Saturday, September 30, 2017

வேலூர் ஏ.டி.எம்.,களில் அதிக நீளத்தில் ரூ.500 நோட்டு
பதிவு செய்த நாள்
செப் 30,2017 03:47

வேலுார்: வேலுார், ஏ.டி.எம்.,களில், சரியாக வெட்டப்படாத, 500 ரூபாய் நோட்டுகள் வந்தன.

வேலுார், சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகத்தில், ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்., மில் நேற்று முன்தினம் இரவு, ஒருவர் பணம் எடுத்தார். இதில் 500 ரூபாய் சரியான அளவில் வெட்டப்படாமல், ஒரு முனையில் மட்டும் நீளமாக இருந்தது. இதுபோன்ற நோட்டுகள், சத்துவாச்சாரி, வேலுாரில் உள்ள ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்.,களில் மட்டும், பலருக்கு வந்தது.

வங்கிகள் தொடர் விடுமுறையால், அவற்றை மாற்ற முடியாமல் 20க்கும் மேற்பட்டோர் புலம்பினர். இதற்கு வங்கி நிர்வாகமே காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024