Saturday, September 30, 2017

22 பேரின் உயிரைப் பறித்த வதந்தி! மும்பை ரயில் நிலையத்தில் பயங்கரம்

ராகினி ஆத்ம வெண்டி மு.

மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் பரவிய வதந்தியால் கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகியுள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர்.



மும்பை எல்பின்ஸ்டான் ரயில் நிலையத்தில் சிறிது நேரத்துக்கு முன்னர் மின்கசிவு ஏற்பட்டதாக ஒரு வதந்தி பரவியது. இதனால் பதற்றமடைந்த மக்கள் விபத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டு ஓடியதில் பலரும் நெரிசலில் சிக்கினர். மக்கள் கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக் காயமடைந்தனர். உடனடியாக மீட்புப் பணிகளில் போலீஸார் ஈடுபட்டனர். முதலில் மூன்று பேர் பலியானதாகக் கூறப்பட்டது. ஆனால், பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.

மும்பை புறநகர் ரயில் பகுதியான இந்த ரயில் நிலையத்தில் ஏற்பட்ட இந்த எதிர்பாரா விபத்தால் இதுவரையில் 22 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனப் போலீஸார் கூறுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. எப்போதும் மக்கள் வெள்ளத்திலேயே இருக்கும் எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் பரவிய ஒரு வதந்தியால் பலரும் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் பலியானோருக்கு ரயில்வே சார்பில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், மஹாராஷ்டிரா அரசும் தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...