Wednesday, May 27, 2015

பி.இ. சேர்க்கை; விண்ணப்பிப்போர் எண்ணிக்கை குறைந்தது: கால அவகாசம் நீட்டிப்பு இல்லை

பெறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டுகளை விட குறைந்திருப்பதோடு, பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் இந்த முறை குறைந்து காணப்படுகிறது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் 80 ஆயிரம் பேர் மட்டுமே சமர்ப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விண்ணப்ப விநியோகமும் இதுவரை 2 லட்சத்தை எட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

2013-14 கல்வியாண்டில் 2.35 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகமாகின. இதில், 1.90 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 2014-15 கல்வியாண்டில் 2.13 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகமாகின. 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 1.75 லட்சம் பேர் சமர்ப்பித்திருந்தனர். ஆனால், இந்த முறை பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் 80 ஆயிரம் பேர் மட்டுமே சமர்ப்பித்துள்ளனர். இதுபோல, விண்ணப்ப விநியோகம் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 27-ஆம் தேதியும், சென்னை மையங்களில் 29-ஆம் தேதியும் முடிவடையவுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வரை 1.87 லட்சம் என்ற அளவுக்கே விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன.

கால அவகாசம் நீட்டிப்பு இல்லை: இந்த நிலையில், கடந்த 2014-15 கல்வியாண்டில் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் குறைவாக இருந்ததால், விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதுபோல, இந்த முறையும் கடைசித் தேதி நீட்டிப்பு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.இதுகுறித்து அண்ணா பல்
கலைக்கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:
இந்த முறை போதிய கால அவகாசம் இருப்பதால், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பே இல்லை. மேலும், புதன்கிழமை முதல் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...