Wednesday, September 30, 2015

MCI blacklists 129 doctors, suspension reason not given..TOI

The Medical Council of India has, on its website, put up the names of 129 doctors as being currently blacklisted but without any details of why their licences were suspended. A publicly available list giving names and details of doctors against whom action has been taken is a long pending demand of public health activists.

The 'List of Presently Blacklisted Doctors' is given below the Indian Medical Register list on the MCI website. However, the list seems arbitrary as the website gives no explanation of how the list was arrived at or how or why names might be taken off the list.

The president of the council, Dr Jayshree Mehta, did not respond to queries regarding how the list was compiled or why the list appears to be skewed with doctors from a few states dominating the blacklist. Doctors registered with the medical councils of Maharashtra (43) and Rajasthan (16) comprise 45% of the cases on the black list.




A doctor from Madhya Pradesh was shown to have been suspended for four years from October 2011 till October 2015, but his name has suddenly been removed. No explanation is given for why his name has been removed before the suspension ends.

"You cannot check the reason or the suspension procedure as the minutes of the ethics committee meetings, in which disciplinary action against doctors is decided, has not been put up. Just as MCI maintains the Indian Medical Register with data of doctors registered in all the state medical councils, they ought to maintain a consolidated blacklist of doctors against whom action has been taken by various state medical councils. In the current form, the list is of little use to the public," said Dr M C Gupta, a doctor who is also a lawyer. In the US, for instance, it is easy to find out which doctor has been punished and how many times, pointed out Dr Gupta, adding that a similar list ought to be available to the public here too.

Almost 40% of the cases, 51 out of 129, are marked as "not disposed off" though the date of suspension of the licence is mentioned. More than half of these cases are from 2012, when the current council was not in place. In 2012, MCI was being run by a board of governors nominated by the government. The council was reconstituted in October 2013.

Dr Om Prakash Tiwari from Uttar Pradesh, registered in 1978, has been suspended the longest, for seven years from September 2013 till September 2020. Thirty two doctors have been suspended for five years. Since the reconstituted MCI took over, four doctors have been suspended for five years, and 14 for just one year. In 2015, many doctors were suspended for one month to six months. The system of deciding the quantum of penalty or period of suspension seems arbitrary with no publicly available rules or criteria about how this is decided.

The MCI president also did not respond to questions about whether the MCI had any way of checking if the suspended doctors were continuing their practice or not.

OCI cardholders using Indian passports a concern - The Hindu

Alarmed over the increasing instances of OCI (Overseas Citizen of India) cardholders using Indian passports, despite possessing a passport obtained from other foreign countries, the Ministry of External Affairs (MEA) has lodged complaints with the State police over the issue.

“Despite having passports from other countries, where they have obtained dual citizenship, some were still found to be using Indian passports. We have made complaints to Chennai Police Commissioner,” Regional Passport Officer K. Balamurugan said.

An Indian passport is valid only till the time the passport holder is a citizen of the country and OCIs are to surrender the passport to MEA authorities. “In some cases, they are ignorant of the rule that they cannot use Indian passport after getting dual citizenship from other countries,” he said.

A majority of such cases involved persons from the Union territory of Puducherry (including Karaikal), who obtain dual citizenship from France. “Even after going there, some of them, out of ignorance, come to India using Indian passports,” he said.

Those intending to submit the passports can approach any of the three Passport Seva Kendras (PSKs) and surrender their passports.

According to the Overseas Indian Affairs, a total of 16,91,058 persons have been registered as OCIs as on January 19 this year.

The Overseas Citizenship of India (OCI) Scheme was launched in August 2005 by amending the Citizenship Act, 1955, and become operational in January 2006.

The scheme, presently operated by Home Ministry, provides for registration as OCIs of all persons of Indian origin (PIOs), who were Indian citizens from January 26, 1950 or were eligible to become Indian citizens on that date and who are citizens of other countries, except Pakistan and Bangladesh.

கைகொடுக்கும் "கட்டுச்சோறு'


dinamani


By ஜீவி. சொர்க்கநாதன்

First Published : 25 September 2015 01:07 AM IST


அந்தத் தொலைதூர விரைவுப் பேருந்து, பயண வழி உணவகம் ஒன்றில் மதிய உணவுக்காக நின்றது. பேருந்திலிருந்து இறங்கிய சில பயணிகள் பசியாற உணவகத்துக்குள் புகுந்த சிறிது நேரத்தில் கூச்சல். உணவக உரிமையாளருடன் சிலர் கடும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
பிரச்னை வழக்கமானதுதான், உண்ணத் தகுதியற்ற அந்த உணவுக்கு இரு மடங்கு விலையாம். அதிகாரிகளிடம் புகார் செய்வோம் என கொதித்தனர். அதை லட்சியம் செய்யாத உணவக உரிமையாளர், காசைக் கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் புகார் செய் என்றார்.
கட்டாயத் தேவை, மாற்று வழியின்மை என்ற பயணிகளின் பலவீனமான நிலையே பயண வழி உணவகங்களின் பலமாக மாறிவிட்டிருக்கிறது.
இன்று பெரும்பாலான பிரயாணங்கள் இதுபோன்ற பயண வழி உணவுகளை நம்பியே தொடங்கி சிரமத்தில் முடிகின்றன. அதேவேளையில், அந்த உணவுகளால் அதிக விலையில், வயிற்று உபாதை, மன உளைச்சல் நிச்சயம்.
ஆனால், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரயாணங்கள் சுவையான உணவுடன் கூடிய ஒரு சுகானுபவமாக இருந்தது. பிரயாணம் என்றாலே உற்சாகம்தான். காரணம் - கட்டுச்சோறு.
இந்தக் கட்டுச்சோறு இடையில் வந்ததல்ல. பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த முறை அது. சங்க காலத்திலேயே கட்டுச்சோறு பழக்கம் இருந்திருக்க வேண்டும். சிந்தாமணி நிகண்டில் கூட "தோட்கோப்பு' எனும் சொல் கட்டுச்சோறு என்ற அர்த்தத்தில் கையாளப்பட்டுள்ளது.
கட்டமுது, கட்டுச்சாதம், வழிநடை உணவு, வழிச்சோறு, பொதிச்சோறு போன்ற பெயர்களும் இதற்குண்டு. ஆரம்பத்தில் காட்டில் வேட்டையாடுவோர், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச்செல்வோர் பசியாற கட்டுச்சோறு கொண்டுச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். நாளடைவில் பிரயாணங்களில் இந்த உணவு பிரதான இடம் பிடித்தது.
நெல்சோறு புழக்கத்துக்கு வரும் வரை கேழ்வரகு, தினை, கம்பு போன்ற சிறுதானிய உணவுகளை பக்குவப்படுத்தி ஈரத் துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி, பிரயாணங்களின்போது தோளில் சுமந்து செல்லப்பட்டது.
நெல்சோறு தாராளப் புழக்கத்துக்கு வந்தபிறகு, கட்டுச்சோறு உணவுகளில் முதலிடம் புளிச்சோறுக்குத்தான். இடிப்பு மசாலா மற்றும் பெருங்காயம் கலந்த புளிக் கரைசலைக் காய்ச்சி சுடுச் சோற்றில் ஊற்றிக் கிளறி, நல்லெண்ணெய்யில் தாளிக்கும் இந்த உணவு, குறைந்த பட்சம் இரு நாளுக்குக் கெடாது.
கட்டுச்சோற்றுக்கு தொட்டுக்கொள்ள காய்கறி பிரட்டல், எள்ளுப்பொடி, துவையல் என ஏதாவதொன்று இருக்கும்.
காடு, கழனி, ஆறு, மலை கடந்து செல்லும் பிரயாணமாக இருந்தால், கட்டுச்சோற்றை தீய ஆவிகள் தீண்டாமல் இருக்க, வாசனையை உள்ளிழுத்துக் கொள்ளும் அடுப்புக் கரித்துண்டையும் அதிலிட்டு கொண்டு செல்வதுண்டு. நடை களைப்பில், நீர் நிலையோரம் மரம் தரும் குளிர் நிழலில் அமர்ந்து உண்ணும் கட்டுச்சோறுக்கு அமுதமும் இணையில்லைதான்.
அதன்பிறகு துணி மூட்டையிலிருந்து பாத்திரங்களுக்கு கட்டுச்சோறு இடம் பெயர்ந்தது. குடும்பத்தினரோடு கோயில் திருவிழா, வெளியூர் பிரயாணம் என்றால் சிறிய அண்டா அல்லது குத்துசட்டியிலிட்டு கட்டுச்சோறு கொண்டு செல்லும் பழக்கம் வழக்கத்துக்கு வந்தது.
கூட்டத்தில் கட்டுச்சோற்றை அவிழ்க்காதே என்று சிலர் சிலேடை மொழியில் சொல்லக் கேட்கலாம். ஆனால், அன்றைய கட்டுச்சோறு கமகமக்கும். ஏனெனில், அப்போதெல்லாம் வீட்டுச் சமையல்கூட கமகமதான்.
ஆனால், இன்று பெரும்பாலான வீடுகளில் சமையல் சுவையை நிர்ணயிப்பது மசாலா நிறுவனங்களாக இருப்பதால், கைப்பக்குவம் என்ற சொல், தானாகவே அர்த்தம் இழக்கத் துவங்கியிருக்கிறது.
பிரயாணத்தின் போது, ஆரோக்கியமான உணவுச் செüகரியங்கள் இராது என்பதால் மட்டுமல்ல, செலவுச் சிக்கனம் கருதியும் கட்டுச்சோறு முறை கடைபிடித்து வந்தனர்.
எனினும், மாட்டு வண்டி, பொட்டி வண்டி, குதிரை வண்டிகளிலிருந்து பேருந்து, ரயில் போன்ற இயந்திர வாகனங்களுக்கு பிரயாணங்கள் இன்று மாறிவிட்டாலும், அதே உணவு அசெüகரியங்கள் தொடர்கின்றன.
பிரயாண வழியில், நியாயமான விலைக்கு ஆரோக்கியமான - தரமான உணவு சாத்தியமில்லை; உடலுக்கு ஊறு செய்யும் என்பது தெரிந்தும், அதுபோன்ற உணவுகளை ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தை, பலரும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
கட்டுச்சோறு உணவைப் பிரயாணங்களில் கொண்டு செல்வதில் பலரிடம் ஒருவித தயக்கம் இருக்கிறது. சிலர் அதனைக் கெüரவக் குறைவாகவும் கருதுகின்றனர். மேலும், ஓரிரு பொழுது உணவுதானே, சமாளித்துக் கொள்ளலாம் என்ற அலட்சிய எண்ணமும் ஒரு காரணம்.
கட்டுச்சோறு என்பது பொட்டலமாகக் கட்டப்படும் புளிச்சோறு, எலுமிச்சைச் சோறு, தயிர்ச்சோறு மட்டுமே ஆகாது. வீட்டில் அக்கறையுடன் தயாரித்து கட்டிக்கொண்டு அல்லது எடுத்துக் கொண்டு செல்லும் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, கொறிக்கும் உணவுகள் உள்ளிட்ட எல்லா உணவுகளுமே கட்டுச்சோறு வகையறாதான். இதுபோன்ற உணவுகளை பிரயாண பொழுதுகளுக்கேற்றபடி தயாரித்துக் கொண்டு செல்லலாம்.
குழந்தைகளுடன் பயணிப்போருக்கு இது உகந்ததாக இருக்கும். பிரயாணப் பொழுதில் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவோருக்கு கட்டுச்சோறுதான் சாலச்சிறந்தது.

மோடியால் முடியுமா?

Dinamani

By ஆசிரியர்

First Published : 30 September 2015 01:21 AM IST


அமெரிக்கப் பயணம் முடிந்து நாடு திரும்பும் முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி மீதான விமர்சனங்கள் தொடங்கிவிட்டன. அமெரிக்காவில் அவர் எதையெல்லாம் பேசியிருக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் பட்டியல் போடத் தொடங்கிவிட்டன. மோடியை பாஜக தலைவராகப் பார்ப்பதிலும், இந்தியாவின் பிரதமராகப் பார்ப்பதிலும் இருக்கும் சிறிய இடைவெளி மறைகின்றபோது இந்த விமர்சனங்கள் வலுவிழந்து போய்விடுகின்றன.
1982-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை இந்திய அரசியல் தலைவர்கள் எவருமே செய்திராத வகையில் அமெரிக்க அதிபர் முதல் அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் வரை அனைவரையும் பிரதமர் மோடியால் சந்தித்து உரையாட முடிந்திருக்கிறது என்பதே ஒரு நல்ல அணுகுமுறையின் அடையாளம்தான். முகநூல் (ஃபேஸ்புக்) தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பர்க், அதிபர் ஒபாமா ஆகியோருடன் மேடையில் அமர்ந்து, 18 ஆயிரம் இந்தியர்களுடன் அவர்களது கேள்விகளுக்குப் பதில் அளித்ததும் சிறப்புக்கு உரியதுதான்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் 5 லட்சம் கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை அளிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா அளித்த உறுதிமொழியோ, அல்லது 500 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி அளிக்க முன்வந்துள்ள கூகுள் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் பங்களிப்போ பெரும் வெற்றி என்று கூறிவிட முடியாதுதான். ஆனால், இவை நல்லதொரு தொடக்கம் என்பதை அரசியல், பொருளாதாரம் அறிந்த யாரும் மறுக்க முடியாது.
இந்தப் பயணத்தின் மூலம் எத்தனை கோடி ரூபாய்க்கான முதலீட்டை பிரதமர் மோடி கொண்டு வந்தார் என்ற கேள்வியைவிட, இந்தியாவில் முதலீட்டுக்கும், அறிவுசார்ந்த தொழில் வளர்ச்சிக்கும் தாராளமாக இடம் இருக்கிறது, அதற்கேற்ப இந்திய அரசு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளது என்கிற நம்பகத்தன்மையை உருவாக்கியிருப்பதுதான் இந்தப் பயணத்தின் வெற்றியே.
முகநூல் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளதைப்போல, இணையத் தொடர்பு கொள்ளும் 10 பேரில் ஒருவர் வறுமைக் கோட்டிலிருந்து மீளுகிறார். ஒருவர் வேலை வாய்ப்பை உருவாக்குகிறார். அவர் குறிப்பிடுவதைப் போன்ற அப்படியானதொரு சூழல் இந்தியாவில் அமைய வேண்டும் என்றால், இந்தியா முழுவதும் இணைய வசதி பெற வேண்டும். இயலும் கட்டணத்தில், அனைத்துக் கிராமங்களிலும் அனைவருக்கும் இத்தகைய இணையத் தொடர்பு கிடைக்கச் செய்வதே இன்றைய தேவை. அதை நோக்கிய பயணத்தின் தொடக்கமாகவே பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தைப் பார்க்க வேண்டும்.
முகநூல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கேள்வி- பதில் நிகழ்வில் பல்வேறு கேள்விகளும் இந்தியாவின் இன்றைய தகவல்தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பானவையே. "இந்தியா முழுவதிலும் இந்தியாவை இணையப் பயன்பாட்டில் ஈடுபடுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? இன்று எத்தகைய ஏற்புடைய சூழல் உள்ளது என்பதைச் சொல்ல முடியுமா?' இப்படியான கேள்விகளே அதிகம். இது, அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பல்வேறு வேலைவாய்ப்புகளால் இடம்பெயர்ந்துள்ளவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப ஆர்வமாக உள்ளனர் என்பதையே உணர்த்துகிறது.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா மற்றும் பிற வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த "அறிவுப்புலம்' கடந்த காலம் வரை இழப்பாகப் பார்க்கப்பட்டாலும், இன்றைய தருணத்தில் அவை ஒரு முதலீடு என்றும், அதன் லாபம் இந்தியாவை நோக்கி வருகின்றது என்றும் பிரதமர் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். இந்தியாவுக்குத் திரும்பி வந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய தொழில்களைத் தொடங்குவோர் எண்ணிக்கையும், வெளிநாடுகளில் இருந்து கொண்டே இந்தியாவின் இணையப் புரட்சிக்கு உதவுவோரும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு உரியது என்று பிரதமர் மோடி சொல்வது வெறும் வார்த்தைகள் அல்ல.
இந்தப் பயணத்தின் போது பிரதமர் மோடி, தேவையில்லாமல் முந்தைய அரசின் செயல்பாடுகள் பற்றியும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்தை ஊழல் குடும்பம் என்று மறைமுகமாகப் பேசியதையும் தவிர்த்திருக்கலாம். "என் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதா?" என்பது பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் கேட்க வேண்டிய கேள்வி அல்லதான். உலகின் எந்த மூலைக்குப் போனாலும் இந்தியர்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படுவது ஊழல் பற்றிய விவாதம் எனும்போது, பிரதமர் அதைத் தவிர்ப்பது என்பதும் இயலாததுதானே!
பிரதமர் மோடி இந்த அளவுக்கு இறங்கிப்போய் விமர்சனம் செய்வதற்குக் காரணம், மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் தெரிவித்து வரும் கடும் விமர்சனங்களும் கேலிகளும்தான். அதுமட்டுமல்ல, குஜராத் கலவரத்துடன் மோடியைத் தொடர்புபடுத்தி "மரண வியாபாரி' என்பது போன்ற விமர்சனங்களின் மூலம் சர்வதேச அளவில் அவரது பெயரைக் களங்கப்படுத்தி இருக்கும் நிலையில், தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
18-ஆவது நூற்றாண்டில் உலகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு விகிதத்தில் 22.6% இந்தியாவின் பங்காக இருந்தது. அந்த நிலையை இந்தியா மீண்டும் எட்டிப் பிடிக்க வெறும் கோஷங்கள் மட்டும் போதாது. 35 வயதுக்குக் கீழே உள்ள இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 80 கோடி. இவர்களுக்கு முறையான தொழில்முறைத் தேர்ச்சியும் வேலைவாய்ப்பும் அளித்தாக வேண்டும். அமெரிக்காவில் பிரதமர் மோடி பேசியது எல்லாமே சரி. அதை நடைமுறைப்படுத்துவதில்தான் அவரது அமெரிக்க விஜயத்தின் வெற்றி அடங்கி இருக்கிறது.

மத்திய அரசு வழங்கிய 3 மாத அவகாசம் முடிகிறது கருப்பு பணம் குவிப்பு பற்றிய தகவல்களை அறிவிக்க இன்று கடைசி நாள் அறிவிக்காதவர்களுக்கு சிறைத்தண்டனை

logo

புதுடெல்லி,


கருப்பு பணம் பற்றிய தகவல்களை தாமாக முன்வந்து அறிவிப்பதற்கு இன்றே கடைசி நாள். மத்திய அரசு வழங்கிய 3 மாத அவகாசம் முடிவுக்கு வருகிறது. இப்படி அறிவிக்காதவர்கள்மீது சிறைத்தண்டனையுடன் கூடிய நடவடிக்கைகள் பாயும்.கருப்பு பண ஒழிப்பு சட்டம்

கருப்பு பணத்தை அடியோடு ஒழித்துக்கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் கருப்பு பணம், சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பாக ‘வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம், சொத்துகள் (புதிய வரி விதிப்பு) சட்டம்–2015’ என்ற பெயரில் ஒரு சட்டமும் இயற்றப்பட்டு, கடந்த ஜூலை 1–ந் தேதி முதல் அது அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின்படி, வெளிநாட்டு வருமானம், சொத்துகள் குறித்து தகவல் தெரிவிக்காமல் வரி ஏய்ப்பு செய்ய முயற்சித்தால், 3 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

வெளிநாட்டு சொத்துகள், வங்கி கணக்குகள் பற்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறினால், அதற்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். கணக்கு தாக்கல் செய்து தகவல்களை மறைத்திருந்தாலும் அல்லது சரியான கணக்கினை கூறாது இருந்தாலும் இதே தண்டனை உண்டு.3 மாதம் அவகாசம்

இந்த சட்டத்தின்படி, சிறைத்தண்டனையில் இருந்து தப்பிக்க ஏற்ற வகையில், வெளிநாட்டு வருமானம், சொத்துகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் ஒரே தடவை தாமாக முன்வந்து அறிவிக்க 3 மாத கால அவகாசத்தினை மத்திய அரசு வழங்கி அறிவிப்பு வெளியிட்டது. அது ஜூலை 1–ந் தேதி அமலுக்கு வந்தது. அந்த அறிவிப்பின்படி–

* செப்டம்பர் 30–ந் தேதிக்குள் தாமாக முன்வந்து வெளிநாட்டு சொத்துகள், வருமானம் பற்றிய தகவல்களை அளிப்பவர்களுக்கு, 60 சதவீத வரியும், அபராதமும் விதிக்கப்படும். சிறைத்தண்டனை கிடையாது. அவர்கள் வரியையும், அபராதத்தையும் செலுத்துவதற்கு டிசம்பர் 31–ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும்.

* செப்டம்பர் 30–ந் தேதிக்குள் வெளிநாட்டு சொத்துகள், வருமானம் பற்றிய தகவல்களை தெரிவிக்காமல் விட்டு விட்டால், அவற்றின் மதிப்பில் 120 சதவீத வரி, அபராதம் விதிக்கப்படும்.

இந்த 3 மாத கால அவகாசம் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முடிவுக்கு வருகிறது.நீட்டிப்பு இல்லை

இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு தரப்பில் உறுதிபட அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏராளமானோர் தாமாக முன் வந்து இது தொடர்பான படிவங்களை வருமான வரித்துறையிடம் நிரப்பி அளித்துள்ளனர். ஆன்லைன் வழியாகவும் அவற்றை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரையில் இப்படி பலரும் ஆன்லைன் வழியாக தகவல்கள் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.நடவடிக்கை பாயும்

இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் அனிதா கபூர் கூறுகையில், ‘‘கருப்பு பணம் வைத்திருப்பவர்கள், அதுகுறித்த தகவல்களை அளிக்காமல் விட்டு விட்டால், அதற்கு அவர்கள்தான் பொறுப்பு. கருப்பு பணம் குறித்த விவரங்களைத் தாமாக முன் வந்து அறிவிக்க அளிக்கப்பட்டுள்ள அவகாசத்தை பயன்படுத்தாவிட்டால், அவர்கள் வேண்டுமென்றே வெளிநாட்டு சொத்துகள் குறித்த தகவல்களை மறைக்கிறார்கள் என்றே கருதப்படும். இப்படிப்பட்டவர்கள் சட்டத்தை தவிர்க்கிறபோது, அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டியது வரும்’’ என குறிப்பிட்டார்.

எனவே தாமாக முன் வந்து கருப்பு பணம் பற்றிய தகவல்களை இன்று நள்ளிரவுக்குள் வருமான வரித்துறையிடம் அளிக்காதவர்கள் மீது சிறைத்தண்டனையுடன் கூடிய நடவடிக்கைகள் பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் கல்லூரிகளுக்கு "ரேங்கிங்' நடைமுறை அறிமுகம்

Dinamani


By நமது நிருபர், சென்னை,

First Published : 30 September 2015 02:53 AM IST


நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்தும் (ரேங்கிங்) புதிய நடைமுறையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
இந்த நடைமுறை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் www.mhrd.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் ஆண்டுக்கு ஆண்டு வெளியிடப்படும். இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்ய மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்த துணைக் குழு பரிந்துரையின் அடிப்படையில், இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் ஆண்டில், துணைக் குழு ஒன்று இந்த தரவரிசைப்படுத்தும் நடைமுறைகளை மேற்கொண்டு பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட உள்ளது. அதன் பிறகு, இதற்கென தனி அமைப்பு அல்லது வாரியத்தை மத்திய அரசு அமைக்க உள்ளது. இரண்டு பிரிவுகளின் கீழ் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
அதாவது தன்னாட்சி அதிகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் "ஏ' பிரிவின் கீழ் வரிசைப்படுத்தப்படும்.
பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் அனைத்தும் "பி' பிரிவின் கீழ் வரிசைப்படுத்தப்படும்.
தரவரிசைப்படுத்துவது எப்படி?
ஒவ்வொரு கல்லூரியும் மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்பதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட உள்ளன.
அதாவது, கல்லூரியில் உள்ள கற்பித்தல், கற்றல் வளங்கள், ஆராய்ச்சி, ஆராய்ச்சிக் கட்டுரை வெளியீடுகள், பல்கலைக்கழக தேர்வு முடிவுகள், வேலைவாய்ப்பு முகாமால் மாணவர்கள் பெற்ற பலன், வெளி மாநில, வெளிநாட்டு மாணவர்கள், மாணவிகள், பின்தங்கிய மாணவர்களின் எண்ணிக்கை என்பன உள்ளிட்ட விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
2 ஆண்டுகளுக்குத் தடை
இந்தத் தகவல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடமிருந்து பெறப்பட்டு, மத்திய அரசின் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தரவரிசைப் படுத்தப்படும்.
இதற்கென கல்லூரிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்வு செய்து கல்லூரி பதிவேடுகள், கணக்குத் தணிக்கை விவரங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் அந்த குழுவுக்கு அளிக்கப்படும்.
மேலும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் கல்லூரிகள் சார்பில் அளிக்கப்படும் அனைத்து விவரங்களும், அந்தந்த கல்லூரி இணையதளங்களில் பதிவேற்றம் செய்து தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்க அறிவுறுத்தப்படும்.
இந்தத் தகவல்களில் தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை அல்லது போலியானவை என்பது கண்டறியப்பட்டால், அந்தக் கல்லூரி ரேங்கிங் நடைமுறையில் பங்கேற்பதிலிருந்து 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும். அதோடு, சம்பந்தப்பட்ட கல்லூரியின் முறைகேடு குறித்த விவரமும் ரேங்கிங் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 29, 2015

குறள் இனிது: எது கேட்டாலும் கிடைக்குமா? ..... சோம.வீரப்பன்

Return to frontpage

சென்ற கோடை விடுமுறையில் எனது இரு பேரன்கள் பெங்களூரில் இருந்து எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். 3 வயதும் 2 வயதும். ‘நீங்கள் கொஞ்சம் இவர்களுக்கு ஊட்டி விட்டால் எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்’ என்று வீட்டில் இருப்பவர்கள் சொல்ல, நானும் நமக்குத்தான் இது 30 வருடங்களுக்கு முன்பே பழக்கமானதாயிற்றே என்று ஏற்றுக்கொண்டேன். கிண்ணத்தில் பிசைந்த சாதத்தைக் கொடுத்துவிட்டு அவர்கள் மாயமானார்கள்.

நானும் பேரன்களை, டைனிங் டேபிளில் உட்கார வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். நல்ல பிள்ளைகளாக அவர்கள் முதல் வாயை வாங்கிக் கொண்டதும் எனக்குப் பெருமை, பெருமிதம், பெருமகிழ்ச்சி! ஆனால் அப்புறம் தான் ஆரம்பித்தது கச்சேரி!!. வாயில் வாங்கியதைச் சாப்பிடாமல் இருவரும் வெகுநேரம் வைத்து இருந்ததால், நானும் தமிழில், ஆங்கிலத்தில், இந்தியில், கன்னடத்தில் கெஞ்சிப் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை! ‘அவர்களுக்குப் பிடித்த மாதிரி ஏதேனும் செய்யுங்களேன்’ என அசரீரியாக என் மனைவியின் அறிவுரை கேட்டது.

மொபைலில் டெம்பிள் ரன் பார்ப்பார்கள் என்று என் சிற்றறிவுக்கு உடனே பொறி தட்டியது. அதைப் போட்டபின் வெற்றிகரமாக இரண்டு வாய் ஊட்ட முடிந்தது! ஆனால் அந்த வால்களோ, மொபைலையே பந்து போல் போட்டு விளையாடத் தொடங்கினார்கள். சாதாரணமாக எனது மொபைலை யாரையும் தொடவே அனுமதிக்காத நான், குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்பதற்காக விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று! பின்னர் அதுவும் போரடித்து விட்டதால், எனது சட்டைப்பையில் இருந்த பணத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். நானும் சரியென்று பெரிய நோட்டுக்களை மறைத்துவிட்டு 10 ரூபாய் நோட்டு இரண்டு கொடுத்தேன்.

அவர்களோ 100 ரூபாய் நோட்டுக்கள்தான் வேண்டுமென்று அழுது வாங்கி மேஜையில் வைக்க அவை காற்றில் பறக்கலாயின! எனக்கு முன்பிருந்த சந்தேகம் வலுவானது.

இந்தப் பயல்கள் காலையில் நாம் கொடுக்க மறுத்ததை எல்லாம் இந்த சாப்பாட்டு வேடிக்கையை வைத்து பழி வாங்குகிறார்கள் என்று புரிந்து விட்டது. என் மனைவியோ ‘என்ன சும்மா பிள்ளைகளை முறைக்கிறீர்கள்? உங்கள் பணம் முக்கியமா அல்லது அவர்கள் சாப்பிடுவது முக்கியமா?’ என ஒரு தத்துவக் கேள்வியை முன்வைத்துவிட்டார். பின்னர் என்ன? தலைமுடியைக் கலைப்பது, தண்ணீரைக் கொட்டுவது, மேஜையிலேயே பேனாவால் எழுதுவது போன்ற எல்லா சேட்டைகளையும் நான் பொறுத்துகொள்ள வேண்டியதாயிற்று!

சாப்பிட மறுப்பது என்பது குழந்தைகளிடம் உள்ள அணு ஆயுதம். அதைக் கண்டு எல்ேலாரும் நடுங்குவார்கள் என குழந்தைகளுக்குத் தெரிந்திருக்கிறது! காரியத்தைச் சாதித்துக்கொள்ள கெஞ்சுதல், மிரட்டுதல் எனப் பல வழிகள் உண்டு. ஆனால் இவற்றைச் சரியான சந்தர்ப்பத்தில் கையாள வேண்டும். நாம் இதை குழந்தைகளிடம் இருந்து கூடத் தெரிந்து கொள்ளலாம்! உரிய கருவிகளுடன், ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல் என்பது உண்டா என்கிறார் வள்ளுவர்!!

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின் -குறள்:483

somaiah.veerappan@gmail.com

மனசு போல வாழ்க்கை 28: காட்சிகள் காட்டும் பிம்பங்கள் ...டாக்டர். ஆர். கார்த்திகேயன்

Return to frontpage

ஒரு முறை கிடைக்கும் தகவலை வைத்துக்கொண்டே “இது இப்படித் தான்!” என்று முடிவு கட்டுவது மனதின் முக்கியமான தன்மை. ஒரே முறை ஒரு ஓட்டலில் சாப்பாடு சரியில்லை என்றால் அந்த ஓட்டல் சரியில்லை என்று முடிவு கட்டும். முதல் முறை பார்க்கும்போது சரியாக முகம் கொடுத்துப் பேசாத உறவினரை மண்டைக் கனம் பிடிச்சவன் என்று எண்ண வைக்கும். முதல் முறையாகத் தோன்றும் அபிப்பிராயத்தை எப்படியாவது தக்க வைக்கத் துடிப்பதும் மனதின் இயல்புதான்.

நாடு, மதம், இனம், மொழி, ஊர், தொழில் இப்படி எல்லாவற்றைப் பற்றியும் கருத்து வைத்திருக்கிறோம். இந்தக் கருத்தைப் பெரும்பாலும் பத்திரமாக வளர்த்துவருகிறோம்.

தோற்றத்தின் உள்ளே..

டி.வியில் அறிவுசார்ந்த நிகழ்ச்சிகளை நடத்து பவரைப் பெரிய அறிவாளியாக நினைக்கிறோம். அவர் ஒவ்வொரு வார்த்தையையும் பின்னால் ஒருவர் சொல்ல ‘டாக் பேக்கில்’ உள்வாங்கி ஏற்றஇறக்கமாக பேசுகிறார் என்பதையும் தெரிந்துகொண்டால், அவ்வாறு நினைப்போமா? சினிமாவில் கதாநாயக நடிகர்களைப் பெரிய வீரர்கள் என்று நினைப்போம். அவர்கள் தங்கள் படம் வெளிவரவும் அதை ஓடவைக்கவும் எந்த அளவுக்கும் பணிந்துபோகிறார்கள் என்ற செய்திகளும் வரத்தானே செய்கின்றன.

அதற்குப் பிறகும் அவர்களை மாவீரர்கள் என கருதுவீர்களா? டாக்டர் என்றாலே அவர் எல்லா வியாதிகளுக்கும் தீர்வு தெரிந்தவர் என்று நினைக்கிறோம். அவரது மருத்துவத் துறையைத் தவிர மற்ற மருத்துவத் துறைகளில் நிபுணர் அல்ல என்று ஒரு மறுபக்கம் இருக்கிறதே. அதை நம்ப மறுக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்.

ஏட்டுப்படிப்பு அதிகமாக இல்லாதவரை அறிவுஜீவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அதேபோல நிறைய பட்டங்கள் படித்தவர் என்பதாலே அவரை அறிவுஜீவி என்று நம்புகிறோம். ஏராளமான எழுத்தாளர்கள் பெரிய கல்வித் தகுதிகள் இல்லாதவர்கள். முனைவர் பட்டம் பெற்ற பலருக்கு பாடப்புத்தகமும், வாரப்பத்திரிகையும் தவிர மற்ற வாசிப்பு இல்லை இருந்தும் படித்தவர்கள் பற்றிய அபிப்பிராயத்தை அப்படியேதான் வைத்திருப்போம்.

கொட்டுமா, உதிருமா?

அதே போல காசுக்காக எதையும் செய்பவர்கள் வியாபாரிகள் என்று நினைக்கிறோம். விளம்பரம் இல்லாமல் சேவை புரியும் நிறைய வியாபாரிகள் இருக்கிறார்கள். மிக நாணயமாக, மக்களுக்குத் தீங்கு வரக்கூடாது என்று செயல்படுகிற பல வியாபாரிகள் இருக்கிறார்கள். சேவை செய்பவர்களில் பலர் மிகுந்த வியாபார நோக்குடனும் மக்கள் விரோதமாகச் செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி நம் கற்பிதங்களுக்கு நேர்மாறாகப் பலர் பல திறமைகளுடனும் ஆளுமைகளுடனும் இருக்கிறார்கள்.

முரடானது காவல்துறை. அதன் அதிகாரியாக இருந்த திலகவதி ஐ.பி.எஸ் மென்மையாக எழுதுகிறார். அதேபோல இறையன்பு ஐ.ஏ.எஸ். ஜென் துறவி போலத் தத்துவம் பேசுகிறார். அரசியல்வாதியான வைகோ வரலாற்றுப் பேராசிரியர்களுக்குச் சவால் விடும் வகையில் பேசுகிறார். என் நண்பர் டாக்டர் விஜயராகவன் அற்புதமாகத் தமிழில் செய்யுள் இயற்றுவார். அதை விட அபாரமான நகைச்சுவைத் திறனும் அவருக்கு உண்டு. புற்று நோய்க்குச் சிகிச்சை அளித்தாலும் நம்பிக்கையும் நகைச்சுவையும் குறையாமல் செயல்படுவார்.

“முடி கொட்டுமா டாக்டர்?” என்பார்கள். “ தேள்தான் கொட்டும். முடி உதிரும்!” என்று இலக்கணமும் நகைச்சுவையும் பேசி வைத்தியம் பார்ப்பார். அதே போல, சிவ ஆலயங்களைச் சுத்தம் செய்யும் உழவாரப் பணியில் ஈடுபடும் ஐ.டி. பணியாளர்களை எனக்குத் தெரியும். தங்கள் சொற்பமான சம்பளத்தின் பெரும்பங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பணிகளுக்குச் செலவு செய்யும் தம்பதியை எனக்குத் தெரியும்.

அதே போல, கார்ப்பரேட் நிறுவனங்கள் போலச் செயல்படும் கட்சிகளும் மடங்களும் மதச் சார்பு நிறுவனங்கள் உண்டு. அரசியல் தலைவரை மிஞ்சுகிற கவர்ச்சி மிக்க சாமியார்கள் இருக்கிறார்கள். துறவிகளாக வாழும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.

வேண்டாம் பிம்பங்கள்

ஆனாலும் நம் மனம் சில அபிப்பிராயங்களை அப்படியே தக்க வைக்கத் துடிக்கிறது. “இவர்கள் இப்படித்தான்” எனும் அபிப்பிராயமே நமது சிந்தனையைக் கட்டிவைக்கும் ஒரு சங்கிலி. அதை உடைத்துவிட்டுச் சுதந்திரமாகப் பார்க்கும் பொழுது உலகம் இன்னமும் நிஜமாகவும் தெளிவாகவும் புரியும்.

எனக்குத் தமிழில் எழுத வராது. சில “ஆவி எழுத்தாளர்களை” பணித்துத் தான் கட்டுரைகளைச் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளுகிறேன் என்று ஒரு பேராசிரியர் பேசிவந்தார். ஆவிக்குத் தரும் அங்கீகாரத்தை இந்தப் பாவிக்குத் தர அவர் மனம் மறுக்கப் பல காரணங்கள். “ நீங்கள் சொல்வதை நிருபர்கள் எழுதுவார்கள் அல்லவா?” என்று பல முறை என் தொழில் முறை நண்பர்கள் கேட்பார்கள். “எழுத ஏது நேரம்?” என்பார்கள். “பேச்சு முழுதும் ஆங்கிலத்தில், எழுத்து மட்டும் எப்படி தமிழில்?” என்று லாஜிக்கலாக மடக்குவார்கள் சிலர்.

இவர்களின் பிரச்சினை நானல்ல. அவர்கள் என்னைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள் தான்!

நான் கோபப்படுகையில் என் நண்பர்கள், “நீங்களே கோபப்படலாமா?” என்று என் உளவியல் பின்னணியை இணைத்துக் கருத்து சொல்வார்கள். உளவியல் படித்தவர்கள் எல்லாம் மனதை வென்ற மகான்கள் அல்ல என்று சொல்வேன். படைப்புகளை வைத்துப் படைப்பாளி பற்றிய அபிப்பிராயம் வளர்த்தல் ஆபத்தானவை.

இப்படித்தான் நடிகர்களிடம் நாட்டைக் கொடுக்கிறோம். அதிகம் தெரியாத சாமியார் காலில் குடும்பமாகச் சென்று காலில் விழுகிறோம். நன்கு பேசுகிறார் என்றால் உடனே அறிவுஜீவியாக உயர்த்திவிடுகிறோம். கூட்டத்தை வைத்துப் பிரபல்யத்தைக் கணக்கிடுகிறோம்.

இவை மனதின் செயல்பாடுகள் என்பதை மட்டும் புரிந்துகொள்வோம். வண்ணம் பூசாத கண்ணாடி கொண்டு வாழ்க்கையைப் பார்ப்போம். அதுதான் அழகு. அது தான் ஆரோக்கியம்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

வாழ்க்கைப் பயணத்தில் துண்டுகள்...

Dinamani



By அ. அறிவுநம்பி

First Published : 28 September 2015 01:36 AM IST


துண்டு. இது வெறும் மூன்றெழுத்தில் உருவான ஒரு பெயர்ச்சொல். ஆனால், இதன்வழி அரங்கேறும் வினைகள் சொல்லி முடியாதவை. அண்மையில் ஒருவருக்கு விருது வழங்கும் விழா
நடைபெற்றது.
விருது வழங்கிச் சிறப்பித்த சிறப்புப்பொழிவாளரின் உரைக்குப் பின் கூட்டம் குறையக்கூடும் என்று கருதினர். எனவே, விருது பெற்றவரின் ஏற்புரை முன்னுக்குக் கொணரப்பெற்றது. இதுவரை நிகழ்வில் பிழையேதுமில்லை.
சடாரென்று விருது பெற்றவரைப் பாராட்ட ஒருவர் திடீரென மேடை ஏறி ஒரு தேங்காய்ப் பூத்துண்டைப் போர்த்தினார். அந்தத் துண்டைத் தோளிலிருந்து உரியவர் நீக்குவதற்கு முன் மேடையேறித் துண்டும் சால்வையும் அணிவிப்பவர்களின் நீண்ட வரிசை சட்டென்று மலர்ந்தது.
விருது பெறுபவரின் நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள், உறவினர்கள், இயக்கப் பின்னணியினர் போன்றோருடன் அவர்வழியே சலுகைகள் பெற விரும்பிய அன்பர்களின் கூட்டம் அணிவகுத்து நிற்பதில் வியப்பேதுமில்லை. இதனால், அந்நிகழ்வில் ஏற்பட்ட இரண்டு தேய்மானங்களை இங்கே குறிப்பிடுவது தேவையாகிறது.
நாற்பது நிமிடங்கள் வரை நீங்கள் பேச வேண்டியதாயிருக்கும் என விழா ஏற்பாட்டாளர்கள் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ஏராளமான நல்ல தரவுகளைத் திரட்டி வந்திருந்தார் சிறப்புப் பேச்சாளர். ஆனால், துண்டுபோடும் படலம் அவரின் நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடிவிட்டது. அதனால், மொத்தம் பதினெட்டு நிமிஷங்கள் மட்டுமே அவரின் சிறப்புரை இடம் பெற்றது. இது முதலாவது சரிவு.
மேடையேறித் துண்டோ, சால்வையோ அணிவிக்கும்போது ஒலிபெருக்கிமுன் நின்று எந்த அமைப்பின் சார்பாக அங்கே சிறப்புச் செய்யப்படுகிறது எனக் குட்டிப் பிரசங்கம் செய்வதும், துண்டு அணிவித்தபின் விருது பெற்றோருடன் நிழற்படம் எடுத்துக்கொள்வதில் நேரம் செலவழிப்பதும் ஏனைய பார்வையாளர்களின் பொறுமைக்கு வைக்கப்பெறும் வேட்டுகளாகின்றன. இது இரண்டாவது தொய்வு.
இந்தத் துண்டுப் பணியால் ஒட்டுமொத்த அரங்கமும் பாழ்படுகின்றது என்பதே நடப்பியல். நீங்கள் ஒரு பார்வையாளராக இருந்து இத்தகைய துண்டுச் சடங்குகளை நேரிலே அனுபவிக்கும்போதுதான் அடத்தியான வெறுப்புகளை உணர முடியும். இதனுடைய உச்சகட்டத்தை ஒரு நிகழ்வு பரிமாறியது.
நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நிகழ்ச்சி தொடங்கி வரவேற்புரை இடம்பெறும்போது நூலாசிரியரின் நண்பர் அரங்கிற்குள் வந்தார். நூலாசிரியர் வரவேற்புரையாளரை விலகச் செய்துவிட்டு ஒலிபெருக்கியில் தன் நண்பர் பெயரைச் சொல்லி அவரை மேடைக்கு அழைத்தார். நண்பருக்குத் துண்டு போர்த்திய பிறகு வரவேற்புரை தொடர்ந்தது. அடுத்ததாக நூலறிமுகம் நடந்தது.
அப்போது நூலாசான் குடியிருக்கும பகுதியில் இருந்து இருவர் வந்தனர். கூடவே இன்னுமொருவர் உடன் வந்தார். நூலாசிரியரால் அறிமுகவுரை தடை செய்யப்பட்டது. பெயர் தெரியாத அந்த மூன்றாம் நபர் உள்பட மூவரும் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். துண்டுபோடல் அரங்கேற்றமானது.
சிறிது நேரங்கழித்து ஆசிரியரின் அலுவலகத்தில் இருந்து ஒருவர் தன் எட்டு வயதுப் பையனுடன் உள்ளே வரவும் மறுபடி நூல் அறிமுகம் நிறுத்தப்பட்டு நண்பர் மட்டும் மேடைக்கு வரவழைக்கப்பட்டு துண்டு சார்த்தல் நிகழ்ந்தது. இப்படி அறிமுகவுரை, வரவேற்புரை போன்றவை துண்டாடப்பட்டன.
இதனிடையே, வாழ்த்துரைக்காக மேடையில் அமர்ந்திருந்த மூன்று நபர்களில் இருவர் ஓசையின்றி கீழே இறங்கிச் சுவடு தெரியாமல் அரங்கிலிருந்து வெளியேறியதும் நடந்தது. ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் துண்டு துண்டாகிப் போனதுதான் பயன் அப்படிச் சிலவற்றைச் சந்திக்கும்போதுதான் ஒரு சிறிய துண்டு எவ்வளவு திருவிளையாடல்களை நிகழ்த்துகின்றது என்றுணர முடிந்தது.
ஒரு நபரிடம் துண்டு இடம்பெறுமிடத்தைப் பொருத்து அந்த நபரின் குணநலன்களும் பண்பாடும் புலப்படுவதை நடைமுறை வாழ்க்கை எடுத்து மொழியும். தலைமீது துண்டு அமருமானால் அது வேலைக் கடுமையைக் காட்டுவது ஒருபுறம். குளிர்க்காற்றைத் தடுக்கும் காப்பாகத் தோன்றுவது மறுபுறம்.
தோள் மீது துண்டு அணி செய்யுமானால் அவர் கடந்த தலைமுறை ஆள் என உணரலாம். கழுத்தினைச் சுற்றி இருபுறமும் தொங்கும் அமைப்பிலுள்ள துண்டு பழைமைவாதிகளின் பழக்க நீட்சியாகவே கொள்ளப்பெறும். துண்டானது அவசர முடிப்போடு நபரின் கக்கத்தில் (அக்குளில்) செருகப்படும்போது அதையணிந்தவரின் பணிவு புலப்படும். பணக்காரர்கள்கூட ஆலயங்களில் சட்டைக்கும் மேலாக இடைப் பகுதியில் துண்டினைக் கட்டிப் பக்தியை உணர்த்துவர்.
மாட்டுச் சந்தைகளில் விற்பவர், வாங்குபவர் இருவரும் விரல்வழி வணிகம் மேற்கொள்ளும் இடத்தில் கைகளை மறைக்கும் மறைப்புத் துணியாகத் துண்டு பிறப்பெடுக்கும். பேருந்துகளில், புகைவண்டிகளில் இடம்பிடிக்க ஏதுவாகத் துண்டு உருமாறி இடப்பதிவு ஆவணமாக உதவும்.
வழக்கில் சிக்கிக் கைதாகும் நிகழ்வின்போது, அதுவே முகமூடியாக மாறி முகத்தினை மறைக்கப் பயன்படும். சண்டைக்காரனின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கியபடியே இழுத்துவரும் நேரங்களில் துண்டு ஒரு படைக் கருவிபோலக் கருதப்பெறும்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் காரைக்குடி திருக்குறள் கழகத்தில் பேசவந்தார். நீளமான கதர்த் துண்டை விரித்துக்கொண்டே விழா அமைப்புக் குழுவில் ஒருவர் ஒலிபெருக்கியில் ஐயா அவர்களுக்கு இந்தக் கதராடையைப் பொன்னாடையாக அணிவிக்கிறேன் என்று கூறிவிட்டு, அணிவித்தார்.
முத்தமிழ்க் காவலர் உரையாற்றும்போது, ""போலித்தனமாகவே நாம் வாழ்கிறோம். கதராடையைக் கதராடை அணிவிப்பதாகக் கூறியே அணிவிக்க வேண்டும். மாறாக, அதனைப் பொன்னாடை என்று கூறிச் சிறப்பிக்கப்பட்டவரையும் பார்வையாளர்களையும் முட்டாளாக்கக் கூடாது. இரண்டாவது, பொன்னாடையால் கை துடைக்கவோ முகம் துடைக்கவோ முடியாது. இந்தக் கதர்த் துண்டால்தான் கூடுதல் பயன்தர முடியும்'' என்று பளிச்செனப் பதிலடி தந்தார்.
இப்படிப்பட்ட துண்டுச் செய்திகளின் பின்புறத்தே பல உண்மைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. பழங்காலத்தில் பெரியவர்களைக் கண்டவுடன் ஒரு மரியாதை காரணமாக எலுமிச்சைப் பழத்தை அளிப்பது வழக்கம். இப்போது துண்டு அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது.
புகழ் பெற்றவர்களை எங்கு கண்டாலும் - வீதியில், நிகழ்விட முகப்பில், பயண நிறைவில் என எல்லாவிடத்தும் - துண்டு போர்த்திச் சிறப்பிப்பது ஒரு நாகரிகம்போல மாறிப்போனது.
கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், அறிஞர்கள், அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் துண்டுபோட்டு அவர்களோடு புகைப்படமும் எடுத்துக் கொண்ட நபர்கள் அப்படங்களைப் பிறரிடம் காட்டித் தமக்கும் புகைப்படத்தில் உள்ள நபர்களுக்கும் இடையில் ஓர் இணக்கமான அணுக்கம் இருப்பதைப்போல காட்டிக்கொள்வதும், நடிப்பதும் பல இடங்களில் நிகழ்கிறது.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் பொழிவாற்ற வந்தார் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன். வழக்கமான முறையில் அவருக்குத் துண்டு அணிவிக்கப்பெற்றது. அவருக்கு இடைஞ்சலாக இருக்குமோ எனக்கருதி அவருக்குப் பின்புறமிருந்து துண்டைப் பதமாக நீக்க முயன்றேன். ஒலிபெருக்கிமுன் நின்ற அவர் எல்லாரும் கேட்கும்படியாக ""மெதுவா.. மெதுவா.. மடிப்பு மாறாமல் துண்டை மறுமடிப்புச் செய்து வைக்கணும். அடுத்த வாரம் நண்பரொருவரின் நூல் வெளியீட்டின்போது இது பயன்படும்'' என்றார். இப்படித் துண்டுகள் பல பிறவிகள் எடுப்பதே வழக்கம்.
புகழ்மிக்க ஒருவர் பங்குகொள்ளும் இடங்களில் அளிக்கப்படும் துண்டுகளை வைத்துக் கொண்டு என்ன தான் செய்வார் என்பது அடர்த்தியான கேள்விதான். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு சேர்ந்துபோன துண்டுகள், சால்வைகளைத் தம் வீட்டு வரவேற்பரை, உண்ணும் இடம் போன்ற இடங்களில் இருந்த நாற்காலி, சோஃபாக்களுக்கு அணிவித்து அழகு பார்த்தார்.
வேறு ஒரு சான்றோர் மேடையை விட்டு இறங்கும்போது மறவாமல் போர்த்தப்பெற்ற துண்டுகளைச் சேகரம்பண்ணிக் கொண்டுதான் வீடு திரும்பினார். ஆண்டுக்கொரு நாள் அந்தத் துண்டுகளைச் சலவை செய்து, செம்மையாக மடித்து எடுத்துக் கொள்வார். ஆதரவற்ற முதியோர்கள் வாழும் இல்லங்கள் அல்லது குழந்தைகள் காப்பகங்கட்குப் போய், தன் கையாலேயே உரியவர்களுக்கு வழங்குவார். இந்தத் துண்டுக் கொடைதான் அவரைச் சிறந்த தொண்டனாகக் காட்டும்.
தம் சொந்தச் செலவில் துணிகள், போர்வைகள் வாங்கித் தருவதுதான் மேலான அறம் எனக் கருதுவதில் தவறில்லை. ஆனால், தமக்கு மிஞ்சியபோது பிறருக்குத் தம்மிடம் இருப்பதை வழங்குவதும்கூட நேரிய கொடைப் பண்பாகவே அமையும். வட மொழியில் கூறப்படும் வஸ்திர தானம் என்று இதனைக் கொள்ளலாம்.
துண்டு துண்டாகத் தென்படும் துண்டு பற்றிய தகவல்களைத் திரட்டினால் ஒரு பெரிய புராணமே உருவாகிவிடும். எப்படியோ ஒரு துண்டு, ஆடல் பலவற்றை அகிலத்தில் ஆற்றிக் கொண்டிருப்பதுதான் நடப்பியல்.
வழக்கில் சிக்கிக் கைதாகும் நிகழ்வின்போதுகூட, துண்டுகள் முகமூடியாக மாறி முகத்தை மறைக்கப் பயன்படுகின்றன.

Monday, September 28, 2015

'டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தைப் பற்றி ‘ஒரு வரி’ யில் பேசி அசத்திய நரேந்திர மோடி

Return to frontpage

சிலிகான் வேலியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ஒரு வரியில் எல்லோரும் கவரும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றி பல கருத்துகளை தெரிவித்தார். அதைக் கேட்டு பிரபல நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் (சிஇஓ) ஆச்சரியம் அடைந்தனர்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிலிக்கான் வேலியில் நேற்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் பேசினார். கூகுள், மைக்ரோசாப்ட், சிஸ்கோ உட்பட பல முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில் மோடி பேசுகையில், டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் பல கருத்துகளை ஒரு ஒரு வரியாக எல்லோரையும் கவரும் வகையில் குறிப்பிட்டார். அதன் விவரம் வருமாறு:

* உலகில் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையையும் மாற்றியுள்ளது சிலிகான் வேலி.

* உங்களில் பலரை டெல்லி, நியூயார்க், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் சந்தித்துள்ளேன்.

* முகநூல் உட்பட இவைதான் நமது உலகின் அண்டை வீட்டாராக உள்ளன.

* முகநூல் மட்டும் ஒரு நாடாக இருந்திருந்தால், அதுதான் மக்கள் தொகை அதிகம் கொண்ட 3-வது நாடாக இருந்திருக்கும்.

* கூகுள் ஆசிரியர்களை குறைத்துவிட்டது. மிகவும் விரும்பப்படுவதாக உள்ளது.

* ட்விட்டர் எல்லோரையும் நிருபர்களாக்கி உள்ளது.

* போக்குவரத்து விளக்குகள் வேலை செய்ய சிஸ்கோவின் ரவுட்டர்கள்தான் சிறந்தவை.

* நீங்கள் விழித்திருக்கிறீர்களா, தூங்குகிறீர்களா என்பது இப்போது முக்கியமில்லை.

* நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்களா ஆப் லைனில் இருக்கிறீர்களா என்பது முக்கியம்.

* நமது இளைஞர்களின் விவாதம் எல்லாம் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் அல்லது விண்டோஸ் பற்றியதாகவே உள்ளது.

* இவை எல்லாம் சிலிகான் வேலியில் உள்ள உங்களால்தான் சாத்தியமாகி இருக்கின்றன.

இவ்வாறு மோடி பேசினார்.

அவர் ஒவ்வொரு வரிகளாக சொல்லச் சொல்ல, பிரபல நிறுவனங்களின் அதிகாரிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தன்னுடைய சொந்த வாழ்க்கையை உதாரணமாகக் கூறி, இந்தியாவில் உள்ள கிராம பெண்கள்கூட இப்போது தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து வைத்துள்ளனர் என்று மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

மோடி மேலும் பேசுகையில் கூறியதாவது:

நீண்ட பயணம் செய்யாமல், சாகசம் செய்யாமல், சிறிய தீவில் உள்ளவர்களைக் கூட தொடர்பு கொள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவி உள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு செல்போன் மூலம் பணத்தை வேறு ஒருவர் கணக்குக்கு மாற்ற முடிகிறது.

இந்தியாவில் குக்கிராமத்தில் உள்ள ஒரு தாய், தனக்கு பிறந்த குழந்தையை எளிதில் காப்பாற்ற முடிகிறது. குக்கிராமத்தில் உள்ள குழந்தை நல்ல கல்வியை பெற முடிகிறது. இவை எல்லாமே டிஜிட்டல் புரட்சியால்தான்.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒருவர், இந்தியாவில் உடல்நலம் இல்லாமல் உள்ள தனது பாட்டியுடன் தினமும் ஸ்கைப் மூலம் பேசி ஆறுதல் சொல்கிறார். விவசாயிகள் தங்கள் நிலத்தின் மதிப்பை அறிந்துகொள்ள முடிகிறது, மீனவர்கள் அதிக மீன்களைப் பிடிக்க முடிகிறது. ‘செல்பி வித் டாட்டர்’ என்ற தலைப்பில் தனது மகளுடன் புகைப்படம் எடுத்து ஹரியாணாவைச் சேர்ந்த தந்தை வெளியிடுகிறார். அதன் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிகிறது.

இவை எல்லாமே சிலிகான் வேலியில் இருந்து கொண்டு நீங்கள் செய்யும் டிஜிட்டல் புரட்சியால்தான்.

இவ்வாறு மோடி பேசினார்.மோடியின் பேச்சைக் கேட்ட பிரபல நிறுவன அதிகாரிகள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

இண்டிகோ வழி; தனி வழி

Return to frontpage

லட்சாதிபதி ஆக வேண்டுமா? ஒரு கோடீஸ்வரர் விமான போக்குவரத்தை தொடங்கினால் எளிதாக லட்சாதிபதி ஆகலாம். விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் சொன்ன இந்த ஜோக் மிகப் பிரபலம். ஆனால் இந்த ஜோக் இண்டிகோ நிறுவனத்துக்கு பொருந்தாது.

கடந்த மார்ச் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 1,304 கோடி ரூபாய். இதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது நிகர லாபம் நான்கு மடங்கு அதிகம். கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்ததால் நிகர லாபம் உயர்ந்தது என்று எளிதாக நாம் கடந்து விட முடியாது. இண்டிகோ கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஏழு நிதி ஆண்டுகளாக நிகர லாபத்தில் இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பல விமான நிறுவனங்கள் சிரமத்தில் இருக்கும் போது இண்டிகோ மட்டும் தனித்து தெரிகிறது.

என்ன காரணம்?

இண்டிகோவின் வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. சர்வதேச அளவில் லாபமீட்டும் நிறுவனமாக சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஒரே நிறுவனத்தின் விமானத்தையே பயன்படுத்துகிறது. சவுஸ்வெஸ்ட் போயிங் நிறுவனத்தின் விமானங்களை பயன்படுத்துவது போல இண்டிகோ ஏர்பஸ் விமானங்களையே பயன்படுத்துகிறது. ஒரே நிறுவனத்தின் விமானங்களை தொடர்ந்து வாங்கும் போது அதிக தள்ளுபடி கிடைக்கும். தவிர பராமரிப்பு, அதற்கான பணியாளர்கள் என இதர செலவு ஆகாது.

இண்டிகோ எல்சிசி பிரிவில் செயல்படும் நிறுவனமாகும். குறைந்த கட்டணத்தில் செயல்படும் விமான நிறுவனம்.

குறைந்த கட்டணத்தில் செயல்பட் டாலும், அடிக்கடி தள்ளுபடி கொடுக்காது. இதில் பிஸினஸ் வகுப்பு கிடையாது, உணவு கிடையாது ஆனாலும் சரியான நேரத்தில் இந்த விமானம் செல்லும். அடிக்கடி விமானத்தில் பயணம் செல்பவர்களின் சாய்ஸ் இண்டிகோவாகதான் இருக்கும். `நாங்கள் ஒரு உற்சாகம் இல்லாத விமான நிறுவனத்தை நடத்தி வருகிறோம். தொடர்ந்து இப்படியே நடத்தவே விருப்பம்’ என்று அதன் தலைவர் ஆதித்யா கோஷ் ஒரு பேட்டியில் தெரிவித்தது கவனிக்கத் தக்கது.

சமீபத்திய தகவல்கள் படி 35.3 சதவீத சந்தையை இண்டிகோ வைத்திருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் ஜெட் ஏர்வேஸ் 19 சதவீத சந்தையை வைத்திருக்கிறது.

இத்தனைக்கும் இந்த நிறுவனம் 97 விமானங்களை வைத்து, 31 நகரங்களை மட்டுமே இணைக்கிறது. ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்களின் விமான எண்ணிக்கையும் அதிகம், இணைக்கும் நகரங்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனாலும் அதிக சந்தையை இண்டிகோ வைத்திருக்கிறது. தவிர இப்போதைக்கு சிறு நகரங்களை இணைக்கும் திட்டம் இல்லை என்றும் அறிவித்திருக்கிறது.

இது தவிர சரியான பணியாளர்களை வைத்திருப்பது, சரியாக நகரங்களை தேர்ந்தெடுத்து விமானங்களை இயக்குவது என்பது உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. விரைவில் 2,500 கோடி ரூபாய்க்கு பொதுப்பங்கு வெளியிட தயாராக இருக்கிறது. இதற்கு செபியின் ஒப்புதலும் கிடைத்துவிட்டது.

ஐபிஓவை எதிர்பார்த்து சந்தை காத்திருக்கிறது.

செல்போன் கொடுத்து உதவியவரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி: திருப்பதியில் தமிழக பக்தருக்கு நேர்ந்த கொடுமை

Return to frontpage


ப.முரளிதரன்


செல்போனை கொடுத்து உதவிய வரை ஏமாற்றியது மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் ஏமாற்றி ரூ.40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் தமிழக பக்தருக்கு நிகழ்ந்த கொடுமை அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது உறவினர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் திருப்பதிக்குச் சென்றார். திருமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.

அப்போது, அவர் அருகில் வந்த நபர் ஒருவர், “எனது பர்ஸ், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதனால், பணம் இன்றி தவிக்கிறேன். எனவே, எனது வீட்டுக்குத் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு கூற வேண்டும். எனவே, உங்களது செல்போனைக் கொடுங்கள். வீட்டுக்கு ஒரே ஒரு போன் செய்துவிட்டு தருகிறேன்” எனக் கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட குமார் மனிதாபிமான அடிப்படையில் உடனே தன்னுடைய செல்போனை அந்த நபரிடம் கொடுத்தார். அவர் அதில் போன் செய்வது போல நடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் கூட்டத்தில் மறைந்தார். குமார் உடனே அப்பகுதி முழுவதும் தேடி அலைந்தார். ஆனால், அந்த நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்குள் அந்த மர்ம நபர் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த குமாரின் வீட்டு தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து அவரது மனைவியிடம் “உங்கள் கணவர் திருமலையில் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க கீழ் திருப்பதிக்கு கொண்டு செல்கின்றோம். மருத்துவமனையில் பணம் கட்ட அவசரமாக ரூ.40 ஆயிரம் தேவைப்படுகிறது. உடனே பணத்தை ஏற்பாடு செய்யுங்கள். நான் மீண்டும் அரைமணி நேரத்தில் தொடர்புகொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஓட்டல் கேஷியரிடம்..

பின்னர், அந்த மர்ம நபர் திருமலையில் இருந்து கீழ் திருப்பதிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்று கேஷியரிடம், “எனது மணிபர்சை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். எனவே, நான் வீட்டுக்கு போன் செய்து பணம் அனுப்புமாறு கூறியுள்ளேன். அவர்கள் பணம் அனுப்புவதற்கு வசதியாக உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கூறுங்கள். அவர்கள் அக்கணக்கில் பணம் செலுத்தியதும் வங்கி ஏடிஎம் மூலம் அந்த பணத்தை எடுத்துக் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அந்த ஓட்டல் கேஷியரும் தன்னுடைய வங்கிக் கணக்கை அளித்துள்ளார். அதை வாங்கிய அந்த மர்ம நபர் மீண்டும் குமாரின் வீட்டுக்கு போன் செய்து ரூ.40 ஆயிரத்தை வங்கியில் செலுத்தும்படி கூறி, ஓட்டல் கேஷியரின் வங்கிக் கணக்கை கொடுத்துள்ளார். குமாரின் குடும்பத்தாரும் அந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினர். பணம் வந்து சேர்ந்ததும் ஓட்டல் கேஷியர் தன்னுடைய ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை எடுத்து அந்த மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக்கொண்ட நபர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.

உறவினர்கள் பதற்றம்

இதற்கிடையே, குமார் விபத்தில் சிக்கியதாக கூறியதை நம்பி அவரது உறவினர்கள் அவசர அவசரமாக புறப்பட்டு திருப்பதிக்குச் சென்றனர். அங்கு மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்தில் சென்று விசாரித்துள் ளனர். அப்போது, குமார் என்ற பெயரில் யாரும் சிகிச்சைக்காக சேர்க்கப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

உடனே, திருமலைக்குச் சென்று அங்குள்ள தேவஸ்தான தகவல் அறிவிப்பு மையம் மூலம் குமார் குறித்து அறிவிப்பு செய்தனர். செல்போனை பறிகொடுத்துவிட்டு சுற்றித் திரிந்த குமார் இத்தகவல் கேட்டு தகவல் மையத்துக்கு விரைந்து சென்றார். அங்கு அவரது உறவினர்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர் போன் மூலம் தொடர்பு கொண்டு ஏமாற்றி பணம் பறித்த தகவல்களை உறவினர்கள் அவரிடம் தெரிவித்தனர். அதைக் கேட்டு குமார் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, அவர்கள் கீழ் திருப்பதிக்குச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து வங்கிக் கணக்கை வைத்து அந்த ஓட்டல் கேஷியரை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான், அவருக்கும் தான் ஒரு மோசடி நபருக்கு உதவி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து, குமாரின் உறவி னர் ரமேஷ் ‘தி இந்து’விடம் கூறுகையில், “உதவி செய்யப் போய் ரூ.40 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டதோடு செல்போனும் பறிபோனது. அத்துடன், உறவினர்கள் அனைவருக்கும் தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தியது. குமாருக்கு ஏற்பட்ட சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. எனவே, பிறருக்கு உதவி செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

வாட்ஸ்ஆப் வழி சேவை: மீதமான உங்கள் உணவால் ஏழை பசி தீரட்டுமே! ... சேவியர் லோபஸ் சுனிதா சேகர்

Return to frontpage

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக தயாராகி வரும் மூன்று இளைஞர்ள் இணைந்து, பட்டினியில் இருப்பவர்களுக்கு உணவளிக்க செயலி ஒன்றை தயார் செய்து வருகிறார்கள். செயலி தயாராக இன்னும் சில நாட்கள் இருந்தாலும், வாட்ஸ்ஆப் மூலமாக ஏற்கனவே தன்னார்வலர்கள் சிலர் இவர்களோடு இணைந்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த முகமது ஆசிஃப், நரேஷ்வர் சிவனேசன், ஃபஹத் கலீல் என்ற மூன்று இளைஞர்கள் இந்த சேவையை தொடங்கியுள்ளனர். இவர்கள் மூவருமே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக படித்து வருகின்றனர். மூவருமே மென்பொருள் துறையில் வேலை செய்தவர்கள்.

விழாக்களிலோ, வீட்டு விசேஷங்களிலோ உணவு வீணாகும் என்ற நிலையில், வாட்ஸ்ஆப் மூலம் இவர்களைத் தொடர்பு கொண்டால் போதும். தங்கள் தன்னார்வலர்கள் உதவியோடு அந்த உணவை பெற்றுக் கொண்டு, அதை வீணாக்காமல், பட்டினியால் தவிப்பவர்களுக்கு அளிக்கின்றனர். இதன் மூலம் தற்போது தினமும் ஆயிரக்கணக்கான ஆதரவற்றவர்கள் சாப்பிட்டு வருகின்றனர்.

மாநகராட்சியில் போடப்படும் 5000 டன் குப்பையில், 10 சதவீதம் உணவுக் கழிவுகளாக இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் பட்டியலிடுகிறது.

இது குறித்து ஆசிஃப் கூறும்போது, "உணவு மனிதர்களின் அடிப்படை தேவை. நம் தேசத்தில் பலர் உணவுக்காக பிச்சையெடுத்து வரும் வேளையில், வீடுகளிலும், உணவகங்களிலும், அங்காடிகளிலும், அலுவலகங்களிலும் நாம் நிறைய உணவை வீணடிக்கிறோம் என்பது வருந்தத்தக்கது.

எனவே, உணவை வீணாக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது 99625 18992 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டாலோ, வாட்ஸ்ஆப்பில் தகவல் தந்தாலோ போதும். நாங்கள் வருவோம். உரியவர்களின் பசி போக்க உங்கள் உணவைப் பகிர்வோம்" என்றார்.

இந்தியாவில் பாஜக முயற்சியில் ஊழலற்ற ஆட்சி கலாச்சாரம்: அமெரிக்காவில் மோடி பெருமிதம்

Return to frontpage

அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் உள்ள எஸ்.ஏ.பி. மையத்தில் அமெரிக்கா வாழ் இந்திய மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி கலாச்சாரத்தை பாஜக உருவாக்கியுள்ளது" என்றார்.

அவர் மேலும் பேசும்போது, "நம் நாட்டில் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மலிந்திருந்தது. ஒருவர் ரூ.50 கோடி சம்பாதித்தார், ஒருவரது மகன் ரூ.250 கோடி சம்பாதித்தார், மகள் ரூ.500 கோடி சம்பாதித்தார், மருமகன் ரூ.1,000 கோடி சம்பாதித்தார்.

ஆனால், பாஜக இப்போது ஊழலற்ற ஆட்சி கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். என் மீது யாராவது ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது சொல்ல முடியுமா?" (அரங்கில் "இல்லை" என்ற பெரிய சப்தத்தை மக்கள் எழுப்புகின்றனர்)

"கடந்த ஆட்சியில் மக்கள் பெரும் அதிருப்தி கொண்டனர். ஆனால் இன்று இந்தியாவுக்கு உலக அரங்கில் ஒரு புதிய அடையாளம் இருக்கிறது. இதற்குக் காரணம், உங்களது விரல் செய்த வித்தை. உங்கள் விருப்பம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

21-ம் நூற்றாண்டு யாருடையது என்ற பேச்சு உலகளவில் பரவலாக பேசப்படுகிறது. அதற்கு பலரும், 21-ம் நூற்றாண்டு இந்தியாவுடையதே என பதில் கூறுகின்றனர்.

16 மாத ஆட்சி காலத்திற்குப் பிறகு இன்று உங்கள் முன் நிற்கும் நான் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறேனா என்று நீங்களே சொல்லவேண்டும். ('ஆம்' என்ற பெரும் ஓசை அரங்கத்தில் ஒலிக்கிறது).

நான் ஒவ்வொரு முறை இந்தியா முன்னேறும் என்று கூறும்போதெல்லாம், பலரும் என்னிடம் கேட்கின்றனர்? எந்த நம்பிக்கையில் இதைக் கூறுகிறீர்கள் என்று?

இந்திய மக்கள் தொகையில் 65% பேர் 35 வயது மதிக்கத்தக்கவர்கள். அதாவது இளம் வயதினர். இந்தியாவின் இளமையே எனக்கு இந்த நம்பிக்கையை அளிக்கிறது என நான் அவர்களிடம் கூறுகிறேன்.

மேலும், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. உலக வங்கி அறிக்கை, மூடிஸ் வர்த்தக அமைப்பு அறிக்கை போன்ற பல்வேறு அமைப்புகளின் பொருளாதார ஆய்வறிக்கைகளும் இந்தியப் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளது" என்றார் மோடி.

தொழில்நுட்ப புரட்சி அவசியம்

"ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்ப புரட்சி அவசியம். அதை கருத்தில் கொண்டே டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்களிடம் செல்போன் இருக்கிறது. இ-கவர்னன்ஸ் முறையும் சிறப்பாக செயல்படுகிறது" என்று மோடி பெருமிதம் தெரிவித்தார்.

உலகுக்கு 2 அச்சுறுத்தல்கள்

தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்த உலகம் இரண்டு அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது. ஒன்று தீவிரவாதம்; மற்றொன்று பருவநிலை மாற்றம். இந்த இரண்டையும் திறம்பட சமாளிக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். தீவிரவாதம் என்றால் என்ன என்பதற்கே ஐ.நா. இன்னமும் முழுமையான விளக்கமளிக்கவில்லை.

ஒரு விளக்கத்துக்கே 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டால் அதற்கான தீர்வு காண எத்தனை ஆண்டுகள் ஆகும். நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்ற பேதம் ஏதும் இல்லை. தீவிரவாதம் மக்கள் நலனுக்கு அச்சுறுத்தலே. காந்தியும், புத்தரும் பிறந்த மண்ணில் இருந்து வரும் நான், உலக அமைதி உறுதி செய்யப்பட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.

மேலும் அவர் பேசும்போது, வசதி படைத்தோர் காஸ் மானியத்தை விட்டுத்தர வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்று 30 லட்சம் மக்கள் மானியத்தை விட்டுக்கொடுத்தது பெருமை அளிப்பதாக கூறினார்.

டிசம்பர் 2 முதல் விமான சேவை

டெல்லி - சான் பிரான்ஸிஸ்கோ நகர் இடையே வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் வாரம் மூன்று முறை ஏர் இந்தியா நேரடி விமானத்தை இயக்கும் என மோடி தெரிவித்துள்ளார்.

Saturday, September 26, 2015

தியாகத் திருநாள் சோகம்!


Dinamani

By ஆசிரியர்

First Published : 26 September 2015 03:09 AM IST


உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அன்பர்களுக்கு மட்டுமன்றி, அனைத்துத் தரப்பினரையும் ஆழ்ந்த வேதனைக்குள்ளாகியது மெக்கா அருகே நெரிசலில் சிக்கி, 719 பேர் உயிரிழந்திருக்கும் கோரச் சம்பவம். இந்த மரணங்களுக்குக் காரணம் இயற்கை இடர்பாடு அல்ல; மனிதத் தவறுகளே என்பதும், இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்பதும் அனைவர் மனதிலும் வேதனையைக் கடந்த அறச்சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு வாரங்களுக்குள் நேர்ந்திருக்கும் இரண்டாவது துயரச் சம்பவம் இது. ஒரு கட்டுமான மின்தூக்கி சாய்ந்ததில் 109 பேர் இறந்தனர். அந்தத் துயரத்தின் வடு ஆறும் முன்பாகவே மேலும் ஒரு சம்பவம் 719 பேரை பலி கொண்டது. 800-க்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்தியுள்ளது.
மெக்காவில் 1987 முதலாக ஒவ்வொரு மூன்று ஆண்டு இடைவெளியில் ஒரு விபத்து நடப்பதும் அதில் சில நூறு உயிர்கள் மடிவதும் தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. 1997-ஆம் ஆண்டு தீ விபத்தில் 343 பேர் இறந்த சம்பவத்துக்குப் பிறகு 9 ஆண்டுகள் கழித்துத்தான், 2006-ஆம் ஆண்டில் நடந்த விபத்தில் 364 பேர் இறந்தனர். அதுவும் இதே மினா பகுதியில், சாத்தான் மீது கல்லெறிதல் நிகழ்வின்போது ஏற்பட்ட நெரிசலில்தான்.
"எங்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றியிருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது' என்று மட்டுமே சவூதி அரசு சொல்கிறது. ஆனால், அண்டை நாடுகளும், பிற இஸ்லாமிய நாடுகளும் சவூதி அரசு இத்தனை மரணங்களுக்கும் பொறுப்பு என்று கண்டித்துள்ளன. அவர்களது பெருந்திரள் மேலாண்மைக் குறைபாடுதான் இந்த மரணங்களுக்குக் காரணம் என்கின்றனர்.
மெக்காவிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்து வந்து, சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வில் பங்கேற்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டோர், பல சாலைகள் வழியாக ஒழுங்குபடுத்தி அனுப்பப்பட்டு, முக்கிய இடமான ஜமாரத் அருகே சாத்தான் மீது கல்லெறிதல் முடிந்ததும் அவர்களை மாற்று வழியாக மீண்டும் மெக்கா திரும்பும் வகையில் ஒருவழிப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. சம்பவம் நடந்த அன்றைய தினம் காலையிலேயே வெயில் கடுமையாக இருந்தது. 46 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதால், ஒவ்வொரு புனிதப் பயணியும் எவ்வளவு சீக்கிரத்தில் இந்தச் சடங்கை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடித்து ஓய்வெடுக்க வேண்டும் என்ற மனநிலையில், வேகமாக நகர்ந்துள்ளனர். குறிப்பிட்ட இடத்தில் அந்த வேகம் தடைபட்டபோது, பின்னால் அதே வேகத்தில் வந்த கூட்டம் நெருக்கியடித்தது.
ஆனால், ஏன் இப் புனிதப் பயணிகளின் வேகம் தடைப்பட்டது, அவர்களைத் தடுத்தது எது? என்பது குறித்து சவூதி அரேபிய அரசு மௌனம் காக்கிறது. உருது பத்திரிகை, ஊடகங்களின் கட்டுரைகளை, பேட்டிகளை முகநூலில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இவற்றில் ஒரு பதிவு, இந்த விபத்துக்குக் காரணம், சவூதி அரேபியாவின் இளவரசர் இந்தக் கூட்டத்தைக் கடந்து செல்வதற்காகக் கூட்டத்தைத் திசைமாறிச் செல்லச் செய்ததும், கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுமே இந்த நெரிசல் ஏற்படக் காரணம் என்று சுட்டிக் காட்டுகின்றன.
இதைப்போன்று, சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானாவில், புஷ்கரணியிலும் நெரிசல் ஏற்பட்டது. மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நதியில் நீராடி வெளியேறும் வரை, அலைமோதிய கூட்டத்தைக் காவல் துறை தடுத்து வைத்தது. இவர்கள் தங்கள் சடங்குகளை முடிக்கும்போது காவல் துறை தடுத்து நிறுத்தி வைத்த கூட்டத்தின் அளவு பன்மடங்கானது. அமைச்சர்கள் வெளியேறியவுடன், பொதுமக்களைப் போய்க்கொள்ளுங்கள் என்று ஒட்டுமொத்தமாகக் கட்டுப்பாட்டை விலக்கியபோது மிகப்பெரிய தள்ளுமுள்ளும், நெரிசலும், மிதிபடலும் நேர்ந்தது. பலர் இறந்துபோனார்கள். அதிகார மையங்களுக்கு வழி ஏற்படுத்தும்போதுதான் மக்கள் நெரிசலில் சிக்கிச் சாகிறார்கள் போலும்.
ஹஜ் புனித யாத்திரை ஒவ்வோர் இஸ்லாமியருக்கும் விதிக்கப்பட்ட ஐந்து கடமைகளில் ஒன்று. உலகம் முழுவதிலுமிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். ஆண்டுதோறும் வருவோர் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. சவூதி அரசுக்கு இதன் மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணி பல ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள். ஆனாலும், மெக்கா வரும் ஒவ்வொருவரையும் தம் மக்களாகக் கருதிப் பாதுகாக்கத் தவறிவிட்டது சவூதி அரசு.
இனி, ஹஜ் புனிதப் பயணம் பாதுகாப்பானதாக மாற வேண்டும் என்றால், சவூதி அரேபிய அரசினால் மட்டுமே இதைச் செய்ய முடியாது. அவர்கள் தற்போது நடைமுறைப்படுத்தும் பெருந்திரள் மேலாண்மை குறைபாடானது என்பதையே தொடர்ந்து கடந்த இருபது ஆண்டுகளாக நேர்ந்து வரும் விபத்துகள், நெரிசல் மரணங்கள் வெளிப்படுத்துகின்றன.
இத்தகைய பெருந்திரள் மேலாண்மையில் அனுபவம் உள்ளவர்கள், புதிய யோசனைகளைச் சொல்லக்கூடிய அறிவாளர்கள், அவ்வப்போது உருவாகும் சிக்கலைத் தீர்க்கும் நுழைமாண் நுண்புலம் கொண்டோரை பல நாடுகளிலிருந்தும் வரவழைத்து அத்தகைய குழுவைக் கொண்டு, புனிதப் பயணிகளை வழிநடத்தினால், இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்படும் என்பது உறுதி.
பெருந்திரள் மேலாண்மை செய்ய எங்களால் இயலவில்லை என்று ஒப்புக்கொள்ளும் நேர்மைதான், எதிர்கால ஹஜ் புனிதப் பயணிகளின் அச்சத்தைப் போக்கும். உலகிலுள்ள முக்கியமான இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வழிகாட்டுதல் குழுவை சவூதி அரேபிய அரசே தனது தலைமையில் ஏற்படுத்த முற்படுமானால், அதைவிடச் சிறப்பு வேறொன்றுமில்லை!

Merely a family is being disturbed cannot be valid reason for setting aside a transfer order: Karnataka HC P Vasanth Kumar,TNN | Sep 25, 2015, 09.01 PM IST

BENGALURU: The Karnataka high court has said that a child studying in a kindergarten or wife in a non-transferable job and the family being getting disturbed by the same cannot be valid grounds for interfering with the transfer order of an employee.

"Merely because petitioner's child is studying in kindergarten, and merely because his wife cannot be transferred to Shivamogga, even these two grounds, much as they adversely affect the harmony of the family, cannot be valid grounds for interfering with the transfer order. The disturbances caused to a family by a transfer is but part of life. But, merely a family is being disturbed cannot be valid reason for setting aside the transfer order," Justice Raghvendra S Chauhan has observed while dismissing a petition filed by Dr Mahesh S Akashi, Assistant professor, Department of Surgery and Radiology, Canine Research and Information Centre, Timmapura,Mudhol taluk Bagalakote district.

"The transfer orders can be interfered only on the ground if they are malafides, arbitrary or at the behest of a politician or if there is any violation of the transfer policy dealing with the transfer of an employee within two years of his retirement. It is only in these limited areas the court is permitted to interfere with a transfer order." the Judge has further observed.

The petitioner, who was earlier working in Shivamogga, was transferred to Timmapura on December 4,2013. He joined the services at Timmapura on December 23, 2013. However, on June 25, 2015, he was transferred back to Shivamogga, which he challenged before the court.

UGC: Encourage admission of SC ST students Ishita Bhatia,TNN | Sep 25, 2015, 06.07 PM IST

TIMES OF INDIA

MEERUT: With 2015 being earmarked as the year of 125th birth anniversary of Dr BR Ambedkar - who gave India its constitution - the secretary of University Grants Commission (UGC) in its recent circular directed all the varsities to encourage admission of students belonging to scheduled castes and scheduled tribes. It also directed that Constitution Day be celebrated on November 26 so as to bring awareness about the Indian Constitution framed by Dr BR Ambedkar. The instructions should be followed by October 15 and UGC be informed about the same.

"To celebrate the 125th birth anniversary of Bharat Ratna, Dr BR Ambedkar, a national committee was constituted under the chairmanship of Prime Minister Narendra Modi, which has recommended that certain activities be undertaken in all the varsities under UGC," read the circular issued by Jaspal S Sandhu, secretary, UGC.

The circular stated that seminars should be organized in educational institutions, on the preamble of the Indian Constitution so as to increase the awareness of students.

"Admission of students belonging to SC/ST in private universities may be encouraged. To increase awareness about the Constitution amongst citizens, particularly children, November 26 be celebrated as 'Constitution Day' every year, as it was on this day, that the Constitution of India was adopted by the Constituent Assembly. On this day, the preamble to the Constitution may be read in schools and colleges," read the circular by Sandhu.

The national committee headed by PM Modi, includes senior ministers like Rajnath Singh, Arun Jaitley, Sushma Swaraj, M Venkaiah Naidu, Smriti Irani, Sadanand Gowda, Ram Vilas Paswan and Suresh Prabhu. As the 125th birth anniversary of Dr BR Ambedkar is being celebrated, the committee will be involved in conducting 16 major activities being undertaken by the ministry of social justice and empowerment to promote Ambedkar's ideology and philosophy. These initiatives included setting up of Ambedkar International Centre at 15, Janpath at a cost of Rs 197 crore.

The circular further stated that the universities and the colleges affiliated with them should ensure that action is taken in this regard and sent to UGC on ambedkar.ugc@gmail.com by October 15.

Friday, September 25, 2015

Mystery over Ketan Desai’s licence to practise

TIMES OF INDIA 

Rema Nagarajan,TNN | Sep 23, 2015, 04.14 AM IST

The status of the suspension of the medical licence of Dr Ketan Desai, former president of the Medical Council of India, remains a mystery with the current dispensation in the council refusing to answer queries on the subject. IMA secretary general Dr K K Aggarwal claims he attended a meeting of the council's ethics committee in January 2014 when it was decided that the suspension should be revoked.

Dr Desai's medical licence was suspended in October 2010 by the MCI, which was then being run by a government-appointed board of governors that had taken over after the council was disbanded following the arrest of its president (Dr Desai) on corruption charges. All of the corruption cases filed against Dr Desai have been closed, barring one in Patiala House court in Delhi.

Dr Aggarwal was an 'invited member' to the MCI when it was reconstituted in November 2013 (though no provision exists in the Indian Medical Council Act for 'invited members) and also a part of ethics committee meetings. While Dr Aggarwal said the suspension was revoked, he admitted he did not have the minutes of the ethics committee meeting in which this decision was taken.

There have been several meetings of the ethics committee since the reconstituted MCI took over in 2013 with Dr Jayshree Mehta as the president. However the minutes of none of these meetings have been put up on the MCI website. MCI refuses to provide the minutes even to RTI applicants, though they are supposed to be in the public domain like the minutes of all other meetings. The minutes of all other committees, like the post-graduate committee and the executive committee have been put up on the website. The ethics committee meetings section alone has not been updated beyond October 2013.

According to many council members, the very first ethics committee meeting of the newly constituted MCI held in December 2013 revoked the suspension of Dr Desai. "If they put up ethics committee meeting minutes, they have to start with the first meeting. As they are wary of admitting in public that one of the first things they did after taking over was to revoke the suspension of Dr Desai, they are shying away from uploading the minutes of all subsequent meetings," explained a council member.

Dr Aggarwal argued that since Dr Desai was registered with the Gujarat Medical Council (GMC), the MCI could only ask GMC to carry out its decision to suspend his licence, and that the GMC had refused to do so. Since the GMC's decision was never challenged, Dr Desai continued to have his medical licence, said Dr Aggarwal. However, he was unable to explain why the MCI's ethics committee then needed to revoke a suspension that he says never happened.

While Dr Mehta has answered queries sent by the TOI on many issues such as permission to carry out live surgeries or on eligibility certificates for foreign graduates, she has maintained a studied silence on repeated queries on Dr Desai's suspension or on why the minutes of the ethics committee meetings are being made public.

‘OCI cardholders using Indian passports a concern’

Return to frontpage

Alarmed over the increasing instances of OCI (Overseas Citizen of India) cardholders using Indian passports, despite possessing a passport obtained from other foreign countries, the Ministry of External Affairs (MEA) has lodged complaints with the State police over the issue.

“Despite having passports from other countries, where they have obtained dual citizenship, some were still found to be using Indian passports. We have made complaints to Chennai Police Commissioner,” Regional Passport Officer K. Balamurugan said.

An Indian passport is valid only till the time the passport holder is a citizen of the country and OCIs are to surrender the passport to MEA authorities. “In some cases, they are ignorant of the rule that they cannot use Indian passport after getting dual citizenship from other countries,” he said.

A majority of such cases involved persons from the Union territory of Puducherry (including Karaikal), who obtain dual citizenship from France. “Even after going there, some of them, out of ignorance, come to India using Indian passports,” he said.

Those intending to submit the passports can approach any of the three Passport Seva Kendras (PSKs) and surrender their passports.

According to the Overseas Indian Affairs, a total of 16,91,058 persons have been registered as OCIs as on January 19 this year.

The Overseas Citizenship of India (OCI) Scheme was launched in August 2005 by amending the Citizenship Act, 1955, and become operational in January 2006.


The scheme, presently operated by Home Ministry, provides for registration as OCIs of all persons of Indian origin (PIOs), who were Indian citizens from January 26, 1950 or were eligible to become Indian citizens on that date and who are citizens of other countries, except Pakistan and Bangladesh.

கச்சத்தீவை மீட்கும் முரசு

logo

இப்போதெல்லாம் தமிழக கடலில் போய் மீன்பிடிக்கவே முடியவில்லை. எப்போதுமே மீனவர்களுக்கு மீன் எங்கே இருக்கிறது, எங்கே வலையைப்போடலாம் என்ற ஆர்வத்தைவிட, தூரத்தில் ஒரு விசைப்படகு தெரிகிறதே, இலங்கை கடற்படை படகாக இருக்குமோ, நம்மை தாக்குவார்களோ, பிடித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்த்துக்கொண்டு இருப்பதே வேலையாகப்போய்விட்டது. ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை பிடித்துக்கொண்டு போய்விட்ட செய்தி கிடைத்ததும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு அவசர கடிதம் எழுதி அவர்களை விடுவிப்பது வாடிக்கையாகிவிட்டது.

இப்போது நாகப்பட்டினம் கடல்பகுதியில் 2 மீன்பிடி படகுகளில் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்த 15 மீனவர்களை கடந்த திங்கட்கிழமை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறைக்கு கொண்டுசென்றுவிட்டனர். இதுதொடர்பாக உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள ஜெயலலிதா முக்கியமாக, நீண்டநாட்கள் நிலுவையில் உள்ள கச்சத்தீவு பிரச்சினை குறித்து தீவிர அழுத்தத்தை கொடுத்துள்ளார். ‘‘கச்சத்தீவுக்கு அருகில் பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை இவ்வாறு கைது செய்வது மீனவ சமூகத்தினரிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1974 மற்றும் 1976–ம் ஆண்டுகளில் அரசியல் சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட இந்திய–இலங்கை ஒப்பந்தம் ரத்து செய்யப்படவேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை விரைவில் திரும்பப்பெறவேண்டும். இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லை பிரச்சினையை ஒரு முடிந்துபோன பிரச்சினையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த விவகாரம் இந்திய உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. நான் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. நான் தொடர்ந்துள்ள வழக்கின் முக்கிய சாராம்சம் ‘‘கச்சத்தீவை திரும்பப்பெறும் வகையில் அரசியல் சாசனத்தில் உரிய திருத்தம் செய்வதற்கான வழிவகை இல்லாத காரணத்தால், 1974, 1976–ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் 1976–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை செயல்படுத்தாமல் ரத்து செய்யப்படவேண்டும்’’ என்பதேயாகும். கச்சத்தீவு இந்தியாவின் ஒருபகுதி என்பதே உங்களின் நிலைப்பாடும் ஆகும். புவியியல் ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும், இந்தியாவின் ஒருபகுதியாகவும் உள்ள கச்சத்தீவை திரும்பப்பெற வேண்டும்’’ என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்புவரை கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்திருக்கிறது. அதன்பிறகுதான் இந்திய நாட்டுடன் இணைக்கப்பட்டது. இதற்கு சரித்திர சான்றுகள் ஏராளம் இருக்கிறது. கச்சத்தீவை மீட்போம் என்ற குரல் இதுவரையில் எல்லோராலும் எழுப்பப்பட்டாலும், இப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள இந்த கடிதம் போர் முரசு அடித்ததுபோல இருக்கிறது. இனி ஒரு புதிய வேகத்தோடு ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாக இணைந்து இந்த கோரிக்கையை மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தவேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் பல முடிவுகள் பா.ஜ.க. அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவை தாரைவார்த்தது தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்தான். 1974–லிலேயே பாராளுமன்றத்தில் ஜனசங்க தலைவராக இருந்த வாஜ்பாய், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கையெழுத்தாகி இருப்பது ஒப்பந்தம் அல்ல, சரணாகதி என்றார். அந்த கட்சியைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் அந்த ஒப்பந்த பிரதியைக் கிழித்தெறிந்தார். வாஜ்பாயின் கனவுகளையெல்லாம் நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, வாஜ்பாயின் எதிர்ப்பான கச்சத்தீவை தாரைவார்த்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மீட்க இந்த போர்ப்படைக்கு தலைமை தாங்கவேண்டும்.

கைகொடுக்கும் "கட்டுச்சோறு'

Dinamani


By ஜீவி. சொர்க்கநாதன்

First Published : 25 September 2015 01:07 AM IST


அந்தத் தொலைதூர விரைவுப் பேருந்து, பயண வழி உணவகம் ஒன்றில் மதிய உணவுக்காக நின்றது. பேருந்திலிருந்து இறங்கிய சில பயணிகள் பசியாற உணவகத்துக்குள் புகுந்த சிறிது நேரத்தில் கூச்சல். உணவக உரிமையாளருடன் சிலர் கடும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
பிரச்னை வழக்கமானதுதான், உண்ணத் தகுதியற்ற அந்த உணவுக்கு இரு மடங்கு விலையாம். அதிகாரிகளிடம் புகார் செய்வோம் என கொதித்தனர். அதை லட்சியம் செய்யாத உணவக உரிமையாளர், காசைக் கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் புகார் செய் என்றார்.
கட்டாயத் தேவை, மாற்று வழியின்மை என்ற பயணிகளின் பலவீனமான நிலையே பயண வழி உணவகங்களின் பலமாக மாறிவிட்டிருக்கிறது.
இன்று பெரும்பாலான பிரயாணங்கள் இதுபோன்ற பயண வழி உணவுகளை நம்பியே தொடங்கி சிரமத்தில் முடிகின்றன. அதேவேளையில், அந்த உணவுகளால் அதிக விலையில், வயிற்று உபாதை, மன உளைச்சல் நிச்சயம்.
ஆனால், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரயாணங்கள் சுவையான உணவுடன் கூடிய ஒரு சுகானுபவமாக இருந்தது. பிரயாணம் என்றாலே உற்சாகம்தான். காரணம் - கட்டுச்சோறு.
இந்தக் கட்டுச்சோறு இடையில் வந்ததல்ல. பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த முறை அது. சங்க காலத்திலேயே கட்டுச்சோறு பழக்கம் இருந்திருக்க வேண்டும். சிந்தாமணி நிகண்டில் கூட "தோட்கோப்பு' எனும் சொல் கட்டுச்சோறு என்ற அர்த்தத்தில் கையாளப்பட்டுள்ளது.
கட்டமுது, கட்டுச்சாதம், வழிநடை உணவு, வழிச்சோறு, பொதிச்சோறு போன்ற பெயர்களும் இதற்குண்டு. ஆரம்பத்தில் காட்டில் வேட்டையாடுவோர், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச்செல்வோர் பசியாற கட்டுச்சோறு கொண்டுச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். நாளடைவில் பிரயாணங்களில் இந்த உணவு பிரதான இடம் பிடித்தது.
நெல்சோறு புழக்கத்துக்கு வரும் வரை கேழ்வரகு, தினை, கம்பு போன்ற சிறுதானிய உணவுகளை பக்குவப்படுத்தி ஈரத் துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி, பிரயாணங்களின்போது தோளில் சுமந்து செல்லப்பட்டது.
நெல்சோறு தாராளப் புழக்கத்துக்கு வந்தபிறகு, கட்டுச்சோறு உணவுகளில் முதலிடம் புளிச்சோறுக்குத்தான். இடிப்பு மசாலா மற்றும் பெருங்காயம் கலந்த புளிக் கரைசலைக் காய்ச்சி சுடுச் சோற்றில் ஊற்றிக் கிளறி, நல்லெண்ணெய்யில் தாளிக்கும் இந்த உணவு, குறைந்த பட்சம் இரு நாளுக்குக் கெடாது.
கட்டுச்சோற்றுக்கு தொட்டுக்கொள்ள காய்கறி பிரட்டல், எள்ளுப்பொடி, துவையல் என ஏதாவதொன்று இருக்கும்.
காடு, கழனி, ஆறு, மலை கடந்து செல்லும் பிரயாணமாக இருந்தால், கட்டுச்சோற்றை தீய ஆவிகள் தீண்டாமல் இருக்க, வாசனையை உள்ளிழுத்துக் கொள்ளும் அடுப்புக் கரித்துண்டையும் அதிலிட்டு கொண்டு செல்வதுண்டு. நடை களைப்பில், நீர் நிலையோரம் மரம் தரும் குளிர் நிழலில் அமர்ந்து உண்ணும் கட்டுச்சோறுக்கு அமுதமும் இணையில்லைதான்.
அதன்பிறகு துணி மூட்டையிலிருந்து பாத்திரங்களுக்கு கட்டுச்சோறு இடம் பெயர்ந்தது. குடும்பத்தினரோடு கோயில் திருவிழா, வெளியூர் பிரயாணம் என்றால் சிறிய அண்டா அல்லது குத்துசட்டியிலிட்டு கட்டுச்சோறு கொண்டு செல்லும் பழக்கம் வழக்கத்துக்கு வந்தது.
கூட்டத்தில் கட்டுச்சோற்றை அவிழ்க்காதே என்று சிலர் சிலேடை மொழியில் சொல்லக் கேட்கலாம். ஆனால், அன்றைய கட்டுச்சோறு கமகமக்கும். ஏனெனில், அப்போதெல்லாம் வீட்டுச் சமையல்கூட கமகமதான்.
ஆனால், இன்று பெரும்பாலான வீடுகளில் சமையல் சுவையை நிர்ணயிப்பது மசாலா நிறுவனங்களாக இருப்பதால், கைப்பக்குவம் என்ற சொல், தானாகவே அர்த்தம் இழக்கத் துவங்கியிருக்கிறது.
பிரயாணத்தின் போது, ஆரோக்கியமான உணவுச் செüகரியங்கள் இராது என்பதால் மட்டுமல்ல, செலவுச் சிக்கனம் கருதியும் கட்டுச்சோறு முறை கடைபிடித்து வந்தனர்.
எனினும், மாட்டு வண்டி, பொட்டி வண்டி, குதிரை வண்டிகளிலிருந்து பேருந்து, ரயில் போன்ற இயந்திர வாகனங்களுக்கு பிரயாணங்கள் இன்று மாறிவிட்டாலும், அதே உணவு அசெüகரியங்கள் தொடர்கின்றன.
பிரயாண வழியில், நியாயமான விலைக்கு ஆரோக்கியமான - தரமான உணவு சாத்தியமில்லை; உடலுக்கு ஊறு செய்யும் என்பது தெரிந்தும், அதுபோன்ற உணவுகளை ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தை, பலரும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
கட்டுச்சோறு உணவைப் பிரயாணங்களில் கொண்டு செல்வதில் பலரிடம் ஒருவித தயக்கம் இருக்கிறது. சிலர் அதனைக் கெüரவக் குறைவாகவும் கருதுகின்றனர். மேலும், ஓரிரு பொழுது உணவுதானே, சமாளித்துக் கொள்ளலாம் என்ற அலட்சிய எண்ணமும் ஒரு காரணம்.
கட்டுச்சோறு என்பது பொட்டலமாகக் கட்டப்படும் புளிச்சோறு, எலுமிச்சைச் சோறு, தயிர்ச்சோறு மட்டுமே ஆகாது. வீட்டில் அக்கறையுடன் தயாரித்து கட்டிக்கொண்டு அல்லது எடுத்துக் கொண்டு செல்லும் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, கொறிக்கும் உணவுகள் உள்ளிட்ட எல்லா உணவுகளுமே கட்டுச்சோறு வகையறாதான். இதுபோன்ற உணவுகளை பிரயாண பொழுதுகளுக்கேற்றபடி தயாரித்துக் கொண்டு செல்லலாம்.
குழந்தைகளுடன் பயணிப்போருக்கு இது உகந்ததாக இருக்கும். பிரயாணப் பொழுதில் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவோருக்கு கட்டுச்சோறுதான் சாலச்சிறந்தது.

இது காலக் கட்டாயம்!


Dinamani


By ஆசிரியர்

First Published : 24 September 2015 01:19 AM IST


ஒவ்வொரு தொழிலாளிக்கும், கடைக்கும் வார விடுமுறை கட்டாயமாக உண்டு. அதேபோல, மகிழுந்துகளுக்கும் (கார்) ஒரு நாள் வார விடுமுறை விடுத்தால் என்ன என்ற எண்ணம் இலேசாகத் தோன்றி, அழுத்தமாகப் பரவியதன் விளைவாக, ஹரியாணா மாநிலத்தில் குர்கான் நகரில் செப்டம்பர் 22-ஆம் தேதி மகிழுந்து ஓய்வு நாள் (CAR FREE DAY) அனுசரிக்கப்பட்டது.
முதலில் இது வெற்றி பெறுமா என்ற அவநம்பிக்கை இருந்தாலும், கடந்த செவ்வாயன்று விடுக்கப்பட்ட அழைப்புக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. பல லட்சம் மகிழுந்துகள் புழங்கிய சாலைகளில் அன்றைய தினம் மொத்தம் சுமார் 10,000 மகிழுந்துகள் மட்டுமே காணப்பட்டன. குர்கான் நகரின் காற்று மாசு அளவு, அன்றைய தினம் வழக்கத்தைவிட 21% குறைவாக இருந்தது. பேருந்துகளில் வழக்கத்தைவிட ஒன்றரை மடங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், கூடுதல் பேருந்துகள் விடப்பட்டன. ரயில்களில் வழக்கத்தைவிட 10% பயணிகள் அதிகமாக இருந்தனர்.
மகிழுந்துகளின் நெரிசல் சாலைகள் முற்றிலும் இல்லாமல் இருந்தது என்பது மட்டுமன்றி, பல்வேறு வணிக வளாகங்களின் தரைத்தளத்தில் நிறுத்தப்படும் மகிழுந்துகளின் எண்ணிக்கை மிகச் சிலவாகவே இருந்தன. வழக்கமாக 1,500 மகிழுந்துகள் நிறுத்தப்படும் முக்கிய நகர்ப் பகுதியில், அன்றைய தினம் மகிழுந்துகளே இல்லாமல் வெற்றிடமாக இருந்தது.
அதுமட்டுமல்ல, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பெட்ரோல், டீசலை நிரப்பின. மகிழுந்துகள் மிகமிக அரிதாகவே இருந்தன. இதனால், பெட்ரோல் விற்பனை பாதியாகக் குறைந்தது. இது விற்பனை நிலையத்துக்கு தனிப்பட்ட இழப்பாக இருப்பினும், தேசத்துக்கு மிகப் பெரிய லாபம்தான்.
கணினி நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் குர்கானில் பல லட்சம் ரூபாய் சம்பளம் பெறுவோரும்கூட பேருந்து, மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தினர். பலர் சைக்கிளில் பயணம் செய்தனர். நகரின் காவல் துறை ஆணையர் நவதீப் சிங், போக்குவரத்துக் காவல் ஆணையர் பாரதி அரோரா ஆகியோருடன் காவலர்களும்கூட சைக்கிளில் அலுவலகம் வந்தனர்.
மகிழுந்து ஓய்வு நாள் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, குர்கானில் அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மகிழுந்து ஓய்வு நாளாக அனுசரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தில்லியில் அடுத்த மாதம் அக்டோபர் 22-ஆம் தேதி இதேபோன்று மகிழுந்துகளுக்கு ஓய்வு நாள் அனுசரிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, வேறு நகரங்களுக்கும் இதை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வோர் ஊரிலும் வாரத்தில் ஒரு நாள், பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்படுவது பல காலமாக தொடர்ந்து வரும் வழக்கம். அத்தகைய நாள்களில் மிகச் சில கடைகளே திறந்திருக்கும். சில ஊர்களில் இந்த வார விடுமுறை தொழிலுக்கு ஏற்றபடி மாறியிருப்பதும் உண்டு. தங்க நகைக் கடைகள் இருக்கும் பகுதிகளுக்கு ஒரு நாளாகவும், வெல்ல மண்டி, அரிசி மண்டி, வெங்காய மண்டி ஆகியவற்றுக்கு வேறொரு நாளும் வார விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுவது உண்டு. இதெல்லாம் அந்தந்த ஊரின் பழக்க வழக்கம், அப்பகுதியின் வாரச் சந்தையைப் பொருத்து அமையும். சில ஊர்களில் சரக்கு லாரிகள் நிறுத்த இடமில்லாததால் ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும் ஒரு நாள் விடுப்பு என வணிகர்கள் அவர்களுக்குள்ளாகவே தீர்மானித்துக்கொள்வது உண்டு. இதுபோன்ற நடைமுறைதான் தற்போது மகிழுந்துகளுக்கு ஓய்வு நாள் அனுசரிக்கும் திட்டமும்.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னையில் 7.95 லட்சம் வீடுகளில் மகிழுந்துகள் இருக்கின்றன. தற்போது இந்த எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கக் கூடும். இவை தவிர, சென்னைக்கு வெளியூர்களிலிருந்து நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மகிழுந்துகள் வந்து செல்கின்றன. வாரத்தில் ஒருநாள் சென்னையில் மகிழுந்து ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டால், வெளியூர்களிலிருந்து வரும் மகிழுந்துகள் மற்றும் உள்ளூரில் இன்றியமையாத் தேவைக்காக இயங்கும் மகிழுந்துகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சமாக இருக்கும். பத்தில் ஒரு பங்காக மகிழுந்துகளின் எண்ணிக்கை குறையும்போது சென்னை சாலைகளில் நெரிசல் நிச்சயமாகக் குறைந்திருக்கும்.
இவ்வாறு மகிழுந்து ஓய்வு நாள் அனுசரிக்கும்போது, காரில் செüகரியமாகச் சென்று பழக்கப்பட்ட வசதி படைத்தோரும், உயர் அதிகாரிகளும் நெரிசல் இல்லாத பொதுப் போக்குவரத்தையே விரும்புவர். மகிழுந்து ஓய்வு நாளில் அதிக எண்ணிக்கையில் கூடுதலான பேருந்துகளை இயக்கி, பொதுப் பயணத்தை இலகுவாக்குவதன் மூலமும், புறநகர் ரயில் போக்குவரத்தில் கூடுதல் பெட்டிகளை, குறிப்பாக, முதல் வகுப்புப் பெட்டிகளைக் கூடுதல் எண்ணிக்கையில் இணைப்பதன் மூலமும் பலரையும் பொதுப் போக்குவரத்துப் பயணத்துக்கு ஈர்க்க முடியும்.
மகிழுந்துகளுக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்தால், சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்துக்கும் புத்துணர்வை ஏற்படுத்த முடியும். அதேநேரத்தில், இந்த முயற்சி வெற்றி பெற்று, மக்கள் பெருமளவில் பொதுப் போக்குவரத்தை நாடும்படி செய்வதற்குப் பேருந்துகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, வசதிகளும் அதிகரித்தாக வேண்டும். பேருந்துகளின் காலம் மேலைநாடுகளில் அநேகமாக முடிந்துவிட்டது. சொகுசு சிற்றுந்துகள்தான் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. மகிழுந்துகளில் பயணிக்கும் வசதியுடனான சொகுசு சிற்றுந்துகளும், மெட்ரோ, புறநகர் ரயில்களும் அதிக அளவில், சற்று அதிகமாகவே இருந்தாலும்கூட, இயக்கப்பட்டால்தான் போக்குவரத்து நெரிசலும் குறையும். சுற்றுச்சூழல் மாசும் கட்டுக்குள் இருக்கும்.

Thursday, September 24, 2015

இன்பாக்ஸ் பாதுகாப்பு

Return to frontpage

சைபர்சிம்மன்


‘உங்கள் இ-மெயிலை இங்கே சமர்ப்பிக்கவும்’- இணைய சேவை அல்லது செயலிகளைப் பயன்படுத்த முயலும்போது வரவேற்கும் இந்த வாசகம். இ-மெயில் முகவரியைச் சமர்ப்பிக்கலாமா, வேண்டாமா? தேவையில்லாத குப்பை மெயில்கள் (ஸ்பேம்) இன்பாக்ஸுக்கு வந்துவிடுமோ-என்றெல்லாம் தோன்றும்.

இந்த இணைய எச்சரிக்கை தேவையானதுதான். ஆனால் இதற்குத் தீர்வாகத் தற்காலிக மெயில் சேவைகள் இருக்கின்றன. அதாவது ஒருமுறை பயன்படுத்திய பிறகு மறந்துவிடக்கூடிய இ-மெயில் சேவைகள். கொரில்லா மெயில், 10 மினிட் மெயில் என்று பல சேவைகள் இருக்கும் இந்தப் பிரிவில் மெயில்டிராப் புது வரவு.

இணையவாசிகள் தங்களது சொந்த இ-மெயில் முகவரியைச் சமர்ப்பிக்க வேண்டாம் என நினைக்கும் இடங்களில் எல்லாம் மெயில்டிராப் முகவரியை மாற்று மெயில் முகவரியாகப் பயன்படுத்தலாம்.

இதில் புதிய முகவரியை உருவாக்கிக் கொள்வது மிகவும் சுலபம். மனதில் தோன்றிய ஒரு பெயரை இதில் சமர்ப்பித்துத் தற்காலிக மெயில் முகவரியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-மெயில் முகவரியை எந்தத் தளத்தில் வேண்டுமானாலும் தைரியமாக சமர்ப்பிக்கலாம். அதே நேரத்தில் அந்த இணையதளத்தின் அறிவிப்பைப் பார்க்க வேண்டும் என்றால் மெயில்டிராப் தளத்தில் நுழைந்து உங்கள் இ-மெயில் கணக்கை இயக்கிக்கொள்ளலாம். பதிவு செய்வது, பாஸ்வேர்டு உருவாக்குவது என எந்தத் தொல்லையும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய தற்காலிக மெயில் சேவை இது.

இணையதள முகவரி: http://maildrop.cc/

Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 1.7.2015


Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 1.7.2015

No.1/2/2015-E-II (B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure
North Block, New Delhi
Dated: 23rd September, 2015.
OFFICE MEMORANDUM

Subject: Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 1.7.2015

The undersigned is directed to refer to this Ministry’s Office Memorandum No.1/2/2015-E-II (B) dated 18th September, 2015 on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 113% to 119% with effect from 1st July, 2015.

2. The provisions contained in paras 3, 4 and 5 of this Ministry’s O.M. No. 1(3)/2008-E-II(B) dated 29th August, 2008 shall continue to be applicable while regulating Dearness Allowance under these orders.

3. The additional installment of Dearness Allowance payable under these orders shall be paid in cash to all Central Government employees.

4. These orders shall also apply to the civilian employees paid from the Defence Services Estimates and the expenditure will be chargeable to the relevant head of the Defence Services Estimates. In regard to Armed Forces personnel and Railway employees, separate orders will be issued by the Ministry of Defence and Ministry of Railways, respectively.

5. In so far as the employees working in the Indian Audit and Accounts Department are concerned, these orders are issued with the concurrence of the Comptroller and Auditor General of India.

Sd/-
(A. Bhattacharya)
Under Secretary to the Government of India

Authority: www.finmin.nic.in

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் 2,495 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தற்காலிக தடை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் தகவல்



தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தால், 2,495 வழக்கறிஞர்கள் தற் காலிகமாக வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று உத்தர விடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2010-ம் ஆண்டுக்குப் பிறகு சட்டக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த பிறகு அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் இரண்டு ஆண்டு களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் வழக்கறிஞராக தொடர்ந்து பணிபுரிய முடியும். தேர்ச்சி பெறாவிட்டால், வழக் கறிஞருக்கான பதிவு தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன.

2010-ம் ஆண்டுமுதல் இது வரை அகில இந்திய பார் கவுன்சில் 8 தகுதித் தேர்வுகளை நடத்தியுள்ளது. பதிவு செய்த நாளில் இருந்து இரண்டு ஆண்டு களுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறி ஞர் தொழில் செய்வதை தற்காலிக மாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞராக தொழில் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

20-3-2015 அன்று சில வழக்கறி ஞர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கினார்கள். அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக வழக்கறிஞர்கள் வி.மணிகண்டன், ஆர்.மதன்குமார் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இருவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாகனம் தயாரிப்பவர்களே 2 ஹெல்மெட் தர வேண்டும்: மத்திய அரசு ஆணையிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



இருசக்கர வாகனத்துடன் சேர்த்து தரமான 2 ஹெல்மெட்களை வாகன தயாரிப்பாளர்களே வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தியது தொடர்பான அறிக் கையை அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், ஹெல்மெட் அணியாததால் ஜூன் மாதம் 582 பேர், ஜூலை மாதம் 498 பேர், ஆகஸ்ட் மாதம் 571 பேர், செப்டம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை 289 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது, ஜூலை மாதம் மட்டும் ஹெல்மெட் கட்டாய உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அவ்வாறு அமல்படுத்தப் படவில்லை என்று தெரிகிறது.

நகரங்கள், சிறிய நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிகின்றனர். கிராமப்புறங்களில் ஹெல்மெட் கட்டாய உத்தரவு சரிவர அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் கட்டாய உத்தரவை மாநிலம் முழுவதும் அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

ஹெல்மெட் வடிவமைப்பு, தயாரிப்பு தொடர்பாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.

மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 138 (எப்)-ன்படி இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் வாகனத்துடன் சேர்த்து ஹெல்மெட் தரவேண்டும். பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதால், இந்திய தர நிர்ணய அமைப்பு நிர்ணயித்துள்ள தரத்துடன் கூடிய 2 ஹெல்மெட்டுகளை வாகனத்துடன் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இதன்மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் தரமற்ற ஹெல்மெட் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். ஹெல்மெட்டை வைத்து பூட்டுவதற்கான வசதியுடனேயே இருசக்கர வாகனங்களை தயாரிக்கவும் மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

ஹெல்மெட் அணியாமல் விபத் தில் சிக்கி அரசு மருத்துவமனை களுக்கு கொண்டுவரப்பட்டு இறந்தவர்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்கள் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க உத்தரவிடும்படி அரசு சிறப்பு வழக்கறிஞர் வேணுகோபால் கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கண்ட தகவல்களை தனியார் மருத்துவமனைகளில் இருந்து அரசு பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

முன்னதாக விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன், ‘‘ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்பு தொடர்பான வீடியோ காட்சிகளை ஓட்டுநர் உரிமம் வழங்கும்போது காண்பிக்கலாம். ஹெல்மெட் விழிப்புணர்வு முயற்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஹெல்மெட் கட்டாயம் என்பதை மக்கள் இயக்கமாகவே மாற்ற வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்தார்.

கல்விக் கடன் செலுத்தாதவரை பணியிலிருந்து நீக்க முடியுமா? - பயனாளி - வங்கிக்கிளை மோதல்

Return to frontpage

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின் ஊழியரான குப்புசாமி, தன் மகளுக்கு வாங்கிய கல்விக் கடனை செலுத்தாததால், மகளை வேலையைவிட்டு நீக்க வங்கி அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பியுள்ளார்.

புகார் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர், “என் மகள் மீராவின் பல் மருத்துவப் படிப்புக்காக மன்னார்குடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் 2006-ல் கல்விக் கடன் பெற்றேன். 2 தவணைகளில் ரூ.1.98 லட்சம் வழங்கினர். என் பெயரில் தனிச் செலவுக் கடன் (Personal Loan) இருப்பதாகச் சொல்லி 3-வது தவணையை தர மறுத்துவிட்டனர். அந்த பாக்கியைச் செலுத்தியதும், 26.05.2010-ல் ரூ.2.47 லட்சத்தை ஒரே தவணையாக வழங்கினர்.

இந்நிலையில், 09.10.2014-ல் ரூ.9,98,850 கல்விக் கடன் பாக்கி இருப்பதாக தகவல் வந்தது. ரூ.4.45 லட்சம் வாங்கியதற்கு இவ்வளவு பெரிய தொகையை சொல்கிறீர்களே? என்று கேட்டதும் முரண்பட்ட கணக்குகளைச் சொல்லி, பின்னர் ரூ.7,59,467 பாக்கி இருப்பதாக 24.08.2015-ல் ஒரு கடிதம் அனுப்பினர்.

இதற்கிடையில், அதே வங்கி யில் எனக்கிருந்த நகைக் கடன் பாக்கியைச் செலுத்திவிட்டு நகையைத் திருப்ப முயன்றபோது, கல்விக் கடன் நிலுவையில் இருப்பதால், தவணையை வரவு வைக்க உள்ளதாகக் கூறி நகையை ஏலம் விட்டனர்.

இதுவரை, 4-5 தவணைகளாக ரூ.39,000 வரை கட்டியுள்ளேன். ஆனால், மாதம் ரூ.30,000, ரூ.40,000 கட்டுங்கள் என்கின்றனர். மின்வாரியத்தில் காசாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றதாலும், என் மகள் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவராகப் பணிபுரிவதாலும், வங்கி கூறும் தொகையைக் கட்ட இயலவில்லை. எனினும், இருதய நோயாளியான எனக்கு வங்கி அதிகாரிகள் தொடர்ந்து மன உளைச்சல் கொடுத்ததால் நியாயம் கேட்டு, ரிசர்வ் வங்கி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அனுப்பி னேன். அதற்கும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இப்போது முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியில் இருக்கும் என் மகளை வேலையை விட்டு நீக்கும்படி மருத்துவத் துறையினரை வங்கி அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர்” என்றார்.

கொடுத்தது ரூ.5,49,600

இதுகுறித்து மன்னார்குடி பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளை மேலாளர் ஆர்.தியாகராஜனிடம் கேட்டபோது, “நான், 2013-ல் இங்கு மேலாளராகப் பொறுப்பேற்றேன். வங்கியில் உள்ள பதிவேடுகளின்படி மீராவுக்காக, அவர் படித்த கல்லூரி பெயருக்கு, குப்புசாமியிடம் மொத் தம் ரூ.5,49,600 கல்விக் கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடன் பெற்று, 10 ஆண்டுகளாகியும், அவர் மாதத் தவணையை கட்டாததால், வட்டி சேர்ந்து விட்டது. முறையாக கடன் தவணை செலுத்தியிருந்தால் இந்த அளவுக்கு வட்டி உயர்ந்திருக்காது.

அரசு அளித்த வட்டி தள்ளு படியும் கிடைத்திருக்கும். அதனால் தான், கூடுதலாக கட்டும்படி கூறினோம். மாதாந்திர கடன் தொகை, அதற்கான பட்டியல் அனைத்தையும் குப்புசாமி பெற்றுக் கொண்டு, கையெழுத்திட்ட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. எங்கள் தரப்பில், அவருக்கு எல்லா வாய்ப்புகளும் அளிக்கப்பட்டன. ஆனால், அவர் கடன் தொகையை கட்டக் கூடாது என்பதற்காக, பல் வேறு குறுக்கு வழிகளை கையாள் கிறார்.

தனிச் செலவுக் கடனுக்காக, கல்விக் கடன் தவணை 6 மாதங் கள் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. அடமானம் வைத்து மூன்றாண்டு களுக்கு மேலாகிவிட்டால் நகை களை ஏலம் விடுவதுதான் வங்கி நடைமுறை. கல்விக் கடன் தொடர் பாக மக்கள் நீதிமன்றத்துக்கு குப்புசாமியை அழைத்து, ‘அசலை மட்டுமாவது ஒரே தவணையில் செலுத்துங்கள்’என்றோம். ஆனால், அவர் அசலையும் குறைக்க வேண்டும் என்கிறார். இதெப்படி முடியும்? அவருடைய மகள் கல்விக் கடன் பெற்றிருப்பது குறித்து மருத்துவத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். வேலையை விட்டு நீக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கவில்லை” என்றார்.

வங்கிகள் செய்யும் 26 தவறுகள்

இப்பிரச்சினை தொடர்பாக பேசிய கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.ராஜ்குமார், “தனிச் செலவு கடன் பாக்கிக்காக கல்விக் கடன் தவணையை நிறுத்தி வைக்கவோ, கடன் வாங்கியவரின் மகளை வேலையைவிட்டு நீக்கச் சொல்லவோ வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லை. கல்விக் கடன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் வங்கிகள் செய்யும் 26 வகையான தவறுகளைச் சரிசெய்யுங்கள் என்று மனிதவள மேம் பாட்டு அமைச்சகம், இந்திய வங்கிகள் சங்கத்துக்கு சில வங்கி களைக் குறிப்பிட்டு 27.05.2015-ல் கடிதம் எழுதியுள்ளது” என்றார்.

தவணை விவரத்தை தெரிவிக்கவில்லை

பல் மருத்துவர் கு.மீரா கூறியபோது, “கல்விக் கடன் வாங்கும்போது, படித்து முடித்த பின்னர், மாதம் ரூ.8,000 கட்ட வேண்டும் என்றனர். எத்தனை மாதம் கடன் கட்ட வேண்டும், அதற்கான மாதாந்திர கடன் நிலுவைப் பட்டியல், மாதத் தவணைத் தொகை எவ்வளவு என்பது போன்ற எந்த விவரத்தையும் வங்கி தெரிவிக்கவில்லை” என்றார்.

சினிமா எடுத்துப் பார் 27- எம்.ஜி.ஆர் வீட்டு சிக்கன் நெய் ரோஸ்ட்! எஸ்பி.முத்துராமன்

Return to frontpage

கடந்த வார கட்டு ரையை ‘எம்.ஜி.ஆரை வைத்து நான் ஏன் படம் இயக்கவில்லை’ என்று கேட்டு முடித்திருந்தேன். நடிப்பு துறையில் இருந்து அரசியல் துறைக்கு வந்து முதலமைச்சராக ஆனதும் அவர் நடிக்கவில்லை. அதனால் அவரை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக எல்லோருக்கும் எல்லா ஆசைகளும் நிறைவேறுவது இல்லை. அதைப் போல எனக்கு எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அது நிறைவேறாத ஆசையாகவே ஆகிவிட்டது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனதும் ஒருமுறை படம் பார்க்க ஏவி.எம் ஸ்டுடி யோவுக்கு வந்தார். இந்தத் தகவல் ஸ்டுடி யோவில் இருந்த எல்லோருக்கும் தெரிய வர, எல்லோரும் தியேட்டர் வாசலுக்குப் போய் நின்றுவிட்டோம். படம் பார்த்து விட்டு வெளியே வந்தவர் எங்களை எல்லாம் பார்த்ததும் ரொம்பவும் சந் தோஷப்பட்டார். என்னைப் பார்த்தார். அவரை நான் இரு கைக் கூப்பி வணங்கி னேன். என் அருகில் வந்து, ‘‘உனக்கு என்ன வேணும்?’’னு கேட்டார். எதுவும் புரியாத வனாக நின்றேன். மீண்டும் ஒருமுறை, ‘‘உனக்கு என்ன வேணும்?’’ என்றார். ‘‘உங்க வீட்டுல செய்ற சிக்கன் நெய் ரோஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும். அது வேணும்’’னு கேட்டேன்.

ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு ‘‘யாரெல்லாமோ, என் னென்னமோ கேட்குறாங்க… நீ போயி!’’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். அடுத்த நாள் மதிய சாப்பாட்டு நேரம். எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்து வந்த ஓர் ஆள், ‘‘உங்களுக்கு எம்.ஜி.ஆர் சிக்கன் நெய் ரோஸ்ட் கொடுக்க சொன்னார்’’ என்று சொல்லி ஒரு கேரிய ரைக் கொடுத்தார். வியந்து போனேன். எம்.ஜி.ஆர் இருக் கும் பிஸியில் ஓர் உதவி இயக்குநர் கேட்டதை எல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா? முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாட்சி. எம்.ஜி.ஆர் எனக்கு ‘கலைமாமணி’ விருது கொடுத்து கவுரவித்தார் என்பதை நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அதை திரை யுலகம் ஒன்றுசேர்ந்து கொண்டாடியது. கலைக் கல்லூரி எதிரில் ஒரு பெரிய மேடை அமைத்து, அதில் எம்.ஜி.ஆர் நிற்க, திரையுலகினர் அனைவரும் ஊர்வலமாக வந்து அவரை வாழ்த் தினர். பெரிய விழாவாக அது கொண் டாடப்பட்டது. அந்த விழாவில் ஏவி.எம். சரவணன் சார் எல்லோருடைய சார்பிலும் வெள்ளி கோப்பை ஒன்றை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ் திரையுலகமே பாராட்டுகிற காட்சியாக அந்த விழா அமைந்தது.

எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச் சைப் பெற்றுக்கொண்டிருந்தபோது உல கமே அவர் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்டது. சர்ச், மசூதி, ஆலயங்களில் எல்லாம் மத வேறுபாடின்றி பிரார்த்தனை செய்தார்கள். எம்.ஜி.ஆருக்காக உலகம் முழுக்க ஒருமைப்பாட்டோடு வழிபாடு நடந்தது. அத்தனை பேரின் அன்பினால் எம்.ஜி.ஆர் அவர்கள் குணமாகி சென்னை வந்தார்கள். இங்கு வந்ததும் அவருக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க மருத்துவர் டாக்டர் எலி ப்ரீட்மேன் அவர்களுக்காக ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கான ஏற்பாடுகளிலும் சரவணன் சார் அவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். மருத்துவரிடம் ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று சரவணன் சார் கேட்டார். அப்போது அவர், ‘‘ ‘அன்பே வா' படத்தில் எம்.ஜி.ஆர் இருப்பதுபோல போஸ்டர் வேண்டும்’’ என்றார். வெளி நாட்டு மருத்துவர் ஒருவர் கொண்டாடும் அளவுக்கு எம்.ஜி.ஆர் பெயர் பெற்றிருந் தார். அவரது விருப்பத்தை சரவணன் சார் நிறைவேற்றினார். மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி!

எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் தலையீடு அதிகமாக இருக்கும் என்று அப்போது பரவலாக ஒரு பேச்சு இருந்தது. ‘அன்பே வா’ படத்தில் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிந்த பிறகு எந்தவிதத்திலும் அவர் தலையிடவில்லை. இந்த சந்தேகத்தை அவரிடமே கேட்க வேண்டும் என்ற ஒரு யோசனை தோன்றியது. எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர் ராஜேந்திரன் நாடக கம்பெனியில் இருந்து வந்தவர். நகைச்சுவையாக பேசக் கூடியவர். சாதரணமாக எம்.ஜி.ஆரிடம் பேசுவார். அவர் கேட்டால்தான் சரியா இருக்கும் என்று எம்.ஜி.ஆரிடம் அவரை அனுப்பினோம். அவர், எம்.ஜி.ஆரிடம் ‘‘நீங்க படப்பிடிப்பில் எல்லா விஷயத் திலும் தலையிடுவீங்கனு கேள்விப்பட் டோம். இங்கே எதிலுமே தலையிடவில் லையே?’’ என்று கேட்டார். ‘‘ஓ.. அப்படி ஒரு பேச்சு இருக்கா?’’ என்று கேட்டவர், அங்கே இருந்த எங்கள் எல்லோரையும் அருகே அழைத்தார்.

‘‘நான் நடிகன் மட்டுமல்ல. டெக்னீஷியனும்கூட. ஒரு வேலையைத் தப்பா செய்யும்போது அதைப் பார்த்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியாதே. முகத்தில் குத்து விழுவதுபோல காட்சி எடுக்கும்போது கேமராவை சரியான கோணத்தில் வைத்து எடுத்தால்தான் ரியலாக முகத் தில் குத்து விழுவதுபோல இருக் கும். கேமரா கோணத்தைத் தவறாக வைத்தால் காட்சி சரியாக அமையாது. அதனால் கேமராவை சரியான கோணத் தில் வைக்குமாறு கூறுவேன். எப்போதும் தவறைத்தான் சுட்டிக் காட்டுவேனே தவிர, மற்றபடி தேவையில்லாமல் தலையிடு வதில்லை. ‘அன்பே வா’ படத்தை பொறுத்தவரை திறமையான இயக்கு நர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட குழு வினர் எல்லாவற்றையும் சரியாக செய்கிறார்கள். அதனால் நான் தவறை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.

மெய்யப்ப செட்டியாரின் கடைசி மகன் பாலசுப்ரமணியன் அவர்களுக் குத் திருமணம் நடந்தது. அப்போது செட்டியாரும், ராஜேஸ்வரி அம்மை யாரும் 21 தொழிலாளர்களுக்கு திருமணங்களை செய்து வைத்தார்கள். அந்தத் திருமண நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் திருமணம் நடந்த 21 தொழிலாளர்களுக்கும் பணமும், பரிசும் கொடுத்தார். அந்த அளவுக்கு தொழிலாளர்களின் மீது அன்பு வைத்திருந்தார் அவர்.

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் வெள்ளி விழா. அந்தப் படம் வெளியாகும் வரை ‘பட்ஜெட்’ இயக்குநர் என்ற பெயரை நான் பெற்றிருந்தேன். அந்த நேரத்தில் விசு அவர்கள் குறைவான நாட்களில், குறைந்த செலவில் பட்ஜெட் போட்டு அந்தப் படத்தை எடுத்து எனக்கு சவால்விட்டார். இதனை இன் றைய இயக்குநர்கள் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் துண்டு விழாது. தயாரிப் பாளர்களுக்கு நஷ்டம் வராது. ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் இந்திய அரசின் தங்க பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப் படம். அந்தப் படத்தின் வெள்ளி விழாவில் எம்.ஜி.ஆர் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகளைப் பாராட்டி கேடயம் வழங்கினார்.

அந்தக் கேடயம் 3 கிலோவுக்கு மேல் எடை கொண்ட நினைவுக் கேடயம். ‘‘முக்கியமானவர்களுக்கு நீங்கள் கொடுங்கள். மற்றவர்களுக்கு நாகி ரெட்டியாரைக் கொடுக்கச் சொல்கிறேன்’’ என்று சரவணன் சார் கூறினார். எம்.ஜி.ஆர், ‘‘எல்லா கலைஞர்களுக்கும் நானே வழங்குகிறேன். பெரிய டெக்னீஷி யனுக்கு மட்டும் நான் கொடுத்தால், மற்றவர்கள் என் கையால் வாங்கவில் லையே என்று வருத்தப்படுவார்கள்’’ என்று களைப்பையும் பொருட்படுத்தாது எல்லோருக்கும் கேடயம் வழங்கி சிறப்பித்தார்.

இவ்வளவு பேரும், புகழும் பெற்ற எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இணையாக புகழ் பெற்றவரைப் பற்றி அடுத்த வாரம் எழுத இருக்கிறேன். யார் அவர்?

- இன்னும் படம் பார்ப்போம்…

NEWS TODAY 19.04.2024 & 20.04.2024