Friday, September 29, 2017

பல்லாவரத்தில் கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி; 2 பேர் கைது



பல்லாவரத்தில் கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

செப்டம்பர் 29, 2017, 04:45 AM
தாம்பரம்,

மதுரையை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 42) பள்ளிக்கூடம் நடத்திவந்தார். இவரிடம் பள்ளியை விரிவுபடுத்த ரூ.1½ கோடி சென்னையை சேர்ந்த நிதிநிறுவன அதிபரிடம் கடன் வாங்கித் தருவதாக ஒரு கும்பல் தொடர்புகொண்டது. இதை நம்பிய அவர், உறவினர் பாலாஜி என்பவரை அழைத்துக் கொண்டு பள்ளி சொத்து ஆவணங்களுடன் பல்லாவரத்திற்கு வந்தார்.

பல்லாவரம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள லாட்ஜுக்கு வரச்சொன்ன அந்த கும்பல் அங்கு ஒருவரை அறிமுகப்படுத்தியது. கடன் வழங்குவதற்கான பத்திர செலவுக்கு என ரூ.1½ லட்சம் வாங்கினர். அப்போது ஒரு பையை கொடுத்து இதில் ரூ.50 லட்சம் உள்ளது. இப்போது பிரிக்காதீர்கள், ஆவணங்களை சோதனை செய்துவிட்டு வருகிறோம் என கூறிவிட்டு நழுவ முயன்றனர்.

2 பேர் கைது

அவர்களது நடவடிக்கை சந்தேகமாக இருந்ததால் பாலாஜி பணம் இருந்த பையை பிரித்து பார்த்தார். அதில் பணத்துக்கு பதில் காகிதங்கள் ரூபாய் நோட்டுகளைப்போல இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அங்குவந்த பொதுமக்களும், அருகில் உள்ள பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் இருந்துவந்த போலீசாரும் நழுவ முயன்ற மோசடி கும்பலை சேர்ந்த தங்கராஜ் (58), செல்வராஜ் (62) ஆகியோரை மடக்கிப் பிடித்தனர்

இந்த மோசடி தொடர்பாக பல்லாவரம் போலீஸ் உதவி கமிஷனர் விமலன் விசாரணை நடத்தினார். அப்போது மோசடி கும்பலை சேர்ந்த மோகன்ராஜ் உள்பட மேலும் 3 பேர் தப்பிச் சென்றது தெரியவந்தது. 2 பேரை கைது செய்த போலீசார் தப்பிச்சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024