Sunday, May 31, 2015

ரூ.55 கோடி மின்சார கட்டணம்: அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்!


ராஞ்சி: ஜார்க்கண்ட் மின்சார வாரியம் ஒருவருக்கு ரூ.55 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதை அறிந்த அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத். இவர் தனது குடும்பத்துடன் திருமண விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது, அவருக்கு ஷாக் அடிக்கும் செய்தி ஒன்று காத்திருந்தது. அது, ரூ.55 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரிய அலுவலகத்திலிருந்து அவருக்கு பில் அனுப்பப்பட்டது. அதை கேள்விப்பட்டதும் கிருஷ்ண பிரசாத்தின் தாயாருக்கு உடல் நலம் பாதிக்க சிகிச்சைக்காக உடனே மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்.

ராஞ்சியில் உள்ள கத்ரு பகுதியில், இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டில் பிரசாத் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். அங்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையிலும், அவர் வீட்டில் ஏ.சி.யைக்கூட பயன்படுத்தியதே இல்லை. அதுமட்டுமின்றி அங்கு 7 முதல் 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறதாம். இந்த நிலையில், அவரது வீட்டிற்கு ரூ.55 கோடிக்கு மின்சார பில் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து கிருஷ்ண பிரசாத் கூறுகையில், ''இதனால் என்னுடைய தாயாரின் உயிருக்குகூட ஆபத்து வரலாம். தவறு செய்தவர்களை நான் நீதிமன்றத்திற்கு இழுப்பேன். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்" என்றார்.

இச்சம்பவத்தை அடுத்து ஜார்க்கண்ட் மின்சார வாரியம், இரண்டு ஊழியர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், கிளரிக்கல் தவறு காரணமாக இது நடைபெற்று உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், இது தொடர்பாக மின்வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க நுழைவுக் கட்டணம் உயர்கிறது

ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை சுற்றிப் பார்ப்பதற்கான நுழைவுக் கட்டணத் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்த மத்திய சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.

தற்போது இந்தியர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.20ம், வெளிநாட்டினருக்கு ரூ.750ம் வசூலிக்கப்படுகிறது.

இதனை முறையே ரூ.40ம், ரூ.1,250ம் என உயர்த்த மத்திய சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த மாதத்திலேயே கூட அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடம் மாறி பல ஊர்களை சுற்றிய ஆம்னி பஸ்:பயணிகள் எரிச்சலால் டிரைவர் 'எஸ்கேப்'

திருப்பூர்:சென்னையில் இருந்து கோவை செல்ல வேண்டிய ஆம்னி பஸ், நான்கு மணி நேரம் தாமதமாக, பல ஊர்களை சுற்றி, தேவையில்லாமல், திருப்பூர் சென்றதால், பயணிகள் எரிச்சல் அடைந்து, பஸ்சை சிறைபிடித்தனர். இதனால், பஸ்சை அப்படியே விட்டு விட்டு, டிரைவர் ஓட்டம் பிடித்தார்.சென்னை, கோயம்பேட்டில் இருந்து கோவைக்கு, நேற்று முன்தினம் இரவு, ஆம்னி பஸ் புறப்பட்டது. சென்னையிலேயே, இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

டவுன் பஸ்சா இருக்குமோ?மேலும், பஸ், பைபாஸ் ரோட்டில் வராமல், பல ஊர்களை சுற்றிக்கொண்டு, நேற்று காலை, 10:00 மணிக்கு, திருப்பூர் வந்தது.

ஈரோட்டில் இருந்து அவினாசி வழியாக, நேராக, கோவைக்கு செல்ல வேண்டிய பஸ், தேவையில்லாமல், திருப்பூர் நகருக்குள் நுழைந்ததால், பயணிகள்

ஆத்திரம் அடைந்தனர்.பயணிகள், டிரைவருடன் வாக்குவாதம் செய்தனர். அதிர்ச்சி அடைந்த டிரைவர், பஸ்சை, அறிவொளி ரோடு அருகே நிறுத்திவிட்டு, கூலாக இறங்கிச்

சென்றுவிட்டார்.பஸ்சில், அவர் ஒருவர் தவிர, வேறு ஊழியர் இல்லை. பஸ்சை சிறைபிடித்து, பயணிகள் போராட்டம் நடத்தினர். தெற்கு போக்குவரத்து போலீசார், ஓட்டம் பிடித்த டிரைவரை கண்டுபிடித்து, அழைத்து வந்தனர். பஸ், தெற்கு போலீஸ்

ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. நீண்ட நேரம் கழித்து, போலீசார் சமாதானம் செய்து, பஸ்சை அனுப்பினர்.




சரமாரி குற்றச்சாட்டு:

பயணிகள் கூறியதாவது:l நாங்கள் அனைவருமே, வெவ்வேறு நிறுவனங்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள். ஆனால், 30 பேரையும் ஒருங்கிணைத்து, இந்த பஸ்சில் அனுப்பினர்.

l 'புக்கிங்' செய்த பஸ்சில், எங்களை அனுமதிக்கவில்லை. 1,000 ரூபாய் டிக்கெட், ஸ்லீப்பர், செமி ஸ்லீப்பர், 'ஏசி' என, பல விதங்களில், கதைவிட்டு, எங்களை ஏமாற்றி உள்ளனர்.

l காலை, 6:30 மணிக்கு, கோவை வர வேண்டிய பஸ், டவுன் பஸ் போல், பல ஊர்களை

சுற்றிவிட்டு, திருப்பூர் வந்தது.

l சென்னையில் இருந்து, இரவு முழுவதும், ஒரே டிரைவர், உதவியாளர் கூட இல்லாமல், பஸ்சை ஓட்டி வந்தார். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் பயணித்தோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.




நடவடிக்கை பாயுமா?

ஆம்னி பஸ்கள், விதம் விதமாக, பயணிகளை ஏமாற்றுகின்றன. இது, அரசுக்கு தெரியாத விஷயமாக இருக்க முடியாது.

பல நிறுவனங்களில் பதிவு செய்தவர்களை, ஒரு பஸ்சில்

அனுப்பியது, எந்த வகையில் நியாயம்?

அதிலும், மாற்று டிரைவர், உதவியாளர் என, யாருமே

இல்லாமல், டிரைவரை மட்டும் அனுப்பியது எப்படி?

குறிப்பிட்ட பஸ் நிறுவனத்திடம், அரசு விசாரணை நடத்தி,

இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாதபடி தடுக்க வேண்டும்.

Coming, Passport Service at Your Nearest post office

CHENNAI: Soon you can fill up your passport applications online at the nearest post office after paying a nominal fee. India Post and the Ministry of External Affairs are in discussions to offer one-stop passport solutions at post offices across the country soon, said Merwin Alexander, Post Master General of Chennai City region.

Once the proposal is cleared, passport applicants who are not computer literate can visit the post office and get their applications filled online rather than approaching an agent. “People who are not computer literate are dependent on agents who demand money for filling up the applications. Now they can walk into a post office and the online applications would be filled by the postal clerk,” said Alexander.

He, however, refused to fix any time frame for the service to be launched. It is learnt that it would be launched across the country once India Post gets a unique log-in ID and password. “We want a one-time unique log-in and password rather than logging in every time. We are negotiating this with the Ministry of External Affairs,” Alexander said.

Further, India Post is working on a mechanism to regulate the fee structure to be charged from the applicants for filling the form. “It should be remunerative. We are also working on a mechanism where the system of bank challans could be done away with. It could be paid online from the post office. We want to make the post office a one-stop solution for passports,” he added.

Hemiparesis-hit man seeks extra time for exam

Chennai, May 30 (PTI) A man suffering from an orthopaedic disability has moved the Madras High Court seeking allotment of additional time for him to write an examination for Tamil Nadu government's Group-I services.

An M.Sc graduate, R Ramesh of Thirumangalam here, who is afflicted with left hemiparesis (muscle weakness), has applied for Group-I services examination conducted by Tamil Nadu Public Service Commission (TNPSC). He had cleared the preliminary and is set to appear for the final exam to be held from June 5 to 7.

He submitted that he could not complete the written examination -- six papers -- within the stipulated three hours each as a normal person.

Citing a September 29, 1993 order of the state government, Ramesh said it provided for extra time upto 50 per cent of the exam duration or a maximum of one hour to physically handicapped persons.

On April 10 last, he sent a representation to authorities requesting 50 per cent additional examination time for him for the coming examinations but there was no response to it.

Hence, he has approached the court to give a direction to TNPSC to allot him extra time.

1,183 ragging cases, 66 FIRs in two years

NEW DELHI: Of 1,183 cases of ragging reported to the University Grants Commission (UGC) from universities and colleges in 2013 and 2014 from across the country, the police filed an FIR in 66 cases. The highest number of cases were reported from Uttar Pradesh for three years in a row, from 2012 to 2014.

In the absence of more detailed data on the complaints it was not possible to determine if UP has the highest number because of greater prevalence of ragging or being the most populous state, it has a larger student population compared to other states.

In 2013, the highest number of complaints were from Biju Patnaik University in Odisha and Maulana Azad National Institute of Technology in Bhopal, Madhya Pradesh. In 2014 the highest number of complaints were from Aryabhatta Knowledge University and Gaya College of Engineering, both in Patna, Bihar.

The data on ragging was revealed in a reply given by UGC to an RTI application filed by a student of the School of Law in KIIT University, Odisha, Rohit Kumar. "I had sought the information in December 2014 and I got a response only in May 2015. Such delay in replying is a contravention of the RTI law. I had applied through the online RTI portal on December 12 through email but the UGC office claims that it received my application only on April 30, 2015. Is an email delivered in 5 months?" asked Rohit.

According to the RTI reply, UGC received 640 complaints in 2013 and 543 in 2014 and an FIR was filed in nine cases in 2013 and in 57 cases in 2014. Rajendra Kachroo, father of ragging victim Aman Kachroo felt it was not necessary to file an FIR in all cases. "If the university authorities can resolve the matter by punishing the guilty students with suspension or such measures, that is good enough. An FIR will just mean that the matter drags on. But in the small percentage of cases that are not settled, the UGC ought to intervene and exercise its authority over the colleges, which it does not do," said Kachroo. He added that a large number of complaints coming in from UP and Bihar could be because there was a lot of violence and lawlessness in the colleges.

A TOI report in September 2014 based on data from the National Anti-Ragging Helpline (1800-180-522) revealed that between June 2009 and September 4, 2014, there were 509 complaints of ragging from Uttar Pradesh, the highest, followed by West Bengal with 341 complaints. Other states with high number of complaints in the same period included Orissa (266), Madhya Pradesh (263), Maharashtra (150), Tamil Nadu (143), Rajasthan (142) and Bihar (132). Delhi had reported only 57 cases.

"The worst scenario is in the medical colleges. Despite there being just about 400 colleges, they are not able to stop ragging in these institutions. The Medical Council of India which regulates medical colleges has no interest in the issue and has done nothing about this problem so far," said Kachroo.

விடாமல் அழுதது குழந்தை 'கட்' ஆனது விமான பயணம்

ஒட்டாவா:கனடாவைச் சேர்ந்த, பிரபல பாடகரும், பாடலாசிரியருமான சாரா பிளாக்வுட்டின், 2 வயது குழந்தை, விமானத்தில் தொடர்ந்து அழுததால், யுனெடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து, அவர் குழந்தையுடன் இறக்கி விடப்பட்டார். சான் பிரான்சிஸ்கோவில் நடந்த இந்த சம்பவம், அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாரா பிளாக்வுட்டின், 'வாக் ஆப் தி எர்த்' சர்வதேச அளவில், புகழ்பெற்ற ஆல்பம். இப்போது, ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் சாரா, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வான்கூவருக்கு போக, தன் ௨ வயது மகன் ஜியார்ஜியோவுடன் யுனெடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி உட்கார்ந்தார்.உடனே அழ ஆரம்பித்த ஜியார்ஜியோ, அழுகையை நிறுத்துவதாய் தெரியவில்லை, இதனால், எரிச்சலடைந்த ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமான ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த விமானத்தை, பாதுகாப்பு காரணங்களுக்காக என சொல்லி நிறுத்தினர்.

அடுத்து, சாராவை அவரது மகனோடு சேர்த்து விமானத்திலிருந்து இறக்கி விட்டனர். அந்த சமயத்தில், ஜியார்ஜியோ துாங்கி விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், விமானம் மீண்டும் கிளம்ப 75 நிமிடங்கள் தாமதமானது. இதை, சாரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, 'விமானங்கள் தாய்மார்களை வெறுக்கின்றன' என, குற்றம்சாட்டியிருந்தார். சக பயணிகளும், விமான நிறுவனத்தின் செயலை கண்டித்து கருத்து தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவத்தால், சாராவின் ரசிகர்கள் கொதித்துப் போய், விமான நிறுவனத்தை திட்டி தீர்க்கின்றனர்.

அரசு ஊழியர் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை அறிமுகம்

சென்னை:அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற, புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.பாஸ்போர்ட் மண்டல அலுவலக அறிக்கை:பொதுத் துறை மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பாஸ்போர்ட் பெற, அரசின் தடையின்மை சான்றிதழை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.ஆனால், சில அரசு அலுவலகங்களில், தடையின்மை சான்று பெற, நீண்ட தாமதம் ஏற்படுகிறது. இதனால், ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் நெருக்கடி நிலவுகிறது.

இதை கருத்தில் கொண்டு, 'அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற, தடையின்மை சான்றிதழ் தேவையில்லை' என, வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இதற்கு மாற்றாக, தடையின்மை சான்று வழங்கும் அதிகாரியின் முகவரிக்கு, பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது குறித்து, படிவம், '௪' மூலம் முன்னறிவிப்பு செய்ய வேண்டும்.

அதன் நகலை, பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தால், போலீஸ் அறிக்கை பெற்று, பாஸ்போர்ட் வழங்கப்படும். ஊழியர் அளிக்கும் முன்னறிவிப்பு பற்றி, அரசு அதிகாரிக்கு ஆட்சேபனை இருந்தால், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு, நேரில் சென்று தெரிவிக்கலாம்.பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். இதற்குரிய படிவங்களை, பாஸ்போர்ட் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிக்கு சிக்கல் இல்லை:காலி பணியிடங்களை நிரப்புவதில் ஆர்வம்

மருத்துவ கல்லுாரிகளை மூடும் முடிவை கைவிட்ட, இ.எஸ்.ஐ., நிர்வாகம், மாணவர் சேர்க்கை நடத்த வசதியாக, கல்லுாரிகளில் காலியாக உள்ள, பேராசிரியர் பணியிடங்களை நிரப்புகிறது.தமிழகத்தில், சென்னை, கோவை உட்பட, நாடு முழுவதும், 13 இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. நிதிச்சுமையால் திணறிய, இ.எஸ்.ஐ., நிர்வாகம், மாணவர் சேர்க்கை நிறுத்தி விட்டு, கல்லுாரிகளை மூடும் முடிவுக்கு வந்தது.


மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கல்லுாரிகளை மூடும் முடிவை கைவிட்டதோடு, 'நடப்பு ஆண்டில் வழக்கம் போல் மாணவர் சேர்க்கப்படுவர்' என, அறிவித்தது. ஆனால், 'தொழிலாளர்களின் மருத்துவ சேவைக்காக துவக்கப்பட்ட, இ.எஸ்.ஐ., நிர்வாகம், சேவையில் கவனம் செலுத்த வேண்டும்; கல்லுாரிகளை செயல்படுத்தி, மீண்டும் ஒரு தவறை செய்யக்கூடாது' என, இ.எஸ்.ஐ., சந்தாதாரர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

'மாணவர் சேர்க்கை நடந்தாலும், நீதிமன்ற தீர்ப்பு உட்பட்டது' என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதனால், மாணவர்களிடம், குழப்பம் ஏற்பட்டது.இந்நிலையில், 'எந்த சிக்கலும் இன்றி, மாணவர் சேர்க்கை நடக்கும்' என, இ.எஸ்.ஐ., இயக்குனரகம் அறிவித்துள்ளது.

கல்லுாரிகள் மூடும் முடிவால், காலியாக இருந்த பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் இருந்த நிர்வாகம், தற்போது, அவற்றை நிரப்பும் முயற்சியில் இறங்கி உள்ளது.சென்னை, கே.கே.நகர் - 25 பேர்; மேற்கு வங்கம் - 30 பேர்; கர்நாடகா, குல்பர்கா - 27; கர்நாடகா, பெங்களூரு - 13 பேர் என, நான்கு மருத்துவக்கல்லுாரிகளிலும், பேராசிரியர், இணை பேராசிரியர், துணை பேராசிரியர் என, மொத்தம், 95 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.'இந்த இடங்களில் பணியாற்ற, ஜூன், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, இ.எஸ்.ஐ., இயக்குனரகம் அறிவித்துள்ளது.- நமது நிருபர் -

'புளூடூத்' வசதியுடைய குடை:கேரளாவில் விற்பனை ஜோர்

கோட்டயம்:மொபைல் போனில் பேசுவதற்கும், பாடல்கள் கேட்பதற்கும் வசதியான நவீன குடைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.

கேரளாவில், பருவமழை காலங்களில், பெரும்பாலான நாட்கள், பலத்த மழை பெய்யும். அதனால், இங்குள்ள வீடுகளில், ஐந்து உறுப்பினர்கள் இருந்தால், கண்டிப்பாக ஐந்து குடைகள் இருக்கும். கேரளாவுக்கும், டீக்கடைக்கும் உள்ள தொடர்பு போல், குடைகளுக்கும் அதுபோன்ற தொடர்பு உண்டு.

கேரளாவில் வசிப்பவர்களை பற்றி கார்டூன் போட்டால், கண்டிப்பாக அந்த கார்டூனில் இருப்பவரின் ஒரு கையில் மலையாள நாளிதழும், மற்றொரு கையில் குடையும் இருக்கும். அந்த அளவுக்கு கேரள மக்களுடன், குடை கலாசாரம் பின்னிபிணைந்துள்ளது. இதை பயன்படுத்தி, கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான குடைகள் விற்பனையாகின்றன. 'மழ மழ, குட குட; மழை வந்தால் குட குட' என்ற விளம்பர பாடல் கேரளாவில் மிகவும் பிரபலம். இந்தாண்டு குடை விற்பனையில், நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள குடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த குடைகள், 'புளூடூத்' அல்லது 'வை - பை' வசதியுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மழை பெய்யும்போது, இந்த குடையுடன் சென்றால், பாக்கெட்டில் இருக்கும் மொபைல் போனில் உள்ள, 'புளூடூத்' தொழில்நுட்பத்தை குடையில் உள்ள, 'புளூடூத்' உடன் இணைப்பை ஏற்படுத்தலாம். இதன்மூலம், பாக்கெட்டில் இருந்து மொபைல் போனை வெளியில் எடுக்காமலேயே, மற்றவர்களை போன் மூலம் தொடர்பு கொள்ளவும், அதில் உள்ள இசையை கேட்டு ரசிக்கவும் முடியும். இந்த நவீன குடைகள் விற்பனை, கேரளாவில் தற்போது சக்கை போடு போடுகிறது.

Saving grace: 18 grace marks saved 1 lakh Gujarat HSC students

AHMEDABAD: On Saturday, a record low of 54.98% students passed the HSC (general) stream exams held by Gujarat Secondary and Higher Secondary Education Board. This is the lowest pass percentage since 1991.

Sources say the result was a dismal 37% and it took the unprecedented decision of allowing up to 18 grace marks to bring the result close to 55% — substantially down from 63.3% last year. Incidentally, last year's results were low compared to previous years.

A senior board official said if not for the high grace marks, a lakh-odd more students would have failed the exam. "Board rules allow only five grace marks. Special sanction was sought from the education department to give up to 18 marks. If not for this, nearly one lakh students would have failed, creating a survival issue for 700-odd colleges," the official said.

Board officials may now seek approval for giving up to 20 grace marks for the soon-to-be-announced SSC results. Sources said CCTV and tablet surveillance in exam centres and strict screening may have led to a poor pass percentage in SSC as well.

GSHSEB chairman A J Shah could not be contacted for comment. Education minister Bhupendrasinh Chudasama said, "Low result can be mainly attributed to strict electronic surveillance that curbed copying."

Ex-Singapore foreign minister to be Nalanda University chancellor

NEW DELHI: Former foreign minister of Singapore George Yeo will replace Amartya Sen as the next chancellor of Nalanda University. Sen quit in a huff earlier this year, blaming it on the delay in approval to his second stint.

"George Yeo, former FM of Singapore is to be the new Chancellor of Nalanda University," external affairs ministry spokesperson Vikas Swarup said.

Yeo's appointment is significant in several ways — it maintains Nalada's importance as an international university. Yeo has been the driving force of the whole project since its inception and it's a fitting recognition of his contribution.

More important though, the Indian government wants a pair of hands at the helm of the university that can bring efficiency to the project. The MEA has been frustrated at the delay in the project and in 2013 appointed an official to maintain oversight of the project.

READ ALSO: Modi govt does not want me to continue as Nalanda University chancellor, Amartya Sen says

Amartya Sen: I believe the President wasn't given permission to clear my second term

The university is likely to appoint a governing board as well, something it has not done for years, in violation of the Nalanda Act. This might even involve a change in the academic leadership of the university, including the vice chancellor.

Yeo (60), who was conferred Padma Bhushan in 2012, is currently serving as a member of the governing board of the prestigious university.

Sen had withdrawn his candidature as chancellor, saying the Modi government does not want him to continue, a contention which was rejected by the Centre.

Mooted in 2005, the university is being built near the ruins of the historic academic place in Bihar with a number of member-countries of East Asia Summit grouping involved in the project. The Nalanda University Act was enacted in 2010.

Saturday, May 30, 2015

சாவித்ரி- 4. பாசமலர்



‘கை வீசம்மா கை வீசு’ என்று பிஞ்சுகளிடம் கொஞ்சத் தொடங்கினால், நம் ஒவ்வொருவரின் மனத்திலும் ’பாசமலர்’ பூத்துக் குலுங்கி மணம் வீசும். எத்தனை யுகங்கள் கடந்தாலும் திரை இசைத் தாலாட்டுப் பாடல்களில் ‘மலர்ந்தும் மலராத’ தேன் மழையாகப் பொழியும். ’பாசமலர்’ கண்ணதாசன் சூட்டிய காவியப் பெயர்!

பாசமலர் க்ளைமாக்ஸ். கருப்பு வண்ணச் சேலையில் கவலை ரேகைகள் வழியும் சோகம் விழுங்கிய முகத்தில், அரிதாரப் பூச்சு அதிகமின்றி சாவித்ரி செட்டுக்குள் வந்தார். ஏதோ இழவு வீட்டுக்குள் நுழைவது மாதிரியான தோற்றம். குறும்பு கொப்பளிக்க உலா வரும் ஜெமினியும் சும்மா எட்டிப் பார்த்து விட்டு ஓடிப் போனார்.

இறப்பதற்குத் தயாராக சிவாஜி தனது கடைசி வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார். நடிப்புக்காகப் பெற்ற ஆசிய விருதைக் கடந்து, உலகக் கலைஞனாகும் கனவுகள் அவருக்குள் கனல் விரித்து எரிமலையை ஏற்படுத்தின. வடலூரில் வள்ளலார் தீ மூட்டிய அனையாத அடுப்பு எரிவது போல், எப்போதும் அனல் காற்று வீசிக்கொண்டிருந்தது அவர் உள்ளத்தில்.

சிற்றுண்டி, மதிய உணவு இரண்டையும் தவிர்த்து அன்றைக்குப் பட்டினி. வழக்கமான நட்சத்திர தடபுடல், ஆமாம் சாமிகள், ஜால்ரா கூட்டம் அருகில் வர அனுமதியில்லை. சிவாஜி பிலிம்ஸ் காசோலையில் கையெழுத்து என அலுவலகப் பணிக்கும் கூட 144. வான் மழை போல் சகோதர வேதனையைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்கிற முடிவோடு சிவாஜியும் சாவித்ரியும் கிளிசரினை மறுத்தார்கள். ஒப்பற்ற நடிப்பின் பல்கலைக்கழகங்களுக்கு ஓத்திகையா?

ரெடி டேக் ஆக்ஷன். விட்டல்ராவின் காமிரா ஓடியது. அண்ணன் பார்வை இழந்து நிற்கும் பரிதாபத்தைக் கண்டு தங்கை கதறுகிறாள்.

‘நீங்கள் மவுனமா இருந்தாலும் ஆயிரமாயிரம் அன்புக் கதைகளை எனக்குச் சொல்லுமே- அந்தக் கண்கள் எங்கே அண்ணா? வைரம் போல் ஜொலிச்சி வைரிகளையும் வசீகரிக்கக் கூடிய உங்க அழகான கண்கள் எங்கே அண்ணா?’

உணர்ச்சி வசப்பட்ட உச்சக்கட்ட நடிப்பில் சாவித்ரிக்கு வைரி என்கிற அவ்வளவு அறிமுகமில்லாத வார்த்தை ஞாபகமில்லை. விரோதி என மாற்றிச் சொல்லி விட்டார்.

’வைரி, விரோதி இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். பின்னே என்னா அம்மாடி. பீம்பாய் பர்பாமன்ஸ் ஓகேயா?’ உயிர் உருகும் நேரத்திலும் ராஜசேகரன் மெல்லிய வறட்சியான குரலில் ராதாவுக்காகப் பரிந்து பேசினார்.

சாவித்ரி ஒப்புக் கொள்ளவில்லை. ‘இல்லே இந்தத் தடவை சரியா சொல்றேன். அது நல்ல டயலாக். ஒன்மோர் டேக் ப்ளீஸ்’ எனக் கெஞ்சும் குரலில் வற்புறுத்த,

வைரி மிகச் சரியாக ஒலித்தது. ஆனால் முந்தைய டேக்கில் பொங்கிய அணை மீறிய உணர்ச்சி வெள்ளம் காணாமல் போய் விட்டது. ‘முதல் ஷாட்டையே வெச்சுக்கலாம் அம்மாடி’ என ஆறுதலாக சிவாஜி சொல்ல, சாவித்ரி கூனிக் குறுகிப்போய், தன் இரு கைகளாலும் முகம் பொத்தி நிஜமாகவே அழுதார்.

‘திரைப்பட வசனகர்த்தாவாக- எனது நீண்ட நெடிய அனுபவத்தில் - எத்தனையோ படங்களுக்கு எழுதி, எண்ணற்ற நடிகர் நடிகைகள் நடித்ததில், வசனத்தில் ஒரே ஒரு வார்த்தை தன்னை அறியாமல் மாறிப் போனதற்காக வருந்திக் கண்ணீர் விட்டு அழுத ஒரே ஒரு நடிகை சாவித்ரி மட்டுமே.’- ஆரூர்தாஸ்.

32 வாரங்களைக் கடந்து ஓடியது பாசமலர். 1961 கோடையில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் 2015ல் இன்னமும் மங்காமல் சின்னத் திரைகளிலும் வியாபித்து நிற்கிறது. வருடம் தவறாமல் அனைத்து சேனல்களிலும் நூறு தடவைகளாவது சலிக்காமல் வாசம் பரப்புகிறது!
அந்த நாளும் வந்தது...

பாசமலர் கடைசி நாள் படப்பிடிப்பு தயாராயிற்று. அதில் நான் இறந்து போவதாகவும் என் மீது மலர்களைத் தூவுவது போலவும் காட்சியை எடுக்க வேண்டும். செட்டில் அன்று யாருமே பேசவில்லை. ஊசி போட்டால் சத்தம் கேட்கும். அவ்வளவு அமைதி! லைட் பாய்ஸ் கூட வாய் திறக்காமல் நடந்து கொண்டனர். காபி தரும் வரும் பையன்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தார்கள். மேலேயிருந்து என் மீது மலர்களைப் போடுபவர்கள் அழுதவாறே தூவினார்கள்!

அதனுடைய சோக முடிவு என்னை உலுக்கி விட்டது. அது ரீலீஸ் ஆன போது நான் சென்னையில் இல்லை. காஷ்மீரில் இருந்தேன். தேனிலவு ஷூட்டிங்கிற்காக ஜெமினியுடன் நானும் சென்றேன். மே 11ஆம் தேதியே நாங்கள் போய் விட்டோம். பாசமலர் அபாரமான வெற்றி அடைந்திருப்பதாக எனக்குத் தயாரிப்பாளர் தந்தி கொடுத்திருந்தார்.

மலர்கள் மணம் வீசிய பிறகு வாடி மறைந்து விடுவது வாடிக்கை. பாசமலர் அப்படியல்ல. நாள் ஆக ஆக அதற்கு வாசம் அதிகம். உங்கள் உள்ளங்களில் நான் என்றென்றும் ஒரு பாசமலராகவே இருந்து மனம் பரப்பிக் கொண்டிருக்க வேண்டும். அதுவே என் ஆசை.’- சாவித்ரி.

‘அண்ணனுக்கு ஏற்ற தங்கை. சிவாஜிக்கு ஏற்ற சாவித்ரி.’ ‘’ராதா’ பாகத்தைச் சொந்த பாணியிலேயே முழுக்க முழுக்கக் கையாண்டிருப்பது திருமதி கணேஷிற்கு ஒரு சிறப்பு.

‘உங்கள் காலில் என் அண்ணா விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் என்னை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால், உங்கள் காதல் எனக்குத் தேவை இல்லை...’ என்று உதறும் இடத்தில், தியாகத்தின் கம்பீரமும் தோல்வியின் சோகமும் நம் உள்ளத்தை அள்ளுவதில் வியப்பென்ன...!’ என சாவித்ரியின் நடிப்பைப் புகழ்ந்து தள்ளியது குமுதம்.

பூனைக்கு நாமே மணி கட்டுவோமே...!

vikatan.com



சென்னைப் பெருநகர வீதிகளில் அலுவல் நிமித்தம் சுற்றித்திரிந்தபோது, என் கண்ணில் கண்ட காட்சி, அதன் அசுர வளர்ச்சியோ, விண்ணை முட்டும் கட்டிடங்களோ, வீதிகளில் உலா வரும் ஆடம்பர கார்களோ, நவநாகரீக மங்கைகளோ, கொட்டி இரைத்த செல்வச் செழிப்புகளோ, ஓடி ஓடி உழைக்கும் மனிதர்களோ அல்ல!
என்னை சொல்லொண்ணா வருத்தத்தில் ஆழ்த்தியது - அங்கு குவிந்து இருக்கும் குப்பைகளும், படிந்து இருக்கும் தூசிகளும், அசுத்தமான ரோடுகளும், பார்க்கக்கூட சகிக்காத வியாபாரத்தலங்களும், அதையெல்லாம்விட, இதற்கும் நமக்கும் துளிகூட சம்பந்தமே இல்லையென்று மனித உருவில் நடமாடும் நம் ஜனங்களும்!

இது சென்னைக்கு மட்டுமானது அன்று. தமிழகத்தின் எல்லா நகரங்களுக்கும் பொருந்தும். எங்கே போகிறது இந்த சமூகம்? தனிமனித கட்டுப்பாடோ, சமுதாய சிந்தனைகளோ, பொறுப்போ, சமூக அக்கறையோ, சுகாதாரம் பற்றிய அடிப்படை விழிப்புணர்வோ அற்று, நாம் யாரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருக்கிறோம்.

எனக்குத் தெரிந்து, வாசல் கூட்டி, கோலம் போட்டு, நமது தெருக்களை சுத்தமாக வைத்து இருந்தோம் ஒரு காலத்தில். நம் வாசல் மீதும், நம் வீதிகளின் மீதுமே அக்கறை இல்லாமல் போய்விட்டதா? வீட்டைப் பெருக்கி ரோட்டில் போடும் கலாச்சாரத்திற்கு எப்பொழுது மாறினோம்? ரோட்டில் மலம் கழிக்க நமக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அண்டை மாநிலமான கேரளத்தில்கூட இந்த அசிங்கம் அரங்கேறுவது இல்லை. நமக்கு சாலையை அசுத்தம் செய்ய உரிமை இருக்கும்போது, அதே சாலையை பராமரிக்கும் உரிமையும், கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

நம்மைவிட வளர்ச்சியில் பின்தங்கிய ஸ்ரீலங்கா சென்றிருந்தபோது, அவர்களின் தூய்மை என் கண்ணை உறுத்தியது. பொறாமையில் என் நெஞ்சம் குமுறியது. இரக்கமே இல்லாத, அரக்க குணம் பெற்றவன் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தபோதும், அவன் தன் நாட்டைத் தூய்மையாக வைத்து இருந்தான். ஒருவர் சாலையைக் கடக்க வேண்டும் என்று விரும்பினால், அத்தனை வாகனங்களும் பொறுமையாக நின்று அவர் கடக்கக் காத்திருக்கிறது. என்னே ஒரு சமுதாய அக்கறை?
சிங்கப்பூரில் தூய்மை மட்டுமல்லாது, சின்ன மண் தரைகள்கூட அழகிய பூங்காவனங்களாக மிளிர்கிறது. ஒரு காலத்தில் கடத்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட சிங்கப்பூர், ஒரு மாமனிதரின் முயற்சியால் எப்படி மாறிப்போனது. நம் வீட்டு மொட்டை மாடியில் குப்பை இருந்தால்கூட, வீட்டுக்கு வந்து அபராதம் வசூலித்துவிடுவார்கள். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே!

'அரசாங்கம் செய்யும்' என்ற நம்பிக்கையை தயவுசெய்து விட்டுவிடுங்கள். அவர்களில் பலர், அவர்களின் வாரிசுகளுக்கு சொத்து சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். சில நல்ல (அரசியல்வாதிகளையும்) உள்ளங்களையும் அவர்கள் கட்டுபடுத்தி, நடமாடக்கூட விடமாட்டார்கள்.

வழக்கமான ஒரு கேள்வி எழும் உங்கள் மனதில்... 'நீ என்ன செய்தாய்?' என்று. நான் கோவையில் ரேஸ் கோர்ஸ் பகுதியை அடுத்துள்ள பி.என்.ஆர். லே-அவுட்டில் சில வருடங்கள் இருந்தேன், முதல் இரண்டு வருடமும் நானும் அரசாங்கத்தைக் குறைக் கூறிக்கொண்டு, என் வாசலிலே குப்பைக் கொட்டிக்கொண்டு மிக மோசமான இந்திய பிரஜையாகவே இருந்தேன்.

ஒரு நாள் என் மூளையில் மின்னல் ஒன்று தாக்கியது, என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டது. ஏதாவது செய்ய வேண்டும் என்று மனது துடித்தது. பிறகென்ன...? எல்லோர் வீட்டு கதவுகளையும் தட்டினேன். அறிமுகம் இல்லாத பலர் வீடுகளும் இதில் அடக்கம். ஒரு கூட்டத்தைக் கூட்டினேன். என் வார்த்தைகளில் ஏதோவொன்று அவர்களுக்கு நம்பிக்கை தர, என்னுடன் துணையாகப் போராட சம்மதித்தனர். பிறகென்ன... அடுத்தடுத்து அரங்கேறியது அதிரடி நடவடிக்கைகள்.

முதலில் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் அவர்களை சந்தித்து எங்கள் குறைகளைத் தெரிவித்தோம். 'முதல் ஒரு முறை நீங்கள் சுத்தம் செய்து தாருங்கள். பிறகு நாங்கள் அதைப் பேணிக் கொள்கிறோம்' என்ற எங்கள் உறுதிமொழியை நம்பி அவரும் நடவடிக்கைகள் எடுத்தார்.

மலைப்போல் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டது. பல எதிர்ப்புகளுக்கிடையே பல அரசியல் ஆதரவு பெற்றவரின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இருபுறமும் மரங்கள் நடப்பட்டது. மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்பட்டது. அதிகாரிகளின் பேருதவியாலும், மக்களின் தளராத முயற்சியாலும் அப்பகுதி மிக அழகிய வசிப்பிடமாகியது.

அப்பகுதியில் இருந்து நான் வெளியேற வேண்டும் என்ற சுழல் வந்தபோது, கண்ணில் நீர்த்திவலைகளோடு வழி அனுப்பி வைக்கப்பட்டேன். அதே பணிகளை இன்று நான் இருக்கும் பகுதியிலும் தொடர்கிறேன் - பல நல்ல நெஞ்சங்களின் பேராதரவுடன். எங்கள் காலனியில் ஏதோ ஒரு மூலையில் யாராவது மரத்தில் இருக்கும் ஒரு கிளையை வெட்ட முற்பட்டால், உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தப்படும், உடனே அதிரடி நடவடிக்கை எடுத்து, விஷமிகள் விரட்டி அடிக்கப்படுவர். ஆகவே, நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்போம்.

ஈரோடு கதிர் அவர்களின் காவிரிப் பற்றிய பதிவொன்றில், நமக்கு கிடைக்கும் மழைக்கு முக்கிய காரணிகளாக கேரள மற்றும் கர்நாடகம் வனப்பகுதியைச் சுட்டி காட்டி இருந்தார். இதை படித்த எனக்கு,  வெட்கி தலை குனியத்தான் தோன்றியது. எங்கே போனது நம் காடுகள், சாலை ஓர மரங்கள்..? மொத்தத்தில் இரக்கமற்று துருப்பிடித்துவிட்டதா தமிழர்களின் நெஞ்சங்கள்? 

எனதருமை தமிழ் மக்களே! நம் நாட்டை சுத்தப்படுத்த நாம் களம் இறங்குவோம். நமது வருமானத்தில் இரண்டு சதவிகிதமாவது நமது சுத்தம் சுகாதாரத்திற்காக செலவிடுவோம். முதலில் நம் வீட்டு முன்பகுதியை மட்டும் சுத்தம் செய்வோம். பிறகு அந்த வீதியில் மற்றவர்களை செய்ய வைப்போம். வாய்ப்பு இருந்தால் கிடைக்கும் இடத்தில் எல்லாம் மரங்களை நட்டுச்செல்வோம். நம் குழந்தைகளுக்கு சுகாதாரத்தின் முக்கியம் உணர்த்துவோம். மாற்றங்களை பிஞ்சு நெஞ்சங்களில் விதைப்போம். வரும் சந்ததியினர் வாழட்டும். நாடு சுடுகாடாய் மாறுவதை தவிர்ப்போம்! மூச்சு விடுவதற்காவது சிறிது ஆக்சிஜனை விட்டுச் செல்வோம் இவ்வழி மண்டலத்துக்கு.

பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதுதான் நமக்குப் பிரச்னை. நாமே மணி கட்டுவோம். நம் தெருவுக்கு நாமே ஹீரோவாக இருப்போமே!

அரசாங்கத்துக்கு ஒர் வேண்டுகோள்! அடிப்படை சுகாதாரத்தை மேம்படுத்திக் கொடுங்கள். அதற்காக நீங்கள் என்ன கசப்பு மருந்து கொடுத்தாலும் இரு கரம் நீட்டி பெற்றுக் கொள்கிறோம். சட்டங்களை இருக்குங்கள். தவறுவோர்க்கு தண்டனைகளைக் கடுமையாக்குங்கள். மூச்சுத்திணறும் எங்களை காப்பாற்றுங்கள். தனி மனித சுகாதாரத்தைக்கூட பேண முடியாத அந்த ஜனநாயகம் நமக்குத் தேவைதானா? முடிவெடுங்கள் மக்களே! நம் சந்ததி வாழ முடிவெடுங்கள்.

மாற்றம் நம் மனதில் தோன்ற வேண்டும்... அரசாங்கத்திடம் அல்ல!

- டிம்பிள்

வாழ்வு இனிது: அழைத்தால் வரும் வாகனங்கள்

காலையிலும் மாலையிலும் பேருந்துகளும் புறநகர் ரயில்களும் பிதுங்கி வழியும் கூட்டத்துடன் செல்வது சென்னை போன்ற பெரு நகரில் அன்றாடக் காட்சி. விடுமுறை நாட்களிலோ கேட்க வேண்டாம். எங்கெங்கும் கூட்டம்தான். ஆனால் எல்லோரும் ஏதோ தேவையின் பொருட்டு வெளியே செல்கிறார்கள், திரும்புகிறார்கள்.

இவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு பேருந்து ரயில் போன்றவற்றைத் தவிர ஆட்டோ, வாடகை கார் போன்ற போக்குவரத்து வசதிகளும் இருந்துவருகிறது. ஆனாலும் இதைவிட வசதியான, நியாயமான கட்டணம் வசூலிக்கும் வாகனத்தின் தேவை இருந்துகொண்டிருந்தது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டது கால் டாக்ஸி. சொந்த கார் இல்லாதவர்கள் ஓரளவு நியாயமான கட்டணத்தில் சொகுசாக காரில் பயணம் செய்ய உதவுபவை கால் டாக்ஸிகள் எனலாம்.

சென்னையைப் பொறுத்தவரை ஃபாஸ்ட் ட்ராக் டாக்ஸி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தனது சேவையைத் தொடங்கிவிட்டது. ஒரு தொலைபேசி இருந்தால் போதும், எங்கே போக வேண்டும், எத்தனை பேர் போக வேண்டும், எப்போது போக வேண்டும் போன்ற விவரங்களைச் சொல்லிவிட்டால் அதற்குத் தகுந்தாற்போன்ற வாகனம் சொன்ன நேரத்தில் உங்கள் வீட்டின் முன்னே வந்து நிற்கும்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி எனத் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் இந்த கால் டாக்ஸிகள் பயணிகளது தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன. இதே போல் என்.டி.எல். டாக்ஸி நிறுவனமும் தமிழகத்தின் பல நகரங்களில் சேவையைத் தந்துவருகிறது.

மும்பையை மையமாகக் கொண்ட ஓலா கால் டாக்ஸி நிறுவனம் 2011-ல் தனது சேவையைத் தொடங்கியது. இந்தியாவில் சுமார் 19 நகரங்களில் இயங்கிவரும் இந்நிறுவனத்திடம் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன என்கிறது புள்ளிவிவரம்.

அமெரிக்க நிறுவனமான ஊபர் இந்தியாவில் தனது சேவையை 2013-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இந்த நிறுவனத்துக்கென ஒரு வாகனம் கூட இல்லை. கார்களையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் வேலையை மட்டுமே பார்த்துவருகிறது ஊபர். இந்த நிறுவனம் ஸ்மார்ட் ஃபோன் ஆப்பை அறிமுகப்படுத்தியது. அதன் மூலமே தேவையான காரை புக் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கியது.

ஊபரில் கார் புக் செய்தால் காரின் வகை, காரின் எண், டிரைவரின் பெயர், மொபைல் எண் ஆகியவை உடனே வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்டுவிடும். இப்போது கிட்டத்தட்ட பெரும்பாலான நிறுவனங்கள் மொபைல் ஆப்பை உருவாக்கிவிட்டன. ஓலாவின் புக்கிங்கில் 70 சதவீதம் மொபைல் ஆப் வழியாகவே வருவதாகத் தெரிகிறது.

ஊபர் கால் டாக்ஸியைப் பொறுத்தவரை பணத்தை பே டிஎம் மூலமாகவே செலுத்த இயலும். எங்கே செல்ல வேண்டுமோ அந்த இடத்துக்கான கட்டணத்தை அறிந்துகொண்டு அதைச் செலுத்திய பின்னர் தான் வாகனத்தை புக் செய்யவே முடியும். ஊபர் நிறுவனம் கால் டாக்ஸிக்கான கட்டணத்தை கிரெடிட் கார்டு மூலம் வசூலித்து வந்தது. ஆனால் இது ரிசர்வ் பேங்க் இந்தியாவில் விதிமுறைகளுக்கு மாறானது எனும் புகார் வந்ததை அடுத்து தற்போது பே டிஎம் வழியே பணம் செலுத்தும் முறை அமலில் உள்ளது. ஓலாவிலும் வாலெட் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது.

பெருகிவரும் போட்டிகளைத் தொடர்ந்து ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களைக் கவர புதுப்புது உத்திகளைக் கையாளத் தொடங்கின. கட்டணங்களில் சிறிய அளவு வேறுபாடு அறிமுகமானது. ஒரு கால் டாக்ஸி கிலோ மீட்டருக்கு 16 ரூபாய் வசூலித்தால் மற்றொன்று கிலோ மீட்டருக்கு 12 ரூபாய் வசூலிக்கத் தொடங்கியது. தங்களது நிறுவனத்துக்குப் புதிய வாடிக்கையாளரை அறிமுகப்படுத்தினால் அவரும் புதிதாக அறிமுகமான வாடிக்கையாளருக்கும் இலவச சவாரி போன்ற சலுகையை ஊபர் கைக்கொள்கிறது. இதே போன்ற சலுகையை, ஓலாவும் என்.டி.எல் கால் டாக்ஸியும் அறிமுகப்படுத்தியுள்ளன.

இப்படிப் பல நிறுவனங்கள் பாதுகாப்பான சவாரி, நியாயமான கட்டணம் உள்ளிட்ட பல வசதிகளைத் தந்தபோதும் ஞாயிற்றுக்கிழமைகளிலோ, விடுமுறை நாள்களிலோ கால் டாக்ஸிகள் கிடைப்பது கடினம். ஊபரில் இத்தகைய தருணங்களில் கார் கிடைக்கிறது, ஆனால் அதற்கான கட்டணம் வழக்கமான நேரத்தைவிட மிக அதிகமாக உள்ளது என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

கார் என்பது சொகுசு, ஆடம்பரம் என்ற கருத்துகளை கால் டாக்ஸிகள் காற்றில் பரத்திவிட்டன. அவை அநேகருக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியதிருக்கிறது. நமக்கான தேவையைப் பொறுத்து எந்த கால் டாக்ஸியை வேண்டுமானாலும் புக் செய்துகொள்ள முடிகிறது. என்பது நிச்சயமாக வசதிதானே?

எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி?:கடந்த ஆண்டை விட 0.5 குறையும்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' மதிப்பெண் கடந்த ஆண்டை விட, 0.5 வரை குறையும் என்பதால், கடந்த ஆண்டில், கடைசி கட்டத்தில் வாய்ப்பை இழந்த பலரும், புதிதாக இணைய வாய்ப்பு வருகிறது. தமிழகத்தில், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி, 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 

இதில், மாநிலத்திற்கு, 2,172 எம்.பி.பி.எஸ்., - 85 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. சுய நிதி கல்லூரிகளில் இருந்து, 600 இடங்கள் வரை கிடைக்கும். விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.எம்.பி.பி.எஸ்., படிப்பை பொறுத்தவரை, இயற்பியல் - 50; வேதியியல் - 50; உயிரியல் - 100 என, மொத்தம், 200 மதிப்பெண்களுக்கு, 'கட் - ஆப்' தயாரிக்கப்படும்.
*இயற்பியல் மற்றும் வேதியியலில் மாணவர் பெற்ற மதிப்பெண்களில், 25 சதவீதம், 'கட் - ஆப்' ஆக சேரும். (இயற்பியல் - 200 என்றால், 50; வேதியியல் - 198 என்றால், 49.5)
*தாவரவியல், விலங்கியலும் சேர்ந்து, 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட வேண்டும். மொத்த மதிப்பெண்; 400. மாணவர் பெற்ற மதிப்பெண்ணில், 25 சதவீதம் சேரும் (தாவரவியல் - 200; விலங்கியல் - 190; மொத்தம்- 390. இதில், 25 சதவீதம் - 97.5) 
*ஒரு மாணவர் இயற்பியல் - 200 என்றால், 50.00; வேதியியல் - 198 என்றால், 49.50; தாவரவியல் - 200; விலங்கியல் - 195 என, இரண்டும் சேர்த்து, 395 என்றால், 98.75 என சேர்ந்து, மொத்த, 'கட்-ஆப்' - 198.25 என கணக்கிடப்படும்.பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில், கடந்த ஆண்டை விட, 'சென்டம்' எடுத்தோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், 'கட் - ஆப்' மதிப்பெண், கடந்த ஆண்டை விட, 0.5 வரை குறையும். இதனால், கடந்த ஆண்டு, 'கவுன்சிலிங்' சென்று, கடைசி நேரத்தில், எம்.பி.பி.எஸ்., சேர முடியாதோர், இந்த ஆண்டில் சேர வாய்ப்பு உள்ளது என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

- நமது நிருபர் -

இன்ஜி., படிக்க 1.50 லட்சம் பேர் விண்ணப்பம்! எல்லாருக்கும் ' சீட்' கிடைக்கும்

அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் சேர, 1.50 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2 லட்சம் இடங்கள் இருப்பதால், விண்ணப்பித்த அனைவருக்கும், 'சீட்' கிடைக்கும். அண்ணா பல்கலைக்குட்பட்ட, 580 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்று, கல்லுாரியில் சேர, மே, 6ம் தேதி முதல், அண்ணா பல்கலை உட்பட தமிழகம் முழுவதும், 60 மையங்களில் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன.


மே, 27ம் தேதியுடன், 59 மையங்களில் விண்ணப்ப விற்பனை முடிந்தது. நேற்று மாலை, 5:00 மணியுடன் அண்ணா பல்கலையிலும் விண்ணப்ப விற்பனை முடிந்தது. நேற்று மாலை, கடைசி நேர நிலவரப்படி, அச்சடிக்கப்பட்ட, 2.40 லட்சம் விண்ணப்பங்களில், 1.90 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இதேபோல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு, நேற்று மாலை, 5:00 மணியுடன் முடிந்தது. 1.40 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலரும், அண்ணா பல்கலை பேராசிரியருமான ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.




நேற்று கடைசி நாளில், தபாலில் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் இன்றும், நாளையும் வரும் நிலையில், அவற்றையும் அண்ணா பல்கலை ஏற்றுக் கொள்ளும் என்று அவர் கூறினார். நேற்று முன்தினம் மட்டும் தபாலில், 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், நாளைக்குள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு, அண்ணா பல்கலை கவுன்சிலிங் வழியிலான மாணவர் சேர்க்கைக்கு, இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. 1.75 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. மொத்தமுள்ள, இரண்டு லட்சத்து, 5,000 இடங்களில், கடந்த ஆண்டு, 40 ஆயிரம் இடங்கள் காலியாக

இருந்தன.

- நமது நிருபர் -

JP University VC gets anticipatory bail


CHHAPRA: Patna high court on Thursday granted anticipatory bail to the vice chancellor (VC) of J P University (JPU), Chhapra, D K Gupta in alleged purchase of blank answer books worth several lakhs without following the standard procedures. Earlier, the vigilance court at Muzaffarpur had rejected his anticipatory bail petition.

It may be mentioned here that besides the VC, five more persons and an agency figure in this vigilance case. They include finance officer (FO) Sonelal Sahni, financial advisor (FA) Pyare Mohan Sahai, supplier of the answer books Chandrakala Universal Pvt.Ltd of Allahabad, Prof Anita, Prof S K Verma and Prof. A K Tiwari, the last three are members of adhoc purchase committee constituted by the VC. While the FO was nabbed by the vigilance on May 28 from his Patna residence, others are evading arrest and trying for anticipatory bail.

The high court, after hearing the counsel of the petitioner, observed, "The FIR only talks of abuse of power, if any, and alleged wrongful gain by not following the procedures established by the law. This is an application for bail in anticipation of arrest. In the manner in which this application is sought to be opposed by the informant is indicative of the fact that the informant is more interested in getting the petitioner arrested to humiliate him rather than seek justice."

"In facts and circumstances of the case, in the event of arrest or surrender within four weeks from Friday, the petitioner D K Gupta shall be released on bail on furnishing bail bonds of Rs10,000 with two sureties of like amount each to the satisfaction of learned special judge vigilance, North Bihar, Muzaffarpur," the HC said.

JPU registrar Prof R P Bablo said, "The informer in the case, Biswajeet Singh Chandel, had been pursuing two courses-Ph D in physics and B.Ed simultaneously which is against the University Act. The VC had cancelled both his admissions."

Dental college students organize flash mob against tobacco

NAVI MUMBAI: The students and interns of MGM Dental College and Hospital, Kamothe, held a vibrant flash mob and also performed skits to spread awareness about the harmful effects of tobacco at Vashi on Friday evening.

The event was organised ahead of the World No Tobacco Day, which is on May 31. Veteran cancer specialist, Dr Kanchan Janardhan of Maharashtra Cancer Warriors also addressed the public on the occasion.

The dean of MGM Dental College in Kamothe, Dr Sabita Ram, said: ''In the last one year, we had as many as 52 oral cancer detections, caused due to tobacco usage. We are therefore constantly advising patients and youngsters to stop consuming tobacco products.''

At the public demonstration held outside Inorbit mall in Vashi, the dental college students displayed posters like `Don't be a Fool, Smoking is not Cool' and `Say Hello to Life; To Hell with Tobacco' among others.

Medical experts also said that a single tobacco leaf has as many as 27 carcinogen substances in it. Hence, it is best to give up tobacco consumption.

World Health Organisation data states that there is 1 death due to tobacco use every six seconds around the globe. More than 6 lakh non-smokers die each year from second hand smoking.

UGC looks to appoint overseas faculty in varsities

KOLHAPUR: Following the Prime Minister's 'Make in India' appeal, University Grants Commission (UGC) is now looking to appoint overseas teaching faculties in central and state universities across the country to push for its 'Teach in India' initiative.

Jaspal Sandhu, UGC secretary, in his May 28 official media circular stated that the faculty recharge program would provide a vehicle to bring back talent, as reversal of brain drain, into the country. "The program has potential of meeting with shortage of faculties in critical areas besides providing motivation to 'Teach in India' with the faculties' overseas experience," it added.

The programme aims to recruit highly-motivated faculty members working overseas, with a flair for research in inter-disciplinary and frontier areas of science, at national level. "The UGC is planning to induct as many as 1,000 such faculty members over the next five years," the circular stated.

"This system is going to give a fillip to quality teaching and research in the university system at a time when we have severe shortage of teaching faculty," Sandhu said, adding that the present initiative is in conformity with the vision of the Minister of Human Resource Development Smriti Irani to promote the concept of 'Teach in India'.

The UGC has recently appointed 102 new faculties from the research areas of physics, mathematical sciences, chemical sciences, biological sciences, engineering sciences and earth sciences, he said.

It has to be noted that this is a second circular within a month from the UGC asking universities and colleges to involve the scholars, policymakers, skilled professionals and the practitioners in the academics as faculty members. The last circular had come on April 27.

The Shivaji University, Kolhapur too has asked its 282 affiliated colleges to look for the adjunct faculties.

Notably, the UGC had started the scheme of appointing the adjunct/visiting faculty from 2009 across the universities in the country.

According to its September 2009 circular, apart from overseas academicians and researchers, the professional and experts from the institutions such as research organizations supported by the Atomic energy commission (AEC), Indian Council of Agriculture research (ICAR), and Council of Scientific and Industrial Research (CSIR) should be involved in the programme.

4G services at 3G prices for Airtel customers

Telecom firm Bharti Airtel will be providing 4G services at 3G prices to its customers in Chennai, George Mathen, Airtel’s Hub CEO – Kerala and Tamil Nadu announced here.

On May 14, Airtel had launched 4G trials with a complimentary upgrade for its customers. This, the company claims, has taken off well and evoked good response from its clients.

“The pilot beta version that we introduced was sufficient for us to get a pan-Chennai experience. The 4G adoption and scale up in the last 14 days has been healthy,” Mr. Mathen said.

In a phased manner, the firm wants to extend 4G services to Coimbatore, Tiruchi, Madurai and Vellore. Airtel has a customer base of 40 lakh users in Chennai and 1.5 crore in Tamil Nadu. The operator did not want to disclose the 3G customer base in Chennai but said that nationally, its 3G customer base is about 19. 5 million as on March 31, 2015. He admitted that there were complaints of certain data blind spots in Chennai, but with 4G infrastructure, systems have been upgraded.

In April 2012, the telecom operator had launched the country’s first 4G services in Kolkata.

Friday, May 29, 2015

ட்விட்டர் கேள்வி-பதில்

பாஸ்போர்ட் தொடர்பான உங்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி க.பாலமுருகன்.






  1. என் மகனுக்கு வயது 21. இவனுக்கு பாஸ்போர்ட் எடுக்க நடைமுறைகள் என்ன?
வெளியுறவுத் துறை அமைச்சக இணையதளம் (http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink) மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பம் சமர்பிக்கவும். இணைய தளம் மூலமாகவோ அல்லது எஸ்பிஐ (SBI) வங்கி செலான் மூலமாகவோ பாஸ்போர்ட் கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன் பின் விண்ணப்பத்தாரருக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தை கீழ்க்கண்ட ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்க வேண்டும்..

அ. இருப்பிட சான்றிதழ் (அட்ரஸ் புரூப்)
 
ஆ. பிறந்த தேதிக்கான சான்றிதழ்
 
இ. கல்வித் தகுதிக்கான சான்றிதழ் (10 ம் வகுப்பு  அல்லது 12 ம் வகுப்பு  அல்லது  பட்டப் படிப்புக்கான சான்றிதழ்)
 
மேற்கண்ட ஆவணங்களின் நகல்களை விண்ணப்பத்தாரர் சுயகையொப்பமிட்டு சமர்பிக்க வேண்டும், இந்த நகல்களின் அசல் ஆவணங்களையும் சரி பார்க்க  கொண்டு வர வேண்டும்.
 
2. என் வயது 69. என் மகன் இங்கிலாந்தில் செட்டிலாகிவிட்டான். அவனோடு நானும் சென்று செட்டிலாக திட்டமிட்டிருக்கிறேன். இது நாள் வரை பாஸ்போர்ட் எடுக்கவில்லை. இப்போது எனக்கு பாஸ்போர்ட் கிடைப்பது சிரமம் என்று சொல்கிறார்கள். உண்மையா?

இதில் எந்த சிரமும் இல்லை. முந்தைய கேள்விக்கான பதிலில் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பம் செய்வது பற்றி விளக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 258 1800 - ஐ தொடர்பு கொள்ளவும். தமிழிலும் பதில் பெறலாம்.

3. பாஸ்போர்ட் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சொல்கிறார்கள், அதற்கான லிங்கை கொடுக்க முடியுமா?
http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink
4. நான் பாஸ்போர்ட்க்காக விண்ணப்பித்து போலீஸ் வெரிஃபிகேஷனுக்காக கடந்த 5 நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன். போலீஸ் வெரிஃபிகேஷன் எத்தனை நாட்களுக்குள் நடைபெறும்?
 
பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்த இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் உங்களின் ரிப்போர்ட் அனுப்பி வைக்கப்படும். பொதுவாக 5 முதல் 10 நாட்களில் போலீஸ் வெரிஃபிகேஷன் இருக்கும்.
 
5. கடந்த மாதம் என் பாஸ்போர்ட் திருடு போய்விட்டது. போலீஸில் புகார் கொடுத்திருக்கிறேன். நான் அடுத்த மாதம் வெளிநாட்டிற்கு செல்ல இருக்கிறேன். இப்போது என்ன செய்யலாம். மீண்டும் ஒரு புதிய பாஸ்போர்ட்டை வாங்கலாமா?
 
நீங்கள் பாஸ்போர்ட் தொலைந்தற்கான போலீஸ் புகாருடன் பாஸ்போர்ட் ரீ இஸ்யூவிற்காக விண்ணப்பிக்கவும். தொலைந்த பாஸ்போர்ட் -ன் நகல் இருந்தால் இணைக்கவும். அனக்சர் எல் என்ற உறுதிமொழி பத்திரம், நோட்டரி பப்ளிக் ஒப்புதலை சமர்பிக்க வேண்டும்.
6. என் பாஸ்போர்ட் வரும் ஆகஸ்ட் மாதம் எக்ஸ்பெயரி ஆகிவிடும். அதன் பின் எப்படி புதுப்பிப்பது?
நீங்கள் எக்ஸ்பெயரி  தேதிக்கு ஒரு ஆண்டு முன்போ அல்லது எக்ஸ்பெயரி தேதிக்கு பின் மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணபிக்கலாம். பழைய பாஸ்போர்டை கொண்டு வர வேண்டும். விலாசம் மாறியிருந்தால் அதற்கான சான்றிதழ்களுடன் புதுப்பிக்கலாம்.
 
7. என் தந்தை துபாயில் வேலை பார்க்கிறார். அடுத்த வாரம் அவரின் பாஸ்போர்ட் காலாவதியாக உள்ளது. என் தந்தையின் பாஸ்போர்ட்டை நான் இங்கிருந்து புதுப்பிக்க முடியுமா?
 
தங்களின் தந்தை துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பிக்கலாம். தாங்கள் இந்தியாவில் விண்ணப்பிக்க இயலாது.
 
8. என் சொந்த ஊர் கேரளாவில் உள்ள திருச்சூர். நான் தற்போது சென்னையில் வேலை காரணமாக செட்டிலாகிவிட்டேன். தற்போது நான் சென்னையில் இருந்து கொண்டு பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க முடியுமா? எனக்கு தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை இல்லை? வோட்டர் ஐடியும் கேரளாவில் எடுத்தது தான் இருக்கிறது?
 
தாங்கள் சென்னையில் வசிப்பதால், சென்னை மண்டல பாஸ்போர்ட் சேவா மையத்தில் தான் விண்ணப்பிக்க வேண்டும். தங்களிடம் மற்ற இருப்பிட சான்றிதழ்கள் (பேங்க் பாஸ்புக், ஆதார் கார்டு, வாட்டர் பில், கேஸ்பில், லேண்ட் லேன் போன் அல்லது போஸ்ட் பெயிட் பில், இன்கம் டாக்ஸ் அஸஸ்மென்ட் ஆர்டர், டிரைவிங் லைசென்ஸ், பிரபலமான மதிக்கத்தக்க வேலை செய்யும் கம்பெனியிடம் லெட்டர் ஹெட்டில் சர்டிபிகேட்) கொண்டு விண்ணப்பிக்கலாம். பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ் இவைகளையும் கொண்டு விண்ணப்பிக்கவும்.
 
9. விசாவுக்கும் பாஸ்போர்ட்க்கும் என்ன வேறுபாடு?
 
பாஸ்போர்ட் பிற நாட்டிற்கு செல்வதற்கான அனுமதிச் சீட்டு. விசா என்பது அந்த நாட்டுக்கு எதற்காக செல்கிறோமோ அதற்கான அந்த நாட்டின் அனுமதிச் சீட்டு.
 
10. பாஸ்போர்ட் எடுக்க என்னென்ன ஆவணங்கள் தேவை? கட்டணங்கள் என்னென்ன செலுத்த வேண்டும். அதிகபட்சம் ஒரு பாஸ்போர்ட் எத்தனை நாளைக்குள் கிடைக்கும்?
 
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவை.
1. இருப்பிடத்திற்கான சான்றிதழ்
2. பிறந்த தேதிக்கான சான்றிதழ்
3. கல்வித் தகுதிக்கான சான்றிதழ்
பாஸ்போர்ட் கட்டணம் நார்மல் பாஸ்போர்ட் 36 பக்கங்கள் கொண்டது ரூ.1500/- ஆகும். 60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட்டிற்கு ரூ.500/- கூடுதலாக செலுத்த வேண்டும். மேலும்
* தட்கல் - ரூ.3,500
* மைனர் - ரூ.1,000
*  PCC - ரூ.500/
* டேமேஜ்  / லாஸ்ட் (Damage / lost) - ரூ. 3,000
போலீஸ் விசாரணை முடித்து, எல்லா ஆவணங்களும் சரியாக இருந்து, போலீஸ் வெரிஃபிகேஷன் ரிப்போர்ட் ஆன்லைனில் சமர்பிக்கப்பட்ட மூன்று நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
 
11. பாஸ்போர்ட் சேவை மையங்களின் சேவை குறித்து விளக்கி சொல்லுங்களேன்?
 
வெளியுறவுத் துறை அமைச்சகம் பாஸ்போர்ட்களை வழங்க, 77 பாஸ்போர்ட் சேவா மையங்களை (PSK) இந்தியா முழுவதிலும் செயல்படுத்தி வருகிறது.
 
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் வரும் 11 மாவட்டங்களில் (பாண்டிச்சேரி, காரைக்கால் உள்பட) வசிக்கும் விண்ணப்பதாரரின் வசதிக்காக மூன்று சேவா மையங்கள் சென்னையில் கீழ்க்கண்ட விலாசங்களில் இயங்கி வருகிறது.
 
* பாஸ்போர்ட் சேவா மையம், சாலிகிராமம் - டாக்டர் .பானுமதி ராமகிருஷ்ணா ரோடு, சாலிகிராமம், சென்னை
 
* பாஸ்போர்ட் சேவா மையம், அமைந்தக்கரை - நவீன்ஸ் பிரசிடியம், நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்னை
 
* பாஸ்போர்ட் சேவா மையம், தாம்பரம் - துரைசாமிரெட்டி தெரு, தாம்பரம். (டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை அருகில்), சென்னை.
 
இந்த மூன்று சேவா மையங்களிலும் 2450 விண்ணப்பங்கள் தினமும் பெறப்படுகிறது. விண்ணப்பங்கள் ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்தப் பிறகு  பரிசீலிக்கப்படுகிறது. மனுதாரரின் வசதிக்காக கீழ்க்கண்ட விண்ணப்பதாரர்கள் வாக்-இன் (walk-in)  அதாவது முன்பதிவு (Appointment) இல்லாமல் விண்ணப்பிக்கலாம்.
 
* வயது முதியோர் (65 வயதுக்கு மேல்) மாற்று திறனாளிகள், PCC விண்ணப்பதாரர்கள்.
இவர்கள் பாஸ்போர்ட் சேவா மையம், சாலிகிராமத்தில் விண்ணப்பிக்கலாம்.
 
* மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் -  பாஸ்போர்ட் சேவா மையம் அமைந்தகரையில் விண்ணப்பிக்கலாம்..
 
* மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், PCC விண்ணப்பதாரர்கள் - பாஸ்போர்ட் சேவா மையம், தாம்பரத்தில் விண்ணப்பிகலாம். 

12. தற்போது நான் குவைத்தில் வசிக்கிறேன். என் பாஸ்போர்ட்டை வெளிநாட்டில் ரெனீவல் செய்தால் என்ன ஆகும்?

வெளிநாட்டிலும் நமது பாஸ்போர்ட்டை, அந்தந்த நாட்டில் உள்ள  இந்திய தூதரகத்தை அணுகி புதுப்பித்துக் கொள்ளலாம். 

13. என் பாஸ்போர்ட் கடந்த மார்ச் 2015 ல் காலாவதி ஆகிவிட்டது. தற்போது எப்படி என் பாஸ்போர்ட்டை ரெனீவல் செய்வது. அதே நேரத்தில் பாஸ்போர்டில் எப்படி என் பெயரை மாற்றுவது எப்படி?

தற்போது  பாஸ்போர்ட்டில் வருடங்களை நீட்டித்து ரெனீவல் செய்யப்படுவது இல்லை. ஒரு முறை பாஸ்போர்ட் காலாவதியானால் மீண்டும் புது பாஸ்போர்ட் பெற வேண்டும். உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ள நீங்கள் http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink  இணையதளத்திற்கு சென்று reissue காரணத்தை க்ளிக் செய்து பாஸ்போட்டுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் இரண்டாவது முறை விண்ணப்பித்தாலும் புதிதாக விண்ணப்பிப்பவர் போலவே பாஸ்போர்ட் சேவை மையங்களை அணுகி நடைமுறைகளை பின் பற்ற வேண்டும்.
 
14. பாஸ்போர்ட் வழங்கும் போது போலீஸ் சரிபார்த்தலின் போது கட்டாயம் லஞ்சம் தர வேண்டும் என்கிறார்களே? இதற்கு யாரிடம் புகார் அளிப்பது?

இது தொடர்பாக தகுந்த ஆதாரத்துடன் உங்களுடைய மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை அணுகி முறையீடு செய்யலாம் அல்லது இதற்காக தமிழ்நாடு காவல் துறையினுடைய  சிறப்புப் பிரிவான THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION, NCB 21 TO 28, P.S.KUMARASAMY RAJA SALAI (GREENWAYS ROAD), RAJA ANNAMALAIPURAM, CHENNAI – 600 028, Telephone : 91-44-2461 5929 / 2461 5949 / 2461 5989 / 2495 4142 / 94450 48999 / 94450 48990, Fax : 91-44-2461 6070, E-mail: dvac@nic.in ஐ தொடர்பு கொள்ளலாம்.

15. நான் சென்னையில் வசிக்கிறேன். ஆனால் கல்லூரி படிப்புக்காக கோவையில் தங்கி இருக்கிறேன். கடைசி ஆறு மாதம் கோவையில் தங்கி இருந்ததால் அங்கும் வெரிஃபிகேஷன் வேண்டும் என்கிறார்கள். இது அவசியமா?

பொதுவாக பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களுடைய போலீஸ் வெரிஃபிகேஷன் விண்ணப்ப தேதியிலிருந்து கடந்த ஒரு வருடத்தில் அவர் எந்த எந்த முகவரிகளில் தங்கி இருந்தாரோ அங்கு எல்லாம் வெரிஃபிகேஷன் செய்த பின்பே  பாஸ்போர்ட் வழங்கப்படும்.  

16. பாஸ்போர்ட்டில் பெயர் தவறுதலாக இடம்பெற்றால் எங்கு சென்று திருத்தம் செய்ய வேண்டும்?

அவர் மீண்டும் சரியான ஆவணங்களை (பெயர் சரியாக இருக்கும் ஆவணங்களை) கொடுத்து பாஸ்போர்ட்டை re issue செய்து கொள்ளலாம். சிறிய பெயர் மாற்றம் (உச்சரிப்பாலான எழுத்து பிழைகள்) என்றால் ரூ. 500 அபராதத் தொகை வசூலிக்கப்படும். இதே பெரிய பெயர் மாற்றங்கள் என்றால் (Major Name Change) மாற்றப்பட்ட பெயரை தங்களுடைய  நிரந்தர முகவரி மற்றும் தற்போதைய முகவரி உள்ள இடங்களில் பிரசூரமாகுமாறு தினசரி செய்தி தாள்களில் விளம்பரம் கொடுக்க வேண்டும். நீங்கள் பெயர் மாற்றத்திற்கு கொடுத்த விளம்பரத்தின் செய்தித் தாளோடு மற்ற தேவையான ஆவணங்களுடன் பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க வேண்டும்.
 
17. வெளிநாட்டில் இருக்கும் போது  பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.?

உடனடியாக நமது நாட்டின்  தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

18. தட்கல் முறையில்  எத்தனை நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும், எவ்வளவு தொகை கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்?

தட்கல் முறையில் விண்ணப்பித்த பாஸ்போர்ட் 3 - 5 நாட்களுக்குள் கிடைக்கும். இதற்கான கட்டணம் 3,500 ரூபாய்.

19. நான் ஒரு என்ஆர்ஐ தற்போது அமெரிக்காவின் குடிமகனும் கூட. நான் அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தலாமா?

வேறு நாட்டின் குடியுரிமை பெற்றவுடன் இந்திய பாஸ்போர்ட்டை பாஸ்போர்ட் அலுவலகத்திலோ, இந்திய தூதரகத்திலோ  உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் இந்திய பாஸ்போர்ட்டில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது.
 
20. என் அண்ணன் அபுதாபியில் வேலை செய்கிறார். அவரின் பாஸ்போர்ட் சமீபத்தில் காணாமல் போய்விட்டது. இப்போது என் அண்ணன் அங்கிருந்து எப்படி இந்தியா வருவது?

அபுதாபியில் உள்ள நமது நாட்டின் தூதரகத்தை ஆவணங்களுடன் சென்று புகார் கொடுக்கவும். அவர்கள் எல்லாவற்றையும் பரிசீலித்து எமர்ஜென்சி சர்டிஃபிகேட் (Emergency Certificate) ஒன்றை வழங்குவார்கள், அதன் மூலம் இந்தியாவிற்கு வரலாம்.

21. நான் புருனேவில் வேலை பார்க்கிறேன். என் குடும்பத்தையும் புருனேவுக்கே அழைத்து வந்துவிடலாம் என்று யோசித்திருக்கிறேன். எனக்கு 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்களுக்கு பாஸ்போர்ட் எடுக்க என்ன செய்ய வேண்டும்?

கீழ்கண்ட ஆவணங்களை கொண்டு சென்று பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 
* புருனேவில் உள்ள இந்திய தூதரகத்தின் அட்டெஸ்டேஷன் உடைய சுய உறுதி மொழி பத்திரம் (Sworn affidavit), 
*  தங்களுடைய பாஸ்போர்ட்டின் நகல் (இதிலும் துதரகத்தின் அட்டெஸ்டேஷன் இருக்க வேண்டும்).'
* தங்களுடைய மனைவியின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டையும் எடுத்துச் செல்ல வேண்டும், அதில் கட்டாயமாக  (ஸ்பவுஸ் நேம் காலத்தில்)  உங்கள் பெயர் இருக்க வேண்டும், 
* குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், 5.தங்கள் மனைவியின் கையொப்பம் இட்ட Annexure H மற்றும் முகவரி சான்றிதழ் (Address Proof).

22. என் மகனின் பாஸ்போர்ட் 2014 டிசம்பரில் காலாவதி ஆகிவிட்டது. இதனை இப்போது புதுப்பிக்க முடியுமா? நான் மற்றும் என் கணவர் நேரடியாக வர வேண்டுமா?

பெற்றோரில் யாரேனும் ஒருவர் வந்தால் போதும். ஆனால் யார் வரவில்லையோ அவருடைய பாஸ்போர்ட்டை உடன் எடுத்து வர வேண்டும்.
 
23. திருமணத்துக்கு பிறகு பெண் எப்படி பாஸ்போர்ட்டில் பெயரை மாற்ற வேண்டும்.  விவரம் தேவை?

நவம்பர் 24, 2009க்கு பிறகு திருமணம் ஆகி இருந்தால் திருமண சான்றிதழுடன் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் திருமண சான்று அல்லது ஜாயின்ட் நோட்டரி அஃப்ஃபிடவிட் (Joint Notary Affidavit) கொண்டு வர வேண்டும். சர் நேம் காலத்தில் பெயர் மாற்றுவதற்கு Annexure D அஃப்ஃபிடவிட் அவசியம். 

Note: பாஸ்போர்ட்டில் Annexure A - M வரையிலான அனைத்து அனெக்சர்களும் கீழ்கண்ட லிங்கில் கிடைக்கும் -  http://passportindia.gov.in/AppOnlineProject/online/annexureAffidavit

எல்லா பாஸ்போர்ட்டிற்கும் என்ன என்ன  டாக்குமென்டுகள் தேவை என்பதை இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள லிங்கை சொடுக்குங்கள்  - http://passportindia.gov.in/AppOnlineProject/docAdvisor/attachmentAdvisorInp
 

சவீதா மருத்துவக் கல்லூரியில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பயிலரங்கம்

இதய ரத்தக் குழாய் அடைப்புக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிப்பது தொடர்பான பயிலரங்கம் சவீதா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் மருத்துவர் சூர்யபிரகாஷ் ராவ், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி இதயவியல் துறை தலைவர் டாக்டர் கண்ணன், செட்டிநாடு மருத்துவக் கல்லூரி இதயவியல் துறை தலைவர் டாக்டர் பிரதீப் நாயர், குளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் நாகமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த 9 முதுநிலை மாணவர்களும் இதில் பங்கேற்ற னர். இதய நோய்கள் குறித்த பல்வேறு தகவல் கள் இந்த பயிலரங்கில் விரிவாக விவாதிக்கப் பட்டன. சவீதா மருத்துவக் கல்லூரி இதயவியல் துறை தலைவர் டாக்டர் ஆஷா மூர்த்தி, டாக்டர் நாராயணஸ்வாமி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். சவீதா பல்கலை. வேந்தர் என்.எம்.வீரய்யன் தலைமை தாங்கினார்.

டாக்டர் சூர்யபிரகாஷ் ராவ் பயிலரங்கை நடத்தினார். இதய ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்த 3 பேருக்கு பயிலரங்கின்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் களுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

அதே கல்லூரி மற்றும் வெளி கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 101 மாணவ, மாணவிகள் இந்த பயிலரங்கில் பயனடைந்தனர்.

MBBS exam delayed by 3 hrs

Students of Government Medical College, Patiala, and Gian Sagar Medical College kept on waiting for almost three hours for their MBBS final year exam of ENT to begin at Patiala Medical College today as invigilators failed to reach the examination centre on time. The paper which was supposed to begin at 8.30 am started at 11.30 am causing great inconvenience to the students.

As per rules, the students were supposed to reach the centre half an hour before the beginning of the exam. Even though all students reached the centre in time at 8 am, the two invigilators- Dr LM Garg of Maulana Medical College, Ambala, and Dr Rathore of Agroha Medical College reached the examination hall after three hours. They said though they had reached Patiala on time, they could not find the exam centre since they did not have the contact number of the college authorities. Similarly, the college authorities also did not have the contact numbers of the teachers following which they could not coordinate.

The Baba Farid University of Health Sciences in order to check the practice of cheating and assure that no one could approach the examiners seeking any favours has made a new rule according to which an invigilator is informed about the centre only a day before the exam.

Vice-chancellor of Baba Farid University of Health Sciences Dr Raj Bahadur said the university would look into the matter. “We are dealing with a large number of examiners and sometimes small hiccups arise. However, we will find out what caused the delay," he added.

HC upholds MCI action on medical admissions

Hyderabad: A two judge bench of the High Court at Hyderabad comprising Justice Ramesh Ranganathan and Justice M Satyanarayana Murthy on Wednesday refused to interdict the decision of the Medical council of India (MCI) in deleting MD (Biochemistry) from eligibility into admission in the super-specialty course of Doctor of Medicine (DM) in Endocrinology as arbitrary and illegal. 
The bench dismissed a writ plea filed by Dr P Harsha Vardhan and others seeking such declaration. A postgraduate degree in Paediatrics, General Medicine or Biochemistry was prescribed as qualifying subjects prior to the impugned amendment. The petitioners contended that they chose Biochemistry in the hope of taking up a post doctoral course and the exclusion derailed their professional plans. 
The MCI justified its action contending that it had constituted a Speciality Board to re-examine the eligibility criteria for admission into various super specialty courses and based on the recommendations the said decision was arrived at. Dismissing the writ petition Justice Ramesh Ranganathan said: Discrimination was the essence of classification and would do violence to the constitutional guarantee of equality only if it rested on an unreasonable basis. 
It was, therefore, incumbent on the petitioners to show that the classification of students into those who held a postgraduate medical degree either in Medicine or Paediatrics, and those who held a postgraduate medical degree in Biochemistry, was unreasonable and bore no rational nexus with its purported object,” the bench then went on to detail the various parameters. 
“As long as the broad features of the categorisation are identifiable and distinguishable, and the categorisation is reasonably connected with the object targeted, Article 14 does not forbid such a course of action.” 
On the question of whether the said students satisfied the eligibility and as to whether the expert body had erred in the exclusion, Justice Ramesh Ranganathan said, “The Court lacks the expertise to examine academic policies and would, ordinarily, abide by the opinion of experts. Courts should be slow to interfere with the opinions expressed by experts, and must leave such decisions to those who are more familiar with such problems, than the Courts generally can be”.

"விதி, சதி செஞ்சாலும்... வாழ்க்கைய விட்டுறாதீக!" கிராமத்து மனுஷியின் நம்பிக்கைப் பாடம்

சதியான வாழ்க்கை, வளமான தொழில், நிறைவான சொத்து என இருந்துவிட்டு, திடீரென ஒரு நாளில் உயிர் ஒன்றைத் தவிர, உடைமை என்று எதுவும் இல்லாத வறுமை சொந்தமானால்? அப்படி ஒரு நிலைதான் சாந்திக்கும் ஏற்பட்டது. ஆனால், இன்று, பூஜ்யத்தில் இருந்து ஆரம்பித்து, தன் மூன்று பிள்ளைகளையும் கரை சேர்த்து கம்பீர நடை போட்டு வருகிறார் சாந்தி! ஊர்க்காரர்களுக்கு வாஞ்சையுடன் ‘சாந்தியம்மா!’
‘‘யேத்தா முத்துலட்சுமி... அந்த முறுக்கு மாவ எடுத்து விரசா பிசஞ்சாதேன் நாளைக்குள்ள அம்புட்டையும் சுட்டு எடுத்து கடைகளுக்கு சப்ளை கொடுக்க முடியும். யேய்யா ராசா... செத்த நேரம் இருங்க அதிரசத்த பெட்டியில, அடுக்கிட்டு அஞ்சு நிமிசத்துல வந்துடுறேன்!’’
- 50 வயதிலும் தேனீ போல் பறந்து கொண்டிருக்கும் சாந்தியம்மா, தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி பகுதியில் விதவிதமான உணவுப் பதார்த்தங்கள் தயாரித்து கடைகளுக்கும், விசேஷங்களுக்கும் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யும் நம்பர் - 1 சுயம் சார்ந்த விற்பனையாளர்.
‘‘நானு கலியாணம் பண்ணிப்போன வீடு, வசதியான குடும்பம். மாமனாரும் வீட்டுக் காரரும் வாழை வெள்ளாமையும், வாழைக்கா யாவாரமும் பாத்துட்டு இருந்தாக. ரெண்டு லாரி வெச்சிருந்தோம். வாரத்துக்கு ரெண்டு நாளு பெங்களூருல இருக்குற பெரிய கடைகளுக்கு எல்லாம் எங்க தோட்டத்துக்காயோட, மத்த சம்சாரிககிட்டயிருந்தும் வாழைக்கா வாங்கி சப்ளை பண்ணிக்கிட்டு இருந்தோம்.
தொழில்ல திடீர்னு 10 லட்சம் நஷ்டம் ஆயிருச்சு. குடும்பம் நொடிச்சுப் போச்சு. வாழ்வாங்கு வாழ்ந்துட்டு வறுமையைப் பொறுக்க முடியாத மாமனாரு, விஷம் குடிச்சு இறந்துட்டாரு. ‘சொந்தக்காரவுக முன்னால வாழ்ந்துகெட்ட குடும்பமா இருக்க வேணாம், வா வெளியூருக்குப் போகலாம்’னு சொன்ன என் வீட்டுக்காரரு, பொள்ளாச்சிக்கு என்னையும் எம் மூணு புள்ளைகளையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு. அங்க காய்கறிக்கடை போட்ட எடத்துலயும், தொழில் கைகூடாம பசிதேன் மிஞ்சிச்சு!’’
- வியர்வையை முந்தானையில் துடைத்து, அடுப்பில் தீயைத் தூண்டிவிட்டபடி தொடர்ந் தார் சாந்தியம்மா.
‘‘வெள்ளம் தலைக்கு மேல போனதுக் கப்புறம் சாண் போனாயென்ன, மொழம் போனாயென்ன? நாம நம்ம சொந்த ஊருக்கே போயிருவோம். எல்லாரும் என்ன நெனப்பாகன்னு கலங்காம, பொழப்புக்கு வழி தேடுவோம்னு சொல்லி, அனுமந்தப்பட்டிக்கே வீட்டுக்காரரைக் கூட்டிக்கிட்டு வந்துட்டேன். எத்தனையோ பேருக்கு மொதலாளியா இருந்தவர, இன்னொருத்தர்கிட்ட சம்பளத்துக்கு வேலைக்குப் போகச் சொல்ல எனக்கு மனசு வரல. ஆனாலும் அவரா சில எடங்கள்ல வேலைக்குப் போனாரு.
எனக்கு சமையல் நல்லா வரும். எட்டு வருசத்துக்கு முன்ன ஒரு படி அரிசி போட்டு, அதிரசம் சுட்டு, வீட்டுக்கு முன்னாடி கொண்டு போய் வெச்சு வித்தேன். அன்னிக்கு எனக்குக் கெடச்ச லாபம் 50 ரூவா. நெதமும் இப்படியே நான் அதிரசம் சுட்டு விக்க, கெடைக்குற 50, 100 ரூவாயில அடுத்த நாளுக்கான சாமான் வாங்கனு ஓடிச்சு. இந்தத் தொழில் நம்மளக் காப்பாத்தும்னு மனசுல தெம்பு வரவும், 5,000 ரூவா கடன் வாங்கி, கணிசமா மளிகை சாமான், வீட்டுக்கு முன்னாடி பெரிய அடுப்புனு போட்டு அதிரசத்தோட சேர்த்து இன்னும் ரெண்டு, மூணு பலகாரங்கள் சுட்டேன். தரத்தையும், சுவையையும் பாத்துட்டு, வீடு தேடி ஆர்டர் வர ஆரம்பிச்சது!''
- சாந்தியம்மா நெருப்பில் வெந்து, குடும்பத் தின் வயிற்றைக் குளிர வைத்திருக்கிறார்.
‘‘என் மக, மருமகனோட துபாயில இருக்குறா. பெரியவன் பேக்கரி கடையிலயும், சின்னவன் செல்போன் கடையிலயும் வேலை பாக்குறானுங்க. ‘போதும்மா நெதமும் 10 மணி நேரம் அடுப்புச் சூட்டுல நீ கஷ்டப்பட்டது’னு அவனுங்க சொல்லும்போது பெத்த மனசு குளிர்ந்து போகுது. ஆனாலும் ஒடம்புல வலுவுள்ள வரை ஒழைப்போமே? முன்னயெல்லாம் நான் ஒரே ஆளாதேன் அதிரசம், எள்ளுச்சீடை, சமோசா, மைசூர் பாகுனு எல்லாம் செஞ்சேன். தொடர்ச்சியா விசேஷம், கடைகள், வெளியூர், வெளிநாட்டுக்குச் சீர்னு ஆர்டர்கள் குவிஞ்சுட்டே இருக்க, ஒரு மாஸ்டரையும், இந்தப் பொண்ணு முத்துலட்சுமியையும் வேலைக்கு வெச்சிருக்கேன். மாசம் பதினஞ்சாயிரத்துல இருந்து இருவதாயிரம் வரைக்கும் வருமானம் கெடைக்குது!’’ என்று பெருமிதத்தோடு சொன்னவர்,
‘‘வாழ்க்கை கொடுத்த வசதிய, விதி பறிச்சா, தொவண்டு போகாதீக. மனசுல வைராக்கியம் இருந்தா, வாழ்ந்து கெட்டவுகளும் மறுபடியும் வாழ்ந்து காட்டலாம்!’’
- பெரிய நம்பிக்கைப் பாடத்தை எளிமயாகச் சொல்லிவிட்டார் அந்த கிராமத்து மனுஷி!
ம.மாரிமுத்து, படங்கள்: சே.சின்னத்துரை

ஸ்பீடு போஸ்ட்டா அல்லது ஸ்லோ போஸ்ட்டா?


க்களிடையே அதிக நம்பிக்கை பெற்ற மத்திய அரசு துறை அஞ்சல்துறைக்கு, கிராமம் முதல் நகரம் வரை அதிக வரவேற்பு இருந்தது ஒருகாலம். ஆனால், இன்றோ கூரியர் சேவையாலும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும் அஞ்சல் துறை ஆரவாரமில்லாமல் அமைதியாக செயல்படுகிறது. அஞ்சல் துறை கொஞ்சம் கொஞ்சமாக பின்னடவை சந்திக்க நேர்ந்தது. 

இதன்விளைவு, அஞ்சல் துறையின் முக்கியமான சேவைகளில் ஒன்றான தந்தி சேவைக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. அஞ்சல் துறையின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அக்கறை செலுத்தத் தொடங்கியது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நன்மதிப்பு பெற்ற அஞ்சல் துறை 'போஸ்டல் லைப் இன்ஸ்சூரன்ஸ்', 'தங்க நாணயங்கள் விற்பனை' ஆகியவற்றில் கால்பதித்தது. தனியார் பங்களிப்புடன் செயல்படும் தங்க நாணய விற்பனை சில தலைமை தபால் நிலையங்களில் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. வங்கிகளைப் போல சேமிப்பு கணக்கு சேவையையும் விரிவுப்படுத்திய அஞ்சல் துறை இப்போது ஏ.டி.எம் மையம் வரை தொடங்கி இருக்கிறது. 

அடுத்தக்கட்டமாக, ஷாப் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், அஞ்சல் துறையில் கடமைக்குப் பணியாற்றுபவர்களின் சிலரால் அதன் அணுகுமுறை மக்கள் மத்தியில் பெரியளவில் சென்றடையவில்லை. சமீபத்தில் 'செல்வமகள்' என்ற சேமிப்புத் திட்டம் அஞ்சல் துறை மீண்டும் மக்களை தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அஞ்சல் துறையில் விரைவு தபால் (ஸ்பீடு போஸ்ட்) என்ற சேவை உள்ளது. இதற்கு சாதாரண தபால் சேவையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், சாதாரண தபாலை விட விரைவாக இது செயல்படும். இதன் காரணமாக இந்த சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆனால், சில ஊழியர்களின் மெத்தனப் போக்கு சில நேரங்களில் ஸ்பீடு போஸ்ட், ஸ்லோ போஸ்ட்டாக மாறி விடுகிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மும்பையிலிருந்து ஸ்பீடு போஸ்ட்டில் அனுபப்படும் தபால்கள் அல்லது பார்சல்கள் மூன்று நாட்களுக்குள் சென்னைக்கு வந்து, சென்னை முகவரி இருந்தால் அது உடனடியாக டெலிவரி செய்யப்பட வேண்டும். ஆனால், சமீபத்தில் மும்பையிலிருந்து ஸ்பீடு போஸ்ட் மூலம் ஒரு பார்சல் அனுப்பப்பட்டது. அந்த பார்சலை அஞ்சல் துறை ஊழியர்கள் பந்தாடிய சம்பவம் இது.


கடந்த 7-ம் தேதி மும்பையிலிருந்து சென்னை திருநின்றவூருக்கு ஒரு பார்சல் முன்பதிவு செய்யப்படுகிறது. 9-ம் தேதி சென்னை அண்ணா சாலைக்கு அந்த பார்சல் வந்து சேருகிறது. பிறகு அங்கிருந்து 12-ம் தேதி விழுப்புரத்துக்கு செல்கிறது. (விழுப்புரத்துக்கு எதற்காக அனுப்பப்பட்டது என்று தெரியவில்லை). பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னை அண்ணா சாலைக்கு அனுப்பப்படுகிறது. அண்ணா சாலையிலிருந்து 13-ம் தேதி திருநின்றவூருக்கு அனுப்பப்படுகிறது. 

திருநின்றவூரில் பார்சலின் முகவரி தவறு என்று குறிப்பிட்டு 14-ம் தேதி அண்ணா சாலைக்கு திரும்ப அனுப்பப்படுகிறது. 15-ம் தேதி அண்ணா சாலையிலிருந்து மும்பைக்கு முன்பதிவு செய்த இடத்துக்கே திரும்ப அனுப்பப்படுகிறது. 16-ம் தேதி மும்பைக்கு சென்றடைந்த அந்த பார்சல் 17-ம் தேதி சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் டெலிவரி செய்யப்பட்டு விடுகிறது. இவ்வாறு 7-ம் தேதி மும்பையில் முன்பதிவு செய்யப்பட்ட அந்த பார்சல், அங்கிருந்து வரும் போது தாமதமாகினாலும் மீண்டும் அனுப்பும் போது விரைவாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதற்காக அந்த பார்சல் திரும்ப அனுப்பப்பட்டது என்று விசாரித்தபோது முகவரியில் வீட்டின் எண் மாறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அஞ்சல் துறையினர் தெரிவித்தனர். சரியான முகவரி இல்லை என்று சொல்லும் அஞ்சல் துறையினரின் வாதம் சரி என்று எடுத்துக்கொள்ளலாம். ஸ்பீடு போஸ்ட் என்பது விரைவான சேவையாகும். அந்த சேவையில் குறிப்பிட்ட தினத்துக்குள் டெலிவரி செய்யப்பட வேண்டும். ஆனால், அஞ்சல்துறையில் சிலரின் கவனக்குறைவு மற்றும் மெத்தனப்போக்கு காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நிகழ்வதால் பொது மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "மும்பையிலிருந்து சென்னைக்கு ஸ்பீடு போஸ்ட் சேவை மூலம் அனுப்பப்படும் எந்த ஒரு பொருளும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவருக்கு டெலிவரி செய்து விடப்படும். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் எதற்காக கூடுதல் நாட்கள் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர் புகார் கொடுத்தால் அதற்கு காரணமாக ஊழியர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

நுகர்வோர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், "இந்திய அரசின் அஞ்சல் துறையில் சிலர் செய்யும் தவறுகளாலும், நுகர்வோருக்கு அங்கு போதிய வரவேற்பு இல்லாததாலும் தனியார் கூரியர் நிறுவனங்களைத் தேடி மக்கள் செல்கிறார்கள். அஞ்சல் துறையை விட கூடுதல் கட்டணம் என்றாலும் கூரியர் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியடைந்து வருகிறது. மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த பார்சலை அஞ்சல் துறை ஊழியர்கள் தவறுதலாக விழுப்புரத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள். 

இதனால், காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட நுகர்வோர், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வழக்கு தொடர்ந்தால் சேவையில் குறைபாடு என்ற காரணத்துக்காக அஞ்சல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு (நிவாரணத் தொகை) பெற சட்டத்தில் வழிவகை உள்ளது. அடுத்து பார்சல் அனுப்பிய நிறுவனம் தவறுலாக வீட்டின் முகவரியில் எண்ணை மாற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதுவே பார்சல் திரும்ப அனுப்பபட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்டவர் சரியான முகவரியை கொடுத்து இருக்கிறார். இதனால் கவனக்குறைவு என்பதற்காக அந்த நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கலாம். நுகர்வோர் சேவையில் குறைபாடு ஏற்படும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் நீதிமன்ற கதவை தைரியமாக தட்டலாம்" என்றார்.

- செல்வ மகேஷ் ( திருநின்றவூர்)

ஜூலை 1 முதல் அறிமுகமாகிறது சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் திட்டம்

ரயில் டிக்கெட் முன்பதிவில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 1ம் தேதி முதல் அறிமுகமாக உள்ளது சுவிதா எக்ஸ்பிரஸ் என்ற ரயில் டிக்கெட் திட்டம்.

டைனமிக் டிக்கெட் முன்பதிவு முறையில், தேவைக்கு ஏற்ப ரயில் டிக்கெட் விலை பல மடங்கு உயர்வதால், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைத் தடுக்கும் வகையில் சுவிதா ரயில் டிக்கெட் முறை அறிமுகமாகிறது.

இந்த திட்டத்தின் கீழ், ரயில் டிக்கெட், தேவைக்கு ஏற்ப உயரும். ஆனால், இரண்டு மடங்கை விட அதிகமாக இருக்காது என்பதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படாது.

எனவே, ப்ரீமியம் ரயிலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு திட்டமே இதன் மூலம் மாற்றியமைக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக மட்டும் அல்லாமல், ரிசர்வேஷன் கவுண்டர்களிலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிக்கு ஜாதிச் சான்று மறுப்பு மருத்துவ விண்ணப்பம் ஏற்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு



மதுரை:'மாணவிக்கு ஜாதிச் சான்று மறுக்கப்பட்டதை காரணமாகக்கூறி மருத்துவப் படிப்பு விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.அழகர் என்பவர் தாக்கல் செய்த மனு:துாத்துக்குடி விமான நிலையத்தில் பியூனாக வேலை செய்கிறேன். நான் பழங்குடியினர் (இந்து- மலைக்குறவன்) வகுப்பை சேர்ந்தவன் என தாசில்தார், உதவி -கலெக்டர் சான்று அளித்துள்ளனர். எனது மனைவிக்கும் அதே ஜாதிச் சான்று உள்ளது. பள்ளியில் எனது மகன், இரு மகள்கள் படிக்கின்றனர்.

இவர்களுக்கு ஜாதிச் சான்று கோரி திருநெல்வேலி ஆர்.டி.ஓ.,விடம் 2013ல் விண்ணப்பித்தோம். துாத்துக்குடி உதவி கலெக்டரிடம் மனு அளிக்குமாறு கூறினார். அவரிடம் 2015 பிப்.,25 ல் மனு அளித்தோம்.உதவி கலெக்டர், ஸ்ரீவைகுண்டம் தாசில்தாருக்கு பரிந்துரைத்தார். வல்லநாடு வி.ஏ.ஓ., மூலம் விசாரணை நடந்தது. ஜாதிச்சான்று வழங்க உதவி கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். ஆனால் ஜாதிச்சான்று வழங்கவில்லை.

துாத்துக்குடி கலெக்டரிடம் புகார் செய்தேன். கோபம் அடைந்த உதவி கலெக்டர், மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.எனது பெற்றோர் பழங்குடியினர் ஜாதிச்சான்று வைத்துள்ளனர். எனது மகள் புவனேஸ்வரி பிளஸ் 2 தேர்வில் 1123 மதிப்பெண் பெற்றார்.

பொறியியல், மருத்துவப் படிப்புகளில் விண்ணப்பிக்க கடைசிநாள் மே 29. ஜாதிச்சான்று வழங்காவிடில் புவனேஸ்வரியின் எதிர்காலம் பாதிக்கப்படும்.பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் புவனேஸ்வரிக்கு ஜாதிச்சான்று சமர்ப்பிப்பதில் தற்காலிகமாக விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்க மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வுக்குழு செயலர்களுக்கு உத்தரவிட வேண்டும். எனது வாரிசுகளுக்கு ஜாதிச் சான்று வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசு கூடுதல் வழக்கறிஞர் பாஸ்கர பாண்டியன், மனுதாரர் வழக்கறிஞர் ஆதித்ய விஜயாலயன் ஆஜராகினர்.நீதிபதிகள் ஆர்.மாலா, வி.எம்.வேலுமணி கொண்ட அமர்வு உத்தரவு:

ஜாதிச்சான்று சமர்ப்பிக்கவில்லை என்பதை காரணமாகக்கூறி புவனேஸ்வரியின் விண்ணப்பத்தை பொறியியல், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வுக்குழு செயலர்கள்

நிராகரிக்கக் கூடாது. தகுதி அடிப்படையில் மனுவை பரிசீலித்து ஜூன் 12 க்குள் ஜாதிச் சான்று வழங்குவதாக அரசுத் தரப்பில் தெரிவித்துள்ளனர். அவ்வாறு வழங்காத பட்சத்தில் மாணவர் சேர்க்கை செயலர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.

NEWS TODAY 22.04.2024