Saturday, September 30, 2017

ஆயுத பூஜை: போக்குவரத்துக்கு இடையூறாக பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை




ஆயுத பூஜையை முன்னிட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து எஸ்.பி. பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஆயுத பூஜையின் போது போக்குவரத்துக்கு இடையூறாக பூசணிக்காயை சாலைகள் மற்றும் தங்களது வீடுகளுக்கு முன் உடைப்பது, அதே போல கடைக்கு முன் உடைப்பது கூடாது.

இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது மட்டுமன்றி, இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விபத்தில் சிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது.

ஆகவே, சாலைகளில் கண்டிப்பாக பூசணிக்காய்களை உடைக்கக்கூடாது. மீறி உடைப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

Dailyhunt

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...