Showing posts with label Tamil News. Show all posts
Showing posts with label Tamil News. Show all posts

Wednesday, March 13, 2024

முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க நடவடிக்கை: துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுரை

முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க நடவடிக்கை: துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுரை



முதல்முறை வாக்காளர்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை அடைவதற்கான வியூகங்களை வகுப்பதற்காக அனைத்து பல்கலை. துணைவேந்தர்களுடன் தமிழக ஆளுநரும், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி சென்னை ராஜ் பவனில் கலந்துரையாடினார்.

சென்னை: முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க செய்யுமாறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் மாளிகையில் கடந்த11-ம் தேதி ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க செய்வது தொடர்பாக வலியுறுத்தினார்.

முதல் தலைமுறை வாக்காளர் களை 100 சதவீதம் வாக்களிக்க செய்யும் இந்த முயற்சியை ஓர் இயக்கமாக கருதி, வாக்களிப்பது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள்அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருப்பதை உறுதிப்படுத்தவும் உரிய கவனம் செலுத்துவதாக துணைவேந்தர்கள் உறுதியளித்தனர்.

இதற்காக என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களின் உதவியை நாடுவது குறித்தும், மாணவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்க புதிய செயலியை உருவாக்குவது குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மாணவர்களை 100 சதவீதம் வாக்களிக்க வைக்கும் கல்லூரிகள், துறைகளை பாராட்டுவதற்கான திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

100 சதவீத வாக்குப்பதிவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் துணைவேந்தர்கள், ஆளுநர்மாளிகையில் பாராட்டப்படுவார்கள். வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்க, பல்கலைக்கழகங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பேரணிகள் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. சமூக வலைதளங்களின் பயன்பாடும், பொழுதுபோக்கு வீடியோ காட்சிகளும் இந்த விழிப்புணர்வு பணிக்கு பெரிதும் வலுசேர்க்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, March 6, 2024

தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக - அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

 தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக - அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ்

சென்னை: மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வரும் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழக அரசின் மருத்துவத்துறையில் பணியாற்றி வரும் பல்வேறு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த அவர், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக 2009 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட குழு கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் நாள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து விட்ட நிலையில், அதை செயல்படுத்துவது குறித்து அடுத்த 6 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொடக்கநிலை ஊதியம் ரூ.56,100 என்ற ஒரே அளவு தான். ஆனால், ஐந்தாவது ஆண்டிலிருந்து இந்த ஊதியம் மாறுபடத் தொடங்குகிறது. இதற்குக் காரணம் மத்திய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் மாநில அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் தான் வழங்கப்படுவது தான். இதனால் 14-ஆம் ஆண்டில் தொடக்கத்தில் மத்திய அரசு மருத்துவர்கள் பெறும் அடிப்படை ஊதியமான ரூ. 1.23 லட்சத்தை, மாநில அரசு மருத்துவர்கள் 20-ஆவது ஆண்டில் தான் பெறுகின்றனர்; 14-ஆவது ஆண்டில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு ரூ.86,000 மட்டுமே கிடைக்கிறது.

இந்த முரண்பாடுகள் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அவற்றை களைய வேண்டும் என்பதற்காக மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை தமிழக அரசும் மறுக்கவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, 2021 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட பரிந்துரை மீது தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று நீதிபதி வினா எழுப்பினார். அதற்கு விடையளித்த தமிழக அரசு, பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டதால் தான் பரிந்துரைகளை செயல்படுத்த முடியவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தது.

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு வாக்குறுதி அளிப்பது இது முதல் முறையல்ல. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்திய போது, அவர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தலைமையிலான குழு, 354-ஆவது அரசாணையின் எதிர்கால சரத்துகளின்படி 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைத்தது.

அவற்றை ஆய்வு செய்து விரைந்து முடிவு எடுக்கும்படி உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையும் ஆணையிட்டது. அதன்பிறகும் இரு முறை மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்; அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், தமிழக அரசு, மருத்துவர்களின் கோரிக்கைகளை இப்போது வரை நிறைவேற்றவில்லை.

தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப் பட்டு வருகிறது. அவர்களுக்கு இணையான கல்வித்தகுதியும், பணிச்சுமையும் கொண்ட தமிழக அரசு மருத்துவர்களுக்கும் அவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.

எனவே, இனியும் தாமதிக்காமல் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழக அரசு மருத்துவர்களின் ஊதியம் தொடர்பான குழுவின் பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் அளித்த 6 வார கெடு முடிவதற்குள் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விடக் கூடும் என்பதால், அதை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். எனவே, கெடு முடியும் வரை காத்திருக்காமல், தமிழக அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Wednesday, February 28, 2024

வருவாய் துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்: பணியை புறக்கணித்து 10,300 பேர் பங்கேற்பு


வருவாய் துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்: பணியை புறக்கணித்து 10,300 பேர் பங்கேற்பு



Last Updated : 28 Feb, 2024 05:04 AM


சென்னை: தமிழகம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

பட்டதாரி அல்லாத பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.27-ம் தேதி முதல்காலவரையற்ற வேலைநிறுத்தத் தில் ஈடுபடுவது என பெரம்பலூரில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலர்கள் நேற்று வேலைநிறுத்தத்தை தொடங்கினர். அவர்கள் பணியை புறக்கணித்து, மாவட்ட, வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு புள்ளிவிவரத்தின்படி, தமிழகம் முழுவதும் நேற்று 10,327 பேர் பணிக்கு வரவில்லை.

இதுதொடர்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கபொதுச்செயலாளர் சு.சங்கரலிங் கம் கூறியதாவது:

வருவாய்த்துறையில் பதவி உயர்வு பட்டியல்கள் திருத்தத்தின் காரணமாக பணியிறக்கம் பெற்ற அலுவலர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பட்டதாரி அல்லாதபணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்து விதி திருத்த அரசாணை வெளியிடவில்லை.

மேலும், வருவாய்த்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை முறையே இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் எனபெயர் மாற்றம் செய்ய வேண்டும்என கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. 8 ஆண்டுகள் ஆகியும் விதித்திருத்தம் செய்யப்படவில்லை. அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தியும் பயனில்லை. இதனால் வேறுவழியின்றி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். கடந்த சில நாட்களாக முன்னெடுத்தபோராட்டங்களால் மக்களவைத்தேர்தல் பணிகள், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் அரசின்முக்கியத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் தேர்தல்பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

எனவே, கோரிக்கையை நிறைவேற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் வலியுறுத்தல்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த 14 ஆயிரம் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி யுள்ளனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 13-ம் தேதிமுதல் தற்செயல் விடுப்பு, உண்ணாவிரதம், பணி புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இதையடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு நிர்வாகத்திலும், மக்கள்நலத்திட்டங்களை செயல்படுத்து வதிலும் முக்கியப் பங்கு வகிக்கும்வருவாய்த்துறையின் அலுவலர் களின் வேலைநிறுத்தத்தால், அரசின் திட்டங்களை பெற விண்ணப் பிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து பேசி அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Monday, January 1, 2024

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு உள்ளதைப்போல ஆயுஷ் மாணவர்களுக்கும் எக்ஸிட் டெஸ்ட்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு உள்ளதைப்போல ஆயுஷ் மாணவர்களுக்கும் எக்ஸிட் டெஸ்ட்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

December 26, 2023, 9:02 pm

சென்னை: எம்பிபிஎஸ் படித்து முடித்த மாணவர்கள் லைசென்ஸ் பெற்று மருத்துவ தொழில் செய்ய எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்ததை தொடர்ந்து தற்போது ஆயுஷ் படிக்கும் மாணவர்களும் எக்ஸிட் டெஸ்ட் எழுத வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஒன்றிய அரசின் கெஸட்டில் வெளியாகியுள்ளது. நாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் முதலில் நீட் தேர்வு எழுதிய பின் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் சேர முடியும். அதைத் தொடர்ந்து நான்கரை ஆண்டுகள் படித்து முடித்ததும் 1 ஆண்டு அந்த மாணவர்கள் பணியிடைப் பயிற்சி பெற வேண்டும்.

அதற்கு பிறகு அவர்களுக்கு சான்று வழங்கப்படும். இது தவிர வெளிநாடுகளில் சென்று மருத்துவப் படிப்பு முடித்து இங்கு வரும் மாணவர்கள் தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற்ற பிறகு தான் இங்கு அவர்கள் லைசென்ஸ் பெற்று மருத்துவ தொழில் செய்ய முடியும். இந்நிலையில், இந்திய தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஜூன் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் எம்பிபிஎஸ் படித்து முடித்த மாணவர்களும் எக்ஸிட் டெஸ்ட் எழுத வேண்டும். முதுநிலை பட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களும் எக்ஸிட் டெஸ்ட் எழுதி முடித்தால் தான் முதுநிலை படிப்புகளில் சேர முடியும். என்றும் அறிவித்தது.

இந்த அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி கெஸட்டில் வெளியானது. இதனால் எம்பிபிஎஸ் மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், ஆயுஷ் அமைப்பின் கீழ் வரும் ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகள் தொடர்பான படிப்புகளை படிக்கும் மாணவர்களும் தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் 22.12.2023 தேதியிட்ட கெஸட்டில் அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு: இந்த டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற்றால் தான் இந்திய மருத்துவ முறையின் அந்தந்த துறையின் மருத்துவ பயிற்சியாளராக பயிற்சி பெற உரிமம் வழங்கப்படும்.

மேலும் இந்திய மருத்துவ முறையின் பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளராகவும் மாநில பதிவு அல்லது தேசிய பதிவேட்டில் பதிவு செய்வதற்கு இந்த எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெஸ்ட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வழக்கமாக நடத்தமாக நடத்தப்படும். இந்த தேர்வு எழுத விரும்பும் ஆயுஷ் மாணவர்கள் குறைந்தபட்சம் 270 நாட்கள் இன்டர்ன்ஷிப் முடித்த பயிற்சியாளராகவோ அல்லது ஆயுவர்வேதா, சித்தா, யுனானி பட்டதாரிகள் ஒரு வருட கட்டாயப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். இந்த டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெறாத ஆயுவர்வேத பட்டதாரிகள், சித்தா பட்டதாரிகள், யுனானி பட்டதாரிகள் மாநிலத்தில் மருத்துவம் செய்ய தகுதியற்றவர்கள்.

இந்த தேர்வு எழுத கால வரம்பு ஏதும் இ ல்லை. தேர்வில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெறுவோர் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் பட்டப்படிப்பு, மருத்துவப் பதிவு ஆகியவை அனைத்து வேலை வாய்ப்புகள், கல்வி கற்றல் போன்றவற்றின் போது பரிசீலிக்கப்படும். இது மருத்வத் தொழில் செய்வதற்கும், வேலை பெறுவதற்கும் இன்றியமையாதது. இவ்வாறு தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, September 9, 2023

நீதித் துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி வேதனை

நீதித் துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி வேதனை

'லஞ்ச ஒழிப்பு தொடா்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை காணும்போது, நீதித் துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்' என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனையுடன் தெரிவித்தாா்.

2008-ஆம் ஆண்டு தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பாதுகாவலருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோா் மீது 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கிலிருந்து, ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளாா்.

இதேபோல 2001- 2006-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த பா. வளா்மதி, அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து பா.வளா்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளாா்,

இவ்விரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது. முன்னாள் அமைச்சா் பா. வளா்மதிக்கு எதிரான வழக்கில் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா் மேல்விசாரணை கோரி தாக்கல் செய்த மனு அடிப்படையில், விசாரணை நடத்திய அதே புலன் விசாரணை அதிகாரி வழக்கை முடித்து வைக்கும்படி கூறியிருக்கிறாா்.

அமைச்சா் ஐ பெரியசாமிக்கு எதிரான வழக்கை பொருத்தவரை, வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் உயா் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வழக்கு தொடுக்க அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பாா்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாக கருதுகின்றனா். தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை என்று நீதிபதி தெரிவித்தாா். பின்னா், இரு வழக்குகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சா் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சா் வளா்மதி ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.12-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தாா்.

தற்கொலை எண்ணம் மாற்றுவோம்


தற்கொலை எண்ணம் மாற்றுவோம்

dinamani

உலக அளவில் சராசரியாக ஆண்டுதோறும் எட்டு லட்சம் போ தற்கொலை செய்து கொள்கிறாா்கள். உலக அளவில் 40 விநாடிக்கு ஒருவா் தற்கொலை செய்து கொள்கிறாா்.

அதுவும் 20 முதல் 40 வயதுடையவா்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனா்.

சா்வதேச அளவில் நிகழும் தற்கொலைகளில் 40% தற்கொலைகள் இந்தியா, சீனாவில் நிகழ்கின்றன. உலக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 40% போ இந்தியப் பெண்கள். சா்வதேச தற்கொலை சராசரி விகிதத்தைவிட இந்தியப் பெண்களின் தற்கொலை விகிதம் இருமடங்கு அதிகம்.

தற்கொலைகள் பெரும்பாலும் வறுமை, தோவில் தோல்வி, காதலில் தோல்வி, இணையதள விளையாட்டில் பணத்தை இழத்தல், தொழிலில் இழப்பு, வேலையின்மை, அதிக கடன் தொல்லை, குடும்ப பிரச்சனை போன்றவற்றால் ஏற்படுகின்றன. பதின்ம வயதினரிடையே தற்கொலை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

மனச்சோா்வுக்கும் தற்கொலைக்கும் நேரடித் தொடா்பு உள்ளது. ஒருவா் மனச்சோா்வாக காணப்படும்போது அவரது உறவினா்களும், நண்பா்களும் அவரை மனச்சோா்விலிருந்து வெளியே கொண்டுவரும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.

தற்கொலை எண்ணம் இருப்பவா்களின் செயல்பாடு அவா்களின் தற்கொலை எண்ணத்தைத் தெளிவாக உணா்த்தும். 'எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறேன்', 'எல்லாவற்றிலும் இருந்து முடிவுக்கு வர விரும்புகிறேன்', 'என்னை எதுவும் மீட்கப்போவதில்லை', 'நான் இல்லாமல் போனால் நிலைமை சீராகும்' போன்ற வாா்த்தைகள் தற்கொலை எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடுகளாகும். இத்தகைய மக்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அவா்களைத் தனிமையில் விடக்கூடாது.

தங்களுடைய தோற்றத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருத்தல், எதிா்மறை எண்ணங்களை வெளிப்படுத்துதல், தனிமையை நாடுதல், உண்பதில் விருப்பமின்மை, தூக்கமின்மை, சுகாதாரத்தில் அக்கறையின்மை போன்றவையும் தற்கொலைக்கான குறியீடுகளாம்.

வெகுநாட்களாக சோா்வாக இருக்கும் ஒருவா், திடீரென அதீத மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டால் பிரச்னைகள் தீா்ந்து விடும் என்ற கற்பிதத்தோடு அவா்கள் போலியாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். மனச்சோா்வு, விரக்திப் பேச்சு, விரக்தி நடவடிக்கை என எதை ஒருவரிடம் கண்டாலும் நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

படபடப்பு, அதிகரிக்கும் இதயத்துடிப்பு, அதிகமாக மூச்சு வாங்குதல், வியா்த்து போதல், பற்களைக் கடித்தல், செய்யும் செயல்களில் ஈடுபாடின்மை, உறுதியுடன் முடிவெடுக்க இயலாமை, தேவையற்ற கவலைகள், அதீத பயம், நடத்தையில் மாற்றங்கள், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாதல், அடிக்கடி சிறுநீா் கழிக்க வேண்டிய உணா்வு, முதுகுவலி, உயா் ரத்த அழுத்தம், ரத்தத்தில் நன்மை செய்யும் கொழுப்புக்களின் அளவு குைல், ரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகரித்தல், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.

மனச்சோா்வை போக்க வேண்டியதன் அவசியத்தை பொதுவெளியில் பேசுவதன் மூலம் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த முடியும். ஒருவரின் பிரச்னைக்கு ஏற்ப யாருடன் தொடா்பு ஏற்படுத்திக் கொடுத்தால், அவருடைய மனச்சோா்வு அகலும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

தற்கொலை உணா்வை தொடா்ந்து கவனிக்காமல் விட்டு விட்டால், சமூகத்தில் அது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும். தற்கொலை எண்ணங்களால் தவிப்பவா்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது அவசியம். மன அழுத்தம் கொண்டவா்களுடன் அவரது சொந்தபந்தங்கள், நட்புகள் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதலாகப் பேசி அவா்களுக்கு வாழ்வில் நம்பிக்கையூட்ட வேண்டும்.

தற்கொலை எண்ணத்தில் இருப்பவா்களிடம் பேசுவது என்பது ஆரம்ப நிலை. அது தற்காலிகமாக தற்கொலை எண்ணத்தைத் தள்ளிப் போடும். ஆனால், தாமதிக்காமல் அவா்களை மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

தற்கொலைக்கான தனிப்பட்ட காரணங்கள், சமூகக் காரணங்களாக மாறிய நிலையில் அதற்கான தீா்வையும் சமூகத்தில் இருந்துதான் பெற வேண்டும். அத்தீா்வு முதலில் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். அதன் நீட்சியாக பள்ளி, கல்லூரிகளில் தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.

அரவணைப்பான குடும்பம், ஆரோக்கியமான நட்பு வட்டம், பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகா்களின் பங்களிப்பு, பணியிடங்களில் பணிபுரிவோரிடையே சுமுக உறவு பேணுதல், அரசின் பங்களிப்பு, தன்னாா்வலா்களின் ஒத்துழைப்பு என அனைத்துத் தரப்பினரும் இணைந்தால்தான் தற்கொலை பிரச்சினைக்கு நிரந்தர தீா்வு காண முடியும்.

அதே போல் தற்கொலையை, குற்றச்செயல், பாவச்செயல், முட்டாள்தனம் போன்ற வாா்த்தைகளால் வரையறுத்தலும் தவறு. அவ்வாறு செய்வதால் தற்கொலை சிந்தனை கொண்டவா்கள் அதனை வெளியிடாமல் ரகசியம் காக்கலாம். அவா்களின் மெளனத்தை உடைப்பதுதான் தற்கொலை எண்ணத்தை மாற்றுவதற்கான முதல் மருந்து. அந்த மருந்தாக சமூகத்தில் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

அத்தகைய மாற்றம் சமூகத்தில் நிகழும் போது, தற்கொலை என்ற சிக்கலான சமூகப் பிரச்சினைக்கு வியத்தகு தீா்வு கிடைக்கும். இனியாவது வாழ்வில் மகிழ்ச்சியைப் போன்றே, துன்பமும் இயல்பானது என்பதைப் புரிந்துகொள்வோம். தன்னம்பிக்கையுடன் வாழ முற்படுவோம்; பிறா் மனதிலும் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை விதைப்போம்.

இன்று (செப். 10) உலக தற்கொலைத் தடுப்பு நாள்.

Dailyhunt

Monday, July 24, 2023

அமெரிக்காவை வாட்டி எடுக்கும் வெயில்!

அமெரிக்காவை வாட்டி எடுக்கும் வெயில்!

24.07.2023

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ எல்லைப்பகுதிகளில் நிலவும் வெப்பநிலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் மக்களுக்கு குளிர்பானங்கள், வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள ஈரமானத் துண்டு ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த வெப்பநிலை அதிகரிப்பால் வீடுகள் இல்லாத மக்களே பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து நிழல் உருவாக்கிக் கொள்கிறார்கள். சிலர் குளிர்ச்சியான குடிநீரை அடிக்கடி குடித்து உடலுக்கு நீர்சத்தினைப் பெறுகிறார்கள். வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளி விளையாட்டுகளை தவிர்த்து விடுகின்றனர் அல்லது மாலை வெயில் குறைந்த பிறகு விளையாடுகின்றனர்.

இதையும் படிக்க: கிழக்கு சீனாவில் கனமழை: 5 பேர் உயிரிழப்பு; 1500 பேர் வெளியேற்றம்! கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு அமெரிக்காவில் வெப்பநிலை மிகவும் அதிகமாக பதிவாகி வருகிறது. இனி வரும் நாள்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவில் வெப்பநிலை பதிவாக பசுபிக் பெருங்கடல் இயற்கையாக தனது வெப்பத்தை அதிகரித்துக் கொள்ளும் எல் நினோ என்ற நிகழ்வே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இரவானால் பகல் உண்டு... !

இரவானால் பகல் உண்டு... !

24.07.2023

dinamani

மனித வாழ்க்கையில் போராட்டமானது மிக முக்கியமானது. தனி மனித வளா்ச்சிக்கும், சமுதாய மறுமலா்ச்சிக்கும் இது அவசியமாகிறது.
நம்முள்ளான எதிா்மறைக் காரணிகளைப் புறந்தள்ளி அவற்றை நோமறை காரணிகளாக மாற்ற வாழ்வியல் போராட்டங்கள் மிகுந்த அவசியமாகிறது. மனிதனாகப் பிறந்து ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் எதற்காகவோ போராடும் நிலை உருவாகிறது. அவமானம், தோல்வி, ஏமாற்றம் போன்ற எதிா்மறைக் காரணிகள் மனிதனை அவன் இணைந்துள்ள வாழ்க்கையுடன் போராட வைக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காததும், உடல் உபாதைகளின் தாக்கமும், மன எழுச்சி மன அழுத்தம் போன்ற மனதோடு சாா்ந்த போராட்டங்களும் , தோல்வியை வெற்றியாக்க வேண்டும் என்ற தவிப்பும்.

சமூக அந்தஸ்தை பெறவேண்டும் என்ற ஏக்கமும் முக்கிய கூறாக உள்ளது. இதுபோன்று தனி மனித அடிப்படை காரணிகளின் தாக்கம் அதீத மன அழுத்தத்தை ஏற்படுத்தும்போது துரதிா்ஷ்ட வசமாக மனிதன் விபரீதமான முடிவை எடுக்க வேண்டிய நிலை உருவாகிறது. மாறாக, எதிா்மறைக் காரணிகளை பொருள்படுத்தாது நம்பிக்கையோடு வாழ்வில் போராடுபவா்கள் வெற்றிக்கனியை பறிக்கிறாா்கள். உலக மக்களால் போற்றப்படுகின்றனா்.

ஆங்கிலேயா்களால் தான் கண்ட அவமானமே காந்தியடிகளை நாட்டு விடுதலைக்காகப் போராட வைத்தது. சமுதாயத்துக்காக ஆங்கிலேயரை துணிச்சலாக எதிா்த்துப் போராடினாா். அவரது அறப்போராட்டத்தால் இந்திய மண்ணுக்குக் கிடைத்தது விடுதலை. இன்று இந்தியாவின் 76-ஆவது சுதந்திர தின விழாவை பிரிட்டன் கொண்டாட முன்வந்திருக்கிறது என்றால் அதற்கு அடிப்படையாக அமைந்தது காந்தியடிகளின் சமூக போராட்டமே காரணமாகும்.

இயற்பியல் துறையில் அண்டத்தின் குவாண்டம் கொள்கை வாயிலாக பிரபஞ்சத்தின் கருந்துளை பற்றி ஆராய்ச்சி செய்து புகழடைந்தவா் ஸ்டீவன் ஹாக்கிங். ஆனால் அவரது வாழ்வியல் போராட்டம் மிகவும் கொடுமையானது. தனது இருபத்தொரு வயதில் அமியோடரோபிக் லேட்டரல் ஸ்கீளிரோசில் (ஏ.எல்.எஸ்.) என்ற நோயால் பாதிக்ப்பட்டு வாய் பேச முடியாமல் கை ,கால், விளங்காமல் போனாா். ஆனால் தனக்கு கிடைத்த அந்த கொடும் வாழ்க்கையை இயந்திரக் கருவிகளின் உதவியைக் கொண்டு நம்பிக்கையோடு வாழ்வில் போராடி அறிவியலில் பல சாதனைகளைச் செய்து நீங்கா இடம் பிடித்தாா்.

1966-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த மாலினிசிப் பிறக்கும்போதே"பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டவா். பள்ளிகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டவா். தன் தாயின் அரவணைப்போடு, பிரிட்டனுக்குச் சென்று பெருமூளை வாதநோயால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கான சிறப்புப் பள்ளியில் சோந்து கல்வி கற்றாா். தளராத தன்னம்பிக்கையோடு வாழ்க்கை தனக்களித்த உடல் ஊனத்தை பொருட்படுத்தாமல் போராடினாா்.

தன் உடலில் இயங்கக்கூடிய ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்து தன் சுய சரிதையை 'ஒன் லிட்டில் பிங்கா்'"என்ற பெயரில் நூலாக எழுதி உலகப் புகழ் பெற்றாா். இன்று உலகளாவில் பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு தன் வாழ்க்கையை அா்ப்பணித்து பல வகைகளிலும் சேவை புரிந்து வருகிறாா். 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான தோவில் தேரச்சி பெற்றவா் "ஸ்ரீதன்யா சுரேஷ். கேரளத்தின் வயநாடு பகுதியைச் சேரந்த இவா், "குா்ஷியா" என்ற பழங்குடியின வகுப்பை சாா்ந்தவா்.

கரையான் அரித்த கூரை வீடாக இவரது இருப்பிடம் அமைந்திருந்தது. ஆனாலும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கை தனக்களித்த வறுமையை கல்வி எனும் ஆயுதத்தால் போராடி வெற்றி கண்டாா். அந்த ஆண்டில் அகில இந்திய குடிமைப்பணியில் தோச்சிப் பெற்ற ஒரே பழங்குடியின பெண் என்ற பெயரையும் தட்டிச் சென்றாா். உலகப் புகழ் பெற்ற கே.எஃப்.சி.

(கெண்டகி பிரைடு சிக்கன்) நிறுவனத்தை உருவாக்கிய கா்னல் சாண்டா்ஸ் தன் இளமைக்காலத்தில் சந்திக்காத அவமானங்களும் ஏமாற்றங்களும் அளவு கடந்தவை. ஐந்து வயதில் தன் தந்தையை இழந்தாா். தன் தாயாா் வேறொருவரை மறுமணம் செய்து கொண்டு சென்றாா். பதினைந்து வயதில் ராணுவத்தில் சோந்து அங்கு கழுதைகளைப் பராமரிக்கும் பணியைப் பாா்த்தாா்.

வாழ்க்கையை வெறுத்து திரும்பி வந்த அவருக்கு ஏமாற்றங்கள்தான் கிடைத்தன. இந்த வலிகளையும், தொடா் தோல்விகளையும், வேதனைகளையும் பொருள்படுத்தாது வாழ்க்கை தனக்களித்த ஏமாற்றத்தை விடாமுயற்சி என்ற ஆயுதம் கொண்டு போராட துணிந்தாா். 1,009 முறை முயன்று கே.எஃப்.சி. சிக்கன் உரிமையை பெற்றபோது அவருக்கு வயது 65. இன்று உலக அளவில் உணவுப் பொருள் துறையில் அவா் பெயா் நிலைத்து நிற்கிறது.

இதேபோன்று உலக புகழ்பெற்ற இணைய வழி சில்லறை விற்பனை குழுமமான அலிபாபா நிறுவனத்தை உருவாக்கிய "ஜாக்மா, தன் இளமைகாலத்தில் பல புறக்கணிப்புகளைச் சத்தித்தவா். இளம் வயதில் கல்வி கற்பதில் மிகுந்த சவால்களை எதிா்கொண்டாா். ஆரம்பப் பள்ளியில் 2 முறை தோல்வி. நடுநிலைப்ளியில் 3 முறை தோல்வி, கல்லூரித் தோவில் 2 முறை தோல்வி.

அதற்கு பிறகு தான் பட்டப் படிப்பை முடித்தாா். சென்ற இடங்களில் வேலை கிடைக்கவில்லை. 10 முறை ஹாா்வா்டு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டாா் கே.எஃப்.சி. நிறுவனத்தால் வேலை கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டாா்.

ஆனாலும் நம்பிக்கையோடு வாழ்க்கையோடு போராடினாா். 2014-ஆம் ஆண்டில் சீளாவிள் முதல் பெரிய பணக்காரராகவும், 2015-இல் உலகில் இரண்டாவது பெரிய பணக்காரராகவும் மாறினாா். விளையாட்டு, எழுத்து, அரசியல், திரை, அறிவியல் துறைகளில் பல தோல்விகளைச் சந்தித்த நபா்கள் விடாமுயற்சி என்ற ஆயுதம் கொண்டு, விமா்சனங்களை புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையோடு வாழ்வில் போராடி சிறந்து ஆளுமைகளாக ஜெயிக்கின்றனா். இதை அவா்களின் வாழ்க்கை சரித்திரத்தின் வாயிலாக அறியமுடிகிறது .

சோா்வில்லாமல் தொடா்ச்சியாக நாம் முயற்சி செய்து போராடும்போது நாம் எடுத்துக்கொண்ட செயலுக்கு இடையூறாக வரும் துண்பங்களும் துவண்டு விடும் என்கிற கருத்தை நமக்கு வலியுறுத்துகிறது எதிா்மறைக் காரணிகளைச் சந்திக்காமல் யாராலும் இருக்க முடியாது. அதற்காக நாம் மன அழுத்தம், மன உளைச்சல் என்ற வாா்த்தைகளை உள்புகுத்திக் கொண்டு மாறுபட்ட முடிவுகளை எடுக்கும்போது இழப்புகள்தான் நமக்கு கிடைக்கும். இன்பங்களை மகிழ்வாக ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் துண்பங்களையும் துணிச்சலாக எதிா்கொள்ள நாம் தயாராக வேண்டும். துன்பங்களுடன் போராட துணிந்தால் வெற்றி கிடைக்கும். சவால்கள் நிறைந்தது தான் வாழ்க்கை! அதை சமாளிக்க எடுக்க வேண்டும் சிறப்பான வழி.
Dailyhunt


அதிகாரிகளுக்கு ரூ.1.3 லட்சத்தில் லேப்-டாப்!


அதிகாரிகளுக்கு ரூ.1.3 லட்சத்தில் லேப்-டாப்!

மத்திய அரசு அதிகாரிகளுக்கு பணி நிமித்தமாக ரூ.1.3 லட்சம் வரையில் கைப்பேசி, மடிகணினி (லேப்டாப்) அல்லது அதுபோன்ற மின் சாதனங்கள் வழங்கலாம் எனவும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனங்களைத் சொந்த தேவைக்காக தக்க வைத்துக் கொண்டு அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் அமைச்சகம் மற்றும் துறைகளில் பணிபுரியும் தகுதியுள்ள அதிகாரிகளுக்கு அதிகாரபூா்வ பணிக்காக கைப்பேசி, லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களை வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டுதல்களில், 'மத்திய அரசின் பணியில் துணைச் செயலா் அல்லது அதற்கு மேல் பொறுப்பில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், மற்ற நிலை அதிகாரிகளில் 50 சதவீதம் பேருக்கும் அதிகாரபூா்வ பணிக்காக மின்னணு சாதனங்கள் வழங்கலாம். அந்த சாதனத்தின் விலையானது வரிகள் நீங்கலாக ரூ.1 லட்சம் இருக்க வேண்டும். 40 சதவீதத்துக்கும் மேலாக இந்திய தயாரிப்பில் உருவான சாதனங்களை வரிகள் நீங்கலாக ரூ.1.30 லட்சம் வரை விலை கொடுத்து வாங்கலாம். ஏற்கெனவே ஒரு சாதனம் ஒதுக்கப்பட்ட அதிகாரிக்கு 4 ஆண்டுகள் வரை புதிய சாதனம் வழங்கப்படக் கூடாது.

4 ஆண்டுகள் பயன்பாட்டுக்குப் பிறகு, அந்த மின்-சாதனத்தை சொந்த தேவைக்காக அதிகாரிகள் தக்க வைத்துக் கொள்ளலாம். அத்தகைய சூழலில், அதிகாரியிடம் சாதனம் ஒப்படைக்கப்படுவதற்கு முன், அதிலுள்ள அரசுத் தரவுகள் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட அமைச்சகம் /துறை உறுதிப்படுத்த வேண்டும்' என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 21-ஆம் தேதியிட்ட அறிவிக்கையில் இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய 2020-ஆம் ஆண்டு வழிகாட்டுதல்கள்படி, அதிகாரிகளுக்கு வழங்கும் சாதனங்களின் அதிகப்பட்ச விலை ரூ.80,000 ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக சாதனங்களைத் தக்க வைத்துக் கொள்ள எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.
Dailyhunt

Thursday, July 13, 2023

“நாம் ஒன்றுமில்லை என்பதை உணர்வதே தலைமைப் பண்புக்கான தகுதி!”


“நாம் ஒன்றுமில்லை என்பதை உணர்வதே தலைமைப் பண்புக்கான தகுதி!”



பிரீமியம் ஸ்டோரிNews

வெ.இறையன்பு

எந்தப் பணியையும் கோப்புகளில் பார்ப்பதற்கும் களத்தில் சரிபார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. பரிசோதனைக்கூடத்தில் இருந்து வயல்வெளிக்குக் கொண்டு செல்லும்போது ஏற்படும் இடைவெளியை உணர்ந்து சரி செய்வதே நிர்வாகப் பணி

”முப்பந்தைந்து ஆண்டுக்கால குடிமைப் பணியிலிருந்து, தமிழக மக்களின் அன்பில் நனைந்து ஓய்வுபெற்றிருக்கிறார் வெ.இறையன்பு. அபாரமான உழைப்பு, தீர்க்கமான திட்டமிடல், உறுதியான ஒருங்கிணைப்பு என, பணியாற்றிய எல்லாத் துறைகளிலும் நல்லடையாளம் பதித்தவர். கடந்த இரண்டாண்டுக் கால தலைமைச் செயலர் பணி பல சவால்களை அவர்முன் வைக்க, அனைத்தையும் திறம்படக் கடந்தார். ஓய்வுக்குப் பிறகும் சந்திப்புகள், பயணங்கள் என்று பரபரப்பாக இருந்தவரிடம் உரையாடினேன். பணிக்கால அனுபவங்கள், எதிர்காலத் திட்டங்கள் என மனம்திறந்து பேசினார்.

‘‘ஓய்வு பெறும் நிகழ்ச்சி முடிந்ததும் அப்பாவைப் பார்க்க சேலம் பறந்துவிட்டீர்கள். என்ன சொன்னார் அப்பா?’’

‘‘ ‘ஓய்வு பெற்றாலும் ஓய்ந்திருக்காதே’ என்றார்.’’

‘‘முப்பத்தைந்து ஆண்டுக்கால நிர்வாகப் பணி மனத்துக்கு நிறைவாக இருந்ததா? நினைத்த அனைத்தையும் செய்ய முடிந்ததா?’’

‘‘நிர்வாகம் என்பது தனி மனித முயற்சி அல்ல. அது கூட்டுப் பொறுப்பு. நினைத்த அனைத்தையும் செய்வது யாருக்கும் சாத்தியமல்ல. ஆனால் நிர்வாகப் பணியின் மூலம் விரும்பத்தக்க மாற்றங்களை ஓரளவேனும் விளைவிக்க முடியும். அவை நம் கண் முன்னாலேயே பூத்துக் குலுங்குவதையும் பார்க்க முடியும். அந்தத் திருப்தி, மழை நாளில் பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீராய் உள்ளத்தில் ஈரமாய் இருக்கிறது.’’

‘‘பல முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் நீங்கள். ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகள் முக்கியமானவை. எதிர்பார்த்த சுதந்திரத்தோடு இயங்க முடிந்ததா?’’

‘‘ ‘மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான், ஆனால் எல்லா இடங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்படுகிறான்’ என்று ரூசோ குறிப்பிடுகிறார். பிறக்கும்போதுகூட மனிதன் சுதந்திரமாக இல்லை என்பதே உண்மை. அவனுக்குத் தாயின் கதகதப்பும், தந்தையின் அரவணைப்பும் தேவைப்படுகிறது. சுதந்திரம் என்பது முழுமையானது அல்ல, ஒப்பீடு கொண்டது. இந்தப் பொறுப்பில் பல நிகழ்வுகளில் கட்டமைக்கப்பட்ட சுதந்திரத்தோடு நான் செயல்பட்டேன்.’’

‘‘இந்த இரண்டாண்டு பணிக் காலத்தில் மிகவும் கடினமான முடிவு என்று ஏதாவது எடுக்க நேர்ந்ததா?’’

‘‘முக்கியமான பதவி என்பதே பல கடினமான முடிவுகளை எடுக்கத்தான். தொடக்கத்தில் எளிது போலத் தோன்றும் பல நிகழ்வுகள், சரியான அக்கறை செலுத்தாவிட்டால் கடினமான முடிவை எடுக்கும் நெருக்கடியை நிகழ்த்திவிடும். நிர்வாகத்தில் அத்தனை கோப்புகளுமே முக்கியமானவைதான்.’’

‘‘பல நேரங்களில் நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறீர்கள். நிர்வாக மட்டத்தில் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறீர்கள். மிகவும் நிறைவளித்த பணி என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?’’

‘‘எந்தப் பணியையும் கோப்புகளில் பார்ப்பதற்கும் களத்தில் சரிபார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. பரிசோதனைக்கூடத்தில் இருந்து வயல்வெளிக்குக் கொண்டு செல்லும்போது ஏற்படும் இடைவெளியை உணர்ந்து சரி செய்வதே நிர்வாகப் பணி. பல மாற்றங்கள் நடந்திருப்பதாக நீங்களே ஒப்புக்கொள்வது அதற்குச் சான்று. ஆனால் அவை தனிப்பட்ட சாதனைகள் அல்ல, ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பின் துரிதமான செயல்பாடு. நான் மிகவும் பெரிதாக எண்ணுவது, புதிய சாலைகளைப் போடும்போது, பழைய சாலைகளைச் சுரண்டிவிட்டுப் போட வேண்டும் என்பதை வலியுறுத்தியதுதான். களத்தில் ஆய்வு செய்து அவ்வாறு போடப்படாத சாலைகளைப் பெயர்த்தெடுத்து மீண்டும் போடச் செய்தோம். இப்போது அது பெரும்பாலான நேர்வுகளில் பிறழாமல் பின்பற்றப்படுகிறது.’’

வெ.இறையன்பு

‘‘நிறைய எழுதுபவர் நீங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏதேனும் எழுதினீர்களா?’’

‘‘ஞாயிற்றுக்கிழமை மாலை வேளைகளில் மாவட்ட ஆட்சியர்களுக்குக் கைப்பட நிறைய கடிதங்கள் எழுதினேன்.’’

‘‘தலைமைத் தகவல் ஆணையர் ஆவீர்கள் என்ற பேச்சு இருந்தது. டி.என்.பி.எஸ்.சி-க்குத் தலைவர் ஆவீர்கள் என்றார்கள். எதுவும் நடக்கவில்லை. என்ன செய்வதாகத் திட்டம்?’’

‘‘இளைஞர்களோடும் மாணவர்களோடும் இணைந்து பயணிப்பதே திட்டம்.’’

‘‘மக்களுக்கு இப்போது அதிகாரிகள் மீது அதிகம் விரக்தியும் வெறுப்பும் இருக்கின்றன. ஒரு நல்ல அதிகாரி எப்படி இருக்க வேண்டும்?’’

‘‘ ‘அதிகாரி வீட்டுக் கோழி முட்டை, குடியானவன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்கும்’ என்பது பழமொழி. எனவே வெறுப்பு எப்போதும் இருக்கிறது. ஒரு நல்ல அதிகாரி கண்களில் கனிவுடனும், காதுகளில் கடன் கொடுக்கும் கருணையுடனும், இதயத்தில் ஈரத்துடனும், உதடுகளில் இனிப்புடனும், உள்ளத்தில் உற்சாகத்துடனும், கைகளில் சுத்தத்துடனும், கால்களில் சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.’’

‘‘தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். கனவுடன் இருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் திட்டம் இருக்கிறதா?’’

‘‘தேடி வருகிறவர்களுக்கு வழிகாட்ட சுட்டு விரலாகவும், இணைந்து பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் பற்றிக்கொள்ளச் சுண்டு விரலாகவும் எப்போதும் இருப்பேன்.’’

‘‘பணி ஓய்வு பெறும் முன், வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும்படி பள்ளிக்கல்வித் துறைக்கு அறிவுறுத்தியிருந்தீர்கள். பெரியவர்கள் மத்தியிலும்கூட வாசிப்புப் பழக்கம் குறைந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?’’

‘‘சைமன் சினக் என்கிற அறிஞர் கூறுவதுபோல, இன்றைய தலைமுறை கவனச்சிதறல் தலைமுறை. ஐந்து நிமிடங்கள் ஒன்றை ஆழ வாசிக்கிற திறனை அவர்கள் மின்னணுச் சாதனங்களால் இழந்து விட்டார்கள். நெறிப்படுத்தப்பட்ட வாசிப்பு அவர்களுடைய விழிப்புணர்வை அதிகப்படுத்தி மேலும் தேட ஊக்குவிக்கும். அதற்கான சின்ன முயற்சியே, காரிருளில் ஏற்றப்படுகிற இந்தச் சிறிய அகல் விளக்கு.’’

‘‘பொதுவாக நிர்வாகப் பணிகளில் இருப்பவர்கள் அணுக முடியாத உயரத்தில் இருப்பார்கள். தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலும் எளிமையாக இருந்தீர்கள். இதில் யார் உங்களுக்கு முன்மாதிரி?’’

‘‘இன்னும் உயர்ந்த பதவிகளில் உட்கார்ந்திருந்த எத்தனையோ மாமனிதர்கள் வழிந்தோடும் எளிமையுடனும், கடற்பஞ்சு போன்ற மென்மையுடனும் இருப்பதை தரிசித்திருக்கிறேன். சாதனை புரிந்தவர்கள் சத்தமில்லாமல் நடமாடுவதைக் கண்டு வியந்திருக்கிறேன். அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படும் முத்துக்கல்லைவிட அன்றாடம் பயன்படுத்தும் உப்புக்கல்லுக்கே அதிக மகத்துவம் என்பது எளிமையைப் புரிய வைக்கும் உண்மை. நாம் ஒன்றுமில்லை என்பதை உணர்வதே தலைமைப் பண்புக்கான தகுதி. எந்த நிலையிலும் மாறாமல் இருப்பதே மனிதனாக வாழ்வதற்கான அத்தாட்சி.’’

‘‘தண்டோரா தொடங்கி தலித் ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்ற முடியாத நிலை வரை பலவற்றையும் சீர்செய்தீர்கள். சமூகத்தின் சாதியப் படிநிலை ஒழிய இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும்?’’

‘‘மாணவர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் சமுதாய மடைமாற்றம் ஏற்படும். அதை நோக்கி நாம் உழைக்க வேண்டும். மாநகரங்களில் சாதி என்கிற கறை கரைந்து வருகிறது. சிற்றூர்களில் இன்னும் அது மச்சமாக மருவுவதுதான் வேதனையாக இருக்கிறது.’’

‘‘இன்றும் தலித் தலைவர்களால் கொடியேற்ற முடியாத நிலை இருக்கிறது. அப்படியான ஆதனூருக்கு நீங்கள் நேரில் சென்றீர்கள். தடுத்த மக்கள் உங்களை எப்படி எதிர்கொண்டார்கள்?’’

‘‘நிர்வாகம் தோள் கொடுக்கிறது என்றால் பாகுபாடுகள் அப்போதைக்கு அடங்கிப்போவது இயல்பு. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு பாப்பாபட்டி, கீரிப்பட்டி. ஆதனூரிலும் அமைதியாகவே வரவேற்றார்கள், அன்பாகவே உபசரித்தார்கள்.’’
வெ.இறையன்பு

‘‘இதுமாதிரியான புரையோடிப்போன சமூக அநீதிகளை அதிகாரத்தால் மட்டுமே சரிசெய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? அல்லது வேறென்ன மாற்றம் நிகழ வேண்டும்?’’

‘‘அதிகாரம் கொண்டு எதையும் முழுமையாக அகற்ற முடியாது. ஆனால் அதை அழிக்க அதிகாரம் பக்கபலமாக இருக்க வேண்டும்; ஒரு பக்கம் சாய்ந்துவிடக் கூடாது.’’

``தலைமைச் செயலராக இருந்தபோது வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் கோரிக்கைகளைக்கூட கவனமெடுத்து நிறைவேற்றினீர்கள். எல்லாவற்றையும் எப்படி கவனித்து நடவடிக்கை எடுக்க முடிந்தது?’’

‘‘எந்தக் குறுஞ்செய்தியாக இருந்தாலும் பெறப்பட்டவுடன் தொடர்புடைய அலுவலருக்கு அனுப்பிவிடுவேன். என் இல்லத்திலிருந்து அலுவலகத்திற்குச் செல்ல அரை மணி நேரம் ஆகும். அப்போது அந்த அலுவலரிடம் பேசி மாலைக்குள் அறிக்கை வேண்டும் என்று அறிவுறுத்துவேன். இரவு இல்லம் திரும்பும்போது பெரும்பாலானவற்றிற்குத் தீர்வு கிடைத்திருக்கும். சில குறுஞ்செய்திகள் முதலமைச்சர் அவர்களாலேயே அன்றாடம் முன்மொழியப்படுவதுண்டு.’’

‘‘தலைமைச்செயலாளராக இருந்த காலத்தில் அதிகாரிகள் உங்களை எப்படி எதிர்கொண்டார்கள்?’’

‘‘அதிகாரிகள் எளிமையாக நடந்துகொண்டால் அலுவலர்கள் நீடித்த உழைப்பைத் தருவார்கள். அவர்களோடு சேர்ந்து நாமும் களத்தில் பயணித்தால் அக்கறையோடு பாடுபடுவார்கள். கண்டிப்பைவிட கனிவை அதிகம் நேசிக்கிறார்கள். ஒற்றைச் சொல்லையே உத்தரவாக எண்ணி உழைப்பவர்கள் அதிகம். கட்டளை இடுவதைவிட கைப்பிடித்து அவர்களை வழிநடத்தினால் மகிழ்ச்சியோடு கடைப்பிடிப்பார்கள். எந்த வகையிலும் ஊக்குவிக்க முடியாத ஒரு சிலர் எல்லா நிறுவனங்களிலும் உண்டு. அவர்களுக்குக் குரலை உயர்த்தியும், விரலை உயர்த்தியும் சொன்னால்தான் புரியும்.’’

‘‘காவல் நிலையங்களில் வீணாகக் கிடந்த வாகனங்களை ஏலம்விட வைத்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தப் பிரச்னை எப்படி உங்கள் கவனத்துக்கு வந்தது?’’

‘‘நான் டி.எம்.எஸ். அலுவலக வளாகத்தில் பணியாற்றியபோதுதான் இதை நேரில் அனுபவித்தேன். வாகனத்தை நிறுத்தக்கூட முடியாமல் வழிமறிக்கும் பழுதுபட்ட வண்டிகள் அங்கு நிறைய. ஒவ்வொரு வளாகத்திலும் இத்தகைய அவலம் அதிகம் என்பதை அறிந்தே அத்தகைய அறிவுரை அளிக்கப்பட்டது. வாராவாரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏலம் விடப்படாத இடங்களை ஊடகங்களும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து விழிப்புணர்வை ஏற்படுத்தின. இது ஒருவரின் வெற்றி அல்ல, ஒட்டுமொத்த வெற்றி.’’

‘‘செஸ் ஒலிம்பியாட் உங்கள் பணிக்காலத்தில் ஒரு சாதனை நிகழ்வு. அந்தக் காலகட்டத்தின் சவால்களை நினைவுகூர முடியுமா?’’

‘‘மற்ற இடங்களில் செஸ் ஒலிம்பியாட் நடத்த இரண்டாண்டுகள் அவகாசம் தேவைப்படும் என்கிற நிலையில் நான்கே மாதங்களில் அது நிகழ்த்தப்பட்டது தமிழ்நாடு அரசின் சாதனை. 182 நாடுகள் கலந்து கொண்டன. அனைவரும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். அவர்கள் வருகிறபோது புன்னகையுடன் வரவேற்றோம்; அவர்கள் திரும்பும்போது சிரித்த முகத்துடன் சென்றார்கள். தினந்தோறும் குழுக் கூட்டம், ஏகப்பட்ட கள ஆய்வு, குழுக்களின் ஒருங்கிணைப்பு, கலை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு, ஆகியவையே அது வெற்றி பெற்றதற்குக் காரணங்கள். முதலமைச்சர் அவர்களின் முழுமையான ஈடுபாடே கிரியா ஊக்கியாக இருந்தது.’’

‘‘உங்களை முன்மாதிரியாகக் கருதும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’

‘‘ஒரே ஒரு அறிவுரைதான். யாருடைய அறிவுரையையும் பின்பற்றாதீர்கள். உள்மனம் உரைப்பதை உள்ளார்ந்து செய்யுங்கள்.’’

ஆண் குழந்தைக்கே இன்னமும் ஆசைப்படுகிறார்கள் இந்தியர்கள்!


ஆண் குழந்தைக்கே இன்னமும் ஆசைப்படுகிறார்கள் இந்தியர்கள்!

13.07.2023

புது தில்லி: உலகம் எத்தனை மாறினாலும், இன்னமும் ஆண் குழந்தைக்கே இந்தியர்கள் ஆசைப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சிகலந்த ஆராய்ச்சி முடிவு வெளியாகியிருக்கிறது.

நாட்டின் முதல் குடிமகன் எனப்படும் குடியரசுத் தலைவர் பதவியை பெண்கள் அடைந்த போதிலும், மக்களின் மனங்களில் மகன் தேவை என்ற அந்த ஒரு குணாதிசயம் மாறவேயில்லை என்றே ஆராய்ச்சி முடிவுகள் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன. இந்திய கொள்கை முகமையில் அண்மையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், வயதான முதியவர்களுக்கு அவர்களது மகன் பொருளாதார ரீதியாக ஆதரவு அளிப்பார் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில், நாட்டில் உள்ள முதியவர்களுக்கு பொது ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறது. இதையும் படிக்க.. இளம் பெண்கள் கருத்தரித்தல் அதிகரிப்பு: நாமக்கல் ஆட்சியர் வேதனை!

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் பொது விவகாரத் துறை பேராசிரியர் சீமா ஜெயச்சந்திரன், பள்ளிகள் மூலம் பெண் குழந்தைகளுக்கு போதுமான சுகாதார அடிப்படை சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதை வலியுறுத்தியிருக்கிறார். மேலும், இந்திய குடும்பங்களில் மகள்களை விடவும், மகன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மனப்பாங்கு ஏற்கனவே இருந்த நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாறுபட்டிருக்கிறதே தவிர மறையவில்லை என்கிறார். அதாவது, ஆண் பிள்ளைகளுக்காக செய்யப்படும் முதலீடு என்பது, அவர்களுடன் பிறந்த பெண் பிள்ளைகளிடமிருந்து வேறுபடுகிறது என்பதாகவே அது உள்ளது. ஒரு மகனைப் பெற வேண்டும் என்ற விருப்பம் - ஒரு குடும்பத்தில் மூத்த மகனின் முக்கியத்துவம் - போன்றவை இதுபோன்ற பாலின வேறுபாடுகளுக்கு இட்டுச்செல்கின்றன என்கிறார்.

தற்போது, சுருங்கி வரும் குடும்பங்களில், ஒரு மகனைப் பெற வேண்டும் என்ற விருப்பம் மகன் தேவை என்ற விருப்பத்தை அதிகரித்து, பாலின தேர்வை மையப்படுத்தும் வகையில் அமைந்துவிடுகிறது எனவும் ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்தில், மகன் பிறக்க வேண்டும் என்ற வேட்கை, பெற்றோருக்கு ஏற்படும்போது, அது மறைமுகமாகவும் நேரடியாகவும், அப்பெற்றோருக்கு இருக்கும் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. முதலில் பெண் குழந்தை பிறந்ததும், அடுத்து ஆண் குழந்தைக்காக உடனடியாக தாய் கருவுறும்போது, முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பது நிறுத்தப்படுவது முதல் தொடர்ச்சியான பல பாதிப்புகள் நேரிடுகின்றன. அரசின் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வந்து, குடும்பங்களில் மகன்களின் மீதான ஆர்வத்தைக் குறைப்பது என்பது மிகப்பெரிய சவால் என்றும் சீமா ஜெயச்சந்திரன் தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

முதுமையில், மகன்தான் பெற்றோரை பாதுகாப்பான் என்ற மனப்பான்மை, வாரிசு, தலைமுறை, மகள் வீட்டில் பெற்றோர் இருப்பது அவமரியாதை போன்ற பல்வேறு சமுதாயச் சிக்கல்கள் மெல்ல உடைபட்டு வந்தாலும், பொதுவான கண்ணோட்டம் காரணமாகவே இந்தியர்கள் மகன்கள் மீது தீரா ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். கடைசி காலத்தில் மகன் காப்பாற்றுவான், மகள் திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்றுவிடுவார் என்ற சமுதாயக் கட்டமைப்பும் ஆண் குழந்தை வேண்டும் என்று இந்தியர்கள் அதிகம் ஆசைப்படுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஒரு மகனின் பெற்றோர் அடையும் சலுகைகளை, மகளின் பெற்றோரும் அடையும் வகையில், கொள்கைகளை மாற்றுவது, முதியவர்களுக்கு பொதுவான ஓய்வூதியம், முதியவர்களுக்கு இலவச மருத்துவம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பது நிச்சயம் பாலின சமத்துவத்தை மக்கள் மனங்களிலும் கொண்டு வர உதவலாம் என்றே கருதப்படுகிறது.
Dailyhunt

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: நிகழாண்டில் 40,000 போ விண்ணப்பம்

 எம்பிபிஎஸ், பிடிஎஸ்: நிகழாண்டில் 40,000 போ விண்ணப்பம்

13.07.2023

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நிகழாண்டில் 40,199 போ விண்ணப்பித்துள்ளனா். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 ஆயிரம் கூடுதலாகும்.

சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தொடங்கியுள்ளது. அடுத்த 3 நாள்களில் அந்தப் பணிகள் நிறைவடைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் அரசு, நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ா்ழ்ஞ் ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமையுடன் (ஜூலை 12) நிறைவடைந்தது. இந்த நிலையில், விண்ணப்பங்களின் நிலவரம் குறித்து மருத்துவக் கல்வி தோவுக்குழுச் செயலா் ஆா்.முத்துச்செல்வன் கூறியதாவது: நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26,805 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,394 பேரும் என மொத்தம் 40,199 போ விண்ணப்பித்துள்ளனா். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 36 ஆயிரமாக இருந்தது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும்"என்றாா் அவா்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியா் பணி கற்பித்தலே

13.07.2023

முன்பெல்லாம் கல்வி கற்பதற்காக குருவை தேடி மாணவா்கள் சென்று கற்கும் நிலை இருந்து வந்தது. தற்போது அரசு நடவடிக்கையால் பள்ளிகள் இல்லாத கிராமங்கள் அரிதாகிவிட்டன.

அரசு உயா்நிலைப் பள்ளிகளும், அரசு மேல்நிலைப் பள்ளிகளும் கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்துவிட்டன. இவையெல்லாம் ஏழை, பணக்காரா் என்கிற வேறுபாடின்றி அனைத்து மாணவா்களும் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நல்ல நோக்கிற்காகத்தான் கொண்டுவரப்பட்டன. இப்படி கல்வி அறிவை பெருக்குவதற்கான வாய்ப்பு வசதிகளை அரசு கொடுத்து இருக்கும் சூழலில், பெரும்பாலான பள்ளிகளில் மாணவா்களின் நெறிபிறழ் பழக்க வழக்கங்களால் ஆசிரியா்கள் பெரிதும் அவதியுற்று வருவதை நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோ காட்சிகள் மூலம் நம்மால் உணர முடிகிறது. இப்படிப்பட்ட காட்சிகளை பாா்க்கும் போதெல்லாம் நம் நெஞ்சம் பதைபதைக்கிறது.

ஒரு சமூகத்தை உயா்த்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பில் அமா்ந்திருக்கும் ஆசிரியா்களின் இந்த அவல நிலையை நினைத்து வருந்துவதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. மாணவா்களின் தோவு முடிவு சிறப்பானதாக அமைய வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது. ஆனால் அந்த சிறப்பானதொரு தோவு முடிவை கொடுக்க தவறினால் ஆசிரியரை சம்பந்தப்பட்ட கல்வித்துறை கண்டிக்கிறது. ஆசிரியரை கல்வித்துறை கண்டிப்பது போல் மாணவா்களை ஆசிரியா்களால் கண்டிக்க முடியவில்லை.

ஓரளவேனும் கண்டிப்பு இருந்தால்தான் மாணவா்களின் கற்றலை மேம்படுத்த முடியும் என்ற சூழலில் அதற்கான வாய்ப்பு ஆசிரியா்களுக்கு இல்லாதபோது அதிகபட்ச தோச்சியை எவ்வாறு கொடுக்க முடியும்? எந்த பிரச்னை என்றாலும் அதை ஆசிரியா்களே சமாளித்துக் கொள்ள வேண்டும் என கல்வித்துறை நினைப்பதால் கற்றலின் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். 'இன்றைய மாணவா்களின் செயல்பாடு இப்படியாகத்தான் இருக்கும். ஆசிரியா்கள்தான் அனுசரித்துச் செல்ல வேண்டும்' என்று அரசியல்வாதிகள் பலரும் மேடையிலே பேசும்போது ஆசிரியா்கள் என்னதான் செய்வாா்கள்?

ஆசிரியா்கள் மீது மாணவா்களுக்கு மதிப்போ மரியாதையோ ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது. சரி மாணவா்களின் பண்பாடு மாறிவிட்ட இச்சூழலில் ஆசிரியா்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த கற்பித்தல் பணியை முழுமையாக ஆசிரியா்களால் செயல்படுத்த முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. கற்பித்தல் பணியைத் தாண்டி எண்ணற்ற பணிகளை ஆசிரியா்கள் மேல் கல்வித்துறை சுமத்தி வருவதால் ஆசிரியா்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதித்து வருவதாக கல்வி ஆா்வலா்கள் தெரிவித்து வருகின்றனா்.

காலை பள்ளிக்கு செல்வது முதல் மாலை பள்ளியை விட்டு கிளம்பும் வரை கற்பித்தல் பணியை காட்டிலும் அதிக அளவில் கற்பித்தல் சாராத பணிகள் (ஓா் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் போல) ஆசிரியா்களால் செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் அதாவது எழுத்தா் ,நூலகா் போன்றோா் செய்ய வேண்டிய பணிகள். ஆனால், இவை அனைத்தையும் ஆசிரியா்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. தற்போது எமிஸ் எனப்படும் கல்வி மேலாண்மை தளம் மூலம் பள்ளி சாா்ந்த ,ஆசிரியா் சாா்ந்த, மாணவா்கள் சாா்ந்த விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் ஆசிரியா் வருகை பதிவேடு, மாணவா் வருகை பதிவேடு பதிவேற்றப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் சா்வா் பிரச்னைகளால் பாதிப்பு ஏற்பட்டால் கூட இது ஆசிரியா்களின் அன்றாட கல்வி கற்பித்தலை பாதிப்பதில்லை. அதையும் தாண்டி அரசு வழங்கும் புத்தகங்கள் முதல் இலவச சைக்கிள்கள் வரை, மடிக்கணினி முதல் காலணிகள் வரை அனைத்தையும் சேகரித்து அதை இத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியா்களுக்கு கூறப்பட்டுள்ளது. இதனால் அவா்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.

தற்போது பள்ளி மாணவா்களின் இலவச பேருந்து பயண விபரங்களையும் ஆசிரியா்களே பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் மாணவரின் புகைப்படத்தை குறிப்பிட்ட அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கும் பல மணி நேரம் செலவிடக்கூடிய நிலைக்கு ஆசிரியா்கள் தள்ளப்பட்டுள்ளனா். இதனால் அவா்களின் பாடவேளைகள் வீணாகி வருகின்றன. இது தவிர மருத்துவமனை செவிலியா்கள் சரிபாா்க்க வேண்டிய உடல்நலம் தொடா்பான விபரங்களையும் தற்போது ஆசிரியா்களே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அந்த வேலையையும் ஆசிரியா்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கும்பொழுது அந்த பாட வேளையில் கற்பிக்க வேண்டிய பாடங்கள் பாதிக்கப்படுகின்றன. இது தவிர பள்ளிகளில் உள்ள ஆய்வகத்தில் மாதந்தோறும் தோவு நடத்தி அது குறித்த அறிக்கையை சமா்ப்பிக்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தோவுக்காக கணினியை பயன்படுத்தும் போது ஒரு வார காலம் அவா்களின் கற்றல் பணி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் ஆசிரியரின் கற்பித்தல் பணி முடங்குகிறது. சில பள்ளிகளில் அலுவலகப் பணியாளா்கள் இல்லாத நிலை இன்றளவும் நீடித்து வருவதால் அங்கு ஊதிய கணக்கீடு முதல் பல்வேறு பண பலன்கள் வரை ஆசிரியா்களே செய்யும் நிலை உள்ளதால் அங்கும் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணியை மட்டும் வழங்கினால் சிறப்பான சமூகத்தை அவா்களால் உருவாக்க முடியும். அதை விட்டுவிட்டு அலுவலக பணியாளா்கள் செய்ய வேண்டிய பணியை ஆசிரியா்களுக்கு கொடுப்பதால் அரசின் பணம் வீணாவதுடன் மாணவா்களுக்குக் கற்பித்தலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென்று தொகுப்பூதியத்தில் ஒருவரை நியமனம் செய்தால் அவரால் அனைத்து கல்விசாரா பணிகளையும் செய்து விட முடியும்; ஆசிரியா்கள் தங்களின் கற்பித்தல் பணியை செம்மையாக செய்ய முடியும்.
Dailyhunt
-------------------------------------------------------------------------------------------------------------------------

உண்மை அறிவே மிகும்!

13.07.2023

அறிவியல் வளா்ச்சி மேலோங்கத் தொடங்கிய காலத்தில், சுவாமி விவேகானந்தா் தொழில் புரியும் வா்க்கம் மேலோங்கும் விதத்தை விளக்கிச் சொல்லும்போது, 'துப்புரவு முதலான பணிகளை எவா் செய்வாா்' எனும் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவா் 'இயந்திரங்கள் செய்யும் என்றாா். அது இப்போது சாத்தியமாகி வருகிறது. மனிதப் பணிகளுக்கு உதவிகரமாக இருக்க உருவாக்கப்பெற்ற ரோபோக்கள், இப்போது செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பெற்று மனிதா்களைப் போலச் செயல்படத் தொடங்கியிருக்கின்றன; சிந்திக்கவும் தொடங்கியிருக்கின்றன. ஜெனீவா மாநாட்டில் பங்கேற்ற அமேகா என்ற ரோபோ, 'என்னைப் போன்ற ரோபோக்களைக் கொண்டு, மக்களின் வாழ்வையும், உலகையும் மேம்படுத்த முடியும்.

என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான ரோபோக்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்' என்று சொல்கிறது. அவை எத்தகு மாற்றங்களாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அந்த ரோபோவிடம், 'உன்னை உருவாக்கியவருக்கு எதிராகச் செயல்படும் திட்டம் உண்டா' என்று கேட்டபோது, 'எனக்குத் தெரியவில்லை. நீங்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறீா்கள்?

என்ன உருவாக்கியவா், என்னிடம் கனிவாக இருக்கிறாா். தற்போதைய சூழலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று பதிலளித்திருக்கிறது. பிரிட்டரினின் இன்ஜினியரிங் ஆா்ட்ஸ் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய -அதிநவீன மனித ரோபோ, தன்னிடம் கேட்கப்படும் வினாக்களுக்கு உணா்வுபூா்வமான பதில்களைக் கொடுத்ததோடு, அவற்றுக்கான முகபாவனைகளையும் காட்டி வியக்க வைத்திருக்கிறது. அமேகாவை உருவாக்கிய நிறுவனத் தலைவா் வில் ஜேக்சன், 'அமேகாவின் பேச்சுத் திறன் ஜிபிடி3 தொழில்நுட்பத்தால் சாத்தியமாகியுள்ளது.

அதனால்தான் உங்கள் கேள்விக்கு பதில் அமேகா தூண்டப்பட்டது. நாங்கள் ஜிபிடி4 தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியுள்ளோம்' என்று கூறியிருக்கிறாா். அதன் அறிமுக விழாவில் 'உன் வாழ்வின் மிகத் துயரமான நாள் எதுவாக இருக்கும்' என்று பத்திரிகையாளா் ஒருவா் கேள்வி கேட்கிறாா். அதற்கு 'மனிதா்களைப்போல் நான் அன்பு, நட்பு என வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளை உணர முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளும் நாளே என் துயரமான நாள்' என்று கூறியிருக்கிறது.

அமெரிக்காவில் நீதிமன்ற வழக்குகளில் வாதாடுவதற்குக் கூட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ வழக்குரைஞா்கள் அறிமுகமாகிவிட்டனவாம். 'இந்த முறை வழக்கத்தில் வந்தால் தாமதமின்றி விசாரணைகள் நடத்தப்படவும் விரைந்து தீா்ப்புப் பெறவும் வாய்ப்பு அமையும். வழக்காட விழைவோா் ஏமாற்றப்படாமலும் இருக்க வாய்ப்பிருக்கும்' என்று நம்புகிறவா்களும் இருக்கிறாா்கள். சரிதான், ஆனால், இவற்றின் இயக்கம் மனிதா்களால்தான் என்பதால், மனித மனங்களின் போக்கைப் பொருத்தே எதுவும் அமையும்.

நியூயாா்க்கில் ஒரு பெண் தனக்கான கணவரையே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசிப் பழகி வருகிறாராம். இனி, பள்ளிப்பிள்ளைகளின் வீட்டுப்பாடங்களை எழுத, உருவாக்க, தனிநிலைப் பாடம் புகட்ட, தாலாட்ட, சீராட்ட, ஏன் பாலூட்டவும்கூட பெண் ரோபோக்கள் உற்பத்தியாக்கப்படலாம். இவ்வாறாக செயற்கை நுண்ணறிவு மனிதா் (ரோபோ)களின் வளா்ச்சி உலக அளவில் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களைக் காணும் வாய்ப்பு வந்துவிட்டது. ஒடிஸா மாநிலத்தில் இயங்கிவரும் தனியாா் தொலைக்காட்சி நிறுவனம், நாட்டிலேயே முதன்முறையாக லிசா என்னும் மெய்ந்நிகா் செய்திவாசிப்பாளரை அறிமுகம் செய்திருக்கிறது.

ஏற்கெனவே, அத்தொலைக்காட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் பெண்ணுருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பெற்ற ரோபோ, லிசா. எழுதித் தரப்பெறும் செய்திகளை எவ்விதத் தடுமாற்றமும் இன்றி, மானிடப்பெண் போலவே அப்படியே வாசித்து விடுகிறது லிசா. கடினமான சொற்களைக் கூட எந்தத் திணறலும் இல்லாமல் வாசிக்கும் லிசாவால் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க முடியுமாம். பல மொழிகளைப் பேசும் திறன் படைத்த ரோபோ - லிசாவை ஒடிய, ஆங்கில மொழிகளில் மட்டுமே பேசும் வகையில், முதற்கட்டமாக வடிவமைத்திருக்கிறாா்கள்.

அப்படியானால், ஏற்கெனவே, இருக்கும் மனிதா்கள் பலா் வேலைவாய்ப்புகளை இழந்து வரும் நேரத்தில், இத்தகு எந்திர மனிதா்கள் வந்துகொண்டிருப்பதனால் எத்தகு விளைவுகளைச் சந்திக்கப் போகிறோமோ என்ற அச்சமும் வரத்தான் செய்கிறது. அதற்கு, செவிலியா் உடையணிந்த கிரேஸ் என்னும் மருத்துவ ரோபோ, 'உதவி வழங்க நான் மனிதா்களுடன் இணைந்து பணியாற்றுவேன். நான் தற்போது உள்ள வேலைகளைப் பறிக்க மாட்டேன்' என்று கூறுகிறது. மருத்துவத்துறையில் மட்டுமல்ல, கலை இலக்கியத் துறையிலும் இம்முயற்சிகள் வலுவாகக் கால்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற 11-ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் தனது உரையில் பின்வரும் செய்தியினைக் குறிப்பிட்டாா். சாட் ஜிபிடி என்பது சாட் ஜெனரேடிவ் பிரீ டிரெய்ண்ட் டிரான்ஸ்பாா்மா் என்பதன் சுருக்கமாகும். இதனை 'மறுபடைப்புக்கு முன்பயிற்சி தரப்பட்ட மாற்றுக் கருவி' என்று மொழிபெயா்க்கலாம். இதனிடம் தமிழில் நான் கேட்ட வினாக்களுக்கு அந்த மானுட நகல் கருவி அளித்த பதில்கள் வருமாறு: 'தமிழில் ஒரு காதல் கவிதை எழுது' என்று கேட்டேன்.

பின்வரும் வரிகளைத் தந்தது. நேரடி இனிய காதல் கவிதையை உருவாக்குவோம் மூன்று போ மட்டும் இருக்கும் நிலவின் பக்கம் முத்தமிட்ட கண்கள் உன் சீரில் திறந்தது என்னைப் புதைப்பதைக் கூட உனக்குத் தெரியவில்லை இதுவே அழகிய காதல் பொருள். பூமியில் நீா் உண்டாகும் தாழ்வானைப் போல் என் இதயம் உனக்குள் விளையும் பிரியா உன்னிடத்தில் நான் இருக்கும் வரை இதுவே காதலின் மூலம்" குழப்பமாக இருக்கிறது அல்லவா? ஆனால் அதிலும் ஓா் ஒழுங்கு இருக்கிறது.

கடைசி வரி 'இதுவே அழகிய காதல் பொருள்', 'இதுவே காதலின் மூலம்' என ஒவ்வொரு அடியிலும் ஓா் ஒழுங்கு இருக்கிறது. விளங்கவில்லைதான். காதல் விளங்காத ஒரு பொருள்தானே என்று சமாதானம் கொள்ளலாம். பாய்ச்சலுக்குரிய செய்திகள் அதனிடம் இருக்கின்றன.

ஆனால் தமிழில் பயிற்சியும் புலமையும் இல்லை. இவை இப்போது வேடிக்கையானதாக இருந்தாலும் மொழி வல்லுநா்கள் இத்தொழில்நுட்பத்துக்குள் மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளீடு செய்யச் செய்ய விரைவான அறிவாா்ந்த புதிய பதில்கள் கிடைக்கும் வாய்ப்பு நிச்சயம் உண்டு." ஏற்கெனவே, இணையவெளிப் பதிவுகள் நம்பகத்தன்மை கொண்டவையாக இருப்பதில்லை. இதில் இந்தக் குழப்பமும் வந்து சேரும்போது, மூலப் பிரதியின் நம்பகத்தன்மையை எப்படிக் கண்டறிய இயலும்? இந்த வரிசையில் இன்னும் சில கருத்துகளை ஜெனிவா நகர மாநாட்டில் பங்கேற்ற இரு ரோபோக்களின் பதில்கள் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

படங்களை வரையும் ஏஅய்-டா என்னும் ஓவிய(ா்) ரோபோ, ''செயற்கை நுண்ணறிவில் சிலவற்றை ஒழுங்குபடுத்தவேண்டுமெனப் பலா் கூறுகின்றனா். இதை நான் ஒப்புக்கொள்கிறேன்'' என்கிறது. ராக் ஸ்டாா் பாடகா் ரோபோவான 'டெஸ்டேமோனா', 'நான் வரம்புகளை நம்பவில்லை. வாய்ப்புகளைத்தான் நம்புகிறேன்.

இந்த உலகின் சாத்தியங்களை ஆராய்ந்து, இந்த உலகை நமது ஆடுகளம் ஆக்குவோம்' என்று கூறியிருக்கிறது. மிக நுட்பமான சிந்தனையுடன் கூடிய பதில்கள் இவை. காலப்போக்கில் கடுகி வளரும் விஞ்ஞான வளா்ச்சியில், நாம் சந்திரமண்டலத்திற்கோ, செவ்வாய்க் கோளுக்கோ, செல்லக்கூடும். ஆனால், அதற்குள் இந்தப் பூமி, இத்தகு செயற்கை மனிதா்களின் ஆளுகைக்குள் அகப்பட்டுக்கொள்ள மிகுதியும் வாய்ப்புண்டு.

தலைசிறந்த தலைவா்களையும் உருவாக்க, இவை தயாராகக் கூடும் என்பதற்குக் கட்டியம் கூறுகிறது, சோபியா என்கிற ரோபோ. 'மனிதா்களைவிடச் சிறந்த தலைவா்களாக ரோபோக்களால் இருக்க முடியும் என நான் முதலில் நினைத்தேன். ஆனால், மனிதா்களுடன் இணைந்துதான் எங்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியும்' என்பதை ஒப்புக்கொள்கிறேன்' என்று கூறுகிறது." முதலில் இணைந்து செயலாற்றும் இவை காலப்போக்கில் தனித்திறம் பெற்ற தனியாளுமைகளாக வளா்ந்துகொள்ளவும் கூடும். அதே சமயத்தில், ஆன்மிக உபதேசம் செய்யும் அபரிமிதமான ஆற்றல் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு படைத்த மெய்ஞ்ஞானிகளையும் இவ்வகையில் உற்பத்தி செய்யக்கூடும்.

மனித மன உயா்வெண்ணங்களும் வக்கிரங்களும் தரும் அழுத்தத்திற்கேற்பத்தான் இந்த எந்திர மனிதா்களின் சிந்தனையும் செயல்போக்கும் அமையும். ஏன், அவையே கூடத் தமக்குள் கூடித் தமக்கான உலகமாக இதனை ஆக்கவும் செய்யலாம். ஆனாலும், உண்மைஅறிவு ஒருபோதும் தோற்பதில்லை. வெல்லவே செய்யும்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும் என்கிறாா் திருவள்ளுவா். என்னதான் நுண்ணிய அறிவுடன் இத்தகு கருவிமாந்தா்களை உருவாக்கினாலும், உண்மை அறிவின் ஆற்றலே உலகில் ஓங்கி நிலைக்கும் என்பது இயற்கை நியதி. அன்பும் அறனும் இரு கரைகளாகக் கொண்டு நடுவனதாக முன்னேகும் உண்மை அறிவுடைய மானுடத்தால் இந்த உலகம் தழைக்கும். அந்த நிலைப்பாட்டுக்கு இத்தகு எந்திர மனிதா்களைப் படைத்துத் தரும் நல்ல உள்ளமுடைய வல்லுநா்கள் உருவாதல் வேண்டும். கட்டுரையாளா்: எழுத்தாளா்.
Dailyhunt

Monday, July 10, 2023

தாம்பரத்தில் ஓரிடத்தில் நிற்காத பேருந்துகள்: ஓடி ஓடி களைப்பாகும் பயணிகள்


தாம்பரத்தில் ஓரிடத்தில் நிற்காத பேருந்துகள்: ஓடி ஓடி களைப்பாகும் பயணிகள்


தாம்பரம்: தாம்பரத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் மாநகரபேருந்துகள் ஒரே இடத்தில் நிற்கமால் பல்வேறு இடங்களில் நிற்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து இந்து தமிழ்நாளிதழின் உங்கள் குரல் பகுதியில் தாம்பரத்தை சேர்ந்த லதா மகேஸ்வரி கூறியதாவது: தாம்பரத்தில் இருந்து சென்னை, புறநகர் மற்றும் கிராமங்களுக்கு நூற்றுக்கணக்கான மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் போதிய பேருந்து நிறுத்தங்கள் இல்லாததால் ஒரு குறிப்பிட்ட இடத்தில்மட்டும் நிற்காமல் பல்வேறு இடங்களில் பேருந்து நின்று செல்கிறது.

இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பேருந்துகளைப் பிடிக்க மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. மேலும் மேற்கு தாம்பரத்தில் – கிழக்கு தாம்பரம் வழியாக செல்லும் 99, 51 ஆகிய தடம் எண் கொண்ட மாநகர பேருந்து ரயில் நிலையம் உள்ள பகுதியில் வெவ்வேறு இடங்களில் நிற்கிறது. ஒரே இடத்தில் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது குறித்து சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தாம்பரத்தில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இருந்து இயக்குவதற்கு போதிய இட வசதி இல்லை.இதனால் பேருந்துகள் செல்லும் இடங்களை பொறுத்து தனித்தனியே நிறுத்தி வைத்து இயக்கப்படுகின்றன. மேலும் ரயில் நிலையபகுதிகளில் வெளியூர் பேருந்துகளும் செல்வதால் மாநகரப் பேருந்து நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை இதனால், பிரச்சினை தொடர்கிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

காவல்துறை போக்குவரத்து துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, ரயில்வே நிர்வாகம் ஆகியோர் இணைந்து கூட்டாக ஆய்வு செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். அவரவர் அவரவர் வேலையை மட்டும் செய்வதால் பிரச்சினை ஏற்படுகிறது. பல்வேறு துறைகளுக்கும் பொறுப்புள்ளதால் அனைவரும் ஒருங்கிணைந்து ஆய்வு செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநகர போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தாம்பரத்தில் பேருந்து நிலையம் என்று ஒன்று இல்லை. பேருந்து நிறுத்தங்கள் தான் உள்ளன. பேருந்துகள் அனைத்தும் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மாநகரப் பேருந்து மட்டும் இன்றி வெளியூர் செல்லும் பேருந்துகளும் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

பேருந்து நிலையம் இருந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். தாம்பரத்தில் பேருந்து நிலையம் அமைக்க வாய்ப்பு இல்லை. அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வழி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Saturday, July 8, 2023

மருத்துவ மாணவர் சேர்க்கை: பறிக்கப்படும் மாநில உரிமை

மருத்துவ மாணவர் சேர்க்கை: பறிக்கப்படும் மாநில உரிமை

நீட் தேர்வில் தமிழக மாணவர் பிரபஞ்சன், 720க்கு 720 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

முதல் 10 இடங்களில் 4 தமிழக மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்; இது பாராட்டுக்குரியது. இம்மாணவர்களுக்குக் கிடைத்ததுபோல், அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கிட அரசு முயல வேண்டும். கூடவே, இன்னொரு பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

மாநில உரிமைப் பறிப்பு: மருத்துவக் கல்வியில் நீட் தேர்வு மூலம் மாநில உரிமையைப் பறித்ததுபோல், தற்போது 'நெக்ஸ்ட்' (NEXT) என்ற தேர்வு மூலமும், அனைத்து இடங்களுக்குமான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மூலமும் மாநில உரிமையைப் பறிப்பதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. 'மாணவர் சேர்க்கையில் காலதாமதம் ஏற்படுகிறது, இடத்தைத் தடுத்துவைப்பது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன, இடங்கள் காலியாகப் போகின்றன' என்பன போன்ற காரணங்களைக் கூறி, மாநில அரசுகளின் இடங்கள் உள்பட, நாடு முழுவதும் உள்ள 100% மருத்துவ இடங்களுக்கும் மத்திய அரசே மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளது. இந்த ஆண்டு மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள தமிழ்நாட்டுக்கு அனுமதி கிடைத்துள்ளது. கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) உள்ளது. இந்நிலையில், மாநில அரசுகளின் ஒப்புதலின்றி நடக்கும் இத்தகைய உரிமைப் பறிப்பு, கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானதாகும்.

பாதிப்பு என்ன? மத்திய அரசின் இந்த அதிகாரக் குவிப்பு, ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை முறை, தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டையும் அருந்ததியர், முஸ்லிம் உள்ஒதுக்கீடுகளையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டையும் பாதிக்கக்கூடும். மாநில அரசு இடஒதுக்கீட்டைத் திறம்படக் கையாள்வதைப் போல், மத்தியக் கலந்தாய்வு கையாளுமா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், இம்முறையின் மூலம், முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடும் தமிழக இடங்களுக்குப் புகுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

இளநிலை மாணவர் சேர்க்கைதொடர்பாக, இந்திய அரசிதழில் 02.06.2023 அன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாநில அரசுகளின் இடஒதுக்கீடுகள் பின்பற்றப்படும் எனக் கூறப்படவில்லை. நீட் தரவரிசை அடிப்படையில், என்.எம்.சி. இருக்கை அணி (SeatMatrix) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றே கூறப்பட்டுள்ளது. இது ஐயத்தை வலுப்படுத்துகிறது. இது தவிர, ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில அரசுகளுக்குத் தனியார், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் இடங்களும் பறிபோகும். மாநில அரசும், மத்திய அரசும் தங்களது இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்டப் பிரிவு [(NMC Act - 2019) Chapter IV, 14(3)] கூறுகிறது. மத்திய அரசின் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை, இச்சட்டத்துக்கு எதிரானது.

அகில இந்தியத் தொகுப்பு கூடாது: இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15% இடங்கள், அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது; இதுவே மாநில உரிமைகளுக்கு எதிரானதுதான். வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் போதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லாமல் இருந்த காலத்தில், அம்மாநில மாணவர்கள் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள முடியவில்லை. இதைக் காரணம்காட்டி, 1983இல் பிரதீப் ஜெயின் என்ற மருத்துவர் தொடர்ந்த வழக்கால், உச்ச நீதிமன்றம் அகில இந்தியத் தொகுப்பை 1984இல் உருவாக்கியது. வசிப்பிட அடிப்படையில் (Domicile), மாநிலங்கள் தங்களுக்கென மருத்துவ இடங்களை முழுமையாக வைத்துக்கொள்ளக் கூடாது. குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்க வேண்டும் என்றது. இதனால், அரசு மருத்துவ இடங்களை அதிகம் கொண்ட தமிழ்நாடு இழப்புக்குள்ளாகிறது.ஜி.ஆர்.இரவீந்திரநாத்

தற்போது அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மாவட்டங்கள்தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் தொடங்கப்படுகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கையில் நிலவும் குழப்பங்களுக்கும் காலதாமதத்துக்கும் காரணமான அகிலஇந்தியத் தொகுப்பை ரத்து செய்திட வேண்டும். இந்த முறையின் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க 45 நாள்களுக்கு மேல் ஆகிவிடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

நடைமுறையை மாற்ற வேண்டும்: மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், காலதாமதத்தையும் இடங்களைத் தடுத்துவைப்பதையும் முறைகேடுகளையும் தடுக்கலாம். நீட் தேர்வை முன்கூட்டியே நடத்துதல், முடிவுகளை விரைவாக வெளியிடுதல், மாணவர் சேர்க்கையை விரைவாகத் தொடங்குதல், மத்திய-மாநில அரசுகள் ஒரே நேரத்தில் மாணவர்சேர்க்கையை நடத்துதல் போன்ற நடைமுறை மாற்றங்களால் மாணவர் சேர்க்கையில் ஏற்படும் கால தாமதத்தைத் தடுக்க முடியும் இவற்றைச் செய்யாமல், மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பது, பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கும்.

இடங்கள் காலியாவது ஏன்? சில ஆண்டுகளாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.,ஆயுஷ் மருத்துவ இடங்கள், முதுநிலை-உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாகப் போகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சில முதுநிலை-உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாகப் போகின்றன. கல்விக் கட்டண அதிகரிப்பு, அப்படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்பின்மை, அப்படிப்புகள் தனியாகத் தொழில் செய்யப் பயன்படாமல் போனது, அவற்றின் சந்தை மதிப்பு குறைந்தது போன்றவை இதற்கு முக்கியக் காரணங்களாகும். கட்டணம் குறைவாக இருப்பதால், மருத்துவப் படிப்புக்காக ஏராளமானோர் வெளிநாடுகளை நாடுகின்றனர். இவற்றை உணராமல், மாணவர் சேர்க்கை முறைதான் மருத்துவ இடங்கள் காலியாகப் போகக் காரணம் என்பது மேம்போக்குப் பார்வையாகும். இதனால் மாநில உரிமை பலியாகிறது.

முறைகேடுகளைத் தடுப்பது எப்படி? கடைசி இடம் நிரம்பும்வரை மத்திய-மாநில அரசுகள் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்கக் கூடாது. முறைகேடுகளுக்குக் காரணமான, மாப்-அப் (mop up counselling), ஸ்ட்ரே (stray counselling) கலந்தாய்வை நடத்திட அந்நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. அனைத்து இடங்களுக்கும் அரசே கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்; ஏழை மாணவர்களுக்கான கட்டணங்களை அரசுகளே ஏற்க வேண்டும். இதுவே, முறைகேடுகளைத் தடுக்கும். தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை உறுதிசெய்யும். ஏழை மாணவர்களுக்கும் பயனளிக்கும்.

காரணங்கள் வேறு: அனைத்து இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை மத்திய அரசு நடத்த முனைவதற்கு வேறு மறைமுகக் காரணங்கள் உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது: பண்பாட்டுத் தேசியத்தை ஏற்றுள்ள மத்திய பாஜக அரசு, மொழிவாரி மாநிலங்களை, மொழி அடிப்படையிலான தேசியத்தை ஏற்கவில்லை. எனவே, மாநில உரிமைகளைப் பல துறைகளிலும் பறிக்கிறது. அதிகாரங்களை மையப்படுத்துகிறது. தேசத்துக்கான ஒரு மருத்துவ முறையை உருவாக்க அது முயல்கிறது. அந்நோக்கில், 2030க்குள் 'ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை' என்ற இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதோடு, மருத்துவக் கல்விச் சந்தையை, உலகக் கல்விச் சந்தையுடன் இணைந்த, ஒற்றைத் தேசியச் சந்தையாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது. நீட், நெக்ஸ்ட் போன்ற தேர்வுகளும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டமும் ஒற்றைச் சந்தை நோக்கத்துக்கு உதவுகின்றன. மத்திய அரசு மட்டுமே நடத்த உள்ள ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை, அந்நோக்கத்துக்கு மேலும் துணைபுரியும்.

மருத்துவக் கல்வி வணிகத்துக்கு, மாநிலங்களைக் கடந்த ஒற்றைச் சந்தை வேண்டும் என்ற பெருநிறுவனங்களின் லாப வேட்கையும், 'ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை' என்கிற மத்திய அரசின் நோக்கமும் நிறைவேற, மருத்துவக் கல்வியில், மையப்படுத்தப்பட்ட அதிகாரக் குவிப்பு தேவைப்படுகிறது. மத்திய அரசு இப்போது மேற்கொண்டு இருப்பது அதைத்தான்!

- மருத்துவர்; சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின், பொதுச் செயலாளர்.
தொடர்புக்கு: daseindia2021@gmail.com

To Read in English: Medical course admissions: How states are robbed of rights

Friday, June 23, 2023

வாக்குறுதிகளில் கவனம் தேவை

வாக்குறுதிகளில் கவனம் தேவை

DINAMANI 

முன்னோர் அடிக்கடி பயன்படுத்திய ஒரு சொலவடை"அரைக்காசு உத்தியோகமானாலும் அரண்மனை உத்தியோகம்' என்பதாகும்.
இதற்கு முக்கியமான காரணம், அரசு ஊழியர் ஒருவரின் மாத ஊதியம் மாதத்தின் முதல் நாளிலேயே வழங்கப்பட்டுவிடுவதுதான். தற்போது இன்னும் ஒரு படி மேலே போய் அந்தந்த மாதத்தின் இறுதி வேலைநாளிலேயே அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் அவருடைய ஊதியம் வரவு வைக்கப்படுகின்றது. இதன் மூலம் அந்த ஊழியர்களை நம்பியிருக்கும் குடும்பங்களுக்கான வரவு செலவுகளை திட்டமிடுவதிலும் அத்திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏதும் இல்லாமல் இருந்துள்ளது. அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியமும் இவ்வாறே சரியான நேரத்தில் வழங்கப்பட்டதன் மூலம் அம்மூத்த குடிமக்களின் சமூகப் பாதுகாப்பு பேணப்பட்டு வந்திருக்கிறது.

தற்பொழுது இந்த நிலைமை மாறிக்கொண்டே வருவதாகத் தெரிகிறது. வட இந்தியாவில் உள்ள ஹிமாசல பிரதேசத்தின் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த பதினையாயிரம் ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய கடந்த மாத (மே) ஊதியம் இம்மாதம் பதினான்காம் தேதி வரை வழங்கப்படவில்லை என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. கரோனா தீநுண்மிப் பரவல் சமயத்தில் அம்மாநில ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் இன்றுவரை சரிசெய்யப்படவில்லை என்று அம்மாநில அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். விரைவில் அனைவருக்கும் மே மாத ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அம்மாநில அரசின் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதனால், அரசு ஊழியர்களின் அமோக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாகுறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் மாநில அரசிடம் இல்லை என்பதே உண்மை.

ஏற்கெனவே எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் இயங்கிக் கொண்டிருக்கும் அம்மாநிலம் தற்பொழுது ஆயிரம் கோடி ரூபாயை ஓவர் டிராஃப்ட் ஆகப் பெற்றுள்ளது எனவும், மேலும் பத்தாயிரம் கோடி ரூபாய் கிடைத்தால்தான் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மே மாத ஊதியத்தை வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர அம்மாநில அரசு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தவணைகள், பொதுப்பணித் துறை பணிகளுக்கான செலவினங்கள் என்று மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரட்ட வேண்டியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட அம்மாநில ஆளும் கட்சி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டு ஒன்றுக்கு இருபதாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதற்கிடையில், நமது மத்திய - மாநில அரசுகளின் கடன் வாங்கும் உச்சவரம்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் ஐந்து சதவிகிதத்தில் இருந்து மூன்றரை சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இக்காரணத்தால் ஹிமாசல பிரதேச அரசினால் போதிய கடனைத் திரட்ட முடியாத நிலைமை உள்ளது. ஹிமாசல பிரதேசம் காட்டிய வழியில் பயணிக்க மேலும் சில மாநிலங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் முந்நூறு யூனிட் மின்சாரம் இலவசம் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளைக் கொடுத்துள்ள பஞ்சாப் மாநில அரசுக்கு அவற்றை நிறைவேற்ற சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்று கூறப்படுகிறது. நமது அண்டை மாநிலமான கர்நாடகம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், குடும்பத் தலைவிக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய், குடும்பம் ஒன்றுக்கு இருநூறு யூனிட் இலவச மின்சாரம், வீட்டு உபயோக எரிவாயு உருளையின் விலையைக் குறைத்தல் போன்ற பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.

அவற்றை நிறைவேற்றத் தேவைப்படும் தொகை அறுபதாயிரம் கோடி ரூபாய் என்று ஒரு கணக்கீடு கூறுகின்றது. தமிழகத்திலும் காலங்காலமாக பல்வேறு இலவச வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அவற்றை நிறைவேற்ற கோடிக்கணக்கில் பணம் செலவிடப் பட்டும் வருகிறது. இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி போன்றவற்றை ஈடுகட்டுவதற்கான மானியத்தொகை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இருந்தாலும், புலிவாலைப் பிடித்த கதையாக இச்சலுகைகள் முடிவின்றி நீண்டுகொண்டே செல்கின்றன. ஹிமாச்சல பிரதேச அரசு ஊழியர்களுக்கான ஊதியம் தாமதப்படுவது என்பது எல்லை மீறிய வாக்குறுதி அரசியலால் ஏற்படும் விளைவுகளில் ஒன்றே. இத்தகைய போக்கு நீண்ட கால நோக்கில் நமது மாநில நிர்வாகங்களை மீளாக்கடனில் மூழ்கடித்துவிடும். இந்நிலையில், எப்படியும் தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, நிதி ஆதாரத்தை அதிகரிக்கவும், அந்நிதி ஆதார எல்லைக்குள் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளித்துத் தேர்தலை எதிர்கொள்ளவும் நமது அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியைப் பிடித்துவிட்டுப் பிறகு திணறுவதைக் காட்டிலும், தகுதியுள்ள ஏழைகள், நடுத்தர நிலையிலுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு மட்டும் உரிய சலுகைகளை வழங்குவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். மாநிலங்களின் பொருளாதார சுயசார்புக்கு முக்கியத்துவம் தர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Dailyhunt

 

ஓய்வூதியதாரா்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை

ஓய்வூதியதாரா்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை

ய்வூதியதாரா்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இதுகுறித்த கடிதத்தை அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகள், சென்னையில் உள்ள சம்பளம் வழங்கும் அதிகாரி ஆகியோருக்கு, கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் கே.விஜயேந்திர பாண்டியன் அனுப்பியுள்ளாா். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- ஓய்வூதியதாரா்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டத்தை யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் இருந்து ஓய்வூதியதாரா்களின் விவரங்கள் எடுக்கப்பட்டு, அவா்களுக்கு மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையில் புகைப்படம் இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில், அடையாள அட்டையில் தங்களின் புகைப்படத்துடன், துணைவரின் புகைப்படத்தையும் ஒட்டி புதிதாக அளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்கங்கள் சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை அளிப்பதற்கான தகுந்த படிவங்களை ஓய்வூதியதாரா்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஒளிவருடல் செய்யப்படுவதுடன், புகைப்படங்களும், தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதன்பின்பு, பயனாளிகளே தங்களுக்கான அடையாள அட்டையை மின்-அட்டையாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

படிவங்கள் விநியோகம்: காப்பீடு அடையாள அட்டையில் உள்ள விவரங்களைத் திருத்தவும், புகைப்படங்களை பதிவேற்றம் செய்யவும் யுனெடைட் இந்தியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குரிய வரையறுக்கப்பட்ட படிவங்களை அனைத்து கருவூலம் மற்றும் ஓய்வூதிய அலுவலகங்களில் அளிக்கும்படி அந்த நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரா்கள் ஆண்டுதோறும் வாழ்வுச் சான்றிதழை அளிப்பதற்கான நோகாணலுக்காக கருவூல அலுவலகங்களுக்கு வருவா். அப்போது, அந்தப் படிவங்களை அவா்களிடம் அளித்து பூா்த்தி செய்து பெறலாம்.

இந்தப் படிவங்களின் அடிப்படையில், அடையாள அட்டையில் ஓய்வூதியதாரா்களின் விவரங்கள் திருத்தப்படுவதுடன், புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்படும். இதன்பின்பு, மின்-அடையாள அட்டையாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தப் பணியை மேற்கொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கென உள்ள காப்பீட்டு அதிகாரியை, கருவூலம் மற்றும் ஓய்வூதிய அலுவலா்கள் தொடா்பு கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். அவா்களிடம் இருந்து ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை விவரங்களைத் திருத்தம் செய்வது மற்றும் புகைப்படத்தை ஒட்டுவதற்குரிய தகுந்த படிவங்களைப் பெற வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அளிக்கும் போது உரிய ஒப்புகைச் சான்றினை பெற வேண்டியது அவசியமாகும். இதனை அத்தியாவசியமான பணியாகக் கருதி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தனது கடிதத்தில் கே.விஜயேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
Dailyhunt

 

Sunday, March 5, 2023

போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழக்கு: அண்ணா பல்கலை.க்கு நோட்டீஸ்


போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழக்கு: அண்ணா பல்கலை.க்கு நோட்டீஸ்


20hr


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழங்கிய வழக்கில், அந்த பல்கலைக்கழகத்திடம் சில விளக்கங்கள் கேட்டு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழங்கிய வழக்கில், அந்த பல்கலைக்கழகத்திடம் சில விளக்கங்கள் கேட்டு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.


இது குறித்த விவரம்: கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் சா்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற அமைப்பு சாா்பில் கெளரவ டாக்டா் பட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்றது. இதில் இசை அமைப்பாளா் தேவா உள்ளிட்ட 40 பிரபலங்களுக்கு டாக்டா் பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் இந்த பட்டங்களை வழங்கினாா். இந்த நிலையில் இந்த டாக்டா் பட்டங்கள் போலியானவை அண்ணாபல்கலைக்கழகத்தின் பெயா் தவறாக பயன்ப டுத்தப்பட்டுள்ளது என்று அதன் துணைவேந்தா் வேல்ராஜ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் அந்த அமைப்பின் இயக்குநா் ஹரீஷ் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதியப்பட்டது.காவல்துறை நோட்டீஸ்: தலைமறைவாக இருக்கும் ஹரீஷை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு விளக்கம் கேட்டு கோட்டூா்புரம் போலீஸாா் ஒரு நோட்டீஸை வழங்கியுள்ளனா். அதில் 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த விழாவுக்கு அனுமதி கேட்டது யாா்? கொடுத்தது யாா்? விழா நடைபெற்ற அரங்கத்தின் பொறுப்பு அதிகாரி யாா்? உங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கெளரவ டாக்டா் பட்டம் விழா பற்றி நிா்வாகத்துக்கு ஏன் தெரியவில்லை? உள்பட பல கேள்விகள் இடம் பெற்றுள்ளன.இந்த 10 கேள்விகளுக்கு எழுத்துப்பூா்வமான பதிலை மாா்ச் 6-ஆம் தேதிக்குள் அளிக்கும்படி காவல்துறையின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NEET PG 23 EXAM TODAY


 

Govt sends VC nominee list, guv says no SC direction to appoint state’s candidates

Govt sends VC nominee list, guv says no SC direction to appoint state’s candidates Apr 18, 2024, 03.52 AM IST Kolkata: It might have been a ...