speed under Fadnavis by making it RTI-user friendly.FAQs published by DOP to guide citizens on how to use eIPO facility

1. What is eIPO?
eIPO or Electronic Indian Postal Order is a facility to purchase an Indian Postal Order
electronically by paying the fee online.

2. How eIPO can be purchased?

eIPO can be purchased by registering once on the portalhttps://www.epostoffice.gov.in
under eIPO Service.

3.What is the cost of eIPO?
The minimum cost of eIPO is Rs10/-

4. Is eIPO expensive?
eIPO tariff has been kept same as an ordinary IPO (Indian Postal Order), though
electronic transmission has been introduced.

5.Whether eIPO can be purchased from any corner of the world?
Yes, eIPO can be purchased from anywhere in the world.

6.Where eIPO can be used?
eIPO can be used only for RTI applications in Central Public Authorities in India and
Indian Missions/Posts.

7.Whether eIPO can be sent through email/post?
eIPO can be sent through email/post with the required RTI application.

8. Is the payment made online?
Yes, the payment is to be made online.

9. What can be presented as a proof of identity by the Indian Citizen Living abroad?
Indian Citizens living abroad have to submit their passport number and expiry date, while registering on the site.

10. What makes eIPO special?
It is fast service –It can be sent through e-mail to the Govt. of India-Ministry for obtaining requisite information.
It is safe – It cannot be used for multiple transactions.
It is reliable – Since it uses e-mail to send it to the relevant Government of India Ministry, it can get the response easily too.

11. Is it required for the user to register everytime in order to purchase eIPO?
No, the user has to register only once on the portal in order to purchase eIPO.

12.How can user register for eIPO?
User can register for paying through eIPO, on this portal- https://www.epostoffice.gov.in

13. What are the initial requirements for creating new user in eIPO?
Creation of account for eIPO service with the DOP website mentioned above
For Indian citizen living in Abroad, the user needs to have a valid email id
For Indian Citizen living in India, the user needs to have a valid email id and mobile number

14. Where does the user get the eCode and mCode?
The Indian Citizen living abroad will get the eCode and mCode on the email ID mentioned during the registration and an Indian Citizen living in India will get the eCode on the email ID and mCode on the submitted mobile number.

15. Is there any time limit for user verification?
No, there is no time limit for user verification. User can perform verification by going to the link ‘New User Verification’.

16. While registering, if captcha image is not clear or not shown?
If captcha image is not clear or not shown, it is advisable to use Mozilla Firefox orGoogle Chrome browser.

17. Is email id mandatory?
Yes it is mandatory for all.

18. Is mobile number mandatory?
It is mandatory for Indian Citizens living in India and it is optional for Indian Citizens living abroad.

19. What is the format of mobile number?
Simple 10 digit Indian mobile number in the format 98XXXXXXXX.

20. If the user does not get codes, what should be done?
If after a little time he/she is unable to receive the codes. The user can go to part 2 of the registration and resend the codes. 

21.Can successful registration be done if security code image is not visible?
No, successful registration cannot be done without entering security code.

22. If user is unable to perform successful transaction?
The user should check that whether he is able to reach the bank site. If so, then should
check the internet connection because failed transactions may occur due to poor connectivity.

23. Can the user cancel a purchased eIPO?
eIPO once purchased cannot be cancelled.

24. Can single eIPO be used multiple times?
One eIPO cannot be used for multiple transactions.

25. If user forgets his password, how to get a new password?
User has to select Forgot Password link on home page and provide his username,
registered email id and captcha code.The link is mailed on the email id. On clicking the
link a form opens where user can reset the password.

eIPO HELP DESK



மீண்டும் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு



புதுடில்லி: இருபது ஆண்டுகளுக்கு பின், வரும், 2015ம் ஆண்டு, ஜனவரி முதல், மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, 'ஒரு ரூபாய் கரன்சி நோட்டுகள் அச்சடிப்பு விதிகள், 2015' என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு அதிகரித்ததாலும், அப்பணிக்கு நிகராக, அதிக மதிப்புள்ள கரன்சிகளை கூடுதலாக அச்சிடலாம் என, 1994ம் ஆண்டு, மத்திய அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து, அவ்வாண்டு நவம்பருடன், ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 1995ம் ஆண்டு பிப்ரவரியில், 2 ரூபாய் மற்றும் அதே ஆண்டு நவம்பரில் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, நாணயங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும், இன்னும் பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில், செல்லத்தக்கவையாக உள்ளன. இந்நிலையில், சில்லரை தட்டுப்பாடு, நாணயங்களை உருக்குவது உள்ளிட்ட பிரச்னைகளால், மத்திய அரசு, மீண்டும் ஒரு ரூபாய் நோட்டை அச்சடிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை மத்திய அரசு வெளியிடுவதால், புதிய ஒரு ரூபாய் நோட்டில், நிதி செயலரின் கையெழுத்து இருக்கும். ரிசர்வ் வங்கி வெளியிடும், 2, 5, 10, 20, 50, 100, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில், ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பழைய ஒரு ரூபாய் நோட்டு, அடர்த்தியான, வெளிர் நீல வண்ணத்தில் இருக்கும். புதிய ஒரு ரூபாய் நோட்டு, ஊதா மற்றும் பச்சை நிறத்தில் வெளியாக உள்ளது. நோட்டின் மேல் விளிம்பில், 'பாரத் சர்க ?கார்' என்ற வாசகமும், அதன் கீழ் இந்திய அரசாங்கம் என்றும் அச்சிடப்பட்டிருக்கும்.

Friday, December 26, 2014

அடம்பிடிக்கும் மயிலு!...by டாக்டர். ஆர். கார்த்திகேயன்



தமிழில் புது வெள்ளம் பாய மடை திறந்த படம் பதினாறு வயதினிலே. நிஜமான கிராமத்தைக் காட்சிப்படுத்திய முதல் தமிழ் இயக்குநர் பாரதிராஜா என்றால் அது மிகையில்லை. வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் செலவு அதிகம் என்று யோசித்தார்கள். அதனால் கிராமக் காட்சி என்றால் அரங்கு அமைத்து அரிதாரம் பூசிய நடிகர்கள் செயற்கையாக இழுத்து இழுத்துப் பேசுவார்கள்.

சில சமயங்களில் நகர நாயகனின் வண்டி கிராமத்துச் சாலையில் நின்றால் நாயகியின் குடத்திலிருந்து தண்ணீர் வாங்கி வண்டிக்கு ஊற்றுவார். அல்லது சூட் கோட்டு அணிந்து வயல்காட்டில் ஓடி டூயட் பாடுவார். இந்தப் போக்கு எழுபதுகளின் கடைசியில்தான் வழக்கொழிந்தது. வண்ணத்தில் படங்கள் வர ஆரம்பித்தது ஒரு காரணம் என்றால் பதினாறு வயதினிலே படத்தின் வெற்றி மற்றொரு மகத்தான காரணம்.

கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் சினிமா படித்தவர். தாகம் படத்தின் உதவி இயக்குநர். மயில் என்ற கலைப் படத்தைத் தயாரிக்கத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தை அணுகியவர். நடிகர்களைவிடக் கதாபாத்திரங்களை நம்பியவர். இப்படி அவரைப் பற்றிய ஆரம்பகாலச் செய்திகள் அவர் தமிழின் மிகப்பெரிய வர்த்தக இயக்குநராக வருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

கமல், ஸ்ரீதேவி, ரஜினி, காந்திமதி என்றில்லாமல் சப்பாணி, மயில், பரட்டை, குருவம்மா என்று டைட்டில் போட்டதும், “ஒரு காட்டான் குரல்ல காட்சியின் பின்புலத்தில் ஒலிக்கும் பாடல் வேணும்” என்று இளையராஜாவை “சோளம் விதைக்கையிலேயே...!” பாட வைத்ததும், இளையராஜாவின் நண்பர் எஸ்.பி.பி.யைத் தவிர்த்துவிட்டு மலேசியா வாசுதேவனை அறிமுகப்படுத்தியதும், ஓடும் நதியை, வயல், வரப்பு வெளிகளைக் கதாபாத்திரங்கள் ஆக்கியதும் என எல்லாம் ஒரு திரைக் காவியத்தைச் செதுக்கக் காரணமாக அமைந்த முக்கிய முடிவுகள்.

காதல் இளவரசன் என்று அறியப்பட்டிருந்த கமல் ஹாசன் கோவணத்துடன் நடித்தார். படம் முழுதும் வெற்றிலைச் சாறு ஒழுகும் வாயுடன், சாய்ந்த நடையுடன் ‘சப்பாணி’ என்ற அப்பாவி இளைஞனாக வாழ்ந்தார். பரட்டை ரஜினியின் பக்கவாத்தியம் கூத்து கவுண்டமணி. குருவம்மா காந்திமதியின் உடல் மொழியும் குரல் வீச்சும் தெருச்சண்டையை அச்சு அசலாய்த் திரையில் நிலை நிறுத்தியது. யார்தான் நிஜமில்லை படத்தில்?

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்ற நிவாஸ், இளையராஜா, கங்கை அமரன், கலைமணி, பாலகுரு, பாக்யராஜ் ஆகியோர் அதன்பிறகு அசைக்க முடியாத பங்களிப்பைச் செய்துவந்தார்கள். ஸ்ரீதேவி கனவுக் கன்னியானார். கமலும் ரஜினியும் இரட்டையர்களின் ராஜபாட்டையை எம்.ஜி.ஆர். - சிவாஜிக்குப் பிறகு புதுப்பித்தார்கள்.

மயிலின் கதை எளிமையானது. 16 வயதுப் பருவ மங்கை. கோட் சூட் அணிந்து கிராமத்துக்கு வரும் பட்டணத்து மாப்பிள்ளைக்காகக் காத்திருக்கிறாள். அதனால் வீட்டில் வளைய வந்து அன்பு செலுத்தும் சப்பாணியை வெறுக்கிறாள். வருகிறார் கால்நடை மருத்துவர். அவரது கவனம் அவளின் 16 வயது பருவத்தின் மேல் மையம் கொள்கிறது.

அவருக்காக மேல் படிப்பைத் துறக்கும் மயிலு, நிஜம் அறிகையில் உடைந்து போகிறாள். தாயின் மறைவும், ஊராரின் வசவுகளும் மயிலை சப்பாணி மேல் அன்பு கொள்ள வைக்கின்றன. கடைசியில் அவனிடமே தன்னை ஒப்படைக்க நினைக்கிறாள். துரதிர்ஷ்டவசமாக அன்று மயிலுவை வன்புணர்வு செய்ய முயலும் பரட்டையைக் கொல்லும் சப்பாணி ஜெயிலுக்குச் செல்ல நேர்கிறது. அவன் திரும்பி வருவான் என ரயிலடியில் காத்திருக்கிறாள் மயிலு.

திருவிளையாடலின் திரைக்கதை ஒலிச் சித்திரமாக ஊர்தோறும் ஒலித்ததுபோல இந்தப் படமும் ஒலித்தது. வீட்டிலும் வயலிலும் இதைக் கேட்டப்படி வேலை செய்யும் மக்கள், ஒலிச்சித்திரத்துக்கு ஏற்பப் பார்த்த காட்சிகளை மனத் திரையில் ஓட்டிப்பார்த்து மகிழ்ந்து, நெகிழ்ந்து, அதிர்ந்துபோவார்கள்.

காரணம். இந்தக் கதை மண்ணின் மனிதர்களைப் பிரதிபலித்தது. வலிமையான மண்ணின் இயக்குநராகப் பாரதிராஜாவை உருவெடுக்க வைத்தது. மயிலும் சப்பாணியும் ரசிகர்களின் மனத்திரையை விட்டு என்றுமே வெளியேற மறுக்கும் கதாபாத்திரங்கள் ஆகிவிட்டார்கள்.

பாரதிராஜாவின் எல்லாத் தெற்கத்தி கிராமக் கதைகளிலும் அன்பும் வன்முறையும் சமமாகக் கலந்திருக்கும். எல்லாக் கதைகளிலும் ஒரு வெளி ஆள் நுழைவுதான் அந்தக் கிராமத்தின் போக்கை மாற்றி அமைக்கும். மானத்தைக் காக்க உயிரை எடுக்கும் உச்சக் காட்சியில் காதலர்கள் விடுதலை நோக்கிப் போவார்கள். இந்த ஃபார்முலாவின் முதல் பதிப்புதான் 16 வயதினிலே.

தேர்ந்துகொள்ளும் கதையைப் போலவே அதைக் காட்சிப்படுத்தலில் பின்பற்றும் அழகியல் இவரைக் கவனிக்க வைத்தது. கிராமத்துச் சடங்குகளை முதலில் சரியாகக் காட்டிய படம். கனவும் சிலிர்ப்புமான இளம் பிராயத்தின் உணர்வுகளை அவ்வளவு நுணுக்கமாக அதற்கு முன் யாரும் காட்டியிருக்க வில்லை. மரங்களையும் வயல்களையும் ஆற்று நீரையும் துணைக்கு அழைத்து இவர் காட்டிய திரை வித்தைகள் சொல்லி மாளாது.

இசையும் காட்சியும் கொள்ளும் இசைவுத் தன்மையை முதன்முதலில் நான் அனுபவித்தது இந்தப் படத்தில்தான். இசை, காட்சிக்கு ஜீவன் சேர்த்ததா அல்லது காட்சி, இசையை உணரச் செய்ததா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.

தமிழ் கிராமங்கள் எப்படி இருந்தன என வருங்காலத்தில் ஆய்வு செய்யப்படுமேயானால் பாரதிராஜாவின் பெரும்பாலான படங்கள்தான் ஆவணப் படங்களாக நின்று உதவும்.

gemba.karthikeyan@gmail.com

சுனா‌மி

சுனா‌மி

ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்

ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா

உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?

உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?

பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்.


  • கவிஞர் : வைரமுத்து

DECLARATION OF ASSETS AND LIAABIITIES BY GOVERNMENT SERVANTS...CENTRAL GOVERNMENT ORDER





ஆழிப்பேரலையின் அழியாத சோகச்சுவடுகள்


ஆழிப்பேரலையின் அழியாத சோகச்சுவடுகள்

“26-12-2004”

இந்த நாளை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. லட்சக்கணக்கான உயிர்களை வாரிச்சுருட்டி பலி கொண்ட “சுனாமி” என்னும் கொடூர அரக்கனை இந்த உலகமே அன்று தான் உணர்ந்தது.

அது நாள் வரை ஜப்பானியர்கள் மட்டுமே அறிந்திருந்த “சுனாமி”யை அந்த தினம் தான் உலக மக்கள் தெரிந்து கொண்டனர். கடலுக்கு அடியில் ஏற்படும் பூகம்பத்தின் காரணமாக, கடலின் மேற்பரப்பில் ஒரு பனைமர உயரத்துக்கும் அதிகமான உயரத்தில் எழும் பேரலைகளையே “சுனாமி” என்று குறிப்பிடுகிறார்கள்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷிய கடலில் ஏற்பட்ட பூகம்பத்தால் “சுனாமி” என்னும் ஆழிப்பேரலைகள் உருவானது. அந்த ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவம் இந்திய, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் நீண்டு ஏராளமானோரை பலி கொண்டது.

இந்தியாவில் இந்த ஆழிப்பேரலைக்கு தமிழகம், புதுவை, ஆந்திரமாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன.

சென்னையில் பொங்கி எழுந்த கடல்நீர் மெரினா கடற்கரையை மூழ்கடித்தது. மனிதர்கள், பொருட்கள், கடைகள் என அத்தனையையும் வாரிச்சுருட்டி கடலுக்குள் இழுத்து சென்றது.

மேலும் பேரலை தாக்கியதில் மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள், வீடுகள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாயின.யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த ஆழிப்பேரலை தாக்கியதால் உயிர் இழப்பு அதிகமாக இருந்தது. கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய மறுநாள் இந்த கோர சம்பவம் நடக்கும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு தம்முடைய உறவினர்களை இழந்து நிற்கதியாய் மீனவர்கள் தவிப்பதை இன்றும் கடற்கரையோர கிராமங்களில் காண முடிகிறது.

கொடூர காட்சி

கடற்கரையில் கிடந்த மனித உடல்களை பொறுக்கி எடுத்து சென்ற சம்பவம் இன்னும் நம் நினைவை விட்டு அகலவில்லை.. கடல் மண்ணில் புதைந்தும், படகுகள், முட்புதர்களுக்கு இடையேயும் கிடந்த நூற்றுக்கணக்கான மனித உடல்களை எடுத்து வந்த கொடூர காட்சி இன்னும் நம் கண்களை விட்டு அகல மறுக்கிறது.

இது மட்டுமின்றி ஆழிப்பேரலையில் சிக்கி காணாமல் போன தங்களது குழந்தைகள் எங்காவது உயிருடன் கரை ஒதுங்கியிருப்பார்கள் என்று எண்ணிய பெற்றோர்கள், 4 மாதங்களுக்கு பிறகு தங்களது குழந்தைகளின் உடலை எலும்பு கூடாக கண்டெடுத்த சோகமும், கதறி அழுததும் இன்னும் நம் காதில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த மீனவர்களின் படகுகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்களா மீது தூக்கி வீசப்பட்டன. இதேபோல் தென்னை மரங்களின் உச்சியில் இருந்தும் படகுகள் மீட்கப்பட்டன. பெங்களூருவில் இருந்து கடலூர் சில்வர் பீச்சுக்கு பெற்றோருடன் வந்த தெல்கா என்ற சிறுவனை சுனாமியில் இருந்து மீட்டு, அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒரு பெண்ணிடம் கொடுத்தார். ஆனால் அந்த பெண், சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கவில்லை. தற்போது அந்த சிறுவன் எங்கே இருக்கிறான் என்பது இதுவரை புரியாத புதிராக இருக்கிறது. அந்த சிறுவனை தேடி அவனது பெற்றோர் பல மாதங்களாக கடலூருக்கு வந்து கண்ணீருடன் தேடி அலைந்ததை மறக்கமுடியாது.

சுனாமி தாக்கியதில் கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, கிள்ளை, பில்லுமேடு, பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில், சின்னூர், சி.புதுப்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கடற்கரையோர கிராம மக்கள் அனைத்தையும் இழந்து தவித்தனர். அவர்களுக்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் ஆதரவு கரம் நீட்டியதன் பேரில் இன்று பல்வேறு கட்ட போராட்டத்துக்கு பிறகு ஓரளவுக்கு அதை மறந்தும், மறக்க முடியாமலும் வாழ்ந்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்தவர்கள், தாயை மட்டும் இழந்த குழந்தைகள், தந்தையை மட்டும் இழந்த குழந்தைகள் உள்பட மொத்தம் 91 குழந்தைகள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் இருந்தனர். தற்போது உயர்கல்வி, தந்தை அரவணைப்பில் சென்ற குழந்தைகளை தவிர 15 பேர் மட்டும் உள்ளனர். இவர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

10 ஆண்டுகள்

இந்த கொடூர சம்பவம் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால், ஆழிப்பேரலையால் ஏற்பட்ட வடுக்கள் மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. ஆழிப்பேரலை தாக்கி உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று(வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. பலியானவர்களின் உறவினர்கள் கனத்த இதயத்துடன், கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறார்கள். நாமும் அவர்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.

UGC NET 2014 to be held on December 28, 2014

The Central Board Secondary education (CBSE) will be conducting National Eligibility Test (NET) on December 28, 2014 on behalf of UGC.
Paper Pattern:
The Test will consist of three papers. All the three papers will consist of only objective type questions held in two separate sessions. 
Session
Paper
Marks
No of questions
Duration
First
I
100
60 out of which 50 questions
to be attempted

1¼ Hours (09.30 A.M.
to 10.45 A.M.)

First
II
100
50 questions all are compulsory

1¼ Hours (10.45 A.M.
to 12.00NOON)

Second
III
150
75 questions all are compulsory

21/2 Hours (01.30 P.M.
to 4.00 P.M.)


Paper-I shall be of general nature, intended to assess the teaching/research aptitude of  the candidate.
It will primarily be designed to test reasoning ability, comprehension, divergent thinking and general awareness of the candidate. 60(sixty) multiple choice questions of 2 marks each will be given, out of which the candidate would be required to answer any 50(fifty). 
In the event of the candidate attempting more than 50 questions, the first 50 questions attempted by the candidate would be evaluated.
Paper-II shall consist of 50 objective type compulsory questions based on the subject selected by the candidate. Each question will carry 2 marks.
Paper-III will consist of 75 objective type compulsory questions from the subject selected by the candidate. Each question will carry 2 marks.
All the questions of Paper -II and Paper -III will be compulsory, covering entire syllabus (including all electives, without options).
The candidate will have to mark the responses for questions of Paper-I, Paper-II and Paper-III on the Optical Mark Reader (OMR) Sheet provided alongwith the test
booklet.
CBSE will conduct NET in 79 subjects at 87 selected NET Coordinating Institutions spread across the country. NET for the June session was held on Sunday i.e. June 29.
The candidates who qualify for the award of Junior Research Fellowship are eligible to pursue research in the subject of their post-graduation or in a related subject and are also eligible for Assistant Professor. The universities, institutions, IITs and other national organizations may select the JRF awardees for whole time research work in accordance with the procedure prescribed by them.

NEWS TODAY 22.04.2024