Wednesday, March 13, 2024
முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க நடவடிக்கை: துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுரை
Wednesday, March 6, 2024
தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக - அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக - அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
அன்புமணி ராமதாஸ்
சென்னை: மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வரும் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழக அரசின் மருத்துவத்துறையில் பணியாற்றி வரும் பல்வேறு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த அவர், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக 2009 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட குழு கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் நாள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து விட்ட நிலையில், அதை செயல்படுத்துவது குறித்து அடுத்த 6 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.
7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொடக்கநிலை ஊதியம் ரூ.56,100 என்ற ஒரே அளவு தான். ஆனால், ஐந்தாவது ஆண்டிலிருந்து இந்த ஊதியம் மாறுபடத் தொடங்குகிறது. இதற்குக் காரணம் மத்திய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் மாநில அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் தான் வழங்கப்படுவது தான். இதனால் 14-ஆம் ஆண்டில் தொடக்கத்தில் மத்திய அரசு மருத்துவர்கள் பெறும் அடிப்படை ஊதியமான ரூ. 1.23 லட்சத்தை, மாநில அரசு மருத்துவர்கள் 20-ஆவது ஆண்டில் தான் பெறுகின்றனர்; 14-ஆவது ஆண்டில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு ரூ.86,000 மட்டுமே கிடைக்கிறது.
இந்த முரண்பாடுகள் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அவற்றை களைய வேண்டும் என்பதற்காக மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை தமிழக அரசும் மறுக்கவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, 2021 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட பரிந்துரை மீது தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று நீதிபதி வினா எழுப்பினார். அதற்கு விடையளித்த தமிழக அரசு, பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டதால் தான் பரிந்துரைகளை செயல்படுத்த முடியவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தது.
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு வாக்குறுதி அளிப்பது இது முதல் முறையல்ல. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்திய போது, அவர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தலைமையிலான குழு, 354-ஆவது அரசாணையின் எதிர்கால சரத்துகளின்படி 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைத்தது.
அவற்றை ஆய்வு செய்து விரைந்து முடிவு எடுக்கும்படி உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையும் ஆணையிட்டது. அதன்பிறகும் இரு முறை மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்; அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், தமிழக அரசு, மருத்துவர்களின் கோரிக்கைகளை இப்போது வரை நிறைவேற்றவில்லை.
தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப் பட்டு வருகிறது. அவர்களுக்கு இணையான கல்வித்தகுதியும், பணிச்சுமையும் கொண்ட தமிழக அரசு மருத்துவர்களுக்கும் அவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.
எனவே, இனியும் தாமதிக்காமல் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழக அரசு மருத்துவர்களின் ஊதியம் தொடர்பான குழுவின் பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் அளித்த 6 வார கெடு முடிவதற்குள் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விடக் கூடும் என்பதால், அதை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். எனவே, கெடு முடியும் வரை காத்திருக்காமல், தமிழக அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Wednesday, February 28, 2024
வருவாய் துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்: பணியை புறக்கணித்து 10,300 பேர் பங்கேற்பு
Last Updated : 28 Feb, 2024 05:04 AM
Monday, January 1, 2024
எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு உள்ளதைப்போல ஆயுஷ் மாணவர்களுக்கும் எக்ஸிட் டெஸ்ட்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு
எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு உள்ளதைப்போல ஆயுஷ் மாணவர்களுக்கும் எக்ஸிட் டெஸ்ட்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு
December 26, 2023, 9:02 pm
சென்னை: எம்பிபிஎஸ் படித்து முடித்த மாணவர்கள் லைசென்ஸ் பெற்று மருத்துவ தொழில் செய்ய எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்ததை தொடர்ந்து தற்போது ஆயுஷ் படிக்கும் மாணவர்களும் எக்ஸிட் டெஸ்ட் எழுத வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஒன்றிய அரசின் கெஸட்டில் வெளியாகியுள்ளது. நாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் முதலில் நீட் தேர்வு எழுதிய பின் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் சேர முடியும். அதைத் தொடர்ந்து நான்கரை ஆண்டுகள் படித்து முடித்ததும் 1 ஆண்டு அந்த மாணவர்கள் பணியிடைப் பயிற்சி பெற வேண்டும்.
அதற்கு பிறகு அவர்களுக்கு சான்று வழங்கப்படும். இது தவிர வெளிநாடுகளில் சென்று மருத்துவப் படிப்பு முடித்து இங்கு வரும் மாணவர்கள் தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற்ற பிறகு தான் இங்கு அவர்கள் லைசென்ஸ் பெற்று மருத்துவ தொழில் செய்ய முடியும். இந்நிலையில், இந்திய தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஜூன் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் எம்பிபிஎஸ் படித்து முடித்த மாணவர்களும் எக்ஸிட் டெஸ்ட் எழுத வேண்டும். முதுநிலை பட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களும் எக்ஸிட் டெஸ்ட் எழுதி முடித்தால் தான் முதுநிலை படிப்புகளில் சேர முடியும். என்றும் அறிவித்தது.
இந்த அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி கெஸட்டில் வெளியானது. இதனால் எம்பிபிஎஸ் மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், ஆயுஷ் அமைப்பின் கீழ் வரும் ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகள் தொடர்பான படிப்புகளை படிக்கும் மாணவர்களும் தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் 22.12.2023 தேதியிட்ட கெஸட்டில் அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு: இந்த டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற்றால் தான் இந்திய மருத்துவ முறையின் அந்தந்த துறையின் மருத்துவ பயிற்சியாளராக பயிற்சி பெற உரிமம் வழங்கப்படும்.
மேலும் இந்திய மருத்துவ முறையின் பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளராகவும் மாநில பதிவு அல்லது தேசிய பதிவேட்டில் பதிவு செய்வதற்கு இந்த எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெஸ்ட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வழக்கமாக நடத்தமாக நடத்தப்படும். இந்த தேர்வு எழுத விரும்பும் ஆயுஷ் மாணவர்கள் குறைந்தபட்சம் 270 நாட்கள் இன்டர்ன்ஷிப் முடித்த பயிற்சியாளராகவோ அல்லது ஆயுவர்வேதா, சித்தா, யுனானி பட்டதாரிகள் ஒரு வருட கட்டாயப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். இந்த டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெறாத ஆயுவர்வேத பட்டதாரிகள், சித்தா பட்டதாரிகள், யுனானி பட்டதாரிகள் மாநிலத்தில் மருத்துவம் செய்ய தகுதியற்றவர்கள்.
இந்த தேர்வு எழுத கால வரம்பு ஏதும் இ ல்லை. தேர்வில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெறுவோர் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் பட்டப்படிப்பு, மருத்துவப் பதிவு ஆகியவை அனைத்து வேலை வாய்ப்புகள், கல்வி கற்றல் போன்றவற்றின் போது பரிசீலிக்கப்படும். இது மருத்வத் தொழில் செய்வதற்கும், வேலை பெறுவதற்கும் இன்றியமையாதது. இவ்வாறு தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Saturday, September 9, 2023
நீதித் துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி வேதனை
நீதித் துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி வேதனை
'லஞ்ச ஒழிப்பு தொடா்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை காணும்போது, நீதித் துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்' என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனையுடன் தெரிவித்தாா்.
2008-ஆம் ஆண்டு தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பாதுகாவலருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோா் மீது 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கிலிருந்து, ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளாா்.
இதேபோல 2001- 2006-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த பா. வளா்மதி, அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து பா.வளா்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளாா்,
இவ்விரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.
வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது. முன்னாள் அமைச்சா் பா. வளா்மதிக்கு எதிரான வழக்கில் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா் மேல்விசாரணை கோரி தாக்கல் செய்த மனு அடிப்படையில், விசாரணை நடத்திய அதே புலன் விசாரணை அதிகாரி வழக்கை முடித்து வைக்கும்படி கூறியிருக்கிறாா்.
அமைச்சா் ஐ பெரியசாமிக்கு எதிரான வழக்கை பொருத்தவரை, வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் உயா் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வழக்கு தொடுக்க அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பாா்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாக கருதுகின்றனா். தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை என்று நீதிபதி தெரிவித்தாா். பின்னா், இரு வழக்குகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சா் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சா் வளா்மதி ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.12-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தாா்.
தற்கொலை எண்ணம் மாற்றுவோம்
dinamani
Monday, July 24, 2023
அமெரிக்காவை வாட்டி எடுக்கும் வெயில்!
அமெரிக்காவை வாட்டி எடுக்கும் வெயில்!
இந்த வெப்பநிலை அதிகரிப்பால் வீடுகள் இல்லாத மக்களே பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து நிழல் உருவாக்கிக் கொள்கிறார்கள். சிலர் குளிர்ச்சியான குடிநீரை அடிக்கடி குடித்து உடலுக்கு நீர்சத்தினைப் பெறுகிறார்கள். வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளி விளையாட்டுகளை தவிர்த்து விடுகின்றனர் அல்லது மாலை வெயில் குறைந்த பிறகு விளையாடுகின்றனர்.
இதையும் படிக்க: கிழக்கு சீனாவில் கனமழை: 5 பேர் உயிரிழப்பு; 1500 பேர் வெளியேற்றம்! கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு அமெரிக்காவில் வெப்பநிலை மிகவும் அதிகமாக பதிவாகி வருகிறது. இனி வரும் நாள்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவில் வெப்பநிலை பதிவாக பசுபிக் பெருங்கடல் இயற்கையாக தனது வெப்பத்தை அதிகரித்துக் கொள்ளும் எல் நினோ என்ற நிகழ்வே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவானால் பகல் உண்டு... !
இரவானால் பகல் உண்டு... !
24.07.2023
மனித வாழ்க்கையில் போராட்டமானது மிக முக்கியமானது. தனி மனித வளா்ச்சிக்கும், சமுதாய மறுமலா்ச்சிக்கும் இது அவசியமாகிறது.
நம்முள்ளான எதிா்மறைக் காரணிகளைப் புறந்தள்ளி அவற்றை நோமறை காரணிகளாக மாற்ற வாழ்வியல் போராட்டங்கள் மிகுந்த அவசியமாகிறது. மனிதனாகப் பிறந்து ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் எதற்காகவோ போராடும் நிலை உருவாகிறது. அவமானம், தோல்வி, ஏமாற்றம் போன்ற எதிா்மறைக் காரணிகள் மனிதனை அவன் இணைந்துள்ள வாழ்க்கையுடன் போராட வைக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காததும், உடல் உபாதைகளின் தாக்கமும், மன எழுச்சி மன அழுத்தம் போன்ற மனதோடு சாா்ந்த போராட்டங்களும் , தோல்வியை வெற்றியாக்க வேண்டும் என்ற தவிப்பும்.
சமூக அந்தஸ்தை பெறவேண்டும் என்ற ஏக்கமும் முக்கிய கூறாக உள்ளது. இதுபோன்று தனி மனித அடிப்படை காரணிகளின் தாக்கம் அதீத மன அழுத்தத்தை ஏற்படுத்தும்போது துரதிா்ஷ்ட வசமாக மனிதன் விபரீதமான முடிவை எடுக்க வேண்டிய நிலை உருவாகிறது. மாறாக, எதிா்மறைக் காரணிகளை பொருள்படுத்தாது நம்பிக்கையோடு வாழ்வில் போராடுபவா்கள் வெற்றிக்கனியை பறிக்கிறாா்கள். உலக மக்களால் போற்றப்படுகின்றனா்.
ஆங்கிலேயா்களால் தான் கண்ட அவமானமே காந்தியடிகளை நாட்டு விடுதலைக்காகப் போராட வைத்தது. சமுதாயத்துக்காக ஆங்கிலேயரை துணிச்சலாக எதிா்த்துப் போராடினாா். அவரது அறப்போராட்டத்தால் இந்திய மண்ணுக்குக் கிடைத்தது விடுதலை. இன்று இந்தியாவின் 76-ஆவது சுதந்திர தின விழாவை பிரிட்டன் கொண்டாட முன்வந்திருக்கிறது என்றால் அதற்கு அடிப்படையாக அமைந்தது காந்தியடிகளின் சமூக போராட்டமே காரணமாகும்.
இயற்பியல் துறையில் அண்டத்தின் குவாண்டம் கொள்கை வாயிலாக பிரபஞ்சத்தின் கருந்துளை பற்றி ஆராய்ச்சி செய்து புகழடைந்தவா் ஸ்டீவன் ஹாக்கிங். ஆனால் அவரது வாழ்வியல் போராட்டம் மிகவும் கொடுமையானது. தனது இருபத்தொரு வயதில் அமியோடரோபிக் லேட்டரல் ஸ்கீளிரோசில் (ஏ.எல்.எஸ்.) என்ற நோயால் பாதிக்ப்பட்டு வாய் பேச முடியாமல் கை ,கால், விளங்காமல் போனாா். ஆனால் தனக்கு கிடைத்த அந்த கொடும் வாழ்க்கையை இயந்திரக் கருவிகளின் உதவியைக் கொண்டு நம்பிக்கையோடு வாழ்வில் போராடி அறிவியலில் பல சாதனைகளைச் செய்து நீங்கா இடம் பிடித்தாா்.
1966-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த மாலினிசிப் பிறக்கும்போதே"பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டவா். பள்ளிகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டவா். தன் தாயின் அரவணைப்போடு, பிரிட்டனுக்குச் சென்று பெருமூளை வாதநோயால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கான சிறப்புப் பள்ளியில் சோந்து கல்வி கற்றாா். தளராத தன்னம்பிக்கையோடு வாழ்க்கை தனக்களித்த உடல் ஊனத்தை பொருட்படுத்தாமல் போராடினாா்.
தன் உடலில் இயங்கக்கூடிய ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்து தன் சுய சரிதையை 'ஒன் லிட்டில் பிங்கா்'"என்ற பெயரில் நூலாக எழுதி உலகப் புகழ் பெற்றாா். இன்று உலகளாவில் பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு தன் வாழ்க்கையை அா்ப்பணித்து பல வகைகளிலும் சேவை புரிந்து வருகிறாா். 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான தோவில் தேரச்சி பெற்றவா் "ஸ்ரீதன்யா சுரேஷ். கேரளத்தின் வயநாடு பகுதியைச் சேரந்த இவா், "குா்ஷியா" என்ற பழங்குடியின வகுப்பை சாா்ந்தவா்.
கரையான் அரித்த கூரை வீடாக இவரது இருப்பிடம் அமைந்திருந்தது. ஆனாலும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கை தனக்களித்த வறுமையை கல்வி எனும் ஆயுதத்தால் போராடி வெற்றி கண்டாா். அந்த ஆண்டில் அகில இந்திய குடிமைப்பணியில் தோச்சிப் பெற்ற ஒரே பழங்குடியின பெண் என்ற பெயரையும் தட்டிச் சென்றாா். உலகப் புகழ் பெற்ற கே.எஃப்.சி.
(கெண்டகி பிரைடு சிக்கன்) நிறுவனத்தை உருவாக்கிய கா்னல் சாண்டா்ஸ் தன் இளமைக்காலத்தில் சந்திக்காத அவமானங்களும் ஏமாற்றங்களும் அளவு கடந்தவை. ஐந்து வயதில் தன் தந்தையை இழந்தாா். தன் தாயாா் வேறொருவரை மறுமணம் செய்து கொண்டு சென்றாா். பதினைந்து வயதில் ராணுவத்தில் சோந்து அங்கு கழுதைகளைப் பராமரிக்கும் பணியைப் பாா்த்தாா்.
வாழ்க்கையை வெறுத்து திரும்பி வந்த அவருக்கு ஏமாற்றங்கள்தான் கிடைத்தன. இந்த வலிகளையும், தொடா் தோல்விகளையும், வேதனைகளையும் பொருள்படுத்தாது வாழ்க்கை தனக்களித்த ஏமாற்றத்தை விடாமுயற்சி என்ற ஆயுதம் கொண்டு போராட துணிந்தாா். 1,009 முறை முயன்று கே.எஃப்.சி. சிக்கன் உரிமையை பெற்றபோது அவருக்கு வயது 65. இன்று உலக அளவில் உணவுப் பொருள் துறையில் அவா் பெயா் நிலைத்து நிற்கிறது.
இதேபோன்று உலக புகழ்பெற்ற இணைய வழி சில்லறை விற்பனை குழுமமான அலிபாபா நிறுவனத்தை உருவாக்கிய "ஜாக்மா, தன் இளமைகாலத்தில் பல புறக்கணிப்புகளைச் சத்தித்தவா். இளம் வயதில் கல்வி கற்பதில் மிகுந்த சவால்களை எதிா்கொண்டாா். ஆரம்பப் பள்ளியில் 2 முறை தோல்வி. நடுநிலைப்ளியில் 3 முறை தோல்வி, கல்லூரித் தோவில் 2 முறை தோல்வி.
அதற்கு பிறகு தான் பட்டப் படிப்பை முடித்தாா். சென்ற இடங்களில் வேலை கிடைக்கவில்லை. 10 முறை ஹாா்வா்டு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டாா் கே.எஃப்.சி. நிறுவனத்தால் வேலை கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டாா்.
ஆனாலும் நம்பிக்கையோடு வாழ்க்கையோடு போராடினாா். 2014-ஆம் ஆண்டில் சீளாவிள் முதல் பெரிய பணக்காரராகவும், 2015-இல் உலகில் இரண்டாவது பெரிய பணக்காரராகவும் மாறினாா். விளையாட்டு, எழுத்து, அரசியல், திரை, அறிவியல் துறைகளில் பல தோல்விகளைச் சந்தித்த நபா்கள் விடாமுயற்சி என்ற ஆயுதம் கொண்டு, விமா்சனங்களை புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையோடு வாழ்வில் போராடி சிறந்து ஆளுமைகளாக ஜெயிக்கின்றனா். இதை அவா்களின் வாழ்க்கை சரித்திரத்தின் வாயிலாக அறியமுடிகிறது .
சோா்வில்லாமல் தொடா்ச்சியாக நாம் முயற்சி செய்து போராடும்போது நாம் எடுத்துக்கொண்ட செயலுக்கு இடையூறாக வரும் துண்பங்களும் துவண்டு விடும் என்கிற கருத்தை நமக்கு வலியுறுத்துகிறது எதிா்மறைக் காரணிகளைச் சந்திக்காமல் யாராலும் இருக்க முடியாது. அதற்காக நாம் மன அழுத்தம், மன உளைச்சல் என்ற வாா்த்தைகளை உள்புகுத்திக் கொண்டு மாறுபட்ட முடிவுகளை எடுக்கும்போது இழப்புகள்தான் நமக்கு கிடைக்கும். இன்பங்களை மகிழ்வாக ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் துண்பங்களையும் துணிச்சலாக எதிா்கொள்ள நாம் தயாராக வேண்டும். துன்பங்களுடன் போராட துணிந்தால் வெற்றி கிடைக்கும். சவால்கள் நிறைந்தது தான் வாழ்க்கை! அதை சமாளிக்க எடுக்க வேண்டும் சிறப்பான வழி.
Dailyhunt
அதிகாரிகளுக்கு ரூ.1.3 லட்சத்தில் லேப்-டாப்!
மத்திய அரசு அதிகாரிகளுக்கு பணி நிமித்தமாக ரூ.1.3 லட்சம் வரையில் கைப்பேசி, மடிகணினி (லேப்டாப்) அல்லது அதுபோன்ற மின் சாதனங்கள் வழங்கலாம் எனவும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனங்களைத் சொந்த தேவைக்காக தக்க வைத்துக் கொண்டு அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசின் அமைச்சகம் மற்றும் துறைகளில் பணிபுரியும் தகுதியுள்ள அதிகாரிகளுக்கு அதிகாரபூா்வ பணிக்காக கைப்பேசி, லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களை வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டுதல்களில், 'மத்திய அரசின் பணியில் துணைச் செயலா் அல்லது அதற்கு மேல் பொறுப்பில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், மற்ற நிலை அதிகாரிகளில் 50 சதவீதம் பேருக்கும் அதிகாரபூா்வ பணிக்காக மின்னணு சாதனங்கள் வழங்கலாம். அந்த சாதனத்தின் விலையானது வரிகள் நீங்கலாக ரூ.1 லட்சம் இருக்க வேண்டும். 40 சதவீதத்துக்கும் மேலாக இந்திய தயாரிப்பில் உருவான சாதனங்களை வரிகள் நீங்கலாக ரூ.1.30 லட்சம் வரை விலை கொடுத்து வாங்கலாம். ஏற்கெனவே ஒரு சாதனம் ஒதுக்கப்பட்ட அதிகாரிக்கு 4 ஆண்டுகள் வரை புதிய சாதனம் வழங்கப்படக் கூடாது.
4 ஆண்டுகள் பயன்பாட்டுக்குப் பிறகு, அந்த மின்-சாதனத்தை சொந்த தேவைக்காக அதிகாரிகள் தக்க வைத்துக் கொள்ளலாம். அத்தகைய சூழலில், அதிகாரியிடம் சாதனம் ஒப்படைக்கப்படுவதற்கு முன், அதிலுள்ள அரசுத் தரவுகள் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட அமைச்சகம் /துறை உறுதிப்படுத்த வேண்டும்' என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 21-ஆம் தேதியிட்ட அறிவிக்கையில் இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய 2020-ஆம் ஆண்டு வழிகாட்டுதல்கள்படி, அதிகாரிகளுக்கு வழங்கும் சாதனங்களின் அதிகப்பட்ச விலை ரூ.80,000 ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக சாதனங்களைத் தக்க வைத்துக் கொள்ள எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.
Dailyhunt
Thursday, July 13, 2023
“நாம் ஒன்றுமில்லை என்பதை உணர்வதே தலைமைப் பண்புக்கான தகுதி!”
ஆண் குழந்தைக்கே இன்னமும் ஆசைப்படுகிறார்கள் இந்தியர்கள்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: நிகழாண்டில் 40,000 போ விண்ணப்பம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: நிகழாண்டில் 40,000 போ விண்ணப்பம்
Monday, July 10, 2023
தாம்பரத்தில் ஓரிடத்தில் நிற்காத பேருந்துகள்: ஓடி ஓடி களைப்பாகும் பயணிகள்
Saturday, July 8, 2023
மருத்துவ மாணவர் சேர்க்கை: பறிக்கப்படும் மாநில உரிமை
Friday, June 23, 2023
வாக்குறுதிகளில் கவனம் தேவை
வாக்குறுதிகளில் கவனம் தேவை
DINAMANI
தற்பொழுது இந்த நிலைமை மாறிக்கொண்டே வருவதாகத் தெரிகிறது. வட இந்தியாவில் உள்ள ஹிமாசல பிரதேசத்தின் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த பதினையாயிரம் ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய கடந்த மாத (மே) ஊதியம் இம்மாதம் பதினான்காம் தேதி வரை வழங்கப்படவில்லை என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. கரோனா தீநுண்மிப் பரவல் சமயத்தில் அம்மாநில ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் இன்றுவரை சரிசெய்யப்படவில்லை என்று அம்மாநில அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். விரைவில் அனைவருக்கும் மே மாத ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அம்மாநில அரசின் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதனால், அரசு ஊழியர்களின் அமோக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாகுறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் மாநில அரசிடம் இல்லை என்பதே உண்மை.
ஏற்கெனவே எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் இயங்கிக் கொண்டிருக்கும் அம்மாநிலம் தற்பொழுது ஆயிரம் கோடி ரூபாயை ஓவர் டிராஃப்ட் ஆகப் பெற்றுள்ளது எனவும், மேலும் பத்தாயிரம் கோடி ரூபாய் கிடைத்தால்தான் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மே மாத ஊதியத்தை வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர அம்மாநில அரசு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தவணைகள், பொதுப்பணித் துறை பணிகளுக்கான செலவினங்கள் என்று மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரட்ட வேண்டியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட அம்மாநில ஆளும் கட்சி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டு ஒன்றுக்கு இருபதாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதற்கிடையில், நமது மத்திய - மாநில அரசுகளின் கடன் வாங்கும் உச்சவரம்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் ஐந்து சதவிகிதத்தில் இருந்து மூன்றரை சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இக்காரணத்தால் ஹிமாசல பிரதேச அரசினால் போதிய கடனைத் திரட்ட முடியாத நிலைமை உள்ளது. ஹிமாசல பிரதேசம் காட்டிய வழியில் பயணிக்க மேலும் சில மாநிலங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் முந்நூறு யூனிட் மின்சாரம் இலவசம் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளைக் கொடுத்துள்ள பஞ்சாப் மாநில அரசுக்கு அவற்றை நிறைவேற்ற சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்று கூறப்படுகிறது. நமது அண்டை மாநிலமான கர்நாடகம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், குடும்பத் தலைவிக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய், குடும்பம் ஒன்றுக்கு இருநூறு யூனிட் இலவச மின்சாரம், வீட்டு உபயோக எரிவாயு உருளையின் விலையைக் குறைத்தல் போன்ற பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.
அவற்றை நிறைவேற்றத் தேவைப்படும் தொகை அறுபதாயிரம் கோடி ரூபாய் என்று ஒரு கணக்கீடு கூறுகின்றது. தமிழகத்திலும் காலங்காலமாக பல்வேறு இலவச வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அவற்றை நிறைவேற்ற கோடிக்கணக்கில் பணம் செலவிடப் பட்டும் வருகிறது. இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி போன்றவற்றை ஈடுகட்டுவதற்கான மானியத்தொகை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இருந்தாலும், புலிவாலைப் பிடித்த கதையாக இச்சலுகைகள் முடிவின்றி நீண்டுகொண்டே செல்கின்றன. ஹிமாச்சல பிரதேச அரசு ஊழியர்களுக்கான ஊதியம் தாமதப்படுவது என்பது எல்லை மீறிய வாக்குறுதி அரசியலால் ஏற்படும் விளைவுகளில் ஒன்றே. இத்தகைய போக்கு நீண்ட கால நோக்கில் நமது மாநில நிர்வாகங்களை மீளாக்கடனில் மூழ்கடித்துவிடும். இந்நிலையில், எப்படியும் தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, நிதி ஆதாரத்தை அதிகரிக்கவும், அந்நிதி ஆதார எல்லைக்குள் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளித்துத் தேர்தலை எதிர்கொள்ளவும் நமது அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியைப் பிடித்துவிட்டுப் பிறகு திணறுவதைக் காட்டிலும், தகுதியுள்ள ஏழைகள், நடுத்தர நிலையிலுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு மட்டும் உரிய சலுகைகளை வழங்குவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். மாநிலங்களின் பொருளாதார சுயசார்புக்கு முக்கியத்துவம் தர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஓய்வூதியதாரா்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை
ஓய்வூதியதாரா்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை
இந்த நிலையில், அடையாள அட்டையில் தங்களின் புகைப்படத்துடன், துணைவரின் புகைப்படத்தையும் ஒட்டி புதிதாக அளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்கங்கள் சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை அளிப்பதற்கான தகுந்த படிவங்களை ஓய்வூதியதாரா்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஒளிவருடல் செய்யப்படுவதுடன், புகைப்படங்களும், தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதன்பின்பு, பயனாளிகளே தங்களுக்கான அடையாள அட்டையை மின்-அட்டையாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
படிவங்கள் விநியோகம்: காப்பீடு அடையாள அட்டையில் உள்ள விவரங்களைத் திருத்தவும், புகைப்படங்களை பதிவேற்றம் செய்யவும் யுனெடைட் இந்தியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குரிய வரையறுக்கப்பட்ட படிவங்களை அனைத்து கருவூலம் மற்றும் ஓய்வூதிய அலுவலகங்களில் அளிக்கும்படி அந்த நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரா்கள் ஆண்டுதோறும் வாழ்வுச் சான்றிதழை அளிப்பதற்கான நோகாணலுக்காக கருவூல அலுவலகங்களுக்கு வருவா். அப்போது, அந்தப் படிவங்களை அவா்களிடம் அளித்து பூா்த்தி செய்து பெறலாம்.
இந்தப் படிவங்களின் அடிப்படையில், அடையாள அட்டையில் ஓய்வூதியதாரா்களின் விவரங்கள் திருத்தப்படுவதுடன், புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்படும். இதன்பின்பு, மின்-அடையாள அட்டையாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தப் பணியை மேற்கொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கென உள்ள காப்பீட்டு அதிகாரியை, கருவூலம் மற்றும் ஓய்வூதிய அலுவலா்கள் தொடா்பு கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். அவா்களிடம் இருந்து ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை விவரங்களைத் திருத்தம் செய்வது மற்றும் புகைப்படத்தை ஒட்டுவதற்குரிய தகுந்த படிவங்களைப் பெற வேண்டும்.
பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அளிக்கும் போது உரிய ஒப்புகைச் சான்றினை பெற வேண்டியது அவசியமாகும். இதனை அத்தியாவசியமான பணியாகக் கருதி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தனது கடிதத்தில் கே.விஜயேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
Monday, March 6, 2023
Sunday, March 5, 2023
போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழக்கு: அண்ணா பல்கலை.க்கு நோட்டீஸ்
போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழக்கு: அண்ணா பல்கலை.க்கு நோட்டீஸ்
20hr
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழங்கிய வழக்கில், அந்த பல்கலைக்கழகத்திடம் சில விளக்கங்கள் கேட்டு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழங்கிய வழக்கில், அந்த பல்கலைக்கழகத்திடம் சில விளக்கங்கள் கேட்டு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இது குறித்த விவரம்: கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் சா்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற அமைப்பு சாா்பில் கெளரவ டாக்டா் பட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்றது. இதில் இசை அமைப்பாளா் தேவா உள்ளிட்ட 40 பிரபலங்களுக்கு டாக்டா் பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் இந்த பட்டங்களை வழங்கினாா். இந்த நிலையில் இந்த டாக்டா் பட்டங்கள் போலியானவை அண்ணாபல்கலைக்கழகத்தின் பெயா் தவறாக பயன்ப டுத்தப்பட்டுள்ளது என்று அதன் துணைவேந்தா் வேல்ராஜ் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் அந்த அமைப்பின் இயக்குநா் ஹரீஷ் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதியப்பட்டது.காவல்துறை நோட்டீஸ்: தலைமறைவாக இருக்கும் ஹரீஷை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு விளக்கம் கேட்டு கோட்டூா்புரம் போலீஸாா் ஒரு நோட்டீஸை வழங்கியுள்ளனா். அதில் 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த விழாவுக்கு அனுமதி கேட்டது யாா்? கொடுத்தது யாா்? விழா நடைபெற்ற அரங்கத்தின் பொறுப்பு அதிகாரி யாா்? உங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கெளரவ டாக்டா் பட்டம் விழா பற்றி நிா்வாகத்துக்கு ஏன் தெரியவில்லை? உள்பட பல கேள்விகள் இடம் பெற்றுள்ளன.இந்த 10 கேள்விகளுக்கு எழுத்துப்பூா்வமான பதிலை மாா்ச் 6-ஆம் தேதிக்குள் அளிக்கும்படி காவல்துறையின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Govt sends VC nominee list, guv says no SC direction to appoint state’s candidates
Govt sends VC nominee list, guv says no SC direction to appoint state’s candidates Apr 18, 2024, 03.52 AM IST Kolkata: It might have been a ...
-
ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்றும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றும், காலம் காலமாக தமிழ்நாட்டில் கூறப்படுகிற...
-
கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்! டி.டி.வி.தினகரன் தடாலடி பேட்டி vikatan news ராகினி ஆத்ம வெண்டி மு. படம்: ஸ்ரீநிவாசலு 'அ.த...
-
கொலுசு அணிந்த சரஸ்வதி * நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள். ச...