Thursday, September 28, 2017


நாளை முதல் 4 நாள்களுக்கு வங்கிகள் விடுமுறை
By DIN | Published on : 28th September 2017 04:40 AM



பண்டிகை நாள்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்.29) முதல் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாள்களாகும்.
அனைத்து வங்கிகளும் வியாழக்கிழமை (செப்.28) வழக்கம்போல் செயல்படும். ஆயுத பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (செப்.29), விஜயதசமி (சனிக்கிழமை-செப்.30), ஞாயிற்றுக்கிழமை (அக்.1), காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய நான்கு நாள்களிலும் வங்கிச் சேவை இருக்காது. விடுமுறை நாள்களில் ஒரு வங்கியிலிருந்து பிற வங்கிகளுக்கு பண பரிவர்த்தனைக்கான 'என்இஎஃப்டி' சேவை இருக்காது; எனினும் 'ஐஎம்பிஎஸ்' எனப்படும் உடனடி பண பரிமாற்ற சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பலன் அடையலாம்.

விடுமுறை நாள்களில் ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவுக்கு பணம் நிரப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024