Saturday, April 25, 2015

பி.இ.: மே 6-இல் விண்ணப்பம்: 11-இல் எம்.பி.பி.எஸ்.

தமிழகத்தில் பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 6-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க, மே 11-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 7-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதற்கு முந்தைய நாளான 6-ஆம் தேதி முதல், பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம் தொடங்க உள்ளது.

பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை https://www.annauniv.edu/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

விண்ணப்பத்தைப் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்கவும் மே 29-ஆம் தேதி கடைசி நாளாகும். பி.இ. ஒற்றைச்சாளர கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்க உள்ளது.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பங்களை, சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில், மே 11-ஆம் தேதி முதல் பெறலாம்.

விண்ணப்ப விநியோகம் மே 28-ஆம் தேதி வரை நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்துசேர வேண்டும்.

ஜூன் 12-இல் தரவரிசைப் பட்டியல்: விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை ஜூன் 12-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...