Saturday, September 30, 2017

மும்பை ரயில் நிலைய விபத்து: விசாரணைக்கு உத்தரவு

பதிவு செய்த நாள்29செப்
2017
13:41



மும்பை: மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் விபத்தில் சிக்கி 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். மேலும் கூறுகையில்; நெரிசலில் சிக்கி மக்கள் பலியான சம்பவம் வருத்தமளிக்கிறது. மேற்குரயில்வே தலைமை பாதுகாப்பு அதிகாரி தலைமையில் விசாரணை நடக்கும் எனவும் கூறினார்.

நடவடிக்கை:

முதல்வர் பட்னாவீஸ் கூறுகையில், ரயில் அமைச்சகமும், மாநில அரசும் இணைந்து விசாரணை மேற்கொள்ளும். சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிவாரணம்:

மகாராஷ்டிரா மாநில அமைச்சர் வினோத் தாவ்தே கூறுகையில், பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களின் செலவை மாநில அரசு ஏற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024