Saturday, September 30, 2017

மலேசிய மக்கள் வடகொரியா செல்ல தடை
dinamalar
பதிவு செய்த நாள்29செப்
2017
08:52




கோலாலம்பூர்: வடகொரியா அணு ஆயுத திட்டத்தையும், ஏவுகணை திட்டத்தையும் கை விட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் அழுத்தம் தந்து வருகின்றன. ஆனால் வடகொரியா இதில் விட்டுக் கொடுக்காமல், தனது அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றுவதில் விடாப்பிடியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டபோதும், வடகொரியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், மலேசிய நாட்டு மக்கள், வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்த தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு காரணமாக ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவதற்காக மலேசியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே அக்டோபர் 5-ம் தேதி நடக்க உள்ள போட்டி, பாதிப்புக்குள்ளாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பகவதி அம்மனுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கிடைக்குமா? - பக்தர்கள் எதிர்பார்ப்பு

த.ராம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா கடந்த 21-ம் தேதி முதல் நடந்து வருகிறது. அந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம், 10-ம் நாள் நடக்கும் பரிவேட்டைதான். அந்த நிகழ்வு நாளை பகல் 12 மணிக்கு நடக்கவிருக்கிறது. அதைத் தொடர்ந்து பகவதி அம்மன் எலுமிச்சை பழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி காட்சி தருவார். பின்னர் கோவிலிலிருந்து பகவதி அம்மன் ஊர்வலமாகப் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரம் சென்றடைவார்.




அங்கு அம்மன் வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள். அதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வெள்ளிக் குதிரை வாகனத்தின் பகவதி அம்மன் கன்னியாகுமரியிலிருந்து ஊர்வலமாக வரும் போது பேண்ட் வாத்திய இசையுடன், துப்பாக்கி ஏந்திய போலீஸார் அணிவகுப்பு மரியாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பேண்ட் வாத்திய இசையுடன் கூடிய போலீஸார் பாதுகாப்பு அம்மனுக்கு அளிக்கப்படவில்லை.




இந்தநிலையில், அம்மனுக்கு இந்த ஆண்டு முதல் பேண்ட் வாத்திய இசையுடன் கூடிய துப்பாக்கி ஏந்திய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக குமரி மாவட்ட எஸ்.பி.யிடம் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். போலீஸார் அளிக்கும் பேண்ட் வாத்திய இசையுடன் கூடிய அணிவகுப்பு மரியாதையைக் காண பக்தர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
ஆதார் இல்லாட்டி உங்க கல்யாணத்துக்கு 'ஆதாரமே' இருக்காதாம், பார்த்துக்கங்க!
சென்னை: திருமணத்தை பதிவு செய்ய ஆதார் அட்டை நகலை பெற வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி டிஐஜிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் 578 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் திருமணம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. திருமணம் நடைபெற்ற தேதியில் இருந்து 90 நாட்கள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். இதற்காக, 100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் திருமண பதிவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்தது. இதை தொடர்ந்து மாநிலத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களை பதிவு செய்யும் நோக்குடன் கடந்த 2009ல் தமிழ்நாடு திருமண பதிவு சட்டம் இயற்றப்பட்டது.

அதன் பிறகு 90 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யவில்லை சட்டப்படி குற்ற தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருமணத்தின் பதிவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.திருமணபதிவு
அடையாள ஆவணங்கள் இணைப்பு

திருமணத்தை பதிவு செய்யும் போது, அதனுடன் அழைப்பிதழை இணைக்க வேண்டும். மேலும், மணமக்கள், பெற்றோர் மற்றும் சாட்சிகளின் அடையாள ஆவணமாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உட்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவண நகல்களை வைக்க வேண்டும்.
ஐஜி சுற்றறிக்கை
சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை

திருமணத்தை பதிவு செய்யும் போது தற்போது ஆதார் அட்டையையும் ஒரு அடையாள ஆவணமாக ஏற்ற கொள்ள பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் டிஐஜிக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து குமரகுருபரன் அனைத்து மண்டல துணை பதிவுத்துறை தலைவர், சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஆதார் அட்டை ஆவணம்
அடையாள ஆவணம்

அதில், மணமக்கள், பெற்றோர் மற்றும் சாட்சிகளின் அடையாள ஆதார ஆவணமாக ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களுடன் தற்போது ஆதார் அடையாள அட்டையையும் ஒரு அடையாள ஆவணமாக ஏற்று பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
பெற்றோர் இன்சியல்
அதிகாரிகளுக்கு உத்தரவு

மணமக்களின் பெற்றோரது பெயர்கள் மற்றும் முகவரிகளை சரி பார்க்கும் பொழுது அவர்கள் தாக்கல் செய்யும் ஆதார ஆவணங்களில் கண்டுள்ள பெயர் மற்றும் முதலெழுத்தும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பெயர் மற்றும் முதலெழுத்தும் மற்றும் முகவரிகள் ஒத்துள்ளதா என பதிவு அலுவலர்கள் நன்று பரிசீலித்த பின்னரே பதிவு மேற்கொள்ள வேண்டும்.
இறப்பு சான்றிதழ்
அசல் சரிபாப்பது அவசியம்

மணமக்களின் பெற்றோர் யாரேனும் இறந்து விட்டதாக விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இறந்தவரின் அசல் இறப்பு சான்றை சரிபார்த்து அதன் நகல் பெறப்பட்டு கோர்வை செய்ய வேண்டும். மேலும் மணமக்களில் யாரேனும் ஒருவர் கணவர் அல்லது மனைவியை இழந்தவர் என விண்ணப்பத்தில் குறிப்பிடும் நிகழ்வில் இறந்த கணவர்/மனைவியின் இறப்பு சான்றின் அசலை சரிபார்த்து அதன் நகலை கண்டிப்பாக பெற்று கோர்வை செய்த பின்னரே பதிவு மேற்கொள்ள வேண்டும்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

source: oneindia.com
Dailyhunt
ஆயுத பூஜை: போக்குவரத்துக்கு இடையூறாக பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை




ஆயுத பூஜையை முன்னிட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து எஸ்.பி. பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஆயுத பூஜையின் போது போக்குவரத்துக்கு இடையூறாக பூசணிக்காயை சாலைகள் மற்றும் தங்களது வீடுகளுக்கு முன் உடைப்பது, அதே போல கடைக்கு முன் உடைப்பது கூடாது.

இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது மட்டுமன்றி, இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விபத்தில் சிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது.

ஆகவே, சாலைகளில் கண்டிப்பாக பூசணிக்காய்களை உடைக்கக்கூடாது. மீறி உடைப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

Dailyhunt
கணவர்கள் இனி காய்கறி வாங்க தெரியாதுனு சொல்ல முடியாது - இந்த லிஸ்ட்ட பாருங்க புரியும்...!




புனேவில் ஒரு பெண் தனது கணவர் காய்கறி வாங்குவதற்காக எழுதி கொடுத்துள்ள லிஸ்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புனேவில் ஐடி தொழில் செய்து வருபவர் இரா கோல்வாக்கர். இவர் தனது கணவரிடம் காய்கறி வாங்கி வருமாறு கூறியுள்ளார். அதற்கு தான் இதுவரை காய்கறி வாங்கியது இல்லை எனவும், அதனால் நான் போகமாட்டேன் எனவும் ஒவ்வொரு முறையும் எஸ்கேப்பாகியுள்ளார்.

இதையே வாடிக்கையாக வைத்து கொண்டு வந்த கணவனுக்கு ஒரு ஷாக் காத்து கொண்டு இருந்தது. அதுதான் அவரது மனைவி எழுதி வைத்திருந்த காய்கறி லிஸ்ட்.

அதில் ஒவ்வொரு காய்கறியும் எந்த நிறத்தில், எப்படி இருக்க வேண்டும் என குறிப்பிட்டதுடன், காய்கறியை எளிதில் கண்டுபிடிப்பதற்காக அதன் படத்தையும் வரைந்து கொடுத்து அனுப்பி உள்ளார்.

தக்காளி பாதி மஞ்சளாகவும், பாதி சிவப்பாகவும் இருக்க வேண்டும் எனவும், வெங்காயம் சிறியதாகவும், வட்டவடிவமாக இருக்க வேண்டும் எனவும், பச்சை மிளகாய்களை இலவசமாக கேட்டு வாங்கி வரவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காய்கறி லிஸ்டை தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த பெண் தனது கணவருக்கு கொடுத்தது நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சித்து பாருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
22 பேரின் உயிரைப் பறித்த வதந்தி! மும்பை ரயில் நிலையத்தில் பயங்கரம்

ராகினி ஆத்ம வெண்டி மு.

மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் பரவிய வதந்தியால் கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகியுள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர்.



மும்பை எல்பின்ஸ்டான் ரயில் நிலையத்தில் சிறிது நேரத்துக்கு முன்னர் மின்கசிவு ஏற்பட்டதாக ஒரு வதந்தி பரவியது. இதனால் பதற்றமடைந்த மக்கள் விபத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டு ஓடியதில் பலரும் நெரிசலில் சிக்கினர். மக்கள் கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக் காயமடைந்தனர். உடனடியாக மீட்புப் பணிகளில் போலீஸார் ஈடுபட்டனர். முதலில் மூன்று பேர் பலியானதாகக் கூறப்பட்டது. ஆனால், பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.

மும்பை புறநகர் ரயில் பகுதியான இந்த ரயில் நிலையத்தில் ஏற்பட்ட இந்த எதிர்பாரா விபத்தால் இதுவரையில் 22 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனப் போலீஸார் கூறுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. எப்போதும் மக்கள் வெள்ளத்திலேயே இருக்கும் எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் பரவிய ஒரு வதந்தியால் பலரும் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் பலியானோருக்கு ரயில்வே சார்பில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், மஹாராஷ்டிரா அரசும் தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.

வித்தியாசமான தட்கல் டிக்கெட் முன்பதிவு! அதிரவைக்கும் நாசரேத் ரயில் நிலையம்

எஸ்.மகேஷ்




தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ரயில் நிலையத்தில் வித்தியாசமான முறையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு நடக்கிறது. அதை ரயில்வே ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.

பயண தேதிக்கு ஒருநாள் முன்னதாக தட்கல் முன்பதிவு தொடங்கும். ஏ.சி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும் முன்பதிவு படுக்கை வசதிக்கு காலை 11 மணிக்கும் தட்கல் முன்பதிவு தொடங்கும். ஒரு சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்துவிடும் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும். தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி எனத் தொடர்ந்து விடுமுறை வருவதால் வெளியூர்களிலிருந்து ஏராளமானவர்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. டிக்கெட் முன்பதிவு மையங்களில் மணிக்கணக்கில் காத்திருந்து டிக்கெட்களைப் பெறும் சூழ்நிலை உள்ளது.



இந்தச்சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு வித்தியாசமான நடைமுறை பின்பற்றப்படுகிறது. டிக்கெட்களை முன்பதிவு செய்ய வரும் பயணிகள், துண்டு பேப்பரில் தங்களின் பெயர்களை வரிசைப்படி எழுதுகின்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விடுகின்றனர். தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் 10 நிமிடத்துக்கு முன்பு வந்து டிக்கெட்களைப் பெற வரிசையில் காத்திருக்கின்றனர். துண்டுப் பேப்பரில் எழுதியவர்களுக்கும் ரயில் நிலையத்தில் காத்திருப்போருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் ரயில் நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருப்போர் பாதிக்கப்படுகின்றனர். இந்தத் துண்டு பேப்பர் எழுதும் நடைமுறையை ரயில்வே ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.

இதுகுறித்து நாசரேத் ரயில்வே அதிகாரியிடம் கேட்டதற்கு, "துண்டு பேப்பரில் பெயரை எழுதுவது, கற்கள் உள்ளிட்ட பொருள்களால் இடம் பிடிப்பது தவறு. அது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைக்கிறார்!

பிரேம் குமார் எஸ்.கே.

நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் சென்னை அடையாறு பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மணிமண்டபத்தைத் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.




அக்டோபர் 1-ம் தேதி சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. ஆனால், இந்த விழா அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக நடிகர் சங்கம் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் போற்றும் கலைஞனின் மணிமண்டபம் மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் முதல்வர் கலந்து கொண்டு திறந்து வைக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்று தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அக்டோபர் 1-ம் தேதி நடைபெரும் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்வார். அன்று ஏற்கெனவே ஒப்புகொண்ட, வெளியூர் நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்வதால் தன்னால் கலந்து கொள்ள இயலவில்லை” எனக் கூறியுள்ளார். இதை சிவாஜி குடும்பத்தினரும், நடிகர் சங்கமும் வரவேற்றுள்ளனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி!!!
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், ௪௫ ஆயிரம் பள்ளிகளில், ௩.௫௦ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ௧௦ ஆண்டுகளுக்கு முன், பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது.

இதையடுத்து, பணியில் உள்ளோர், புதிதாக சேரும் ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கியது. மாவட்ட அலுவலகங்களில் இருந்து, சான்றிதழ் நகல்கள், சென்னையில் உள்ள தேர்வுத்துறைக்கு அனுப்பப்படும். தேர்வுத்துறை அதிகாரிகள், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்குவர்.

இந்த நடைமுறையால், லட்சக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில் இழுபறி நிலை உள்ளது. கால தாமதத்தை தவிர்க்கும் வகையில், சான்றிதழ்களின் விபரங்கள், ஆன்லைனில் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதற்கான பயன்பாட்டாளர் அடையாள எண் மற்றும் ரகசிய குறியீடு எண், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த குறியீட்டை பயன்படுத்தி, மாவட்ட அதிகாரிகள் அலுவலகத்திலேயே, சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவுறுத்தி உள்ளார்.

இந்த புதிய முறையால், மாவட்ட வாரியாக, போலி சான்றிதழ் காட்டி பணிக்கு வந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு
உள்ளது
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வாய்ப்பளிக்க முடியாது: சுஷ்மா ஸ்வராஜ்
2017-09-28@ 13:03:30




நியூயார்க்: பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது, நியூயார்க் நகரில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது, வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் 7,500 கோடி ரூபாய் அளவுக்கு, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதை மாற்றிக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என சுஷ்மாவிடம் கோரப்பட்டது. ஆனால், என்.ஆர்.ஐ.க்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள போதிய வாய்ப்புகள் ஏற்கனவே அளிக்கப்பட்டதாகக் கூறிய சுஷ்மா, மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க சாத்தியமில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பணிப்பதிவேடு 'டிஜிட்டல்'மயம் பணிதாமதம்:அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லை

பதிவு செய்த நாள்30செப்
2017
01:32

சிவகங்கை:அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பணிப்பதிவேட்டை 'டிஜிட்டல்' மயமாக்கும் பணி தாமதமாகி வருகிறது.கருவூலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்'மயமாக்கும் பணி ஆறு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதில் பணிப்பதிவேட்டின் பக்கங்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டு வருகின்றன. கணினியில் ஏற்றியவுடன் 'பிரின்ட்' எடுத்து சம்பந்தப்பட்ட ஊழியருக்கு வழங்கப்படும். அதில் ஏதேனும் பதிவுகள் விடுதல் இருந்தால், அவற்றை வரைவு அலுவலர் மூலம் சரிசெய்து மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.

பணிப்பதிவேட்டில் ஊழியர்களின் சுயவிபரம், பணிநியமன ஆணை, பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், கல்வி தகுதிகள், ஜி.பி.எப்., ஓய்வூதிய திட்டம், பணிக்காலம் சரிபார்ப்பு, உயர்கல்வி பயில முன்அனுமதி, இடமாறுதல், பதவி உயர்வு, ஊதிய நிர்ணயம், தேர்வுநிலை, சிறப்புநிலை, ஊக்க ஊதியம், விடுப்பு, குடும்ப உறுப்பினர்கள், வாரிசு நியமனம் போன்ற பதிவுகள் இருக்க வேண்டும். பலரது பணிப்பதிவேட்டில் ஊக்க ஊதியம், விடுப்பு போன்ற பதிவுகள் கூட விடுபட்டுள்ளன. இதனால் அவற்றை சரிசெய்து தர சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் கருவூலத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் விடுபட்ட பதிவுகளை சரிசெய்து கொடுக்காமல் ஊழியர்கள் தாமப்படுத்தி வருகின்றனர். சில துறைகளில் பதிவுகளை சரிசெய்து கொடுக்க வரைவு அலுவலர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் 'டிஜிட்டல்'மயமாக்கும் பணி தொய்வடைந்துள்ளது.கருவூல கணக்குத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டந்தோறும் கருவூலங்களில் 'டிஜிட்டல்'மயமாக்கும் பணி நடக்கிறது. பலரது பணிப்பதிவேட்டில் ஏராளமான பதிவுகள் விடுபட்டுள்ளன. அதனை சரிசெய்து தர வலியுறுத்தியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். மாவட்டங்களில் இப்பணி முடிவடைந்துவிட்டால், பணிப்பதிவேட்டை 'டிஜிட்டல்'மயமாக்க சென்னைக்கு தான் செல்ல வேண்டும், என்றார்.



தீபாவளி இனாம் கேட்கக்கூடாது என காஸ் சிலிண்டர் ஊழியர்களுக்கு டி.எஸ்.ஓ., எச்சரிக்கை
பதிவு செய்த நாள்
செப் 30,2017 00:19


மதுரை;''காஸ் சப்ளை செய்யும் ஊழியர்கள் தீபாவளி இனாம் கேட்கக்கூடாது. கேட்பதாக புகார் வந்தால் அவர்கள் மீதும், ஏஜன்சி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மதுரையில் நடந்த எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர்(டி.எஸ்.ஓ.,) பொன்ராமர் எச்சரித்தார்.எண்ணெய் நிறுவன அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் நடந்த விவாதங்கள்:சிதம்பரம்: சிலிண்டர்களுக்கான மானியம் முறையாக வங்கிகளில் செலுத்தப்படுவதில்லை. சிலிண்டர் வினியோக ஊழியர்கள் எடைமிஷின் கொண்டு வருவதும் இல்லை. கடந்த கூட்டங்களில் இப்பிரச்னைகளை சுட்டிகாட்டியும் நடவடிக்கை இல்லை.கோமதிநாயகம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஏஜன்சி சிலிண்டர்களுக்கு மானியம் ஆறு மாதங்களாக சில நுகர்வோருக்கு செலுத்தப்படவில்லை. எஸ்.எம்.எஸ்.,ம் வருவதில்லை. ஏஜன்சிகளிடம் முறையிட்டாலும் நடவடிக்கை இல்லை.

ஆர்தர்: ஐ.வி.ஆர்.எஸ்., முறையில் சிலிண்டர் புக் செய்ய காஸ் ஏஜன்சி, எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. இதில் பதிவு செய்யும் போது தவறுதலாக எண்களை அழுத்தி விட்டால் மானியம் ரத்தாகி விடுகிறது.சந்திரசேகர்: சிலிண்டர் லீக்கேஜ் போன்ற பிரச்னைகளால் விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.
ஜெயனேசன்: சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் 50 ரூபாய் வசூலிக்கின்றனர். கொடுக்க மறுத்தால் சிலிண்டர் சப்ளை செய்ய தாமதிக்கின்றனர். எந்த காஸ் ஏஜன்சி ஊழியர்களும் அடையாள அட்டை அணிவதில்லை. புகார் குறித்து போன் செய்தால் அதிகாரிகள் எடுப்பதில்லை.வழங்கல் அலுவலர்: எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் புகார் செய்யலாம்.யோகானந்தம்: சில ஏஜன்சி நிறுவனத்தினர் பொது மக்கள் நடமாடும் இடங்களில் குடோன் அமைத்துள்ளனர். விபத்து அபாயம் உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து குடோன்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.ஜெயபாலன்: செல்லுாரில் சில நாட்களுக்கு முன் லீக்கேஜ் ஆன சிலிண்டரை சப்ளை செய்தனர். உரிய நேரத்தில் கவனித்ததால் விபத்து 

தவிர்க்கப்பட்டது.எண்ணெய் நிறுவன அதிகாரிகள்: பழுதான சிலிண்டரை நுகர்வோருக்கு சப்ளை செய்யக்கூடாது; திரும்ப பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். எங்கு சப்ளை செய்யப்பட்டது என ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.சுப்புராம்: டூவீலர்களில் ஆறு சிலிண்டர்கள் வரை எடுத்துச்சென்று ஊழியர்கள் வினியோகிக்கின்றனர். நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் டூவீலர்களில் கொண்டு செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.

ராஜேந்திரன்: சிலிண்டர் சப்ளை செய்ய வரும் ஊழியர்கள் 50 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர். தற்போது தீபாவளி வருவதால் அதை சுட்டிகாட்டி கட்டாயப்படுத்துகின்றனர்.சண்முகவேலு: சிலிண்டர் விலைகளில் வித்தியாசம் உள்ளது. ஏஜன்சிகளுக்கு இடையே விலை வேறுபாடுள்ளது. ஒரே விலையில் விற்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அசோகன்: நுகர்வோர் அமைப்புகளுடன் இணைந்து காஸ் சிலிண்டர் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எண்ணெய் நிறுவன அதிகாரிகள்: சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் எடை மிஷின் வைத்திருக்க வேண்டும் என உச்சநீதிமன்றமே அறிவுறுத்தி உள்ளது. எடைமிஷன் கொண்டு வராத ஊழியர்கள் குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார் எண் பதிவு செய்த வங்கிகள் மூலம் சிலிண்டர் மானியம் செலுத்தப்படுகிறது. மானியம் வராதபட்சத்தில் ஆதார், நுகர்வோர் எண்ணை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
வழங்கல் அலுவலர்: காஸ் ஏஜன்சி நிறுவனத்தினர் ஊழியர்களிடம் கூடுதலாக 'டிப்ஸ்' வசூலிக்கக்கூடாது என கண்டிப்புடன் அறிவுறுத்த வேண்டும். எடைமிஷன் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். பொதுமக்கள் நலன்கருதி டூவீலரில் சிலிண்டர் கொண்டு செல்வதை ஏஜன்சிகள் தவிர்க்க வேண்டும். குறுகலான சந்து பகுதியாக இருந்தால் மினி லாரிகளில் கொண்டு சென்று சப்ளை செய்யலாம். ஊழியர்கள் அடையாள அட்டை அணிய கட்டாயப்படுத்த வேண்டும். தீபாவளி இனாம் கேட்டு நுகர்வோரை தொந்தரவு செய்யக்கூடாது. இதுபோன்ற புகார் வந்தால் காஸ் ஏஜன்சி மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
திருமண பதிவுக்கு ஆவணமாக ஆதார் ஏற்பு
பதிவு செய்த நாள்29செப்
2017
22:08

சென்னை,திருமண பதிவுக்கு மணமக்கள், பெற்றோர், சாட்சிகளின் ஆதார் அட்டையையும் ஆவணமாக்கி, தமிழக அரசு, அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது.

திருமணத்தை பதிவு செய்ய மணமக்கள், பெற்றோர் மற்றும் சாட்சிகள் அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள், அடையாள சான்றுகளாக ஏற்கப்படுகின்றன. இந்த பட்டியலில், ஆதார் அட்டையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்காக, திருமண பதிவு தொடர்பான, 1967 - இந்து திருமண விதிகளில், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை, பதிவுத்துறை தலைவர் பிறப்பித்துள்ளார்.

மாற்றம் என்ன

 மணமக்களின் பெற்றோர் பெயர் மற்றும் முகவரிகளை சரி பார்க்கும்போது, அவர்கள் தாக்கல் செய்யும் அடையாள ஆவணங்களில் உள்ள பெயர்,
இனிஷியல் எனப்படும் முதல் எழுத்து, முகவரி ஆகியவை, விண்ணப்பத்தில் உள்ள விபரங்களுடன் ஒத்துப் போகிறதா என, பார்க்க வேண்டும்

 மணமக்களின் பெற்றோர் யாராவது இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தால், அதற்கான அசல் இறப்பு சான்றிதழை சரி பார்த்து, நகலை இணைக்க வேண்டும்.

 மணமக்களில் யாராவது ஒருவர், கணவர் அல்லது மனைவியை இழந்தவர் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதற்கான அசல் இறப்பு சான்றிதழை சரி பார்த்து, அதன் நகலை கண்டிப்பாக விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இந்த புதிய உத்தரவை சார் -- பதிவாளர்கள் அமல்படுத்துவதை, மாவட்ட பதிவாளர்களும், டி.ஐ.ஜி.,க்களும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.டி., சித்தா படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு
பதிவு செய்த நாள்29செப்
2017
21:51

சென்னை, இந்திய மருத்துவம்மற்றும் ஓமியோபதி துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை மற்றும் பாளையங்கோட்டை, அரசு சித்தா மருத்துவமனைகளில், எம்.டி., சித்தா மருத்துவ படிப்புகளுக்கு, 94 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை, அக்., 1 முதல், www.tnhealth.org என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னை, அரும்பாக்கம்,இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறைக்கு, அக்., 16க்குள் வந்து சேர வேண்டும். இதில் சேர, அகில இந்திய முதுநிலை ஆயுஷ் நுழைவுதேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பரிதாபம்!

கூட்ட நெரிசலில் சிக்கி 25 பேர் பலி
வதந்தியால் மும்பை ரயில் நிலையத்தில் சோகம்

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையின் புறநகர் பகுதியான, பரேலில் உள்ள எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலைய நடைபாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 25 பேர் பரிதாபமாக பலியாயினர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடும் மழை பெய்த நிலையில், மின்சாரம் பாய்வதாக பரப்பப்பட்ட வதந்தியால் தப்பிக்க முயன்றபோது, இந்த விபந்து நடந்தது.



மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மும்பையில் போக்குவரத்தின் உயிர்நாடியாக இருப்பது, புறநகர் ரயில் சேவையே. நாட்டிலேயே, அதிக அளவுக்கு புறநகர் ரயில் போக்குவரத்து பயன்படுத்தப்படுவது இங்குதான்.இங்குள்ள புறநகர் பகுதி யான பரேலில் நான்கு முக்கிய ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. மத்திய ரயில்வே இயக்கும் புறநகர் ரயில் சேவையின் கீழ், பரேல் மற்றும் கர்ரி ரோடு ரயில் நிலையங்கள் உள்ளன.

நடை பாலம்:

மேற்கு ரயில்வே இயக்கும்


ரயில் பாதையில், எல்பின்ஸ்டோன் ரோடு மற்றும் லோயர் பரேல் ரயில் நிலையங்கள் உள்ளன.

எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்காக உள்ள நடைபாலம் மூலம், பரேல் ரயில் நிலையத்துக்கு செல்ல முடியும். நேற்று காலை, 10:40 மணிக்கு, ஒரே நேரத்தில், இரண்டு ரயில் பாதைகளிலும் ரயில்கள் வந்து சேர்ந்தன. அதனால், கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில், கனமழை பெய்ததால்,மழையில் நனையாமல் இருக்க, நடைபாலத்துக்கு மக்கள் முண்டியடித்த னர்.

இந்த நிலையில், கனமழையில் மின்கசிவு ஏற்பட்டு, நடைபாலத்தின் ஒரு பகுதியில், 'ஷாக்' அடிப்பதாக வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து, தப்பிப்பதற்காக, நடைபாலத்தின் படிக்கட்டு வழியாக மக்கள்வேகமாக இறங்க முயன்றனர்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி, சிலர் படிகட்டில் உருண்டனர். பலர் தடுமாறி விழுந்ததால், 25 பேர் நசுங்கி உயிரிழந்தனர். 40க்கு மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.வீண் வதந்தியால் பலர் உயிரிழந்த சம்பவம், மும்பை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைவர்கள் இரங்கல்:

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, பிரதமர்,மோடி, மஹாராஷ்டிரா

முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே நிகழ்ச்சிகள் ரத்து:

மேற்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வே சார்பில்,பல்வேறு புதிய ரயில் சேவைகள், நேற்று துவக்கி வைப்பதாக இருந்தது. ரயில் நிலைய விபத்தால், அவை ரத்து செய்யப்பட்டன. இந்த புதிய ரயில் சேவை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,மூத்த தலைவருமான, பியுஷ் கோயல் நேற்று, மும்பை வந்தார்; விபத்து நடந்த பகுதிக்கு சென்று, பார்வையிட்டார்.

''இந்த சம்பவம் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, மேற்கு ரயில்வேயின் தலைமை பாதுகாப்பு அதிகாரி தலைமையில் விசாரிக்கப்படும். அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என்றார், பியுஷ் கோயல்.

பரேலில் தினசரி பிரச்னை

மும்பையின் ஜவுளி மில்களின் மையமாக பரேல் இருந்தது. கடந்த, 1990களின் கடைசியில், இந்தப் பகுதியில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டது. மில்கள், மிகப் பெரிய அலுவலகங்களாக மாறியுள்ளன. மும்பையின் பிரதான பகுதிகளான நரிமன் பாயின்ட், கபே பரேட் பகுதிகளுக்கு இணையாக, பரேல் மிகப் பெரிய வர்த்தக, தொழில் மையமாக மாறியுள்ளது.

விபத்து நடந்த எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலையத்தில் உள்ள நடை பாலத்தின் வழியாக, பரேல் ரயில் நிலையத்துக்கு செல்ல முடியும்.அதனால், இந்த ரயில் நடைபாலத்தில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பரேல் கடந்த, 30 ஆண்டுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ரயில் நிலையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ற வசதிகள் ஏதும் செய்யப்பட வில்லை.

பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நடைபாலமே, தற்போதும் உள்ளது. இங்கு பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. செய்யப்பட்ட ஒரே மாற்றம், எல்பின்ஸ்டோன் ரோடு என்ற ரயில் நிலையத்தின் பெயர், பிரபாவதி என்று மாற்றியதுதான்.
திண்டுக்கல்லில் 106 மி.மீ.,மழை
பதிவு செய்த நாள்
செப் 30,2017 01:20


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 106.42 மி.மீ.,கூடுதலாக மழை பெய்துள்ளது, என வேளாண் இணை இயக்குனர் தங்கச்சாமி தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல்லில் மாவட்டத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையில் 418.10 மி.மீ.,ல் இதுவரை 524.52 மி.மீ.,மழை பெய்துள்ளது. அதாவது, கூடுதலாக 106.42 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 91 ஆயிரத்து 488 பாசன கிணறுகளில் 50 சதவீத கிணறுகளில் 3 மணி நேரமும், மீத 50 சதவீத கிணறுகளில் 1 மணி நேரம் பாசன வசதி பெறக் கூடிய அளவு நீர் உள்ளது.

மானாவரி நிலங்களில் கோடை உழவு செய்து, மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் பொறியியல் துறை மூலம் 20 இடங்களில் தடுப்பணைகள் அமைத்து, அதன் மூலம் மானாவரி நிலங்களில் நீர் செறிவு உண்டாவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தொகுப்பிலும் சாகுபடி பரப்பு கணக்கிடப்பட்டு, அதற்கு தேவையான இடுபொருள், உரங்கள், விதைகள், நுண்ணுரங்கள் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுஉள்ளது, என தெரிவித்தார்.
மும்பை ரயில் நிலைய விபத்து: விசாரணைக்கு உத்தரவு

பதிவு செய்த நாள்29செப்
2017
13:41



மும்பை: மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் விபத்தில் சிக்கி 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். மேலும் கூறுகையில்; நெரிசலில் சிக்கி மக்கள் பலியான சம்பவம் வருத்தமளிக்கிறது. மேற்குரயில்வே தலைமை பாதுகாப்பு அதிகாரி தலைமையில் விசாரணை நடக்கும் எனவும் கூறினார்.

நடவடிக்கை:

முதல்வர் பட்னாவீஸ் கூறுகையில், ரயில் அமைச்சகமும், மாநில அரசும் இணைந்து விசாரணை மேற்கொள்ளும். சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிவாரணம்:

மகாராஷ்டிரா மாநில அமைச்சர் வினோத் தாவ்தே கூறுகையில், பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களின் செலவை மாநில அரசு ஏற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

வேலூர் ஏ.டி.எம்.,களில் அதிக நீளத்தில் ரூ.500 நோட்டு
பதிவு செய்த நாள்
செப் 30,2017 03:47

வேலுார்: வேலுார், ஏ.டி.எம்.,களில், சரியாக வெட்டப்படாத, 500 ரூபாய் நோட்டுகள் வந்தன.

வேலுார், சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகத்தில், ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்., மில் நேற்று முன்தினம் இரவு, ஒருவர் பணம் எடுத்தார். இதில் 500 ரூபாய் சரியான அளவில் வெட்டப்படாமல், ஒரு முனையில் மட்டும் நீளமாக இருந்தது. இதுபோன்ற நோட்டுகள், சத்துவாச்சாரி, வேலுாரில் உள்ள ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்.,களில் மட்டும், பலருக்கு வந்தது.

வங்கிகள் தொடர் விடுமுறையால், அவற்றை மாற்ற முடியாமல் 20க்கும் மேற்பட்டோர் புலம்பினர். இதற்கு வங்கி நிர்வாகமே காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர்.

Friday, September 29, 2017

Birthday boy, friend drink acid by mistake, die

TNN | Sep 29, 2017, 02:49 IST

HIGHLIGHTS

The boy and one of his friends mistook sulphuric acid for cold drink.

According to police, Sahil was in Class III and Aryan a Class II student.
The boy's father was not in the house during the party, and his wife Sunita was attending to the guests.

BENGALURU: A boy celebrating his ninth birthday and one of his friends died on Wednesday night after they mistook sulphuric acid for cold drink, and drank it.

Sahil Shankar, whose birthday it was, and his goldsmith-father Shankar had invited friends and relatives from the neighbourhood for a party at their Kilari Road residence off Kempe Gowda Road.

After the cake was cut and the guests sat down for dinner, Sahil and his friend Aryan went into a room where Shankar had stored sulphuric acid in a glass bottle for jewellery-related work.

"The children mistook it for a soft drink and drank it. Soon, they collapsed. The guests rushed the children to a private hospital, which referred them to Victoria hospital, where doctors declared them brought dead," a police officer said. The bodies of the boys were handed over to the parents after a postmortem examination on Thursday.

TOP COMMENTUnlabelled sulfuric acid within the reach of a 9 year old ? Unbelievable. Father would have been charged with negligent homicide in the US !Amrit Bindra

According to police, Sahil was in Class III and Aryan a Class II student. Both studied at a private school in Chamarajapet. Shankar was not in the house during the party, and his wife Sunita was attending to the guests.

Police said Shankar's family hail from Maharashtra, and moved to Bengaluru three decades ago. Sahil was the couple's elder child. Aryan too was the elder child of his his goldsmith father, a native of Uttar Pradesh.
Chennai sees huge traffic snarls ahead of Ayudha Puja

Daniel George| TNN | Sep 28, 2017, 16:59 IST

(
CHENNAI: There were huge blocks in Chennai on Thursday, especially on roads leading to Chennai Mofussil Bus Terminus in Koyambedu as commuters made a beeline to take buses to their hometowns ahead of Ayudha Puja.

There were traffic blocks at Arumbakkam, Vadapalani, Kodambakkam and Ashok Nagar.

TOP COMMENT  why these comuters prefer to travel by road to Koyambedu. InsteadThey might have reached a metro station of their choice and took metro to Koyambedu.Since the block is only at Asoknagar and vadapala... Read Morevenkataramans

Sunil Kumar, a marketing executive, said, "It took more than one and a half hours for me to reach Koyambedu from Chennai Central in an autorickshaw in the afternoon. The traffic on the Poonamallee High Road was moving at a snail's pace."

Police said more traffic snarls were expected towards the evening on all roads leading to Koyambedu.
Aravind Eye Hospital opens super speciality eye care centre in Chennai

Pushpa Narayan| TNN | Sep 28, 2017, 19:46 IST

CHENNAI: Madurai-based Aravind Eye Hospital has launched its first super speciality eye care centre in Chennai. With more than 500,000 sq ft with 500 beds exclusively for the underprivileged, treatment will be either free or at subsidised rates.

Hospital chief medical officer Dr Aravind said this would be the 12th hospital of the group.

"There is an increase in the number of patients visiting the hospital year-on-year in Madurai and other locations for speciality eye surgeries which are complex and to avail quality eye treatment at subsidised cost," he said.

"The physical environment and infrastructure developed at Aravind-Chennai is a reflection of the values for which the organisation stands for - transparency, integrity, and compassionate care," he added.
டிஜிட்டல் போதை 2: கையோடு வந்த விபரீதம்

Published : 23 Sep 2017 10:10 IST

வினோத் ஆறுமுகம்





உடலுக்கு வலுச் சேர்க்கும், குழு மனப்பான்மையை வளர்க்கும் விளையாட்டுக்களான கொக்கோ, கபடி, கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளை விளையாடாமல், உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத கிரிக்கெட்டை நம் குழந்தைகள் தங்களுக்கான ஆதர்சமாக எடுத்துகொண்டார்கள். கிரிக்கெட்டை மட்டுமே பராக்கு பார்த்தபடி மெதுவாக விளையாடலாம். களத்தில் குதித்த பிறகு வெளியேறும்வரை எப்போதுமே கவனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பந்துவீச்சாளர் பந்தை வீசும்போதுதான் எல்லோருடைய கவனமும் குவியும். அது மட்டுமல்லாமல், பல நேரம் குழுவைவிடத் தனிநபருக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விளையாட்டு அது.

சுறுசுறுப்பு அதிகம் இல்லாதது என்றாலும், இத்தனை காலம் கிரிக்கெட்டை விளையாடவாவது நம் குழந்தைகள் வெளியே சென்றுகொண்டிருந்தார்கள். வீடியோ கேம் வீட்டுக்குள் நுழைந்தபோது, கிரிக்கெட்டைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டுவிட்டார்கள். வெளியே விளையாட விடாமல் தொலைக்காட்சிகள் அவர்களைக் கட்டி போட்டன. ஒரு நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அவற்றின் இயல்புக்கு ஏற்ப சலிப்பை ஏற்படுத்தத் தொடங்க, வீடியோ கேம் பக்கம் குழந்தைகள் தாவிவிட்டனர். இதெல்லாம் 90-களில் நடந்தது.

அப்போதுதான் நம் ஊரில் வீடியோ கேம்கள் அறிமுகமாகியிருந்தன. ஆரம்ப கால வீடியோ கேம்கள், செல்போன் மாதிரியான ஒரு கருவியில், கறுப்பு வெள்ளைத் திரையில் விளையாடப்பட்டன. ‘ப்ரிக்ஸ்’ என்றொரு கேம். அதில் விதவிதமாக மேலிருந்து கீழே வரும் வடிவங்களைக் காலி இடம் இல்லாமல் நிரப்பிவிட்டால் பாயிண்ட் கிடைக்கும். அடுத்து ‘ஸ்னேக்ஸ்’ எனும் பாம்புபோல் ஊர்ந்துசெல்லும் டிஜிட்டல் பிக்ஸல்களை ஒன்றிணைக்க வேண்டும். இடம் வலம் மாத்திரம் செல்லும் ‘கார் ரேஸ்’ விளையாட்டு. அன்றைக்கு இருந்த வீடியோ கேம் வகைகள் அவ்வளவுதான்!

வியக்க வைக்கும் சந்தை

தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து விளையாடும் வீடியோ கேம் அதன் பிறகு வந்தது. வீடியோ கேம் வண்ணம் பெறத் தொடங்கியது. கணினிகள் பரவலாகாத காலம். ஆரம்பகால செல்போன்களும் கறுப்பு வெள்ளையில்தான் இருந்தன. நோக்கியாதான் முதன் முதலில் செல்போனில் கேமை அறிமுகப்படுத்தியது. எங்கள் செல்போனில் பேசலாம், பொழுதைப்போக்க விளையாடவும் செய்யலாம் என விளம்பரப்படுத்தியது. அப்போது சிறுவர்கள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் விளையாடத் தொடங்கினார்கள். அதன்பிறகு வீடியோ கேம் விளையாடும் பெரியவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது.

இன்றைக்கு வீடியோ கேம் அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது. இன்றைய இந்தியா வீடியோ கேமுக்கு மாபெரும் சந்தை. 2018-ல் இந்தியாவின் வீடியோ கேம் சந்தை மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய் என்ற தகவல் ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால், இந்தியர்களிடமிருந்து இவ்வளவு பணத்தைக் கறக்கலாம் என்பதே சந்தை மதிப்பீடுகள் முன்வைக்கும் உண்மை. ஆரம்ப கால வீடியோ கேம் உடன் ஒப்பிட்டால் கிராஃபிக்ஸ், விளையாட்டின் சிக்கல், உத்திகள், விளையாடும் முறை எனப் பல வகைகளில் வீடியோ கேம் முன்னேறியிருக்கிறது.

இன்றைக்கு வீடியோ கேம் மூன்று வகைகளில் விளையாடப்படுகிறது. ஒன்று சிடி, டிவிடி மூலமோ அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்தோ அல்லது ‘ஆப்’ மூலமாகவோ விளையாடப்படுகிறது. இவை ஆஃப்லைன் கேம்ஸ். அதாவது, இணைய வசதியில்லாமலேயே விளையாடுவது. இரண்டாவது, ‘எக்ஸ் பாக்ஸ்’ போன்ற கேமிங் கன்சோல். தொலைக்காட்சியுடன் இணைத்து விளையாடுவது. மூன்றாவதாக, இணைய உதவியுடன் விளையாடுவது.

பொதுவாக ‘விளையாடாதே. படி, படி!’ என நச்சரிக்கும் பெற்றொர்களே, தம் குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுவதைப் பெருமையாகக் கருத ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களே அதை ஊக்குவிக்கவும் செய்கிறார்கள். இந்த முரண்பாட்டைப் பற்றி பின்னர் விரிவாகப் பேசுவோம்.

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர் | தொடர்புக்கு: write2vinod11@gmail.com
வெற்றுச் செலவல்ல ஓய்வூதியம்!

Published : 28 Sep 2017 10:03 IST

மணி. கணேசன்




அரசின் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசு ஊழியர்களின் பங்களிப்புகள் அளப்பரியவை. ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகள், கருத்துகள், செயல்திட்டங்கள் போன்றவற்றைப் பலவகையிலும் ஆராய்ந்து, அவை அரசின் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் வடிவம் கொடுப்பதில் ஊழியர்களின் இரவு பகல் பாரா உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. தேர்தல் காலம், பேரிடர் காலம், நிவாரண உதவிகள் அளித்தல், தேர்வுக்கான தயாரிப்பு மற்றும் திருத்தும் பணிகள் முதலானவற்றின்போது அந்தந்தத் துறைகள் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கிறது. பச்சிளங்குழந்தைக்குப் பாலூட்டவோ சோறூட்டவோ இயலாமல் நெரிகட்டிக்கொண்டு தவிக்கும் பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளின் அவலப்பாடுகள் சொல்லி மாளாதவை.

ஊதியம் வழங்கல் என்பது உழைப்பிற்கானது என வரிந்து கட்டிப் பேசுவதில் பயனில்லை. உழைப்பிற்கு உரிய நியாயமான ஊதியத்திற்கான போராட்டமானது அனைத்து நிலைகளிலும் தொன்றுதொட்டு நடந்து வரும் துர்ப்பாக்கிய நிலையேதான் இங்கும் உள்ளது. அப்படியிருக்கும்பட்சத்தில், மிகையான உழைப்பிற்கான ஊதியத்தைக் கோருவதென்பது இயலாத ஒன்றாக உள்ளது. இக்கோரிக்கையானது ஆட்சியாளர்களும் பொதுமக்களும் ஆகப் பெரிய சமூகக் குற்றமாகப் பார்க்கப்பட்டுப் பரப்புரை செய்யப்படும் நிலையை என்னவென்பது?

அரசு ஊழியர்களும் தொழிலாளர்களே

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏனையோரைப் போன்றே வாழக் கடன்பட்டவர்கள். பன்னாட்டுத் தொழிலாளர்கள் அமைப்பு பரிந்துரைக்கும் ஊதியம் மற்றும் விடுப்புகள் சார்ந்த எல்லாவித உரிமைகளுக்கும் உட்பட்டவர்கள். இவர்கள் யாவரும் தமக்குத் தாமே ஊதியங்களை நிர்ணயம் செய்து கொள்ளும் அதிகாரம் படைத்தவர்களும் அல்லர். நாட்டின் நிதிநிலைமைகளைக் கருத்தில் கொண்டு மனத்தளவில் ஒப்புக்கொண்டாலும்கூட, நியாயத்திற்கு சற்றும் பொருந்தாதவகையில் பரிந்துரைக்கப்படும் ஊதியக்குழுவின் அறிக்கையிலும் ஆயிரம் குளறுபடிகள்!

இந்த நிலையில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதன்பின் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கு பல கட்டப் போராட்டங்களையும் இழப்புகளையும் எதிர்கொண்டாலும் உரிய நியாயங்கள் இதுவரையிலும் கிடைக்கவில்லை.

ஊதிய முரண்பாடுகளும் வேறுபாடுகளும் சுரண்டப்படும் உழைப்பின் வலிகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன. இவையே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் போராட்டக் களத்திற்கு இட்டுச் செல்கின்றன. மக்களையோ மாணவர்களையோ பாதிக்கச் செய்வது இத்தகையோரின் நோக்கமல்ல.

புதிய ஓய்வூதியத் திட்டம்

அரசு ஊழியர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்ட நியாயங்களை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டித் தக்க நீதியை நிலைநாட்டிடவே அறவழிப் போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. பணிக்காலத்தில் மாத ஊதியம் மற்றும் இதர ஊதியப் பணப்பலன்களும் பணிநிறைவுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற ஒவ்வொரு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தகுதியுடையவராவர்.

காலப்போக்கில் உலகமயம், தாராளமயம் மற்றும் உலக வங்கியின் நிர்ப்பந்தம் காரணமாக இந்த அடிப்படை உரிமை பறிபோனது. ஆம், ஓய்வூதியம் வழங்கும் முறையில் 2003 – 2004 ஆம் ஆண்டுகளில் பழைய நடைமுறைகள் யாவும் ஒழிக்கப்பட்டு மாறாக, புதிய சீர்திருத்தங்கள் ஓய்வூதியத் திட்டத்தில் புகுத்தப்பட்டன.

குறிப்பாக, 2003 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பின் தமிழக அரசுப் பணிகளில் நியமனம் பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் கட்டாயமாக உட்படுத்தப்பட்டனர். இவர்களிடமிருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கென பங்களிப்பாக, ஒவ்வொரு பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றிலிருந்து 10% தொகைப் பிடித்தம் செய்யப்படுகிறது. அதேவேளையில் அரசும் அதே அளவு தொகையைச் செலுத்துவதை உறுதியளித்துள்ளது.

மேலும், மொத்தக் கூடுதல் தொகைக்கு ஆண்டுதோறும் ஏனைய ஊழியர் சேம நலநிதிக்கு வழங்கப்படும் வட்டியினைத் தந்து அரசின் கருவூலக் கணக்குத் துறை, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தின் உதவியுடன் இதன் கணக்குகளைப் பராமரித்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சற்றேறக்குறைய 4,62,000 பயனாளிகளாக உள்ளனர்.

மறுக்கப்படும் உரிமைகள்

இப்புதிய ஓய்வூதியத் திட்டமானது பழைய ஓய்வூதிய நடைமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பணி ஓய்விற்குப் பின் ஓர் அரசு ஊழியர் பழைய ஓய்வூதியத்தின்கீழ் பெறும் அகவிலைப்படி மாற்றம் நிரம்பிய பணிக்காலத்தில் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் பாதியளவிலான ஓய்வூதியம், இறப்பிற்குப் பின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறும் நிகர ஊதியம் ஆகிய வசதிகள் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியருக்கும் ஆசிரியருக்கும் மறுக்கப்படுவதாக உள்ளது.

14 ஆண்டுகால தொடர் போராட்டத்தின் விளைவாக, அண்மையில்தான் தமிழக அரசின் நிதித்துறை செய்திக் குறிப்பில் 4,62,327 பேரின் பங்களிப்புத் தொகை, அரசுப் பங்களிப்புத் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.18,016 கோடி ரூபாய் அரசின் பொதுக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது.

தவிர, இத்திட்டத்தின்படி பணிநிறைவு, பணிவிலகல் மற்றும் இறப்பு ஆகியவற்றினை எதிர்கொள்ளும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் மொத்தம் சேமித்த பணத்தில் 60% தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும் எனவும் மீதமுள்ள 40% பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து பெறப்படும் லாபத்தொகையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான தொகை ஓய்வூதியமாக அளிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

இதுபோன்ற நடைமுறையை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கி உள்ளனர். விதிவிலக்காக திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னும் தொடர்கிறது.

அறுபது வயதை எட்டுவோர் மிச்சமுள்ள ஏனைய காலங்களில் இளம் வயதினர் போல் ஓடியாடி உழைத்திட இயலாது. புதிய திட்டத்தின்கீழ் பணி ஓய்வுப் பெற்றோரைக் கொண்டாடிடும் இனிய தருணங்கள் பழங்கதைகளாகவோ கற்பனைகளாகவோ எதிர்பார்ப்புகளாகவோ மட்டுமே இருக்கும். இப்படி கைவிடப்பட்டவர்களால் ஆயிரமாயிரம் நெஞ்சைப் பிளக்கும் கண்ணீர்க் கதைகள் ஓலமிட்டுக் காற்றில் பிசுபிசுக்கும். அரசின் நிர்வாகம் தலைசிறக்க தம் ஆயுள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருண்ட வாழ்க்கைக்கு இந்த இரு அரசுகளின் கைமாறுதான் என்ன?

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு உழைத்தோருக்கான வெற்றுச் செலவு அல்ல ஓய்வூதியம். மூத்த குடிமக்களை நிம்மதியாகவும் மரியாதையுடனும் வாழ வழிவகுக்கும் உபரி ஊதியம். அவ்வளவே!

- மணி. கணேசன்,

தொடர்புக்கு: mani_ganesan@ymail.com
நாளை விஜயதசமி
பதிவு செய்த நாள்29செப்
2017
01:48




நாளை விஜயதசமியை ஒட்டி அம்பிகையை விஜயாம்பாளாக (பார்வதியின் ஒரு அம்சம்) அலங்கரிக்க வேண்டும். பூஜையறையில் மலர்க் கோலமிட வேண்டும். பால் பாயாசம், இனிப்பு வகை, பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டின் மூலம் சகல சவுபாக்கியமும் உண்டாகும்.

மகிஷாசுரன் தனக்கு ஓரு பெண்ணால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் பெற்றான். வரத்தின் பலத்தால் தேவர்களைத் துன்புறுத்தினான். இதற்கு முடிவு கட்ட எண்ணிய சிவன், தன் ஆயுதமான திரிசூலத்தை அம்பிகைக்கு வழங்கினார். திருமால் உள்ளிட்ட தேவர்களும் தங்களின் ஆயுதங்களைக் கொடுத்தனர். சிங்க வாகனத்தில் புறப்பட்ட அம்பிகை அசுரனைக் கொன்று வெற்றி வாகை சூடினாள். விஜயதுர்கா, மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றாள். இந்த வெற்றிக்குரிய நன்னாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.

பாட வேண்டிய பாடல்

மாலயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்தகப்பு
வேலை வெங்காலன் என் மேல் விடும் போது வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே.
மருத்துவ பேராசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்
பதிவு செய்த நாள்29செப்
2017
00:59

சென்னை: மருத்துவ கல்லுாரி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், அக்., 3, 4ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: அரசு மருத்துவ கல்லுாரிகளில் பணியாற்றும், அனைத்து துறை இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், அக்., 3, 4ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கவுன்சிலிங், சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தில், காலை, 9:00 முதல், பகல், 1:00 மணி வரை நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பல்கலைகளில் வன்முறை நிகழ யார் காரணம்?

பதிவு செய்த நாள்28செப்
2017
23:50

பல்கலைகளில், துறை தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, உச்சபட்ச அதிகாரங்களால், பேராசிரியர்களை கொலை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு, நிர்வாக குளறுபடி ஏற்பட்டு உள்ளது. மதுரை, காமராஜர் பல்கலையில், வேலையில் இருந்து நீக்கிய காரணத்தால், இதழியல் துறை தலைவரான, பேராசிரியை ஜெனிபாவை, கவுரவ விரிவுரையாளர் ஒருவர், கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம், அனைத்து பல்கலைகளின் நிர்வாகத்தையும், சீர் செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, ௧௩ பல்கலைகளில், துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர், நிர்வாக பணிகளை கவனிக்கின்றனர். பாடவாரியான துறைகளை, அதன் தலைவர்களே நிர்வகிக்கின்றனர். மாணவர் சேர்க்கை, ஆராய்ச்சி நிதி பெறுவது, பல்கலை மானியக் குழுவின் திட்டங்களை செயல்படுத்துவது, பிஎச்.டி., ஆராய்ச்சி மாணவர்களை சேர்ப்பது, தற்காலிக சம்பளத்தில், கவுரவ ஆசிரியர்களை நியமிப்பது போன்ற பணிகளையும், துறை தலைவர்களே மேற்கொள்கின்றனர்.

ஊதியம் தருவதில்லை : இது குறித்து, கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு பல்கலையிலும், துறை தலைவர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர். அவர்களே, பிஎச்.டி., படிப்புக்கு வழிகாட்டியாகவும் உள்ளதால், ஆராய்ச்சி மாணவர்களையும், கவுரவ விரிவுரையாளர்களையும், பணியாளர்களை போல் நடத்துகின்றனர்.

துறை தலைவர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகள், வணிக பிரபலங்கள், அரசு உயர் அதிகாரிகள் என, பெரும் செல்வந்தர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும், அதிகார மையங்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களாகவும் உள்ளனர். 

அதனால், துணைவேந்தர்களால், துறை தலைவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. கவுரவ விரிவுரையாளர் நியமனத்தில், துறை தலைவர்கள், விதிகளை பின்பற்றுவதில்லை. தங்களின் சுயவிருப்பம், சிபாரிசுகளின் படியே, நியமனம் நடக்கிறது. 

ஆராய்ச்சி மாணவர் களாகவும், வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களாகவும் இருக்கும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு, உரிய நேரத்தில் ஊதியமும் தருவதில்லை.

தீர்வு வேண்டும் : சென்னை பல்கலை, மதுரை காமராஜர், கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் போன்ற பல்கலைகளில், ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி மாணவர்கள், துறை தலைவர்களின் ஆதிக்கத்தால், ஆராய்ச்சி படிப்பை முடிக்க முடியாமல், பல ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர். இது போன்ற காரணங்களால், துறை தலைவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் சரியான நல்லுறவு இல்லாமல், மோதல் போக்கு நிலவுகிறது. இதற்கு, உயர் கல்வித் துறை தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை ரூ.1.55 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
பதிவு செய்த நாள்29செப்
2017
01:25

சென்னை: தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை, 1.55 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த, ஸ்ரீதேவி தாக்கல் செய்த மனு: என் மகள் நித்யஸ்ரீ, நேரு விளையாட்டரங்கில் விளையாடியபோது, சறுக்கி விழுந்ததால், இடது கை எலும்பு முறிந்தது. சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய், மருத்துவ செலவு ஆனது.
'உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது; சில நாட்களில் சரியாகிவிடும்' என, மருத்துவர்கள் தெரிவித்து, நித்யஸ்ரீயை, 'டிஸ்சார்ஜ்' செய்தனர்.
ஆனால், தவறான சிகிச்சையால், வீக்கம், வலி குறையவில்லை. இதனால், மன உளைச்சலுக்கு ஆளானோம். மருத்துவ செலவுடன், உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

வழக்கு விசாரணையில், 'பாதிப்பிற்கு, சிகிச்சை பெற்றவரின் கவனக்குறைவே காரணம். சிகிச்சைக்கு பின், கையை கவனமாக வைத்துக் கொள்ளவில்லை. எங்கள் சேவையில் குறைபாடில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, மருத்துவமனை நிர்வாகம் வாதிட்டது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மருத்துவமனை சேவையில் குறைபாடு உள்ளது. பாதிப்படைந்த மனுதாரருக்கு, மருத்துவ செலவு தொகை, ஒரு லட்சம் ரூபாயுடன், சேவை குறைபாட்டிற்கு, 25 ஆயிரம் ரூபாயும், இழப்பீடு, 25 ஆயிரம் ரூபாயும், வழக்கு, செலவு, 5,000 ரூபாய் என, மொத்தம், 1.55 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தர விடப் பட்டுள்ளது.

கல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் நவராத்திரி ஸ்பெஷல்
பதிவு செய்த நாள்29செப்
2017
01:43




இன்று நவராத்திரி ஒன்பதாம் நாள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய அனைத்திற்கும், மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சமும் பெற வகை செய்பவள் தேவியே. முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள், பராசக்தியே!

அம்பிகை அருளைப் பெற, அந்த மங்கள நாயகியின் அம்சம் கலந்த கன்னியா ராசியும், அந்த ராசிக்குரிய மாதமான புரட்டாசியிலும் வரும் நவராத்திரியில், அவளை வணங்குவது, மிகுந்த பலனை அளிக்கும்.மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடுவது, இந்த நவராத்திரி பூஜையில் தான் என்பது சிறப்புடையது.

அலங்காரம்

இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக, சித்திதாத்ரியாக வழிபட வேண்டும். வில், அம்பு, அங்குசம், சூலம் முதலியவற்றை தரித்த கோலத்தில், அம்பிகையை பூஜிக்க வேண்டும். சிவசக்தி வடிவமாகிய காமேஸ்வரியாய் காட்சி அளிக்கிறாள். இது அரக்கர்களை அழித்த தோற்றம். அன்ன வாகனத்தில் இருப்பவள்; வாக்கிற்கு அதிபதியானவள்; ஞான சொரூபமானவள். கல்விச்செல்வம் பெற, அன்னையின் அருள் அவசியம்.

கடைசி நாளான இன்று, எட்டு சித்திகளையும் உள்ளடக்கி, சித்திதாத்ரி விளங்குகிறாள் எனக் கூறப்படுகிறது. தாமரை மீது வசிக்கும் இவளை, சாதுக்கள், யோகிகள், சித்தர்கள் வணங்குகின்றனர்.

அலங்கார காரணம்

சித்தி என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றால் தருபவள் என்றும் பொருள். சித்திதாத்ரி என்றால் பக்தருக்கு அனைத்து சக்தியையும் தருபவள் என்று பொருள். இவளை வழிபாடு செய்த சிவன், அனைத்து சித்திகளையும் பெற்று, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என, தேவி புராணம் கூறுகிறது
அக்காலத்தில் போர் செய்வது அதிகமாக இருந்தபடியால், வாள், வேல் முதலியவற்றையும் பூஜிப்பர். இவற்றைப் பயிற்றுவிக்கும் குருவுக்கும் மரியாதை செய்வர். ஆகவே, ஆயுத பூஜை
தினம் என்று, இதற்குப் பெயர் வந்தது.

அதனால் தான் தாமரை மலரில் அமர்ந்து, இடது இரண்டு கரங்களில், கதை, சக்கரமும், வலது இரண்டு கரங்களில், தாமரை, சங்கு ஏந்தியவளாகவும் காட்சி தருகிறாள்.

வழிபாடு

படிக்கும் புத்தகங்களை அடுக்கி, அதன் மீது சரஸ்வதி தேவியின் உருவப்படத்தையோ, விக்கிரகத்தையோ வைத்துப் பூஜிப்பது வழக்கம். இன்று வீட்டிலுள்ள சுவாமி படங்கள், பெட்டிகள், கதவு நிலைகள், ஜன்னல்கள் எல்லாவற்றிற்கும், சந்தனம், குங்குமம் இடுவது வழக்கம்.

கொலு வைக்கும் வழக்கம் இல்லாதவர்கள் கூட, அவசியம், சரஸ்வதி பூஜை செய்ய வேண்டும். வண்டி வாகனங்களைத் துடைத்து பொட்டு வைத்து பூமாலை போட வேண்டும். அலுவலகங்களில் ஆயுத பூஜை நடத்துவது வழக்கமாக உள்ளது.

கோலம்

பச்சைக் கற்பூரம் கொண்டு, ஆயுத கோலம் போடுவது சிறப்பு.

மலர்கள்

மல்லிகை, பிச்சி, துளசி, தாமரை மலர்களால் ஆன மாலையை, அம்மனுக்கு சூட்டி வணங்குவது வழக்கம்.

பாசிப் பயறு சுண்டல், கல்கண்டு சாதம், அக்கார வடிசல் போன்ற நிவேதனங்களோடு, உளுந்து வடை, பாயசம், பச்சடி, கறி வகைகள் என, விருந்தாக சமைப்பது வழக்கம்.

இந்தளவிற்கு விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் இரு வேளையும் விளக்கேற்றி, மானசீகமாக அன்னை கொலுவில் எழுந்தருளப் பிரார்த்தித்து, அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் சொல்லி அம்பிகையைப் பூஜிக்கலாம்.பூஜை முடிவில், யாராவது ஒருவருக்கேனும் தாம்பூலம் தருவது நல்லது. பக்தி ஒன்றே,அம்பிகையிடம் நாம் வேண்டுவது; ஆடம்பர அலங்கார செலவினங்களை அல்ல.

மகாகவி பாரதியார், நவராத்திரி பாடல்கள் மற்றும் கட்டுரைகள் நிறைய எழுதியுள்ளார்.

அதில் நமக்கான ஒரு செய்தியாக...'இந்த நவராத்திரி பூஜைகளின் நோக்கம், உலக நன்மை மட்டுமே. நவராத்திரி காலத்தில் யோக மாயை, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று வித வடிவங்கொண்டு துஷ்டரை அழித்து, மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருக வைக்கிறது.

'அந்த சக்தியால் தான் உலகம் வாழ்கிறது. நாம் வளமான இன்பமான வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் அந்த பராசக்தியை வேண்டுகிறோம்' என்று அருமையாக பாடி விட்டுச் சென்றுள்ளார்.

'நவராத்திரி நாயகியரை வணங்கிப் போற்றி, நாளும் நாளும் உயர்வோர், நன்மையைப் பெறுவரே' என்ற ஞானசம்பந்தர் சொற்படி, நவராத்திரி விரதங்கள், பூஜைகள் கடைபிடித்து, நல்பலன்களை பெறுவோம்.சண்டி தேவியை ஆத்மார்த்தமாக ஆராதித்து, பூஜையை முடித்த பின், பூசணிக்காயினுள் குங்குமம் வைத்து, வாசலில் உடைக்க வேண்டும்.
அதை அப்படியே, நடு சாலையில் விட்டு விடாமல், சிறிது நேரத்திற்குப் பின், சுத்தம் செய்து விடுவது நல்லது.

வரம் தரும் நவராத்திரி

சரஸ்வதி பூஜை வழிபாடு

வீட்டிலுள்ள நிலை, கதவு,ஜன்னல் எல்லாவற்றையும் துாய்மை செய்து அவற்றிற்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கவும். பூஜையறையின் முன் மேஜையிட்டு பட்டுத்துணி விரித்து, புத்தகம், பேனா, பணப்பெட்டி முதலியவற்றை வைத்து பொட்டு வைத்து அலங்கரிக்கவும். மற்றொரு மேஜையிட்டு அதன் மீது வீட்டில் உபயோகிக்கும் அரிவாள்மனை, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கழுவி வைத்து அலங்கரிக்கவும். விவசாய உபயோகக் கருவிகளை அவை இருக்குமிடத்திலேயே கழுவி வைத்து அலங்கரிக்கலாம்.

மாடு, கன்றுகளை தொழுவத்தில் குளிப்பாட்டி சந்தனம், குங்குமமிட்டு மாலைகளால் அலங்கரிக்கவும். தொழில் நிறுவனங்களிலுள்ள இயந்திரங்களை அவ்வாறே துாய்மை செய்து அலங்கரிக்கவும்.

பூஜை பொருட்கள்

குங்குமம், சந்தனம், விபூதி, உதிரிப்பூக்கள், பூச்சரங்கள், மாலைகள், பொரிகடலை, சர்க்கரை, சுண்டல், இனிப்பு வகைகள், பழங்கள், வெற்றிலைப்பாக்கு, சூடம், பத்தி, சாம்பிராணி, குத்துவிளக்குகள், கைமணி தீர்த்த பாத்திரம் ஆகியவற்றை முன்கூட்டியே தயார் செய்து கொள்ளவும்.
விளக்கேற்றிய பின் மணியடித்து பூஜையைத் துவக்கவும்.

மஞ்சள் பொடி அல்லது பசும் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல்லால், 'ஓம் கணபதயே நமஹ' என்று அர்ச்சனை செய்து துாபம் காட்டி பழம், வெற்றிலைப்பாக்கு நிவேதனம் செய்து சூடம் காண்பித்து வழிபடவும். குழந்தைகளுக்கு படிப்பு, தொழில், வியாபாரம் எல்லாம் எவ்வித இடையூறுமின்றி நல்லபடியாக நடக்க சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்கிறோம் என விநாயகரிடம் வழிபட வேண்டும்.

புத்தகங்களை பூக்களால், 'ஓம் ஸ்ரீசரஸ்வதி தேவ்யை நமஹ' என்று அர்ச்சிக்கவும். பேனா, பென்சில்களில், 'ஓம் லேகினீ சக்தயே நமஹ' என்றும், அரிவாள், அரிவாள்மனை, கத்திஇவற்றை,
'ஓம் கட்கினீ சக்தயே நமஹ' என்றும்,மண்வெட்டியில்,'ஓம் குந்தாளி சக்தயே நமஹ' என்றும், ஏர்கலப்பையில், 'ஓம் ஹலாயுத சக்தயே நமஹ' என்றும், பசுமாட்டை, 'ஓம் கோமாதா தேவ்யை நமஹ' என்றும், காளையை, 'ஓம் ரிஷபதேவாய நமஹ' என்றும், இரு சச்கர, நான்கு சக்கர மற்றும் மாட்டுவண்டிகளை,'ஓம் த்வரிதா சக்தயே நமஹ' ஓம் சகட தேவதாயை நமஹ என்றும் வாசல் நிலை, கதவுகள், ஜன்னல்கள் எங்கும்,'ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்ம்யை நமஹ' என்றும்,
இயந்திரங்கள், மோட்டார்கள் எல்லாவற்றிலும்,'ஓம் ஸ்ரீதுர்க்காதேவ்யை நமஹ' என்றும் அர்ச்சனை செய்து மணியடித்தவாறு சாம்பிராணி துாபம் எல்லாவற்றிற்கும் காட்டவும்.

ஒரு பாத்திரத்தில் நிவேதனப் பொருட்களை எடுத்துக்கொண்டு, பூஜை நடத்திய இடங்களுக்கு மணியடித்தபடியே சென்று, நீரால் மூன்று முறை சுற்றி நிவேதனம் செய்து வழிபடவும். தேங்காய் உடைத்த பின், சூடம் ஏற்றி மணியடித்தபடி புத்தகம் முதல் எல்லாவற்றிற்கும் தீபாராதனை செய்து வழிபடவும். பிறகு, குடும்பத்தினர் கையில் உதிரிப்பூக்கள் கொடுத்து சரஸ்வதி பாதத்தில் துாவச் சொல்லி வழிபடவும். விபூதி, குங்குமம், பொரிகடலை இனிப்புகள் ஆகியவற்றை எல்லாருக்கும் வழங்கிய பின் ஆரத்தியெடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.

ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

மயிலாடுதுறை

பாடல்

வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளத்
தண்டா மரைகுத் தகாது கொலோ சகமேழுமளித்து
உண்டானுறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலா வல்லியே!
தஞ்சை - திருச்சி சோதனை ஓட்டம் : 30ல் ரயில்கள் நேரம் மாற்றம்

பதிவு செய்த நாள்29செப்
2017
01:03

விருத்தாசலம்: தஞ்சை - திருச்சி இருவழி பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதால், 30ம் தேதி, ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு, மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.

தஞ்சாவூர் - திருச்சி இடையே, இருவழி ரயில் பாதை பணிகள் முடிந்துள்ளன. பொன்மலை - சோழகம்பட்டி இடையிலான, 20 கி.மீ., பாதையில், 30ம் தேதி, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை ஓட்டம் நடக்கிறது.
இதனால், அன்று ஒரு நாள் மட்டும், திருச்சி மார்க்கத்தில் வந்து செல்லும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு, மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, திருச்சி - சென்னை சிறப்பு ரயில், 30ம் தேதி, மாலை, 3:35 மணிக்கு பதிலாக, 2:00 மணி நேரம் தாமதமாக, 5:35 மணிக்கு புறப்படும். கன்னியாகுமரி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.

சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையில் இருந்து, விருத்தாசலம், சேலம், கரூர் மார்க்கமாக திருச்சி செல்லும். இதேபோல், குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், 29ம் தேதி, திருச்சியில் இருந்து, கரூர், சேலம், விருத்தாசலம் வழியாக சென்னை செல்லும்.
மேலும், அன்று, கடலுார் - திருச்சி பாசஞ்சர் ரயில், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்; திருச்சி - கடலுார் பாசஞ்சர் ரயில், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
திரிலம் ரயில் நிலையத்தில் காதலருக்கு தடை!
பதிவு செய்த நாள்29செப்
2017
00:50

திரிசூலம் ரயில் நிலையத்தில், காதலர்களுக்கு தடை போடப்பட்டு உள்ளது.
சென்னை, திரிசூலம் ரயில் நிலையத்தில், காதலர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதும், மாலை நேரத்தில், எதிரில் உள்ள ஆபத்தான காட்டு பகுதிக்குள் சென்றனர்.

இது குறித்து, நமது நாளிதழில், 'திரிசூலம் ரயில் நிலையம் காதலர் பூங்காவானது' என, செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். நிலையத்தில், ரயில் பயணத்திற்கு தொடர்பின்றி அமர்ந்திருக்கும் நபர்கள் வெளியேற்ற படுகின்றனர்.

ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி கூறியதாவது: ரயில் டிக்கெட் வைத்திருப்பதால், அவர்களை உடனடியாக வெளியேற்ற முடியவில்லை. சிலர், எதிரில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்றுவிடுகின்றனர். காட்டுபகுதியில், ஏதும் அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
மின் கட்டணம் செலுத்த கிடைக்குமா அவகாசம்?
பதிவு செய்த நாள்29செப்
2017
00:31


தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த, மின் வாரியம் கூடுதல் அவகாசம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு, நுகர்வோரிடம் எழுந்துள்ளது.

வீடுகளில், மின் வாரிய ஊழியர்கள், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கின்றனர். கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள், மின் கட்டணம் செலுத்த வேண்டும்
.
இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின், அபராதத் தொகையுடன், கட்டணம் செலுத்தியதும், மீண்டும் இணைப்பு வழங்கப்படும். ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இன்று முதல், வரும் திங்கள் வரை, தொடர்ந்து அரசு விடுமுறை.

மின் நுகர்வோர் கூறியதாவது: இணையதளம், மொபைல், 'ஆப்' வசதிகளை, மின் வாரியம் ஏற்படுத்தி இருந்தாலும், பலரும், மின் கட்டண மையங்களில் தான், கட்டணத்தை செலுத்துகின்றனர். இது, அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள், விடுமுறையாக இருந்தால், அதற்கு அடுத்து வரும், முதல் வேலை நாளில், அபராதம் வசூலிப்பதில்லை. தற்போது, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என, தொடர்ந்து விடுமுறை. இந்த நாட்களில், கட்டணம் செலுத்த கடைசி நாள் உள்ள நுகர்வோர், செவ்வாய் கிழமை கட்டணம் செலுத்தினால், அபராதத்தை தவிர்ப்பர். 

தொடர் விடுமுறையால், பலர், ஊர்களுக்கு சென்றுள்ளனர். மாத இறுதியில் பண்டிகைகளும் வந்ததால், செலவு அதிகம் இருக்கும். அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்த, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
'ஸ்வயம்' படிப்புக்கு அவகாசம் நீட்டிப்பு

பதிவு செய்த நாள்29செப்
2017
00:06

கல்லுாரிகளில், 'ஆன் - லைன்' படிப்பு துவங்க, அனுமதி பெறுவதற்கான காலக்கெடு, அக்., ௩௧ வரை நீடிக்கப்பட்டு உள்ளது. சிறந்த வல்லுனர்கள், அறிவியல் அறிஞர்களால் நடத்தப்படும், 'ஸ்வயம்' என்ற, ஆன் - லைன் படிப்பு, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த ஆண்டு, 'ஸ்வயம் ஆன் - லைன்' படிப்பை நடத்த, கல்லுாரி, பல்கலைகளின் பேராசிரியர்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டன. இதையடுத்து, புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த விதிகளின்படி, கல்லுாரிகள், பல்கலைகளில், 'ஆன் - லைன்' படிப்பை கட்டாயமாக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு அனுமதி பெறுவதற்கு, செப்., ௨௫க்குள் விண்ணப்பிக்க, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்தது. 

தற்போது, அனைத்து கல்லுாரி, பல்கலைகளிலும் மாணவர்களை சேர்க்கும் வகையில், அனுமதி பெறுவதற்கான அவகாசத்தை, அக்., 31 வரை நீடித்து, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

- நமது நிருபர் -
சிறப்பு பஸ்கள் இயக்குவதில் தொழில் நகரங்கள் புறக்கணிப்பு
பதிவு செய்த நாள்
செப் 29,2017 02:02



சேலம்: சரஸ்வதி பூஜை, தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்குவதில், தொழில் நகரங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது, தென் மாவட்ட மக்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க, முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

தற்போது, வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பஸ்களும், சென்னையில் இருந்து இயக்குவதற்காக, திருப்பி விடப்பட்டுள்ளன. பெங்களூரில் இருந்து, சேலம் மார்க்கமாக, தென் மாவட்டங்களுக்கு, 42 விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 22 பஸ்களின் முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சென்னைக்கு மாற்றி விடப்பட்டுள்ளன. மீதமுள்ள, 26 பஸ்களின் முன்பதிவு அனைத்தும், செப்., 27 துவங்கி, அக்., 2 வரை முடிந்துவிட்டன. நேற்று முன்தினம், தென் மாவட்டங்களுக்கு சென்ற முன்பதிவு செய்யாத பயணியர், வேறு வழியின்றி, நின்று கொண்டும், பஸ்சின் உள்ளே உள்ள வழித்தடத்தில் உட்கார்ந்தும் சென்றனர். இதே நிலை, தீபாவளி பண்டிகையின் போதும் தொடரும் என்பதால், தென் மாவட்ட பயணியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வி.வி.ஐ.பி.,க்கள் கவனம் திரும்புமா? :

திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில், மளிகை கடை உட்பட பல்வேறு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பண்டிகை நேரத்தில் கூட, நிம்மதியாக சொந்த ஊர் சென்று வர முடியவில்லை. தமிழகத்தின் தற்போதைய, வி.வி.ஐ.பி.,க்களான, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் ஆகியோர், சிறப்பு பஸ்கள்இயக்குவதில், தொழில் நகரங்களுக்கு முக்கியத்துவம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருமலையில் ஒரே நாளில் 2 லட்சம் பேர் முடி காணிக்கை
பதிவு செய்த நாள்29செப்
2017
00:21




திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், ஒரே நாளில், இரண்டு லட்சம் பேர், தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். திருமலையில், நேற்று முன்தினம் நடந்த கருடசேவையை காண, திரளான பக்தர்கள் கூடினர். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலையில் உள்ள, தலைமுடி காணிக்கை செலுத்தும் மையங்கள், 24 மணிநேரமும் திறந்திருந்தன. இங்கு, 250 பெண்கள் உட்பட, 1,400 நாவிதர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருடசேவை அன்று மட்டும், 2.30 லட்சம் பக்தர்கள், தங்கள் தலை முடியை, ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்திஉள்ளனர். தேவஸ்தான வரலாற்றில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர், ஒரே நாளில், தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியதாக, இதுவரை பதிவுகள் இல்லை.
ஏ.டி.எம்.,களில் ரூ.1 லட்சம் கோடி
தொடர் விடுமுறையை சமாளிக்க நடவடிக்கை

தொடர் விடுமுறையால், தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகளின், ஏ.டி.எம்.,களில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, பணம் நிரப்பப்படுகிறது. தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.



ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வங்கிகளுக்கு, இன்று முதல், நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை. அதனால், வங்கி, ஏ.டி.எம்.,களில், பணம் தட்டுப்பாடின்றி கிடைக்குமா என, மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்களுக்கு, நேற்று சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களும், தேவைக்கேற்ப, ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பர். தொடர் விடுமுறையாலும், தசரா பண்டிகைக்காகவும், சொந்த ஊர், பிற மாநிலங்கள் செல்வோர், சுற்றுலா செல்வோர், பெரும்பாலும், ஏ.டி.எம்.,களையே நம்பி செல்வர்.

பண நடமாட்டம் உள்ள நான்கு நாட்களில், வங்கிகள் தொடர் விடுமுறையால்,

ஏ.டி.எம்.,களில் பணத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்த, அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.இது குறித்து, இந்தியன் வங்கி பொது மேலாளர், நாகராஜன் கூறியதாவது:

தமிழகத்தில், எங்களுக்கு, 1,453 ஏ.டி.எம்.,கள் உள்ளன. ஒவ்வொரு,ஏ.டி.எம்.,களிலும், குறைந்த பட்சம், 25 லட்சம் ரூபாய் இருக்கும்படி பார்த்து கொள்வோம். குறிப்பிட்ட தொகைக்கு மேல் நிரப்பி, கொள்ளை போனால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திருப்பி தராது.

தொடர் விடுமுறை வருவதால், ஏ.டி.எம்.,களில் அந்த தொகை, ஓரிரு நாளில் காலியாகி விடும். தேவைப்பட்டால், வங்கியை திறந்து, அருகில் உள்ள, ஏ.டி.எம்.,களில், தேவையான பணத்தை நிரப்ப, அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில், எங்களுக்கு, 1,500க்கும் மேற்பட்ட, ஏ.டி.எம்.,கள் உள்ளன. ஒரு, ஏ.டி.எம்.,மில், ஒரே நேரத்தில், 6,000 எண்ணிக்கையில், ரூபாய் நோட்டுகள் வைக்க லாம். 100 - 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை, தலா, 2,000 வைக்கலாம். அதன்படி, ஓர்இயந்திரத்தில், ஒரே நேரத்தில், 52 லட்சம் ரூபாய் வரை வைக்கலாம்.

தசரா விடுமுறையை முன்னிட்டு, இந்த நான்கு நாட்களில், ஏதேனும் ஒரு நாளில் வங்கியை திறந்து, ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்ப வேண்டும் என, தமிழகத்தில் உள்ள, 55 வங்கிகளுக்கு  உத்தரவிடப்பட்டு உள்ளது.பணம், 'டிபாசிட்' செய்யவும், எடுக்கவும் வசதியுள்ள, 'ரீசைக்கிளர்' இயந்திரங்கள் பல இடங்களில் உள்ளன. அவற்றில், மக்கள், 'டிபாசிட்' செய்யவும் வாய்ப்பு உள்ளது. அதில், இருந்தும் பணம் எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

27,750 ஏ.டி.எம்.,கள்

நாட்டில், மஹாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில், 27 ஆயிரத்து, 750, தனியார் மற்றும் பொதுத் துறை, ஏ.டி.எம்.,கள் உள்ளன. அவற்றில், சராசரியாக, 20 லட்சம் ரூபாய் முதல், 30 லட்சம் ரூபாயை, வங்கிகள் நிரப்புகின்றன. சில வங்கிகள், 2,000 ரூபாய் தாள்களாக, 40 லட்சம் ரூபாய் வரை நிரப்பி உள்ளன. இதன்படி, ஏ.டி.எம்.,களில், முதலில், 60 ஆயிரம் கோடி ரூபாய்; பின், தேவைக்கேற்ப, 40 ஆயிரம் கோடி ரூபாய் என, ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை நிரப்ப வாய்ப்புள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -
பேட்டியளித்த,பிரபலங்கள்,பீதி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, தமிழக அரசால் நியமிக்கப்  பட்டுள்ள, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், அடுத்த வாரம் அதிரடி விசாரணையை துவக்குகிறது. அதனால், கமிஷனின் விசாரணை வளையத்துக்குள், யார் யார் வருவர் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



ஜெ.,வை பார்க்க, அப்பல்லோ மருத்துவமனை சென்று வந்த பிரபலங்களும், 'விரைவில் வீடு திரும்புவார்' என, பேட்டி அளித்தவர்களும், 'சம்மன் வருமோ...' என்ற பீதியில் உள்ளனர். ஜெ.,வை பார்க்காமல், பார்த்ததாக பேட்டி அளித்த யாரும், விசாரணை வரம்பில் இருந்து தப்ப முடியாது என்பதால், கலக்கம் அடைந்துள்ளனர்.

திடீர் உடல் நல பாதிப்பு காரணமாக,2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனை யில், ஜெ., அனுமதிக்கப்பட்டார். அதன்பின்,

அவரது உடல் தான், டிச., 6 அதிகாலையில் வெளியே வந்தது. லண்டன் டாக்டர், டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை டாக்டர்கள், சென்னை டாக்டர்கள் என, பல மருத்துவ குழுவினர், சிறப்பு சிகிச்சை அளித்தும் பலனில்லை.

நியமனம்:

ஜெ., மரணம் குறித்து, பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. அவரது மரணத்துக்கு,சி.பி.ஐ.,விசாரணை, நீதி விசாரணை கோரப்பட்டது. உயர் நீதிமன்றத்தி லும் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. கடைசியில், 'ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.இந்த அறிவிப்பு வந்த ஒரு மாதத்துக்கு பின், விசாரணை கமிஷனுக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை, தமிழக அரசு நியமித்தது.விசாரணை கமிஷன், மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கும் எனவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த வாரத்தில், விசாரணை கமிஷன், தன் பணியை துவக்க உள்ளது. விசாரணை வரம்புக்குள் யார் யார் வருவர் என்பது குறித்து, நீதிபதி முடிவு செய்ய வேண்டும். ஆனால், ஜெ.,க்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும்,

அவருடன் தங்கியிருந்த சசிகலா குடும்பத்தின ரிடமும், விசாரணை நடத்தப்படுவது உறுதி.

ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி, தற்போதைய துணை ஜனாதிபதி, வெங்கய்யா நாயுடு, தமிழக கவர்னர், வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் துணை தலைவர், ராகுல், பா.ஜ., தலைவர், அமித்ஷா, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வந்தனர்.மருத்துவமனைக்கு சென்று திரும்பிய தலைவர்களில் பெரும்பாலானோர், ஜெயலலிதா உடல் நிலை பற்றி, வெளியில் பேட்டி அளித்தனர்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, பொன்னையன், சி.ஆர்.சரஸ்வதி போன்றோரும், அன்றாடம் ஜெ., உடல் நிலை பற்றி பேட்டி கொடுத்தனர். ஆனால், சமீபத்தில், அமைச்சர் சீனிவாசன், 'நாங்கள் யாரும், ஜெயலலிதாவை பார்க்கவில்லை; பொய் சொன்னதற்காக, பொது மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்' என, வெளிப்படையாக பேசினார்.

மற்றொரு அமைச்சர் வீரமணி, 'சசிகலாவுக்கு பயந்து, அப்படி பொய் சொன்னோம்' என்றார்.

இதனால், தற்போது நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன், தங்களிடம் விசாரணை நடத்துமா; அதற்காக, 'சம்மன்' அனுப்புமோ என, டில்லி தலைவர்கள் உட்பட, பேட்டியளித்த பிரபலங்கள், தற்போது அச்சத்தில் உள்ளனர்.

தீவிரம்:

மருத்துவமனைக்கு வந்து சென்ற பிரபலங்களுக்கு, கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பி, அதற்கு பதிலளிக்கும்படி, விசாரணை கமிஷன் உத்தரவிடலாம். பதிலில் திருப்தி அடையவில்லை என்றால், நேரில் ஆஜராகும் படி, சம்மன் அனுப்பலாம். அவை எல்லாம், விசாரணை கமிஷன் அதிகார வரம்புக்கு உட்பட்டது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசு கூறியிருப்பதால், விசாரணை கமிஷன் பணிகள் தீவிரமடையும்.
சித்தா, ஆயுர்வேத படிப்பு கவுன்சிலிங் எப்போது?

பதிவு செய்த நாள்29செப்
2017
04:03


சென்னை: 'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், அக்., இரண்டாம் வாரத்தில் துவங்கும்' என, இந்திய முறை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் மற்றும் மியோபதி படிப்புக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், 396 இடங்கள்; 22 சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 859 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 6,938 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒரு மாதம் ஆகும் நிலையில், மாணவர் சேர்க்கை எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து, மாணவர் சேர்க்கை அதிகாரிகள் கூறுகையில், 'விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதி பட்டியலும் தயராக உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும், அக்., இரண்டாம் வாரத்தில், கவுன்சிலிங் நடத்தப்படும்' என்றனர்.
வாக்காளர் பெயர் பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் நீக்கம்
பதிவு செய்த நாள்28செப்
2017
19:50



லக்னோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் லக்னோ தொகுதிக்குட்பட்ட பாபு பனாரசி தாஸ் வார்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்து வந்தார். அவருடைய பெயர் அப்பகுதி வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது வாஜ்பாய் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் அசோக் குமார்சிங் கூறியதாவது: கடந்த 2000 -ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் , 2004-ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போதும் வாஜ்பாய் இங்கு வாக்களித்துள்ளார்.

தற்போது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நீண்ட காலமாக இங்கு வசிக்கவில்லை . இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல்: போலீசார் அறிவுரை
பதிவு செய்த நாள்28செப்
2017
18:57




சென்னை: தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் மக்கள் மற்றும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர் . இது குறித்து போலீசார் கூறியிருப்பதாவது: நாளை செப்.,29 முதல் அக்., 2 வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்லும் பயணிகளால் 100 அடி சாலை, பூந்த மல்லிசாலை, ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பஸ் ஸ்டாண்ட், விமான நிலையம் செல்பவர்கள் முன்னதாகவே செல்ல வேண்டும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில்கள் ரத்து
பதிவு செய்த நாள்28செப்
2017
20:29




சென்னை: தாம்பரம் -செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அக்., 2-ம் தேதிமுதல் 31ம் தேதி வரையில் தாம்பரம் மற்றும் செங்கோட்டையில் காலை 6 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் ( வழி: விருத்தாசலம், விழுப்புரம் ) இயக்கப்படும்என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு கட்டண ரயில்ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழியில் ரயில் இயக்கம்

தாம்பரம் செங்கோட்டை இடையேயான சிறப்பு கட்டண ரயில் காலை 5 மணிக்கு புறப்பட்டு (சிதம்பரம், மயிலாடுதுறை,கும்பகோணம், தஞ்சாவூர்) வழியாக வாரம் 5 நாள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை-தாம்பரம் ரயில் காலை 6 மணிக்கு புறப்பட்டு (சிதம்பரம், மயிலாடுதுறை கும்பகோணம், தஞ்சாவூர்) வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,தி.மலை மாவட்டங்களில் மழை
பதிவு செய்த நாள்
செப் 28,2017 18:30



சென்னை: கிண்டி, அசோக்நகர், கே.கே.நகர், வடபழனி,கோடம்பாக்கம், கோயம்பேடு, தாம்பரம், பல்லாவரம், ஆலந்துார் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேடவாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லுார், பள்ளிக்கரணை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

வட தமிழக உள்மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.. வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே சென்னையின் பல பகுதிகளில் மாலை முதலே கனமழை கொட்டித்தீர்க்கிறது. வட சென்னையிலும், தென் சென்னையிலும் புறநகரிலும் கனமழை கொட்டித்தீர்க்கிறது. பல்லாவரம், குரோம்பேட்டையில் கனமழை பெய்கிறது. அண்ணாநகர், முகப்பேர் பகுதிகளில் கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

கோயம்பேடு பகுதியில் பெய்து வரும் மழையால் வெளியூர் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்கிறது. அம்பத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடியுடன் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பகுதியில் பெய்யும் கனமழையால் வடபழனி, ஜிஎஸ்டி சாலையிலும் பெருங்களத்தூர் வரையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தி.மலை மாவட்டத்தில் மழை

தி.மலை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளான ,பாதிரி, மாம்பட்டு, தெள்ளார் நடுகுப்பம் , மும்முனி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது
பல்லாவரத்தில் கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி; 2 பேர் கைது



பல்லாவரத்தில் கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

செப்டம்பர் 29, 2017, 04:45 AM
தாம்பரம்,

மதுரையை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 42) பள்ளிக்கூடம் நடத்திவந்தார். இவரிடம் பள்ளியை விரிவுபடுத்த ரூ.1½ கோடி சென்னையை சேர்ந்த நிதிநிறுவன அதிபரிடம் கடன் வாங்கித் தருவதாக ஒரு கும்பல் தொடர்புகொண்டது. இதை நம்பிய அவர், உறவினர் பாலாஜி என்பவரை அழைத்துக் கொண்டு பள்ளி சொத்து ஆவணங்களுடன் பல்லாவரத்திற்கு வந்தார்.

பல்லாவரம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள லாட்ஜுக்கு வரச்சொன்ன அந்த கும்பல் அங்கு ஒருவரை அறிமுகப்படுத்தியது. கடன் வழங்குவதற்கான பத்திர செலவுக்கு என ரூ.1½ லட்சம் வாங்கினர். அப்போது ஒரு பையை கொடுத்து இதில் ரூ.50 லட்சம் உள்ளது. இப்போது பிரிக்காதீர்கள், ஆவணங்களை சோதனை செய்துவிட்டு வருகிறோம் என கூறிவிட்டு நழுவ முயன்றனர்.

2 பேர் கைது

அவர்களது நடவடிக்கை சந்தேகமாக இருந்ததால் பாலாஜி பணம் இருந்த பையை பிரித்து பார்த்தார். அதில் பணத்துக்கு பதில் காகிதங்கள் ரூபாய் நோட்டுகளைப்போல இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அங்குவந்த பொதுமக்களும், அருகில் உள்ள பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் இருந்துவந்த போலீசாரும் நழுவ முயன்ற மோசடி கும்பலை சேர்ந்த தங்கராஜ் (58), செல்வராஜ் (62) ஆகியோரை மடக்கிப் பிடித்தனர்

இந்த மோசடி தொடர்பாக பல்லாவரம் போலீஸ் உதவி கமிஷனர் விமலன் விசாரணை நடத்தினார். அப்போது மோசடி கும்பலை சேர்ந்த மோகன்ராஜ் உள்பட மேலும் 3 பேர் தப்பிச் சென்றது தெரியவந்தது. 2 பேரை கைது செய்த போலீசார் தப்பிச்சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
தேசிய செய்திகள்

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது ஆந்திராவில் புதிய விதி, அமலுக்கு வந்தது


ஆந்திராவில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது. ஆந்திராவில் புதிய விதி, அமலுக்கு வந்தது.

செப்டம்பர் 29, 2017, 05:00 AM
ஐதராபாத்,

ஆந்திராவில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை நேற்று அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்துவதில் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் டீலர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

இந்த புதிய உத்தரவினால் மாநிலம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இருசக்கர வாகன விபத்துகளை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு புதிய சாதனங்கள் வாங்குவதற்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ரூ.10 கோடி அனுமதித்துள்ளார்.

கடமைகளை சரி வர செய்யாத அரசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய தயங்க மாட்டேன் என அவர் எச்சரித்துள்ளார். இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்கள் ஹெல்மெட் அணியவும், 4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாநில செய்திகள்

சிறிய விழாவாக நடத்தி அவமதிக்க வேண்டாம் மணி மண்டபத்தை முதல்-அமைச்சர் திறக்க வேண்டும் நடிகர் பிரபு


“நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்க வேண்டும்” என்று நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செப்டம்பர் 29, 2017, 05:30 AM

சென்னை,

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. சிவாஜி மணிமண்டபத்தை அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிவாஜி கணேசன் மகனும் நடிகருமான பிரபு, மணிமண்டபத்தை முதல்-அமைச்சர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது, ஜெயலலிதாவின் கனவு திட்டமாகும். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் விழாவுக்கு தலைமையேற்று மணிமண்டபத்தை திறந்து வைத்து எங்கள் தந்தையின் ஆத்மாவுக்கு பெருமை சேர்த்து இருப்பார்.

தமிழக அரசு, மரியாதைக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரம் முதல்-அமைச்சரோ துணை முதல் அமைச்சரோ தலை சிறந்த நடிகரின் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

சிவாஜி கணேசன் தனது திரைப்படங்கள் மூலம் தமிழுக்கும் தமிழ் கலாசாரத்துக்கும் பெருமை சேர்த்து இருக்கிறார். எனவே இந்த விழாவை சிறிய நிகழ்ச்சியாக நடத்துவது எங்கள் தந்தையை அவமரியாதை செய்யும் விதமாகவே இருக்கும். எனவே இதனை மறுபரிசீலனை செய்து முதல்-அமைச்சரும் அரசு அதிகாரிகளும் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது எங்கள் குடும்பம் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோள் ஆகும். நல்ல பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவரும், நடிகருமான வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடிகர் திலகம் சிவாஜியின் மணி மண்டபத்தை 1-ந்தேதி அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார், என்று அறிவிக்கப்பட்டு இருப்பது திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் திலகத்தின் மாண்புக்கு இழுக்கு சேர்க்கும் செயலில் ஈடுபட்டுள்ள முதல்- அமைச்சருக்கு, திரையுலகினர் எதிர்ப்பு தெரித்து, முதல்-அமைச்சர் திறந்து வைத்தால் மட்டுமே விழாவுக்கு வருவோம் என்று திரையுலகினர் அறிவிக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழக திரையுலகமும் நடிகர் திலகத்திற்கு இழைக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராகத் திரண்டு எழவேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Thursday, September 28, 2017

ஜெயலலிதாவின் அப்போலோ வீடியோவும்... விடைதெரியா சரச்சைகளும்!

அ.சையது அபுதாஹிர்
vikatan



ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அப்போலோ நிர்வாகத்தின் சார்பில் எந்த வீடியோவும் எடுக்கப்படவில்லை. அவர் சிகிச்சை பெற்ற அறையிலும் சிசிடிவி கேமரா பொறுத்தவில்லை” என அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைந்து பத்து மாதங்கள் கழித்து இப்போது வீடியோ வடிவில் அவர் மரணம் குறித்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட இரண்டு தினங்களிலே அவர் வீட்டிற்கு அனுப்படுவார் என்ற சொல்லபட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பான படங்கள் குறித்த பேச்சு அப்போது எழவில்லை. ஆனால், நாட்கள் செல்ல செல்ல ஜெயலலிதாவின் நிலை என்ன என்று பலதரப்பிலும் கேள்வி எழுந்தது. ஆளுநர், ராகுல் காந்தி, என பலரும் மருத்துவமனைக்கு வந்தாலும் ஜெயலலிதாவினை பார்க்க முடியாத நிலை இருந்தது. அப்போதுதான் ஜெயலலிதாவின் புகைப்படத்தையாவது வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால், அப்போது அதைபற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை சசிகலா குடும்பத்தினர்.

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட இரவு நேரத்தில் அப்போலோ மருத்துவமனையின் சிசிடிவி.கேமராக்களும் செயல் இழக்க செய்யப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. அதேநேரம் அ.தி.முக. வின் செய்தித்தொடர்பாளர்கள் அனைவருமே ஜெயலலிதா உண்கிறார் உறங்கினார் இட்லி சாப்பிட்டார் என்பதாக முரண்பாடான பேட்டிகளை அளித்துவந்தனர். ஜெயலலிதா மரணம் வரை நீரு பூத்த நெருப்பாக இருந்த இந்த விவகாரம் அவர் மரணத்திற்கு பிறகு உசச்திற்கு சென்றது. குறிப்பாக பி.ஹெச்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து இந்த விவகாரம் பற்றி வெளிப்படையாக பேசினார். பன்னீர் தீடீர் என சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி துாக்கியபோதுதான் யாரையும் ஜெயலலிதாவை பார்க்கவிடவில்லை என்று கூறி அதிரவைத்தார்.

அப்போதும் தமிழக அமைச்சர்கள் அமைதியாகவே இருந்தார்கள். ஆனால், பத்து மாதம் கழித்து இப்போது திண்டுக்கல் சீனிவாசன் “யாருமே ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை. இட்லி சாப்பிடுகிறார் என்று சொன்னதெல்லாம் பொய்” என்று போட்டு உடைக்க, ஜெயலலிதாவின் மரணம் பற்றிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.



ஜெயலலிதாவின் வீடியோ தங்களிடம் இருக்கிறது எனவும் அதை தக்கநேரத்தில் வெளியிடுவோம் என்றும் முதலில் சொன்னது திவாகரன் மகன் ஜெய்ஆனந்த். ஜெயலலிதாவின் மரணம் குறித்து சரச்சை வெளியான ஆரம்பத்தில் இதை தெரிவித்தார். பன்னீர்செல்வத்தின் புகாருக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஜெய் ஆன்ந்த் இந்த பதிலை தெரிவித்தார். அதன்பிறகு ஜெயலலிதா பற்றி வீடியோ விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு செய்த பிறகு இப்போது வில்லங்கமாகி வருகிறது.

தினகரன் “ஜெயலலிதா டி.வி. பார்க்கும் காட்சியை சின்னம்மா வீடியோவாக எடுத்துள்ளார். அதை விசாரணை ஆணையத்திடம் கொடுப்போம்” என்று சொல்லியுள்ளார். அதன் தொடர்ச்சியாகத்தான் இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக அப்போலோ மருத்துவமனை குழுமங்களின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி“ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமிரா ஏதும் பொறுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

உண்மையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வீடியோ எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு முழுமையான விடை இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அந்த அறைக்குள் சென்று வரும் உரிமை சசிகலாவிற்கு மட்டுமே இருந்தது. ஜெயலலிதா இருந்த அறையின் அருகே இரண்டு சோபாக்கள் போடப்பட்டு இருந்தன. ஒரு டீபாய் ஒன்றும் இருந்துள்ளது. சசிகலா மருத்துவமனையிலேயே இருந்த நேரத்தில் அவர் கையில் இரண்டு செல்போன்களும், ஒரு டேப்லட்டும் இருந்துள்ளது. சசிகலா அதில் ஜெயலலிதாவை வீடியோ எடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம். அதே நேரம் மருத்துமவனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டு ஒருமாதத்தில் அவர் தோற்றத்தில் பல்வேறு மாற்றங்கள் இருந்ததை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தரப்பிலிருந்தே சொல்லபட்டது. இதுகுறித்து சசிகலாவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது “ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது சில படங்கள் எடுக்கப்பட்டது உண்மை. அது சசிகலா குடும்பத்தில் உள்ள முக்கியமான ஒருவரிடம் உள்ளது. சசிகலாவின் ஐபோனில்தான் இந்த படங்கள் எடுக்கபட்டது” என்று சொல்கிறார்கள்.

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. விசாரணை ஆணையமாவது இதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

Two Telugu medical students drown in Ukraine, trying to save a friend

JBS Umanadh, DH News Service, Hyderabad, Sep 20 2017, 11:55 IST
File Photo of Sivakanth Reddy and the Zaporizhzhia State Medical university campus
File Photo of Sivakanth Reddy and the Zaporizhzhia State Medical university campus

Two Telugu students studying MBBS at the Zaporizhzhia State Medical University in Ukraine drowned to death on Monday while trying to save another friend. 

According to reports reaching here MBBS final year students Sivakanth Reddy of Kuntlur here and Ashok of BN Reddy colony a native of Kadapa in Andhra Pradesh died saving another student Mukesh who accidentally dragged by the waves while playing beach volleyball. 

It is said that four Indian students were playing the game on the shores at the time of the tragedy.

According to close relatives of Reddy, he returned to Ukraine on 2 of this month after holidays to finish his course and earn his degree.

“Actually he would have completed his course within six months. We were told on Tuesday that he is no more while his friend Ashok died at the hospital undergoing treatment,” a cousin of Reddy told in a TV interview. He said that the boy’s father who is a heart patient is unaware of the death and he was made to believe that his son met with an accident and his condition is critical.

It has been common practice for Telugu students to go to distant places in search of medical education. Ukraine, Georgia, Philippines and West Indies are the prominent places where Telugu students obtain MBBS degrees. Several educational consultants are involved in securing admission in these foreign educational institutions, who charge a premium for their services.
தமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேலையில் அடுத்தகட்டம் அரசு என்ன செய்யும்???



7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து, அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராயுமாறு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்தக்குழு , 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்களுடன் கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தி கருத்து கேட்டது. அங்கீகரிக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுடன் கடந்த ஜூன் மாதம் கருத்து கேட்கப்பட்டது.

இதனிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்மையில் நடத்திய வேலைநிறுத்த்தில் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கையை பிரதானப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு தாங்கள் இறுதி செய்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது. அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது.

நிபுணர் குழுவின் இந்த அறிக்கையில் பிரதானமாக ஊதிய மாற்றங்கள், ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமலானால், அரசு ஊழியர்களின் ஊதியம் 25 சதவிகிதம் உயரும் என்பதால், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் 7 வது ஊதியக்குழு அறிக்கையை ஊதியக்குழு போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவு காரணமாக முன்கூட்டியே தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் 22.09.2017 அன்று ஜாக்டோ-ஜியோ வழக்கின் போது 30.09.2017 ல் ஊதியக்குழு அறிக்கை சமர்ப்பித்த பின்பு நிதி நெருக்கடி காரணமாக 5 மாதங்கள் அமுல்படுத்த காலஅவகாசம் வேண்டும் என கேட்டது....

உயர்நீதிமன்றம் அதனை மறுத்து வரும் அக்டோபர் 13 ம் தேதிக்குள் 7 ஆவது ஊதியக்குழு தொடர்பான தனது இறுதி அறிக்கையை அமுல்படுத்துவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும், இல்லையென்றால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் இதை தமிழக அரசு செய்யாவிட்டால் அக்டோபர் 23 ல் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் குறித்த உத்தரவை பிறப்பிக்கும், என நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே அரசு தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக 7ஆவது ஊதியக்குழு அமல்படுத்தும் நாள் அல்லது அதற்கு மாற்றாக இடைக்கால நிவாரணம் 20% வழங்கும் முடிவை அரசு அறிவிக்க வேண்டும் எனும் நிலையில் உள்ளது.

அதற்கு முன்னதாக அரசுக்கு ஊதியக்குழு தொடர்பான முடிவெடுக்க போதிய கால அவகாசம் அளிக்கும் விதமாக,குழு தனது அறிக்கையை 27.09.2017 அன்றே சமர்ப்பித்திருப்பது அரசு ஊழியர்,ஆசிரியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது...
ஓய்வூதியம் தொடர்பாக 7 அம்ச கோரிக்கைகள்..! மூத்த குடிமக்களின் தீர்மானம் நிறைவேற்றம்

தி.ஜெயப்பிரகாஷ்




ஓய்வூதியம் தொடர்பான 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இன்று, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பின் மாநிலப் பொறுப்பாளர்களைத் தேர்வுசெய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கூட்டமைப்பினர், 'தமிழக அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியப் பயன்களைத் திருத்தி அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூபாய் 9,000 நிர்ணயிக்க வேண்டும். மாத மருத்துவப்படியாக ரூபாய் 1000 வழங்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். மேலும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

NEWS TODAY 27.03.2024