Saturday, September 30, 2017

திண்டுக்கல்லில் 106 மி.மீ.,மழை
பதிவு செய்த நாள்
செப் 30,2017 01:20


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 106.42 மி.மீ.,கூடுதலாக மழை பெய்துள்ளது, என வேளாண் இணை இயக்குனர் தங்கச்சாமி தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல்லில் மாவட்டத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையில் 418.10 மி.மீ.,ல் இதுவரை 524.52 மி.மீ.,மழை பெய்துள்ளது. அதாவது, கூடுதலாக 106.42 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 91 ஆயிரத்து 488 பாசன கிணறுகளில் 50 சதவீத கிணறுகளில் 3 மணி நேரமும், மீத 50 சதவீத கிணறுகளில் 1 மணி நேரம் பாசன வசதி பெறக் கூடிய அளவு நீர் உள்ளது.

மானாவரி நிலங்களில் கோடை உழவு செய்து, மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் பொறியியல் துறை மூலம் 20 இடங்களில் தடுப்பணைகள் அமைத்து, அதன் மூலம் மானாவரி நிலங்களில் நீர் செறிவு உண்டாவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தொகுப்பிலும் சாகுபடி பரப்பு கணக்கிடப்பட்டு, அதற்கு தேவையான இடுபொருள், உரங்கள், விதைகள், நுண்ணுரங்கள் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுஉள்ளது, என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Dismissal from service should be reserved for grave misconduct: SC

Dismissal from service should be reserved for grave misconduct: SC The Supreme Court ruled that dismissal from service should be imposed on...