Tuesday, April 14, 2015

தமிழகத்தில் தொடரும் அரசு ஊழியர்கள் தற்கொலை: அதிகாரி மிரட்டலால் நடந்த விபரீதம்!

ராமநாதபுரம்: அதிகாரியின் மிரட்டலுக்கு பயந்து சத்துணவு பிரிவு அலுவலக உதவியாளர் ஒருவர் அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு பிரிவு அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர் சண்முகவேலு (57). ராமநாதபுரம் அரசு ஊழியர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் நேற்று திடீரென அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சக ஊழியர்கள் இது குறித்து காவல்துறையினர் புகார் செய்தனர்.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் சண்முகவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சத்துணவு பிரிவில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் மதிவாணன் என்பர்தான் சண்முகவேலு தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என சண்முகவேலுவின் குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர்.

விடுமுறை தினமான கடந்த ஞாயிற்று கிழமை சண்முகவேலுவுக்கு போன் செய்த மதிவாணன், உடனடியாக நீ ஆபிஸுக்கு வரனும். அப்படி வரலைன்னா கலெக்டரிடம் கம்ப்ளைண்ட் செஞ்சு உன்னோட வேலையை காலி செஞ்சிருவேன்’’ என கூறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது பேரக்குழந்தைகளை வெளியூருக்கு அழைத்து சென்றிருந்ததால் சண்முகவேலு அலுவலகம் செல்லாத நிலையில் நேற்று காலை சென்ற அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தற்கொலைக்கு காரணமான மதிவாணனை கைது செய்ய சொல்லி சண்முகவேலுவின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சண்முகவேலுவின் உடலை வாங்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ளனர். இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

-இரா.மோகன்

No comments:

Post a Comment

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...