தவறு எது?
1 : பேசுவது தவறல்ல, தேவையற்றதைப் பேசுவது மிகவும் தவறு..!
2 : ஆசைப்படுவது தவறல்ல, பேராசை கொள்வது பெரும் தவறு....!!
3 : கோபம் கொள்வது தவறல்ல, நியாயமற்றக் கோபம் மாபெரும் தவறு...!!
4 : அறியாமை தவறல்ல, அறிந்துக் கொள்ள முயலாமை முற்றிலும் தவறு...!!
5 : வீழ்வது தவறல்ல, எழ முயற்சி செய்யாமல் வீழ்ந்தே கிடப்பது தவறிலும் தவறு...!!
6 : தவறிச் செய்வது தவறு. தவறு எனத் தெரிந்தப் பின் திருத்திக் கொள்ளாதது மாபெரும் தவறு...!!
7 : நாம் செய்யும் தவறை நம்மைச் சார்ந்தோர் சொல்வதைக் கேட்காமல் அவர்களையே (நீங்கள் யார் என்னைக் கேட்க) என்பது மிகப் பெரிய தவறு...!!
8 : நம் தவறை நம் குடும்பத்தார் அம்மா அப்பா சகோதரன் சகோதரி கணவன் மனைவி பிள்ளைகள் நண்பர்கள் எடுத்து உரைத்தால் ஏற்றுக் கொண்டு திருத்திக் கொண்டால் நமக்குத் தான் நன்மை...!!
No comments:
Post a Comment