Wednesday, September 27, 2017

மத்திய அரசுப் பணி மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65-ஆக உயர்வு!

By IANS | Published on : 27th September 2017 05:49 PM



புதுதில்லி: மத்திய அரசின் பல்வேறு சுகாதார சேவைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதினை 65-ஆக உயர்ததுவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது

தில்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவுகள் குறித்து மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் பல்வேறு சுகாதார சேவைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதினை தற்பொழுது உள்ள 62-இல் இருந்து 65-ஆக உயர்த்துவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது

இந்த உத்தரவானது முன்தேதியிட்டு 31.05.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதன் காரணமாக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிபுரியும் 1,455 மருத்துவர்கள் பயன்பெறுவார்கள்.

நோயாளிகளுக்கு சிகிச்சையின் தரம் உயர்த்துதலை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பிரசாத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024