Showing posts with label News clippings 2. Show all posts
Showing posts with label News clippings 2. Show all posts

Sunday, November 19, 2017

இணையதள மின் கட்டண சேவை ரத்து

Added : நவ 19, 2017 07:02

சென்னை:மின் நுகர்வோர், மின் கட்டணத்தை, மின் வாரிய கட்டண மையங்கள், தபால் நிலையம், அரசு 'இ - சேவை' மையங்கள், குறிப்பிட்ட சில வங்கிகளில் ரொக்க பணம், காசோலை, வரைவோலை என, ஏதேனும் ஒன்றில் செலுத்தலாம்.மின் வாரிய இணையதளம் மற்றும் மொபைல், 'ஆப்' எனப்படும், மொபைல் அப்ளிகேஷனிலும் கட்டணத்தை செலுத்த முடியும்.இந்நிலையில், நேற்று இரவு, 10:00 முதல், இன்று மதியம், 3:00 மணி வரை, இணையதள மின் கட்டண சேவையை, பராமரிப்பு பணிக்காக, மின் வாரியம் நிறுத்தியுள்ளது. இந்த சமயத்தில், இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்த முடியாது.

Thursday, September 7, 2017

Two-year Govt. service must for PG medicos

The State Government ordered that aspirants to super-speciality courses will have to sign a bond valued at Rs. 50 lakh while taking admission. This is to ensure two-year compulsory government service. Currently an individual who opts for PG or super-speciality studies has to sign up for one-year service. Now, that the duration has been doubled. The order assumes significance as the counselling for 150 seats in the State is underway. The move is unlikely to be opposed by the PG medicos. This year, admission to super-speciality courses is through the common NEET pool. Performance of students from Telangana has not been as good as those from other states. Given that all other states have bonded compulsory service between one year and three years, aspirants here would lose out to aspirants from rest of the country on merit basis. “The Government had introduced the bonds to ensure that our students do not lose out to the competition.

Monday, September 4, 2017

Friday, August 11, 2017

எம்பிபிஎஸ்: 85% உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்

By DIN  |   Published on : 11th August 2017 12:47 PM  |
SC

புது தில்லி: மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீட் தேர்வு என்பது நாடு முழுவதும் பொதுவான ஒன்று. அப்படி இருக்கையில் மருத்துவ சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை கொண்டு வந்தது ஏன்? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், பிற மாநிலங்கள் கொண்டு வராதபோது தமிழகம் மட்டும் ஏன் கொண்டு வந்தது? மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு என்பது செல்லாது. தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்றும் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்று தமிழக அரசின் வழக்குரைஞர் விளக்கம் அளித்தார்.
எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ மாணவர் தர்ணீஷ் குமார் சார்பில் அவரது தாயார் சி.கயல்விழி உள்பட 10-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு, ஜூன் 22-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததோடு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் புதிய தகுதிப் பட்டியல் வெளியிட்டு, அதன்படி கலந்தாய்வை நடத்த வேண்டும் என ஜூலை 14-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள்ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.
தமிழக அரசின் மனுவில், தமிழகத்தில் உள்ள 6,877 பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 95 சதவீத மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் கடமை, பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதை தனி நீதிபதி கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
அதே போன்று, நீட் தேர்வு வினாக்களை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தயாரித்துள்ளது. தேர்வில் 50 சதவீத கேள்விகள் மட்டுமே மாநிலப் பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன.
இது, மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை விட சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
எனவே, வேறுபட்ட கல்வி வாரியங்களில் பயின்ற மாணவர்களிடையேயான வித்தியாசத்தை சீர் செய்ய, ஒதுக்கீடு வழங்குவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களால் மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை சமமாகக் கருத முடியாது. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டது.
மேல் முறையீட்டு மனு தள்ளுபடி: இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நூட்டி ராம் மோகனராவ், எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: நிகழாண்டு (2017 - 18) எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவாக எடுக்க வேண்டும். இதற்கு மேல் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்தக்கூடாது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்வதற்கான போதிய முகாந்திரங்கள் இல்லை. ஆகையால், அரசின் மேல் முறையீட்டு மனு உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.
மேலும் , இந்த வழக்கைப் பார்க்கும்போது தமிழகம் முழுவதிலும் சமமற்ற நிலை மற்றும் பல இடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை என்று தெரிகிறது. அதேபோன்று, தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளிகள் போதியளவில் இல்லை.
அந்த வசதி இருக்கும் பள்ளிகளில், அதற்கான தரம் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படாமலோ அல்லது கண்காணிக்கப்படாமலோ இருக்கிறது. மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் அரசின் கொள்கையானது இயற்கைக்கு முரணானது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள்தான் உயர்கல்விக்கான நுழைவுவாயிலாக உள்ளது. ஆகையால், மாணவர்களின் அறிவு மற்றும் திறமையை மேம்படுத்தும் நோக்கில், பாடத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும்.
மேலும் தேசிய அளவிலான தரத்தில் குறையாத வகையில், போட்டித் தேர்வில் பங்கேற்கும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் 3 முதல் 5 ஆண்டு இடைவேளையில் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப பாடத்திட்டத்தை மேம்படுத்தி மாற்றியமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனினும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது.

Wednesday, July 5, 2017

மாவட்ட செய்திகள்

ரத்த உறவு முறையில் திருமணம் செய்ததால் மனநலம் பாதித்த 3 குழந்தைகளுடன் பரிதவிக்கும் தம்பதி




ரத்த உறவு முறையில் திருமணம் செய்ததால் மனநலம் பாதித்த 3 பிள்ளைகளுடன் பரிதவிக்கும் தம்பதியினர் தங்களின் பிள்ளைகளை பராமரிக்க அரசு உதவி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஜூலை 04, 2017, 04:00 AM


தேனி,

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சுருளிச்சாமி (வயது 54). இவர் கட்டிட கட்டுமான கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி (50). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் மற்றும் மகள்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு உதவி கேட்டு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து இருந்தனர். கலெக்டர் வெங்கடாசலத்திடம் அந்த தம்பதியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து மகேஸ்வரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

நானும், எனது கணவரும் ரத்த உறவு முறையில் திருமணம் செய்தவர்கள். எனது அத்தை மகனை தான் திருமணம் செய்துள்ளேன். எங்களுக்கு ராஜ்குமார் (20), சூர்யா (18) என்ற மகன்களும், ராதிகா (16) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.

முதல் மகனுக்கு 2 வயதிலும், 2–வது மகனுக்கு 6 வயதிலும், மகளுக்கு 1½ வயதிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இவர்களை பராமரிக்க மிகுந்த சிரமம் அடைகிறோம். எங்கள் வீட்டில் தண்ணீர் குழாய் கிடையாது. நீண்ட தூரம் சென்று தான் தண்ணீர் பிடிக்க வேண்டும். தண்ணீர் பிடிக்க செல்லும் போது எனது பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே ஓடி விடுகின்றனர். வீட்டுக்குள் வைத்து பூட்டினால், வீட்டுக்குள் எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டுக் கொள்கின்றனர். இதனால், இவர்களை பக்கத்தில் இருந்தே பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் வாழும் வீடும் பழைய வீடு. மண் தரையில் தான் உள்ளது. எங்களுக்கு அரசு இலவச வீடு கட்டிக் கொடுத்து, வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தால் உதவியாக இருக்கும். சுய தொழில் செய்து பிழைத்துக் கொள்ள கடன் உதவி வழங்கினால் வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரித்துக் கொண்டே வாழ்வாதாரமும் தேடிக்கொள்ள முடியும். இதற்காக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Sunday, April 2, 2017

 
பிரதமர் அலுவலக உத்தரவின்பேரில் நாடு முழுவதும் அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தியது. சென்னையில் 13 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 
 
புதுடெல்லி, 

 நாடு முழுவதும் ஷெல் கம்பெனிகள் என்று அழைக்கப்படுகிற 1,155 போலி நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பெயரளவில் மட்டுமே இயங்குகின்றன. குறிப்பாக எந்த தொழிலிலும் அல்லது வர்த்தகத்திலும் ஈடுபடாமல், சட்ட விரோத பண பரிமாற்றம் ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இவற்றின்மூலம் 22 ஆயிரம் பேர் பலன் பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த ஷெல் கம்பெனிகள் ரூ.13 ஆயிரத்து 300 கோடி அளவுக்கு சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிரதமர் அலுவலகம் அதிரடி

கடந்த நவம்பர் 8–ந் தேதி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, பிரதமர் நரேந்திர மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்த ஷெல் கம்பெனிகள் மூலம் 550 பேர் ரூ.3,900 கோடி அளவுக்கு கருப்பு பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இப்படி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிற ஷெல் கம்பெனிகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு பிரதமர் அலுவலகம் அதிரடியாக உத்தரவிட்டது.

100 இடங்கள்

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களில் குறைந்தது 100 இடங்களில் அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் குழுக்கள் அதிரடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டன.

பி.எம்.எல்.ஏ. என்னும் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம் மற்றும் பெமா என்னும் அன்னிய செலாவணி பராமரிப்பு சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனைகள், சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஆமதாபாத், சண்டிகார், பாட்னா, பெங்களூரு, ராஞ்சி உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சென்னையை பொறுத்தமட்டில், 8 ஷெல் கம்பெனிகளுடன் தொடர்புடைய 13 இடங்களில் இந்த சோதனை நடவடிக்கையை அமலாக்கப்பிரிவு இயக்குனரக குழுக்கள் நடத்தி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் பிரபலங்கள்

சோதனை நடத்தப்பட்ட இடங்களில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மராட்டிய மாநில முன்னாள் துணை முதல்–மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சகன் புஜ்பால், ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் தம்பி ஆனந்தகுமார் உள்ளிட்டோருடன் தொடர்புடைய நிறுவனங்களும் அடங்கும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

மும்பையில் 20 போலி இயக்குனர்களுடன் 700 போலி நிறுவனங்களை ஒருவர் நடத்தி வந்து இப்போது சிக்கியுள்ளார். இவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சகன் புஜ்பாலுக்குரிய ரூ.46.7 கோடி சட்டவிரோத பணத்தை, சட்டபூர்வ பணமாக மாற்றித்தந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

நேற்று நடத்தப்பட்ட சோதனைகளின்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் யாரும் கைது செய்யப்படாத போதும், சந்தேகத்துக்கு உரிய நபர்களிடம் அமலாக்கப்பிரிவு இயக்குனரக குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

Tuesday, February 28, 2017

Feb 28 2017 : The Times of India (Chennai)
Exempt TN from NEET: EPS to Modi
Chennai:
TIMES NEWS NETWORK


`Exam Will Be Injustice To Rural Students'
Emphasising that Tamil Nadu has a fair and transparent medical admission policy , chief minister Edappadi K Palaniswami on Monday urged Prime Minister Narendra Modi to approve two Bills exempting students from the state from appearing for the National Eligibility-cum-Entrance Test (NEET) to get admission into medical and dental colleges in the state.During his first official me eting with Modi after being sworn in as chief minister, Palaniswami submitted a memorandum containing crucial issues relating to the state that require urgent attention of the Centre.
“The imposition of NEET will cause grave injustice to students from rural areas and hence approval for the TN bills seeking exemption from NEET may be accorded so that Presidential assent could be obtained at the earliest,“ the CM said. The state had sought financial assistance of ``39,555 crore for drought relief and `22,573 crore for the damage caused by cyclone Vardah, but the Centre was yet to provide any assistance, Palaniswami said.
The CM expressed the state's concerns about Mekedatu scheme proposed by Karnataka, the dams planned by Kerala across Pambar and Bhavani rivers which are part of the Cauvery basin, and sought the Centre's help in setting up permanent mechanisms, the Cauvery Management Board and Cauvery Water Regulation Committee to resolve the longfestering issue between the neighbouring states. That apart, the state is also keen on restoring the full reservoir level of 152ft in Mullaperiyar dam, inter-linking of rivers, besides seeking approval for the Athikadavu-Avinashi scheme. Terming unfair the formula adopted by the 14th finance commission which has “singled out Tamil Nadu for very adverse treatment“, Palaniswami demanded the pending dues of `17,333 crore for various Central schemes. Emphasising the power sector, he sought expeditious approval of the revised bidding documents for the Cheyyur ultra mega power project, creation of a dedicated interstate green energy corridor to evacuate surplus wind power from Tamil Nadu and abolishing frequency linked penalty for renewable energy-rich states. He also urged concessional funding of `17,000 crore from power ministry to make Chennai cyclone and flood resilient through improvements in distribution network.

Sunday, January 1, 2017

போதை மட்டும்தானா புத்தாண்டு?! -அதிர்ச்சியளிக்கும் 10 உண்மைகள்

புத்தாண்டை குடி, போதை என எவ்வித பழக்கமும் இல்லாமல், விழிப்புணர்வுடன் மகிழ்வாய் இன்புற வேண்டும் என ஆலோசனை கூறுகிறார் சமூக ஆர்வலர் ஜெனிபர் வில்சன்.

1. புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், யாரும் விரும்பாத கேள்வியாகத்தான் இது இருக்க முடியும், ஆனால், உண்மை என்னவென்றால், ஆண்டின் எந்த நாளை விடவும் புத்தாண்டு தினத்தில்தான் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதிகம் என்பதும், அன்றைய தினம்தான் அதிகமான விபத்துகள் நடக்கின்றன என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய செய்தி.
2. “ஸ்வீட் எடு.. கொண்டாடு” என்கிற காலம் போய், “மச்சி.. ஓபன் தி பாட்டில்” எனக் காலம் அடியோடு மாறிவிட்டது. அதுவும், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றால் மதுவுக்குத்தான் முக்கிய இடம். முன்னிரவில் ஆரம்பிக்கும் மது விருந்துகள், பல இடங்களில் விடிய, விடிய தொடருகிறது. மதுவில் ஊறித்திளைத்துவிட்டு, “ஸ்டெடியாதான்டா இருக்கேன்” என வசனமும் பேசி விட்டு, தள்ளாடிக் கொண்டே  நடந்து போய், வாகனம் ஓட்டினால் என்ன நடக்கும்? தறிகெட்டு ஓட்டி, எங்கேயாவது இடித்துக் கொள்வதும், யாரையேனும் இடித்துத்
தள்ளுவதும்தான் நடக்கும். மொத்தத்தில் புத்தாண்டு இரவில், தேவையில்லாமல் வெளியில் செல்வதன் மூலம் ஆபத்தை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை.

3. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவிகித சாலை விபத்துகள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால்தான் நடப்பதாக கூறப்படுகிறது. புள்ளி விவரங்களில் பதிவாகாத இன்னும் எத்தனையோ விபத்துகளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

4. வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தும் பிரபலங்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது. மது குடித்து கொண்டாடுவது என முடிவு செய்துவிட்டால், ஓர் ஓட்டுனரை ஏற்பாடு செய்து கொள்வதே நல்லது. இல்லையென்றால், விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 100 சதவிகிதம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

5. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2014-ம் ஆண்டில் இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்தது. அந்த ஆண்டில் மட்டும், தமிழகத்தில் 15 ஆயிரம் பேர்  உயிரிழந்திருக்கிறார்கள். பெரு நகரங்கள் என்று பார்க்கும் போது, டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை 1,046 உயிரிழப்புகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை, புள்ளி விவரத்தில் இடம் பெற்ற 67 ஆயிரம் விபத்துகளில் மொத்தம் 587 விபத்துகள்தான் குடித்துவிட்டு
வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? விபத்து குறித்த முறையான தகவல்களை பதிவு செய்யத் தவறியதுதான் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். காப்பீட்டுத் தொகையைப் பெற முடியாது என்ற காரணத்தைக் காட்டி, குடும்பத்தினருடன் சமரசம் செய்து, காவல்துறையினரே போதை மரணங்களை மறைக்கின்றனர் என்கிறார்கள். அரசாங்கமே மது விற்பனை செய்வதுதான் இதற்குக் காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமா?
6. வேதனையின் உச்சம் என்னவென்றால், கடந்த 2 வருடங்களாகத்தான், விபத்துகளுக்கான காரணத்தின் அடிப்படையில் புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. அது முறையாக பதிவு செய்யப்படவில்லை என்பது வேறு. பிரச்சனை தெளிவாக தெரிந்தால் மட்டுமே, அதைக் குறைப்பதற்கான முயற்சியில் இறங்க முடியும்.

7. 2016 புத்தாண்டு தினத்தன்று சென்னையில் மட்டும் 900 சாலை விபத்துகள் ஏற்பட்டது என்கிறது காவல்துறை புள்ளி விவரம். இந்த விபத்துகளில் 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். அதனால்தான், மதுவால் கிடைக்கும் மகிழ்ச்சி முக்கியமா? இல்லை… ஆண்டின் முதல்நாளே மருத்துவமனைக்கு செல்ல ஆசையா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டி இருக்கிறது.

8. அதே சமயம், புத்தாண்டு என்பதால், மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து விடாதீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. அதாவது, உடல் நலக்குறைவு என்று உணர்ந்த பின்னரும், ஆண்டின் முதல் நாளே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமா? எனப் போகாமல் தவிர்க்காதீர்கள் என்கிறது அந்த ஆய்வு.

9. சில வருடங்களுக்கு முன்பு,  டேவிட் ஃபிலிப் என்ற ஆய்வாளர் 1979 முதல் 2004 வரை நிகழ்ந்த 5 கோடியே 70 லட்சம் பேரின் மரணம் குறித்து ஆய்வு செய்தார்.  மரணம் ஏற்பட்டதற்கான காரணம், மரணமடைந்த காலகட்டம் என பல்வேறு காரணிகளை ஆராய்ந்து பார்த்ததில், வேறு எந்த கால கட்டத்தை விடவும், புத்தாண்டு தினத்தன்றுதான் நிறைய மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக
கண்டுபிடித்தார். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒருபுறம் என்றால், மற்றொரு புறம், உடல்நலக் குறைவு என உணர்ந்த பின்னரும், புத்தாண்டும் அதுவுமாக, மருத்துவமனைக்கு போக வேண்டுமா என போகாமல் இருந்திருக்கிறார்களாம்.

10. புத்தாண்டுக் கொண்டாட்டங்களைப் பொறுத்தவரை, நமது உடல்நலன் குறித்த அக்கறையோடு இருப்பதே நல்லது. கடற்கரை, கேளிக்கை விடுதிகள், 5 நட்சத்திர ஹோட்டல்கள், நண்பர்களின் இல்லம் என எங்கு புத்தாண்டைக் கொண்டாடினாலும்,

மது அருந்தினால், வேறு ஒருவர் துணையுடன் வீட்டிற்குச் செல்வதே நலம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி பிடிபடுவோர் மீது, காவல்துறையினர் முறையாக நடவடிக்கை எடுத்து, வண்டிகளை பறிமுதல் செய்வதுடன், மாற்று வாகனங்கள்

மூலம் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதே சரியாக இருக்கும். கால் டாக்சி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டால் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்கலாம்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டுமா?
இல்லையா...நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
 -ஜெனிபர் வில்சன்

Tuesday, November 29, 2016

வாடிக்கையாளர் பொய் புகார்: டாக்ஸி டிரைவரை போலீசிடம் இருந்து காப்பாற்றிய பெண்!


டாக்ஸிஸி

vikatan.com

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஹிமானி. அண்மையில் உபேர் டாக்ஸி ஒன்றில் ஹிமானி பயணித்த போது, வித்தியாசமான அனுபவத்தைச் சந்திக்க நேர்ந்தது. தனது அனுபவத்தை ஃபேஸ்புக்கில் ஹிமானி பதிவிட்டிருந்தார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 6,500 முறை ஹிமானியின் பதிவு ஷேர் செய்யப்பட்டுள்ளது. 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்திருந்தனர். ஏராளமானோர் ஹிமானியின் செயலை பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர். அந்த பதிவின் சுருக்கம் இங்கே...

சமீபத்தில் அலுலகத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக ஒரு உபேர் டாக்ஸியை புக் செய்தேன். டிரைவர் மிகவும் பணிவாகவும் மரியாதையுடனும் நடந்து கொண்டார். அது ஒரு ஷேர் டாக்ஸி. என்னுடன் 30 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பெண் ஒருவரும் பயணித்தார். காருக்குள் ஏறியதுமே, அந்த பெண் டிரைவிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். டிராப் செய்வது குறித்து டிரைவரிடம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். டிரைவர் பணிவாக பதில் அளித்தும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை. 'ஆப்பில் குறிப்பிட்டுள்ளபடி உங்களை டிராப் செய்துவிடுகிறேன் ' என டிரைவர் கூனார். ஆனால், அந்த பெண்ணின் கோபம் அடங்கவில்லை.

அவரது கோபம் அதிகமாகிக் கொண்டே போனது. மூன்றாம் தர வார்த்தைகளை உபயோகித்து டிரைவரைத் திட்டடியதோடு, 'அடித்து துவைத்து விடுவேன்' எனக் கொந்தளித்தார். டிரைவரின் நிலையோ பரிதாபமாக இருந்தது. அவர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அநத பெண் சமாதானமாகவில்லை. நானும் சமாதானப்படுத்திப் பார்த்தேன். 'இருவருக்கும் மிஸ் கம்யூனிகேசனால்தான் பிரச்னை. போதும் விடுங்கள்' என்றேன். அவர் காதில் ஏற்றிக் கொள்ளவேயில்லை. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அந்த பெண், 'போலீஸ் நிலையத்துக்கு வண்டியை விடு, போலீசில் புகார் அளிக்க வேண்டும்' என்றார். மேலும் என்னிடமும்' நீங்களும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்' என்றார் .நான் உடனடியாக மறுத்தேன். தொடர்ந்து என்னையும் திட்டத் தொடங்கினார்.

டிரைவர் பரிதாபமாக என்னை நோக்கினார். பின்னர், 'என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் வேறு ஓரு காரை பிடித்து வீட்டுக்குச் செல்லுங்கள்' என்று என்னிடம் கூறினார். இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதத்தைப் பார்த்து 20க்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடினர். இந்த சமூகம் பெண்ணுக்கு ஆதரவாகத்தானே பேசும். அந்த பெண்ணுக்கு ஆதரவாக டிரைவரை அனைவரும் திட்டினர். இதற்கிடையே இருவருமே அவசர போலீசை கூப்பிட, அந்த இடத்துக்கு இரு பெண் போலீசும் வந்தனர். பெண் போலீசாரிடம், டிரைவரின் நிலையை நான் விளக்கினேன் டிரைவர் பக்கம் தவறு இல்லை எனக் கூறினேன். 'போலீஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், என்னைக் கூப்பிடுங்கள் நான் டிரைவருக்கு ஆதரவாக வருவேன்' என அவர்களிடம் தெரிவித்தேன். அத்துடன் எனது செல்போன் எண்ணையும் கொடுத்தேன்.

மேலும் டிரைவருக்கு ஆதரவாக வாக்குமூலம் தரவும் நான் தயாராக இருப்பதாக தெரிவித்தேன். அப்போது, என்னிடம் வந்த பெண் போலீஸ், ''மேடம் நீங்களும் தயவு செய்து போலீஸ் நிலையம் வாருங்கள் அதுதான் நல்லது ''என எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு முன்பு வரை நான் போலீஸ் நிலையம் சென்றது இல்லை. அப்போதே இரவு மணி 9 மணியாகி விட்டது. ஆனாலும், டாக்ஸி டிரைவரை அப்படியே விட்டு விட்டு போக என் மனம் இடம் கொடுக்கவில்லை. நானும் போலீஸ் நிலையத்துக்கு அவர்களுடன் சென்றேன்.

போலீஸ் நிலையத்தில், அந்த பெண் , டிரைவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என பிடிவாதம் பிடித்தார். நான் போலீசாரிடம் உண்மையை விளக்கினேன். நிலைமையை புரிந்து கொண்ட போலீசாருக்கு டிரைவர் மீது இரக்கம் பிறந்தது. அந்த பெண்ணை போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேற சொன்னார்கள். இரவு 11 மணி வரை அவர் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறவில்லை. 'டிரைவர் தனது காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்டால்தான், போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே போவேன்' என்று அடம் பிடித்துக் கொண்டு அங்கேயே இருந்தார்.

பெண்ணின் நடவடிக்கையால் கோபமடைந்த போலீசார், டிரைவரை தனி அறைக்கு கொண்டு சென்றனர். தனி அறையில் வைத்து டிரைவரை அடிப்பது போல வெளியே சத்தம் கேட்டது. உடனே நான் அங்கே ஓடினேன். அங்கே சென்று பார்த்த போதுதான் போலீசாரின் செயல் என் மனதை நெகிழ வைத்துவிட்டது. போலீசார் வெறும் தரையில் போட்டு பெலட்டை அடித்துக் கொண்டிருந்தனர், டிரைவரோ சிரித்தபடி வலியால் துடிப்பது போல கத்திக் கொண்டிருந்தார்.

அறைககுள் சென்ற என்னிடம், டிரைவருக்கு ஆதரவாக வந்ததற்காக போலீசார் நன்றி தெரிவித்தனர். 'நீங்கள் உண்மையை விளக்கவில்லை என்றால் கேஸ் போட்டிருப்போம். அவரது வாழ்க்கை பாழாகிப் போயிருக்கும்' என்றனர். போலீசார் டிரைவரை அடித்ததாக நினைத்து சமாதானமடைந்த அந்த பெண்ணும் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினார். நாங்கள் இருவரும் போலீசாருக்கு நன்றி தெரிவித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டோம். நான் வீடு போய் சேர்ந்த பிறகு அந்த டிரைவருக்கு போன் செய்தேன். அவரது குரலில் ஒரு பாதுகாப்பு தெரிந்தது.

சூழலை புரிந்து கொண்ட மும்பை போலீசுக்கு நன்றி!

Friday, May 27, 2016

Supreme Court refuses to stay President's NEET ordinance

NEW DELHI: The Supreme Court on Friday quashed a plea asking the court to stay the President's ordinance that allowed states to have their own medical entrance examinations.

That means, for now, states can go ahead with their own separate medical examinations and they don't have to use the single National Eligibility Entrance Test (NEET) results for admitting students.

The apex court said staying the NEET ordinance would create further confusion in the minds of students.

"Lets us not create further confusion on entrance examination and let students appear for test with certain amount of certainty... We will hear plea after the vacation," the court said.

President Pranab Mukherjee on Tuesday signed an order that allows state boards to skip NEET for a year. The ordinance - or executive order - cleared by the Cabinet last week, was aimed at "partially" overturning a Supreme Court order.

The top court ruled last month that NEET would be the only test for admission to medical courses in India. It turned down an appeal by several states who wanted to hold their own separate medical entrance exams. The top court order said all government colleges, deemed universities and private medical colleges would have to use NEET's results and not their own entrance exam results for admission.

The petition to stay that ordinance was filed by Anand Rai, the whistle-blower of the Vyapam scam. The petitioner alleged that the ordinance frustrated the order of the top court that has directed implementation of NEET from the current academic year.

Rai said that the ordinance completely contradicts the Centre's stand before the top court. The Centre had backed the implementation of a single test for admission in MBBS/BDS courses in all medical colleges.

He said the Centre batted for NEET when the matter was being adjudicated before the SC, but did a U-turn on the issue and took the ordinance route to frustrate the court's order and defer implementation of common entrance examination.

The SC had ruled that admission to MBBS/BDS courses would be conducted only through NEET. It scrapped the entrance tests by various state governments and private medical colleges.

Tuesday, March 29, 2016

Bleak future for retired staff


Bleak future for retired staff

R. SRIKANTH


There has been a delay in disbursal of pension and other retirement benefits to them

Thousands of former employees of the eight transport corporations in the State no longer have the pleasure of a ‘happy’ retired life, as they are staring at an uncertain financial future. The reason is delayed payment of pension and other retirement benefits.

The delayed payment of commuted pension, dearness allowance arrears and in certain cases the pension amount itself is driving employees to take desperate measures. More than 8,000 retired employees are running from pillar to post to get their pension benefits.

M. Natarajan, who worked as a driver for Tirunelveli Transport Corporation at Kovilpatti depot, distressed at having to wait for several months to get the commuted pension amount, committed suicide.

The family members of R. Jayaraman, who worked as a driver in the Metropolitan Transport Corporation (MTC) at Basin Bridge depot, were not able to save him, because of lack of funds.

Mr. Balakrishnan said except for employees of MTC and State Express Transport Corporation (SETC) the other six transport corporations — Madurai, Villupuram, Kumbakkonam, Salem, Tirunelveli and Coimbatore — have been defaulting on various retirement benefits.

Arumugam Nainar, secretary, Tamil Nadu State Transport Employees Federation, said what was disheartening was the manner in which the commuted pension (one-third amount of the total pension amount paid in advance) entitled to an employee at the time of retirement was yet to be paid, but that ‘recovery’ was being carried out.

At present the commuted pension has been proposed to be paid in 24 monthly instalments, literally making a mockery of the commutation of pension system, he also added.

விடைபெற்றது இனோவா, வருகிறது கிறிஸ்டா

விடைபெற்றது இனோவா, வருகிறது கிறிஸ்டா


ஜப்பானின் டொயோடா நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது இனோவா. சொந்த உபயோகத்துக்கான வாகனம் மட்டுமின்றி வாடகைக்கார் நிறுவனங்களின் பெரும்பாலான தேர்வு இனோவா என்றால் அது மிகையில்லை.
எந்த ஒரு நல்ல தொடக்கமும் முடிவுக்கு வந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் இனோவா உற்பத்தியை நிறுத்திவிட டொயோடா இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கு மாற்றாக புதிய பிராண்டான கிறிஸ்டாவை சந்தைப்படுத்த உள்ளது டொயோடா. அனேகமாக இனோவாவுக்கு பிரிவுசார விழாவே பெங்களூரில் உள்ள ஆலையில் நடத்தப்பட்டுவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெற்ற டொயோடாவின் புதிய வரவான கிறிஸ்டா, இனி இந்தியச் சாலைகளில் வலம் வர உள்ளது.
இனோவாவுக்கு மாற்றாக வரும் கிறிஸ்டா அதைவிட பல மடங்கு மேம்பட்டது. இது இனோவாவை விட நீளமானது. அதைவிட அதிக திறன் கொண்ட இன்ஜின் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. தற்போது இனோவா மாடல் காரின் விலை ரூ.17 லட்சமாகும். புதிய மாடல் கிறிஸ்டாவின் விலை ரூ.20 லட்சமாக இருக்கும் என தெரிகிறது.
இனோவாவைவிட விலை சற்று அதிகமாக இருந்தாலும் கொடுக்கும் தொகைக்கு மிகவும் உண்மையான உழைப்பு மற்றும் சொகுசான பயணத்தை அளிக்கக் கூடியது என்று இத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிறிஸ்டா 2.4 லிட்டர் இன்ஜின் 2ஜிடி எப்டிவி நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜினைக் கொண்டது. இது 142 பிஹெச்பி சக்தியும் 342 நியூட்டன் மீட்டர் டார்க் அளவையும் கொண்டது. இது லிட்டருக்கு சோதனை ஓட்டத்தின்போது 14 கி.மீ முதல் 16 கி.மீ. தூரம் ஓடியதாம். 5 கியர்களைக் கொண்டதாகவும், ஆட்டோமேடிக் மாடலில் 6 கியர்களைக் கொண்டதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் உள்புறம் மிகவும் உயர் ரக தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. டிரைவர் சீட்டை தானியங்கி முறையில் தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளது. பயணிகள் சவுகர்யமாக அமர்ந்து பயணிக்க போதிய இடவசதி, 7 அங்குல தொடுதிரை மானிட்டர் மிகச் சிறந்த பொழுது போக்கு அம்சங்களை அளிக்கக் கூடியது. போதிய விளக்கு வசதி, சூழலுக்கேற்ப உள்புற குளிர் நிலையை நிர்ணயிக்கும் நுட்பம், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளிட்டவை இதில் உள்ள கூடுதல் சிறப்பம்சமாகும்.
இதே பிரிவில் உள்ள பிற நிறுவன தயாரிப்புகளைக் காட்டிலும் இனோவாவுக்கு அதிக கிராக்கி இருந்ததற்கு அதன் செயல்பாடு மட்டுமின்றி விலையும் ஒரு காரணமாக இருந்தது. கிறிஸ்டாவும் விலை குறைவாக இருக்கும் பட்சத்தில் இது தொடர்ந்து பிற நிறுவனத் தயாரிப்புகளுக்குச் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. டொயோடா நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதோடு முந்தைய மாடலை முற்றிலுமாக நிறுத்திவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
முன்பு குவாலிஸ், தற்போது இனோவா.
புதிய வரவுகள் பழையனவற்றை அடித்துச் செல்லும். கிறிஸ்டாவின் வரவு இனோவாவை ஓரங்கட்டிவிட்டது.

Thursday, March 24, 2016

வெளிநாட்டு மாணவர்களை கண்காணிக்கிறது மத்திய அரசு!



வெளிநாட்டு மாணவர்களை கண்காணிக்கிறது மத்திய அரசு!
DINAMALAR

புதுடில்லி : வெளிநாட்டு மாணவர்களின் வருகை குறித்து 24 மணி நேரத்துக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பல்கலை.,களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டிலிருந்த கல்வி கற்க இந்தியா வரும் மாணவர்களின் விவரங்களை, பல்கலைகளும், கல்வி நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள், மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதேபோல், ஹோட்டல்கள், விடுதிகள், மருத்துவமனைகளுக்கு வரும் வெளிநாட்டினர் குறித்து 24 மணி நேரத்தில் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆவணப்புத்தகத்தில் வெளிநாட்டினரின் பெயர், அவர்களின் நாடு, இந்தியா வந்ததன் நோக்கம், இந்தியாவில் அவர்கள் தங்க திட்டமிட்டிருக்கும் நாட்கள், இங்கு அவர்கள் சந்திக்கும் நபர்களின் விவரங்களைச் சேகரித்து பராமரிக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, 1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பொருந்தாது என்று தனது அறிவிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Wednesday, March 23, 2016

ஓட்டு போட்டால் குலுக்கலில் பரிசு:கேரளாவில் தேர்தல் கமிஷன் அதிரடி

ஓட்டு போட்டால் குலுக்கலில் பரிசு:கேரளாவில் தேர்தல் கமிஷன் அதிரடி
DINAMALAR

பத்தனம்திட்டா : கேரளாவில், ஓட்டுப்பதிவு குறைவதை தடுக்கும் வகையிலும், வாக்காளர்களிடையே ஓட்டு போடும் ஆர்வத்தை துாண்டும் வகையிலும், குலுக்கல் நடத்தி பரிசு வழங்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
வாக்காளர்களை கவருவதற்காக, அரசியல் கட்சிகள், இலவச பொருட்கள், அன்பளிப்பு, பணம் கொடுத்து வருகின்றன. இப்போது, வாக்காளர்களை வழிக்கு கொண்டு வர, தேர்தல் கமிஷனும், பரிசுத் திட்டத்தில் இறங்கியுள்ளது. படித்தவர்கள் அதிகம் வசிக்கும் கேரள மாநிலத்தில் தான் இந்த கூத்து. இங்குள்ள பத்தினம்திட்டா மாவட்டம், அதிக அளவு மலைப்பகுதி நிறைந்த இடமாகும். தேர்தலில் ஓட்டு போட இங்குள்ள வாக்காளர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.

மாநில அளவில், 75 சதவீத ஓட்டுகள் பதிவாகும் நிலையில், இங்கு, 65 சதவீதத்தை தாண்டுவதே பெரும்பாடாக உள்ளது. அதுவும், மலைப்பகுதியைச் சேர்ந்த, 100 ஓட்டுச்சாவடிகளில் மிக மிக குறைந்த அளவு ஓட்டுகள் தான் பதிவாகின்றன. இதையடுத்து, மே மாதம், 16ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், ஓட்டுப்பதிவு சதவீதத்தை எப்படியும் அதிகரித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன், கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஹரிகிஷோர் களமிறங்கியுள்ளார்.

மிக குறைவாக ஓட்டுப்பதிவாகும் ஓட்டுச்சாவடிகள் மீது, சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அங்குள்ள வாக்காளர்களை ஈர்க்கும் விதத்தில், அதிரடி திட்டம் ஒன்றையும் கலெக்டர் அறிவித்துள்ளார். அதன்படி, அங்கு, ஓட்டு போடும், வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட எண் உடைய, அட்டை வழங்கப்பட உள்ளது. 'தேர்தலுக்கு பின், குலுக்கல் நடத்தி, வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்' என்றும், கலெக்டர் அறிவித்துள்ளார்.

Saturday, March 5, 2016

Blade left behind in lung during surgery, 2-yr-old dies

TIMES OF INDIA

New Delhi: A two-year-old child undergoing treatment at Safdarjung Hospital for pus in the lung cavity died allegedly due to medical negligence.
The child's parents have complained to police that the surgeons who operated on her to take out the pus, left behind a surgical blade which led to complications and death.

TOI spoke to Dr A K Rai, medical superintendent of the hospital, who accepted that the surgical blade was left behind during the surgery. He, however, added that the surgeons informed the family about this and operated on her again to remove the blade.
"Despite the second surgery, the child's condition did not improve. We were investigating the cause of the infection, when the family left against medical advice with the patient. Later, we got to know that she had succumbed to the condition," the superintendent said.

The parents, residents of Wazirabad in northeast Delhi, have complained to police for action against the doctors. The complain is also being forwarded to the Medical Council of India (MCI) for necessary action.

"If the MCI finds the doctors guilty, suitable action will be taken," said one of the hospital authorities.

Friday, March 4, 2016

Ola goes micro, to offer rides starting at Rs 50

TIMES OF INDIA

CHENNAI: In a bid to be the cheapest cab operator in the city, Ola has introduced a new category in its operations micro'. With the minimum fare being `50, it could be the equivalent of a short-distance autorikshaw ride one can get in the city.

The new category will have smaller and entry-level cars like WagonR, Datsun Go with a minimum fare of `50.These cars have smaller engines and higher mileage. Ola has also introduced a base fare of `40 for the first time."The meter reads `40 when the trip starts and every kilometre after that will cost `6 with a ride time charge of `1 per minute," said a source in Ola. For example, a 1km trip would cost `46 plus ride time charges but the payable fare would be `50 plus ride time charges, `50 being the minimum micro fare. Ola mini costs `80 for the first 4km and `10km after that.

On the app, the availability of this category is very low.Sources in Ola say this a pilot project. "The demand is very high for the category . We wil scale it up soon," the source said.

In early February, Uber slashed its fares by Rs 2 on both UberGo and UberX cabs. The former costs `6km while the latter is available at `7km UberGo has a base fare of Rs 30 and a ride time charge of 1 km. Other cheap options in the city include Taxi For Sure (TFS), which is owned by Ola It has a minimum fare of `59 for the first 3km and `8km af ter that. It has a higher ride ti me charge of `1.5km though Ola introduced two-whee ler services in Bengaluru charging `2km with a mini mum fare of `30. The compa ny , however, declined to com mit a similar service in the city.

Thursday, March 3, 2016

பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

THE HINDU TAMIL

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிகளை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு நாளை (4-ம் தேதி) தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைமுறையில் சில மாற்றங்களை பின்பற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் களில் முதலிடம் பெற மாணவர் களிடையே ஒவ்வொரு ஆண்டும் கடுமையான போட்டி நிலவுகிறது.
இதன் காரணமாக, இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் ஆகிய பாடங்களில் முழு மதிப்பெண் (சென்டம்) வாங்குவதற்காக, மாணவர்கள் கடுமையாக முயற்சிக்கின்றனர். எனினும், எல்லோருக்கும் ‘சென்டம்’ கிடைப்பதில்லை. தேர்வு எழுதி முடிக்கும்போது, ‘சென்டம்’ எடுக்க வாய்ப்பில்லை என்று உணரும் மாணவர்கள், தாங்கள் எழுதிய விடைத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும் கோடு போட்டு கொடுத்துவிட்டு, அந்த தேர்வை புறக்கணித்து விடுகின்றனர்.
பின்னர் உடனடி மறுதேர்வு எழுதி, ‘சென்டம்’ வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் மத்தியில் இதுபோன்ற பழக்கம் அதிகரித்து வருவதை உணர்ந்த கல்வித்துறை, நடப்பாண்டில் தேர்வு தொடர்பான விதிகள் குறித்த புத்தகத்தின் 42-ம் பக்கத்தில் வரிசை எண் 11-ல் புதிய விதியை அறிவித்துள்ளது. இதன்படி, தேர்வு அறையில் மாணவர்களுக்கான விதி முறைகளை அறிவிக்கும்போது, தேர்வு எழுதிய அனைத்து பக்கங் களிலும் கோடு போட்டு கொடுக்கும் மாணவர்களிடம், இது ஒழுங்கீன நடவடிக்கை, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், அடுத்த 2 பருவ தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், விடைத்தாள் திருத்தத்தின்போதும் புதிய மாற்றம் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் உயிரியியல் பாடத்தில் எடுக்கப்படும் மதிப்பெண் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உயிரியியல் பாடத்துக்கான விடைத்தாள் திருத்துவதிலும் புதிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
கடந்த ஆண்டு வரை, உயிரியியல் தேர்வு எழுதும் மாணவர்கள், உயிரி- தாவரவியல், உயிரி- விலங்கியல் எனத் தனியாக விடைத்தாள்களை எழுதுவர். அவை தனித்தனியாக திருத்தப்பட்டு, கூட்டு மதிப்பெண்கள் வெளியிடப்படும். இவ்வாறு தனித்தனியாக திருத்தப்படும்போது, அரை மதிப்பெண் வந்தால், ‘ரவுண்ட் ஆப்’ விதிப்படி முழு மதிப்பெண் கொடுக்கப்படும்.
உயிரி-தாவரவியல், உயிரி- விலங்கியல் என இரண்டு பிரிவிலும் தலா அரை மதிப்பெண் எடுக்கும்போது, ‘ரவுண்ட் ஆப்’ விதிப்படி இரண்டு அரை மதிப் பெண் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இதை தவிர்க்க, ஒவ் வொரு பிரிவுக்கும் ‘ரவுண்ட் ஆப்’ விதியை தவிர்த்து, இரண்டு பிரிவின் மதிப்பெண்களையும் சேர்த்த பின்னர் ‘ரவுண்ட் ஆப்’ விதியை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

Sunday, November 15, 2015

ரூ.10 லட்சம் வருமானமா? 'காஸ்' மானியம் 'கட்'டாகும்


ஐதராபாத்:''ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 'காஸ்' மானியத்தை ரத்து செய்வது பற்றி, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது,'' என, பார்லி மென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.


மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் திட்டத்தால், 3 கோடி போலி இணைப்பு கள் கண்டுபிடிக்கப்பட்டன; இதன் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, காஸ் மானியத்தை, நாடு முழுவதும், 46 லட்சம் பேர் விட்டுக் கொடுத்துள்ளனர். வசதி படைத்தவர்கள், காஸ் மானியத்தை, தாங்களாக விட்டுக் கொடுக்க வேண்டும். 'காஸ் மானியம் பெற, வருமான வரம்பு நிர்ணயிக்கலாமா' என, நிதியமைச்சகம் கேட்டுள்ளது; இது பற்றி பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.வங்கிக் கணக்கில், மானியத்தை நேரடியாகச் செலுத்தும் திட்டத்தில், மண்ணெண்ணெயையும் சேர்க்க, அரசு ஆலோசித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். 
இதற்கிடையில், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான வெங்கையா நாயுடு கூறியதாவது:ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, காஸ் மானியத்தை ரத்து செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. இவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் எதற்கு மானியம்; இந்த மானியத்தை, ஏழைகளுக்கு கொடுக்கலாமே.இவ்வாறு அவர் கூறினார்.

மிக்ஸியில் பிளேடு இல்லை... மின்விசிறியில் றெக்கை இல்லை... கிரைண்டரில் கல்லே இல்லை!

vikatan.com
காயிலாங்கடைக்குப் போகும் விலையில்லா பொருட்கள்...

‘இலவசங்கள் மக்களை மானமற்றவர்களாக மாற்றும் யுக்தி. இவை, மக்களைச் சோம்பேறிகளாக்கும்’ என்ற எச்சரிக்கைக் குரல்கள் ஒரு பக்கம். ‘வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் அதிகம் உள்ள நாட்டில், மானியங்களும் இலவசங்களும் அவசியம்’ என்ற ஆதரவுக் கரங்கள் மறுபக்கம். இந்த விவாதங்களுக்கு இடையே, தேர்தல்களில் இலவசங்கள் முக்கியமான வாக்குறுதிகளாக இடம்பெற்று, அவை, தேர்தலின் போக்கை மாற்றியமைத்துள்ளன. இலவசப் பொருட்கள், பயனாளிகளுக்கு உண்மையில் பயனளித்ததா?
2011 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் இலவச ஆடு-மாடு, ‘மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி’ என 3 பொருட்கள் அடங்கிய பேக்கேஜ், மாணவர்களுக்கு இலவச ‘லேப்-டாப்’ ஆகியவை அ.தி.மு.க சார்பில் இலவசப் பொருட்களாக அறிவிக்கப்பட்டன. இதில், ஆடு மாடுகள் கதை தனி. ஆனால், மின் சாதனங்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறியின் நிலை என்ன?
வாங்குனா வாங்குங்க... இல்லைன்னா போங்க!
திருச்சி கிராப்பட்டி பகுதியில் மயில்வாகனன் தெருவில் வசிக்கும் பெண்களைச் சந்தித்தோம்.
“இந்தப் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தாங்க. மின்விசிறியில் றெக்கையே இல்லை; கிரைண்டரில் கல் உடைஞ்சு போயிருந்துச்சு; மிக்ஸியில் பிளேடு இல்லை. அதை வேண்டாம்னு சொன்னோம். அதுக்கு, ‘இதுதான் கவர்மென்ட்ல இருந்து வந்தது. இதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாது. வாங்குனா வாங்குங்க... இல்லைனா போங்க’னு சொல்லிட்டாங்க. நல்ல பொருளாக வாங்குனவங்களுக்கும், ரெண்டு மூணு வாரங்கள்கூட தாக்குப்பிடிக்கல. எல்லாம் வீணாப்போச்சு. தேவையில்லாம வீட்டை அடைச்சுக்கிட்டு இருக்குனுனு பலபேர் அதைக் காயிலாங்கடையில 200 ரூபாய்க்குப் போட்டுட்டாங்க. இப்படி சரியில்லாத இலவச மிக்ஸி, கிரைண்டர் சேர்ந்துட்டதால, இப்போ அவங்களும் வாங்குறது இல்ல” என்று சொல்லிவிட்டு, வீட்டில் இருந்த தமிழக அரசின் விலையில்லா பொருட்களைக் கொண்டுவந்து வீதியில் போட்டார் சரோஜா.
“மாவுக்கல்லுல மாவாட்ட முடியாது!”
“இந்த கிரைண்டர்ல மூணு தடவை மாவாட்டுனேன். ஓடிக்கிட்டே இருந்த கிரைண்டர் திடீர்னு நின்னுபோச்சு. அதை எடுத்துக்கிட்டுப் போய் கடைக்காரங்கக்கிட்ட கொடுத்தேன். அதை சரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சரி விலைக்கு எடுத்துக்கங்கன்னு சொன்னா, 200 ரூபாய்க்குதான் போகும்னு சொல்லிட்டார். ‘இது மாவுக்கல். இதில் மாவாட்ட முடியாது’னு சொல்லிட்டாங்க.
வாங்குன மறுநாள் ஃபேனை போட்டேன். பட்டுனு சத்தம் வந்துச்சி. அப்படியே உடைஞ்சிபோய் தொங்குச்சி. பக்கத்து வீட்டுப் பொண்ணு மிக்ஸியில சட்னி அரைச்சுக்கிட்டு இருந்துச்சு. திடீர்னு பிளேடு உடைஞ்சி ஜார்ல இருந்து தண்ணி ஒழுகி புகையா வந்துச்சு. மிக்ஸி வெடிக்கப் போகுதுன்னு பயந்து, எல்லோரும் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தாங்க. நாங்க போய்தான் அணைச்சோம். தரமான பொருளாகத் தரக்கூடாதா? இப்படி ஓட்டை உடைசலாகக் கொடுத்துட்டு, ‘நாங்க கொடுத்த மிக்ஸி, கிரைண்டரை மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துறாங்க’னு டி.வி-யில சொல்கிறாங்க. இதைச் சொல்லி ஓட்டுக்கேட்டு வரட்டும்... இந்த வீணாப்போன பொருட்களை அவங்க தலையில தூக்கி வெக்கிறோம்” என்றார் கவிதா.
இளைஞர் ஒருவர், இணையத்தில் வந்த விளம்பரம் ஒன்றை நம்மிடம் காண்பித்தார். அதில், “இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை ஆன்லைனில் விற்கலாம். மூன்று பொருட்கள் மூன்றாயிரம் ரூபாய்” என்று போடப்பட்டு இருந்தது.
திருச்சியில் பல இடங்களில் மூன்று பொருட்கள் 2,500 ரூபாய் என்று விற்பனை நடக்குது. புதுகார்டுக்கு, விடுபட்டவங்களுக்கு என்று சொல்லி இலவசப் பொருட்களை எடுத்துக்கொண்டு போய், ஆளும் கட்சிக்காரர்கள் ஆன்லைனில் பணம் பார்ப்பதாகவும் மக்கள் சொல்கிறார்கள்.
அலாவுதீன் விளக்குப் புகை போல...
மதுரை டி.ஆர்.ஓ காலனியில் வசிக்கும் பாண்டி என்பவர், அவருடைய வீட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றார். விலையில்லா மிக்ஸியை ஆன் செய்தார். மிக்ஸியில் இருந்து வினோதமான சத்தத்துடன் புகை கிளம்பியது. அலாவுதீன் விளக்கிலிருந்து வரும் புகைபோல வீடெங்கும் பரவியது. பயந்துபோய் நாம் ஆஃப் பண்ணச் சொன்னோம்.
‘‘போன மாசம்தான் கொடுத்தாங்க. இதைத் தொடவே பயமாக இருக்கு. எங்க ஏரியா கட்சிக்காரங்கக்கிட்ட சொன்னேன். அடுத்து வர்றப்போ மாத்திக்கலாம்னு சொன்னாங்க. ஃபேனை போட்ட உடனே மூடி தனியாக, றெக்கை தனியாகப் பறக்க ஆரம்பிச்சிடுச்சு. கிரைண்டரில் கல்லு தனியா கழன்று வருது. எல்லாமே அட்டையில செஞ்ச மாதிரி இருக்கு. இதுக்கான சர்வீஸ் சென்டருக்கு எடுத்துட்டுப் போனேன். ‘எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. அடுத்த மாசம் வாங்க’னு சொல்லிட்டாங்க” என்று நொந்துபோய் பேசினார் பாண்டி. 
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி அருகே உள்ள சென்நெல் புதுக்குளம் மற்றும் அம்பேத்கார் காலனி பகுதியில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டது. தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. பொருட்களை வாங்கியவர்கள் வீட்டுக்குப் போய் அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்த போது அதிர்ந்துபோய்விட்டனர்.
மிக்ஸிகளில் பிளேடு உள்ளிட்ட உதிரி பாகங்கள் கழன்றும், கிரைண்டரில் அரவைக் கல், மின் விசிறியில் இறக்கைகளும் உடைந்து காணப்பட்டன. மேலும் சிலர் மிக்ஸி, கிரைண்டரை இயக்கி பார்த்தபோது அவை செயல்படாமல் நின்றுவிட்டன. உடனடியாக அதிகாரிகள் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், ஓட்டை உடைசல் பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சமரசம் பேசிய அதிகாரிகள், பழுதான பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் கொடுக்க ஒரு மாதம் ஆகும் என்று சொல்லிவிட்டனர்.
“கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!”
கொளத்தூர் விநாயகபுரம் மாதாகனி, “கடந்த மாதம் எங்கள் பகுதியில் இலவச  மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றைக் கொடுத்தார்கள். பொருட்களை வழங்குவதற்கு முன்பு டோக்கன் கொடுத்தனர். கால்கடுக்கக் காத்திருந்து டோக்கன் வாங்கினேன். இலவசப் பொருட்களை வழங்குவதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். காலையில் க்யூவில் நின்றவர்களுக்கு மாலையில்தான் பொருட்கள் வழங்கப்பட்டன. மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறியை சந்தோஷத்துடன் வீட்டுக்குக்கொண்டு வந்தேன். முதலில் மின்விசிறியை ஆன் செய்தேன். ஒருவித சப்தத்துடன் அது ஓடியது. அடுத்து கிரைண்டரை சோதனை செய்தபோது அது இயங்கவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. பொருட்கள் வாங்கிய 5-வது நாளில் திடீரென இரவு டமார் என்ற சப்தம் கேட்டது.
தூங்கிக்கொண்டு இருந்த நான் விழித்துப்பார்த்தபோது மின்விசிறியிலிருந்து புகை வந்தது. பயத்தில் இலவசப் பொருட்களை அப்படியே ஓரம் கட்டிவிட்டேன். அரசு கொடுத்த இலவசப் பொருட்களைப் பொறுத்தவரை எங்கள் குடும்பத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாகிவிட்டது” என்றார்.
வடசென்னை எம்.கே.பி. நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர் கூறுகையில், “கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 37-வது வார்டில் இலவச கிரைண்டர்,  மிக்ஸி, மின்விசிறி ஆகியவற்றை கொடுத்தார்கள். 10 நாட்களாகக் கொடுக்கப்பட்டன. எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் காத்திருந்து பொருட்களை வாங்கினோம். வாங்கிப் பார்த்தால் பலரது கிரைண்டரில் அரைக்கும் இரண்டு கற்களுக்குப் பதில் ஒரு கல் மட்டுமே இருந்தது. அதை எப்படி பயன்படுத்த முடியும்? இன்னும் சிலருக்கு  மிக்ஸியும் மின்விசிறியும் ஓடவே இல்லை.
இப்படி எங்கள் பகுதியில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பிரச்னை உள்ளது. இதுகுறித்து நாங்கள் அதிகாரிகளிடம் முறையிட்டவுடன் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லும்படி சொன்னார்கள். உடனே அருகில் உள்ள அரசு சர்வீஸ் சென்டருக்குப் பயன்படாத அந்தப் பொருட்களைக்கொண்டு சென்றோம். எங்களின் விவரத்தை வாங்கிக்கொண்டு பொருட்களை சர்வீஸ் செய்து தருவதாக அவர்கள் சொன்னார்கள். ஆனால் ,இதுவரை எங்கள் கைக்கு பொருட்கள் வந்து சேரவில்லை. பழுதான பொருட்களை இலவசமாக கொடுப்பதால் யாருக்கு என்ன பயன்” என்றனர் ஆவேசத்துடன்.
சிண்டிகேட் கொள்ளை!
‘இலவச மிக்ஸி, கிரைண்டர்கள் தரமானவையாக இல்லை. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது’ என எதிர்க் கட்சிகள் ஒரு பக்கம் புகார் கிளப்பத் தொடங்கி உள்ளன. உண்மையில் இலவச கிரைண்டர், மிக்ஸி தயாரிப்பில் என்னதான் பிரச்னை. கோவை கிரைண்டர் உற்பத்தியாளர்களிடம் விசாரித்தோம்.
“தமிழகம் முழுவதும் 1.85 கோடி கிரைண்டர்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. ஒரு கிரைண்டர் விலை 2,142 ரூபாய். மிக்ஸி, கிரைண்டருக்குக் குறைந்த எண்ணிக்கையிலான உதிரிபாகங்கள் போதுங்கறதால, 2,142 ரூபாய்ல கொஞ்சம் லாபம் வெச்சா தரமான கிரைண்டரை தயாரிக்கலாம். ஆனா, இதுல அப்படி நடக்கறதில்லை. சிண்டிகேட் போட்டு பெருமளவு கொள்ளை நடக்குறதால இதில் தரமான பொருளைத் தயாரிக்கறது சாத்தியமில்லை.
ஒரு கும்பல் சிண்டிகேட் அமைத்து, அதில் கிரைண்டர் ஆர்டர் வாங்குன தயாரிப்பு நிறுவனங்களையும் சேர்த்து பெருமளவில் கொள்ளையடிக்கிறாங்க. ரூ.2,142க்கு கொடுக்கப்படுற கிரைண்டர்ல 1,000 ரூபாய் வரைக்கும் இந்த சிண்டிகேட் கும்பலுக்குப் போகுது. தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழக்கமா கிடைக்குற லாபம்தான்.
ஆனா, இந்த கும்பலுக்குப் பெரிய அளவு பணம் போகுது. இந்த 4 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்துல கிட்டத்தட்ட 1,500 கோடி ரூபாய் அப்படியே இந்தக் கும்பலுக்குப் போயிடுது. 1,200 ரூபாயில்தான் கிரைண்டர் தயாரிக்கப்படுது. அது எப்படி சரியா ஓடும்? அதனாலதான் இத்தனை பிரச்னையும்.
ஆனால், கிரைண்டர் தயாரிப்பாளர்களுக்கு இதுல பெரிய லாபமில்லை. கடந்த ஜூன் மாசத்துல இருந்து அரசுக்குத் தரப்பட்ட கிரைண்டர்களுக்கு இதுவரை பணம் வரவே இல்லை. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் நிலுவையில இருக்கு. இது தவிர, தயார் நிலையில் இருக்குற 5 லட்சம் கிரைண்டரை எடுக்காம இருக்காங்க. இதுல நடக்குற மிகப் பெரிய சிண்டிகேட் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி இருந்தா, தரமான கிரைண்டர் கிடைச்சிருக்கும்” என்கிறார்கள் பெயர் வெளியிட விரும்பாத கிரைண்டர் தயாரிப்பாளர்கள் சிலர்.
அடுத்த இதழில்...

தண்ணீரில் மிதக்கும் சென்னை நகரம்: இடி-மின்னலுடன் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

logo




சென்னை,

சென்னையில் இடி-மின்னலுடன் விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மிதக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

விடிய, விடிய மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 8, 9-ந் தேதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்தது. காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதன் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இடி, மின்னலுடன் அடைமழை கொட்டித்தீர்த்தது.

இதனால் பெரும்பாலான சாலைகளிலும் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இரவில் மழை பெய்தாலும், நேற்று பகலிலும் அந்த மழை நீர் வடிவதற்கு வழியின்றி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

வீடுகளுக்குள் வெள்ளம்

எழும்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், வேப்பேரி, கோயம்பேடு, சேத்துப்பட்டு, வியாசர்பாடி, கிண்டி, சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை, தியாகராயநகர், கோடம்பாக்கம், அயனாவரம், பெரம்பூர், கொளத்தூர், பாண்டி பஜார், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, பென்சில் பேக்டரி, வால்டாக்ஸ் சாலை உள்பட பல்வேறு இடங்களிலும் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

புழல் வள்ளுவர் நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அண்ணா நகர் ‘கோல்டன் ஜூப்ளி’ அடுக்குமாடி குடியிருப்பில் தரைதள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

சுரங்கப்பாதைகள் மூழ்கின

ஓட்டேரி பிரிக்ளின் சாலை, ஜமாலியா, வியாசர்பாடி பிரதான சாலை உள்பட பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கியிருந்தது. பெரம்பூர் சுரங்கப்பாதை, ஜீவா ரெயில்வே சுரங்கப்பாதை, பேசின்பிரிட்ஜ், சேத்துப்பட்டு சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை உள்ளிட்ட பல்வேறு சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள குடிசை பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

சாலை மறியல்

புரசைவாக்கம் திடீர் நகர், அம்பத்தூர் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதி வளாகத்திலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் விடுதி வளாகத்தின் உள்ளே செல்ல மாணவர்கள் திண்டாடினார்கள்.

திருமங்கலம் பாடிகுப்பம் சாலையில் உள்ள அன்னை அடுக்ககம், ‘பைவ் ஸ்டார் குடியிருப்பு’ மற்றும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தரை தளத்தில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து உள்ளே புகுந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் பாடிகுப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மின்வினியோகம் பாதிப்பு

தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் உறிஞ்சும் எந்திரங்கள், மின் மோட்டார்கள் மூலமாக போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

வெள்ளத்தில் மிதக்கும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சார வினியோகமும் துண்டிக்கப்பட்டது. இது பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது.

அமைச்சர்கள்-மேயர் ஆய்வு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, எஸ்.கோகுலஇந்திரா, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்ட தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலை, வடக்கு போக் சாலை, கோபாலபுரம், சாந்தோம் பிரதான சாலை, எழும்பூர் கெங்குரெட்டி சுரங்கப்பாதை, புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர்.

அப்பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். சமூகநல கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அமைச்சர்கள் மற்றும் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் உணவு பொட்டலங்களை வழங்கினர்.

ஆட்டோக்களில் அதிக கட்டணம்

மழை நீர் தேங்கியதால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆட்டோக்களில் வழக்கத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு ஆட்டோ டிரைவர்கள் செல்ல மறுத்தனர். கால்-டாக்சிகளுக்கும் நேற்று கடுமையான கிராக்கி நிலவியது. பெரும்பாலானவர்கள் நேற்று வீட்டை விட்டு வெளியே வராததால் பல அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

தண்ணீர் தேங்கியதால் ஜீவா மேம்பாலத்தில் ஒரு புறத்தில் இருந்து இன்னொரு புறம் மோட்டார் சைக்கிள்களை மூன்று சக்கர சைக்கிளில் ஏற்றிச்செல்ல ரூ.50 பணம் வசூலிக்கப்பட்டது.

ஸ்தம்பித்த சென்னை

வடசென்னை பகுதியை சேர்ந்தவர்கள் நகரின் பல பகுதிகளுக்கு செல்லும் வழியெங்கும் மழை வெள்ளம், சாலைகள் போக்குவரத்துக்கு தடை என ஒவ்வொன்றையும் கடந்துசெல்வதில் பெரிதும் சிரமப்பட்டனர். விடிய, விடிய பெய்த கனமழை சென்னையை மிதக்கவிட்டு, ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.

NEWS TODAY 22.04.2024