Thursday, April 30, 2015

Age is no bar for a super-specialty degree

It’s not every year that a 71-year-old receives a degree for completing a super-specialty medical course. But on Thursday, at the Tamil Nadu Dr. MGR Medical University’s convocation, septuagenarian M.A. Bose will receive his degree for an M.Ch in neurosurgery.

For 35 years, Dr. Bose has practiced as a general surgeon and ENT specialist in Aruppukottai, just over 50 km from Madurai. He had done his MBBS and MS from Madurai Medical College and then completed a DLO and worked at Christian Medical College, Vellore and later in JIPMER, Puducherry before setting up his own 12-bed clinic in Aruppukottai.

Also a sports enthusiast, Dr. Bose was a middle-distance runner and a basketball player and had captained the team from Madurai as a student.

So why neurosurgery? “It was partly due to my competitive spirit. A lot of doctors junior to me were coming into practice with super-specialty degrees. And, I have always found neurosurgery an interesting field and have had an affinity for the subject. And so, even though it was late, I decided to do it,” said Dr. Bose.

In 2010, he joined the course at Madras Medical College. “The selection committee interviewed him and after finding that there was no age criteria for the course, decided to admit him. However, he did not receive the stipend that is given to other students as he was not eligible,” said Jhansi Charles, registrar of the university.

Staying with his son in Arumbakkam, Dr. Bose would travel 10 km every day for his course. At the end of 2013, his son passed away. “After this happened, I became very depressed. I could not concentrate at all for a year. It was only in my third attempt that I managed to pass the exam,” he said.

Dr. Bose completed the programme in 2014. His future plans? “I am happy with my practice. Once every few months perhaps, I will get a neurosurgery case. It will be interesting,” said this grandfather of eight.

71-year-old Dr. M.A. Bose is all set to receive his M.Ch in neurosurgery

Wednesday, April 29, 2015

ரூ.20க்கு தேள்கடி மருந்து...!

காலம் மாறிப்போச்சு, வாண்டுகளுக்கு கூட வாட்ஸ் அப் கணக்கு இருக்கு. ஓட்டு ஐடி இருக்கோ இல்லையோ, பேஸ்புக் ஐடி இல்லைன்னா வேஸ்ட்டுன்னு பள்ளிக்கூட பிள்ளைகள் கமெண்ட் அடிப்பது நம்காதுகளில் அதிகம் விழுந்திருக்கும்.

என்னதான் காலம் மாறினாலும், நம்ம ஊர் நாட்டுவைத்தியத்துக்கு முன்னாடி சும்மாதான்.

''வாங்க சார்... வாங்க... இப்போ மிஸ் பண்ணிட்டீங்கன்ன... பிறகு கஷ்டப்படுவிங்க'' என்றவாறு திருச்சி, சமயபுரம் பேருந்து நிலையத்தில் ஒருவர் உயிருள்ள தேள், நண்டுவாக்காளின்னு விஷ ஜந்துக்களோடு உட்கார்ந்திருக்க, ஆச்சரியமாய் மக்கள்கூட்டம் மணிக்கணக்காய் பார்த்து நின்றார்கள்.
''நம்பிக்கையிருந்தால் இந்த நாட்டு மருந்தை வாங்குங்க சார், உங்களுக்கு சந்தேகம் இருக்குன்னா வாங்க, வந்து டெஸ்ட் பண்ணி பார்த்துக்கோங்க. உங்க கண் முன்னாடியே உயிருள்ள தேள், நண்டுவாக்காளி, கருந்தேள் எல்லாம் இருக்கு. கையை நீட்டுங்க, தேளை கடிக்க வைப்போம், இந்த தைலத்தை ஒரு சொட்டுவிட்டு தேள் கடிச்ச இடத்தில் விட்டால், அடுத்த நிமிடமே பட்டென வலி பறந்து போகும்.

'உயிருள்ள தேளா கொஞ்சம் காட்டுங்க' என்றால் டப்பாக்குள் இருந்த தேளை சர்வசாதாரணமாக தூக்கி காட்டுகிறார் சம்சுதீன். ''20 ரூபாய் கொடுத்து இந்த மருந்தை வாங்குறதுக்கு எவ்வளவு கேள்வி கேட்குறீங்க. ஒரு நாளாவது மருத்துவமனையில் ஏன் சார் இவ்வளவு பணம் கேட்குறீங்கனு கேட்டிருப்பீங்களா…?
இங்க பாருங்க. நான் பொய் சொல்லல. நாளைந்து மாசத்துக்கு முன்னாடி ஈரோட்டுல பத்து வயசு பள்ளிக்கூட மாணவி தேள் கடித்து பலின்னு நியூஸ் பேப்பர்ல வந்திருக்கு. அடுத்து, தஞ்சாவூர்ல 5 வயசு ஆண் குழந்தை ஸுவ்ல தேள் இருப்பதை கவனிக்காமல் அதை போட்டபோது கடிச்சி, இறந்துடிச்சின்னு போட்டிருக்கு. இப்படி பல பேர் கொடிய தேள், நண்டுவாக்காளி போன்றவை கடிச்சி இறந்திருக்காங்க.

நண்டுவாக்காளி கடித்தால் ரெண்டு நிமிசத்துல மாரடைப்பு வந்துடும். இப்படி உயிரைபறிக்கும் விஷயத்துக்கு நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கோமான்னா இல்லை. அதுக்காகத்தான் இந்த மருந்து'' என வெறும் இருபது ரூபாய்தான் என பார்வையாளர்களிடம் விளக்கிக்கொண்டிருந்த சம்சுதீன் மீது தேள்கள் சர்வசாதாரணமாக விளையாடிக்கொண்டிருக்க அவரிடம் பேசினோம்.
''எனக்கு சொந்த ஊர் முசிறிதான். தாத்தா காலத்தில் இருந்து தேள்கடிக்கும், உடம்பு வலிக்கும் மருத்து தயாரித்து விற்கிறோம். ஆறாவதுக்கு மேல படிப்பு ஏறல, பிறகு அப்பாக்கூட இருந்து இந்த வைத்தியத்தை கற்றுக்கொண்டேன். இப்போ எனக்கு வயசு 57, 40 வருடமாக இந்த தொழிலை செய்துக்கிட்டு வர்றேன். இந்த மருந்தை எடுத்துக்கிட்டு தமிழ்நாடு முழுக்க சுத்தியிருக்கேன். நாளு மொழி பேசுவேன். வர்றவங்க நம்ம கிட்ட சந்தேகத்தோட மருந்து வாங்கக்கூடாது. மருந்தை வாங்கிட்டு அது சரியில்லைன்னா நம்மை திட்டக்கூடாது. இதுதான் முக்கியம்.
20 ரூபாய்க்கு நான் இரண்டு விதமான மருந்து வைச்சிருக்கிறேன். ஒன்று தலைவலி, இருமல், ஜலதோசம், பல் வலி உள்ளிட்ட நோய்களை சட்டென விரட்டும் நிவாரணி. தும்பை இலை, துளசி, கருந்துளசி, மலையெறுக்குன்னு 15க்கும் மேற்பட்ட மூலிகைகளை ஒன்னா போட்டு காய்ச்சி இந்த மருந்தை தயாரிக்கிறோம். ஒரு சொட்டு மருந்தை கர்சிப் விட்டு மூக்குல வைத்தால் சும்மா ஜிவ்னு ஏறும். அடுத்த சில நொடிகளில் எல்லாம் பறந்துபோகும்.

அதேபோல் தேள், நண்டுவக்காளி உள்ளிட்ட விஷக்கடிக்கு கொடுக்கிற மருந்து. இது பதரசத்தை தண்ணியாக்கி, கூட நீர்ப்பச்சிலை போன்ற கொல்லி மலையில் கிடக்கும் பச்சிலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து. இதை தேள் கடித்த இடத்தில் ஒரு சொட்டு விட்டு தடவிவிட்டால் போதும். சட்டென வலி பறந்துபோகும். இதுமட்டுமல்லாமல், தோள் நோய்களுக்கும், விபத்தில் புண் ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம்.
சின்ன வயசுல எங்கப்பா எனக்கு வைத்தியம் கற்றுகொடுக்கும்போது, 'பணம் காசு முக்கியமில்லை. தேள் கடிச்சி துடிக்கிற ஒருத்தன், நீ கொடுக்கிற மருந்தை போட்டபிறகு வலி நின்றபிறகு உன்னை மனசார வாழ்த்துவான் இல்லை. அதுதான் உன்னை நூறு வருஷம் வாழ வைக்கும்'னு சொன்னார். அதை பல நேரம் உணர்ந்திருக்கேன். அந்த சந்தோசத்திலதான் வாழுறேன்'' என்கிறார் சம்சுதீன்.

சி. ஆனந்தகுமார்,

படங்கள்: தே.தீட்ஷீத்

Now, a visa to Vietnam is only three days away

Planning to head to Vietnam? A visa is now only three days away, with a visa application centre for the Socialist Republic of Vietnam opening in the city on Tuesday.

Launched by VFS Global, the centre expects to take in at least 5,000 applications per year and will make it easier and more convenient for tourists as well as business persons from the State to obtain their visas, said Sonia Dhayagude, one of the head of operations of VFS Global.

“From 2011 to 2014, we have seen a 300 per cent rise in the number of Indian tourists coming to Vietnam – from 19,000 to 55,000. We want to increase this number by another 100 per cent,” said Ton Sinh Thanh, ambassador of Vietnam to India.

Indian investments in Vietnam were growing too, he said. There are at least 85 Indian projects in Vietnam valued at USD 1 billion, he said. “According to Vietnam’s data, the bilateral trade between the two countries is USD 5.5 billion, but Indian figures say it is higher, at USD 8 billion last year,” he said. The centre in Chennai will process both tourist and business visas. Application forms will cost Rs. 500 and visa fees Rs. 4,500.

All applications will continue to be assessed and processed by the Embassy of Vietnam in New Delhi. The centre will be open from 8 a.m. to 3 p.m. on weekdays. . For details, log on to:www.vfsglobal.com/Vietnam/India.

TN Dr. MGR MEDICAL UNIVERSITY 27TH CONVOCATION 30.04.2015



Medical Council of India moots raising retirement age of teachers

DNA logo

In a bid to reduce the shortage of faculty in medical colleges, the Medical Council of India (MCI) has decided to write to state medical education departments across the country, seeking their opinion about increasing the retirement age of teachersfrom 70 to 75 years.

The issue of retirement age came up in a meeting of the MCI in Delhi on Tuesday. As per the MCI norm, the retirement age of a medical teacher is 70 years. No state can exceed this bar. Maharashtra medical education department has set the retirement age as 64 years for teachers in all its state and civic-run medical colleges.

"Today's meeting proposed to increase the retirement age of a medical teacher to 75 years. But before a decision is taken in this regard, all the state medical education departments will be asked about their opinion," said Dr Kishor Taori, chairman, Teacher Eligibility and Qualification Committee, MCI.

"The aim to address the problem of some of medical colleges which are facing a shortage of teachers. Himachal Pradesh is the first state where the retirement age of teachers in private and government-run medical colleges has been fixed at 70 years."

According to MCI, in all 398 medical colleges across the country there are more than 52,000 MBBS seats. Retirement of teachers affects the number of seats to be maintained. Thus, in order to maintain an adequate ratio, state governments increase the retirement age.

"But this is not a solution to solve the manpower issue; we oppose this government decision. We have a different demand — temporary lecturers should be regularised and medical teachers should be given time-bound promotion and pay scale. If the government wants to appoint these teachers, they can appoint them after retirement. Increasing retirement age of teachers its not a good idea," said Dr Nagsen Ramraje, president, Maharashtra State Medical Teachers Association.

Tuesday, April 28, 2015

ஏழைகளுக்கு இரண்டாவது கடவுள் மருத்துவர்கள்தான்; அதில் சந்தேகமில்லை. மருத்துவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

cinema.vikatan.com

ந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பொதுவான இரண்டாவது கடவுள் உண்டு. அது மருத்துவர்கள். சமயங்களில் ஏழைகளுக்கு அவர்களே முதற்கடவுளாக மாறிவிடுவதுண்டு.
அரக்கோணத்தை அடுத்த மாடத்துக்குப்பம் பகுதியை சேர்ந்த பாண்டியன் - கோகிலா தம்பதியருக்கு அந்த அனுபவம் நிகழ்ந்தது கடந்த வாரம். 

அவர்களின் 10 மாத குழந்தை ஸ்ரீதிவ்யா, சேப்டி பின் எனப்படும் கூர்மையான ஊக்கை தவறுதலாக விழுங்கிவிட, அடுத்த 24 மணிநேரம் அவர்களுக்கு வாழ்க்கைப் போராட்டமாகி விட்டது. குழந்தை விழுங்கிய திறந்த நிலையிலான சேப்டி பின், குழந்தையின் இரைப்பையில் நின்ற நிலையில் இருக்க, குழந்தையின் உயிரை மீட்பது மருத்துவர்களுக்கு  பெரும் சவாலாகிவிட்டது. 

இருப்பினும் சவாலை வெற்றிகரமாக சமாளித்து சாதனையாக்கி இருக்கிறார்கள் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள். வழக்கமான முறைகளிலிருந்து மாறுபட்டு புதிய முறையிலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இதை சாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் அரசு மருத்துவமனை மேற்கொண்ட முதல் முயற்சி என்பதும் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

அறுவை சிகிச்சை செய்த சோர்வில் குழந்தை ஸ்ரீதிவ்யா கிடக்க,  அருகிலிருந்த தாய் கோகிலாவிடம் பேசி னோம்.
“ போன 24 ம் தேதி நைட்டு குழந்தைக்கு பால் கொடுத்திட்டு இருந்தேன். திடீர்னு கரண்ட் போயிடுச்சு. இருட்டில் பால் கொடுக்கக் கூடாதுன்னு இறக்கி படுக்க வெச்சிட்டு சிம்னி விளக்கை ஏத்திவெச்சிட்டு சமையலறைக்கு போனேன். கொஞ்சநேரத்துல குழந்தை அழுற சத்தம் கேட்டு ஓடிவந்தேன். வழக்கத்துக்கு மாறா அதிக சத்தத்தோடு அழுதாள். என்னன்னவோ பண்ணி சமாதானப்படுத்தியும் அழுகைய நிறுத்தலை. 

என்னவோ ஏதொன்னு பயந்து திருவள்ளுர் ஜி.எச் க்கு தூக்கிட்டு ஓடினோம். டாக்டர்கள் உடனே எக்ஸ்ரே எடுக்கச்சொன்னாங்க. அப்போதான் குழந்தை சேப்டி பின்னை விழுங்கினது தெரிஞ்சது. அலறி துடிச்சிட்டோம். 'குழந்தையை உடனே சென்னைக்கு கொண்டு போகறதுதான் பாதுகாப்பு' னு டாக்டர்கள் சொன்னாங்க. அந்த நைட்டு நேரத்துல வண்டியை பிடிச்சி பேபி ஆஸ்பிட்டலுக்கு வந்தோம். 

திரும்ப இங்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துப்பார்த்துட்டு, டாக்டர்கள் அதை உறுதிப்படுத்திட்டு உடனே ஆபரேஷன் பண்ண ரெடியானாங்க. ஆபரேஷன் நடந்த அந்த அரை மணிநேரம் எங்களுக்கு உயிர் இல்ல. டாக்டருங்க குழந்தையை பாதுகாப்பா வெளியே கொண்டு வந்தபிறகுதான் போன உயிர் எங்களுக்கு வந்தது. டாக்டருங்க என் பிள்ளைக்கு 2 வது முறை உயிர் கொடுத்திருக்காங்க" என்றார் நா தழுதழுக்க. 

நடுஇரவில் குழந்தையை காக்கும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டது, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் பேராசிரியர் எஸ்.வி செந்தில்நாதன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு. மருத்துவர்கள் ஜெ.முத்துக்குமரன், கிருஷ்ணன், அனிருதன், குருபிரசாத், கௌரிசங்கர் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றவர்கள்.

மருத்துவர் முத்துக்குமரனிடம் பேசினோம்.
“ ஒரு சாதனை புரிந்தோம் என்பதைவிட ஒரு குழந்தையின் உயிரை காத்துவிட்டோம் என்பதுதான் இப்போத எங்களுக்கு நிம்மதி அளிக்கிறது. கடந்த 24 ம் தேதி இரவு குழந்தை ஸ்ரீதிவ்யாவை அழைத்துவந்தனர் அவளது பெற்றோர். அழுதபடியே இருந்த குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவள் சேப்டி பின்னை விழுங்கியிருந்தது தெரிந்தது. திறந்தநிலையில் இருந்த அந்த சேப்டி பின், முந்தைய முயற்சிகளின்போது தொண்டையிலிருந்து நழுவி, வயிற்றின் இரைப்பையில் ஆபத்தான இடத்தில் சிக்கிக்கொண்டிருந்தது. 

காது, மூக்கு, தொண்டை நிபுணர் மற்றும் குடல் இரைப்பை சிறப்பு மருத்துவர் உதவியை நாடினோம். ஆனால் அதில் சிக்கல் எழுந்தது. காரணம் குழந்தைகள் இப்படி விழுங்குவது சகஜமென்றாலும்,  ஸ்ரீதிவ்யா 10 மாதமே ஆன குழந்தை என்பதும், சேப்டி பின் திறந்த நிலையில் இருந்ததுமே. 

இது எங்கள் மருத்துவ குழுவுக்கு பெரும் சவாலானதாகிவிட்டது.  இப்படிப்பட்ட சமயங்களில் ஓஸ்கோபி (o'scopy) எனப்படும் வழக்கமான முறையில் டியூப்பை தொண்டை வழியே செலுத்தி விழுங்கிய பொருளை எடுப்போம். ஆனால் 10 மாத குழந்தையிடம் அதை முயற்சித்தால் திறந்த நிலையில் இருக்கும் சேப்டி பின், அருகிலுள்ள உறுப்புகளை கிழித்து இரத்தக் கசிவு ஏற்பட்டு குழந்தை உயிரிழக்கும் அபாயமுள்ளது. 

அதே சமயம் 10 மாத குழந்தை என்பதால் எந்த அளவிற்கு டியூப்பை உள்ளே செலுத்த முடியும் என்பதில் சந்தேகம் இருந்தது. அதனால் அந்த முடிவை கைவிட்டு எங்கள் மருத்துவ குழு தீவிரமாக கலந்தாலோசித்தது.
அதன்பிறகுதான் சிஸ்டோஸ்கோப்பி என்ற புதிய முறையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தோம். இந்த முறையில்  அறுவை ( cystoscopy) சிகிச்சை செய்வது இந்த மருத்துவமனைக்கு இதுதான் முதன்முறை. முடிவெடுத்தபின் கொஞ்சமும் தாமதிக்காமல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். சிஸ்டோஸ்கோபி முறையில் வயிற்றின் குறுக்கே கிழித்து அதன் வழியே இரைப்பையில் 5 மிமீ அளவுக்கு சிறு ஓட்டை ஏற்படுத்தினோம். குழந்தை இரவு முதல் எதுவும் உண்ணாமல் இருந்ததால் இரைப்பை சுருங்கி பின் இறுக்கமான நிலையில் சிக்கியிருந்தது. 

ஒருவகையில் உணவு எடுக்காமல் இருந்ததும் இம்மாதிரி சமயங்களில் சாதகமான ஒன்றுதான். அந்த ஓட்டை வழியே சிஸ்டோஸ்கோபி கருவியிலேயே பிரத்யேகமாக இணைக்கப்பட்ட மெல்லிய சிறு குழாய் வழியாக குழந்தையின் இரைப்பைக்குள் துளித்துளியாக சலைன் திரவம் செலுத்தினோம். 

இதனால் குழந்தையின் இரைப்பை சற்று விரி வடைந்து, சிஸ்டோஸ்கோபிக் கருவி பின்னை இயல்பாக கவ்விப்பிடிக்க வசதியாக இருந்தது. இருப்பினும் உச்சகட்டமாக வேறு எந்த உறுப்பு களுக்கும் பாதிப்பின்றி கருவியின் மூலம் பின்னை எடுக்கும் முயற்சி எங்களுக்கு சவாலாக இருந்தது. 

கிட்டதட்ட 45 நிமிட போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக சிஸ்டோஸ்கோபிக் கருவி, சேப்டி பின்னை லாவகமாக பிடித்துக்கொண்டது. அதை பாதுகாப்பாக வெளியே எடுத்தோம். அந்த 45 நிமி டங்களும் எங்கள் மருத்துவக்குழுவிற்கு பரபரப் பாக கழிந்தது. இப்போது குழந்தை நலமாக இருக்கிறாள். கொஞ்சம் ஓய்வுக்குப்பிறகு அவள் சகஜமாகிவிடுவாள்" என்று சொல்லி முடித்தார்.

பேபி ஆஸ்பிடல் என்று அழைக்கப்படுகிற அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நிகழ்த்தப் பட்ட இந்த அறுவை சிகிச்சை, தனியார் மருத்து வமனையில் செய்யப்பட்டிருந்தால் அதற்கான விலை கணிசமாக இருந்திருக்கலாம். 

"பொதுவாக குழந்தைகளை வளர்ப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களது சுபாவம் இயல்புக்கு மாறானது. பெற்றோர்கள் அதை எளிதில் புரிந்துகொள்ளவேண்டும். வீடு களில் குழந்தைகளின் கைகளில் எட்டும் அள வுக்கு பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண் டும். துருத்தி தெரிகிற, தன்னை ஈர்க்கிற பொருட்கள் அது நல்லதோ கெட்டதோ எதுவானாலும் அதை பார்க்கவும், தொடவும் அவர்கள் விரும்புவார்கள். அதனால் குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளின் மீதான கவனம் பெற்றோரிடம்தான் கூடுதலாக இருக்கவேண்டும். இல்லையேல் இம்மாதிரி அனுபவத்தை பெறநேரிடும்” என எச்சரித்து பேசுகிறார் மருத்துவமனையின் பதிவாளர் மருத்துவர் சீனிவாசன்

ஏழைகளுக்கு இரண்டாவது கடவுள் மருத்துவர்கள்தான்; அதில் சந்தேகமில்லை. மருத்துவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!
- எஸ். கிருபாகரன்

வரதட்சணை பெற்றவரை பாராட்டிய ஊர்மக்கள்!

ன்றைய திருமண சந்தையில் ஒரு பெண்ணை திருமணம் செய்து  கொடுக்க, லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய சமூக நிர்பந்தம் நிலவுகிறது. தங்களது பொருளாதார சூழலில், அதை நிறைவேற்ற முடியாது என நினைக்கும் பெற்றோர்கள், பெண் சிசுக்கொலை புரியும் அவலம் இந்த நிமிடம் வரை நிகழந்து கொண்டுதான் இருக்கிறது. 

பெண் சிசுக்கொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆண்கள் கூட, வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வதில்லை என்பதுதான் கூடுதல் அவலம்.

‘சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்புவோர், அதற்கான முயற்சியை முதலில் தங்களிடமிருந்து துவங்க வேண்டும்’ என்ற அடிப்படை சிந்தனை, பெரும்பாலான சமூக ஆர்வலர்களிடம் காணப்படுவதில்லை. 

ஆனால், இதற்கு விதிவிலக்காக தனது திருமணத்தையே சமூக மாற்றத்திற்கான ஆரம்பமாக பயன்படுத்தி இருக்கிறார் அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டம் பர்வாலா கிராமத்தைச் சேர்ந்த சுதேந்திரா ஆசாத்.

ஆசிரியரான இவருக்கு, கடந்த வாரம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் பெண் வீட்டாரிடம் அவர் தனக்கு வரதட்சணை வேண்டும் என கேட்டபோது, பெண் வீட்டார் அதிர்ந்தனர். ஆனால், வரதட்சணையாக அவர் கேட்ட பொருள் என்னவென்று தெரிந்ததும் அவரை உச்சிமுகர்ந்தனர் பெண்வீட்டாரும் அந்த ஊர் மக்களும். ஆமாம், தனது திருமணத்தில் பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணையாக அவர் பெற்றது 1,000 மரக்கன்றுகள். 

அதை தனது ஊரிலும், மணமகள் அனிதா ஊரிலும் நடவு செய்து தங்கள் கிராமத்தை பசுமையாக்க முடிவு செய்திருக்கிறார். திருமணத்தின் போது வழக்கமாக ஏழுமுறை அக்னியை வலம் வருவார்கள். ஆனால், இவர், பெண் சிசுக்கொலையை கண்டிக்கும் விதமாக, தனது மனைவியுடன் எட்டாவது முறையாக வலம் வந்தார்.
மாற்றம் என்பது மனிதரிடமிருந்து உருவாவதுதானே.. 

பாராட்டுக்கள் சுதேந்திரா ஆசாத்!

- ஆர்.குமரேசன்

Convicted doctors and staff released on bail in Trichy

TRICHY: The principal district judge court suspended the one-year jail term of two doctors and a staff of Joseph Eye Hospital in Trichy and released them on bail pending disposal of the appeal on Friday.

The three — director Dr C A Nelson Jesudasan, chief administrative officer Christopher Jesudasan, medical officer of Perambalur Dr B Ashok- of Joseph Eye Hospital in Trichy had been sentenced to one-year imprisonment by chief judicial magistrate (CJM), Trichy on Wednesday in a case related to the loss of vision to 66 villagers in Villupuram district on July 20, 2008. The court acquitted three doctors and a lab technician from the case.

On hearing an appeal petition filed by the three, principal district judge (in-charge) R Poornima suspended the conviction of the three men and released them on bail on Friday. The appeal was pending before the court. The three were subsequently released from Trichy central prison on Friday.

Joseph Eye Hospital also went on strike on Saturday under the instruction of the Indian Medical Association (IMA), Trichy chapter, which raised its concern about the insecurity of the doctors and the private hospitals.

Meanwhile, Human Rights Protection Centre, Trichy which took up vision loss case in support of the victims was planning to go for an appeal seeking increase in quantum of the sentence. Advocate S Vanchinathan told TOI, "We are discussing going for an appeal to increase the term of conviction and for sentence of imprisonment to those who were acquitted from the case, because all of them are responsible for the vision loss."

வெளிநாட்டில் பணிக்குச் செல்லும் நர்சுகள் உடனடியாக பெயர் பதிவு செய்ய வேண்டும் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மத்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகாரத்துறை அமைச்சகத்தின் 8–4–15 தேதியிட்ட ஆணையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை அளிக்கும் நிறுவனங்களான தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் கேரள அரசின் நோர்க்கா ரூட்ஸ் மற்றும் ஓவர்சீஸ் டெவலப்மெண்ட் அண்ட் எம்ப்ளாய்மெண்ட் பிரமோஷன் கன்சல்ட்டண்ட் ஆகிய அரசு நிறுவனங்கள் மட்டும் செவிலியர்களை ஐக்கிய அரபு குடியரசு, சவூதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத், பக்ரைன், மலேசியா, லிபியா, ஜோர்டான், ஏமன், சூடான், ஆப்கனிஸ்தான்,இந்தோனேசியா, சிரியா, லெபனான், தாய்லாந்து மற்றும் ஈராக் போன்ற 18 நாடுகளுக்கு 30–4–15 முதல் வேலைவாய்ப்பினை அளிக்கலாம் என்று ஆணையிட்டுள்ளது.

எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் செவிலியர்கள், தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் உடனடியாகப் பதிவு செய்து எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் செவிலியர்களுக்கான பதிவு கட்டண விவரத்தை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறியலாம். மேலும் விவரங்களுக்கு, 044–22502267/ 22505886/08220634389 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

7243 நர்ஸ் பணிகள்

தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) சமீபத்தில் நர்ஸ் பணிக்கு 7 ஆயிரத்து 243 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் 6 ஆயிரத்து 792 இடங்கள் பெண் விண்ணப்பதாரர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகளுக்கு 1-7-15 தேதியில் 58 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜெனரல் நர்ஸ் (ஆண், பெண்) 3 ஆண்டு படிப்பு படித்தவர்கள், நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சிலில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். எஸ்.சி.,எஸ்.சி.-ஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.300-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விரிவான விவரங்களை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, 11-5-15-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

சமையல் கியாஸ் வழிகாட்டட்டும்!

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். கப்பலில் பெண் வருகிறது என்று ஒருவன் சொன்னானாம். உடனே, அதை கேட்டுக்கொண்டிருந்த ஒருவன், ‘‘அப்படியா!, அப்படியானால் எனக்கு ஒன்று, என் சித்தப்பாவுக்கு ஒன்று’’ என்றானாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் 10 பவுன் கொடுக்க வேண்டும் என்று முதலாமவன் சொன்னபோது, ‘‘நான் சின்ன பையன் எனக்கு தேவையில்லை. எங்கள் சித்தப்பா வயதானவர், அவருக்கும் தேவையில்லை’’ என்றானாம். அதுபோலத்தான், பலர் மானிய விலையில் கிடைக்கிறது என்றால் தங்கள் தேவைக்கு போக அதிகமாக வாங்கி, வெளிமார்க்கெட்டில் கூடுதல் பணத்திற்கு விற்கிறார்கள். சமையல் கியாஸ், உரம், பெட்ரோல்–டீசல் போன்ற எரிபொருள் ஆகியவற்றிற்கு மானியம் கொடுக்கவே கடந்த ஆண்டு மத்திய அரசாங்கம் ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் கோடியை செலவழித்துள்ளது. இவ்வளவு மானியத்தை தேவையில்லாதவர்களுக்கும் போய் சேருவதை தடுத்தால், எவ்வளவோ சாலைகள், துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியுமே என்ற எண்ணம் நல்லோர் மனதில் எதிரொலிக்கிறது.

நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்றவுடன், இவ்வாறு நெல்லுக்கு இரைக்கும் தண்ணீர் புல்லுக்கும் பாய்வதை நிறுத்தும் வகையில், தேவையற்ற மானியத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தார். முதற்கட்டமாக நாட்டில் உள்ள ஏறத்தாழ 15 கோடி சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வீட்டு இணைப்புகள் எல்லாம் வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட வேண்டும். ஒரு சிலிண்டருக்கு அரசு கொடுக்கும் மானியத்தொகையான 200 ரூபாய் நேரடியாக அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் வகையில் ‘பகல்’ என்று அழைக்கப்படும் நேரடி மானியத் திட்டம் கடந்த ஜனவரி 1–ந்தேதி நாட்டிலுள்ள 676 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் மொத்த எண்ணிக்கையில் 3 கோடி இணைப்புகளுக்கு மேல் குறைந்துவிட்டது. அதாவது, இவைகள் எல்லாம் போலியாக பெற்ற இணைப்புகள் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது. இதன் காரணமாக வணிக ரீதியான கூடுதல் விலைக்கு விற்கப்படும் சிலிண்டரின் விற்பனை உயர்ந்திருக்கிறது. இந்த சிலிண்டர்களுக்கு அரசு மானியம் கிடையாது. இந்த திட்டத்தின் மூலமாக போலி இணைப்புகளை ஒழிப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு நேரடி மானியம் வழங்குவதில் அடைந்த வெற்றியை தொடர்ந்து ரேஷன் பொருட்களுக்கும், மண்எண்ணைகும் அளிக்கப்படும் மானியத்தையும், நேரடி வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை நிறைவேற்ற அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. இதை உடனடியாக அரசு நிறைவேற்றினால், இதிலும் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மிச்சமாகும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். எனவே, அரசு இதில் தாமதமே இல்லாமல் அனைத்து மானியங்களையும் அதுபோல 100 நாள் வேலைத்திட்டம் போன்ற நலத்திட்டங்களின் பலன்களையும் பயனாளிகளுக்கு நேரடி வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும். மேலும், பிரதமரின் வேண்டுகோளின்படி, வசதி படைத்தவர்கள் மானியம் வேண்டாம் என்று சொல்வதற்கு முன்வந்தால், அதிலும் ஏறத்தாழ ஒரு கோடி இணைப்புகள் உடனடியாக மானிய வலையில் இருந்து வெளியே வர முடியும். இதற்கு அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும், செல்வந்தர்களும் முன்னோடியாக வழிகாட்ட வேண்டும்.

Monday, April 27, 2015

முகங்கள்: இரும்பு மனுஷிகள்


ஆண்டாண்டு காலமாகப் பெண்களை மென்மையுடன் தொடர்புபடுத்திப் பேசியே அவர்களின் திறமைகளை மழுங்கடித்துவிட்டனர். ஆனால் இதுபோன்ற கற்பிதங்களுக்குள் தொலைந்துபோகாமல் தனித்திறமையுடன் தடம் பதிக்கும் பெண்கள் எல்லாக் காலங்களிலும் உண்டு. குதிரை மீதேறிப் போரிட்ட வீரப் பெண்களில் தொடங்கி, மங்கள்யான் திட்டப் பணிகளில் பங்களித்த பெண்கள் குழுவினர் வரை எத்தனையோ பேரை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். உடலுழைப்பிலும் ஆணுக்கு நிகராகக் களமிறங்கும் பெண்கள் ஏராளம்.

வலிமையின் வழியில்

திண்டுக்கல் நேருஜி நகரைச் சேர்ந்த முருகம்மாள், பாப்பாத்தி, தனலட்சுமி மூவரும், ஆண்களுக்கு மட்டுமே சில வேலைகள் சாத்தியம் என்ற பொதுவான நினைப்பை மாற்றிக்காட்டியிருக்கிறார்கள். குழம்பை அடுப்பிலேற்றி இறக்கிவைப்பது போலத்தான் இரும்பைக் காய்ச்சி, உருக்கி வார்த்தெடுப்பதும் என்று சொல்லும் இவர்கள், வயோதிகத்தை மீறிய வலிமையுடன் இரும்புப் பட்டறையில் வேலைசெய்கிறார்கள். இவர்களின் உழைப்பில் மலர்ந்திருக்கிறது அந்த மகளிர் மட்டும் இரும்புப் பட்டறை. இவர்களே இரும்பை உருக்கி மண்வெட்டி, கடப்பாரை, சுத்தியல், அரிவாள், கூந்தளம், பிக்காச்சி, உளி உள்ளிட்ட பல்வேறு வேளாண், பண்ணை, கட்டிடக் கருவிகளைச் செய்து கொடுக்கின்றனர்.

பட்டறையில் பாடுபடுவது இந்தப் பெண்களின் வேலை. இவர்கள் தயாரிக்கும் கருவிகளை வெளியூர்களில் விற்பனை செய்வது இவர்கள் வீட்டு ஆண்களின் வேலை. தயாரிக்கப்படுகிற கருவிகளைத் தகுந்த வாடிக்கையாளர்களைத் தேடிப்பிடித்துச் சந்தைப்படுத்துவதையும் அவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். வெளியூருக்குப் போகாத நாட்களில் மட்டும் பட்டறை வேலையில் ஈடுபடுகின்றனர்.

நெஞ்சுரமே கவசம்

இந்தப் பெண்கள் அதிக வெப்பமும் வெளிச்சமும் கண்களைப் பாதிக்கும் என்ற தற்காப்பு உணர்வுகூட இல்லாமல் தீப்பொறிக்கு நடுவே அமர்ந்து வேலை செய்கிறார்கள். தனலட்சுமி பட்டறையில் நெருப்பைப் பற்றவைக்கிறார். பழுக்கக் காய்ச்சிய கடப்பாரையின் முனையைக் கூர்மையாக்க முருகம்மாளும் பாப்பாத்தியும் மாறி மாறிச் சம்மட்டியால் அடித்துக் கெட்டிப்படுத்துகின்றனர். கடின உழைப்பு மட்டுமல்ல இவர்களது பலம். வடிவமைப்பு, கருவிகளின் கூர்மை போன்ற தொழில்நுட்பத்தையும் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.

உழைப்பே மகிழ்ச்சி

இந்தப் பெண்கள் பட்டறைத் தொழிலில் ஈடுபட்டாலும், இவர்களின் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுத் தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்கின்றனர்.

“இந்தப் பட்டறை வேலையைச் செய்யணும்னு நாங்க அவங்களை வற்புறுத்தினதில்லை. அதனால எங்களுக்கு அப்புறம், இந்த இரும்புப் பட்டறைத் தொழிலைச் செய்ய ஆளில்லை” என்கின்றனர்.

பட்டறை நெருப்பின் அளவைக் கூட்டியபடியே பேசுகிறார் முருகம்மாள்.

“பரம்பரை பரம்பரையா எங்க முன்னோருங்க இந்தத் தொழிலைத்தான் செய்தாங்க. அவங்களைப் பார்த்து வளர்ந்ததால் இந்த வேலை எங்களுக்குப் பழகிடுச்சு. சின்ன வயசுல இருந்தே வேலை செஞ்சு பழகிட்டதால உடம்புக்கு எந்த அலுப்பும் தெரியாது. ஒரு நாள் முழுக்க வேலை பார்த்தா ஆளுக்கு 500 ரூபாய்ல இருந்து 1000 ரூபாய்வரை கிடைக்கும். அறுவடை, சாகுபடி காலத்தில் மண்வெட்டி, அரிவாள், கடப்பாரை செய்ய நிறைய பேர் வருவாங்க. மத்த நேரத்தில் பழுது பார்க்கற வேலைங்கதான் இருக்கும்” என்று சொல்லும் முருகம்மாள், சமீப காலமாகக் கட்டிட வேலை செய்கிறவர்களிடம் இருந்து அதிக அளவில் ஆர்டர் வருவதாகச் சொல்கிறார்.

“வேலை தர்றவங்களை நம்பித்தான் எங்க பொழைப்பு ஓடுது. இரும்பைவிட உருக்கு மூலம் செய்யும் கருவிகள் நீண்ட நாள் உழைக்கும். சிலர் கடையில் மண்வெட்டி வாங்கினாலும், எங்ககிட்டே வந்துதான் கெட்டியான பூண், கைப்பிடி போட்டுப்பாங்க” என்கிறார் முருகம்மாள். சம்மட்டி பிடித்து இவர்கள் ஓங்கி யடிக்கிற அடியில் இரும்பே நெகிழ்ந்துகொடுக்கும்போது வாழ்க்கை மட்டும் வசப்படாதா என்ன? தகிக்கும் நெருப்புக்கு நடுவே ஒளிரும் இந்தப் பெண்களின் புன்னகை அதை உறுதிப்படுத்துகிறது.

படங்கள்: தங்கரெத்தினம்.

மே மாதம்... குஷியில் ஹவுஸ் ஓனர்கள்!

னைத்து மாநில மக்களின் அடைக்கலமாக சென்னை விளங்குகிறது. வேலை வாய்ப்புகளுக்காகவும், கல்விக்காகவும் சொந்த மாநிலங்களையும், ஊர்களையும் விட்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகம். இதனால் சென்னைக்குப் பலமுகங்கள் இருக்கின்றன. சென்னையில் ஆண்டுதோறும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

கடந்த 2013ல் 47,54,499 பேரும், 2014ல் 47,92,949 பேரும், 2015ல் 48,28,853 பேரும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,903 பேர் வசிக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தால் சென்னையின் நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாகி மாறிக் கொண்டு இருக்கிறது.

நெரிசலில் சிக்கி தவிக்கும் சென்னையையொட்டி உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் விரிவாக்கம் அடைந்து அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாகி வருகின்றன. குறுகிய இடங்களில் வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளன. வேறுவழியில்லாததால் தேனீக்களைப் போல வாழ மக்களும் பழகி கொண்டனர். பல்வேறு காரணங்களுக்கான சென்னைக்கு இடம் பெயர்ந்தவர்களுக்கு எளிதில் வீடுகள் வாடகைக்கு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பத்துக்கு பத்து அறை கொண்ட இரண்டு அறைகள் கொண்ட வீடுகள் கூட ஆயிரக்கணக்கில் வாடகைக்கு விடப்படுகிறது.

சென்னையின் முக்கியப்பகுதிகளாக விளங்கும் மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு, நுங்கம்பாக்கம், வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், கிண்டி, ராயபேட்டை, கீழ்ப்பாக்கம், ஆலந்தூர், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சூளைமேடு, கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு வாடகையை கேட்டால் பலருக்கு தலைசுற்றுகிறது.

மேலும் வி.ஐ.பி. வசிக்கும் பகுதிகளான போயஸ்கார்டன், சாலிகிராம், கிழக்கு கடற்கரை சாலை குடியிருப்பு பகுதிகள், கோபாலபுரம், அடையாறு போர்ட்கிளப், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் வாடகைக்கு கிடைப்பதில்லை.

மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு பெட் ரூம் கொண்ட வீடுகள் குறைந்தபட்சம் 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாடகைக்கு விடப்படுகின்றன. சிங்கிள் பெட் ரூம் வீடுகள் குறைந்தபட்சம் 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 13 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாடகைக்கு விடப்படுகிறது. வாடகை ரூபாய் இடத்துக்கு இடம், வீட்டின் உரிமையாளர் விருப்பத்துக்கு ஏற்ப வேறுபடுகின்றன. அதோடு வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு என்று தனியாக எழுதப்படாத சட்டத்தையும் சில வீட்டின் உரிமையாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

திருமணமாகதவர்களுக்கு வாடகைக்கு வீடுகளை கொடுக்க பலர் முன்வருவதில்லை. அப்படியே கொடுத்தாலும் மற்றவர்களை விட கூடுதலாக ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை வாடகை உயர்த்தப்படுகிறது. இதை விட சில மேன்சன்களில் பகல் கொள்ளை நடக்கிறது. ஒரே அறையை இரண்டு, மூன்று அல்லது ஐந்து பேருக்கு கொடுத்து தலா மூவாயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். அந்த அறைகளுக்கு வாடகை அதிகம், வசதிகள் குறைவு. காலை நீட்டியும், புரண்டு கூட படுக்க முடியாது என்கிறார்கள் அதில் தங்கியிருந்தவர்கள்.

வாடகை வீட்டுக்கான அட்வான்ஸ் வாங்கும் போது முகம் மலரும் வீட்டின் உரிமையாளர்கள் அதன்பிறகு தங்களது சுய ரூபங்களை சிலர் வெளிகாட்ட தொடங்கி விடுகிறார்கள். வாடகைக்கு விடும் போதே இரவு 10 மணிக்கு மேல் வரக்கூடாது. உறவினர்கள் இரவில் தங்க கூடாது. அதிகம் சப்தம் போட்டு பேசக் கூடாது. குடித்து விட்டு சண்டை போடக்கூடாது, தினமும் 2 அல்லது மூன்று குடம் தான் நல்ல தண்ணீர் பிடிக்கணும், தண்ணீரை அதிகமாக செலவழிக்க கூடாது என்று கண்டிசன் போடுவதுண்டு.

இதைத்தவிர மின்கட்டணம் ஒரு யூனிட் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை வசூலிக்கும் வீட்டின் உரிமையாளர்களும் இருக்கிறார்கள். இது தவிர குடிவந்து 5 அல்லது 6 மாதங்களே ஆனாலும், அதற்கு முன் வருட கணக்கில் சேர்ந்த செப்டிக் டேங் கழிவுகளை எடுக்க ஆகும் செலவுகளையும் ஆயிரம், இரண்டாயிரம் என நமது தலையிலேயே கட்டி விடுகிறார்கள். இது தவிர வீட்டை காலி செய்யும்போதும் வீட்டு அட்வான்ஸ் தொகையில் அதே காரணத்திற்காக பணத்தை பிடித்தம் செய்துகொண்டுதான்  மீதியை தருகிறார்கள்.
இப்படி வீட்டின் உரிமையாளர்கள் போடும் அத்தனை கண்டிசன்களுக்கும் கட்டுப்பட்டு குடியிருந்தாலும் ஒரு ஆண்டுக்கு மேல் ஒரு வீட்டில் குடியிருக்க முடியாது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வீட்டை காலி செய்ய சொல்வது சில உரிமையாளர்களின் வாடிக்கை. இதுவும் வாடகை உயர்வுக்குத்தான். அதுவும் மே மாதங்களில்தான் வாடகையை உயர்த்துவது வீட்டு உரிமையாளர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். காரணம், பெற்றோர்கள் பள்ளியை மாற்றுவது மற்றும் அரசு ஊழியர்கள் டிரான்ஸ்பர்கள் மே மாதங்களில் நடக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு ஏற்கனவே இருப்பவர்களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய வைக்கின்றனர்.

வீட்டை காலி செய்தவுடன் அந்த வீடு, ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரை கூடுதல் வாடகைக்கு விடப்படுகிறது. தேனாம்பேட்டை, டி.எம்.எஸ், கிண்டி, ஆலந்தூர், வடசென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் புரோக்கர்கள் இல்லாமல் வாடகைக்கு வீடுகள் கொடுக்கப்படுவதில்லை. புரோக்கர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகையை கமிஷனாக கொடுக்க வேண்டும். இதுவும் வாடகை வீட்டுக்கு செல்பவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

குறைந்த சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்கள்,  இடைநிலை ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களின் நிலைமை அந்தோ பரிதாபமாக இருக்கிறது. வீட்டின் வாடகை ஒவ்வொரு ஆண்டும் ஜெட் வேகத்தில் உயர்த்தப்படுவதால் வீட்டின் தேவைகளுக்காக ஒருவரும் (கணவனும்), வாடகை கொடுப்பதற்காக இன்னொருவரும் (மனைவியும்) வேலைக்கு செல்ல வேண்டிய நிலை பல குடும்பங்களில் இருக்கின்றன. சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என்றால் அங்கு வேலைவாய்ப்பு என்பதே இல்லை. இதனால் வேறுவழியின்றி சென்னையில் பல நடுத்தர வர்க்கங்கள் கௌரவத்துக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். போதிய வருவாய் இல்லாததால் கடன் சுமையிலும் பல குடும்பங்கள் சிக்கி தவிக்கின்றன.

வாடகை வீடுகளின் பிரச்னை இது என்றால் பெண்களுக்கான தனியார் விடுதிகளில் நிலைமை பரிதாபம். முன்பதிவு ரயில் பெட்டிகளில் இருப்பதை போல அடுக்கடுக்காக படுக்கைகள் (பெட்) ஒரே அறையில் ஏற்படுத்தப்பட்டு அதில் தங்க வேண்டியதுள்ளது. அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளை பசிக்காக சாப்பிட்டு வாழ்நாளை பலர் கடத்தி வருகின்றனர். தனியாக வீடு எடுத்து தங்கினால் பாதுகாப்பில்லை என்பதற்காகவே பல பெண்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

வாடகைத்தாரருக்காக குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரம்மா கூறுகையில், "வீடுகளை வாடகைக்கு விடப்படும் போது 11 மாதங்கள் மட்டுமே அக்ரிமென்ட் போட முடியும். ஒப்பந்தத்தில் அடிப்படை உரிமைகள் மீறாமல் இருக்க வேண்டும். ஒரு தரப்புக்கு சாதகமாக இருக்க கூடாது. மூன்று மாத காலஅவகாசம் வீட்டின் உரிமையாளர், வாடகைதாரர் கொடுக்க வேண்டும். மின்வாரியம் நிர்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது. இதை மீறும் வீட்டின் உரிமையாளரை நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி பெறலாம்" என்றார்.

-எஸ்.மகேஷ்

Kerala to block nurses recruited by private agencies from May 1

Khaleej Times
The reports said that the private agents were recruiting nurses to several countries in the Middle East by taking huge commission.


Trivandrum — The government of Kerala has decided not to allow nurses recruited by private agencies to fly abroad from May 1.

A decision in this regard was taken by the Non-Resident Keralites Affairs Department in the wake of reports that several private agencies were recruiting nurses overlooking the ban imposed by the federal government on recruitment of nurses by private agencies from next month.

The reports said that the private agents were recruiting nurses to several countries in the Middle East by taking huge commission. Nurses aspiring for jobs in Kuwait are asked to pay from Rs2 million to Rs2.5million. Reports said many nurses had given the money and were being interviewed in different parts of the country.

The private agencies are canvassing nurses saying that they may find it difficult to get the selection after the government agencies take over the recruitment. They claimed that they had got permission from the protector of emigrants to recruit nurses.

However, reports said that the ministry of external affairs had directed PoEs to cancel permission if any they have given to private agencies for recruiting the nurses to foreign countries. The order signed by deputy secretary Kshijit Mohan was sent to the PoEs on April 20. Non-Resident Keralites Affairs Minister K C Joseph said that the propaganda by the private agencies was aimed at fleecing the nurses.

He said that state the government will not allow such nurses to leave the country. The federal government has brought emigration of nurses to 18 countries under ECR (immigration clearance required) category following the ban on recruitment by private agencies. These countries include UAE, Saudi Arabia, Kuwait, Oman, Bahrain, Iraq, Yemen, Jordan, Syria, Iraq, Malaysia and Thailand.

The minister said that the two Kerala government agencies, Norka Roots and Overseas Development Employment Promotion Council, that have been authorized by the federal government to recruit nurses were all set to begin the recruitments from May first week.

The state government is planning to make the recruitment of nurses by the two agencies free of cost. State Labour Minister Shibu Baby John said that the Kuwait government had agreed to make employers pay the recruitment charge. The suggestion was put forth by a team of senior officials of the two agencies that visited Kuwait recently to finalise the modalities of the recruitment. The foreign employers who wish to recruit nurses from India will have to register through the country’s e-migrate system.

India bans overseas recruitment of nurses by private agencies Daniel George, TNN | Mar 19, 2015, 03.57PM IST..TOI



CHENNAI: The central government has issued an order banning overseas recruitment of nurses by private agencies.

The government order, which will come into effect on April 30, has stated that only an authorized government agency can conduct nursing recruitments.

According to the GO issued on Wednesday, nursing recruitments to a foreign country from India can be done only through a government agency from respective states.

NORKA Roots and the Overseas Development and Employment Promotion Council (ODEPC) will be entrusted with the job in Kerala. Currently, recruitments to Saudi Arabia are done through the ODEPC.

The decision by the central government is expected to put an end to large-scale corruption and cheating by private agencies who recruit nurses from India to various foreign countries, including all the Gulf Cooperation Council (GCC) countries, after taking huge sums as bribes and commission.

Agents in Qatar, the UAE, Saudi Arabia and Bahrain allegedly take huge sums from job aspirants in collusion with their counterparts in India. Many nurses recruited by private agents lost their jobs after a few months.

Speaking to TOI over phone, the Indian ambassador to Kuwait, Sunil Jain, said: "Ever since the issue surfaced, we were trying to persuade the overseas Indian affairs ministry to ban recruitment by private agencies. The poor nurses were shelling out thousands of rupees to these unscrupulous agents who exploited them.''

The Indian embassy in Kuwait had requested the Centre to put an end to this malpractice. The Kerala government had requested the Centre to appoint a nodal government agency to conduct overseas recruitment of nurses from India to avoid large-scale corruption and cheating.

"It is a very good decision by the government. We hope that from now on these women don't pay a single penny to get a job in Kuwait and recruitments will become transparent and corruption-free," Jain added.

Welcoming the move, Indian consul general in Jeddah (Saudi Arabia) B S Mubarak said, "It is a step in the right direction and it will safeguard the interest of nurses who seek a better future abroad. It will put an end to middlemen who exploit these poor women.''

Low pay, a deterrent for nursing aspirants

The president of the Indian Nursing Council T. Dileep Kumar has stressed the need for a strong media campaign on the immense employment potential for nurses in India and abroad in view of the declining demand for entry into nursing schools and colleges in the country.

Speaking on the `Nursing Scenario in India’ at the National Conference on `Innovations in Nursing: A Key to Professional Excellence’ organised by the College of Nursing of the Christian Medical College at the CMC campus here on Tuesday, Mr. Dileep Kumar said that the demand for admission to nursing institutions was declining owing to poor pay for nurses in the private sector compared to the government sector. Besides, on completion of their courses, the nurses were unable to repay their educational loan on account of the poor pay. Another problem faced by the nurses was the practice of health institutions in enforcing the bond system and withholding certificates, and the unsatisfactory working conditions in the private sector.

The INC president said that under these circumstances, the Ministry of Health and Family Welfare has allocated Rs.150 crores for nursing for undertaking various measures such as training, strengthening of institutions, upgradation of three central institutions and funding of major research projects under the 12th Plan.

Y. Prasannakumari, Deputy Director of Nursing Education, Directorate of Medical Education, Kerala urged the need for a concerted effort to address the challenges arising from globalisation through development of global nursing education standards for preparation of a competent nursing work force.

The availability of excess nursing work force in certain parts of the country and scarcity of the work force in many others are among the challenges in nursing. Similarly, the distribution of nursing educational institutions is also skewed.

While there is mushrooming of institutions in certain parts, there is inadequate number in some other parts. There is lack of adequate facility/competent faculty to develop desired competencies resulting in dilution of quality.

The Deputy Director said that the present educational programme is not adequate and appropriate to meet the health care challenges posed by globalisation. Most nursing education programmes do not prepare nurses to respond effectively to public health threats in their communities.

There are significant disparities between existing health care requirements and preparedness of nurses.

Delivering the valedictory address on Sunday, Dr. Jayarani Premkumar, Nursing Superintendent of the CMC Hospital stressed the need for innovation for excellence in nursing with the aim of improving patient care. “Innovation does not need any genius, but only hard work”, she said.

T.S. Ravikumar, Professor of Emergency Nursing, CMC said that the CMC followed the triage system from 1996, under which patients coming to the outpatient department were prioritised based on the criticality of their condition, and given treatment. Selva Titus Chacko, Dean, College of Nursing, CMC welcomed the gathering.

Health institutions enforce bond system and withhold certificates

Another challenge is availability of excess work force in certain parts and scarcity in others

Colleges to have 80% approved staff: MUHS

NASHIK: The Maharashtra University of Health Science ( MUHS) has decided to have 80% of its approved staffers and the rest of the officials in its affiliated colleges as per the norms stated under various councils to improve upon the quality of health education in the state.

This was decided in the first academic council of the year held on the university premises on Friday, making the norms stricter for colleges affiliated to it.

University vice-chancellor Arun Jamkar said the institute has decided to step up the quality of education for the past four years and the new decision was a part of it . "It has been decided that compared to previous years, the colleges affiliated to the university will have to fill 80% of the staffers approved by the university. The remaining 20% will have to be filled as per the norms of central councils like Dental Council of India (DCI), Medical Council of India (MCI) and others," he said.

Jamkar said this would ensure that the necessary staffers were made available in each college and the teachers could spend their working time efficiently and qualitatively for teaching as required by the university. It would be mandatory on the part of a teacher to complete 200 hours of teaching in a single academic year, he added.

The VC said that the university was also focusing on improving quality through the academic audit held every year. "Apart from inspecting infrastructure, the teams appointed for the academic audit are also checking what has been taught to students in colleges. The university is also focusing on food, hostel and other facilities provided by the colleges," Jamkar told TOI.

University registrar Kashinath Garkal said during the 2012-13 academic year, the academic council had allowed 65% of the staff in affiliated colleges, which was increased to 70% in 2013-14. "The number of staffers to be hired was further increased 75% for the 2014-15 academic year. It has been extended to 80% this year," he added.

Garkal said there was no defined number of teachers to be hired in some colleges from central councils and hence, such institutes would have to fill 90% of the total staff capacity.

ஆள் விழுங்கிக் கிணறுகளா?

ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் உயிரிழப்புச் சம்பவங்கள் அண்மைக் காலமாக தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. நாளேடுகளைத் திறந்தால், ஆழ்துளைக் கிணறுகளில் நிகழும் உயிரிழப்புச் சம்பவங்கள் அடிக்கடி கண்ணில்படும் செய்தியாகி விட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்ற சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் என்ற சிறுவன் கடந்த 13-ஆம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இவை சில உதாரணங்கள் மட்டுமே. இன்னும் எத்தனை எத்தனையோ உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழக்கக் காரணம்தான் என்ன?

ஆரம்பக் காலங்களில் நகரம் முதல் கிராமம்வரை தண்ணீர்த் தேவைக்காக கிணறுகளை வெட்டினர். அந்தக் கிணறுகளைச் சுற்றிலும் கல் வைத்தும், கைப்பிடிச் சுவர் வைத்தும் கட்டினர்.

நாளடைவில் இதுவும் மாறிப்போனது. பெரிய கிணறு என்ற நிலை மாறி, "உறை கிணறு' என்று கூறும் அளவுக்கு சிறிய அளவிலான கிணறுகள் வெட்டப்பட்டன. இதற்கு விலைவாசி, கூலி உயர்வு மட்டும் காரணமல்ல. விலைவாசி உயர்ந்த அளவுக்கு விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான விலை கூடுதலாகக் கிடைக்காததும்தான்.

இந்த நிலையில்தான், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இது ஒருவகையில் விவசாயிகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருந்தது.

ஏனெனில், ஒரு கிணறு வெட்டுவதற்கு விவசாயிகள் பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. அதேசமயம், கிணறு தோண்ட ஆகும் செலவைவிட ஓர் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் செலவு குறைவு என்பதால், ஆழ்துளைக் கிணறுகளின் மீதான மோகம் விவசாயிகளிடையே நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

முன்பெல்லாம், ஆழ்துளைக் கிணறுகள் நாலரை அங்குலம், ஆறரை அங்குலம் என்ற அளவிலேயே அமைக்கப்பட்டு வந்தன. இவற்றின் துவாரங்கள் அளவில் சிறியதாக இருந்ததால் குழந்தைகள் தவறி விழுவது போன்ற அபாயம் ஏற்படவில்லை.

ஆனால். தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால், எட்டரை அங்குலம், பத்தரை அங்குலம் என்ற அளவுகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதான் தற்போதைய அசம்பாவிதங்களுக்குக் காரணமாகும்.

சிறு குழந்தைகள் தவறி உள்ளே விழுந்துவிடும் அளவுக்கு இந்த ஆழ்துளைக் கிணறுகள் அளவில் பெரியதாக இருக்கின்றன. அவ்வாறு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும்போது தண்ணீர் வந்துவிட்டால் பிரச்னை இல்லை. உடனடியாக அதில் மோட்டார், குழாய்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

ஆனால், தண்ணீர் வராவிட்டால்தான் பிரச்னையே. பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்தும் தண்ணீர் வரவில்லையே என்ற விரக்தியில், அந்த ஆழ்துளைக் கிணற்றை அப்படியே விவசாயிகள் கைவிட்டு விடுகின்றனர்.

விளைவு? எதேச்சையாக அந்தப் பக்கம் விளையாடுவதற்காகச் செல்லும் குழந்தைகள் தவறி அந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழக்கும் அபாயம் நிகழ்ந்து விடுகிறது. இதுதான் தற்போதைய பிரச்னைக்கு வித்திட்டுவிட்டது. சிறுமி தேவி, சிறுவன் தமிழரசன் ஆகியோரின் உயிரிழப்புகளும் இப்படி நிகழ்ந்ததுதான்.

எனவேதான், இதுதொடர்பாக சென்னை ஐ.சி.எஃப். பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.சிவகாமி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார். அதில், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இதற்கு, தமிழக அரசு அளித்துள்ள பதிலில், தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994, சென்னை பெருநகர் பகுதி நிலத்தடி நீர் (வரன்முறை) திருத்தச் சட்டம் 2014 ஆகியவற்றில் கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது நீதி

மன்றம்.

அதாவது, ஆழ்துளைக் கிணறுகள் முறைப்படுத்துதல் சட்டம் என்ற ஒரு புதிய சட்டத்தை தமிழக அரசு 2014-இல் கொண்டு வந்துள்ளது. அந்தச் சட்டத்தின் சில சாராம்சங்கள் இதோ:

ஆழ்துளைக் கிணறு, குழாய்க் கிணறு அமைக்கப்படும் நிலம், திறந்தவெளிக் கிணறுகள் உள்ள இடம் ஆகியவற்றைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். பழுதுபார்க்கும் சமயங்களில் கிணறுகளை மூடி வைக்க வேண்டும். திறந்தவெளிக் கிணற்றின் கைப்பிடிச் சுவருக்கு மேல் இரும்பு அல்லது உறுதியான ஸ்டீல் தகட்டினால் ஆன மூடி அமைக்க வேண்டும்.

பணிகள் முடிந்தவுடன் ஏற்படும் பள்ளங்களை மேல்மட்டம் வரை கற்கள், மணல், சரளை, சகதி, மண் ஆகியவற்றைக் கொண்டு நிரப்பி சமன் செய்ய வேண்டும்.

இவ்வாறாக நீள்கிறது அந்த புதிய நடைமுறைகள்.

இந்தச் சட்டமும், வழிகாட்டுதல்களும் நடைமுறைக்கு வந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்பது உண்மைதான். ஆனால், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததா? தற்போது கிணறுகளை புனரமைப்பவர்களும், ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பவர்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறார்களா என்றால்... பெரும்பாலும் இல்லை என்றே சொல்லிவிடலாம்.

எந்த ஒரு சட்டத்தையும் இயற்றுவது பெரிய விஷயமல்ல, அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதில்தான் அந்தச் சட்டத்தின் வெற்றியும், தோல்வியும் இருக்கிறது. சட்டமும், தண்டனையும் கடுமையாக்கப்பட்டால்தான் தவறுகள் குறையும் என்பார்கள்.

அதுபோல, ஆழ்துளைக் கிணறுகள் முறைப்படுத்துதல் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தால்தான் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.

பாமாயிலும் பாதிப்புகளும்!,,,,,,,By இடைமருதூர் கி. மஞ்சுளா



சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை அதிக அளவில் பாமாயில் பயன்பாடு தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து வந்தது. இடையில் சிறிது காலம் இதன் பயன்பாடு குறைந்திருந்தது.

தற்போது, பிற எண்ணெய்களின் விலை ஏற்றத்தைப் பார்த்து மிரண்டுபோன நடுத்தர வர்க்கத்தினர், குறைந்த விலையில் கிடைக்கும் பாமாயிலை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்த எண்ணெய் எப்படித் தயாரிக்கப்படுகிறது? எங்கிருந்து நமக்குக் கிடைக்கிறது? பாமாயில் உடலுக்கு ஓரளவு நன்மை செய்தாலும், இதன் தயாரிப்பால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன, பாதிக்கப்படும் உயிரினங்கள் எவை என்பன பற்றி எல்லாம் நம்மில் பெரும்பாலோர் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் கூடக் காட்டுவதில்லை. நியாய விலைக் கடைகளில் (ரேஷன்) குறைந்த விலையில் கிடைத்தால் போதும் என்று வாங்கிச் செல்கின்றனர்.

பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய்ப் பனை என்பது பனை மர குடும்பத்தைச் சார்ந்தது. இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், மலேசியா முதலிய நாடுகளில் தென்னை மரத்தில் லாபம் இல்லையென்று தென்னையை அழித்துவிட்டு, செம்பனை என்ற குட்டை பாமாயில் மரங்களை வளர்க்கிறார்கள்.

பாமாயில் ஏற்றுமதியில் மலேசியாவும், இறக்குமதியில் இந்தியாவும் முதலிடம் வகிக்கின்றன.

இந்தோனேசியாவில் 20.6.2013-இல் ஒரு வாரத்துக்கும் மேலாக சுமத்ரா தீவு பகுதியில் உள்ள காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீப் புகையால், சிங்கப்பூர், மலேசியா கடும் பாதிப்பைச் சந்தித்தது உலகமறிந்த நிகழ்வு. இந்தோனேசிய காடுகளில் இதுபோன்று அடிக்கடி தீப் பிடிக்கும். இந்தக் காட்டுத் தீ எதனால் ஏற்படுகிறது?

பாமாயில் மரங்கள் மூலம் அதிக லாபம் கிடைப்பதால், விவசாயிகள் தங்கள் பகுதியில் முற்றிய மரங்களை அழித்து, பாமாயில் மர விவசாயத்துக்காகத் தயார் செய்கிறார்கள். காடுகளை அழித்து அவற்றைக் கொளுத்திவிட்டு, அங்கே பாம் எண்ணெய் மரங்களை நடுவது ஆண்டுதோறும் ஜூனில் துவங்கி நடைபெறுகிறது.

இது அதிகம் லாபம் தருவதால் சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள பெரும் நிறுவனங்கள் காட்டுத் தீயை ஏற்படுத்தி இந்தோனேசிய காடுகளை அழித்து, அங்கு பாமாயில் மரங்களை வளர்க்க ஊக்கப்படுத்துகிறார்கள்.

இந்தோனேசியா ஏழ்மையான நாடு. எனவே, அங்குள்ள விவசாயிகளும் வருமானம் வந்தால் போதும் என்ற அளவில்தான் செயல்படுகிறார்கள்.

சிங்கப்பூரும், இந்தோனேசியாவும் அண்டை நாடுகள் மட்டுமல்ல, இந்தோனேசியாவில் ஏற்படும் காட்டுத் தீயால் வெளிவரும் புகை மண்டலம், அருகிலுள்ள சிங்கப்பூரின் சுற்றுச்சூழலைப் பாதித்து காற்று மாசுவின் அளவைக் கணிசமாக அதிகரித்தும் விட்டிருக்கிறது.

"அவ்வப்போது ஏற்படும் காட்டுத் தீயால் வெளிவரும் புகையைக் கட்டுப்படுத்த ஏதாவது செய்யுங்கள்' என்று சிங்கப்பூர் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தோனேசியாவைக் கேட்க, அவர்களோ "எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். ஆனால், அதற்கு எங்கள் நாட்டில் முதலீடு செய்துள்ள சிங்கப்பூர், மலேசிய தொழிலதிபர்களும் ஒத்துழைக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

மலேசியாவின் பரப்பளவில் கிட்டத்தட்ட பாதி அளவு பாமாயில் மர விவசாயம்தான் நடைபெறுகிறது. சமையல் எண்ணெய் நிறுவனங்கள் மலேசியா முழுவதும் பாம் எண்ணெய் மரங்களை நட்டு விளைச்சல் பார்த்தது போதாது என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தோனேசிய காடுகளிலும் கை வைத்துள்ளனர். இவற்றில் முதலீடு செய்துள்ளவர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்தவர்கள்தான்.

பாமாயில் ஏற்றுமதியை நிறுத்திவிட்டால், தங்கள் பொருளாதாரமே ஸ்தம்பித்துவிடும் என்பதால் மலேசியாவும், இந்தோனேசியாவும் காடுகளை அழித்து பாமாயில் உற்பத்தி செய்வதைத் தடுக்க முன்வராது.

பாமாயில் வாங்குவதை மற்ற நாடுகள் நிறுத்தினால் ஒருவேளை, காடுகள் பாமாயில் பண்ணைகளாக மாற்றப்படுவதைத் தடுக்கலாம்.

இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் பயன்பாட்டை நாம் தவிர்க்க வேண்டும். இந்தோனேசிய காடுகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய காடுகளான இந்தோனேசிய காடுகள் 12 கோடி ஹெக்டேர் பரப்பளவு கொண்டவை. சுமார் 90 சதவீதம் ஒரங்குட்டான் (Orangutan) குரங்குகள் இந்தக் காடுகளில் வசிக்கின்றன. 10 சதவீதம் மலேசியாவின் சாபா, சரவாக் காடுகளில் உள்ளன.

பாமாயில் தேவைக்காக ஒரங்குட்டானின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் இந்தோனேசிய காடுகள் முழுவதும் பரவியிருந்த ஒரங்குட்டான்கள், தற்போது 60 ஆயிரமே இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 5 ஆயிரம் ஒரங்குட்டான்கள் அழிந்து வருகின்றன.

இதைத் தடுக்க வழி இருக்கிறது. ஒரங்குட்டான் வசிக்கும் காடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பாமாயிலை விலக்க வேண்டும். "இந்தோனேசிய காடுகளில் இருந்து தயாரிக்கப்படவில்லை' என்று சான்று பெற்ற பாமாயில் உற்பத்தி, பிரிட்டனில் வெற்றி பெற்றிருக்கிறது.

அது சரியாக நடைபெறும்போது, இந்தியாவிலும் அதை ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்புகிறார் செய்தியாளர் பஹர் தத். தன் செய்தி சேகரிப்பு அனுபவங்களை "கிரீன் வார்ஸ்' (Green Wars) என்ற புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய அரசுகள் இணைந்து பாமாயிலுக்காக முதலீடு செய்யப்படுவதைத் தடுத்தால் எரியும் காடுகளைத் தடுக்கலாம். அங்கு வாழும் அரிய வகை ஒரங்குட்டான்களையும் காக்கலாம்.

நடுங்க வைக்கும் நடுக்கம்!

Dinamani

நேபாளம் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நேர்கொண்டிருக்கும் மிகப்பெரும் நிலநடுக்கத்தால் 2,350-க்கும் மேற்பட்டோர் பலியாகிருப்பதும், 6,000-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்திருப்பதும், லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழிடம் இல்லாது வீதிக்கு வந்திருப்பதும் உலக மக்கள் அனைவருக்கும் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் மட்டுமன்றி, வட இந்தியாவில் பிகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 55-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இமயமலையையும் விட்டுவைக்கவில்லை. அதிர்வின் காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டு எவரெஸ்ட் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்களின் முகாம்களை மூழ்கடித்ததில், 22 பேர் இறந்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.

கோடை காலம் என்பதால், காத்மாண்டு மற்றும் நேபாளத்தின் சுற்றுலாத் தலங்களுக்கு உலகம் முழுவதிலிருந்தும் பயணிகள் வந்துள்ள நேரத்தில் தாக்கி இருக்கிறது இந்தப் பேரிடர். வேதனையில் துடிக்கும் தமது மக்களைக் காப்பாற்றும் கடமையுடன், தங்கள் மண்ணுக்கு வந்த விருந்தினர் நலம் காக்கும் பொறுப்புச் சுமை நேபாளத்துக்கு கூடுதலாகி இருக்கிறது.

காத்மாண்டுவின் அழகை 60 மீட்டர் உயரத்திலிருந்து கண்டு களிக்கும் வகையில் 1832-இல் கட்டப்பட்ட தரஹரா கோபுரம் நிலநடுக்கத்தால் இடிந்து நொறுங்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 180 பேர் இறந்துள்ளனர். 1934-ஆம் ஆண்டிலும் இந்தக் கோபுரம் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. மீண்டும் கட்டப்பட்ட இந்தக் கோபுரம் தற்போது மறுபடியும் தரைமட்டமாகியுள்ளது. இடுபாடுகளில் சிக்கி இறந்த வெளிநாட்டுப் பயணிகளை அடையாளம் காண்பதும், உடல்களை அவர்தம் நாட்டுக்கு அனுப்புவதும், உயிர் பிழைத்தோரைப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பதும் மிகச் சிறிய நேபாள அரசு எதிர்கொள்ளும் பெரும் பொறுப்பு.

உலக நாடுகள் அனைத்தும் உதவிக் கரம் நீட்டியுள்ளன.

இந்தியா தனது விமானப் படை வீரர்களை அனுப்பி மீட்புப் பணியை முடுக்கிவிட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து உணவுப் பொருள், குடிநீர், மருந்துகள், மருத்துவர்கள் என எல்லா உதவிகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா முதல்கட்டமாக 10 லட்சம் டாலர் நிவாரண நிதி அளித்துள்ளது. நார்வே 39 லட்சம் டாலர் நிதியுதவி அளித்துள்ளது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையான உதவியைக் கொண்டு வந்து களத்தில் இறக்கிக்கொண்டே இருக்கின்றன. மீட்புப் பணிக்கு வருவோரையும் அச்சுறுத்தும் வகையில், மறுநாளே மற்றொரு நிலஅதிர்வு - 6.7 ரிக்டர் அளவுக்கு நேபாளத்தை உலுக்கியது.

நேபாளம் தனது முந்தைய எழில்முகத்தைப் பெற இரண்டொரு ஆண்டுகள் ஆகும். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மட்டுமே நேபாளத்தின் கணிசமான பொருளாதாரம் உள்ள சூழலில் இவர்களுக்குத் தாற்காலிக மாற்றுத் தொழில், நிதியுதவி, புதிய குடியிருப்புகள் போன்றன அவசியம். வெறுமனே நிதியுதவியோடு நில்லாமல், இத்தகைய தொடர் வாழ்வாதார மீட்புப் பணிகளிலும் உலக நாடுகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகள் நேபாளத்துக்கு மிகமிக இன்றியமையாதவை. சகோதர இந்தியா அந்தப் பொறுப்பை ஏற்கும் என்பதும் திண்ணம். ஏற்றும் வருகின்றது.

இந்திய அரசு மட்டுமன்றி, இந்தியாவில் உள்ள நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புகளும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம். குறிப்பாக, மருத்துவச் சுற்றுலா மூலம் பயன் அடையும் மருத்துவப் பெருநிறுவனங்கள் தாமாகவே நேபாளம் சென்று, சிகிச்சை அளிக்கவும், முகாம் அமைக்கவும், கூடுதல் அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோரை இந்தியாவுக்கு அழைத்துவந்து இலவசமாக சேவை அளிக்கவும் முன்வர வேண்டும்.

நேபாளத்தில் இந்தப் பேரிடர் நிகழ்ந்த அதே காலகட்டத்தில், சிலி நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக உறக்கநிலையில் இருந்த கல்புகோ எரிமலை தனது நெருப்பையும் சாம்பலையும் தூற்றியது. 20 கி.மீ. சுற்றளவில் வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். வான்வெளி முழுதும் சாம்பல் பரவியதால் ஐரோப்பாவுக்கான விமான சேவை ரத்து செய்யும் அளவுக்கு நிலைமை இருந்தது. பூமித் தாயின் வயிற்றில் ஏற்படும் மாறுதல்களின் ஏதுநிகழ்வா? இதைக் கொண்டு பிற இடங்களில் நிலநடுக்கத்தைக் கணிக்க முடியுமா? ஆராய்ச்சி தேவை.

இதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் சிட்னி பகுதியில் மிகப் பெரிய அளவில் பனிக்கட்டி மழை பொழிந்து வீடுகள், வாகனங்கள், கிடங்குகளைச் சேதப்படுத்தியுள்ளது.

மண்ணுக்கு அடியிலிருந்து பெட்ரோலிய பொருள்களையும், நிலக்கரியையும், பல கனிமப் பொருள்களையும் எடுப்பதுடன், எல்லாவற்றுக்கும் மேலாக ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி நிலத்தடி நீரையும் எந்தவிதக் கட்டுப்பாடும், வரைமுறையும், எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் உறிஞ்சி பூமித் தாயின் அடிவயிற்றை சுருக்கச் செய்வதால், அதன் விளைவுகளை பூமியின் மேற்புறத்தில் சந்திக்கிறோம். காடுகள் அழித்து, கானுயிர் அழித்து, வானக் குடையில் ஓட்டை போட்டு, வெப்பம் கூடி அவதிப்படுகிறோம்.

இயற்கையை, இந்த பூமியை மனிதன் மதிக்காதபோது, அவையும் மனித உயிருக்கு மதிப்பு தரப் போவதில்லை. ஊழிக்கூத்து நிகழ்த்தவே செய்யும் என்பதை எப்போதுதான் உலகம் உணரப்போகிறதோ தெரியவில்லை. உலகம் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் திண்ணம்.

தண்டனை முக்கியம் அல்ல: நல்வழி காட்டுவதுதான்!

logo

மத்திய அமைச்சரவை சில தினங்களுக்கு முன்பு எடுத்த ஒரு முடிவு, நாடு முழுவதும் ஒரு பெரிய எண்ண அலசலை உருவாக்கிவிட்டது. 2012–ம் ஆண்டு நிர்பயா கற்பழிப்பு வழக்கில் ஒரு குற்றவாளி 18 வயதிற்கு குறைவானவன் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டால், அவனை ஜெயிலில் அடைக்காமல் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்து திருத்த வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான். இது நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த கொடூர குற்றத்தை செய்தவன் சிறுவன் என்ற போர்வையில் தப்பித்து விடுவதா? அவனையும் மற்ற குற்றவாளிகளுக்கு இணையான குற்றவாளியாக கருதியல்லவா தண்டனை அளித்திருக்க வேண்டும் என்று ஒரு பக்கமும், இல்லை... இல்லை... சட்டத்தின் அடிப்படையில் அவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்து திருத்த எடுத்துக்கொண்ட முயற்சிதான் சரியானது என்றும் கருத்துகள் உலவின. 

இந்த நிலையில், 16 முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள் கொலை, கற்பழிப்பு போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களை மற்ற குற்றவாளிகளுக்கு இணையாக கருதி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி தண்டனை வழங்க ஒரு திருத்த மசோதா தயாரிக்கப்பட்டது. இதை மத்திய அமைச்சரவை தீவிரமாக ஆய்வு செய்து சில பரிந்துரைகளையும் சேர்த்துள்ளது. அந்த சிறுவர்கள் செய்த குற்றம் சிறியதா?, கடுமையானதா? மிக கொடூரமானதா? என்பதை மனவியல் மற்றும் சமூக நிபுணர்களின் துணையோடு இளம் சிறார் நீதி வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் சிறுவன் என்ற வகையிலா, பெரியவர்கள் என்ற வகையிலா இந்த குற்றத்தை செய்தார்கள்? என்ற அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும். அதன்படி நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளது. இது நடைமுறைக்கு நிச்சயமாக சாத்தியமில்லை.

விடலைப்பருவம் என்பது குழந்தை பருவத்தில் இருந்து இளைஞர்கள் என்ற பருவத்திற்கு செல்லும் வழியில் உள்ள சில ஆண்டுகளின் இடைக்கால பருவம்தான். வெறும் மணலால் பாத்திரங்களை உருவாக்க முடியாது. களிமண்ணில் நீர்குழைத்து அதன் பிறகு உருவாக்கும்போதுதான் மண்பாண்டங்கள் உருவாகிறது. அதை உருவாக்குவது குயவர்களின் கையில்தான் இருக்கிறது. அதுபோல், தண்ணீர் ஊற்றி களிமண்ணாக உள்ள இந்த விடலை பருவத்தில் அவர்களை உருவாக்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்புதான். அந்த பொறுப்பில் இருந்து தவறிவிட்ட சமுதாயம் இப்போது அவர்களை தண்டிக்க துடிப்பது நியாயம் அல்ல. இத்தகைய விடலை பருவ குற்றவாளிகளை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டியதுதான் சமுதாயத்தின் கடமையே தவிர, தண்டித்து ஜெயிலில் அடைப்பது அல்ல. மேலும், ஏற்கனவே சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்ட கைதிகளில் பெரும்பாலானோர் திருந்தி வெளியே வந்ததாக சரித்திரமே இல்லாத நிலையில், இப்படிப்பட்ட இளம் சிறார்களை ஜெயிலில் கொண்டுபோய் அடைத்தால், அங்குள்ள குற்றவாளிகள் இவர்களுக்கு ஆசான்களாக மாறி இவர்கள் திருந்தி வெளியே வருவதற்கு பதிலாக, பயிற்சி பெற்ற கைதேர்ந்த கிரிமினல்களாகத்தான் நிச்சயமாக வெளியே வரமுடியும். அது சமுதாயத்துக்கு இன்னும் கேடாக உருவாகும். ஆக, இந்த அபாயத்தை மனதில் கொண்டு அவர்கள் இந்த குற்றங்களை செய்யாத வகையில் புதிய வழிகளை காணவும், அதையும் மீறி செய்தவர்களை புனிதர்களாக திருத்தி வெளியே அனுப்புவதற்கான வழியையும் காண்பதுதான் சிறந்தது என்ற வகையில் அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்.

Sunday, April 26, 2015

எய்ம்ஸ் மருத்துவமனை இடத்திற்கான ஆய்வு: சொதப்பிய அதிகாரிகள்!

cinema.vikatan.com

கில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) தமிழகத்தில் அமைய வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த நிலையில் தமிழகத்தில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து அனுப்பும்படி மத்திய அரசு, தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிபட்டி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, மதுரை மாவட்டத்தில் தோப்பூர் ஆகிய 5 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து மத்திய அரசுக்கு பட்டியலை அனுப்பியது.
தமிழக அரசு தேர்வு செய்து கொடுத்த இடங்களில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இடத்தை தேர்வு செய்வததற்காக சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஐந்து நபர் அடங்கிய குழு தமிழகம் வந்தது. குழுத்தலைவர் மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் இணை இயக்குநர் தாத்ரி பாண்டா தலைமையில் அதிகாரிகள் மேற்கண்ட இடங்களை ஆய்வு செய்தனர். கடைசியாக செங்கல்பட்டில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

சொதப்பிய அதிகாரிகள்

ஆய்வுக் குழு வருகைக்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர்  ராதாகிருஷ்ணன், வருவாய்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு திருமணியில் தொழுநோய் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனைக்கு சொந்தமாக சுமார் 500 ஏக்கர் நிலம் காலியாக இருக்கின்றது. எய்ம்ஸ் கேட்ட 200 ஏக்கர் நிலத்திற்கு மேல் இடம் இருக்கின்றது. இதுதவிர, ரயில், பேருந்து, விமானப் போக்குவரத்து என அனைத்தும் இதன் அருகிலேயே இருக்கின்றது. பாலாறு பக்கத்தில் இருப்பதால் தண்ணீர் வசதியும் உள்ளது. இதனால் இங்கேதான் மருத்துவமனை அமையும் என்று அனைத்துத் தரப்பினரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆய்விற்கு வந்த அதிகாரிகள் எவ்வளவு இடம் இருக்கின்றது? என கேட்டதற்கு, 185 ஏக்கர் நிலம் உள்ளதாக வருவாய் துறையினர் கணக்கு சொன்னார்கள். அதில் ஆக்கிரப்பு செய்யப்பட்ட நிலங்கள் எவ்வளவு? என மத்தியக் குழு அதிகாரிகள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திகைத்தனர். போக்குவரத்து வசதி எப்படி இருக்கின்றது? என கேட்டபோதும், சாலை வசதியை பற்றி எடுத்துச் சொல்ல அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

வரைபடத்தை காட்டி, இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலை, இந்த ரோடு ஸ்டேட் ஹை வே, இது எவ்வகை ரோடு என ஒரு கிராம சாலையை காண்பித்து கேட்டனர். அதற்கு ஆலன் ரோடு என அந்த சாலையின் பெயரை சொன்னார்கள். திரும்பத் திரும்ப கேட்டும் சரியான பதில் இல்லை. அடுத்ததாக தண்ணீர் வசதி எப்படி இருக்கின்றது என கேட்ட போது தண்ணீர் வசதி குறைவு என பதில் அளித்தனர். வந்திருந்த அதிகாரிகளே, பாலாறு பக்கத்தில் இருக்கின்றது என சொல்ல, பாலாறு தண்ணீர் சரியாக கிடைப்பதில்லை. நிலத்தடி நீரைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளே தெரிவித்தனர். இப்படி அதிகாரிகள் தங்கள் துறைகளை பற்றி சரியான விவரங்கள் இல்லாமலும், தெளிவு இல்லாமலும் வந்திருந்தது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

''பலாற்று நீர்தான் தென்தமிழகம் முழுவதும் ரயில்வேவிற்கு சப்ளை செய்யப்படுகின்றது. மருத்துவமனை அமைய இருக்கும் இடத்தில் அரசியல் பிரமுகர்கள் மண் எடுத்து விட்டார்கள். அதிகாரிகளும் ஆக்கிரமிப்பிற்கு உதவியுள்ளார்கள். எனவே, எய்ம்ஸ் மருத்துவமனையை எப்படி இங்கு அமையவிடுவார்கள்'' என சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர். 
 
எய்ம்ஸ் ஆய்வு குழுவின் தலைவரான தாத்ரி பாண்டாவிடம் பேசினோம், “எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக ஆய்வு செய்தோம். கடைசியாக செங்கல்பட்டில் ஆய்வு செய்தோம். தண்ணீர் வசதி, மண்ணின் தன்மை, போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தோம்.  அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு குறைந்தது 200 ஏக்கர் நிலம் தேவை. பிற்காலத்தில் மருத்துவமனை விரிவாக்கம் செய்வதற்கு கூடுதல் நிலமும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியின் பலம், பலவீனத்தை அறிக்கையாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பிப்போம். அவர்கள்தான் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவேண்டும் என்று இறுதி முடிவெடுப்பார்கள்” என்கிறார்.

-செய்தி, படங்கள்: பா.ஜெயவேல்

விதிமுறையும் நடைமுறையும்!

Dinamani

பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் தார்மிக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், செயல்பாடுகளையும், சட்டம் போட்டும், உத்தரவு பிறப்பித்தும், விதிமுறைகளை உருவாக்கியும் உறுதிப்படுத்துவது என்பது எந்த அளவுக்கு நமது நிர்வாகம் சீர்கெட்டிருக்கிறது என்பதைத்தான் அடையாளப்படுத்துகிறது. மாநில ஆளுநர்களும், இந்தியக் குடிமை, காவல், வெளியுறவுப் பணியில் இருக்கும் அதிகாரிகளும் அவர்களாகவே கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அரசு உத்தரவு பிறப்பித்து நடைமுறைப்படுத்த முற்பட்டிருப்பதை வரவேற்பதா, துரதிர்ஷ்டம் என்று வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.

மாநில ஆளுநர்களுக்குப் புதிதாகப் பதினெட்டு அம்ச சட்ட திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, மாநில ஆளுநர்கள் விருப்பப்படி சொந்த மாநிலத்துக்கு அடிக்கடி சென்றுவிட முடியாது. ஆண்டொன்றுக்கு 73 நாள்கள், அதாவது 20% நாள்கள் மட்டுமே, பதவி வகிக்கும் மாநிலத்தை விட்டு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள முடியும் என்கிற கட்டுப்பாட்டை ஆளுநர்களுக்கு விதித்திருக்கிறது நரேந்திர மோடி அரசு.

தங்களது தனிப்பட்ட அலுவல், குடும்ப நிகழ்வுகளைக்கூட அரசுமுறைப் பயணமாக்கிச் சொந்த மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஆளுநர்கள் அடிக்கடி பயணிக்கும் போக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இனிமேல், மாநில ஆளுநர்களும், துணைநிலை ஆளுநர்களும் உள்நாட்டுப் பயணமாக இருந்தால் ஒரு வாரம் முன்பாகவும், வெளிநாட்டுப் பயணமாக இருந்தால் ஆறு வாரங்களுக்கு முன்பாகவும் குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெற்றாக வேண்டும். அவசர நிமித்தம் உள்நாட்டுப் பயணம் மேற்கொண்டால், பயணம் செய்த பிறகு அல்லது புறப்படும் முன்பு குடியரசுத் தலைவரிடம் அறிவித்தால் போதும். வெளிநாட்டுப் பயணமாக இருந்தால் இதுவும் அனுமதிக்கப்படவில்லை.

முந்தைய மன்மோகன் சிங் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அகற்றப்பட்டு, மோடி அரசால் நியமிக்கப்பட்டவர்கள் பெரும்பாலான மாநிலங்களில் ஆளுநர்களாக இருக்கும் நிலையில், இதற்குப் பின்னால் அரசியல் பழிவாங்குதல் இருக்கிறது என்று யாரும் குற்றம்சாட்ட முடியாது. மூதறிஞர் ராஜாஜி குறிப்பிட்டதுபோல, ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு வாகனம் போன்றது. அதற்கு அன்றாடத் தேவை இல்லாவிட்டாலும், திடீர் அவசியம் நேரும்போது தயாராக இருத்தல் வேண்டும். ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு, நரேந்திர மோடி அரசின் பாராட்டுதற்குரிய நிர்வாக முடிவுகளில் ஒன்று.

அடுத்ததாக, இந்திய குடிமைப் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் ரூ. 5,000-க்கும் அதிக மதிப்புள்ள பரிசுப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்றும், உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து ரூ.25,000-க்கு அதிகமான பரிசுப் பொருள்களைப் பெற்றால் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ரூ.5,000 மதிப்புள்ள பரிசுப் பொருள் மட்டுமல்ல, இலவச கார் அல்லது வாகனத்தைப் பயன்படுத்துதல், விமான டிக்கெட் பெறுதல் அல்லது தனியார் விருந்தினர் மாளிகையில் தங்குதல், அவர்கள் செலவில் 5 நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடுதல் போன்றவையும் அடங்கும்.

இந்த நடைமுறை புதியதல்ல. இதுநாள் வரை இதே நிபந்தனையானது, பரிசுப் பொருளுக்கு ரூ.1,000 ஆகவும், உறவினர்களிடமிருந்து பெற்றால் தெரிவிக்க வேண்டிய பரிசுப் பொருள் மதிப்பு ரூ.5,000 ஆகவும் இருந்தது. தற்போது இதன் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வளவுதான். ஆனால், இந்த நிபந்தனையை மீறியவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? யாராவது தண்டிக்கப்பட்டார்களா என்றால், இல்லை.

2014-15ஆம் நிதியாண்டுக்கான அசையாச் சொத்து விவரங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசின் குரூப் ஏ, பி, சி பிரிவு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நடைமுறையும் புதிதல்ல. ஆனாலும், பலரும் இதைத் தாக்கல் செய்வதே இல்லை. இதற்காக எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

1991-ஆம் ஆண்டு முதலாக இதுநாள் வரை 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. ஆனால், இவர்களில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. இவர்களில் சிலர் ஓய்வு பெற்று சென்றுவிட்டார்கள். இவர்களில் பலர் மீது வழக்குத் தொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தும் வழக்குகள் முடிவுறவில்லை.

அரசியல்வாதிகள் ஊழல் செய்தால், அடுத்த தேர்தலில் அவர்களைத் தண்டிக்கும் வாய்ப்பு மக்களாட்சியில் குடிமகனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு அதிகாரியோ, நீதித் துறையில் இருப்பவர்களோ எந்தவிதக் கேள்வி கேட்புக்கும் உள்பட்டவர்களாக இல்லை. அரசு அதிகாரிகள், நீதித்துறையினர் ஆகியோரின் நடவடிக்கையைக் கண்காணிக்க ஏதாவது அமைப்பு இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது.

ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி விடலாம். அரசு அதிகாரிகளை இதுபோன்ற உத்தரவுகள் கட்டுப்படுத்துமா, அவர்கள் அதைப் பின்பற்றுவார்களா என்பது சந்தேகம்தான். உத்தரவைக் காட்டி பயமுறுத்தவாவது முற்பட்டிருக்கிறார்களே, அதுவரைக்கும் மகிழ்ச்சி!

ஏப்ரல் 26: கணிதத்தின் துருவ நட்சத்திரம், கணித மேதை ராமானுஜன் நினைவு தின சிறப்பு பகிர்வு..



கணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள் .அப்படி ஒருவர் ஸ்ரீனிவாச ராமானுஜன் .அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர் ;மிக இளம் வயதிலேயே தவறி இருந்தார் .ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில் தான் பள்ளிகல்வி .பல நேரங்களில் பிள்ளையை அம்மா கோமளவல்லியால் கண்டுபிடிக்க முடியாது ,கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு போட்டுவிட்டு அதற்கான விடைகளை கனவில் தேடிய அற்புதம் அவர் .பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை என ஆசிரியர் வகுப்பில் சொன்ன பொழுது ;பூஜ்யத்தை ஒரு எண்ணுக்கு பின்னாடி போட்டால் மதிப்பு வருகிறதே என கேட்ட பொழுது அவருக்கு வயது பத்துக்குள்



அவருக்கு கணிதத்தின் மீது ஈடிலா ஆர்வம் வருவதற்கு ஒரு எளிய சம்பவம் காரணம் .,அவரின் நண்பன் சாரங்கபாணி நாற்பத்தி ஐந்துக்கு நாற்பத்தி மூன்று வாங்கியிருந்தார் .இவர் ஒரு மதிப்பெண் குறைவாக வாங்கி இருந்தார் ,அதனால் அவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டு கணிதத்தில் கல்லூரி மாணவர்கள் படிக்கும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார் .லோனியின் மட்ட திரிகோணவியல் ஒரு நூல் ;இன்னொன்று காரின் சினாப்சிஸ் .இந்த நூலின் சிக்கல் இது கல்லூரி மாணவர்கள் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டிய அல்லது ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய சூத்திரங்கள்,தேற்றங்களை குறிப்பிட்டு இருக்கும் .எப்படி வந்தது என விளக்கம் இருக்காது . அதைப்படித்து தான் ராமானுஜன் தன் கணித தாகத்தை தணித்துக்கொண்டார் .அவரே அது எப்படி வந்தது என கண்டறிந்தார் .பேப்பர் வாங்க காசில்லாததால் ஸ்லேட்டில் கணக்குகளை போட்டு பார்த்து விட்டு முடிவுகளை மட்டும் நோட் புக்கில் எழுதினார் .குமபகோணம் அரசு கல்லூரியில் மூன்று முறை முயன்றும் ஆங்கிலத்தில் தேற முடியாமல் பட்டம் வாங்க முடியாமல்,பச்சையப்பா கல்லூரி போனார் .


அங்கே சிங்கார முதலியாரின் அறிமுகம் கிடைத்தது .இவரின் சூத்திரங்கள் அவரை கவர்ந்தன .எண்ணற்ற நூல்களை படித்தார் .சென்னை துறைமுகத்தில் எழுத்தராக சேர்ந்தார் ;இந்தியாவில் வந்த கணித இதழில் எண்ணற்ற கணக்குகளை வெளியிட்டு கொண்டிருந்த இந்திய கணிதக் குழுவை நிர்மாணித்த வி. ராமசுவாமி ஐயர் கண்ணில் இவரின் கணக்குகள் பட்டன ;கூடவே கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற துறைமுக தலைவர் ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் கண்ணில் பட்டது .அவர் கிண்டி பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடம் அறிமுகம் தந்தார் ,அவர்கள் இவரை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கு கடிதம் எழுத சொன்னார்கள் .

எண்ணற்ற நபர்களுக்கு இவரின் சூத்திரங்கள் போய் சென்றன.பலர் குப்பையில் போட்டார்கள் பயின்ற காட்பிரே ஹரால்ட் ர்டிக்கு கடிதம் போனது .அதில் இருந்த வரிகள் இவை “எனக்குத் தேவை என்பதெல்லாம் ஒரே ஒரு வேளை உணவுதான். எனக்கு அதுவும் கிடைப்பது மிகஅரிதாக இருக்கிறது. ஆகவே, தாங்கள் எனது கணித முயற்சிகளைப் பிறர் அறிய எழுதினால் நல்லது. ஏனெனில், என் நிலைமையை அறிந்து பல்கலைக்கழகமோ அல்லது அரசோ ஏதேனும் உதவிசெய்ய முன்வரக் கூடும். இதனால் எனது வறுமை சற்று நீங்குவதுடன், கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய உற்சாகம் ஏற்படும்”

ஜனவரி பதினாறு அன்று 1913 இல் அக்கடிதம் ஹார்டியின் கைக்கு போனது; எதோ கிறுக்கல் என நினைத்து முதலில் எடுத்து வைத்த ஹார்டி இரவு படிக்கும் பொழுது மெய்சிலிர்த்து போனார்; இரவெல்லாம் தூக்கத்தை தொலைத்து ஒரு இணையற்ற கணித மேதையை கண்டுவிட்டதற்கு பூரித்தார். உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.

அங்கே ஓயாமல் பல்வேறு எண் கோட்பாடுகளில்,செறிவெண் சார்ந்தும் அவரின் ஆய்வுகள் பிரமிப்பானவை ;அவரின் தேற்றங்கள் கண்டுபிடிப்புகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறும் அளவுக்கு எளிமையானவை இல்லை .அவரின் பல கணித தேற்றங்கள் இன்றைக்கு [Computer Algorithmsல் பயன்பட்டு சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன..எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறியவை இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன.

அத்தோடு அவரின் எல்லையற்ற திறமையை கண்டு வியந்து அவருக்கு இன்றைய முனைவர் பட்டத்துக்கு இணையான பட்டத்தை ட்ரினிட்டி கல்லூரி வழங்கியது .ராயல் சொஸைட்டியில் அவரை பெல்லோவாக சேர்த்துக்கொண்டார்கள் . ராமானுஜத்தை தொடர்ந்து கொண்டாடிய ஹார்டியின் வரிகளில் “எனக்கு 25 மதிப்பெண்ணும், தலைசிறந்த ஜெர்மன் கணித வல்லுநர் டேவிட் ஹில்பெர்ட்டுக்கு 80 மதிப்பெண்ணும், சந்தேகமே இல்லாமல் ராமானுஜனுக்கு 100 மதிப்பெண்ணும் வழங்குவேன் “என்றார்.

அவரின் பல்வேறு படைப்புகள் பல நோட் புத்தகங்களில் இருந்தன .அவற்றை கண்டு பிடித்து எடிட் செய்யும் வேலையை ர்ஜ் ஆண்டிரூஸ், புரூஸ் பெர்ண்ட் எனும் இரண்டு அறிஞர்கள் செய்து வருகிறார்கள் .ப்ரூஸ் பெர்ண்ட் என்ன சொல்கிறார் என்றால் ,”கிட்டத்தட்ட இரண்டாயிரம் முடிவுகளை இதுவரை அவரின் நோட்களில் கண்டு இருக்கிறோம் .இதில் தொன்னூறு சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது .இவ்வளவு வெற்றி விகிதம் எந்த கணித மேதைக்கும் இல்லாதது !”என்கிறார் “அவரின் கணித முடிவுகள் ஆய்லர்,ஜகோபி போன்ற கணித மாமேதைகளுக்கு இணையாக ஒப்பிடும் தரத்தில் இருந்தது” “என்றும் ஹார்டி கூறியுள்ளார்.

ராமானுஜம் காசநோயால் முப்பத்தி மூன்று வயதில் மரணம் அடைந்தார் .அப்பொழுது அவருக்கு நிகழ்ந்தது பெருங்கொடுமை . கடல் கடந்து போனதற்காக அவரை ஜாதி விலக்கு செய்திருந்தார்கள் . அவர் மரணத்தின் பொழுது இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள். காலங்கள் கடந்தாலும் மேதைகளுக்கு இதுதான் நிலைமை போலும்

ஆங்கிலத்தில் தேறாமல் இந்தியாவை விட்டு கிளம்பி தன் அறிவு வெளிச்சத்தால் கணித உலகின் துருவ நட்சத்திரமாக திகழும் ராமானுஜத்தின் நினைவு நாள் இன்று.

- பூ.கொ.சரவணன்

குவைத்தில் இந்தியர்கள் எண்ணிக்கை 8 லட்சம்: வீட்டு வேலை செய்வோர் அதிகம்

குவைத்தில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, 8 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள விவரம்: குவைத்தில் அதிகம் வாழும் வெளிநாட்டினர் என்ற சிறப்பை இந்திய சமூகம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் எகிப்து நாட்டவர் உள்ளனர். குவைத்தில், விசா காலாவதியான பிறகும், சட்டப்புறம்பாக தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, 25 ஆயிரமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் எவ்வளவு?

செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளதால், விரைவில் குவைத் வாழ் இந்தியர் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குவைத்தில், இந்தியர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 5 முதல் 6 சதவீதம் அதிகரித்து வருகிறது. தற்போது, இங்கு இந்தியாவைச் சேர்ந்த, 6 லட்சம் ஆண்களும், 2 லட்சம் பெண்களும் உள்ளனர். இவர்களில், 2.80 லட்சம் பேர் வீட்டு வேலை செய்கின்றனர். அதில், 1.90 லட்சம் பேர் ஆண்கள்; 90 ஆயிரம் பேர் பெண்கள். வீட்டு வேலை, தோட்ட வேலை, ஓட்டுனர், சமையல், துப்புரவு உள்ளிட்ட பணிகளை அவர்கள் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில், வீட்டு வேலை செய்வோருக்கு, 2,500 டாலர் வங்கி உத்தரவாதம் அளிக்கும் திட்டம் அறிமுகமானது. இதன் காரணமாக, குவைத்தில், வீட்டு வேலை செய்யும் இந்தியர்கள் அதிகரித்துள்ளனர். பெரும்பாலான இந்தியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள், கட்டுமானம், தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல், பட்டய கணக்கு தணிக்கையாளர்களாகவும், ஐ.டி., வல்லுனர்களாகவும் உள்ளனர்.

கல்வி மையங்களில்...:


இவர்களை சார்ந்து, மனைவி, குழந்தைகள் என, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். 42 ஆயிரம் மாணவர்கள், 20க்கும் மேற்பட்ட இந்திய கல்வி மையங்களில் படிக்கின்றனர். குவைத்தில், இந்தியருக்கு, பல்கலை., மட்டத்திலான கல்வி வசதி கிடையாது. சென்ற ஆண்டு, குவைத்தில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கு, 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிவில் கட்டுமான பணிகள் வழங்கப்பட்டன. இதனால், தனியார் துறை நிறுவனங்களில், இந்தியர்களின் பங்களிப்பு, 8 சதவீதம் அதிகரித்தது. இது, அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குவைத் அரசு மருத்துவமனைகள் மற்றும் தேசிய எண்ணெய் நிறுவனங்களில், 24 ஆயிரம் இந்தியர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் செவிலியர்களாகவும், பொறியாளர்களாகவும் உள்ளனர். மிகச் சிறிய அளவில் இந்திய விஞ்ஞானிகளும், குவைத்தில் உள்ளனர். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஹவுஸ்புல்': ரயில், பஸ்களில் ஜூன் 10ம் தேதி வரை டிக்கெட் இல்லை: கோடை விடுமுறைக்கு செல்லும் பயணிகள் திணறல்

பள்ளித் தேர்வுகள் முடிந்துள்ளதால், கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரயில்களில் முன்பதிவு, 'ஹவுஸ்புல்' என்ற நிலையை தாண்டி, காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றுள்ளது. நெடுந்தூர அரசு விரைவு பஸ்களிலும் ஜூன் மாதம், 10ம் தேதி வரை, பெரும்பாலான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்கு, சென்னை, கோவை, சேலம், மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஆன்மிக சுற்றுலா, கோவில் திருவிழா, உறவினர் வீட்டிற்கு செல்வது, ஊட்டி, கொடைக்கானல் என, கோடை வாசஸ்தலங்களுக்கும், விடுமுறைக்கு செல்வோர் அதிகம். இதனால், ரயில் மற்றும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பிளஸ் 2, 10ம் வகுப்பு பொது தேர்வுகள் முடிந்ததை அடுத்து, கடந்த, இரண்டு வாரங்களாக ரயில்களில் முன்பதிவு சூடுபிடித்தது.

காத்திருப்போர் பட்டியல்:

தற்போது முன்பதிவு உச்சத்தை அடைந்துள்ளது. இதன் தாக்கமாக, ஜூன், 10ம் தேதி வரை, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும், குருவாயூர், திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், அனந்தபுரி, நெல்லை, பாண்டியன், பொதிகை என, அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று உள்ளது. சேலம், கோவை மார்க்கமாக செல்லும் நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் என்ற நிலையே நீடிக்கிறது. தஞ்சை செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் முன்பதிவு முடிந்துள்ளது. ரயில் முன்பதிவு முடிந்துள்ளதால், அடுத்தகட்ட முயற்சியாக, அரசு மற்றும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், முக்கிய வழித்தடங்களில் சில சிறப்பு பஸ்களை களம் இறக்கி உள்ளது. இந்த சிறப்பு பஸ்களிலும், உடனுக்குடன் முன்பதிவு முடிவுக்கு வந்து விடுகிறது. வசதியின் அடிப்படையில் பெரும்பாலான பயணிகள் ஆம்னி பஸ்களில் பயணிப்பதால், ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இப்படி, ரயில், பஸ்களில் முன்பதிவு முடிவுக்கு வந்து உள்ளது.

சிறப்பு ரயில்கள்:

தற்போது, நெல்லை, மதுரைக்கு மட்டும் சில சிறப்பு ரயில்களை, ஓரிரு நாட்களுக்கு தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இது, பயணிகளுக்கு பெரியளவில் உதவவில்லை. தஞ்சை, கோவை உள்ளிட்ட பிற மார்க்கங்களில் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட வேண்டும். தற்போது, ஆறு முதல் எட்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், இம்மாதத்துடன், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு தேர்வுகளும் முடிகின்றன. இதனால், மே மாதம் முழுவதும் ரயில் மற்றும் பஸ் நிலையங்களுக்கு, பயணிகள் அதிகளவில் படையெடுப்பர். தமிழகத்தின் முக்கிய வழித்தடங்களில், வாரத்திற்கு குறைந்தபட்சம், மூன்று நாட்களுக்கு என்ற அடிப்படையில், சிறப்பு ரயில்கள் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

ஊட்டி, கொடைக்கானலுக்கு சிறப்பு பஸ்கள்?

கோடை விடுமுறையின் போது, ஊட்டி, கொடைக்கானலில் மலர் கண்காட்சி துவங்கிவிடும். மேலும், சுட்டெரிக்கும் வெயில் சூழலில் இருந்து தப்பிக்க, இந்த இடங்களுக்கு செல்வோர் அதிகம். இதனால், முக்கிய நகரங்களில் இருந்து, ஊட்டி, கொடைக்கானலுக்கு அதிகளவில் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என, பயணிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

HC confirms no pension for those who quit govt. jobs

The Madras High Court Bench here has refused to direct Commercial Taxes Department and the Accountant General (Accounts and Entitlements) to grant monthly pension along with arrears to a Junior Assistant who had resigned from service way back in 1978.

Dismissing the writ petition filed by the former employee K.R. Krishnamoorthy, Justice S. Vaidyanathan said such a direction could not be issued since the Tamil Nadu Pension Rules, 1978 do not contemplate grant of pension to government servants who had resigned from service on their volition.

“From a reading of the rules, it is very clear that those who had resigned from service entails forfeiture of past service. In the present case, since the petitioner had resigned from service, he is not entitled to the relief sought for in this writ petition,” the judge observed.

In his affidavit, the writ petitioner had claimed to have joined the Commercial Taxes Department as a Lower Division Clerk in 1967 and to have completed probation in the cadre of Junior Assistant in 1974 before resigning the job, due to family problems, in 1978.

Thereafter, he made several representations to the government authorities seeking grant of monthly pension but his efforts did not fructify and hence he had filed the present writ petition in 2013 with a plea to order grant of pension as well as the arrears.








Opposing the plea, the Accountant General stated that pension would not be granted to employees who had resigned from the job irrespective of the number of years they had served the government. The benefit was only for those attain the age of superannuation, die in harness or retire voluntarily.

Kumbakonam Junction to be Mahamaham-ready by December

Of the Rs. 4-cr. worth proposals sent to Railway Board, Rs.1 cr. sanctioned already

All works related to railway facility improvement in Kumbakonam will be completed by December, well ahead of the Mahamaham slated for February next, according to Southern Railway General Manager Ashok Kumar Aggarwal.

Speaking to the media after inspecting the development works at Kumbakonam Junction on Friday, Mr.Aggarwal said proposals worth Rs. 4 crore have been forwarded to the Railway Board for improving facilities in the junction and meeting the needs of devotees during the Mahamaham.

The Railway Ministry has so far released Rs.1 crore following which some of the important works have been taken up, he said. They included platform extension to accommodate 24 coaches, overbridge for Platform Three, additional sanitation and drinking water amenities, among other things. The railways has already remitted Rs. 16 lakh as fee to the Kumbakonam Municipality to connect the drainage lines to the main underground drainage system.

In the run up to the Mahamaham, special train services would be operated for 20 days and 50 temporary toilets and bathing sheds would be installed on the junction premises.

Mr.Aggarwal assured that all development works in Kumbakonam junction would be completed by December to meet the Mahamaham rush in February. All stations in the Thanjavur-Mayiladuthurai section would get a facelift ahead of the festival, he said. On the track doubling work apace in the Tiruchi Division, Mr.Aggarwal said while the Golden Rock-Thanjavur section work would take another two years to be completed, survey on the Kumbakonam-Villupuram stretch has been completed at a cost of Rs. 2 crore and has been forwarded to the Railway Ministry for approval.

Divisional Railway Manager, Tiruchi, Atul Kumar Aggarwal, Senior Divisional Operations Manager Rathi Priya, Senior Divisional Commercial Manager Padmadoss, and other railway officials were present.

King Institute may house National Institute of Ageing

About eight acres of the King Institute of Preventive Medicine’s campus may soon house the National Institute of Ageing.

A five-member Central government team, which is in the State to examine sites for the establishment of an All India Institute of Medical Sciences (AIIMS), arrived in Guindy on Saturday morning to take a look at the campus.

Speaking to the press, Dharitri Panda, joint secretary, ministry of health and family welfare, said the team has noted there are many trees on the Guindy campus, and have asked for a mapping of the trees in order to minimise damage during construction of the institute.

“The institute will be a 200-bed specialist geriatric facility linked to Madras Medical College (MMC). We can increase the number of beds later, if necessary. Research, training and producing specialists are among its aims.

There will be 15 postgraduate seats in geriatric medicine at the institute,” she said.

The Rs. 150-crore project has been approved in the 12{+t}{+h}Five Year Plan, she said. Among other facilities, the institute will have a Frail Elderly Clinic, an Aids and Appliances Clinic, and an Implants and Cosmetic Clinic.

The institute will be one of only two in the country, with the other at AIIMS in Delhi. “We decided to locate the institute in Chennai partly due to MMC’s contribution to this field,” she said.

GGH Block

Rajiv Gandhi Government General Hospital (GGH) is set to get a new tower block for outpatients.

The hospital will also get a block for the urology and nephrology departments as well as a separate rheumatology block, said J. Radhakrishnan, State health secretary, at the golden jubilee celebrations of the urology department on Friday.

S. Geethalakshmi, director of medical education, said the kidney transplants performed by the department had helped a number of patients. She also highlighted the importance of starting fellowship courses for specific surgeries as well as holding live workshops.

R. Vimala, hospital dean, said a postgraduate students’ hostel is also coming up.





NEWS TODAY 22.04.2024