Showing posts with label Nice quotes. Show all posts
Showing posts with label Nice quotes. Show all posts

Wednesday, November 5, 2025

ஒரு கோடாரி வலுவானது, ஆனால் முடியை வெட்டாது.

ஒரு கோடாரி வலுவானது, ஆனால் முடியை வெட்டாது.

ஒரு ப்ளேடு கூர்மையானது, ஆனால் அது மரத்தை வெட்டாது.

எல்லோருக்கும் ஒரு திறமை இருக்கும், ஆனால் ஒரே திறமை இருக்காது.

பிறருடன் ஒப்பிட்டு உங்கள் திறமையைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்.

உங்களுக்கென்று இறைவன் கொடுத்துள்ள தனித்திறமையை முதலில் வெளிக் கொணருங்கள்.   நோக்கத்தில் தெளிவும் மனதில் அமைதியும் கொண்டு செயல்படுங்கள். நீங்கள் விரும்பும் இலக்கை அடைவீர்கள்.

ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் ஏதோ ஒரு காலகட்டத்தில் திருப்புமுனை அமைகிறது.....

இந்தத் திருப்புமுனையை தன்னோடு வாழ்நாளில் சரியாக பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் பல்வேறு உயர்ந்த நிலைக்குச் சென்றுள்ளார்கள்......

வலது கை மற்றும் இடது கை உதவியை விட நம்பிக்கை ஒரு போதும் வீணாவது இல்லை....

நம்பிக்கையுடன் செயல்படுவோம்..

வாழ்க்கையில நம்மை விடச் சிறப்பா பலர் வாழலாம்,

ஆனால்! நம்ம வாழ்க்கையை நம்மை விட சிறப்பா யாராலையும் வாழ்ந்து விட முடியாது!

வாழ்வினிது சிந்தித்து செயலாற்றுங்கள்.

வாழ்க வளமுடன்.

Monday, October 27, 2025

இன்றைய சிந்தனை 27.10.2025



ஒரு துன்பத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்,அந்தத் துன்பத்தினை வேறு யாருக்கும் கொடுக்காமல் இருப்பதற்கே..!!

தகுதியை மீறி ஆசைப்படக் கூடாது என்பது உண்மை தான்... ஆனால், என் தகுதி என்ன என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கக் கூடாது..!!

வசதியானவனை விட... உழைச்சு அசதியானவன் தான் நிம்மதியா உறங்குறான்..!!

சிதறிச் சென்ற சில வார்த்தைகளால்... கோர்க்க முடியாமல் சிதறிக் கிடக்கிறது பலரது வாழ்க்கை..!!

எந்த சாதனையும் புரிவதற்கும் வயது ஒரு தடையே இல்லை... வயது என்பது மனதைப் பொறுத்தது...

உங்களின் வழக்கமான கடுகளவு தவறும், கடலளவுக்கு விமர்சிக்கப்படுமாயின், தயாராகிக் கொள்ளுங்கள் "விட்டு விடுங்கள்" என்று சொல்வதற்கு முன் விலகிக் கொள்வதற்கு..

விக்கல் வந்தால் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ... குழம்பிய மனதிற்கு அமைதியும் அவ்வளவு முக்கியம்..!!

சூழ்நிலை மாறும் போது.. சிலரது வாழ்க்கை மட்டுமல்ல வார்த்தைகளும் மாறுகிறது..!!

பெண்களுக்குத் திமிரும் கோபமும் கூட.. ஒருவகை பாதுகாப்பு தான் சில நேரங்களில்..!!

எவ்வளவு பிடித்தவராக இருந்தாலும்.. மனம் வெறுக்கத் தான் செய்கிறது… நம் அன்பை அலட்சியம் செய்யும் போது..!!

புரிதல் இருக்கும் இடத்தில் 'ஆணவத்திற்கு' வேலையும் இல்லை.. அடுத்தவர் 'ஆலோசனையும்' தேவையில்லை..
'நீயா நானா' என்ற போட்டியுமில்லை.. 'பிரிவிற்கு' இடமும் இல்லை..

புரிதலில் தான் 'அன்பு' அழகாய் மலர்கிறது..!!

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...